Followers

Friday, January 30, 2015

பணம் தானம்


வணக்கம் நண்பர்களே!
                      வாங்கி கட்டிய வரம் பகுதியில் கடனைப்பற்றி சொல்லிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு. கடன் வாங்கினால் கண்டிப்பாக திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லிருந்தேன். அதனை படித்துவிட்டு பல நண்பர்கள் நாங்கள் கொடுத்தே ஏமாந்துவிட்டோம் என்றும் என்னிடம் சொன்னார்கள்.

பல இடத்தில் கொடுத்தவன் தான் கஷ்டப்படவேண்டும். வாங்கியவன் அவன் போகின்ற போக்கில் போய்விடுகிற நிலையும் ஏற்படுகிறது. பொதுவாக ஏழைகளாக இருந்தால் போய் தொலைகிறான் என்று விட்டுவிடுங்கள். பணம் வைத்துக்கொண்டு ஏமாற்றினால் கண்டிப்பாக அவரை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். நான் சொல்ல வந்த விசயத்திற்க்கு வந்துவிடுகிறேன்.

இன்று வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் நல்ல முறையில் இருப்பார்கள். வட்டி வாங்க கூடாது என்று அனைத்து மதங்களும் சொன்னாலும் வட்டி விடுபவர்களை பார்த்தால் மிக மிக நன்றாக இருப்பார்கள். வட்டி விடுபவர்களின் குழந்தைகள் மிக உயர்ந்த பள்ளியில் படிக்க வைப்பார்கள். அவர்கள் தனி வீடு கட்டுவார்கள் அவர்களின் குழந்தைகளுக்கு இளம்வயதில் திருமணம் நடைபெறும். இது எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று பார்த்தால் ஒரு சில விசங்கள் உங்களுக்கு புரியவரும்.

வட்டி வாங்கும் நிலை ஒருவருக்கு ஏற்படும்பொழுது அவன் மிக சிக்கலான அதே நேரத்தில் ஒரு இக்கட்டான ஒரு நிலையில் இருப்பான். அந்த நேரத்திற்க்கு வட்டிக்கொடுப்பவர் பணம் கொடுக்கும்பொழுது அவனை அறியாமலேயே அவன் வாழ்த்துகிறான். அப்பாடா தப்பித்தேன் என்று அவன் உள்ளம் குளிர்கிறது. 

ஒரு சில வட்டிக்கடைக்காரர்கள் பாதிப்படைவது பல ஏழைகளை கடுமையாக தாக்கிவிடும்பொழுது பாதிப்படைவார்கள். பணத்தை பல மடங்காக அதாவது மீட்டர் வட்டிப்போல் கேட்கும்பொழுது பாதிப்பு வருவது நடைபெறுகிறது. 

வட்டி விடுவது நல்லது என்று நான் சொல்லவில்லை. நடைமுறையில் நடப்பதை மட்டும் சொன்னேன். வட்டி விடுவதை விட பணம் கொடுத்து உதவி செய்வது நல்லது. இன்றைய காலத்தில் அன்னதானத்தை விட பணம்தானம் செய்தால் மிக மிக நல்லது என்று சொல்லுவேன். சரியான நபருக்கு சரியான பணம் தானம் செய்தால் நல்ல புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த பகுதியில் நான் சொல்லவிரும்புவது கடன் பட்டு கஷ்டப்பட்டு இருப்பவர்கள் நல்ல நிலைமைக்கு நீங்கள் வரும்பொழுது நீங்கள் பிறர்க்கு பண உதவி செய்யுங்கள். 

நாளை திருநள்ளார் கோவிலுக்கு சென்று வரலாம் என்று ஒரு ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. திருநள்ளார் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் உள்ள ஒரு சில கோவில்களை தரிசனம் செய்வதாக திட்டம் இருக்கிறது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

யோகம் வரும் நிலை


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று காலையில் அம்மன் கோவிலில் சில வேலைகள் இருந்தன அதனை முடித்துவிட்டு அதன் பிறகு ஆலங்குடி குருஸ்தலத்திற்க்கு சென்று வந்தேன். வீடு திரும்பியது இரவு நேரம் ஆகிவிட்டதால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. ஆலங்குடி குரு ஸ்தலம் எங்களின் வீட்டில் இருந்து சரியாக 50 கிலோ மீட்டர் உள்ளது. மிக பிரசித்திப்பெற்ற கோவில் எல்லாம் உங்களின் ஊரில் இருந்து மிக குறைவான தூரத்தில் தான் இருக்கின்றன.

நமது நண்பர்கள் அதுவும் சிங்கபூரில் இருக்கும் நண்பர்களாக இருந்தால் அவர்கள் என்னிடம்  நம்பர் எடுத்து தருவீர்களா என்று கேட்பது வழக்கம். நம்பர் என்றார் லாட்டரி சீட்டிற்க்கு நம்பர் எடுத்து தாருங்கள் என்று கேட்பார்கள்.

அம்மனிடம் கேட்டு நம்பரை வாங்கிக்கொடுங்கள் என்று கேட்பார்கள். அதிகமான பணத்திற்க்கு ஆசைப்பட்டு இப்படி எண்ண தோன்றுகிறது. நான் அம்மனிடம் இதுவரை எந்த ஒரு விசயத்திற்க்காகவும் கேள்வி கேட்டதில்லை என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னிடம் வருபவர்களுக்கு நல்லதை செய்துக்கொடு என்று ஒரு விண்ணப்பம் வைப்பேன். அதற்க்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்கும்.

லாட்டரி சீட்டு எந்த ஒரு திடீர் லாபம் எல்லாம் நமது பூர்வபுண்ணியத்தில் இருந்து வருவது மட்டுமே. பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் லாட்டரி எல்லாம் அடிக்கும். பூர்வபுண்ணியம் சரியில்லை என்றால் லாட்டரி அடிக்காது. பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியாதிபதி இரண்டும் நன்றாக இருந்தால் நீங்கள் லாட்டரி அதனை சார்ந்த விசயங்களில் ஈடுபடுங்கள். நம்பர் எல்லாம் நான் எடுத்துக்கொடுப்பதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, January 28, 2015

வாங்கி கட்டிய வரம்


வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் வரும் நண்பர்களுக்கு என்னால் முடிந்தளவு அம்மனை வைத்து உதவி செய்து இருக்கிறேன். நம்மிடம் பணம் என்பதை விட வரும் நபர்கள் பயன் பெறவேண்டும் என்பதை தான் முதல் நோக்கமாக இருக்கும். வரும் நண்பர்கள் அனைவருக்கும் நடந்துவிடாது. என்ன தான் அம்மனை வைத்து நான் செய்தாலும் ஒரு சிலருக்கு தோல்வியை தழுவும் என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்வேன்.

ஏன் ஒருவருக்கு நடைபெறவில்லை என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஒரு சில உண்மைகள் வெளிவரும் அதனைப்பற்றி ஒரு பதிவில் சொல்லிருக்கிறேன். வாங்கி வந்த வரம் வாங்கி கட்டிய வரம் என்பதை சொல்லிருக்கிறேன்.

வாங்கி கட்டிய வரம் 
கடன்
     ஏதோ ஒரு தேவைக்கு நாம் கடன் வாங்கிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவும் நமது பூர்வபுண்ணியம் என்றாலும் இந்த ஜென்மத்தில் நமக்கு தேவையான ஒரு சில விசயங்களுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கடன் வாங்கி விட்டு நம்மால் திருப்பிக்கொடுக்க முடியாத ஒரு நிலை ஏற்படும்பொழுது அது நமக்கு சிக்கலை உருவாக்கிவிடுகிறது. எப்படிப்பட்ட சிக்கல் என்பதை பார்க்கலாம்.

கடன் வாங்கினால் நமக்கு பிறரின் தோஷம் ஏற்படாது. பிறரின் எண்ண தாக்குதல் நம்மீது இருந்துக்கொண்டே இருக்கும் அப்படி எண்ண தாக்குதல் இருந்தால் நம்மால் உருபடியாக ஒன்றும் செய்யமுடியாது. பத்து பேரிடம் கடன் வாங்கிவிட்டால் இந்த பத்து பேரின் எண்ணமும் நம்மீது விழுந்தால் நாம் நிம்மதியாக இருந்துவிடமுடியாது. நாம் என்ன தான் கோவில் குளங்கள் சுற்றினாலும் நம்மால் எழுவது கடினமாகவே இருக்கும்.

கடன் வாங்கி விட்டு அதனை நாம் திரும்பிக்கொடுக்கவேண்டும். நமது நிலை அதனை கொடுக்கமுடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரிடம் நிலைமையை சொல்லி எனக்கு வரும்பொழுது எல்லாம் உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லிவிடுங்கள். 

நம்மை நமது உறவுகள் கவனிக்கிறார்களாே இல்லையோ நம்மை நமக்கு கடன் கொடுத்தவர் அதிகம் கவனித்துக்கொண்டு இருப்பார்கள். இந்த எண்ண தாக்குதல் நமக்கு பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

ஒரு மனிதன் தான் இறப்பதற்க்குள் தன்னுடைய கடனை முழுமையாக செலுத்திவிடவேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே அவனுக்கு மோட்சம் உண்டு. கடன் செலுத்தவில்லை என்றால் அது நமக்கு மறுபிறப்பை ஏற்படுத்தும் என்று சொல்லுவார்கள்.

ஒரு மனிதன் தொழிலில் தோல்வி அடைகிறான் என்றால் அவன் தொழிலுக்கு தகுந்தமாதிரி அவன் கடனை வாங்கிவிட்டு தான் தோல்வி அடைவான். அப்பொழுது நாங்கள் அவனுக்கு உதவ முன்வரும்பொழுது பிற எண்ண தாக்குதல் விழாமல் தடுத்துவிட்டு தான் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன். 

முடிந்தவரை சம்பந்தப்பட்ட நபருக்கு திருப்பிக்கொடுத்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு. பணம் வந்தவுடன் முதல் வேலையாக உன்னுடைய கடனை முடித்துவிட்டு வாருங்கள் என்று தான் சொல்லுவேன்.  இப்படி நாங்கள் செய்கிறோம் என்றால் கடன் கொடுத்தவர்களின் எண்ணம் எப்படி ஒருவனை கீழே தள்ளுகிறது என்று பாருங்கள்.

இதனைப்பற்றி அடுத்த பதிவிலும் தொடர்ந்து பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காவடிபூஜை விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      காவடிபூஜை செய்ததைப்பற்றி நேற்று சொல்லிருந்தேன். இது முருகனுக்கு செய்யும் ஒரு விழா என்றும் சொல்லிருந்தேன். 

பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் இருந்து கூட நடந்தே பழனி மலைக்கு செல்வார்கள். இப்பொழுது அப்படி யாரும் செல்வதில்லை. அந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை அப்படியே நடத்தவேண்டும் என்பதற்க்காக தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம். 

வருடந்தோறும் பழனிக்கு செல்லும் பக்தர்களை அழைத்து வீட்டில் வைத்து பூஜை நடத்துவோம். பெரும்பாலும் கோவில் பூசாரிகள் வீட்டிற்க்கு வந்து இந்த பூஜையில் கலந்துக்கொள்வார்கள். 

உங்களுக்கு தரும் உபயோகமான டிப்ஸ் 

காவடிபூஜையில் அன்னதானம் மிக முக்கியமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. அன்னதானம் செய்யும்பொழுது பொரியல் செய்வதற்க்கு பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் இந்த இரண்டு பொரியலும் மிக முக்கியமானவை. என்ன இதில் இருக்கிறது என்று கேட்கிறீர்களாக.

ஐந்து வகை பொரியல் செய்வோம். பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் பொரியல் கண்டிப்பாக இதில் இடம்பெறவேண்டும். பரங்கிகாய் கடையில் வாங்கும்பொழுது முழுமையான காயாக பார்த்து வாங்கி அதனை சமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும். ஒரு சிலர் வெட்டி இருக்கும் பரங்கிக்காயை வாங்கி வந்து சமைப்பார்கள். அது தவறான ஒன்று. முழு காயாக வாங்கி வந்து சமைக்கவேண்டும்.

பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள். நீங்கள் முருகனுக்கு விரதம் இருந்து சமைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அன்று நீங்கள் பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் பொரியல் செய்து உங்களின் விரத சாப்பாட்டை முடியுங்கள் முருகன் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் செய்துக்கொடுப்பார்.

நாங்கள் பூஜை செய்தால் அதிக கவனம் இப்படிப்பட்டவைகளில் செலுத்துவோம். எந்த கடவுளுக்கு என்ன பிடிக்கும் எப்படி பூஜை நடக்கவேண்டும் என்பதை பார்த்து பார்த்து செய்வோம். சின்ன சின்ன விசயத்தில் கூட நாங்கள் தவறுகள் செய்வதில்லை. எங்களால் முடிந்தளவு சிரத்தை எடுத்து செய்வோம். இப்படி சிரத்தை எடுத்து செய்யும்பொழுது தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

இதனை உங்களிடம் சொல்லுவதே நீங்கள் பூஜை செய்யும்பொழுது நல்ல முறையில் செய்யவேண்டும் என்பதற்க்காக மட்டுமே சொல்லுகிறேன்.செய்வதை ஒழுங்காக செய்துவிட்டால் அதன் பிறகு நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                     எந்த தொடரை ஆரம்பிக்கலாம் என்று கேள்வி கேட்டுருந்தேன். அதற்கு பல நண்பர்கள் அவர்களுடைய பதில்களை அனுப்பியிருந்தனர்.

பெங்களூரில் இருந்து திரு கே ஜே என்ற நண்பர் சனிபகவான் தசாவை ஆரம்பியுங்கள் என்று சொல்லிருந்தார்.

Nallur parames said...

Sani dhasa.guruvirku adudhau sanithaane bro.appadiye jenma nadchathirm prri oru padhivu podunga.

தங்களின் பதிலுக்கு நன்றி.

Prabhu said...
Respected astro Teacher,
I am reading your articles since long time, you are providing rare information about astro details which is not available in net other than you, you are writing articles with simple way which can be understand by any person. I mean to say, anybody can easily understand your article without having much knowledge of astrology.You have written an article about providing "abishegam to Lord shiva" regularly will destroy all our ill effects including our dosa, that article which is one of the article which attracts me a lot. All of your article are so useful to all peoples. I feel You did not talk much about about "astavarga", I request you to provide more information about "astavarga" prediction. 
Thank You.

தங்களின் பதிலுக்கு நன்றி.

Kalai Rajan said...
அய்யா
வணக்கம் கேது மகா தசாவைபற்றி எழுதுங்கள்.

தங்களின் பதிலுக்கு நன்றி.


Sudhagar V N said...
தலைவரே! எப்பவோ ஒரு முறை கே பி முறை பற்றி எழுத போறதா சொல்லி இருந்தீங்க... எப்ப பாஸ் அத ஆரம்பிக்க போறீங்க...

தங்களின் பதிலுக்கு நன்றி.

பாலாஜி கண்ணன் said...
வணக்கம் அய்யா சனிதிசையைப்பற்றி எழுதுங்கள். வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சனிதிசையைப்பற்றிய பயம் பல பேருக்குள்ளது. அதுபோல் ராகு, குருவிற்க்கு அடுத்ததாக வருவது சனி திசைதானே அய்யா.

தங்களின் பதிலுக்கு நன்றி.

பெரும்பாலான நண்பர்கள் போனில் தொடர்புக்கொண்டு சனி தசாவைப்பற்றி எழுதுங்கள் என்று சொல்லிருந்தனர்.

ஒரு நண்பர் அஷ்டவர்க்கத்தைப்பற்றி எழுத சொல்லிருந்தார். ஒரு நண்பர் கே. பி முறை சோதிடத்தைப்பற்றி எழுத சொல்லிருந்தார். இது இரண்டும் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எழுதமுடியாது என்று நினைக்கிறேன். பெரும்பாலும் நான் எழுதுவது அனுபவ ரீதியாக இருக்கும். இந்த இரண்டும் அனுபவரீதியில் சொல்லுவதற்க்கு கொஞ்சம் கஷ்டம். இப்பொழுது உள்ள சூழ்நிலை மிகவும் நேரம் குறைவாக இருக்கிறது. 

எந்த தசாவை எழுதவேண்டும் என்று இதுவரை முடிவு செய்யவில்லை. அம்மனுக்கு ஒரு பூஜை செய்து அதனிடம் ஒரு உத்தரவை வாங்கிவிட்டு எந்த தசா என்பதை சொல்லுகிறேன்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதி நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். விரைவில் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 27, 2015

காவடி பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      இன்று எங்களின் வீட்டில் காவடி பூஜை.  இது என்ன புதுமையாக இருக்கின்றது என்று நினைக்கிறீர்களா. தை பூசத்திற்க்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு பூஜை செய்யும் ஒரு விழா.

தை பூசம் என்பது மிகவும் சிறப்பான ஒரு விழாவாக முருகனுக்கு கொண்டாடுவார்கள். முருகனுக்கு காவடி எடுத்துக்கொண்டு நடைபயணமாக பல பக்தர்கள் செல்வார்கள். அவர்களை அழைத்து அவர்களின் பாதங்களுக்கு பூஜை செய்து வீட்டிற்க்குள் அழைத்து அந்த காவடியை எங்களின் பூஜை அறையில் வைத்து மிகப்பெரிய அளவில் வேலுக்கு அபிஷேகம் செய்து பிறகு அனைவருக்கும் அன்னதானம் செய்வோம்.

எங்களின் முன்னோர்களின் வழியாக வந்த ஒரு பூஜை இது. தொன்றுதொட்டு செய்யும் பூஜை வருடம் தோறும் தை பூசத்திற்க்கு முன்பு செய்கின்ற பூஜை. எங்களின் பகுதியில் மிக பிரபலமாக செய்வார்கள்.

பூஜை முடிந்த பிறகு அவர்கள் பழனி வரை சென்று வருவதற்க்கு தேவையான பண உதவி மற்றும் பொருள் உதவி என்று நிறைய செய்வோம். மிக சுத்தமாக அதே நேரத்தில் மிகுந்த கவனத்தில் கொண்டு இந்த பூஜையை செய்வது எங்களின் கடமை. 

நாங்களும் இந்த நாளில் விரதம் இருந்து பூஜை செய்வோம். முருகனே நேரில் எங்களின் வீட்டிற்க்கு வருவதுபோல் இருக்கும். இதனைப்பற்றி பூஜை முடிந்த பிறகு ஒரு பதிவு தருகிறேன். இன்று அனைவரும் மனதில் முருகனை நினைத்துக்கொள்ளுங்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 25, 2015

கேள்வி


வணக்கம் நண்பர்களே!
                      சென்னையில் இருந்து நேற்று காலையில் தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன். தஞ்சாவூர் வந்த பிறகு பல நண்பர்கள் சென்னையில் இருந்து தொடர்புக்கொண்டார்கள் சார் இன்றைக்கு பார்க்கலாமா என்று கேட்டார்கள். அனைவருரிடமும் நான் தஞ்சாவூர் வந்துவிட்டேன். பிப்ரவரி மாதம் அம்மன் பூஜை முடிந்த பிறகு சென்னை வருகிறதா ஒரு திட்டம் இருக்கிறது அப்பொழுது சந்திக்கலாம் என்று சொன்னேன்.

நேற்று இங்கு வந்த நேரத்தில் இருந்து தொடர்ச்சியாக சொந்த வேலை இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவு தரமுடியவில்லை. இப்பொழுது எழுத தொடங்க ஆரம்பித்தவிட்டேன்.

பதிவில் சோதிடத்தைப்பற்றி ஒரு தொடரை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது தான் அதற்க்கான நேரம் கிடைத்தது. 

தசாவைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஏற்கனவே ராகு தசா மற்றும் குரு தசாப்பற்றி ஒரு தொடரை எழுதிவிட்டேன். எந்த தசாவின் தொடரை அடுத்து எழுதவேண்டும் என்பதை எனக்கு சொல்லுங்கள். அதனைப்பற்றி எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 23, 2015

வெற்றி பெறுவதற்க்கு வழி


வணக்கம் நண்பர்களே!
                      நீங்கள் ஏன் பொறுமையாக பிறருக்கு செய்துக்கொடுக்கிறீர்கள். வருபவர்களை உடனே மேலே தூக்கிவிடலாமே என்று கேட்டார்.

என்னை தேடி வருபவர்களுக்கு முதலில் பணம் வாங்காமல் எதையாவது செய்துக்கொடுக்கவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். என்னை சந்தித்த நேரத்தில் இருந்து வருபவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன். ஒரு சிக்கல் ஒன்று ஏற்படுகிறது அதனை போக்க காலதாமதம் ஏற்படும்பொழுது காலம் எடுத்துவிடுகிறது.

மனிதன் வாங்கி வந்த வரம் என்று ஒன்று இருக்கிறது. வாங்கி வந்த வரம் என்றால் முன்ஜென்மத்தில் அவன் செய்த பாவகணக்கு. வாங்கி கட்டிய வரம் என்றும் ஒன்றும் இருக்கிறது. இந்த ஜென்மத்தில் அவன் செய்த பாவம். இந்த இரண்டும் ஒருத்தனின் தலைவிதியை தீர்மானிக்கிறது.

இந்த இரண்டு பாவத்தையும் நீக்கி அவனுக்கு நல்லது செய்வதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஒரு சிலருக்கு உடனே நல்லது நடந்துவிடும். ஒரு சிலருக்கு காலத்தாமதம் ஏற்பட்டுவிடுகிறது. 

வாங்கிகட்டிய வரத்தில் ஏற்படும் பாவக்கணக்கை தீர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். வாங்கி கட்டிய வரத்தில் ஆத்மா மற்றும் பாதிப்படையாமல் அவனின் உடலும் பாதிப்படைந்துவிடும். வாங்கிவந்த வரத்தில் ஆத்மா மட்டும் பாதிப்படையும். வாங்கி கட்டிய வரத்தால் அவனின் மூன்று உடலும் பாதிப்படையும். 

மூன்று உடல் என்றால் மனித உடல், சூட்சம சரீரம், ஆத்மா இது மூன்றும் மூன்று உடல். இதனை சரி செய்வதற்க்கு கொஞ்ச கால தாமதம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் என்னை சந்தித்த உடன் உடனே நல்லது நடந்துவிடாது. கொஞ்சம் காலம் எடுக்கும். அது வரை அவன் விதி பொறுமையாக இருக்கவேண்டும். ராஜேஷ்சுப்பு ஏமாற்றுகிறார் என்று அவன் பாேய்விட்டால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. என்னிடம் இருக்கின்றவரைப்பற்றி தான் நான் கவலைப்படுவேன் தவிர போகிறவரைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்.

ஒரு மனிதனுக்கு நிறைய பிரச்சினை ஏற்படும்பொழுது அவனுக்கு ஒரு நாளில் எல்லாம் சரியாகிவிடாது. கொஞ்சகாலம் எடுக்கும். அது இயற்கையின் நியதி. 

தோல்வி ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்து பார்த்தால் வெற்றி பெறுவது எளிது என்று ஹட்லரின் வாசகத்தை தான் சொல்லமுடியும். தோல்விக்கான காரணத்தை ஆராயும்பொழுது பல வில்லங்கம் வெளியில் தெரியவரும். வில்லங்கத்தை சரிசெய்ய கொஞ்ச காலம் எடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 22, 2015

சிவ பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      சிவபூஜை செய்யச்சொல்லி வருடபிறப்பு சமயத்தில் சொல்லிருந்தேன். இதுவரை யாரும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. ஒரு சில நண்பர்களிடம் போன் செய்து கேட்டேன். அவர்கள் அதனை எல்லாம் செய்வதற்க்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவர்களே தப்பானவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது. இந்த நினைப்பு இருந்தால் எப்படி அவர்கள் முன்னேற்றம் அடையமுடியும். 

ஒரு பூஜை செய்வதற்கே பயந்தால் அப்புறம் எப்படி ஆன்மீகவாதியாக மாறுவது. எந்த கடவுளும் நாம் தவறாக பூஜை செய்தாலும் அதுவே நம்மை திருத்தி நல்ல வழியில் செய்ய வைத்துவிடும். 

மந்திரங்கள் தெரியவில்லை என்று ஒரு சிலர் சொன்னார்கள். மந்திரங்களை முழுமையாக படிக்க தெரியவில்லை என்றாலும் இப்பொழுது கடைகளில் மந்திரங்கள் அடங்கிய சிடி கிடைக்கிறது. அதனை வாங்கி பிளையரில் போட்டு பூஜையை செய்துக்கொள்ளுங்கள். பல கோவில்களிலேயே பிளையரில் மந்திரங்களை ஒடவிட்டு பூஜை செய்கின்றனர்.  நீங்களும் பயப்படாமல் இந்த மாதிரி பூஜை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்வவளம்


வணக்கம் நண்பர்களே!
                      என்னை சந்திக்கும் நண்பர்கள் செல்வ வளத்திற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பார்கள். நான் நிறைய பதிவுகள் இதனைப்பற்றி எழுதியிருந்தாலும் மேலும் மேலும் இதனைப்பற்றி கேள்விகள் வரும்.

ஜாதககதம்பத்தில் நிறைய கருத்துகளை சொல்லிருக்கிறேன். அதனை பின்பற்றி வந்தாலே போதும் ஆனால் யாரும் செய்யமாட்டார்கள் என்பது மட்டும் தெரியும். அனைத்திற்க்கும் காரணம் சோம்பேறி தனம் மட்டுமே தவிர வேறு ஒன்றும் இருக்காது.

இன்றைய தினம் என்ன பதிவு வரும் அதனை படித்தால் போதும் நாளை வேறு ஒரு பதிவு வரும் அதனை படிக்கலாம் என்று தான் புத்தி போகுதே தவிர எதையாவது ஒன்றை எடுத்து செய்வோம் என்று யாரும் செயல்படுவதில்லை.

செல்வ வளத்திற்க்கு ஒன்றைப்பற்றி பார்க்கலாம். செல்வவளம் நிறைய வேண்டும் என்ற நினைப்பு முதலில் இருக்கவேண்டும். இது போதும் என்ற நினைப்பு மட்டும் வந்துவிடகூடாது. எப்பொழுது எனக்கு இந்த பணம் போதும் அதாவது நான் முன்னேறிவிட்டேன் என்று நினைக்கிறீர்களோ அப்பொழுது அதுவாகவே பணம் வருவது நின்றுவிடும்.

பணப்பற்றாக்குறை இருப்பதாக நீங்கள் நினைக்கும்பொழுது சோதிடத்தில் நமக்கு பணம் தரும் வீட்டு அதிபதி கொடுத்துக்கொண்டே இருப்பார். பணம் போதும் என்றால் அந்த அதிபதி நிறுத்திக்கொண்டு விடும். இது ஒரு சூட்சமும்.

செல்வவளத்திற்க்கு நிறைய பரிகாரம் இருக்கிறது. அதனை என்னை சந்திக்கும்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 21, 2015

சந்திப்பில் பெற்றவை


வணக்கம் நண்பர்களே!
                      சென்னையில் இருந்த நண்பர்களை எல்லாம் சந்தித்து வருகிறேன். முடிந்தவரை என்னை தொடர்புக்கொண்டு கூப்பிட்ட நண்பர்களை எல்லாம் பார்த்துவருகிறேன். பல நல்ல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.

பல கருத்துக்களை நான் பதிவில் சொல்லாத கருத்துக்களை அவர்களோடு பகிர்ந்துக்கொள்வது உண்டு. பதிவில் பொதுவாக வைக்க முடியாத கருத்துக்களை பகிர்ந்துக்கொள்கிறேன். ஒவ்வொரு வீடுகளுக்கும் அதிக நேரம் ஒதுக்கி பேசிவிட்டு வருகிறேன்.

பொதுவாக அனைவரும் என்னோடு நல்லமுறையில் பேசுவார்கள். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் போல் என்னை நடத்துவது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. 

என்னைப்பொறுத்தவரை வருபவர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன். செய்யகூடாது என்பது கிடையாது. ஆளை பார்த்து செய்யவேண்டும் பணத்தை பார்த்து செய்யவேண்டும் என்பது கிடையாது. வருபவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மட்டும் தீர்மானமாக இருப்பேன்.

என்னை தேடி வருபவர்களிடம் என்னை சந்தித்து இருக்கிறீர்கள். கண்டிப்பாக ஒரு வாய்ப்பை தருகிறேன். அதில் உங்களுக்கு நல்ல முறையில் அமைந்துவிட்டால் என்னை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒவ்வொன்றாக பார்க்கலாம் என்று சொல்லுவது உண்டு. 

இதனை படிக்கும் உங்களுக்கும் சொல்லுவது அது மட்டுமே வரும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினாலே போதும். குறிப்பிட்ட ஒரு சில மாதங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை நீங்கள் காணமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அவல்


வணக்கம் நண்பர்களே!
                      கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதற்க்கு அவல் பொரி வைத்து நைவேத்தியம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லுவதால் அதனை கடையில் வாங்கி அப்படியே நாம் பயன்படுத்துவோம்.

அவல் பொரியை கடையில் வாங்கி அதனை பயன்படுத்தகூடாது. அவல் இயற்கையாக தயாரித்து அதனை பயன்படுத்தவேண்டும். இந்த காலத்தில் இது கூட செய்யமுடியாத நிலைமை இருக்கிறது. 

அவல் மட்டும் கடையில் வாங்குங்கள். கடையில் வாங்கும்பொழுது ஊற வைக்கும் அவல் வேண்டும் என்று கேட்டு வாங்குங்கள். அதனை தண்ணீரில் ஊறவைத்து அதனோடு வெல்லத்தை சேர்த்து அப்படியே நீங்கள் நைவேத்தியமாக பயன்படுத்தலாம். அவல் மற்றும் வெல்லம் சேர்த்து ஈரப்பதத்தோடு நாம் படைக்க வேண்டும்.

அவலை இப்படி படைத்தால் தான் நாம் வணங்கும் தெய்வம் நமக்கு நல்லது செய்யும். நாம் தவறு செய்துவிட்டு கடவுளை குறைச்சொல்லகூடாது. நாம் செய்வதை ஒழுங்காக செய்தால் கண்டிப்பாக கடவுள் நமக்கு நல்லதை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 20, 2015

அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      சென்னையில் இருப்பதால் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கூப்பிட்டார்கள். அவர்களில் புதிய வரவு நண்பர்களாக பார்த்து அவர்களை சந்தித்து வருகிறேன். நாளை முதல் ஏற்கனவே அறிமுகமான நண்பர்களை சந்திக்கவேண்டும்.

ஒவ்வொரு வீடுகளுக்கும் நானே நேரில் சென்று பார்த்து வருகிறேன். அவர்களின் உண்மையான நிலையை நான் இப்படி செல்லும்பொழுது நமக்கு தெரியவருகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு புதிய அனுபவத்தை பெறமுடிகிறது. என்னை சந்திப்பதில் அவர்களின் புதிய நண்பர்கள் நல்ல மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை பார்க்கும்பொழுதே தெரிகிறது.

என்னை சந்திக்கும்பொழுது அவர்களின் பிரச்சினையை பற்றியும் என்னோடு கலந்து ஆலாேசனை செய்கிறார்கள். என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லிவிட்டு வருகிறேன். பல இடங்களில் ஒன்றை நான் காணமுடிகிறது. என்ன என்றால் அனைத்தும் முடிந்த பிறகு என்னை சந்திப்பது நடக்கிறது. ஒரு பிரச்சினை ஆரம்பித்து அது முடிந்தபிறகு என்னை சந்திக்கிறார்கள்.

பிரச்சினை வந்தபிறகு நெட்டை தேடி படிக்கிறார்கள். அதன் பிறகு என்னை தொடர்புக்கொள்வது நடக்கிறது. எப்பொழுதும் ஒரு தேடுதல் இருக்கும்பொழுது மட்டுமே ஒருவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்வை நகர்த்த முடியும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடி வாங்கிய பிறகு இழப்பை சரிசெய்வது கடினமாக தான் இருக்கும். அதனால் முடிந்தவரை நமக்கு பிரச்சினை வரவில்லை என்று மட்டும் இருந்துவிடாதீர்கள். பிரச்சினை வருவதற்க்கு முன்பே உஷாராகிவிடவேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் முன் எச்சரிக்கையுடன் இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 19, 2015

ஆன்மீகவிழாவிற்க்கு ஆன்மீகவாதிகள்



வணக்கம் நண்பர்களே!
                       சென்னையில் இருந்து இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். சென்னையில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.

ஒவ்வொரு இடத்திலும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது அந்த இடத்தில் ஒரு ஆன்மீக பெரியவர் அல்லது நல்ல ஞானம் அடைந்தவர்களை அழைத்து ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த காலத்தில் ஒரு குத்துவிளக்கு பூஜை செய்தால் கூட அதற்கு ஒரு சாமியார் அழைத்து வரப்படுகிறார்.

ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஒரு ஆன்மீகத்தில் உள்ளவர்கள் இருந்தால் அந்த நிகழ்ச்சி மிகவும் சக்தி வாய்ந்தாக இருக்கும் என்று எண்ணி இப்படி செய்வது உண்டு.

ஒரு சில இடங்களில் ஒரு தேவதை வரவேண்டும் என்றால் இப்படிப்பட்ட ஆன்மீகத்தில் உள்ளவர்களால் தான் முடியும். அதே நேரத்தில் எந்த காரியத்திற்க்காக அந்த பூஜை செய்யப்படுகிறதோ அந்த காரியம் வெற்றி அடையவேண்டும் என்பதற்க்காகவும் இப்படிப்பட்ட ஆன்மீக பெரியோர்களின் ஆசி வேண்டும். அதனால் ஆன்மீகத்தில் உள்ளவர்களை அழைத்து பூஜை செய்வார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 18, 2015

சென்னையில் நான்


வணக்கம் நண்பர்களே!
                      பல வருடங்களாக சென்னையில் இருந்த நான் தற்பொழுது சென்னைக்கு வருகை என்று பதிவு போடவேண்டியதாகிவிட்டது. அம்மனின் ஊரிலேயே இருப்பதால் சென்னைக்கு வரமுடியவில்லை. எனக்கு சொந்த வேலைக்காரணமாகவும் சென்னைக்கு வரமுடியவில்லை. 

இன்று காலை சென்னை வந்து சேர்ந்த பிறகு உடனே பாண்டிசேரிக்கு சென்றுவிட்டேன். அங்கு நண்பரை சந்தித்த பிறகு மீண்டும் சென்னை வந்துவிட்டேன்.  ஊரில் உள்ள கூட்டம் எல்லாம் இன்று தான் சென்னை திரும்பும் என்று நினைக்கிறேன். பஸ்ஸில் ஏறமுடியவில்லை அவ்வளவு கூட்டம்.

சென்னையில் இருக்கும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. சென்னையில் இருக்கும் நமது நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டால் உங்களை சந்திக்கிறேன்.

சென்னையில் அலுவலகம் இல்லாத காரணத்தால் முடிந்தளவு உங்களின் இல்லம் அல்லது பொது இடங்களில் நாம் சந்திக்கலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Friday, January 16, 2015

மாட்டுப்பொங்கல்


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு நாளும் வரும்பொழுது தான் அந்த நாளைப்பற்றி நமக்கு தெரியவரும். இன்று மாட்டுப்பொங்கல் என்றவுடன் மாடுகளைப்பற்றி ஞாபகம் வந்தது அதனைப்பற்றி எழுதவேண்டும் என்று இப்பதிவை உங்களுக்கு தருகிறேன்.

ஒவ்வொரு வீடுகளிலும் பசு மாட்டை வளர்த்து அந்த வீட்டிற்க்கு தேவையான பால் மற்றும் அதில் இருந்து பெறப்படும் பொருட்களை வீட்டிற்க்கு பயன்படுத்திக்கொண்டனர். இப்பொழுது இது கிராமங்களில் கூட கிடையாது. எல்லாம் நவீனமாயம் என்று இருக்கின்ற மாடுகளை எல்லாம் விற்றுவிட்டு பாக்கெட் பால் வாங்கி குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கிராமபுறங்களில் வீட்டிற்க்கு ஒரு மாடாவது இருக்கும். இன்றைய நாளில் கிராமபுறங்களில் அந்த ஊருக்கு ஒரு மாடு இருந்தாலே பெரிய விசயமாக இருக்கின்றது.

எல்லாம் நவீனமாகிவிட்டது என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். ஒரு மாட்டில் இருந்து பாலை கறந்து காபியோ அல்லது டீயோ போட்டு குடித்தால் உண்மையில் உண்மையான பாலின் அருமை என்ன என்று உங்களுக்கு புரியும். 

நான் என்ன தான் வெளியில் சுற்றினாலும் கிராமத்தில் இருக்க எனக்கு மிகவும் பிடிக்கும். எனது வீட்டில் எனக்கு தெரிந்த நாள் முதல் எங்களின் வீட்டில் பசு மாடு வளர்த்து வளர்கிறோம். இப்பொழுதும் என்னிடம் பசு மாடு இருக்கின்றது. எனது தோஷம் மற்றும் வீட்டில் உள்ள எல்லா தோஷங்களை போக்க நான் வளர்த்து வருகிறேன்.

அதற்கு பணிவிடை செய்து எனது தோஷத்தை போக்கிக்கொள்கிறேன். உங்களுக்கும் உங்களால் பசு மாடு வளர்க்கும் நிலையில் இருந்தால் தாராளமாக பசு மாடு ஒன்றை வாங்கி பராமரித்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மாட்டுப்பொங்கலை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

படையல்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்றைய பதிவில் மாட்டுப்பொங்கலைப்பற்றி சொல்லிருந்தேன். பல நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டு எனக்கு போன் செய்து இருந்தார்கள்.

மாட்டுப்பொங்கலுக்கு முன்னோர்களுக்கு செய்யும் படையலைப்பற்றி சொல்லிருந்தேன். இதில் தான் சந்தேகத்தை கேட்டுருந்தனர். முன்னாேர்களுக்கு தை அமாவாசை விரதம் பிடித்து செய்தாலும் மாட்டுப்பொங்கலுக்கு செய்யும் படையல் மிகவும் விஷேசமானது.

முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து இலையில் பரிமாறி அவர்களுக்கு ஆண்களாக இருந்தால் வேஷ்டி சட்டை பெண்களாக இருந்தால் புடவை போன்றவற்றை வைத்து படைப்பார்கள். இதில் முன்னோர்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு அசைவ உணவை சமைத்து பரிமாறுவார்கள்.

இந்த படையலை ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். நல்ல முன்னேற்றத்தை அந்த வருடத்தில் நீங்கள் பார்க்கலாம். இதனை தஞ்சாவூர் பகுதியில் அனைத்து வீடுகளிலும் பின்பற்றி வருவார்கள். பல பகுதியிலும் இதனை நான் பார்த்து இருக்கிறேன். இதனை செய்தால் நல்லது நடக்கும் என்று மட்டும் தான் நான் இந்த நேரத்தில் சொல்லமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 15, 2015

மாட்டுப்பொங்கல் படையல் வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                      நாளை மாட்டுப்பொங்கல். மாட்டுப்பொங்கலை கிராமத்தில் அதிவிமர்சியாக கொண்டாடுவார்கள். மாட்டுப்பொங்கலை நகரத்தில் இருப்பவர்கள் கொண்டாடுவதில்லை. பெரும்பாலும் கொண்டாடுவதில்லை என்று நினைக்கிறேன்.

மாட்டுப்பொங்கல் விழா மாடுகளுக்கு மட்டும் நாம் கொண்டாடுவதில்லை. நமது முன்னோர்களுக்கு படையல் போட்டு கிராமங்களில் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு பிடித்தமான உணவு மற்றும் துணிமணிகளை வைத்து படையல் போடுவார்கள்.

அமாவாசை விரதத்தை விட இந்த படையல் மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று நமக்கு ஏற்படும் அத்தனை பித்ரு தோஷத்தை எல்லாம் போக்கும் இந்த படையல் வழிப்பாட்டை செய்தால் நல்ல வாழ்க்கை வாழலாம்.

நீங்கள் இதுவரை இந்த வழிபாடு செய்யவில்லை என்றாலும் இனிமேலாவது இந்த வழிபாட்டை செய்து நல்ல வாழ்க்கையை வாழுங்கள். உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு ஆசி வழங்குவார்கள். அந்த ஆசி இருந்தால் போதும் எப்படிப்பட்ட கிரகத்தின் தாக்குதலில் இருந்தும் தப்பிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      இதுவரை உங்களுக்கு தமிழில் பதிவை எழுதிக்கொண்டு இருந்தேன். நமக்கு ஒரு சின்ன ஆசை வந்தது தமிழில் மட்டும் இருந்தால் போதாது இனிமேல் பொதுவான ஒரு மொழியிலும் எழுதவேண்டும் என்று ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுத ஆரம்பிக்கிறேன். இதனை கடந்த வருடமே தொடங்கவேண்டும் என்ற உங்களிடம் சொல்லிருந்தேன். கடுமையான வேலை பளு காரணமாக தொடங்கமுடியவில்லை. இந்த நாளில் எப்படியும் தொடங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்துவிட்டேன்.

எனது கல்வி தகுதி என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு தொடங்கிவிட்டேன். தவறுகள் இருந்தால் மன்னித்துவிடுங்கள். எப்படி ஜாதக கதம்பத்தை உங்களின் நண்பர்களுக்கு சொன்னீர்களோ அது போல் இதனையும் சொல்லுங்கள்.

புதிய தளத்தில் பதிவுகள் ஜாதககதம்பத்தில் உள்ள கருத்துகளை எடுத்து தான் எழுதபோகிறேன். தமிழ் தெரியாத உங்களின் நண்பர்களுக்கு இதனை பரிந்துரை செய்யலாம்.

புதிய தளம் படிப்படியாக மேம்படுத்தப்படும். ஜாதக கதம்பத்திலும் தொடர்ந்து பதிவுகள் வரும்.

உங்களின் ஆலோசனையை என்னிடம் தெரிவிக்கலாம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.



நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே!
                                                அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 14, 2015

நீச குரு


வணக்கம் நண்பர்களே!
                      நீசத்தைப்பற்றி நேற்றைய பதிவில் சொல்லிருந்தேன். ஒரு கிரகம் நீசம் என்று மட்டும் பார்க்ககூடாது அது எந்த நட்சத்திரத்தில் செல்லுகிறது என்று பார்த்து பலனை சொல்லவேண்டும்.

ஒரு முறை ஒருவர் சோதிடம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கேட்டு வந்திருந்தார். அவரின் ஜாதகத்தை பார்த்தேன். ஐந்தாவது வீட்டு அதிபதி பிரச்சினையில் இருந்தது.குரு கிரகம் மகரத்தில் இருந்தது. குரு கிரகம் நீசம் அடைந்துள்ளது என்று நானும் இவருக்கு குழந்தை இருக்காது என்று முடிவு நினைத்துவிட்டேன். நானும் குழந்தை பாக்கியம் இருக்காது கடவுளை நன்றாக வழிப்படுங்கள் கடவுளாக பார்த்து செய்தால் உண்டு என்றேன்.

அவர் என்னை சந்தித்த பிறகு ஒரு சில மாதங்களில் என்னை சந்தித்து சொன்னார். அவரின் மனைவி கர்ப்பமாக உள்ளார். கடவுளை வழிப்பட்டதால் உண்டு என்றார்.

எனக்கு அப்பொழுது தான் விபரம் தெரிந்தது. குரு கிரகம் மகரத்தில் இருப்பதால் நீசம் அடைந்துவிடாது. திருவோணம் நட்சத்திரத்தில் குரு கிரகம் இருந்தால் மட்டுமே நீசம் அடையும் என்பதை தெரிந்துக்கொண்டேன். அவருக்கு குரு கிரகம் உத்திராட நட்சத்திரத்தில் இருந்ததாக ஞாபகம் இருக்கிறது.

குரு கிரகம் நீசம் அடைந்தால் கர்ப்பசிதைவு ஒரு சிலருக்கு ஏற்படும். குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும். நீசம் அடைந்துவிட்டது என்று கவலைப்படதேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                             என்ன தான் சோதிடத்தில் பெரிய ஆள் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு சோதிடரும் இருந்தாலும் உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒரு சில ஜாதகங்கள் வந்து நம்மை திக்குமுக்காட வைத்துவிடும்.

பத்து நாட்களுக்கு ஒரு ஜாதகத்தையாவது இப்படி கடவுள் அனுப்பி நமது மண்டையில் குட்டு வைத்துவிடுவார். இதனை நான் வெளிப்படையாகவே ஒற்றுக்கொள்வேன்.

ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் இப்படி பலனை சொல்லும்பொழுது ஒரு எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்வதற்க்கு கடவுளே இப்படி அனுப்புகிறார் என்று நான் நினைத்துக்கொள்வேன். நாம் சொல்லுகிற பலனுக்கும் அவர்களுக்கு குறைந்தது 80 சதவீதமாவது உண்மையில் நடக்கவேண்டும்.

எச்சரிக்கை உணர்வு இருப்பதால் நான் சொல்லும் பலன் மிகச்சரியாகவே அமைகிறது. தலைகணம் கொஞ்சம் எகிறும்பொழுது நமக்கு குட்டு கிடைக்கும். 

கிராமங்களில் சோதிடப்பலன் சொல்லும்பொழுது இளைஞர்கள் பயங்கரமாக கேலி செய்வார்கள். அதனை எல்லாம் தாண்டி நாம் சோதிப்பலனை சொல்லவேண்டும். பலவற்றை சமாளித்தால் தான் நாம் நல்ல சோதிடர் என்று பெயர் வாங்கமுடியும். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு நடைபெற்று இருக்கிறதா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      நான் சும்மா இருந்தாலும் அம்மன் சும்மா இருக்காது. எங்கிருந்தாவது எனக்கு ஆட்களை அனுப்பிக்கொண்டே இருக்கும். அம்மனை நான் துதிக்கொண்டே இருப்பதால் அப்படி நடைபெறுகிறது. எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் அம்மனை பூஜிக்காமல் இருப்பதில்லை. 

ஒரு சிலர் என்னிடம் வந்து இதனை நீ செய்துக்கொடுத்தால் உனக்கு இதனை நான் செய்து தருவேன் என்பார்கள். இது எல்லாம் நடந்தால் தருகிறேன் என்பது போலதான் இருக்கும். நான் அவர்களிடம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.

ஒருவர் எனக்கு நன்மை செய்யார் என்று எதிர்பார்ப்போம் ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஒருவர் வந்து எங்களுக்கு உதவி செய்வார். இவர் தான் எனக்கு உதவி செய்யார் என்று நான் ஒருபோதும் நினைப்பதில்லை. ஒரு மனிதனை நம்பவதைவிட நாம் வைத்திருக்கும் சக்தியை நம்பவேண்டும். அது எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற நினைப்பு உனக்கு எந்த நாளும் இருக்கவேண்டும் என்று குரு சொல்லுவார்.

ஒரு சக்தியை நீங்கள் நம்பவதாக இருந்தால் தயவு செய்து மனிதனை நம்பவேண்டாம் சக்தியை மட்டும் நம்புங்கள். அது எந்த ரூபத்திலாவது வந்து உங்களை காப்பாற்றிவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 13, 2015

நீச சனி


வணக்கம் நண்பர்களே!
                      நம்மிடம் வரும் ஜாதகத்தை வைத்தே உங்களுக்கு பாடம் நடத்தமுடியும். நிறைய ஜாதகங்களை அனுபவ ரீதியாக உங்களுக்கு கொடுக்கமுடியும். அந்தளவுக்கு ஜாதகங்களை நான் நேரிடையாக அவர்களின் வாழ்க்கை பார்த்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஒரு சோதிடனாக வாழ்க்கையை தொடங்கியதால் அனுபவம் அதிகமாக எனக்கு இருக்கிறது. இதனை பெருமையாக உங்களுக்கு சொல்லவில்லை எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

சனிக்கு மேஷ ராசி நீச வீடு என்று சோதிடம் சொல்லுகிறது. நீச வீட்டில் ஒரு கிரகம் அமரும்பொழுது அதனால் பலனை அந்த ஜாதகருக்கு கொடுப்பதில்லை. ஒரு சில காலத்தில் அது எப்பொழுதாவது பலனை கொடுக்கிறது.

நீசவீட்டில் இருக்கும் கிரகம் எப்பொழுது பலனை கொடுக்கிறது என்பது எனக்கு தெரியாது ஆனால் எப்பொழுதாவது பலனை தருகிறது. சுத்தமாக கொடுக்கவில்லை என்று நாம் அதனை ஒதுக்கியும் தள்ளிவிடமுடியாது. நீசவீட்டில் இருக்கும் கிரகம் ஜாதகன் வேண்டுவதால் பலனை கொடுக்கிறதா என்று கூட தெரிவதில்லை.

மேஷத்தில் சனி இருந்து பிறந்த ஜாதகர்கள் ஒரு தொழிலை நிலையாக நடத்துவதில்லை. வேலை செய்யும் ஜாதகர்களாக இருந்தால் கூட அவர்கள் ஒரு வேலையை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருபவர்களாக இல்லை. ஒரு வருடம் அல்லது ஆறு மாதத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் ஆறு மாதம் வேலை செய்வது ஆறு மாதம் சும்மா வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு இருப்பவர்களாக இருக்கின்றனர்.

ஒரு ஜாதகத்தில் சனிக்கிரகம் நீசமாவது ஒரு பெரிய தொல்லை என்று தான் சொல்லவேண்டும். வாழவும் விடாமல் சாகாவும் விடாமல் ஒரு மனிதனை போட்டு தொந்தரவு செய்தால் என்ன தான் அவன் செய்வான். அப்படிப்பட்ட ஒரு நிலையை நீச சனி கொடுக்கும்.

மேஷத்தில் சனி இருக்க பிறந்தவர்கள். குலதெய்வ வழிபாடு அல்லது கிராம தேவதை வழிப்பாட்டை மேற்க்கொண்டு வாருங்கள். ஒரு வேலை அல்லது ஒரு தொழில் உங்களுக்கு அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      தொழில் செய்யவேண்டும் என்று நிறைய பேர் நினைப்பது உண்டு. என்ன தொழில் செய்யலாம் என்பதை ஜாதகத்தை பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். 

ஜாதகத்தை பார்த்து தேர்ந்தெடுப்பதற்க்கு தொழில் வீட்டு அதிபதி நவாம்சத்தில் எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகங்களின் காரத்துவம் உடையதொழிலை தேர்ந்தெடுத்து செய்வார்கள்.

பொதுவாக தொழிலை செய்யும்பொழுது இந்த அடிப்படையில் தான் அனைவரும் தொழிலை தேர்ந்தெடுப்பார்கள். இது மட்டும் வைத்து தொழிலை தேர்ந்தெடுக்ககூடாது. தசாநாதன் ஒவ்வொருக்கும் தொழிலில் மாற்றத்தை கொடுத்துவிடுவார்.

ஒரு சில ஜாதகங்களில் தசாநாதன் தொழிலை தருபவர்களாக இருக்கின்றனர். தசாநாதன் நன்றாக வேலை செய்யும் ஜாதகங்களில் இப்படி நடந்துள்ளதை பல பேர்களிடம் நான் பார்த்து இருக்கிறேன்.

நீங்கள் தொழில் செய்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு நடக்கும் தசாவையும் கவனித்துக்கொண்டு அந்த தொழிலை தேர்ந்தெடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 12, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                                                     பூஜை அலங்காரத்தில் பல நல்ல உள்ளங்கள் பங்குபெற்றார்கள். பல பேர்களின் உழைப்பால் பூஜை நல்ல முறையில் நடைபெற்றது.  அம்மன் அருள் நிச்சயமாக கிடைக்கும். 
                                                     






அன்புடன்

ராஜேஷ்சுப்பு



அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      பொங்கல் பண்டிகை காரணமாக பூ சந்தையில் பூக்கள் குறைவாக இருந்தன. மாலைகள் இல்லை. முடிந்தவரை சிறப்பாக இருக்கவேண்டும் என்று தான் நான் நினைப்பேன். குறைகள் இயற்கையாகவே நடைபெறும்பொழுது பொறுத்துக்கொள்ளுங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                                                நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Friday, January 9, 2015

முட்டுக்கட்டை போடும் பித்ருக்கள்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் தொழில் செய்யவேண்டும் அல்லது ஏதாவது ஒரு நல்ல வேலை வேண்டும் என்று அழைபவர்களாக இருக்கின்றனர. உங்களின் ஜாதகத்தில் ஜாதகத்தை எடுத்து பித்ரு தோஷம் இருக்கின்றதா என்று முதலில் பார்த்து விடுங்கள். அதன்பிறகு உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்.

பல பேர்கள் தங்களின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருக்கின்றது என்பதை கூட தெரியாமல் அல்லல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். பல சோதிடர்களிடம் அவர்கள் ஜாதகத்தை காட்டியும் சோதிடர்கள் இவர்களுக்கு இருக்கும் தோஷத்தை சொல்லுவதில்லை.

பித்ருதோஷம் இருந்தால் அவர்களால் வாழ்க்கையில் ஒரு நிலையை அடையமுடியாது. பல பேர்கள் தங்களின் வாழ்வை தொலைத்துவிட்டவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு திருமண வாழ்வு அமைவதில்லை. இளம்வயதில் திருமணம் நடைபெற்றாலும் திருமண வாழ்வு பிரச்சினையை சந்திப்பதாகவே இருக்கின்றது.

ஒரு சிலர் பித்ருதோஷத்தை நீக்குகிறேன் என்று போய் தவறாக பல விசயங்களை செய்துவிட்டு வந்துவிடுகிறார்கள். பித்ருக்களுக்கு ஒழுங்கான சாந்தியை யாரும் செய்வதில்லை. சரியான முறையில் சாந்தி செய்யும் நபர்களிடம் சென்று பித்ருக்களுக்கு சாந்தி செய்தால் எல்லா பிரச்சினையிலும் இருந்து விடுபடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீக அனுபவங்கள் 175


வணக்கம் நண்பர்களே!
                      ஆன்மீக அனுபவங்களில் ஒரு வித்தியாசமான ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொருவிதமான பலியை அந்த கோவிலில் உள்ள தெய்வத்திற்க்கு கொடுப்பார்கள். அது தொன்றுதொட்டு வரும் நடைமுறையில் உள்ள பழக்கமாக இருக்கும்.

ஒரு சில கோவிலில் ஆடு கோழி இப்படி பலி கொடுப்பார்கள். மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களை தனக்கு பிடித்தமான தெய்வத்திற்க்கும் கொடுத்து அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதில் நாம் தலையிடகூடாது என்று பல ஞானிகளே சொல்லியுள்ளனர்.

பல கோவில்களில் பன்றியை பலியிட்டு வணங்குவார்கள். நமது அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு தெய்வத்திற்க்கு வருடத்திற்க்கு ஒரு முறை பன்றியை வெட்டி பலிக்கொடுப்பார்கள். அந்த தெய்வத்தின் பெயர் பாவாடைராயன் என்று பெயர் சொல்லுவார்கள்.

ஒரு சில இடங்களில் மாடன் தெய்வத்திற்க்கு இப்படி பலிக்கொடுப்பதை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். மாடன் வழிப்பாடு தென்தமிழகத்தில் இருக்கும். இது எல்லாம் செவிவழி செய்தி மட்டுமே.

ஒரு சில கிராமங்களில் பன்றியை வீட்டில் வைத்து வளர்ப்பார்கள். அப்படி ஒரு வீட்டில் ஒரு பன்றியை வளர்த்தால் அந்த வீட்டில் எந்த வித தீயசக்திகளும் நெருங்கமுடியாது. பிடிக்க வருகின்ற எமன் கூட அதனிடம் அனுமதி கேட்டு தான் வரமுடியும்.

இன்றைய காலத்தில் பன்றியை எல்லாம் வளர்க்கமுடியாது ஒரு தகவலுக்காக உங்களிடம் இதனை பகிர்ந்துக்கொண்டேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கண்டுபிடிக்க முடியாத வியாதி


வணக்கம் நண்பர்களே!
                      ஒருவருக்கு உடல்நிலை நன்றாக இருந்தாலே போதும் என்று நோய் வரும்பொழுது நமக்கு தோன்றும். நோய் தீர்ந்தவுடன் அதனை அப்படியே மறந்துவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவோம்.

மனிதனுக்கு வரும் நோயைப்பற்றி சோதிடத்தை பார்த்து நாம் முன்கூட்டியே அறிந்துக்கொள்ளலாம். ஏதாவது பரிகாரம் செய்துக்கொண்டு பெரிதாக வருவதை சிறிதாக குறைத்துக்கொள்ளலாம்.

சோதிடத்தில் ஆறாவது வீட்டை வைத்து நமக்கு வரும் நோயைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த நோய் தான் வரும் என்பதையும் சொல்லிவிடலாம். ஒரு சில நோயை மட்டும் நாம் கண்டுக்கொள்ளமுடியாது.

ஒருத்தருக்கு நோய் வந்து அதனை பரிசாேதனை செய்து இவருக்கு வந்திருக்கிற நோய் என்ன என்றே தெரியாமல் இருந்தால் அது மறைவு ஸ்தான தசாவில் இருந்து வந்தது என்று அறிந்துக்கொள்ளலாம். மறைவு வீட்டு தசா நடந்தது என்றால் வருகின்ற நோய் என்ன என்று அறிந்துக்கொள்ள முடியாது.

நோய் உடலில் இருக்கின்றது என்று கூட நமக்கு தெரியாது. அது நாள் ஆக ஆக பிரச்சினையை கிளப்பிவிட்டுவிடும். அதனால் உங்களுக்கு மறைவு ஸ்தான தசா நடந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Thursday, January 8, 2015

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      அம்மன் செய்யும் செயலை பார்த்து நானே ஒரு சில நேரங்களில் ஆச்சரிப்படுவேன். ஒரு சில நேரங்களில் நமது தொழில் அதிபர்களின் வேண்டுதலுக்கு இணங்க இவ்வளவு தான் அவர்க்கு பணம் கிடைக்க வேண்டும் என்று நான் அம்மனிடம் வேண்டுவேன். சரியாக அந்தளவுக்கு தான் அம்மன் அவர்களுக்கு கொடுக்கும்.

தொழிலுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தப்பொழுது அதனை எப்படி செய்வது என்றே எனக்கு பலவிதத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஏன் என்றால் நமக்கு வரவேண்டிய பணத்தை எடுத்துக்கொள்வார்களோ அல்லது ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்களோ என்று நான் நினைத்தது உண்டு

இன்றைக்கு அந்தமாதிரி யாரும் கிடையாது. அனைவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். அதே நேரத்தில் அம்மன் மிகச்சரியாக அவர்களுக்கு வேலை செய்கிறது. ஒவ்வொருவரும் மேலை வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சரியாக என்னை கவனித்துவிடுகிறார்கள்.

ஒவ்வொருவரும் அம்மனின் அருளை நன்றாக உணர்ந்தவர்கள். அம்மனின் அருள் என்ன என்று அவர்களுக்கு உணர்த்திவிடுகிறேன். அப்புறம் ஏமாற்றுவதற்க்கே வழி இல்லாமல் போய்விடுகிறது. ஒரு வேலை நடந்துக்கொண்டு இருந்தால் அந்த வேலை உடனே நிற்க வேண்டும் என்று நான் நினைத்த அடுத்த நொடி அப்படியே அந்த வேலை நிற்க்கும்.

இதனை எதற்கு உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் ஒரு அம்மனை நீங்கள் கும்பிட்டு வந்தால் எனக்கு நடப்பது போல் உங்களுக்கு நடக்கவேண்டும். அதனை உணர்த்துவதற்க்கு தான் இதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வீடு


வணக்கம் நண்பர்களே !
                      பொதுவாக ஒரு வாஸ்து நிபுணரை கூப்பிட்டு உங்களின் வீட்டை காண்பித்தால் அவர் ஏதாவது ஒரு குறையாவது சொல்லிவிட்டு சென்றுவிடுவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை சொல்லி உங்களின் வீட்டை இடிக்க சொல்லிவிடுவார்கள். 

உங்களின் வீட்டில் என்ன பிரச்சினை என்பதை இரண்டு வாஸ்து புத்தகங்களை வாங்கி நீங்கள் படித்தாலே தெரிந்துக்கொள்ளமுடியும். என்னுடைய கருத்து எல்லாம் கோவில் போல் உங்களின் வீடு இருக்கவேண்டும் என்றால் அதற்கு தான் செய்துதருவேன். கண்டிப்பாக அது வாஸ்து கிடையாது. 

பொதுவாக இந்த மாதிரி வீடுகளை ஆன்மீகவாதிகள் மிகவும் விரும்பி கட்டி அதில் குடியிருப்பார்கள். இப்பொழுது கூட என்னை தொடர்புக்கொண்டவர்கள் அதிகம் பேர் ஆன்மீகத்தில் நல்ல நிலைமையில் இருப்பவர்கள் தான் தொடர்புக்கொண்டார்கள்.

அனைவரும் இதனை விரும்பி கட்டிக்கொண்டாலும் நல்லது தான். உங்களின் வீட்டை நான் சொல்லுவது போல் அமைத்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகப்பயிற்சி செய்தால் மிகப்பெரிய அளவில் நீங்கள் வருவீர்கள் என்பது மட்டுமே உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு நாளும் எனக்கு பணம் ஏதாவது ஒருவழியில் வந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் ஜாதககதம்பம் என்று சொல்லலாம். 

மாதம் மாதம் அம்மன் பூஜையை வெளியில் தெரிந்து நடத்தினாலும் ஒவ்வொரு நாளும் நான் தங்கியிருக்கும் அறையில் பூஜை செய்துக்கொண்டு இருப்பேன். நான் எதனையும் மறைப்பது கிடையாது. மாதம் மாதம் அம்மன் பூஜை செய்வதற்க்கு செய்யும் செலவை விட வீட்டில் செய்யும் பூஜைக்கு அதிக செலவு எனக்கு ஏற்படும்.

இதனை எல்லாம் மாதத்தில் வரும் சோதிட வழியாக வரும் வருவாயை வைத்து தான் நடைபெறும். எவ்வளவு பணம் வந்தாலும் அது எனக்கு தங்காது. எதாவது பூஜை செய்து பார்ப்பது எனது வேலையாக வைத்திருப்பேன்.

எனது சுயதேவைக்கு தொழில் அதிபர்களுக்கு செய்யும் வேலையில் இருந்து எடுத்துக்கொள்வேன். அப்படி இருந்தும் பல நேரங்களில் கடன் வாங்கியது உண்டு. கடன் எப்பொழுதும் எனக்கு இருக்கும். 

தொழில் அதிபர்களின் பணம் போதுமானதாக இருந்தாலும் அதனை அவர்களுக்கு பூஜை செய்வதற்க்கே அதிகம் செலவு ஆகும். என்னுடைய சுயபரிசோதனை செய்துக்கொள்வதற்க்கும் நிறைய பூஜைகள் செய்ய வேண்டியுள்ளது. ஏன் இப்படி சுயபூஜை செய்கிறேன் என்றால் ஒவ்வொரு நாளும் ஒரு தேடுதல் இருந்துக்கொண்டே இருக்கும்.இதற்கு எல்லாம் அதிக செலவு தான் ஆகின்றது.

அற்புதமான பல விசயங்கள் சுயதேடுதலில் கிடைக்கிறது. அதற்கு எதனை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்திற்க்கும் அம்மன் தான் காரணமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வைகுண்ட ஏகாதசி தரிசனம் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோவில். இது சிதலமடைந்து பிறகு புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது. 






அன்புடன்
ராஜேஷ்சுப்பு