Followers

Monday, February 18, 2013

பூர்வ புண்ணியம் 35



வணக்கம் நண்பர்களே !
                     பூர்வபுண்ணியத்தைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். பூர்வபுண்ணியத்தை பற்றி எழுதிய போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது இது கர்மாவைப்பற்றி எழுதுகிற ஒரு தொடர் பல தடைகள் வரும் என்று எதிர்பார்த்தேன்.  தடைகள் ஏதும் வரும் என்று எண்ணி தான் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பலன்களை எழுதும் போது வேகமாக எழுதினேன். இதுவரை கடவுளின் அருளால் அந்த மாதிரி தடைகள் வரவில்லை. தொடர்ந்து அனைத்து கிரகத்திற்க்கும் எழுதவேண்டும்.

பூர்வபுண்ணியத்தில் செவ்வாய் கிரகம் பற்றி எழுதிவிட்டேன். உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் ஐந்தில் அமர்ந்திருந்தால் பயந்துவிடாமல் துணிவோடு கர்மாவை தொலைக்க என்ன வழி என்று பாருங்கள். கண்டிப்பாக அனைவராலும் அந்த நபரை சந்திக்க கடவுள் நமக்கு வழி செய்து கொடுக்கிறார். இதனை நான் பல பேர்களின் வாழ்க்கையில் பார்த்து இருக்கிறேன். எனது வாழ்விலும் பார்த்திருக்கிறேன். பல பேர்களுக்கு உதவியிருக்கிறேன்.

முதலில் உங்கள் வீட்டில் உள்ள நபர்களின் ஜாதகங்களை எடுத்த பாருங்கள். உங்கள் ஜாதகம் உங்களின் மனைவி மற்றும் குழந்தைகள் ஜாதகங்களை எடுத்து பார்த்தால் அனைத்து ஜாதகங்களும் ஒரே மாதிரி தான் இருக்கும். உங்களுக்கு என்ன தோஷம் இருக்கிறதோ அதே தோஷம் உங்களின் குழந்தைகளுக்கும் இருக்கும். உங்களின் மனைவிக்கும் இருக்கும். முன் ஜென்மத்தில் உங்களுக்கு குழந்தைகளாக பிறந்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு குழந்தைகளாக பிறப்பார்கள். உங்களின் முன் ஜென்மத்தில் உங்களுக்கு மனைவியாக இருந்தவர் தான் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு மனைவியாக வருவார்.

அதிகபட்சமாக மாற்று நபர்கள் வரமாட்டார்கள். மாற்று நபர்கள் உங்களுக்கு மனைவியாக வந்தார்கள் என்றால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை நன்றாக இருக்காது. கூடிய விரைவில் விவாகாரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

தெய்வீக காதல் என்று எல்லாம் நம்ம ஆளுங்க சொல்லுவங்க தெரியுமா தெய்வீக காதல் என்பது உங்களின் முன்ஜென்மத்தில் உள்ள நபரை நீங்கள் இந்த ஜென்மத்தில் திருமணம் முடிக்கும் போது மட்டுமே அது தெய்வீககாதலாக மாறும். இந்த உலகத்தில்  ஆத்மா மட்டுமே உள்ளது. அது செய்யும் செயல்கள் தான் அனைத்தும். பரமாத்தாவின் ஒரு பாதி நீங்கள் என்பதை உணர தொடங்குகள். நான் சொல்லுவது என்ன என்று உங்களுக்கு தெரியும்.

பூர்வ புண்ணியத்தை பொருத்தவரை நான் சொல்லுவதை விட உங்கள் குடும்ப நபர்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள் தெரியவரும். உங்களுக்கு குரு நீசமாக இருந்தால் உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கும் நீசமாக தான் இருக்கும். ஒரு கிரகம் வக்கிரமாக இருந்தால் உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கும் வக்கிரமாக தான் இருக்கும். இன்று நீங்கள் வீட்டிற்க்கு சென்று அனைத்து ஜாதகத்தையும் எடுத்து பாருங்கள். நான் சொல்லுவது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியும்.

உங்களின் குடும்ப நபர்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு எனக்கு தகவலை சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Unknown said...

ஐயா வணக்கம் என் பெயர் உதயகுமார்
என் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் வாழ்கிறேன். என் அப்பா அம்மா. அண்ணன் மூவரும் இறந்துவிட்டனர். அவர்கள் 3 பெரும் நல்லபடியாக இறக்க வில்லை அண்ணா அப்பா 2 விபத்துகலிளும் அம்மா தற்கொலை செய்து கொண்டும் இறந்து விட்டனர் தற்போது நான் மட்டுமே உள்ளேன் எனக்கு முன் ஜென்ம பாவம் இருக்குமா ஐயா தயவு செய்து எனக்கு கூறுங்கள் ஐயா

karthikeyan said...

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே குலதெய்வத்தை கொண்டிருப்பர் ஐந்தாம் அதிபதியின் நட்சத்திரத்தை வைத்துசொல்லாலாம்