Followers

Saturday, March 16, 2013

காயத்ரி மந்திரம்



வணக்கம் நண்பர்களே!
                     இப்பொழுது வளர்பிறை என்பதால் நீங்கள் ஒரு காயத்ரி மந்திரத்தை எடுத்துக்கொண்டு அதனை 108 நாட்கள் உருஏற்றிக்கொண்டு வரலாம். ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. நீங்கள் எந்த தெய்வத்தை எடுக்க போகிறீர்களோ அந்த தெய்வத்தின் காயத்ரி மந்திரத்தை எடுத்தக்கொண்டு உருஏற்றிக்கொண்டு வாருங்கள்.

காயத்ரி மந்திரம் நீங்கள் சொல்லுவது காலை நேரமாக இருந்தால் நல்லது. உடல் சுத்தமாக இருக்க வேண்டும். காலையில் உணவு அருந்தகூடாது வெறும் வயிற்றுடன் இதனை சொல்லவேண்டும். நீங்கள் நம்பிக்கையுடன் சொல்லும்போது மட்டுமே இதன் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.

ஏற்கனவே நான் காயத்ரி மந்திரத்தை உரு ஏற்றிக்கொண்டு இருக்கிறேன் என்று பலபேர் சொல்லுவார்கள் அதனால் எனக்கு ஒன்றும் பலனில்லை என்று சொல்லுபவார்கள். அப்படி சொல்லுபவர்களுக்கு நான் சொல்லுவது நீங்கள் இதனை ஒரு முறையாக செய்யவில்லை என்று தான் அர்த்தம். எதனை செய்தாலும் ஒரு வழக்கம் இருக்கிறது அந்த வழக்கத்தை நீங்கள் கடைபிடிக்கும்போது மட்டுமே அதன் பலனை நாம் அடையமுடியும்.

மந்திர உரு ஏற்றுவதை பழைய பதிவுகளில் நான் எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம் இருக்கிறது. அதனை படித்துபாருங்கள். நீங்கள் ஆன்மீகத்தின் உள்ளே செல்வதற்க்கு ஒரு வழி சொல்லியுள்ளேன். விருப்பம் இருக்கிறவர்கள் பயிற்சியை தொடங்கலாம்.

நீங்கள் எடுக்கும் தெய்வம் சிவனாகவோ அல்லது பெருமாளாகவோ இருக்கவேண்டாம். நீங்கள் எடுப்பது சக்தியாக கூடுமானவரை இருக்கவேண்டும். இதனைப்பற்றி பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்புக்கொள்ளவும். 

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: