Followers

Sunday, December 13, 2015

பாக்கியஸ்தானமும் சுக்கிரனும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்த்தோம் அதில் ஒரு தொடர்ச்சியாக இந்த தகவலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாக்கியஸ்தானதில் சுக்கிரன் இருக்கும் நபர்களை பார்த்தால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். சொகுசு வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் நினைப்பது போலவே அவர்களுக்கும் அப்படிப்பட்ட வாழ்க்கை அமையும்.

சுக்கிரன் என்பதால் பெண்களை குறிக்கும் கிரகம் என்பதால் பெண்களின் வழியில் அதிக மோகத்தை கொடுக்க கூடிய வழியில் செயல்பாடு இருக்கும். மூன்றாவது வீட்டு அதிபதி தொடர்பு இருந்தால் தம்பியின் மனைவியிடம் தொடர்பு இருக்கும். தம்பியின் மனைவியை காட்டும் இடமும் இந்த பாக்கியஸ்தானம் என்பதால் அப்படிப்பட்ட தொடர்பு இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்லவிதமான தொடர்பும் இருக்கும்.

சுக்கிரனோடு ராகு கிரகம் சேர்ந்து ஒன்பதாவது வீட்டில் அமர்ந்தால் வெளிநாடுகளுக்கு சென்று கூட சொகுசுவாழ்வை வாழ்வார்கள். ராகுவும் சுக்கிரனும் சேரும்பொழுது பெண்களாக இருந்தால் அவர்கள் அதிகம் சுற்றும் நபர்களாக இருப்பார்கள். அதிகமான ஆண்கள் தொடர்பை வைத்திருப்பார்கள்.

சுக்கிரனோடு சனி சேர்ந்தால் ஒரு சிலர் காலபைரவரை வணங்குபவர்களாக இருப்பார்கள். இவர்களின் பயணம் தாழ்த்தப்பட்ட சமூகம் வாழும் இடமாக இருக்கும். அப்படி இல்லை என்றால் அதிகமான மக்கள் கூட்டாக வாழும் இடத்திற்க்கு கூட பயணம் இருக்கும். இதே அமைப்பு வெளிநாட்டில் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் இந்தியாவிற்க்கு வருவார்கள். 

சனியும் சுக்கிரனும் சேருவது அந்தளவுக்கு நல்லதல்ல என்பார்கள். அதிகமான குடிபழக்கத்திற்க்கு அடிமையாகிவிடுவார்கள் என்று சொல்லுவார்கள். அனுபவத்திலும் ஒரு சிலர் அப்படி இருக்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் விதவையோடு கூட தொடர்பு வைத்திருப்பார்கள்.

சுக்கிரனோடு புதன் சேர்ந்து இருந்தால் அவர்கள் கல்வியில் நல்ல புலமையோடு இருப்பார்கள். இசையில் வல்லுனர்களாக கூட இருக்கலாம். ஏதாவது ஒரு இசை கருவியில் நிபுணத்துவம் இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: