Followers

Monday, January 28, 2013

ஆன்மீக அனுபவங்கள் 59



வணக்கம் நண்பர்களே !

ஆன்மீக அனுபவங்களில் இப்பதிவில் ஒரு கருத்தை பார்க்கலாம். நம்முடைய வீட்டிலேயோ அல்லது உறவினர்களின் வீட்டிலேயோ ஏதோ ஒரு துர்மரணம் ஏற்படலாம்.

அப்படி ஒரு மரணம் ஏற்பட்டால் அந்த நபரின் ஆத்மா மேல் நிலைக்கு செல்லாமல் சரியாக அந்த இடத்திலேயே இருக்கும்.துர்மரணம் ஏற்பட்ட ஆத்மா அதன் இறப்பு காலம் வரை அந்த இடத்திலேயே இருக்கும். அந்த ஆத்மா துணை தேடும்.

தனியாக இருக்க பிடிக்காமல் அது குடும்பத்தில் உள்ள நபர்களின் துணையை தேடும் அப்படி இல்லை என்றாலும் யாராவது ஒரு நபரின் துணையை தேடும். அது வலிய வந்து யாராவது ஒரு நபரை கொன்று கொண்டு அழைத்துக்கொண்டு சென்றுவிடும் சில நேரங்களில் இது கூட்டமாக கூட அழைத்துக்கொண்டு சென்று விடுகிறது. 

நீங்களே பார்த்து இருக்கலாம் உங்களின் அருகாமையில் இருக்கும் வீட்டில் ஏதாவது துர்மரணம் ஏற்பட்டால் அந்த வீட்டில் மறுபடியும் ஏதாவது ஒரு துர்மரணம் சில காலங்களில் நடைபெறும். அது எல்லாம் முன் செத்த அந்த நபரின் ஆத்மா செய்யும் வேலை. ஒரு சில சாலைகளில் ஒரு விபத்து நடக்கும் அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். முதல் விபத்து நடந்த ஆத்மாக்களின் வேலைதான் அது.

ஆத்மாவால் ஒருவரை கொல்லமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றே சொல்லலாம். துர்மரணம் ஏற்பட்ட ஆத்மாவிற்க்கு உடலின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும். இது விபத்தால் ஏற்பட்ட துர்மரணத்தை விட தற்கொலை செய்துக்கொள்ளும் ஆத்மாவிற்க்கு அதிக ஈர்ப்பு இருக்கும். கடைசி நேரத்தில் உடலின் மீது பாசம் வந்ததால் அப்படி இருக்கும். அந்த ஆத்மாக்கள் கொலை செய்யும்.

நீங்கள் நினைத்து பாருங்கள் உங்களின் பகுதியில் ஏதோ ஒரு சம்பவமாவது இப்படி நடந்திருக்கும். அப்பொழுது நான் சொல்லுவது உண்மை என்பது தெரியவரும்.

நாம் வீட்டில் துர்மரணம் நடந்தாலும் அந்த ஆத்மாவிற்க்கு நாம் எல்லாம் சடங்குகள் செய்தாலும் அந்த சடங்கு மூலம் அந்த ஆத்மாவிற்க்கு வீடு பேறு கிடைப்பதில்லை. ஆத்மாவுடன் தொடர்புக்கொள்பவர்கள் இந்த சடங்குகளை செய்தால் சரியான தீர்வு இதற்க்கு இருக்கும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: