Followers

Sunday, September 30, 2012

மோட்சம்



வணக்கம் நண்பர்களே நேற்றைய பதிவில் ஒரு கேள்வியை கேட்டுருந்தேன் யாரும் பதில் தரவில்லை. உங்களுக்கு இந்த சோதிட பதிவு மட்டும் பிடிக்கும் வேறு ஏதும் பிடிக்காது என்று தெரிந்துவிட்டது வழக்கம் போல் சோதிட பதிவுகளை தருகிறேன். 

கௌதம புத்தரிடம் ஒருவர் வந்து கேட்டார் சாமி நீங்கள் மோட்சம் அடைவதற்க்கு வழிகளை செல்லுகிறீர்கள் ஆனால் யாரும் வரவில்லையே என்று கேட்டார் அதற்கு கௌதம புத்தர் நீ காலையில் ஊருக்குள் சென்று அனைவரிடமும் உங்களுக்கு என்ன தேவை என்று எழுதி வாங்கிவா என்று சொல்லி அனுப்பினாராம் அதைப்போல் அவரும் அனைவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு மாலையில் புத்தரை சந்திக்க வந்தாராம்.

புத்தர் நீ எழுதி வாங்கிவந்ததை படி பார்க்கலாம் என்றாராம் அவரும் படித்தார் அந்த பேப்பரில் அனைவரும் அது வேண்டும் இது வேண்டும் என்று எழுதி இருந்தார்களே தவிர ஒருவரும் மோட்சம் அடையவேண்டும் என்று எழுதவில்லை. அப்பொழுது புத்தர் அவரை பார்த்து நான் அனைவரும் மோட்சம் அடையலாம் என்று சொல்லிருந்தேன் ஆனால் அவர்கள் அதனை அடையவிருப்படுகீறார்களா என்று சொல்லவில்லை. மனிதன் விருப்பட்டால் தான் அதை அடையமுடியும். 

இந்த நிகழ்வுபோல தான் அனைவருக்கும் நான் சொல்லுவது ஆன்மிக வாழ்வு அனுபவங்களை அனைவரும் பெறமுடியும் ஆனால் அதற்கு நீங்கள் விருப்பபட்டு செல்லவேண்டும் அப்பொழுது தான் அதனை பெறமுடியும். 

உங்கள் மனநிலையை மாற்றாதவரை கடவுள் ஆயிரம் முறை வந்து சொன்னாலும் உங்களால் ஆன்மிக வாழ்வில் முன்னேறமுடியாது. என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Saturday, September 29, 2012

புராணங்கள் ஒர் பார்வை



வணக்கம் நண்பர்களே இது உங்களுக்காக இந்த பதிவை எனது வேறு பதிவில் இருந்து இதனை தருகிறேன். படித்து விட்டு என்னை திட்டாதீர்கள் புராணங்களைப்பற்றி நிறைய எழுதியுள்ளேன் அதில் ஒரு புராணத்தைப்பற்றி உங்களுக்கு சொல்லுகிறேன் படியுங்கள்.

கருட புராணம் என்று ஒரு புராணம் இருப்பது அனைவருக்கும் தெரியவந்ததே அந்நியன் படத்துக்கு பிறகு தான் அனைவருக்கும் தெரியும் அந்த புராணத்தில் நடக்கும் விவாதங்கள் கருடனுக்கும் திருமாலுக்கும் நடக்கும்.

கருடன் திருமாலை பார்த்து யமபுரி எங்கு உள்ளது அதனைப்பற்றி சொல்லுங்கள் அதற்கு திருமால் சொல்லுவார் யமபுரிக்கு செல்லும் வழியில் செம்பை உருக்கி வார்த்தது போல வெப்பம் தந்துக்கொண்டிருக்கும். அதற்கு அப்புறம் போனால் முட்கள் மேல் தீக்கொள்ளிகள் எரிந்து கொண்டு இருக்கும். அதற்கு அப்பால் போனால் தாங்கமுடியாத குளிர்பிரதேசம் இருக்கும். இதை எல்லாம் மனிதராக பிறப்பவர் கடந்து செல்ல வேண்டும்.

பூலோகத்திற்க்கும் யமலோகத்திற்க்கும் இடையில் உள்ள தூரம் எண்பதாயிரம் காதவழி இருக்கிறது என்று சொல்லுகிறார். இடையில் பருகுவதற்க்கு தண்ணீர் தரமாட்டார்கள் இளைப்பாருவதற்க்கு நிழல் இருக்காது Non stop Journey தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்.

தென்திசைக்கும் நிருதிதிசைக்கும் இடையில் யமபுரியானது இருக்கிறது என்று சொல்லுகிறார்.தேவர்களும் அசுரர்களும் இருவராலும் தகர்க்கமுடியாத கோட்டைக்கள் யமனுடைய கோட்டைகள் என்று சொல்லுகிறார்.

அங்கு மனிதருக்கு தரும் தண்டனைகளைப்பற்றியும் சொல்லுகிறார். சில மனிதர்களுக்கு உலகை அடி  சிலரை கடுமையான ஆயுதத்தால் அடிப்பார்கள் சிலரை கத்தியால் சீவிவிடுவார்கள்.சில பேரை கரும்பு பிழிவார்களே அதுபோல பிழிவார்கள்.நம்ம ஆளுங்க சிக்கனை அனலில் வாட்டி சாப்பிடுவார்களே அதுபோல அனலில் மனிதனை வாட்டுவார்களாம்.

இந்த மாதிரி நிறைய தண்டனைகளை கருட புராணத்தில் சொல்லியுள்ளார்கள்.  இந்த மாதிரி தண்டனைகளை இப்பொழுது பூமியிலேயே நம்ம ஆட்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். 

பகவத்கீதையில் கண்ணன் சொல்லுகிறான். உன்னுள் ஆயுதத்தால் வெட்டப்படாத ஒன்று உள்ளது என்கிறான். தீயால் சுடாதது ஒன்று உள்ளது என்று சொல்லுகிறான் அவன் சொல்லுவது ஆத்மாவை தான் ஆனால் கருடபுராணம் சொல்லுவது மனிதன் இறந்த பிறகு அவனுக்கு கொடுக்கும் தண்டனைகளை சொல்லுகிறது.

இறந்த பிறகு ஆத்மா உடலை விட்டு பிரிகிறது அதனால் உடல் எம உலகத்திற்க்கு செல்லுவதில்லை ஆத்மா தான் செல்லும். ஆத்மாவிற்க்கு எந்த வலியும் தெரியாது என்று கண்ணன் சொல்லுகிறான். கருடபுராணம் ஆத்மாவிற்க்கு கொடுக்கும் தண்டனைகளை சொல்லுகிறது 

எப்படி இந்த முரண்பாடான கருத்து இருக்கு என்று எனக்கு யோசிக்க தோன்றியது. கருட புராணம் தவறா அல்லது பகவத்கீதை தவறா சொல்லுங்கள் பார்க்கலாம்.

நான் நினைத்தது உடல் இறந்த பிறகு ஆத்மாவிற்க்கு வலி வந்துவிடுமோ என்று கூட நினைத்தேன். இதுமாதிரி நிறைய எழுதி வாங்கிகட்டிக்கொண்டு இருக்கிறேன் அனைவரும் என்னுடன் தினமும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் தான் அதனால் எனக்கு பிரச்சினை இல்லை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, September 28, 2012

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே நான் வேறு பிளாக்கில் எழுதுகிறேன் என்று சொன்னவுடன் ஏகாப்பட்ட போன்கால்கள் வருகின்றன இனிமேல் இந்த பிளாக்கில் எழுதபோவதில்லையா என்று கேட்கிறார்கள். இந்த பிளாக் தான் எனக்கு தாய்வீடு போன்றது இதில் தொடர்ச்சியாக பதிவுகள் வரும் நீங்கள் கவலைபடவேண்டாம்.

அந்த பிளாக்கில் ஆன்மிகத்தைப்பற்றி தான் எழுதுகிறேன் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் அதன் பதிவுகளை இந்த பிளாக்கிலும் தருகிறேன் ஏன் இதில் அதை எழுதவில்லை என்றால் இந்த பிளாக்கில் புதிதாக நிறைய பேர் வருகிறார்கள் அவர்களுக்கு புரியாது அதனை கருத்தில் கொண்டு எழுதவேண்டும்.

நீங்கள் அடுத்தவர்களிடம் பிளாக்கை நிறுத்திவிட்டார் என்று சொல்லிவிடாதீர்கள். வழக்கம் போல் சோதிடம் பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும். படித்து பயன்பெறுங்கள்.

உங்களை ஆன்மிகத்தில் ஒவ்வொரு கட்டதிற்க்கும் மேல் நோக்கி கொண்டு செல்வது என்னுடைய கடமை அதனை என் உயிர் இருக்கும்வரை செய்துக்கொண்டே இருப்பேன். என்னுடன் நீங்களும் கை கோர்த்துக்கொண்டு வாருங்கள் தொடரும் எமது பணி.


"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா
உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே."


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, September 27, 2012

அன்பான அறிவிப்பு



வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் மட்டும் எழுதிக்கொண்டு இருந்தேன் ஆனால் ஒரு சில காரணங்களுக்காக வேறு பதிவுகளில் ஆன்மிக மற்றும் அதனை சார்ந்த கருத்துக்களை எழுதிகொண்டு இருக்கிறேன். இந்த மாற்றம் ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். 

ஒரு வேலை இவரும் பணத்திற்க்கு ஆசைப்பட்டு புதிய திட்டம் போட்டுவிட்டார் என்று நினைக்க வேண்டாம். அனைத்தும் இலவச பதிவுகள் தான் என்ன ஒன்று அதனை பொதுவில் வைக்கவில்லை. நான் உங்களுக்கு அனுமதி தந்தால் மட்டுமே படிக்கமுடியும். அனுமதி ஒன்றும் பெரியவிஷயம் இல்லை. எனது நண்பராக ஆகிவிடுங்கள்.

ஏன் இந்த மாற்றம் என்றால் நம்ம சோதிடத்தை மட்டும் எழுதினால் எந்த தொந்தரவும் இருந்து இருக்காது நாம மந்திர அனுபவங்கள் என்ற தொடரை ஆரம்பித்தவுடன் ஏகப்பட்ட தொந்தரவை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. 

சோதிடத்தைப்பற்றி அந்த பதிவில் எழுதவில்லை என் மனதில் இருந்துக்கொண்டு இருக்கின்ற குப்பைகளை அதில் கொட்டிக்கொண்டு இருக்கிறேன். அந்த குப்பைகள் உங்களுக்கு பயன்படாது. ஒரு சில நண்பர்கள் அந்த குப்பையை தான் எனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

வழக்கம் போல் இந்த Blog யில் பதிவு வந்துக்கொண்டு இருக்கும். முதல் இடம் இந்த Blog க்கு மட்டும் தான் தருவேன் அதில் எழுதவில்லை என்றால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள் ஏன் என்றால் அதில் உள்ளவர்கள் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். அந்த பதிவுகளில் உள்ள செய்தியை இந்த பதிவில் எழுதினால் வருபவர்களும் வரமாட்டார்கள். அத்தனையும் ஆன்மிக குப்பைகள் நீங்களும் அந்த குப்பையை படிக்க வேண்டும் என்றால் எனது நண்பராக மாறிவிடவேண்டியது தான். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


திருவடி சரணம்




வணக்கம் நண்பர்களே நாம் கோவிலுக்கு போனால் மூலவரை தரிசனம் செய்து விட்டு வந்துவிடுவோம் அவரின் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு வருவோம். ஒரு சிலர் கடவுளை பார்த்துவிட்டு உடனே கண்களை மூடிக்கொண்டு வேண்டுதல் வைத்துவிட்டு வந்துவிடுவோம்.


நீங்கள் எந்த கோவிலுக்கு போனாலும் மூலவரை நன்றாக பார்த்துவிடுங்கள் பார்த்துவிட்டு வெளியில் வந்து அவரின் உருவத்தை நினைத்து கண்களை மூடி தியானம் செய்யுங்கள். நீங்கள் பார்ப்பதே ஒரு சில நிமிடங்கள் தான் இருக்கும் அந்த நேரத்தில் நீங்கள் கண்களை மூடவேண்டாம். 

மனிதனாக பிறந்தால் வாழ்நாட்களில் நீங்கள் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். ராமேஸ்வரம் செல்லாமல் இருக்ககூடாது. ராமேஸ்வரம் சென்றால் சுவாமியை நன்றாக பார்த்துவிடுங்கள். அங்குபோய் கண்களை மூடிக்கொண்டு சாமி தரிசனம் செய்யாதீர்கள். நன்றாக அவரை பார்த்துவிடுங்கள். அவரை நாம் பார்ப்பதில் தான் விசேஷம் உள்ளது. நீங்கள் இதுவரை ராமேஸ்வரம் செல்லவில்லை என்றால் உடனே சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

கோவிலுக்கு போனால் நன்றாக மூலவரை பாருங்கள். மூலவரை பார்த்தவுடன் அவரின் திருவடி (கால்களை) பாருங்கள். திருவடியில் சரணம் அடைந்தால் தான் நம்மால் முன்னேறமுடியும். பெருமாள் கோவிலாக இருந்தால் திருவடிக்கு முக்கியம் கொடுத்து பார்க்கவேண்டும். பெருமாள் கோவிலில் திருவடிக்கு தீபாராதனை காட்டுவார்கள். அதனை பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும். கடவுளின் திருவடிகள் தான் சாதாரண மனிதனை உயர்த்த முடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Wednesday, September 26, 2012

தனுசு : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே தனசு லக்கனத்திற்க்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன என்று பாரக்கலாம்.

தனசு லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன் அவர் லக்னத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தனசு குருவின் வீடு. புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் துணைவரால் உங்களுக்கு லாபம் இருக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு இரண்டாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நல்ல தனவரவு இருக்கும். துணைவரால் வருமானம் உயரும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு மூன்றாவது வீடு கும்பம். அதன் அதிபதி சனி. புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு ஒரு சில தடைகளுக்கு பிறகு நடைபெறும். திருமண வாழ்வில் சில சண்டைகள் ஏற்படும். பக்கத்துவீட்டுகாரர்களின் தொடர்பு உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். உடல் நிலையில் சோர்வு ஏற்பட செய்யும். துணைவர் துணிச்சலாக இருப்பார்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனசு ராசிக்கு நான்காவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு புதனுக்கு இந்த வீடு நீசம்.

திருமண ஏற்பாடு தாயார் வழியில் நடைபெறும். திருமண காலம் தாழ்த்தி நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் உங்கள் துணைவருக்கும் உங்கள் தாயாரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். 

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனசுக்கு ஐந்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமணம் காதல் திருமணமாக இருக்கும். திருமணம் நடைபெற்றால் திருமண வாழ்வில் சண்டை சச்சரவு இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். அறிவால் வெல்ல முடியும். குலதெய்வ வழிபாடு நீங்களும் உங்கள் துணைவரும் சென்று வழிபட்டு வருவீர்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு ஆறாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். புதனுக்கு நட்பு வீடு.

திருமண ஏற்பாடு தடை ஏற்பட்டு நடைபெறும். உங்கள் வேலைகாரர் மூலம் வரன் வரும். திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்காது. உங்கள் துணைவர் நோய்வாய் படுவார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசுக்கு ஏழாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். புதனுக்கு சொந்த வீடு.

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். துணைவரர் வந்ததால் மகிழ்ச்சி வந்ததா அல்லது மகிழ்ச்சி வந்ததால் துணைவரர் வந்தாதா என்று நினைக்க தோன்றும். அனைதிலும் நிம்மதியை தரும் இந்த தசா.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு எட்டாவது வீடாக வருவது கடக ராசி அத் அதிபதி சந்திரன். புதனுக்கு இந்த வீடு பகை வீடு.

திருமண ஏற்பாடு நடைபெறாது. திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் நிம்மதி இருக்காது உங்கள் துணைவர் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார். துணைவரால் குடும்பத்தில் வீண் பிரச்சினை வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு ஒன்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். புதனுக்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். பெரியோர்களின் ஆசி இருக்கும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பு உயரும். திருமண தம்பதிகள் ஆன்மிக பெரியவர்களிடம் ஆசி வாங்குவீர்கள். 

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசுக்கு பத்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். புதனுக்கு இந்த வீடு சொந்த வீடு.

திருமண ஏற்பாடு நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மூலம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் உங்கள் துணைவரால் உங்களுக்கு தொழில் அமையும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு பதினொராவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். புதனுக்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமண ஏற்பாடு மூத்த சகோதரிகள் மூலம் நடைபெறும். திருமணம் உடனே நடைபெற்றுவிடும். உங்கள் துணைவர் நல்ல சொத்துக்களுடன் வருவார். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். நல்ல லாபம் வரும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசுக்கு பனிரெண்டாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாட்டில் சண்டை வரும். திருமணம் நடைபெறுவதற்க்கு அதிக செலவு செய்ய வேண்டிவரும். திருமண வாழ்வில் நிம்மதி குறைவாக இருக்கும். துணைவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தங்கவேண்டிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Monday, September 24, 2012

விருச்சிகம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே விருச்சிக ராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

விருச்சிக லக்கினத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் சுக்கிரன் இந்த வீட்டிற்க்கு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். துணைவர் மூலம் வருமானம் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல உடன்பாடு இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் விருச்சிகத்திற்க்கு இரண்டாவது வீடு தனுசு அதன் அதிபதி குரு. சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு. 

திருமணம் ஏற்பாடு நடைபெறும். திருமணத்தால் உங்கள் பொருளாதாரம் உயரும். திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டில் புதிதாக ஒரு நபர் கூடுவார்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் விருச்சிகத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு

திருமண ஏற்பாடு இளைய சகோதரர் மூலம் நடைபெறும். திருமண வாழ்வு இனிக்கும். கணவன் மனைவி இருவரும் இன்பசுற்றுலா செல்வார்கள். கூட்டுத்தொழில் கமிஷன் தொழிலாக இருந்தால் நல்ல வருமானம் வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் விருச்சிகத்திற்க்கு நான்காவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு .

திருமண ஏற்பாடு நடைபெறும். கணவன் மனைவிக்குள் நல்ல உறவு ஏற்படும். தாயாரிடம் உங்கள் துணைவர் அன்போடு இருப்பார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் விருச்சிக்கத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு சுக்கிரனுக்கு இந்த வீடு உச்சம்.

திருமணம் காதல் திருமணமாக அமையும் திருமணத்தில் பிரச்சினை ஏற்படும். திருமண வாழ்வு நன்றாக அமையும் என்று சொல்லமுடியாது. 

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் விருச்சிகத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண ஏற்பாட்டில் சண்டை ஏற்படும். திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படும். துணைவருக்கு தீ காயம் ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் விருச்சிகத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் சொந்த வீடு 

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமண நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சி அளிக்கும். புதிய தொழில் ஆரம்பம் ஆகும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் விருச்சிகத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். சுக்கிரனுக்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமண ஏற்பாடு தாமதம் ஆகும். திருமண வாழ்வு சிறக்காது துணைவரால் வீட்டில் அமைதி குறையும். 

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் விருச்சிகத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். சுக்கிரனுக்கு இந்த வீடு பகை 

திருமண முயற்சி பெரியோர்கள் மூலம் நடைபெறும். திருமண வாழ்வில் பெரியோர்களின் வழிகாட்டுதல் படி நடைபெறும். சமுதாயத்தில் மதிப்பு குறைவு ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் விருச்சிகத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். சுக்கிரனுக்கு இந்த வீடு பகை.

திருமண ஏற்பாடு தாமதம் ஆகும். திருமண நடைபெற்றாலும் துணைவர் உங்கள் பேச்சை கேட்கமாட்டார். தொழிலிலும் பிரச்சினை வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் விருச்சிகத்திற்க்கு பதினொராவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். சுக்கிரனுக்கு இந்த வீடு  நீசம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வில் நிம்மதி குறைவாக இருக்கும். பணவசதி வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் சம்பந்தபட்டு தசா நடைபெற்றால் விருச்சிகத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கு இந்த வீடு சொந்த வீடு

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமணத்திற்க்கு செலவு அதிகம் ஆகும். திருமண வாழ்வு நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, September 22, 2012

சந்தேகங்கள்



வணக்கம் நண்பர்களே நமது நண்பர்கள் மந்திர அனுபவங்கள் பற்றி பல கேள்விகளை கேட்டுள்ளார்கள்  சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முகமாக இந்த பதிவு


மணி

மந்திர சாஸ்திரங்கள் பற்றி ஒரு கேள்வி எனக்கு இதன் மேல் விருப்பம் உள்ளது வெறும் மந்திர சாஸ்திரங்களால் ஒருவர் உயர்நிலையை அடையமுடியுமா அல்லது யோக தியானம் கற்றபிறகு அடையமுடியுமா தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்.

வணக்கம் மணி யோக தியானத்தை விட இதில் உயர்நிலையை அடைய பல வழிகள் உள்ளன. இன்று நடத்தும் யோக தியானத்தில் எத்தனை பேர் உயர்நிலையை அடைகிறார்கள் ஒருவர் கூட கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நடத்திக்கொண்டு இருக்கும் சாமியார்கள் பெயர் தான் வெளியில் வருகிறது கற்பவர்கள் ஒரு பெயர் கூட வெளியில் வருவதில்லை. 

ஐயப்பன்

 நான் சாமியாராக வேண்டும் அதற்கு ஒரு எளிய வழியை சொல்லுங்கள்?

எங்கேயோ கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்கிறீர்கள் நான் சாமியார் கிடையாது என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் கேட்ட கேள்வியை பார்த்தால் போலி சாமியாராக ஆக ஆசைபடுகிறீர்கள் என்று தெரிகிறது. பரவாயில்லை சொல்லுகிறேன். நீங்கள் இந்து மதத்தில் உள்ள ஏதாவது ஒரு வேதத்தை கற்றுக்கொள்ளுங்கள் வேதங்கள் படிப்பதற்க்கு கடினமான இருந்தால் அதனை தமிழில் படிக்க நிறைய நூல்கள் வந்துவிட்டது. வாங்கி படியுங்கள்.

ஒரு உபநிஷத்தை நீங்கள் கற்றலே சுமாராக முப்பது வருட காலம் நீங்கள் தொடர்ச்சியாக உரை ஆற்றலாம். அதனை நீங்கள் படித்து பொருளை அறிந்தால் அப்பொழுது இதுவரை சாமியாரகள் ஆற்றிய உரைகள் எல்லாம் இங்கு இருந்து தான் எடுத்து இருக்கிறார்கள் என்பது புரியும்.

தமிழிலும் நிறைய நூல்கள் வந்துவிட்டன. பகவத்கீதை கூட இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழில் தான் முதன் முதலாக வந்தது என்று எங்கோ படித்த ஞாபகம்.

இதை எல்லாம் படித்துக்கொண்டு சும்மா கண்ணை மூடிக்கொண்டு உட்காருங்கள் நீங்கள் தான் அடுத்த பிரபல சாமியார். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

எங்கேயாவது போய் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இதற்கு யார் காரணம் என்று கேட்டால் என்னை மாட்டிவிட்டுடாதீர்கள் அப்புறம் நான் சிறை அனுபவம் என்று புதிய தொடர் ஆரம்பிக்க வேண்டும்.

பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்

நான் கோடிஷ்வரராக ஆக வேண்டும் மந்திரங்களில் அதற்கு வழி இருக்கிறதா?

தமிழனைப்பார்த்து ஏன் உலகத்தில் உள்ளவன் பயப்படுகிறான் என்று இப்பொழுது தான் தெரிகிறது. உடனடியாக நீங்கள் கோடிஷ்வரர் ஆக வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள் உங்களுக்கு சுயதொழிலிலும் இல்லை என்று கூறியுள்ளீர்கள் முதலில் உங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எந்த தொழில் உங்களுக்கு சரிவரும் என்று பாருங்கள் அதன் பிறகு அந்த தொழிலை தொடங்குகள் அதன் பிறகு மந்திரங்களை பயன்படுத்தி உங்கள் தொழிலை நன்றாக செல்ல வையுங்கள் கண்டிப்பாக நீங்கள் கோடிஷ்வராக வருவீர்கள். திடீர் என்று வருவதாக இருந்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் இதனை தான் செய்வார்கள். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, September 21, 2012

துலாம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே துலாம் ராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய் அவர் லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் செவ்வாய்க்கு இந்த வீடு சமம்

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். துணைவர் மூலம் சொத்துக்கள் சேரும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக செல்லும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு இந்த வீடு ஆட்சி.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். தனவரவு வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால்  துலாத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு

திருமணம் நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சியை கொடுக்கும். ஏஜென்சி தொழில் மூலம் வருமானம் வரும். பக்கத்துவீட்டுகாரர்கள் அனுசரனையாக நடந்துக்கொள்ளுவார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு நான்காவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. செவ்வாய்க்கு இந்த வீடு உச்ச வீடு

திருமண வாழ்வு மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்லும். வாகன யோகம் அமையும். சொத்துக்கள் சேரும. புதிய வீடு கட்டும் யோகம் வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. செவ்வாய்க்கு இந்த வீடு சமம்.

திருமணம் காதல் திருமணமாக இருக்கும். பிற சாதியில் திருமணம் நடைபெறும். பணவரவு வரும். குலதெய்வ வழிபாடு நடைபெறும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு ஆறாவது வீடாக மீன ராசி வருகிறது அதன் அதிபதி குரு. செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு.

திருமண ஏற்பாடு தள்ளி போகும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். பிரச்சினை ஏற்பட்டாலும் சமாதானம் ஆகிவிடுவார்கள். வேலை கிடைக்காமல் இருந்தால் வேலை கிடைக்கும். துணைவர் நோய்வாய்படுவார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டிலே சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு சொந்த வீடு.

திருமணம் நடைபெறும். கூட்டு தொழில் ஆரம்பிப்பார்கள். கூட்டுதொழிலில் துணைவரே தொழில் கூட்டாளியாக வருவார். நல்ல வருமானம் கிடைக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். செவ்வாய்க்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு தடை வரும். கூட்டுதொழில் லாபம் தரும். துணைவர் பொறுப்பு அற்ற தன்மையில் காணப்படுவார். அவரால் செலவு ஏற்படும். குடும்பத்தை ஏற்று நடத்த தெரியாது.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் துலாத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். செவ்வாய் இந்த வீடு பகை.

திருமண ஏற்பாடு பெரியோர்கள் மூலம் நடைபெறும். திருமண ஏற்பாட்டில் பெரியோர்களின் கோபத்தை நீங்கள் சந்திக்க வேண்டிவரும். சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்காது. 

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் துலாத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். செவ்வாய்க்கு இந்த வீடு நீசம்.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வு அந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்காது. சொத்துகளுக்கு சேதம் வரும். 

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் துலாத்திற்க்கு பதினொராவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் ஆதரவு இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்கு பனிரெண்டாவது வீடாக வருவது கன்னி ராசி அதன் அதிபதி புதன். செவ்வாய்க்கு இந்த வீடு பகை.

திருமண ஏற்பாட்டிற்க்கு கடுமையான செலவு வைக்கும். திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். துணைவர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் தங்க வேண்டிருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, September 20, 2012

கன்னி : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

கன்னி லக்கினத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மீன ராசி அதன் அதிபதி குரு அவர் லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் மிகுந்த மகிழ்ச்சியை தரும். இந்த தசா முழுவதும் நன்மை தரும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கன்னி ராசிக்கு இரண்டாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன் குருவிற்க்கு இந்த வீடு பகை வீடு

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் குடும்பவாழ்க்கையில் தகராறு நடைபெறும். தனவரவு குறைவாக இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு மூன்றாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய் குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் இளைய சகோதர் வழியில் வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் நல்ல மகிழ்ச்சி நிலவும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு நான்காவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. குருவிற்க்கு இந்த வீடு சொந்த வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். வண்டி வாகனம் யோகம் வரும். வீட்டில் சந்தோஷம் நிலவும். வீடு கட்டும் நிலை ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மகரம் மகரம் ராசியின் அதிபதி சனி. குருவிற்க்கு இந்த வீடு நீசம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாடு தாமதம் ஆகும். வருமான குறைவு ஏற்படும். குழந்தை பாக்கியம் தாமதம் ஆகும். மனதில் படபடப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஏழாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஆறாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. குருவிற்க்கு இந்த வீடு சமம்.

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமண தடை ஏற்படும். திருமண நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும். வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறாது.

ஏழாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஏழாவது வீடு மீனம் அதன் அதிபதி குரு. குருவுக்கு இந்த வீடு சொந்தவீடு.

திருமண ஏற்பாடு நடைபெறும் திருமண நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். கூட்டு தொழில் ஆரம்பிக்கும் காலமாக இருக்கும். நல்ல பணவரவு இருக்கும்.

ஏழாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு எட்டாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு

திருமண ஏற்பாடு தடை ஏற்படும். திருமண ஏற்பாட்டில் தகராறு ஏற்படும். திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். கூட்டு தொழில் லாபம் தரும்.

ஏழாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு ஒன்பதாவது வீடாக ரிஷப ராசி வருகிறது. அதன் அதிபதி சுக்கிரன் குருவிற்க்கு இந்த வீடு பகை வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண ஏற்பாடு ஒரு பெண் மூலம் நடைபெறும். கூட்டுத்தொழில் பிரச்சினையை தரும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும்.

ஏழாம் வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு பத்தாவது வீடாக மிதுன ராசி வருகிறது அதன் அதிபதி புதன். குருவிற்க்கு இந்த வீடு பகை.

திருமண ஏற்பாடு பிரச்சினை வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை வந்து பிரிய நேரிடும். தொழிலும் வருமானம் வராது. ஆயுளுக்கு பங்கம் வராது.

ஏழாம் வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு பதினொராவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். குருவிற்க்கு இந்த வீடு உச்சம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் உடனடியாக திருமணம் நடைபெறும். திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர்களாக இருப்பார்கள். திருமணத்தால் நல்ல வருமானம் சொத்துக்கள் சேரும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

ஏழாம் வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கன்னி ராசிக்கு பனிரெண்டாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். குருவிற்க்கு இந்த வீடு நட்பு வீடு

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமணத்திற்க்கு அதிக செலவு செய்வீர்கள். உங்கள் துணைவரால் செலவு இருக்கும். வருமானமும் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 





Wednesday, September 19, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் மந்திர அனுபவங்களைப்பற்றி பார்க்கலாம். மந்திரங்களை பொருத்தவரை அனைத்தும் பொதுவாகத்தான் இருக்கின்றன ஆனால் அதை பயன்படுத்துவதற்க்கு தான் பயிற்சி இல்லாமல இருக்கிறார்கள்.

இன்று நெட்டில் ஆன்மிக தளங்களை எடுத்துக்கொண்டால் அனைத்திலும் ஏதாவது ஒரு மந்திரத்தை தந்து அனைவருக்கும்  அதை பயிற்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

உங்களுக்கு மந்திரங்களை விட யோக தியானத்திற்க்கு என் மனம் செல்லுகிறது என்றால் யோக தியானம் கற்றுக்கொள்ளலாம். அனைத்தும் கடவுளிடம் தான் நம்மை கொண்டு செல்லுகிறது.

மந்திரங்களை எப்படி பயன்படுத்தலாம் என்று அனைவரும் என்னிடம் ஜாதகங்களை அனுப்பியுள்ளார்கள் அனைவருக்கும் நான் பார்த்து சொல்லுவது என்றால் எனக்கு நேரம் கண்டிப்பாக கிடையாது.

உங்களுக்கே சோதிடம் தெரியும் அதை வைத்து பார்த்துக்கொள்ளலாம். பொதுவாக குரு கிரகம் மந்திர சாஸ்திரத்திற்க்கு மிகவும் உதவி செய்யக்கூடிய கிரகம். ஒரு ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மந்திரங்களை உடல் வாங்கிக்கொள்ளும் குரு பகை வீட்டில் இருந்தால் தாந்திர மந்திரங்கள் உங்களுக்கு நன்றாக வரும். குரு நீசமாக இருந்தால் மந்திரங்கள் மீது ஈடுபாடு இருக்காது.

மனக்காரகன் சந்திரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுது தான் மனது அமைதி அடைந்து மந்திரங்களை உரு ஏற்ற முடியும். மனது ஒரு நிலையில் இருக்க வேண்டும் என்று தான் பல சாமியார்கள் போதை வஸ்துக்களை கையில் எடுப்பார்கள். மனது ஒரு நிலைக்கு வருவதற்க்கு போதையை சொல்லிவிட்டார் என்று நீங்கள் முடிவு எடுத்துக்கொண்டு போதையில் இறங்கிவிடாதீர்கள்.

யோக வகுப்பில் மூச்சு பயிற்சி செய்வார்கள் அது எதற்கு என்றால் இதயத்தை சரிசெய்து தியானத்தை கற்று தருவார்கள். இதயத்தில் தான்  முக்கால் வாசி மேட்டர் இருக்கிறது அதனால் அதனை செய்ய சொல்லுவார்கள். இதை எல்லாம் செய்த பிறகு தான் மந்திரங்களை நீங்கள் கையில் எடுக்க வேண்டும். நடைமுறையில் இது எல்லாம் யாரும் கவனத்தில் கொள்ளாமல் அப்படியே சொல்லி கொடுக்கிறார்கள் அதனால் தான் மந்திரங்கள் ஒன்றும் வேலை செய்வதில்லை.

மந்திரங்களை உருஏற்றுவதற்க்கு விடியற்காலை நல்ல நேரமாக இருக்கும் நாம் விடியற்காலையில் எழுவது என்றால் பிடிக்காத ஒன்றாக இருக்கும். முடிந்தவரை விடியற்காலையில் எழுந்து செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் அப்படி வசதி இல்லை என்றால் ஒரு சில குடும்பத்தில் நிறைய பேர் இருக்கலாம் அப்பொழுது அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் அந்த மாதிரி இருந்தால் முதல் மூன்று நாட்கள் மட்டும் விடியற்காலையில் எழுந்து செய்யுங்கள் பிறகு அதற்கு என்று நீங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு அந்த நேரத்தில் செய்யுங்கள் போதுமானது.

சோதிடத்தில் விடியற்காலையில் எழுவதற்க்கு என்ன சொல்லியுள்ளார்கள் என்றால் சூரியன் லக்கனத்தில் இருக்க வேண்டும் அல்லது பத்தாவது வீட்டில் இருக்க வேண்டும் அல்லது பதினொராவது வீட்டில் இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே ஒருவர் சூரியனை வரவேற்பதற்க்கு இருப்பார் என்று சொல்லியுள்ளார்கள்.

மந்திரங்களில் பொதுவாக சாதுவான தெய்வங்களாக எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும். சிவனையும் பெருமாளையும் எடுக்காதீர்கள் அது எல்லாம் நீங்கள் ஆன்மிகத்தில் பெரிய இடத்திற்க்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

மந்திரங்கள் உரு ஏற்றும் போது முதலில் விநாயகரே வணங்கிவிட்டு உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு ஆரம்பியுங்கள் மந்திரங்களை முடிக்கும் போது ஆஞ்சநேயரை நினைத்து முடியுங்கள்.

மந்திர வரிகளை சொல்லி தாருங்கள் பலரும் கேட்டார்கள் நீங்களே ஒரு மந்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் மந்திரத்தின் முதலில் ஓம் என்று ஆரம்பிக்க வேண்டும் மந்திரங்கள் முடியும் போது கண்டிப்பாக ஓம் என்று முடிக்ககூடாது.

 ஒரு தவறான மந்திரத்தை உங்களுக்கு சொல்லுகிறேன் அப்பொழுது எளிதில் விளங்கும்.

ஓம் சங்கரா சங்கரா ஓம்

ஓம் என்பது உலகின் முதல் ஆரம்பம் அதனை கண்டிப்பாக போடவேண்டும். சங்கரா சங்கரா என்று இரண்டு தடவை சிவனின் நாமத்தை உச்சரிக்கிறீர்கள்
சிவனை என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ஒன்று அவரை வர சொல்ல வேண்டும் அல்லது அவரை நீங்கள் புகழ வேண்டும்.

நமக்கே பிரச்சினையில் தான் அவரை கூப்பிடுகிறோம் கூப்பிடுவதிலேயே பிரச்சினை இருந்தது என்றால் அவ்வளவு தான் மனம் அமைதி அடைவதற்க்கு பதிலாக பைத்தியம் பிடித்து சடைமுடியுடன் தெருவில் தான் அலையவேண்டும். சாஸ்திரங்களில் ஓம் என்று முடிக்கமாட்டார்கள். நம அல்லது நமக என்று வரும். ஒரு சில வார்த்தைகளும் வரும் நீங்களே தேடினால் கிடைக்கும்.

இது எல்லாம் எப்படி செய்வது என்று யோசனை தோன்றுகிறதா ஒரு நல்ல குரு உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் கல்லாக இருந்தாலும் சிலையாக உங்களை செதுக்கிவிடுவார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்



வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் எனது வாழ்த்தினை சொல்லுங்கள்.

இல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜை

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலியவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

உங்களுக்கு எந்த காரியத்திலும் தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் நீங்கள் சதுர்த்தி திதி அன்று விநாயகருக்காக விரதம் இருந்து அவரை வணங்கினால் தடைகள் விலகி உங்களுக்கு நன்மை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, September 15, 2012

மந்திர அனுபவங்கள்




நண்பரே எனக்கு மந்திரங்கள் கற்று கொடுங்கள்..எனக்கு இதில் முழுமையான ஈடுபாடு உள்ளது. உங்கள் மொபைல் எண் என்ன? உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் கற்று கொடுங்கள். நான் என்னுடைய வாழக்கை முன்னேற்றத்திற்காக மட்டுமே இதனை உங்களிடம் கேட்கிறேன்.

பதில்

நான் எழுதுவதே நான் அடுத்தவர்களுக்கு கற்று தரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை  யாராவது ஒன்று இரண்டு பேர்க்கு மட்டுமே என்னால் கற்று தரமுடியும். எல்லாருக்கும் கற்றுதருவது என்னால் இயலாத காரியம். இந்த பதிவுகளில் தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் மந்திர அனுபவங்கள் என்று வைத்துள்ளேன். என்னுடைய அனுபவத்தை உங்களுக்கு சொல்லும் போது நீங்கள் அந்த வழியில் சென்றால் உங்களுக்கு என்னுடைய அனுபவங்கள் ஒரு வேலை பயன்படலாம். இதை எழுதும் போது நான் நினைத்தது யாராவது ஒருவர் மட்டும் இதை கருத்தில் எடுத்துக்கொண்டால் போதும் என்று நினைத்து தான் எழுதினேன். இன்றைக்கு பார்த்தால் எனக்கு வரும் போன்கால் அனைத்தும் இது சம்பந்தமாக தான் இருக்கிறது. நீங்கள் மந்திரவழியை தேர்ந்தெடுப்பதற்க்கு நல்ல சாமியார்களை தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும். நான் சாமியார் கிடையாது நான் ஆசாமி.


ஐயா வணக்கம், 



கடக லக்னம் 6இல் குருவுடன் சனி சிறுவயதிலிருந்தே மந்திரங்கள் மற்றும் பாடல்களில் விருப்பம் அதிகம் அவற்றில் சில எந்த எதிர்பார்பும் இன்றி பாராயணம் செய்வேன் அர்த்தங்களும் தெரியும், அடிக்கடி குரு மூலம் அறியவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் எப்படி எனக்கு சாத்தியமாகும் குரு தரிசனமே யோகமான விஷயம் வழி கூறுங்கள் 
கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல்


பதில்

வணக்கம் முருகன் நீங்கள் இரண்டு கிரகங்களை மட்டும் வைத்து கேள்வி கேட்டு உள்ளீர்கள் பரவாயில்லை  உங்களுடைய முழு ஜாதகத்தையும் வைத்து பார்த்தால் தான் தெரியும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள் எதற்கு அவ்வாறு செய்யவேண்டும். எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். குரு தேவை என்று அடிக்கடி சொல்லுவதின் நோக்கம் இது எல்லாம் நான் எழுதகூடாது என்று நினைத்திருந்தேன் ஆனால் உங்களை மாதிரி நிறைய பேர் என்னிடம் கேட்டுகொண்டே இருப்பதால் ஒரு நிகழ்ச்சியை மட்டும் உங்களுக்கு சொல்லுகிறேன். மந்திரங்களை நிறைய விசயத்திற்க்கு பயன்படுத்துவார்கள் எந்த எந்த விசயத்திற்க்கு எல்லாம் என்றால் அதைப்பற்றி சொல்லுவதற்க்கே எனக்கு நேரம் இருக்காது. 

அதில் ஒன்று உங்கள் ஆத்மாவை உங்கள் உடல் இருந்து பிரித்து எடுத்து வெளியில் கொண்டு செல்லலாம். அப்படி உங்கள் ஆத்மாவை உங்கள் உடலிருந்து பிரிக்கும் போது அதற்கு என்று நிறைய பயிற்சி தேவை அந்த பயிற்சி புத்தகத்தில் இருப்பது மாதிரி செய்தால் உங்கள் உயிர் போய்விடும் அதற்கு தகுந்த குரு தேவை அப்பொழுது மட்டுமே சாத்தியப்படும்.உயிரை பிரித்து எடுத்து அந்த ஆத்மாவை மறுபடியும் உங்கள் உடம்பிலேயே உகுத்தவேண்டும் அப்பொழுது மட்டுமே உங்கள் உடம்பு உயிர் வந்து எழும். அதுவரை உங்கள் உடம்பு செத்த உடம்பு போலதான் இருக்கும். சில சாமியார்கள் குகைகளில் இருப்பதன் ரகசியம் இதற்கு தான் நண்பரே. என்னடா படமாக ஒட்டிகிறாய் என்று கேட்கலாம்.

ஆத்மாவை பிரிக்கும்போது என்ன நடக்கும் என்று இரண்டு விசயத்தை சொல்லுகிறேன் உங்களுக்கு குரு யாராவது இருந்தால் அல்லது இதைப்பற்றி தெரிந்தவர்களிடம் போய் கேளுங்கள் அப்பொழுது தெரியவரும். முதலில் மந்திர பிரயோகம் செய்தவுடன் கடலின் சத்தம் நம் காதில் கேட்கும் அதன் பிறகு சங்குவின் சத்தம் கேட்கும் அதன் பிறகு நிறைய வேலை இருக்கிறது அதை எல்லாம் நான் எழுதவில்லை உங்கள் ஆத்மா பயணத்தை தொடங்கும். இதைப்போய் உங்கள் குருவிடம் கேளுங்கள் உண்மையை சொல்லுகிறேன அல்லது பொய் சொல்லுகிறேன என்று தெரியவரும்அவர் சொல்லுவார். 

இதை எல்லாம் நான் சொல்லுவதால் நீங்கள் சாமியார் என்று நினைத்துக்கொண்டு போனில் சாமி என்று கூப்பிடாதீர்கள். நான் ஆசாமி. கடைசியாக சொல்லுவது கண்டிப்பாக குரு தேவை. உங்கள் ஜாதகத்தை அலசிபாருங்கள் அனைத்திற்க்கும் வழி இருக்கும். ஜாதகத்தில் வழி இல்லாமல் செய்வது கடினம் உலகில் உள்ள அனைவரும் கற்கலாம் ஆனால் ஜாதகத்தில் அதற்கு வழி என்ன என்று பார்த்தால் தான் தெரியும். போதுமா நண்பரே

நிறைய எழுதபோகிறேன் அப்பொழுது உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகத்திற்க்கும் வழி கிடைக்கும் ஸ்ரீ அங்காளஅம்மன் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை பார்க்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, September 14, 2012

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்



நாம் முதன்மையாக சிறப்பாக வழிபடும் தெய்வம் விநாயகர் எந்த சுபகாரியமாக இருந்தாலும் விநாயரை பிராத்தித்து சங்கல்பம் செய்து கொண்ட பின்னரே மக்கள் எதனையும் செய்ய ஆரம்பிப்பார்கள். அதனாலேயே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் வழக்கத்தை கையாளுகிறோம்.


இப்பதிவில் ஒவ்வொரு திதிக்கும் உள்ள பிள்ளையாரின் திருநாமத்தை சொல்லி வணங்குவோம்.

அமாவாசை, பவுர்ணமி -  ஸ்ரீ நித்த கணபதி போற்றி

பிரதமை - ஸ்ரீ பால கணபதி போற்றி

துவிதியை-  ஸ்ரீதருண கணபதி போற்றி

திரிதியை- ஸ்ரீ பக்த கணபதி போற்றி

சதுர்த்தி - ஸ்ரீ வீர கணபதி போற்றி

பஞ்சமி - ஸ்ரீ சக்தி கணபதி போற்றி

சஷ்டி - ஸ்ரீ துவிஜ கணபதி போற்றி

சப்தமி - ஸ்ரீ சித்தி கணபதி போற்றி

அஷ்டமி - ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி போற்றி

நவமி - ஸ்ரீ விக்ன கணபதி போற்றி

தசமி - ஸ்ரீ ஷிப்ர கணபதி போற்றி

ஏகாதசி - ஸ்ரீ ஹேரம்ப கணபதி போற்றி

துவாதசி - ஸ்ரீ லட்சுமி கணபதி போற்றி

திரயோதசி-  ஸ்ரீ மகா கணபதி போற்றி

சதுர்த்தி - ஸ்ரீ விஜய கணபதி போற்றி

இப்படி சொல்லி வணங்கி அவன் அருள் பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, September 13, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே மந்திர அனுபவங்கள் தொடரில் கடைசியாக பார்த்தது ஆத்மா விரிவடையும் போது ஒரு பிரச்சினை இருக்கும் என்று சொல்லிருந்தேன். ஆத்மா பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படும் போது சில கெட்டவிசயங்கள் உங்களை தாக்கும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு   உங்கள் குருநாதர் உங்களுக்கு உடல்கட்டு போட்டுவிடுவார்.

இந்த ஒரு செயல் இருந்தே குரு உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறதா உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களும் அவர் தான் விளக்குவார். 

நாம் செய்கின்ற வழிபாடு கூட நடைபெறாமல் போவதற்க்கு நம்மை தாக்கும் தீயசக்திகள் தான் காரணமாக இருக்கின்றன. அதனால் உடல்கட்டு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும்.

ஒரு குரு எப்படி இருப்பார். அந்த ஞானியை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை விவேக சூடாமணி என்ற நூலில் 425 வது செய்யுளில் சொல்லி உள்ளார்.

புறப்பொருளிகளின் பற்றை நீக்கி உலகத்தையும் அதன் தோற்றத்தையும் ஒர் மனிதன் எவ்வாறு விருப்பு வெறுப்பின்றி பார்ப்பானே அவ்வாறே நோக்கி தான் உலகத்தோடு இருப்பினும் தன் சித்தத்தை பிரமனிடத்தே ஒன்றச்செய்து எவன் இன்பம் அனுபவிக்கின்றானோ அவனே ஞானி என்று சொல்லியுள்ளார்.

இப்படி கிடைப்பது ரொம்ப கடினமான ஒன்றாக தான் இருக்கும். குருவை பற்றி நிறைய எழுதியுள்ளேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல குரு கிடைக்க நீங்கள் தவம் செய்து இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களை நீங்கள் நல்ல முறையில் வளர்த்துக்கொள்ளலாம். அந்த மாதிரி குரு கிடைக்கும்வரை பல நல்ல புத்தகங்களை நீங்கள் படிப்பதால் உங்களை வளர்த்துக்கொள்ள உதவும். 

இவ்வளவு பதிவுகள் மந்திர அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒருவர் மட்டும் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு எனக்கு கற்று தாருங்கள் என்று கேட்டார். அவர் ஆஸ்திரிலியாவில் இருக்கிறார். அவருக்கு மட்டும் கற்று தர உள்ளேன்.

பலர் என்னிடம் கேட்டதோடு சரி நல்ல இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள் என்று மட்டும் சொன்னார்கள் வேறு யாருக்கும் இதில் ஈடுபாடு அந்தளவுக்கு இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவேன் அப்பொழுது உங்களை எப்படி எல்லாம் தயார்படுத்திக்கொள்ளலாம் என்று தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

திருமணத்திற்க்கு ஏற்ற நாட்கள்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ஏழாம் வீட்டு தசாவில் முக்கியமான ஒன்றாக திருமணம் இருக்கிறது. திருமணத்தை எந்த நாட்களில் நடத்தலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மாதம்

மாதங்கள் வைகாசி,ஆனி,ஆவணி,கார்த்திகை,தை,பங்குனி ஆகிய மாதங்களில் திருமணத்தை நடத்தலாம்.

திதி

வளர்பிறையில் தான் திருமணம் நடத்த வேண்டும்.

திதி : வளர்பிறை துதியை, திருதியை,பஞ்சமி,சப்தமி,ஏகாதசி,திரயோதசி ஆகிய திதிகளில் நடத்தலாம்.

கிழமை

கிழமைகள் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திருமணம் செய்யலாம்.

லக்கினங்கள் 

ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,தனுசு,கும்பம்,மீனம் இந்த லக்கினங்களில் நடத்தினால் நன்மை தரும். லக்கினத்திற்க்கு 7 ல் , 8 ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் கூடுதல் சிறப்பு.

நட்சத்திரங்கள்

ரோகினி, மிருகசீரிஷம்,மகம்,உத்திரம், அஸ்தம், சுவாதி,அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்தால் நல்லது.

இந்த நட்சத்திரங்களில் ஆண் ,பெண் இருவருக்கும் அவரவர் நட்சத்திரம் வரும் போது திருமணம் நடத்தகூடாது. மனநிலை நன்றாக இருக்காது அதனால் திருமணம் நடத்தகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, September 12, 2012

சிம்மம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே சிம்ம ராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலனை தரும் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

சிம்ம லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கும்பம் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் கும்ப ராசியின் அதிபதி சனி. சிம்மத்தில் அதாவது லக்கனத்தில் சம்பந்தபட்டு தசா நடைபெற்றால் சனிக்கு இந்த வீடு பகை

திருமண முயற்சி செய்தால் எளிதில் நடைபெறாது. கடும் போராடத்திற்க்கு பிறகு திருமணம் நடைபெறும். காதல் செய்தால் வீட்டிற்க்கு தெரிந்து தந்தை மூலம் பிரச்சினை ஏற்படும். திருமணம் நடைபெற்றவர்கள் கணவன் மனைவிக்கு பூசல் ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது கன்னிராசி வருகிறது அதன் அதிபதி புதன்.  சனிக்கு இந்த வீடு நட்பு.

திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமண பேச்சு மாமன் மூலம் நடைபெற்று விரைவில் திருமண ஏற்பாடு நடைபெறும். கூட்டு தொழில் கமிஷன் தொழிலாக இருந்தால் அரசாங்க வாய்ப்பு வரும் அதன் மூலம் நல்ல பணவரவு பெறமுடியும். திருமண முடிந்தவர்கள் சந்தோஷமான குடும்பவாழ்க்கை அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு மூன்றாவது வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சனிக்கு இந்த வீடு உச்சம்.

கூட்டுதொழில் நல்ல முன்னேற்றம் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் உடனடியாக நடைபெறும். திருமணம் மூலம் சந்தோஷ வாழ்க்கை அமையும். அடிக்கடி இன்பபயணம் அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்ம்த்திற்க்கு நான்காவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு பகை.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாட்டில் சண்டை ஏற்படும்.  திருமணம் நடைபெற்றவர்கள் உங்கள் துணைவர் உங்கள் தாயுடன் சண்டை சச்சரவு ஏற்படும். தீயால் உங்கள் துணைவருக்கு காயம் ஏற்படும். உங்கள் வீட்டில் வாகனங்கள் இருந்தால் விபத்துகளை சந்திக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு ராசி அதன் அதிபதி குரு. சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் காதல் மணமாககூட நடைபெற வாய்ப்பு இருக்கும். துணைவர் மூலம் வருமானம் வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்க ஆறாவது வீடாக வருவது மகரராசி அதன் அதிபதி சனி. சனி சொந்த வீடு

சனி சொந்த வீட்டில் இருந்து தசா நடைபெறுவதால் நன்மையான பலனையே தரும் இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குறைத்தால் நன்மை பயக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்க ஏழாவது வீடாக கும்பராசி வருகிறது. சனியின் சொந்த வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். தம்பதிக்குள் ஒற்றுமையாக வாழ்வார்கள். சந்தோஷமான வாழ்க்கை அமையும். துணைவரின் பேச்சை கேட்டு நடப்பார் அதனால் பிறர் கண்களில் அடிமையாக வாழ்கிறார் என்று எண்ணம் ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமண ஏற்பாடு சிக்கலை தரும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குடும்ப வாழ்வில் சி்று பிரச்சினை ஏற்படும். துணைவர் சொல் பேச்சு கேட்கமாட்டார் அவர் இஷ்டம் போல் வாழ்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது மேஷ ராசி அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு நீசம்.

பெரியோர்களின் ஆசி கிடைக்காது. அதை இந்த காலத்தில் யார் எதிர்பார்த்தார்கள். முன்னோர்களின் ஆசி கிடைக்காது என்று சொல்ல வேண்டியது நல்ல இருக்கும். திருமண ஏற்பாடு கால தாமதம் ஆகும். உங்கள் மனது அதனால் தொந்தரவுகளை சந்திக்கும். குடும்ப வாழ்வும் திருப்தி தராது.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது ரிஷப ராசி அதன் அதிபதி சுக்கிரன். சனிக்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் நீங்களாகவே பெண்ணை பார்த்துக்கொள்வீர்கள் எப்படி என்றால் உங்கள் அலுவலகத்திலேயே அந்த பெண் வேலை செய்யலாம் நீங்களே பார்த்து பேசி முடித்துவிடுவீர்கள். உங்கள் துணைவரால் உங்களுக்கு வருமானம் உயரும் இரண்டு பேர் சம்பாதிப்பது என்றால் சும்மாவா. உங்கள் துணைவரால் உங்கள் மதிப்பு உயரும் மொத்தத்தில் இந்த தசா யோகம் தரும் தசா என்று சொல்லலாம்.


ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பதினொராவது வீடாக மிதுனம் ராசி வருகிறது அதன் அதிபதி புதன் சனிக்கு இது நட்பு வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். வரும் துணைவரால் பொருள் சேர்க்கை உண்டு. சந்தோஷமான குடும்பவாழ்க்கை அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். சனிக்கு இந்த வீடு பகை.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாட்டில் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். திருமண நடைபெற்றால் உங்கள் துணைவர் இந்த காலகட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிவரும். கையில் இருக்கும் பணம் எல்லாம் செலவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Tuesday, September 11, 2012

கடகம் : ஏழாவது வீட்டு தசா




வணக்கம் நண்பர்களே இப்பதிவில் கடக ராசியை லக்கனமான கொண்டவர்களுக்கு ஏழாம் வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

கடக லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மகர ராசி அதன் அதிபதி சனி. கடக ராசியின் அதிபதி சந்திரன். லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் சனிக்கு இந்த வீடு பகை.

சந்திரனுக்கும் சனிக்கும் சண்டைதான் வரும். மனசஞ்சலம் தரும். திருமண பேச்சு கடும் முயற்ச்சிக்கு பிறகு நடைபெறும். ஒரு சிலருக்கு நிச்சயதார்த்தவுடன் நின்று போய்விடும். நன்றாக தெரிந்தவரை திருமணம் செய்து கொள்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கடகத்திற்க்கு இரண்டாவது வீடு சிம்மம் அதன் அதிபதி சூரியன் சனிக்கு இந்த வீடு பகை

திருமணபேச்சு சண்டையில் முடியும். திருமணம் நடைபெற்று இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கேள்வி குறியாக தான் இருக்கும். கூட்டு தொழில் பிரச்சினையை சந்திக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கடகத்திற்க்கு மூன்றாவது வீடு கன்னி அதன் அதிபதி புதன். சனிக்கு இந்த வீடு நட்பு வீடு 

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண பேச்சு நடைபெறும். திருமண அண்டை அயலார் தொடர்பு மூலம் நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். சுற்றுலா ஏற்பாடு செய்துகொண்டு வெளியில் ஊர் சுற்றுவார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு நான்காவது வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன் சனிக்கு இந்த வீடு உச்சம்

திருமணம் தாயார் வழியில் வரும். திருமண வாழ்வு சுகமாக செல்லும். குடும்பத்தை ஏற்று நடத்துவார் உங்கள் துணைவர். வாகன யோகம் ஏற்படும். சொத்துக்கள் சேரும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கடகத்திற்க்கு ஐந்தாவது வீடாக விருச்சிக ராசி வருகிறது அதன் அதிபதி செவ்வாய் சனிக்கு இந்த வீடு பகை

திருமணம் நடைபெறாமால் இருந்தால் காதல் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் உன்னாலா நான் கெட்டேன் என்னாலா நீ கெட்டாய் என்று குடும்மிபிடி சண்டை தம்பதிக்குள் நடைபெறும். திருமண வாழ்வு நன்றாக இருக்காது.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஆறாவது வீடு தனுசு அதன் அதிபதி குரு. சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் தள்ளிப்போகும். திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டு தொழில் நன்றாக நடைபெறாது. இருவருக்கும் பிரச்சினை ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஏழாவது வீடாக மகர ராசி வருகிறது அதன் அதிபதி சனி. சனியின் சொந்த வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். கூட்டு தொழில் ஆரம்பிக்க சரியான நேரமாக இது இருக்கும். உங்கள் துணைவியே கூட்டு தொழிலுக்கு பார்ட்டனராக போடலாம். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு எட்டாவது வீடாக கும்பராசி வருகிறது அதன் அதிபதி சனி. சனிக்கு சொந்த வீடு.

மகிழ்ச்சியாக தான் திருமண வாழ்வு செல்லும். கூட்டுத்தொழில் நல்ல வருமானத்தை தரும். உங்கள் துணைவர் லாபநோக்கத்தோடு செயல்படுவார். ஒரு சில நேரம் திருமண வாழ்வில் சிறிய மனதகராறு ஏற்பட செய்யலாம்.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஒன்பதாவது வீடாக மீன ராசி வருகிறது அதன் அதிபதி குரு சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண யோகம் வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் உங்கள் மணவாழ்வு மகிழ்ச்சியாக செல்லும். பெரியோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு ஊரில் நல்ல மரியாதை கிடைக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு நீசம்.

திருமண வாழ்வு சிறக்காது. திருமண வாழ்வில் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். கூட்டு தொழிலும் இதே நிலைமை தான் நிலவும். வீட்டில் பிரச்சினை என்று தொழிலுக்கு வந்தால் இங்கேயும் பிரச்சினை வருகிறதே என்று மனதை ஒரு வழி பண்ணிவிடும்.

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பதினொராவது வீடாக ரிஷப ராசி வருகிறது அதன் அதிபதி சுக்கிரன் சனிக்கு இந்த வீடு நட்பு. 

திருமணம் நடைபெறாமல் இருந்தால் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர சகோதரிகள் மூலம் திருமணம் நடைபெறும். வரும் துணைவர் நல்ல சொத்துக்களுடன் பொன்நகைகள் உடன் வருவார்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பனிரெண்டாம் வீடாக வருவது மிதுனம். அதன் அதிபதி புதன் சனிக்கு இந்த வீடு நட்பு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண நடைபெற்று இருந்தால் துணைவர் மூலம் சுபசெலவுகள் வரும். சில நேரங்களில் மருத்துவ செலவுக்கூட வரும்.

மேலே தந்த அனைத்து பலனும் பொதுப்பலன் உங்களுக்கு இது போல் இருக்கு என்று கவலைபடாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Monday, September 10, 2012

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்



நெல்லிமர பிள்ளையார் : பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெயை கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும் பெண் குழந்தைக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். மன சாந்தியும் கிடைக்கும்.

மாமர பிள்ளையார் : கேட்டை நட்சத்திரம் அன்று இந்த விநாயகருக்கு விபூதி காப்பிட்ட 3 ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு ஆடை தானம் செய்ய பிறரின் பகைமை பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் மறுபடியும் சிறக்கும் விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும்.

நாவல்மர பிள்ளையார் : இவர் வடக்கு நோக்கி இருப்பது விசேஷம் ரோகினி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டுவர பிரிந்த தம்பதியினர் குடுங்பங்கள் உறவுகள் ஒன்று சேருவர்.

புன்னைமர பிள்ளையார் : ஆயில்யம் நட்சத்திரம் அன்று இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதோடு ஏழை நோயாளிக்களுக்கு ஆடை தானம் செய்தால் கணவன் மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும் தாம்பத்திய வாழ்க்கை வளமாகும்.

இலுப்பை மர பிள்ளையார் : ரேவதி நட்சத்திரம் அன்றும் செவ்வாய்கிழமைகளிலும் இவருக்கு பசு நெய்யை கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்கு உட்பட்ட சிறுமியரகளுக்கு அளித்துவர தனித்து வாழும் முதியவர்கள் பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும் மிக உயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள் எந்தவித விபத்துக்கள் இன்றி நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.

மகிழமர பிள்ளையார் : அரிய விநாயகரான இவரை அனுஷம் நட்சத்திரம் அன்று மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்துவர ராணுவம் வெளிநாடுகளில் உள்ளோர்  நலமாக இருப்பார்கள் ராணுவத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான வாழ்வை பெறுவார்கள்.

சந்தனமர பிள்ளையார் : மிக மிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி திதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட அரி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும் புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.