Followers

Tuesday, February 19, 2013

ஆன்மீக அனுபவங்கள் 69



வணக்கம் நண்பர்களே !
                                 நமது பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் கேட்கும் கேள்வி எப்படி ஆன்மீக பயிற்சி எல்லாம் எடுத்தீர்கள் எங்களால் ஒன்றும் முடியவில்லை என்று கேட்கிறார்கள்.

ஒரு குரு அமையும் போது உங்களுக்கு அனைத்தும் கிடைத்து விடும். அனைவருக்கும் குரு கிடைக்கமாட்டார். குரு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. நம்மை சுற்றி என்ன நடக்கிறது நாம் எதற்க்காக வந்தோம் என்ற ஒரு சின்ன சிந்தனை வரும்பொழுது உங்களுக்கு அனைத்து கேள்விக்கும் பதில் கிடைத்துவிடும்.

நீங்கள் உங்களின் உடலில் நடப்பது என்ன என்று கவனிக்க தவறுகிறீர்கள். உடலில் நடப்பதை கவனித்தாலே உங்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும். தனியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் காலையில் இருந்து இரவு வரை ஒரே கூட்டமாக இருப்பதால் அவர்களுடன் பேசிக்கொண்டே இருப்பதால் உங்களைப்பற்றி தெரியவில்லை. அலுவலகத்திற்க்கு போனாலும் கூட்டம் வீட்டிற்க்கு வந்தாலும் கூட்டத்தோடு இருக்க நினைக்கிறீர்கள் எப்பொழுது ஒய்வு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது செல்போனை எடுத்துவிடுகிறீர்கள்.

நான் பல நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன். உள்நோக்கி என்ன நடைபெறுகிறது வெளிநோக்கி என்ன நடைபெறுகிறது என்று பார்த்து இருக்கிறேன். அதன் மூலமாக தான் அனைத்திற்க்கும் விடை கிடைத்தது. நான் இருந்த சூழ்நிலை என்னை உருவாக்கியது. நான் அதிகமாக ஆசைப்பட்டது கிடையாது. எது வருகிறதோ அதனை ஏற்றுக்கொண்டுவிடுவேன். பணத்திற்க்கு அதிகம் முக்கியதுவம் கொடுத்தது கிடையாது.

பல கோடீஸ்வரர்கள் என்னால் உருவாகி இருக்கிறார்கள் ஆனால் நான் பணத்திற்க்கு ஆசைபட்டது கிடையாது. எப்பொழுது பணத்தின் மீது ஆசை அதிகம் வருகிறதோ அன்று ஆன்மீகம் கேள்வி குறியாகிவிடும். பணம் தேவையான ஒன்று தான் நமக்கு தேவையானதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்.அதிகமான தேவை இருக்ககூடாது.

இரவில் எனக்கு தனிமையில் இருக்கபிடிக்கும். இரவு நேரத்தில் உடலில் என்ன நடைபெறுகிறது என்பதை நான் உற்று கவனிப்பேன். இரவில் தனியாக வெளியிடுங்களுக்கு செல்லும்போது அங்கு என்ன நிகழ்கிறது. வேறு ஏதாவது நம்மை நோக்கி வருகிறதா அல்லது வானத்தில் ஏதாவது தெரிகிறதா என்று நன்கு கவனிப்பேன். 

ஒரு ஆன்மீகவாதியாக ஒருவன் மாறுவதற்க்கு பயத்தை விட்டுவொழிக்க வேண்டும். எந்த காரியத்திலும் பயம்கொள்ளகூடாது. மரணமே நம்மை நோக்கிவந்தாலும் சிரித்துக்கொண்டு அதனை ஏற்றுக்கொள்கிற பக்குவம் வந்துவிட்டால் உங்களால் எதனையும் எளிதில் கண்டுபிடித்து அதனை நீங்கள் அடையலாம்.

மனிதனை மனிதனாக பார்க்கின்ற குணம் வேண்டும் அவன் ஜாதி என்ன அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது அவனிடம் பணம் இருக்கிறதா என்பதை எல்லாம் விட்டு வி்ட்டு மனிதனாக பார்த்தால் அனைத்தும் கிடைத்துவிடும்.

ஒவ்வொன்றாக கடைபிடித்து நீங்கள் வந்தீர்கள் என்றால் ஆத்மாவை அமெரிக்காவிற்க்கு என்ன அண்டசராசரங்களுக்கும் அனுப்பலாம். ஆன்மீகத்திலும் நீங்கள் முன்னேற்றம் அடையலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: