Followers

Thursday, January 31, 2013

பூர்வபுண்ணிய சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே !
                     சனிக்கிரகம் ஐந்தில் நின்றால் பூர்வபுண்ணியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப்பற்றி பார்த்து வந்தோம் ஒரு சில பேர் அதற்கு ஏதாவது கோவில் ஸ்தலங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டதால் அவர்களுக்காக ஒரு பரிகாரம் போல் இதனை தருகிறேன்.

ராமர் போரில் பல போரை கொண்டதால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது அதனை போக்குவதற்க்கு அவர் லிங்கபிரதிஸ்டை செய்து வழிபட்டு அந்த தோஷத்தை போக்கினார் என்றும் படித்திருப்பீர்கள். அந்த கோவில் ராமேஸ்வரம். 

ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக போகவேண்டிய ஸ்தலங்களில் ராமேஸ்வரமும் உண்டு. சனி ஐந்தில் நிற்க்கும்போது உடலால் நமக்கு பாவம் ஏற்பட்டு இருக்கும். அந்த பாவத்தை போக்குவதற்க்கு இராமேஸ்வரம் தான் சிறந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமாக இருக்கும். இராமேஸ்வரம் சென்று விடியற்காலையில் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்துக்கொண்டு பிறகு கடலில் நீராடிவிட்டு ஒவ்வொரு தீர்த்தமாக நீராடிவிட்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். உங்களின் கர்மாவின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். 

இராமேஸ்வரத்தில் தரிசனம் செய்யும்போது சுவாமியையும் அம்பாளையும் நன்றாக கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் எந்தளவுக்கு அவர்களை பார்க்கிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு நல்லது.

நான் பொதுவாக எந்த கோவிலுக்கும் செல்லுங்கள் என்று யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை ஆனால் ராமேஸ்வரம் மட்டும் சென்று வாருங்கள் என்று நான் அனைவருக்கும் சொல்லுவேன். ராமேஸ்வரம் ஒரு நல்ல சக்திவாய்ந்த ஸ்தலம் என்பதால் அங்கு சென்றுவிட்டு வாருங்கள் என்று சொல்லுவேன். 

உங்களுக்கு சனி ஐந்தில் நின்றால் இராமேஸ்வரம் சென்றுவிட்டு என்னை வந்து பாருங்கள் உங்களின் பூர்வபுண்ணியபலனை அதிகரிக்க என்ன வழி என்று சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



பூர்வ புண்ணியம் 23



வணக்கம் நண்பர்களே !

                     ஐந்தில் சனி நின்றால் என்ன தவறை செய்திருப்பார்கள் என்று இதுவரை ஒவ்வொரு லக்கினத்திற்க்கும் பார்த்தோம். 

நீங்கள் அதனை பார்த்து பயம்கொள்ளாமல் அதற்கான தீர்வு என்ன என்பதை சிந்தித்து ஒரு முடிவு எடுத்தால் போதும் உங்களின் கர்மாவை தீர்க்கலாம்.

பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது எந்த மாதிரி பரிகாரத்தை அவர்களுக்கு செய்வது என்று கேட்டார்கள். பல பேர் இவர்களை நாங்கள் எங்கே தேடுவது என்றும் கேட்டார்கள்.

உங்களின் ஜாதகத்தை வைத்து அலசி பாருங்கள் தெரியவரும். உங்களின் உள்ளுக்குள் ஒரு தேடலை வைத்துவிடுங்கள் எப்படியாவது அவர்களை கண்டுக்கொள்ள வேண்டும் என்று பாருங்கள் உங்களின் ஆத்மா அவர்களை கண்டுக்கொண்டுவிடும்.

உங்களின் முன்ஜென்மத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரை நீங்கள் பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்களின் ஆத்மா அவ்வளவு பாசத்துடன் அவர்களை பார்க்க ஆரம்பிக்கும்.அவர்களை பார்க்கும் சந்திப்பு இருக்கிறதே அப்பொழுது நீங்கள் கடவுளின் கருணை நீங்கள் உணரலாம். மனிதபிறப்பு எடுத்த அர்த்தத்தை உணரும் தருணம் அதுவாகதான் இருக்கும். 


பூர்வபுண்ணியத்தை எழுத ஆரம்பித்தது கடவுளின் செயலாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நாமக்கல்லில் இருந்து நண்பர் கார்த்திக் என்பர் என்னை தொடர்புக்கொண்டு முன்ஜென்மத்தை கண்டறிய வழி சொல்லுங்கள் என்று கேட்டார் அப்பொழுது அவரிடம் அதற்கு மந்திரசக்தி பெற்றுருக்க வேண்டும் என்று சொன்னேன். 

கடந்த பெளர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்று இருந்தேன் அப்பொழுது வேலூரில் இருந்து வந்த பாலு என்ற நண்பர் சில தகவலை சொன்னார். பிளாக்கில் புதுமையான விசத்தை எழுதுங்கள் அப்பொழுது அனைவரும் படித்து பயன்பெறுவார்கள் என்று இதற்கு அடித்தளத்தை அமைத்தார் அப்பொழுதே இதனைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு கிரிவலம் சென்றேன். அப்பொழுது உதயமானது தான் இந்த சோதிடம் வழியாக முன்ஜென்மத்தைப்பற்றி அறிவது .

பல நண்பர்கள் எதனை ஆதாரமாக வைத்து இதனை எழுதுகிறீர்கள் என்று கேட்டார்கள் என்னுடைய சுயமுயற்சியால் என்னால் உணரப்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு இதனை எழுதுகிறேன். கண்டிப்பாக நீங்கள் இதனை உங்களின் அனுபத்தில் பார்க்கும்போது இது உண்மை என்று தெரியவரும்.

நான் படித்த உபநிடங்கள் புராணங்கள் மற்றும் மதநூல்களில் உள்ள ஆணித்தரமான கருத்தை வைத்து இதனை என் வழியில் சொல்லிக்கொண்டு உள்ளேன். அந்த நூல்களின் பெயரை சொன்னால் கூட தெரிவதற்க்கு வாய்ப்பில்லை. இதனைப்பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை இதனை தெரிந்துக்கொண்டு நீங்கள் செய்யவேண்டியதை செய்ய பாருங்கள். இந்து மதத்தின் ஆணிவேர் என்பது கர்மாதான் அதனை போக்க என்ன வழி என்று பார்த்தால் போதும். 

கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நபர் தான் இதற்கு பரிகாரம். கோவில் சென்று தீர்க்கிறேன் அன்னதானம் செய்து தீர்க்கிறேன் யோகா செய்கிறேன் தியானம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வீணாக காலத்தை கடத்த வேண்டாம். பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டால் எப்படி மறுஜென்மம் எடுப்பீர்கள் என்று சொல்லிவிட்டேன்.

அனைத்தும் உங்களின் கையில் தான் உள்ளது செயல்படுங்கள். ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணையுடன் மற்றும் குருவருளால்  தொடர்நது பூர்வபுண்ணியத்தை பற்றி பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




விருச்சிகம் : ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே!

                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் விருச்சிக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

விருச்சிக லக்கனத்திற்க்கு ஐந்தாவது வீடு மீனம் அதன் அதிபதி குரு சனி இந்த வீட்டிற்க்கு சமம்

யாரை கெடுத்துருப்பார்?

விருச்சிக லக்கினத்திற்க்கு மூன்றாம் வீட்டிற்க்கும் நான்காம் வீட்டிற்க்கும் அதிபதி சனி. இளைய சகோதர சகோதரிகள் பக்கத்துவீட்டுக்காரர்கள் மற்றும் தாயாருக்கு கெடுதல் செய்திருக்ககூடும்.

எப்படி கெடுத்துருப்பார்?

அதிகமான கோபத்தால் கொலை செய்திருக்ககூடும். கோபம் தான் இவர்களின் மிகப்பெரிய மைனஸ் அதனால் தான் இது நடந்திருக்ககூடும். 

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு அருகாமையில் இருக்ககூடும் அவர்களை சந்திக்க முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக நடைபெறும்.

உங்களின் கோபத்தை குறைக்கபாருங்கள் மற்றும் உங்களின் ஆசையை அடக்கபாருங்கள் உடனே ஒரு விசயத்தில் நிம்மதி காணபாருங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




துலாம்: ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே!
                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் துலாம் ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

துலாம் லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடு கும்பம் அதன் அதிபதி சனி பகவான். சொந்த வீட்டில் அமருகிறார் என்ன செய்வார் என்று பார்க்கலாம்.

யாரை கெடுத்துருப்பார்?

துலாம் லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீட்டிற்க்கு நான்காம் வீட்டிற்க்கும் காரகம் வகிப்பவர் சனி பகவான்.  பெற்ற பிள்ளை மற்றும் தாய் ஆகியோரை கெடுத்துருப்பார்.

எப்படி கெடுத்துருப்பார் ?

தாயாரின் பணத்திற்க்கு ஆசைப்பட்டு கொலை செய்திருக்ககூடும் அல்லது பெற்ற பிள்ளையை கொன்று இருக்கலாம்.

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட நபரே உங்களுக்கு தாயாகவும் மற்றும் பிள்ளையாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்யவும். 

நண்பர்கள் எப்படி சம்பந்தபட்ட நபரை கண்டுபிடிப்பது என்று கேட்கிறார்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அலசிபாருங்கள் அதற்கான விடை கிடைக்கும். கொஞ்சம் பொறுமையாக பாருங்கள். சம்பந்தப்பட்ட நபர் உங்களை எப்படியாவது ஒரு முறையாவது உங்களை சந்திப்பார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, January 30, 2013

கன்னி : ஐந்தில் சனி


வணக்கம் நண்பர்களே!
                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

கன்னி லக்கனத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது மகரம். சனியின் சொந்த வீடு. சனி சொந்த வீட்டில் அமர்ந்தால் என்ன விட்டுவிடவா போகிறார் என்ன செய்வார் என்று பார்க்கலாம்.

யாரை கெடுத்துருப்பார்?

கன்னி லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீட்டிற்க்கும் ஆறாவது வீட்டிற்க்கும் காரகம் வகிப்பவர் சனி. பெற்ற பிள்ளையை போட்டு தள்ளிருப்பார். எதிரி அல்லது மாமன் இவர்களை போட்டு தள்ளிருப்பார்.

எப்படி கெடுத்துருப்பார்?

நுண்ணறிவை காட்டும் இடத்தில் சனி அமருவதால் மனநிலை பாதிக்கப்பட்டுகூட நடந்திருக்கும். தன்னையறியாமல் கூட செய்திருக்கலாம். அப்படி இல்லை என்றால் சரியான முறையில் திட்டம் தீட்டி கொலை செய்திருக்ககூடும்.

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட நபரே உங்களுக்கு மகனாக பிறந்திருக்ககூடும். வேற என்ன எளிதில் உங்கள் வேலை முடிந்தது.

நண்பர்களே பல நண்பர்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி எழுதுங்கள் என்று கேட்கிறார்கள் முடிந்தளவு தருகிறேன். உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க பூர்வபுண்ணியத்தைப்பற்றி அதிகமான தகவல் வெளிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

சிம்மம் :ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே !

                     பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் சிம்மம் ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

சிம்ம லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. தனுசில் சனி சமமாக அமர்கிறார். சிம்ம ராசிக்கு சனி எங்கு அமர்ந்தாலும் மிகப்பெரிய கெடுதலை தான் செய்வார். 

யாரை கெடுத்து இருப்பார்?

சிம்ம லக்கனத்திற்க்கு ஆறாவது வீட்டிற்க்கும் ஏழாவது வீட்டிற்க்கும் சனி பகவான் காரகம் வகிக்கிறார். இவரின் துணைவரை கெடுத்து இருப்பார் அல்லது இவரின் எதிரியை கெடுத்து இருப்பார்.

எப்படி கெடுத்து இருப்பார்?

துணைவர் விவாகாரத்து கேட்டு இருப்பார் அதனால் அவரை போட்டுதள்ளியிருப்பார். எதிரியால் அடிக்கடி தொந்தரவு ஏற்பட்டுக்கொண்டு இருந்திருக்கும் அதனால் அவரையும் கொன்றுருக்ககூடும்.


என்ன பரிகாரம்?

வழக்கம் போல் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுக்கொண்டு அவருக்கு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யுங்கள். 

நண்பர்களே நான் கொடுத்த தகவலை வைத்து உங்களின் ஜாதகத்தை எடுத்து வைத்து பாருங்கள் இந்த மாதிரி அமைப்பு இருக்கும்பட்சத்தில் உங்களின் உள்ளுணர்வு ஒரு உறுத்தலை தரும். அப்பொழுதே தெரியும் எங்கேயே கணக்கு இடிக்கிறதே. சும்மா எடுத்து பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



பூர்வ புண்ணியம் 22





வணக்கம் நண்பர்களே !

                     பூர்வபுண்ணியத்தொடரை படித்துவிட்டு பல நண்பர்கள் பாராட்டுகிறார்கள் பல நண்பர்கள் பயப்படுகிறார்கள். இதில் பயம்க்கொள்ள தேவையில்லை யாரும் சொல்ல புது கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு பயம் ஏற்படுவது இயற்கை தான். உங்களை பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை தான் நான் தருகிறேன். இப்பொழுது இதனை பயன்படுத்தவில்லை என்றால் வேறு எப்பொழுது நான் தெரிந்துக்கொள்வது


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 

இந்த பாடலை நீங்கள் படித்து இருப்பீர்கள். இந்த பாடலில் பின்வரும் பாடல் உள்ளது இதனை படியுங்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 

பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், 
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !
குறிப்பு:
1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.


மனிதன் ஒவ்வொரு பிறப்பாக பிறப்பெடுத்து வருகிறான். எதிலும் இல்லாத தனிசிறப்பு இந்த மனித பிறவிக்கு இருக்கிறது. இதனை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் அந்த கடவுளை சென்றடைய வேண்டும். இந்த பாடலில் செல்லுகிறார் நான் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து களைத்துவிட்டேன் உன் திருவடியில் என்னை சேர்த்துக்கொள் என்று சொல்லுகிறார். எப்படிபட்ட தத்துவ பாடல் இது. 

ஐந்தில் சனி அமையபெற்றவர்கள் மறுபடியும் புல்லில் இருந்து தான் பிறப்பு எடுக்க வேண்டும். எவ்வளவு கொடுமை தெரியுமா இது அதனால் தான் நான் அவ்வளவு இறங்கி அனைவருக்கும் சொல்லுவது. ஏன் என்றால் மறுபடியும் நீ மனிதனாக பிறப்பு எடுக்க வேண்டும் என்றால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் நீ காத்து இருக்கவேண்டும் என்று படைத்த இறைவனுக்கே தெரியாது. இந்த பிறப்பை நீங்கள் நல்வழியில் பயன்படுத்துங்கள் என்று நான் சொல்லுவது.  

நான் இவ்வளவு நாட்கள் உங்களிடம் பூர்வபுண்ணியத்தைப்பற்றி சொல்லும்போது இதனை நான் முதலில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அதற்கான நேரம் இப்பொழுது தான் வந்துள்ளது. 

என்னுடைய ஆன்மீகம் இது தான் என்று ஆணிதரமாக ஆதாரத்துடன் சொல்லிவிடுவேன். அதனால் தான் பலவித ஆன்மீகவாதிகள் என்னை எதிர்க்கிறார்கள் இதனை சொல்லிவிட்டால் அப்புறம் அவர்களால் குப்பை கொட்டமுடியாது அல்லவா.

நான் இந்த ஆன்மீக அனுபவங்கள் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து சொல்லிவருவது ஒரே தகவல் தான் இன்றைய ஆன்மீகம் கர்மாவின் முன் தோற்கிறது என்பதை தான். கர்மாவை நீக்க தெரியாத ஆன்மீகம் ஒரு படி கூட இறைவனிடம் அடி எடுத்து வைக்காது.

பிறப்பின் ரகசியத்தை சொல்லிவிட்டேன். முடிவு எடுப்பது உங்களின் கையில் தான் இருக்கிறது. வாழ்க்கையை விட்டு ஒடவேண்டியதில்லை. அதனை புரிந்துக்கொண்டு ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய ஒரு வழியை தேர்ந்தெடுங்கள். 

மனித வாழ்க்கை கொஞ்சகாலம் தான். இன்று பிறந்தது போல் இருக்கும் கொஞ்சநாளில் எல்லாம் முடிந்தது போல் ஆகிவிடும். என்னடா இவ்வளவு காலங்கள் போய்விட்டதே என்று தோன்றக்கூடும். மரணம் உங்கள் முன்னால் வந்துவிடும். மரணத்திற்க்குள் நீங்கள் கர்மாவிற்க்கு வழி செய்யவில்லை என்றால் எப்படி அடுத்த பிறப்பு எதுவாக எடுப்பீர்கள் என்று உங்கள் கர்மாவின் கணக்கு முடிவு செய்யும். 

பல ஆன்மீகவாதிகள் சொல்லுவது கர்மாவை தொலைக்கமுடியாது என்று சொல்லுவார்கள். இப்பொழுது தொலைக்க முடியவில்லை என்றால் பிறகு எப்பொழுது தொலைக்கமுடியும். ஆன்மீக வியாபாரம் செய்பவர்கள் அப்படி சொல்லலாம் ஆன்மீகத்தை வியாபாரம் செய்யாதவர்கள் கண்டிப்பாக கர்மாவை தொலைக்கமுடியும் என்று அதற்க்குண்டான வழியில் இறங்குவார்கள்.

இப்பொழுது இருக்கின்ற பணம் அந்தஸ்து உன் படிப்பு உன் பெற்றோர்கள் எதுவும் உன்னோடு வரபோவதில்லை நீ செய்த கர்மா தான் உன்னுடன் வரும். அடுத்த பிறப்பை உன் கர்மா கணக்கு முடிவு செய்யும். உங்களால் எதுவும் முடியாது இந்த மனித பிறப்பை பயன்படுத்துவது உங்கள் கையில் இருக்கின்றது. 

கடைசி வாய்ப்பை பயன்படுத்துங்கள் நண்பர்களே!

உங்களுக்குள் தேடுங்கள் நண்பர்களே அனைத்திற்க்கும் விடை கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




Tuesday, January 29, 2013

கடகம் :ஐந்தில் சனி


வணக்கம் நண்பர்களே !


                    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கடகராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

கடகராசிக்கு ஐந்தாவது வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு பகை. மிக அதிகமான பாவம் செய்தவர் என்ற கணக்கில் இவர் வருகிறார்.

யாரை கெடுத்துருப்பார்?

கடகராசிக்கு ஏழாவது வீடாக வருவது மகரம் எட்டாவது வீடாக வருவது கும்பம். இரு ராசிக்கும் அதிபதியாக சனியே வருகிறார். சந்திரனுக்கும் சனிக்கும் ஆகாது. இவரின் துணைவரை தான் இவர் போட்டுதள்ளிருப்பார். இது ஆண்களை விட பெண்களாக இருந்தால் எட்டாவது இடம் என்பது மாங்கல்யத்தை காட்டும் இடம் என்பதால் இவரின் தாலியை இவரே அறுக்க காரணமாக இருந்திருப்பார். 

எப்படி கெடுத்து இருப்பார்?

என்ன இருவரும் காதல் திருமணம் செய்து இருந்திருப்பார்கள். அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு கொண்டே இருந்திருக்கும். பொறுமை எல்லை மீறி அவரை கொன்றுருப்பார்.

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவரை சந்தித்து ஒரு முடிவு எடுத்துக்கொள்ள வேண்டியது. ஒருவன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடும்போது அவனை அல்லது அவளை கடைசிவரை காப்பாற்றவேண்டியது ஒவ்வொருவரின் கடமை இதனை தவறினால் கர்மா உங்களை விட்டுவைக்காது. உங்களின் துணையை கொல்லுவது மிகப்பெரிய பாவம். நீங்கள் எங்கு சென்றாலும் இதற்கு பரிகாரம் கிடையாது

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


மிதுனம் : ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே !

பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்தவருகிறோம் அந்த வரிசையில் இப்பதிவில் மிதுனராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

மிதுனராசிக்கு ஐந்தாவது வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் வீட்டில் சனி அமர்கிறார்.சனிக்கு இந்த வீடு உச்ச வீடு. உச்ச வீடு என்பதால் விட்டுவிடுவாரா என்ன அவர் தான் அனைத்து பேரையும் ஒரு வழி செய்கிறார் அல்லவா அதனால் இப்படி சொன்னேன்.

யாரைக் கெடுத்து இருப்பார்?

மிதுனத்திற்க்கு எட்டாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டிற்க்கு சனிபகவான் அதிபதியாகிறார். ஒன்பதாவது வீடு என்பது தந்தை மற்றும் முன்னோர்களை காட்டும் இடம் அதுபோல் நமது குருவையும் காட்டும் இடம் இவர்களுக்கு தீங்கு இழைத்திருக்கலாம்.

எட்டாவது இடம் மரணத்தை காட்டு்ம் இடம் ஏதாவது பிணத்திற்க்கு கூட தீங்கு நடத்திருப்பார் எப்படி பிணத்திற்க்கு தீங்கு செய்யமுடியும். யாராவது ஒருவர் இறந்திருப்பார் அவரை புதைப்பதற்க்கு கூட இடம் இருந்திருக்காது இவரிடம் வந்து கேட்டுருப்பார்கள் இவர் இடம் கொடுக்க முடியாது என்பார். 

அதே நேரத்தில் இவரின் நிலத்தின் வழியாக பிணத்தை எடுத்துச்செல்ல கூடாது என்று சொல்லிருப்பார் அதன் மூலமாகவும் இந்த தோஷம் வந்திருக்கும். யாரையாவது மாந்தீரிகம் வழியாக கொன்று இருக்கலாம் அதனால் கூட இந்த தோஷம் வரும்.


எப்படி கெடுத்து இருப்பார்?

துலாம் ராசி நண்பர்களுக்காக உயிரைகூட விடும் ராசி என்று சொல்லலாம். துலாத்தில் சனி இருப்பது அதனை தான் காட்டும்.இவர் நண்பருக்காக சேர்ந்து இவர் கொலை கூட செய்வார். இவரின் நண்பருக்காக இவர் செயலில் இறங்கிகூட மாட்டிருப்பார்.

என்ன பரிகாரம்?

வழக்கம்போல் சம்பந்தப்பட்ட நபருக்கு உதவி செய்வதன் வழியாக உங்களின் உங்களின் கர்மாவை குறைத்துக்கொள்ளலாம். நண்பருக்காக இறங்குவதை இந்த ஜென்மத்தில் தவிர்க்கவும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



ரிஷபம் : ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே !

பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்தவருகிறோம் அந்த வரிசையில் இப்பதிவில் ரிஷபராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்

ரிஷப ராசியின் ஐந்தாவது வீடு கன்னி அதன் அதிபதி புதன். புதனின் வீட்டில் சனி அமருகிறார். சனிக்கு இந்த வீடு நட்பு வீடுதான். நட்பு வீட்டில் அமர்ந்தால் என்ன விட்டுவிடவா போகிறார் கண்டிப்பாக விடமாட்டார். 

யாரை கெடுத்து இருப்பார்?

ரிஷபத்திற்க்கு சனிபகவான் ஒன்பதாவது வீட்டிற்க்கும் பத்தாவது வீட்டிற்க்கும் அதிபதியாகிறார். உங்களின் தந்தையை கெடுத்து இருக்கலாம் மற்றும் தொழில் செய்யும் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களை கெடுத்து இருக்கலாம். இது அதிகபட்சமாக பெண்களாக கூட இருக்கலாம். இந்த மாதிரி உள்ள நபர்களுக்கு நீங்கள் தீங்கு விளைவித்து இருக்கலாம். சில பேர் ஒன்பதாவது வீட்டில் குரு சம்பந்தப்பட்டால் உங்களின் குருவிற்க்கு கூட கெடுதல் செய்திருக்ககூடும்.

நாம் ஒரு கிரகத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பலனை பார்த்துவருகிறோம். ஒரு ஜாதகத்தை எடுத்து பார்த்தால் 75 சதவீதம் பூர்வ பலனை நாம் சொல்லிவிடலாம். 

எப்படி கெடுத்து இருப்பார்?

தொழில் செய்யும் இடத்தில் தேவையற்றவையை பேசி அதன் வழியாக வில்லகத்தை தயார் செய்து கெடுத்து இருப்பார். தந்தையிடம் தவறான வார்த்தை பேசி அவரை மனதால் கொன்று இருப்பார். நயவஞ்சகமாக செயல்பட்டு குருவுக்கு எதிராக நடந்திருப்பார். பெரும்பாலும் அடுத்தவர்களை வைத்து இவர்கள் செயல்பட்டு இருப்பார். மறைமுக தாக்குதல் நடத்துவது இவர்களின் வேலையாக இருந்திருக்கும்.

பரிகாரம் என்ன?

சம்பந்தப்பட்ட நபரை பார்த்து அவர்களுக்கு உதவி செய்வது தான் பரிகாரம். சனி சம்பந்தப்படும்போது கர்மாவின் பாதிப்பு அதிகம். சனி கிரகம் கர்மகாரகன் என்றும் அழைக்கப்படுபவர் அதனால் நீங்கள் நேரிடையாக அவர்களை பார்த்து உதவி செய்வது தான் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மேஷம் : ஐந்தில் சனி



ணக்கம்ண்பர்களே !

                 பூர்வ புண்ணியபகுதியில் சோதிடம் வழியாக நீங்கள் முன்ஜென்மத்தில் என்ன தவறு செய்திருப்பீர்கள் என்று பார்த்து வருகிறோம்.

மேஷ லக்கனத்திற்க்கு சனி பகவான் ஐந்தில் நின்றால் என்ன பாவம் செய்திருப்பீர்கள் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மேஷ லக்கினத்திற்க்கு ஐந்தாம் வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். சிம்மத்தில் அமரும் சனி பகவான் பகையாகிறார். மேஷம் செவ்வாயின் வீடு. சனிக்கு செவ்வாய்யும் சரிவராது சூரியனும் சரிவராது. இருவரையும் பகையாகதான் பார்ப்பார். கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பாவம் செய்தால் மட்டுமே இந்த அமைப்பு வரும். மேஷத்திற்க்கு தொழில் மற்றும் லாபஸ்தான அதிபதியாக சனிபகவான் வருகிறார்.

யாரை கெடுத்து இருப்பார்?

கர்ம வீடு என்பது பத்தாவது வீடு தான், தொழில் புரியும் இடத்தில் தவறு செய்திருப்பார்  மூத்த சகோதர சகோதரிகளை மற்றும் நண்பர்களுக்கு பாவம் செய்திருப்பார். தான் செய்ய வேண்டிய கடமை என்னும் கரமாவை ஒழுங்காக செய்யாததால் இது நடந்திருக்கும். 

எப்படி கெடுத்து இருப்பார்?

அரசாங்கத்தில் இவரைப்பற்றி இல்லாததை சொல்லி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம். சம்பந்தமே இல்லாமல் தண்டனை அவர்களின் உடலுக்கு இவர் வாங்கி தந்ததால் இந்த பாவம் ஏற்பட்டு இருக்கும். கண்டிப்பாக மேஷம் காவல்துறை மற்றும் ராணுவத்தை காட்டும் கிரகஅதிபதியின் வீடு என்பதால் ஜெயில் தண்டனை பெற்று தூக்கு போடபட்டு இருக்கலாம்.

பரிகாரம் என்ன?

சம்பந்தப்பட்ட நபரை முதலில் சந்தித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்வது நல்லது. அரசாங்கத்தின் வழியாக உதவி வழங்கினால் மேலும் சிறப்பு. 

மூத்த சகோதர சகோதரர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு விசுவாசமாக நடந்துக்கொள்ளுங்கள் தேவையற்ற கோபத்தை குறைத்துக்கொண்டு அவர்களிடம் அன்புடன் நடந்துக்கொள்ளுங்கள்.


நண்பர்களே நான் இந்த பூர்வபுண்ணியத்தை எழுதுவது என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து இதுவரை நான் பார்த்த ஜாதகங்களை கொண்டு அவர்களின் நடவடிக்கையை உற்று நோக்கி இதனை உங்களுக்கு தருகிறேன். பூர்வபுண்ணியத்தில் இது ஒரு சதவீதம் தான் கொடுத்து இருக்கிறேன். மீதி தொன்னுற்றி ஒன்பது சதவீதம் சொல்லவேண்டும். இப்பொழுது இது போதும். இதனை வைத்து பார்த்தாலே நம்மால் பாதிக்கப்பட்ட நபர் யார் என்று தெரிந்துவிடும். 

மீண்டும் மீண்டும் சொல்லுவது பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுக்கொண்டு அவருக்கு உதவி செய்வது மூலமாக தான் உங்களின் பூர்வீக கர்மாவை தொலைக்கமுடியும் என்பதை நீங்கள் முதலில் மனதில் வைத்து செயல்படுங்கள்.

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழ்க்கை சிறிது காலம் தான் இருக்கிறது. அந்த வாழ்க்கையில் நான் பணக்காரன் நான் பெரியவன் நான் அப்படி இருப்பவன் இப்படி இருப்பவன் என்று கர்வம் கொள்ளாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கர்மாவை குறைத்து ஆனந்தமாக வாழ எப்படி இன்று முதல் வாழலாம் என்பதை முதலில் செயல்படுத்துங்கள்.

இறைவன் உங்களின் முன் ஒரு அடி எடுத்துவைப்பான். பூர்வபுண்ணியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் ஒரு அடி கூட எடுத்துவைப்பதில்லை என்பதை நான் பலபேர்களிடம் பார்த்து இருக்கிறேன். அந்த இறைவன் ஒரு அடி எடுத்து வைக்க என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லியுள்ளேன். இறைவனை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மீனம் : ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே!

                     பூர்வ புண்ணியபகுதியில் ஒவ்வொரு லக்கினத்திற்க்கும் ஐந்தில் சனி நின்றால் முன்ஜென்மத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இப்பதிவில் மீன லக்கினத்தை கொண்டவர்களுக்கு ஐந்தில் சனி நின்றால் முன்ஜென்மத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மீன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். சனி ஐந்தில் அமர்ந்தால் அதுவும் சந்திரனின் வீட்டில் அமருகிறது. சனி பகையாக அமரும்.

எப்பொழுதும் சனிக்கும் சந்திரனுக்கும் ஒத்துவராது. சந்திரன் ராசியில் அமர்ந்தால் பிரச்சினை தான் உருவாகும்

யாரை கெடுத்து இருப்பார்?

மீன லக்கினத்திற்க்கு சனி பதினோராவது வீட்டிற்க்கும் பனிரெண்டாவது வீட்டிற்க்கும் காரகன் வகிக்கிறார்.

மூத்த சகோதர சகோதரிகளை கெடுத்து இருப்பார் நண்பர்களை கெடுத்து இருப்பார் மற்றும் ஆன்மீக ஸ்தலங்களில் உள்ளவரை கெடுத்து இருப்பார். 

எப்படி கெடுத்து இருப்பார்?

மனக்காரகன் சந்திரன் வீட்டில் இருப்பதால் மனதால் கொலை செய்ய தூண்டிவிட்டு இருப்பார். நேரிடையாக ஒருவரை கொலை செய்வதை விட மனதால் கொலை செய்வது மிகப்பெரிய பாவமாகும். இப்படி தான் இவர் முன்ஜென்மத்தில் நடந்துக்கொண்டு இருப்பார். இப்பொழுது அந்த பாவத்திற்க்காக இவரின் மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பரிகாரம் என்ன?

முதல் பரிகாரம் சம்பந்தப்பட்ட நபரை தேடிபிடித்து அவருக்கு உதவி செய்வது.உங்களின் நண்பர்கள் மூத்த சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வது நன்மை அளிக்கும். 

மனதிற்க்கு இனிமை தரும் விசயங்களில் மனதை ஈடுபடுத்துங்கள். உங்களின் மனம் தான் உங்களை கொல்லும். ஆண்டவன் உதவி செய்வதற்க்கு பல வடிவங்களில் வருவான் ஆனால் உங்களை கொல்ல வருவதற்க்கு உங்களின் மனம் தான் முக்கிய கருவியாக எடுத்துவருவான் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ உங்களுக்கு பொருந்தும்.மனதால் கூட அடுத்தவருக்கு தீங்க இழைக்காமல் இருப்பது மிக உயர்ந்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



பூர்வ புண்ணியம் 21



வணக்கம் நண்பர்களே !

                     பூர்வ புண்ணியபகுதியில் சோதிடம் வழியாக அலசும்போது நிறைய நண்பர்கள் பாராட்டி எனக்கு போன் வழியாக வாழ்த்தி நிறைய எழுத சொன்னார்கள் அவர்களின் விருப்பத்திற்க்காக நிறைய செய்திகளை பூர்வ புண்ணியபகுதியில் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். 

ஒரு நண்பர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை பின்னோட்டத்தில் அளித்துள்ளார் அவரின் மனவேதனை நன்றாக தெரிகிறது. அந்த மனவேதனை தீர நாமும் ஆண்டவனிடம் பிராத்தனை வைக்கலாம். 

பொதுவாக ஐந்தில் சனி இருப்பவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதை உணரமாட்டார்கள். நான் பலபேரை இப்படி பார்த்திருக்கிறேன. அவர்களுக்காக நான் கீழ் இறங்கி இப்படி இருக்காதே உன் நிலை சரியில்லை நீ இப்படி தான் வாழ்வாய் அதனை திருத்துவதற்க்கு ஒரு வழியை ஆண்டவன் கொடுத்து இருக்கிறான் இந்த வாழ்க்கை பயன்படுத்திக்கொண்டு நீ கர்மவினையை தொலை என்றால் அனைத்தையும் கேட்டுவிட்டு அடுத்தவனை கெடுப்பதில் தான் இவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள் இருக்கும்.

இவர்கள் இப்படி செய்வது ஏன் என்றால் முன்ஜென்மத்தில் இவர்கள் செய்த செயலை இந்த ஜென்மத்திலும் செய்துக்கொண்டு இருப்பார்கள் விட்டுகுறை தொட்டகுறை என்று செய்து கொண்டு இருப்பது தான் இவர்களின் வாழ்க்கையின் அதிகபட்சமான வேலையாக இருக்கும்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒருவன் கடவுளிடம் சென்று தான் செய்த தவறை கேட்டு மன்னிப்பு கேட்கலாம். அந்த கடவுளை இவர்களை சேர்ப்பதில்லை என்றால் இவர்கள் எந்த மாதிரியான ஜென்மங்கள் என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளலாம். இதனைப்பற்றி எழுதவேண்டும் என்றால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு போகலாம்.

மறுபடியும் திருந்துவதற்க்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுங்கள் ஆண்டவன் உங்கள் மேல் கருணை மழை பொழிவான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆத்மா ஒரே இடத்தில் தான் பிறக்கும் என்பதை எதை வைத்து சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். பல ஆராய்ச்சி செய்து ஒரு ஆத்மா மறு ஜென்மத்தில் ஏற்கனவே பிறந்த ஊரில் இருந்து எழுபது கிலோ மீட்டரில் தான் பிறக்கிறது என்று சொல்லியுள்ளார்கள். இதனைப்பற்றி எட்டு வருடங்களுக்கு முன் படித்திருந்தேன். ஆத்மாக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்ய பல நிறுவனங்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் நேரம் கிடைக்கும் போது பல புத்தகங்களில் உள்ள முகவரியை தருகிறேன். நீங்கள் அங்கு தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

நான் கூட பல ஆராய்ச்சி செய்தும் பார்த்திருக்கிறேன். பல ஆத்மாக்களிடம் தொடர்புக்கொண்டு கேட்டதற்க்கு இது தான் பதிலாக தருகிறது. அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைப்போல் ஜென்மபந்தம் தொடர்கிறது. நீங்கள் இதனைப்பற்றி தெரிந்து இருந்தால் அல்லது ஆராய்ச்சி செய்திருந்தால் உங்களின் தகவலையும் தாருங்கள் பதிவில் வெளியிடுவோம்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


கும்பம் : ஐந்தில் சனி



ணக்கம் ண்பர்களே !
                      பூர்வ புண்ணியபகுதியில் சோதிடம் வழியாக நாம் ஒவ்வொரு லக்கனத்திற்க்கும் முன்ஜென்மத்தைபப்ற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கும்ப லக்கனத்திற்க்கு ஐந்தில் சனி நின்றால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்

கும்ப ராசியின் அதிபதி சனி தான் அவர் ஐந்தில் போய் நின்றால் கும்ப ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். புதனின் வீட்டில் சனி நிற்கிறார். சனி மிதுனத்தில் நட்பாக நிற்கிறார். 

கும்பராசியின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் லக்கினாதிபதியே விரையாதிபதியாக வருகிறார். இவர் தானும் கெட்டு தன்னுடன் தொடர்புடைய பெண்களையும் கெடுத்து இருப்பார். எப்படி என்றால் விரையாதிபதியின் மூலமாக பெண்கள் தொடர்பு ஏற்பட்டு இருக்கும் அவர்களை இவர் கெடுத்து இருப்பார்.

யாரை கெடுத்து இருப்பார்?

என்ன வீட்டில் வேலை பார்த்த பெண்களை தன்னுடைய ஜாதியில் இருந்து கீழ் ஜாதியின் பெண்களை கெடுத்து இருப்பார். எப்படி அவர்களை கெடுத்து இருப்பார் என்றால் நயவஞ்சகமாக பேசி அவர்களை இவர் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் விளையாடி இருப்பார். 

எப்படி சொல்லுகிறீர்கள்?

புதன் கிரகம் இரட்டை வேடம் போடும் கிரகம் நயவஞ்சகமாக பேசி காரியத்தை முடிப்பதில் புதனுக்கு ஈடு புதன் தான். சனி யாரோடு நட்பாக இருக்கிறார் பார்த்தீர்களா புதன்னோடு நட்பாக இருக்கிறார் அதனால் இவர்கள் நரி வேலை செய்தே அடுத்த குடியை கெடுத்து இருக்ககூடும்.

பரிகாரம் என்ன?

அனைத்திற்க்கும் பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் உங்களோடு தான் கண்டிப்பாக இருப்பார் அவரை அடையாளம் கண்டுக்கொண்டு அவருக்கு உதவி செய்வது தான் முதல் பரிகாரமாக அனைத்திற்க்கும் இருக்கும் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்

உங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தால் அவர்களும் உங்களில் ஒருவர் என்று நினைத்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். சில நேரம் அவர்கள் கூட அந்த நபராக இருக்ககூடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் செய்தால் கண்டிப்பாக நீங்கள் பிறவிகடலில் இருந்து தப்பிக்க கூடும்.

மேலும் விளக்கம்

நீங்கள் ஏன் கோவில்களை பரிந்துரைக்கவில்லை என்று நீங்கள் மனதில் நினைக்கலாம்.

பூர்வபுண்ணியம் கெட்டால் கோவில் சென்றால் உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் வேண்டும் என்றால் செய்து பாருங்கள் கோவில் சென்றால் நீங்கள் வணங்கும் அந்த கடவுளே உங்களுக்கு எதிராக போர்கொடி தூக்குவார். சில சோதிடர்கள் சொல்லுவார்கள் பூர்வபுண்ணியம் கெட்டால் குலதெய்வத்தில் இருந்து ஒரு ஐம்பது கிலோ மீட்டர் தள்ளி வீட்டை அமைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட நபரிடம் மட்டுமே இதற்கு பரிகாரம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



Monday, January 28, 2013

பூர்வ புண்ணியம் 20


ணக்கம் ண்பர்களே !
                    பூர்வபுண்ணிய பகுதியில் தற்பொழுது சோதிடம் வழியாக பிரச்சினையை ஆராய்ந்து எழுதி வருகிறேன். அந்த பகுதியில் சில நண்பர்கள் சொன்னார்கள் சனிகிரகத்தோடு நிறுத்திவிடாமல் அனைத்து கிரகத்திற்க்கும் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். கண்டிப்பாக அனைத்தையும் எழுதுகிறேன்.

பொதுவாக ஐந்தில் உள்ள சனியால் பாதிப்பு அதிகம் இருப்பதால் முதலில் அதனை எடுத்துக்கொண்டேன் பிறகு ஒவ்வொரு கிரகத்திறக்கும் எழுதுகிறேன். இதை படிப்பவர்களுக்கு ஐந்தில் சனி இருந்தால் உடனே பயந்துவிடாமல் அதற்கு தீர்வு என்ன என்று ஆராய்ந்து பாருங்கள்.

பூர்வபுண்ணியத்தை பற்றி எழுதும்போது முதலில் சனிப்பற்றி எழுதுவதால் ஒரு சிலர் என்னிடம் தொடர்புக்கொண்டு என்னைப்பற்றி எழுதியுள்ளீர்கள் என்று பேசினார்கள். யாரும் கோபம்கொள்ள தேவையில்லை. உங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வழியை தான் ஜாதககதம்பம் வழி செய்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிலும் இல்லாத தனித்தன்மை சோதிடம் வழியாக நமது மனிதனுக்கு வழங்கியுள்ளார்கள் நமது முன்னோர்கள் அதனை நீங்கள் பார்த்து தெரிந்து அதற்குண்டான வழியை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த கர்மாவை தொலைப்பது மூலம் உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை நீங்கள் உணரலாம். அதற்கு சிறு முயற்சியாக தான் நான் பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுதிவருகிறேன். இதனை நான் என்னுடைய சுயமுயற்சியால் இதனை எழுதுகிறேன். இன்னமும் நிறைய சிந்தித்து எழுதுகிறேன்.

மனிதனின் கர்மாவை தொலைக்காமால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு ஆன்மீக முயற்சியும் வெற்றி பெறாது என்பதை நீங்கள் முதலில் நினைத்துக்கொள்ளுங்கள். முதல் காரியமாக நாம் முதலில் முன்ஜென்மத்தில் என்ன தான் செய்திருக்கிறோம் அல்லது என்னவாக இருந்தோம் என்று சிறுமுயற்சியாவது நீங்கள் செய்வது முதல் கடமை .

அந்த சிறு முயற்சிக்கு நான் உதவுகிறேன். இதில் உனது பங்கு ஒரு சதவீதம் தான் கொடுக்கமுடியும். இந்து மதத்தின் ஆணிவேர் என்பதே பிறவிக்கர்மா தான். கர்மா இருக்கிறது என்பதைப்பற்றி இந்துமதம் எதை எடுத்தாலும் பேசும். இதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. 

கலியுகத்தில் நீங்கள் இதனை போல் பிளாக்கை படிப்பதே மிகப்பெரிய விஷயம். என்ன தான் நாம் பூர்வபுண்ணியத்தை எடுத்து பேசினாலும் அவனுக்கு பூர்வபுண்ணியத்தை காட்டினாலும் அவன் நடைமுறையில் இருக்கும் போகவாழ்க்கைக்கு தான் தள்ளப்படுவான்.

கலியுகத்தின் பிடியில் அப்படி தான் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த கலியுக பிடியில் இருந்தாலும் நான் அதனைப்பற்றி கவலைக்கொள்ளாமல் நான் பிறவிக்கர்மாவை தீர்ப்பேன் என்று முடிவு எடுத்துக்கொண்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் உண்டு.

மனிதன் வந்து நோக்கத்தை விட்டுவிட்டு வேறு நோக்கத்தில் ஈடுபடும்போது பகவான் மறுபடியும் பிறந்து மனிதனுக்கு அறிவை புகட்ட அவதாரம் எடுப்பார் என்று பகவத்கீதை சொல்லுகிறது.

நண்பர்களே  நீங்கள் மட்டும் பூர்வபுண்ணியத்தை தெரிந்துக்கொண்டால் போதுமா உங்களின் குடும்பத்தினர் மற்றும் உங்களின் உறவினர்கள் உங்களின் நண்பர்களும் தெரிந்துக்கொள்ள ஒரு வழியை நீங்கள் ஏற்படுத்திக்கொடுங்கள்.

எப்படி ஏற்படுத்திக்கொடுப்பது?

இந்த பிளாக்கை பரிந்துரை செய்யுங்கள் அது போதும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



மகரம்: ஐந்தில் சனி



ணக்கம் ண்பர்களே !

பூர்வ புண்ணியத்தில் வித்தியாசமாக சோதிடம் மூலம் பூர்வபுண்ணியத்தை பார்த்து வருகிறோம் அதில் மகரத்திற்க்கு ஐந்தாம் இடத்தில் சனி அமர்ந்தால் என்ன முன்ஜென்மத்தில் செய்திருப்பார் என்று இப்பதிவில் பார்க்கலாம். 

மகரராசியின் அதிபதி சனி தான் அதனால் அவர் ஏதும் செய்யமாட்டார் என்ற நோக்கத்தில் பார்த்தால் நமக்கு சிக்கல் தான் வரும். ஏன் என்றால் அவர் யாரையும் எதற்க்காகவும் விட்டுவைப்பதில்லை சொல்லபோனால் நூறு சதவீதம் சரியாக தன் வேலையை செய்வதில் அவருக்கு நிகர் அவர் தான். அதனால் உங்களின் லக்கனாதிபதி ஐந்தாம் வீட்டில் அமருக்கிறார். 

லக்கினாதிபதி ஐந்தில் அமருவது யோகம் தான் என்று நினைப்போம் ஆனால் அவர் அது மட்டும் தான் செய்வாரா அல்லது வேறு ஏதாவது செய்வாரா என்று பார்க்கலாம்.

ஐந்தாம் இடம் ரிஷபம். ரிஷபத்தில் அமருவதால் சனி நட்பாக தான் அமருவார். மகரத்திற்க்கு சனி லக்கனத்திற்க்கு அதிபதி மற்றும் குடும்பஸ்தான அதிபதி. இவர் முன்ஜென்மத்தில் தானும் கெட்டு தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் கெடுத்து இருப்பார்.

எதனால் கெடுத்து இருப்பார் ?

ஐந்தாம் இடம் சுக்கிரனின் இடம் பெண்களால் குடும்பத்தை காலி செய்து இருப்பார். காதல் வயப்பட்டு அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அவரின் குடும்பத்தையே காலி செய்திருப்பார். விட்ட குறை தொட்ட குறை என்று இந்த ஜென்மத்திலும் அதே போல் தொடரும். சுக்கிரன் வீடு சம்பந்தப்பட்டால் பெண்களுக்கு கடுமையான தீங்கு விளைத்திருப்பார். அதனாலும் இந்த பூர்வ புண்ணியம் கெடுதலை செய்திருக்கும்.

இதற்கு என்ன பரிகாரம்?

பெண்களை தெய்வமாக பார்க்க வேண்டியது முதல் கடமை. எப்படி ஐந்தில் சனி இருக்கும்போது தெய்வமாக பார்க்க தோன்றும் பிரச்சினையை அங்கு தான் ஆரம்பம். 

காதல் செய்யாமல் இருக்கவேண்டியது இரண்டாவது பரிகாரம். காதலை காட்டும் இடம் அது கூட சுக்கிரனின் வீடு கண்டிப்பாக மனது அலைபாயும். 

உங்களுக்கு நீங்களே பரிகாரம் செய்துகொள்வது ஏன் என்றால் நீங்களே முன்ஜென்மத்தில் அடுத்தவரை கொலை செய்து நீங்களும் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கலாம். உங்களின் உடலை ஒரு தெய்வ உடல் போல் பாவித்து அந்த உடலை நன்றான முறையில் பேணிக்காப்பது. 

அடுத்த பரிகாரம் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை உங்களின் பொறுப்பில் கவனித்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பது ஒரு நல்ல தீர்வாகும்.

மேலும் விளக்கம்

மனித வாழ்க்கையில் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட கர்மவினையை தொலைப்பதற்க்கு ஒரு வாய்ப்பை கடவுள் மனிதனுக்கு தருகிறார் அதனை நீங்கள் நன்றாக பயன்படுத்தி முன்ஜென்மத்தின் கர்மாவை தொலைக்க பாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது வழியாக தான் கர்மாவை குறைக்க முடியும் என்பதை நீங்கள் முதலில் நினைவில் வையுங்கள். இதனை விட்டுவிட்டால் உங்களை கடவுளால் கூட காப்பாற்றமுடியாது

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



ஆன்மீக அனுபவங்கள் 59



வணக்கம் நண்பர்களே !

ஆன்மீக அனுபவங்களில் இப்பதிவில் ஒரு கருத்தை பார்க்கலாம். நம்முடைய வீட்டிலேயோ அல்லது உறவினர்களின் வீட்டிலேயோ ஏதோ ஒரு துர்மரணம் ஏற்படலாம்.

அப்படி ஒரு மரணம் ஏற்பட்டால் அந்த நபரின் ஆத்மா மேல் நிலைக்கு செல்லாமல் சரியாக அந்த இடத்திலேயே இருக்கும்.துர்மரணம் ஏற்பட்ட ஆத்மா அதன் இறப்பு காலம் வரை அந்த இடத்திலேயே இருக்கும். அந்த ஆத்மா துணை தேடும்.

தனியாக இருக்க பிடிக்காமல் அது குடும்பத்தில் உள்ள நபர்களின் துணையை தேடும் அப்படி இல்லை என்றாலும் யாராவது ஒரு நபரின் துணையை தேடும். அது வலிய வந்து யாராவது ஒரு நபரை கொன்று கொண்டு அழைத்துக்கொண்டு சென்றுவிடும் சில நேரங்களில் இது கூட்டமாக கூட அழைத்துக்கொண்டு சென்று விடுகிறது. 

நீங்களே பார்த்து இருக்கலாம் உங்களின் அருகாமையில் இருக்கும் வீட்டில் ஏதாவது துர்மரணம் ஏற்பட்டால் அந்த வீட்டில் மறுபடியும் ஏதாவது ஒரு துர்மரணம் சில காலங்களில் நடைபெறும். அது எல்லாம் முன் செத்த அந்த நபரின் ஆத்மா செய்யும் வேலை. ஒரு சில சாலைகளில் ஒரு விபத்து நடக்கும் அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். முதல் விபத்து நடந்த ஆத்மாக்களின் வேலைதான் அது.

ஆத்மாவால் ஒருவரை கொல்லமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றே சொல்லலாம். துர்மரணம் ஏற்பட்ட ஆத்மாவிற்க்கு உடலின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும். இது விபத்தால் ஏற்பட்ட துர்மரணத்தை விட தற்கொலை செய்துக்கொள்ளும் ஆத்மாவிற்க்கு அதிக ஈர்ப்பு இருக்கும். கடைசி நேரத்தில் உடலின் மீது பாசம் வந்ததால் அப்படி இருக்கும். அந்த ஆத்மாக்கள் கொலை செய்யும்.

நீங்கள் நினைத்து பாருங்கள் உங்களின் பகுதியில் ஏதோ ஒரு சம்பவமாவது இப்படி நடந்திருக்கும். அப்பொழுது நான் சொல்லுவது உண்மை என்பது தெரியவரும்.

நாம் வீட்டில் துர்மரணம் நடந்தாலும் அந்த ஆத்மாவிற்க்கு நாம் எல்லாம் சடங்குகள் செய்தாலும் அந்த சடங்கு மூலம் அந்த ஆத்மாவிற்க்கு வீடு பேறு கிடைப்பதில்லை. ஆத்மாவுடன் தொடர்புக்கொள்பவர்கள் இந்த சடங்குகளை செய்தால் சரியான தீர்வு இதற்க்கு இருக்கும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

தனுசு :ஐந்தில் சனி



ணக்கம் ண்பர்களே !
                     பூர்வ புண்ணியத்தில் ஒரு வித்தியாசமான அலசலை தருகிறேன். உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களின் நண்பர்களுக்கு இந்த பதிவைப்பற்றி பரிதுரைக்கவும்.

பூர்வபுண்ணியம் என்னும் ஐந்தாம் பாவத்தில் சனிகிரகம் நின்றால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி பல பதிவுகளில் மேலோட்டமாக நாம் பார்த்து இருக்கிறோம் இப்பொழுது கொஞ்சம் உள்நுழைந்து இதனைப்பற்றி தகவலை தரலாம் என்று நினைத்து இதனை தொடங்குறேன். 

மேஷத்தில் சனிகிரகம் நீசமாக அமரும். சனிகிரகம் நீசமாக அமருவது மிகுந்த பாதிப்பை தான் அது தரும். ஐந்தாம் இடமாகிய மேஷத்தில் சனிபகவான் அமர்ந்தால் உங்களின் வாழ்க்கை போராட்டமாக தான் அமையும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லாமல் சொல்லிவிடலாம்.

பொதுவாக ஐந்தில் அமரும் சனி அடுத்து பிறப்பு மனித பிறப்பாக அமையாது. எத்தனை கோடி ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இந்த மனித வடிவத்தை எடுத்து இருக்கிறது என்பதைப்பற்றி நான் சொல்ல தேவையில்லை பல மகான்கள் சொல்லியுள்ளார்கள். மனித பிறப்பு எடுப்பதே முன்ஜென்மத்தின் கர்மாவை தொலைப்பதற்க்கு தான் ஆத்ம மனித பிறப்பு எடுக்கிறது. 

மேஷத்தில் சனி அமரும்போது முன் ஜென்மத்தில் இவர் ஒருவரை கொலை செய்திருக்ககூடும். எப்படி கொலை செய்திருப்பார் என்றால் ஆயுதங்களால் கொலை செய்திருக்ககூடும். பாதிக்கப்பட்ட நபருக்கு பல இடங்களில் ஆயுதங்களால் வெட்டப்பட்டு கொலை செய்திருப்பார்.

யாரை கொலை செய்திருப்பார்?

தனுசு லக்கினத்திற்க்கு இரண்டாம் வீட்டிற்க்கும் மூன்றாம் வீட்டிற்க்கும் சனி அதிபதியாகிறார். 

குடும்பத்தில் உள்ள நபரை கொன்று இருக்ககூடும். இளைய சகோதர சகோதரிகளை அல்லது பக்கத்துவீட்டுக்காரரை கொன்று இருக்ககூடும்.

யாரோ என்று பல பேரை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் சரியான நபரை சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. அவர் அவர் ஜாதங்களை வைத்து தான் இதில் முக்கிய முடிவு எடுக்கமுடியும் நண்பர்களே.

ஏன் நீங்கள் சனி அமர்ந்தால் கொலை தான் செய்திருப்பார்களா வேறு ஏதும் செய்திருக்கமாட்டாரா என்று கேட்பது புரிகிறது. ஒரு மனித உடம்பில் இந்த உயிர் என்பதை பிடித்து வைத்திருப்பவன் சனிபகவான் ஆயிற்றே அதனால் கொலை செய்திருப்பார் என்று கூறுகிறேன். சனி அமரும்போது கடுமையான பிரேத தோஷத்தை ஏற்படுத்தும். அதனால் அவ்வாறு சொன்னேன் நண்பர்களே.
ஒரு மனித உடலுக்கு தீங்கு செய்தால் அது பிரேத தோஷமாக மாறும்.

இதற்கு என்ன பரிகாரம்?

பாதிக்கப்பட்ட நபர் உங்களோடு தான் இருப்பார் தேடி பிடித்து அவருக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால் என்ன எனக்கு நடக்கும். கண்டிப்பாக இனிமேல் மனித ஜென்மத்திற்க்கு வாய்ப்பில்லை. 

எப்படி சொல்லுகிறீர்கள்?

மனித ஜென்மம் எடுப்பதற்க்கே பல கோடி வருஷங்கள் ஆகின்றது என்று பல மகான்கள் தன்னுடைய ஆன்மாவால் உணர்ந்துக்கொண்டு இதனை சொல்லுகிறார்கள். அப்படி பார்க்கும்போது இந்த அளவுக்கு ஒரு தீங்கு செய்யும்போது அந்த ஆத்மா இறைவனிடம் செல்லாது. மனித பிறப்பிற்க்கு கீழ் தான் இருக்கும்.

மேலும் விளக்கம்

சனி ஐந்தில் அமர்ந்தவனை பார்த்தால் மிகுந்த செல்வ செழிப்போடு வாழ்வான் அனைத்து வித போகங்களையும் அந்த ஆத்மாவிற்க்கு கொடுத்து கீழ் நிலையில் தள்ளிவிட்டுவிடும். ஏன் என்றால் மறுபடி மனிதபிறப்பு எடுக்காது அல்லவா அதனால் இது வரை ஏற்பட்ட ஆத்மாவின் தாகத்திற்க்கு ஒரு சிறிய திருப்தியை கொடுத்துவிட்டு மனிதஜென்மம் அல்லாத பிறவிக்கு சென்றுவிடும்.

சனி ஐந்தில் இருப்பவரின் நிலை மிகுந்த பரிதாப நிலை தான் சரியான பரிகாரம் செய்து உங்களின் நிலை உயர்த்திக்கொள்ள ஒரு வழியை சோதிடம் மூலமாக நீங்கள் தெரிந்துக்கொள்ளவே இந்த பிறப்பு எடுத்தீர்கள் என்பதை நீங்கள் முதலில் நினைவை வைத்து ஆக்கபூர்வ வேலையில் இறங்குங்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


அறிவிப்பு


ணக்கம் ண்பர்களே !

மூன்று நாட்களாக பல ஸ்தலங்களுக்கு சென்று வந்ததால் உங்களை அதிகம் தொடர்புக்கொள்ள முடியவில்லை. 

பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு இதனை படிக்கும்போது ஆன்மீக அனுபவ தொடர் பயமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.படிக்கும்போது பயமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஆன்மீக அனுபவம் தொடர் வரும் போது படிக்கவேண்டாம். 

ஆன்மீக அனுபத்தை படிப்பவர்கள் அதிகபட்சமாக ஆன்மீகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் அதிகம் பேர் என்னை தொடர்புக்கொண்டு இன்னும் நிறைய எழுதுங்கள் என்று சொல்லுகிறார்கள் அவர்களுக்காக நான் எழுதவேண்டியுள்ளது. பயமாக இருப்பவர்களுக்கு சோதிடபாடங்களை படித்துக்கொள்ளவும். தனியாக பதிவை ஆரம்பித்து ஆன்மீக அனுபவங்கள் எழுதலாம் ஆனால் அது உங்களை சுற்றிவிடுதல் போல் இருக்கும் என்பதால் இந்த பதிவிலேயே அனைத்தையும் தந்துவிடுகிறேன்.

முன்ஜென்மத்திற்க்கு பூர்வபுண்ணியதொடரையும்
இந்த ஜென்மத்திற்க்கு சோதிடபாடத்தையும்
இறப்பிற்க்கு(மறு ஜென்மத்திற்க்கு )ஆன்மீக அனுபவங்களையும்

மூன்று பகுதியாக பிரித்து எழுதுகிறேன். என்னிடம் இருப்பதை வெளிப்படுத்துவதற்க்கு இந்த தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. என்னிடம் இருப்பதை என்னிடம வைத்துக்கொண்டால் அது எனக்கு பிரச்சினை என்பதால் அதனை கொட்டிவிடுகிறேன். உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றைவையை விட்டுவிடுங்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

பூர்வ புண்ணியம் 19


வணக்கம் நண்பர்களே!

  பூர்வ புண்ணிய பகுதியில் ஒரு தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

சோதிடத்தை பார்த்தாலே இப்பிறவி முற்பிறவி மற்றும் மறுபிறவி பற்றி சொல்லுகிறது. பொதுவாக சோதிட சாஸ்திரம் உருவானது தனிமனிதன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்க்கு தான் ஆனால் இன்று அது பலவித விஷயங்களுக்கும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 

ஒருவரின் முற்பிறவியைப்பற்றி அறிவதற்க்கு லக்கினாதிபதியை வைத்து பார்ப்பார்கள். லக்கினாதிபதி அமர்ந்த இடம். லக்கினாதிபதியை பார்க்கும் கிரகம் லக்கினாதிபதியின் தன்மை ஆகியவற்றை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். 

பூர்வபுண்ணியம் என்ற ஐந்தாவது இடத்தை வைத்து அவன் முற்பிறவியில் என்ன செய்தான் யாருக்கு நல்லது செய்தான் யாருக்கு கெடுதல் செய்தான் என்பதைப்பற்றி அறியலாம். பூர்வபுண்ணியாதிபதி நிலையை வைத்து இவனின் வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப்பற்றி அறியலாம். 

பூர்வபுண்ணியாதிபதி கெடுதல் சாரம் பெற்றுவிட்டால் முன்ஜென்மத்தில் அடுத்தவனுக்கு பாவம் செய்திருக்கிறான் என்று அர்த்தம். பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டால் உங்களின் வாழ்க்கை நன்றாக அமையாது தினமும் போராட்டம் தான். சில பேர் வாழ்க்கையில் நன்றாக பணவசதி இருக்கும் ஆனால் அவனால் நிம்மதியாக ஒரு நாள் தூங்கமுடியாது. முன்ஜென்மத்தில் இவன் செய்த வினை இவனை இந்தஜென்மத்தில் படுத்தி எடுத்துவிடும். நிம்மதியற்ற வாழ்க்கை வாழவேண்டிவரும். வெளி உலகத்திற்க்கு நன்றாக வாழ்வது போல் தோன்றும் உள்ளுக்குள் அழுதுக்கொண்டு இருப்பான். 

முன்ஜென்மத்தில் எப்படி இருந்தான் என்பதை பார்க்க ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் பின்னோக்கி பத்து மாதம் சென்று பார்ப்பார்கள். அப்பொழுது இவனின் நிலையை தெரிந்துக்கொள்ளலாம். இதனைப்பற்றி வெளியில் யாரும் சொல்லுவதில்லை ஏன் என்றால் பயப்படுவார்கள் என்பதால் சொல்லுவதில்லை.

ஒருவர் முன்ஜென்மத்தில் இறக்கும்போது என்ன தசாவில் இறந்தாரோ அந்த தசாவில் மீதி இருக்கும் தசாவில் தான் இந்த ஜென்மத்தில் ஒருவர் பிறப்பார். அதேபோல் ஒருவர் வாழ்ந்துக்கொண்டு இருக்கும்போது அவரின் இறப்பிற்க்கு பிறகு எந்த உடலை எடுக்கவேண்டும் என்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் மறுபிறவியில் எப்படி எங்கு பிறக்கவேண்டும் என்பது தீர்மானித்துதான் இந்த பிறப்பை நீங்கள எடுக்கிறீர்கள்.

உங்களுடன் முன்ஜென்மத்தில் ஒருவர் தொடர்பு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவருடன் இந்த ஜென்மத்தில் தொடர்பு உங்களுடன் இருக்கும். உங்கள் அப்பா அம்மா இந்த ஜென்மத்திலும் அதே உறவுடன் தான் பிறக்கிறார்கள். உங்களின் துணைவரும் அப்படி தான் இருப்பார். இருவருக்கும் அதிகபட்சமாக வயது வித்தியாசம் எட்டு வயது இருக்கும். ஒரு சில நேரங்களில் இந்த உறவுமுறை மாறலாம்.


இன்னும் நிறைய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கடகம் : ஐந்தாவது வீட்டு தசா பலன்



ணக்கம் ண்பர்களே!
                     கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தாவது வீட்டு தசா நடைபெற்றால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

கடக ராசிக்கு ஐந்தாவது வீட்டு அதிபதி செவ்வாய். செவ்வாய் பொதுவாக ஐந்தாவது வீட்டு அதிபதியாக வருவது நல்லதல்ல. செவ்வாய் ஐந்தாவது வீட்டு அதிபதியாக வருவதால் அதிகமாக கோபகாரராக நீங்கள் இருப்பீர்கள். பூர்வபுண்ணியம் பாதிக்க செய்யும். திருத்தணி முருகனை வணங்கி உங்களின் பூர்வபுண்ணியத்தை அதிகரிக்க செய்யுங்கள். திருத்தணி முருகனை மட்டும் தான் வணங்கவேண்டும்.

கடக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய் செவ்வாய்க்கு இந்த வீடு நீசம்

விளையாட்டு துறையில் வெற்றி வாகை சூடுவார். செவ்வாய் இதில் நீசமாக இருப்பதால் திடீர் யோகம் குறைவாக இருக்கும். மனதில் பிரச்சனை ஏற்படும். சம்பந்தமே இல்லாமல் கோபம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன் செவ்வாய் இந்த வீட்டிற்க்கு நட்பு

தனவரவு நன்றாக இருக்கும். தனவரவில் பிரச்சினை இருக்காது வீட்டில் சந்தோஷம் இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.புத்திர பாக்கியம் இருக்கும் அதிகமாக ஆண் குழந்தைகள் இருக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். செவ்வாய் இந்த வீட்டிற்க்கு பகை

கடுமையான புத்திரதோஷத்தை ஏற்படுத்தும். கோபகாரர்களாக நடந்துக்கொள்வார்கள். இளைய சகோதருக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும். அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் சென்று வருவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு நான்காவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன் செவ்வாய்க்கு இந்த வீடு சமம்

வாகன வசதி ஏற்படும். வாகனங்கள் தீ விபத்தை சந்திக்கும். புத்திரதோஷம் ஏற்படும். புததிரர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படாது. வீடு அமையும் யோகம் ஏற்படும். தாயாரின் வழியில் நன்மை உண்டு.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஐந்தாவது வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.செவ்வாயின் ஆட்சி வீடு.

கடுமையான கோபத்தை தரும். வில்லங்க வேலையில் மனது ஈடுபடவைக்கும் விளையாட்டு துறையில் வெற்றி உண்டு. இஷ்டதெய்வ அருள் கிடைக்கும் அதுவும் முருகனாக இருந்தால் கூடுதல் நன்மையளிக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது தனசு அதன் அதிபதி குரு செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு

பங்கு வர்த்தகம் நல்ல பலனை தரும். திடீர் யோகம் வரும். பணவரவுக்கு குறை இருக்காது. மாமன் வழியில் உதவி இருக்கும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உருவாகும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. செவ்வாய் இந்த ராசியில் உச்சம்

திருமணத்திற்க்கு பிறகு நல்ல யோகம் ஏற்படும். துணைவரால் நல்ல வருமானம் உண்டு கூட்டுதொழில் சிறக்கும் அதே நேரத்தில் அந்த தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. செவ்வாய்க்கு இந்த வீடு சமம்

யோகம் குறைவாக இருக்கும் அடிக்கடி விபத்தினை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். துணைவரால் பிரச்சினையை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு

பெரியோர்களின் ஆசி கிடைக்கும் மத சம்பந்தமாக விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இருக்கும். நல்ல பாக்கியத்தோடு குடும்பம் நடத்துவீர்கள்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ஆட்சி வீடு

வேலை வாய்ப்பு காரணமாக நல்ல முன்னேற்றத்தை அடையலாம். அதிக கோபம் வரும் சம்பந்தமே இல்லாமல் கோபத்தை ஏற்படுத்துவீர்கள். திருமண வாழ்க்கை அந்தளவுக்கு இருக்காது. உங்களை வீட்டில் உள்ளவர்கள் உங்களை நன்றாக பயன்படுத்துவார்கள்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பதினோராவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். செவ்வாய்க்கு இந்த வீடு சமம,

புத்திரபாக்கியம் ஏற்படும். புத்திரர்களால் நல்ல நிலைக்கு வரலாம். பணவரவு நன்றாக இருக்கும். திடீர் யோகம் ஏற்படும். நண்பர்கள் உதவி உங்களுக்கு உண்டு

ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். செவ்வாய்க்கு இந்த வீடு பகை

புத்திரதோஷம் ஏற்படும். புத்திரர்கள் வழியாக இழப்பு ஏற்படும். அதிகமான செலவு ஏற்படும். மருத்துவசெலவு வைக்கும். மொத்தத்தில் இதில் சம்பந்தப்பட்டு தசா நடைபெறுவது நல்லதல்ல.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, January 26, 2013

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
 நமது தளத்தின் வழியாக என்னை தொடர்பு கொள்பவர்களுக்கு ஆன்மீக நிகழ்வுகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. நமது நண்பர்களுக்கு அவ்வாறு நடந்த உடனே என்னை தொடர்புக்கொண்டு பேசி வருகிறார்கள். உங்களுக்கும் இவ்வாறு நடந்தது என்றால் உடனே என்னை தொடர்புக்கொண்டு பேசிவிடுங்கள் அது ஒன்று தான் உங்களுக்கு நல்லது. 

இதனை அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால் நான் நேரில் பார்த்தால் தான் உங்களின் ஆன்மீக நிகழ்வின் தாகத்தை தீர்க்கமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வெளிநாட்டில் இருக்கலாம். அப்பொழுது நிலைமை மோசமாகிவிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எந்த மருத்துவரிடம் காண்பித்தாலும் இதனை குணப்படுத்தமுடியாது. 

இது ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்றால் உங்கள் ஆத்மாவின் தேடுதல் தான் இதற்க்கு காரணம். பல ஜென்மங்களாக பிறவி எடுத்த அதனின் தாகத்தை தீர்ப்பதற்க்கு வழி தேடுகிறது. உங்களின் தேடுதலுக்கு சரியான இடமாக என்னை கருதுவதால் உடனே என்னை தேடிவருகிறது. அப்பொழுது என்னிடம் இருக்கும் சக்தியின் வழியாக உங்களின் ஆத்மாவில் மாற்றம் நடைபெறுகிறது. இதனை அனைவருக்கும் கொடுக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன். 

சுடிய விரைவில் நீங்கள் விரும்பினால் இதனை கொடுத்துவிடுவேன். நீங்கள் இதற்காக எந்த பயிற்சியும் எடுக்க தேவையில்லை. உங்களின் ஆத்மா செய்யும் வேலையை நீஙகள் வெறும் கண்களைக்கொண்டு பார்க்கமுடியும் நீங்கள் எப்படி பட்ட சாமியார்களிடமும் தேடினாலும் கிடைக்காத ஒரு அற்புதத்தை நீங்கள் உணரலாம்.

நான் இந்தியாவில் இருந்துக்கொண்டு லண்டனில் இருக்கும் நபருக்கு இதனை செய்ய முடியும் ஏன் இந்த பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு இதனை நடத்திவைக்க முடியும். நீங்கள் என்னை பார்க்ககூட தேவையில்லை என்ன நண்பர்களே நல்ல கதை சொல்லுகிறார் என்று நினைக்கிறீர்களா உங்களுக்கு இது நடக்கும் போது இது எப்படிபட்ட அற்புதம் என்று அப்பொழுது தெரியவரும். 

நன்றி நண்பர்களே நான் வெளியூரில் இருந்து கொண்டு இந்த பதிவை தருகிறேன் சென்னை வந்ததும் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவினை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, January 24, 2013

பூஜைக்குத் தேவையான பொருட்களை தட்டில் வைப்பது எப்படி?



வணக்கம் நண்பர்களே!

ஜனகல்யாண் செய்தி மடலில் படித்த செய்தியை அப்படியே தருகிறேன்.

பூஜை தொடங்கும் முன் அதற்குரிய பொருட்களை சரியான முறையில் வைப்பது அவசியம் ஆன்மீக விஞ்ஞானத்தின்படி பஞ்ச தத்துவங்களின் சமமான அடிப்படையில் பொருட்களை வைக்க வேண்டும் இவ்வாறு வைப்பதால் பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்குமு் பஞ்ச பூதங்களோடு ஒரினப்படுத்த முடியும், இதனால் பூஜை செய்யும் ஜீவன் வழிபடும் தெய்வத்திடம் இருந்து வெளிப்படும் சகுண[திரி குண ரூபம் உள்ள] நிர்குண [ரூபம் அற்ற] தத்துவங்களை அதிகம் கிரகிக்க உதவுகிறது


பூஜை பொருட்களை எப்படி வைப்பது என்பது பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம்.

1.பூஜை தட்டில் மஞ்சள் குங்குமம் முதலியவை ஜீவனின் வலுது பக்கத்திலும் விபூதி செந்தூரம் முதலியவை இடது பக்கத்திலும் வைக்கப்படவேண்டும்.

2 வாசனைத் திரவியங்களும் வாசனைப் பொருட்களும் [சந்தனம் முதலியவை] புஷ்பம் அருகம்புல் மற்றும் இலைகள் தட்டின் முன் பகுதியில் வைக்க வேண்டும் வாசனைத் திரவியங்களிலும் அருகம்புல் மற்றும் இலைகளின் நிறத்திலும் உள்ள நுண்ணிய பகுதிகளில் தெய்வங்களின் சூட்சம அதிர்வலைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

3.பாக்கு வெற்றிலை மற்றும் தக்ஷணையாக கொடுக்க உள்ள பணம் தட்டின் கீழ் பகுதியில் வைக்கப்பட வேண்டும் ஏனென்றால் தெய்வங்களின் அதிவலைகளை செலுத்துவதற்னு இவை ஒரு சிறந்த கருவியாக அமைகின்றன.

4.நடுப்பகுதியில் அருள் நிறைந்த முனை முறியாத அரிசி[அட்சதை] வைக்கப்பட வேண்டும் இந்த முனை முறியாத அரிசி நடுவில் வைக்கப்படுவதால் உயர்நிலைத் தெய்வங்களான சிவன் துர்கை கிருஷ்ணர் இராமர் விநாயகர் ஆகிய ஐந்து தெய்வங்களின் தத்துவங்களும் ஈர்க்கப்படுகின்றன பின் தேவைக்கேற்ப மற்ற பொருட்களுக்கும் ஒரு வட்டச்சுழற்சி முறையில் அவை செலுத்தப்படுகின்றன.

இப்படி பூஜை பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கும் முறையினால் ஆத்மா பூமி தத்துவத்திலிருந்து ஆகாய தத்துவத்தை அடைந்து மாய உலகின் பிடியில் இருந்து விலகி பிரம்ம்தை அடைய உதவுகின்றது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.