Followers

Saturday, June 29, 2019

செல்வவளம்


வணக்கம்!
                          இன்று பழனி முருகன் கோவில் பயணம். 

ஒவ்வொருவரையும் நான் முடிந்தவரை வருடத்திற்க்கு ஒரு முறை சென்று வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். அதனை ஏற்று பல நண்பர்கள் சென்று வந்திருக்கின்றனர். நீங்களும் அடிக்கடி சென்றால் நல்லது அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

உங்களின் வீட்டில் சமையறையில் ஒரு பானையை தயார் செய்து அந்த பானையில் கொஞ்சம் காசு பணம் மற்றும் நகைகளை போட்டு வைத்திருங்கள் உங்களுக்கு நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். பல செல்வந்தர்கள் இதனை செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் ஒரு சிலருக்கு மட்டும் இதனை செய்ய சொல்லுவார்கள். நான் அனைவருக்கும் இதனை பரிந்துரை செய்து இருக்கிறேன். உங்களின் வீட்டில் சமையறை நன்றாக இருந்தால் தான் பணம் வரும் என்று ஒரு பதிவை தந்திருக்கிறேன்.

வீட்டில் எல்லா இடமும் சுத்தமாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் உங்களின் சமையறையும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். முடிந்தவரை சமையறையில் கொஞ்சம் பணம் வைத்திருங்கள் உங்களுக்கு எப்படியும் பணம் வந்து சேரும்.

கடந்த காலத்தில் எல்லாம் பெண்கள் சமையறையில் உள்ள அரச்சாமான் என்று சொல்லக்கூடிய மளிகை சாமான்கள் வைத்திருக்கும் டப்பாக்களில் எல்லாம் பணம் வைத்திருப்பார்கள். அவர்களின் பாதுகாப்பிற்க்கு என்று இதனை செய்தாலும் அது அந்த வீட்டிற்க்கு செல்வத்தை கொடுப்பதால் இதனை நீங்களும் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 27, 2019

எதிரிகள்


வணக்கம்!
          எதிரிகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது நன்றாக இருக்கும். எதிரிகள் இருந்தால் தான் உங்களை நீங்கள் தொடர்ச்சியாக முன்னேற்றத்தை நோக்கி கொண்டு சென்றுக்கொண்டே இருக்க உதவும். எதுவும் இல்லாமல் உங்களின் வாழ்க்கை சென்றாலும் அதில் உப்பு சப்பு இருக்காது அல்லவா. எதிரிகளும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

எதிரிகளை காட்டக்கூடிய இடம் என்றால் அது ஆறாவது இடமாக இருக்கும். எதிரிகளை காட்டக்கூடிய ஆறாவது வீடு பலம்பெற்றால் உங்களுக்கு நல்லது என்றாலும் உங்களுக்கு அவ்வப்பொழுது பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும்.

ஆறாவது வீட்டில் இருக்கும் சும்மா இல்லாமல் ஏதாவது ஒரு பிரச்சினையை கொடுப்பது போலவே செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆறாவது வீட்டை பொறுத்தவரை ஒரு மனிதனை ஓடவைக்க அதிகமாகவே உறுதுணை புரிகின்றது.

கோச்சாரபடி ஒரு இராசிக்கு ஆறாவது வீட்டில் கிரகங்கள் வந்தாலும் எதிரிகள் கை ஓங்கி இருக்கும். உங்களின் இராசிக்கு ஆறில் கிரகங்கள் வரும்பொழுது உங்களின் எதிரி உங்களுக்கு தொல்லை கொடுப்பார். இப்படிப்பட்ட காலங்களில் கொஞ்சம் பொறுமையாக இருப்பதும் நல்லது.

மிதுனஇராசிக்கும் மீனஇராசிக்கும் எப்பொழுது எதிரிகளின் கை ஒங்கி இருக்கும். இந்த இரண்டு இராசிகளும் எதிரிகளிடம் சமாதானத்தோடு இருப்பதே நல்லது. தேவையில்லாமல் அவர்களை எதிர்த்துக்கொண்டு இருக்க வேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 26, 2019

கோவில்களில் செய்யகூடாதவை


வணக்கம்!
         எனக்கு தெரிந்த நபர் ஒருவர் சென்னை திருவான்மீயூர் பகுதியில் வசித்து வந்தார். திருவான்மீயூரில் பிரசித்தி பெற்ற கோவிலில் அவர்க்கு அறங்காவலர் பதவியை தரவேண்டும் என்று ஒரு சிலர் அவரிடம் கேட்டுள்ளனர். அவர் அதற்கு மறுத்துவிட்டார். அவரிடம் நான் பேசியபொழுது அவர் என்னிடம் சொன்னார் இந்த பதவிக்கு செல்வது நல்லது தான் ஆனால் இதில் செய்யும் தவறுகளை திருத்தமுடியாது பிறர் செய்யும் பாவமும் நமக்கு வந்துவிடும் என்பதால் இதனை தவிர்த்துவிட்டேன் என்று சொன்னார்.

பெரும்பாலும் இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்த மாதிரியான பதவிக்கு சென்றால் நன்றாக இருக்கும் ஆனால் நல்லவர்கள் அனைவரும் ஒதுங்கி கொள்கின்றனர். இதில் வேலை செய்யபிடிக்கவில்லை என்று சொல்லுகின்றனர். அறநிலையத்துறையில் இருக்கும் அனைவரும் பெரியளவில் கொள்ளை அடிப்பதை நோக்கமாக வைத்திருக்கின்றனர்.

உங்களுக்கு இது தெரிந்து இருக்கும் தெரிந்து இருந்தாலும் இதனை சொல்லுவதின் நோக்கம் இப்படிப்பட்ட துறைக்கு வேலை செல்லும் நபராக இருந்தால் பெரும்பாலும் சம்பளத்தை தவிர வேறு எதனையும் பெற்றுவிடாதீர்கள். 

சுயசம்பளத்தை தவிர வேறு எதையாவது செய்தால் உங்களின் குலம் நாசமாக சென்றுவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நீங்கள் நினைக்கலாம் இதில் கொள்ளை அடித்து நன்றாக வாழ்கின்றனர் என்று நினைக்கலாம். கடவுள் எப்பொழுதும் கடைசியில் அடிப்பார். அவர் அடிக்கும் அடியில் இருந்து பல ஜென்மங்கள் ஈடு ஏற முடியாது.

உங்களால் முடிந்தவரை கோவில் விசயங்களில் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. நல்லதை மட்டும் செய்யும் ஒரு இடமாக கோவில்களை தேர்ந்தெடுத்து நடந்துக்கொள்ளுங்கள். பிற எந்த தவறையும் செய்யும் இடமாக கோவில்களை தேர்ந்தெடுக்காதீர்கள்.

நம்ம அம்மன் கோவில் கட்டும்பணியில் கூட நான் துளி அளவும் என்னுடைய சுயதேவைக்கு இதனை எடுக்ககூடாது என்று எண்ணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நண்பர்கள் அனுப்பும் பணத்தை மிகச்சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டி வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு ஆன்மீகவாதியாக நாம் இருந்தாலும் நாம் செய்த வேலைக்கு பணம் வந்தால் போதும் கோவில் பணியில் எந்த ஒரு பைசாவும் எடுக்ககூடாது என்று எண்ணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். என்ன என்ன நடக்கின்றது என்பதை நமது நண்பர்களுக்கு தொடர்ச்சியாக தகவல்கள் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 25, 2019

அஷ்டமாபதி


வணக்கம்!
         அஷ்டமாபதி தசா நடந்தால் என்ன பலனை தரும் என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார். அஷ்டமாபதி தசா என்றாலே அது ஒரு மோசமான தசா என்று தான் அனைவராலும் கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

ஜாதகத்தில் அஷ்டமாபதி எப்படி அமர்ந்திருக்கின்றார் என்பதை பொறுத்து தான் பலனை கணித்து சொல்லமுடியும். அஷ்டாமபதியின் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகம் மற்றும் அஷ்டமாபதி சென்ற அமர்ந்த இடத்தை பொறுத்தும் பலன் மாறுப்படும்.

அஷ்டமாபதி கெட்டு இருந்தால் அவர்கள் கொஞ்சம் தனிமையில் வாழ்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். வெளியில் தலைகாட்டாமல் வாழும் வாழ்க்கை வாழும்பொழுது அது அஷ்டமாபதி தசா அல்லது அதன் பிடியில் அமர்ந்து இருப்பது போன்றே இருக்கும்.

இன்றைய சூழலில் பலர் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். வயதான பெரியோர்கள் முதல் இளம்வயதில் இருப்பவர்கள் கூட தனிமையில் தான் வாழ்க்கின்றனர். சூழலை அப்படி மாற்றிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

அஷ்டமாபதி பிடியில் வாழ்வது இன்றைய காலத்தில் எளிமையாகவே அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாகவே வாழ்வதால் பெரிய பிரச்சினை இல்லை என்று சொல்லலாம். ஒரு சிலர்க்கு விபத்துகள் நடைபெறுவதற்க்கு வாய்ப்பு உண்டு.

அஷ்டமாபதி நன்றாக இருந்தால் அவர்களுக்கு பல வழிகளும் பணம் வந்து சேரும். யாரோ உழைத்து இவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் உழைப்பு இல்லாமல் அதுவாகவே பணம் வந்துக்கொண்டே இருப்பது போன்ற ஒரு நிலை ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 24, 2019

அம்மன் கோவில் கட்டும்பணி


வணக்கம்!
          அம்மன் கோவில் கட்டும்பணி ஆயத்தம் ஆகபோகின்றது. விரைவில் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். கட்டும்பணிக்கு முன்கூட்டி நடைபெறும் ஆயத்தபணிகளை தற்பொழுது செய்துக்கொண்டு வருகிறோம்.என்ன என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை வாட்ஸ்அப்பில் அவ்வப்பொழுது தெரிவித்துக்கொண்டே இருக்கின்றேன். 

ஒரு சில காரணங்களால் கோவில் வேலையை உடனே தொடங்க முடியாமல் இருந்தது அது எதனால் என்று நமது நண்பர்களிடம் கூடுமானவரை தெரிவித்து இருந்தேன். தற்பொழுது அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதை வாட்ஸ்அப்பில் பார்த்து தெரிந்துக்கொண்டு இருக்கின்றனர்.

நமது நண்பர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஒருத்தரும் செய்யவில்லை என்பதை சொல்லுவதைவிட ஒவ்வொருவரும் நிறைய உழைப்பை இதற்க்கு என்று போடுகின்றனர். அவர்களின் சொந்தபணி போல இதனை செய்வதால் சிறப்பான ஒரு பங்களிப்பு இருக்கின்றது.

ஜாதககதம்பத்தில் இதுவரை பங்களிப்பை அளிக்காதவர்கள் இருந்தாலும் இனிமேலும் தங்களின் உழைப்பை இதற்கு என்று கொஞ்சம் போடுங்கள். நல்ல பணியை தேர்ந்தெடுத்து செய்துக்கொண்டு இருக்கின்றோம். பல ஆயிரம் பேர் இருக்கின்றனர் அனைவரின் உழைப்பும் இதற்கு என்று தேவை என்பதல் இதனை செய்யுங்கள் என்று கேட்கிறேன்.

அம்மனின் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைப்பதற்க்கு இந்த பணி எடுத்து செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மிகப்பெரிய பணியை பலர் இணைந்து தான் இதனை செய்யவேண்டும் என்பதால் இதனை  உங்களிடம் தெரிவித்துக்கொண்டே வருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 23, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
                      இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்            
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 20, 2019

பொறாமை குணம்


வணக்கம்!
          இந்தியகாரனோடு வாழ்வது என்பது ஒரு கடினமான ஒன்றாகவே இருக்கும். இந்தியகாரன் சும்மா இருக்கமாட்டான் அல்லவா அதனால் சொல்லுகிறேன். நமது வாடிக்கையாளர்கள் வெளிநாட்டில் இருந்தும் கூட சொல்லுவார்கள் ஏதாவது ஒரு வம்பு செய்துக்கொண்டே இருக்கின்றார்கள் என்று சொல்லுவார்கள்.

எந்த இடத்திற்க்கு சென்றாலும் ஏதாவது ஒரு இடத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒன்றை பேசி கொண்டே இருப்பார்கள். ஒரு சில இடத்தில் பொறாமை அதிகமாக இது இருக்கும். சம்பந்தமே இல்லாமல் பொறாமைபட்டுக்கொண்டு இருப்பார்கள்.

பொறாமையில் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடுகின்றார்கள். உங்களிடம் ஏதாவது ஒரு வழியில் பொறாமைப்பட்டுக்கொண்டு சண்டைபோட்டுக்கொண்டு இருப்பார்கள். பெண்கள் தான் பொறாமைப்படுவார்கள் என்ற காலம் போயி தற்பொழுது ஆண்களும் இதில் அகப்பட்டுக்கொண்டுவிட்டார்கள்.

நிறைய இடத்தில் ஆண்களும் பொறாமைப்பட்டு மற்றவர்களுக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் பல நண்பர்கள் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு இருக்கும் பிரச்சினையில் இது தலையாக பிரச்சினையாக இருக்கின்றது.

ஒருவர் நல்லமுறையில் வளர்ந்து பெரிய ஆட்களாக வரவேண்டும் என்றால் அவனிடம் பொறாமை என்ற குணம் இல்லாமல் இருக்கவேண்டும். பொறாமை இல்லாமல் இருந்தால் மட்டுமே அவனால் சிறந்த வாழ்க்கையை உருவாக்கி வைத்துக்கொள்ளமுடியும் என்பதை நான் பார்த்து இருப்பதால் முடிந்தவரை அடுத்தவர்களிடம் பொறாமை குணத்தை காட்டாதீர்கள். உங்களிடமும் இதனை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 19, 2019

இராகு தசாவும் சுபநிகழ்வுகளும்


வணக்கம்!
         ஒருவரின் செயல்பாட்டை தீர்மானிப்பது அவர்களுக்கு நடக்கும் தசா தான் மிக முக்கிய காரணியாக இருக்கும். ஒருவருக்கு இராகு தசா நடந்தால் அவர்களின் செயல்பாடு அதிகபட்சம் தேக்கநிலையை சந்திக்கும். ஒரு சிலருக்கு இராகு தசா நன்றாகவே நடக்கும்.

சமீபத்தில் ஒருவரின் வீட்டிற்க்கு சென்று ஜாதகம் பார்த்தேன். அவரின் பையனுக்கு திருமணம் செய்யவேண்டும் என்பதால் ஜாதகத்தை பார்க்க சொல்லிருந்தார்கள். அவரின் பையனின் ஜாதகத்தில் இராகு ஆறாவது வீட்டில் அமர்ந்திருந்தது.

இந்த பையனுக்கு ஆறாவது வீட்டில் இராகு அமர்ந்த காரணத்தால் அவரின் பெற்றோர்க்கு வட்டி தொழில் செய்து நல்ல வருமானத்தை கொடுத்து இருக்கின்றது. மிகப்பெரியளவில் வட்டி தொழில் செய்து வருமானத்தை பார்த்து இருக்கின்றார்.

இந்த பையனுக்கு படிப்பு ஒரளவு மட்டுமே வந்திருக்கின்றது. அவரின் முழுமுயற்சியால் இந்த பையனின் படிப்பை கஷ்டப்பட்டு படித்து வைத்திருக்கின்றார். பையன் பெரிய வேலையில் இல்லை ஆனாலும் பணம் நன்றாக இருப்பதால் திருமணத்தை ஏற்பாடு செய்துவிடலாம் என்று எண்ணி செய்கின்றனர்.

பெரும்பாலும் இராகு தசாவில் திருமணம் செய்வது என்பது ஒரு கடினமான பணியாகவே இருக்கும். ஒரு சிலருக்கு உடனே நடந்துவிடும். பலருக்கு இராகு தசாவில் சுபகாரியங்களை நடத்தி வைக்காது. ஊருபட்ட பரிகாரம் அனைத்து கோவில்களுக்கும் சென்று வந்த பிறகு தான் திருமணம் நடக்கும்.

ஒரளவு சோதிடம் தெரிந்தவர்கள் இராகு தசாவில் திருமணம் செய்வதை தவிர்த்துவிடுவார்கள். திருமண வயதில் இருந்தால் போராடி இதனை செய்வது உண்டு. உங்களுக்கு இராகு தசாவில் பையன் இருந்தால் பாரக்கின்ற வரன் சுக்கிரதசா அல்லது குருதசாவாக இருந்தால் உடனே திருமணம் நடக்கும்.

இராகு தசாவில் ஏழரைசனி மற்றும் அஷ்டமசனி நடந்தால் திருமணத்தை தவிர்த்துவிடுவது நல்லது. ஏழரைச்சனி முடிந்த பிறகு அவர்களின் ஜாதகத்தை கையில் எடுக்கலாம். இராகு தசாவும் சரியில்லாமல் கோச்சாரபலனும் சரியில்லாம் திருமணம் செய்யும்பொழுது அவர்களின் வாழ்க்கை பிரச்சினையை சந்திக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 18, 2019

இராகு தசா சூரிய புத்தி


வணக்கம்!
          இராகு தசா சூரியன் புத்தியை பற்றி சொல்லுங்கள் என்று நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருப்பேன் என்று நினைக்கிறேன் இருந்தாலும் புதிய தகவலாகவும் சொல்லுகிறேன்.

இராகு எப்படி ஜாதகத்தில் அமர்ந்திருக்கின்றது என்பதை பொறுத்து தான் பலனை கணிக்கமுடியும். ஒரளவு ஜாதகத்தில் நல்ல முறையில் அமைந்திருந்தால் ஜாதகருக்கு பெரியளவில் நன்மையை தான் செய்துக்கொண்டு இருக்கும்.

இராகு பெரும்பாலும் நிறைய பணத்தை கொடுத்தால் அந்த ஜாதகர்க்கு சூரியன் புத்தியில் தன்னுடைய தந்தையை இழக்க நேரிடும். இளம்வயதாக இருந்தால் பெரும்பாலும் தந்தைக்கு மரணத்தை கொடுத்துவிடுகின்றது. இளம் வயதில் அதிக வீரியமாக தசா வேலை செய்யும்.

சூரியன் ஒரளவு நன்றாக அமர்ந்தால் நோய் மற்றும் மனக்கவலையோடு இது இருக்கும். சூரியன் மறைவுஸ்தானம் அல்லது தீயகிரகங்களின் வீட்டில் அமர்ந்தால் இதனை பார்த்து பயப்படவேண்டும்.

சூரியன் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்துவிடகூடாது. ஒன்பதில் அமர்ந்த சூரியன் தன்னுடைய புத்தியில் தந்தைக்கு மரணத்தை கொடுக்கும். இராகு தசாவில் இது உறுதியாக மரணத்தை கொடுக்கும் என்று சொல்லலாம்.

இராகுதசா சூரிய புத்தியில் நல்லதைவிட கெடுதல் அதிகமாகவே கொடுக்கின்றது. இராகு ஒரு மாதிரியான கிரகம் சூருியன் ஒரு விதமான கிரகம் இரண்டும் சம்பந்தப்படும்பொழுது அது கெடுதலை அதிகமாகவே கொடுகின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 17, 2019

வாழ்க்கை தத்துவம்


வணக்கம்!
          சும்மா இருந்தால் நாம் ஏதோ மாட்டிக்கொண்டு விட்டோம் இவன் நடவடிக்கையை இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ஏதோ ஒன்றை செய்துக்கொண்டே இருப்பது பாேலவே உங்களின் செயல்பாடு இருக்கவேண்டும்.

எந்த ஒரு பிரச்சினையையும் வேண்டாம் ஒதுங்கி இருக்கலாம் என்று இருந்தால் நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தமாக எடுத்துக்கொள்வார்கள். இந்த உலகத்தில் இப்படி தான் செயல்படவேண்டும் என்பதால் உங்களை வெளியில் காட்டிக்கொண்டே இருங்கள்.

இயற்கையும் நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் வாய்ப்பையும் கொடுப்பதில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்க்கு எதையாவது செய்துக்கொண்டே இருங்கள் என்பதையும் சொல்லிவிடுகிறேன். இவன் எதுவும் செய்யமாட்டான் இவனுக்கு கொடுக்க கூடாது என்று இருந்துவிட்டால் நீங்கள் வெளியில் தெரியவே மாட்டீர்கள்.

தவறாக செய்துவிடுவோம் என்று பயந்த ஒதுங்கிக்கொண்டு இருப்பவர்களும் இருக்கின்றார்கள். தவறு செய்ய செய்ய தான் நமக்கு நல்ல அனுபவம் கிடைக்கின்றது. நல்ல அனுபவம் கிடைக்கும்பொழுது கொஞ்சநாளில் அனைத்திலும் சரியாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

வாழ்வில் பெரியளவில் சாதிப்பவன் அனைவரும் ஏதோ ஒன்றை செய்துக்கொண்டே இருப்பவர்களாக இருப்பார்கள். சும்மா அமர்ந்து இருக்கமாட்டார்கள். எதுவும் செய்யாமல் இருப்பதைவிட சும்மா நடந்துக்கொண்டாவது இருங்கள் உயிரோடு இருக்கின்றான் என்றாவது சொல்லுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 15, 2019

பெளர்ணமி அமாவாசை நாட்களில்


வணக்கம்!
          பெளர்ணமி நாட்களிலும் அமாவாசை அன்றும் ஏதாவது ஒரு கோவில் அல்லது ஜீவசமாதிகளை சென்றுதரிசனம் செய்துவிட்டு வருவது நல்லது. நமது நண்பர்கள் அனைவரும் தான் சென்று தரிசித்த சித்த சமாதிகளை என்னுடைய வாட்ஸ்அப்பில் அனுப்புவார்கள் அதனை நான் பார்த்து நல்ல தரிசனம் செய்வதும் உண்டு. 

நான் அங்கு செல்லுவதற்க்கும் ஒரு வழி வகை செய்கின்றனர் அதோடு அவர்கள் சென்றதால் அவர்களின் ஆன்மீக உத்வேகம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளவும் முடிகின்றது. இன்றைய காலத்தில் சித்தர்கள் பேரைச்சொல்லி நடக்கும் கூத்துகளை விட இவர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதே பெரிய விசயமாகவே நான் கருதுகிறேன்.

பெளர்ணமி அன்று மட்டும் ஏதோ ஒரு விஷேசமான கோவிலுக்கு சென்று வருதல் அல்லது சித்தர்கள் ஜீவசமாதியை தரிசனம் செய்துவிட்டு வருதல் உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். அமாவாசைக்கு இதனை செய்யலாம். அமாவாசை அன்று மட்டும் அந்த நாளில் விஷேசமாக இருக்கும் அம்மன் கோவில் மற்றும் எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் சென்று வரலாம்.

பல இடங்களுக்கு பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நான் சென்று வந்த காரணத்தால் பல நல்ல மாற்றங்கள் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கின்றது இதனை நீங்கள் செய்துக்கொண்டு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை அடைய விரும்புகிறேன்.

பெளர்ணமி சிறப்பு பூஜை நடக்க இருக்கின்றது. தங்களின் வேண்டுதல்கள் மற்றும் விருப்பங்கள் எனக்கு அனுப்பி வையுங்கள். தங்களின் வேண்டுதலை அதில் நான் வைக்கிறேன். நாளை இரவு பெளர்ணமி சிறப்பு யாகம் நடைபெற இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 14, 2019

16


ணக்கம்!
          இன்றைய காலத்தில் அவசர யுகம் என்று சொல்லிக்கொண்டு பலர் தான் செய்யவேண்டிய கடமையை கூட செய்வதில்லை. மரணம் முடிந்தபிறகு அவர்களுக்கு 16 ஆவது நாள் என்ற ஒன்று செய்வார்கள் பலர் இதனை முன்கூட்டியே இதனை செய்துவிடுகின்றனர். நாள்கள் இல்லை வேலை இருக்கின்றது என்று இதனை தவிர்கின்றனர். 

ஒருவருக்கு பிறந்த 16 ஆவது நாள் மிக முக்கியம் அதுபோல இறந்த 16 ஆவது நாள் மிக முக்கியம் என்பதால் 16 நாள்களில் செய்யவேண்டிய காரியத்தை அந்த நாளில் செய்யவேண்டும். நாட்களை குறைத்துக்கொண்டு இதனை செய்யகூடாது.

பிறந்த குழந்தைக்கு 16 ஆவது நாள் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். 16 ஆவது நாளில் பிறந்த குழந்தைக்கு என்று தனிப்பட்ட பூஜை செய்வார்கள். 16 நாட்களுக்கு பிறகு தான் கோவில்களுக்கு சென்று வரவேண்டும். 16 நாட்கள் தீட்டு என்று சொல்லுவார்கள்.

ஒருவர் இறந்த பிறகு 16 ஆவது நாள் வரை எந்த கோவிலுக்கும் செல்லகூடாது. இறந்த பிறகு 16 நாட்களுக்கு பிறகு தான் கோவிலுக்கு செல்வார்கள். 16 நாட்கள் தீட்டு என்ற கணக்கில் வரும் பல ஊர்களில் இது தான் நடைமுறை ஒரு சில ஊர்களில் இது மாறலாம் ஆனால் 16 நாட்கள் வரை மட்டும் இதனை கடைபிடிக்கலாம்.

16 நாட்கள் என்ற கணக்கை நீங்கள் வைத்திருந்தால் போதுமானது. பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் 16 நாட்கள் முக்கியமானது. ஒரு சில ஊர்களில் மாற்றப்பட்டாலும் நீங்கள் இதனை பின்பற்றி வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 12, 2019

பீடை விலக என்ன செய்யலாம்?


வணக்கம்!
          நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்கும் என்ற நிலை வரும்பொழுது மட்டுமே நமது ஆத்மா மிகுந்த சுத்தமாக இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். வேண்டுதல்கள் நியாமாகவே இருக்கவேண்டும் அதனை வேண்டி கிடைத்துவிட்டால் உங்களின் ஆத்மா மிக மிக நல்ல நிலையில் இருக்கின்றது.

நாம் சாமியை தேடிச்சென்றாலும் சாமியாரை தேடிச்சென்றாலும் நடக்கின்றது என்பது நம்முடைய ஆத்மா இருக்கும் நிலையை பொறுத்து தான் நடக்கும். விரைவாக நடக்கின்றதா அல்லது மெதுவாக நடக்கின்றதா என்பதை பொறுத்து அமையும்.

பீடையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் சொன்னது கூட உங்களின் ஆத்மா நல்ல நிலையில் இருப்பதற்க்குள்ள வழியை தான் சொல்லிருக்கிறேன். பீடை அதிகமாக அதிகமாக அது ஆத்மாவிற்க்குள்ளும் பிடித்துக்கொண்டு உங்களை போட்டு துவம்சம் செய்துவிடுகின்றது.

ஒன்றில் இருந்து நாம விலக விலக நாம் மேலே உயர்ந்துக்கொண்டே செல்லலாம். நம்மை பிடித்த பீடை விலகினாலே போதும் என்று சொல்வது உண்டு. நம்முடைய வீட்டில் உள்ள பீடையையும் நாம் விலக்கவேண்டும் அதற்கு வீட்டில் நீங்கள் ஏற்றும் தீபமே மிகச்சிறந்த ஒன்று.

ஒரு வீட்டில் அதிகமாக பீடை இருக்கின்றது எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை வருகின்ற பணம் கையில் தங்குவதில்லை இதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால் வீட்டில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் இந்த பீடை விலகிவிடும்.

சிறப்பு பெளர்ணமி பூஜை நடைபெற இருக்கின்றது.  பெளர்ணமி பூஜையில் கலந்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 10, 2019

நல்ல எண்ணம்


வணக்கம்!
         பலருக்கு நான் ஆன்மீகவழியில் வேலை செய்யும்பொழுது நடைபெறும் ஒரு சில விசங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். இதனை வைத்து நீங்களே புரிந்துக்கொள்ளலாம். ஒருவர் எந்தவித தவறும் செய்யாமல் வந்து ஒரு பிரச்சினை மட்டும் வந்துவிட்டது இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் எனக்கு வந்துவிட்டது என்னை இதில் இருந்து காப்பாற்றுங்கள் என்றால் உடனே அதனை செய்துக்கொடுத்துவிடுவது உண்டு.

அவர் ஒரு எதார்த்தவாதியாக இருந்து அவர் எந்த வித தவறும் வாழ்க்கையில் செய்யாமல் இருந்தால் அவரை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற நாம் நினைத்த உடனே அவரை அம்மன் காப்பாற்றும். ஒரு சிலர் நிறைய தவறுகளை செய்துவிட்டு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அவரை காப்பாற்ற நாம் நினைக்கும்பொழுது அது உடனே நடைபெறாமல் காலம் தாழ்த்தி நடைபெறும் என்றால் அவரிடமும் பீடை இருக்கின்றது என்று அர்த்தம்.

நிறைய பேர்கள் ஒரு கோவிலுக்கும் விடாமல் சென்றுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் வழியாக அவர்களுக்கு பீடை வந்துவிடுகின்றது. நிறைய கெட்ட நினைப்பு இருக்கும் இந்த கெட்ட நினைப்பு அவர்களுக்கு பீடையை கொடுத்துவிடுகின்றது. இதனால் அவர்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறாமலே இருக்கின்றது.

யாரையும் குற்றம் சொல்ல இதனை சொல்லவில்லை உங்களின் மனதை மிகச்சரியாக பழக்கிக்கொள்ளுங்கள் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். எந்த ஒரு கெட்ட நினைப்பும் உள்ளே வராமல் நீங்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தால் உங்களுக்கு எந்த ஒரு சாமியாரும் தேவையில்லை கடவுளே உங்களை நாடி கொண்டு வந்து கொடுப்பார்.

மனதை நல்ல விதமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். அதனை தயார்படுத்தி நீங்கள் வைத்துக்கொண்டால் உங்களின் தேவைகள் அனைத்தும் இயற்கையாகவே உங்களுக்கு கிடைக்கும். மனது சம்பந்தம் இல்லாமல் போட்டு குழப்பிக்கொண்டே இருக்கும்பொழுது அது உங்களுக்கு பீடையாகவே உருவாகிவிடுகின்றது.

ஒரு சின்ன உதாரணத்தை உங்களிடம் சொல்லுகிறேன். ஒருவருக்கு இராகு தசா நடந்தால் அவரின் நினைப்பு எந்த நேரமும் காமத்தை நோக்கியே சென்றுக்கொண்டு இருக்கும். காம எண்ணம் தவறு என்று சொல்லவில்லை அது எந்த நேரமும் இருக்கும்பொழுது தான் பீடையாக இருக்கின்றது. இதனை புரிந்துக்கொண்டால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 7, 2019

பீடை


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு பீடை என்பது வரவே கூடாது. பீடை வந்துவிட்டால் அதன்பிறகு அவனை சரி செய்வது என்பது கடினமாகவே இருக்கும். பீடையை பற்றி நிறைய சொல்லிருக்கிறேன். இதனை மறுபடியும் சொல்லிக்கொண்டே இருப்பதற்க்கு இதில் இருந்து அனைவரும் மீளவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

ஒருவருக்கு பல வழிகளிலும் பீடை என்பது பிடிக்கின்றது அதில் மீண்டு வருவதற்க்கு பல வழிகளை சொல்லிருக்கிறோம். ஒருவர் இறப்பு வீட்டிற்க்கு சென்று வந்தபிறகு குளிக்கவில்லை என்றாலும் அந்த நபருக்கு பீடை பிடித்துவிடுவதும் உண்டு.

இறந்தால் அதில் இருந்து கிருமி போய்வதற்க்கு குளிக்க சொல்லிருந்தாலும் அதில் இருந்து பீடை பிடிக்கவும் செய்கின்றது அதனாலேயே குளிக்கவேண்டும். பலர் இன்றைய காலத்தில் இறப்பு வீட்டிற்க்கு சென்று வந்தால் குளிப்பதில்லை. இது நகர்புறத்தில் அதிகமாக இருக்கும்.

எந்த ஒரு இறப்பு வீட்டிற்க்கு நீங்கள் சென்றாலும் உடனே நீங்கள் குளித்துவிடவும். ஒரு சிலரோடு பழக்க வழக்கத்திலும் இந்த பீடை வருகின்றது என்பதையும் தெரிகின்றது. இதனையும் நீங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருவரோடு பழகும்பொழுது அவர்களிடம் அதிகமான பீடைகள் இருந்தாலும் அது உங்களுக்கு தொற்றிக்கொள்ளும். இதனையும் நீங்கள் பார்த்துக்கொண்டு அதற்க்கு தகுந்தார்போல் பழக்கவழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 6, 2019

தோஷங்கள்


வணக்கம்!
          ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு தோஷங்கள் இல்லாமல் போய்விடுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. ஒரு சில தோஷங்கள் மட்டும் வேலை செய்யும் அதுவும் மனரீதியாக வேலை செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

உதாரணத்திற்க்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் நீங்கள் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தீர்கள் ஆனால் உங்களின் வாரிசுகளை அப்படி விட்டுவிடுவீர்களா? நீங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த அனைத்தையும் கொண்டு உங்களின் வாரிசுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றீர்கள். பெரும்பாலும் அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்கின்றார்கள் அல்லவா.

உங்களின் வாரிசுகளுக்கு உள்ள தோஷங்கள் அனைத்தும் போய்விட்டதாகவே நீங்கள் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றீர்கள். உங்களின் வாரிசுகளுக்கு தோஷங்கள் பெரியதாக வேலை செய்வதில்லை. அவர்களின் தோஷங்கள் எடுபடவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றார்கள். ஒட்டுமொத்தமாகவே தோஷங்கள் பெரியதாக வேலை செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். தேவைகளை பூர்த்தி செய்துவிடுகின்றனர். ஒரு சில சின்ன சின்ன தேவைகள் மட்டும் இருக்கலாம்.

இந்தியாவிலும் இப்படிப்பட்ட வளர்ச்சி வந்துவிட்டால் எப்படியும் வந்துவிடும் அதன்பிறகு தோஷங்கள் குறைந்து நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். சின்ன சின்ன விசயங்கள் இருக்கலாம். தோஷத்தால் பெரிய பாதிப்புகள் வராது. உங்களின் வாரிசுகளின் வாரிசு நல்ல வாழ்க்கை வாழும் அவர்களுக்கு தோஷம் என்பது இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 4, 2019

புகழ் பெறவைக்கும் வழிபாடு


வணக்கம்!
                இன்றைய காலத்தில் புகழை விரும்பாத மனிதர்களே கிடையாது என்று சொல்லலாம். அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் புகழ் பெற்று விளங்கவேண்டும் என்று நினைப்பார்கள். கலியுகத்தில் தன்னை காட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை கலியுகம் கொடுக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

மனிதன் புகழ் பெறுவதற்க்கு இயற்கையாகவே நல்ல கிரகங்கள் அமைந்தால் புகழ் பெற்றுவிடுவான். நல்ல கிரகங்கள் ஜாதகத்தில் அமையவில்லை என்றால் அவன் பாடுபட்டு தான் புகழ்பெறவேண்டும். அவன் நிறைய போராட்டங்களை பெற்று புகழ் பெறவேண்டும்.

புகழை பெற்று தருவதற்க்கு வழிபாட்டில் முதன்மையாக இருப்பது அம்மன் வழிபாடாக தான் இருக்கும். அம்மனை வணங்கும் நபர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் புகழ்பெற்று விளங்குவார்கள் வேறு எந்த வழிபாடு செய்தாலும் புகழ்பெறுவது கடினமான ஒன்றாகவே இருக்கும்.

அம்மனை நீங்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்து வாருங்கள் கண்படிப்கா ஒரு நாள் நீங்கள் புகழின் உச்சத்தில் இருப்பீர்கள். வழிபாடு நடத்தகூட வேண்டாம் அம்மன் கோவிலில் சென்று படுத்துவிட்டு வாருங்கள்.

பல கோவில்கள் படுத்து உறங்கலாம் அப்படி தான் இருந்திருக்கின்றது. தற்பொழுது எல்லா கோவில்களிலும் கூட்டம் இருப்பதால் இதனை தவிர்கின்றனர். ஒரு சிலர் இரவு மட்டும் தங்கிவிட்டு வருவது போன்று இருக்கின்றது. 

அம்மன் என்று சொல்லும்பொழுது எந்த அம்மனை வணங்கலாம் என்ற கேள்வி எழும். எந்த அம்மனாக இருந்தாலும் சரி உங்களுக்கு எந்த அம்மன் கோவில் கிடைக்கின்றதோ அந்த கோவிலை நீங்கள் வழிபடலாம். ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருந்துவிட்டு வாருங்கள் அதுபோதும் உங்களை பெரியளவில் புகழ் பெற வைத்துவிடும். ஒரு நாளில் நடந்துவிடுமா என்று கேட்கவேண்டாம் உங்களின் புண்ணியத்தை பொறுத்து அது அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பெளர்ணமி சிறப்பு அம்மன் யாக பூஜை


வணக்கம்!
          பெளர்ணமி அன்று சிறப்பு இரவு நேர யாகம் இருக்கின்றது. இதில் கலந்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். உங்களின் வசதிக்காக தற்பொழுதே இதனை அறிவித்துவிட்டேன். தேதி 16/06/2019 இரவு பெளர்ணமி சிறப்பு அம்மன் யாகம் செய்யப்படும்.

தோஷத்தைப்பற்றி நிறை பயம் அனைவருக்கும் இருக்கும் ஆனால் இதில் ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். தோஷம் என்பது நாம் வாழும் நாட்டை பொறுத்தும் அமைக்கின்றது. பூமியின் உயர் மட்டத்தில் வசிப்பவர்களுக்கு உலக வரைபடத்தை எடுத்து அதில் மேலே வாழும் மக்களுக்கு அந்தளவுக்கு தோஷம் என்பது வருவதில்லை.

கிரகங்களின் முழு பலமும் இந்த நாட்டிற்க்கு கிடைக்கும்பொழுது இந்த நாட்டு மக்களுக்கு தோஷம் பெரியளவில் வேலை செய்யாது என்று சொல்லலாம். அதே நேரத்தில் கிரகத்தின் முழுபலனும் இந்த  மக்களுக்கு கிடைக்கும்.

ஒருவருக்கு ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தால் அந்த கிரகத்தின் பாதிப்பு அந்த நபருக்கு பெரும்பாலும் இருக்காது. அவருக்கு பெரிய பாதிப்பை கிரகங்கள் ஏற்படுத்தாது. நீங்கள் நினைக்கலாம் இவர்களுக்கு மரணம் வராதா மற்றும் பிரச்சினைகள் வராதா என்று கேட்கலாம்.

பிரச்சினை என்பது பெரியளவில் வருவதற்க்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். மனிதன் தன்சுய எண்ணங்களால் உருவாக்கும் பிரச்சனை தானே தவிர மற்றபடி கிரகங்கள் பாதிப்பு குறைவு. மரணம் வருவது இயற்கை. கிரகங்களின் பாதிப்பால் வருகின்ற பிரச்சினை குறைவாகவே அங்கு இருக்கும்.

எனக்கு ஒரு கிரகம் நீசமாக இருக்கின்றது இதனை நான் போக்க அந்த நாடுகக்கு சென்று நான் தங்கிக்கொண்டு வாழலாமா என்று கேட்டால் கண்டிப்பாக அங்கு சென்று வாழலாம். உங்களின் நீச கிரகத்தின் பாதிப்பு அங்கு இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 3, 2019

பித்ருதோஷம்


வணக்கம்!
         மூன்றாவது வீட்டில் உள்ள பித்ருதோஷத்தைப்பற்றி சொல்லவில்லை அதனைப்பற்றி சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். பல பதிவுகளில் இதனை நாம் பார்த்து இருக்கிறோம் என்று இதனை தவிர்த்தேன்.

பித்ருதோஷத்தை இப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு மனிதனுக்கு உச்சகட்ட அவமானத்தை ஏற்படுத்தி அதன்பிறகு அவர்களை யாசகம் கேட்கும் நிலையில் இருக்க வைப்பது தான் பித்ருதோஷம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு இடத்திற்க்கு சென்று அடுத்த மனிதர்களை விட உங்களை யாரும் மதிக்கவில்லை என்றால் நீங்கள் பித்ருதோஷத்தில் இருக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கே ஒரு இழிவுபோல உணர்ந்தாலும் பித்ருதோஷம் என்பதை தான் சாரும்.

எப்படிப்பட்ட பித்ருதோஷமும் ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு மாறிவிடும். கடைசிவரை அப்படியே தான் இருந்துக்கொண்டு இருப்பார் என்று இருக்கவேண்டியதில்லை. ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு முக்கால்வாசி பேருக்கு மாறிவிடுகின்றது.

பித்ருதோஷம் இருப்பவர்கள் தான் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு பெரிய அளவில் சாதிக்கின்றனர். இன்றைக்கு இருக்கும் சாதனை புரிந்த அதிகபட்சம் பேரின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருப்பதை காணமுடிகின்றது.

ஒரு சிலருக்கு மட்டும் அது பெரியளவில் வேலை செய்யாமல் இருக்கின்றது. அவர்கள் முடிந்தவரை நிறைய ஆன்மீகயாத்திரை சென்றால் அதுவும் விலகி நன்மை பயக்கும்.  நம்பிக்கையோடு ஆன்மீக விசயங்களில் ஈடுபட்டு வாருங்களகண்டிப்பாக நன்மை நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
         இரண்டு நாட்களாக சுயவேலை காரணமாக பதிவுகளை தரமுடியவில்லை. பதிவை தரமுடியாத ஒரு சூழ்நிலை இருந்த காரணத்தால் தரமுடியவில்லை இனி தொடர்ச்சியாக பதிவுகளை நாம் பார்க்கலாம்.

அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு சிறப்பு யாகத்தை சொல்லிருந்தேன். தற்பொழுது வரும் அமாவாசை அன்று இந்த யாகம் செய்யபடவில்லை என்பதை சொல்லிவிடுகிறேன். பெளர்ணமி முதல் இதனை ஆரம்பிக்கலாம் என்பதால் இதனை தள்ளிவைக்கிறேன்.

சிறப்பு ஹோமத்திற்க்கு என்று தனியாக பணம் செலுத்த தேவையில்லை நமது அம்மன் பூஜைக்கு வருகின்ற பணத்திலேயே செய்துக்கொள்ளலாம். தனியாக செய்யவிரும்பும் நபர்களுக்கு மட்டும் தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள்.

பகலில் செய்வதாக இருந்தால் பகல் என்று கேட்டுக்கொள்ளவும். இரவிற்க்கு வித்தியாசப்படும் என்பதால் இரவு ஹோமத்திற்க்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்றாவது வீட்டைப்பற்றி நாம் பார்த்து வருகிறோம். மூன்றாவது வீட்டில் உள்ள பெருன்பான்மையான விசயங்களை நாம் பார்த்துவிட்டோம் இனிமேல் உங்களின் கேள்விகள் மற்றும் அதனைப்பற்றி சந்தேகங்கள் இருந்தால் கேள்வி கேட்டு அனுப்பி வையுங்கள்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு