Followers

Saturday, April 30, 2016

எமனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வது எப்படி?


வணக்கம்!
          நான் எத்தனையோ நல்லது செய்து இருக்கிறேன். அதனை எல்லாம் வெளியில் அந்தளவுக்கு காட்டிக்கொண்டது கிடையாது இருந்தாலும் அவ்வப்பொழுது அதனை சொன்னால் தான் சரிப்பட்டு வரும் எனறு நினைக்கிறேன்.

ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தால் அந்த நபர்க்காக சிறப்பு பிராத்தனை செய்து வந்தேன். சில மாதங்களாக அதனை நிறுத்திவிட்டேன். என்ன காரணம் என்றால் நம்ம ஆட்கள் மருத்துமனையில் இருந்துக்கொண்டு எனக்கு போன் செய்து இப்படி ஒருவர் இருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று கேட்பார்கள்.

நானும் அவர்களுக்காக பிராத்தனை எல்லாம் செய்து இருக்கிறேன். அவர்களும் பிழைத்து இருக்கிறார்கள். பல பேர்களை நான் காப்பாற்றி இருக்கிறேன்.தற்பொழுது அதனை செய்வதில்லை. அதற்கு காரணம் நம்ம ஆட்கள் அதன் பிறகு தொடர்புக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் நன்றாக இருக்கிறார் என்று சொல்லுவதில்லை.

கொஞ்ச நாள் பார்த்தேன் அதன் பிறகு அதனை செய்வதில்லை என்று நிறுத்திவிட்டேன். தேவையில்லாத கர்மாவை நாம் ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் அதற்கு நமக்கு மரியாதை இல்லை என்று நிறுத்தினேன்.

நேற்று கூட ஒரு நண்பர் அழைத்து சொன்னார். நான் அதனை செய்வதில்லை நீங்கள் சென்று செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அது என்ன பரிகாரம் என்றால் உக்கிரமாக இருக்கும் காளி தெய்வத்தை வணங்குவது. அதோடு சேர்ந்து எமன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று வணங்கிவருவது மூலம் மரணத்தை தள்ளி போடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 29, 2016

பரிகாரம்


ணக்கம்!
          நமது பதிவை படித்துவிட்டு சார் நீங்கள் ஒவ்வொரு பதிவிற்க்கு பரிகாரத்தை சொல்லிவிடுங்கள் என்று நமது நண்பர்கள் கேட்பார்கள். முடிந்தவரை நான் சொல்லிக்கொண்டு தான் வருகிறேன். இதில் ஒரு சூட்சமமும் இருக்கின்றது.

எங்களை போல் தொழில்முறையில் சோதிடம் பார்ப்பவர்கள் உள்ளுக்குள் பல வேலைகளை செய்வது உண்டு. என்னை தேடி வந்து அல்லது எங்களை தொடர்புக்கொண்டு உங்களின் ஜாதகத்தை காண்பிக்கும்பொழுது மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

நீங்களாகவே செய்யும் பரிகாரம் என்பது அந்தளவுக்கு பலனை கொடுப்பதில்லை என்பது மட்டுமே உண்மை என்று சொல்லலாம். உலகத்தில் எத்தனையே தொழில் இருக்கின்றது அதனை எல்லாம் விட்டுவிட்டு இந்த தொழிலை செய்ய ஆண்டவன் விட்டு இருக்கிறான் என்றால் சும்மாவா

நான் பல பேருக்கு பரிகாரத்தை அவர்களே செய்ய வேண்டும் என்று விட்டால் கூட பரிகாரம் செய்வதற்க்கு முன்பு என்னை கூப்பிட்டு சொல்லிவிட்டு செய்யவேண்டும் என்று சொல்லுவது உண்டு. 

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு என்னை சந்திக்கும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒன்று நல்லது நடக்கும் அது என்ன மாயம் என்றால் அம்மன் வேலை செய்துவிடும்.தொழில்முறை சோதிடம் என்கிறபொழுது இதனை எல்லாம் செய்தால் தான் எங்களால் தொழில் செய்யமுடியும்.

பதிவில் முடிந்தளவு பரிகாரத்தை சொல்லுகிறேன் அதனை செய்துபாருங்கள் அது தவறு இல்லை ஆனாலும் என்னை சந்தித்து உங்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் இணைந்து இருந்தால் என்ன பலன் என்பதைப்பற்றி பொதுவாக பார்த்து வருகிறோம். சந்திரனை வைத்தே பல பலன்களை சொல்லிவிடலாம். ராகு சந்திரன் இணைந்து இருந்தால் பொதுவாக திருமண வாழ்வு என்பது அவர்களின் சாதியில் இருந்து வேறு சாதியில் உள்ளவரை மணக்ககூடிய வாய்ப்பை உருவாக்கும். ஒரு சிலருக்கு மதம் விட்டு மதம் மாறிக்கூட திருமணம் செய்ய வைக்கும்.

எனக்கு பழக்கப்பட்ட ஒரு சாமியார் இருந்தார். அவர் சிறந்த ஞானியும் கூட அவர் என்னிடம் சொன்னார். ராகு என்ற கிரகத்தால் பல பேர்கள் தன்னுடைய மதம் அல்லது சாதியை விட்டு திருமணம் செய்கிறார்கள். இது ஒரு தவறான செயல் என்று சொன்னார்.

வெளிநாட்டுக்காரன் இந்த விசயத்தில் சரியாக இருக்கிறான் ஆனால் நம்ம ஆட்கள் இதில் சரியாக இல்லை என்றும் சொன்னார். ஒரு மதம் விட்டு அடுத்த மதத்திற்க்கு சென்று திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கையிலும் பல பிரச்சினை இருக்கும். அதோடு அவர்கள் மோட்சம் என்ற பாதையில் செல்லமுடியாது என்றும் சொன்னார்.

நாகரீக உலகம் என்று சொல்லிக்கொண்டு நாம் மாற்றுபாதையில் செல்கிறோம். திருமணம் என்பது உங்களின் பெற்றோர்கள் பார்த்து செய்தால் நல்லது என்பது ஒரு ஆன்மீக கருத்து. இதற்கு மாற்றுகருத்துகூட வரலாம் ஆனால் சொல்லவேண்டியது நமது கடமை

ராகு சந்திரன் உங்களின் வாரிசுகளுக்கு இணைந்து இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். இதற்கு மாற்று ஏற்பாடாக என்ன செய்லாம் என்றால் திருமணத்தின் பொழுது பிற மதத்தில் உள்ளவரை கூப்பிட்டு தாலி எடுத்துக்கொடுக்க வைக்கலாம்.

ராகு சந்திரன் இணைந்து இருந்தால் என்னிடம் சோதிடம் பார்க்க வருபவர்களுக்கு முன் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ளுங்கள் என்பேன். அவர்களும் சரி என்று பார்த்துக்கொண்டு அவர்களின் குலத்திற்க்குள் திருமணத்தை முடிவு செய்துவிட்டு என்னிடம் சொல்லுவார்கள். திருமணத்தின் பொழுது பிறமதத்தில் உள்ளவரை கூப்பிட்டு தாலி எடுத்துக்கொடுக்க சொல்லசொல்லுவேன். அதுபோல் செய்வார்கள். தம்பதிக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 28, 2016

ஆன்மீகம்


ணக்கம்!
          ஆன்மீகவாதியாக மாறினால் எல்லாம் நடந்துவிடும் என்றால் அது தான் தவறான ஒரு கருத்தாக இருக்கும். இன்றைக்கு முக்கால்வாசி பேர் ஆன்மீகவாதியாக மாறிவிட்டார்கள். இவர்கள் எல்லாருக்கும் நல்லது நடந்துவிட்டதா என்ன ?

ஆன்மீகவாதியாக தன்னை மாற்றிவிட்டால் நமக்கு எல்லாம் நடந்துவிடாது. நம்மை ஆன்மீகத்தில் வழி நடத்தும் ஆள் எப்படிப்பட்டவர் என்பதை பொறுத்து தான் நாம் ஆன்மீகத்தில் சாதிப்பதும் நடக்கும்.

இன்றைக்கு பல பேர் ஆண்டியாக சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு வேண்டுமானால் அது நன்றாக இருக்கலாம் அவர்களின் குடும்பத்தை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது.

எல்லாம் ஆன்மீகமும் உங்களை வழிநடத்தி வாழ்வில் வெற்றி காணவைக்காது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். உங்களை இயக்கும் ஆள் எப்படிப்பட்டவர் என்பதை வைத்து தான் உங்களின் வாழ்க்கை பயணம் இருக்கின்றது.

உங்களை வழிநடத்தும் ஆள் கெட்டிகாரனாக இருந்தால் நீங்கள் எளிதில் அனைத்தையும் அடைந்துவிடமுடியும். அவர் கெட்டிகாரனாக இல்லை என்றால் உங்களையும் கெடுத்து உங்களின் குடும்பத்தையும் கெடுத்துவிடுவார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பலம்


வணக்கம்!
         ஒவ்வொருவருக்கும் குரு பலன் நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுது தான் எடுத்த காரியம் தடை இன்றி நடைபெறும். ஒருவருக்கு குரு தசா நடந்தால் அவர் எப்படிப்பட்ட தொழிலில் இருந்தாலும் அவர் அந்த தொழிலை போதிப்பவர்களாக இருப்பார்கள். வாத்தியார் வேலை பார்ப்பவராக மாறுவார்.

உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருந்தால் நீங்கள் அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள். பலருக்கு குரு கிரகம் சரியாக இருப்பதில்லை. எந்த வேலையை எடுத்தாலும் தடையாகவே அவர்களுக்கு இருக்கும்.

இன்றைய காலத்தில் குரு கிரகத்திற்க்கு சாய்பாபா வழிபாட்டை மேற்க்கொள்கிறார்கள். அதனை எல்லாம் செய்யவேண்டியதில்லை. குரு கிரகத்திற்க்கு குரு கிரகத்திற்க்கு தான் நீங்கள் வழிபாட்டை மேற்க்கொள்ளவேண்டும். குரு கிரகத்தை சாந்தப்படுத்த கூடிய வேலையில் நீங்கள் இறங்கி அதனை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

பாக்கியஸ்தானத்தை பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். பாக்கியஸ்தானம் என்பது குரு கிரகத்தின் காரத்துவத்தை உடையவது. பாக்கியஸ்தானம் சொல்லும் விசயத்தில் நீங்கள் கவனம் செலுத்தும்பொழுது உங்களின் பாக்கியஸ்தானம் மற்றும் குரு கிரகம் வலுவடைந்துவிடும்.

குரு கிரகத்திற்க்கு ஆலங்குடி சென்று வழிபாடு மேற்க்கொள்ளலாம். அனுபவத்தில் ஆலங்குடி கோவில் நல்ல பலனை தருகிறது. உங்களுக்கு குரு தசா நடந்தாலும் குரு கிரகம் பாதிக்கப்பட்டாலும் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 27, 2016

கிரக நீசம்


வணக்கம்!
          தொடர்ந்து நமது நண்பர்கள் என்ன சார் வெளியூர் பயணம் இல்லையே என்று கேட்டனர். நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட என்ன சார் வெளியூர் பயணம் இல்லை என்று கேட்டனர். சொந்தவேலை காரணமாக ஊரில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டவிட்டது. விரைவில் இதில் இருந்து விடுப்பட்டு வெளியூர் பயணம் இருக்கும். அவசரம் என்று சொல்லுபவர்களுக்கு சொந்த ஊருக்கு வரவழைத்து பூஜை செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

நமது நண்பர்களில் ஒரு சிலருக்கு அதிகப்படியான நீசம் பெற்று கிரகங்கள் அமைந்து விடுவது உண்டு. ஒரு கிரகம் நீசம் பெற்றால் அந்த கிரகத்தின் இருந்து வரும் பலன் குறைந்துவிடும். உதாரணத்திற்க்கு செவ்வாய் நீசம் பெறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய் காரத்துவம் உள்ள விசயங்கள் கிடைக்காமல் போய்விடுவது உண்டு.

தற்பொழுது தான் நாம் சோதிடம் படித்துவிட்டோம் அல்லவா அதனால் எதையாவது செய்து அதில் இருந்து விடுபட்டுவிடுவோம் அல்லவா. அந்த வழியில் முயற்சி செய்து பெறுங்கள். அதோடு நீசம் பெற்ற கிரகத்தின் காரத்துவம் என்ன என்று பார்க்க தெரிந்துக்கொண்டு அது நமக்கு கிடைத்து இருக்கின்றதா என்றும் பார்க்கவேண்டும்.

ஒரு சிலருக்கு நீசம் பெற்ற கிரகம் வக்கிரமாக இருந்தால் கிடைப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. வக்கிரம் பெற்று நீசம் பெற்ற கிரகத்தின் பலன் கிடைக்கவில்லை என்றால் வக்கிரத்திற்க்கு என்று உள்ள கோவில்களுக்கு சென்று வணங்கினால் நீசம் பெற்று வக்கிரம் அடைந்த கிரகத்தின் பலன் கிடைக்கும்.

நீசம் தான் பெற்றுவிட்டது அதனால் நமக்கு பிரச்சினை இல்லை என்று இருக்காமல் நமக்கு என்ன தேவையோ அதனை குறிக்காேளாக பெற்று நீசம் உள்ள கிரகத்தின் தன்மையும் பெறவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாநாதன்


வணக்கம்!
          எந்த ஒரு சோதிடர்களிடமும் நீங்கள் சென்று உங்களின் ஜாதகத்தை காண்பித்தால் ஏதாவது பாட்டு பாடி சொல்லிவிட்டு கோச்சாரபலனை சொல்லிவிட்டு யாரிடமும் உங்களின் ஜாதகத்தை காட்டாதீர்கள் என்று சொல்லிவிடுவார்கள். பெரும்பாலான சோதிடர்கள் இதனை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

தசாநாதனைப்பற்றி நாம் கேட்டால் அதனைப்பற்றி அதிகம் சொல்லுவதில்லை. அதற்கு காரணம் தசாநாதனைப்பற்றி அறிவு குறைவு. உங்களின் சோதிடர்களிடம் தசாநாதன் எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள். தசாநாதனுக்கு எப்படி பரிகாரம் செய்யவேண்டும் எனப்தைப்பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

தசாநாதனுக்கு பரிகாரம் செய்யும்பொழுது தசாநாதனை நன்றாக கவனித்து அதற்கு பரிகாரம் செய்யவேண்டும். தசாநாதன் ஒரு சிலருக்கு சிக்கலில் சென்று அமர்ந்து இருப்பார். அதற்கு பரிகாரம் செய்பவர்களிடம் சென்று தான் பரிகாரம் செய்யவேண்டும்.

ஒரு சிலருக்கு தசாநாதன் தனியாக பிரச்சினை இல்லாமல் நல்ல வீட்டில் அமர்ந்து இருப்பார்கள். அப்படிப்பட்ட தசாநாதனுக்கு சம்பந்தப்பட்ட ஜாதகரே பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

உங்களின் ஜாதகம் அதிகபடியாக பாதிக்கப்டும்பொழுது நல்ல பரிகாரம் செய்பவர்களிடம் சென்று பரிகாரம் செய்யவேண்டும். ஜாதகம் நன்றாக இருந்தால் கோவில் வழிபாட்டிலேயே சரிசெய்துக்கொள்ளமுடியும். 
உங்களின் ஜாதகத்தைப்பார்த்து தான் அனைத்தையும் தெரிந்துக்கொள்ளமுடியும்.

ஒரு நாளைக்கு மூன்று பதிவாவது தரவேண்டும் என்பது எண்ணம் இரண்டு பதிவு தான் தரமுடிகிறது. கடுமையாக மின்தடை ஏற்படுகிறது. பல மணி நேரம் நான் இருக்கும் பகுதியில் மின்சாரம் வருவதில்லை. அதனால் குறைவாக பதிவு தருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 26, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகுவோடு சந்திரன் இணையும்பொழுது தாய்க்கு கண்டத்தை உண்டுபண்ணும். ராகுவோடு இணையும் சந்திரன் கெட்டுவிடும். சந்திரன் மனதுக்காரகன் மட்டுமல்ல தாயுக்கும் காரணம் வகிக்கிறார் என்பதால் தாயுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

ஒருவருக்கு தாய் என்பவள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை குறிக்கும் விதமாக சந்திரனை கொண்டு தாயின் நிலையை கணக்கிட்டார்கள். நமது சோதிடத்தில் சந்திரன் என்ற கிரகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரகம்.

இன்றைக்கு ஒரு சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் அதற்கு ஒவ்வொரு தாயும் நல்லதை சொல்லி தன் பிள்ளையை வளர்க்க வேண்டும். தாய் சரியில்லை என்றால் பிள்ளை எப்படி நன்றாக வளரும்.

ஒருவருக்கு சந்திரனோடு ராகு இணைந்து இருந்தால் பிறக்கும்பொழுதே தற்பொழுது ஜாதகத்தை கணித்துவிடுவது நல்லது. அப்படி இணைந்து இருந்தால் உடனே ராகுவுக்கும் சந்திரனுக்கும் பரிகாரம் செய்துவிடுங்கள். 

மறைவு இடத்திற்க்கு சென்று சந்திரன் ராகுவோடு இணைந்துவிட்டால் தாயின் உயிர்க்கு கூட கண்டம் ஏற்படலாம். சந்திரனோடு இணையும் ராகு அதன் வேலையை காட்டிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாவம் நீங்கும் காலம்


ணக்கம்!
          நேற்று ஒரு நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு சில விசயங்களை பதிவில் சொல்லவேண்டும் என்று தோன்றியது. இந்த பதிவை படிக்கும் நண்பர்கள் அனைவரும் அந்தளவு பெரிய பாவம் எல்லாம் செய்துவிடவில்லை. பின்பு ஏன் கஷ்டம் வருகின்றது என்று பலரின் கேள்வியாக இருக்கும்.

எதற்க்கும் கர்மாவை நாம் கைகாட்டுவோம். நமக்கு வரும் பிரச்சினை எல்லாம் நம்மால் மட்டும் வருவதில்லை நமது பெற்றோர்கள் அதற்கு முன் உள்ளவர்களாலும் வருகின்றது. நம் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் என்று கூட நமக்கு தெரியவில்லை. அதற்கு முன் உள்ளவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பது கண்டுபிடிக்கமுடியாத ஒன்று.

நம்ம என்ன பெரிய பாவம் செய்துவிடபோகின்றோம். நாம் தற்பொழுது முன்னோர்கள் செய்த பாவத்திற்க்கு தீர்வு காண்கிறோம். அதனால் தான் நான் பல பேர்களிடம் சொல்லுவது கொஞ்சம் பொறுமையாக இருங்கள் படிப்படியாக அனைத்தையும் நடத்துவோம் என்று சொல்லுவது உண்டு.

நாம் மட்டும் ஒரு பாவத்தை செய்து இருந்தால் இதனை எளிதில் மாற்றிவிடலாம். நாம் செய்கின்ற பரிகாரம் உடனே வேலை செய்துவிடும். நம்முடைய முன்னோர்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டி இருப்பதால் தான் கொஞ்சம் காலம் எடுக்கிறது.

நம்மிடம் வந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் தற்பொழுது தான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது கடும்பிரச்சினையில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் தற்பொழுது ஒரளவு நல்ல வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள். படிப்படியான ஒரு ஆன்மீகத்தை சார்ந்த ஒரு விசயத்தை செய்துவருவதால் இது சாத்தியப்பட்டு இருக்கின்றது.

ஒன்றுமே இல்லாத குடும்பங்கள் எல்லாம் தற்பொழுது ஒரு நல்ல குடும்பவாழ்க்கை அமைந்து இருக்கின்றது என்றால் நம் பாவத்தையும் நம் பெற்றோர்களின் பாவத்தையும் நமது முன்னோர்களின் பாவத்தையும் தொலைத்த காரணத்தால் முடிந்தது. தொடர்ந்து ஆன்மீகத்தில் இருந்து வரும்பொழுது மட்டுமே அனைத்து பாவமும் போகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 25, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் இணைந்து பலனை கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ராகு சந்திரன் நமது ஜாதகத்தில் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சந்திரனோடு ராகு சேர்ந்தால் ஒரு தீயகிரகம் சேரும்பொழுது கண்டிப்பாக அது நல்ல பலனை கொடுத்துவிடாது.

மனக்காரகன் சந்திரன் என்கிறோம். மனக்காரகனோடு ராகு சேரும்பொழுது மனது எப்படி இருக்கும். பைத்தியம் பிடிக்காத குறை என்று கூட சொல்லிவிடலாம். ஒரு சிலருக்கு பைத்தியம் பிடித்துவிடுவதும் உண்டு.

நாம் நல்ல சிந்தனையோடு செயல்படும்பொழுது மட்டுமே நாம் எடுக்கிற காரியத்தை செய்யமுடியும். பல சிந்தனையில் இருந்தால் என்ன நடக்கும் காரியம் செய்யமுடியாது. வாழ்வில் வெற்றி பெறமுடியாது.

சந்திரனோடு ராகு சேரும்பொழுது மனம் தடுமாற்றத்தை உண்டுபண்ணும். மனம் தடுமாறினால் ஒரு வேலையும் செய்யமுடியாது. பாம்பு கிரகம் மனதைப்போட்டு உருட்டி எடுத்துவிடும்.

ராகு சந்திரன் உங்களுக்கு இணைந்து இருந்தால் முதலில் நீங்கள் மனதை எப்படி அமைதியாக வைத்திருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். அதன் பிறகு நீங்கள் வேலையில் இறங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாநாதன்


ணக்கம்!
         தசாநாதனைபற்றி சொன்னவுடன் பல போன் அழைப்புகள் வருகின்றன. பல நண்பர்கள் அவர் அவர்களின் சோதிடர்களை அணுகி இதனைப்பற்றி கேட்டுள்ளனர். முக்கால்வாசி சோதிடர்களுக்கு கோச்சாரபலன் மட்டுமே தெரியும். தசாபலனைப்பற்றி அந்தளவுக்கு சொல்லமாட்டார்கள்.

கோச்சாரப்பலன் சொன்னால் அது உங்களுக்கு நடைபெறாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உற்றுநோக்கினால் உங்களே நன்றாக தெரியும். ஒருவர் குறைந்தது பத்து வருடமாவது நன்றாக வாழ்வார்கள். ஒருவர் குறைந்தது பத்து வருடமாவது கெட்டு போய்விடுவார்கள்.

இதனை எல்லாம் நாம் பார்த்தால் அதில் நமக்கு தெரிவது ஒவ்வொருவருக்கும் ஒரு தசா நல்லது செய்து அவர்களை வாழவைக்கிறது. ஒரு சிலருக்கு ஒரு தசா வந்து அடித்து கீழே தள்ளிவிடுகிறது.

காேச்சாரப்பலனை அவ்வப்பொழுது மாறிக்கொண்டே வரும் ஆனால் ஒரு மாற்றமும் மனிதனுக்கு வராது. ஒரு தசாநாதன் மாறினால் மாற்றத்தை கொண்டு வந்துவிடும்.

நமக்கு வருகின்ற தசாநாதன் நல்லது செய்தால் பரவாயில்லை தீயது  செய்தால் அங்கு தான் பிரச்சினை வருகின்றது. குறைந்தது ஆறு வருடங்கள் ஒரு தசா கெடுதலை தந்தாலே வாழ்வில் மிகப்பெரிய அடி ஏற்பட்டுவிடும்.

வாழ்வில் சரிவு ஏற்படாமல் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் கூட கீழே சென்றுவிடாமல் தக்க வைத்துக்கொள்ள தான் உங்களின் ஜாதகத்தை எடுத்து எப்படி தசா நடக்கிறது என்பதை பார்க்க சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 24, 2016

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு சுக்கிரன் கிரகம் நன்றாக அமைந்தால் அந்த கிரகத்தை வைத்தே பல நன்மைகளை ஜாதகருக்கு கிடைத்துவிடும். குரு கிரகத்திற்க்கு இணையான ஒரு கிரகம் என்றால் சுக்கிரனை சொல்லலாம்.

சுக்கிரன் ஒருவருக்கு நல்லதை செய்தால் அவர் மிகுந்த செல்வாக்கோடு இருப்பார். சுக்கிர கிரகம் பாதிப்படைந்த ஜாதகர்கள் தான் அதிகம் இருப்பார்கள். இதற்கு காரணம் சுக்கிரன் நன்றாக இருந்தால் அனைவரும் நன்றாக இருப்பார்கள். இவர் முக்கால்வாசிபேருக்கு நன்றாக அமைவதில்லை.

ஒவ்வொருவரின் ஜாதகத்தை எடுத்து சுக்கிரன் நன்றாக இருக்கின்றதா என்று பாருங்கள். சுக்கிரன் நன்றாக இருந்தால் நீங்கள் கவலைப்படதேவையில்லை எப்படியும் உங்களை நல்லநிலைமைக்கு கொண்டு சென்றுவிடுவார்.

சுக்கிரன் நன்றாக இல்லை என்றால் நீங்கள் சுக்கிரனுக்கு உரிய பரிகாரத்தை மேற்க்கொள்ளுங்கள். சுக்கிரன் வலுவடைந்து உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். ஜாதகத்தை பார்த்து தான் இதற்கு பரிகாரம் செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 23, 2016

இராகு சூரியன் கூட்டணி பலன்


வணக்கம்!
          இராகு சூரியன் கூட்டணியாக அமைந்தால் அந்த நபர் ஒரு அரசு அலுவலகராக இருந்தால் அந்த நபர் நிறைய சம்பாதிப்பார். அதாவது ராகுவும் சூரியனும் நன்றாக இணைந்து இருந்தால் சம்பளத்தை விட லஞ்சம் அதிகம் வாங்குபவராக இருப்பார்.

இன்றைய காலத்தில் சம்பளத்தை விட லஞ்சம் அதிகம் வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் நிறைய சம்பாதிப்பது போல் இருக்கும் ஆனால் அவர்களின் குடும்பத்தில் பெரிய ஓட்டை இருக்கும். ஓட்டை என்று சொல்லுவது ஏதோ ஒரு பிரச்சினையை அதிகம் சந்திப்பவராக இருப்பார்கள்.

நான் நிறைய அரசு அதிகாரிகளை பார்த்து இருக்கிறேன். லஞ்சம் வாங்கும் நபர்களின் குடும்பம் பார்ப்பதற்க்கு நன்றாக இருப்பது போல் இருக்கிறது. கொஞ்ச நாளில் அதிக பிரச்சினையை சந்திக்கிறார்கள்.

இராகு சூரியன் நன்றாக அமைந்தால் மிகப்பெரிய அளவில் கொள்ளை அடிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் இதனை நல்லது என்று நினைக்கலாம் கொஞ்ச நாளில் இவர்கள் மாட்டுவதும் உண்டு.

இராகு சூரியன் கூட்டணி நன்றாக அமைந்தால் நல்லது நடக்கும் கொஞ்சம் பாதிப்படைந்தால் ஏதாவது ஒரு லஞ்சத்தில் மாட்டி சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். அவர் அவர்களின் சொந்த ஜாதகத்தை பார்த்து அதனை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி பரிகாரம்


வணக்கம்!
          ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிக்கிரகம் தனக்கு பிடித்தமான நல்லெண்ணெய் குளியலை குளிப்பவர்களுக்கு அதிக ஆயுளை தருகிறார்.

நல்லெண்ணெய் குளியலைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருந்தாலும் மறுமுறையும் இந்த பதிவை தரவேண்டிய ஒரு சில நிகழ்வுகள் நடந்தன அதனால் மறுமுறை இதனை தருகிறேன்.

எனக்கு தெரிந்த பல பெரியவர்கள் இன்றும் ஆராேக்கியத்தோடு இருப்பதற்க்கு அவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியலை குளிப்பதால் தான் அப்படி இருக்கின்றார்கள் என்பது தெரிந்தது.

பல பேருக்கு சனிக்கிரகம் தன்னுடைய தீமை பலனை தரும்பொழுது அவர்கள் நல்லெண்ணெய் குளியலை குளிக்க சொல்லுவேன். அதனோடு வாரந்தோறும் இந்த நல்லெண்ணெய் குளியலை குளித்தால் அவர்கள் வாழ்நாள் குறைவில்லாமல் இருப்பார்கள் என்பதையும் சொல்லுவது உண்டு.

உங்களுக்கு சனிக்கிரகம் பிரச்சினை தருகிறது என்றால் அருகில் உள்ள நவகிரகத்திற்க்கு சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் நல்லது. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வதற்க்கு முன்பு நீங்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 22, 2016

செலவு


வணக்கம்!
          சேமிக்க வேண்டும் என்பது ஒரு நல்ல செயல் தான் ஆனால் எந்த ஒரு பைசாவும் தர்மம் கூட செய்யாமல் சேமிப்பது என்பது தான் தவறான ஒன்று.

உங்களின் ஜாதகத்தில் மறைவு இடங்கள் என்று காட்டும் இடங்கள் அதிகம் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் என்றால் அதாவது தீயபலன்களை கொடுக்காமல் இருக்கவேண்டும் என்றால் கொஞ்சம் செலவும் செய்து தான் ஆகவேண்டும்.

சம்பாதிப்பது அனைத்தையும் செலவு செய்ய சொல்லவில்லை. சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் எடுத்து தர்ம காரியத்திற்க்கு என்று செலவு செய்யவேண்டும். அப்படி செலவு செய்தால் மறைவு ஸ்தானம் கெடுதல் பலனை குறைவாக கொடுக்கும்.

ஒரு சிலர் ஒரே கஞ்சதனமாக இருப்பார்கள். அப்படி இருக்ககூடாது இயற்கையாக பார்த்து ஏதாவது ஒரு வழியில் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும்.நம்ம ஆட்கள் நிறைய செலவு செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் ஒரு சிலர் மிகவும் கஞ்சனதனமாக இருப்பவர்களுக்கு இந்த பதிவை எழுதினேன்.

உலகத்திலேயே அதிக செலவு கடவுளுக்கு என்று செய்வது இந்துமதமாக தான் இருக்கும். அதாவது இந்த மதத்தில் உள்ளவர்களாக தான் இருக்கும். இந்துமக்கள் ஒவ்வொரு பண்டிகையும் எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் சும்மா போகவே மாட்டார்கள். தன்னால் முடிந்தளவு வாங்கிக்கொண்டு தான் செல்வார்கள். தான் எப்படி இருந்தாலும் தன்னுடைய கடவுளுக்கு செய்யவேண்டும் நினைப்பவன் தான் இந்து.

பிறமதத்தில் இப்படி இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். ஒரு ஆள் கோவிலுக்கு செல்வார்களாக?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 21, 2016

சமையல் அறை


வணக்கம்!
          ஒரு வீட்டிற்க்கு அடுப்பறை என்று சொல்லக்கூடிய சமையல்அறை முக்கியமானது ஏன் என்றால் இது சரியாக இருந்தால் பல விசயங்கள் நல்லதாக நடக்க ஆரம்பித்துவிடும். சமையலறை பொறுத்தவரை வாஸ்துவில் அக்னி மூலையை சொல்லுகின்றனர்.

சமையல்அறை எந்த முலையில் அமையவேண்டும் என்பதை சொல்ல இந்த பதிவை தரவில்லை. சமையல் அறை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப்பற்றி சொல்லுவதற்க்கு இதனை தருகிறேன்.

சமையல் அறை எப்படி இருக்கின்றது என்பதை நான் ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும்பொழுது கவனிப்பது உண்டு. சமையல் அறை எந்த திசையில் இருந்தாலும் அதனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் மிகவும் சுத்தமாக துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் திலகம் இடவேண்டும்.

ஒரு திருமணம் அல்லது ஏதோ விஷேசத்திற்க்கு முதலில் சமைக்கும்பொழுது பார்த்தால் அதற்கு என்று ஒரு சின்ன பூஜை செய்துவிட்டு அதன் பிறகு சமைக்க ஆரம்பிப்பார்கள். எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க இந்த பூஜை உண்டு.

உங்களின் வீட்டில் சமையல் அறையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று சமையல் செய்ய தொடங்கும்பொழுது மஞ்சள் குங்குமம் திலகம் இட்டு சாம்பிராணி போட்டு தீபம் காட்டி அதன் பிறகு சமைக்க தொடங்குங்கள். உங்களின் குடும்பம் சிறந்து விளங்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாநாதன்


ணக்கம்!
          ஒரளவு சோதிடம் தெரிந்தவர்களுக்கு கூட தசாநாதன் முக்கியம் என்று சொல்லுவார்கள். தெரியாதவர்கள் தான் கோச்சாரப்பலனை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு இருப்பார்கள்.

கோச்சாரப்பலன் ஒரளவு தான் பலனை கொடுக்கும். தசாநாதன் நன்றாக பலனை கொடுத்தால் கோச்சாரப்பலன் வழியாக வரும் தீமை விலகிவிடும். ஒரு சிலருக்கு தீமை தரக்கூடிய கோச்சாரப்பலன் நடைபெறும் காலத்தில் கூட நன்மை தசாநாதன் நன்றாக வேலை செய்யும்பொழுது அந்த தீமை குறைந்துவிடுகிறது.

தசாநாதன் நான் தான் தலைவன் என்பது போல தன் தசாவை நடத்திக்கொண்டு இருக்கும். ஜாதகருக்கு நன்மையாக வாரி வழங்கிக்கொண்டு இருக்கும்.

ஒரு சிலருக்கு தசாநாதன் நன்றாக இருக்கும்பொழுது அதற்குள் வரும் புத்திநாதன் கெடுதல் தந்தால் கூட தசாநாதன் நன்மை கொடுத்துக்கொண்டு இருக்கும்.

தசாநாதன் நன்றாக வேலை செய்தால் அவர்கள் சோதிடத்தை அந்தளவுக்கு நம்புவது கிடையாது. அதற்கு காரணம் அவர்கள் சொகுசான வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருப்பதால் இதற்கு எல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 20, 2016

இலவச சேவை


ணக்கம்!
          நிறைய நண்பர்கள் தன்னுடைய முகநூலில் அல்லது மெயிலில் தொடர்புக்கொண்டு அவர்களின் ஜாதகத்தையும் அவர்களை பற்றியும் நிறைய எழுதி என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர். ஆலோசனை கேட்பதில் தவறு இல்லை இவர்களின் ஆலோசனை கேட்பது இலவசமாக கேட்கிறார்கள்.

இலவச சேவையை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மறுபடியும் அதனை தொடர்வது என்பது நேரில் சந்திக்கும்பொழுது மட்டுமே நடக்க கூடியது. என்னிடம் பணம் இல்லை என்றால் அதனை தாராளமாக சொல்லிவிட்டு என்னை நேரில் சந்தித்து ஆலோசனை கேளுங்கள்.

இப்படிப்பட்ட காலத்தில் எல்லாம் நான் வாழ்ந்து இருக்கிறேன். ஒவ்வொருவரின் வலியும் எனக்கு நன்றாக புரிகிறது அதற்கு நீங்கள் மெயிலில் அல்லது போனில் கேட்ககூடாது நேரில் வந்து கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது இந்த ஊருக்கு வருகிறேன் என்று பதிவில் சொல்லிவிடுகிறேன். அந்த ஊரில் என்னை சந்திப்பதற்க்கு முன்பு இலவசமாக பார்க்கவேண்டும் என்று என்னை தொடர்புக்கொண்டு சொல்லுங்கள். அந்த ஊரில் கண்டிப்பாக நீங்கள் என்னை சந்தித்து ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 19, 2016

இராகு சூரியன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சூரியன் கூட்டணியைப்பற்றி பார்த்து வருகிறோம். இராகு மற்றும் சூரியன் கூட்டணியாக லக்கினத்தில் அமர்ந்தால் அவருக்கு உடல் சூடு இருந்தாலும் அவருடைய தந்தை வழியில் உள்ளவர்களால் அவர்களின் உடலில் காயப்பட்டு இருக்கும்.

இராகு சூரியன் லக்கினத்தில் அமரும்பொழுது அதிகபடியான முடி உதிர்தல் இருக்கும். ஒரு சிலருக்கு ஏறு நெற்றிப்போல் இருக்கும். உடலில் அடிக்கடி விஷ கடி இருக்கும். முடி உதிர்தலுக்கு ராகு மற்றும் சூரியனுக்கு இரண்டுக்கும் பரிகாரம் செய்யுங்கள்.

லக்கினத்தில் இருப்பதும் மற்றும் ஆத்மாகாரன் என்று அழைக்கப்படும் சூரியனோடு சேர்ந்து இருப்பதால் அடிக்கடி ஆத்மா பிரச்சினையில் மாட்டும். அதாவது ஏதாவது ஆன்மீக ரீதியில் பிரச்சினை இருக்கும். உங்களுக்கு நன்றாக புரியும் படி சொல்லவேண்டும் என்றால் ஆத்மாவில் ஏதாவது ஒன்று புகுந்து பிரச்சினையை எழுப்பும்.

நமது ஜாதககதம்ப பதிவை பள்ளி குழந்தைகளும் படிப்பதால் அதிகப்படியான ஆன்மீகத்தை சொல்லுவதில்லை. குழந்தைகள் பயப்படகூடாது என்பதால் அதனை எல்லாம் விட்டு பல காலம் ஆகிவிட்டது. 

லக்கினத்தில் அமரும் இந்த கூட்டணி அந்தளவுக்கு நன்மை பயப்பது கிடையாது. தந்தை மட்டும் கொஞ்சம் உதவி செய்பவராக இருக்கலாம். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து பலன் மாறுபடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அனுபவம்


ணக்கம்!
         நம்மை சந்திக்கும் நண்பர்கள் நடந்துக்கொள்ளும் விதத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இன்று தான் அதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது.

நம்மை சந்திக்கும் நண்பர்கள் பல பேர் ஏதோ பிரச்சினை இருந்தால் அவர்கள் என்னிடம் காட்டுவார்கள். மனதில் தேங்கும் கஷ்டத்தை கொட்டுவதற்க்கு ஒரு ஆள் வேண்டும் ஒவ்வொருவரும் கொட்டுகிறார்கள் இது பிரச்சினை இல்லை.

ஒரு சிலர் கோபத்தில் என்னிடமே சண்டை போடுகிறார்கள். அதாவது சார் நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன் அவனை நான் கொல்லாமல் விடபோவதில்லை. என்னிடம் வந்தால் அவனை நான் வெட்டி சாய்க்க போகிறேன் என்பார்கள்.

ஏதோ இவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சினையை சம்பந்தப்படுத்தி நண்பர்களும் ஆவேசம் அடைவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரச்சினை ஏற்படுவது இயல்பு அதனை அமைதியாக இருந்து தான் சமாளிக்கவேண்டுமே தவிர கோபத்தை காட்டகூடாது.

எந்த ஒரு நேரத்திலும் அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க பாருங்கள். நான் அவனை வெட்டுகிறேன் இவனை வெட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. நம் அமைதியை கெடுக்க பல கிரகங்கள் வேலை செய்து மாட்டிவிட்டுவிடும் அப்புறம் கஷ்டப்படுபவர்கள் நாமாக தான் இருப்போம்.

இன்றைய காலத்திலேயே இப்படி மக்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் காலத்தில் நம்ம மக்களை பார்த்து அவன் என்ன நினைத்து இருப்பான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 18, 2016

இராகு சூரியன் கூட்டணி பலன்


வணக்கம்!
          இராகு சூரியன் இணைந்தால் அதன் நல்ல பலனைப்பற்றி நேற்று பார்த்தோம். இன்று தீயபலன் என்ன என்று பார்க்கலாம். இராகு சூரியன் இரண்டும் சேரும்பொழுது தந்தை வழி உறவு நன்றாக இருக்காது.

சூரியன் தந்தை காரகனாக இருப்பதால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள் பிரச்சினை ஏற்படும். தந்தை வழியில் இன்று பகை இல்லாத குடும்பங்களே இல்லை என்று சொல்லலாம். இராகு சூரியன் இணையும்பொழுது பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்லவேண்டியது தான். தமிழ்நாட்டில் தீர்க்கமுடியாத பிரச்சினை பல தந்தை வழி உறவினர்களால் பல குடுங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இராகு சூரியன் இணையும்பொழுது உடலில் அதிகபடியான சூட்டை கிளப்பும். ஒரு சிலருக்கு உடலில் கட்டிகள் ஏற்படும்.வெயிலில் எல்லாேருக்கும் கட்டிகள் ஏற்பட்டாலும் இராகு சூரியன் இணையும்பொழுது கொஞ்சம் அதிகம் என்று சொல்லலாம்.

இன்றைய காலத்தில் புற்றுநோய் பத்து பேரில் எட்டு பேருக்கு இருக்கின்றது அதற்கு காரணம் இதன் கூட்டணி என்று சொல்லலாம். பெரும்பாலும் இது எட்டாவது வீட்டில் அல்லது ஆறாவது வீட்டில் இணையும்பொழுது இப்படி ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாழ்வை தீர்மானிக்கும் தசா


ணக்கம்!
          தசாநாதன் ஒவ்வொரு வாழ்க்கையும் தீர்மானிக்கிறது. மனிதனுக்கு வரும் தசாநாதனில் ஒரு தசா நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வவளத்தையும் பெற்றுவிடுவான்.

நல்ல தசாவும் நாம் நல்ல முறையில் இளைஞர்களாக இருந்த காலத்தில் வந்துவிட்டால் அவன் கொடுத்துவைத்தவனாக இருப்பான். இளமை காலத்தில் வரும்பொழுது அவனால் நன்றாக ஓடி உழைத்து அதிக பொருளை ஈட்டமுடியும்.

வயதான காலத்தில் நல்ல தசா வரும்பொழுது தேவையானவை கிடைக்கும் ஆனால் அந்த தேவைகள் அனைத்தும் பல தேவைகளுக்கு சென்றுவிடும். சுற்றி உள்ளவர்களுக்கு செய்யவேண்டிய இருப்பதால் அதனை பங்கிட்டுக்கொள்ள ஆட்கள் இருப்பார்கள்.

இப்பொழுது உடலில் பலம் இருக்கின்றது ஆனால் தசா ஒத்துழைக்கவில்லை என்று நினைப்பவர்கள் தசாநாதன் யார் என்று பாருங்கள். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்த்துவிட்டு அவருக்கு உரிய பரிகாரத்தை செய்ய பாருங்கள். பெரிய முன்னேற்றம் காணமுடியும்.

மிகச்சரியான ஒரு பரிகாரத்தை நாம் செய்துவிட்டால் ஒவ்வொரு தசாவும் நல்லமுறையில் நாம் பலன்கொள்வது போல இருக்கும். கெடுதல் தசாவாக இருந்தால் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ஒரளவு கொடுக்க வைத்துவிடலாம்.

காலம் சென்றுக்கொண்டே இருக்கும் நாம் நினைத்ததை அடையவேண்டும் என்றால் ஏதாவது ஒன்றை செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் இருப்பவர்கள் உங்களின் ஜாதகத்தை கொஞ்சம் எடுத்து பாருங்கள். பார்த்துவிட்டு என்னை வந்து சந்தியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதகத்தை பாருங்கள்


வணக்கம்!
          ஒவ்வொருவரும் வருடத்திற்க்கு ஒரு முறையாவது தங்களின் ஜாதகத்தை பார்த்துவிடுவது நல்லது. நமக்கு என்ன நடந்துவிடபோகின்றது என்று மேதாவி தனமாக இருந்துவிடாமல் ஜாதகத்தை கொஞ்சம் பார்த்துவிடுவது நல்லது.

பல நண்பர்கள் என்னிடம் அவர்களின் ஜாதகத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை கூப்பிட்டு நாம் பலனை சொல்லுவது தற்பொழுது குறைந்துவிட்டது அதற்கு காரணம் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. கடந்த காலத்தில் எல்லாம் எப்படியும் நானே கூப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தின் பலனை சொன்னேன் தற்பொழுது முடியவில்லை.

என்னிடம் மறுபடியும் சோதிடம் பார்க்கவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லவில்லை நீங்களாகவே கூட உங்களின் ஜாதகத்தை எடுத்து பலனை பார்த்துக்கொள்ளுங்கள்.

கிரகங்கள் ஒரு சில ஏமாற்றத்தை கொடுத்துவிடும் வந்தபிறகு நாம் ஜாதகத்தை தூக்கிக்கொண்டு பார்ப்பதை விட முன்கூட்டியே பார்த்துவிடுவது நல்லது. வரும்முன் காக்க நாம் நினைத்தாலும் கிரகங்கள் விடாது. 

ஜாதகம் எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்து உடனே ஜாதகத்தை பார்த்துவிடுங்கள். கிரகங்கள் எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றன தசா எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு ஏதாவது வழிபாடு செய்யவேண்டுமா என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

நீங்களே ஜாதகத்தை பார்ப்பது என்றால் சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு முதலில் பரிகாரம் செய்துவிட்டு தெய்வத்திடம் முறையிடுங்கள். கிரகத்தை சாந்தப்படுத்தாமல் தெய்வத்திடம் முறையிட்டு பலன் இல்லை. தமிழ்வருட பிறப்பு நடந்திருக்கிறது ஜாதகத்தை பார்க்கவேண்டும் அல்லவா. உடனே ஜாதகத்தை எடுத்து பார்க்க ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 17, 2016

ராகு சூரியன் கூட்டணி பலன்


ணக்கம்!
          ராகுவைப்பற்றி பார்த்தோம் இதில் கொஞ்சம் அதிகமாக ஒரு கிரகத்தை சம்பந்தப்படுத்தி பார்ப்போம். ராகு கிரகம் சூரியனோடு சேர்ந்தால் எப்படிப்பட்ட பலனை அது தரும் என்பதை பார்க்கலாம்.

ராகுவும் சூரியனும் சேர்ந்து இருப்பது அந்தளவுக்கு நன்மையளிப்பது கிடையாது. ஒரு சில ஜாதகத்தில் மட்டும் நன்மையளிக்கிறது. ராகு சூரியன் சேரும்பொழுது வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசு துறை சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு அமையும்.

இந்தியாவில் இருந்தால் அரசு துறையில் கணிணி சம்பந்தப்பட்ட இடத்தில் வேலை செய்வார்கள். ஒரு சிலருக்கு அரசியல் வாய்ப்பையும் இந்த கூட்டணி உருவாக்கிறது. ராகு சூரியன் சம்பந்தப்பட்டு இருப்பதால் சட்டத்துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும். ஒரு சிலர் காட்டு இலாக்கா சம்பந்தப்பட்ட துறையிலும் வேலை வாய்ப்பை உருவாக்கும். 

வேலை சொன்ன விசயத்தில் சம்பந்தப்பட்டு ஒருவர் இருப்பார். அதில் இருந்து லாபமோ அல்லது நஷ்டமோ ஏற்படுவது எல்லாம் அவர் அவர்களின் சுயஜாதகத்தை வைத்து பார்த்து சொல்லவேண்டும்.

முடிந்தவரை இந்த துறையில் இருந்து சம்பாதிக்கும் வாய்ப்பை அதிகம் பெறலாம். ஒரு சிலருக்கு அரசு துறை கிடைக்காமல் போனால் கூட அந்த துறை சம்பந்தப்பட்டு வருமானம் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தொழில் சோதிடன்


ணக்கம்!
          என்னை ஒருவர் சந்திக்க வந்திருந்தார் அவருக்கு வேலையில் பிரச்சினை என்று சொன்னார். வெளிநாட்டில் வேலையில் இருக்கிறேன் இந்த மாதத்தோடு என்னை வேலையில் இருந்து எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த வேலை எனக்கு கிடைக்குமா அல்லது போய்விடுமா என்று அவரின் ஜாதகத்தை காண்பித்து கேட்டார்.

அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு நீங்கள் ஒன்றை செய்யுங்கள். நேராக சென்று புதனுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிடுங்கள் என்றேன். அவர் சார் எனக்கு வேலை போய்விடாதே என்று மறுபடியும் கேட்டார். நான் சொன்னேன் புதனுக்கு அர்ச்சனை செய்துவிட்டால் போகாது என்றேன். அவரும் புதனுக்கு அர்ச்சனை செய்தார்.

அவரின் ஜாதகத்தில் அப்பொழுது கொஞ்சம் பிரச்சினை இருந்தது. புதனுக்கு அர்ச்சனை செய்தால் அவரின் ஜாதகத்திற்க்கு வலுசேர்க்கும் என்றேன். அவரும் செய்தார். நீங்கள் செய்யும் வேலைக்கு பிரச்சினை என்றவுடன் உடனே புதனுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிடாதீர்கள். அவரின் ஜாதகத்தில் அப்படி இருந்தது சொன்னேன்.

உங்களுக்கும் சோதிடத்தில் நல்ல அறிவு இருக்கும் எந்த கிரகம் பிரச்சினை செய்கிறது என்பதும் உங்களுக்கு தெரியும் ஆனால் நீங்கள் என்ன தான் பரிகாரம் செய்தாலும் அந்த பிரச்சினை தீராது. என்ன காரணம் என்றால் சோதிடத்தை தொழிலாக செய்பவன் சொல்லும் வார்த்தை அப்படியே நடக்கும். ஒரு சின்ன அர்ச்சனை செய்தே அடுத்தவனை காப்பாற்றும் உத்தி தெரிந்தவன் தொழில் சோதிடன். 

எப்படி இது எல்லாம் சரியாகுது என்று கேட்கலாம். நானும் என்ன என்னவோ தொழில் செய்து இருக்கிறேன் அதில் இல்லாத ஒரு தொழில் நேர்த்தி ஆன்மீகத்தில் எனக்கு இருக்கின்றது. அதற்கு காரணம் என்னை படைத்தவன் என் தலையில் எழுதி எழுத்து அது. ஒவ்வொருவரும் தொழிலாக சோதிடத்தை செய்பவர்களுக்கு இப்படி தான் எழுதியிருப்பான் இறைவன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தானம்


வணக்கம் !
          ஒவ்வொரு நாளும் நிறைய பதிவுகளை எழுதவேண்டும் என்று தான் நினைக்கிறோம் ஆனால் இருக்கும் வேலை பளுவில் அதனை செய்யமுடியவில்லை. முடிந்தவரை நிறைய பதிவுகளை நம் நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியும். நம்ம ஏரியாவில் வெயில் வாட்டி எடுக்கிறது என்பதை விட அக்னி பகவான் நேராக கீழே வந்துவிட்டார் என்பது போலதான் இருக்கின்றது.

நமக்கு வேலை என்பது கடும் வெயிலாக இருந்தாலும் சரி கடும் மழையாக இருந்தாலும் சரி அதனை செய்துவிடுவது உண்டு. இரவில் அமர்ந்து பதிவை எழுதிவிடுகிறேன். வெளியூர் அழைப்பு நிறைய இருக்கின்றது. அதனை எல்லாம் விரைவில் தொடங்குவோம்.

நம்ம ஆட்கள் அன்னதானம் எல்லாம் வெளியில் கடுமையாக செய்வார்கள் ஆனால் பெற்ற தாய் தகப்பனை வெளியில் அடித்துவிரட்டிவிட்டு இதனை எல்லாம் செய்வார்கள். இன்றைய காலத்தில் நிறைய விளம்பரம் செய்து அன்னதானம் எல்லாம் நடக்கிறது. உண்மையில் அன்னதானம் எல்லாம் செய்யவேண்டியதில்லை உங்களின் தாய் தகப்பனை நன்றாக வைத்திருந்தாலே போதும்.

நீங்கள் எதனை செய்தாலும் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உங்களால் பயன் இருக்கின்றதா என்பதை பாருங்கள். அவர்களுக்கு செய்துவிட்டு வெளியில் தற்பெருமை எல்லாம் அடித்துக்கொள்ளலாம். உங்களின் வம்சத்தில் உள்ளவர்களுக்கு உங்களால் உதவ முடிந்தால் அது தான் உண்மையான தானம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 16, 2016

சனி பலன்

ணக்கம்!
          சனிக்கிரகம் ஐந்தில் இருக்கும்பொழுது நிறைய பேருக்கு நான்  குழந்தை பாக்கியம் மிகவும் கஷ்டம் என்று சொல்லிருக்கிறேன் ஆனால் இது ஒரு சிலருக்கு தவறாக நடந்து இருக்கிறது. நான் சொன்னது குழந்தை பாக்கியம் கிடையாது என்று சொன்னேன் நடைமுறையில் குழந்தை பாக்கியம் இருக்கின்றது.

ஒரு சிலருக்கு மட்டும் குழந்தை பாக்கியம் கஷ்டமாக இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஆண் குழந்தை இருக்கின்றது. பெரும்பாலும் தீமையான கிரகங்கள் ஐந்தில் பலமாக இருந்தால் அது ஆண்குழந்தையை கொடுக்கிறது.

சனிக்கிரகம் தன்னுடைய வேலை எப்படி காட்டுகிறது என்றால் பூர்வபுண்ணியத்தை விட்டு வெளியூர்க்கு செல்லவைக்கிறது. பெரும்பாலும் தன்னுடைய சொந்த ஊரை விட்டு வெளியில் செல்லவைத்துவிடும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்க்கொண்டு அங்கு பணிபுரிந்துக்கொண்டு இருப்பார்கள். ஊரில் ஒரு நல்ல தொடர்பு என்பது இருக்காமல் இருக்கின்றது. 

இது எல்லாம் அனுபவத்தில் நடைபெற்றதை சொல்லுகிறேன். ஒரு சிலருக்கு பலன் மாறலாம். அவர் அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்து பார்த்தால் தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டி


ணக்கம்!
          ஒரு தசா நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது அந்த தசா நமக்கு நல்லது செய்கிறது என்றால் ஏதாவது ஒரு வழியில் நம்மை நோக்கி ஒரு அறிவுரை சொல்லுவதற்க்கு ஒரு ஆளாவது அனுப்பி வைக்கும்.

இன்றைய காலத்தில் ஒரு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கஷ்டப்படுவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். சரியான வழிகாட்டுதல் இருந்தால் எளிதில் அனைத்தையும் சாதித்துவிடலாம். வழி இல்லாமல் கஷ்டபடுபவர்கள் அதிகம்.

எனக்கு ராகு தசா நடைபெறும் காலத்தில் ஒரு நபர்கள் கூட சரியான ஒரு வழிகாட்டுதலை சொல்லவில்லை. நான் பல சோதிடர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் ஒரு நல்ல பரிகாரத்தை கூட சொல்லவில்லை. அவர்கள் சொல்லிருந்தால் ஒரளவு சமாளித்து இருந்து இருக்கலாம்.

இன்றைய காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் வழிகாட்டுதவற்க்கு எப்படியும் ஒரு சிலர் இருக்கின்றனர். இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில்நுட்பம் எப்படியும் நமக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. தகவல் தொழில்நுட்ப காலத்தில் கூட பல பேர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். 

கஷ்டப்படுபவர்களுக்கு தசா நல்ல அறிவுரை சொல்ல ஆளை அனுப்புவதில்லை. தசாநாதன் நன்றாக இருந்தால் ஒரளவு நல்ல ஆளை அனுப்பி சமாளிக்க வைத்துவிடுவார்.

நான் சொல்லுவது சோதிடத்திற்க்கு மட்டும் அல்ல பல வேலைகளுக்கும் அறிவுரை சொல்லுவதற்க்கு ஆள்கள் தேவை. உங்களின் தசாநாதன் எப்படி இருக்கின்றான் சரியான வழிகாட்டி இருக்கின்றரா என்பதை சுயசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி பலன்


ணக்கம்!
          தொழிலாளர்களை குறிக்கும் கிரகம் சனி. சனிக்கிரகம் நன்றாக இருந்தால் ஒருத்தருக்கு நல்ல தொழிலையும் அந்த தொழில் நன்றாக நடக்க உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களும் அமைவார்கள்.

தொழில் நடந்தால் தொழிலாளர்கள் ஒழுங்காக அமைவதில்லை இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சனிக்கிரகம் கொஞ்சம் வில்லங்க வேலையை செய்வதால் இப்படி அமைகிறது. 

ஒவ்வொருவரின் தந்தை ஏதோ ஒரு தொழில் செய்து அந்த தொழிலாளர்களுக்கு ஒழுங்கான சம்பளம் கொடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சனிக்கிரகம் நன்றாக அமைவதில்லை. நாம் ஒரு தொழில் செய்தால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுத்துவிடவேண்டும். அப்படி நாம் நடந்துக்கொள்ளும்பொழுது தான் சனிக்கிரகம் நமக்கு நல்லதை செய்யும்.

நான் ஒரு இடத்தில் பார்த்தேன். அங்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை தண்ணீரை அவர்களே வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது. ஒரு முறை நான் அவர்களிடமே சொன்னேன். இப்படி செய்யாதீர்கள் என்றேன். அந்த முதலாளி கேட்கவே இல்லை. தற்பொழுது அந்த கம்பெனி இல்லை.

எந்த ஒரு வேலையையும் செய்யும் தொழிலாளிக்கும் நாம் ஒழுங்காக சம்பளத்தை கொடுத்துவிடவேண்டும். அப்படி கொடுக்கும்பொழுது மட்டுமே நமது தொழிலையும் நமது சந்ததினர்க்கு சனி நல்ல நிலைமையிலும் அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 15, 2016

தசாவின் கெடுதல்


ணக்கம் !
          ஒருவருக்கு வினை என்பது ஆரம்பித்தவிட்டால் அதாவது நமக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டால் அந்த நேரத்தில் சும்மா இருப்பது நல்லது. எந்த வித காரியமும் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. கெட்ட நேரத்தில் ஏதாவது ஆரம்பிக்கும்பொழுது மேலும் மேலும் அதனால் சிக்கல் தான் வரும். நல்லது வராது.

பெரும்பாலும் ஒருவருக்கு நடக்கும் தசா அந்த நபருக்கு கெடுதலை தரஆரம்பித்துவிட்டால் அவரால் நிலைத்து நிற்கமுடியாது. எந்த ஒரு விசயத்திலும் தன்னுடைய கெட்ட வேலையை காட்டிவிடும்

.நிறைய ஆன்மீகவாதிகளை நான் சந்தித்து இருக்கிறேன். அதில் தன்னுடைய குடும்பம் அடிப்பட்டதால் அவர்கள் ஆன்மீகத்தை நோக்கி வந்து இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதாவது தன்னுடைய குடும்பம் கடுமையான வறுமை அல்லது நோயின் பிடியில் மாட்டிக்கொண்டு சிதைந்த காரணத்தால் வந்தேன் என்று சொல்லிருக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒரு தசா நடக்கும்பொழுது அந்த நபரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஒரே மாதிரி தசா நடக்கிறது என்பது காணமுடிகிறது. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்க்கு குறைந்தது மூன்று பேருக்காது ஒரே மாதிரி தசா நடக்கிறது.

மிகச்சரியான ஒரு ஆன்மீக வழிகாட்டி இப்படிப்பட்ட தசாவில் இருந்து காப்பாற்றுவார். கெடுதலான தசாவில் உள்ள அதிகப்படியான கெடுதலை குறைக்க வழிசெய்வார். உங்களுக்கு இப்படிப்பட்ட தசா நடந்தால் ஒரு நல்ல நபரை தொடர்புக்கொண்டு இந்த இன்னல்களை குறைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 14, 2016

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!


          அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இந்த ஆண்டு முழுவதும் நன்மை அதிகம் நடக்க அம்மனை பிராத்திக்கிறேன்.


உங்களின் ஜாதககதம்பம் இன்று ஏழாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஜாதககதம்பத்திற்க்கு ஆதரவு தரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவை தாருங்கள்.

ஆன்மீகத்திற்க்கு உயிர்கொடுத்த குருவின் பாதம் பணிந்து அம்மன் அருள் வேண்டி இந்த நேரத்தில் பிராத்திக்கிறேன். அனைவருக்கும் நல்லதை முடிந்தளவு செய்யவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். ஜாதககதம்பத்தில் சொல்லப்படும் கருத்துக்களை வாய்வழியாக அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். ஜாதககதம்பம் என்ற ஒன்று இருப்பதை உங்களின் தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 

நிறைய பதிவுகள் நிறைய கருத்துக்களை தரவேண்டும் என்று நினைக்கிறேன். நிறைய கருத்துக்கள் என்று வரும்பொழுது ஒரு சில கட்டுபாட்டோடு செய்யவேண்டியுள்ளது. பதிவு திருட்டு நடப்பதால் கருத்துக்களை சொல்லுவது கொஞ்சம் குறைவாக இருக்கின்றது. இதனை நீங்கள் புரிந்துக்கொண்டு என்னை சந்திக்கும்பொழுது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். கட்டண பதிவும் இருக்கின்றது உங்களால் முடிந்தால் அதில் இணைந்துக்கொள்ளலாம். 

இந்த வருடமும் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன் அதே நேரத்தில் அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இவர்களின் ஒத்துழைப்பால் பல வருடங்கள் தொடர்ந்து அம்மன் பூஜை நடந்து வருகின்றது. தொடர்ந்து நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை. ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறையை நன்றியை தெரிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 13, 2016

புதன் பலன்


வணக்கம்!
          புதன் கிரகம் ஒருவருக்கு வலுவாக இருந்தால் நல்ல அறிவு இருக்கும். நல்ல அறிவு என்றால் பிறர்க்கு வழிகாட்டும் ஒரு அறிவை பெற்று இருப்பார்கள். பெரும்பாலும் புதன்கிரகம் சோதிடர்களுக்கு நல்லதாகவே அமையும் புதன் கிரகத்தின் வலு நன்றாக இருக்கும்பொழுது சொல்லும் பலனும் நன்றாக அமையும்.

கணக்கு சம்பந்தப்பட்ட விசயத்திற்க்கு புதன் கிரகம் தான் காரணம் வகிக்கிறது. புதன் கிரகம் வலுவாக இருப்பவர்கள் பெரும்பாலும் கணக்கியல் துறையில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.

நிதி சம்பந்தப்பட்ட விசயத்தில் புதன் கிரகம் காரத்துவம் வகிக்கிறது. புதன் கிரகம் ஒருவர்க்கு நன்றாக அமைந்தால் அவர் நிதி ஆலோசகராக இருப்பார். உலகத்தில் உள்ள பெரும்பணக்காரர்களுக்கு எல்லாம் புதன் கிரகம் நன்றாக இருக்கும். 

இன்றைக்கு பல பேர்களுக்கு புதன் கிரகம் சரியாக இருக்காது. புதன் எதனோடு சேருகிறதோ அதாவது எந்த கிரகத்தோடு சேருகிறதோ அந்த தன்மையை கொடுக்கும் தன்மையுடையது. தனித்து இருந்தால் முழுபலனையும் எதிர்பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு புதன் பிற கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும் நல்லபலனை கொடுக்கிறது. சேரும் கிரகம் நல்ல கிரகமாக இருந்தால் அதன் காரத்துவத்தையும் எடுத்து நல்லதை செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தவறை ஏற்றுக்கொள்ளும் நிலை


வணக்கம்!
          நான் சோதிடம் பார்த்து பலனை சொன்னாலும் உண்மையான பிரச்சினை என்பது அவர் அவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இருக்காது.

ஒரு தவறை செய்துவிட்டு வந்து இருப்போம் அந்த தவறை நமது மனது அது தவறு என்றே ஏற்றுக்கொள்வதில்லை. நாம் செய்தது தவறு என்று ஏற்றுக்கொள்வது கிடையாது. வாழ்வில் கடைசி வரை அது தவறு என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் நமது சந்ததிக்கு பெரிய கெடுதலை செய்துவிட்டு போகிறோம் என்று அர்த்தம்.

என்னைவிட வயது மூத்தோர்கள் வந்து என்னிடம் சோதிடம் பார்த்து இருக்கின்றார்கள். அவர்களிடம் நான் இதனை சொல்லுவது உண்டு ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதே கிடையாது. 

நாம் ஒரு சாட்சியாக இருந்து அனைத்து பிரச்சினையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் பெரிய பிரச்சினையை எளிதில் சமாளிக்கும் ஒரு நல்ல கருத்து நமக்கு கிடைத்துவிடும்.

நாம் செய்த தவறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நமக்கு விமோசனம் என்பது கிடைக்காது. விமோசனம் கிடைக்கவேண்டும் என்றால் தவறை ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஒன்பது கிரகங்களும் நம்மை தாக்குவதற்க்கு முன்பு தவறை திருத்திக்கொண்டு நாம் செயல்பட்டால் நமக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 12, 2016

கட்டண சேவை


வணக்கம்!
          பல அற்புத தகவல்கள் மற்றும் ஆன்மீக பயிற்சிகளை நீங்கள் பெறவேண்டும் என்றால் கட்டண சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஜாதககதம்பத்தில் சொல்லப்படும் தகவல்கள் மேலோட்டமான தகவல்களாக இருக்கும்.

பல வருடங்களாக ஜாதககதம்பத்தை படித்துவரும் நண்பர்கள் கட்டணசேவைக்கு வந்துவிடுவது நல்லது. எனக்கு பணம் வரும் என்ற நோக்கில் இதனை சொல்லவில்லை. ஜாதககதம்பத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக குறைவு. 

கட்டணசேவையில் நீங்கள் படிப்பதோடு இல்லாமல் தங்களை ஆன்மீகத்தில் மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். ஜாதககதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் கட்டணசேவையில் இணைந்துக்கொள்ளுங்கள்.

உங்களின் வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள வாழ்வாக அமையவேண்டும் என்றால் கட்டணசேவையில் இணைவது நல்லது. அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஏராளம்.  கட்டணம் அதிகம் என்று நினைக்கவேண்டாம் உங்களின் செல்வவளமும் உயர பல வழிகள் அதில் இருக்கின்றது. தாமதம் இல்லாமல் உடனே இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் பலம்


வணக்கம்!
          செவ்வாய் கிரகம் ஒருவருக்கு தோஷத்தை தரும் நிலையில் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் தன்னுடைய கோபத்தால் அழிந்தவர்களாக இருப்பார்கள். 

நான் நிறைய பேர்களை சந்தித்த அனுபவத்தை பெற்று இருக்கிறேன். பல பேர்களுக்கு என்னுடைய அறிவுரையை சொல்லிருக்கிறேன் உங்களுக்கு செவ்வாய் இப்படிப்பட்ட நிலையில் இருக்கின்றது. செவ்வாய் கிரகம் உங்களை கோபத்தால் கவிழ்த்துவிடும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள் என்பேன்.

பல பேர்கள் இதனை உணர்ந்துக்கொண்டு திருந்தி இருக்கிறார்கள். பல பேர்கள் செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டு என்னை கூட கோபத்தால் தொடர்புக்கொள்ளாத நிலையில் சென்றும் இருக்கிறார்கள்.

செவ்வாய் கிரகம் தன்னுடைய வேலையை பல காரத்துவத்தில் காட்டினாலும் கோபத்தில் காட்டுவது அதிகம் அதனால் கோபத்தை மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள். தன்னை கட்டுபடுத்தமுடியாத ஒரு கோபத்தை செவ்வாய்கிரகம் ஏற்படுத்துவதால் இவர்கள் திசைமாறி செல்லுகிறார்கள்.

உங்களுக்கு செவ்வாய் இப்படி செய்கிறது என்றால் முதலில் கோபம் வந்தால் எதிர்வினை செய்யாமல் இருங்கள். கோபத்தை குறைக்கும் வழி என்ன என்பதை யோசியுங்கள். செவ்வாய் கிரகத்திற்க்கு என்ன பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதையும் பாருங்கள். கண்டிப்பாக ஒரு நல்ல நிலைக்கு உங்களால் வரமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு பலம்


வணக்கம்!
          இந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்றுவருவதால் நமது ஜாதககதம்பத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சி காத்திருப்பில் போட்டு வைத்திருக்கிறேன். விரைவில் ஏதாவது ஒன்றை நடத்திவிடுவோம்.

ராகுவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு கிரகத்திற்க்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து ஏன் எழுதவேண்டும் என்று பல நண்பர்கள் நினைக்கலாம். பல குடும்பங்களை சீரழித்தது எது என்றால் ராகு கிரகமாக இருக்கும் என்பதால் இதனை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எழுதிவருகிறேன். அனைத்து கிரகத்தையும் எழுத தான் போகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்.

பல குடும்பங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை ராகு கேதுவை பார்த்து நாம் வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என்பேன். ராகு மற்றும் கேதுவை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டும்.

தேவைப்பட்டால் ராகு கேதுவிற்க்கு பரிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு உங்களின் ஜாதகத்தையும் அடிக்கடி கவனித்துக்கொள்ளுங்கள்.எவ்வளவு பிஸியான ஆளாக இருந்தாலும் ஜாதகத்தை பார்த்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரகபாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
          கிரகங்கள் பாதிப்பில் இருந்து வெளிவருவது என்றால் ஒரு சில விசயங்களை நாம் அவ்வப்பொழுது செய்யவேண்டும். என்ன என்றால் தன்னை வருத்திக்கொள்வது.

மாதத்திற்க்கு ஒரு நாள் நன்றாக கஷ்டப்படவேண்டும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் உடல் உழைப்பை செய்யவேண்டும். அப்பொழுது உங்களின் கஷ்டம் கொஞ்சம் குறையும். 

நான் ஒரு விவசாயி மகன் அவ்வப்பொழுது விவசாய வேலை பார்ப்பது உண்டு. மாதத்திற்க்கு ஒரு நாள் வெயிலில் நாள் முழுவதும் வேலை செய்வேன். இந்த மாதம் எல்லாம் மிக கடுமையான ஒரு வெயில் அடிக்கிறது அப்படி இருந்தும் ஒரு நாள் ஒதுக்கி அந்த வேலையை செய்வது உண்டு.

ஒரே சொகுசாகவும் இருந்துவிடகூடாது. ஒரே கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்துவிடகூடாது அப்பொழுது இரண்டையும் பார்த்துவிட்டால் கிரகங்கள் நம்மை பெரிய அளவில் பாதிக்காது.

A/c போட்டுக்கொண்டு மாதம் தோறும் தூங்கினாலும் ஒரு நாள் A/c ஆப் செய்துவிட்டு தூங்குங்கள். இது கஷ்டம் தான் இருந்தாலும் என்றாவது ஒரு நாள் இந்த உடலை நெருப்பு திங்க தானே போகின்றது அப்படி நினைத்துக்கொள்ளுங்கள்.

நான் சொன்னதை தான் முன்னோர்கள் விரதம் என்ற முறையில் கொண்டு வந்தார்கள். விரதம் இருக்கின்றதாக இருந்தாலும் இருக்கலாம். அது தன்னை நன்றாக வருத்துவது போல் இருந்தால் நல்லது

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 11, 2016

திருமணம்


வணக்கம்!
          பெரும்பாலான திருமணம் நடக்கும் விதம் என்பது கிரகங்கள் கொண்டுபோய் ஒருவரை வீழ்த்துவது தான் நடக்கும். உங்களுக்கு திருமணம் நடக்கிறது என்றால் அது கிரகங்களின் படுமுயற்சியால் நடக்கிறது என்று அர்த்தம்.

மனிதர்கள் எல்லாம் கூடி திருமணத்தை நடத்துகிறோம் என்று நாம் நம்பிக்கொண்டு இருப்போம் ஆனால் கிரகங்கள் தான் இந்த வேலையை செய்ய தூண்டுகிறது. நீங்கள் சோதிடம் நன்றாக படித்து இருந்தால் மிகச்சரியாக இதனை அறிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு வேலையையும் ஒரு ஆள் இருந்து உங்களுக்கு செய்வது போல் கிரகங்கள் செய்யும். திருமணம் செய்யும் மாப்பிள்ளை ஒரு வித போதையில் இருப்பது போலவே இருப்பார். உண்மையில் நாம் பெண் போதை என்று இருப்போம் அது கிடையாது. அவனை இல்லறத்தில் சிக்கவைக்க கிரகங்கள் கொடுக்கும் போதை.

நிறைய தவறுகள் நடப்பதே இப்படி ஒரு போதை கிளப்பி அவனை சிக்கவைப்பதால் தான். ஒரு தெளிவான ஒரு நபர் இருந்தால் இதனை எல்லாம் சரி செய்து எந்த ஒரு தவறுகளும் நடைபெறாமல் செய்யமுடியும். கிரகங்கள் கொண்டுபோய் அமுக்கி ஒருவரை முழ்கடிப்பதில் இருந்து ஒரளவு காப்பாற்றிக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பிஸியான ஆளு


ணக்கம்!
          நாம் பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் எல்லாம் எனக்கு ஜாதககதம்பம் வழியாக ஒரு ஹோலோ சொல்லுவதற்க்கு கூட இங்கு ஆட்கள் இல்லை. பல வருடங்கள் ஓடியது அதன் பிறகு ஒவ்வொருவராக நம்மை தேடி வரஆரம்பித்தார்கள். 

நாம் சொல்லுகின்ற விசயத்தை ஒருவர் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டு அதனை உற்று கவனித்த பிறகு தான் வரமுடியும். நம்மை ஒருவர் தேடி வருகிறார் என்றால் அவரை நான் குறைவாக எடை போடமாட்டேன். ஜாதககதம்பத்தில் சொல்லப்பட்ட மொத்த கருத்தில் முக்கால்வாசி கருத்தை உடையவராக அவர் இருப்பார் என்பது எனது கணக்கு.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு வாங்கி கட்டிய வரம் என்ற தலைப்பில் வரும் கருத்துக்கள் சரியாக இருக்கும். இன்றைக்கு நாம் செய்யும் தவறு இன்றே நமக்கு தண்டனை கிடைப்பதில்லை கொஞ்ச காலம் சென்று நமக்கு தண்டனை கிடைக்கும்.

தண்டனை நமக்கு மட்டும் கிடைத்தால் பரவாயில்லை நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும்பொழுது தான் நமது துயரம் அதிகமாக இருக்கும். இன்றைக்கு நான் சொல்லுகின்ற கருத்து எல்லாம் உங்களுக்கு இன்றைக்கு ஏற்புடையதாக இருக்காது. கொஞ்ச காலம் எடுக்கும் அதன் பிறகு என்னை தேடிவருவீர்கள்.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவனுக்கு வரும் வாரிசுகளின் வழியாக அந்த தவறு ஏன் செய்தோம் என்று நினைக்க தோன்றும். ஒருவருக்கு ஒரு பையன் இருந்தால் அந்த பையனுக்கு வரும் மனைவி வழியாக ஒரு சிலருக்கு தண்டனை என்பது வரும். மருமகள் பேரகுழந்தை இதன் வழியாக தண்டனை வருகிறது. கடவுள் கொஞ்சம் வேகமாக வேலை செய்கிறார் என்றால் அவன் பையனின் வழியாகவே நாம் செய்த பாவத்தின் பயன் என்ன என்பது தெரிந்துவிடும்.

தற்பொழுது நான் கொஞ்சம் பிஸியாக தான் இருக்கிறேன் இன்னும் சில வருடங்கள் கழித்து என்னை சந்திக்க பல மாதங்கள் கூட இருக்கலாம் அதற்கு காரணம் எனது தலைக்கணம் கிடையாது மக்களுக்கு நடந்ததை வைத்து இப்படி எல்லாம் நடந்து இருக்கிறது இதற்கு வழியை சொல்லுங்கள் என்று வருவார்கள். இன்று செய்வதை பார்த்து அதன் பிறகு செய்ய தொடங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 10, 2016

ராகு பலம்


வணக்கம்!
          ராகு கிரகத்தைப்பற்றி பார்ப்போம். ஒருவருக்கு ராகு தசா நடந்தால் அல்லது ராகு கிரகம் பலமாக இருந்தால் அவருக்கு முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

ராகு கிரகம் ஒரு மனநிலையை ஏற்படுத்தாது. நொடிக்கு நொடி மனதைப்போட்டு குழப்பிக்கொண்டு அனைத்திலும் சிக்கலை ஏற்படுத்தகூடிய ஒரு கிரகம். பல நண்பர்களுக்கு ராகு கிரகத்தின் தசா நடக்கும் அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லும் அறிவுரை பொறுமையாக இரு ஒரு நல்ல முடிவு எடுத்தவுடன் அதன் பிறகு நீங்கள் செய்ய நினைத்தை செய்யலாம் என்பேன்.

நண்பர்களும் சரி என்று போய்விடுவார்கள் கொஞ்ச நாளில் மனது மாறி நீங்கள் சொன்னது சரி தான் இன்று வேறு மாதிரியான ஒரு எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.

ஒவ்வொருவருக்கும் இன்றைய காலகட்டத்தில் எந்த முடிவு எடுத்தால் நல்லது நடக்கும் என்பதில் சிக்கல் இருக்கின்றது அதோடு ராகு தசா நடந்தால் எடுத்த முடிவு நல்லதாகவே அமையாது. வாழ்வில் ஏதோ அவசர முடிவு எடுக்கவேண்டும் என்றால் உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை நன்றாக வணங்கிவிட்டு முடிவு எடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 9, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். அம்மனை அலங்காரம் செய்தவர் இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள் மற்றும் கண்டீயூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்.  பல பேர்கள் இந்த பூஜை நடப்பதற்க்கு தங்களின் உழைப்பை போடுகிறார்கள் காணிக்கை செலுத்துபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இந்த உழைப்பை போடுபவர்களால் அது சிறந்து அமைகிறது. அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கும்.








அன்புடன்
ராஜேஷ்சுப்பு