Followers

Friday, August 31, 2018

கிரகங்கள் கொடுக்க நினைப்பதை


வணக்கம்!
          ஒவ்வொருவரின் வாழ்வில் நிறைய கஷ்டங்களை கிரகங்கள் தந்தாலும் ஒரு சில காலக்கட்டங்களில் கிரகங்கள் கண்டிப்பாக நல்லதை கொண்டு வந்து சேர்த்துவிடும். இது பலரின் வாழ்க்கையில் நடந்து இருக்கின்றது.

ஒரு சில சாமி கும்பிடாதவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் தினமும் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் எனக்கு நல்லது நடக்க மாட்டேன்கிறது என்று புழும்பும் நபர்களும் இருக்கதான் செய்கின்றனர்.

சாமி கும்பிடுகின்றவர் சாமி கும்பிடாதவர்கள் என்று இல்லை. கிரகங்கள் கொடுக்க நினைத்தால் அது கொண்டு வந்து கொட்டிக்கொடுத்துவிடும். கிரகங்களுக்கு கொடுக்க நினைக்கும்பொழுது மனிதன் எப்படி இருந்தாலும் அவனை தூக்கிவிட்டுவிடும்.

சாமி கும்பிட்டால் எதுவும் நடக்காது என்று இல்லை எப்பொழுதாவது  கொண்டுவந்து கொடுத்துவிடும். அதே நேரத்தில் நாம் செல்லும் பாதையில் பாவங்களை அதிகம் சேர்க்காமல் இருக்கவும் சாமி கும்பிடுவது துணைபுரியும்.

செல்வம் சேரும்பொழுது பாவங்களை சேர்த்துவிடாமல் செல்வம் மட்டும் சேர்வது போல செய்ய செய்வது தான் சாமி கும்பிடுவதில் உள்ள பெரிய விசயமே இருக்கின்றது இதனை புரிந்து தான் சாமி கும்பிடுவதில் அதிக முனைப்பை செல்வந்தர்கள் காட்டுகின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 30, 2018

திருமண ஏற்பாட்டை எப்பொழுது செய்யலாம்?


வணக்கம்!
          ஒருவருக்கு திருமணம் நடைபெறவேண்டும் என்றால் முதலாவதாக நாம் பார்ப்பது அந்த ஜாதகருக்கு குருபலன் கிடைக்கின்றதா என்பதை தான் பார்ப்பார்கள். குரு பலன் கிடைத்துவிட்டால் அந்த ஜாதகருக்கு திருமண ஏற்பாடு செய்வார்கள்.

குரு பலன் தான் திருமண ஏற்பாட்டை செய்வார் மற்ற கிரகங்கள் திருமண ஏற்பாட்டை செய்யாதா என்று கேட்கலாம். குரு கிரகம் இல்லை என்றாலும் அவர்க்கு சாதகமாக செயல்படும் கிரகங்கள் அவர்க்கு திருமண ஏற்பாட்டை செய்துக்கொடுக்கும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு இராகு தசாவில் திருமண தடையை அதிகமாக ஏற்படுத்தும் அந்த ஜாதகர்களுக்கு கூட இராகு தசா ஏழாவது வீட்டு புத்தி  இரண்டாவது வீட்டு புத்தி மற்றும் லக்கனாதிபதி புத்தி நடைபெறும் காலத்தில் திருமணம் நடைபெறும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு இராகு தசா குரு புத்தியில் திருமணம் நடைபெறும். ஒரு சில ஜாதகர்களுக்கு இராகு தசா சுக்கிரபுத்தியில் திருமணம் நடைபெறும். அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி திருமண ஏற்பாட்டை கவனித்து பலன் சொல்லவேண்டும்.

ஏழரை சனி காலத்தில் ஒரு சில ஜாதகர்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும். ஒரு சில ஜாதகர்களுக்கு அஷ்டமசனி காலத்தில் கூட திருமண ஏற்பாடு நடைபெறும். அஷ்டமசனி காலத்தில் நிறைய பெண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு குரு கிரகம் அஷ்டமகுருவாக வரும் பொழுது திருமண ஏற்பாடு நடைபெறும். அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி திருமணம் நடைபெறுகின்றது. குரு பலன் தான் முக்கியம் என்று இருக்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 29, 2018

லக்கனத்தில் சனி


வணக்கம்!
          ஒருவருடைய ஜாதகத்தில் லக்கனத்தில் சனி இருக்கும்பொழுது தான் அதன் பாதிப்பு ஒருவருக்கு அதிகமாக இருக்கின்றது. நான் பார்த்த ஜாதக அனுபவத்தின் அடிப்படையில் வைத்து இந்த அனுபவத்தை உங்களிடம் சொல்லுகிறேன்.

சனி லக்கினத்தில் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தில் அதிக காலதாமதத்தை கொடுத்துவிடும். திருமணம் காலக்காலத்தில் நடந்துவிட்டால் அதன் வலி தெரியாது. திருமண வயதை கடந்து ஒருவர் இருக்கும்பொழுது தான் அதன் வலி என்ன என்பது தெரியும்.

திருமணத்திற்க்கு நாம் ஏழாவது வீட்டையும் மற்றும் குருவின் பார்வையும் பார்த்துக்கொண்டு இருப்போம். லக்கனத்தில் என்ன கிரகம் இருக்கின்றது அது எப்படி பாதிப்பை தரும் என்பதை தெரிந்தால் தான் திருமணம் தடைப்படுவது தெரியவரும்.

திருமணத்தை தள்ளி வைப்பதில் சனியின் பார்வை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. லக்கனத்தில் இருந்து சனி ஏழாவது வீட்டை பார்ப்பதால் திருமணம தடையை அதிகம் ஏற்படுத்தும். நாம் ஏன் திருமணம் நடக்கவில்லை என்று ஜாதகத்தை நோண்டி பார்த்துக்கொண்டு இருப்போம். சனி தான் காரணம் என்பதை புரிந்தால் தெரியவரும்.

லக்கனத்தில் சனி இருந்து திருமணத்தை தடை ஏற்படும்பொழுது சனிக்குள்ள பரிகாரத்தை செய்து திருமண தடையை விலகி கொண்டு திருமணத்தை செய்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவிலுக்கு செல்லகூடாதா?


வணக்கம்!
          கோவிலுக்கு செல்ல சொல்லுகின்றீர்கள் நான் தினமும் கோவிலுக்கு செல்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் நடக்கவில்லை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை கீழே சென்றுக்கொண்டே தான் இருக்கின்றது என்று நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார்.

கோவிலுக்கு செல்வது என்பது உடனே நமக்கு நல்லது நடந்துவிடும் என்று சொல்லமுடியாது. கோவிலுக்கு சென்றால் மனஅமைதி கிடைக்கின்றது என்று பலர் செல்வார்கள் ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது உடனே நடந்துவிடாது.

கோவிலுக்கு சென்று வெளியே வந்தவுடன் மனம் அடுத்தநிலைக்கு மாறிவிடும் உடனே பிரச்சினையும் உங்களை துரத்த ஆரம்பித்துவிடும். நிறைய பிரச்சினைகள் இருப்பவர்கள் கோவிலுக்கு செல்ல கூடாது என்பது தான் உண்மையாக இருக்கின்றது.

நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை அப்படியே நமக்கு திருப்பிக்கொடுக்ககூடிய ஒரு நிலையை தான் பல கோவில்கள் செய்கின்றன. இது பல பேர்களின் வாழ்வில் நடந்துக்கொண்டு வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

கோவிலை நாம் குறைத்து மதிப்பிடுவதில்லை ஆனால் நாம் எப்படி கோவிலுக்கு சென்றால் நமக்கு நல்லது நடக்கும் என்பதை அறிந்துக்கொண்டு கோவிலுக்கு செல்லுங்கள் கண்டிப்பாக நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 28, 2018

கிரகங்கள் ஏற்படுத்தும் மனநிலைபாதிப்பு


வணக்கம்!
          எப்பொழுதும் மனதில் ஒரு நிச்சயம் அற்ற நிலை இருக்கின்றது. வாழ்வா சாவா என்பது போலவே இருக்கின்றது என்ன செய்யலாம் என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். 

வாழ்க்கையில் எதுவும் நிச்சயம் இல்லை என்பது மட்டும் அனைவரும் மனதில் இருக்கவேண்டும் அதோடு நமது கடமையை செய்யவேண்டும் என்பதற்க்காக ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒருவருக்கு மனதில் ஒரு வித நிச்சயம் இல்லாத நிலையை உருவாக்குவது அவர்க்கு நடைபெறும் தசா அப்படி ஒரு எண்ணத்தை தோற்றுவிக்கும். ஒருவருக்கு மறைவுஸ்தான அதிபதியின் தசா நடந்தால் அவர்க்கு மனம் எதிலும் ஒட்டாமல் இருக்கும்.

குறிப்பாக ராகு தசா மற்றும் சனி தசா இப்படிப்பட்ட எண்ணங்களை உருவாக்குகின்றது. ஒரு சில ஜாதகத்தில் சந்திரன் மறைவுஸ்தானம் சென்றாலும் இப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கிவிடும். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் ஒருவர் அதிக மனஉளைச்சலையும் சந்தித்து மனதாேடு போராடிக்கொண்டு இருப்பார்.

தியானம் யோக சென்று இதனை சரி செய்யுங்கள். இதற்கு செல்லமுடியாதவர்கள் அடிக்கடி கோவிலுக்கு சென்று வாருங்கள். கொஞ்ச நாளைக்கு பிறகு சரியாகும். வீட்டிலேயே மூச்சு பயிற்சி செய்தாலும் சரி செய்யமுடியும். தசாநாதன் யார் என்று உங்களின் ஜாதகத்தை பார்த்து அதற்குரிய வழிபாட்டை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 27, 2018

லக்கனத்தில் மாந்தி


வணக்கம்!
          லக்கனத்தில் மாந்தி அமர்ந்தால் அது எப்படிப்பட்ட பலனை தரும் என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார். லக்கனத்தில் மாந்தி அமர்ந்தால் அவர்களுக்கு எந்த நேரமும் ஒரு பேய்யோடு வாழ்வது போலவே இருக்கும்.

மாந்தி லக்கனத்தில் அமர்ந்து இருப்பதால் அவர்களுக்கு கெட்ட சக்திகள் வாசம் அதிகமாக இருக்கும். நிறைய கெடுதல்களை செய்யகூடியவர்களாகவும் இருப்பார்கள். மாந்தி அவர்களை அப்படி மாற்றி வைத்திருக்கும்.

ஆவியுலகத்தைப்பற்றி நிறைய சொல்லுபவர்களாக இருப்பார்கள். ஆவியுலகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கூட லக்கனத்தில் மாந்தி தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள். ஆவியோடுகளோடு பேசுகிறேன் என்று சொல்லுவார்கள்.

மாந்தி லக்கனத்தில் தொடர்புக்கொள்ளும்பொழுது அவர்களின் வாழ்க்கை அதிகப்பட்சம் ஏதோ ஒரு பீடை பிடித்தது போலவே காணப்படுவார்கள். அவர்களின் நிலையில் ஆவிகளைப்பற்றி சொல்லுவதால் அதனை புரிந்தவர்களால் மட்டும் தான் அதனைப்பற்றி ஏற்றுக்கொள்ளமுடியும் மற்றவர்களுக்கு அது புரியாது.

லக்கனத்தில் மாந்தி தொடர்பு நல்லதை விட தீயதை அதிகம் கொடுக்கும் என்பதால் லக்கனத்தில் மாந்தி அமர்வது நல்ல பலனை எதிர்பார்க்கமுடியாது.லக்கனத்தில் மாந்தி அமர்ந்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்தால் பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.

நமது ஜாதககதம்பத்தில் தற்பொழுது இலவச சாேதிட ஆலோசனை வழங்கிக்கொண்டு இருக்கிறோம். தாங்கள் தொடர்புக்கொண்டு இலவச ஆலோசனை பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 26, 2018

லக்கனத்தில் தீயகிரகம்



வணக்கம்!
         பொதுவாக நாம் மறைவுஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் தான் அதிக பிரச்சினையை கொடுக்கும் என்று நாம் ஒரு நினைத்துக்கொண்டு இருப்போம் ஆனால் அதனைவிட மோசமான பலனை கொடுக்ககூடிய கிரகங்கள் எல்லாம் இருக்க தான் செய்கின்றன.

மோசமான பலன் என்றால் முதலில் நாம் சொல்லுவது லக்கனத்தில் இருக்கும் ஒரு கிரகம் அதிகமான பாதிப்புகளை ஒருவருக்கு தருகின்றது ஆனால் அதனை நாம் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.

லக்கனத்தில் அமர்ந்து இருந்தால் பெரும்பாலும் சோதிடவிதிகள் நல்ல பலனை சொல்லிவிடுகின்றன ஆனால் அதனை நாம் அனுபவத்தில் பார்த்தால் அதிகமான பிரச்சினையை தரக்கூடிய அளவில் அந்த கிரகங்கள் இருக்கின்றன.

லக்கனத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் அவர்களின் வாழ்க்கையே பெரியளவில் அந்த கிரகத்தால் பாதிப்படைக்கின்றன என்பது எத்தனை பேர்க்கு தெரியும் என்று தெரியவில்லை. லக்கினத்தில் அமரும் கிரகம் அவரைப்பாேட்டுபடுத்தி எடுத்துவிடும்.

நாம் என்ன சொல்லுவோம் லக்கினத்தில் முதல் வீட்டில் இருக்கின்றது நல்ல பலனை தரும் விதத்தில் சொல்லிவிடுவோம் ஆனால் அது பிரச்சினையை கொடுப்பது அனுபவத்தில் தான் தெரியும். சோதிடவிதி பல விசயத்தில் பொருந்தி வராது என்பது தான் உண்மையாக இருக்கும்.

ஒருவருக்கு லக்கனத்தில் அமர்ந்து ஒரு தீயக்கிரகம் தசா நடத்தினால் அந்த கிரகம் அவருக்கு மரணத்தை கொடுக்கும். பலரின் மரணத்திற்க்கு லக்கினத்தில் இருந்து தசா நடத்தும் கிரகத்தால் நடந்து இருக்கின்றது. இனிமேலாவது லக்கனத்தை நன்றாக கவனித்து பலனை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 25, 2018

மறைவுஸ்தானத்தில் குரு


ணக்கம்!
          இலவச சோதிட ஆலோசனைக்கு தொடர்புக்கொள்ளவும் இன்று முதல் இந்த மாத இறுதி வரை இலவச சோதிட ஆலோசனை உண்டு. அனைவரும் தங்களின் ஜாதகத்தின் பலனை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். போனில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

மறைவுஸ்தானத்தில் குரு மறைந்து நின்றால் அவர்களுக்கு எதுவும் நடக்காது என்று அர்த்தம் இல்லை அவர்களுக்கு நல்லது நடக்கும் ஆனால் கொஞ்சம் தாமதமாக நடப்பது போல இருக்கும். அனைத்து வேலைகளுக்கும் கொஞ்சம் தடை ஏற்பட்டு அனைத்தும் நடக்கும்.

எனக்கு தெரிந்த பல தங்க கடை வைத்திருக்கும் நபர்களுக்கு குரு மறைவுஸ்தானத்தில் இருக்கின்றது. மறைவுஸ்தானத்தில் குரு இருக்கும் நபர்களுக்கு தங்கம் தங்காது என்பார்கள் அனுபவத்தில் நன்றாக தங்கம் தங்குகின்றது.

மறைவுஸ்தானத்தில் குரு இருக்கும் நபர்களுக்கு திருமணம் தள்ளி செல்லும் ஆனால் நடந்துவிடுகின்றது. ஒரு சில ஜாதகர்களுக்கு குரு கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு வரும்பொழுது தான் திருமணமே நடக்கின்றது. 

மறைவுஸ்தானத்தில் குரு கிரகம் இருக்கும் நபர்கள் ஒரு சிலர் அநியாயத்திற்க்கும் தொழில் செய்வார்கள். மக்களை பிழிந்து அதன் வழியாக தொழில் செய்பவர்கள் அனைவரும் குரு கிரகம் மறைவுஸ்தானத்தில் இருக்கும் நபர்களாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

Thursday, August 23, 2018

விஷத்தை கக்கும் இராகு & கேது


வணக்கம்!
          விஷத்தை விஷம் கொண்டு தான் முறிக்கவேண்டும் என்பதற்க்கு பல உதாரணத்தை சொல்லலாம் ஆனால் அது எனக்கே அப்படிப்பட்ட உதாரணம் இருந்தது அதனை வைத்து உங்களிடம் சொல்லுகிறேன்.

விஷம் கக்கும் இராகு கேதுவிற்க்குள் நான் கொஞ்சகாலம் மாட்டிக்கொண்டேன். இது எனது உடல்நிலையில் பிரச்சினையை கொடுத்தது. வாழ்க்கையில் அனைத்தையும் போராடி தான் வெல்ல வேண்டும். இதனையும் போராடி வென்றேன்.

பரிகாரம் என்பது அடுத்தவர்களுக்கு செய்தால் அது நடக்கும் ஆனால் நமக்கு பரிகாரம் செய்வதற்க்கு நிறைய அனுமதி வாங்கவேண்டும் என்பதால் அதனை கொஞ்சம் ஒதுக்கி தள்ளி வைத்துக்கொண்டு வேறு ஒரு வழியில் முயற்சித்து அதில் வெற்றியை கண்டேன்.

இராகு கேது கண்டிப்பாக உங்களின் இராசியை கடக்கும்பொழுது உங்களுக்குள் ஒரு விஷத்தை கக்கிவிட்டு சென்றுவிடும் அது குடும்பத்தை சீரழிக்கலாம் அல்லது உடல்நிலையை சீரழிக்கலாம் ஏதோ ஒன்று செய்யும்.

இராசியை கடக்கும்பொழுது மட்டும் இல்லாமல் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் இருந்து பிரச்சினையை கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றது. கோச்சாரபடி மற்றும் தசாப்படியும் பிரச்சினையை கொடுக்கும். இதனை நன்கு கவனித்து அதற்கு தகுந்தார் போல் செய்யவேண்டும்.

இராகு கேது காரத்துவம் உடைய வேலைகளை கையில் எடுத்து செய்துவிட்டால் நமக்கு இராகு கேதுவால் வருகின்ற விஷம் குறைந்துவிடும். இது எந்த வேலையாகவும் இருக்கலாம் ஆனால் செய்யவேண்டும் செய்தால் பலன் கிடைக்கிறது. இராகு கேது காரத்துவம் உடைய ஒரு வேலையை நான் எடுத்து செய்தேன் அது என்னை காப்பாற்றியது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 22, 2018

நல்லவன் கெட்டவன்


வணக்கம்!
          ஒவ்வொருவரும் ஜாதகம் பார்ப்பதற்க்கு முன்பு ஒரு வார்த்தை என்னிடம் சொல்லுவார்கள். நான் நல்லவன் எனக்கு கஷ்டம் அதிகமாக வருகி்ன்றது என்று சொல்லுவார்கள். கஷ்டம் வராமல் இருந்தால் அவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் சமுதாயத்தில் உருவாகிவிட்டன என்று நினைக்கிறேன்.

நல்லவனுக்கு மட்டும் தான் கஷ்டம் வருகின்றது என்ற ஒரு வார்த்தையை வைத்திருக்கின்றனர். உண்மையில் அனைவருக்கும் கஷ்டம் வரத்தான் செய்யும் அவர் அவர்களின் வாழ்க்கை முறைக்கு தகுந்தமாதிரி கஷ்டம் இருக்கதான் செய்யும் ஆனால் அதனை வெளியில் சொல்லமாட்டார்கள்.

கஷ்டம் வரும் காலத்தில் பொறுமையாக இருக்க பழகிக்கொள்ளுங்கள். பொறுமையை விட பெரிய தவம் இல்லை. கிரகங்கள் நம்மை அடிக்கும்பொழுது அனைத்தையும் பொறுமையோடு எதிர்நோக்கும்பொழுது ஒரளவு நம்மை பாதுக்காத்துக்கொள்ள முடியும்.

நல்லவன் கெட்டவன் என்ற எண்ணம் எல்லாம் உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. உங்களுக்குள்ள வேலையை மட்டும் சரியாக பாருங்கள் அதன்பிறகு தெய்வகாரியங்களை செய்யும். இது உங்களை உயர்த்தும்.

நல்லவனாக இருக்கிறேன் எனக்கு கஷ்டம் வருகின்றது என்று எதுவும் செய்யாமல் உட்கார்ந்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை உங்களுக்கு தான் வரும். பொறுமையாக இருக்கவேண்டிய காலத்தில் இருந்துக்கொண்டு செயல்படும் காலத்தில் அதிவேகமாக செயல்படவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 21, 2018

மறைவுஸ்தானத்தில் செவ்வாய்


வணக்கம்!
          செவ்வாய் மறைவுஸ்தானத்தில் நின்றால் அது தோஷம் என்றாலும் ஒரு சில விசயத்தில் நல்லதும் செய்கின்றது. செவ்வாய் மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது அவர் மிகுந்த திறமைச்சாலியாக இருக்கின்றார்கள்.

ஒரு மனிதனை அதிகமாக பாதிப்பது அவனிடம் இருக்கும் பயம். பயத்தால் தான் பலர் அதிகமாக முன்னேற்றம் அடைவதும் இல்லை. பயத்தை போக்குவது செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் செயல்படுவதால் தான் இருக்கின்றது.

மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் பலர் நல்ல தைரியமாக செயல்பட வைக்கின்றது. பயம் இல்லாமல் செயல்பட்டு அதிகமாக முன்னேற்றத்தை அடைக்கின்றனர். ஒருவர் செய்யும் வேலையை விட மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருக்கும் நபர்கள் துரிதமாக செய்வார்கள்.

மறைவுஸ்தானத்தில் தோஷம் என்று சொன்னாலும் கூட இவர்களை செயல்பட வைத்து மிகப்பெரிய வாழ்க்கையை வாழவைக்கின்றது என்று சொல்லலாம். மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருக்கும் நபர்கள் தோஷம் என்று இருக்காமல் நல்ல செயல்படுங்கள் நல்ல நிலையில் வரலாம்.

மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் கொஞ்சம் கோபத்தை மட்டும் குறைத்துக்கொண்டு செயல்படவேண்டும். ஒரு சில நேரத்தில் இந்த கோபத்தால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 20, 2018

மறைவுஸ்தானத்தில் சந்திரன்

ணக்கம்!
          சந்திரன் மறைவுஸ்தானத்திற்க்கு சென்றால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். சந்திரன் மறைவுஸ்தானத்திற்க்கு செல்லகூடாது என்று தான் சொல்லவேண்டும் ஏன் என்றால் மறைவுஸ்தானத்திற்க்கு சந்திரன் செல்லும்பொழுது அவர்கள் நிறைய கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.

சந்திரன் மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது அவர்களின் வாழ்க்கை மிகுந்த போராட்டமாக தான் இருக்கும். சந்திரன் நல்ல நட்சத்திரத்தில் அமர்ந்து சென்றால் அவர்களுக்கு பலன் நல்லவிதத்தில் கொடுத்துக்கொண்டு இருக்கும்.

நான் ஒரு சில ஜாதகர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் எதற்க்கும் தயங்காமல் அனைத்து காரியங்களையும் செய்வார்கள். கடைசி வரை போராடிக்கொண்டே இருப்பார்கள். போராட்டம் என்றால் வெற்றி பெறாமல் விடமாட்டார்கள் என்று சொல்லுகிறேன்.

சந்திரன் மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது அவர்களின் பேச்சை மட்டும் நம்பி எதிலும் இறங்கமுடியாது. உங்களுக்கு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு எதுவும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

சந்திரன் மறைவஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு மனப்பிரச்சினை இருக்க தான் செய்யும். மனப்பிரச்சினையை சமாளித்துவிட்டு வேலையை செய்தால் சந்திரன் மறைவது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 19, 2018

ஆவணி ஞாயிறு


வணக்கம்!
          வருடந்தோறும் ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமை ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் மாரியம்மனுக்கு விரதம் இருப்பார்கள். பல கிராமங்களில் இது நடைமுறையில் இருக்கின்றன. இன்று ஆவணி ஞாயிற்றுகிழமை தொடங்குகின்றது. கடைசி ஞாயிற்றுகிழமை அன்று மாரியம்மனுக்கு  கடைஞாயிறு திருவிழா கொண்டாடுவார்கள்.

பெரும்பாலும் புரட்டாசி விரதம் பெருமாளுக்கு இருப்பவர்கள் அனைவரும் ஆவணி ஞாயிற்றுகிழமை விரதம் பிடிப்பார்கள். இது தஞ்சாவூர் பகுதியில் நடந்துவரும் ஒரு வழிமுறை. பல ஊர்களிலும் இப்படியே நடக்கலாம்.

மாரியம்மன் என்றாலே மழைக்காக ஒரு கடவுள் என்பது போலவே அனைத்து ஊர்களிலும் திருவிழா நடத்துவார்கள். மாரியம்மன் இரண்டு விதத்தில் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு நடத்துவார்கள். ஒன்று மழைக்காக நடத்துவார்கள் அடுத்தது அம்மை போன்ற நாேய்கள் வராமல் இருப்பதற்க்கு வழிபாடு நடத்துவார்கள்.

நமது பழமையான முறைப்படி ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு மாரியம்மன் கண்டிப்பாக இருக்கும். மாரியம்மன் பெயரில் வித்தியாசம் இருக்குமே தவிர மற்றபடி அனைத்தும் மாரியம்மன் மட்டுமே.

ஆவணி  ஞாயிற்றுகிழமை என்பது ஆண்களை விட பெண்கள் தான் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் விரதம் இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 18, 2018

கடனும் நோயும்


வணக்கம்!
         மறைவுஸ்தானத்தைப்பற்றி பேசும்பொழுது நாம் நல்லதைப்பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம். பல நண்பர்கள் என்னிடம் பேசும்பொழுது சொல்லுவார்கள். கடன் தொல்லை தாங்கவே முடியவில்லை என்று சொல்லுவார்கள். கடன் இல்லை என்று யாரும் சொன்னது கிடையாது.

நூறு சதவீதத்திற்க்கு ஒன்று குறையலாம் அனைவரும் கடன் என்று சொல்லிவிடுவார்கள். அனைவரும் சொல்லப்படுகின்ற வார்த்தை கடன் இருக்கின்றது. கடன் என்று சொன்னால் அது ஆறாவதுவீடு சம்பந்தப்படாமல் இருக்காது. மறைவுஸ்தானமான ஆறாவது வீடு அனைத்து வீடுகள் போல சமமாகவே வேலை செய்துக்கொண்டு இருப்பதால் கடன் உருவாகும் என்று சொல்லலாம்.

கடன் இருந்துக்கொண்டே இருப்பது ஏதாவது ஒரு வகையில் நல்லது என்று கூட சொல்லலாம். கடன் இல்லை என்றால் நோயின் தாக்கம் அதிகமாக சென்றுவிடும். பலர் இரண்டும் இருக்கின்றது என்று சொல்லுகின்றனர்.

கடனும் இருக்கின்றது நோயும் இருக்கின்றது என்றாலும் இது அதிகமாக சென்றுவிடகூடாது. அதிகமாக சென்றுவிட்டால் பிரச்சினையாகிவிடும். ஆளை கொல்லும் அளவுக்கு இது சென்றுவிடகூடாது.

எல்லாவிதத்திலும் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும் அதோடு ஒவ்வொரு நாளும் நீங்கள் கும்பிடும் சாமியிடம் கடனும் நோயும் அதிகம் கொடுத்துவிடதே என்று சொல்லவேண்டியது தான் இதற்கு வழி. எச்சரிக்கை மற்றும் தினமும் செய்யும் வழிபாட்டில் குறைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மறைந்த வீட்டின் பலன்


ணக்கம்!
          அவசரவேலையாக மதுரையில் இருந்த காரணத்தால் இரண்டு நாட்கள் பதிவை தரமுடியவில்லை. நேற்று மாலை தஞ்சாவூர் வந்துவிட்டேன். இனி தொடர்ந்து பதிவுகளை பார்க்கலாம்.

மறைவுஸ்தான இடத்தில் புதன் மறைந்து நின்றால் அது நல்லது என்று சொல்லுவார்கள். மறைந்த புதன் நிறைந்த அறிவை தரும் என்ற பழமொழியை சொல்லுவார்கள். மறைந்த புதன் நிறைந்த அறிவை கொடுத்தாலும் அது இயற்கையை அறியும் ஆற்றலை தான் தருகின்றது.

மறைந்த இடத்தில் புதன் உள்ளவர்கள் நல்ல சோதிடர்களாக இருக்கின்றனர். பெரும்பாலான சோதிடர்களுக்கு புதன் மறைந்து நின்ற பலனை கொடுக்கின்றது. எட்டில் புதன் இருக்கும் நபர்கள் நிறைந்த திறமையான சோதிட அறிவை பெற்று இருக்கின்றனர்.

புதன் மறைந்தவர்களுக்கு கல்வி அறிவிலும் சிறந்து விளங்குகின்றனர். பெரும்பாலான ஜாதகர்களுக்கு மறைந்த இடத்தில் சூரியன் புதன் சேர்ந்து இருந்தால் அவர்கள் அரசு வேலைக்காக நிறைய தேர்வுகளை எழுதுகின்றனர்.

சூரியன் மறைந்து இருக்கும்பொழுது அரசு தேர்வில் தோல்வியை தரும் ஒரு சிலருக்கு புதன் நிறைய போராடி அரசு தேர்வில் பெற்றியை கொடுத்துவிடுகின்றது. மறைந்த புதனால் நிறைய நல்ல விசயங்களை கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 15, 2018

புத்திசாலி


வணக்கம்!
          இன்றைய காலத்தில் அனைவரும் புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர் ஆனால் புத்திசாலியாக இருக்கின்றார்களாக என்பது சந்தேகமாக தான் இருக்கின்றது. பொதுவாக அனைத்திலும் என்னையே நான் சோதனை செய்து தான் சொல்லுவது உண்டு.

எனக்கே அனைத்து விசயமும் தெரிகின்றது என்பது போலவே ஒரு மனநிலை வரும். இதனை தவிர்க்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் அது அடிக்கடி வந்து தலைதூக்கிவிடுகின்றது. இது பல விசயத்தில் எனக்கு அடி மேல் அடி வந்துவிடும். 

பலர் புத்திசாலி போல செயல்பட்டு பல நல்ல விசயங்களை வருவதை தவிர்த்துவிடுகின்றனர். புத்திசாலியாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அடுத்தவர்கள் சொல்வதையும் கேட்டுக்கொள்ளவேண்டும்.

எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் நமக்கு தெரிந்த அறிவையும் அதோடு அடுத்தவர்களின் அறிவையும் சேர்த்துக்கொண்டால் நல்லது. எந்த காலத்திலும் புத்திசாலியாகவே இருக்கவேண்டும் என்று காட்டிக்கொள்ளவே வேண்டாம். 

ஏதோ தோன்றியது உங்களிடம் சொல்லவேண்டும் என்று சொல்லுகிறேன். உங்களுக்கு இது பிடித்து இருந்தால் எடுத்துக்கொண்டு அதுபோல நடக்கலாம். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம்.

இலவச சோதிட ஆலோசனை தற்சமயம் நிறுத்தப்படுகின்றது.  இன்று மதுரை செல்கிறேன். தினமும் மதுரை பயணம் இருக்கின்றது. இதுவரை ஜாதகம் அனுப்பியவர்களுக்கு எல்லாம் விரைவில் தொடர்புக்கொண்டு பேசுகிறேன். 

புதியதாக வரும் நபர்களுக்கு எனக்கு ஓய்வு நேரம் வரும்பொழுது பதிவில் சொல்லுகிறேன் அப்பொழுது இலவசமாக கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.கண்டிப்பாக மாதத்தில் ஒரு முறை அறிவிப்பு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 14, 2018

பாக்கியம்


வணக்கம்!
          ஆடி மாதத்தில் விருப்ப சந்தாவை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய பணத்தை வைத்து ஆடி மாதத்தில் பூஜை செய்தததோடு நேற்று அம்மனுக்கு வனபூஜை நடைபெற்றது. வனபூஜை என்றால் இந்த கோவிலில் உள்ள பங்குதாரர்கள் அனைவரும் சேர்ந்து வருடத்திற்க்கு ஒரு முறை செய்யும் பூஜை.

வனபூஜையில் என்ன சிறப்பு என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் பூஜை. இதில் நீங்கள் அனுப்பிய சந்தா பணத்தை வைத்து நம்மால் முடிந்தளவு இந்தபூஜைக்கு ஒரு நல்லதை ஒன்றை செய்ய முடிந்தது. 

வனபூஜை நேற்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி இன்று காலை ஐந்து மணி வரை நடைபெற்றது. ஒரு இரவு முழுவதும் செய்யும் சிறப்பான பூஜை இது. இதில் உங்களை கலந்துக்கொள்ள வைத்தது தான் பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன்.

ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருப்பவர்களுக்கு இந்த பூஜையை பற்றி எல்லாம் தெரியும். இப்படிப்பட்ட பூஜை செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் இல்லை என்று சொல்லுவார்கள். இதில் உங்களையும் பங்குக்கொள்ள வைத்தேன். நீங்கள் அனுப்பிய பணம் எப்படிப்பட்ட விசயத்திற்க்கு பங்களித்து இருக்கின்றது என்பதை புரிந்தால் இந்த ஜென்மம் ஒரு நல்ல ஜென்மம் என்பது புரியும்.

நேற்று பகல் முழுவதும் உழைத்து பூஜைக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து பொருட்களை எல்லாம் சேர்த்து இரவு முழுவதும் விழித்து பூஜை செய்து முடித்து இருக்கிறோம். இன்று யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் நாளை முதல் வழக்கமான தொடர்புகளை வைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 13, 2018

தாயை இழக்கும் ஜாதக அமைப்பு?


வணக்கம்!
        ஒருவருக்கு தாயை இழக்கும் அமைப்பு எப்படி இருக்கும் என்று நண்பர் கேட்டார். தாய் என்றாலே அது சந்திரனை தான் குறிக்கும். நான்காவது வீட்டை தாயை காட்டக்கூடிய ஒரு அமைப்பாக இருந்தாலும் அதன் காரத்துவம் உடைய சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து நாம் முடிவு செய்யலாம்.

நான் பார்த்தவரையில் தாயை இழக்கும் அமைப்பு என்பது அவரின் நான்காவது வீடும் கெடவேண்டும் அதோடு சந்திரனும் கெட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு தாய் இருக்கமாட்டார்கள். இப்படிபட்ட ஜாதகர்களுக்கு அவர்களின் தாய் இளம் வயதில் அல்லது அவர் பிறக்கும்பொழுது இறந்துவிடுவார்கள்.

மாந்தி நான்காவது வீட்டில் இருந்து சந்திரனோடு சனி சேர்ந்து இருந்தால் அவரின் தாய் கண்டிப்பாக நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவார். இவர்க்கு சந்திரன் அல்லது சனி தசா இரண்டில் ஏதோ ஒரு தசா வரும்பொழுது கண்டிப்பாக இறந்துவிடுவார்.

சந்திரனோடு செவ்வாய் சேர்ந்தால் அவரின் தாய்க்கு அதிகமாக நோய் வாய்பட நேரிடும். சந்திரன் செவ்வாய் சேரும் நபரின் தாய்க்கு அடிக்கடி தலைவலி வரும். சந்திரன் நன்றாக இருந்தால் தான் தாய் நலமாக இருக்கமுடியும்.

நான்காவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் தாயின் உடல் நிலையில் பிரச்சினை கொடுத்துக்கொண்டே தான் இருக்கும். நான்காவது வீடு கெட்ட கிரகங்களின் வீடாக இருந்து அந்த கிரகங்கள் பிரச்சினையில் சிக்கினாலும் தாய்க்கு கெடுதல் தான் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 12, 2018

முடிவுகளை எடுக்கும் கிரக அமைப்பு?


வணக்கம்!
          ஒரு சில நேரங்களில் முடிவுகள் உடனே எடுத்துவிடவேண்டும். பொறுமையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று இருந்தால் அது சிக்கலை தான் கொடுக்குமே தவிர வாழ்வில் முன்னேற்றத்தை அதிகமாக கொடுத்துவிடாது.

பல இடங்களில் பல பேரை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு அவசர முடிவுகள் எடுக்கவேண்டிய நேரத்தில் மிக காலதாமதமாக முடிவு எடுத்துவிடுவார்கள். அந்த முடிவால் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் சிக்கல்களை சந்திக்கவேண்டியிருக்கும்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அதற்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் சரியாக வேலை செய்ய வேண்டும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் சரியாக இல்லை என்றால் முடிவுகள் அனைத்தும் குளறுபடிகளை தந்துவிடும்.

ஒரு முடிவு எடுப்பதற்க்கு மனதும் சரியாக இருக்கவேண்டும். மனதிற்க்கு எதிராக கிரகங்கள் இருந்தால் மனதை போட்டு குழப்பிவிடும் என்பதால் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் முடிவு எடுப்பதற்க்கு ஒத்துழைக்கவேண்டும்.

ஒருவருக்கு இராகு தசா நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவரின் முடிவுகள் எந்த காலத்திலும் சரியாக இருக்கவே இருக்காது. அடுத்தவர்கள் அவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தும் விதமாகவே முடிவுகள் இருக்கும்.

ஒருவருக்கு நல்ல முடிவுகள் எடுக்க என்னை பொறுத்தவரை மற்றும் நான் ஜாதகத்தை பார்த்தவரை குருதசா ஒருவருக்கு நடந்தால் அவர் சிறந்த முடிவுகளை எடுப்பார் மற்றும் எடுப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 11, 2018

மறைவுஸ்தான வீட்டின் பலன்


வணக்கம்!
          பெரும்பாலும் நாம் மறைவுஸ்தானத்தின் தசா நடந்தால் அதனைப்பற்றி பெரியளவில் பயப்படுவோம். நீங்கள் பயப்படவில்லை என்றாலும் சோதிடர்கள் பயமுறுத்திவிடுவார்கள். மறைவுஸ்தான அதிபதியின் தசாவில் தான் ஒருவர் அதிகளவில் பொருள் சம்பந்தப்பட்ட விசயங்களை தேடுவார்.

சொத்து பணத்தை எல்லாம் அதிகளவில் சேமித்து வைக்க மறைவுஸ்தான அதிபதிகள் அதிகமாக ஈடுபட வைக்கும். நிறைய சம்பந்தமே இல்லாத பணங்களை எல்லாம் கையாள வைக்கும். அடுத்தவர்கள் சேமித்த பணம் எல்லாம் உங்களை தேடிவரும்.

எனக்கு தெரிந்த பல செல்வந்தர்களுக்கு எல்லாம் மறைவுஸ்தான அதிபதியின் காலத்தில் அதிகளவில் சம்பாதித்து இருக்கின்றனர். மறைமுகமாக சம்பாதிக்க வைப்பது எல்லாம் இந்த மறைவுஸ்தான அதிபதியின் காலத்தில் தான் சம்பாதிக்க வைத்திருக்கின்றனர்.

செல்வங்களை பதுக்கும் வாய்ப்புகளை எல்லாம் இந்த மறைமுக ஸ்தான அதிபதிகள் தான் செய்கின்றன. அரசாங்கத்தில் உள்ள பணத்தை எல்லாம் திருடி வைத்திருக்கும் கும்பலுக்கு எல்லாம் இந்த மறைமுக ஸ்தான அதிபதிகளின் காலத்தில் தான் நடந்து இருக்கும்.

மறைமுக ஸ்தான அதிபதிகள் கெடுதலை மட்டும் தான் கொடுக்கும் என்பதை தாண்டி இப்படி பல செல்வந்தர்களையும் உருவாக்கிக்கொடுத்து இருக்கின்றது என்பதை பல ஜாதக அனுபவங்களை கொண்டு சொல்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆடிமாதம் நிறைவு


வணக்கம்!
          இன்று அமாவாசை அம்மன் யாகத்திற்க்கு காணிக்கை அனுப்பியர் சென்னையை சேர்ந்த நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இன்றோடு ஆடிமாத அம்மன் யாகம் முடிவடைந்தது. கலந்துக்கொண்ட அனைவருக்கும் அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும்.

ஜாதககதம்பத்தின் சந்தாவை ஆடி மாதத்தில் அனுப்ப சொல்லிருந்தேன். பல நண்பர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தனர். என்னை மதித்து அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய பணம் ஒரு நல்ல காரியத்திற்க்கு செலவு செய்யபோகிறேன். 

எனது செலவுக்கு கொஞ்சம் நான் எடுத்துக்கொண்டுவிட்டு அதனை நல்ல காரியத்திற்க்கு செலவு செய்ய இருக்கிறேன். உங்களிடம் அதனை திங்கள் கிழமை அன்று தெரிவிக்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு அது சந்தோஷத்தை தரும்.

பணம் அனுப்பியவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள் என்று சொல்லும் அளவுக்கு அந்த காரியத்தை சூழ்நிலை ஏற்படுத்திக்கொடுத்து இருக்கின்றது. இதுவரை பணம் அனுப்பாதவர்கள் திங்கள்கிழமைக்குள் அனுப்பி வைத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 10, 2018

அமாவாசை


வணக்கம்!
          இன்று ஆடி வெள்ளி அம்மன் யாகத்திற்க்கு திருப்பூரை சேர்ந்த ஒருவர் காணிக்கை செலுத்தியுள்ளார்.

நாளை ஆடி அமாவாசை. பலர் ஆடி அமாவாசைக்கு என்ன செய்யலாம் என்று கேட்டனர். தாய் தந்தையில் யாராவது ஒருவர் இறந்து ஒரு வருடம் முடிந்தால் அவர்களுக்காக அமாவாசை விரதம் இருக்கலாம்.

ஆடி அமாவாசை விரதம் செய்யும் வீட்டை சுத்தமாக்கிவிட்டு விரதம் இருந்து மதியம் 1 மணிக்கு மேல் விரதம் முடிக்கும் விதமாக சமைத்து விரதம் செய்யலாம். ஆடி அமாவாசைக்கு என்று காய்கறிகளை சமைப்பார்கள்.

காய்கறிகளில் புடலங்காய் மற்றும் ஆதண்டங்காய் என்ற காய்களை பிரத்தனமாக சமைப்பார்கள். புடலங்காய் கண்டிப்பாக இடம் பெறவேண்டிய ஒன்று. இதில் ஒன்றையாவது வைத்து விரத சமையலை செய்ய செய்து விரதம் செய்யவேண்டும்.

பலர் கோவில்களில் சென்று அமாவாசை தர்பணம் செய்வார்கள். பல இடத்தில் இது கூட்டாக கோவிந்த பாடுவது போல இருக்கின்றது. உங்களுக்கு முடிந்தால் இதனை செய்யலாம் அப்படி இல்லை என்றால் நீங்கள் வீட்டிலேயே விரதம் இருந்து கொடுத்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 9, 2018

கெட்டமதி கண்களுக்கு தெரியாது


வணக்கம்!
          கிராமபுறங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். கெட்டமதி கண்களுக்கு தெரியாது என்பார்கள். கெட்ட மதி என்றால் நமக்கு வருகின்ற தீமையான விதி என்று அர்த்தம் என்பார்கள். நமக்கு தெரியாத விதியை சோதிடத்தில் சொன்னாலும் அதனை அந்தளவுக்கு எடுத்துக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்வதில்லை.

சாேதிடன் சொல்லுவான் இவன் சொல்லுவது அனைத்தும் நடந்துவிடுகிறதா என்ன என்று சொல்லுவார்கள். உண்மையில் நமக்கு வருகின்ற கெட்ட விதி என்பது நம்மை அடித்து காலி செய்துவிடும். அதனை அறிந்து நாம் நடந்துக்கொள்ளவேண்டும்.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் விதியை புரிந்துக்கொண்டு நடக்கவே மாட்டார்கள். அவர் அவர்களின் இஷ்டத்திற்க்கு நடந்துக்கொள்வார்கள். ஏட்டிக்கு போட்டியாக ஒருவர் நடந்தாலே அந்த குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

ஒருவரின் குடும்பத்தில் குடும்பத்தின் தலைவரின் பேச்சை கேட்டு நடக்காமல் இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிகப்பட்சம் இராகு தசா நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

இராகு தசா நடந்தால் மூளை அது இஷ்டத்திற்க்கு செயல்பட்டுக்கொண்டு இருக்கும். யார் பேச்சையும் கேட்காமல் இஷ்டத்திற்க்கு செயல்படும். கெட்டமதி கண்களுக்கு தெரியாது என்பது அதிகபட்சம் இராகு தசா நடப்பவர்களுக்கு சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 8, 2018

மறைவுஸ்தான பலன்


வணக்கம்!
          மறைவுஸ்தானமான எட்டில் லக்கினாதிபதியே நின்றால் அவர்களின் வாழ்க்கை இளம் வயதில் அதிக பிரச்சினைக்குள் சிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை எட்டில் நிற்க்கும் லக்கினாதிபதியே வழங்கும்.

மறைவுஸ்தானமான எட்டில் லக்கினாதிபதி நிற்கிறது அதனால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நன்றாக இருக்காது என்று சொல்லிவிடமுடியாது அவர்களுக்கும் வாழ்க்கை நன்றாக இருக்கும் முன்பகுதியில் பிரச்சினையை கொடுத்துவிட்டு அதன் பிறகு நன்றாக வாழ்வார்கள்.

மறைவுஸ்தானமான இடத்தில் நிற்க்கும்பொழுது அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஒரு சில திடீர் அதிர்ஷ்டம் அடிப்பதற்க்கு வாய்ப்பு உண்டு. லாட்டரி இல்லை என்றாலும் பிறர் ஏதோ ஒரு வகையில் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

லக்கினாதிபதி எட்டில் இருக்கும்பொழுது அவர்களுக்கு தொடர்ச்சியாக உடலுக்கு ஏதாவது ஒரு நோய் தாக்கினாலும் அவர்கள் அனைத்து துறையில் இருந்தும் பொன் பொருள் சேர்க்கும் வாய்ப்பு உருவாகும்.

ஒருவர் ஒரு துறையில் இருந்து தான் சம்பாதிக்கமுடியும் ஆனால் லக்கினாதிபதி எட்டில் இருப்பவர்கள் அனைத்து துறையில் இருந்தும் வருமானத்தை பெற்றுக்கொண்டு இருப்பார்கள். இது இவர்களுக்கு உள்ள ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 7, 2018

இலவச சோதிட ஆலோசனை


வணக்கம்!
          ஒரு சில புண்ணியங்களை நாம் பெறவேண்டும் என்றால் அது இலவசமாக அடுத்தவர்களுக்கு உழைப்பதால் மட்டுமே நமக்கு புண்ணியம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு இலவசமாக செய்து அந்த புண்ணியத்தை பெறும்பொழுது நமக்குள் கிடைக்கும் பாருங்கள் ஒரு திருப்தி அது வார்த்தைகளால் கிடைக்காத ஒன்று என்று சொல்லலாம்.

இலவச சோதிடத்தை அறிவித்து பலருக்கு பலன் சொல்லிருக்கிறேன். இந்த மாதத்தில் பூஜைகள் பல நடந்தாலும் அதில் இந்த இலவச பலனை சொல்லும்பொழுது கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம்.

எப்பொழுதும் இலவச ஆலோசனை நாம் வழங்கிக்கொண்டே இருக்கலாம் ஆனால் பதிவுக்கு வரும் ஒரு சில நண்பர்களால் அது பாதிப்படைகின்றது. இலவசத்தில் பல நக்கல் கிண்டல் ஒரு சிலரால் வரும் என்பதால் அதனை தவிர்த்து இருக்கிறேன். 

ஒவ்வொரு மாதமும் ஒரு சில நாட்களில் இலவச சோதிட ஆலோசனையை தர இருக்கிறேன். அதில் தொடர்ச்சியாக வரும் நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நல்ல முறையில் ஜாதகத்தை அலசி உங்களுக்கு பலனை தருகிறேன்.

கட்டண சோதிடமும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். மாதத்தில் ஒரு சில நாட்கள் பதிவில் சொல்லிவிட்டு உங்களுக்கு ஆலோசனை தருகிறேன். இலவச சோதிடத்தில் வந்தால் வசதி குறைவு என்று நான் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டேன். அனைவரும் இலவசத்தில் பங்குக்கொண்டு சோதிடபலனை கேட்டுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மறைமுக வீட்டின் பலன்


வணக்கம்!
 இலவச சோதிட சேவைக்கு அனுப்பிய ஜாதகர்களுக்கு எல்லாம் ஜாதக பலனை சொல்லிமுடித்துவிடலாம். இதுவரை ஜாதகத்தை அனுப்பிவிட்டு தொடர்புக்கொள்ளாதவர்கள் தொடர்புக்கொள்ளவும். பலருக்கு ஜாதக பலன் சொல்லிவிட்டேன். மீதி இருப்பவர்களும் பலனை பார்த்துவிடலாம்.

ஆடி மாதம் முடியும் வரை சிறப்பு பூஜைகள் இருக்கின்றன. இதுவரை ஜாதககதம்பத்திற்க்கு விருப்பசந்தாவை அனுப்பாதவர்கள் அனுப்பி வைக்கவும். 

மறைமுகவீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் அது நல்ல பலனை தரும் என்று சொல்லலாம். பெரும்பாலும் மறைவுவீட்டில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்கள் சமுதாயத்தில் நல்ல பெயரோடு இருப்பார்கள். இன்றைய காலத்தில் ஒருவர் பெயர் எடுக்கிறார் என்றால் அவர் குறுக்குவழியையை தான் பின்பற்றுவார்கள். 

மறைவுவீட்டில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்கள் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து குறுக்கு வழியை நாடலாம். அதாவது சட்டத்திற்க்கு முரணாக இருக்ககூடாது கொஞ்சம் வித்தியாசமாக யோசனை செய்யலாம்.

உங்களுக்கு எப்படியும் பணம் வந்துவிடும் அதற்கு நீங்கள் கொஞ்சம் நன்றாக யோசித்து செயல்பட்டால் நீங்கள் நிறைய முன்னேற்றம் காணலாம் என்று சொல்லுகிறேன். ஒரு சிலருக்கு அடுத்தவன் சொத்தை வைத்து ஆளவேண்டும் என்று கூட இருக்கின்றது.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 6, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள் .





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள். 

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.  
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.    

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.    
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.     
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
 பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்   
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்  

வழக்கம்போல்                                                                     

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.  

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறும் நாளில் உங்களின் வேண்டுதலை வையுங்கள். 

ஆடி மாதத்தில் அனைவரும் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்திவையுங்கள் என்று சொல்லிருந்தேன். பலர் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்தி வருகின்றனர். அனைவரும் செலுத்தி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இலவச சோதிட ஆலோசனைக்கு அதிகமான ஜாதகம் வந்திருக்கின்றது கொஞ்சம் காலதாமதம் இருந்தாலும் அனைவரையும் தொடர்புக்கொண்டு பேசிவிடுகிறேன். அனைவரும் தங்களின் செல்போன் எண்ணை இணைத்து அனுப்பிவையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 4, 2018

மறைமுக வீடு பலன்


ணக்கம்!
          ஒவ்வொரு மாதமும் எனக்கு பணம் அனுப்பியவர்களோடு சேர்ந்து ஐந்து நபர்கள் மட்டும் பணம் அனுப்பியிருக்கின்றீர்கள். விருப்ப சந்தாவை அனைவரும் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவரும் செலுத்தி வையுங்கள்.

ஆடி மாதம் என்பதால் பெரும்பாலும் நமது மக்கள் திருமணம் சம்பந்தப்பட்ட விசயங்களை செய்யமாட்டார்கள். ஆடி மாதத்தில் திருமணம் மட்டும் தான் செய்ய கூடாது. நிச்சயார்த்த விழா மற்றும் பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலம் எல்லாம் செய்யலாம். அனைவரும் துணிந்து செய்யுங்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் கோவில் விழாக்களை எல்லாம் விட ஆடி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்று வழிபாடு அல்லது முன்னோர்களுக்கு செய்யவேண்டிய காரியத்தை எல்லாம் செய்யலாம்.

ஆடி அமாவாசை அன்று அங்காளபரமேஸ்வரி கோவில்களில் திருவிழா செய்வார்கள். அமாவாசை அன்று நீங்கள் நமது அம்மனை நினைத்து உங்களின் வீட்டில் சாமி கும்பிடலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில்களில் வழிபடலாம்.


மறைமுக வீடுகளை பற்றி நிறைய நாம் பதிவிட்டு இருக்கிறோம். மறைமுக வீடுகளில் இருந்து நன்மையைும் இருக்கின்றன. மறைமுக வீடுகளால் நல்லது நிறைய சொல்லிருக்கிறோம். மறைமுக வீடுகளில் உள்ள முக்கிய விசயங்கள் அனைத்தும் பதிவிடுகிறோம். அதனைப்பற்றி மறுபடியும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

சனி கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தால் முதல் பலன் அவர்க்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நல்ல பணத்தை அள்ளிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு நடைபெறும். சம்பந்தமே இல்லாத இடத்தில் இருந்து பணத்தை அள்ளிக்கொடுக்ககூடிய அமைப்பு இருக்கும்.  செல்வவளத்தை அள்ளிதரும் அமைப்பு என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு