Followers

Monday, April 30, 2018

மனநிலை பாதிப்பை தரும் ராகு


வணக்கம்!
          இராகு கிரகத்தோடு புதன் கிரகம் சேர்ந்தால் அந்த நபர் அதிகப்பட்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக தான் இருப்பார்கள். இராகு கிரகம் புத்தி கிரகமான புதனோடு சேரும்பாெழுது புத்தி சரியாக இருக்காது.

இராகு கிரகத்தோடு புதன் கிரகம் சேர்ந்து இருக்கும் நபர்கள் அதிகப்பட்சம் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டில் உருவாக்கிவிடும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் படி அமையும். இது ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் பல வகையில் பிரச்சினையும் கொடுக்கிறது.

ஒருவருக்கு புதன் கிரகம் ஐந்தாம் அதிபதியாக இருந்து அந்த கிரகம் இராகுவோடு சேர்ந்துவிட்டால் அவரின் வாரிசு மனநலம் பாதிக்கபட்டவர்களாக இருப்பார்கள். என்னிடம் ஒரு வாரத்திற்க்கு முன்பு ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக அது இருந்தது.

அவர்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தேன். குழந்தையின் தந்தைக்கு பூர்வபுண்ணியாதிபதியாக இருக்கும் புதன் கிரகம் இராகுவோடு சேர்ந்து இருக்கின்றது. அவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அவரின் குழந்தைக்கு அவரின் ஜாதகம் கடுமையாக தாக்குகிறது.

பொதுவாக நான் பார்த்த வரையில் இப்படிப்பட்ட குழந்தைகளின் தாய் தந்தை அனைவரும் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களின் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதால் இந்தியாவிற்க்கு வந்து நிறைய கோவில்களுக்கு சென்று வருவதற்க்காக வந்திருக்கின்றனர். நமது தளத்தை அவரின் குடும்பத்தினர் ஒருவர் படித்ததால் அதன் வழியாக என்னை சந்தித்தார்கள்.

ஜாதகத்தில் இருக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாக தான் இருக்கும். நீங்கள் தொடர்ச்சியாக கோவில்களுக்கு சென்று வாருங்கள் என்று சொல்லி அதனோடு பரிகாரமும் செய்யலாம் என்று சொல்லிருக்கிறேன். பொதுவாக இப்படிப்பட்ட விசயத்திற்க்கு குழந்தையை அதற்க்கு என்று பள்ளியில் பயிலவித்து அதோடு பரிகாரமும் செய்தால் தான் ஒரளவு வரும் என்பதையும் சொல்லிஇருக்கிறேன்.

இராகு கிரகம் அப்படிப்பட்ட ஒரு கிரகம் எதில் வைத்து நம்மை சிக்க வைக்கும் என்பது கொஞ்சம் புரியாத புதிராக தான் இருக்கும். முடிந்தவரை முன்கூட்டியே இதனை சரி செய்துவிடவேண்டும் அப்படி சரி செய்துவிட்டால் இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். 

இராகு கிரகம் என்றாலே அதிபயங்கரமான ஒரு கிரகம். பல பேர் இராகு தசாவில் இருக்கின்றீர்கள். உங்களின் ஜாதகத்தை நன்றாக அலசி பார்த்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 29, 2018

சூரியன்


வணக்கம்!
          இன்று சித்ரா பெளர்ணமி எங்கள் பகுதியில் வீட்டின் வாசலில் பொங்கல் வைத்து படைப்பார்கள். தைமாத பொங்கலுக்கு பயன்படுத்திய பொங்கல் வைக்கும் மண்கட்டிகளை வைத்து இந்த பொங்கலையும் வைப்பார்கள். பெரும்பாலும் இந்த பொங்கல் வைக்கும் பழக்கம் ஒரு சில பகுதியில் மட்டுமே இருக்கின்றது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவரின் நட்பு நீண்ட வருடமாக எனக்கு இருக்கின்றது. அவர் பல வருடங்களாக அரசாங்க வேலையில் பணிபுரியவேண்டும் என்று முயற்சி செய்துக்கொண்டு இருக்கின்றார்.

அரசாங்க வேலைக்கு அவர் முயற்சித்து பல தோல்விகளை கண்டு இருக்கின்றார். கடைசி நேரத்தில் கூட அவர்க்கு வரும் வாய்ப்பு சென்று அடுத்தவர்க்கு போய் இருக்கின்றது. எதனால் எனக்கு அரசாங்க வேலை கிடைக்கமாட்டேன்கிறது என்று என்னிடம் கேட்டார்.

அவரின் ஜாதகத்தை என்னிடம் கொடுத்தார். சிம்ம ராசி அவரின் இராசி. சிம்மராசி என்றாலே அரசாங்க வேலைக்கு போவதற்க்கு அதிகபட்சம் வாய்ப்பு அமைந்துவிடும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு சிம்மராசியாக இருக்கின்றது நான் சொல்லுவது அதிகபட்ச கணக்கை மட்டும் வைத்து சொல்லுகிறேன்.

உங்களை சுற்றி வளைக்காமல் அவரின் ஜாதகத்தில் சூரியன் எங்கு சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்தேன். லக்கனத்தில் இருந்து ஏழாவது வீட்டில் சூரியன் இருக்கின்றது. சூரியன் அவர்க்கு நல்லதை தான் செய்யவேண்டும் அதனை செய்கிறது ஆனால் அதனை தடைசெய்வது ஏதோ ஒன்று இருக்கின்றது.

நான் சூரியனை வைத்து மட்டும் பார்த்தேன். அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன் நிற்கிறது. அனுஷம் சனியின் நட்சத்திரம். சனியின் நட்சத்திரத்தில் சூரியன் செல்வதால் சனி தடை செய்கிறது என்பது என்னுடைய கணிப்பு.

நம்முடைய ஜாதகத்தில் காரத்துவத்திற்க்கு உரிய கிரகத்தை எடுத்து அது எந்த நட்சத்திரத்தில் செல்கிறது என்பதை பார்த்து அந்த கிரகத்திற்க்கும் நட்சத்திரஅதிபதிக்கும் என்ன தொடர்பு என்பதை பார்த்து பலன் சொன்னாலும் சரியாகவே வரும்.

சூரியனுக்கு சனியின் தொடர்பு ஏற்பட்டால் அரசாங்க வழியில் தடைகளை ஏற்படுத்தும். நிறைய போராடி அதனை வெல்லவேண்டும். அவர்க்கு ஒரு பரிகாரத்தை பரிந்துரை செய்து இருக்கிறேன்.

நண்பர்களே பல அற்புதமான மறைமுகமான நல்ல தகவல்கள் மற்றும் பரிகாரங்கள் சோதிடத்தைப்பற்றி நிறைய விசயங்களை நமது கட்டண பதிவில் தந்துக்கொண்டு இருக்கின்றேன். உடனே இணைந்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 28, 2018

அன்னதானம்


வணக்கம்!
          திருப்பூரில் நண்பர் மெய்யழகன் கேட்ட கேள்வியை அடிப்படையாக கொண்டு இந்த பதிவை தருகிறேன். தொடர்ச்சியாக அவர் கேட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதிவை தருகிறேன். அன்னதானத்தைப்பற்றி ஒரு கேள்வி வந்தது.

நமது நண்பர்களிடம் சந்திக்கும்பொழுது சொல்லும் விசயம். அன்னதானம் எங்கும் சாப்பிட்டுவிடாதீர்கள். அன்னதானம் என்பது அடுத்தவர்களின் கர்மாவை நீக்க செய்கின்றனர். அன்னதானத்தை நாம் சாப்பிட்டு அதனை ஏற்றிக்கொள்ள வேண்டாம்.

அன்னதானம் தயாரித்து அந்த அன்னதானத்தை கோவிலில் உள்ள சாமிக்கு முன்னாடி வைத்து தீபாராதனை செய்து அதனை நீங்கள் சாப்பிட்டால் நல்லது. தற்பொழுது வரும் அன்னதானம் அனைத்தும் வெளியில் இருந்து சமைக்கப்பட்டு அதனை  மக்களுக்கு கொடுக்கின்றனர். இதனை நீங்கள் சாப்பிடவேண்டாம்.

குலதெய்வத்தில் செய்யும் அன்னதானம் பெரும்பாலும் சாமிக்கு முன்பு படைக்கப்பட்டு அதனை கொடுப்பார்கள். அதனை அனைவரும் சாப்பிடலாம். பெரும்பாலும் நகர்புறத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் வெளியில் இருந்து உணவை தயார்செய்து கொடுப்பதால் அதனை நீங்கள் சாப்பிடவேண்டாம். 

எந்த கோவிலில் அன்னதானம் செய்தாலும் பொது இடங்களில் அன்னதானம் செய்தாலும் நீங்கள் அதனை சாப்பிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலில் போடும் அன்னதானத்தை சாப்பிடகூடாது. இனிமேல் அனைவரும் இதனை பின்பற்றி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 27, 2018

கோவில் தரிசனம்


வணக்கம்!
          நான் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள கோவில்களை தரிசனம் செய்வது உண்டு. இதனை நமது நண்பர்களோடும் செய்து இருக்கிறேன். நான் உங்களின் ஊருக்கு வரும்பொழுது நீங்கள் விரும்பினாலும் இதனை செய்யலாம்.

கோவில்களுக்கு நீங்கள் தனியாக சென்றாலும் உங்களோடு நான் வரும்பொழுது கண்டிப்பாக உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கமுடியும். இது அனைத்தும் குருவிற்க்கு நன்றியை சொல்லவேண்டும்.

ஒரு கோவிலுக்கு செல்லும்பொழுது நீங்கள் தனியாக சென்றால் கிடைக்கும் அனுபவத்திற்க்கும் ஒரு ஆன்மீகவாதியோடு சென்றால் கிடைக்கும் அனுபவத்திற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நான் தான் உங்களோடு வரவேண்டும் என்பதில்லை உங்களுக்கு தெரிந்த நல்ல ஆன்மீகவாதியோடு செல்வதும் நல்லது.

ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள சக்தியை நன்றாக உணர்வதற்க்கு ஆன்மீகவாதிகள் துணைபுரிவார்கள். நம்முடைய கோவில்களில் குறைகள் கிடையாது நம்முடைய உடலில் குறைகள் இருக்கும். இதனை சரிசெய்வதற்க்கு ஆன்மீகவாதிகள் உங்களுக்கு உதவுவார்கள்.

பரிகாரத்திற்க்கு நீங்கள் கோவிலுக்கு சென்றால் ஒரு இரவு தங்கிவிட்டு மறுநாள் வாருங்கள். சாதாரணமாக கோவிலுக்கு சென்றால் ஒரே நாளில் வந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 26, 2018

அனுபவம்


வணக்கம்!
          நம்ம ஆட்கள் நிறைய பேர் இருக்கின்றனர். நான்  சென்னைக்கு சென்று அங்கிருந்து தொடர்புக்கொண்டால் அட சார் நான் இப்பொழுது சேலத்தில் இருக்கிறேன். ஒரு அவசரவேலையாக சேலம் வந்துவிட்டேன் என்பார்கள். உங்களை சந்திக்க வேண்டும் என்று இருந்தேன் திடீர் வேலை வந்துவிட்டது என்பார்கள்.

ஒவ்வொருவரும் இப்படி ஏதாவது ஒன்றை பொய்யாக சொல்லுவார்கள். உண்மையில் வேலை இருந்து ஒரு சிலர் சென்றாலும் பலர் இப்படி பொய் சொல்லுவது உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சிலர் தவிர்க்க நினைப்பார்கள். அவர்கள் அதே ஊரில் தான் இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். இப்படி சொன்னவர்கள் தற்பொழுது இல்லை பல வருடங்களுக்கு முன்பு இப்படி என்னிடம் சொன்னவர்கள் இருக்கின்றனர்.

தற்பொழுது இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுவிட்டனர் என்று பார்த்தால் வாழ்க்கையில் எந்த இடத்தில் நின்றார்களோ அதனைவிட குறைவான இடத்தில் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அதாவது அதனைவிட மோசமான இடத்தில் இருக்கின்றனர் என்று சொல்லலாம். இதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் கீழே இருக்கின்றது.

ஒவ்வொருவரின் ஜாதகமும் எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் வாழ்க்கையில் என்ன செய்யமுடியும். எவ்வளவு சம்பாதிக்கமுடியும். எப்படி வாழ்வார்கள் எப்படி சாவு வரும் என்பது எல்லாம் அத்துபடியாக தெரியும்.

ஒருத்தர் நான் பெரிய இடத்தில் இருக்கின்றேன் அல்லது நான் கீழ் இடத்தில் இருக்கின்றேன் என்று சொன்னாலும் அவர்களை நான் எப்படி பார்ப்பேன் என்றால் அவர்களின் ஜாதகம் என்ன சொல்லுகின்றது என்பதை தான் நம்புவேன்.

ஒருவருடைய வாழ்க்கையை மிக துல்லியமாக காட்டுவது அவர்களின் ஜாதகம். ஜாதகத்தை நாம் நன்றாக பார்த்துவிட்டால் போதும் அவர்களின் நிலை என்ன என்பது தெரியும். ஒரு சிலர் ஒரு தசாவின் புத்தியில் நன்றாக இருப்பார்கள் அடுத்த புத்தியில் கஷ்டபட வைத்துவிடும். நிலையான ஒரு ஜாதகம் என்பது கோடியில் ஒருவருக்கு தான் கிடைக்கின்றது. நிலையான ஜாதகம் என்றால் எப்பொழுதும் நன்றாகவே இருக்கும். 

நீங்கள் என்ன தான் பேசினாலும் உங்களின் ஜாதகம் என்ன சொல்லுகின்றது என்பதை பொருத்து தான் உங்களின் வாழ்க்கை அமையும். 

கோயம்புத்தூர், திருப்பூர் பகுதியில் என்னை சந்திக்க விரும்புவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 25, 2018

இராமேஸ்வரம்


ணக்கம்!
          இராமேஸ்வரத்தைபபற்றி எழுதவேண்டும் என்று இன்று தோன்றியது. பாவங்களை தீர்க்கும் வழிகளைப்பற்றி சொல்லும்பொழுது இதுவும் எனக்கு தோன்றியது. இன்று என்ன எண்ணம் வருகின்றதோ அதனை பதிவில் கொடுத்துவிடுவது உண்டு.

சோதிடத்தில் கிரகங்கள் நிறைய பிரச்சினை கொடுத்தாலும் கிரகங்களுக்கு என்று தனித்தனி கோவில் இருந்து அதற்கு தீர்வு இங்கு செல்லலாம் என்றாலும் முக்கியமாக நமது பாவங்களை ஒட்டுமொத்தமாக கரைக்கும் ஒரு இடம் தான் இராமேஸ்வரம்.

வடக்கில் கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பார்கள் அல்லவா. அதனைவிட மிக உயர்ந்த ஒரு இடம் இராமேஸ்வரம். இதனைப்பற்றி நிறைய பதிவுகள் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுப்பதின் அர்த்தம். இதனை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்க்காக கொடுக்கிறேன்.

இராமேஸ்வரத்திற்க்கு சென்றுவருவது என்பது ஒருவருக்கு பல தடங்கல் கொடுக்கும். அதனையும் மீறி ஒருவர் சென்று வந்தால் அவர்க்கு பாவம் போகும். இராமேஸ்வரம் சென்று அங்கு கடலில் நீராடிவிட்டு அதன்பிறகு புண்ணிய தீர்த்தகிணறுங்களில் குளித்துவிட்டு அதன்பிறகு சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஒரு நாள் அங்கு தங்கிவிட்டு மறுநாள் வாருங்கள். உங்களுக்கு நல்லது நடக்கும். விடியற்காலையில் கோவிலில் நடக்கும் பூஜையிலும் கலந்துக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு வருவது சிறப்பு.

கிரகங்களின் கொடுமையில் இருந்து தப்பிக்கவும் அதனை சாந்தப்படுத்தவும் இதனை நீங்கள் அடிக்கடி செய்யலாம். குலதெய்வத்திடம் வேண்டிவிட்டு இராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

நாளை கோயம்புத்தூர், திருப்பூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்புவர்கள் உடனே என்னை தொடர்புக்கொள்ளலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 24, 2018

பாவம் போக்கும் வழிபாடு


வணக்கம்!
          பாவம் பாேக்க வேறு வழி உண்டா என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். உலகத்தில் உள்ள வழிபாடுகள் மற்றும் கோவில்கள் எல்லாம் மக்களின் பாவத்தை போக்கி நல்வழிப்படுத்த தான் இருக்கின்றன.

மிக அதிகமான கொடூரமான பாவங்கள் எல்லாம் தீர்க்கும் வல்லமை படைத்தது சிவ வழிபாடு என்பார்கள். சிவனை தொடர்ச்சியாக வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீக்கி நல்ல வழியை தரும் என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து.

சிவ வழிபாட்டில் லிங்க வழிபாடு மிகச்சிறந்த ஒன்று. லிங்க வடிவில் இருக்கும் சிவனை வழிபடுவர்களுக்கு பாவங்கள் போய்விடும். கடந்த காலத்தில் சிவாராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் உங்களின் வீட்டில் சிவ வழிபாட்டை செய்ய சொல்லிருந்தேன்.

சிறிய லிங்கத்தை வாங்கி நீங்களே அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். ஒரு சிலர் மட்டும் இதனை செய்து வந்தனர். அதேப்போல கூட நீங்கள் செய்து வரலாம். சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் சிவன் கோவிலில் சென்று வழிபட்டு வாருங்கள்.

முற்பிறவியில் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் களைந்து உங்களுக்கு நல்ல வழியை செய்யக்கூடிய ஒரு வழிபாடு. இதனை மட்டும் செய்து ஒருவர் பாவத்தை போக்கிவிடமுடியும்.

ஜாதக கதம்பத்தின் கட்டண சேவை இயங்கிக்கொண்டு இருக்கின்றன. உடனே அதில் இணைந்து நிறைய கருத்துக்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாவம் போக்கும் வழி


வணக்கம்!
          ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். நீங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் படித்து இருக்கின்றீர்களா என்று கேட்டார். ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டதற்க்கு அவர் சொன்னார் இவ்வளவு எழுதுகின்றீர்கள் அதனால் கேட்டேன் என்றார்.

ஒருவர் இராமாயணம் மற்றும் மகாபாரதம் எல்லாம் படிக்க தேவையில்லை. அவர் அவர் வாழ்க்கையை ஒரு நோட்புக்கில் எழுதி வந்து ஒரு குறிப்பிட்ட வயதிற்க்கு மேல் அதனை எடுத்து பார்த்தால் இரண்டு இராமாயணம் மற்றும் மகாபாரத்திற்க்கு குறைச்சல் இல்லாமல் ஒரு மனிதனின் வாழ்க்கை இருக்கும்.

ஒரு மனிதனின் முழுவாழ்க்கையும் எழுதினால் கண்டிப்பாக அது கோடி பக்கங்களுக்கு மேல் இருக்கும். இராவணன் போல் இந்த சமுதாயம் அவனை அந்தளவுக்கு போட்டு வறுத்து எடுத்து இருக்கும். அதனால் தினந்தோறும் நாம் பார்க்கின்ற விசயத்தை வைத்தே நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

உங்களின் தினந்தோறும் வாழ்க்கையை அப்படியே ஒரு நோட்டில் எழுதிவாருங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு அதனை படித்துபாருங்கள். உங்களின் பாவத்தை நீங்களே போக்கிக்கொள்ளலாம். இராமாயணம் மற்றும் மகாபாரத்தை படித்து பாவத்தை போக்கிக்கொள்வதை விட உங்களை படித்தே பாவத்தை போக்கிக்கொள்ளலாம்.

எப்படி பாவம் போகும் என்று சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். இராமனும் தர்மனும் போல தான் நீங்களும். அவர்கள் பாவத்தை போக்கும் விதமாக கதாபாத்திரம். அதே பாத்திரத்தை நீங்களே தினந்தோறும் நடித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் எழுதி பாருங்கள். உங்களை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 23, 2018

வழிகாட்டி


ணக்கம்!
          நாம் என்ன தான் பெரிய ஆன்மீகவாதியாக இருந்தாலும் நமக்கு தெளிவான ஒரு மனம் தேவைப்படுவதற்க்கு நிறைய கோவில்கள் கண்டிப்பாக செல்லவேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது நம்மிடம் மறைந்திருக்கும் நல்ல விசயங்கள் வெளிப்படும்.

நம்மை சூழ்ந்திருக்கும் தீயக்கிரகங்களின் ஆதிக்கம் நம்மை கோவிலுக்கு செல்லுவதற்க்கு வழிவிடாது. அதனை மீறி நாம் செயல்பட்டு கோவிலுக்கு செல்லவேண்டும். அப்பொழுது தான் நம்முடைய வழியை சரிசெய்து நிறைய முன்னேற்றங்களை காணமுடியும்.

எத்தனையோ பேரிடம் கோவிலுக்கு செல்லுங்கள் என்று சொல்லுவேன். அதனை நான் சொல்லும்பொழுது சரி செல்கிறேன் என்பார்கள். முக்கால்வாசி பேர் சொல்லுவதோடு முடிந்துவிடும் மறுபடியும் அவர்கள் அதனைப்பற்றி நினைக்கமாட்டார்கள்.

கோவிலுக்கு செல்வதே பெரிய விசயம் இதில் குருவையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்று சொன்னால் சுத்தமாக செல்லமாட்டார்கள். நீங்கள் தனியாக ஒரு கோவிலுக்கு செல்வதிலும் குருவோடு செல்வதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

நீங்கள் யாரை குருவாக நினைக்கின்றீர்களோ அவர்களோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சென்றுவிடுங்கள்.மிகப்பெரிய பாக்கியம் என்பதே குருவோடு கோவிலுக்கு செல்வது மட்டுமே என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் செயல்படுவதே அவர்களின் ஜாதகத்தை பொறுத்த செயலாக தான் இருக்கும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நல்ல பலனை கொடுக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நல்ல பலனை எடுத்துவிடலாம். குரு உங்களுக்கு வழிகாட்டுவது போல இருக்கும். தீயகிரகங்கள் பலனை கொடுக்கிறது என்றால் குருவை நீங்கள் விட்டுவிடுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 22, 2018

ஆலய தரிசனம்


ணக்கம்!
          நேற்று பழனிக்கு மதியம் சென்றுவிட்டேன். சென்னையில் இருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரோடு மாலை அறுபடை வீடான திருஆவினகுடி முருகன் கோவில் அடிவாரத்தில் இருக்கின்றது. அதனை தரிசனம் செய்துவிட்டு மலை ஏறினோம்.

மாலை சாயரட்சை தரிசனம் செய்யவேண்டும் என்று 100 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்தோம். இராஜஅலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்றால் சாயரட்சை பூஜை முடிந்த பிறகு சென்றால் இராஜஅலங்கார தரிசனம் செய்யலாம்.

நண்பர் இராக்காலபூஜைக்கு சிறப்பு கட்டணம் செலுத்தியிருந்தார். இராக்காலபூஜையில் கலந்துக்கொண்டு நல்ல தரிசனம் செய்தோம். இராக்காலபூஜை நீண்ட நேரம் செய்வதால் நண்பர் அதனை புக் செய்திருந்தார். முருகனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து அலங்காரம் செய்கின்றனர்.நல்ல தரிசனம் செய்தோம்.

மாலை 6 மணியில் இருந்து 10 மணிவரை கோவிலில் இருக்கும் வாய்ப்பு இருந்தது. நாம் அடிக்கடி செல்லும் காேவிலில் பழனிமுருகன் கோவில் இருக்கவேண்டும் என்று சொல்லுவது உண்டு. நீங்கள் பழனி சென்றால் இப்படி பூஜைக்கு கட்டணம் செலுத்தி முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யுங்கள்.

நான் பழனிமுருகன் கோவிலுக்கு செல்லும்பொழுது பார்க்கும் பக்தர்கள் அனைவரும் சொல்லும் வார்த்தை மாதம் ஒரு முறை வருவோம் என்பது தான் சொல்லுகின்றனர். நீங்களும் இதனை பின்பற்றலாம். அனைவருக்காகவும் நான் பிராத்தனை செய்திருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 21, 2018

கோவிலில் செய்யகூடாதவை


வணக்கம்!
          நேற்று ஒரு கோவிலுக்கு சென்றேன். கோவிலில் உள்ள ஐயர் ஒரு வயது முதியோராக இருக்கும் நபரிடம் நடந்துக்கொண்ட விதம் என்னை அதிக கோபத்திற்க்கு ஆட்படுத்தியது. தற்பொழுது ஐயர் எல்லாம் கடவுளுக்கு பயப்பட்டு செய்வதில்லை. ஏதோ வணிகம் செய்வது போல செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

நாம் பல காலங்களாக ஐயர்களுக்கு காசு கொடுப்பதில்லை என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறேன். நான் பழைய பதிவில் சொல்லிருந்தேன். கோவிலுக்கு சென்றால் அங்குள்ள ஐயர்களிடம் பணம் கொடுங்கள் அது குருவிற்க்கு உகந்தது என்று சொல்லிருந்தேன்.

இனிமேல் இந்த மாதிரியான செயலை செய்யாதீர்கள். கடவுளுக்கு பயந்து ஐயர் நடந்துக்கொண்டு இருந்தால் மட்டும் பணம் கொடுங்கள் அப்படி இல்லை என்றால் பணத்தை கொடுக்காதீர்கள். தற்சமயம் உள்ள ஐயர்கள் எல்லாம் தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்வதில்லை. 

குரு பரிகாரத்திற்க்கு பிற பரிகாரங்களை செய்யுங்கள். ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லிருந்தேன். உண்டியல் போடாதீர்கள் என்று அது போலவே இந்த பதிவில் இனிமேல் ஐயர்களுக்கு பணம் கொடுக்காதீர்கள். 

பெரும்பாலும் நான் கோவிலுக்கு சென்றால் அமைதியாக நின்று வணங்கிவிட்டு வந்துவிடுவது உண்டு. ஒரு சில கோவில்களில் ஒரு தீபம் மட்டும் ஏற்றிவிட்டு வந்துவிடுவது உண்டு. மிக மிக அவசியம் என்று ஒன்று வந்தால் மட்டுமே அர்ச்சனை செய்வது உண்டு. இதனை போலவே நீங்கள் முடிந்தால் பின்பற்றி வாருங்கள்.

இன்று பழனி செல்கிறேன். மாலை நேரத்தில் பழனியில் இருப்பேன். ஜாதக கதம்பத்தில் உள்ளவர்களுக்காகவும் பழனி முருகனிடம் பிராத்தனை செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 20, 2018

இராகு


வணக்கம்!
          ஒருத்தருக்கு கஷ்டக்காலம் இருக்கின்றது என்றால் அவர்க்கு சோதிடத்தில் அதிகமான தோஷம் இருக்கின்றது என்றாலும் அவர்கள் என்னை தொடர்புக்கொள்வது அதிகபட்சமாக இராகு காலம் அல்லது எமகண்ட நேரம் போன்றவற்றில் தொடர்புக்கொள்வார்கள்.

ஒருத்தருக்கு அமையும் யோகம் அப்படிப்பட்டது. இராகுவின் தொழிலை கொண்டவர்களும் இந்த நேரத்தில் என்னை தொடர்புக்கொள்வார்கள். இராகுவின் தொழிலில் கொடிக்கட்டு பறப்பவர்கள் எல்லாம் இந்த நேரத்தில் தான் தொடர்புக்கொள்வார்கள்.

நல்ல சம்பாதிப்பவர்களும் கெட்டவர்களுக்கும் இராகு தன்னுடைய பங்கை அதிகம் ஜாதகத்தில் கொடுத்தவர்களாக இருக்கின்றது. ஒரு சிலருக்கு இராகுவின் தோஷம் இருந்தாலும் இந்த நேரத்தில் என்னை தொடர்புக்கொள்வார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் நிறைய பேர்கள் இராகுவின் தொழிலை செய்பவர்கள் இராகுவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தொடர்புக்கொண்டனர். அதனை வைத்தே நாம் சோதிடப்பலனை சொல்லிவிடமுடியும்.

உங்களை தொடர்புக்கொள்வதில் என்ன இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களை தொடர்புக்கொள்வர்களின் நேரத்தை நீங்கள் கவனித்து பார்த்தால் அவர்கள் என்ன செய்துக்கொண்டு இருப்பார்கள் என்பது உங்களுக்கு புரியும்.

இராகுவைப்பற்றி பல தகவல்களை ஜாதககதம்பத்தின் கட்டணசேவையில் சொல்ல போகிறேன். இன்று இராகு காலத்தைப்பற்றிய பதிவை எழுதியிருக்கிறேன். உடனே அதில் இணைந்து மேலும் பல தகவல்களை பெறுங்கள்.

நாளை பழனி செல்கிறேன். நாளை மாலை பழனியில் இருப்பேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

யோகா, தியானம்


வணக்கம்!
          யோகா தியானம் போன்றவற்றை செய்வர்களுக்கு கிரகங்கள் அதிகபடியாக வேலை செய்யாது என்று சொல்லிருக்கின்றனர் ஆனால் இன்றைய காலத்தில் யோகா தியானம் செய்வர்களுக்கு இது சரிபட்டு வருமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

நமது ஜாதக கதம்பத்திலேயே நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். பிரபல சாமியார்களிடம் முறையாக யோகா தியானம் எல்லாம் கற்று இருக்கின்றனர். இவர்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கின்றது. நடைமுறையில் இவர்களின் வாழ்வும் சாதாரணமான ஒரு வாழ்க்கை போலவே பிரச்சினைகள் இருக்கின்றன.

இவர்களின் கற்ற வித்தையில் ஏதோ குளறுபடிகள் இருக்கின்றன என்பதில் தான் சந்தேகம் இருக்கின்றது. நாம் அடுத்தவரை குறைச்சொல்லுவதற்க்கு இதனை எழுதவில்லை மாறாக குறைகளை மட்டும் சொல்லிருக்கிறேன். யாேகா தியானம் வழியாக கிரகங்களின் சக்தியை குறைக்கலாம் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

கிரகங்களின் வழியாக வரும் பிரச்சினைகளுக்கு தீர்வாக தியானம் வழியாக சரி செய்யலாம் என்பதை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். நல்ல தேர்ந்த ஒரு தியானம் செய்வர்கள் இதனை நன்றாக செய்கின்றனர்.

நீங்கள் தியானம் மற்றும் யாேகா செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட பயிற்றுனர்விடம் கிரகங்களை சக்தியை குறைக்க எப்படி தியானம் செய்யலாம் என்பதை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 18, 2018

செவ்வாய்


வணக்கம்!
          பெரிய நிர்வாகம் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றை நிர்வகிக்கும் ஆற்றல் எல்லாம் செவ்வாய் கிரகத்தின் தயவில் தான் நடக்கும். ஆயிரம் பேர்க்கும் மேல் வேலை செய்யும் கனரக தொழிற்சாலை அதில் யூனியன் லீடராக இருப்பதற்க்கு எல்லாம் செவ்வாய் கிரகத்தின் ஆற்றல் இருக்கவேண்டும்.

செவ்வாய் கிரகம் பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மேலே சொன்ன மாதிரியான வேலைகளை செய்வார்கள். இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் கிரகத்தின் ஆற்றல் அதிகமாகவே இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு சில நண்பர்கள் பெரிய ஒப்பந்த வேலைகளை எடுத்து வேலை செய்கின்றனர். இவர்களை நான் கவனித்து இருக்கிறேன். இவர்கள் உயரம் குறைவாக இருப்பார்கள். அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் அந்தளவுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் அமைந்ததும் கிடையாது.

எப்படி இவர்களால் இந்த மாதிரியான வேலைகளை எல்லாம் செய்கின்றனர் என்று கவனித்து பார்த்தால் இவர்கள் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவார்கள். அறுபடை தளங்களுக்கு அடிக்கடி சென்று வருபவர்களாக இருக்கின்றனர்.

இவர்களை போல நீங்களும் செவ்வாயின் ஆற்றலை பெற்று நல்ல முறையில் மேலே வரலாம். பெரிய அளவில் சாதிக்கவேண்டும் என்றால் மேலே சொன்னமாதிரி செய்து வரலாம்.

கட்டண சேவையில் இணைந்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன். நிறைய கருத்துக்களை தெரிந்துக்கொள்ளலாம். விரைந்து சேர்ந்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 17, 2018

ராகு தசா


ணக்கம்!
         ஒருவருக்கு ராகு தசா நடந்தால் அவரின் செயல்பாடுகள் அதிகமான வித்தியாசம் தெரியும். செவ்வாய் தசா நடந்ததில் இருந்து ராகு தசா பெரிய வித்தியாசத்தை தந்துவிடும். பெரும்பாலும் அனைவரின் பார்வையிலும் இவர்கள் சந்தேக கண்ணோடு பார்க்க வைத்துவிடும்.

பாம்பின் தசா என்பதால் பதுங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். வெளியில் வந்து பயமுறுத்தினாலும் பாம்பை அடிப்பது போல் பிறர் அடித்துவிடுவார்கள் என்ற பயம் இருந்துக்கொண்டே இருக்கும். செயல்பாடு அனைத்தும் மறைமுகமாகவே இருப்பதால் இவர்களுக்கு பெரிய அங்கீகாரம் இருக்காது என்று சொல்லலாம்.

ஒருவர் வெளியில் நன்றாக தெரியவேண்டும் என்றால் அவர்க்கு குரு  தசா நடக்கவேண்டும். ராகு தசாவில் ஒருவர் பெரியளவில் வெளியில் தெரிந்தாலும் அவரை வில்லங்கமானவர் என்று சொல்லுவார்கள். அவரின் பெயர் கெட்டப்பெயராகவே இருக்கும்.

ராகு தசா நடக்கும்பொழுது மனதளவில் மாற்றம் நிறைய வந்துவிடும். மனம் போகின்ற போக்கில் செல்லும். அதனை தடுத்து நிறுத்தவிட்டால் அவர்க்கு நிறைய பிரச்சினை மனதளவிலும் ஏற்படும். மனமும் கெட்டு உடலும் சக்தி இல்லாமல் போய்விடும்.

ஒருவருக்கு கெட்ட ஆத்மாக்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களின் செயல்பாட்டை தடுத்து அவரின் உடலில் இருந்து சக்தியை உறிஞ்சிவிடும். இது அனைத்தும் ராகு தசாவில் தான் அதிகம் நடைபெறும்.திடீர் என்று ராகு தசாவை ஏன் எழுதுகிறேன் என்றால் இப்படிப்பட்ட ஒரு ஜாதகத்தை இன்று பார்த்தேன். அதனால் உங்களுக்கு மறுபடியும் நினைவூட்ட இதனை எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நாேய்களுக்கு தீர்வு


ணக்கம்!
          எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரத்த அழுத்தம் அதிகமாக சென்றுவிட்டது. 200 யை தொட்டுவிட்டது. எனக்கு பெரியளவில் பிரச்சினை எதுவும் வரவில்லை என்றாலும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. 

எனக்கு மனஅழுத்தம் இருக்கின்றது என்று சொன்னவுடன் தெரிந்த நண்பர்கள் சிரித்துவிட்டார்கள். எப்படி உங்களுக்கு மனஅழுத்தம் வந்தது. கண்டிப்பாக எனக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த மனஅழுத்தம் இருந்து வந்திருக்கின்றது அது பெரியளவில் வெளிப்பட்டு இருக்கின்றது.

ஒரு மருத்துவரிடம் இதனைப்பற்றி கேட்டவுடன் உங்களுக்குள் என்ன பிரச்சினை என்று கேட்டார். எனக்கு எதுவும் தெரியவில்லை என்று தோன்றியது. நான் அவரிடம் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னேன். 

அவர் ஒரு நல்ல மருத்துவர். நான் அலோபதி மருத்துவரிடம் சென்று காட்டுவதில்லை. பரிசோதனை செய்வதற்க்கு மட்டும் அலோபதி மருத்துவனையை நாடுவது உண்டு மற்றபடி அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது கிடையாது.

இது ஒரு தனிப்பட்ட மருத்துவம். அவர் என்னிடம் தற்பொழுது உங்களுக்கு கிரக நிலை எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்றார். ஒரு கிரகம் மட்டும் சரியில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்றேன். அதனை புரிந்துக்கொண்டு அவர் மருந்துக்கொடுத்தார். தற்பொழுது சரியாகிவிட்டது.

ஒரு மருத்துவர்க்கு சோதிடமும் தெரிந்தால் தான் அவர் சரியான ஒரு மருத்துவ ஆலோசனையை கொடுக்கமுடியும். இந்த மருத்துவரை நாடுவதற்க்கு முன்பு நான் சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு ஒரு தீபம் ஏற்றி வழிபட்டு அதன்பிறகு இரண்டு நாட்கள் சென்ற பிறகு மருத்துவரை சென்று பார்த்தேன்.

எனக்கும் ஒரு மந்தப்புத்தி இருந்தது. இந்த கிரகம் பிரச்சினை கொடுக்கும் என்று முன்கூட்டிய அறிந்து அதனை கட்டி வேலை செய்து இருக்கவேண்டும். அதனை விட்டுவிட்டு அதனை கண்காணித்தேன். எப்படி பிரச்சினை வேலை செய்யும் என்று கவனித்தேன்.

நமக்கு வரும் பிரச்சினைக்கு அதாவது நோய்களுக்கு மருத்துவரை நாடி தான் ஆகவேண்டும். மருத்துவர்கள் தினமும் எப்படியும் நமக்கு நோயாளிகள் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருப்பார்கள். அதனாலேயே நன்றாக இருப்பவர்களுக்கும் நோய் வந்துவிடுகின்றது. ஐந்து லட்சம் செலவு செய்து அலோபதியில் பார்க்கும் வைத்தியத்தை ஆயிரம் ரூபாயில் சோதிடம் மற்றும் மருத்துவத்தில் பார்த்து சரி செய்துவிடலாம்.

ஏழரை சனி அஷ்டமசனி அர்த்தாஷ்டமசனி,ஆறாவது வீட்டு தசா, புத்தி மற்றும் தீயகிரகங்கள் உங்களுக்கு பிரச்சினை கொடுக்கும்பொழுது நோய்கள் வரும். இதனை எப்படி சரி செய்யலாம். எந்த மாதிரியான மருத்துவத்தை நாடுவது என்பதை நமது கட்டண பதிவில் இன்று சொல்ல இருக்கிறேன்.உடனே கட்டணபதிவில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 16, 2018

படையல்


வணக்கம்!
         படையல் என்ன என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். நேற்றைய பதிவில் மாரியம்மனுக்கு படையல் என்று சொல்லிருந்தேன். இந்த படையலை தான் என்ன என்று கேட்டார். ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் இருக்கும். அதிகப்பட்சம் தமிழ்நாட்டில் மாரியம்மன் கோவில் அனைத்து ஊரிலும் இருக்கும். கேரளாவில் பகவதிஅம்மன் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அழைத்தாலும் எல்லாம் மாரியம்மன் தான்.

வருடத்திற்க்கு ஒரு முறை இந்த கோவில் திருவிழா நடைபெறும். கோவில் திருவிழாவில் முதல் நாள் படையல் விழா என்று அழைப்பார்கள். மாரியம்மனுக்கு படையல் வைப்பது. இதனை அவர் அவர்களின் வீட்டில் வைப்பார்கள்.

மாரியம்மனுக்கு படையல் வைப்பது அவர் அவர்களின் பூஜையறையில் வைக்கமாட்டார்கள். தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் சுவற்றில் ஒரு தேர் படத்தை திருநீற்றை தண்ணீரில் குழைத்து தேர்படம் வரைவார்கள். அந்த இடத்தில் ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மாவிலை மற்றும் வேப்பிலை கொத்தை போடுவார்கள். அதன் முன்பு ஒரு இலையை வைத்து அதில் மாரியம்மனுக்கு என்று படையல் போட்டு சாம்பிராணி தீபாராதனை காட்டுவார்கள்.

மாரியம்மனுக்கு பொதுவாக எல்லார் வீட்டிலும் கொழுக்கட்டை பிடித்து வைப்பார்கள். மாரியம்மனுக்கு கொழுக்கட்டையோடு அவர் அவர்களின் வழக்கத்திற்க்கு தகுந்தமாதிரியான அசைவம் அல்லது சைவ சமையலை சமைத்து படையல் செய்வார்கள்.

மாரியம்மனுக்கு தீபாராதனை முடிந்த பிறகு பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்திற்க்கு தீபாராதனை காட்டுவார்கள். இது பல கிராமங்களில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. இது போன்றே உங்களின் மாரியம்மனுக்கும் செய்யலாம்.

ஆன்மீக அனுபவங்கள் படித்த நண்பர்களும் இந்த ஜாதக கதம்பம் கட்டண சேவையில் இணைந்துக்கொண்டு இருக்கின்றனர். அனைவரும் கட்டணத்தை செலுத்தி கட்டண சேவையில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 15, 2018

நட்சத்திரம்


வணக்கம்!
          ஏற்கனவே அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி பார்த்து இருக்கிறோம். இந்த நட்சத்திரத்தைப்பற்றி எழுத ஆரம்பித்தப்பொழுது தான் எனக்கு ஒன்று தோன்றியது சிறப்பு கட்டண பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்பது தான் அது. இன்றைக்கு கட்டண பதிவு ஆரம்பித்து நல்லபடியாக சென்றுக்கொண்டு இருக்கின்றது. கேதுவின் நட்சத்திரம் ஞானத்தை கொடுக்கும் என்பார்கள் ஆனால் எனக்கு அது நல்ல வழியை காட்டியிருக்கிறது. அந்தளவுக்கு கேது பகவான் வாரி வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பொதுவாக பாம்பு கிரகங்கள் அதிகமான தடைகளை கொடுத்து அதன்பிறகு நல்லவழியை கொடுக்கும் என்பார்கள். எனக்கும் கட்டண பதிவை ஆரம்பிக்கும்பொழுது நிறைய தடைகளை கொடுத்தது. கட்டண பதிவை ஆரம்பிக்கும் சூழல் அப்பொழுது நிலவவில்லை என்ற சொல்லலாம்.

ஜாதககதம்பத்தில் சிறப்பு பதிவை கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறியது. பலர் இன்றைக்கு அதில் தன்னை இணைத்துக்கொண்டு வருகின்றனர். இன்னமும் கொஞ்சநாள் சென்றால் அனைவரும் அதில் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி ஒரளவுக்கு பழைய பதிவில் கூட கொடுத்து இருக்கிறேன். அஸ்வினி நட்சத்திரம் என்பது பெரியளவில் சாதிக்க வேண்டும் என்று துடிப்பு இருக்கும் ஒரு நட்சத்திரம். வேகம் சக்தி சுறுப்புப்போடு செயல்படுவார்கள். இன்றைக்கு அந்த வேகத்தை நான் உணர்ந்து இருக்கிறேன்.

அஸ்வினி நட்சத்திரத்திற்க்கு உள்ள  சமயம், மந்திரம் மற்றும் அமானுாஷ்ய சக்தி எல்லாம் அதிக விரும்புவார்கள். இதனையும் நமது புதிய தளத்தில் அதிகமாக நான் சொல்ல இருக்கிறேன் என்பது தான் உண்மை.

ஒரு நட்சத்திரத்தில் நாம் ஆரம்பிக்கும்பொழுது அதனைப்பற்றிய அனைத்து குணங்களும் ஒட்டிக்கொள்ளும் என்பதற்க்கு ஒரு உதாரணத்திற்க்காக இதனை சொல்லுகிறேன். நமது கட்டண பதிவில் சோதிடம் மட்டும் அல்லாமல் மேலே சொன்ன விசயத்தையும் சொல்லிக்கொண்டு வருகிறேன். நேற்று ஆரம்பித்து இன்றைக்கு மூன்று பதிவு தந்திருக்கிறேன். மூன்று பதிவிலும் மேலே சொன்ன விசயங்கள் எல்லாம் இருக்கின்றன.

அஸ்வினி நட்சத்திரகாரர்கள் எடுக்கும் முடிவும் நன்றாகவே இருக்கும். அதேபோல் இந்த பதிவிலும் நான் சொன்ன விசயம் மற்றும் சொல்லபோகின்ற விசயம் அனைத்தும் நல்லதாகவே இருக்கும். கட்டணபதிவில் வீசும் தென்றல் கொஞ்சம் ஜாதககதம்பத்திலும் அடிக்கும் ஆனால் கொஞ்சமாக இருக்கும். உடனே இணைந்து மேலும் பல தகவல்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கட்டண சேவை தொடக்கம்


வணக்கம்!
         நமது கட்டண சேவை பதிவு நேற்று தொடங்கப்பட்டுவிட்டது. தங்களை இணைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இணைய போகும் நண்பர்களுக்கு இந்த பதிவு. ஜாதக கதம்பம் படிப்பது ஒரு நல்ல அனுபவமாக உங்களுக்கு தோன்றினால் கண்டிப்பாக நீங்கள் இந்த கட்டண பதிவிலும் இணைத்துக்கொள்ளுங்கள்.

கட்டண சேவை என்பது ஒரு லாபத்திற்க்கு மட்டும் ஆரம்பிக்கப்பட்டது அல்ல மாறாக ஒரு சில பாதுகாப்பான இரகசியமான விசயங்களை எல்லாம் ஆவல் இருப்பவர்கள் தெரிந்துக்கொள்ளட்டும் என்பதற்க்காக ஆரம்பித்து இருக்கிறேன்.

கட்டணசேவையில் இணைந்தவர்கள் அனைவரும் எனக்கு நன்றாக தெரிந்த நண்பர்கள். ஜாதக கதம்பம் படித்தோம் அதோடு சென்றுவிட்டால் போதும் ஏன் நாம் தேவையில்லாமல் பணத்தை விரையம் செய்ய வேண்டும் என்று பணத்தை சேமிக்கவேண்டியதில்லை. நீங்கள் செலுத்தும் பணம் உங்களை மிகப்பெரிய செல்வந்தராக மாற்றக்கூடிய கருத்துக்கள் கட்டணசேவையில் இருக்கின்றன.

என்னுடைய இலக்கு என்பது இதில் வந்தவர்கள் அனைவரையும் அதில் இணையவைத்துவிடவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். எனக்கு வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில நல்ல விசயங்களை கட்டணம் செலுத்தி தான் பெறவேண்டும் என்பதற்க்கு இதனை சொல்லுகிறேன்.

நண்பர்களே உடனே  இணைந்துவிடுங்கள். இன்னமும் கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கின்றது. பத்தாயிரம் கட்டணத்தை செலுத்தி இணைந்துக்கொள்ளுங்கள்.


ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் கோவில் இருக்கும். மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடக்கும். மாரியம்மன் கோவில் ஆண்டு ஒருமுறை திருவிழாவின் பொழுது படையல் என்ற ஒரு நிகழ்ச்சி நடக்கும். இன்று எங்களின் ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு திருவிழா. அனைத்துவீடுகளிலும் படையல் நிகழ்ச்சி நடக்கும். அதனை முன்னிட்டு இன்று எங்களின் வீட்டில் படையல் நிகழ்ச்சி நடக்கிறது. 

ஒவ்வொரு வருடமும் நல்ல மழை பெய்வதற்க்கு மாரியம்மனுக்கு திருவிழா செய்வார்கள். கடந்த இரண்டு நாட்களாக மழை என்றால் அப்படி ஒரு மழை பெய்து இருக்கின்றது. இன்றும் மழை வருவதற்க்கு ஒரு சூழல் நிலவுகின்றது. அனைத்தும் மாரியம்மன் அருளால் நடக்கிறது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 14, 2018

நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
          அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரின் இல்லங்களிலும் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி தங்கி ஆரோக்கியத்தோடு நல்ல வாழ்க்கை வாழ அம்மனை பிராத்தனை செய்கிறேன்.

ஜாதக கதம்பம் இன்று ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. தொடர்ந்து உங்கள் அனைவரின் நல்ஆதரவையும் தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 13, 2018

கடைசி நாள்


வணக்கம்!
          நாளை முதல் கட்டண சேவை பதிவுகள் ஆரம்பிக்கப்படுகின்றன. கட்டண சேவைக்கு இணைப்பை பெறுவதற்க்கு கட்டண செலுத்துபவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். நாளை முதல் கட்டண தளம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

ஜாதக கதம்பத்தை படிக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த தளத்தை படிக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். இதற்கு என்று நிர்ணயித்த கட்டணம் என்பது மிக குறைவான ஒன்று. அதற்கு ஒரு அம்மன் ஹோமமும் இருக்கின்றது. 

அனைவரும் இந்த தளத்தை பயன்படுத்திக்கொண்டு பயன் அடைய அன்போடு அழைக்கின்றேன். கட்டண பதிவு என்பதால் என்னால் முடிந்தளவுக்கு எப்படி எளிமையாக கொடுக்கமுடியுமோ அந்தளவுக்கு கொடுத்து இருக்கிறேன்.

நிறைய டெக்னிக்கல் விசயத்தையும் அதில் சொல்லிருக்கிறேன். இப்படி கூட இதனை பயன்படுத்தலாம் என்பதையும் சொல்லிருக்கிறேன். நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்க்கு அதிகமாகவே நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

இன்றே கடைசி நாள் என்பதால் உடனே விரைந்து செயல்படுங்கள். வாழ்வில் கற்றுக்கொள்ளமுடியாத ஒரு சிறந்த அனுபவத்தை இதில் அனுபவிக்கலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 12, 2018

தமிழ் புத்தாண்டு என்ன செய்யலாம்?


வணக்கம்!
          தமிழ் புத்தாண்டு பிறக்கும்பொழுது நாம் என்ன மாதிரியான காரியங்களை செய்தால் நல்லது நடக்கும் என்று இப்பதிவில் பார்க்கலாம். தமிழ்புத்தாண்டு பிறக்கும் நாளில் அல்லது அதற்கு முந்தைய நாள் மற்றும் அதன் பிறகு வரும் நாட்களிலும் சித்திரை மாதம் முழுவதும்  தான தர்மம் செய்யலாம்.

ஏழை எளிய மக்களுக்கு ஆடைகள் தானமாக கொடுக்கலாம். செல்வவளத்தை பற்றி எழுதிய நாட்களில் எல்லாம் நான் ஆடைகளை தானமாக கொடுக்க சொல்லிருக்கிறேன். ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் செல்லவளம் வருவதற்க்கு ஆடைகளை தானம் செய்தால் போதுமானது.

தமிழ்புத்தாண்டு அன்று அனைவரும் வீட்டில் நல்ல விஷேசமாக இருக்கும் அதனால் அதன் பிறகு வரும் நாட்களில் வீட்டிற்க்கு அழைத்து விருந்து ஏற்பாடு செய்து அவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தற்பொழுது அன்னதானம் செய்தால் யாரும் வந்து அதிகம் சாப்பிடுவதில்லை. இவன் செய்த பாவத்தை போக்க அன்னதானம் செய்கிறான் என்று பலர் விரும்புவதில்லை. அன்னதானம் சாப்பிடும் வகையில் இருக்கும் நபர்களை அழைத்து அன்னதானம் செய்யலாம்.

உங்களால் முடிந்த உதவியை அனைவரும் செய்யுங்கள். ஆங்கிலவருடத்தில் எடுக்கும் சபதம் எல்லாம் விட்டுவிட்டு தமிழ்புத்தாண்டு வருடத்தில் சபதத்தை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள். சபதம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது நன்றாக தான் இருக்கும் ஆனால் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சில இலக்குகள் இருக்கும் அல்லவா அதனால் சபதம் எடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 11, 2018

சிறப்பு பதிவு 11


ணக்கம்!
              மனிதனுக்கு முப்பது வயதிற்க்கு மேல் வருகின்ற வியாதி ஒன்று இருக்கின்றது. நிறைய விசயங்களை தன் மனதிற்க்குள் போட்டு குழப்பிக்கொள்வதால் அவர்களுக்கு மனநோய் தாக்கும். நம்மிடம் ஒருவர் பேசினால் நாம் அதனை கவனிக்காமல் வேறு சிந்தனையில் இருப்போம். முப்பது வயதில் இருந்து நாற்பது வயதிற்க்குள் கண்டிப்பாக இது வந்தே தீரும்.

இந்த நோய் வந்துவிட்டால் இதயமும் வேலை செய்வதில் பல குளறுபடிகளை செய்ய ஆரம்பித்துவிடும். இதய இரத்தம் அழுத்தம் ஏற்படுவதற்க்கு காரணமாக இந்த நோய் இருக்கும். இரவிலும் ஒழுங்காக தூங்கமுடியாது. இதயம் அடைபடுவது போல இருக்கும். இது கொஞ்சம் ஒவராக சென்றுவிட்டால் உடலுக்கு கெடுதலை தரும்.

நம்முடைய மனது பலதை போட்டு குழப்பிக்கொண்டு அல்லது ஒரே எண்ணத்தை வைத்துக்கொண்டு அது நிறைவேறவில்லை என்று நினைத்துக்கொண்டு இருப்பதால் இந்த நோய் வந்துவிடுகின்றது. பலருக்கு இது இருக்கும் ஆனால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

நம்முடைய மனதில் இப்படிப்பட்ட எண்ணங்களை முப்பது வயதிற்க்கு மேல் தான் அதிகமாக உருவாக்குகிறது என்றாலும் இதற்கும் ஒவ்வொருவரின் ஜாதகத்திற்க்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது. ஜாதகத்தில் பாதகமாக கிரகங்கள் வேலை செய்தால் அவர்களுக்கு இப்படிப்பட்டபிரச்சினை வருகின்றது.

எனக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருந்து இருக்கின்றது. எனக்கு எப்படி இந்த பிரச்சினை வந்தது என்றால் எனக்கு நிறைய எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். அதற்கு வடிகாலாக ஜாதககதம்பத்தில் எழுதிக்கொண்டு இருப்பேன். எது உதித்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொண்டுவிடுவது உண்டு. நிறைய எண்ணங்கள் உருவாகி வடிகாலாக இருக்கும் பதிவுகள் போடுவதற்க்கு முடியாமல் போன காரணத்தால் தான் இப்படிப்பட்ட பிரச்சினை வந்தது.

உங்களுக்கு உங்களின் எண்ணத்திற்க்கு தகுந்தமாதிரி இந்த பிரச்சனை வந்திருக்கும். எனக்கு வந்த பிரச்சினை எது என்பதை அறியவே எனக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. எதில் இருந்து இந்த பிரச்சினை வந்தது என்று கண்டுபிடிக்க நிறைய காலம் தேவைப்பட்டது. ஜாதகத்தில் இருந்து பிரச்சினை வந்தாலும் எதனால் வந்தது என்பதை கண்டுபிடிக்க காலம் தேவைப்பட்டது. உங்களுக்கும் இப்படிபட்ட காலம் தேவை அப்பொழுது தான் அதற்கு சரியான விடையை கண்டுபிடிக்க இயலும்.

மேலே சொன்ன பிரச்சினை சாதாரணமான பிரச்சினை இல்லை. ஜாதக கதம்பத்தை படிக்கும் அனைவரும் இதனை சந்தித்து இருக்கலாம். பிரச்சினையின் தீவிரம் அதிகம் அல்லது குறைவாக இருக்குமே தவிர சந்திக்காமல் இருந்து இருக்க மாட்டீர்கள்.

நான் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் இதனைப்பற்றி சொல்லிருக்கின்றனர். ஒரு சிலருக்கு இதயத்தை போட்டு அமுக்குவது போல இருக்கின்றனர். ஒரு சிலர் அதிகமான தலைவலி என்று சொல்லிருக்கின்றனர். ஒரு சிலர் மயங்கி விழுந்து இருக்கின்றனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்படைந்து இருக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வடிகால் என்ற ஒன்று நன்றாக இருந்தால் தான் அந்த மனிதன் அதிக நாள் நன்றாக வாழமுடியும். வடிகால் என்பது மறைவுஸ்தானத்தை குறிக்கும் ஒரு இடமாகவே இருக்கும். வடிகால் நன்றாக இருக்கும்பட்சத்தில் இந்த பிரச்சினை வரவே வராது. அதே நேரத்தில் வடிகால் தடைப்பட்டால் அவனுக்கு இந்த பிரச்சனை அதிகமாக வந்துவிடும்.

எடுத்துகாட்டாக நீங்கள் ஆணாக இருந்தால் உங்களுக்கு வடிகால் நிறைய ஏற்படுத்திக்கொள்ள முடியும் அதே நேரத்தில் உங்களின் மனைவிக்கு வடிகால் குறைவாகவே இருக்கும். அவர்களை அடக்கி ஆழவைப்பதில் நீங்கள் அதிகமாக கவனம் செலுத்தினால் அவர்கள் கண்டிப்பாக இப்படிப்பட்ட பிரச்சினையை அதிகம் சந்திப்பார்கள்.

நீங்கள் என்னதான் உங்களின் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்து இருந்தாலும் உங்களின் மனைவிக்கு என்று ஒரு தனிப்பட்ட விசயம் இருக்கும். உங்களை கண்டு அந்த தனிப்பட்ட விசயத்தை அவர்கள் செய்யாமல் இருப்பார்கள் அது அவர்களுக்கு பிரச்சினை தரும்.

உலகத்தில் உள்ள முக்கால்வாசி பிரச்சினைக்கு மறைவுஸ்தானம் தான் காரணம் என்றும் சொல்லும் சோதிடர்களை விட இந்த மறைவுஸ்தானம் மனிதர்களை ஆராேக்கியமாக வாழவைக்கும் என்று சொல்லும் சாேதிடர்கள் உயர்ந்து நிற்பார்கள்.

பெண்கள் தான் இதில் அதிகம் பாதிப்படைகின்றனர் என்று சொல்லமுடியாது ஆண்களும் இதில் அதிகம் பாதிப்படைகின்றனர். அவர்களுக்கும் இந்த பிரச்சினை என்பது இருக்கின்றது. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் மாட்டிக்கொள்கின்றனர்.

மறைவுஸ்தானத்தை எப்படி கையாண்டால் எப்படி நன்மை தரும் என்பதைப்பற்றி நாம் கட்டண சேவையில் நிறைய பார்க்கலாம். மேலே சொன்ன மாதிரி உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இதில் உள்ள பல விசயங்களை கட்டண சேவையில் பார்க்கலாம்.



என்னிடம் நெருங்கிய உறவு இருக்கின்றது. இவரின் கட்டண சேவையில் நாம் இணையாவிட்டால் நமக்கு அந்த உறவு நிலைக்காது என்று ஒரு சில நண்பர்கள் கருதுகின்றனர். இதனை என்னிடம் ஒருவர் சொன்னார். என்னிடம் பணம் தற்பொழுது இல்லை நீங்கள் கோபித்துக்கொள்ளாதீர்கள் என்றார்.

நீங்களும் நானும் உறவு என்பது பணம் மட்டும் இருந்தால் இத்தனை வருடங்கள் இது எல்லாம் சாத்தியப்பட்டு இருக்காது. பணத்தை தாண்டி பல விசங்களில் நான் ஒத்துபோவதால் தான் இன்றைக்கும் இதனை எழுத முடிகிறது. பல பேரை நட்பாக இருக்க வைத்திருக்கின்றது. என்னுடைய சுயதேவைக்கு பணம் தேவைப்படுவதால் என்னுடைய திறமையை காட்டி ஒரு கட்டணசேவையை துவங்குகிறேன். பணம் இருப்பவர்கள் சிறப்பு பதிவு பிடித்து இருந்தால் என் மீது நம்பிக்கை வைத்து இணைந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கட்டண சேவை துவங்கும் நாள்


வணக்கம்!
          வருகின்ற தமிழ்புத்தாண்டு அன்று புதிய கட்டண சேவை துவங்கப்படுகின்றது. கட்டணம் செலுத்தும் நண்பர்கள் உடனே கட்டணத்தை செலுத்திவிடுங்கள். தமிழ்புத்தாண்டுக்கு பிறகு கட்டணம் செலுத்தும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்ட பிறகு கட்டணத்தை செலுத்தவும். கட்டண பதிவு ஆரம்பித்தவுடன் கட்டணம் உயர்த்தப்படுகின்றது.

ஆன்மீக அனுபவங்கள் கட்டண சேவை நிறுத்தப்படுகின்றது. ஜாதக கதம்பம் கட்டண சேவை மட்டும் இயங்கும். ஒரு வருடம் மட்டும் இந்த கட்டண சேவை இயங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜாதக கதம்பத்தின் மிக முக்கிய கருத்தான சோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட அதிகமான கருத்துக்கள் ஜாதக கதம்பத்தின் கட்டண சேவையில் இடம் பெறும். சோதிடம் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்திற்க்கான சிறந்த தளமாகவும் இருக்கும்.

ஜாதக கதம்பத்தின் கட்டண சேவையில் இணைபவர்களுக்கு என்று தனியாக ஒரு அம்மன் ஹோமம் இருக்கின்றது. இதனை இலவசமாக செய்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பும் தேதியில் இதனை செய்துக்கொள்ளலாம்.

ஜாதக கதம்பத்தின் கட்டண சேவையில் இணைந்துக்கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 10, 2018

சிறப்பு பதிவு 10


வணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் பிறகிரகங்கள் எப்படி இருந்தாலும் லக்கனாதிபதி நன்றாக இருந்தால் தான் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். லக்கனாதிபதி நன்றாக இல்லாமல் பிற கிரகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திணறசெய்துவிடும்.

லக்கனாதிபதி மறைவுஸ்தானத்திற்க்கு வரும்பொழுது பிறகிரகங்கள் நல்ல பலனை கொடுக்க நினைக்கும். இவர்கள் உடல் அதற்க்கு ஒத்துழைக்காமல் அந்த பலன் கை நழுவி சென்றுவிடும். அனைத்திற்க்கும் லக்கனாதிபதி நன்றாக இருந்தால் தான் நடக்கும்.

கும்பலக்கனத்தை எடுத்துக்கொள்வோம். கும்பலக்னம் நல்ல லக்னமாக சொன்னாலும் அந்த லக்கானதிபதி விரையஸ்தானத்திற்க்கும் அதிபதியாக இருப்பதால் நிறைய திறமை இருந்தும் வீணாக போய்விடுவார்கள். 

கும்பலக்கனம் அல்லது கும்பராசியை பொறுத்தவரை மிக சிறந்த அறிவுகளஞ்சியமாக இருந்தாலும் அந்த வீட்டிற்க்கு விரையஸ்தானதிபதியாக சனி வருவதால் அவர்கள் பெரியளவில் வருவதில்லை.

எனக்கு கும்பலக்னம் தான் நானும் இப்படி தான் இருக்கின்றேன் என்பதை விட உங்களை திருத்திக்கொள்வது நல்லது. உங்களின் எண்ணம் முழுமையாக என்ன செய்யும் என்றால் ஒரு சுயநலமாகவே இருப்பது போல் இருக்கும் அதனை கொஞ்சம் விட்டுவிட்டால் போதும். எதனை செய்தாலும் அதில் எனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்க்கின்ற ஒரு லக்னம். அதனை விட்டுவிட்டால் நல்லது.  

ஒரு லக்கனத்திற்க்கு அந்த அதிபதி எந்தெந்த வீட்டிற்க்கு அதிபதியாக வருகின்றார் என்பதை பொறுத்தும் பலனை கணிக்கவேண்டும். அப்பொழுது தான் பலனை துல்லியமாக நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.

லக்கினாதிபதி சரியாக இல்லை என்றாலும் வெற்றி பெறுவர்களும் இருக்கதான் செய்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது பொதுசேவை செய்வது போன்ற ஒரு தொழிலில் இருப்பார்கள். பத்து பேர்க்கு பணி செய்துவிட்டு நான்கு பேரிடம் இருந்து சம்பாதிப்பார்கள்.

லக்கினாதிபதி சரியில்லை என்று உட்கார்ந்துவிடாமல் எதையாவது நாமும் செய்யலாம் என்று நாம் செயல்பட்டு அதற்கு தகுந்தமாதிரி வேலைகளை நாம் தேர்ந்தெடுத்து செய்துவிட்டால் நாம் வெற்றி பெற்றுவிடலாம்.

எல்லா லக்கனாதிபதியை பற்றியும் நாம் நிறைய பார்க்க இருக்கிறோம். ஒரு சில முன்னோட்டம் என்பதால் இதனை குறைவாக சொல்லுகிறேன். கட்டண சேவையில் நிறைய பார்க்கலாம்.

கட்டண சேவை பதிவு விரைவில் ஆரம்பிக்கப்படுவதால் உடனே அதில் இணைந்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன். 

சேலத்தில் இருக்கிறேன். சேலத்தில் என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் உடனே என்னை தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 9, 2018

சிறப்பு பதிவு 9


வணக்கம்!
          லக்கினம் என்பது முக்கியம் என்று சொல்லிருந்தேன். லக்கனத்தை வைத்து தான் ஒவ்வொரு பலனையும் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறோம். எந்த வகையில் சோதிடம் கணித்தாலும் லக்கனம் எது என்பதை பார்த்து அதன் பிறகு அனைத்து வீட்டிற்க்கும் பலனை சொல்லுவார்கள்.

ஒருவர் எனக்கு இதுதான் லக்கனம் என்று சொன்னாலே போதும் உடனே அனைத்து பலனையும் நாம் சொல்லிவிடலாம். அதாவது அவரின் ஜாதகத்தை பார்க்காமல் ஒரளவு நாம் இப்படி தான் இருக்கும் என்பதை சொல்லிவிடலாம். அதன் பிறகு கிரகங்கள் அமர்ந்த பலனை எல்லாம் பார்த்துவிட்டு சொல்லலாம்.

லக்கனாதிபதிக்கு நிறைய அந்தஸ்தை சோதிடம் கொடுக்கும். லக்கனாதிபதி நன்றாக இருந்தால் தான் அவரின் உயிர் நன்றாக இருக்கும். லக்கனாதிபதி மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றுவிடகூடாது. லக்கனாதிபதி நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.

ஒருவருக்கு லக்கனாதிபதி நன்றாக இருந்தால் அவர்க்கு பெரிய கஷ்டம் எல்லாம் வராது. லக்கனாதிபதி அனைத்து பிரச்சினையில் இருந்தும் அவரை காப்பாற்றிவிடுவார். ஒரளவு லக்கனாதிபதி இழுத்து கொடுத்துவிடும் என்று சொல்லுவார்கள்.

மேஷம் மற்றும் துலா லக்கனத்திற்க்கு ஒரு வேடிக்கையாக ஒன்று இருக்கும். இந்த இரண்டு லக்கனத்திற்க்கும் அஷ்டாமாபதியாக இவர்களின் லக்கனத்தின் அதிபரே வருவது தான் வேடிக்கை என்று சொல்லுகிறேன். 

லக்கனாதிபதி அஷ்டாமதிபதியாக வருவதால் ஒரு சில பிரச்சினைகளை இவர்கள் வாழ்வில் சந்திப்பார்கள் என்று சோதிடத்தில் சொல்லுவார்கள். மேஷ லக்கினாதிபதி ஏழாவது வீட்டில் சென்று அமருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் லக்னாதிபதியாக சென்று அமர்ந்து இருக்கிறாரா அல்லது எட்டுக்கு உடையவராக இருப்பவர் ஏழில் சென்று அமர்ந்திருக்கிறாரா என்று எதனை வைத்து சொல்லுவது?

லக்கினாதிபதி அஷ்டமாபதியாக வருவதால் இவர்களின் நடவடிக்கையை பார்த்தாலும் வித்தியாசமாக இருக்கும். மேஷ லக்கனம் அல்லது மேஷ ராசி என்பதை எடுத்துக்கொள்வோம். இவர்களின் நடவடிக்கை எப்படி என்றால் கொஞ்சநாள்கள் நன்றாக பழகுவார்கள் அதன்பிறகு எங்கு செல்கின்றனர் என்பது தெரியாது. இதில் ஒரளவுக்கு துலாராசி பரவாயில்லை என்று சொல்லலாம்.

கிரகங்களை நாம் ஜெயிக்கவேண்டும் என்றால் முதலில் கிரகங்கள் சொல்லுவது போல நாம் இருக்ககூடாது. ஒரு சோதிடன் கணித்து நம்மளை கண்டுக்கொள்ளகூடாது. ஒவ்வொரு ராசியையும் சொன்னாலே நாம் இவர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று சொல்லிவிடலாம். கிரகங்களை ஜெயித்தவன் சோதிடம் சொல்லுவது போல இருக்கமாட்டான்.

ஒரு மனிதனை எப்படி முதலில் எடைபோடுவார்கள். அவன் பழகும் விதத்தில் தான் எடைபோடுவார்கள். இதில் முதலில் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டாலே போதும். உங்களை சோதிடத்தில் வைத்து கணித்துவிடமுடியாது. 

கிரகங்களின் கட்டுபாட்டில் நீங்கள் இருப்பதை நீங்கள் உறுதி செய்துவிடகூடாது. நான் அதனை மீறி செயல்படுவேன் என்று உறுதி உங்களின் மனதில் இருந்தால் கிரகங்களை ஜெயித்துவிடலாம். நானே ஒரு சில காலக்கட்டத்தில் கிரகங்களின் கட்டுபாட்டில் தான் இருந்தேன். இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு அதில் இருந்துவிடுபட்டேன். 

ஜாதக கதம்பத்தின் கட்டண பதிவு விரைவில் துவங்கஉள்ளது. உடனே கட்டணத்தை செலுத்தி அதில் இணைந்துக்கொள்ளுங்கள். கட்டணபதிவு துவங்கியவுடன் கட்டணம் ஏற்றபடுவதற்க்கு வாய்ப்புகள் உள்ளன. உடனே விரைந்து இதில் இணைந்துக்கொள்ளுங்கள்.

இன்று சேலம் செல்கிறேன். நாளை சேலத்தில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 8, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் !
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 7, 2018

சிறப்பு பதிவு 8


ணக்கம்!
          ஒரு நல்லநாளில் சுபமுகூர்த்த வேளையில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் எல்லாம் வைப்பார்கள். சுபநிகழ்ச்சி என்பன எதுவெல்லாம் நல்லது என்று மக்கள் நினைக்கின்றார்களோ அதனை எல்லாம் சுபநிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு சுபநிகழ்ச்சிக்கு நீங்கள் ஒரு நாளை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று வைத்துக்காெள்வோம். சுபநிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்த நாளில் எந்த லக்கினத்தில் வைப்பது என்பதை தேர்ந்தெடுப்பார்கள். அந்த நேரத்தில் நல்ல நேரத்தையும் கணித்து அதில் சுபநிகழ்ச்சியை நடத்தலாம் என்பார்கள். பொதுவாக ஒரு சுபமுகூர்த்த நாளில் காலையில் ஏதாவது ஒரு லக்கினம் வந்தால் அந்த லக்கினத்தை வைத்துவிடுவார்கள். நல்ல நேரம் வரும் நேரத்தில் உள்ள லக்கனத்தை தேர்ந்தெடுத்து வைத்துவிடுவார்கள்.

நமது முன்னோர்கள் எது பிறப்பை எடுக்கின்றதோ அதனை லக்கினமாக கருதி அது வளர்ச்சி அடையும் என்பதால் லக்கினத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றனர். ஒரு மனிதன் பிறந்தாலும் அவனுக்கு லக்கனம் முக்கியமாக இருக்கின்றது. பிறப்போடு சுபமுகூர்த்தத்தை வைத்திருக்கிறார்கள். மனிதன் பிறப்பு போல் நாம் செய்கின்ற நல்ல நிகழ்ச்சியும் வளர்ச்சியை நோக்கி செல்லட்டும் என்று முடிவு செய்வார்கள்.

ஒரு திருமண அழைப்பிதழை கொடுக்கிறேன்.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தை மாதம் 29 ஆம் தேதி(11-02-2018) ஞாயிற்றுகிழமை மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 10.30 க்கு மேல் 11.30 க்குள் மீன லக்னத்தில்

என்று குறிப்பிட்டு நேரத்தை சுட்டிக்காட்டுவார்கள்.

ஒரு திருமண பத்திரிக்கையை பார்த்து மேலே சொன்ன விசயத்தை சொல்லிருக்கிறேன். கொஞ்சம் மாறுதல்கள் இருக்கலாம் ஆனால் அந்த குறிப்பிட்ட லக்கனத்தை குறிப்பிடாமல் செய்யமாட்டார்கள். லக்கினம் மிக மிக முக்கியமாக கருதப்படும். இவர்களின் வாழ்க்கையை அந்த லக்கனம் முடிவு செய்யும் என்று நமது சோதிடத்தை கண்டுபிடித்தவர்கள் சொல்லிவிட்டு சென்று இருக்கின்றனர்.

சுபநிகழ்ச்சிக்கு குறிக்கும் லக்கனம் அனைவருக்கும் நல்ல லக்கனமாக இருக்குமா என்றால் கண்டிப்பாக அது ஒத்துவராது என்றே சொல்லலாம். மாப்பிள்ளைக்கு குறிப்பிட்ட லக்கனம் அஷ்டமாதிபதியாக வந்தால் அது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும். பெண்ணிற்க்கும் அந்த லக்கனம் சரியில்லை என்றாலும் குந்தகம் விளைவிக்கும். இரண்டு பேரின் ஜாதகத்தையும் ஆராய்ந்து அதன் பிறகு முகூர்த்தத்தை வைக்கலாம்.

நீங்கள் நினைப்பது புரிகிறது. இரண்டு பேருக்கும் நல்ல லக்கனம் எப்பொழுது வருவது அந்த நாளிலில் திருமண மண்டபம் கிடைக்குமா என்று கேட்கலாம். உங்களுக்காக வாழ்ந்தால் இதனைப்பற்றி கவலைப்படாமல் சுபமுகூர்த்தத்தைப்பற்றி தேடுவீர்கள். ஊருக்கு வாழ்கின்றவர்கள் இதனைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.

மாப்பிள்ளை பெண்ணிற்க்கும் சுபமுகூர்த்த லக்கனம் மிகவும் நல்லதை செய்கின்ற நிலையில் இருக்கும் லக்கனத்தை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். சோதிடவிதிகளை கணக்கில் கொண்டு ஒரு நல்ல லக்கனத்தை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. 

நான் சோதிடம் பார்க்க ஆரம்பித்த காலத்தில் பொருத்தம் பார்க்க பெண்ணின் சடங்காகி நின்ற ஜாதகத்தை தான் மக்கள் கொடுத்து பார்க்க சொல்லுவார்கள். தற்பொழுது பிறந்த நாளை வைத்து பார்க்க சொல்லுகின்றனர். ஏன் சடங்குக்கு வந்ததை வைத்து பார்க்க சொல்லிருக்கின்றனர் என்றால் பெண்களுக்கு அதிகப்பட்ச கடமை பெண் குழந்தையை பெற்றெடுப்பதில் தான் இருக்கின்றது. வயது வந்த நாள் என்பது கருப்பை வளர்ச்சியை ஆரம்பிப்பது என்பதை ஒரு ஆரம்பமாக அந்த காலத்தில் வைத்திருக்கின்றனர்.

ஒரு லக்கனம் ஒரு சுபநிகழ்ச்சியை நல்ல நிலைக்கு கொண்டு செல்லுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஒரு சிறந்தமுறையில் கணிக்கப்பட்ட லக்கனம் நல்ல நிலைக்கு கொண்டு சென்று அதனை பல ஆண்டுகள் நிலைக்க வைக்கும்.

ஒரு கோவில் கட்டுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். கோவில் கட்ட ஆரம்பிக்கும்பொழுதும் மற்றும் கும்பாபிஷேகம் செய்யும்பொழுதும் அதற்கு லக்கனத்தை குறிப்பார்கள். நம்ம நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நிற்க்கும் கோவில்கள் இருக்கின்றனவா அல்லவா.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் கோவில் நிற்க்கின்றது என்றால் அந்த கோவிலை கட்ட லக்கனம் குறித்துக்காெடுத்து சோதிடர்களின் திறமையை எப்படி நாம் பாராட்டுவது. சோதிடர்களின் கணிப்பு எப்படிப்பட்டது மற்றும் லக்கனம் எப்படி வேலை செய்கின்றது என்பதை நீங்கள் இதன் வழியாகவே தெரிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நிகழ்வையும் மிகச்சரியாக திட்டுமிட்டு சொல்லும் சோதிடம் நம்மிடம் இருக்கின்றது. அதனை சரியாக பயன்படுத்துவது மட்டுமே நாம் செய்யும் வேலையாக இருக்கும். சோம்பேறிதனம் பார்க்காமல் நல்ல சிந்தனை செய்து ஒரு நிகழ்வை நாம் சோதிடத்தின் வழியாக திட்டமிட்டால் செய்கின்ற அனைத்தும் வெற்றியை தந்துவிடும்.

பல விசயங்கள் மற்றும் மேற்கோள்களை வைத்து நாம் எப்படி அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை எல்லாம் நமது கட்டண பதிவில் பார்க்க போகின்றோம். உடனே அனைவரும் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். நீங்கள் செலுத்தும் பணம் கண்டிப்பாக உங்களுக்கு பலவிதத்திலும் பயன்படும்விதத்தில்  இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


ணக்கம்! 
          8.04.2018 ஞாயிற்கிழமை அன்று அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.  
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.   

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.   
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.   

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.     
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.      
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள் 
சென்னையை சேர்ந்த யதீஸ்குமார் அவர்கள்.  

வழக்கம்போல்                 
                 திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறும் நாளில் உங்களின் வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு