Followers

Sunday, August 31, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                                                     காலையிலேயே பதிவை தந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வெளியில் சென்றுவிட்டேன். திரும்பிவந்தவுடன் உங்களுக்கு பதிவை தந்துவிடவேண்டும் என்று ஆரம்பித்துவிட்டேன்.

என்னிடம் ஏதாவது ஒரு வேலையை செய்ய சொல்லி கேட்டால் நான் அம்மனை வைத்து தான் வேலையை வாங்குவேன். அப்படி அம்மனை எனது இடத்தில் இருந்து அனுப்பும்பொழுது நடக்கும் விசயம் மிகப்பெரிய விந்தை.

அம்மன் வந்தவுடன் மிகப்பெரிய அளவில் வெப்பம் உருவாகும். அந்த வெப்பம் நன்றாக கண்களுக்கு தெரியும். நாம் அதனை வெளியில் அனுப்பும்பொழுது அப்படியோரு வெப்ப அனலாக வெளியில் செல்லும். இதனை எனக்கு வீட்டிற்க்கு அருகில் உள்ளவர்களே பார்த்து இருக்கிறார்கள்.

நான் அவர்களிடம் சும்மா விளக்கு ஏற்றியதால் அனல் வெளியில் செல்லுகிறது என்று சொல்லுவேன். உண்மையில் அம்மன் வெப்பமாக வெளியில் செல்லும். அம்மனை நம்பினால் கண்டிப்பாக நமக்கு அது காட்டிக்கொடுக்கும்.

நல்ல நம்பிக்கையோடு இருந்து அம்மனை வணங்கினால் உங்களுக்கு அதுபோல் உதவி செய்வது வேறு எதுவும் கிடையாது. நமது பதிவில் வரும் நண்பர்களுக்கு அம்மனின் அருள் என்ன என்று தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment: