Followers

Saturday, January 28, 2017

சனிக்கிரகம்


வணக்கம்! 
          ஒரு சில விசயத்தில் ஜாதிகள் இருப்பது நமக்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு ஜாதிகளையும் சோதிடத்திலும் அடையாளம் கண்டு வைத்திருக்கின்றனர். சோதிட ரீதியாக நமக்கு ஒரு சில விசங்கள் செய்வதற்க்கு உதவியாக இருக்கும்.

சனிக்கிரகம் தாழ்த்தப்பட்டவர்களை காட்டும் கிரகம். நமக்கு சோதிடத்தில் சனிக்கிரகம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். சனிக்கிரகம் காட்டும் தாழ்த்தப்பட்டவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். 

கோச்சார வழியாக சனிக்கிரகம் பிரச்சினை கொடுக்கும் நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வீண் சண்டை சச்சரவை உருவாக்குவது போல் நடந்துக்கொள்ளகூடாது.

ஒரு சில கெட்ட நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வேண்டும் என்றே நம்மிடம் சண்டை சச்சரவுக்கு வருவார்கள். அந்த நேரத்தில் ஒதுங்கி போய்விடுவது நல்லது. வீண் வம்பும் சனியின் கெட்ட நேரத்தில் வரும்.

நாம் இப்படிப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு உதவி செய்து கூட நாம் சனியின் பாதிப்பை குறைத்துக்கொள்ளமுடியும். 

சனிக்கிரகம் மற்றும் செவ்வாய் கிரகத்திற்க்கு பரிகாரம் செய்வதற்க்கு உங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 27, 2017

சுயபரிசோதனை மூன்றாவது வீடு


ணக்கம்!
          பரிகாரம் சம்பந்தமாக எழுதுவதை விட்டுவிட்டு நீதிபோதனை மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறோமே என்று நினைத்தேன். சரியான ஒரு திசையில் தான் நம்மை அம்மன் வழி நடத்தும் என்று நினைத்து மறுபடியும் இதனை தருகிறேன.

பரிகாரம் நாம் செய்தாலும் நம்மை கொஞ்சம் மாற்றும் சில விசயங்களை நாம் செய்யும்பொழுது மட்டுமே நாம் முன்னேற்றம் என்ற பாதையில் செல்லமுடியும் என்பதை நான் உணர்ந்து தான் சுயபரிசோதனையாக ஒரு சில விசங்களை உங்களை செய்ய சொல்லுகிறேன்.

முதலில் நாம் மறைவுஸ்தானத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த மறைவு ஸ்தானத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் மீதி இருக்கும் சுபஸ்தானங்கள் பலனை கொடுக்காது. மறைவுஸ்தானம் காட்டும் விசயத்தை குறைக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.

முதலில் மூன்றாவது வீட்டிற்க்கு அதிகமுக்கியத்துவத்தை அதிகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். எந்த விசயத்திலும் அடுத்தவர் நம்மை பார்த்து சிரிப்பார்கள் அல்லது பேசுவார்கள் என்று நினைக்காமல் துணிந்து அனைத்து கெட்ட நடவடிக்கையிலும் ஈடுபடுகிறோம். இதனை குறைக்கவேண்டும்.

இன்றைக்கு தொலைதொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எந்த நேரம் பார்த்தாலும் சம்பந்தமே இல்லாமல் போனில் பேசிக்கொண்டே இருக்கிறோம் அல்லவா. போனில் தான் முக்கால்வாசி நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். இதுவும் மூன்றாவது வீட்டிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு செயல். இதனை கொஞ்சம் குறைத்தால் நல்லது.

என்ன நீங்கள் போன் பேசுவதில்லையா என்று கேட்கலாம். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வேறு எதற்க்கும் போன் பேசகூடாது என்று சொல்லுகிறேன். தேவையற்ற அரட்டை அடிப்பது கூடாது. அவசியமான விசயத்திற்க்கு உபயோகப்படுத்துலாம்.

அரட்டை அடித்தால் தான் காரியம் நடக்கிறது அதனால் தான் பேசுகிறேன் என்று சொல்லுபவர்கள் பேசலாம். போனில் தொடர்புக்கொள்வது மூன்றாவது காட்டும் ஒரு செயல். அதனை அதிகமாக பயன்படுத்தும்பொழுது நாம் அந்த வீட்டை சார்ந்து இருக்கிறோம் என்பது தான் கருத்து.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 26, 2017

உயர்ந்த பண்பு


வணக்கம்!
          பல பெரியவர்களை பார்த்து இருக்கிறேன். வயது ஏறினாலும் ஒரு சிலர் இன்னமும்  சல்லியாக நடந்துக்கொள்வார்கள். பல பிரச்சினைகளை உருவாது இவர்கள் தான் இருக்கும். வயது ஏறினால் அமைதி இருக்கவேண்டும்.

ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி அதில் நிறைய குளறுபடிகள் நடந்தால் கூட நாம் அமைதியாக இருந்துவிடவேண்டும் அது தான் நல்லது.

ஒரு உயர்ந்த பண்பாக நாம் என்ன நினைக்கவேண்டும் என்றால் இந்த நிகழ்வு நன்றாக நடக்கவேண்டும் என்ற ஒரு மனநிலையில் நீங்கள் இருந்தால் போதும். அது அவர்களை வாழ்த்தும். உங்களையும் இந்த உலகம் மதிக்கும்.

மேலே சொன்ன பண்பு உங்களிடம் இயற்கையாக வரவேண்டும் என்றால் அதற்கு உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும். உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் சரியில்லாமல் இருந்தால் கூட இதனை நீங்களே கற்றுக்கொள்ளுங்கள்.

மிக உயர்ந்த பண்பு எல்லாம் நம்மிடம் வரவேண்டும் என்றால் அதற்கு நம்முடைய ஜாதகத்தில் குரு தசா நடக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு ஒரு குரு இருந்து வழிகாட்டினால் இது எல்லாம் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 25, 2017

எந்த முன்னேற்றமும் இல்லை


வணக்கம்!
          நிறைய பேர்கள் என்னிடம் சொல்லும் வார்த்தை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை மற்றும் சொல்லுவார்கள். இதுவரை நிறைய கோவில்கள் மற்றும் ஆன்மீகபயிற்சி எல்லாம் செய்துவருகிறேன் ஆனால் முன்னேற்றம் இல்லை என்பார்கள்.

இதுவரை பல பேர்கள் சொல்லும் இந்த கருத்தை இன்று காலை ஒரு நண்பர் கேள்வி கேட்டார். அதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. நாம் ஒன்றை கவனிக்க தவறிவிடுகிறோம்.

நாம படித்தது அரசு பள்ளியில் அந்த பள்ளியில் ஆசிரியர் வந்து கிளாஸ் எடுத்ததை எல்லாம் இன்று நினைத்தாலும் நமக்கே சிரிப்பு வந்துவிடும். அந்தளவுக்கு மோசமான ஒரு பள்ளியை படித்து கரை சேர்ந்து வந்து இருக்கலாம்.

உங்களின் குழந்தையை பாருங்கள். அதனை எப்பேர்ப்பட்ட பள்ளியில் படித்து வைத்துக்கொண்டு இருக்கின்றோம் என்று கொஞ்சம் பார்த்தால் நாம் முன்னேற்றம் அடைந்துக்கொண்டு தான் வருகின்றோம் என்று உங்களுக்கு தெரியும்.

நம்ம தந்தை நமக்கு என்று பெரிதாக செய்யவில்லை ஆனால் நம்முடைய வாரிசுக்கு நாம் பெரிதாக செய்துக்கொண்டு வருகிறோம். நம்முடைய வாழ்க்கை தியாகவாழ்க்கை ஆனால் நமது வாரிசுகளின் வாழ்க்கை ஜாலி வாழ்க்கையை அமைத்துக்கொடுத்து இருக்கிறோம்.

நாம் புண்ணியத்திலும் சரி பணத்திலும் சரி நிறைய நமது வாரிசுகளுக்கு சேர்க்கிறோம் என்பது தான் நீங்கள் செய்யும் இந்த வேலைகள் எல்லாம் என்பதை கொஞ்சம் சிந்தித்தால் உங்களுக்கு புரியும்.

நீங்கள் உழைக்கும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமைவதற்க்கு கொஞ்சநாள்கள் ஆகும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அனைத்தையும் செயல்படுங்கள். புண்ணியமும் பணமும் உங்களின் வாழ்க்கையும் மற்றும் கண்டிப்பாக உங்களின் வாரிசுகளுக்கும் ஒரு நிரந்தர நல்லவாழ்க்கை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 24, 2017

பரிகாரம்


வணக்கம்!
         சனி மற்றும் செவ்வாய் பரிகாரத்திற்க்கு தற்பொழுது ஒவ்வொருவராக தங்களின் ஜாதகத்தை அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று ஒரு கேள்வி வருகின்றது. அவர் அவர்களின் விருப்பம் போல் பணம் அனுப்பலாம். பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை அவர் அவர்களுக்கு கண்டிப்பாக பரிகாரம் செய்யப்படும்.

நேற்று நண்பர் ஒருவர் போன் செய்து பரிகாரத்தில் கலந்துக்கொள்ள நேரில் வரலாமா என்று கேட்டார். பொதுபரிகாரத்தில் கலந்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. பொதுபரிகாரத்தில் கலந்துக்கொள்ளும்பொழுது அடுத்தவர்களுக்கும் பரிகாரம் செய்வதால் அதில் கலந்துக்கொள்ளவேண்டாம் என்று சொல்லுகிறேன்.

தனிப்பட்ட நபருக்கு மட்டும் செய்வதாக இருந்தால் அதில் நேரிடையாக வந்து கலந்துக்கொள்ளலாம். என்னை வந்து சந்திக்கவேண்டும் என்றால் ஒரு தனிப்பட்ட நாளில் வாருங்கள். ஒவ்வொருவருக்கும் வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்புகிறேன். தவறாமல் வாட்ஸ்அப் நம்பரை இணைத்து அனுப்பவேண்டுகிறேன்.

அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்களுக்கு என்று தனிப்பட்ட பரிகாரம் செய்யதேவையில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு என்று தனிப்பட்ட கவனம் எப்பொழுதும் செலுத்திவருவது உண்மை. அவ்வப்பொழுது சரி செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிவருகிறேன்.

விரைவில் சனி செவ்வாய் பரிகாரம் இறுதி அறிவிப்பை வெளியிட உள்ளேன். உடனே உங்களின் ஜாதகத்தை அனுப்பிவைத்துவிடுங்கள். நல்ல வாய்ப்பை தவறவிடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 22, 2017

மூன்றில் சனி மற்றும் செவ்வாய்


ணக்கம்!
          சனிக்கிரகம் மற்றும் செவ்வாய் கிரகம் இரண்டும் சேர்ந்து மூன்றாவது வீட்டில் இருந்தால் அவர்கள் தைரியத்தோடு இருப்பார்கள். எந்த காரியத்திலும் வெற்றி பெற்றுவிடுவார்கள். எங்கு சென்றாலும் தனி ஆளாக நின்று ஜெயித்துவிடுவார்கள்.

சனி செவ்வாய் மூன்றாவது வீட்டில் இருந்தால் அடுத்தவர்களோடு ஒத்து செல்லமாட்டார்கள். வீண் பிடிவாதம் பிடித்துக்கொண்டு அவர்களுக்கு நடைபெறும் நல்லதை கூட எனக்கு உன்னால் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.

சனி செவ்வாய் சேர்ந்து இருப்பது திருமணத்தை தள்ளிபோடவும் வைக்கின்றது. பல பேர்களை நான் கவனித்து பார்த்து இருக்கிறேன். அவர்களின் திருமணம் ஏதோ காரணத்திற்க்காக தள்ளி சென்றுக்கொண்டு இருக்கின்றது.

சனி செவ்வாய் சேர்ந்து இருக்கும்பொழுது ஒரு சில காலத்தில் வெளி தொடர்பு இல்லாமல் தனிமை வாழ்வையும் உருவாக்கிவிடுவது உண்டு. அடுத்தவர்களோடு சண்டை சச்சரவோடு வாழ்வை தனிமையாகவும் செல்ல வைக்கும்.

பெண்களின் ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்ந்து மூன்றில் இருப்பது அதிக பிரச்சினையை உருவாக்கி வைக்கும். பெண்களின் ஜாதகத்தில் மறைவிடம் அதிக பலன் பெறுவது தவறு. பெண்களின் ஜாதகத்தில் அப்படி பலன் பெற்றால் அவர்களின் வாழ்வு இல்லறத்திற்க்கு ஏற்றார்போல் இருக்காது.

சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி கோரிக்கை மற்றும் வாட்ஸ்அப் நம்பரையும் இணைத்து அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 21, 2017

திருமண வாழ்வு சிறக்க


வணக்கம்!
          இன்று தொடர்மழை பெய்து வருகின்றது. மழை பெய்தால் பதிவு தருவதற்க்கு இங்கு நிறைய சிரமம் இருப்பதால் உங்களுக்கு காலையில் பதிவை தரமுடியவில்லை. தற்பொழும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இருந்தாலும் கஷ்டப்பட்டு இந்த பதிவை தருகிறேன். நேற்று திருமணத்தைப்பற்றி பார்த்தோம். அதில் இருந்து ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்று இருந்தேன். அந்த கருத்து இது தான்.

எனக்கு தெரிந்த ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் என்னிடம் அவரின் பையனுக்கு திருமண வரம் பார்க்கவேண்டும் என்று நிறைய ஜாதகத்தை எடுத்துக்கொடுத்தார். ஒரு நல்ல ஜாதகமாக பார்த்து அந்த பையனுக்கு ஒரு பெண்ணின் ஜாதகத்தை பரிந்துரை செய்தேன்.

பெரிய பணக்காரர்கள் என்றாலே அவர்கள் அடுத்தவரை அலட்சியம் செய்து விடுவார்கள். அவர்கள் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்க்கு என்று ஒரு வார்த்தை கூட எனக்கு சொல்லவில்லை. நானும் வேலை பளுவில் அதனை எல்லாம் மறந்துவிட்டேன்.

தற்பொழுது என்னை தொடர்புக்கொண்டு திருமணம் ஆன இருவருக்கும் பிரச்சினை என்று சொன்னார். ஜாதகத்தில் அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை என்றாலும் அவர்களின் திருமண சம்பந்தமாக ஒன்றை சொல்லவேண்டும். திருமணத்திற்க்கு திருமண மண்டபம் ஏற்பாடு செய்வதற்க்கு ஒரு வருடத்திற்க்கு முன்பே புக் செய்யவேண்டுமா. சென்னையில் பெரிய திருமண மண்டபம் எல்லாம் புக் செய்வதற்க்கு இந்த விதியாம்.

திருமண நாளை தேர்ந்தெடுக்கும்பொழுது ஒன்றை எல்லாேருக்கும் சொல்வோம். அதாவது திருமண நாள் குறிக்கும்பொழுது அந்த திருமண நாளில் பெண்களுக்கு மாதவிலக்கு இருக்ககூடாது என்பது ஒரு விதி.

நமது சடங்குங்கள் அனைத்தும் அக்னியில் செய்யப்படும். அந்த நாளில் பெண்கள் மாதவிலக்கோடு அக்னியின் முன்பு அமரகூடாது. திருமண மண்டபம் ஒரு வருடத்திற்க்கு முன்பு புக் செய்வதால் இதனை கணக்கீடு செய்யமுடியாது என்று விட்டுவிடுவார்கள். அதாவது பரவாயில்லை இருந்தால் இருக்கட்டும் என்று நினைக்கிறார்கள்.

பணக்காரர்கள் என்றால் அப்படிப்பட்ட திருமண மண்டபத்தை தேர்ந்தெடுத்து அதில் திருமணம் செய்தால் தான்  ஒரு பணக்காரன் என்று நினைக்கிறார்கள். விளைவு திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

உங்களின் பணக்கார அந்தஸ்த்தை காட்டுவதற்க்கு இப்படிப்பட்ட வேலை தேவையில்லை. பெரிய இடத்தை பார்க்காமல் பெண்ணின் இந்த நாள் எது என்று பார்த்து அதனை தவிர்த்துவிட்டு திருமணத்திற்க்கு நாளை தேர்ந்தேடுத்தால் உங்களின் வாரிசுகளின் திருமண வாழ்வு நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 20, 2017

தோஷத்தை போக்கும் திருமணம்


வணக்கம்!
          நேற்று எழுதிய கிரகங்கள் தரும் மாயை என்ற பதிவை பாராட்டினார்கள். அந்த பதிவு ஆன்மீக அனுபவங்கள் பகுதியில் இடம்பெறுவதற்க்காக எழுதிய ஒன்று. அதனை எல்லாேரும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்கு இதில் கொடுத்தேன்.

தற்பொழுது இளைஞர்கள் அதிகம் பேர் ஜாதகத்தை கையில் எடுத்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஒருவர் இளம்வயதில் ஜாதகத்தை எடுப்பது நல்லது என்று சொன்னாலும்  ஒரு விதத்தில் தவறு என்று சொல்லலாம்.

ஒருவர் ஜாதகத்தை எடுத்து பார்க்கிறார் என்றால் அவர்க்கு நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன என்று அர்த்தம் கொள்ளவேண்டும். நான் சந்தித்த பலர் கஷ்டத்தில் தான் இருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்ட ஜாதகத்தை எடுத்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

நிறைய சோதனைகளை கொடுப்பது மறைவு ஸ்தான அதிபதிகளின் தசா தொடர்ச்சியாக வருவது தான். ஒரு மறைவுஸ்தான அதிபதியின் தசா வந்தாலே அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடும். தொடர்ச்சியாக இரண்டு பெரிய தசா மறைவு ஸ்தானத்தில் இருந்து நடைபெற்று வந்தால் பிரச்சினை எப்படி இருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

இளைஞர்களுக்கு சொல்லுவது எல்லாம் தொடர்ச்சியாகவே திருமணத்திற்க்கு முன்பு கஷ்டமான தசா வந்தால் போராடுவதை விட்டுவிட்டு திருமணத்தை செய்துவிடுவது நல்லது.

திருமணத்தை செய்யும்பொழுது வரக்கூடிய அந்த பெண்ணின் ஜாதகத்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு மாற்றம் வரும் என்பது மட்டும் உண்மை. காசே இல்லே எப்படி திருமணம் செய்வது என்று கேட்கலாம். இந்தியாவில் காசை வைத்துக்கொண்டு தான் திருமணம் செய்யவேண்டும் என்றால் ஒரு பயலும் திருமணத்தை செய்யமுடியாது. 

பாேராடி பார்த்துவிட்டு அதன் பிறகு திருமணத்தை செய்துக்கொள்ளலாம். போராடாமல் சென்று உடனே திருமணத்தை செய்யவேண்டாம். நிறைய கஷ்டப்பட்டு ஒன்றும் பலன் இல்லை என்றால் திருமணத்தை உடனே முடிப்பது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 19, 2017

கடன்பட்ட வாழ்க்கை


வணக்கம்!
          ஒருவருக்கு சனி ஆறாவது வீட்டில் இருந்து தசாவை நடத்தினால் அவர்க்கு நல்லது என்று சொல்லுவோம். சனி ஆறாவது வீட்டில் இருந்தால் அவர்க்கு கடனும் இருக்கும். பெரிய பணக்காரர்களாக இருந்தால் கூட வங்கியில் கடனை வாங்கி வைத்திருப்பார்கள்.

பெரும்பாலும் நம்முடைய வாழ்வில் நிறைய கஷ்டம் வருவதற்க்கு காரணம் மறைவு ஸ்தானம் பலப்படுவது. மறைவு ஸ்தான அதிபதி தசா நடப்பது ஒருவரின் வாழ்க்கைக்கு பெரிய பிரச்சினை கொடுத்துவிடும்.

மறைவு ஸ்தானம் தொடர்ந்து தசா நடக்கும்பொழுது அவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நான் அனுபவத்தில் நிறைய பார்த்து இருக்கிறேன். மறைவுஸ்தானம் கொடுக்கும் வாழ்க்கை பெரும்பாலும் எடுப்படாமல் சென்றுவிடும்.

அனைத்திலும் தோல்வியை சந்திக்கும் மனிதன் நிறைய பேர்கள் இருக்கின்றனர். அவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தொடர்ச்சியாக மறைவுஸ்தான அதிபதிகளின் தசா நடந்துவந்திருக்கும்.

அதிகமான கடனை தருவதும் இப்படிப்பட்ட மறைவுஸ்தான அதிபதியின் செயல் தான். சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து இருந்தால் கூட அவர்களும் கடனை அதிகளவில் வாங்கி வைத்துவிடுவார்கள். அதனாலேயே அதிக பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

உங்களின் ஜாதகத்தை முதலில் எடுத்துக்கொண்டு மேலே சொன்னபடி இருந்தால் நீங்கள் பரிகாரத்தில் பங்குக்கொள்ளலாம். உங்களின் ஜாதகத்தை என்னிடம் அனுப்பி இதற்கு ஆலோசனையும் பெற்றுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


ணக்கம்!
          நமது பரிகாரம் எல்லாம் நமது ஆட்கள் பார்க்கவேண்டும் என்பதற்க்காக அவர் அவர்களின் வாட்ஸ்அப் நம்பரை கேட்டு வாங்கியுள்ளேன். பரிகாரம் செய்து முடித்து அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் படம் இணைத்து அனுப்பப்படும். 

லைவ்வாக காட்டலாம் ஆனால் நான் இருக்கும் கிராமத்தில் நெட்வசதி அந்தளவுக்கு இல்லை அதோடு நம்மிடம் போதிய கருவியும் இல்லை. வருங்காலத்தில் நீங்கள் லைவ்வாக பார்க்கும்படி செய்துவிடலாம்.

ஒரு நண்பர் கேட்டார் இது எல்லாம் நடக்குமா என்று கேட்டார். கண்டிப்பாக நடப்பதால் தான் தொடர்ந்து பரிகாரத்தை பரிந்துரை செய்து அதில் இலவசத்தையும் இணைத்துள்ளேன். இலவசத்தில் வந்துகூட அதன் பிறகு நீங்கள் கட்டணத்தை செலுத்தி செய்துக்கொள்ளலாம்.

பல வருடங்களாக தொடர்ந்து நமது அம்மன் பூஜைக்கு மற்றும் தற்பொழுது தொடர்ந்து பரிகாரபூஜைக்கு எல்லாம் பணம் அனுப்புவர்கள் இருக்கின்றனர் என்றால் அது நடப்பதால் மட்டுமே வருகின்றார்கள்.

நேரிடையாக என்னுடைய இடத்திற்க்கும் வந்து நீங்கள் இதனை செய்துக்கொள்வதாக இருந்தால் தாராளமாக நீங்கள் வந்து இதில் பங்குக்கொள்ளலாம். தாராளமாக உங்களை வரவேற்கிறேன். 

அனைவரும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்களின் வாழ்வில் ஒரு மாற்றம் வரும் அதன் பிறகு நீங்கள் தொடர்ந்து பங்களிப்பீர்கள். தற்பொழுது உள்ள பரிகாரம் மிகப்பெரிய பரிகாரமாக இருக்கும் இரண்டு கிரகங்களும் பெரிய கில்லாடியான கிரகங்கள் அதனை செய்வதற்க்கு தகுந்த நேரமும் நமக்கு தேவை அதனால் உடனே உங்களின் ஜாதகத்தை தாமத்திக்காமல் அனுப்பி வைத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரகங்கள் தரும் மாயை


ணக்கம்!
          உலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கிரகங்களின் வேலை என்பதை சோதிடம் அறிந்த அனைவரும் நன்கு அறிவார்கள். இதனை அறிந்தவன் அதனை கண்டுக்கொண்டு பெரியளவில் பாதிப்படையமாட்டான். பாதிப்படையாமல் இருப்பவனை ஆன்மீகவாதி என்று அழைக்கலாம்.

தற்பொழுது நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டம் அதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அதற்கு முன்பு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இப்படியே தொடர்ச்சியாக ஒவ்வொன்றும் கிளம்பிக்கொண்டே இருக்கும். 

ஒவ்வொரு மாதத்திலும் பல பிரச்சினைகள் கிளப்பிக்கொண்டே கிரகங்கள் சென்றுக்கொண்டு இருக்கும். அதனுள் நீங்கள் சென்றுவிட்டால் இழப்பது உங்களின் சக்தியாக தான் இருக்கும். அதாவது நம்முடைய அனைத்து சக்தியும் வீணாக செல்வதற்க்கு கிரகங்கள் செய்யும் விளையாட்டு நாட்டில் நடைபெறும் பிரச்சினைகள்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்லது ஆதரவனாவன் என்று சொல்லவில்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருந்திருக்கும். பணப்பிரச்சினையை பேசி பேசி நமது உடலில் உள்ள சக்தி முழுவதும் சென்று இருக்கும். அதன் பிறகு ஒரு நிகழ்வைப்பற்றி பேசி பேசி சக்தி சென்று இருக்கும். தொடர்ந்து சக்தியை இழக்கும் நிகழ்வுகள் வந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் சக்தியை இழந்த மனிதனாக இருப்பீர்கள்.

தொடர்ந்து சக்தியை இழந்தால் நீங்கள் ஒரு நடைபிணம் போல் மாறிவிடுவீர்கள். நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் உங்களால் அந்த சக்தியை எடுக்கும் ஆற்றலை இழந்துவிடுவீர்கள் என்பது தான் உண்மை.

நீங்கள் நினைக்கலாம் நீங்கள் ஒரு சுயநலவாதி என்று சொல்லலாம். தனிமனிதன் மேம்பாட்டிற்க்கு என்ன வழி என்பதை தான் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஆன்மீகம் மாயை என்று சொல்லிவிடும். அதனை கண்டு நீ வெகுண்டு எழுந்தால் உனது சக்தி போய்விடும் அதனை விட்டுவிடு என்று ஆன்மீகம் போதிக்கும்.

மாயையில் சிக்காமல் உங்களின் சக்தியை மேம்படுத்த என்ன வழி என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு சென்றால் குறைந்தது ஒரு வருடத்தில் நீங்கள் மிகப்பெரிய சக்தியான மனிதனாக மாறிவிடுவீர்கள். அப்புறம் உங்களைப்பற்றி பேசியே ஒரு மாயை உருவாகும். 

உலகத்தில் எது நடந்தாலும் சரி அதனை பார்த்து வெகுண்டு எழுவது எல்லாம் வேண்டாம். சும்மா அதனை பார்த்துவிட்டு சென்றுவிடுங்கள். உங்களின் உள்ளே இருக்கும் ஆத்மா பாதிக்காது.

சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள். உங்களின் கோரிக்கை மற்றும் வாட்ஸ்அப் நம்பரையும் இணைக்கவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 18, 2017

எட்டில் செவ்வாய் சனி


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சனி இணைந்து எட்டாவது வீட்டில் இருந்தால் அவர்க்கு அதிகப்பட்சம் உலகத்தில் உள்ள அவமானம் மற்றும் சண்டையால் அடிப்படுவது எல்லாம் நடக்கும்.

ஒரு சிலருக்கு இது நன்றாகவும் இருக்கும். பெரியளவில் சாதிப்பவர்களுக்கு இந்த அமைப்பு நன்றாகவும் வேலை செய்கிறது. ஒரு சிலருக்கு உழைக்காமல் தன்னுடைய வாழ்க்கையை பிறர் வழியாக ஓட்டிக்கொள்வதற்க்கு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதும் உண்டு.

சனி செவ்வாய் எட்டில் இருந்தால் ஒரு சிலர் திருமணம் ஆனவுடன் அவர்களின் மாமனார் வீட்டில் இருந்து பணவசதியை பெற்று வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

வெளியில் இருந்து உழைக்காமல் பணம் வருகின்றது என்பதால் ஊதாரியாக பணத்தை செலவு செய்து வைத்திருக்கின்ற பணத்தை இழக்க வைக்கும் அதனை மட்டும் சரிசெய்தால் போதும் வாழ்க்கையை அப்படியே ஓட்டிக்கொண்டு இருக்கலாம்.

இருகிரகங்களும் எட்டில் இருக்கும்பொழுது வாழ்க்கையில் அதிகப்படியான ஒரு வெறுப்பை அவர்களுக்கு தரும். பெரும்பாலும் இல்லறவாழ்க்கை நன்றாக இருக்காது. அதிகபடியான சந்சியாசி வாழ்வை கொடுக்கும்.

செவ்வாய் சனி இணைந்து எட்டில் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சரியில்லை என்றாலும் ஒரு சிலருக்கு நன்றாக இருந்தாலும் இந்த பரிகாரத்தில் பங்குபெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


ணக்கம்!
          பரிகாரம் என்ற ஒன்றை ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் இந்த தளத்திற்க்கு வரும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கம் மட்டுமே. இதில எந்த ஒரு வியாபாரநோக்கம் இல்லை. நான் பெரும்பாலும் சம்பாதிப்பது தொழில் செய்பவர்களுக்கு செய்துக்கொடுத்து அதன் வழியாக வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடக்கிறது.

இந்த தளம் ஒரு ஆதாரமாக இருப்பதால் இதில் இருந்து வரும் நண்பர்களுக்கு முடிந்தளவு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கம் இருந்ததை தற்பொழுது தான் அனைவருக்கும் அவர் அவர்களின் விருப்பதற்க்கு தகுந்தார்போல் செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

தொழில் செய்பவர்களை மட்டுமே வாடிக்கையாளர்களை வைத்துக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு இதில் உள்ளவர்களுக்கும் நல்லது செய்து அதன் வழியாக பல புண்ணியத்தை தேடினேன் என்று தான் சொல்லவேண்டும். 

பரிகாரம் மற்றும் ஆன்மீகபணிக்கு பணம் வாங்ககூடாது என்று சொன்னாலும் இதனை செய்வதற்க்கு எல்லாம் பணம் தேவைப்படுகின்றது. இதனை எல்லாம் தயார் செய்துவிட்டு அதன் பிறகு அறிவிப்பை வெளியிடுகிறேன்.

கட்டணத்தில் செய்ய நினைப்பவர்கள் அல்லது என்னால் இலவசத்தில் தான் பங்குபெறமுடியும் என்று நினைப்பவர்களுக்கும் பங்குபெறலாம். எந்த வித பாகுபாடும் இன்றி பரிகாரம் செய்யப்படும். 

பெரும்பாலும் ஒருவர் பரிகாரம் செய்ய போகிறார் என்றால் அவர் அவ்வளவு எளிதில் செல்லமாட்டார்கள். அவர்களின் கர்மா அதனை தடைசெய்யும். பரிகாரம் என்ற ஒன்றை அவர்களின் விருப்பத்திற்க்கு தகுந்தவாறு செய்யும்பொழுது அவர் அவர்களின் பணநிலை வைத்தே செய்ய முடியும் அப்படியே இல்லை என்றாலும் இலவசமாக செய்துக்கொண்டு ஒரு நல்லவாழ்க்கைக்கு மாறமுடியும் என்பதற்க்காக பரிகாரம் பரிந்துரை செய்கிறேன்.

தற்பொழுது சனிக்கிரகம் தனியாகவும் செவ்வாயகிரகத்திற்க்கு தனியாகவும் மற்றும் சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களுக்காகவும் பரிகாரம் செய்யப்படுகிறது. அதிகப்பட்சம் இதில் அனைவரும் கலந்துக்கொள்ளமுடியும். அதிகப்பட்சம் இந்த கிரகத்தின் பாதிப்பு இருப்பர்கள் இருப்பார்கள்.

உடனே உங்களின் ஜாதகத்தை மற்றும் கோரிக்கை வாட்ஸ்அப் நம்பரை அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உழைப்பை கற்றுக்கொள்ளவேண்டும்


ணக்கம்!
          லீவ் மூடு என்பது இருக்கவேண்டும் ஆனால் அது ரொம்ப காலத்திற்க்கு இருக்ககூடாது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து அதே மூடில் இருப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதனை எல்லாம் விட்டுவிட பாருங்கள்.

ஒரு சந்நியாசியை பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். அதாவது நாம் சும்மா கார்ப்பரேட் சாமியார்கள் என்று திட்டிக் கொண்டு இருப்போம் ஆனால் அவன் உழைப்பது மாதிரி இல்லறத்தில் இருபவர் ஒருவரும் உழைப்பது கிடையாது.

எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள் பாருங்கள் அந்த உழைப்பை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நம்ம ஆளுங்க அடுத்தவனை பார்த்து திட்டத்தான் செய்வார்கள் ஒழிய அடுத்தவனிடம் இருந்து கற்றுக்கொள்வது கிடையாது.

நான் நிறைய உதாரணத்தை சொல்லலாம் ஆனால் ஒரு சாமியாரை ஏன் உதாரணமாக சொல்லுகிறேன் என்றால் எதுவும் தேவையில்லை என்று இருந்தாலும் அவன் உழைத்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் பாருங்கள் அந்த உழைப்பு அனைவருக்கும் இருந்தால் போதும். நாம் லீவ் மூடு என்பதை நம் வாழ்நாளில் கொண்டு வரமாட்டோம்.

மாதத்தில் ஒரு பண்டிகை வந்தால் அந்த பண்டிகை வைத்தே அந்த வாரம் முழுவதும் சோம்பேறியான மனநிலையை உருவாக்கவேண்டாம் என்பதற்க்காக தான் இந்த பதிவை தந்தேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 17, 2017

விரையத்தில் செவ்வாய் சனி


ணக்கம்!
         செவ்வாய் மற்றும் சனி இணைந்து பனிரெண்டாவது வீட்டில் இருந்தால் அந்த நபர்களுக்கு ஆயுள் குறைவு என்று சொல்லலாம். இன்றைய காலத்தில் பல இடத்தில் கொலைகள் நடைபெறுகின்றன. இந்த கொலைகளை பார்த்தால் அவர்களின் உடல் வெட்டப்பட்டு இறக்கின்றனர்.

ஒரு சாதாரண மனிதன் இறந்தால் அவர் உயிரை விடும்பொழுது அவரின் உடலுக்கு எந்த வித தீங்கும் விளையாமல் சாதாரணமாக இறப்பார்கள் அதன் பிறகு அதனை இறுதிசடங்குகள் நடைபெறுகிறது.

ஒருவர் வன்முறையான முறையில் இறக்கும்பொழுது அவர்களின் உடல் பலவிதத்திலும் துன்பப்பட்டு இறக்கின்றது அல்லவா. இப்படிப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் பனிரெண்டாவது வீட்டில் சனி செவ்வாய் கூட்டணி போட்டு அமர்ந்திருக்கும்.

சனி செவ்வாய் கூட்டணி தான் ஒருவர் இறப்பில் பல துன்பங்களை கொடுத்து இறக்க வைக்கின்றது. உங்களுக்கு இப்படி அமைந்து நீங்கள் சாதாரணமானவர்களாக இருந்தாலும் உங்களுக்கு வரும் நோயால் உங்களின் உடல் உறுப்புகளை இழக்க நேரிடலாம். 

வன்முறைக்கு செல்பவர்கள் குறைவு என்பதால் வரும் விசயம் நோயாக இருக்கும் அதனால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.நோயால் மருத்துவமனையில் உறுப்பு அறுப்பட்டு கூட சாக நேரிடும்.


இந்த பரிகாரம் செய்வதற்க்கு நான் பல விதத்திலும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன். இலவசமாக செய்யவேண்டும் என்பது ஒரு நோக்கமாக இருந்தது. இலவசம் என்றாலும் அதற்கு செய்யப்படும் பூஜை செலவுகள் அதிகம் என்பதால் இப்படிப்பட்ட செலவுகளை செய்வதற்க்கு பணம் தேவைப்படும் என்று காத்துக்கொண்டு இருந்தேன்.

அம்மன் அருளால் நமக்கு ஒரு நபர் கொஞ்சம் பணத்தை அனுப்பி இதனை நல்ல விசயத்திற்க்கு பயன்படுத்துங்கள் என்று சொன்னார். அதோடு அம்மன் பூஜைக்கு இந்த தடவை செய்த பிறகு கொஞ்ச பணமும் இருந்தது. அதனையும் இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இலவச அறிவிப்பை அறிவித்தேன். இன்னமும் பணம் தேவைப்படும் அதனை அவ்வப்பொழுது வரும் பணத்தை வைத்து பார்த்துக்கொள்ளலாம்.

கட்டணத்தை செலுத்தி செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த பரிகாரம் செய்யப்படும். உங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு கோரிக்கை மற்றும் வாட்ஸ்அப் நம்பரையும் தெரிவித்துவிடுவது நல்லது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விரைய வீட்டில் செவ்வாய் சந்திரன்


வணக்கம்!
         நாம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சேர்த்து வைத்தாலும் அந்த பணத்தை ஒரு நாள் எப்படியும் ஏதோ ஒரு தண்டசெலவு வைத்துவிடும். வீணாக பணம் செல்வதை குறைப்பதற்க்கு தான் நாம் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து அடிக்கடி தர்ம செலவு செய்யவேண்டும். தர்மசெலவு செய்யும்பொழுது நமக்கு ஏற்படும் வீண்செலவு குறையும்.

பனிரெண்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு மருத்துவச்செலவு என்பது அடிக்கடி விபத்து ஏற்பட்டு செலவு வைக்கும். செவ்வாய் பனிரெண்டாவது வீட்டில் இருந்தால் அவர்களுக்கு அந்த தசா அல்லது கோச்சாரப்படி சரியில்லாத நேரத்தில் மருத்துவத்திற்க்காக ஒரு பெரிய செலவு செய்ய வைக்கும்.

பனிரெண்டாவது வீடு செவ்வாய் சந்திரன் இருந்தால் மனம் பெரும்பாலும் காமத்தை நோக்கி இழுக்க வைக்கும். காம நினைப்பு எந்த நேரம் ஏற்பட்டு அதற்காக உங்களின் உடலும் இளைக்கும். நிறைய பெண்களின் தொடர்பு ஏற்படும்.

விரைய வீட்டில் செவ்வாய் இருக்கும்பொழுது உங்களின் நிலமும் விரையம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் சகோதர்களே உங்களின் நிலத்தை எடுத்துக்கொள்வதற்க்கு வாய்ப்பு உருவாகும்.

ஒரு சிலருக்கு செவ்வாய் மற்றும் சந்திரன் பனிரெண்டில் இருந்தால் அவர்கள் நிலம் வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டு அதற்க்காக காலம் முழுவதும் மனகஷ்டத்தை அனுபவிக்க நேரிடும்.

பெண்களாக இருந்தால் கண்டிப்பாக மாதவிடாய் கோளாறு ஏற்பட்டு அதனால் உங்களுக்கு நிறைய பிரச்சினையை சந்தித்துக்கொண்டு வருவீர்கள்.

மேற்சொன்னபடி உங்களுக்கு பிரச்சினை இருந்தால் நீங்களும் பரிகாரத்தில் பங்குக்கொள்ளலாம். உங்களின் பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வை இந்த பரிகாரம் உங்களுக்கு தரும்.

அனைவரும் ஜாதகத்தை அனுப்பும்பொழுது தங்களின் வாட்ஸ்அப் நம்பரை தவறாமல் இணைக்கவேண்டும். உங்களின் கோரிக்கை என்ன என்பதை எழுதி அனுப்பிவைத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 16, 2017

சனி செவ்வாய் பரிகாரம்


ணக்கம்!
          கோபி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் சென்று வந்தேன். பயண களைப்பு மற்றும் பொங்கல் வேலை காரணமாக பதிவு தரமுடியவில்லை இனி தொடர்ந்து பதிவை தந்துவிடுகிறேன். 

முதலில் ஒரு இனிய செய்தியை தந்துவிடுகிறேன். சனி செவ்வாய் பொதுபரிகாரம் இலவசமாக நடத்தப்படும். விருப்பட்டு பணம் அனுப்பும் நண்பர்கள் அனுப்பலாம். இலவச பரிகாரம் என்றாலும் நீங்கள் ஒரு வேலை செய்யவேண்டும் அருகில் இருக்கும் கோவிலில் நீங்கள் ஏதோ ஒரு உதவியை செய்துவிடவேண்டும்.

தைபூசத்தோடு இந்த பரிகாரம் சம்பந்தப்பட்டு செய்யப்படுகின்றது. உங்களின் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கும் ஏதோ ஒரு உதவியை செய்துவிடலாம்.

கட்டணம் என்னிடம் செலுத்த விருப்படும் நண்பர்கள் எனது வங்கிகணக்கில் செலுத்திவிடுங்கள். இலவசம் மற்றும் கட்டணம் இரண்டையும் பாகுபாடு இல்லாமல் பரிகாரம் செய்யப்படும். ஜாதகத்தை அனுப்பும் நண்பர்கள் எனது இமெயிலுக்கு அனுப்பிவையுங்கள்.

செவ்வாய் மற்றும் சனி இணைந்து இருக்கும் நண்பர்கள் மற்றும் சனி தனியாக பிரச்சினை செய்தாலும் செவ்வாய் தனியாக பிரச்சினை செய்தாலும் அனைத்திற்க்கும் பரிகாரம் செய்யப்படும்.

அனைவரும் இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இலவச அறிவிப்பை அறிவித்து இருக்கிறேன். அனைவரும் கலந்துக்கொள்ளலாம். உங்களின் வாட்ஸ்அப் நம்பரையும் ஜாதகம் அனுப்பும்பொழுது அனுப்பி வைத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 14, 2017

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!
          அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 13, 2017

தலைவலிக்கு அருமருந்து


ணக்கம்!
          எனக்கு கடும் தலைவலி வரும். தலைவலி வந்த நபர்களுக்கு தான் அதன் வலி என்ன என்பது புரியும். தலைவலி வருவதற்க்கு பல காரணங்கள் எனக்கு இருந்தாலும் இதனை போக்க வழி என்ன என்பதை பல பேரிடம் கேட்டேன். அதற்கு சரியான ஒரு தீர்வு எனக்கு கிடைக்கவில்லை.

எனக்கு தீர்வுகிடைக்கவில்லை என்பதற்க்காக நான் ஒய்வு எடுத்துக்கொள்ளவில்லை மாறாக தலைவலிக்கு ஏதோ ஒரு நல்ல வைத்தியம் இருக்கின்றது அது நமக்கு தெரியவில்லை என்று இருந்தேன்.

எனது அம்மா மட்டும் ஒரு வைத்தியத்தை சொல்லிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் அதனை நான் பெரிதும் நம்பவில்லை அதனை செய்யவும் இல்லை. கடைசியில் எல்லாவற்றையும் செய்துவிட்டோம் இனி இதனை செய்துவிடலாம் என்று செய்தேன்.

அம்மா சொன்ன வைத்தியம் இது தான் வேப்ப எண்ணெயை (Neem Oil) காய வைத்து அதனை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் தீரும். 

ஒரு சிலருக்கு இந்த வேப்பெண்ணெய் உடலுக்கு சூடை ஏற்றிவிட்டு உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது. அதனை மட்டும் கொஞ்சம் கவனித்துவிட்டு தேய்த்தால் போதும். வேப்பெண்ணெய் சூடு அதிகமாக இருக்கும் சூடு உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத நபர்கள் தவிர்த்துவிடுங்கள்.

எனக்கு படிப்படியாக தலைவலி குறைந்துவிட்டது. உங்களுக்கு தலைவலி இருந்தால் இதனை பயன்படுத்தி வாருங்கள். வாரம் இரண்டு முறை என்று இரண்டு தடவை செய்து வந்தாலே போதும் குணமாகிவிடும். 

உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் இதனை சொல்லுங்கள். கண்டிப்பாக தலைவலி என்பது மிக மிக பெரிய கொடுமையான ஒன்று என்பது பட்டவர்களுக்கு தான் தெரியும். எனது அம்மா சொன்ன வைத்தியத்தை அலட்சியப்படுத்தியதால் பல வருடங்கள் கொடுமைப்பட்டு வந்தேன். இறைவன் அருளால் அது குறைந்துவிட்டது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 12, 2017

குரு தரும் கடன்


ணக்கம்!
          ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரனுக்கு மறைவு வீட்டில் குரு இருந்தால் அவர்க்கு கடன் இருந்துக்கொண்டே இருக்கும் என்பது சோதிடவிதி.

சந்திரனுக்கு மறைவு இடத்தில் குரு இருக்கும்பொழுது ஒரு சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட கடன் ஏற்படுவது உண்டு. அனுபவத்தில் பலர் நன்றாக இருக்கின்றனர். சோதிடவிதி பொய் கிடையாது அதற்க்காக இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்களுக்கு கடன் இல்லாமல் இருந்தாலும் எப்பொழுதும் ஒரு கடன் இருப்பது போல் பார்த்துக்கொள்வது நல்லது.

உங்களிடம் பணம் இருந்தால் கூட நீங்கள் வீட்டிற்க்கு தேவையான பொருட்களை மாததவணையில் செலுத்துவது போல நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு பணத்தை செலுத்தலாம்.

சந்திரனுக்கு ஆறாவது வீட்டில் குரு இருக்கும்பொழுது ஏதாவது நோய் வந்து படுத்தி எடுக்கும் என்பதற்க்காக நீங்கள் இப்படிப்பட்ட கடனை வாங்கி வைத்துக்கொண்டால் ஒரளவு நன்றாக வாழலாம்.

மாததவணையில் வாங்காமல் கடனை ஏதோ ஒரு நபரிடம் வாங்கினால் அதனை திருப்பிக்கொடுக்கும்பொழுது கொஞ்சம் இழுத்துக்கொடுக்கலாம். அவர் கொஞ்சம் திட்டினாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 11, 2017

ஆயுள் அதிகரிக்க


வணக்கம்!
          மூளையை வைத்து செயல்படும் மனிதனுக்கு ஆயுள் குறைவு. உழைக்கும் மனிதனுக்கு ஆயுள் அதிகம். சாப்ட்வேர் துறையில் இருந்துக்கொண்டு ஒரு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கொண்டு இருக்கும் மனிதனுக்கு ஆயுள் மிக மிக குறைவு.

எனக்கு அறிவியல் எல்லாம் தெரியாது ஆனால் கிரகங்களின் தன்மை அது கொடுக்கும் பலன் மற்றும் நமது அனுபவம் இதனை வைத்து தான் நான் சொல்லுகிறேன்.

உடல் உழைப்பை போட்டு உழைக்கும் ஆட்கள் அதிக நாட்கள் இருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. உடலில் எந்தவித நோயும் வராது அதனால் அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று நான் சொல்லவில்லை.

உடல் உழைப்பு இருக்கும் மனிதனுக்கும் நோய் இருக்கின்றது. எத்தனையோ ஏழைகள் நல்ல உழைத்துக்கொண்டு இருந்தாலும் பாதிவயதில் இறக்கின்றனர்.

கிரகங்களின் பலனை வைத்து நான் இதனை சொல்லுகிறேன். நீங்கள் வாரம் முழுவதும் கம்யூட்டர் முன்னாடி அமர்ந்து வேலை பார்த்தாலும் கிடைக்கும் ஒரு நாளில் நன்றாக வெயிலில் உழையுங்கள்.

நாங்க உழைப்பதற்க்கு வேலை இல்லை என்று சொல்லவேண்டாம். அதனை நீங்களே உருவாக்கி வேலை செய்யுங்கள். உங்களின் நலன் கருதி அதனை செய்யுங்கள்.

வெயிலில் போவது எனக்கு பிடிக்காது நான் ஏசியிலேயே தான் பிறந்து வாழ்ந்து வருகிறேன் என்று சொல்லவேண்டாம். கடைசியில் நெருப்புக்கு தான் இந்த உடல் செல்லுகின்றது என்பது மட்டும் உண்மை என்பதை புரிந்தால் ஆறு நாட்கள் உட்கார்ந்து வேலை செய்தாலும் ஒரு நாள் வெளியில் சென்று வேலை செய்வீர்கள்.

கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் கோபி சேர்ந்த நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 10, 2017

விளையாட்டும் செவ்வாயும்


வணக்கம்!
          ஒருவருக்கும் இளமையில் வரும் செவ்வாய் தசா அவரை மிகச்சிறந்த ஒரு விளையாட்டு வீரராக மாற்றி வைக்கும். இளமையில் வரும்பொழுது மட்டுமே அது சாத்தியப்படக்கூடிய ஒன்று. 

செவ்வாய் தசா வரும் ஒவ்வொருவரும் விளையாட்டின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். எனக்கு கூட அப்படி தான் வந்தது. செவ்வாய் தசா நடக்கும்பொழுது விளையாட்டின் மீது அந்தளவுக்கு ஒரு ஈடுபாடு இருந்தது.

தற்பொழுது என்னை பார்த்தால் விளையாட்டு வீரராக தெரியாது வேறு விதமாக தெரியும். செவ்வாய் தசா அப்படி ஒரு பலனை கொடுத்து அதன் மீது ஒரு ஈடுபாட்டை கொடுத்தது. 

விளையாட்டின் மீது தற்பொழுதும் ஒரு ஈடுபாடு இருக்கின்றது. மாலை நேரத்தில் ஒய்வு நேரத்தில் எங்களின் ஊரில் ஏதாவது இளைஞர்கள் விளையாடினால் அவர்களோடு சென்று விளையாடுவது உண்டு. 

ஒரு தசா நடந்து முடிந்தால் கூட அதன் தன்மை கொஞ்சம் அவ்வப்பொழுது வந்து நம்மை இழுத்து செல்லும். செவ்வாய் தசாவும் அப்படி தான் அவ்வப்பொழுது செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய்


வணக்கம்!
          ஒருவருக்கு நோயின் தன்மை அதிகரித்தால் அவர்க்கு செவ்வாய் கிரகத்தின் நிலையும் கொஞ்சம் பார்க்கவேண்டும். ஒரு சிலருக்கு செவ்வாய் கிரகம் பலவீனமாக இருந்தாலும் நோய் வந்துவிடுவது உண்டு.

தைரியம் இல்லை என்றால் ரோட்டில் சென்றுக்கொண்டு இருக்கும் நோயும் உங்களை பார்த்து பல் இளிக்கும். உங்களை தேடி நோய் வந்துவிடும். ஒரு மனிதனுக்கு நோய் வருவதற்க்கு மனமும் ஒரு காரணமாக இருக்கின்றது.

ஒரு சிலருக்கு இரத்தத்தை பார்த்தாலே மயங்கி கீழே விழுந்துவிடுவதும் உண்டு. இரத்தத்தை குறிக்கும் செவ்வாய் சரியில்லை என்றால் இப்படி நடைபெறுவது உண்டு.

போர்க்கிரகம் என்று சொல்லப்படும் கிரகம் செவ்வாய். தைரியத்தை கொடுக்ககூடிய கிரகம் வலுவாக இருந்தால் கை வெட்டுபட்டால் கூட பயம் இல்லாமல் இருப்பார்கள்.

ஒருவருக்கு நோய் வந்து அந்த நோயின் வலியை தாங்கிக்கொள்ளவேண்டும் என்றாலும் அவர்க்கு செவ்வாய் கிரகம் வலுவாக இருக்கவேண்டும். செவ்வாய்கிரகம் பலம் இல்லை என்றால் சின்ன நோய்க்கு கூட கதறி அழவைத்துவிடும்.

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை திருப்பூர், கோபி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 9, 2017

சந்திரனுக்கு பரிகாரம்


வணக்கம்!
          சந்திரன் பிரச்சினை அதிகமாக இருக்கும் நபர்கள் இருக்கின்றனர். மொத்தத்தில் சந்திரன் தான் அனைத்தும் பிரச்சினை என்பது நமக்கு தெரியும். சந்திரனை சரி செய்யவேண்டும் என்று நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் செல்லுகின்றது என்று பார்த்து அந்த நட்சத்திரத்திற்க்கு நீங்கள் ஒரு அர்ச்சனை அல்லது ஒரு வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். உங்களின் ஊரில் உள்ள சிவன் கோவிலில் இதனை செய்யலாம்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் பிரச்சினை அதனை நான் வீட்டிலேயே சரி செய்யவேண்டும் என்றால் அதற்கும் வழி இருக்கின்றது. பெரும்பாலும் நாம் செய்கின்ற அனைத்து வழிபாடும் சந்திரனை சார்ந்து தான் இருக்கும். அதாவது சந்திரனுக்கு பிடித்த ஒன்றாகவே இருக்கும்.

சந்திரனுக்கு பிடித்த பொருள் என்றால் அது சாம்பிராணி வாசம். சாம்பிராணி வாசம் இல்லாமல் எந்த வித வழிபாடும் இல்லை என்பது தான் உண்மை. நாம் சாதாரணமாக செய்யும் வழிபாடே சந்திரனை வைத்து தான் நடக்கின்றது.

சந்திரனுக்கு உரிய சாம்பிராணி தூபத்தை திங்கள்கிழமை அன்று வீட்டில் நன்றாக இட்டு சந்திரனை சரிசெய்துக்கொள்ளுங்கள். உங்களின் பூஜையறை மற்றும் வீடு முழுவதும் தூபத்தை காட்டுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 8, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
                     இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்,







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 7, 2017

பச்சைப்பரப்புதல் மாவிளக்கு


வணக்கம்!
          பச்சைப்பரப்புதலை எழுதி நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. அனைவருக்கும் மறுபடியும் ஞாபகம் படுத்த இந்த பதிவை மீண்டும் தருகிறேன்.

உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு உங்களின் வீட்டிலேயே செய்யும் பூஜை இது. இந்த பூஜை செய்வதால் உங்களின் குலதெய்வம் மனமிரங்கி உங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக்கொடுக்கும். உங்களின் குலம் தழைத்து சிறந்து விளங்கும். 

பச்சைப்பரப்புதலைப்பற்றி நிறைய பதிவுகளை தந்திருக்கிறேன். அதனை எல்லாம் படித்து பாருங்கள். பச்சைப்பரப்புதல் செய்யும்பொழுது மாவிளக்கு முக்கியபங்கு வகிக்கிறது. தற்பொழுது உள்ளவர்களுக்கு மாவிளக்கு செய்வது கடினமாக இருக்கின்றது என்று சொல்லுவார்கள்

மாவிளக்கை பிடிப்பது எப்படி என்று தெரியவில்லை என்று சொல்லுவார்கள். நம்முடைய தாய் சொன்னால் தான் நமக்கு தெரியும். சொல்லிக்கொடுக்காதது அவர்களின் தவறு. இந்த தலைமுறைக்கு இதனை சொல்லிக்கொடுப்பது ஒவ்வொரு தாயின் கடமை.

மாவிளக்கை பிடிப்பதில் ஒரு சின்ன டெக்னிக் இருக்கின்றது. மாவிளக்கு மாவு உடைந்துவிடுகிறது என்று சொல்லுகின்றார்கள் அல்லவா. இது உடையாமல் இருப்பதற்க்கு மாவிளக்கில் சேர்க்கப்படும் நாட்டுசர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வாங்கி நன்றாக நசுக்கி அதனை மாவோடு சேர்த்து பிசைந்தால் உங்களின் மாவிளக்கு உடையாமல் நீங்கள் நினைக்கு அளவுக்கு வரும்.

இனிவரும் நாட்களில் பச்சைப்பரப்புதல் செய்யும்பொழுது இதனை கடைபிடித்து வாருங்கள். பச்சைப்பரப்புதல் செய்து உங்களின் குடும்பத்தை மேம்படுத்துங்கள்.

நாளை நடைபெறும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள் 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள் 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்.
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள். 

ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள். 
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
 பல்லடத்தை சேர்ந்த திரு காசிநாதன் அவர்கள். 

கரூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள். 

வழக்கம் போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 6, 2017

மறைவுஸ்தானம் :: இல்லறவாழ்வு பாதிப்பு


ணக்கம்!
         ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலம் வாய்ந்தவையாக மாறிவிட்டால் அவர்களின் வாழ்க்கை நேர்மையான வழியில் இருக்காது. நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்கள் வெளியில் தெரியமாட்டார்கள்.

மறைவு ஸ்தானம் பலப்படும்பொழுது அவர்கள் இல்லறவாழ்க்கையும் அந்தளவுக்கு நன்றாக இருக்காது. நிறைய அரசியல்வாதிகளின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். அவர்கள் திருமணம் நடந்து முடிந்தாலும் அவர்கள் வெளியில் ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள்.

மறைவு ஸ்தானம் பலப்படும் ஆட்கள் வெளியில் நிறைய காரியங்களை செய்தாலும் வீட்டில் உள்ள வேலையை செய்ய தயங்குவார்கள். வீட்டில் உள்ள வேலையை வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து செய்ய சொல்லுவார்கள்.

பெண்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலப்படகூடாது. பெண்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலப்படும்பொழுது அவர்களின் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படும். 

நிறைய பெண்கள் தங்களின் நேர்மையான வழியில் இருந்து தவறி தவறான வழியை தேர்ந்தெடுப்பது கூட மறைவு ஸ்தானம் பலப்படுவதனால் தான் நடக்கிறது.

ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்க்கு கூட அவர்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் அதிகப்பலன் அடைவதால் தான் நடக்கிறது. பல இளைஞர்களின் ஜாதகத்தில் இப்படிபட்ட அமைப்பு இருக்கின்றது. ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் அவர்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலப்படகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 5, 2017

அம்மன் பூஜை


ணக்கம்!
          அம்மன் பூஜை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 8.01.2017 அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்

சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பல்லடத்தை சேர்ந்த திரு காசிநாதன் அவர்கள்.
கரூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.

வழக்கம் போல்

                திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனிபெயர்ச்சி


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பர் பேசும்பொழுது என்னிடம் சார் சனிபெயர்ச்சி தற்பொழுது நடைபெறுகிறது என்று சொல்லுகின்றனர். இது உண்மையா என்று கேட்டார்.

திருக்கணிதப்படி தற்பொழுது சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது என்று சொல்லுகின்றனர். சனிப்பெயர்ச்சி நடந்துபோல அனுபவத்தில் ஒன்றும் தெரியவில்லை. சனிப்பெயர்ச்சி நடப்பதற்க்கு முன்பு நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு இப்படிப்பட்ட பிரச்சினை வந்திருக்கிறது என்று புதிய புதிய பிரச்சினைப்பற்றி சொல்லுவார்கள்.

சனிப்பெயர்ச்சி நடைபெறுவதற்க்கும் குறைந்தது மூன்று மாதத்திற்க்கு முன்பே என்னை நிறைய பேர் தொடர்புக்கொள்வார்கள் ஆனால் தற்பொழுது அப்படி ஒன்றும் சொல்லவில்லை.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் விசேச பூஜைகள் எல்லாம் நடைபெறும். ஊரில் உள்ள அனைத்து கோவில்களிலும் விஷேசமாக இருக்கும். பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பும் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

கோவில்களில் எப்பொழுது நடைபெறுகிறதோ அப்பொழுது நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள். மனதைப்போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 4, 2017

சகிப்புதன்மை


வணக்கம்!
         ஒன்றும் தெரியாத சோதிடர்களுக்கு கூட தெரியும் சோதிடத்தில் லக்கினத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் அனைத்தையும் கவனிக்கவேண்டும் என்று புரியும். உங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன

சோதிடத்தில் லக்கினம் அடிவாங்கினால் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பது தான் சோதிடவிதி. லக்கினம் அடிவாங்கினாலும் நன்றாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வில் நிறைய கஷ்டத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள்.

லக்கனம் நன்றாக இருப்பவர்கள் அவர்களின் தந்தை நன்றாக சம்பாதித்து வைத்திருப்பார்கள். தந்தை சம்பாதித்ததை நன்றாக செலவு செய்து அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள்.

உங்களின் லக்கனம் சரியில்லை என்றால் வாழ்க்கை உங்களுக்கு பாடத்தை கற்றுக்கொடுக்கும். போராட்டத்தை போட்டு வருவதால் அனைத்தையும் ஞானிபோல் எடுத்துக்கொள்வீர்கள்.

லக்கினம் சரியில்லை என்று வரும்பொழுது எதிலும் போராட்டம் மற்றும் அவமானம் வரும். இந்த அவமானத்தை நீங்கள் சகித்துக்கொண்டு வாழஆரம்பித்த பிறகு தான் நிலையான ஒரு வாழ்வு அமையும். சகித்துக்கொள்ளுங்கள் அது போதும் உங்களின் வளர்ச்சிக்கு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 3, 2017

ஆனந்தவாழ்க்கையை கொடுக்கும் வீடுகள்

ணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தில் நிறைய பதிவுகள் ஐந்தாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டைப்பற்றி சொல்லுவது உண்டு. இந்த வீட்டை எல்லாம் அதிகமாக சோதிடத்தில் ஜாதககதம்பத்தில் மட்டுமே படித்து இருக்கமுடியும்.

இதனை வைத்து தான் உங்களின் வாழ்க்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவது உண்டு. ஒன்றாவது வீடு ஐந்தாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீடு ஆகியவை தான் உங்களின் வாழ்க்கை. மற்றவையும் உண்டு இருந்தாலும் இது தான் முக்கியம்.

உங்களில் லக்கினம் உங்களின் உடலை காட்டும் ஒரு இடம். லக்கனம் நன்றாக இருந்தாலே போதும். எப்படியும் வாழ்வில் முன்னேற்றம் போட்டுவிடலாம். லக்கினம் உங்களை அந்தளவுக்கு உயர்த்தி பிடிக்கும்.

ஐந்தாவது வீடு என்பது உங்களின் பூர்வபுண்ணியம். உங்களின் முன்ஜென்மத்தைப்பற்றி அறியும் ஒரு இடம். இந்த பிறவிக்கு முன்பு நீங்கள் எடுத்த பிறவியை காட்டும் இடம். உங்களின் இரத்தம் இந்த பூமியில் மறுபடியும் விதைக்கும் இடம். உங்களின் குழந்தை பாக்கியத்தை சொன்னேன்.

ஒன்பதாவது வீடு என்பது உங்களின் முந்தைய பிறவிக்கும் முன்னோடி எத்தனை பிறவி இருந்ததோ அனைத்தையும் காட்டக்கூடிய ஒரு இடம் மற்றும் உங்களின் தந்தையை காட்டக்ககூடிய ஒரு இடம்.

உங்களின் லக்கினத்திற்க்கு சுபர்கள் என்று பார்த்தால் ஐந்தாவது வீடு ஒன்பதாவது வீட்டை தான் பார்ப்பார்கள். சோதிடத்தில் அந்தளவுக்கு இந்த வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இடங்கள்.

அடிக்கடி நான் சொல்லுவது கூட இதனை எல்லாம் நீங்கள் நன்றாக வலுப்படுத்தும்பொழுது வாழ்க்கை ஒரு ஆனந்தமயமான வாழ்க்கையாக அமையும். இந்த மூன்றும் சரியில்லை என்றால் பேசாமல் சந்நியாசியாக போய்விடவேண்டியது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அனுபவ சோதிடம்


வணக்கம்!
          ஜாதகத்தை வைத்து ஒரு சில நேரங்களில் நாம் பலனை சொல்லமுடியாமல் இருப்போம். நாட்டின் நடப்பு எப்படி இருக்கின்றது என்பதை பார்த்துக்கொண்டு அதன்படியும் பலன் சொல்லவேண்டும்.

தற்பொழுது நிலம் வாங்கவேண்டும் என்று நினைத்து ஜாதகம் பார்க்க வருகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் ஜாதகத்தை வைத்து தற்பொழுது சொல்லமுடியாது. பணப்பிரச்சினை மற்றும் கோர்ட் நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் தொழில் கீழே கிடக்கும்பொழுது நாம் எப்படி ஒருத்தரின் ஜாதகத்தை பார்த்து நிலம் வாங்கலாம் என்று சொல்லமுடியும்.

ஒரு சில நேரங்களில் நாம் ஒருத்தருக்கு பரிகாரம் செய்வோம் அவர்கள் பரிகாரம் செய்துவிட்டார்கள் இனிமேல் தானாகவே நடக்கும் என்று ஒக்கார்ந்து இருக்ககூடாது. நம்முடைய வேலையும் பரிகாரமும் ஒன்றாக இணையும்பொழுது தான் வெற்றி கிடைக்கும்.

மந்திரம் கால் மதி முக்கால் பங்கு என்று சொல்லுவார்கள். மந்திரம் செய்தால் கூட நம்முடைய வேலை முக்கால் பங்கு செய்யும்பொழுது நம்முடைய காரியம் வெற்றியை தரும்.

இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு நாம் செயல்படவேண்டும். ஜாதகத்தை மட்டும் வைத்து எல்லாம் கிடையாது. நம்முடைய பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்து நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 2, 2017

செல்போன் எண்


வணக்கம்!
          காலையில் பதிவை தந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு பதிவை எழுதிவிட்டு சென்றேன். ஆட்டோ போஸ்டில் கொஞ்சம் சிக்கல் இருந்து இருக்கின்றது. தற்பொழுது வந்து பார்த்தால் பதிவு வரவில்லை. உடனே பதிவை மாற்றி தருகிறேன்.

நேற்று ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டார். அவரை நான் நீண்ட நாள்களாக தொடர்புக்கொண்டேன். தொடர்புக்கொள்ளவே முடியவில்லை செல்நம்பரை மாற்றிவிட்டார். நேற்று நியூ இயர் வாழ்த்தை சொல்ல புதிய நம்பரில் இருந்து தொடர்புக்கொள்கிறார்.

அவர் கேட்ட கேள்வி சார் வாழ்வில் முன்னேற்றம் அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். பூர்வபுண்ணியத்தை வலுப்படுத்த குலதெய்வத்தை வணங்கவேண்டும் அதன் பிறகு பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்த நிறைய ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயத்தை நாடவேண்டும் என்று சொன்னேன்.

இன்றைக்கு நமக்கு வரும் வாய்ப்பு எல்லாம் எப்படி வருகின்றது என்றால் நமது செல்போன் வழியாக வருகின்றது. நம்மை தொடர்புக்கொள்ளும் நம்பரை அடிக்கடி மாற்றினால் எப்படி நம்மைப்பற்றி அடுத்தவர்கள் நினைப்பார்கள் என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கின்றனர்.

ஒரு தடவை ஒரு கம்பெனியில் ஒரு மாெபைல் எண்ணை வாங்கினால் அந்த நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருக்காதீர்கள். நமக்கு வரும் வாய்ப்பு கண்டிப்பாக தவறிபோய்விடும். 

நாம் செல்போன் நம்பரை மாற்றும்பொழுது நாம் அனைவருக்கும் சொல்லிவிட்டோம் என்று நினைப்போம் ஆனால் பலருக்கு உங்களின் புதிய செல்போன் நம்பர் தெரியாமல் போயிருக்கும். வரவேண்டிய புதிய வாய்ப்புக்கள் உங்களை விட்டு சென்றுவிடும். பலர் இப்படி செய்திருந்தால் அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஒரே நம்பரை பயன்படுத்துங்கள்.

 அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 1, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் KJ அவர்கள் காலையில் வந்த சூரியன் பதிவை படித்துவிட்டு தமிழகத்தில் நடைபெறும் அரசியலுக்கும் இதற்க்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன் என்று சொல்லிருந்தார்.

உலகத்தில் நடைபெறும் அத்தனை செயலுக்கும் ஏதோ ஒரு தொன்றுதொட்டு தொடர்பு இருந்துக்கொண்டு தான் இருக்கும். சூரியனை பற்றி சொல்ல ஒரு சில வார்த்தையை பயன்படுத்தினேன். உண்மையில் அவர்களின் ஜாதகத்தை எல்லாம் நான் பார்த்து இல்லை.

ஒரு சாதாரண மனிதன் நினைத்து பார்க்காத ஒன்று கிடைத்தால் அதற்கு இந்த கிரகம் சம்பந்தம்பட்டு இருக்கும் என்று எழுதினேன். உலகத்தில் நடைபெறும் அனைத்தும் கிரகங்களே தவிர வேறு என்ன இருக்கின்றது.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு நாம் ஒரு சின்ன உதாரணமாக கிரகத்தைப்பற்றி சொன்னேன். தமிழகத்தில் நடப்பதற்க்கும் அதற்கும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலும் நமக்கு பாடத்தை கற்றுக்கொடுக்கும். அதில் இருந்து நாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு