Followers

Thursday, November 30, 2017

புண்ணியம்


வணக்கம்!
          நான் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது பல பேர்களின் அனுபவத்தை பார்த்தப்பொழுதும் உற்றுநோக்கியதில் ஒரு விசயம் நன்றாக தெரிந்தது அதனைப்பற்றி சொல்லுகிறேன். இதனை நீங்கள் கடைபிடித்தால் நல்லது.

இன்றைக்கு இருக்கும் பணக்காரர்களின் தந்தையை எல்லாம் கவனிக்கும்பொழுது அவர்கள் தன்னுடைய வாழ்ந்த காலத்தில் ஒரு அப்பாவியாக இருந்திருக்கிறார்கள். நிறைய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் செய்த இந்த வேலை இன்று அவர்களின் வாரிசுகள் நன்றாக இருக்கின்றனர். 

இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் நன்றாக சோதிடம் தெரியும். இதில் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும். உங்களுக்கு சோதிடம் தெரிந்த காரணத்தால் தான் ஒன்றை செய்வதே கிடையாது. எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்வதில்லை. நான் புத்திசாலி நான் கெட்டிகாரன் என்ற நினைப்பு உங்களை எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகளுக்கும் கலந்துக்கொள்ள வைப்பதில்லை அதற்கு என்று எந்த ஒரு செலவும் செய்வதில்லை.

நான் நிறைய கோவில்களுக்கு சென்று வந்திருக்கிறேன். இதனை எல்லாம் எனக்காக செய்தாலும் தன்னுடைய குடும்பத்திற்க்காக நான் செல்லும் கோவில்களை எல்லாம் வெளிப்படுத்துவது கிடையாது. அதனை அவர்களுக்கு என்று செல்லுகிறேன்.

ஜாதககதம்பத்தில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் அவர்கள் எல்லாம் அதிமேதாவியாகவே இருக்கின்றனர். ஒன்றும் செய்யமாட்டேன் என்று இருக்கின்றனர். உங்களுடைய வாரிசுகள் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நீங்கள் பல கோவிலுக்கு செல்லவேண்டும். பல ஆன்மீக காரியங்களை செய்யவேண்டும். 

என்னைப்பொறுத்தவை ஒன்று சொல்லுகிறேன். அதிபுத்திசாலி என்பது சொல்லுவதற்க்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும் வாழ்க்கையில் பல சிக்கல் இன்னல்களை அது தோற்றுவித்துவிடும். அறிவாளியாக இருங்கள் அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக பல நல்லவிசயங்களை வெளியில் தெரியாமல் செய்துக்கொண்டே இருங்கள்.

ஒரு பணக்காரனுக்கு தெரியாத விசயமா உங்களுக்கு தெரிந்துவிடபோகின்றது. சும்மா சோதிடவிதியை படித்துக்கொண்டு நான் இப்படி தான் இருப்பேன் என்று உட்கார்ந்துக்கொண்டு நீங்களும் கெட்டு உங்களின் குடும்பத்தையும் கெடுக்காமல் இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஐந்தாவது வீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
          ஐந்தில் சுக்கிரன் நின்றால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். ஐந்தில் சுக்கிரன் நிற்பது நல்ல பலனை தரும் என்று பொதுவாக சொல்லலாம். பூர்வபுண்ணியத்தில் சுக்கிரன் இருப்பது அவர்களின் அறிவை நல்ல முறையில் வெளிப்படுத்தும்.

சுக்கிரன் ஐந்தில் நின்று இளம்வயதில் செவ்வாய் தசா நடந்தால் அவர்கள் விளையாட்டு துறையில் ஈடுபட்டு நிறைய பதக்கங்களை பெற வைக்கும். புதன் தசா நடந்தால் படிப்பில் வெற்றிப்பெற்று பதக்கங்களை பெறுவார்கள்.  ஐந்தில் நிற்க்கும் சுக்கிரன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி இருக்கும்.

ஐந்தில் சுக்கிரன் நின்றால் அவர்களுக்கு பெண் குழந்தைகள் தான் பிறக்கும் என்று சொல்லும் சோதிடர்கள் அதிகம் இருக்கின்றனர். அனுபவத்தில் சுக்கிரன் ஐந்தில் இருப்பவர்களுக்கு ஆண் குழந்தைகளும் பிறக்கின்றன. அந்தந்த நேரத்தில் நடைபெறும் தசாவும் அவர்களின் குலதெய்வமும் இதனை நிர்ணயம் செய்யும்.

பொதுவாக ஒரு தொழில் செய்வதற்க்கு சோதிடத்தில் பத்தாவது வீட்டு அதிபதியை பார்த்து அந்த கிரகம் எதனோடு தொடர்புக்கொள்கிறதோ அந்த தொழில்கள் எல்லாம் செய்யலாம் என்று சோதிடத்தில் சொல்லுவது உண்டு. பலருக்கு ஐந்தாவது வீடு தான் தொழில் நிர்ணயம் செய்யும்.

சுக்கிரன் ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு நாம் சுக்கிரனின் காரத்துவம் உடைய தொழில்களை பரிந்துரை செய்யலாம். சுக்கிரன் காரத்துவத்தில் உள்ள தொழில்கள் தான் அதிகபட்சம் அவர்களுக்கு அமையும். ஐந்தில் சுக்கிரன் நிற்பது நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 29, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          ஒரு மனிதன் அறுபது ஆண்டுகள் இந்த காலத்தில் வாழ்வதே பெரிய விசயம். நீங்கள் நூற்றிருபது வருடங்கள் வாழலாம் என்று சொல்லுகின்றீர்கள். அறுபது வருடங்கள் முடிந்தால் கண்டிப்பாக இதனை செய்யவேண்டுமா என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார்.

சோதிடத்தில் சொல்லியுள்ளபடி ஒரு மனிதன் நூற்றிருபது வருடங்கள் வாழலாம். நமது உணவு முறை மற்றும் ஆன்மீக வழிபாடு எல்லாம் சரியாக இருந்தால் இது சாத்தியப்படிக்கூடிய ஒன்று தான். இதனை அனைவரும் பின்பற்றினால் கண்டிப்பாக வாழலாம்.

அறுபது வருடங்கள் வாழ்ந்து முடித்தவர்கள் கண்டிப்பாக இதனை செய்வது நல்லது. அறுபது வருடங்கள் பொருள் சார்ந்த ஒரு ஓட்டமாகவே மனிதன் ஈடுபட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஆன்மீக மார்க்கமாகவே செல்வதற்க்கு இந்த சஷ்டிப்பூர்த்தி செய்யவேண்டும்.

பொருள் சார்ந்த தேடுதல் இருக்கும்பொழுது அது நிறைய தோஷங்களை மனிதனுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கும். இந்த தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்களை ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய ஒரு நிகழ்வாகவே இது இருக்கும்.

நாம் கொஞ்சம் செலவு செய்து அவர்களை ஆன்மீகவழியில் மாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். அதோடு நமக்கும் ஒரு புண்ணியம் சேர்க்கும் வழியாக இருக்கும். ஆன்மீகவழியில் செல்வதற்க்கு உதவி புரிவதற்க்கு ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நான்காவது வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          நான்காவது வீட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன மாதிரியான பலனை கொடுக்கும் என்று பார்க்கலாம். நான்காவது வீடு சுகஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டில் சுக்கிரன் அமர்ந்தால் சொல்லிக்கவே வேண்டாம் எல்லாம் நல்லதாகவே வந்து சேர்ந்துவிடும்.

வாகன அமைப்பையும் காட்டக்கூடிய ஒரு இடத்தில் சுக்கிரன் அமர்வது ஒரு யோகம் என்று சொல்லலாம். நல்ல உயர்ந்த விலையுள்ள சொகுசு கார்களை வாங்கி வீட்டில் நிற்க வைக்க சுக்கிரன் வழிவகுக்கும். சொசுகு கார்களை நிறைய வாங்க வைத்திருக்ககூடிய ஒரு அமைப்பு.

இன்று ஒரு நகரத்தில் ஒரு வீடு வைத்திருந்தால் அது பெரிய செல்வந்தர் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. பல வீடுகளை வாங்ககூடிய ஒரு நிலையை சுக்கிரன் உருவாக்கிவிடுவார். அதுவும் பெரிய பில்டிங்காக வாங்கி போடக்கூடிய நிலையை உருவாக்கிவிடும்.

சுக்கிரன் நான்கில் அமர்ந்தால் அவர்களின் வீட்டில் எந்த நேரமும் உணவு பற்றாக்குறை இருக்கவே இருக்காது. அன்னபூரணி வீட்டில் குடிக்கொள்ளும் பாக்கியத்தை சுக்கிரன் ஏற்படுத்துவார். இவர்களின் வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடித்தால் கூட அது அமிர்தமாக இருக்கும்.

வாழ்க்கை முழுவதும் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழவேண்டிய ஒரு நிலையை உருவாக்குவதில் நாலில் உள்ள சுக்கிரனுக்கு நிகர் எந்த கிரகமும் இல்லை என்று சொல்லலாம். நான்கில் சுக்கிரன் அமர்ந்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 28, 2017

சொர்க்கத்தை கொடுக்கும் பிள்ளைகள்


ணக்கம்!
          ஜாதக கதம்பத்தை படிக்கும் நபர்கள் தங்களின் பெற்றோர்க்கு செய்யவேண்டிய கடமையை நீங்கள் செய்துவீட்டீர்களா என்று ஒரு கேள்வியை இன்று வைக்கவேண்டும் என்று நினைத்து இந்த பதிவை தருகிறேன். 

தன்னுடைய பெற்றோர்களை கவனித்தால் மட்டும் போதாது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமை என்று ஒன்று இருக்கின்றது அதனை நீங்கள் செய்யவேண்டும். இந்த காலத்தில் பெற்றோர்களை தனியாக விட்டுவிட்டு அவர்களுக்கு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வெளியில் சென்றவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். பெற்றோர்களோடு இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவு பயன்படும்.

முன்கூட்டியே ஒன்றை சொல்லிவிடுகிறேன். இதுவரை நான் இதனை செய்யவில்லை நான் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு சொல்லவேண்டும் அதன் வழியாக நீங்கள் பயன்பெறவேண்டும் என்று சொல்லுகிறேன்.

உங்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்து வைக்கவேண்டிய அறுபதாம் கல்யாணம் என்று சொல்லபடுகின்ற சஷ்டியபூர்த்தியை தான் சொல்லுகிறேன். ஒவ்வொரு மனிதனும் அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டால் ஒரு மனிதனின் வாழ்நாளில் பாதிகாலத்தை முடித்துவிடுகிறான் என்பதால் அதற்கு செய்யவேண்டிய ஒரு நிகழ்வு தான் இந்த அறுபதாம் கல்யாணம். 

சோதிடத்தில் ஒரு மனிதனுக்கு நூற்றிருபது வருடங்கள் என்று சொல்லுகின்றன. அதில் பாதியை வாழ்ந்தாலே அதற்கு செய்யபடுகின்ற ஒரு நிகழ்ச்சி தான் இந்த சஷ்டிபூர்த்தி. இதற்கு பிறகு வரும் நாட்கள் எல்லாம் அவர்கள் செய்த புண்ணியத்தால் வருகின்ற ஒரு நிகழ்வு.

அறுபதாம் திருமணத்தை பெரும்பாலும் திருகடையூர் அமிர்தகடேஸ்வரர் திருகோவிலில் நடத்துவார்கள். அங்கேயே நீங்களும் நடத்தி வையுங்கள். சொர்க்கத்தை உங்களின் பெற்றோர்களுக்கு கொடுக்கவேண்டும் வேண்டும் என்றால் நீங்கள் செய்யவேண்டிய ஒன்று உங்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்யும் அறுபதாம் கல்யாணம் மட்டுமே. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்கு அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 27, 2017

சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் பரிகாரம் செய்து நமக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம். சுக்கிரனின் காரத்துவத்திற்க்கு நாம் சென்றுவிட்டால் நம்மை தேடி வந்து பெண்கள் பேச தொடங்குவார்கள்.

நம்மோடு சண்டைப்போட்டுக்கொண்டு இருந்த பெண்கள் கூட நம்மிடம் வந்து நான் செய்தது தவறு மன்னித்துவிடுங்கள் என்று பேச தொடங்குவார்கள். சுக்கிரன் கிரகம் வேலை செய்ய தொடங்கிவிட்டது என்பது அப்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம்.

நம்மை தேடி பணம் வரதொடங்கிவிடும். பணம் இல்லாதவர்களிடம் பணம் வரதொடங்கிவிட்டால் சுக்கிரன் சாதகமாக சென்று்க்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம். பணம் வந்துவிட்டால் கொஞ்சம் ஆடை விசயத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். 

இந்த காலத்தில் அனைவரும் நல்ல ஆடைகளை அணிய தொடங்கினாலும் சுக்கிரன் காரத்துவம் உடையவர்கள் விலையுர்ந்த ஆடைகளை அணிய தொடங்குவார்கள் என்று சொல்லலாம். உயர்ந்த கம்பெனி பிராண்ட் ஆடைகளை அணிவார்கள் என்று சொல்லலாம்.

சாப்பாடு விசயத்தில் அதிக கவனத்தை செலுத்துவார்கள். ரோட்டு கடையில் சாப்பிட்டவர்கள் உயர்ந்த உணவுகங்களில் சாப்பிடுவார்கள் என்று சொல்லலாம். சுகத்தை அணிவிக்கும் விசயங்கள் அனைத்தும் நடக்க ஆரம்பிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 25, 2017

மூன்றாவது வீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் மூன்றாவது இடத்தில் இருந்தால் அவர்களின் வீட்டிற்க்கு அருகில் நிறைய பெண்களாக இருப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பெண்களாக இருக்ககூடும். மூன்றாவது வீட்டில் சுக்கிரன் இருந்தால் அது மறைவுஸ்தானம் அதனால் பிரச்சினை வரும் என்று மட்டும் எடுத்துக்கொள்ளகூடாது நன்மையும் வழங்கும்.

மறைவு ஸ்தானம் என்று சொல்லும்பொழுது அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு கொஞ்சம் காலதாமதம் ஆகும். உங்களின் ஊருக்கு அருகில் உள்ளவர்களே நீங்கள் திருமணம் செய்யவேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு சிலருக்கு அடுத்த வீட்டில் உள்ள பெண் அமையகூடும்.

உங்களின் அருகில் உள்ள வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படும். பெண்களால் உங்களுக்கு சண்டை வந்துக்கொண்டே இருக்கும். உங்களுக்கு வாகனம் அமைவதில் சிக்கல் ஏற்படும். வாகனம் அமைந்தாலும் அதற்கு செலவு அதிகமாக செய்யவேண்டியிருக்கும்.

சுக்கிரன் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் அமரும்பொழுது உங்களின் உடல்நிலை நன்றாக இருக்காது. அடிக்கடி உடல் நோய்வாய்ப்படும் நிலை ஏற்படும். காமத்தில் அதிக சக்தியை இழந்து உடல் நோய்வாய்ப்படுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

சுக்கிரன் மூன்றாவது வீட்டில் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களின் பொருள்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படுவார்கள். அதனால் மாட்டிக்கொள்ளவும் செய்வார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 24, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் சனி ராகு இவர்கள் எல்லாம் ஒரே கோஷ்டியை சேர்ந்தவர்கள். இவர்களின் காரத்துவம் எல்லாம் ஒரே மாதிரியாக தான் இருக்கும் ஒவ்வொருவரும் தனி கிரகங்களாக இருந்தாலும் ஒரே மாதிரியாக காரத்துவத்தை பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

எப்பொழுதும் ரவுடி போல இருப்பவர்கள். தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று நினைப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஊரில் உள்ள வம்பை எல்லாம் இழுத்துபோட்டு ஏதாவது ஒரு ரணகளத்தில் தான் இருப்பார்கள்.

சுக்கிரனும் அப்படிப்பட்ட ஒன்று தான். ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள ஐயரை பாருங்கள். எப்பொழுதும் சாந்தமாக இருந்துக்கொண்டு அவர்கள் வேலையை மட்டும் செய்வார்கள். ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் உள்ள பூசாரியை பாருங்கள். ஏதாவது ஒரு அக்கபோரை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

அம்மன்கோவில் பூசாரி எல்லாம் பார்த்தால் திமிராக திரிவார்கள். தான் ராஜா என்ற நினைப்போடு இருப்பார்கள். சுக்கிரனோடு காரத்துவம் அவர்களை அப்படி செயல்பட வைக்கிறது. இவர்கள் நேரத்திற்க்கு கோவிலுக்கு வந்து பூஜை கூட செய்யமாட்டார்கள்.

சுக்கிரனின் அருளை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அப்படியே அதனை பெற்றாலும் அதனை கடைசி வரை கொண்டு செல்வது என்பது நடக்காத காரியம் போலவே இருக்கும். காசு வேண்டுமானால் செய்து தானே ஆகவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இரண்டாவது வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் இரண்டாவது வீட்டில் நன்றாக இருந்தால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்கவே இருக்காது. எப்படியாவது ஒரு வழியில் பணம் வந்துக்கொண்டே இருக்கும். பணம் தீர்ந்தாலும் மறுபடியும் ஏதோ ஒரு வழியில் பணம் வரும்.

சுக்கிரன் இரண்டாவது வீட்டில் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கும் அவர்களின் துணைக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும். ஒரு சிலர் பிற துணையும் நாடுவார்கள். பிறதுணையை நாடினாலும் விவாகாரத்து இருக்காது.

சுக்கிரன் இரண்டாவது வீட்டில் இருந்தால் அவர்களின் வீட்டில் அதிகமாக பெண்கள் இருப்பார்கள். சம்பந்தபட்ட நபர்களை சுற்றியும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு பிறப்பது பெண்களாக இருக்கும்.

சுக்கிரன் பெண் பிள்ளைகளை அதிகமாக கொடுப்பதால் ஒரு சிலர் அதிக கவலைபடுவார்கள். ஆண் வாரிசு இல்லை என்று கவலை இருக்கும். ஆண் வாரிசு இல்லை என்று கவலை வேண்டியதில்லை. உங்களுக்கு ஆண் வாரிசு இருந்தால் உங்களுக்கு நல்லது தான் ஆனால் பெண் வாரிசு இருந்தால் இருப்பத்தியோரு தலைமுறைக்கும்   மோட்சம் கிடைக்கும் என்று ஞானிகள் சொல்லிருக்கார்கள்.

சுக்கிரனின் காரத்துவம் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்தால் நல்லது தான் நீங்கள் நினையுங்கள். சுக்கிரனால் நீங்கள் மோட்சத்தை அடையமுடியும். உங்களுக்கு முன் பத்து தலைமுறை நீங்கள் உங்களுக்கு பின் பத்து தலைமுறை மோட்சம் அடையும் என்று சொல்லிருக்கிறார்கள்.

இரண்டாவது வீட்டில் சுக்கிரன் இருப்பது உங்களுக்கு பலவிதத்திலும் நன்மையளிக்ககூடியது தான் அதே நேரத்தில் உங்களின் செயல்பாடு நன்றாக இருந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 23, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் கிரகம் அதிவேகமாக செல்லக்கூடிய ஒரு கிரகம். ஒரு ராசியில் நீண்டநாள்கள் தங்காது. அதிகப்பட்சமாக சுக்கிரனை கணக்கில் எடுத்துக்கொண்டு சொல்லும் சோதிடர்கள் மிக மிக குறைவு என்று சொல்லலாம்.

பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு இருக்கிறார் என்பதை பார்த்து அதற்கு தகுந்தமாதிரி பலனை சொல்லவேண்டும். சுக்கிரனை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ஒருவருக்கு சரியான பலனை சொல்லிவிடமுடியாது.

பொதுவாக என்ன கேள்வி கேட்பார்கள். 

எனக்கு நல்ல வேலை கிடைக்குமா? 
எனக்கு வாகன யோகம் அமையுமா ?
எனக்கு வீடு அமையுமா ?
எனக்கு சொகுசு வாழ்க்கை அமையுமா?
எனக்கு பணம் தட்டுபாடு இருக்காதே?
எனக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? 
எனக்கு திருமணம் உறவிலா அன்னியத்திலா அல்லது காதல் திருமணமா?
என்னுடைய திருமண வாழ்க்கை சந்தோஷமா செல்லுமா?
எனக்கு குழந்தைகள் இருக்குமா?

இப்படி பல அடிப்படையான கேள்விகளை அடிக்கிக்கொண்டே செல்லலாம். இதற்கு எல்லாம் நீங்கள் சோதிடத்தில் பதில் சொல்லவேண்டும் என்றால் ஜாதகத்தில் சுக்கிரன் நிலையை பார்த்து தான் சொல்லமுடியும்.

சோதிடத்தில் இருக்கின்ற கிரகத்தில் சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வது மட்டும் மிக மிக கடினமான ஒன்று. அவசரமாக செல்கின்றவருக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது என்பது பரிகாரம் செய்யும் அனைவருக்கும் தெரியும்.

வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான பல விசயங்களை சுக்கிரனால் மட்டுமே கொடுக்கமுடியும். மேலே சொன்ன கேள்விகளை பாருங்கள் பல கேள்விகளில் நீங்கள் தோற்றுபோயிருப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 22, 2017

நவ அம்மன்(சண்டி) யாகம்


வணக்கம்!
          நவ அம்மன்(சண்டி) யாகம் இன்றோடு முடிவடைந்தது. மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அம்மனின் அருளால் இதனை நடத்த முடிந்தது. ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக இதனை செய்வதற்க்கு முதலில் எனக்கு நிறைய தயக்கம் இருந்தது.

பெரியளவில் பொருட்செலவில் செய்பவர்கள் கூட மூன்று நாட்களில் முடித்துவிடுவார்கள் நாம் எப்படி இதனை செய்வது என்று முதலில் தயக்கம் இருந்தது. அதோடு என்னுடைய மனநிலை மற்றும் உடல்நிலை சரியாக இயங்கவேண்டும் என்ற தயக்கம் இருந்தது. 

அம்மன் அருளால் நல்ல மனநிலை மற்றும் உடல்நிலையோடு இருந்து இதனை செய்து முடித்துவிட்டேன். நவ சண்டி யாகத்தை எனது வாட்ஸ்அப்பில் தொடர்புள்ளவர்களுக்கு தினமும் அனுப்பி வைத்தேன். 

ஒருவருக்கு மட்டும் தனியாக செய்தாலும் இது ஒரு நேர்மையான ஒரு யாகம் என்பதால் இதனை பார்த்து பயன்பெறவேண்டும் என்பதற்க்காக அனைவருக்கும் அனுப்பி வைத்தேன். பெரும்பாலும் சண்டி யாகம் நடைபெறுவது ஒரு சில எதிரி தொல்லைகளும் செய்வார்கள். எதிரி என்றாலும் அவர்கள் மனிதர்கள் தானே. நாம் அப்படி செய்யாமல் நூறு சதவீதம் நேர்மையான ஒரு யாகத்தை செய்கிறோம்.

உங்களிடம் சொல்லுவது எல்லாம் இதனை தனிநபர்களாக செய்துக்கொள்ளுங்கள். அனைவரும் வாழ்வில் ஒரு முறை நாம் செய்துக்கொள்ளவேண்டும் என்று நினையுங்கள் இறைவன் அருளால் அது உங்களுக்கு அமையும்.

விரைவில் கோயம்புத்தூர் வருகிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 21, 2017

முதல் வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் முதல் வீட்டில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு உடல்வாகு நன்றாக அமையும். உடலில் ஒரு வித கவர்ச்சி இருக்கும். காம கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த கவர்ச்சியை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு ஜாதகத்தில் முதல் வீட்டில் அமர்ந்திருந்து அந்த சுக்கிரன் கெடுதல் பெற்று இருந்தால் காம எண்ணத்தால் அவர்களின் உடல் சக்தி வெளியேறி அவர்களுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

முதல் வீட்டில் நல்ல நிலையில் இருக்கும்பொழுது அவர்களின் துணை வழியாக நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். ஒருவருக்கு திருமணம் முடிந்து அவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக மாறினார்கள் என்றால் அவர்களுக்கு முதல் வீட்டில் சுக்கிரன் இருக்கும்.

சுக்கிரன் முதல் வீட்டில் இருந்தால் அவர்கள் திருமணத்திற்க்கு முன்பு ஒன்றும் இல்லாதவர்களாக இருந்து திருமணம் நடைபெற்றால் அவர்களுக்கு வீடு வாகனம் எல்லாம் அமைந்து நல்ல வாழ்க்கை அமைந்துவிடும்.

சுக்கிரன் முதல் வீட்டில் இருந்தால் அவர்கள் செய்யும் காரியம் அனைத்தும் பெண்களை வைத்து துவங்கினால் அவர்களுக்கு அது நல்லது நடக்கும். பாதிப்படைந்த சுக்கிரனாக இருந்தால் பெண்களை வைத்து காரியத்தை தொடங்ககூடாது.

சுக்கிரன் முதல் வீட்டில் இருப்பது நல்லது தான். இவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் பெரும்பாலும் வெற்றியை கொடுத்துவிடும்.  இவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 20, 2017

சுக்கிரன்


ணக்கம்!
          பல வருடங்களாக சொல்லிக்கொண்டு வரும் ஒரு கருத்து. ஒரு ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும் அல்லது சுக்கிரகிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். ஏன் இதனை சொன்னேன் என்றால் அப்பொழுது தான் உங்களால் வெளியில் பிரபலமாக அல்லது சராசரி வாழ்க்கை கூட வாழமுடியும்.

குரு கிரகத்தின் சாரத்தில் ஒருவர் வாழவேண்டும் என்றால் மிகுந்த ஆச்சாரத்தோடு வாழவேண்டும். அப்பொழுது மட்டுமே குரு கிரகம் அவர்களுக்கு நல்லதை கொடுக்கும். பெரும்பாலான மக்கள் குரு கிரகத்தின் சாரத்தில் வாழ்வதில்லை என்பது தான் எதார்த்த உண்மை.

சுக்கிரனின் காரத்துவத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது தான் உண்மையான ஒன்று. மிகுந்த ஆச்சாரியத்தோடு வாழ்பவர்கள் உலகில் மிக மிக குறைவு. சுக்கிரனின் காரத்துவத்தில் வாழ்பவர்கள் தான் உலகத்தில் அதிகம்.

சுக்கிரனின் காரத்துவத்தில் வாழ்ந்துக்கொண்டு அதனை முழுமையாக வாழவேண்டும் என்று தான் நாம் நினைக்கவேண்டும். முழுமையாக வாழவேண்டும் என்று நினைக்கும்பொழுது சுக்கிரனின் காரத்துவத்தை எப்படி எல்லாம் மேம்படுத்தவேண்டும் என்று நினைத்து அதன் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

சாமிகளுக்கு கொடுக்கும் பூக்கள் அனைத்தும் சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்றன. பூக்களை வாங்கி நாம் எப்படி கடவுளுக்கு சேர்த்தாலும் அது சுக்கிரனின் காரத்துவத்தை மேம்படுத்துவதாகவே நமக்கு அமையும். இதனை நீங்கள் தொடர்ச்சியாக செய்யவேண்டும் என்பது தான் ஒரு விதி. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவ அம்மன் (சண்டி) யாகம்


ணக்கம்!
          ஏழு நாட்களாக நவ அம்மன் (சண்டி) யாகம் சிறப்பாக நடைபெற்றுவிட்டது. இன்னமும் இரண்டு நாட்கள் யாகம் முடிந்துவிடும் அதன் பிறகு நவ அம்மன் யாகம் தொடர்பு எப்பொழுது என்று பதிவில் சொல்லுகிறேன். 

நிறைய நண்பர்கள் இதனை செய்யவேண்டும் என்று தொடர்புக்கொண்டு கேட்டுள்ளனர். ஒரு சிலர் கட்டணத்தில் பாதி செலுத்துக்கிறோம் மீதி பாதியை பிறகு செலுத்தலாமா என்று கேட்டனர். உண்மையில் சொல்லபோனால் இதனை நடத்துவதால் எனக்கு ஒன்றும் கிடைக்காது. 

நான் சொன்ன கட்டணம் அந்த பூஜைக்கு மட்டுமே செலவு செய்கிறேன். முழுமையான கட்டணம் செலுத்தினால் மட்டுமே செய்யமுடியும். கட்டணத்தை முழுமையாக தயார் செய்துவிட்டு சொல்லுங்கள் செய்துக்கொள்ளலாம்.

சூப்பரான பலனை தரக்கூடிய ஒரு யாகம். ஒன்பது நாட்கள் செய்யக்கூடிய ஒன்று என்பது தெய்வீக பலன் இருந்தால் மட்டுமே நடக்ககூடிய ஒன்று. உங்களுக்கு யோகம் இருந்தால் மட்டுமே நடத்தமுடியும்.

முழுமையாக இது சேவை நோக்கத்தில் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. அற்புதமான சக்தியை உங்களுக்கு வழக்ககூடிய ஒன்றை அனைவரும் செய்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே இந்த நேரத்தில் சொல்லமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரகத்தின் பலன்


வணக்கம்!
          எப்படி ஒருவர் தனக்கு திருமண யோகமே இல்லை என்றாலும் பல முயற்சி செய்து திருமணம் செய்துக்கொள்கிறாரோ அதுபோல ஒரு கிரகத்தின் பலன் இல்லை என்றால் அந்த கிரகத்தின் பலனை நாம் முயற்சி செய்து எடுத்துக்கொள்ள முடியும்.

ஒருவர் ஒரு கிரகத்தின் பலன் இல்லை என்றால் அந்த கிரகத்தின் வழியாக நடப்பது அனைத்தும் எதிர்மறையாகவே நடக்க ஆரம்பிக்கும். அந்த கிரகத்திற்க்கு உண்டான சாந்தப்படுத்தும் வேலை என்ன என்று பார்த்து அதன் பலனை பெற்றுவிடலாம். கொஞ்ச காலதாமதம் ஆனாலும் அதனை பெற்றுவிடலாம்.

ஒரு கிரகம் ஒரு பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது என்றால் அதுவும் ஒரு காலத்திற்க்கு பிறகு அந்த பலனை கொடுக்காது. வேலை மாற்றம் தொழில் மாற்றம் எல்லாம் இப்படி தான் நடக்கிறது.

உங்களுக்கு சுக்கிரன் கிரகத்தின் வழியாக ஒரு வேலை செய்துக்கொண்டு இருந்தால் ஒரு காலத்திற்க்கு பிறகு சுக்கிரன் கிரகத்தின் பலன் கிடைக்காமல் வறண்டு போய்விடும். அந்த காலத்தில் நீங்கள் தோல்வியை நோக்கி செல்லவேண்டியிருக்கும்.

மாடு கறக்கிறது என்று கறந்துக்கொண்டே இருக்கமுடியாது. ஒரு காலத்தில் அது நிற்க்கும் அதுபோல தான் கிரகங்களும். வாழ்நாள் முழுவதும் பலனை எதிர் பார்க்கமுடியாது. ஒரே தொழிலை வாழ்நாள் முழுவதும் செய்பவர்கள் அதற்கு என்று பல விசயங்களை கையாளுகின்றனர். அப்பொழுது அது வாழ்நாள் முழுவதும் கிடைக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 19, 2017

மூலை ஆஞ்சநேயர் கோவில்



வணக்கம்!
          நேற்று காலையில் நவ அம்மன் யாகத்தை முடித்துவிட்டு தஞ்சாவூர் சென்றேன். தஞ்சாவூரில் ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்யவேண்டும் என்று சென்றேன். முதலில் தஞ்சாவூர் இரயில் நிலையத்திற்க்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தோம். அதன் பிறகு நண்பர் மூலஆஞ்சநேயரையும் தரிசனம் செய்துவிடலாம் என்றார். உடனே அங்கும் சென்றோம்.

தஞ்சாவூரில் இராஜவீதியில் உள்ள மேலவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் மூலையில் மூலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்திருக்கிறது. பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற பெயர் தான் அதற்கு ஆனால் மூலையில் அமைந்த காரணத்தால் மூலை ஆஞ்சநேயர் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். மிகவும் பழமையான கோவில்.

மேலவீதியில் தொடர்ச்சியாக நிறைய கோவில்கள் இருக்கும். நேரம் இருந்திருந்தால் அனைத்தையும் தரிசனம் செய்திருக்கலாம். மாலை நேரத்தில் சென்ற காரணத்தால் ஆஞ்சநேயரை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.

மிகவும் பழமையான கோவில் என்பது இந்த கோவிலைப்பார்த்தாலே உங்களுக்கு தெரியும். தஞ்சாவூர் வரும்பொழுது இந்த கோவிலையும் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். இந்த ஆஞ்சநேயர் கிரகங்களோடு அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்பது அங்கு சென்றால் உங்களுக்கு புரியும்.



தாயின் மடியில் அமர்ந்திருக்கும் அனுமன் புகழ் பெற்றது. ஆயிரம் வருடம் பழமையான கோவில் என்பார்கள். 12 இராசி மண்டல சிற்பமும் இருக்கின்றது. தஞ்சாவூர் வரும்பொழுது ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்+சனி


ணக்கம்!
          சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் என்ன செய்யும் என்று பார்க்கலாம். சுக்கிரனும் சனியும் நண்பர்கள். சுக்கிரனும் சனியும்  சேர்ந்து இருந்தால் நல்லது என்றாலும் ஒரு சில பிரச்சினைகளையும் கொடுக்க தான் செய்யும்.

சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் அதிகமாக மக்கள் தொடர்பு கீழ்சாதி மக்களாக இருக்கும். உங்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களும் வறுமையாக இருப்பார்கள். உங்களை சுற்றி வசிப்பவர்களாக கூட இருக்கலாம். 

சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு அமையும் வரன் உங்களின் சாதியில் இருந்து கீழ் சாதியில் உள்ளவர்களாக அமைய கூடும். உங்களுக்கு இப்படி அமையவில்லை என்றாலும் உங்களுக்கு கீழ் சாதியில் உள்ள ஒரு பெண்ணோடு தொடர்பு இருக்கும்.

சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருக்கும் நபர்கள் பெரும்பாலும் அடிமைத்தொழில் செய்ய நேரிடும். பிறர்களிடம் சம்பளம் கூட வாங்காமல் சாப்பாட்டிற்க்கு வேலை செய்யவேண்டியிருக்கும்.

சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் என்ன நல்லது நடக்கும் என்றால் உங்களுக்கு ஆன்மீகம் நன்றாக வரும். ஆன்மீகத்தின் மீது நல்ல ஈடுபாடு உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உணவு


வணக்கம்!
          சத்துள்ள உணவை பற்றி சொல்லுங்கள் என்று நண்பர் கேட்டுருந்தார். உணவைப்பற்றி நிறைய கருத்துக்கள் பரவலாகவும் ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். உங்களின் உடலுக்கு எது நல்ல சத்தாக இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களோ அதனை சாப்பிடுங்கள் என்று சொல்லுவேன்.

தற்பொழுது தான் இதனை நானே கருத்தில் கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். சோதிடரீதியாக நான் பரிகாரம் செய்கிறேன் என்று சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல சத்துள்ள உணவை சாப்பிடவேண்டும் என்று சொல்லுவது உண்டு.

சோதிடத்தில் கிரகங்கள் வழியாக பிரச்சினை என்று வருகின்றது என்றால் சம்பந்தப்பட்டவர்கள் சாப்பாட்டில் அந்த கிரகத்திற்க்குரிய உணவை எடுக்கவேண்டும் என்று அந்த காலத்தில் சொல்லிருக்கின்றனர். பூஜையோடு சாப்பாட்டிலும் அது கலக்கும்பொழுது உங்களுக்கு விரைவில் பயன் தரும் என்று சொல்லிருக்கின்றனர்.

ஒரு சாதாரணமான நபர்க்கு சுக்கிரனுக்குரிய அத்திபழத்தை ஒரு பீஸ் எடுத்து சாப்பிட்டால் அந்த நாளில் அவர்களுக்கு காம எண்ணம் அதிகரிக்கும். சுக்கிரனின் ஆற்றலை தரக்கூடிய பழத்தை கண்டுபிடித்து அந்த காலத்தில் இதனை சாப்பிடுங்கள் என்று சொல்லிருக்கின்றனர் என்றால் அதனை நாம் பாராட்டியே தீரவேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை சத்துள்ள உணவு சாப்பிடுவதில் குறைவாக தான் நாம் இருக்கிறோம். உடல்பலம் இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம் என்பது தான் உண்மை. உங்களுக்கு எது எல்லாம் சத்து தருகின்றதோ அதனை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 18, 2017

நவ அம்மன் (சண்டி) யாகம்


வணக்கம்!
         நவ அம்மன் ஹோமம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஒன்பது நாட்கள் செய்யப்படுகின்ற ஹோமம் என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. தொடர்ச்சியாக செய்கின்ற ஹோமம் என்பது அம்மனின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படகூடிய ஒன்று.

ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக செய்யும்பொழுது பல தடைகளை தாண்டி செய்யவேண்டிய ஒன்று. ஒன்பது நாட்களும் ஒரே மாதிரியான ஒரு மனநிலை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்யவேண்டும் என்கிற பொழுது அதற்க்காக என்னை தயார்ப்படுத்திக்கொண்டு தான் செய்யவேண்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் செய்யும்பொழுது அதன் வீரியம் அதிகமாக வருகின்றது. ஒவ்வொரு நாளும் புகைப்படங்களை பார்த்தே அதனை அறிந்துக்கொள்ளமுடியும். என்னுடைய வாட்ஸ்அப்பில் உள்ளவர்களுக்கு அதனை அனுப்பி வைத்திருக்கிறேன். 

சக்திக்கு தகுந்தமாதிரி என்னை தயார்ப்படுத்தி அதனை செய்யவேண்டியுள்ளது. ஒரு சவாலான காரியத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன். ஏதோ பணம் கொடுக்கிறார் ஏதோ செய்தோம் என்று இல்லாமல் அவ்வளவு ஈடுபாட்டோடு அதனை செய்கிறேன்.

ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் அதன் சக்தியை கண்டிப்பாக அவர்கள் உணர்வார்கள். ஒரு சாதாரணமான நபர்களுக்கு புகைப்படங்களை பார்த்தோ அதனை தெரிந்துக்கொள்ளலாம். அனைவரும் இதில் பங்குக்கொண்டு ஒரு நல்ல சக்தியின் அருளை பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 17, 2017

சாமியே சரணம் ஐயப்பா


வணக்கம்!
          ஒவ்வொரு வருடமும் நான் இதனை சொல்லிவருகிறேன். இது என்னால் முடிந்த அறிவுரையை சொல்லுவதற்க்கு மட்டும் இல்லாமல் ஐயப்பனின் அருள் மற்றும் நமது நண்பர்களின் நலத்திற்க்கு சொல்லுவது உண்டு.

ஐயப்பனுக்குரிய விரதத்தை ஒழுங்காக பின்பற்றி வாருங்கள். ஐயப்பன் விரதம் இருக்கும் முறையை சரியாக பின்பற்றினால் நல்ல வாழ்வு கிடைக்கும் என்பது எனது நண்பர்களை பார்த்து தெரிந்துக்கொண்டு இருக்கிறேன். 

ஐயப்பன் மாலையணிந்து இருந்து செல்லும் நண்பர்களிடம் மிகுந்த மரியாதை எனக்கு ஏற்படும். இது சின்ன வயதில் இருந்து அவர்களின் பேரில் ஒரு மரியாதை உண்டு. வருடம் வருடம் இந்த பதிவு எழுதுவது கூட அவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை காரணமாக தான் எழுதுகிறேன்.

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்பொழுது நீங்கள் மிகுந்த பத்திரமாக சென்று வாருங்கள். சாலை வழியில் விபத்துகள் நிறைய ஏற்படும் என்பதால் இரயிலில் சென்று வாருங்கள். சாலை வழியில் தான் சென்று வரவேண்டும் என்றால் முடிந்தளவு பகலில் பயணம் சென்று வாருங்கள்.

                                   சாமியே சரணம் ஐயப்பா

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          உடல்நிலையில் அதிக கவனம் கொள்ளவேண்டும் என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறோம். சுக்கிரனுக்கு என்று நாம் பதிவை எழுதியவுடன் உடலில் உள்ள சக்தியை நிறைய அதிகரிக்கும் பொழுது தான் சுக்கிரன் உங்களிடம் வாசம் செய்யும் என்று சொல்லி வருகிறோம்.

உடல்சக்திக்கு மட்டும் அல்லாமல் உங்களின் உடலில் உள்ள சக்கரங்கள் ஒழுங்காக இயங்கவேண்டும். உங்களின் உடலில் உள்ள சக்கரங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் உங்களுக்கு அந்தந்த சக்கரங்களுக்கு தகுந்தமாதிரி தடைகள் ஏற்பட்டுவிடும்.

யாேகா தியானங்கள் செய்யும் நபர்களுக்கு இதனைப்பற்றி நன்றாக தெரியும். நாம் எடுக்கும் சக்திமிகுந்த உணவுகள் வழியாகவும் உங்களின் உடலில் உள்ள சக்கரங்கள் தடையில்லாமல் இயங்க செய்யமுடியும்.

உங்களின் உயிர்சக்தி நீங்கள் எடுக்கும் உணவை சார்ந்தும் இருக்கின்றது என்பது வயது ஏற ஏற உங்களுக்கு புரியும். இதனை அறிந்தவர்கள் தன்னுடைய உடலில் எப்படி சக்தி ஏற்றுவது என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

ஒருவருக்கு நல்ல உணவு கிடைக்கவேண்டும் என்றாலும் சுக்கிரன் கிரகம் நன்றாக செயல்படவேண்டும். உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லை என்றால் நீங்கள் சரியான உணவு எடுக்கமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 16, 2017

சுக்கிரன்+குரு



வணக்கம்! 
          பொதுவாக சுக்கிரனுக்கு குருவுக்கும் அந்தளவுக்கு ஒற்றுமை இருக்காது. இரண்டும் இணைந்து இருந்தால் பலன் கொடுக்கும் என்ன ஒன்று என்றால் அது கொடுக்கும் பலன் நமக்கு அதிகளவு பயன்பெறாமல் செல்லும்.

சுக்கிரன் குரு இணைந்து சுக்கிர தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் அவர் பணம் புலங்கும் தொழிலில் இருப்பார் ஆனால் அந்த பணம் அவர்க்கு சொந்தமாக இருக்காது. வேலை பார்ப்பது போல அமைந்து இருக்கும்.

ஒன்றை கொடுத்தால் ஒன்றைக்கொடுக்காது என்பது போல அமைந்து இருக்கும். ஒரு வழியில் பணத்தை கொடுத்தால் மறுவழியில் அதனை செலவு செய்ய வைக்கும். உரு சேராது என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கும்.

அனுபவத்தில் சுக்கிரன் குரு இணைந்தவர்களை பார்த்து இருக்கிறேன். இவர்கள் புண்ணியம் எல்லாம் செய்வார்கள் ஆனால் அதனால் ஒன்றும் பெரியதாக இவர்களுக்கு அமைந்துவிடாது. ஒரு சிலர் கல்விக்கு கூட தானம் எல்லாம் செய்வதை பார்த்து இருக்கிறேன்.

புண்ணியம் செய்வதிலும் கொஞ்சம் கணக்கு இருந்தால் தான் கலியுகத்தில் ஒருத்தர் வாழமுடியும் என்பதால் இதனை எல்லாம் இவர்கள் பார்த்து செய்யவேண்டும். சுக்கிரன் குரு இணைந்து ஜாதகத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 15, 2017

சுக்கிரன்+புதன்

ணக்கம்!
          சுக்கிரன் புதன் இணைந்து இருந்தால் அவர்களுக்கு அமையும் வரன் மாமன் வகையில் இருந்து வரும். சுக்கிரன் புதன் இணைவு மாமன் மகள் அல்லது மாமன் பெண் பார்த்து அதன் வழியாக திருமணம் நடைபெறுவது போல அமையும்.

சுக்கிரன் புதன் இணைந்தால் பெரும்பாலும் ஜாதகர் நல்ல இளமை தோற்றத்திலேயே இருப்பார். வயதானால் கூட அவர் இளமையில் இருப்பது போல இருப்பார். ஒரு சிலருக்கு தலை முடி கூட நரை ஏற்படாது.

சுக்கிரன் புதன் இணைந்து இருக்கும் நபர்கள் வியாபாரம் செய்தால் அவர்கள் அழகு கலை சம்பந்தப்பட்ட தொழிலை தேர்ந்தெடுக்கலாம். ஒரு சிலருக்கு பூக்களை விற்பனை செய்யும் தொழில் அமையும். ஒரு சிலர் ஆடைகளை விற்பனை செய்யும் ஏஜென்சி தொழிலையும் செய்வார்கள்.

சுக்கிரன் புதன் இணைந்து இருப்பவர்கள் பேசுவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். பெண்களை கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு பெண்களிடம் பேசினால் வம்பு வரும் ஆனால் இவர்கள் பேசினால் நல்ல அன்பு வரும்.

சுக்கிரன் புதன் இணைந்து இருப்பவர்கள் தங்களின் திறமையால் எந்த தொழில் செய்தாலும் அதில் வாடிக்கையாளர்களை பெற்று சிறந்து விளங்குவார்கள். சுக்கிரன் புதன் கெட்டு அமர்ந்தால் மேலே சொன்னதற்க்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புண்ணியம்


வணக்கம்!
          இரண்டாவது நாளாக நவ அம்மன் ஹோமம் செய்யப்பட்டுவிட்டது. முடிந்தவரை என்னுடைய வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருப்பவர்களுக்கு படங்களை அனுப்பியிருக்கிறேன். தொடர்ந்து நாளையும் நடைபெறும். 

பல நண்பர்கள் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்கின்றனர். இதில் சேர்த்துக்கொண்டு செய்யவதற்க்கு வேலை இல்லை. இந்த யாகம் செய்வதற்க்கு தேவையான அனைத்து பொருட்களையும் நான் வாங்கிவிட்டேன். இனிமேல் வாங்குவதற்க்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்துக்கொள்ளுங்கள்.

நவ அம்மன் யாகத்தை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செய்துக்கொள்ளுங்கள். நாம் ஏதாவது ஒரு புண்ணியகாரியத்தை செய்து வைத்திருந்தால் அது நம்முடைய சந்ததினர்க்கு பெரிய புண்ணியமாக போய்விடும்.

இதனை நான் அனைவருக்கும் செய்வது கூட புண்ணியம் எனக்கும் கிடைக்கும். ஒன்பது நாட்கள் ஒரு குடும்பத்திற்க்கு செய்வது என்பது வெளியில் சென்று நீங்கள் செய்வது சாத்தியமில்லாத ஒன்று. நம்முடைய வாரிசுகளுக்கு இதனை செய்து நல்லதை தேடிவைத்துவிடுங்கள்.

பெரிய தொழில் செய்பவர்கள் எல்லாம் வருடம் ஒரு முறை இதனை பெரிய பொருட்செலவில் செய்கின்றனர். நாம் அவ்வாறு செய்யமுடியவில்லை என்றாலும் ஒரு முறையாவது செய்யவேண்டும் என்று நினையுங்கள். உங்களை தேடி இந்த வாய்ப்பு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 14, 2017

சுக்கிரன்+செவ்வாய்


வணக்கம்!
          சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்து இருந்தால் அவர்களுக்கு நிலங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும். இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் இருக்கும்பொழுது அவர்களுக்கு நிலங்கள் அமையும்.

சுக்கிரன் செவ்வாய் இணைந்தால் அவர்களுக்கு பெரும்பாலும் அண்ணன் மற்றும் தம்பி வகையில் இருந்து வரன் அமைவது போல இருக்கும். இது மாதிரி அமையவில்லை என்றால் அண்ணன் அல்லது தம்பி இவர்களின் ஜாதகத்தை எடுத்து வரன் அமைத்து கொடுப்பார்கள்.

சுக்கிரன் செவ்வாய் இருந்தால் அதிகப்பட்சம் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவது போல இருக்கும். வயது ஏற ஏற இரத்த பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. மர்மபாகங்களில் ஏதாவது நோய்கள் வருவதற்க்கும் வாய்ப்பு உண்டு.

சுக்கிரன் செவ்வாய் இணைந்து பாதிப்பான பலன்கள் கொடுத்தால் அவர்களுக்கு பெண்கள் மீது அதிக நாட்டம் ஏற்பட்டு அதனால் அலைவது போல இருக்கும். ஒரு சிலருக்கு பெண்கள் வழியில் சண்டை சச்சரவுகளும் அவ்வப்பொழுது ஏற்படும். பெரும்பாலும் காதல் தோல்வி ஏற்படும்.

சுக்கிரன் செவ்வாய் இணைவதால் திருமணத்திலும் சண்டை சச்சரவு ஏற்படும். திருமண வீட்டில் அடிதடி என்று பேப்பரில் படித்திருப்பீர்கள் அல்லவா அவர்களுக்கு எல்லாம் சுக்கிரன் செவ்வாய் இணைவு ஏற்பட்டு இருக்கும்.

ஒரு சில ஜோடிகளுக்கு காவல் நிலையத்தில் வைத்து திருமணம் நடப்பது அல்லது திருமணம் முடிந்து தம்பதினர்களிடம் சண்டை சச்சரவு ஏற்பட்டு காவல்நிலையத்தில் சென்று வருவது எல்லாம் சுக்கிரன் செவ்வாய் இணைவால் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விளக்கம்


வணக்கம்!
          இன்று காலையில் நவ அம்மன் யாகம் முதல் நாள் நடைபெற்றுவிட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடைபெறும். நினைத்தைவிட மிகவும் அற்புத சக்தியை வழங்கியது.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் நடைபெற்றுவிடும். 

நேற்று பதிவில் சொல்லியவுடன் நிறைய நண்பர்கள் தங்களால் முடிந்த தொகையை அனுப்பலாமா என்று கேட்டனர். தற்பொழுது நடைபெறும் யாகத்திற்க்கு அனைத்து பொருட்களையும் ஏற்கனவே வாங்கிவிட்டேன். தினமும் பூ மட்டும் தான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவரும் கேட்டதே மிகுந்த திருப்தி கொடுத்தது. ஒவ்வொருவரும் தனித்தனியாகவே இதனை செய்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்லுவேன்.

ஒரு நாளைக்கு இந்த யாகத்தை செய்துக்கொள்ளலாமா என்று நண்பர்கள் கேட்டனர் அப்படி இதனை செய்யமுடியாது என்பதால் தான் ஒன்பது நாட்கள் செய்கிறேன். ஒரு குடும்பத்திற்க்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யவேண்டும். நவ சண்டி என்பது ஒன்பது என்பதை காட்டக்கூடிய ஒன்று. செய்வதை ஒழுங்காக செய்யவேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுவேன்.

நான் எதிர்பார்த்தைவிட நிறைய பேர் இதனை செய்ய நினைப்பது வரவேற்கதக்கது. உங்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தமாதிரி தான் கட்டணம் வைத்திருக்கிறேன். 

சுக்கிரனைப்பற்றி நிறைய பதிவுகளை தரஉள்ளேன் ஒவ்வொன்றாக இனி பார்க்கலாம். 

சுக்கிரன் உங்களின் ஜாதகத்தில் சரியில்லாத நிலையில் இருக்கின்றது என்று நினைப்பவர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பி விளக்கம் கேட்டுக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 13, 2017

நவ அம்மன் யாகம்


வணக்கம்!
          நவ அம்மன்(சண்டி) யாகம் நாளை ஆரம்பம் ஆகின்றது. நவஅம்மன் யாகத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அம்மனிடம் அதற்கு அனுமதி வேண்டி இத்தனை நாட்கள் இருந்தேன். இதனை செய்வதற்க்கு அனுமதி வந்த காரணத்தால் உடனே ஆரம்பம் ஆகின்றது.

வழக்கமாக நான்கு செங்கற்கல்லை மட்டும் யாகம் நடக்கும். தற்பொழுது கொஞ்சம் பெரியதாக செய்கிறேன். யாகத்தை உயர்த்தி செய்யவேண்டும் என்பதற்க்காக சிறிய மேடை அதன் மேல் யாக குண்டம் அமைத்து செய்யப்படுகிறது.

நவ அம்மன் யாகம் அனைவரும் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தேன். பல நண்பர்கள் அதற்க்காக தொடர்புக்கொண்டு கேட்டு வருகின்றனர். அனைவரும் செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உடனே தொடர்புக்கொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.

நவஅம்மன் நாளை காலை செய்யபோகிறேன். குறைந்தது இரண்டரை மணி நேரம் அதற்கு மேலும் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பொருட்களை வைத்து யாகம் செய்யப்படுகின்றது. ஒரு அற்புதமான யாகத்தை செய்யவிருக்கிறோம்.

ஒரு நல்ல விசயத்தை நாம் செய்வதற்க்கு தயக்கம் காட்டாமல் அனைவரும் நாமும் ஒரு முறை இப்படிப்பட்ட யாகத்தை செய்யவேண்டும் என்று முனையுங்கள். கடவுள் அருளால் இந்த வாய்ப்பு உங்களுக்கு அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் மோசமான பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது என்றால் அது வாழ்க்கை முழுவதும் மோசமான பலனை மட்டும் தந்துவிடாது. ஒரு சில காலக்கட்டத்தில் அது நல்ல பலனையும் கொடுக்க ஆரம்பிக்கும்.

இளைமையில் சுக்கிரன் மோசமாக இருந்து பலனை கொடுத்தால் அது ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு நல்ல பலனை கொடுக்கும். மனிதன் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்துவிடகூடாது என்பதால் அது இயற்கையாகவே மாறி நல்ல பலனை கொடுக்கிறது.

நாம் ஒரு ஜாதகத்தை எடுத்து சுக்கிரன் சரியில்லை என்று நாம் சொல்லிவிடமுடியாது. அவர் அவர்களின் பூர்வபுண்ணியத்தை பொறுத்து மாறிவிடும். நல்ல பலனை கொடுக்க ஆரம்பித்துவிடும். ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை முழுவதும் எதுவும் கொடுக்காமல் பலிவாங்கும்.

சுக்கிரன் மற்றும் குரு போன்ற கிரகங்கள் புத்தியில் தான் கை வைக்கும். இந்த இரண்டு கிரகங்களும் சரியில்லை என்றால் புத்தி ஒழுங்காக வேலை செய்யாமல் எதிலும் முடிவு எடுக்காமல் சென்றுவிடுவார்கள்.

சுக்கிரன் ஒருவருக்கு அதிகப்பட்சம் மோசமான பலனை தந்தால் அவர் திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளமாட்டார். திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள். கடைசி வரை திருமணம் செய்யாமல் பிரம்மசாரியாகவே இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 11, 2017

நவஅம்மன் யாகம் விளக்கம்


ணக்கம்!
          பல நண்பர்கள் நவஅம்மன் யாகத்தைப்பற்றி கேள்வி கேட்டனர். நவ சண்டி யாகம் என்பதை தான் பெயர் மாற்றி நவ அம்மன் யாகம் என்று சொல்லிருக்கிறேன்.

நவ சண்டி யாகத்தை பெயர் மாற்றி வைப்போம் என்று தான் நவஅம்மன் என்று பெயர் போட்டு இருக்கிறேன். ஒன்பது நாட்கள் என்பது மிகவும் விஷேசமான ஒன்று. அம்மன் என்றாலே ஒன்பது அதுபோல கிரகங்களும் ஒன்பது. ஒன்பது நாட்கள் செய்யப்படும் யாகம் சிறப்பு வாய்ந்த ஒன்று.

ஒரு குடும்பத்தினர்களுக்கு ஒன்பது நாட்கள் செய்கிறேன். அதிகப்பட்சமாக ஒரு வருடத்திற்க்கு பத்து பேருக்கு செய்யலாம். மற்ற வேலைகள் இருப்பதால் இதனை அதிகமாக செய்யமுடியாது. ஒன்பது நாட்கள் ஒதுக்கப்படவேண்டும்.

ஜாதககதம்பத்தில் உள்ளவர்களுக்கு இதனை அறிவித்தது ஒரு சேவை நோக்கத்தில் அறிவித்தேன். நிறைய பேர்கள் தொடர்புக்கொண்டுள்ளனர் என்பது நல்ல விசயம். வெளியில் கண்டிப்பாக இதனை செய்வதற்க்கு குறைந்தது இரண்டு லட்சம் கேட்பார்கள். நான் கேட்ட தொகை சரியாக அதனை செய்வதற்க்கு உள்ள தொகையை கேட்டுள்ளேன். இதனை அனைவராலும் கட்டமுடியும்.

எப்பேர்பட்ட தோஷத்தையும் நீக்கவல்ல ஒரு யாகம் இது. கண்டிப்பாக நல்ல விடை கிடைத்துவிடும். பணக்காரர்கள் மட்டும் செய்யக்கூடிய ஒன்றை அனைவரும் செய்வது போல கொடுத்திருக்கிறேன். நாமும் இதனை செய்யவேண்டும் என்று நினைத்து உடனே தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 10, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.




அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு ராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.  
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள். 
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

  மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர்.
அம்மன் பூஜை நடைபெறுவதால் அம்மனிடம் வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 9, 2017

நவ அம்மன் யாகம்


ணக்கம்!
          அம்மன் பூஜை முடிவடைந்தவுடன். நவ அம்மன் யாகம் என்ற ஒன்றை நடத்த இருக்கிறோம். நவ அம்மன் யாகம் என்பது நவ சண்டியாகத்திற்க்கு இணையானது. 

ஒன்பது நாட்கள் செய்யப்படும் இந்த யாகம் வாழ்வில் ஏற்படும் எப்பேர்பட்ட பிரச்சினைகளையும் மற்றும் நாம் வாங்கும் சாபம் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவம் எல்லாவற்றையும் நீக்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்கும்.

இதனை கோவில்களில் நவசண்டியாகம் என்று செய்வார்கள். பெரிய கோவில்களிலேயே இதனை மூன்று தினங்கள் மட்டும் செய்வார்கள். ஒன்பது நாட்கள் நடத்துவது மிக மிக குறைவு. பெரிய பொருட்செலவில் இதனை நடத்தவேண்டும் என்பதால் இதனை மூன்று நாட்களில் நடத்தி முடித்துவிடுவார்கள்.

நான் பார்த்த வரையில் கோவில்களில் கடைசி நாள் மட்டும் சண்டிக்கு என்று யாகம் செய்கின்றனர் மற்ற நாட்களில் விநாயகர் மற்றும் மற்ற தெய்வங்களுக்கு யாகம் செய்கின்றனர். நாம் அப்படி செய்யாமல் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு என்றே செய்ய இருக்கிறோம்.

பெரியளவில் தொழில் செய்பவர்கள் மற்றும் பணக்காரர்கள் அனைவரும் இதனை செய்கின்றனர். வருடத்திற்க்கு ஒரு முறை இதனை செய்கின்றனர். அவர்களுக்கு வரும் சாபத்தை போக்க இதனை செய்வார்கள் ஆனால் அனைவரும் செய்யவேண்டும் என்பது தான் உண்மை.

நாம் ஒன்பது நாட்கள் இதனை செய்ய இருக்கிறோம். நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் மற்றும் சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள் இதனை செய்வதற்க்கு உதவினார்கள்.

வெளி இடங்களில் லட்சக்கணக்கில் இதனை வாங்கிக்கொண்டு செய்வார்கள் அப்படி இல்லாமல் இதனை  மிக குறைந்த விலையில் செய்ய இருக்கிறோம். உங்களால் கொடுக்கும் முடியும் ஒரு கட்டணம் தான் இதற்கு என்று வைத்திருக்கிறோம். ஒன்பது நாட்கள் ஒருவருக்கு என்று இதனை செய்யும்பொழுது கண்டிப்பாக அதிகபடியான நன்மைகளை பெறமுடியும் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லுகிறேன்.  கண்டிப்பாக எப்படியும் நாம் செய்யவேண்டும் என்று நினையுங்கள். உங்களுக்கான வாய்ப்பு அதுவாகவே அமையும். 

சுக்கிரனால் ஏற்படும் சாபத்திற்க்கு இந்த யாகத்தை செய்துக்கொள்ளலாம். தேவையானவர்கள் என்னை தொடர்புக்கொண்டு இதனைப்பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.

நவ அம்மன் யாகம் தொடங்கும் தேதியை பதிவில் சொல்லுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன் தரும் ஆன்மீகவித்தை


ணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது வித்தையும் குறிக்கும் ஒரு கிரகம். வித்தை என்றால் அது ஆன்மீக வித்தை. ஆன்மீகவித்தையை செய்பவர்கள் அனைவரும் சுக்கிரனின் காரத்துவத்தில் வருபவர்களாக தான் இருப்பார்கள்.

முதலில் ஆன்மீகவித்தையை ஒருவர் செய்யவேண்டும் என்றால் அம்மனின் அருள் கண்டிப்பாக வேண்டும். அம்மனின் அருள் இல்லை என்றால் ஆன்மீகவித்தையை ஒருவர் செய்துவிடமுடியாது. அம்மன் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வரும்.

ராகுவோடு சேரும் சுக்கிரன் நிறைய ஆன்மீகவித்தையை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கொடுக்கும். ராகு என்றாலே கொஞ்சம் வில்லங்களை கொண்டது தானே. சும்மா இருக்காமல் எதையாவது செய்துக்கொண்டே இருப்பார்கள்.

தேவர்கள் என்றால் அவர் வேலை உண்டு என்று இருப்பார்கள். அசூரர்கள் என்றால் சும்மா இருப்பார்களா  பிறரை வேண்டும் என்றே வம்புக்கு இழுப்பார்கள் அல்லவா. ராகுவோடு சேரும் சுக்கிரன் இப்படிப்பட்ட வேலைகளை அதிகமாக செய்வார்கள்.

ஆன்மீகவித்தை நல்லவழியாக இருந்தால் அது ஓடிக்கொண்டு இருக்கும். தீயவழியை நோக்கி சென்றால் கதை முடிவடைந்துவிடும். கொஞ்சநாளில் அது முடிவடையும். எங்கையாவது சென்று மாட்டிக்கொண்டு விடுவார்கள்.

சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்ற வித்தை நல்லவழியிலும் செல்லும். ராகுவோடு மட்டும் சுக்கிரன் சேர்ந்தால் மட்டுமே அது தீயவழிக்கு செல்லும். சுக்கிரன் தனித்து நின்றால் நல்லவழிக்கே ஆன்மீகவித்தையை செய்வார்கள்.

மழை குறைந்துவிட்டது. அம்மன் பூஜை விரைவில் நடத்தப்படும். காணிக்கை செலுத்துபவர்கள் உடனே செலுத்திவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 8, 2017

சுக்கிரன்

ணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது காமசக்தியை குறிக்கும் ஒரு கிரகம் என்று சோதிடத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். காமசக்தி உடலில் குறைய குறைய உங்களுக்கு முதுமை வந்துவிடுகிறது.

குளிர்காலத்தில் நிறைய நோய்கள் வந்துவிடுகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால் நோய்கள் வந்துவிடுகின்றன. உண்மையில் காமசக்தி நன்றாக இருந்தால் உடலில் எந்த நோயும் வராது. சுக்கிரன் நன்றாக இருந்தால் உடலில் நோய் வராது என்பதை சொல்லுகிறேன்.

கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம் என்பது போல நாம் உடல் மீது அதிகம் கவனம் வைக்காமல் இருந்துவிடுகிறோம். நோய் வந்த பிறகு தான் உடல் மீது கவனம் வைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

சுக்கிரனின் சக்தியை ஒருவர் வாழ்நாள் முழுவதும் பெற்றுவிட்டால் அவர்க்கு ஆயுள் அதிகம் என்று சொல்லலாம். சனிக்கிரகம் ஆயுள்கிரகம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஆயுளை நீட்டிக்க சுக்கிரன் அருள் அளபரிய வேண்டும் என்பது தான் உண்மை. 

நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் சரி அல்லது வயது அதிகமாக இருந்தாலும் சரி உணவு விசயத்தில் எப்படி இருக்கின்றீர்கள் உங்களுக்கு சுக்கிரனின் அருள் இருக்கின்றதா என்பதை அறிந்துக்கொண்டு செயல்படுங்கள். நீண்ட ஆயுளை பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 7, 2017

பிரச்சினை உடனே தீர வழி

ணக்கம்!
          ஒரு வேலைக்கு செல்கிறோம் அப்பொழுது தடைகள் வருகின்றன அல்லது ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அப்பொழுது எந்த தெய்வத்தை வணங்கலாம் என்று ஒரு கேள்வியை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

இந்த மாதிரியான நேரத்தில் தெய்வ உபாசனை பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் அவர்களின் தெய்வத்தை வேண்டலாம். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு முழுமையாக இருந்தால் குலதெய்வத்திடம் வேண்டலாம்.

மேலே சொன்னதை விட ஒரு ஞானியின் புத்தகம் இருந்தால் அந்த புத்தகத்தை எடுத்து படித்தால் உடனே உங்களுக்கு பிரச்சினை தீரும். புத்தகம் இல்லை என்றால் அவரை உருவத்தை மனதில் நிறுத்தி எனக்கு இதனை தீர்க்கவேண்டும் என்று வேண்டினால் உடனே தீரும்.

ஞானம் அடைந்தவர்களின் ஆசி இருந்தால் அனைத்தையும் நாம் சாதித்துவிடலாம். ஆசி இருப்பதற்க்கு நாமும் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும். ஒழுக்கமானவராக என்றால் சத்தியத்தை பேசுபவர்களாக இருந்தால் இது எளிதில் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களுக்கு ஒய்வு இருக்கும் நேரத்தில் ஞானியின் புத்தகங்களை எடுத்து படித்துக்கொண்டு அவர்கள் சொல்லும் வழியை நீங்கள் பயிற்சி செய்துக்கொண்டே இருந்தாலே பல விசயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு