Followers

Monday, February 18, 2013

பூர்வ புண்ணியம் 36



வணக்கம் நண்பர்களே!
                     பூர்வ புண்ணியத்தொடரை எழுதியதைப்படித்து விட்டு பல நண்பர்கள் தொடர்ந்து பாராட்டுகிறார்கள். நீங்கள் என்னை பாராட்டுவதை விட உங்களின் நண்பர்களுக்கு இந்த பிளாக்கைப் பற்றி சொல்லாம் அப்படி சொல்லவில்லை என்றால் நீங்களே அவர்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

பூர்வபுண்ணியத்தொடரை படித்துவிட்டு நூறு நபர்களாவது அடுத்தவர்களை மனிதனாக பார்க்கின்ற குணம் வந்துள்ளது என்று என்னை தொடர்புக்கொண்டு சொல்லுகிறார்கள். எந்த மனிதனை பார்த்தாலும் இவன் முன்ஜென்மத்தில் என்னுடன் இருந்தவனோ என்று பார்க்கின்ற எண்ணம் வருகிறது என்று சொல்லுகிறார்கள். இதுவே எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். என்னால் ஒரு மாற்றத்தை தரமுடிகிறதே என்ற சந்தோஷம் தான் அது. 

உங்களோடு சம்பந்தப்பட்டவர்களை நீங்கள் பார்க்கும்போது கண்டிப்பாக அந்த அனுபவத்தை நீங்கள் வேறு எங்கும் பார்த்து இருக்க மாட்டீர்கள். உடலுக்குள் ஏதோ ஒன்று செய்வது போல் ஒரு உணர்வு ஏற்படும். உங்களின் ஆத்மா அந்த நபரை அடையாளம் கண்டுக்கொண்டுவிட்டால் அவ்வளவு தான். அது அவரை போய் பார்க்கவேண்டும் என்று தான் நிற்க்கும். 

இதுவே அந்த நபர் உங்களின் துணைவராக இருந்தவர் என்று தெரிந்துவிட்டால் இது மிகப்பெரிய கொடுமை. எப்படா அந்த நபரிடம் போவது என்று தான் அது 24 மணிநேரமும் நினைக்கும். நீங்கள் தடைபோட்டால் உங்களின் உடலை அது வெறுக்க ஆரம்பித்துவிடும். இதனை விட்டுவிட்டு ஒடிபோய்விட வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்துவிடும். நீங்கள் மிகப்பெரிய கொடுமை எல்லாம் அனுபவிக்க நேரிடும். 

உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் ஆத்மா நீங்கள் தூங்கும்போது வெளியில் செல்லும். இது 100 சதவீதம் உண்மை. இதனைப்பற்றி விஞ்ஞானம் என்ன சொல்லுகிறது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் ஆத்மா வெளியில் செல்லுவது ஆன்மீகத்தில் ஏற்றுக்கொள்ளபட்டது.  பல லட்சம் கிலோ மீட்டரை கூட எளிதில் சென்று பார்த்துவிட்டு வந்துவிடும். 

உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் ஆத்மா உங்களின் துணைவரின் ஆத்மாவுடன் தொடர்புக்கொள்கிறது. தேவைப்பட்டால் உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புக்கொள்ளும். 

இது வெளியில் சென்று அந்த நபரின் ஆத்மாவுடன் தொடர்புக்கொள்ளும்போது அது மிகுந்த பரவசத்தை அடைகிறது. இதனைப்பற்றி நீங்கள் நினைக்கலாம் இவர் பொய் சொல்லுகிறார். ஆத்மாவைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அல்லது ஆத்மாவுடன் தொடர்புக்கொள்ளும் நபர்களுடன் கேட்டு பாருங்கள் அவர்களுக்கு தெரியும்.

நீங்களே இதனைப்பற்றி ஆராய்ச்சி செய்யலாம். நீங்கள் தூங்கும்போது யாரோ வெளியில் பேசிக்கொள்வது போல் தோன்றும். நீங்கள் எழுந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஏதோ கனவு போல் தோன்றும். இது எல்லாம் உண்மை. உங்களுக்கு தெரியாமலேயே பல வேலைகள் உங்களை சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இது நடக்கிறது. 

நம்மால் விழிப்புணர்வோடு இருக்கமுடியவில்லை. நாம் உடலுக்கு மதுவை போட்டுக்கொண்டு படுத்தால் என்ன தெரியும் ஒன்றும் தெரியாது. நான் மது என்று சொன்னது  மதுவை மட்டும் அல்ல. பல விசயங்கள் இதில் உள்ளது. ஏதோ ஒரு போதையில் மனிதன் இருந்தால் கண்டுபிடிக்கமுடியாது. 

எனக்கு ஆத்மாவை எளிதில் கண்டுக்கொள்ளமுடியும். என்னுடைய ஆத்மா இப்பொழுது வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபரை தேடிச்செல்கிறது. எனக்கு ஆச்சரியம் நாம பட்டிக்காடு என்னடா நமது ஆத்மா வெளிநாட்டுக்கு செல்கிறது என்று ஒரு சந்தேகம் வந்தது. அந்த சம்பந்தப்பட்ட ஆத்மா என்னுடைய ஆத்மாவை தேடிவருகிறது. 

இது எப்பொழுது நடைபெறுகிறது என்றால் நான் தூங்கும் நேரத்தில் இங்கு இருந்து அங்கு செல்வது. அந்த நபர் தூங்கும் நேரத்தில் அங்கு இருந்து என்னிடம் வருவது. எனக்கு ஒரு சந்தேகம் இரவில் தானே அதிகபட்சமாக வரும். இது என்ன பகலில் வருகிறது என்று குழம்பிவிட்டேன். எனக்கு அப்பொழுது தான் தெரிந்தது நான் தூங்கும்நேரத்தில் அங்கு பகல் அந்த நபர் தூங்கும்நேரத்தில் இங்கு பகல். அதனால் அது இவ்வாறு நடைபெறுகிறது என்று கண்டுக்கொண்டேன். அந்த நபருக்கு இது தெரியாது. எனக்கு தெரிகிறது.

இப்படி நடைபெறும் தொடர்பை உங்களால் என்ன செய்தாலும் தடைபோடமுடியாது. கடவுள் நடத்தும் திருவிளையாடல் இது.இது 100 சதவீதம் உண்மை. ஒரு வாரகாலமாக தான் இது நடைபெறுகிறது. 

நான் ஆன்மீக அனுபவங்கள் எழுதிய பிறகு பல ஆத்மாக்கள் என்னை தொடர்புக்கொள்கின்றன. ஒரு சிலருக்கு உடனே நான் போன் செய்து பேசிவிடுவேன். ஒரு சிலருக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவது. இதனை படிக்கும் நீங்கள் கூட என்னை தொடர்புக்கொண்டு இருக்கலாம் எனக்கு தெரிகிறது உங்களுக்கு தெரியவில்லை.ஒரு சிலர் இதனை தெரிந்துக்கொண்டு என்னிடம் பேசியிருக்கிறார்கள்.

என்னை தேடி வரும் அந்த ஆத்மா யாருடையது என்று எனக்கு நன்கு தெரியும். அதனுடன் நான் உறவு வைத்துக்கொள்ளுவது அந்த ஆத்மாவிற்க்கு அப்படி ஒரு பரவசத்தை அடைகிறது. என்னை தேடி தினமும் இரண்டு ஆத்மா வரும். இதில் ஒரு ஆத்மா நண்பர் ஒருவருடையது. ஒரு ஆத்மா யார் என்று நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். 

உலகத்தில் பல விந்தையான ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதனை பார்க்க உங்களுக்கு சாதாரண கண் இருக்ககூடாது. அதனை நீங்கள் காண்பதற்க்கு ஆன்மீக கண் வேண்டும். உங்களுக்குள் தேடுங்கள் அனைத்தும் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

4 comments:

dreamwave said...

நான் தயார் !

dreamwave said...

im ready for athma journey.

congradulation "that this month is the highest post by you in your blog"

keep it up.

BABU

rajeshsubbu said...

//*dreamwave said...
நான் தயார் ! //*

வணக்கம் கண்டிப்பாக கூடிய விரைவில் தருகிறேன்

rajeshsubbu said...

//* dreamwave said...
im ready for athma journey.

congradulation "that this month is the highest post by you in your blog"

keep it up.

BABU *//
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்