Followers

Thursday, November 24, 2011

திருவண்ணாமலை



திருவண்ணாமலைக்கு நேற்று 23-11-2011 குபேர கிரிவலம் சென்று வந்தேன். . நான் வழக்கமபோல் ஒவ்வொரு பௌர்ணமியும் சென்று வருகிறேன்.குபேர கிரிவலத்தைப்பற்றி படித்ததால் சென்றேன். என்னுடன் 3 பேர் வந்தார்கள். நான் நினைத்தது குறைந்த எண்ணிக்கையில் தான் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நல்ல கூட்டம வந்தது. பல மாவட்டங்களில் இருந்தும் வந்து இருந்தார்கள்.

பிரதோஷ அபிஷேகம் முடிந்து சாமி தரிசனம் பார்க்க கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஒரு வழியாக சாமி தரிசனம் முடிந்து. 6 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு சென்றோம்.

நீங்களும் கலந்துகொண்டிருந்தீர்கள் என்றால் மிக்க நல்லது. அப்படி வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு அனைத்து வசதியும் கிடைக்க ஒரு பொன்னான வாய்ப்பு வர இருக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். வருகின்ற கார்த்திகை தீபத்தில் கலந்து கொள்ளுங்கள். வருகின்ற கார்த்தீகை தீபம். பிறவியின் கருமத்தை அழிக்க பொன்னான வாய்ப்பு. அனைவரும் செல்வோம். இதை உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு