வணக்கம்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன்.
வணக்கம்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன்.
வணக்கம்!
ரிஷப இராசிக்கு அஷ்டமசனியில் இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பாக்கியசனி நல்ல பலனை கொடுக்குமா அல்லது தீய பலனை கொடுக்குமா என்பதைப்பற்றி இந்த வீடியோ பதிவில் சென்று பாருங்கள்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
வணக்கம்!
நாளை கடைசி சோமவாரம் மற்றும் அமாவாசையும் சேர்ந்து வருகின்றது. சோமவாரம் என்றாலே அது சிவனுக்கு உகந்த ஒரு நாள். சிவனின் அருளை பெறுவதற்க்கு கார்த்திகை மாதத்தில் திங்கள்கிழமை தோறும் விரதம் இருந்து கடைசி திங்கள் கடை சோமவாரம் எ்னறு அழைப்பார்கள். அன்றைய தினத்தில் சிவாயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஒரு சில கோவில்களில் திருவிழாவும் நடைபெறும்.
அமாவாசை மற்றும் கடைசி சோமவாரம் என்பதால் நல்ல சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகவே அதனை நாம் எடுத்துக்கொண்டு சிவனின் அருளை நாம் பெறலாம். விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருபவர்களும் இருக்கின்றனர். அதனை மேற்கொண்டவர்கள் அதனை செய்யுங்கள்.
நாம் அமாவாசை மற்றும் கடைசோமவாரம் என்பதால் ஒரு சிறப்பு பூஜை ஒன்றை செய்ய இருக்கிறோம். ருத்ர ஜெபம் மற்றும் ருத்ர பூஜை செய்ய இருக்கிறோம் இதில் கலந்துக்கொள்ள கட்டணம் செலுத்தவேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக இது Rs 500 என்று தீர்மானித்து இருக்கிறோம்.
கலந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் மட்டும் Rs 500 செலுத்தி தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை அனுப்ப வேண்டும். தங்களுக்காக சிறப்பு பூஜை செய்யப்படும்.
வணக்கம்!
நாம் பார்த்த ஜாதகத்திலேயே மிக மோசமான கிரக அமைப்பு என்றால் அது மூன்று மற்றும் ஒன்பதில் இராகு கேது அமரும் ஜாதகமாகவே இருக்கும். மூன்று மற்றும் ஒன்பதில் இராகு கேது அமர்ந்தால் அவர்களின் வாழ்க்கை இளமை காலம் என்பது மிக மோசமான ஒரு அமைப்பாகவே இருக்கும்.
மூன்று மற்றும் ஒன்பதாவது வீட்டில் இராகு கேது சம்பந்தப்படுவதால் மட்டுமே இந்த பிரச்சினை நாம் பித்ருசாபம் என்று எடுத்துக்கொள்ளலாம். இராகு கேது என்றாலே அது அதிகமான கர்மா கொடுக்கும் கிரகம் அது மூன்று ஒன்பதில் சம்பந்தம் ஏற்படும்பொழுது அது நிறைய கர்மாவை கொடுத்துவிடுகின்றது.
இராகு கேது மூன்று மற்றும் ஒன்பதில் அமரும்பொழுது அவர்களுக்கு கடுமையான ஒரு பித்ரு சாபத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அவர்களின் முற்பிறவி மற்றும் அவர்களின் தந்தை பாட்டான் வழியில் உள்ள கர்மத்தையும் சேர்த்து கொடுத்துவிடும்.
இளமை காலத்தில் கடுமையான வறுமையை கொடுத்தால் அது உயிர் பிரச்சினையை ஏற்படுத்தாது. இளமை காலத்தில் வசதி வாய்ப்பு இருந்தால் அது உயிர் பிரச்சினையை அதிகமாக ஏற்படுத்தும். இளம் வயதிலேயே நிறைய கண்டங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
வணக்கம்!
ஒருவருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தால் அவர்க்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஏழரைச்சனி ஒருவருக்கு இரண்டாவது சுற்று வரும்பொழுது அதிக பாதிப்பை தரும். இரண்டாவது சுற்று என்பது பெரிய அளவில் நன்மை செய்யும் என்று சொல்லுவார்கள் ஆனால் அனுபவத்தில் பெரிய அளவில் பிரச்சினையை சந்திப்பதும் இந்த காலமாகவே இருக்கின்றது.
ஏழரைச்சனியின் காலத்தில் உங்களுக்கு எந்த வழியில் உங்களின் பிழைப்பு நடக்கின்றதோ அந்த வழியில் முதலில் பிரச்சினையை ஆரம்பிக்கும். உங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலில் தான் முதலில் கவனத்தை கொண்டு வரும் அதில் பிரச்சினையை கிளப்பி உங்களை பிழைக்க விடாமல் செய்வதில் சனிக்கு அதிக மகிழ்ச்சி இருக்கும்.
இதுவரை இராஜாவாக வலம் வந்துக்கொண்டு இருந்தால் சனி அதில் கவனத்தை செலுத்தும். உங்களை அசிங்கப்படுத்தி உங்களை அடுத்தவர் முன்பு தலை குனிய வைக்கும். அடுத்தவர்கள் முன்பு கெத்து காட்டிக்கொண்டு இருந்த நீங்கள் அடுத்தவர்கள் முன்பு தலைகுனிய செய்ய வைத்து நீங்கள் செல்லும்பொழுது உங்களின் மனம் அந்தபாடுபடும் அதனை வார்த்தையால் வெளியில் சொல்லமுடியாது அனுபவத்தில் நடக்கும்பொழுது மட்டுமே அது என்ன என்பது உங்களுக்கு புரிய வரும்.
உங்களுக்கு நோய் என்பது இதுவரை இல்லாமல் இருந்திருந்தால் நோய் வரும். உங்களின் உடலில் உள்ளுக்குள் வலியை கொடுப்பதில் அதிக கவனம் சனி செலுத்தும். உங்களின் உள் உடலில் அதிக வலியை காட்டிவிடும் இதனால் மனக்கவலையை அதிகம் ஏற்படுத்தி கொடுத்துவிடும்.
திருமணம் முடிந்து நீங்கள் சந்தாேஷமாக வாழ்ந்திருந்தால் ஏழரைச்சனியின் காலத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு அதிகமாக உருவாக்கிவிடும். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பிறரோடு தொடர்புப்படுத்தி பேசுவது போல உங்களை காட்டிவிடும். இருவருக்கும் பிரச்சினை இதனாலே வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாகிவிடும்.
நீங்கள் வாழ்க்கையில் ஆசைப்பட்டு வாங்கிய வாகனம் பழுதாகி உங்களை ஆழ்ந்த கவலைக்குள் கொண்டு சென்றுவிடும். ஒரு சிலருக்கு வாகனம் விபத்து ஏற்பட்டுவிடுவதும் உண்டு. கை அல்லது கால்களில் முறிவு ஏற்படுவதற்க்கு வாய்ப்பையும் ஏழரைச்சனி செய்யும்.