Followers

Wednesday, February 28, 2018

காமன் பண்டிகை


வணக்கம்!
          காமன் பண்டிகை தற்பொழுது எல்லா ஊர்களிலும் நடைபெறுகின்றது. நாளை காமன் தகனம் செய்வார்கள். இது எங்கள் பகுதியில் மிகவும் விஷேசமாக இருக்கும். ரதி மன்மதனுக்காக விஷேசமான ஒரு திருவிழா நடத்துவார்கள்.

ஊரில் ஒரு பொது இடத்தில் மன்மதனுக்கு கோவில் அமைப்பார்கள். அது எங்கள் பகுதியில் காமாண்டி என்ற பெயரில் அமையும். எரிந்த கட்சி எரியாத கட்சி என்று பாட்டு போட்டி எல்லாம் வந்தது இந்த பண்டிகையை வைத்து தான் வந்தது.

காமன் பண்டிகை ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவாசை முடிந்து வளர்பிறையில் மன்மதனுக்கு பந்தகால் நட்டு மண்டகபடி நடக்கும். ரதி மன்மதனுக்கு என்று திருமண கோலம் விஷேசமாக நடக்கும். தஞ்சாவூர் என்றால் மரிக்கொழுந்து விஷேசம் என்பது எத்தனை பேர்க்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்த பண்டிகையில் மரிக்கொழுந்தை மாலையாக தொடுத்து அணிவிப்பார்கள். சிறப்பான மணம் மரிக்கொழுந்தில் இருந்து வரும்.

நாளை மன்மதன் தகனம் நடைபெறுகின்றது. பொதுவாக இந்த மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். மன்மதன் தகனம் செய்யும் மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். தற்பொழுது கலியுகம் என்பதால் திருமணம் செய்கின்றனர். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆடைகள் அல்ல ஆன்மீகம்


ணக்கம்!
         நேற்று ஒரு விசயத்தை பார்த்தோம் அதனை பிரதிபலிக்கும் விதமாக இந்த பதிவை தரவேண்டும் என்று இதனை எழுதுகிறேன். காவி உடை, தாடி, நெற்றியில் திலகம் என்று ஒரு ஆன்மீகவாதி காட்சி தருவார்கள். இது எதுவும் இல்லாமல் இத்தனை வருடங்கள் ஆன்மீகத்தில் இருந்தது கடவுள் எனக்கு கொடுத்தது ஒரு வரப்பிரசாதம் இந்த ஆன்மீக வாழ்வு.

நான் செய்யும் ஹோமத்தில் மட்டுமே காவி வேஷ்டி கட்டுவேன். மற்றபடி எந்த நேரத்திலும் ஆன்மீகத்தின் அடையாளம் என்னிடம் இருக்கவே இருக்காது. இதனை பல வருடங்களாக இப்படியே தான் பின்பற்றி வருகிறேன்.

வெளிவேஷம் போடக்கூடாது என்று எனக்குள் இருந்த ஒரு மன வைராக்கியத்தால் இதனை செய்யாமல் இருந்து வந்தேன். நெட்டில் தான் எழுதுகிறோம் இது தேவையில்லை என்று சொல்லிவிடமுடியாது. ஏன் என்றால் தினமும் என்னை வந்து சந்திப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். 

முதன் முதலாக என்னை வந்து சந்தித்தவர்கள் அனைவரும் சொல்லும் சொல் நான் வேறு மாதிரி உங்களை எதிர்பார்த்தேன் என்பார்கள். இப்படி தான் இருப்பார்கள் என்று ஏற்கனவே தயார் செய்த மனநிலையில் இருந்த காரணத்தால் அவர்கள் அப்படி கேட்கிறார்கள்.

உடுத்தும் உடைகள் வெளியில் உள்ள மக்களை கவர்வதற்க்காக மட்டும் இருந்தால் உடைகளை ஆன்மீகத்தில் இருக்கின்ற மாதிரி உடுத்தலாம். நாம் மனிதனின் ஆத்மாவை ஈர்க்கும் விதத்தில் செயல்படுவதால் இதனை தவிர்த்து இருக்கிறேன்.

காவி உடை உடுத்தினால் அதற்க்கு என்று ஒரு சக்தி இருக்கின்றது அதனை மிகச்சரியாக அணியவேண்டும். எந்த நேரத்தில் நமக்கு தேவைப்படுகின்றது என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார்போல் செயல்பட்டால் மிகவும் நல்லதாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மனிதர்களை கொல்லும் ஆன்மீகம்


வணக்கம்!
          பொதுவாகவே மனிதர்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு வரச்செய்யும். தற்சமயம் கொஞ்சம் அதிகமாகவே இது இருக்கின்றது என்று சொல்லலாம். ஆன்மீகத்தில் ஈடுபட்டு சாதகம் செய்யவேண்டும் என்று விருப்பம் இருக்கும்.

ஜாதக கதம்பம் படிக்கும் அனைவரும் கொஞ்சம் அதிகமாகவே இதில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனை வரவேற்றலாம் ஒரு சில கருத்தை மட்டும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

ஆன்மீகத்திற்க்கு உங்களுக்கு வழிகாட்ட ஒரு நல்ல குரு கண்டிப்பாக வேண்டும். குரு இல்லாமல் ஆன்மீகம் சரிப்பட்டு வராது. அதே நேரத்தில் தானாகவே ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று தான் பலர் நினைப்பார்கள். இது ஒரு தவறான ஒன்று.

ஒரு சிலர் மாலை அணிந்துக்கொண்டு ஐயப்பன் முருகன் கோவிலுக்கு எல்லாம் சென்றுவருவார்கள். வருடதோறும் இதனை செய்யும் பக்தர்களும் இருக்கின்றனர். இவர்கள் அந்த நேரத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு அதில் இணைந்து செயல்படுவார்கள்.

குரு இல்லாத ஆன்மீகம் என்ன செய்யும் என்றால் பாதியில் முடிவடையும். குரு இல்லாமல் ஆன்மீகத்தில் இறங்கினால் கண்டிப்பாக உங்களுக்கு ஹர்ட்அட்டாக் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதயநோயால் மரணம் வருவதற்க்கு அதிகவாய்ப்பு இருக்கின்றது.

என்ன இப்படி பயமுறுத்துகிறீர்கள் என்று நினைக்கலாம். உண்மையான ஒன்று. இதயம் அதிக உணர்ச்சிவயப்படும். நான் பார்த்தவரையில் மாலை போடுகின்றவர்கள் குரு இல்லாதவர்கள் அனைவரும் திடீர் மரணம் எய்துகின்றனர்.

இதயத்தோடு இப்படிப்பட்ட ஆன்மீகம் நின்றுவிடும். மரணம் வந்துவிடுகின்றது. உங்களுக்கு அருகில் மற்றும் தெரிந்தவர்களை எல்லாம் கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்தால் அவர்களின் இறப்பில் உள்ள விசயம் என்ன என்பது புரியவரும். இதயத்திற்க்கு மேலும் செல்லவேண்டும் இதனை எல்லாம் குரு தான் பயிற்றுவிப்பார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம்


ணக்கம்!
         ஒருவருடைய ஜாதகத்தில் அதிகபட்சம் கிரகங்கள் பாதிக்கப்பட்டால் அவருக்கு நடப்பது எதுவும் நல்லதாகவே இருக்காது. அவர்கள் எடுக்கும் எந்த ஒரு காரியமும் ஒரு தடவையில் வெற்றிபெறாது.

ஜாதகத்தில் அதிகப்பட்ச கிரகங்கள் கெடுகின்றது என்றால் எல்லா கிரகங்களும் எக்குதப்பாக அமையும். நல்லது செய்யக்கூடிய கிரகங்கள் நீசமாகிவிடும் அல்லது எதிரிகளின் வீட்டில் அமையும் மறைவு ஸ்தானத்திலும் ஏறிவிடும்.

இவர்கள் ஒரு வேலைக்கு செல்கின்றார்கள் என்றாலும் அந்த கம்பெனி திவாலாகிவிடும். இவர்கள் ஒரு வேலைக்கு சென்ற பிறகு படிப்படியாக கம்பெனி நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களுக்கு சம்பள பாக்கி வைத்துவிடுவார்கள்.

இப்படி எல்லாம் இருக்கின்றதா என்று நினைக்கலாம். இப்படி பலர் இருக்கின்றனர். நிறைய பேர்களை நான் சந்தித்து இருக்கிறேன். இவர்களிடம் இதனைப்பற்றி வெளியில் காட்டிக்கொள்ளாதீர்கள் என்று சொல்லுவது உண்டு.

அதிகப்பட்சம் கிரகங்கள் சரியில்லாதவர்களுக்கு திருமணமும் கிட்டதட்ட நாற்பது வயதை தொடும் நேரத்தில் மிகுந்த போராட்டத்திற்க்கு பிறகு நடக்கும். ஒரு சிலர் திருமணம் நடக்காமாலே இருக்கின்றனர். 

நமக்கு இப்படி விதியை இறைவன் எழுதிவிட்டேன் என்று எண்ணி இருந்துவிடாமல் நிறைய கோவில்களை தரிசனம் செய்து புண்ணியநதியில் எல்லாம் நீராடிவிட்டு இருந்தால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 27, 2018

தீர்வு


ணக்கம்!
          நேற்றைய பதிவில் சொல்லிருந்த கருத்தை படித்துவிட்டு பலர் எனக்கும் அப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லிருந்தனர். கண்டிப்பாக அப்படிப்பட்ட பிரச்சினை இருக்க தான் செய்யும்.

ஒவ்வொரு நாளும் நாம் வாழும் சூழ்நிலை நம்மை ஏதாவது ஒரு விதத்தில் தாக்கிக்கொண்டு தான் இருக்கும். பலருக்கு அவர்களின் மனைவி அல்லது கணவனால் கூட இது ஏற்பட்டுவிட்டுவிடுகிறது என்பது தான் உண்மை.

இதனை தவிர்க்க யோகா தியானம் போன்ற பயிற்சிகள் கைகொடுத்தாலும் அனைவராலும் அதனை செய்யமுடிவதில்லை என்பது தான் எதார்த்தமான ஒன்று. இதனை தடுக்க நமது உணவு முறையை நான் பரிந்துரை செய்கிறேன்.

இந்த மனஅழுத்தம் எப்பொழுது வெளியே காட்டும் என்பதில் தான் ஒரு சில கவனம் நமக்கு வேண்டும். எனக்கு வந்தது போல உங்களுக்கும் அதே வழியில் வராது. உங்களுக்கு வித்தியாசமாக வெளிகாட்டலாம். எனக்கு இந்த பிரச்சினை இருந்த நேரத்தில் நான் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் அப்பொழுது மறுநாள் அது எனக்கு காட்டியது. நரம்புகள் அதிகமாக துடிப்பது நடந்தது. உங்களுக்கு ஏதாே ஒரு வழியில் வரலாம்.

நான் இதனை அறிந்தபிறகு நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து சாப்பிட்டேன். எனக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பது போல சாப்பிட்டேன். அதன்பிறகு அது குறைந்து தற்பொழுது சுத்தமாக இல்லை என்று சொல்லலாம்.

உங்களை நன்றாக உற்று நோக்கினால் ஏதோ ஒரு விதத்தில் இது வெளிக்காட்டுவதை நீங்கள் உணர்ந்துவிடலாம். நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணும்பொழுது உங்களுக்கு அதிகபடியான சத்துக்கள் கிடைத்து அதுவாகவே மனஅழுத்தும் வெளியே சென்றுவிடும். 

உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு மற்றும் பிடித்தவைகளை நீங்கள் செய்தால் உங்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினையில் இருந்து வெளியே வந்துவிடலாம். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த பிரச்சினை இருக்கின்றது அதனை நீங்கள் கவனிக்கவில்லை. நாள்கள் செல்ல செல்ல இது பெரியளவில் வந்து உங்களின் முன் நிற்க்கும். விரைவில் செயல்பட்டு இதனை போக்கிக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு விசயத்திலும் அதிகப்பட்சமான சொந்த அனுபவம் எனக்கு இருக்கின்றது. நிறைய சோதனை செய்துவிட்டு அதன்பிறகு தான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.

இன்று திருச்சி வரை செல்கிறேன். திருச்சியில் இருந்து திரும்பியபிறகு பதிவுகளை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 26, 2018

மக்கள் உருவாக்கும் பூமியின் மனநிலை


வணக்கம்!
          நம்ம ஆளுங்க என்ன செய்வார்கள் என்றால் சம்பந்தமே இல்லாத ஒரு விசயத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை உலகம் முழுவதும் பரப்பி விடுவார்கள். நேற்று ஒரு நடிகை இறந்தர்க்கு அனைவரையும் சோகத்தில் மாற்றினார்கள்.

ஒவ்வொருவரின் வீட்டிலும் துக்கம் நடந்தது போல மாற்றிவிட்டனர். இந்த மனநிலை உருவாக்கினால் அந்த மனநிலையிலேயே நாடு முழுவதும் பரப்பிவிடுவார்கள். சாதாரணமான மக்கள் எதனை செய்தாலும் ஒரு வித சோகம் அந்த நேரத்தில் பரவும்.

மக்கள் மனதில் மகிழ்ச்சி இருந்தால் அது சூட்சமாக அனைத்து இடத்திற்க்கும் மகிழ்ச்சி பரவும். மக்கள் மனதில் துக்கம் இருந்தால் அதுவும் பரவும். மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதை பொறுத்து தான் நாம் வழிபடும் தெய்வங்களும் நமக்கு அருளை அந்த நேரத்தில் வழங்கும்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கின்றது அதனை எல்லாம் விட்டுவிட்டு நடிகை இறப்பிற்க்கு ஜானதிபதியில் இருந்து பிரதமர் வரை இரங்கல் செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். நாடு எப்படி இருக்கின்றது என்பதை இதனை பார்த்தே தெரிந்துக்கொள்ளலாம்.

துக்கம் நடக்காமல் இருக்காது அதற்க்காக அதனையே பிடித்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. இதனை சொல்லுவதற்க்கு காரணம் உங்களால் இந்த பூமியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் துக்கமாக வைத்திருப்பதும் உங்களின் மனநிலையும் ஒரு காரணமாக இருக்கின்றது என்பதற்க்காக சொன்னேன். நன்றாக உற்று நோக்கினால் இது உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மனநோய்க்கு தீர்வு


வணக்கம்!
          அனைவருக்கும் மனரீதியாக பிரச்சினை இருக்கும். மனரீதியாக பிரச்சினை கொஞ்சம் அதிகமாகவே ஆன்மீகவாதிக்கும் சோதிடர்களுக்கும் இருக்கும். இது அவ்வப்பொழுது உடலில் இருந்து வெளிப்பட்டு வரும்.

எப்படி இதனை வெளிப்படுத்துகிறது என்றால் நரம்பு அதிகமாக துடிக்கும். இந்த துடிப்பு உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் இருக்கலாம் அல்லது உடலில் உள்ள உறுப்புகளில் எல்லாம் கூட இது நடக்கும். சாதாரணமான மனிதர்களுக்கு கண் சிமிட்டும் தன்னையறியாமல் இது நடக்கலாம்.

சோதிடர்களுக்கு எப்படி இது வருகின்றது என்றால் அடுத்தவர்களின் பிரச்சினையை கேட்டுக்கொண்டே இருப்பதால் அது அப்படியே ஆழ்மனத்திற்க்கு சென்று அது கொஞ்ச நாளில் வெளிப்பட ஆரம்பிக்கும். 

இந்த மனநோய்க்கு பல பெயர்கள் ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். எது எப்படி இருந்தாலும் இது மனநோய். இதனை போக்கிக்கொள்ள வேண்டும். இதனை போக்கவில்லை என்றால் நீங்கள் தற்கொலை செய்துக்கொள்ள சென்றுவிடுவீர்கள்.

பல சோதிடர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கூட தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த மனநோயை போக்கிக்கொண்டுவிட்டால் நல்லது. சாதாரணமானவர்களுக்கும் இது வரலாம் சோதிடர்களுக்கு இது அதிகமாகவே வருகின்றது.

எனக்கும் இந்த மனநோய் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதனை தற்சமயம் போக்கிக்கொண்டுவிட்டேன். இதற்கு நான் எனது ஆலோசகர் ஒருவரிடம் இதனைப்பற்றி கேட்டபொழுது அவர் இதற்கு தீர்வு சொல்லமாட்டேன் என்றார்.

இதற்கு நானே கண்டுபிடித்து போக்கிக்கொண்டேன். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு இதனை போக்கிக்கொள்ளலாம். உங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இது வந்திருக்கலாம் அல்லது வரலாம். 

ஒரு சிலர் தியானம் செய்தும் போக்கிக்கொள்கின்றனர். உங்களுக்கு எப்படி வசதியோ அது போல செய்துக்கொண்டு இதனை போக்கிக்கொள்ளவேண்டும். எது செய்தாலும் முன்கூட்டியே செய்துவிடுவது நல்லது. உடனே செய்துக்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 25, 2018

ஜாதக அனுபவம்


ணக்கம்!
         நம்மை நன்றாக உற்றுகவனிக்கும்பொழுது தான் இந்த இயற்கையை நாம் கவனிக்க ஆரம்பிப்போம். பொதுவாக ஒவ்வொரு திதியையும் எடுத்துக்கொண்டு கவனித்தால் எது சரியில்லாத திதியோ அந்த திதியில் உங்களின் மனநிலையும் சரியில்லாத ஒரு நிலையில் இருக்கும்.

நாம் நம்மை அதிகம் கவனிப்பதில்லை அந்த காரணத்தில் தான் இந்த திதிகளை எல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அஷ்டமி நவமி அமாவாசை மற்றும் பெளர்ணமி திதிகளிலும் அந்த திதிகளுக்கு தகுந்த மாதிரி மனநிலையில் மாற்றம் இருக்கும்.

ஒரு சில நல்ல திதிகளில் நல்ல மனநிலை இயற்கையாகவே நமது மனதிற்க்கு வருகின்றது. அந்த திதிகளில் நாம் செய்கின்ற காரியம் அனைத்தும் வெற்றியாகவே வந்துவிடும். நல்ல திதிகள் இல்லாத நாளில் நாம் செய்கின்ற காரியம் தோல்வியை தந்துவிடும்.

எது தீமை தரும் திதி என்று எழுதி வைத்திருக்கின்றார்களோ அந்த நாளில் நம்மை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த சொல்லிருப்பார்கள். அந்த நாளில் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு வந்துவிடவேண்டும்.

பொதுவாக ஜாதக பலனை சொல்லும் நபர்கள் இந்த திதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும். திதி பலனும் நல்ல பலனை துல்லியமாக கொடுக்க வழி வகுக்கும். ஒரு சில நட்சத்திரங்கள் ஒரு சில திதிகளில் நன்றாக வேலை செய்யாது.

எடுத்துகாட்டாக ரோகிணி நட்சத்திரம் உடையவர்கள் பெளர்ணமி அன்று பிறந்தால் அவர்களுக்கு நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு திதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 24, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          எனது முன்னோர்கள் எங்களின் குலதெய்வத்திற்க்கு அசைவ உணவை படைத்து வழிபட்டு வந்தார்கள். நாங்களும் அதனையே பின்பற்றி வரவேண்டுமா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார்.

குலதெய்வத்திற்க்கு உங்களின் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதனையே பின்பற்றி வரவேண்டும். அதோடு அவர்கள் என்ன மாதிரியான அசைவ உணவை தயாரித்து அதற்க்கு பரிமாரினார்கள் என்பதையும் கவனித்து அதனை செய்துவரவேண்டும்.

ஒரு சில இடத்தில் கீரை கருவாட்டு குழம்பு செய்து படைப்பார்கள். ஒரு சில இடத்தில் மட்டன் குழம்பு வைத்து அதனை சோற்றில் உருட்டி படைத்துவிட்டு அதனை சாப்பிடுவார்கள். ஒரு சில இடத்தில் நாட்டுக்கோழி முட்டை வைத்து சாமி கும்பிடுவார்கள்.

தற்பொழுது உள்ள மாற்றம் குலதெய்வத்திடமும் கொண்டு வரவேண்டியதில்லை. என்ன தான் நவநாகரீகம் வந்தாலும் மனிதன் குலதெய்வத்திடம் மாற்றத்தை செய்யவேண்டாம். எப்படி உங்களின் முன்னோர்கள் இருந்து செய்தார்களோ அதுபோலவே செய்யுங்கள்.

ஒவ்வொரு வருடமும் உங்களின் குலதெய்வ பூஜையின் பொழுது செய்வது போல உங்களின் மாதந்தோறும் நடைபெறும் பச்சைப்பரப்புதலிலும் செய்யலாம். குலதெய்வம் நன்றாக உங்களுக்கு  வாரி வழங்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவஅம்மன் பொது யாகம்


ணக்கம்!
          நவஅம்மன் யாகத்திற்க்கு என்று ஜனவரி மாதத்தில் ஒரு காணிக்கை எனக்கு வந்தது. அதனை வைத்து பொதுவாக நடத்தவேண்டும் என்ற ஒரு எண்ணம் அப்பொழுதே உருவானது. அந்த நேரத்தில் நாம் யாகம் முடிந்தவுடன் ஆரம்பிக்க கூடாது என்று நான் முடிவு எடுத்து இருந்தேன்.

அக்னியில் தொடர்ச்சியாக உட்காரவும் முடியாது. ஒன்பது நாட்கள் அம்மனின் வேகத்திற்க்கு தொடர்ச்சியாக என்னால் ஈடுக்கொடுக்கமுடியாது என்பதால் அதனை தள்ளி வைத்து இருந்தேன்.

வருகின்ற மார்ச் மாதத்தில் அம்மன் பூஜை முடிந்த பிறகு நவஅம்மன் பொது யாகம் நடைபெறும். நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு என்று அனைவரும் கலந்துக்கொள்ளலாம். அனைவரும் தங்களின் பெயர் நட்சத்திரம் போன்றவற்றை எனக்கு அனுப்பி வைக்கலாம்.

கடைசியாக நடைபெற்ற நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு பலர் கலந்துக்கொள்ள இயலவில்லை என்று சொல்லிருந்தனர். அதற்க்காக முன்கூட்டியே இந்த தகவலை தெரிவிக்கிறேன். மார்ச் மாதம் அம்மன் பூஜை நடந்தபிறகு நடைபெறும்.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு காணிக்கை செலுத்துபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் அதோடு தற்பொழுது இருந்தே நீங்கள் திட்டமிடலாம் என்பதால் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன். கடைசியாக நடைபெற்ற பொதுயாகத்தில் கலந்துக்கொண்டவர்களும் இதில் கலந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 23, 2018

திருமணம்


வணக்கம்!
         திருமண ஏற்பாடு செய்யும் நண்பர்களுக்காக இதனை எழுதுகிறேன். பலர் திருமணத்திற்க்கு என்று ஜாதகத்தை அனுப்பி பொருத்தம் பார்க்கின்றனர். இதில் திருமணத்தை உடனே முடிக்காமல் நீண்டநாள்களாக இழுத்துக்கொண்டே செல்லும் நண்பர்கள் இருக்கின்றனர்.

வயது குறைவாக இருந்தால் திருமணத்தின்பொழுது வரன் பார்க்கும்பொழுது நிறைய ஜாதகத்தை பார்க்கலாம். வயது ஏற ஏற அதிகம் ஜாதகத்தை பார்த்தால் அது கஷ்டமாக போய்விடும். ஏன் என்றால் ஒழுங்காக திருமண வாழ்க்கை அமையாது.

திருமண ஏற்பாடு நடந்து அது பதினைந்து நாட்களில் நடந்து முடித்துவிட்டால் அது தான் உங்களுக்கு திருமண யோகம் வந்து திருமணம் நடக்கிறது என்று அர்த்தம். அதிகப்பட்சம் முப்பது நாட்களில் திருமண ஏற்பாடு நடந்து முடிந்துவிடும்படி செய்துவிடவேண்டும்.

உங்களுக்கு முப்பது வயது ஆகிவிட்டால் அதன்பிறகு நீங்கள் ஜாதகம் எல்லாம் பார்க்கவேண்டாம். உங்களுக்கு வருகின்ற வரனை நீங்கள் உடனே முடிவு செய்து திருமண ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள்.

திருமணத்திற்க்கு தயவு செய்து நிறைய வரன்களை பார்க்கவேண்டாம். நிறைய வரன்களை பார்க்கும் நபர்களுக்கு திருமணவாழ்க்கை நன்றாக இருப்பதில்லை. கொஞ்சமாக பார்த்து நல்லதாக திருமணவாழ்க்கையை அமைத்துக்கொண்டு நல்லபடியாக வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 22, 2018

குரு


வணக்கம்!
         நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நபர்கள் அதிகம் பேர் குரு தசாவில் இருப்பார்கள். குரு தசா நடக்கும்பொழுது நாம் ஏதாவது ஒரு குருவை நாடி சென்று தான் ஆகவேண்டும். குருவை நாடி சென்று அவர்களின் போதனைகளை கேட்டு அவரை பிடித்து இருந்தால் அவரை பின்பற்றலாம்.

ஒரு குருவை நாம் நாடி சென்றுவிட்டால் அதன் பிறகு அவரோடு தொடர்பில் எந்த வித குறையும் இல்லாமல் நாம் நடந்துக்கொண்டால் தான் நன்றாக  இருக்கும். குருவிடம் நாம் தேவையில்லாம் பொய் சொல்லுவது ஏதாவது வில்லங்கத்தை நாம் செய்துவிட்டு வந்தால் அது குருவின் சாபத்தை நமக்கு ஏற்பட்டுவிடும்.

குரு தசா நல்லதும் நடக்கும் தீமையையும் நடக்க வைக்கும். ஒரு குருவிடம் மட்டும் நாம் சாபம் வாங்கிவிட்டால் அது பல தலைமுறைக்கு தீராத பிணியாக நம்மோடு வந்துக்கொண்டே இருக்கும்.

பல இடத்திலும் நான் பார்த்ததை தான் சொல்லுகிறேன். குருவின் சாபத்தை வாங்கிவிட்டால் நமது தலைமுறைக்கு பெரிய ஒரு பிரச்சினையை கொடுக்கும். ஒரு நல்லதையும் நம்முடைய குடும்பத்தில் நடக்காது.

குருவிடம் மிகுந்த பக்தியோடு இருங்கள். அவர் சொல்லுதை கேட்கவிட்டாலும் அவரிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை சரியாக பின்பற்றி பாருங்கள். குருவே தவறு செய்தாலும் அவரைப்பற்றி எந்தவிதத்திலும் நீங்கள் வெளிக்காட்டிக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 21, 2018

தீயகிரகங்களின் காலங்களில்


வணக்கம்!
          உங்களுக்கு தீயகிரகங்களின் பலன் நடைபெறுகிறது என்றால் அந்த காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவும் உங்களை சுற்றி இருப்பவர்களின் செயல்பாடும் நல்லதாக இருக்காது. நமக்கு நேரம் சரியில்லை என்றால் முதலில் உங்களின் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.

ஏழரை சனி நடக்கும் காலத்தில் கூட இதனை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும். உங்களின் செயல்பாடு உங்களுக்கே பிடிக்காமல் இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்தும் ஒன்றுமே நடக்காது. இந்த காலக்கட்டத்தில் செயல்படாமல் இருப்பது நல்லது என்றாலும் இன்றைய அவசரகாலத்தில் செயல்பட்டு தான் ஆகவேண்டும்.

கெட்டகாலத்தில் ஒன்றைச்செய்யவேண்டும் அதாவது உங்களின் பழக்கவழக்கத்தில் கொஞ்சம் மாறுதல் செய்யவேண்டும். பேசிக்கொண்டே இருக்காமல் நிதானமாக பேசவேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பேசவேண்டும். 

உடைகளில் அதிக கவனம் செலுத்தாமல் சாதாரணமான ஆடைகளை  அணிந்துக்கொண்டு இருப்பது நல்லது. அதோடு நம்முடைய குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தின் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துக்கொண்டே இருப்பது நல்லது.

மது அருந்தும் நபர்களுக்கு கொஞ்சம் மதுவை வாங்கிக்கொடுப்பது கூட நல்லது செய்யும். ஏழரை சனி மட்டும் இல்லை எல்லா தீய கிரகங்களின் தசா மற்றும் கோச்சார காலங்களிலும் இதனை செய்வது நல்லது. ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

உடல் பரிசோதனையை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. ஏதாவது ஒரு நோய் வந்துக்கொண்டே இருக்கும் அதனை முன்கூட்டியே தவிர்ப்பதற்க்கு வழி உங்களுக்கு தோன்றும் என்பதால் இதனை செய்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம்


ணக்கம்!
          ஏழரை சனி,ராகு கேது தசா,சுக்கிர தசா மற்றும் சனி தசா காலங்களில் ஒருவருக்கு சளி தொல்லை அதிகமாக இருக்கும். உடல்நிலையிலும் பிரச்சினை அதிகமாக வரும். இதற்கு அதிகம் காரணமாக இருப்பது அவர்களின் உணவுமுறையும் ஒரு காரணமாக அமைகிறது.

பெரும்பாலும் இந்த காலக்கட்டங்களில் இஷ்டத்திற்க்கு சாப்பாடு சாப்பிடாமல் கொஞ்சம் நிதானமாக அனைத்து உணவுகளையும் எடுத்துக்கொண்டால் நல்லது. அதோடு கசப்பு மற்றும் உவர்பு தன்மையில் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

வாரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேப்பிலை இலை எடுத்து அப்படியே சாப்பிட்டால் நல்லது. வேப்பிலை இலையை உணவாக எடுத்துக்கொள்ளும் விரத முறை கூட ஒரு சில வழிபாட்டு மன்றங்களில் இருக்கின்றது.

இந்த காலக்கட்டங்களில் நான் வருடத்திற்க்கு ஒரு முறை பரிகாரம் செய்யவேண்டும் என்று பலரிடம் சொல்லுவது உண்டு. சோதிடகாரன் ஏமாற்றுவான் அவன் சொல்லுவதை எல்லாம் நம்பகூடாது என்ற மனநிலையில் சோதிடம் பார்த்தால் இதனை எல்லாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் சொல்லுவதை சொல்லவேண்டும் என்று சொல்லிவிடுவது உண்டு.

மேலே சொன்ன காலக்கட்டங்களில் பரிகாரம் செய்யாமல் இருந்தால் கூட உணவு விசயங்களில் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படுங்கள் அப்படி இல்லை என்றால் பெரியளவில் உங்களுக்கு செலவை வைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 20, 2018

பங்கு வர்த்தகம்


வணக்கம்!
         ஷேர் மார்க்கெட்டுக்கு எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு வேண்டும் என்று நண்பர் கேள்வி அனுப்பிருந்தார். ஷேர் மார்க்கெட் என்பதற்கு ஜாதக அமைப்பை தெரியவதற்க்கு முன்பு ஒன்றைப்பற்றி நாம் பார்த்துவிடுவோம்.

பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வியை அடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். நான் பார்த்தவரை இதில் வெற்றி பெற்றவர்களை நான் பார்த்தது கிடையாது. நடுத்தரவர்க்கத்தில் இதனை செய்தவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

என்னிடம் பங்குவர்த்தகத்தில் நான் ஈடுபடலாமா என்று கேட்பவர்களிடம் நான் சொல்லுவது இதனை செய்யவேண்டாம் என்று சொல்லுவேன். நடுதெருவிற்க்கு வந்தவர்களை நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.

நான் கூட ஒரு சில காலக்கட்டத்தில் பங்குவர்த்தகம் நடைபெறும் இடத்தில் இருந்து பதிவை தந்து இருக்கிறேன். அதில் உள்ள அனுபவங்களை உங்களிடம் சொல்லுகிறேன். அதில் ஈடுபட்டவர்கள் யாரும் வெற்றி பெற்றதில்லை.

ஜாதகரீதியாக குரு நன்றாக இருந்தால் நல்ல இருக்கும் என்பார்கள். இதில் வெற்றி பெற்றவர்களின் ஜாதகத்தை நான் வாங்கி பார்த்தால் தான் உண்மை என்ன என்று தெரியும். ஜாதக ரீதியாக  அனுபவத்தில் இதில் யாரையும் நான் பார்க்கவில்லை. 

ஜாதக அமைப்பைப்பற்றியும் நாம் அனுபவத்தில் பார்த்தால் தான் தெரியும். உங்களிடம் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தால் இதில் ஈடுபடலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 19, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை

வணக்கம்!


          இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மனிடம் உங்களின் வேண்டுதலை வையுங்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.     
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.   

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.  

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.    
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.   
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.     

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.     
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்   
சென்னையை சேர்ந்த யதீஸ்குமார் அவர்கள். 

வழக்கம்போல்                 
     திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 17, 2018

கேள்வி & பதில்


ணக்கம்!
          வாழ்க்கையில் கடன் என்பது வாங்ககூடாது என்பதை சொல்லிருந்தேன். ஒரு சில நண்பர்கள் ஒரு சாதாரணமான நபர் வீட்டுகடன் மற்றும் கார் கடனை எல்லாம் வங்கியில் பெற்று தானே நாம் கட்டவேண்டியுள்ளது என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார்.

கடன் வாங்காமல் இருக்கமுடியாது. ஏதாே ஒரு விதத்தில் கடன் வாங்கி தான் ஆகவேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டும் கடன் வாங்கிக்கொள்ளுங்கள். நடுத்தரவர்க்கத்தில் இருப்பவர்கள் கடன் இல்லாமல் வாழ்க்கையை செலுத்துவது ஒரு சிரமமான ஒரு காரியமாக தான் இருக்கும்.

வீட்டை வாங்குவது கடன் இல்லாமல் வாங்கினால் பெரிய காரியமாக இருக்கும் ஆனால் என்ன செய்வது கடன் வாங்கி தான் வீட்டை வாங்க வேண்டும் என்றால் அப்படியே செய்துக்கொள்ளவேண்டியது தான் வேறு வழி இல்லை என்றால் செய்யுங்கள்.

கடன் வாங்குவது நமக்கு ஒரு தீயகிரகங்களின் தசா அல்லது மறைவுஸ்தானத்தின் தசாவில் கடன் வாங்குவது ஒரு விதத்தில் நல்லதை செய்யும். நமக்கு வரும் பிற இன்னல்களை தவிர்க்க கடன் வாங்கிக்கொள்ளலாம்.

கடன் நமக்கு தலைக்கு மேல் சென்றுவிடகூடாது. ஒரே கடனாகவே வாங்கிக்கொண்டு சென்றால் அது உங்களை வீழ்த்திவிடும். அதற்கு பிறகு என்ன பரிகாரம் செய்தாலும் அதில் இருந்து மீறி வரவேமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 16, 2018

கடன்


ணக்கம்!
          கடன் என்ற ஒன்று வாழ்வில் மிகப்பெரிய மோசமான ஒரு நிலையை அனைவருக்கும் ஏற்படுத்தும். ஜாதகத்தில் நாம் கடனுக்கு ஆறாவது வீட்டை வைத்து சொல்லுகிறோம் ஆனால் அனைத்து வீடுகளும் இதற்கு துணை போகின்றன என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு வீடு வாங்கவேண்டும் என்றால் கடன் வாங்கி வீடு வாங்குவோம். வீட்டை குறிப்பது நான்காவது வீடு. நான்காவது வீடும் இதற்கு துணை போகின்றதால் ஆறாவது வீடு மட்டும் இல்லாமல் அனைத்து வீடுகளும் இதற்கு துணை போகின்றன என்று சொன்னேன்.

கடன் ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்துக்கின்றது என்று சொல்லுவதற்க்கு காரணம் கடன் வாங்கிவிட்டால் உங்களுக்கு பலவிதத்திலும் தடைகளை கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் என்பதையே இல்லாமல் செய்துவிடுகின்றது.

கடன் எப்படி வாங்குவதில் நாம் நிறைய தவறு செய்கிறோம் என்பது தெரிகிறது. கடன் கொடுக்கும் நபர்களின் எண்ணம் நம்மை அழிக்கும் என்பது அனைவருக்கும் புரிவதில்லை. ஒரு பொருளை அடமானமாக வைத்து நாம் கடன் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். கடன் கொடுப்பவர் இதனை இவன் திருப்பவே கூடாது என்று தான் அவர் நினைத்து கடனை கொடுக்கிறார். அவரின் மனஎண்ணம் நம்மீது விழும்பொழுது நம்மால் கொடுக்கவே முடியாது. 

மனிதர்கள் மட்டும் அல்ல. வங்கிகளின் எண்ணமும் இப்படி தான் இருக்கின்றது இவன் இதனை கட்டவே கூடாது என்று தான் செயல்படுகின்றனர். கடன் கொடுப்பவர்களின் எண்ணம் இப்படி இருந்தால் உங்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்காது.

நமக்கு அவசியம் என்பது ஏற்படும் நிலையில் உங்களுக்கு தெரிந்த நல்ல நண்பர்களிடம் கடன் வாங்கலாம். உங்களால் திருப்பிகொடுக்க முடியாத நிலையிலும் அவர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்றால் இவன் பிழைக்கவேண்டும் என்று இருக்கும். உங்களுக்கு பணம் வரும்பொழுது திருப்பிக்கொடுத்துவிடலாம்.

வங்கியாக இருந்தாலும் சரி வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் மாட்டாமல் இருந்தால் எப்படியும் முன்னேற்றம் அடைந்துவிடலாம். கொஞ்ச கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை கடன் வாங்காமல் முன்னேற்ற பாதைக்கு செல்ல பாருங்கள்.

கடன் கொடுப்பவர் நம்மை கணிக்க ஆரம்பித்துவிட்டால் நம்மால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அடையவே முடியாது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். கடன் இல்லா வாழ்வை வாழஆரம்பித்தால் அதுவே பெரிய வெற்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 15, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
         ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதனைப்பற்றி பார்த்தோம். ராசி நாதன் என்பது ஒரு மிக முக்கியபங்கு வகிக்ககூடிய ஒன்று என்பது உங்களுக்கு தெரியும். ஒருத்தரை நாம் பார்த்தவுடன் சோதிடம் சம்பந்தமாக நாம் பேசினால் என்ன கேட்போம். உங்களின் ராசி என்ன என்பதை தான் முதலில் கேட்போம்.

ராசியைப்பற்றி நாம் கேட்ட பிறகு தான் அடுத்தது நட்சத்திரம் என்ன என்பதைப்பற்றி கேட்போம். நட்சத்திரம் போல் ராசியும் மிக மிக முக்கியபங்கு வகிக்கின்றது. ஒரு நல்ல சோதிடராக இருக்கவேண்டும் என்றால் இராசியைப்பற்றி தெரிந்தவுடன் இவர் இப்படி தான் இருப்பார் என்பதை துல்லியமாக நமக்கு தெரியவேண்டும்.

ராசி என்ன என்றவுடன் ஒருவரின் முழுவாழ்க்கையும் அப்படியே நமக்கு தெரிந்துவிடும். சோதிடத்தை தொழிலாக கொண்டவர்கள் அனைவருக்கும் ராசியை சொன்னவுடன் அவர்கள் பலனை சொல்லிவிடுவார்கள். அதற்கு பிறகு தான் அடுத்ததைப்பற்றி பார்த்து பலனை சொல்லுவார்கள்.

ராசியைப்பற்றி ஏன் சொல்லுகிறேன் என்றால் மனிதன் மனதை வைத்து வாழ்பவன். மனதை தெரிந்துக்கொண்டுவிட்டால் அவனின் செயல்பாட்டை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளமுடியும். நாம் சொல்லும் பலனும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

ராசியை வைத்து நாம் என்ன செய்யபோகிறோம் என்பதை பார்க்கலாம். நாம் கோவிலில் அர்ச்சனை செய்வதற்க்கு நட்சத்திரத்தை பயன்படுத்துவோம். நமக்கு வரும் இடர்பாடு எல்லாம் நமது மனதால் வருபவை. மனதால் வருவதை சரி செய்தால் நமக்கு பிரச்சனை வராது. ஏற்கனவே வந்த பிரச்சினையும் போய்விடும்.

உங்களுக்கு பிரச்சினை வரும்பொழுத எல்லாம் அருகில் இருக்கும் கோவிலில் நவகிரக சந்நிதியில் உங்களின் ராசி நாதன் யார் என்பதை அறிந்துக்கொண்டு அவர்க்கு ஒரு தீபம் ஏற்றி ஒரு அர்ச்சனை செய்தால் போதும். அந்த நேரத்தில் உள்ள பிரச்சினை படிப்படியாக குறைந்துவிடும்.

நாட்களை எல்லாம் பார்க்கவேண்டாம். உங்களுக்கு என்றைக்கு பிரச்சினை வருகின்றதோ அன்று சென்று இந்த விசயத்தை செய்தால் போதுமானது. உங்களின் வாழ்க்கை முழுவதும் எப்பொழுது எல்லாம் பிரச்சினை வருகின்றதோ அன்று இதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 14, 2018

கால விரையம்


வணக்கம்!
          பல வருடங்களாக நான் ஜாதககதம்பத்தில் எழுதிவருகிறேன். பல வருடங்களுக்கு முன் என்னை சந்தித்தவர்கள் பலர் நன்றாகவே தற்பொழுது இருக்கின்றனர். பலரின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றது.

ஒரு சிலர் மட்டும் நன்றாக இல்லை என்பதை மட்டும் வெளிப்படையாகவே சொல்லலாம். அதற்கு காரணம் நான் மட்டும் இல்லை அவர்களின் தவறும் இதில் இருக்கின்றது. நம்மை சந்தித்தது அவர்கள் தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையானதை சரியாக பின்பற்றவில்லை என்று சொல்லலாம்.

ஒரு சிலர் நம்மை சந்தித்துவிட்டு பிறரின் ஆலோசனை கேட்டும் வீணாகபோனவர்களாகவும் இருக்கின்றனர். நமது அம்மனை பொறுத்தவரை பிறர் மீது நம்பிக்கை வைத்தால் அந்த ஆளை கண்டுக்கொள்ளவே கொள்ளாது. 

பலரை நான் பல இடத்திற்க்கு சென்று கோவிலை தரிசனம் செய்ய சொல்லிருக்கிறேன். அவர் அவர்களின் குடும்ப குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு எல்லாம் செல்ல சொல்லுகிறேன். பிறர் ஆன்மீகத்தில் இருப்பவர்களிடம் சென்று அவர்களின் வழியை பின்பற்றினால் கண்டிப்பாக உங்களுக்கு எதுவும் என்னால் நடக்காது.

பலர் வயதை தொலைத்துவிட்டு அப்படியே இருக்கின்றனர். எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றனர். பணம் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் ஆனால் அதனை சரியான வயதில் சம்பாதிக்கவேண்டும். சரியான வயதில் அதனை பெறவில்லை என்றால் வாழ்க்கை முழுவதுமே வீண்.

இதுவரை எதுவும் நடக்கவில்லை என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்காமல் எதனையாவது பெறலாம் அதனை வைத்துக்கொண்டு ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கலாம் என்று உங்களின் ஜாதகத்தை அனுப்பி சரியான ஒரு ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். வயதை வீண் செய்யவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி நாம் பார்த்தோம். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசாவாக கேது தசா வரும் என்று சொல்லலாம். அவர் அவர்களின் பிறந்த நிலையை வைத்து தசா இருப்பு என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

அஸ்வினி பிறந்தவர்களுக்கு பெரிய யோகம் என்றால் அது கேது தசாவிற்க்கு பிறகு வரும் சுக்கிர தசா தான் பெரிய யோகம் என்று சொல்லலாம். சுக்கிர தசா காலம் இவர்களை ஒரு பெரியளவில் தூக்கிவிடும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

சுக்கிர தசா இருபது வருடங்கள் இவர்களின் வாழ்க்கையில் பொன்னான நேரமாகும். நீண்ட காலம் நல்ல தசா நடந்தால் அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அள்ளி கொடுக்கும். சுக்கிரதசா காலம் இளைமை காலம் என்பதால் இவர்களை கொஞ்சம்  பெற்றோர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும்.

இளைமையில் வரும் சுக்கிரதசா இவர்களை பிறர் மீது ஈர்ப்பு வருவதற்க்கு காரணமாக இருப்பதால் அந்த காலத்தில் பெற்றோர்கள் இவர்களை கவனித்து நல்வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் இவர்கள் பிறந்த நேரத்தால் நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள்.

மூன்றாவது வருவது சூரிய தசா. பொதுவாக மூன்றாவது தசா நல்லது செய்யாது என்பார்கள். இவர்களின் பெற்றோர்கள் அரசு சம்பந்தமாக கான்ரேட் எடுத்து சம்பாதிப்பது அரசு வேலையில் சேர்வது இதனை எல்லாம் சூரிய தசாவில் செய்தால் நல்ல பலனை தரும். தந்தையோடு சண்டை போடவைக்கும் அதில் மட்டும் கவனமாக இருக்கவேண்டும்.

நான்காவது வருவது சந்திர தசா இவர்களின் தாயார் உடல்நிலையில் நன்றாக கவனித்து வரவேண்டும். ஒரு சிலருக்கு இந்த தசாவில் தாயிற்க்கு மாரகம் கூட வரலாம். தாயின் வழியில் சொத்துக்கள் வரலாம். தாயின் மீது வெறுப்பு ஏற்படும். தாயோடு சண்டை சச்சரவும் ஏற்படும். 

ஐந்தாவது தசாவாக வருவது செவ்வாய் தசா. செவ்வாய் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை அப்படி இல்லை என்றால் ஒரு சிலருக்கு மாரகதசாவாகவும் இதனை எடுத்துக்கொள்ளவேண்டும். செவ்வாய் நன்றாக இருந்தால் நிலம் சேரும். பெரிய தொழிற்சாலை வைத்து நன்றாக சம்பாதிக்கலாம்.

ராகு தசா ஆறாவது தசாவாக வரக்கூடியது. ராகு ஆறாவது தசாவாக வருவதால் நல்ல யோகத்தை வாரி வழங்கும். மேலே சொன்ன தசாவில் நல்லது நடைபெறவில்லை என்றால் இந்த தசா உங்களுக்கு அனைத்து யோகத்தையும் வழங்ககூடியது. இந்த தசாவில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஜாதக கதம்பம் தெரிய வந்திருக்கும்.

குரு தசா ஏழாவது தசாவாக வரும். இந்த தசாவும் நன்றாக இருக்கும். பெரும்பாலும் இந்த தசாவில் மரணம் வந்தால் நல்லது என்று சொல்லலாம். அப்படி இல்லை என்றால் ஆன்மீகத்தில் நல்ல நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

உங்களின் சுயஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கு அடிப்படையில் பலன் மாறுபடலாம். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து அந்தந்த தசாவிற்க்கும் மற்றும் கோச்சாரத்திற்க்கு தகுந்தமாதிரி உங்களின் வாழ்க்கையை செலுத்தினால் இந்த பிறப்பை எடுத்ததின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு செல்லலாம்.

ஜாதகத்தை என்னிடம் அனுப்பி ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 12, 2018

அரசு வேலை


வணக்கம்!
          பெரும்பாலும் என்னை சந்திக்க வருபவர் மற்றும் தொடர்பில் இருப்பவர்களிடம் அவர்கள் துறை சார்ந்த விசயங்களை கேட்டுப்பெறுவது உண்டு. அதில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும் எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் அந்த வேலை வாய்ப்புக்களை பற்றி அங்கு சென்று பணிபுரிய செய்வது உண்டு.

எனது ஆத்ம திருப்திக்காக இதனை செய்துக்கொண்டு இருக்கிறேன். அரசு பணிக்கு தேர்வு எழுதும் இளைஞர்களுக்கும் அம்மனிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டு இருப்பது உண்டு. பல இளைஞர்கள் இதில் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

நம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் வேலை பார்த்தால் பெரிய வேலையில் தான் நான் பணிபுரிவேன் என்று சொல்லுவார்கள். இவர்களை வளர்த்த விதம் அப்படி அதனால் இவர்கள் எதிர்பார்ப்பது அப்படி இருக்கின்றது.

பல இளைஞர்கள் பெரும்பாலும் அரசு வேலை வாய்ப்பை விரும்பவில்லை என்று நினைக்கிறேன். உலகத்தில் மிகவும் பாதுகாப்பான ஒரு வேலை என்றால் அது அரசுவேலையாக தான் இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். இதனை படிக்கும் பல நண்பர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எந்த வேலையாக இருந்தாலும் சரி அரசு வேலைக்கு போகச்சொல்லுங்கள்.

தற்பொழுது கூட இரயில்வேயில் காலியிடங்களுக்கு தேர்வுக்கு அறிவிப்பை அறிவித்து இருக்கின்றனர். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் இதனை சொல்லி அதற்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

சோதிடத்தை படித்த நண்பர்கள் தனக்கு அரசு வேலை சரி வராது அதற்கு கிரக நிலை சரியில்லை என்று நீங்களே முடிவு செய்துவிடாதீர்கள். சூரியன் நன்றாக இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை பார்த்து அதற்கு செய்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தடைகள்


ணக்கம்!
          ஜாதகத்தை அனுப்பிவிட்டு எனக்கு தடைகள் மட்டும் தான் வருகின்றன. அதனை மட்டும் சரிசெய்துவிடுங்கள் என்று சொல்லும் நண்பர்கள் இருக்கின்றனர். ஒரு மனிதன் ஒரு முயற்சியை எடுத்தால் அந்த முயற்சி வெற்றி பெற்றால் அவன் அடுத்த மேம்பட்ட வாழ்க்கைக்கு சென்றுவிடுவான்.

ஒரு ஜாதகத்தில் ராகு கேது மட்டும் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு தடைகள் ஏற்படுத்துவதில்லை அனைத்து கிரகங்களும் தடைகளை ஏற்படுத்த தான் செய்யும். ஒரு வேலை நடக்ககூடாது என்றால் ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகமும் தடைகளை ஏற்படுத்திவிடும். நாம் அலைந்தது தான் மிச்சம் என்று இருக்கும்.

நாம் எடுக்கின்ற காரியம் தோல்வி அடையும்பொழுது பரிகாரமே இல்லாமல் அதனை வெற்றி பெறவேண்டும் என்றால் அந்த காலக்கட்டத்தில் அதனை செய்யாமல் கொஞ்சகாலம் தள்ளி அதனை செய்தால் போதும். அதற்க்குள்ள காலம் அது அல்ல கொஞ்சகாலம் சென்ற பிறகு நடக்கும்.

ஒரு முயற்சி வெற்றி பெறுவதற்க்கு ஜாதகத்தில் உள்ள அனைத்து  கிரகங்களும் அனைத்து வீடுகளும் துணைபுரியவேண்டும். ஏதோ ஒரு வீடு மற்றும் ஒரு வீட்டால் நடைபெறுவது கிடையாது. அனைத்து வீடுகளும் சம்பந்தப்பட்டு நடக்கின்றது.

தடைகளுக்கு காரணம் பொதுவாக ராகு கேது என்பதை மட்டும் தெரிந்துக்கொண்டு செயல்படாமல் நமக்கு இந்த காலம் சரியில்லை என்பதை புரிந்துக்கொண்டு காலம் தாழ்த்தி செயல்படுத்திக்கொள்ளுங்கள் வெற்றி பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 10, 2018

கண்திருஷ்டி

ணக்கம்!
          கண்திருஷ்டியைபற்றி பார்த்தோம். இதில் பல கேள்விகள் உங்களுக்குள் வரும். பிறமதத்தில் உள்ளவர்கள் கண்திருஷ்டியை போடுகின்றார்களா என்ற கேள்வி தான். கண்திருஷ்டி ஏதாவது ஒரு வகையில் அனைத்து மதத்தினரும் செய்துக்கொண்டு தான் வருவார்கள்.

கண்திருஷ்டி என்பது ஒவ்வொரு மனிதரும் போட்டால் நல்லது தான். நமது சூட்சமஉடலை பாதுகாக்கும் ஒரு அம்சமாக அது இருக்கின்றது. சூட்சமஉடலை பாதுகாக்கும் பொழுது நமக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகிவிடும்.

கண்திருஷ்டி போடவில்லை என்றாலும் நீங்கள் அடிக்கடி கோவில்களுக்கு சென்று புனித நீராடினால் அது உங்களை நன்றாக காக்கும். கடலில் குளித்தால் கூட அது சூட்சமஉடலை பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும்.

வருடம் ஒரு முறை கண்திருஷ்டியை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன். இதனை அடிக்கடி சொல்லுவதற்க்கு காரணம் இதில் அதிகம் நன்மை இருப்பதால் தான் சொல்லுகிறேன்.

தவிர்க்க இயலாத காரணத்தால் அம்மன் பூஜை நடத்தபடவில்லை. வரும் வாரத்தில் அம்மன் பூஜை செய்யப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 9, 2018

அறிவிப்பு

வணக்கம்!
          இன்று நடைபெறவிருந்த அம்மன் பூஜை தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுகின்றது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம்


ணக்கம்!
          நேற்று நாம் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப்பற்றி சொல்லிருந்தேன். சந்திரனுக்கு சனியின் பார்வை கிடைத்தால் எப்படி இருக்கும். சந்திரனுக்கு சனியின் பார்வை கிடைத்தால் அது தீமையை தரும் நாம் சொல்லுவோம்.

சனியின் பார்வை எங்கிருந்து பார்க்கிறது மற்றும் அது எந்த பார்வை என்பதையும் முடிவு செய்து பலனை சொல்லவேண்டும். அப்பொழுது தான் பலனை சரியாக தீர்மானிக்கமுடியும்.பொதுவான பலனாக சொல்லவேண்டுமானால் அவர்க்கு திருமணத்தில் மட்டும் கொஞ்சம் பிரச்சினை வரும் என்று சொல்லலாம்.

சனி மற்றும் கேதுவின் நட்சத்திரத்தில் சந்திரனுக்கு கிடைக்கும்பொழுது வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சம்பந்தப்பட்டவர் சந்திப்பார்கள். நிறைய மனபோராட்டங்கள் என்று சொல்லலாம். காதல் தோல்வியும் அடைவார்கள்.

சனியின் பார்வை தீமை என்பதாலும் கேதுவின் நட்சத்திரத்தில் கேது செல்வதால்  திருமணவாழ்வில் பிரச்சினை என்பதை சொல்லலாம். திருமணத்தை காலம் தள்ளி வைத்துக்கொள்ளலாம் அல்லது தன்னைவிட கீழ் ஜாதியில் உள்ளவர்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்.

இளைமையில் திருமணம் முடித்தால் உங்களுக்கு விவாகாரத்து கிடைப்பதற்க்கு வழி வகுக்கும். ஒரு சிலருக்கு துணைவர் இறக்க கூடும் அல்லது மனநிலையில் பாதிப்படைய செய்யும். ஏழாவது வீடு நல்ல பலனை கொடுத்து ஏழாவது அதிபதி அதிக பலன் பெற்றால் கொஞ்சம் சண்டை சச்சரவை மட்டும் தரும். அவ்வப்பொழுது சண்டை வந்து போகும்.

இதற்கு பரிகாரமாக மனநிலையை வலுப்படுத்த வேலையை செய்யலாம். நல்ல கோபமாக இருக்கும் அம்மனை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். குலதெய்வத்தையும் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நல்லது நடக்கும்.

மேலே உள்ள நிலையில் குரு கிரகம் பார்த்தால் பெரும்பாலும் பிரச்சினை குறையும். குரு கிரகம் பார்த்தால் அதிகப்பட்சமான பிரச்சினை குறைவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். மேலே சொன்னபடி உங்களுக்கு அமைந்தால் ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லலாம். நிறைய கோவில் தரிசனங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மன் பூஜை என்பதால் உங்களின் வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 8, 2018

அம்மன் பூஜை


ணக்கம்!
          நாளை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.    
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.  

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.   
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.   
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.  
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.    

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.    
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்  
சென்னையை சேர்ந்த யதீஸ்குமார் அவர்கள்.

வழக்கம்போல் 
               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். நாளை அம்மனிடம் புதிய வேண்டுதல்களை வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம்


ணக்கம்!
          சந்திரனைப்பற்றி உங்களுக்கு சொன்னேன். சந்திரனைப்பற்றி நாம் பார்க்கும்பொழுது அது எந்த நட்சத்திரத்தில் முதலில் நாம் அமர்ந்து இருக்கின்றது என்பதை தான் பார்ப்போம். அதனை வைத்து தான் ராசி மற்றும் தசாவின் நிலையை அறியமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

சந்திரன் அமர்ந்த நட்சத்திரம் அஸ்வினி என்று வைத்துக்கொள்வோம். மேஷ ராசி என்பது தெரியும். அஸ்வினி கேதுவின் நட்சத்திரம். மேஷம் செவ்வாயின் வீடு. சந்திரன் செல்வது அஸ்வினி நட்சத்திரத்தில் முதல் பாகத்தில் என்று வைத்துக்கொள்வோம். 

மேஷ லக்கினமாகவும் அதனை நாம் வைத்துக்கொள்வோம். இப்பொழுது நாம் பலனை சொல்லவேண்டுமானால் என்ன செய்வோம். முதல் வீட்டில் சந்திரன் இருக்கின்றது என்பதை வைத்து நாம் பலனை சொல்லிவிடுவோம். 

சந்திரன் அமர்ந்த நட்சத்திரத்தில் நாம் பலனை சொன்னால் அது கொஞ்சம் நன்றாகவே இருக்கும். கேதுவின் நட்சத்திரத்தில் சந்திரன் இது தான் முதலாக எடுத்துக்கொண்டு சொன்னால் கேது என்றால் நல்ல ஆன்மீகவாதியாக இருப்பார். சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் செல்லும்பொழுது மகாலட்சுமியின் அருளை பெற்றவர். கண்டிப்பாக இவர் செல்வந்தராக இருப்பார். அதோடு நல்ல அறிவை பெற்று எதிலும் சிறந்து விளங்குவார்.

கேதுவின் நட்சத்திரத்தில் சந்திரன் செல்வதால் சந்திரன் மனக்காரகனாக இருப்பதால் அவரின் புத்தி எப்படி இருக்கும் என்றால் அல்ப தனமான புத்தியாகவும் இருப்பார். அடுத்தவரைப்பற்றி சும்மா ஏதாவது வில்லங்கதனமாக பேசுவார் என்று சொல்லலாம். நீண்டநட்பை வைத்துக்கொள்ளமாட்டார்கள். பழகிவிட்டு தூக்கிபோட்டுவிட்டு போய்விடுவார்.

இவங்களோடு மைனஸ் என்பதை நாம் பார்த்து தான் இவர்களுக்கு நாம் சரியான ஒரு வழியை நாம் சொல்லமுடியும். ஒரே பாயிண்ட் கேதுவின் நட்சத்திரத்தில் சந்திரன் இதனை நீங்கள் பிடித்துக்கொள்ளவேண்டும்.

இவர்கள் பணவசதியில் நன்றாக இருந்தால் இவர்களுக்கு திருமணத்தில் பிரச்சினை வந்துவிடும். அதாவது திருமணம் நடக்காமல் போவதற்க்கும் திருமணம் தள்ளிபோவதற்க்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் எடுத்துக்கொள்ளலாம். பாம்பின் நட்சத்திரம் கண்டிப்பாக ஏதாவது ஒரு வழியில் ஆப்பு அடிக்கும்.

வாய் மொழியில் நாம் சொல்லவேண்டுமானால் இவர்களிடம் அடுத்தவர்களைப்பற்றி புறம் பேசாதீர்கள். நட்பாக இருந்தாலும் சரி எந்த விதத்திலும் உங்களோடு தொடர்பில் இருப்பவர்களை பேசாமல் தவிர்த்துவிடாதீர்கள் என்று சொல்லலாம்.

பரிகாரமாக சந்திரனுக்கு செய்வதைவிட இவர்களின் நட்சத்திர அதிபதியான கேதுவிற்க்கு ஒரு பூஜை செய்தால் பெரும்பாலும் இவர்களுக்கு மேலே சொன்ன விசயத்தில் இருந்து காப்பாற்றலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலே நான் சொன்னது அஸ்வினி முதல் பாதத்தில் சந்திரன் சென்றால் என்ன பலன் என்பதை சொன்னேன். அஸ்வினி இரண்டாம் பாதம் என்றால் பலன் மாறிவிடும். நாம் பலன் சொல்லும்பொழுது நட்சத்திரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் சொல்லவேண்டும். பல விசயங்கள் இதில் இருக்கின்றன கொஞ்சமாக நான் சொல்லியிருக்கிறேன்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 7, 2018

வேண்டுகோள்


ணக்கம்!
          தினமும் உங்களுக்கு கருத்தும் சோதிடத்தை எழுதி உங்களை உசுப்பேத்தும் வேலையை செய்துக்கொண்டு இருப்பேன். இன்று மட்டும் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திடம் இன்று எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். இன்று எனக்கு பிறந்தநாள். வாழ்த்து எல்லாம் சொல்லவேண்டாம். வேண்டுதல் மட்டும் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 6, 2018

கண்திருஷ்டி ராசி பகுதி 6


வணக்கம்!
          மகரராசி
                   உங்களின் கடுமையான உழைப்பை பார்த்து பிறர் வியந்து கண்திருஷ்டி வைப்பார்கள். உங்களின் பண வளர்ச்சியை பார்த்து பிறர் கண்வைப்பார்கள். எளிமையாக இருந்துக்கொண்டு பல கோடிகளை சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றார் என்று பிறர் கண்வைப்பார்கள்.

உங்களின் பொறுமையை பார்த்து கூட உங்களின் துணையாக இருப்பவர்கள் கூட உங்களின் மேல் கண்வைப்பார்கள். எந்த நிலையிலும் மனதளராமல் வேலை செய்யக்கூடிய அழகை பார்த்து பிறர் கண் வைப்பார்கள்.

எப்படி திருஷ்டி கழிப்பது
                        காய்ந்த வேப்பிலை இலை வைத்து நெருப்பை மூட்டி அந்த புகையை வீடு முழுவதும் போடுங்கள். காய்ந்த மிளகாய் ஆறு சாம்பிராணி மற்றும் கொஞ்சம் உப்பை நெருப்பில் போட்டு அந்த நெருப்பை முச்சந்தியில் அல்லது உங்களின் தெருவில் போட்டுவிடுங்கள்.

கும்பராசி

        உலகவிசயமே உங்களுக்கு தெரிகிறது என்று பிறர் கண்வைப்பார்கள். படிக்காமல் இருந்தால் கூட இவ்வளவு அறிவோடு இருக்கிறார் என்று பார்த்து பிறர் கண் வைப்பார்கள். எளிமையாக இருந்தாலும் நல்ல ஆடைகளை உடுத்தவேண்டும் என்று நினைத்து அணிவீர்கள் அதனை பார்த்து பிறர் கண்வைப்பார்கள்.

எனக்கு மரியாதை தரவேண்டும் என்னை மதிப்பவர்களை தான் நான் மதிப்பேன் என்று விடாபிடியாத குணத்தை பார்த்து கூட பிறர் உங்களின் மேல் கண் வைப்பார்கள்.

திருஷ்டி எப்படி கழிப்பது
                         எலுமிச்சை பழத்தை எடுத்து நீங்கள் தூங்கும் அறையில் வைத்துவிடுங்கள். ஒரு வாரம் சென்று அந்த எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு தெருவில் வீசி எறிந்துவிடுங்கள்.

சாம்பிராணி புகையை நன்றாக உங்களின் வீட்டில் போடுங்கள். ஒரு தேங்காயை வாங்கி வந்து உங்களை சுற்றி விட்டு வலது புறமாக மூன்று சுற்று இடது புறமாக மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த தேங்காயை சிதறகாய் போல உடையுங்கள்.

மீன ராசி
         வாழ்க்கையில் பிறர் கஷ்டப்படுவார்கள் நீங்கள் சொகுசாக வாழ்க்கையை அனுபவிக்கின்றீர்களே என்று பிறர் உங்களை பார்த்து கண் வைப்பார்கள். எப்படிப்பட்ட நிலையிலும் பிறர் சம்பாதித்து உங்களுக்கு பணம் கொடுக்கின்றீர்களே பிறர் கண் வைப்பார்கள்.

அப்பன் அல்லது தாத்தா சொத்து சம்பாதித்தை அனுபவிக்கின்றீர்களே என்று பிறர் உங்களை பார்த்து கண் வைப்பார்கள். நன்றாக ஆடைகளை உடுத்திக்கொண்டு செல்வதை பார்த்து பிறர் கண் வைப்பார்கள்.

எப்படி திருஷ்டி கழிப்பது
                         ஒரு சூடத்தை எடுத்துக்கொண்டு உங்களை மூன்று சுற்று சுற்றி அதனை எடுத்துக்கொண்டு தெருவில் அதனை போட்டு அதனை ஏற்றிவிட்டு வந்துவிடுங்கள். அது அப்படியே எறிந்துமுடித்துவிடும். உங்களி்ன கண்திருஷ்டியும் போய்விடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு