Followers

Sunday, September 30, 2018

அலிகளுக்கு தானம்


வணக்கம்!
          பெரும்பாலும் இன்று தான தர்மம் எல்லாம் நிறைய செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக நடத்து தர வர்க்கத்தில் இருக்கும் குடும்பங்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அனைவரும் ஆர்வம் காட்டினாலும் இவர்கள் கொஞ்சம் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.

தானம் தர்மம் செய்யும்பொழுது கூட நம்ம ஆட்கள் ஒன்றை சொல்லிருக்கின்றனர். நாம் யார்க்கு கொடுக்கிறோம் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து நாம் செய்தால் அதிக பலனை நாம் பெறலாம்.

இன்று நமக்கு இருக்கும் திருஷ்டியை போக்கி நாமும் தர்மம் செய்யவேண்டும் என்றால் அதற்க்கு அலிககளை தேர்வு செய்து தான தர்மம் செய்தால் நமக்கு திருஷ்டி நீக்கி நல்ல பலன் நமக்கு கிடைக்கும் அது உங்களுக்கு பலவிதத்திலும் உதவியாக இருக்கும்.

பேருந்து நிலையத்தில் மற்றும் இரயில் நிலையத்தில் எங்கு அலிகளை பார்த்தாலும் உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து அவர்களிடம் ஒரு ஆசீர்வாதத்தை வாங்கிக்கொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதம் உங்களின் திருஷ்டியை போக்கும் அதோடு உங்களுக்கு நல்லதும் நடக்கும்.

ஒருவருக்கு புதன் தசா நடந்து அந்த தசா அவர்களுக்கு நல்லதை தரவில்லை என்றால் புதனின் காரத்துவத்தில் இருக்கும் அலிகளிடம் இருந்து ஆசீர்வாதம் வாங்கினால் புதன் தசா அவர்களுக்கு நல்லதை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 29, 2018

வாரிசுகளுக்காக புண்ணியம்


வணக்கம்!
          ஒரு சில ஊர்களில் நான் பார்த்த விசயத்தைபற்றி ஒன்றை சொல்லுகிறேன். ஒருவர் குடும்பம் இருந்தால் அந்த குடும்பத்தின் தலைவர் அதாவது தந்தை ஒருவர் சந்நியாசி போல அலைந்திருந்தால் அவர்களின் பிள்ளைகள் இன்று பெரியளவில் சாதித்து இருக்கின்றனர்.

சந்நியாசி போல இருந்தவர்களின் பிள்ளைகள் ஒரு ஊரில் பெரிய மனிதர்களாக இருக்கின்றனர். இது எப்படி என்று தெரியவில்லை ஆனால் இது உண்மையாக பல இடங்களில் நான் பார்த்தும் இருக்கிறேன். பலர் சொல்லியும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்று நாம் செய்யும் செயல் நமது சந்ததினரை சென்று அடையும் என்பது மட்டும் உண்மையாக இருக்கின்றது. நமது சந்ததினரை நல்ல படியாக உருவாக்குவதற்க்கு நீ்ங்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். நாம் செய்கின்ற செயலில் அதிகளவு நன்மையை நோக்கி செல்வது போல இருக்கவேண்டும். 

பல பெற்றோர்களை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பகட்டாக வாழவேண்டும் என்று நினைத்துக்கொண்டு முடிந்தளவுக்கு ஆட்டம் போடுவது அதன் பிறகு அவர்களின் வாரிசுகள் வீணாக போய்விடுகின்றன. ஒரு வயதிற்க்கு மேல் உங்களின் வாரிசுகளின் மேல் தான் அதிக கவனம் வைக்கவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் சம்பாதிக்க பல வழிகளை செய்யவேண்டியிருக்கின்றது என்றாலும் நேரம் கிடைக்கும்பொழுது புண்ணியத்தையும் செய்துக்கொண்டு வாருங்கள். உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 28, 2018

மூன்றாம் பிறை வழிபாடு


வணக்கம்!
          உணர்வு பூர்வமாக கொண்டு செல்வது தான் ஆன்மீக வழிபாடு. உங்களின் உணர்வுகளை கடவுளிடம் செலுத்தினாலே அது உங்களுக்கு நிறைய கொடுக்கும். வாய்வழியாக சொல்லுவதை விட உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்தால் நீங்கள் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பீர்கள். பெரும்பாலான வழிபாடுகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும்.

மூன்றாம்பிறை வழிபாடு சிறந்த வழிபாடாக இருக்கும். மூன்றாம் பிறையை காண்பது சிறந்தது என்பார்கள். நம் மதத்திலும் சரி பிற மதத்திலும் சரி மூன்றாம் பிறைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள்.

மாலை நேரத்தில் உங்களின் வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றி விட்டு சாமி கும்பிட்டுவிட்டு கற்பூரம் ஆராத்தி காட்டிவிட்டு அந்த ஆராத்தியை அப்படியே வெளியில் வந்து வானத்தை நோக்கி மூன்றாம் பிறையை நோக்கி காட்டிவிட்டு அப்படியே மறுபடியும் உள்ளே சென்று சாமி கும்பிடுங்கள்.

இது ஒரு உணர்வு பூர்வமான ஒரு வழிபாடு தான் இதில் மந்திரங்களை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உணர்வு பூர்வமாக நாம் செய்யும் இந்த செயல் உங்களுக்கு நிறைய நல்ல வாய்ப்பை கொண்டு வரும்.

நமது சோதிடத்தின் அடிப்படை சந்திரனை கொண்டு தான் இருக்கின்றது. சோதிடத்தின் வழியாக நமக்கு நல்லது நடப்பதற்க்கும் இந்த வழிபாட்டை நீங்கள் செய்து பயன் பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாற்றங்கள்


வணக்கம்!
          திடீர் பயணமாக சென்னை சென்ற காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. இன்று தஞ்சாவூர் திரும்பி வந்துவிட்டேன். இனிமேல் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒருவரின் வாழ்வில் மாற்றங்களை கொடுப்பதற்க்கு சக்தி என்பது வேண்டும். இதனை புரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். சக்தி படைத்த நபர்கள் உங்களோடு இணையும்பொழுது தான் உங்களின் வாழ்க்கை பலவித மாறுதல்களுக்கு உருவாகின்றது.

என்னுடைய வாழ்விலும் மாற்றங்களை கொடுப்பதற்க்கு ஒரு குரு எனக்கு தேவைப்பட்டார். அவர் வந்த பிறகு தான் எனக்கு மாற்றங்களே வந்தன. அவர் கொடுத்த அந்த சக்தியை வைத்து தான் இன்று பலரின் வாழ்வில் நல்ல மாற்றங்களை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

உங்களின் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தாலும் சரி அது என்னை போன்றவர்களின் தொடர்பை நீங்கள் உருவாக்கிக்கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நடக்கும். உங்களுக்கு கண்டிப்பாக அதனை உருவாக்கிக்கொடுப்பார்கள்.

இது வியாபார யுக்தி போல சொல்லவில்லை. எதார்த்தமான ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லுகிறேன். கிரகங்கள் சரியில்லை என்று இருக்காமல் உங்களுக்கு தெரிந்த நல்ல ஆன்மீகவாதிகளோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 26, 2018

ஆறாவது வீட்டு தசா


வணக்கம்!
         ஒருவரின் ஜாதகத்தில் ஆறுக்குடையவனின் தசா நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அது நீண்ட தசாவாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு திருமண வயது ஆகுகின்றது அந்த நேரத்தில் திருமணம் நடக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக அவர்க்கு திருமணம் நடக்கும்.

ஏழாவது வீட்டிற்க்கு எதிராக ஆறாவது வீடு இருந்தாலும் நடக்கின்ற புத்தி மற்றும் கோச்சாரபலன் நன்றாக இருந்தால் அவர்க்கு திருமணம் நடக்கும். நாம் ஆறாவது வீட்டு தசா நடக்கின்றது அதனால் திருமணம் நடக்காது என்று சொல்லிவிடமுடியாது.

ஆறாவது தசா நடந்தாலும் திருமணம் நடக்கும் அதே நேரத்தில் அவரகளின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால் அதில் மட்டும் அவ்வப்பொழுது சண்டை சச்சரவு வந்துக்கொண்டே இருக்கும்.

தம்பதினர்களிடையே அதிகமாக பிரச்சினை வந்து அடிக்கடி இருவீட்டார்களும் பஞ்சாயத்து செய்யும் நிலைக்கு இந்த தசா வேலை செய்யும். பெரும்பாலான ஜோடிகள் பிரிய மாட்டார்கள் ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

பொதுவாகவே மறைமுகஸ்தான வீடுகளின் தசா நடக்கும்பொழுது ஒன்று வெளியில் இருந்து பிரச்சினையை உருவாக்கிவிடும் அப்படி இல்லை என்றால் வீட்டிற்க்குள்ளேயே பிரச்சினையை உருவாக்கிவிட்டுவிடும்.

நாளை சென்னையில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 25, 2018

ஆன்மீகம்


ணக்கம்!
          மனிதனுக்கு பிரச்சினை வருவது இயற்கையான ஒன்று. இதனை சோதிடவிதியை வைத்து நாம் ஆராய்ந்து அதற்கு தகுந்தார்போல் ஒவ்வொன்றையும் செய்து வருகிறோம். பரிகாரம் என்பதையும் தாண்டி பல விசயங்களை அவ்வப்பொழுது நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

பிரச்சினை வருபவர்களும் சரி பிரச்சினை வராதவர்களும் சரி அவ்வப்பொழுது ஆன்மீக சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் நீங்கள் பங்களிப்பை செய்யவேண்டும். பல கோவில்கள் இருக்கின்றன இந்த கோவில்களில் எல்லாம் அடிக்கடி நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும்.

நாம் கோவிலுக்கு போகின்றோம் ஆன்மீக நிகழ்வுகளில் எல்லாம் பங்குக்கொள்கிறோம் இது அனைத்தும் பிரச்சினை வராவே வராது என்பதில்லை மாறாக நமது ஆத்மாவுக்கு தேவையான நல்லதை கொடுக்கிறோம்.

பல ஜென்மங்களாக கடந்து வந்த ஆத்மாவிற்க்கு ஒரு எனர்ஜி கொடுக்கும் வேலையை தான் செய்துக்கொண்டு இருக்கிறோம். பெரியளவில் சக்தி படைத்தவர்களிடம் ஒன்றுமே இருக்காது. அதாவது அவர்களிடம் பணம் மற்றைய செல்வங்கள் இருக்காது. அவர்களுக்கு தேவை ஆத்மா சக்தியோடு இருக்கவேண்டும். இதனை தான் அவர்கள் செய்வார்கள்.

நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கின்றீர்கள். உங்களின் மீது உங்களின் தலைமைக்கு ஒரு நல்ல ஈடுபாடு உருவாதற்க்கு ஆன்மீகம் துணைபுரியும். நல்ல சக்தி படைத்தவர்களுக்கு தான் வாய்ப்புகளும் தேடிவரும்.

உங்களை சுற்றி இருப்பவர்கள் குறிப்பாக உங்களின் உறவினர்கள் இவனுக்கு எப்பொழுது பார்த்தாலும் இது தான் வேலை என்று இருக்கிறான் என்று சொல்லுவார்கள். இதனைப்பற்றி கவலைப்படாமல் உங்களின் வேலையை மட்டும் செய்துக்கொண்டு இருங்கள்.

நவராத்திரி சிறப்பு அம்மன் யாகத்திற்க்கு பங்குக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 24, 2018

தானத்தில் சிறந்த தானம்


வணக்கம்!
         ஏழை மக்கள் தானம் செய்வதற்க்கு என்று ஒரு சில விதிவிலக்கு உண்டு. பணம் வைத்திருப்பவர்கள் பெரியளவில் தானம் செய்வார்கள் அதுவே ஏழையாக இருந்தால் அதனை செய்யமுடியாது. ஏழையாக இருந்து பணக்காரர்ரகள் செய்யும் பெரியளவில் உள்ள தானத்தை சிறியளவில் செய்து அதே புண்ணியத்தை பெறுவதற்க்கு நமது சாஸ்திரத்திலும் வழி இருக்கின்றது. 

பசு தானம் செய்வது ஒரு பெரிய தானமாக கருதப்படும். நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி பசு தானத்தை செய்வார்கள். ஏழையாக இருக்கும் அந்தணர்களுக்கு பசு தானம் செய்ய சொல்லுவார்கள். ஏழையாக இருக்கும் எல்லா ஜாதியினர்க்கும் பசு தானம் செய்யலாம்.

இன்றைய காலத்தில் ஒரு பசு மாட்டை செய்யவேண்டும் என்றால் குறைந்தளவு நாற்பது ஆயிரத்தில் இருந்து ஐம்பது ஆயிரம் செலவு செய்யவேண்டும். மாட்டின் விலை அப்படி இருக்கின்றது. இதனை செய்யவேண்டும் என்றால் நல்ல பணம் வைத்திருப்பவர்கள் தான் செய்ய முடியும்.

பசு மாட்டிற்க்கு ஒப்பாக ஒன்றை செய்வார்கள். பலாபிஞ்சை பசு மாட்டிற்க்கு ஒப்பாக கொடுக்கலாம். பலா பழத்தின் பிஞ்சு காய்கறி கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி தானம் செய்யலாம். பசு மாட்டிற்க்கு ஒப்பான பலன் கிடைக்கும். நேற்று இதனை வாங்கினேன் ஒன்று இருபது ரூபாய் விலையில் வாங்கினேன். ஒரு தர்மத்திற்க்கு வாங்கினேன். 

பலாபிஞ்சை வாங்கி என்ன செய்வார்கள் என்று கேட்கலாம். பெரும்பாலான அந்தணர்களின் வீடுகளில் இதனை சமைத்து உண்ணுவார்கள். இதனை வாங்கி தானமாக நாம் கொடுக்கலாம். நீங்கள் முடிந்தால் அந்தணர்களுக்கு வாங்கிக்கொடுங்கல் அல்லது உங்களின் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் நபர்களுக்கு கூட இதனை கொடுக்கலாம்.

நீங்கள் இதனை வாங்கி தானமாக கொடுத்தால் பசு மாட்டை தானமாக கொடுத்த பலனை நீங்கள் அனுபவிக்கமுடியும். பல ஊர்களில் இது வழக்கத்திற்க்கு உள்ளது. பணம் இல்லாத பட்சத்தில் இதனை கொடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவ அம்மன்(சண்டி) யாகம் நிறைவு


வணக்கம்!
          இன்றோடு நவ அம்மன் யாகம் நிறைவு பெறுகின்றது. அனைவருக்கும் தங்களின் வேண்டுகோளை அம்மனிடம் வைத்திருக்கிறேன். பல பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லி பலர் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பி வைத்தார்கள். பங்குக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த மாதம் நடைபெறும் நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கும் கலந்துக்கொள்ள அழைக்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு என்று ஒதுக்கிய நாள்களில் நவராத்திரி மிக முக்கியமான நாட்களாக இருக்கின்றன. சிவனுக்கு ஒரு நாள் பெருமாளுக்கு ஒரு நாள் அம்மனுக்கு மட்டும் ஒன்பது நாட்கள் வைத்திருக்கின்றனர்.

ஒன்பது நாட்களும் அம்மனுக்கு என்று ஒதுக்கி அம்மனின் அருளை பெறுவதற்க்கு என்று வைத்திருக்கின்றனர். அம்மனின் அருளை பெறுவதற்க்கு நாம் செய்யும் இந்த யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது.

இந்த வருடமும் அம்மனுக்கு என்று சிறப்பாக செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதனைப்பற்றி பல பதிவுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை அனைவரும் இந்த நவராத்திரி அம்மன் யாகத்தை செய்ய முனையுங்கள் என்று சொல்லுகிறேன்.

அனைவரும் முனையுங்கள் என்று சொல்லுவது முயன்று பார்த்தால் தான் அதற்கு நீங்கள் தயாராக முடியும். நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அதுவாகவே அனைத்தும் நடைபெற ஆரம்பிக்கும் என்பதற்க்காக அனைவரும் முயலுங்கள் என்று சொல்லுகிறேன்.

காலம் தாழ்த்தாமல் உடனே தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 23, 2018

அன்னதானம்


வணக்கம்!
          தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லுவார்கள். இந்த அன்னதானம் செய்வதில் இன்றைய காலத்தில் நிறையே பேர் போட்டி போட்டுக்கொண்டு அன்னதானம் கோவில்களில் மற்றும் பொது இடங்களில் செய்கின்றனர்.

நான் பழைய பதிவில் உங்களிடம் சொல்லுயிருக்கிறேன். அன்னதானம் செய்தால் கோவிலில் மட்டும் சாப்பிடுங்கள். வெளியில் பாேடும் அன்னதானம் அடுத்தவர்களின் கர்மாவை நீங்கள் சுமக்கவேண்டும் என்பது போல வரும் அதனை சாப்பிடவேண்டாம் என்று சொல்லிருக்கிறேன்.

பெரும்பாலான ஆன்மீகவாதிகள் வெளியிடங்களில் சாப்பிடுவது கிடையாது. இழிச்சவாயான மக்களுக்கு மட்டும் இதனை எல்லாம் போதிப்பார்கள். அன்னதானம் செய்வதும் நல்லது சாப்பிடுவதும் நல்லது என்று சொல்லிவிடுவார்கள். 

பெரும்பாலான ஆன்மீகவாதிகள் அடுத்தவர் வீட்டில் தண்ணீர் கூட வாங்கி அருந்துவது கிடையாது. அவர்களின் பாவத்தை தேவையில்லாம் நாம் சுமக்ககூடாது என்ற குடிக்க மாட்டார்கள். அவர்களும் உங்களை போல பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் நீங்களும் சாப்பிடலாம்.

உங்களுக்க சாப்பாடே கிடைக்காமல் இருக்கும் இடத்திற்க்கு சென்றால் மட்டும் அன்னதானம் போட்டால் சாப்பிடுங்கள் அப்படி இல்லை என்றால் சாப்பிடவேண்டாம். சாப்பாட்டை சுத்தி செய்து சாப்பிடுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டு அப்படி சாப்பிட்டால் உணவால் வரக்கூடிய தோஷம் உங்களுக்கு வராது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 22, 2018

பிரச்சினை தீர பரிகாரம்



வணக்கம்!
          ஒவ்வொரு சிறிய பிரச்சினை வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே அதற்கு தகுந்த ஏற்பாட்டை செய்துவிடவேண்டும். அதாவது உங்களுக்கு ஒரு சின்ன பிரச்சினை வந்துவிட்டால் அது எதற்க்காக வருகின்றது அதனை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டு செயல்பட்டால் அதில் இருந்து தப்பித்துவிடலாம்.

ஏதோ ஒரு கிரகத்தின் வழியாக தான் பிரச்சினை உருவாகும் அதனை நாம் புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் முன்கூட்டியே செயல்பட்டுவிடவேண்டும். சின்ன பிரச்சினையாக உருவாகி அது பெரியளவில் கொண்டு சென்றுவிடும். பிரச்சினையை ஆரம்பத்திலேயே முடித்துவிட்டால் நல்லது.

உங்களின் சகோதர் ஒரு பிரச்சினையை உருவாக்கின்றார் என்றால் சகோதரை காட்டக்கூடிய செவ்வாய் கிரகம் எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். செவ்வாய் நன்றாக இல்லை என்றால் உடனே செவ்வாய் கிரகத்திற்க்குரிய முருகன் கோவில் சென்று ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.

கோவிலுக்கு சென்று வந்த பிறகு நேரடியாக உங்களின் சகோதரரை கூப்பிட்டு பேசிவிடலாம். கோவிலுக்கு சென்று வந்த பிறகு மறுநாள் பேசும்பொழுது அவர் சாந்தமாக மாறிவிடுவார். நீங்களும் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினை முடிந்துவிடும்.

நான் சொல்லுவது ஒரு சின்ன உதாரணம் உங்களின் வாழ்வில் வரக்கூடிய அனைத்து பிரச்சினையும் நீங்கள் இது போலவே சரி செய்துக்கொண்டால் பெரும்பாலும் பெரிய இழப்பு உங்களுக்கு வந்துவிடாது.

நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு கலந்துக்கொள்ளபவர்கள் முன்கூட்டியே என்னை தொடர்புக்கொள்ள சொல்லிருந்தேன். காலம் தாழ்த்தாமல் உடனே தொடர்புக்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 21, 2018

பொறாமையை தரும் கிரகங்கள்


வணக்கம்!
          பொறாமை என்ற எண்ணம் உருவாவதற்க்கு காரணமாக இருப்பது எந்த கிரகத்தால் என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். பொறாமை இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கின்றது.

ஒரு சில நாட்டினருக்கு தகுந்தமாதிரி இந்த பொறாமை எண்ணம் இருக்கும். சோதிடத்தில் மறைவுஸ்தான அதிபதிகள் இந்த எண்ணத்தை உருவாக்கும் என்று சொல்லுவார்கள். மறைவுஸ்தான அதிபதியில் அதிகமாக மூன்றாவது வீடு மற்றும் ஆறாவது வீட்டு அதிபதிகள் தான் அதிகமாக பொறாமை எண்ணத்தை உருவாக்கின்றனர்.

பொறாமை எண்ணம் என்ற ஒன்று இருப்பதில் தான் உலகத்தில் முன்னேற்றம் குறைவாக இருக்கின்றது என்று சொல்லலாம். பொறாமை எண்ணம் இல்லை என்றால் இன்னமும் நிறைய முன்னேற்றங்களை இந்த உலகம் கண்டு இருக்கும்.

சோதிடத்தில் ஒருவருக்கு மூன்றாவது வீட்டு தசா நடந்தால் அவர்கள் அடுத்தவர்களை பார்த்து அதிகமாக பொறாமை கொள்வார்கள். அடுத்த வீட்டில் இருப்பவர்கள் இவர்களின் கண்ணில் இருந்து தப்புவது கடினமாக இருக்கும்.

உலகத்தில் பொறாமை அதிகமாக தான் இருக்கும் என்ன செய்வது இந்த உலகத்திற்க்கு வந்துவிட்டோம் இதனை எல்லாம் மீறி தான் நாம் செயல்படவேண்டியிருக்கும். நல்ல திருஷ்டி சுத்தி போட்டுக்கொண்டு உங்களின் முன்னேற்றத்தை மட்டும் பாருங்கள். தானாகவே அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Thursday, September 20, 2018

குரு பெயர்ச்சி பரிகாரம்


வணக்கம்!
         குரு கிரகப்பெயர்ச்சியை பற்றி பதிவுகளை போடுங்கள் என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். நீங்கள் திரும்பிய பக்கம் எல்லாம் குரு பெயர்ச்சி பற்றிய பலன்கள் தான் இருக்கின்றன. இதில் நாம் குரு பெயர்ச்சியை பலனை தனியாக எழுதவேண்டியதில்லை.

குரு கிரகம் உங்களுக்கு தொந்தரவை கொடுத்தால் நாம் சொல்லும் பரிகாரத்தை மட்டும் செய்துவாருங்கள். குரு கிரகம் என்றால் வயது முதிர்ந்த ஒரு அனுபவசாலியை காட்டக்கூடிய ஒரு கிரகம். வயது முதிர்ந்த ஒரு ஞானம் கொடுப்பது போல இருக்கும் நபர்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள்.

ஆன்மீக பணியை மேற்க்கொண்டு செய்யுங்கள். நிறைய கோவில்கள் சென்று வருவது கூட குரு கிரகம் காரத்துவத்தில் வரக்கூடிய ஒன்று தான் அதனால் நிறைய கோவில்கள் சென்று வரலாம். பணம் உங்களுக்கு வந்தாலும் சரி வரவிட்டாலும் சரி உங்களின் பையில் கொஞ்சம் பணம் இருப்பது போலவே வைத்துக்கொள்ளுங்கள்.

சித்தர்களின் ஜீவசமாதியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். சித்தர்களின் ஜீவசமாதியை தரிசனம் செய்து வந்தால் குரு கிரகத்தின் ஆசி கிடைக்கும். தற்பொழுது பலன் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் நல்ல பலனை உங்களுக்கு கொடுக்கும்.

உங்களால் முடிந்தால் தொடர்ந்து ஒன்பது வாரம் குரு கிரகத்திற்க்கு ஒரு தீபம் ஏற்றி வணங்கி வரலாம். நிறைய தொந்தரவை குருவால் சந்திக்கும் நபர்கள் ஆலங்குடி சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். இதனை செய்தால் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 19, 2018

நவராத்திரி விழா சிறப்பு அம்மன் யாகம்


வணக்கம்!
          நவராத்திரி விழா வரப்போகின்றது. அம்மனுக்கு ஒன்பது நாட்கள் மிக மிக விஷேசமான நாட்களாக அமையும். அம்மனின் அருளை பெறுவதற்க்கு உலகம் எங்கும் இந்த விழா சிறப்பாக நடைபெறும். சக்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நவராத்திரியை நன்றாக பயன்படுத்திக்கொள்வார்கள்.

ஜாதக கதம்பத்தின் வழியாக இந்த நவராத்திரி யாகம் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு வருடமும் இந்த யாகத்திற்க்கு என்று நண்பர்கள் ஒவ்வொரு நாளும் பங்களிப்பை அளித்து இருக்கின்றனர்.

நவராத்திரி விழா வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி ஆரம்பம் ஆகின்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு யாகம் செய்யப்படுகின்றது. அம்மன் சிறப்பு யாகத்தில் செய்ய நினைக்கும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பிற விபரங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

முன்கூட்டியே உங்களிடம் தெரிவிப்பதற்க்கு நீங்கள் சரியாக திட்டம் தீட்டி இதனை செய்யலாம். கண்டிப்பாக நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். ஒரு வருடத்திற்க்கு தேவையான அம்மனின் சக்தி பெறுவதற்க்கு இது உகந்த ஒன்றாக இருக்கும். 

வருடம் வருடம் செய்பவர்கள் இதனை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள் புதியவர்களுக்கும் வாய்ப்பு இருப்பதால் உடனே என்னை தொடர்புக்கொண்டு பிற விபரங்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அக்னி


வணக்கம்!
          காலம் காலமாக அக்னிக்கு ஆன்மீகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அக்னியை கொண்டு இறைவனை அடையமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் அக்னிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனைத்து ஆன்மீகமும் இருக்கும்.

பண்டைய காலத்தில் இருந்து தற்பொழுது வரை ஆன்மீகத்திற்க்கு என்று அக்னியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அக்னியை வளர்க்க வேண்டும் என்பதற்க்காக தான் அனைத்து யாகத்திற்க்கும் முக்கியத்துவம் இருக்கின்றது.

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு யாகமும் உங்களுக்கு அதிகளவில் பயனை கொடுக்கும் என்பதால் யாகத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அக்னி வழியாக அது இறைவனை அடைந்து உங்களுக்கு பயன் அதிகமாக உடனே விரைந்து கிடைப்பது போல இருக்கும்.

நாம் யாகம் வளர்த்தாலும் பிற மதத்திலும் அக்னிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பாதை வேறாக இருக்கலாம் ஆனால் செய்யும் வழி எல்லாம் ஒன்றாக தான் இருக்கின்றது. அதாவது அக்னிக்கு முக்கியத்துவம் கொடுப்பது. 

வெளிநாட்டில் கூட அக்னியை வளர்த்து அதனை சுற்றி ஆடல் பாடல் செய்வார்கள். அது அவர்களுக்கு ஏதாே ஒரு விதத்தில் புத்துணர்வை தருகின்றது. நாம் அக்னியோடு இணைக்கும்பொழுது நம்மை அது சுத்திகரிக்கின்றது என்று சொல்லலாம். 

அக்னியை கொண்டு நம்முடைய சக்தி வழியாக பல நன்மைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு அனைவருக்கும் அது கிடைக்கவேண்டும் என்பதற்க்காக இலவசமாகவும் செய்கிறோம். உங்களை நேரில் வந்து பங்குக்கொள்வது போல செய்யும் காலம் வெகு விரைவிலும் செய்யலாம் என்று இருக்கிறேன். இதுவரை அந்த யோசனை இல்லாமல் இருந்தது. இனிமேல் உங்களை நேரில் வந்து கலந்துக்கொள்வது போல செய்யவேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. அம்மன் அருளால் அது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 18, 2018

ஏழுக்கு வரும் கிரகங்கள்


வணக்கம்!
          ஒருவருக்கு ஏழில் வரும் கிரகங்கள் அதிகளவில் தொந்தரவை ஒருவருக்கு தரும். ஏழில் வரும் தீயகிரகங்கள் ஒருவருக்கு கண்டத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. உங்களின் இராசிக்கு ஏழில் தீயகிரகங்கள் கோச்சாரபடி வரும் நேரத்தில் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

ஒருவருக்கு கோச்சாரபடி ஏழில் கிரகங்கள் வரும்பொழுது உயிர்க்கு பங்கம் வருமா என்று கேட்டால் கண்டிப்பாக வருவதற்க்கு அதிகபட்சமான காரணங்கள் இருக்கின்றன. ஏழில் தீயகிரகங்கள் வரும்பொழுது அவர்க்கு மரணம் கூட ஏற்படும்.

ஏழில் சுபகிரகங்கள் வந்தால் அவர்க்கு திருமணம் அல்லது நல்ல தொழில் செய்யும் கூட்டாளிகள் அமைவார்கள். அது அவர்களின் ஜாதகத்தை பொறுத்து அமையகூடிய ஒன்றாக இருக்கும். சுபகிரகங்கள் வந்தால் நல்லது என்றும் தீயகிரகங்கள் வந்தால் தீமை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏழில் அமர்ந்த கிரகங்கள் தசா நடத்தும்பொழுது அவர்க்கு அடுத்தவர்கள் அல்லது துணையின் வழியாக நிறைய நல்லதும் நடக்கின்றது. தீயகிரகங்களின் தசாவில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தால் போதுமானது.

நவ அம்மன் யாகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதுவரை தங்களைப்பற்றி விபரங்கள் தெரிவித்து அவர்களுக்கு யாகபடங்கள் வரவில்லை என்றால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். நவஅம்மன் யாகத்தில் தர்மம் செய்ய சொல்லிருந்தேன் பலர் இதுவரை செய்யவில்லை உடனே அதனை நிறைவேற்றுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 17, 2018

தடையை உடைக்கும் ஆன்மீகசெயல்


வணக்கம்!
          நாம் எடுக்கும் காரியங்கள் எல்லாம் தடை இன்றி நடக்கவேண்டும் என்றால் அதற்கு பாக்கியஸ்தானம் மிகவும் வலுவாக அமையவேண்டும். பாக்கியஸ்தானம் முட்டுக்கட்டை போட்டால் நம்மால் எதுவும் நகர்த்தமுடியாது.

பாக்கியஸ்தானம் எந்த நேரத்திலும் தங்கு தடையின்றி தன்னுடைய வேலையை செய்யும்பொழுது தான் ஒருவர் மிகப்பெரிய அளவில் தன்னுடைய காரியத்தை அனைத்தையும் சாதித்து வெற்றி பெற்றுவிடுகிறார்.

உங்களுக்கு ஆன்மீக வழியில் நடக்கும் அனைத்து விசயங்களும் உங்களின் பாக்கியஸ்தானத்திற்க்கு வலுக்கொடுக்கும். இதனை அறிந்து தான் மக்கள் அனைத்து கோவிலுக்கும் நல்ல முறையில் செய்கின்றனர்.

இயற்கையில் ஜாதக அமைப்பில் பாக்கியஸ்தானம் சரியில்லை என்று நினைப்பவர்ளுக்கு எல்லாம் நிறைய கோவில்கள் மற்றும் தர்மகாரியங்களை செய்யவேண்டும் என்று சொல்லுவார்கள். இன்றைய காலத்தில் பல சாமியார்களுக்கு நல்ல வருமானம் கூட இப்படிப்பட்ட காரியங்கள் வெற்றி பெறுவற்க்கு தான் கொடுக்கின்றனர்.

உங்களுக்கும் காரியங்கள் தடை என்று வந்தால் நீங்களும் இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கி வேலை செய்யுங்கள். நிறைய சம்பாதிக்க வேண்டும் நினைப்பவர்கள் அனைவரும் செய்யவேண்டியது பாக்கியஸ்தானத்திற்க்கு வலு சேர்க்கும் வேலையில் இறங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 16, 2018

நவஅம்மன் யாகம் ஆரம்பம்


வணக்கம்!
          இன்று நவ அம்மன் (சண்டி) யாகம் ஆரம்பித்துவிட்டேன். காலையில் நவஅம்மன் யாகம் முதல்நாள் யாகத்தை முடித்துவிட்டு இந்த பதிவை தருகிறேன். 

நவ அம்மன் யாகம் இலவசமாக தான் செய்யப்படுகின்றது. எப்பொழுதும் இலவசமாக ஒரு நிகழ்வை நான் நடத்தினால் அதில் எனக்கு நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் எனக்கு வரும். நவஅம்மன் யாகத்திற்க்கு தங்களின் விபரங்களைப்பற்றி அனுப்புங்கள் என்று சொன்ன நாளில் இருந்து எனக்கு பிரச்சினை ஆரம்பம் ஆனது.

இலவசமாக செய்யும்பொழுது அவர்கள் தர்மம் செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். இதுவரை தர்மம் செய்யாதவர்களும் இருக்க தான் செய்கின்றனர். தர்மம் செய்யாதவர்கள் உடனே தர்மத்தை செய்துவிடுங்கள். கண்டிப்பாக நீங்கள் தர்மம் செய்துவிடவேண்டும்.

இலவசமாக அனுப்பியவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நிறைய கர்மாக்களை சுமந்துக்கொண்டு நீங்கள் இருக்கின்றீர்கள். உடனே அதனை கலைய முனையுங்கள். நிறைய கோவில்கள் செல்லுங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு வாருங்கள்.

தினமும் காயத்திரி மந்திரத்தை சொல்லிவாருங்கள். உங்களின் இஷ்டதெய்வத்தின் மந்திரத்தை கூட தினமும் பூஜையில் சொல்லிவந்தால் அதுவே பல புண்ணியங்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 14, 2018

ஜாதகத்தில் எந்த வீடு அதிபயங்கரமானவை?


ணக்கம்!
          ஒரு மனிதரை அதிகமாக பாதிக்கும் வீடாக இருப்பது மறைமுகஸ்தானம் என்று சொல்லுவார்கள். மறைமுகஸ்தானமான வீட்டின் தசா அல்லது அதன் அதிபதி ஒரு மனிதருக்கு அதிகமான துன்பங்களை கொடுக்ககூடிய ஒரு வீடாக இருக்கும் என்பார்கள். உண்மையில் அப்படி இருக்கின்றதா என்று கேட்டால் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்லுவேன்.

ஒரு மனிதரை அதிகமாக பாதிக்கக்ககூடிய வீடாக இருப்பது ஏழாவது வீடும் ஐந்தாவது வீடு தான் அதிகமாக பாதிக்கும். ஒரு மனிதனுக்கு அவனுக்கு அமையும் துணை மற்றும் அவனின் வாரிசுகள் தான் அதிகமாக அவனை போட்டு கொல்லும் தன்மை உடையது. 

அவனின் துணைக்காக கஷ்டப்பட்டு ஓடிக்கொண்டு இருப்பான் அதன் பிறகு அவனின் வாரிசுக்காக அதிகம் ஓடிக்கொண்டு இருப்பான். இந்த ஓட்டத்தில் அவனின் ஆயுளை பாதியாக குறைத்துவிடும் தன்மை இந்த இரண்டு வீட்டிற்க்கும் உண்டு. இதனை யாரும் மறுக்கமுடியாது.

மனைவி மக்களை காப்பாற்றவேண்டும் என்று ஓடுவதில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணிக்க நினைப்பான். இந்த இரண்டும் அவனை போட்டு படுத்தி எடுத்துவிடும். இதனை அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்த இரண்டு வீடு போல ஜாதகத்தில் வேறு வீடுகள் கிடையாது என்பது தான் உண்மை. இந்த இரண்டு வீட்டையும் ஒருத்தன் சமாளித்துவிட்டால் அவன் மற்றைய வீடுகளை எளிதில் சமாளித்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 13, 2018

தர்மம் தலைகாக்கும்


வணக்கம்!
          விரைவில் நவஅம்மன் (சண்டி) யாகம் ஆரம்பிக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பிவையுங்கள்.  தர்மகாரியங்களையும் உடனே செய்துவிடுங்கள்.

ஒன்பதாவது வீடு என்னும் பாக்கியஸ்தானம் பலம்பெறுவதற்க்கு தர்மகாரியங்களை செய்யவேண்டும். நம்முடைய வேலைகள் எந்தவிதத்திலும் தடையின்றி நடைபெறுவதற்க்கு பாக்கியஸ்தானத்தின் அதிபதி மற்றும் பாக்கியதானத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் தடையை ஏற்படுத்த கூடாது.

பாக்கியஸ்தானத்திற்க்கு கிடைக்கும் கிரகங்களின் பார்வையும் நன்றாக இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் எதனை தொட்டாலும் அது துலங்கும். இதில் எங்கு தடைப்பட்டாலும் நாம் எடுக்கின்ற முயற்சி தோல்வியை தந்துவிடும்.

பாக்கியஸ்தானத்தை பலப்படுத்துங்கள் என்று சொல்லுவது எல்லாம் நம்முடைய வேலைகள் தடைப்படகூடாது என்பதால் தான் அடிக்கடி சொல்லுவது உண்டு. பாக்கியஸ்தானத்திற்க்கு ஏதாவது ஒரு தடை வந்துக்கொண்டு இருந்தால் அதற்கு பரிகாரம் தர்மம் செய்வது மட்டுமே சிறந்த பரிகாரமாக இருக்கமுடியும்.

முன்காலத்தில் எல்லாம் பெரியோர்களை கண்டால் காலில் விழுந்து வணங்க சொல்லுவார்கள். இந்த காலத்தில் இது எல்லாம் மாறிவிட்டது. பெரியோர்களின் ஆசி என்பது பாக்கியஸ்தானத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஒரு அற்புத வரப்பிரசாதம்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 12, 2018

விநாயகர் சதுர்த்தி


வணக்கம்!
          நேற்று திருப்பூர் சென்று இன்று காலை தஞ்சாவூர் வந்தேன். பதிவை கொடுப்பதற்க்கு தாமதம் ஆகிவிட்டது. பலர் நவஅம்மன் சண்டி யாகத்திற்க்கு தங்களின் பெயர்களையும் மற்றும் நட்சத்திரத்தையும் தெரிவித்து வருகின்றனர். அனைவரும் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

என்னிடம் அறிமுகமான நண்பர்களாக இருந்தால் அவர்கள் தங்களின் பெயரை இணைத்துவிடுங்கள் என்று சொன்னாலே போதுமானது. ஒரு நபரை நான் பார்த்துவிட்டால் அவரை மனதில் நிறுத்தி அனைத்து காரியத்தையும் நாம் செய்துவிடலாம்.

அறிமுகம் இல்லை என்றால் மட்டுமே நட்சத்திரம் மற்றைய விபரங்கள் எல்லாம் கேட்கவேண்டும். முடிந்தவரை என்னை இதுவரை சந்திக்காத நபர்கள் அனைவரும் சந்தித்துவிடுவது நல்லது. இது பலவிதத்திலும் உங்களுக்கு நல்லதை செய்யும் என்பதால் சொல்லுகிறேன்.

விநாயகர் சதுர்த்தி வருகின்றது. இந்த விநாயகர் சதுர்த்தி நல்லது என்றாலும் தற்பொழுது எல்லாம் இது அடுத்தவரை வம்பு இழுப்பதற்ககாக உள்ள பண்டிகை போலவே இருக்கின்றது. பல இடங்களில் நான் இதனை பார்த்து இருக்கிறேன்.

விநாயகரை வணங்கி நமது மூலாதாரத்தை திறந்து நமது தடைகளை எல்லாம் போக்கிக்கொள்வதற்க்கு வழி வகுத்துக்கொள்ளவேண்டும். நமது முன்னேற்றத்திற்க்கு உள்ளதற்க்காகவே அனைத்து வழிபாடுகளையும் செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 11, 2018

நவஅம்மன் (சண்டி) யாகம்



வணக்கம்!
          நவஅம்மன் (சண்டி) யாகம் விரைவில் தொடங்கப்படுவதால் உடனே தங்களின் பெயர் நட்சத்திரம் மற்றும் வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை அனுப்பவும். நவஅம்மன் யாகம் தொடங்கிய பிறகு பலர் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பி வைப்பார்கள் இதனை முன்கூட்டியே அனுப்பிவிடுவதற்க்காக தான் சொல்லுகிறேன்.

நவஅம்மன்(சண்டி) யாகத்திற்க்கு தர்மம் செய்பவர்கள் செய்துவிடுங்கள். மருத்துவ வேண்டுதல் வைப்பவர்கள் அதிகபடியான தர்மங்களை செய்யும்பொழுது மட்டுமே அவர்களுக்கு நல்லது நடக்கும். பெரும்பாலும் மருத்துவ சம்பந்தப்பட்ட வேண்டுதல்களுக்கு இலவச அனுமதி கொடுப்பதில்லை.

மருத்துவ சம்பந்தப்பட்டது அதிகமான கர்மங்கள் சுமந்து வரும் அதற்க்கு நிறைய தர்மங்களை செய்யும்பொழுது மட்டுமே நம்மால் செய்ய முடியும். மருத்துவ வேண்டுதல்கள் நிறைவேற நிறைய தர்மங்களை செய்துவிட்டு வேண்டுதல் வையுங்கள்.

ஒவ்வொரு நாளும் சிறப்பான முறையில் யாகங்கள் செய்விக்கப்படும். நல்ல முறையில் ஆகுதி கொடுத்து இதனை செய்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும்.

நவஅம்மன்(சண்டி)யாகத்தில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் தங்களின் வாட்ஸ்அப் எண்ணில் ஹோம படங்களை அனுப்பி வைக்கிறேன். அதனால் வாட்ஸ்அப் எண்ணை தவறாமல் இணைத்து அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 10, 2018

நம்பிக்கையோடு சோதிடம்


வணக்கம்!
          நிறைய பேர்கள் சொல்லும் ஒரு வார்த்தை எல்லாம் தன்னமிக்கை இருந்தால் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடலாம். ஒரு பிரச்சினை வந்தாலும் சோதிடர்களிடம் சென்று கேட்ககூடாது என்பார்கள்.

ஒரு பிரச்சினை வந்தால் பரவாயில்லை. ஒரு பிரச்சினை பல பிரச்சினைக்கு வழி வகுத்துவிடும் என்பதால் தான் மக்கள் சோதிடர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்கின்றார்கள். என்ன தான் நம்பிக்கை எல்லாம் தன்மேல் வைத்தாலும் விதி அடிக்க ஆரம்பித்தால் அதில் இருந்து மீள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

ஒரு சில கிரகங்கள் வாழ்வில் நிறைய சிக்கல்களை சந்திக்க வைத்துவிடும். திடீர் என்று பிரச்சினை வந்து அதனால் வேலையை இழந்தவர்களும் இருக்கின்றனர். வேலை இழந்து அதனால் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிப்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர். திடீர் மரணத்தை சந்திப்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

இன்றைய காலத்தில் அனைவருக்கும் சோதிடத்தைப்பற்றி தெரியும். கிரகங்கள் எப்படி தயாராகி அது அடித்து காலி செய்யும் என்பதும் தெரியும். இதனை தெரிந்துக்கொண்டு ஒரளவு அதற்கு தயாராகிவிடுவதற்க்கு தான் அனைவரும் சோதிடத்தை பார்க்கின்றார்கள்.

தன்னம்பிக்கையோடு சேர்ந்து ஆன்மீகத்தையும் நாடும்பொழுது எளிதில் ஒரு பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்பதற்க்காக தான் இதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வங்கி கணக்கு விபரம்


வணக்கம்!
          நவஅம்மன் பொது யாகத்திற்க்கு தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை அனுப்ப சொல்லிருந்தேன். ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிய விவரங்களை தெரிவித்து வருகின்றனர். நமது ஜாதக கதம்பத்திற்க்கு வரும் அனைவரும் தங்களைப்பற்றிய விபரங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்.

அக்னி ஹோமங்கள் வழியாக தங்களுக்காக செய்யப்படும் ஒரு வேண்டுதல்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வழியை ஏற்படுத்தியே தீரும். தாங்கள் நினைக்கும் காரியத்தை வெற்றியாக தருவது இப்படிப்பட்ட ஹோமங்கள் வழியாக நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொருவரும் தங்களின் வேண்டுதல்களை வைக்கலாம். 

ஜாதக கதம்பத்திற்க்கு காணிக்கை செலுத்துபவர்கள் கவனத்திற்க்கு எனது வங்கி கணக்கு KVB வங்கியில் மட்டுமே இருக்கின்றது. ஒரு சில பழைய நண்பர்கள் SBI வங்கி கணக்கிற்க்கு பணத்தை செலுத்திவிடுகின்றனர். 

SBI வங்கி கணக்கு வங்கி செய்த பிழையால் அது முடங்கிவிட்டது. நீங்கள் அனுப்பும் பணம் வேறு ஒருவருக்கு சென்றுவிடுகின்றது. வங்கி செய்த பிழையை அவர்களிடம் கேட்டால் புதிய கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இதனை அப்படியே விட்டுவிட்டேன்.

KVB வங்கி கணக்கில் கணக்கை தொடங்கி பல வருடங்களாக அது நல்லபடியாக சென்றுக்கொண்டு இருக்கின்றது. அனைவரும் KVB வங்கி கணக்கில் மட்டுமே பணத்தை செலுத்தவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

வங்கி கணக்கு விபரம்

KVB Bank :  Karur Vysya Bank 

Branch : Pattukkottai

Name : RAJESH S 

Account Type : Savings account. 

A/C Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623 

மேலும் விபரங்களுக்கு என்னுடைய E-Mail யில் தொடர்பு கொள்ளுங்கள். 
E-Mail ID : payrajeshsubbu@gmail.com 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 9, 2018

பித்ருதோஷம்


வணக்கம்!
          இராகு கேது பித்ருதோஷத்தை ஒருவருக்கு கொடுத்தால் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லுங்கள் என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார்.

இராகு கேதுவால் பித்ருதோஷம் வந்தால் அவர் பித்து பிடித்ததுபோல   தான் செயல்படுவார். எந்த நேரமும் ஏதோ ஒரு சிந்தனை வந்துக்கொண்டு தான் இருக்கும். மனதை முழுவதுமாக ஆக்ரமித்து அவர்களின் செயல்பாடுகளை முடக்கிவிடும் தன்மை இராகு கேதுவிற்க்கு உண்டு.

இராகு கேது தரும் பித்ருதோஷம் மட்டும் அல்ல பலரின் வாழ்க்கையில் இராகு கேது ஏதாவது ஒரு வழியில் பித்ருதோஷம் போல ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் கொடுக்க தான் செய்யும். இதனை பலர் அனுபவப்பட்டு இருக்கலாம்.

பித்ருதோஷம் கொஞ்சம் அதிகமாக சென்று தாக்குதலை நடத்தி ஒருவரை சின்னாபின்னமாக மாற்றுகிறது. ஒருவர் பைத்தியநிலைக்கு செல்ல வைத்து அடுத்தவர் ஏளனம் செய்யும் அளவிற்க்கு ஒருவரை கொண்டு செல்கிறது என்றால் அது பித்ருதோஷமாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

ஒருவருக்கு எந்த வேலையும் இல்லாமல் எதனை எடுத்தாலும் அதில் தோல்வியுற்று அவர் மிகுந்த கஷ்டத்தில் இருந்தால் அவர்க்கு பித்ருதோஷம் இருக்கின்றது என்று நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். நான் சொன்னது எல்லாம் அனுபவத்தில் சொல்லிருகிறேன் விதிகளை வைத்து சொல்லவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 8, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு