Followers

Thursday, May 14, 2015

குலதெய்வம்


வணக்கம்!
          எந்த ஒரு சோதிடத்திரை நீங்கள் சந்தித்து பலனை கேட்டாலும் அந்த சோதிடர் சொல்லும் வார்த்தை உங்களின் குலதெய்வத்தை வணங்குங்கள் என்று சொல்லுவார்.

ஜாதகத்தில் இருந்து வரும் எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்குவது உங்களின் குலதெய்வமாக இருக்கும். உங்களின் குலதெய்வம் உங்களுக்கு அருளை வழங்கவில்லை என்றால் உங்களால் எந்த ஒரு காரியத்தை வெற்றியுடன் செய்து முடிக்கமுடியாது.

ஒவ்வொரு குலதெய்வத்திற்க்கும் அந்த குலத்தின் வழிப்படி ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்யப்படும். அந்த குல தெய்வத்தின் வழக்கப்படி எந்த மாதமும் அதற்கு உகந்ததோ அந்த மாதத்தில் அதனை செய்வார்கள். 

குலதெய்வத்தின் பூஜையின் பொழுதுதான் அந்த நமது மனிதர்கள் அவர்களின் கோபத்தை காட்டுவார்கள். பங்காளிக்குள் சண்டை ஏற்பட்டு இருக்கும் அதனை காரணம் காட்டி குலதெய்வத்தின் பூஜையை தடுக்க நினைப்பார்கள். 

இந்த காலத்தில் மனிதன் தன் வேலையை தவிர பிற செயலை தடுக்கும் வேலையில் தான் அதிகம் செய்வார்கள். இந்த மாதிரியான கீழ்தனமான வேலையில் நீங்கள் ஒரு பொழுதும் ஈடுபடாதீர்கள். உங்களின் கடமை அந்த பூஜை நல்ல முறையில் நடைபெறவேண்டும் என்பதில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி ஈடுபட்டால் உங்களின் வாழ்வு மேம்படும். குலதெய்வத்திற்க்கு உண்டான பச்சைப்பரப்புதலை செய்து வருகிறீர்களா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

shanthi shri said...

Matham 1 murai seykiren