Followers

Saturday, February 16, 2013

பூர்வ புண்ணியம் 34



வணக்கம் நண்பர்களே !
                     சுரேஷ் என்ற நண்பர் ஒரு கேள்வி கேட்டு இந்த கிரகத்திற்க்கு இந்த கிரகம் நட்பு வீடு தானே எப்படி கெடுதல் செய்யும் என்று கேட்டார் அவருக்கு பதிலை தந்துவிட்டேன் இருந்தாலும் அவர் மூலம் கடவுள் உங்களுக்கு விளக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்று தோன்றுகிறது உங்களுக்கும் விளக்கத்தை அளித்துவிடுகிறேன்.

நான் எழுதுவது கடந்த காலத்தை விட கடந்த பிறவியில் இவர் என்ன செய்திருப்பார். என்ன கெடுதலை செய்திருப்பார் என்று சொல்லுவதற்க்காக தான் எழுதுகிறேன். கடந்த பிறவியில் உள்ள கெடுதலை மட்டும் சொல்லுகிறேன். எப்படிபட்ட கொடுர காரனும் ஏதோ ஒரு நன்மை செய்திருப்பான். அந்த நல்லதை நான் சொல்லவில்லை. நீங்கள் செய்த கெடுதலை நீங்கள் உணர்ந்துவிட்டால் நீங்கள் அதற்க்கு பரிகாரம் என்று தேடி உங்களின் வாழ்க்கையை நன்றாக அமைத்துகொண்டு கடவுளை அடைய என்ன வழி என்று தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். 

மனித ஜென்மம் எடுத்தன் நோக்கத்தை சோதிடம் வழியாக தீர்க்க என்ன வழி என்பதை என்னால் முடிந்தளவு தருகிறேன். அதனை நீங்கள் தீர்த்துக்கொள்ள வழியை தேடுங்கள். என்னுடைய பார்வையில் முன்ஜென்ம தவறுகளை காட்டுகிறேன். பூர்வ புண்ணியத்தில் நடந்த தவறுகளை மட்டும் சொல்லுகிறேன். நல்லதைப்பற்றி நான் சொல்லவில்லை. 

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு நான் சொல்லுவது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளகூடியாதாக இருக்கின்றனவா என்று பாருங்கள். சரியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு வழி என்ன என்று பாருங்கள். சரியாக வரவில்லை என்றால் இதனை விட்டுவிடலாம். பூர்வபுண்ணியத்தில் நமக்கு பிரச்சினை இல்லை நல்ல வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கிரகம் அதன் சொந்த வீட்டில் இருக்கிறது அதனால் நல்லது மட்டுமே நமக்கு நடக்கும் என்று நினைப்பது தவறு. ஒரு நல்ல வழியை மட்டும் காட்டிவிட்டு அடுத்த வழியில் நமக்கு பிரச்சினையை கொடுத்துவிடும். ஒரு கிரகத்தை ஆய்வு செய்வது மிகசிக்கலான விசயமாக தான் இருக்கும்.

முன்ஜென்மத்தைப்பற்றி உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். முன்ஜென்மம் என்பது உண்மை தான். முன்ஜென்மத்தில் செய்த நல்லதற்க்கும் கெட்டதற்க்கும் சேர்ந்து அனுபவிக்க தான் பிறப்பு எடுத்து இருக்கிறது என்பதை காட்டுவதற்க்கு தான் ஜாதகம். 

உங்களுக்கு ஜாதகத்தில் தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு தருகிறேன். இதில் உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் கொஞ்ச நாட்களில் அவர் அவர்களே அவர்களின் அனுபவத்தில் தெரிந்துக்கொள்ள ஆன்மீகபயிற்சி கொடுக்கலாம் என்ற திட்டம் இருக்கிறது அப்பொழுது என்னிடம் வந்து நீங்களே அறிந்துக்கொள்ளமுடியும்.

பூர்வபுண்ணியம் எனக்கு நன்றாக இருக்கிறது என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். மனித பிறப்பு எடுப்பதன் நோக்கம் பூர்வீக கர்மாவை தொலைக்கதான் என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ளுங்கள். செய்த பாவத்தின் அளவுகோல் மாறி இருக்கும் ஆனால் கண்டிப்பாக பாவம் செய்திருப்பான். பாவம் செய்தால் மட்டுமே பூமிக்கு வருவான்.

உங்களை ஆன்மீகவழியிலும் முன்னேற்றத்தை அடையவைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சும்மா ஏதாவது எழுதிவிட்டு சென்றால் எனக்கு பணம் வரும் ஆனால் நான் பிறந்ததின் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

நீங்கள் நன்றாக சிந்தனை செய்துபார்த்தால் எனது ஆன்மீக வழியில் ஏதோ ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பது மட்டும் தெரியும். இந்து மதத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் தேடி பார்த்தால் ஆணிவேர் எது என்று உங்களுக்கு புரியவரும்.

மனிதபிறவி எடுத்ததின் நோக்கத்தை சரியாக பயன்படுத்த ஒரு நல்லவாய்ப்பு அதனால் நண்பர்களே பயன்படுத்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: