Followers

Wednesday, January 30, 2013

பூர்வ புண்ணியம் 22





வணக்கம் நண்பர்களே !

                     பூர்வபுண்ணியத்தொடரை படித்துவிட்டு பல நண்பர்கள் பாராட்டுகிறார்கள் பல நண்பர்கள் பயப்படுகிறார்கள். இதில் பயம்க்கொள்ள தேவையில்லை யாரும் சொல்ல புது கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு பயம் ஏற்படுவது இயற்கை தான். உங்களை பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை தான் நான் தருகிறேன். இப்பொழுது இதனை பயன்படுத்தவில்லை என்றால் வேறு எப்பொழுது நான் தெரிந்துக்கொள்வது


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 

இந்த பாடலை நீங்கள் படித்து இருப்பீர்கள். இந்த பாடலில் பின்வரும் பாடல் உள்ளது இதனை படியுங்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 

பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், 
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !
குறிப்பு:
1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.


மனிதன் ஒவ்வொரு பிறப்பாக பிறப்பெடுத்து வருகிறான். எதிலும் இல்லாத தனிசிறப்பு இந்த மனித பிறவிக்கு இருக்கிறது. இதனை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் அந்த கடவுளை சென்றடைய வேண்டும். இந்த பாடலில் செல்லுகிறார் நான் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து களைத்துவிட்டேன் உன் திருவடியில் என்னை சேர்த்துக்கொள் என்று சொல்லுகிறார். எப்படிபட்ட தத்துவ பாடல் இது. 

ஐந்தில் சனி அமையபெற்றவர்கள் மறுபடியும் புல்லில் இருந்து தான் பிறப்பு எடுக்க வேண்டும். எவ்வளவு கொடுமை தெரியுமா இது அதனால் தான் நான் அவ்வளவு இறங்கி அனைவருக்கும் சொல்லுவது. ஏன் என்றால் மறுபடியும் நீ மனிதனாக பிறப்பு எடுக்க வேண்டும் என்றால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் நீ காத்து இருக்கவேண்டும் என்று படைத்த இறைவனுக்கே தெரியாது. இந்த பிறப்பை நீங்கள் நல்வழியில் பயன்படுத்துங்கள் என்று நான் சொல்லுவது.  

நான் இவ்வளவு நாட்கள் உங்களிடம் பூர்வபுண்ணியத்தைப்பற்றி சொல்லும்போது இதனை நான் முதலில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அதற்கான நேரம் இப்பொழுது தான் வந்துள்ளது. 

என்னுடைய ஆன்மீகம் இது தான் என்று ஆணிதரமாக ஆதாரத்துடன் சொல்லிவிடுவேன். அதனால் தான் பலவித ஆன்மீகவாதிகள் என்னை எதிர்க்கிறார்கள் இதனை சொல்லிவிட்டால் அப்புறம் அவர்களால் குப்பை கொட்டமுடியாது அல்லவா.

நான் இந்த ஆன்மீக அனுபவங்கள் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து சொல்லிவருவது ஒரே தகவல் தான் இன்றைய ஆன்மீகம் கர்மாவின் முன் தோற்கிறது என்பதை தான். கர்மாவை நீக்க தெரியாத ஆன்மீகம் ஒரு படி கூட இறைவனிடம் அடி எடுத்து வைக்காது.

பிறப்பின் ரகசியத்தை சொல்லிவிட்டேன். முடிவு எடுப்பது உங்களின் கையில் தான் இருக்கிறது. வாழ்க்கையை விட்டு ஒடவேண்டியதில்லை. அதனை புரிந்துக்கொண்டு ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய ஒரு வழியை தேர்ந்தெடுங்கள். 

மனித வாழ்க்கை கொஞ்சகாலம் தான். இன்று பிறந்தது போல் இருக்கும் கொஞ்சநாளில் எல்லாம் முடிந்தது போல் ஆகிவிடும். என்னடா இவ்வளவு காலங்கள் போய்விட்டதே என்று தோன்றக்கூடும். மரணம் உங்கள் முன்னால் வந்துவிடும். மரணத்திற்க்குள் நீங்கள் கர்மாவிற்க்கு வழி செய்யவில்லை என்றால் எப்படி அடுத்த பிறப்பு எதுவாக எடுப்பீர்கள் என்று உங்கள் கர்மாவின் கணக்கு முடிவு செய்யும். 

பல ஆன்மீகவாதிகள் சொல்லுவது கர்மாவை தொலைக்கமுடியாது என்று சொல்லுவார்கள். இப்பொழுது தொலைக்க முடியவில்லை என்றால் பிறகு எப்பொழுது தொலைக்கமுடியும். ஆன்மீக வியாபாரம் செய்பவர்கள் அப்படி சொல்லலாம் ஆன்மீகத்தை வியாபாரம் செய்யாதவர்கள் கண்டிப்பாக கர்மாவை தொலைக்கமுடியும் என்று அதற்க்குண்டான வழியில் இறங்குவார்கள்.

இப்பொழுது இருக்கின்ற பணம் அந்தஸ்து உன் படிப்பு உன் பெற்றோர்கள் எதுவும் உன்னோடு வரபோவதில்லை நீ செய்த கர்மா தான் உன்னுடன் வரும். அடுத்த பிறப்பை உன் கர்மா கணக்கு முடிவு செய்யும். உங்களால் எதுவும் முடியாது இந்த மனித பிறப்பை பயன்படுத்துவது உங்கள் கையில் இருக்கின்றது. 

கடைசி வாய்ப்பை பயன்படுத்துங்கள் நண்பர்களே!

உங்களுக்குள் தேடுங்கள் நண்பர்களே அனைத்திற்க்கும் விடை கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




3 comments:

KJ said...

Very useful info. Thanks sir.

rajeshsubbu said...

வருக வணக்கம் தகவலை உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

surya said...

நல்ல பதிவு.குருவருளும், திருவருளும் உங்களை சிறப்பாக வாழ வைக்கும். வாழ்க வளமுடன்.