Followers

Thursday, February 28, 2013

பூர்வ புண்ணியம் 39



வணக்கம் நண்பர்களே !
                     பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுத ஆரம்பித்தபிறகு பல நண்பர்கள் பாராட்டினார்கள் பாதி பேருக்கு மேல் குழப்பத்தில் இருக்கிறார்கள். நான் முடிந்தவரை தெளிவுப்படுத்தி எழுதுகிறேன். நீங்கள் படித்துக்கொள்ளலாம்.

ஒருவருடைய முன்ஜென்மத்தில் உங்களால் பாதிக்கப்பட்ட நபரை நான் அடையாளம் காட்டுவதற்க்கு பலவிதத்திலும் முயற்சி எடுத்து உங்களுக்கு கொடுத்துக்கொண்டுருக்கிறேன். இதனை ஏன் நான் செய்கிறேன் என்றால் ஏதோ சோதிடத்தை நடத்தினோம் காசு பார்த்தோம் என்று இல்லாமல் இந்த இயற்கையின் சுழற்ச்சிக்கு என்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்று எண்ணி எழுதிவருகிறேன். 

நான் காசு மட்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்து இருந்தால் ஷேர்மார்க்கெட்டில் மட்டுமே சோதிடத்தை பயன்படுத்தி அள்ளி கட்டிக்கொண்டு போய் இருக்கலாம். ஷேர்மார்க்கெட்டில் சோதிடம் மட்டும் அல்ல. என்னுடைய டெக்னிக்கல் மூளையை வைத்தே ஒரு நாளைக்கு குறைந்தது பத்தாயிரம் வரை சம்பாதிக்கமுடியும். நான் சம்பாதித்தால் என்னுடைய குடும்பம் மட்டும் நன்றாக இருக்கும். பிற குடும்பங்களைப்பற்றி நமக்கு கவலையும் இருப்பதால் பூர்வபுண்ணியம் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நான் பூர்வபுண்ணியம் எழுதுவதால் எனக்கு தான் லாபமாக இருக்கிறது. ஆன்மீகத்தில் எந்தளவுக்கு பொதுசேவை செய்கிறோமே அந்தளவுக்கு உயரமுடியும் அதனை எனது வாழ்க்கையில் பார்த்தேன். உங்களுக்கு இதனை எழுதியதால் கடவுள் எனக்கு வேறுவிதத்தில் உதவிச்செய்கிறார். ஆன்மீகவழியில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

என்னுடைய எண்ணமும் ஏதோ நீங்களும் பிளாக்கை படித்தோம் அப்படியே சென்றோம் என்று இருக்ககூடாது என்று எண்ணித்தான் உங்களையும் ஆன்மீகத்தில் உயர்த்த வேண்டும் என்று ஆன்மீகத்தில் பல விசயங்களை புகுத்தி எழுதிவருகிறேன். இன்று இண்டர்நெட்டில் ஆயிரம் விசயங்கள் இருக்கும்போது இந்த பிளாக்கை படிக்க வேண்டும் என்று நீங்கள் வருவது கண்டிப்பாக அனைவருக்கும் அந்த இறைவனிடம் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

தேனீக்கள் பூக்கள் மீது தான் அமரும். ஈக்கள் அசுத்தம் மீது தான் அமரும். இண்டர்நெட்டில் ஆயிரம் அசுத்தங்கள் இருந்தாலும் நீங்கள் வந்து அமருவது இந்த பிளாக்கில் தான் அதனால் என்னிடம் இருக்கும் சக்தி உங்களின் ஆத்மாவை மகிழ்விக்கிறது. நான் ஒவ்வொரு நாளும் புது மனிதனாக இந்த பூமியில் பிறப்பது போல் உணர்கிறேன். 

ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார் உங்களின் பூர்வஜென்மத்தில் சம்பந்தப்பட்டவர் நம்முடன் பனிரெண்டு வருடங்கள் வாழ்ந்தால் தான் நம் முன்ஜென்மத்தில் வாழ்ந்தவர் என்று ஒரு கருத்தை தந்திருந்தார். அப்படி எல்லாம் கிடையாது உங்களின் முன்ஜென்மத்தில் உங்களுடன் நெருக்கமாக இருந்தவர் உங்களின் முன் ஒரு கணநேரத்தில் கூட வந்துவிட்டு செல்வார். இப்படியும் பல பேரை நான் பார்த்திருக்கிறேன்.

பூர்வபுண்ணிய சொந்தம் என்பது மிகவும் உணர்வு பூர்வமானது. உங்களின் முன்ஜென்மத்தின் உங்களின் துணைவரின் ஆத்மா உங்களை பார்த்துவிட்டால் அந்த ஆத்மாவிற்க்கு கிடைக்கும் சக்தி அளவில் அளக்கமுடியாது அப்படி ஒரு சந்தோஷத்தை அது அடையும் இதனை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த இருவருக்கும் ஏதோ ஒரு நிகழ்வால் இருவருக்கும் பிரிவு நிகழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த இரு ஆத்மாவும் படும் வேதனை எழுத்தில் எழுதமுடியாது. உண்மையில் இருவரின் ஆத்மாவும் அப்பொழுது இருந்தே தொடர்பில் இருந்துக்கொண்டே இருக்கும். எனக்கு இதனைப்பற்றி அனுபவம் இருப்பதால் சொல்லுகிறேன். 

எனக்கு முன்ஜென்மத்தில் துணைவராக இருந்தவரின் ஆத்மா என்னை ஒரு நாள் கூட வந்து பார்க்காமல் இருந்ததில்லை. ஆன்மீகவாதிகள் சொல்லுவார்கள் ஆத்மாவிற்க்கு ஒன்றும் தெரியாது அது ஒரு வஸ்து போல் இருக்கும் என்று ஆனால் நான் சொல்லுகிறேன் ஆத்மாவிற்க்கு அனைத்தும் தெரிகிறது. 

அந்த நபர் எங்கு இருக்கிறார் அவர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார். ஒரு தகவலையும் தவறவிடாமல் அனைத்தையும் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கிறது. அப்பொழுது தான் நான் நினைத்தேன் இவ்வளவு சக்தி இதற்கு இருக்கிறதா. அதனுடைய ஏக்கம் தான் என்ன என்று இப்பொழுது பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நான் எதுவும் செய்யவில்லை அதுவாகவே வந்து செல்கிறது. அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் ஆயிரம் இருக்கிறது இது போதும். 

என்னுடைய அனுபவத்தில் இருந்து உங்களுக்கு தரும்போது உங்களுக்கு எளிதில் புரியும் என்பதற்க்காக எழுதுகிறேன். உங்களுடைய துணைவர் மட்டும் அல்ல உங்களின் முன்ஜென்ம உறவுகள் அனைத்தும் இப்படி தான் செய்யும். ஆத்மாக்களின் உலகத்தில் பல விந்தைகள் நடைபெறுகின்றன. அதனைப்பற்றி நான் சொன்னால் நீங்கள் இவன் பைத்தியம் ஆகிவிட்டான் என்று நினைக்கதோன்றும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நான் சொல்லுவது அனைத்தும் உங்களுக்கு புரியும். 

நாம் வெளிகண்களால் பார்க்கும் உலகம் வேறு. அககண்களால் பார்க்கும் உலகம் வேறு. இந்த அககண்களால் பார்க்கின்ற உலகம் அற்புதம் நிறைந்த உலகம். அந்த உலகத்தை காண உங்களுக்கு ஜாதககதம்பம் வழி செய்யும்.கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அனைத்திற்க்கும் காலம் என்பது இருக்கிறது அல்லவா அதனால் பொறுமையாக இருங்கள் வழியை நான் தருகிறேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கேள்வி & பதில்

நண்பர் கிருஷ்ணா ஒரு சில கேள்விகளை கேட்டார் அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் உங்களுக்கும் பதில் அளிக்கிறேன்.

கர்மவினை என்று சொல்லி முன் ஜென்மத்து நபர்களை தேட சொல்லுகிறீர்கள் ?

உங்கள் லாஜிக் படி பார்த்தால் கசாப்பு கடை காரன் கடவுளை அடையவே முடியாது போல இ ருக்கிறதே :)

கசாப்பு கடை காரன் ஆட்டை வெட்டுகிறான் என்றால் அந்த கர்மா யாரை சேரும் ?
கசாப்பு கடைகாரனையா? ஆடு வளர்தவனையா? ஆட்டை விலைக்கு வாங்கி விற்றவனையா ?மட்டன் ஆக்கி சாப்பிட்டவர்களையா? 

சரி இறந்த ஆடு கிருஷ்ணா வாகவோ இல்லை ராஜேஷ் சுப்பு வாகவோ பிறவி எடுத்து விட்டது என்று வைத்து கொண்டால் ....நெறைய பேர் நம்மை தேடி வந்து பரிகாரம் செய்ய வேண்டி இருக்குமே :)

நான் என்றைக்காவது அசைவம் சாப்பிடுவர்கள் கடவுளை அடையமுடியாது என்று சொல்லியுள்ளேனா அல்லது கசாப்புகடைக்காரன் கடவுளை அடையமுடியாது என்று சொல்லியுள்ளேனா? அனைவரும் அடையலாம். நான் இப்பொழுது மனிதனுக்கு மட்டும் சொல்லிக்கொண்டுயுள்ளேன். பூர்வபுண்ணியபகுதியில் ஐந்து சதவீதம் தான் முடிவுடைந்துள்ளது. 

கர்மாவின் கணக்கை தீர்ப்பவன் இறைவன். அவன் தான் ஜனாதிபதி. அவனிடம் தான் உங்களின் கணக்கு இருக்கிறது. ஜனாதிபதி பார்த்து தூக்கு போகிறவனை கூட நிறுத்தி வைப்பது போல கர்ம வினைகளை தீர்ப்பவன் இறைவன். 

ஒரு உயிர் பூமியில் ஜனிக்கும்போது இவ்வழியாக வரவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது அதன் படி அதன் கர்மவினைகள் பலன்படி ஆடு வளர்பவனிடம் இருந்தும் விற்பனிடம் இருந்தும் வெட்டுபவனிடம் இருந்தும் பிறகு உண்பவனிடம் இருந்து தன் கர்மாவினைகளின் பயனாக ஒவ்வொன்றாக குறைந்து விடுகிறது. ஆனால் ஆடு இங்கு வெட்டப்படும்போதே அதனுடைய உடலை பல உயிர்களுக்கு உணவாக கொடுக்கிறது அதுவும் ஒருவிதத்தில் புண்ணியத்தை தேடிக்கொண்டு தான் செல்லுகிறது. 

எந்த ஒரு உயிரும் அடிப்படையாக வாழ்வதற்க்கு ஒரு சில கர்மாக்களை செய்ய தான் வேண்டும் என்று கிருஷ்ணரே சொல்லியுள்ளார். நீங்கள் சுவாசிக்கும்போது ஒரு சில உயிர் இறக்க தான் நேரிடும். அது கர்மாவின் கணக்கில் சேராதான் செய்யும். 

இறைவனின் வட்டத்தில் உலகம் சுற்றிக்கொண்டு செல்லும். அந்த வட்டத்தில் ஒவ்வொரு கர்மாவாக நிறைவேற்றிக்கொண்டு ஒரு ஆத்மா பயணம் செய்துக்கொண்டுள்ளது அந்த வட்டத்தை பூர்த்தி செய்ய பல கோடி வருடங்கள் செல்லும். ஞானிகள் என்ன செய்வார்கள் அந்த வட்டத்தில் செல்லுகின்ற ஆத்மாவை செல்லும் வருடத்தை குறைத்து நேரிடையாக கடவுளிடம் சரணடைய வைப்பார்கள். இப்பொழுது ஞானிகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது ஆத்மாக்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. உங்களுக்கு குறுக்குவழியில் செல்லுவதற்க்கு நான் சம்பந்தப்பட்டவரை சந்தித்து அதற்கு தீர்வைக்கண்டு செல்லுங்கள் என்று சொல்லுகிறேன்.

சரி சித்தார்த்தன் என்பவன் நடு இரவில் தன் பொண்டாட்டி பிள்ளை களை விட்டு விட்டு ஓடி மகா பாவம் செய்தானே அவன் எப்படி ஞானம் பெற்று புத்தன் ஆனான் ? பாவி அல்லவா ஆகி இருக்க வேண்டும் ?

புத்தர் ஞானம் பெற்றபிறகு வந்து பார்த்த முதல் ஆள் யார் தெரியுமா? அவருடைய மனைவியை தான் முதலில் சந்தித்தார். அவர் மனைவிடம் அவர் சொன்னது நான் இங்கிருந்து சென்றது தவறு. உன்னுடன் இருந்துக்கொண்டே ஞானத்தை பெறலாம் என்று தான் கூறுகிறார். அவரே தெரியாமல் தான் செய்திருக்கிறார். 

கோபத்தால் ஒருவரய் நீங்கள் திட்டி காயபடுத்தினால்..... அந்த நபரை நீங்கள் தேடுவது வெட்டி வேலை ............ கோபம் எங்கே இருந்து வருகிறது என்று பாருங்கள் .....அது தான் பரிகாரம் ............ ஏன் என்றால் நீங்கள் கோபத்தால் ஆயிரம் பேரை மனதால் கொன்று இருக்கலாம் ......... ஆயிரம் பேரை தேடுவது வீண் வேலை .........கோபத்தை வெல்வது தான் முதல் வேலை :)

கோபத்தை வென்றால் கர்மாவை குறைக்கலாம் என்று சொல்லியுள்ளீர்கள். கசாப்புகடைக்காரனுக்கும் ஆட்டுக்கும் பங்காளி சண்டை இல்லை. அவன் நோக்கம் பணம் ஆட்டின் மீது கோபத்தை காட்டுவது அல்ல. 

வால்மிகி என்ற பாவி வேடன் எப்படி முனிவன் ஆனான் ?

வால்மிகி செய்த காரியங்களிலும் சில புண்ணியங்கள் இருந்திருக்கின்றன. கண்ணப்பநாயனார் சிவனை பார்த்தவுடன் வேறு எதையும் அவன் உண்ணவில்லை. வேறு எந்த தவறையும் அவன் செய்யவில்லை. அர்ப்பணிப்பு குணம் வந்துவிடுகிறது. அவர்கள் செய்த தவறு அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் செய்த தவறை கடவுள் ஏற்கிறார். நாம் என்ன செய்கிறோம் தெரிந்தே அனைத்து தவறும் செய்கிறோம்.

நண்பர்களே இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிருஷ்ணருக்கே பாடம் எடுத்திருக்கிறேன்  அல்லவா.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, February 27, 2013

பூர்வ புண்ணியம் 38



வணக்கம் நண்பர்களே!
                      ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் முன்ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று ஒவ்வொரு ராசியாக பார்த்தோம். இதனை நீங்கள் படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நபர் எங்கு இருக்கிறார் என்பதை நீங்கள் தேடி அறிந்துக்கொள்ளுங்கள். அவரை பார்த்துவிட்டு அவருக்கு நீங்கள் நல்லது செய்யும்போது மட்டுமே உங்களின் பூர்வபுண்ணியத்தின் பாவத்தை போக்கமுடியும்.

இது எல்லாம் இந்த நாகரீக வாழ்க்கைக்கு ஒத்துவருமா என்று நீங்கள் நினைக்கலாம். என்ன தான் நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதனுக்கு இறப்பு என்பது கண்டிப்பாக வந்தே தீரும். கடைசியில் இந்த வாழ்க்கை வீண் என்று வரும்பொழுது நினைக்காமால் இன்றே அதற்கான வழி என்ன என்று கண்டுபிடியுங்கள் கடவுள் கண்டிப்பாக கண் திறப்பான்.

இளைமையில் மனிதன் இருக்கும்போது நாம் இளமையில் இருக்கிறோம் அதனால் நமக்கு மரணம் வராது என்று நினைத்துக்கொண்டு இருப்பது. முதுமையில் மனிதன் இருக்கும்போது நாம் முதுமை அடைந்துவிட்டோம் அதனால் அதனைப் பற்றி நினைத்தால் பயம் வரும் அதனால் அதனை நினைக்காமல் இருப்பது இப்படி மனிதன் வாழ்க்கை போய்க்கொண்டுருக்கிறது.

உங்களின் மனைவிக்கு உங்களின் மகன் மகளுக்கு சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாது உங்களின் அடுத்தபிறப்புக்கு நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் என்று ஒரு நாள் சிந்தித்து பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு தெரியும் நாம் ஒன்றும் செய்யவில்லை. இதனை படித்துவிட்டாவது இன்று முதல் என்ன செய்யவேண்டும் என்று நினைத்து பாருங்கள்.

இந்த உலகத்தில் நீங்கள் சேர்த்து வைத்து ஒரு சொத்து எதுவும் உங்களின் பின்னாடி வராது. உடலில் இருந்து அரணாகயிறு கூட அறுத்துவிடுவார்கள் உங்களின் ஆத்மா மட்டுமே நீங்கள் செய்த நன்மை தீமைகளை சுமந்துக்கொண்டு செல்லும். நீங்கள் செய்த நன்மை என்ன என்று சிந்தித்து பாருங்கள் தீமை எது என்று சிந்தித்து பாருங்கள். அது மட்டுமே உங்களை பின் தொடரும். கர்மாவினையை தீர்க்க கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்துங்கள். மீண்டும் மனித ஜென்ம எடுக்க எத்தனை வருடங்கள் ஆகும் என்று உங்களுக்கு தெரியாது அதனால் எடுத்த மனித ஜென்மத்தை நல்ல முறையில் பயன்படுத்தும்போது உங்களை கடவுளை அரவணைத்துக்கொள்வார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மீனம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!

                     மீன ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

மீன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

தாயாருக்கு பிரச்சினையை கொடுத்திருப்பார்.

அடையாளம்?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். இவர் மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். இவர் அந்நியமொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு பக்கமாக இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருந்திருப்பார். தாய்மொழியை மீது அதிக ஈடுபாடு இருக்கும். இவரின் வீடு வடக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

குரு சந்திரன் வீட்டில் அமர்வதால் நீர் வழியில் பாதிப்பு ஏற்படுத்திருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

நீரில் தள்ளிவிட்டு மூச்சு திணறி செத்திருப்பார்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் தொடைகள் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கழுத்தில் அடிப்பட்டு செத்திருப்பார்.


நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

பரிகாரம்

குரு பகவானை வழிபட்டு வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கும்பம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!
                     கும்ப ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

கும்ப ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பெற்ற பிள்ளைகள் மாமன் மற்றும் பெருமாள் கோவிலில் வேலை செய்பவர்கள்.

அடையாளம்?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்க்கு பக்கமாக இருந்திருக்கும்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருந்திருப்பார்.அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

புதனின் வீட்டில் குரு அமருவதால் அவரை சூழ்ச்சி செய்து கொலை செய்திருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் பாதங்களில் தாக்கி உயிர்போயிருக்ககூடும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும். 

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம் 

புதன்கிழமை பெருமாள் மற்றும் குருவை வணங்கி வாருங்கள். நீங்கள் தேடும் நபர் கண்களில் தெரிவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Tuesday, February 26, 2013

மகரம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!
                     மகர ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

மகர ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கும் குருவுக்கும் ஆகாது. நன்றாக இருந்தாலே பிரச்சினை இதில் இருவருக்கும் சண்டை என்றால் அதிகமாக இருக்கும்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுத்திருக்க வேண்டும்.

அடையாளம்?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெள்ளை கலரில் இருந்திருக்கலாம். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

சுக்கிரனின் வீடு காமதொல்லை கொடுத்திருக்கலாம்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொல்லபட்டுருப்பார்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

முகத்தில் அல்லது வயிற்றில் தாக்கி அதன் மூலம் நோய் ஏற்பட்டு இறந்திருப்பார்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்
வெள்ளிக்கிழமையில் அம்மனை வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் கோவிலிலேயே அடையாளம் காணலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 






தனுசு ஐந்தில் குரு




வணக்கம் நண்பர்களே!
                     தனுசு ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

தனுசு ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். 

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாயின் வீட்டில் குரு அமருவதால் கோவில் வேதபண்டிதர்களுக்கு பிரச்சினை கொடுத்திருப்பார் மற்றும் சொந்த சகோதரனையும் பாதிக்கசெய்திருப்பார்.

அடையாளம்?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறம். பிற மொழிகளை நன்கு பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறம்போல் இருந்திருப்பார். மலையாள மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

வெட்டுகாயம் ஏற்படுத்தி அல்லது தீயால் காயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கைகளை துண்டித்து அதனால் ரத்தகாயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

மர்ம ஸ்தானங்களில் தாக்கி உயிரை எடுத்து இருப்பார்கள்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி அதன் மூலம் இரத்தம் வெளிவந்து கொல்லப்பட்டுருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம் 

செவ்வாய்கிழமையில் குரு பகவானை வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் காணலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

ஆன்மீக அனுபவங்கள் 72



வணக்கம் நண்பர்களே!
                     பெங்களுரில் ஒரு வீட்டிற்க்கு சென்றுருந்தேன். அந்த வீட்டில் உள்ள ஐயாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை தருகிறேன்.

அவர்: இந்தியா மிகப்பெரிய ஆன்மீகநாடு என்று சொல்லுகிறார்களே இதனால் என்ன முன்னேற்றத்தை இந்தியா அடைந்தது?

நான் : இந்தியா ஒரு முன்னேற்றத்தையும் ஆன்மீகத்தால் அடைந்ததில்லை. ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு திருடி சம்பாதிப்பதற்க்கு உள்ள வழிகளை கற்றுள்ளார்கள். இந்தியாவில் அந்த காலத்தில் இருந்து பல சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் அவர்களால் ஒன்றும் பெரிய அளவில் மாற்றம் வந்ததில்லை வரபோவதும் இல்லை.

நீங்களே பாருங்கள் திருப்பதிக்கு ஒரு நாள் ஒரு கோடி பணம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த பணத்தில் 75 சதவீதம் செலவு செய்தாலும் மீதி 25 சதவீதத்தை எடுத்து இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்க்கும் கொடுத்திருந்தால் இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமமும் அனைத்து வசதிகளையும் பெற்றுருக்கும். இதைப்போல் இந்தியாவில் உள்ள கோவில்களின் மொத்த வருமானத்தை பார்த்தால் எங்கேயே போய்விடும். நாம் இதனை செய்தோமா இல்லையே பிறகு எப்படி இந்தியா மேம்படும். 

இந்தியாவில் இருக்கும் நபர்கள். தன்னுடைய வருமானத்தில் கிள்ளி கொடுத்திருந்தால் இந்தியாவில் ஏழை என்பதே கிடையாது. மனிதனுக்கு தேவை ஆன்மீகம் கிடையாது. அவன் அவன் சம்பாதிக்க ஆன்மீகத்தை ஒரு கருவியாக வைத்துக்கொள்கிறார்கள். 

மனிதன் தான் செய்யும் தவறுக்கு ஒரு வடிகாலாக ஆன்மீகத்தை பயன்படுத்திக்கொள்கிறானே தவிர உண்மையான ஆன்மீகத்தை அவன் அடைய விரும்பவில்லை. 

அவர்:  இன்று கோவில்களில் கடுமையான கூட்டம் இருக்கிறது. எந்த விஷேசத்தையும் விடுவதில்லை இது மிகப்பெரிய மாற்றம் தானே?

இது மாற்றம் இல்லை அபத்தம் மனிதன் செய்யும் பாவங்களின் அளவுகோல் உயர்ந்துவிட்டது மனிதனுக்குள் நியாயம் என்பது செத்துவிட்டது அதனால் அவனுக்கு பயம் மிகப்பெரிய பிரச்சினை வந்துவிடுமோ என்று நினைக்கிறேன்.அந்த பயத்தால் அவன் சாமியை நாடிச்செல்லுகிறான்.

ஒரு உதாரணத்தை தருகிறேன் பாருங்கள் உங்களின் தந்தை காலத்தில் இருக்கும் நிலங்களை பார்த்தால் அந்த அந்த நிலத்திற்க்கு பட்டா இருக்காது நீ இந்த நிலத்தை வைத்துக்கொள் நீ இந்த குளத்துக்கு பக்கத்தில் இருக்கும் நிலத்தை வைத்துக்கொள் என்று வார்த்தையில் சொல்லி நிலத்தை வைத்திருப்பார்கள். 

இன்று நிலைமை என்ன  ஒவ்வொரு நிலத்திற்க்கும் பத்து பட்டா வைத்துள்ளார்கள். இது பத்தாது என்று மூன்று போலி பட்டாவையும் தயாரித்து வைத்துக்கொண்டு அவன் அவன் சொந்தம் கொண்டாடுகிறான். மனிதனிடம் நியாயம் என்பது செத்துவிட்டது அதனால் தான் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது ஆரோக்கிய விசயம் கிடையாது அபத்தம் தான். தான் செய்யும் தவறுக்கு ஆன்மீகம் துணை வேண்டும். அப்படி துணை வரும் ஆன்மீகம் தான் அவர்களுக்கு பிடிக்கும். 

இதில் ஆன்மீகத்தை கொடுப்பவனை தவறு சொல்லமுடியாது. மக்களுக்கு என்ன தேவையோ அதனை அவன் செய்வான். அப்பொழுது மட்டுமே அவனால் குப்பை கொட்டமுடியும்.

அவர் :நீங்கள் சொல்லும் கருத்தை புத்தர் சொன்னார். அவர் சொன்ன போதனையை நாட்டை விட்டே துரத்திவிட்டார்கள். ஏன் என்றால் திருட்டுதனத்தை செய்யமுடியாது. அவர் சொன்ன கருத்தை பின்பற்றும் நாடுகள் இன்று நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

நான் :புத்தர் சொல்லுவதை வைத்து தனிமனிதன் சம்பாதிக்கமுடியாது. இந்தியாவில் தனிமனிதன் சம்பாதிக்க வேண்டும் அதற்கு தேவையான மதத்தை மட்டுமே வைத்திருப்பார்கள். புத்தரை துரத்திவிட்டார்கள்.

அவர் :அனைவருக்கும் அனைத்தும் தெரிகிறது இது நல்ல விசயம் இது கெட்ட விசயம் என்று தெரிகிறது பிறகு ஏன் அனைவருக்கும் நல்ல விசயத்தை பிடிக்கமாட்டேன்கிறது. 

நான் :இந்தியாவின் தலைவிதி. 

அவர் : அப்படி என்ன விஷேச தலைவிதி.

நான் : இந்தியா அமைந்திருப்பது சனியின் ராசி. சனி கிரகம் திருட்டுதனத்தை காட்டக்கூடிய கிரகம். திருடனை போய் போலீஸ் வேலை பார்க்க சொன்னால் எப்படி இருக்கும். இவன் தொழிலே திருடுவது. மக்கள் மட்டும் என்ன நீதிமான்களாக இருப்பார்கள். திருட்டுதனமாக தான் இருப்பார்கள்.

அவர் :என்ன இப்படி சொல்லுகிறீர்கள்.

நான் : நானும் திருடன், நீங்களும் திருடன் சுற்றி இருப்பவர்களும் திருடர்கள். நாடு எப்படி முன்னேற்றம் அடையும். திருடுவதில் முன்னேற்றம் வேண்டுமானால் நடைபெறலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

விருச்சிகம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!
                     விருச்சிக ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

விருச்சிக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. குரு சொந்த வீட்டில் அமருகிறார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

குருவின் வீட்டில் குரு அமருவதால் கோவில் மற்றும் வேதபண்டிதர்களுக்கு பிரச்சினை கொடுத்திருப்பார்.

அடையாளம்?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

குரு சொந்த வீட்டில் இருப்பதால் ஏமாற்றி அவரை கெடுத்திருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொன்றுருக்ககூடும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால் 

கழுத்து பகுதியில் காயப்படுத்தி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

வியாழகிழமை குருவை வணங்கிவாருங்கள். சரியான நபரை அடையாளம் காணலாம்.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

துலாம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!
                     துலாம் ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

துலாம் ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. சனியின் வீட்டில் குரு அமருகிறார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சனியின் வீட்டில் குரு அமருவதால் கோவிலில் வேலை செய்தவர்களுக்கு கெடுதல் செய்திருப்பார்.

அடையாளம்?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார்.இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

சனியின் வீட்டில் குரு அமர்வதால் வீண்பழி சுமத்தி அவரை கெடுத்திருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால் 

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு இறந்திருக்ககூடும்.

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுபட்டு கொன்றுக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் சத்ய சாயி பாபா மற்றும் குருவை வணங்கிவாருங்கள் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவார்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

பரிபூரண வட்டம்



வணக்கம் நண்பர்களே !
                 இரண்டு நாட்கள் உங்களின் ஆத்மாவின் பசிக்கு உணவை நான் தரவில்லை இன்று நல்ல விருந்துடன் கொடுத்துவிடலாம் என்று ஒரு நல்ல கருத்தை தருகிறேன்.

ஒரு மனிதனுக்கு நல்ல வேலை கை நிறைய சம்பளம். இருக்க நல்ல வீடு. அன்பான மனைவி. குழந்தைகள். வெளியில் சென்று வர சொகுசு கார் இப்படி ஏகாப்பட்டதை அமைத்துக்கொடுத்திருக்கிறான் இறைவன். வாழ்க்கையும் அமைதியாக தான் சென்றுக்கொண்டு இருக்கிறது இருந்தும் சம்திங் மிஸ்ஸிங் உடலில் போட்டு வாட்டி எடுக்கிறது. எதையோ ஒன்றை தேடிக்கொண்டுருக்கிறது. எதை தேடுகிறது, என்ன நடக்கிறது.பயமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால்

அது தான் ஆத்மாவின் தேடுதல். நீங்கள் இதுவரை தேடியது அனைத்தும் உங்களின் சதைக்கு தேடிக்கொண்டு இருந்தீர்கள். உங்களின் ஆத்மாவிற்க்கு ஒன்றும் தேடவில்லை. உங்களின் ஆத்மாவிற்க்கும் தேடி உங்களின் சதைக்கும் தேடி இருந்தீர்கள் என்றால் உங்களின் வாழ்க்கை நிம்மதியாக சென்றுக்கொண்டுருக்கும். நாம் சதைக்கு தேடி தேடி அலைந்து ஏதோ அலுத்துபோய் கடைசியில் ஆத்மாவிற்க்கு தேடினால் உங்களால் பரிபூரண வாழ்வை அடையமுடியாது. 

இதனை நீங்கள் உணர்ந்தாலே போதும். நாம் வந்தகாலை விட்டுவிட்டு பந்தகாலை பிடித்துக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியவரும். இந்த எண்ணங்கள் இளம்வயதில் வந்தது என்றால் நல்லது. வயது சென்றவுடன் வந்து என்றால் அந்த வாழ்க்கை வீண் என்று உங்களுக்கு தெரியவரும். இப்படிபட்ட வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்று தெரியவரும்.  

நாடி நரம்புகள் ஓய்ந்து ஒடிந்துவிட்ட பிறகு என்ன செய்யமுடியும் நொந்துக்கொண்டு இருக்கவேண்டியது தான். உங்களின் விதி என்று ஏற்றுக்கொள்ளவேண்டியது. 

இப்படிபட்ட சூழ்நிலையிலும் நீங்கள் எதையாவது செய்யமுடியுமா என்று உங்களின் ஆத்மா என்னிடம் கேட்கிறது. உங்களின் மனம் கேட்டால் கண்டிப்பாக வில்லங்கமாக அது இருக்கும் உங்களின் ஆத்மா கேட்பது நியாயமாக இருக்கிறது அதனால் அப்படி கேட்கிறது. அதற்கு என்னுடைய ஆத்மா எதையாவது உங்களுக்கு செய்யும். 

இந்த தேடுதல் என்பது அனைவருக்கும் வந்துவிடாது. ஒரு சிலருக்கு வரும் ஒரு சிலருக்கு நீங்கள் என்ன செய்தாலும் வராது. உங்களின் தேடுதலுக்காக என் ஆத்மா செய்யும் ஒரு எளிய பரிசோதனை செய்து பாருங்கள்.

நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் செய்யவேண்டியது இது ஒன்று தான். நீங்கள் ஜாதககதம்பத்தை தொடர்ந்து ஒரு வாரம் படியுங்கள். ஒரு நாள் விட்டுவிடுங்கள் அந்த ஒரு நாளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் ஏதும் நடைபெறவில்லை என்றால் மறுநாள் படிக்காதீர்கள் அன்றும் ஒன்று நடக்கவில்லையா என்று பாருங்கள் கண்டிப்பாக நீங்கள் எப்படியாவது படிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்களின் ஆத்மா பரிபூரணமான அந்த இறுதிவட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இறுதிவட்டத்தை நோக்கி செல்லும் ஆத்மாவால் மட்டுமே நான் எழுதுவது ஆத்மாவர்த்தமாக புரியும் நிலை ஏற்படும். இதில் ஒரு சில ஆத்மாக்கள் அந்த இறுதிவட்டத்தை சும்மா பார்த்துவிட்டு அப்படியே திரும்பிவிடும் அந்த வட்டத்தில் இணையாது. 

நீங்கள் ஜாதககதம்பத்தை படிக்கமுடியாமல் இருக்கமுடிகிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் தேடவேண்டியது வேறு இடம். ஜாதககதம்பத்தை படிக்கமுடியாமல் இருக்கமுடியவில்லை என்றால் நீங்கள் வரவேண்டிய இடத்திற்க்கு சரியாக வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். என்னுடைய ஆத்மா பரிபூரணவட்டத்தை நெருங்கிவிட்டது நாம்  வாழ்கின்ற வாழ்க்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

சரியா நண்பர்களே நீங்கள் சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் எந்த இடத்தில் நீங்கள் இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, February 23, 2013

பரிகாரம்



வணக்கம் நண்பர்களே !
                     நமது நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு சோதிட பலனை கேட்பார்கள் அப்பொழுது அதற்கான பரிகாரத்தையும் கேட்பார்கள். நான் சொன்னவுடன் அதனை செய்கிறார்கள். இந்த பரிகாரத்தை செய்து முடித்து ஒரு மணி நேரத்தில் எனக்கு போன் செய்து எப்பொழுது நடக்கும் என்று கேட்பார்கள். 

மனிதன் ஒரு செயலை நேரிடையாக செய்தாலே உடனே நடக்காது. கடவுள் மூலம் செய்தால் உடனே நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்க்கும் நாட்கள் தேவை. அதைவிட நமது பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கவேண்டும். பூர்வபுண்ணியம் பிரச்சினை கொடுத்தால் நமக்கு கெடுதல் நடைபெறும். பரிகார பலன் உடனே நடைபெறாது. காலம் தாழ்த்தி தான் நடைபெறும். நான் கொடுக்கும் பரிகாரம் செயல்படும் ஆனால் அதற்கு நேரம் தேவை.

ஒரு மனிதனுக்கு கொஞ்சம் பணத்தை பார்த்துவிட்டான் என்றால் சும்மா இருக்கமாட்டான். அதுவும் பூர்வபுண்ணியம் கெட்ட மனிதன் அதைவிட மோசமாக இருப்பான். எங்கு சாமியார் இருக்கிறானோ அல்லது சோதிடக்காரன் இருக்கிறானோ அங்கு போய் வம்பு இழுப்பது. அவர்களின் சாபத்தை வாங்கிக்கட்டிக்கொள்வது இப்படி பல பேர் இருக்கிறார்கள்.நீங்கள் எந்த நேரமும் பணம் பணம் என்று எண்ணுகிறீர்கள். அவர்கள் எந்த நேரமும் கடவுள் கடவுள் என்று நினைப்பவர்கள். நீங்கள் நினைப்பது சுயநலம் அவர்கள் நினைப்பது பொதுநலம்.அவர்களுக்கு நீங்கள் தீங்கு இழைக்கும் போது எங்கு போய் பரிகாரம் செய்தாலும் எடுபடாது. 

ஒரு சில பேர் இன்னும் கூடுதலாக போய் கோவில் காரியங்களில் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்துவது. மனிதனுக்கு செய்யும் பிரச்சினையை தீர்ப்பதே பெரும் பாடு இதில் கடவுளுக்கு செய்யும் பிரச்சினை எங்கு போய் தீர்ப்பது. 

நீங்கள் செய்யும் செயல் அனைத்தையும் நன்றாக யோசித்து செய்யுங்கள் அடுத்தவர்களுக்கு சிறிதும் பிரச்சினையை தரகூடாது என்று எண்ணி செய்ய வேண்டும். நீங்கள் தனி ஆட்கள் கிடையாது உங்களின் குடும்பம் இருக்கிறது சொத்து சேர்த்துக்கூட உங்கள் குடும்பத்திற்க்கு கொடுக்கவேண்டாம் பாவத்தை சேர்த்து உங்களின் குடும்பத்திற்க்கு கொடுத்துவிடாதீர்கள்.பாவத்தை சேர்த்துக்கொடுத்தால் உங்களின் குடும்பத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது

நண்பர்களே நாளை பதிவு வெளியிடமுடியாத சூழ்நிலை இருப்பதால் திங்கள்கிழமையில் இருந்து பதிவு வெளிவரும். நாளை பெங்களுரில் இருப்பேன். பெங்களுரில் என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் நாளை மாலையில் சந்திக்கலாம்.  Cell no 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கர்மவினை


வணக்கம் நண்பர்களே!
                     நாம் பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் கர்மவினையை பற்றி பார்த்தோம் அல்லவா. நீங்கள் அனைவரும் சோதிடர்கள் நீங்கள் ஜாதகம் பார்க்கும்போது ஒரு ஜாதகம் வந்தால் உடனே எடுத்து கணக்குபோட்டு நீங்கள் படித்து வைத்திருக்கும் பலனை அப்படியே சொல்லிவிடுவீர்கள். அப்படி சொல்லுவது கூடாது.

ஒரு ஜாதகத்தை எடுத்தோம் என்றால் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்து பலனை சொல்லவேண்டும். கணக்கை விட சுற்றி நடக்கும் சூழ்நிலை அதிகமாக உணர்த்தும். பலன் கேட்க வந்தவர்கள் திருமணம் நடக்குமாக என்று கேட்டாள். நீங்கள் கணித்து பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அப்பொழுது யாராவது ஒருவருடை செல்போனில் மணி அடித்தால் நீங்கள் நடக்கும் என்று சொல்லிவிடலாம். அது அப்படியே நடந்துவிடும்.

ஒரு ஜாதகத்தை கையில் எடுக்கும்போதே உங்களின் உடலில் மாறுதல் ஏற்படும். அவர்களின் கர்மா உங்களை தாக்கும். ஒரு சில ஜாதகங்களை பார்க்கும்போது நாள் முழுவதும உடல் வலி ஏற்படும் அது ஏன் என்றால் அவர்களின் ஜாதகத்தின் கர்மாவின் தாக்குதல் உங்களுக்கு வருவதால் அப்படி நடக்கிறது. இதை ஒன்றை வைத்தே கர்மாவை தொலைக்க தான் ஒருவன் மனித பிறப்பு எடுத்து இருக்கிறான் என்று நாம் நம்பலாம்.

ஒரு சிலருக்கு நான் சோதிடம் பார்க்கும்போது பரிகாரம் கேட்பார்கள் நான் சிந்தனை செய்து சொல்லுகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுவேன். எனது நண்பர்கள் எல்லாம் ஏன் இப்படி சொல்லுகிறாய் எப்படி வாடிக்கையாளர் வருவார்கள் ஏதாவது சொல்லவேண்டியது தானே என்பார்கள். கர்மாவின் வினையை அவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. நான் சொல்லி அந்த கர்மாவை நான் வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை என்று சொல்லுவேன்.

நீங்கள் ஜாதகம் பார்க்கும்போது கூட இவ்வாறு அனைத்தையும் பார்த்து பலனை சொல்ல ஆரம்பியுங்கள். சும்மா அனைத்து விதிகளையும் படித்துவிட்டு நாம் கடவுள் மாதிரி நினைத்துக்கொண்டு பலனை சொல்ல நினைக்காதீர்கள்.

சோதிடம் பார்ப்பது ஒரு மோசமான வேலை தான். நமது ஆத்மா நல்ல சக்தியுடன் இருந்தால் மட்டுமே சோதிடம் பார்ப்பதால் எந்த பிரச்சினையும் நமக்கு ஏற்படாது. சக்தியை கூட்டுவதற்க்கு பல வேலைகளை நீங்கள் செய்யவேண்டும். அப்பொழுது மட்டுமே சோதிடம் சாத்தியப்படும்.அனைத்தும் கர்மாவை வைத்து தான் நடைபெறுகிறது

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, February 22, 2013

கன்னி : ஐந்தில் குரு


வணக்கம் நண்பர்களே !
                     கன்னி ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

கன்னி ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. சனியின் வீட்டில் குரு அமருகிறார் அதுவும் நீசமாக அமருகிறார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சனியின் வீட்டில் குரு அமருவதால் கோவிலில் வேலை செய்தவர்களுக்கு கெடுதல் செய்திருப்பார்.

அடையாளம்?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். இவர் சமஸ்கிருத மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்ந்திருக்கும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

ஆட்களோடு நிறம் நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். இவர் தாய்மொழி எதுவோ அதனை மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் அமர்ந்திருக்கும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் தாய்மொழி மற்றும் தெலுங்கு மொழி பேசியிருப்பார்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

சனியின் வீட்டில் குரு அமர்வதால் கடுமையான சித்திரவதை செய்திருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இருப்பீர்கள் ?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

முகம் வயிறு போன்ற இடங்களில் தாக்கி அதனால் நோய்ப்பட்டு இறந்திருக்ககூடும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மகர ராசி உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

குரு பகவானை வழிபட்டு வாருங்கள் சனிக்கிழமை அன்று அவர் உங்களை நாடிவருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

சிம்மம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே !
                      சிம்ம ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

குரு தனது சொந்த வீட்டில் அமருகிறார். சொந்த வீட்டில் அமர்வதால் விட்டுவிடுவாரா கெடுதலை தருவார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

கோவிலில் உள்ள குருக்கள் மற்றும் வேதம் தெரிந்தவர்களுக்கு கெடுதல் செய்திருப்பார்.

அடையாளம்?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் சிகப்பு நிறமாக இருந்திருப்பார். அந்நிய மொழி பேசி இருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருப்பார்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல கலராக இருப்பார். இவர் மலையாள மொழி பேசிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பாக இருப்பார். அவர் தாய்மொழி மற்றும் சமஸ்கிருத மொழி பேசி இருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

குருவின் வீட்டில் குரு அமர்வதால் அவரை ஏமாற்றி இருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கை தோள்களில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

மர்மஸதானத்தில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குருவிற்க்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வாருங்கள் அந்த நபர் உங்களை தேடிவருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கடகம் : ஐந்தில் குரு




வணக்கம் நண்பர்களே !
                      கடக ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

குரு விருச்சிக லக்கனத்தில் செவ்வாயின் வீட்டில் அமருகிறார். செவ்வாய் ஒரு சண்டைக்கிரகம். சண்டை போட்டுக்கொண்டுதான் பிரச்சினை கொடுத்திருப்பார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பிராமணர் சொந்த சகோதரர்களுக்கு கெடுதல் செய்திருப்பார்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

ஆயுததால் தாக்கியிருப்பீர்கள்.

அடையாளம்?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். நடுத்தர உயரமாக இருப்பார். தாய்மொழி மற்றும் மலையாளம் பேச தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் கருப்பாக இருப்பார்.குள்ளமானவராக இருப்பார். அந்நிய மொழி பேசுவார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார்.உயரமானவராக இருந்திருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் குரு அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுப்பட்டு இறந்திருக்ககூடும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு கொன்றுருக்ககூடும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு உயிர் போயிருக்கும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு  மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

செவ்வாய்கிழமையில் குருவை வணங்கிவாருங்கள் சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, February 21, 2013

மிதுனம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே !
                      மிதுன ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

குரு சுக்ரனின் வீடான துலாத்தில் அமருகிறார். எப்பொழுதும் குருவுக்கும் சுக்கிரனுக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை. இருவருக்கும் எப்பொழுதும் பிரச்சினை. ஐந்தில் அமர்ந்தால் பிரச்சினை அதிகமாக தான் இருக்கும். 

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பிராமணர் வேதத்தை கற்றவர். சுக்கிரன் வீடு என்பதால் பெண்களுக்கும் பிரச்சினையை கொடுத்திருப்பார். பெண்களாக இருந்தால் கந்தர்வர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

இருவருக்கும் எதிரும் புதிருமாக இருந்திருக்கும் அதனால் பிரச்சினையை கொடுத்து இருப்பீர்கள்.

அடையாளம்?

துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.உயரமானவாராக இருந்திருப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு தெற்கு திசையில் அமைந்திருக்கும்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். உயரமானவராக இருக்ககூடும். அந்நிய மொழி பேச தெரிந்திருக்ககூடும். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும். 

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். கன்னடம், மலையாளம் மொழிகள் தெரிந்திருக்கும். நடுத்தர உயரம் இருந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் குரு அமர்ந்தால்

கை தோள் மற்றும் மர்ம ஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

தொடை பாதம் கணுக்கால் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் குரு அமர்ந்தால்

இதயம் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கில் மற்றும் வடகிழக்கு இருப்பார். 

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து வடகிழக்கு திசையில் இருப்பார். 

பரிகாரம்

வியாழகிழமை தோறும் குருவை வழிபட்டு வாருங்கள் அந்த நபரை அடையாளம் காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.