Followers

Sunday, July 31, 2016

சூரியன்


ணக்கம்!
          சூரியன் ஒருவருக்கு மறைந்தால் என்ன நடக்கும் என்பதை கடந்த சூரியன் பதிவில் சொல்லிருந்தேன். சூரியன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அந்த நபருக்கு அரசாங்க வழியில் நல்லது நடக்கும்.

அரசாங்க ஊழியர்கள் என்று எடுத்துக்கொண்டாலே அவர்களுக்கு சூரியன் கிரகம் நன்றாக இருக்கு்ம். சோதிடம் உண்மை என்று உரைக்க அரசாங்க ஊழியர்களில் ஜாதகத்தை எடுத்து பார்த்தாலே புரியும். சூரியன் நல்ல நிலைமையில் அவர்களுக்கு இருக்கும்.

அரசாங்க ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் ஒரு சில ஜாதகர்களுக்கு சூரியன் நன்றாக இருக்கும். அவர்கள் அரசாங்கம் வழியில் ஏதாே ஒரு வழியில் நன்றாக சம்பாதிப்பார்கள். 

ஒரு சிலருக்கு ஒரு மாதத்தில் மட்டும் பிரச்சினை அதிகம் இருக்கும் அவர்களுக்கு அந்த மாதத்தில் கோச்சாரப்படி சூரியன் இருக்கும் வீடு சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

சூரியனை வைத்து எல்லாம் யார் பலன் சொல்லுகின்றார்கள் அனைத்தையும் பார்த்தால் ஒரு சில நேரத்தில் நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் ஜாதகத்தை எடுத்து சூரியன் எங்கு இருக்கின்றது என்று பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 30, 2016

வேலையாட்கள் அமைய என்ன செய்யவேண்டும்?


ணக்கம்!
          தொழிலாளர் அதிகமாக இருக்கும் நகரமான திருப்பூர் வந்திருக்கிறேன். தொழிலாளர்களை பற்றி நிறைய சோதிடத்தில் சொல்லிருக்கிறார்கள் அதாவது நமக்கு வரும் தொழிலாளர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லியுள்ளார்கள்.

நமக்கு எப்படிப்பட்ட வேலையாட்கள் அமைவார்கள் என்பதை சோதிடத்தில் சொல்லியுள்ளார்கள். ஒரு தொழில் அமைவதற்க்கு பணம் மட்டும் போட்டால் போதாது நல்ல தொழிலாளியும் அமையவேண்டும் என்பார்கள். 

நல்ல வேலையாட்கள் அமைந்தால் தான் தொழில் நன்றாக நடக்கும். வேலையாட்கள் சரியில்லை என்றால் என்ன தான் பணம் போட்டாலும் தொழில் நடக்காது.

நான் பார்த்த பல பெரிய முதலாளிகளுக்கு எல்லாம் ஆறாவது வீட்டில் தீயகிரகங்கள் வலுவாக அமர்ந்து இருக்கும். மறைவு ஸ்தானமான ஆறாவது வீட்டில் தீயகிரகங்கள் அமைந்தால் அவர்கள் வாழ்க்கையும் நன்றாக இருக்கின்றது நல்ல வேலையாட்களும் கிடைக்கிறார்கள்.

ஆறாவது வீட்டைப்பற்றி பழைய பதிவில் நிறைய எழுதியுள்ளேன். அதனை எடுத்து படித்து பாருங்கள். உங்களுக்கு நிறைய புரியும். உங்களுக்கு வேலையாட்கள் அமையவில்லை என்றால் ஆறாவது வீட்டிற்க்கு என்ன செய்யவேண்டும் என்பதை பார்த்து செய்யுங்கள். அதாவது ஆறாவது வீட்டு கிரகத்தை எப்படி பலப்படுத்துவது என்பதைப்பற்றி பார்க்கவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 29, 2016

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரகிரகம் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர் சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார். அதிகமாக சுக்கிரன் கிரகம் சுத்தமாக கெட்டுபோகாது. ஒரளவு தன்னுடைய பலனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும்.

சுக்கிரன் ஒரளவு நல்ல பலனை கொடுத்துக்கொண்டு இருப்பதால் தான் மக்களுக்கு சாப்பாடு தட்டுபாடு இல்லாமல் கிடைக்கிறது. ஒருவருக்கு உணவு கிடைக்க சுக்கிரன் தான் காரகமாக இருக்கின்றார். இன்றைய காலத்தில் ஒரளவுக்கு அனைவருக்கும் உணவு தட்டுபாடு இல்லாமல் கிடைப்பதற்க்கு இவர் தான் காரகம்.

சுக்கிரன் தன்னுடைய கருணையை காட்டுவதால் தான் உலகத்தில் மழையே பெய்கிறது. நல்லமழையை பொழிந்து நாட்டை செழிப்பாக வைத்திருப்பதற்க்கும் காரகமாக இருக்கிறார்.

சுக்கிரன் ஒருவருக்கு அதிகமாக பலன் கொடுக்கும்பொழுது அவர் செல்வ செழிப்போடு இருக்கிறார். அனைத்து செல்வங்களும் அவரை நோக்கி வருகிறது.

சுக்கிரன் ஒருவருக்கு சரியில்லை என்றால் மனைவி சரியாக அமைவதில்லை. மனைவி அமைந்தால் கூட ஏனோ தானோ என்று இருப்பார். தன்னுடை வாழ்க்கை வீணாக போய்விட்டது என்று கவலைப்படவைக்கும். 

சுக்கிரனின் காரத்துவம் அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. சுக்கிரன் நன்றாக இருந்தாலும் சரி நன்றாக இல்லாவிட்டாலும் சரி தன்னுடைய வாழ்க்கையை நன்றாக வைத்துக்கொள்ள அம்மன் வழிபாடு செய்யுங்கள்.

நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 28, 2016

கிரகப்பெயர்ச்சி


ணக்கம்!
         ஒவ்வொரு கிரக பெயர்ச்சிக்கும் பெரிய அளவில் பயமுறுத்துவது சோதிடர்களின் வேலையாக இருக்கும். கோச்சாரபலன்கள் எல்லாம் பெரிய அளவில் வேலை செய்வதில்லை என்பது மட்டும் உண்மை. ஒரளவு வேலை செய்யும்.

எந்த கிரகப்பெயர்ச்சி நடந்தாலும் அதில் ஒரு குறிப்பு ஒன்று தருவார்கள். அதாவது உங்களுக்கு குரு தசா நடந்தால் பலன் மாறுபடும் என்று சொல்லுவார்கள். இதனை நான் படித்தது எல்லாம் பல வருடங்கள் சென்றுவிட்டது. அந்த காலத்தில் எல்லாம் இப்படி போடுவார்கள்.

குரு தசா நடந்தால் பிரச்சினை இல்லை என்று சொல்லுவது ஏன் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு நிறைய பிடிப்படும். குரு கிரகம் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானத்திற்க்குரிய வேலையை செய்யக்கூடிய கிரகம்.

நமக்கு பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் நமக்கு வரக்கூடிய எப்பேர்பட்ட கெட்ட கிரகத்தின் பெயர்ச்சியும் நம்மை தாக்காது என்பது நன்றாக தெரிகிறது.

குரு தசா நமக்கு நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாம் பாக்கியஸ்தானம் சொல்லக்கூடிய வேலையில் கவனத்தை செலுத்தினால் நமக்கு ஏற்படக்கூடிய தீயகிரகத்தின் பாதிப்பில் இருந்து விலகிவிடலாம்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்களை சந்திப்பதாக இருக்கிறேன். சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 27, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
          ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். இலவச சேவையில் பரிகாரம் பரிந்துரை செய்வீர்களா அல்லது பரிகாரத்தை நீங்கள் செய்து தருவீர்களா என்று கேள்வி கேட்டுருந்தார். 

முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். நான் யாருக்கும் பரிகாரம் அதிகம் பரிந்துரை செய்வதில்லை. பரிகாரம் சொன்னாலும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் அதிகம் பட்சம் ஒரு தீபம் ஏற்றி வரச்சொல்லுவது உண்டு. அதுவும் ஒரு ஒன்பது வாரத்திற்க்கு மட்டும் செய்யுங்கள் என்று சொல்லுவது. 

வெளியூர் கோவில்கள் எல்லாம் நான் சொல்லுவது கிடையாது. நமது பரிகாரம் அனைத்தும் முடிந்தளவுக்கு உங்களின் ஊர்களில் செய்யகூடிய ஒன்றாக இருக்கும். இதுவரை நீங்கள் செய்து வந்த விசயத்தை கொஞ்சம் ஒழுங்கு முறையோடு செய்யக்கூடிய ஒன்றாக சொல்லுவது உண்டு.

குலதெய்வ வழிபாட்டை கூட உங்களின் வீட்டில் இருந்தே செய்வது எப்படி என்று தான் வழிகாட்டியுள்ளேன்.  வெளியூர் சென்று வருவதற்க்கு நேரம் மற்றும் பணம் விரையம் ஏற்படுவதால் அதனை எல்லாம் நான் சொல்லுவது கிடையாது.

ஆன்மீகத்தில் ஒரு சில விசயத்தை கடைபிடித்து வரும்பொழுது நமது நிலை உயரும். அந்த நிலை வந்த பிறகு உங்களுக்கு பரிகாரம் செய்யலாம். அப்பொழுது கூட உங்களின் பணம் மற்றும் உங்களின் தேவை என்ன என்பதை பொறுத்து தான் இதனை எல்லாம் செய்வது உண்டு.

முதலில் உங்களின் தரத்தை கொஞ்சம் உயர்த்திக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்கு பல யோசனை உருவாகும் அதன் பிறகு பரிகாரம் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.

ஐாதகத்தை பார்த்துவிட்டு அதில் என்ன இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதன்படி வாழ ஆரம்பித்து கொஞ்சம் உயர்ந்தவுடன் பரிகாரம் எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஒன்றும் இல்லாமல் பரிகாரம் எல்லாம் தேவையில்லை.

பரிகாரம் நான் செய்வது எல்லாம் பல வருடங்களாக தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பரிகாரம் பரிந்துரைக்கிறேன். இவர்கள் எல்லாம் வசதி வந்தவுடன் தான் இந்த மாதிரி இறங்குகிறார்கள். உடனே இறங்குவதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 26, 2016

கிரகத்தின் இரட்டை தன்மை


வணக்கம்!
          ஒரு கிரகம் ஏன் நம்மை அதிகம் தாக்குகிறது. அந்த கிரகத்தின் காரத்துவம் உடைய ஒன்றும் நாம் இதுவரை செய்யவில்லை என்று அர்த்தம். நாம் ஒன்று நல்லவனாக இருக்கிறோம் இல்லை என்றால்  ஒரே கெட்டவனாக மாறிவிடுகிறோம்.

இரண்டையும் சேர்த்து இருப்பதில்லை. நீங்கள் கெட்டவனாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. நல்லவனாக இருங்கள் கெட்ட சமாச்சாரம் உடைய வேலையிலும் கொஞ்சம் தலைகாட்ட வேண்டும். இது எப்படிங்க என்று கேட்கலாம்.

நமக்கு விரைய வீடு என்று சொல்லும் பனிரெண்டாவது வீட்டின் காரத்துவம் உடைய வேலையை நாம் செய்வதில்லை. அதாவது செலவே செய்வதில்லை. செலவே செய்யவில்லை என்றால் அனைத்தையும் சேர்த்து ஒரு நாள் மருத்துவசெலவு செய்ய நேரிடும்.

இதனை எப்படி நாம் கெட்ட வேலை செய்வது என்று கேட்கலாம். நீங்கள் நல்லவனாகவே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு ஏழையின் திருமணத்திற்க்கு ஏதோ உங்களால் முடிந்த பண உதவி செய்துவிடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு ஏழை மருத்துவமனையில் இருக்கிறார் என்றால் அந்த ஏழையை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு ஏதோ உங்களால் முடிந்த உதவியை செய்துவிட்டு வரலாம்.

நாம் மருத்துவமனைக்கும் சென்று விட்டோம் அதோடு செலவையும் செய்துவிட்டோம் என்று நாம் விரைய வீட்டிற்க்கு உள்ள காரத்துவத்தை செய்துவிட்டு வந்துவிடலாம்.

சரி நாம் இப்படி செலவு செய்வது சரியில்லை. இது ஒரு பாக்கியஸ்தானத்தை தான் குறிக்கிறது இது தர்ம கணக்கில் வருகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களின் பகுதியில் குடிக்காரர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மது குடிப்பதற்க்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு வந்துவிடலாம்.

இரண்டு தன்மையும் நீங்கள் தொட்டுவந்துவிட்டதாக உங்களின் மனம் உணர்ந்துவிடும் ஒரளவுக்கு இந்த பரிகாரம் உங்களுக்கு பலன் தரும். முழுமையான பலன் வேண்டும் என்று நினைத்தால் அதற்குரிய பரிகாரத்தை செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 25, 2016

புதிய அறிவிப்பு


ணக்கம்!
          ஒவ்வொருவரின் வேண்டுதலையும் அனுப்பி சொல்லிருந்தேன். பலர் அனுப்பியுள்ளனர் இதுவரை அனுப்பாதவர்களும் தங்களுடைய வேண்டுதலை அனுப்பி வையுங்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது அந்தந்த ஊர்களில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்க்கு முன்கூட்டியே தகவலை தருவது உண்டு. பல நண்பர்கள் இப்படி சந்தித்து உள்ளனர். அனைவரும் பணம் செலுத்தி தங்களின் ஜாதகத்தை பார்ப்பார்கள். 

இலவச சேவை புது முயற்சியாக தொடங்கியுள்ளேன். இதற்கு என்று பல நண்பர்கள் உதவி செய்துள்ளனர். அதாவது ஒவ்வொரு ஊருக்கும் செல்வதற்க்கு தேவையான பண உதவியை அந்தந்த ஊர்களில் உள்ள ஏற்கனவே நமது ஜாதக கதம்ப நண்பர்கள் செய்துள்ளனர். 

உங்களின் ஊர்களுக்கு வரும்பொழுது உங்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டி இலவச ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். இலவச ஆலோசனை என்பதை எனக்கு முன்கூட்டியே தெரிவித்துக்கொள்ளுங்கள். அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இலவச சேவையில் கேலியான கேள்விகளை தவிர்க்க பாருங்கள். டைம் பாஸ் செய்வதற்க்கு உள்ள இடம் அது கிடையாது. அந்த நேரத்தில் ஒரு மனிதனுக்கு நம்மால் உதவி முடியும் என்பதை புரிந்துக்கொண்டு கேள்விகளை கேளுங்கள். 

எப்படி சாத்தியப்படுகிறது ?

நமது நண்பர்கள் ஒரு சிலர் நல்ல ஆதரவை எனக்கு தருகின்றனர். ஒரு சில பரிகாரம் மற்றும் பூஜையில் பல செல்வந்தர்கள் நிறைய பணத்தை கொடுத்து உதவுகின்றனர். அவர்களால் இது எல்லாம் சாத்தியப்படுகிறது. 

ஒவ்வொரு ஊருக்கும் வரும்பொழுது அந்தந்த ஊர்களில் உள்ள பழைய நண்பர்கள் மறுமுறையும் என்னை வந்து சந்தித்து விடுங்கள். உங்களின் வளர்ச்சிக்கு அது உதவும். 

இந்த வார இறுதியில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 24, 2016

சூரியன்


ணக்கம்!
          ஒருவருக்கு சூரிய கிரகம் நன்றாக இருந்தால் அவர் ஆத்மா நன்றாக இருக்கும். அதாவது நல்ல நிலையில் இருக்கும். சூரியன் சரியில்லை என்றால் ஆத்மா நன்றாக இருக்காது.

ஆன்மீகத்தில் ஆன்மசாதனை செய்பவர்களுக்கு தான் இதனைப்பற்றி தெரியும். ஆன்மசாதனையில் சக்தியை எடுப்பவர்களுக்கு இதனைப்பற்றி நன்றாக தெரிந்துக்கொள்ளமுடியும்.

சூரியன் நன்றாக இருந்தால் அவர்களுக்கு சக்தி எந்த நேரமும் இருக்கும். சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அவர்களுக்கு ஆன்மாவின் சக்தி அடிக்கடி குறைந்து மறுபடியும் ஏறும். 

சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட நிலை இருக்கும். அதாவது மறைவுஸ்தானத்தில் இருந்தால் அடிக்கடி நோயும் ஏற்படும்.

அடிக்கடி சோர்வு ஏற்படுவது போல் இருக்கும். மறுபடியும் சகஜநிலைக்கு வரும். இது எல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக இருப்பவர்களுக்கு தெரியும். இரண்டு கால்களிலும் இறக்கை கட்டி பறப்பவர்களுக்கு எல்லாம் தெரியவதற்க்கு வாய்ப்பு இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 23, 2016

புண்ணியம்


ணக்கம்!
          ஆடி மாதம் என்பதற்க்காக அதனைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்த காரணத்தால் சோதிடபதிவை தரமுடியவில்லை. சோதிடத்தில் உள்ள பிரச்சினையை சரி செய்வதற்க்கு தான் இப்படிப்பட்ட விழாகளை எல்லாம் வைத்திருக்கிறார்கள்.

உடல் முழுவதும் எண்ணையை பூசிக்கொண்டு மண்ணில் உருண்டால் ஒட்டுகிற மண் தான் ஒட்டும். அதாவது நமக்கு எந்த மண் உடலில் ஒட்டவேண்டும் என்று இருக்கின்றதோ அது தான் நமக்கு ஒட்டும். 

ஜாதககதம்பத்தை அதிகபேர் படிக்கின்ற ஆட்கள் இருக்கின்றனர். ஜாதக கதம்பத்தில் வருகையை குறைவாக காட்டும் ஆனால் மொபைலில் பல நண்பர்கள் படிப்பது எல்லாம் எண்ணிக்கையில் வருவதில்லை. அதிகம் பேர் படிப்பதற்க்கு காரணம் என்ன என்பதை சொல்லவரவில்லை. இதனை எல்லாம் தேடி படிக்க காரணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்திக்கும் பிரச்சினை தான். நம்ம அப்பா ஒழுங்காக இருந்தால் நாம் இதனை எல்லாம் ஏன் தேடி படிக்க போகிறோம்.

நம்ம அப்பா ஒழுங்காக புண்ணியத்தை செய்தால் நமக்கு நல்லது நடந்து இருக்கும். புண்ணியத்தை செய்தால் ஒட்டுகிற மண் நிறைய ஒட்டும். புண்ணியத்தை செய்திருந்தால் நாம் இந்த நேரம் ஒவ்வொரு நாடாக பறந்து சென்றுக்கொண்டிருப்போம்.

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நம்மை தாக்குகின்றது என்றால் சும்மா தாக்குவதில்லை. நம்முடைய கணக்கில் புண்ணியம் இல்லை என்று தான் அர்த்தம். கிரகங்களை சமாளிக்க முதலில் புண்ணியத்தை செய்து விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 22, 2016

ஆடி வெள்ளி


ணக்கம்!
          இன்று ஆடி வெள்ளி என்பதால் காலையில் இருந்து பூஜை மற்றும் ஹோம வேலையில் இருந்தேன். தற்பொழுது தான் அதனை எல்லாம் முடித்துவிட்டு பதிவை தருகிறேன்.

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்காக சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதற்கு என்று நமது நண்பர்கள் பணம் செலுத்தியுள்ளனர். அனைத்து நண்பர்களிடமும் வேண்டுதலையும் அனுப்ப சொல்லிருந்தேன். அவர்களுக்காகவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஆடி மாதம் என்பதால் நீங்களும் ஒவ்வொரு சக்தி வாய்ந்த அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அன்று தவறாமல் கோவிலுக்கு சென்றுவிடுங்கள்.

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஒரு நண்பரின் பேரில் அவருக்கு என்று சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் அம்மனுக்கு நடைபெற்றது. பொதுவேண்டுதல் வைத்து நேற்று வரை மெயில் செய்தவர்களுக்கு வேண்டுதல் வைத்திருக்கிறேன். இன்று பல மெயில்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக செய்யப்படும். இதுவரை அனுப்பாத நண்பர்கள் அனைவரும் அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 21, 2016

விளக்கம்


ணக்கம்!
             காலையில் எழுதிய பதிவை படித்துவிட்டு ஒரு சில நண்பர்கள் மட்டும் அனுப்பியிருந்தனர். பலர் அனுப்பவில்லை என்று நினைக்கிறேன். இது இலவச சேவை என்றாலும் இதனால் எந்த பிரச்சினை எனக்கு ஏற்படாது என்றும் எனக்கு நன்கு தெரியும். இதில் சென்று நாம் அனுப்பவேண்டாம் ஏழையாக உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

அனைவரும் அனுப்புங்கள் என்று நான் சொல்லிவிட்டேன். பொதுவாக இந்த உலகத்தில் ஏழையாக இருப்பவன் வாழ்ந்துவிடலாம். அதிக பணக்காரனும் வாழ்ந்துவிடலாம். இந்த நடுத்தரவர்க்கத்தில் வாழ்க்கிறவன் மட்டும் வாழ்வது கடினமான ஒன்று. 

அனைவரும் இதில் பங்குபெற்று உங்களின் விருப்பதை வேண்டுதலாக சொல்லிவிடுங்கள். அம்மன் கண்டிப்பாக உங்களுக்கு நடத்திக்கொடுக்கும். இதற்கு கட்டணம் என்பது கிடையாது. 

ஒவ்வொருவரும் தங்களின் வேண்டுதலை அனுப்பிவையுங்கள். உங்களின் வேண்டுதலை அம்மனிடம் சேர்க்கிறேன். அனைவரும் நன்றாக வாழ்வதற்க்கு இப்படிப்பட்ட பல வழிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். மேலும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்ல வாய்ப்பு


ணக்கம்!
          ஆடி மாதத்தில் ஒவ்வொருவருக்கும் தனியாக பூஜை செய்யப்படுவது உண்டு. அதனைப்பற்றி அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்தேன்.

ஆடி மாதத்தில் தனியாக பூஜை செய்வதற்க்கு என்று பணம் ஒரு சில நண்பர்கள் அனுப்பி வைத்தனர். அதனை வைத்து அனைவருக்கும் செய்யுங்கள் என்று சொல்லிருந்தனர். ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் நடைபெறும் பொதுவான பூஜைக்கு என்று அனைவரிடமும் இருந்து பணம் அனுப்ப சொல்லுவது உண்டு. பொதுவான அம்மன் பூஜையைப்பற்றிய அறிவிப்பு பிறகு வரும்.

உங்களுக்கு என்று ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று நோக்கத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உங்களின் கோரிக்கை அதுவும் நீண்டநாள்கள் உள்ள கோரிக்கையை அனுப்புங்கள். ஒவ்வொரு நாளும் நடைபெறும் பூஜையில் அந்த கோரிக்கையை வைக்கிறேன்.

கோரிக்கை என்றவுடன் உங்களின் அனைத்து கோரிக்கையும் வைக்கவேண்டாம். எது உங்களுக்கு முக்கியமாக இருக்கின்றதோ அதனை அனுப்புங்கள்.


கோரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரி : astrorajeshsubbu@gmail.com


முற்றிலும் இலவச சேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கோரிக்கையை அனுப்பும்பொழுது உங்களைப்பற்றி விபரத்தை அனுப்புங்கள்.

உங்களின் பெயர்
உங்களின் தந்தை மற்றும் தாயார் பெயர்
எந்த ஊர்
எந்த நட்சத்திரம் மற்றும் இராசி

உங்களைப்பற்றிய ஒரு சிறிய தகவல்கள் இருந்தாலும் அனுப்பிவைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 20, 2016

புத்தி கிரகம் புதன்


ணக்கம்!
          ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு தகுந்தவாறு பலன்களை பார்த்து வருகிறோம். இன்று புதன்கிழமை. புதன்கிழமையை சார்ந்து பதிவை பார்க்கலாம். 

ஒரு மனிதன் கல்வி கற்றால் அவன் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பார்கள். அறிவை கிரகம் புதன் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவர்க்கு சிறந்த அறிவு இருக்கும் என்று சோதிட சாஸ்திரம் சொல்லுகின்றது.

நிறைய விசயங்களை மனம் சேகரித்துவிட்டால் அவன் அதனை கொண்டு தன்னுடைய வாழ்க்கை மேம்படுத்திக்கொள்ளமுடியும். அனைத்தையும் தெரிந்து ஏதாே ஒரு வழியை தேர்ந்தெடுத்து அந்த வழியில் செல்லும்பொழுது அனைத்தையும் சாதித்துவிடுகிறான். 

சோதிடசாஸ்திரத்தில் கூட புதன் நன்றாக அமையபெற்றவர்கள் யாரிடமும் உதவி கேட்காமல் தனியாக முன்னேற்றம் அடைந்துவிடுவார்கள் என்று சொல்லியுள்ளார்கள். 

புதன் கல்விக்கு காரகன் வகிக்கிறார் என்பதால் கல்விதுறையில் திகழ புதன் கிரகம் ஜாதகத்தில் நன்றாக அமையவேண்டும். இன்று கல்விதுறையை வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் புதன் நன்றாக இருக்கின்றது என்று நினைக்கவேண்டாம். அவர்களிடம் செல்வம் இருக்கின்றது. கல்வியை விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள்.

உடனடி பலன்

எந்த ஒரு கிரகமும் தன்னுடைய பலனை கொடுப்பதற்க்கு நாள்கள் எடுக்கும் ஆனால் புதன் உடனே பலனை கொடுத்துவிடும். புதன்தசா ஆரம்பித்த உடனே பலனை எதிர்பார்க்கலாம்.

இரண்டு கிரகங்கள் தன்னுடைய பலனை உடனே கொடுக்கும். ஒன்று சந்திரன் அடுத்த ஒன்று புதன். இந்த இரண்டு கிரகங்களும் உடனே தசாபலனை அல்லது கோச்சாரபலனை வழங்ககூடிய கிரகங்கள்.

குலதெய்வம்

பல பேர்களிடம் நான் சொல்லிருக்கிறேன் குலதெய்வ வழிபாட்டை புதன்கிழமை அன்று செய்யுங்கள் என்று சொல்லிருக்கிறேன். குலதெய்வம் நல்ல அறிவை கொடுத்து உங்களை உயர்த்தும் என்பதற்க்காக சொல்லிருக்கிறேன்.

வக்கிரகதி
          புதனுக்கு வக்கிரகதில உண்டு. ஒருவருக்கு புதன் கிரகம் வக்கிரகமாக அமையபெற்றால் அவர் தீவிரவாதி போல் இருப்பார்கள். அவர்களின் செயல்பாடு அனைத்தும் தீவிரவாதி போல் செயல்படுவார்கள்.

பல வில்லங்க வேலைக்கு காரணமாக இருப்பவர்களே இவர்களாக தான் இருப்பார்கள். பல போலி பத்திரம் மற்றும் போலியாக பேப்பர்களை தயார் செய்பவர்கள் அனைவரும் புதன் வக்கிரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

தந்திரமூளை என்று சொல்லுகின்றார்கள் அல்லவா அதற்கு எல்லாம் புதன் தான் காரகமாக இருக்கின்றார். பல தந்திரவேலையை செய்து பிழைத்துவிடுவார்கள்.

தசா
    புதன் தசா ஒருவருக்கு நடைபெற்றால் அவர்க்கு புத்தி வழியாக சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும். புதன் தசா முழுவதும் தரகர்கள் போல் வேலை செய்து பிழைப்பு நடத்தும் வாய்ப்பு உருவாகும்.

உங்களுக்கு புதன் தசா நடந்து உங்களுக்கு நல்ல பலன் நடந்தால் சரி. தீயபலன்கள் நடந்தால் உடனே உங்களின் ஜாதகத்தை அனுப்பி அதற்கு தீர்வை கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆடி மாதம்


ணக்கம்!
          ஆடி மாதம் என்றவுடன் நாம் பொதுவாக நல்ல காரியம் செய்யமாட்டோம் ஆனால் ஆன்மீகவழியில் உள்ள காரியங்களை செய்யலாம்.

ஆன்மீகவழியில் ஒருவர் தனக்கு ஏதாவது ஒரு வழிபாட்டை செய்யவேண்டும் என்றால் செய்யலாம். ஆடிமாதத்தில் செய்யப்படுகின்ற அம்மன் வழிபாட்டிற்க்கு சக்தி அதிகம் இருக்கும் என்பதை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

நான் கூட பல நண்பர்களிடம் சொல்லி இந்த மாதத்தில் அம்மன் ஹோமத்தை செய்யலாம் என்று சொல்லிருக்கிறேன். அம்மனின் சக்தியை நாம் முழுமையாக பயன்படுத்த ஹோமம் நன்றாக கை கொடுக்கும் என்பதால் செய்ய சொல்லிருக்கிறேன் . 

நீங்களும் ஏதாவது பரிகாரம் மற்றும் ஆன்மீகவழிபாடு செய்யவேண்டும் என்றால் இந்த மாதத்தை பயன்படுத்தி செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உடனே பலன் அளிக்கும்.

இந்த மாதத்தை ஒதுக்காமல் நல்ல முறையில் பயன்படுத்துங்கள். ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் தவறாமல் அம்மன் கோவில் சென்று வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 19, 2016

குரு பூர்ணிமா


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை நாம் பலப்படுத்தவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்போம் ஆனால் நமக்கு முக்கியமான ஒரு விசயம் மட்டும் செய்வதற்க்கு ஞாபகம் இருப்பதில்லை. தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றார்களாக என்பதும் தெரியவில்லை.

இன்று குரு பூர்ணிமா. ஒவ்வொரு மனிதனும் தனக்கு சொல்லிக்கொடுத்த ஒவ்வொறு விசயத்திற்க்கும் குருவிற்க்கு நன்றி சொல்லக்கூடிய ஒரு நாள். உங்களின் குருவிற்க்கு நீங்கள் நன்றி சொன்னீர்களாக என்று தெரியவில்லை. இந்த பதிவு இப்பொழுது எழுதுவதற்க்கு காரணம் எத்தனை பேர் இதனை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பதற்க்காக காலம் கடந்து எழுதுகிறேன்.

இப்படிப்பட்ட விசயத்தை எல்லாம் நீங்கள் செய்யும்பொழுது தான் உங்களின் பாக்கியஸ்தானம் பலப்பட்டு உங்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் அனைத்து காரியமும் வெற்றி பெறும்.

இந்த உலகத்தில் கற்றுக்கொடுக்க அனைவரும் தயாராக இருக்கின்றனர். அதனை ஏற்க நாம் தான் தவறவிடுகிறோம். உங்களின் மனசாட்சிபடி இன்று உங்களின் குருவிற்க்கு நன்றி சொல்லி அவரின் ஆசியை பெற்றால் நீங்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

இன்று மறந்தால் கூட பரவாயில்லை நாளை சென்று உங்களின் குருவிற்க்கு வேண்டியதை வாங்கி அன்பு பரிசாக வழங்குங்கள். உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் தசா


ணக்கம்!
          செவ்வாய் கிரகம் ஒருவருக்கு நன்றாக அமையவேண்டும். இயற்கையில் பாபகிரகமாக இருந்தாலும் செவ்வாய் கிரகம் நன்றாக அமையும்பொழுது மட்டுமே பல நல்ல விசயங்கள் நடக்கும்.

வீடு மனை மற்றும் தைரியம் இது எல்லாம் கிடைக்கும். நான் சொன்னது மூன்று விசயமாக இருந்தாலும் இதற்குள் பல விசயங்கள் அடங்கிவிடும்.

இன்றைய காலத்தில் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஆசை என்ன என்றால் ஒரு வீடு வேண்டும் என்று தான் சொல்லுவார்கள். வசிக்க ஒரு வீடு இருந்தால் போதும் மீதி எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பார்கள்.

ஒரு மனிதன் வீணாக போவதற்க்கு கடவுள் கூட காரணமாக இருப்பார் என்று தோன்றுகிறது. வீடு வாசல் மனை தைரியம் இது எல்லாம் இருந்தால் மனிதன் நன்றாக வாழ்ந்துவிடுவான் என்று நினைத்து கடவுள் செவ்வாய் தசாவை மட்டும் குறைவான வருடம் வைத்திருக்கிறார். நாம் வீணாக போவதற்க்கு நம்முடைய வாழ்நாளில் கால்பகுதியை கெட்ட தசாவுக்கு வைத்திருக்கிறார்.

செவ்வாய் தசா மட்டும் மனிதர்களுக்கு அதிகம் வைத்திருந்தால் இந்த உலகத்தையே அவர் பிடித்துவிடுவார் என்று தான் கடவுள் குறைந்த வருடம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு கம்பீரமாக அனைத்திலும் சுறுசுறுப்போடு ஒரு மனிதனை இயங்க வைக்க செவ்வாய் தசா மாதிரி வேறு தசா இயங்குவதில்லை என்பது தான் உண்மை.

ஒரு மனிதனுக்கு செவ்வாய தசா ஆரம்பித்துவிட்டால் அதுவரை தூங்கிக்கொண்டிருந்த மனிதன் சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவான். உலகமே அவனை விட குறைவாக தான் செயல்படுகிறது என்பது போல அவனின் செயல் இருக்கும்.

செவ்வாய் கிரகம் போர்கிரகம் அல்லவா. போர்வீரன் தூங்கிக்கொண்டிருந்தால் என்ன ஆகும் உயிர் போய்விடும். செவ்வாய் கிரகத்தின் தன்மை ஒருவனை போர் வீரன் போல் செயல்படவைக்கும். நமக்கு செவ்வாய்கிரகத்தின் பலன் குறைவாக இருக்கின்றது அதே நேரத்தில் செவ்வாய் தசாவும் வரவில்லை என்றால் அப்பொழுது செவ்வாய் கிரகத்திற்க்கு என்று நீங்கள் விரதம் அல்லது வழிபாடு செய்து உங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம்.

செவ்வாய் கிரகம் எப்படி இருந்தாலும் செவ்வாய் கிரகத்தின் தசாவில் நன்றாகவே இருக்கும். அதாவது செயல்பாடு நன்றாக இருக்கும். ஒரு சில சிக்கல் வந்தாலும் முருகனை வணங்கிவிட்டு செய்தால் செவ்வாய்கிரகத்தின் தசாவில் நல்ல முன்னேற்றத்தை காணமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சோதிட பலன்


ணக்கம்!
          ஒவ்வொருவரும் சோதிடபலனை சொல்லும்பொழுது அந்த ஜாதகத்தில் உள்ள பலனை ஒரளவு சொல்லமுடியும். அனைத்தையும் சொல்லிவிடமுடியாது. அதற்கு எல்லாம் காரணம் சாேதிடம் என்பது பெரிய கடல். அனைத்தையும் படித்தாலும் வாக்கு புலமை என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. துல்லியமான பலன் என்பது அனைவராலும் சொல்லமுடியாது என்பது எனது கருத்து.

ஒவ்வொரு மனிதனும் தனியாக தான் பிறக்கிறான். அவனைபோல் வேறு யாரும் கிடையாது என்பது மட்டும் உண்மை. சோதிடமும் அப்படி தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசப்படும். நாம் எப்படி துல்லியமான பலனை கொடுக்கமுடியும்? ஒரளவுக்கு கொடுக்கமுடியும்.

மறைவிடம் என்று சொல்லக்கூடிய வீடுகளில் கிரகங்கள் தீயபலன்களை கொடுக்கும் என்று சொல்லிருந்தாலும் அனுபவத்தில் நன்றாக இருப்பவர்கள் அதிகம் பேர்கள் இருக்கின்றார்கள். அதனால் சோதிடபாடத்திற்க்கும் அனுபவத்திற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

சோதிடத்தை தொழிலாக செய்துக்கொண்டு வரும்பொழுது நிறைய ஜாதகங்களை பார்ப்பதாலும் தெய்வீகஅருள் இருப்பதாலும் ஒரு சில வார்த்தைகள் அதுவாகவே வந்துவிடும். அப்படி வருவதும் நடக்கும். நூறு சதவீதம் துல்லியமான பலன் என்பது வராது.

பிற சோதிடர்கள் சொல்லுகின்றார்களோ என்பது தெரியாது என்னால் நூறு சதவீத பலன் என்பது சொல்லிவிடமுடியாது. ஒரளவு சொல்லும் பலன் என்பது நடக்கும். இது தான் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 18, 2016

சந்திர தசா சனி புத்தி


வணக்கம்!
          ஒருவருக்கு சந்திரன் தசாவில் சனி புத்தி நடைபெற்றால் அவர்களுக்கு எல்லா விதத்திலும் அடி மேல் அடி விழும். எந்த காரியமும் உடனே நடைபெற்றுவிடாது. 

ஒரு சிலருக்கு சனிக்கிரகம் மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அவர்களுக்கு அதிகப்பிரச்சினை ஏற்படும். சந்திரனில் இருந்து மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் பிரச்சினை ஏற்படும். என்ன பிரச்சினை என்றால் அனைத்திலும் குழப்பம் ஏற்பட்டுவிடும். 

சந்திர தசா சனி புத்தி காலம் 19 மாதம். இந்த 19 மாதமும் கொஞ்சம் வண்டி வாகனத்தில் செல்லும்பொழுது எச்சரிக்கையோடு சென்று வரவேண்டும். மனதடுமாற்றத்தில் நாமே சென்று எதிரே வரும் வாகனத்தில் மோதிவிடுவோம்.

சந்திர தசா சனி புத்தி காலத்தில் கொஞ்சம் கிறுக்கு பிடித்ததுபோல தான் இருப்பார்கள். பொதுவாகவே சந்திரன் சரியில்லை என்றால் சந்திர தசா முழுவதும் இப்படி தான் இருக்கும். சனி புத்தி என்று வரும்பொழுது அதிகமாக இருக்கும்.

நான் ஒரு சிலருக்கு அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். இந்த காலத்தில் எந்தவித முடிவும் எடுக்கமுடியாமல் இருக்கின்றனர். எந்த முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று குழப்பமாக இருக்கின்றனர்.

சனிக்கிரகம் நான்காவது வீட்டில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நீரால் வரும் பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். ஒரு சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையும் ஏற்படுகிறது. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இந்த காலகட்டத்தில் நீர்க்கோர்வை ஏற்பட்டு அவதிப்பட்டார்.

ஆறாவது வீட்டில் சனி இருந்து புத்தி நடத்தினால் அவருக்கு வேலையாட்கள் வழியாக பிரச்சினை ஏற்படும். வேலையாட்கள் துரோகம் செய்வார்கள். நீங்கள் ஒருவரிடம் வேலை பார்த்து வந்தால் அவர் உங்களை அடிமை போல் நடத்திக்கொண்டு இருப்பார். உன்னை வேலையை விட்டு தூக்கிவிடுவேன் என்று மிரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருப்பார்.

நண்பர்களிடம் பழகும்பொழுது கொஞ்சம் எச்சரிக்கையோடு பழகுங்கள். ஏதாவது வம்பு வழக்கில் உங்களை மாட்டிவிட்டுவிடுவார்கள். நண்பர்களே உங்களுக்கு துரோகம் செய்து ஏமாற்றிவிடுவார்கள்.

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். கடகராசியில் இருந்து ஏழாவது வீடு மற்றும் எட்டாவது வீடு சனியின் வீடு. ஏழாவது வீட்டின் பயன் ஏற்றதாழ்வு நிறைந்த வாழ்க்கை. எட்டாவது வீடு என்பது விபத்து சந்திக்கும் அவமானம். மரணம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பலனை தான் பொதுபலனாக ஜாதகம் கொடுக்கும். சோதிடத்தில் இப்படிப்பட்ட பலனை தான் கொடுக்கும் என்பதால் சந்திர தசா சனி புத்தி என்பது கொஞ்சம் கெடுதலான பலனாக பொதுவாக சொல்லப்படுகிறது.

மனிதனாக பிறந்துவிட்டோம் எதனையும் சமாளித்து தானே ஆகவேண்டும் எதுவாக இருந்தாலும் அதற்கு பரிகாரம் என்ற ஒன்று இருக்கின்றது. அதனை செய்து எதிர்நீச்சல் போடவேண்டியது தான். சரியான ஒரு பரிகாரத்தை செய்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மக்கள் கூட்டத்திற்க்கு சனி


ணக்கம்!
          நேற்று அரசியலைப்பற்றி சொல்லிருந்தேன். அதில் ராகு கிரகம் மற்றும் குரு கிரகத்தைப்பற்றி சொல்லிருந்தேன். உண்மையை சொல்லவேண்டுமானால் ஒருவருக்கு மக்கள் ஆதரவு அல்லது மக்கள் கூட்டம் வேண்டும் என்றால் அதற்கு சனிக்கிரகத்தின் ஆதரவு இல்லாமல் நடக்காது.

பெரும்கூட்டத்திற்க்கு சனிக்கிரகம் அதிகம் தேவைப்படும். நீங்களே பார்த்து இருக்கலாம். சனி ராசியை உடையவர்களின் வீடுகளில் மக்களுக்கு குறைவு இருக்காது. ஒரே கூட்டமாக வசிக்ககூடிய நிலையை எல்லாம் ஏற்படுத்துவது சனிக்கிரகத்தின் வேலை.

அரசியலுக்கும் சனிக்கிரகத்தின் ஆதரவு தேவைப்படும். ஒரு சாதாரண சோதிடரிடம் கேட்டால் கூட சனிக்கிரகத்தின் ஆதரவு தேவை என்று சொல்லுவார். ராகு கிரகம் தேவை என்று எல்லாம் தற்பொழுது உள்ள சோதிடர்கள் சொல்லுவார்கள்.

சனிக்கிரகத்தை நாம் வணங்கி தான் அரசியலில் நிற்கவேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதில் நடைபெறக்கூடிய ஒரு வேலை கிடையாது. ஏன் என்றால்  வருகின்ற தேர்தலில் நிற்பதற்க்கு சனிகிரகத்தை வணங்கிவிட்டு வந்தால் கூட குறைந்தது ஆறு மாதத்திற்க்கு மேல் ஆகிவிடும் அதற்குள் தேர்தல் போய்விடும். 

சனிக்கிரகத்தை வணங்குவதற்க்கு பதில் அதனுடைய அதிதேவதையை வணங்கி இந்த கிரகத்தின் அருளை பெறலாம். அரசியலில் ஈடுபடும் நமது நண்பர்கள் சனியின் அதிதேவதையை வணங்கி ஈடுபடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 17, 2016

நட்சத்திரம்


ணக்கம்!
          நட்சத்திரத்தைப்பற்றி பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. இன்று காலை ஒரு பதிவை பார்த்தோம். அதாவது தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பதற்க்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். அது கூட நட்சத்திரத்தை வைத்து செய்யும் வேலை தான். 

மக்களை ஈர்க்க வேண்டும் என்றால் அது ராகு கிரகத்தின் வேலையாக தான் செய்ய முடியும். அதே நேரத்தில் இந்த ராகு கிரகம் அரசியல் போன்ற செயல் மற்றும் கொஞ்சம் தவறான வழியில் வரும் பணத்தை காட்டக்கூடிய ஒரு கிரகம் தான். நல்லதும் செய்யக்கூடிய ஒரு கிரகம் ராகு கிரகம். 

ஒரு பிராமணர் வந்து அவர் தேர்தலில் நிற்கிறார் என்று சொன்னால் அவருக்கு ராகு கிரகத்தை வைத்து தான் செய்யவேண்டும் என்பது இல்லை. குரு கிரகத்தை வைத்து கூட நாம் செய்யமுடியும். ஆளுக்கு தகுந்தார் போல் தான் நாமும் செய்யமுடியும்.

ராகு கிரகத்தை வைத்து செய்யும்பொழுது வேலை எளிதாக இருக்கும். குரு கிரகத்தை வைத்து செய்யும்பொழுது கொஞ்சம் அதிகபடியான வேலையாக இருக்கும்.

மக்களிடம் இருக்கும் செல்வாக்கை பொருத்து தான் செய்யக்கூடிய கிரகமும் தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். செல்வாக்கு நன்றாக இருந்தால் குரு கிரகத்தை கூட நாம் வைத்து செய்யலாம். செல்வாக்கு சரியில்லை என்றால் ராகு கிரகத்தை வைத்து செய்யலாம்.

சோதிடத்தை வைத்து பலன் சொல்லுவதைவிட அதில் உள்ள கிரகத்தை வைத்து நாம் நல்லமுறையில் நமது வாழ்க்கையும் அமைத்துக்கொள்ளமுடியும். நீங்கள் என்ன செய்வீர்கள் கிரகம் பலனுக்கு மட்டும் தான் என்று சோதிடபலனை மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். 

நான் அப்படி இல்லை சோதிடத்தில் உள்ள கிரகத்தை வைத்து என்ன செய்யலாம். எப்படி செய்தால் வரும் வாடிக்கையாளர்க்கு நல்லது செய்யமுடியும் என்பதில் தான் எனது வேலையே இருக்கின்றது.நட்சத்திரம் வழியாக கிரகங்களை இயக்குவதை தான் நட்சத்திர வேலை என்று சொல்லிருந்தேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தேர்தல்


ணக்கம்!
          பணம் உள்ளவர்கள் அனைத்திலும் முன்கூட்டியே முடிவு எடுத்துவிடுவார்கள். என்ன தான் பணம் இருந்தாலும் தனக்கு என்று ஒரு பதவியை வைத்திருந்தால் தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள். 

கடந்த பத்து நாட்களாக பல நண்பர்கள் தன்னுடைய ஜாதகத்தை காண்பித்து சார் நான் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நிற்கலாமா என்று கேட்டார்கள். அதோடு உங்களின் ஆன்மீக வழிகாட்டாலும் தேவை என்றார்கள். 

இவர்கள் கேட்ட பின்பு தான் எனக்கே தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்றது என்று தெரிந்தது. மக்கள் எந்தளவுக்கு இருக்கின்றார்கள். உண்மையில் இது வரவேற்கதக்க ஒன்று. தற்பொழுது இருந்து இதற்கு தயார் செய்தால் தான் ஆன்மீக வழியிலும் இதற்கு தயார் செய்யமுடியும் என்பதை முடிவு எடுத்து கேட்டுள்ளனர்.

உங்களின் ஜாதகம் மற்றும் உங்களின் குடும்ப ஜாதகத்தை அனுப்பி தற்பொழுது இருந்தே இதற்கு என்று தயார் செய்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் அதிகபடியான ஆட்களை வைத்து செய்யமுடியாது. தமிழ்நாடு முழுவதும் ஐந்து நபர் மட்டும் இதற்கு என்று தேர்ந்தெடுக்க உள்ளேன்.

ஜாதக கதம்பம் படிக்கும் நண்பர்கள் முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள். கண்டிப்பாக இது வெற்றியை தரும். இதற்கு கட்டணம் அதிகம் தான் அதாவது பூஜை செய்வதற்க்கு ஆகும் செலவு அதிகம். விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 16, 2016

ஆடி மாதம் அம்மன் மாதம்


ணக்கம்!
          ஆடி மாதம் பிறந்துவிட்டது. ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான். ஆடி மாதம் மட்டும் அனைவரையும் அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ள சொல்லுவது உண்டு. 

அம்மன் வழிபாடு செய்பவர்களுக்கு எல்லாம் ஆடி மாதம் உகந்த மாதமாக இருக்கும். சக்தி எடுப்பவர்களுக்கும் சக்தி சாதனையில் அதிகம் ஈடுபடும்பொழுது நல்ல சக்தி கிடைக்கும்.

தினமும் அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜை தனியாக செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் காணிக்கையை செலுத்திவிட்டு உங்களைப்பற்றிய விபரம் தெரிவித்தால் உங்களுக்காக அம்மன் பூஜை தனியாக செய்யலாம்.

அம்மன் பூஜைக்கு என்று பணம் இவ்வளவு தான் என்று நிர்ணயம் செய்யவில்லை. உங்களிடம் இருக்கும் பணத்திற்க்கு தகுந்தவாறு அம்மன் பூஜை செய்யலாம்.

அம்மன் ஹோமம் மட்டும் பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆரம்பம் ஆகும். அம்மன் ஹோமத்தில் ஈடுபடவேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் செலுத்துங்கள். அம்மன் ஹோமம் என்று குறிப்பிட்டு அனுப்புங்கள்.

அனைவரும் பொதுவான அம்மன் பூஜையில் ஈடுபடலாம். அதனைப்பற்றிய அறிவிப்பு தனியாக பதிவில் தருகிறேன். ஆடி மாதத்தை அம்மன் மாதமாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 14, 2016

குரு பெயர்ச்சி


ணக்கம்!
          எப்பொழுது ஒரு கிரகம் பெயர்ச்சி நடந்தாலும் அந்த கிரகத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி பேச வைக்க பல சோதிடர்கள் நினைக்கிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கும். தற்பொழுது சோதிடர்கள் சும்மா இருந்தாலும் தொலைதொடர்புக்காரர்கள் சும்ம இருக்க வைப்பதில்லை. ஏதாவது ஒன்றை கிளப்பி விட்டுவிடுவார்கள்.

தற்பொழுது நிறைய நண்பர்கள் தொடர்புக்கொண்டு சார் குரு பெயர்ச்சி நடக்கிறது. எனக்கு என்ன பிரச்சினை என்ன நல்லது என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பல பேர்கள் கிளப்பிய பயத்தால் நமக்கு வியாபாரம் நடக்கிறது என்று சொல்லவேண்டும். அப்படி இருந்தாலும் அனைத்து பழைய நண்பர்கள் என்பதால் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. 

குரு பெயர்ச்சியை கண்டு யாரும் அச்சப்படதேவையில்லை. கோச்சாரபலன்கள் அதிகம் நடப்பதில்லை. அப்படியே அது நடந்தாலும் பெரிய பாதிப்பு எல்லாம் நடக்காது. ஜாதக கதம்பத்தை படிக்கும் நண்பர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை. அதற்கு காரணம் குரு கிரகம் நன்றாக இருப்பதால் தான் இப்படிப்பட்ட பிளாக்கை எல்லாம் படிக்கமுடிகிறது.

சரி நான் பயந்து தான் தீருவேன் என்றால் உங்களுக்கும் ஒன்றை செய்யலாம். அனைவருக்கும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஏதாவது ஒரு கோவிலில் ஒரு நிகழ்வை நாம் நடத்தலாம். தற்பொழுது குரு இருக்கும் கோவில்களுக்கு நம்மை தலைகாட்ட கூட விடமாட்டார்கள். குரு பெயர்ச்சி முடியட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 13, 2016

கோச்சாரபலன்கள்


ணக்கம்!
          கோச்சாரப்பலன்களைப்பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. தசாநாதன் தான் உங்களுக்கு முக்கியம் என்று நான் பலமுறை நான் பதிவில் சொல்லிருக்கிறேன். ஒரு சிலருக்கு மட்டும் இந்த கோச்சாரபலன்கள் அதிகம் நடைபெறுகிறது.

கோச்சாரப்பலன்கள் நடைபெறுவதற்க்கு காரணம் அவர் அவர்களின் விதி என்று சொன்னாலும் அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் உண்மை என்ன என்று தெரியும். அது என்ன உண்மை என்றால் தசாநாதன் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மட்டுமே அப்படி நடக்கும்.

உங்களின் ஜாதகத்தில் தசாநாதன் நிலைமை சரியில்லை என்றாலும் இப்படி நடக்கும் அல்லது அதிகப்படியான தோஷம் ஜாதகத்தில் இருந்தால் ஜாதகத்தில் தசாநாதன் நன்றாக வேலை செய்யாது. தோஷம் முடிந்த பிறகு தான் தசாநாதன் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

உங்களுக்கு தசாநாதன் வேலை செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால் அதனை சரி செய்யும் முயற்சியில் இறங்குங்கள். அதனை எல்லாம் சரி செய்யமுடியாது எனக்கு கோச்சாரபலன்கள் மட்டும் தான் வேணும் என்று நினைத்தால் ஒவ்வொரு கோச்சார பெயர்ச்சிக்கும் முன்பே நீங்கள் அந்த கிரகத்திற்க்கு உரிய வழிபாட்டை மேற்க்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 12, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
                     இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 11, 2016

அமாவாசை


ணக்கம்!
           சந்திரனை வைத்து பலன் சொல்லவேண்டும் என்றால் ஒருவர் வளர்பிறையில் பிறந்தார் என்றால் அவர் வாழ்க்கை நன்றாக உயர்ந்துக்கொண்டே இருக்கும். தேய்பிறை சந்திரனாக இருந்தால் அவரின் வாழ்க்கை நன்றாக இருந்து அதன்பிறகு தேய்ந்துக்கொண்டே செல்லும் என்று பலனை சொல்லலாம்.

ஒருவர் அமாவாசையில் பிறந்தார் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டும் அல்லவா. அமாவாசையில் பிறந்தால் அவருக்கும் நல்ல வாழ்க்கை அமையும். அதாவது அதுவும் வளர்பிறை சந்திரன் போலதான் செயல்படும்.

அமாவாசையில் பிறந்தால் அவர் திருடன் என்று சொல்லிவிடுவார்கள். அது படம் பார்த்த காரணத்தால் அல்லது கிராமத்தில் உள்ளவர்கள் சொல்லுவார்கள்.

அமாவாசையில் பிறந்தால் திருடன் என்பது முற்றிலும் தவறான ஒரு கருத்து. அமாவாசையில் பிறந்த நிறைய ஜாதகங்களை பார்த்து இருக்கிறேன். மிகவும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். எதார்த்தமாக இருக்கின்றனர். தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர்.

அமாவாசையில் பிறந்தவர்களுக்கு ஈர்க்கும் சக்தி அதிகம் இருக்கின்றது. அவர்களை நோக்கி நிறைய பேர்கள் வருவார்கள். அதாவது அவர் வழியாக நிறைய சாதிக்கமுடியும் ஏதாவது உதவுவார்கள் என்று வருகின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 9, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
          நமது அம்மன் பூஜை வருகின்ற 12.07.2016 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்திய சீத்தாராமன்(USA) அவர்கள்
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்

பொள்ளாச்சியை சேர்ந்த திரு சுந்தரராஜன் அவர்கள்.
பெங்களூரை சேர்ந்த திரு வீரேஷ் சந்தானம் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு கதிரேஷன் அவர்கள்

கரூரை சேர்ந்த திரு முத்து அவர்கள்.
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்
துறையூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்

வழக்கம் போல் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர். 

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வைக்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 8, 2016

குரு பெயர்ச்சி பரிகாரம்


ணக்கம்!
          குரு கிரகத்தைப்பற்றி நேற்று எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் கொஞ்சம் வெளியில் சென்ற காரணத்தால் அதனை தரமுடியவில்லை. குரு என்றவுடன் நமக்கு குரு கிரகத்தைப்பற்றி தான் ஞாபகம் வரும். குரு காரத்துவம் உடைய நமது குருவையும் குறிக்கின்ற கிரகம் தான் குரு கிரகம்.

ஒரு ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருந்தால் அவர்க்கு எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சமாளிக்கும் அறிவு இருக்கும். அதிகம் பிரச்சினை கூட இவர்களுக்கு வருவதில்லை. பணம் மற்றும் சுகப்போகவாழ்விற்க்கு எல்லாம் குறைவு இல்லாத ஒரு வாழ்க்கையை ஜாதகருக்கு குரு கிரகம் கொடுத்துவிடும்.

உங்களுக்கு நல்வழி காட்டும் குருவை எந்த காலத்திலும் மறக்ககூடாது. இன்றைய காலத்தில் ஒரு குரு நல்வழி காட்டிகிறார் என்றால் முதலில் அவரை தான் நாம் கொல்லுவோம். காலமும் அப்படி இருக்கின்றது மனிதர்களும் அப்படி இருக்கின்றார்கள்.

உலகத்தில் உள்ள அனைத்து குருவையும் கொன்றது அவரின் சீடர்கள் தான் என்பது வரலாற்றை புரட்டி பார்த்தால் உங்களுக்கு தெரியும். என்ன இது என்றால் துரோகம் செய்வதற்க்கு தயங்காமல் மனம் இருக்கின்றது என்பதே காட்டுகிறது.

குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் அதாவது உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்றால் உங்களின் குருவை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். குரு பெயர்ச்சிக்கு என்று இந்த பதிவை தருவதின் நோக்கமே உங்களின் குரு தான் உங்களை வழிநடத்தும் ஆற்றல் பெற்றவர். குரு கிரகம் எப்படி இருந்தாலும் சரி குருவை மறக்காமல் இருந்தால் போதும். உங்களுக்கு நல்லது எந்த நாளும் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 7, 2016

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
                     
          இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 6, 2016

புதன்


ணக்கம்!
          மனிதன் ஒவ்வொரு நாளாக எண்ணங்களை சேர்த்து வருகிறான். அப்படி சேர்த்த எண்ணங்கள் மனம் என்று அழைக்கபடுகிறது. மனம் உள்ளவன் மனிதன் என்று அழைக்கிறார்கள். மனத்திற்க்கு சோதிடத்தில் காரத்துவம் உடையவர் சந்திரன். புராணங்களி்ல் சந்திரனுக்கு மகனாக பிறந்தவர் புதன் என்று படித்தது உண்டு. 

அறிவாளி என்பவர் யார் நிறைய விசயத்தை சேர்த்து வைத்து அதனை வெளிக்கொண்டு வந்து செயலாற்றுவர். மனத்திற்க்கு காரகன் சந்திரனின் பையன் புதன். புதன்அறிவுக்கு காரகம் வகிக்கிறார். 

ஒன்பது கிரகங்களின் அருளும் மனிதனுக்கு தேவை தான் ஆனாலும் புதனின் அருள் அதிகம் இருந்தால் அவன் சிறந்து விளங்குவான். இன்றைய காலத்தில் நல்ல அறிவுள்ளவனை உலகம் மதிக்கிறது அல்லவா. அதற்கும் காரகம் வகிப்பவர் புதன் கிரகம் தான்.

புதன் கிரகம் நல்லவனோடு சேரும்பொழுது நல்ல பலனை தரும் அதாவது நல்ல கிரகத்தோடு சேரும்பொழுது நல்ல பலன் தரும். நல்ல புத்தி வேலை செய்யும். தீமையான கிரகத்தோடு சேரும்பொழுது தீயபலன்கள் அதிகம் தரும்.

புதன் கிரகம் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கும்பொழுது அதாவது பலன் குறையும்பொழுது அறிவும் மங்க செய்யும். ஒரு சில காலத்தில் வக்கிர நிலையிலும் அறிவு குறையும். அந்த காலத்தில் நாம் முக்கிய முடிவு எதுவும் எடுக்க கூடாது.

தற்சமயம் ஒன்றை சொல்லவேண்டும். அதாவது புதன் கிரகத்தின் பலன் அல்லது புதன் கிரகத்தின் வீட்டிற்க்கு முன்னால் ஒரு கிரகம் இருந்து அந்த கிரகம் புதனின் வீட்டிற்க்குள் நுழைய போகின்றது என்றால் ஒரு பெண் தாக்கப்பட்டு அது உலகம் முழுவதும் பரவலாகப்பேசப்படும்.

சோதிடத்தில் சொல்லுவார்கள் ஆண் பெண்ணிற்க்குள் வீணான சந்தேகம் ஏற்பட்டு அதனால் பிரச்சினையை கிளப்பிவிடுவது புதனின் வேலை என்பார்கள். காதலர்களுக்குள் பிரச்சினையை கிளப்பிவிடுவது புதனின் வேலை.

புதன் வீட்டிற்க்கு முன்னால் குரு கிரகம் இருந்த நேரத்தில் எல்லாம் ஒரு பெண் பாதிக்கப்பட்டு அது உலகளவில் பேசப்படும். டெல்லி சம்பவம் தற்பொழுது சென்னையில் நடந்த சம்பவத்தின் காலத்தை கொஞ்சம் எடுத்து பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இந்த காலகட்டத்தில் எல்லாம் குரு கிரகம் புதனின் வீட்டிற்க்குள் நுழைவதற்க்கு தயாராக இருந்த காலத்தில் நடந்துள்ளது. அதே நேரத்தில் ஐந்து மாதத்திற்க்கு முன்பே இப்படி எல்லாம் நடக்க ஆரம்பிக்கும் என்று ஒரு சில சாமியார்கள் என்னிடம் சொல்லிருக்கிறார்கள்.

சோதிடத்தில் சொல்லியுள்ளது காதலர்களுக்குள் வீண் சந்தேகத்தை கிளம்பும் என்று தான் சொல்லியுள்ளார்கள். நாம் இதனை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறது. செய்திதாளை நாம் எடுத்து பார்த்தால் தினமும் ஏதாவது ஒரு கொலை நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது ஆனால் ஒரு கொலை மிகவும் பரவலாக பேசப்படுவது இப்படிப்பட்ட காலமாக இருக்கிறது. சரி புதனை எழுதவந்து எதையோ நாம் எழுதவேண்டியதாகிவிட்டது. புதனைப்பற்றி அப்புறம் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Tuesday, July 5, 2016

கனவு இல்லம்


வணக்கம்!
          ஒவ்வொரு நண்பர்களும் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது கேட்கும் கேள்வி சார் எனக்கு ஒரு வீடு அமையுமா என்று கேட்பார்கள் அல்லது நிலம் ஏதாவது அமையுமா என்று கேட்பார்கள். ஒவ்வொரு மனிதனின் ஆசையும் இது தான் அதன் பிறகு தான் வேறு ஆசைகள் இருக்கும்.

ஜாதகத்தில் நான்காவது வீடு உங்களின் சொந்த வீட்டை காட்டும். நான்காவது வீடு சுகஸ்தானம் என்று சொல்லுவது கூட நல்ல வீடு அமைந்தால் நல்ல சுகமாக வாழலாம் என்ற கணக்கில் சொல்லிருக்கலாம். நான்காவது வீடு பாதிப்படைந்தால் அதனால் பல சிக்கல்கள் தான் உருவாகும். 

நான்காவது வீட்டு அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை பாருங்கள். அதோடு நான்காவது வீட்டு எந்த கிரகத்தின் பாதிப்பு வருகின்றது என்று பாருங்கள். தீயகிரகத்தின் பார்வை பட்டாலும் இது பாதிப்படையும். இதனை எல்லாம் பார்த்துவிட்டு அதன் பிறகு நான்காவது வீட்டு அதிபதியை பலப்படுத்துங்கள்.

செவ்வாய் என்றாலே அது நான்காவது பார்வை என்று சொல்லுவார்கள். அதாவது நிலத்திற்க்கு காரகன் வகிப்பவர் செவ்வாய் தான். உங்களின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான்காவது வீட்டு அதிபதி மற்றும் செவ்வாய் கிரகத்திற்க்கு நீங்கள் பரிகாரம் செய்தால் போதும் அல்லது வழிபாட்டையாவது மேற்க்கொண்டு வாருங்கள். கண்டிப்பாக ஒரு வீடு உங்களுக்கு அமையும்.

என்னுடைய நண்பர் ஒருவருக்கு நான்காவது வீடு செவ்வாய் வீடாக அமைந்தது. அதாவது மகரலக்கினம். செவ்வாய் நீசமாக அமர்ந்திருந்தார். அவருக்கு நான் செவ்வாய் கிரகத்தை அதிகமாக பலப்படுத்த முருகன் கோவிலுக்கு செவ்வாய் கிழமை தோறும் சென்று வழிபட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவரும் சென்று வழிப்பட்டு வந்தார் ஆண்டவன் புண்ணியத்தால் அவர் தற்பொழுது வீடு கட்டிக்கொண்டு வருகிறார்.

உங்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள். நான்காவது வீட்டைப்பற்றி நன்றாக அலசுங்கள். அந்த வீட்டை பார்த்து உங்களுக்கு வீடு அமையுமா அல்லது அமையாது என்று தெரிந்துவிடும். அமையாது என்று தெரிந்தால் நன்றாக வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள். கண்டிப்பாக அமைந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 4, 2016

சந்திரன்


ணக்கம்!
          சந்திரன் ஒருவருக்கு பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்தால் அவர்கள் அதிகம் வெளியூர் பயணம் செய்பவராக இருப்பார். அதுவும் கோவில் கோவிலாக சுற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் ஆன்மீகத்திற்க்கு என்று தன்னை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் அதிகம் பேர்கள் இருக்கின்றார்கள். வாரம் வாரம் எப்படியும் ஒரு புண்ணிய கோவில்கள் என்று சென்றுக்கொண்டு இருப்பார்கள்.இவர்களின் ஜாதகத்தை நாம் பார்த்தால் அவர்களுக்கு சந்திரன் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும்.

கோச்சாரப்படி நமக்கு சந்திரன் பனிரெண்டாவது வீட்டிற்க்கு வரும்பொழுது நமக்கு ஏதாவது ஒரு வழியில் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.பயணம் செய்யாவிட்டாலும் வீட்டை விட்டு வெளியேறி ஏதாவது ஒரு காேவிலுக்காகவது செல்ல வைத்துவிடும். 

பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் அமையபெற்றவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சொல்லலாம். என்ன கேது இருந்தால் தானே மோட்சம் என்பார்கள் என்று கேட்க நினைக்கும். சந்திரனும் ஒரு சிலருக்கு கொடுக்கும்.

சந்திரன் கோச்சாரப்படி பனிரெண்டுக்கு வரும்பொழுது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். கண்டிப்பாக நல்ல பலனை நீங்கள் அனுபவிக்கமுடியும். எப்படியும் பயணம் செல்ல போகின்றீர்கள் அது கோவிலாக இருக்கட்டுமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 3, 2016

காலம்


வணக்கம்!
          காலத்தைப்பற்றி காலையில் நாம் எழுதிய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டனர். இதுநாள் வரை நீங்கள் தொலைக்காட்சியில் தினப்பலன் படிப்பதை கூடவா கவனிக்காமல் இருக்கின்றீர்கள். அதுவே உங்களுக்கு நன்றாக இருக்கும்பொழுது உங்களின் முழுபலனும் கிடைக்கும்பொழுது எப்படி எல்லாம் உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்வீர்கள்.

ஒன்றைப்பற்றி சொல்லுகிறேன். சந்திராஷ்டம நாளில் நமக்கு பிரச்சினை வருகின்றது என்பது தெரியும். உங்களின் அனைத்து சந்திராஷ்டம நாட்களையும் கவனித்தால் ஒரு சில சந்திராஷ்டமநாளில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

அப்பொழுது சந்திராஷ்டம நாளில் கூட நல்லது நடக்கிறது என்றால் கண்டிப்பாக பல நல்ல நாட்களையும் நாம் வீணடித்துவிட்டு இருப்போம். பொதுவாக இது எல்லாம் தொழில் செய்பவர்கள் கடைபிடிப்பார்கள். ஒரு சிலர் இன்று பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு நாளையும் நன்றாக கவனித்து வந்தால் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நஷ்டம் அடையாமல் இருக்கலாம்.

சந்திரன் இரண்டாவது வீட்டிற்க்கு வரும்பொழுது நல்ல பணவரவு வரும். உங்களின் ஜாதகத்தை பொறுத்து தான் இது வரும். ஒரு சிலருக்கு லட்சக்கணக்கில் பணம் வரும் ஒரு சிலருக்கு ஒரு ரூபாய் பணம் வரும். வருவதை நன்றாக வரவழைக்க என்ன எல்லாம் செய்யலாம் என்பதையும் கணித்து கண்டுக்கொள்ளமுடியும். ஒழுங்காக ஜாதகத்தை கணிக்கும்பொழுது இது எல்லாம் உங்களுக்கு புலப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாழ்க்கை ஈஸி


வணக்கம்!
         எதற்குமே நேரம் என்ற ஒன்று இருக்கின்றது. நம்ம ஆட்கள் பரிகாரம் செய்ய சொன்னால் கூட அதற்கும் நேரம் இருக்கின்றது. அந்த நேரத்திற்க்கு நாம் காத்து இருக்கவேண்டும். காலம் கனியும்பொழுது சரியான நேரத்தில் அடித்து அவர்களுக்கு கொடுப்பது உண்டு.

உங்களுக்கு சொல்லுவது என்ன என்றால் நீங்களும் காலம் பார்த்து காயை நகர்த்த வேண்டும். அப்பொழுது தான் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எளிதில் காரியத்தை வெற்றி பெற வைத்துவிடலாம்.

மக்களிடம் அதிகப்பட்சம் இருக்கின்ற விசயம் ஒன்று அவசரப்பட்டு வேலை செய்வார்கள் அப்படி இல்லை என்றால் வேலையை செய்யாமல் இருப்பார்கள். கெடுதல் நேரத்தில் நாம் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருக்கலாம். நல்ல நேரத்தில் அவசரமாக செயல்பட்டு நம்முடைய வேலையை முடித்துவிடலாம்.

உங்களுடைய சோதிடரிடம் நீங்கள் கேட்டால் உங்களின் ஜாதகத்தை கணித்து நல்ல நேரம் எது கெட்ட நேரம் எது என்று சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும் சோதிடர்கள் அதிகம் உங்களிடம் பேசமாட்டார்கள். அவர்களிடம் கொஞ்சம் பணத்தை அதிகம் கொடுத்து இதனை எல்லாம் கேட்டு தெரிந்துக்கொண்டு அதன் படி நீங்கள் நடந்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு வாழ்க்கை ஈஸியாக இருக்கும்.

சோதிடர்களை நான் குறைச்சொல்லவில்லை நீங்கள் கொடுக்கும் பணத்திற்க்கு அவர்கள் பலனை மட்டும் தான் சொல்லமுடியும். டெக்னிக்கல் எல்லாம் அவர்களால் சொல்லமுடியாது. அவர்கள் டெக்னிக் விசயத்தை சொல்லவேண்டும் என்றால் அதற்கு தகுந்தார்போல் பணத்தை கொடுத்து கொஞ்சம் நேரம் எடுத்து குறித்து வாங்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் காலத்தை அறிந்து நடந்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. காலத்தை அறியாமல் செய்தால் நஷ்டம் ஏற்படுவதைவிட உங்களின் வாழ்வும் பாதிக்கப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதகம் வேலை செய்கிறதா?


வணக்கம்!
          ஒரு சிலருக்கு ஜாதகத்தில் தசாநாதன் வேலை செய்யாமல் போய்விடும். தசாநாதன் நன்றாக வேலை செய்தால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை வேலை செய்யாவிட்டால் அவர்களின் பாடு திண்டாட்டமாக இருக்கும்.

தசாநாதனும் வேலை செய்யாமல் போய்விட்டு கோச்சாரபலனும் ஒன்றும் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்றால் ஜாதகத்தில் பெரிய பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லலாம். பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் அதே பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தையே பல வருடங்களாக வாங்கிக்கொண்டு இருக்கிறார் அதற்கு மேல் சம்பளம் வாங்கமுடியவில்லை அதாவது சம்பாதிக்க முடியவில்லை என்றால் ஜாதகம் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டியது தான்.

ஒரு சிலருக்கு ஒன்றுமே வேலை செய்யாமல் அவர்கள் சாப்பாட்டிற்கே திண்டாடுகிறார்கள் என்றால் அது பெரிய பிரச்சினை என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஜாதகத்தில் கிரகங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக ஒரு சின்ன முன்னேற்றமாவது இருந்துக்கொண்டு இருக்கும். ஜாதகத்தில் கிரகங்கள் வேலை செய்யவில்லை என்றால் ஒரு வித முன்னேற்றங்களும் இருக்காது.

கிரகங்கள் வேலை செய்யவில்லை என்றால் வேலை செய்யது வைக்கமுடியுமா என்று கேட்கதோன்றும். வாழ்வில் எதுவும் இல்லை என்றால் எதையாவது முன்னேற்றம் அடைவதற்க்கு செய்து தானே ஆகவேண்டும். அப்படி ஒரு சில பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் இருக்கின்றன அதனை நீங்கள் செய்தால் இதில் இருந்து விடுபட்டுவிடலாம்.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும்பொழுது நம்மால் எப்படி பரிகாரங்கள் எல்லாம் செய்யமுடியும் என்று நினைப்பவர்கள். முதலில் உங்களுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்று வாருங்கள். முடிந்தளவு அருகில் உள்ள கோவில்கள் எல்லாம் நடந்தே சென்று வந்துவிடுங்கள்.

பெளர்ணமி அல்லது அமாவாசை நாட்களில் சிவன் கோவில்களில் கிரிவலம் செல்லுங்கள். அப்புறம் ஏதாவது சாமியார் இருந்தால் அவர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குங்கள். குலதெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து செய்யுங்கள்.

இது உங்களை மேலே தூக்கிவிடும் அதன் பிறகு புகழ்பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றுவரலாம். கடைசியில் பூஜை பரிகாரங்கள் செய்துக்கொள்ளலாம். முதலில் நீங்கள் இதில் இருந்து ஆரம்பித்தால் படிப்படியாக மேலே சென்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 2, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
         ஒவ்வொரு மாதமும் நம்முடைய அம்மன் பூஜையை சிறப்பாக செய்யவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு செய்துக்கொண்டு இருக்கிறேன். வரும் பணத்தை வைத்து என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செய்கிறேன்.

அம்மன் பூஜைக்கு பங்களிப்பவர்கள் மற்றும் அம்மன் பூஜை நடைபெறும் நாட்களில் பூஜைக்கு உதவுபவர்களால் அது சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அனைத்தும் அம்மன் செயல்.

பல பேர்கள் இப்படிப்பட்ட பூஜையில் விருப்பபட்டு கலந்துக்கொள்கிறார்கள். பாக்கியஸ்தானம் பலப்படும் என்பதால் பூஜையில் கலந்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களும் இந்த பூஜையில் கலந்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜை வருகின்ற 10 ஆம் தேதிக்குள் நடைபெறும். வேண்டுதல் வைத்து நிறைவேறியவர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம். பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களும் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு