Followers

Saturday, February 28, 2015

சனி தசா பகுதி 6


வணக்கம்!
          என்னிடம் ஒருவர் வந்து ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவரின் தந்தைக்கு ஜாதகம் பார்க்கவேண்டும் என்று சொன்னார். அவரின் ஜாதகத்தையும் என்னிடம் கொடுத்தார்.

தந்தைக்கு சனிதசா நடந்துக்கொண்டிருந்தது. பையனுக்கு ராகு தசா நடந்துக்கொண்டிருந்தது. அவரின் தந்தைக்கு சனி லக்கினத்தில் அமர்ந்து தசாவை நடத்திக்கொண்டிருந்தது. சிம்ம லக்கினத்தில் சனி அமர்ந்து இருக்கிறது. சனி தசா ஆரம்பித்த காலத்தில் இருந்து அவர் நோய்யில் படுத்துவிட்டார். பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுகையாவிட்டார். 

சிம்மத்தில் சனி அமர்ந்தாலே மிகப்பெரிய அளவில் நன்மையை எதிர்பார்க்க முடியாது.சனி லக்கினத்தோடு சம்பந்தப்பட்ட காரணத்தால் அவருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்திவிட்டது. நான் அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிடுவார் என்று சொன்னேன்.

லக்கினத்தில் சனி அமர்ந்து அந்த தசா நடந்த காரணத்தால் அவருக்கு நோயையும் கொடுத்து அவருக்கு மரணத்தை கொடுத்துவிட்டது.லக்கினத்தில் அமர்ந்து ஒரு தசா நடந்தால் அந்த தசா பெரும்பாலும் மரணத்தை தரும். சனி தசா அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோயையும் கொடுத்து படுத்த படுகையாக மாற்றி கடைசியில் கொன்றும்விட்டது.

லக்கினத்தில் சனி அமர்ந்து தசா நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர் தினந்தோறும் வழிப்பாட்டை செய்துவரவேண்டும். அதே நேரத்தில் திருகடையூர் சென்று இறைவனை வருடத்திற்க்கு ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          . கிரகங்களின் தாக்குதல் என்ற பதிவில் நமது பெயரில் இருக்கும் அனைத்தையும்  நமது குடும்ப உறுப்பினர் பெயரில் மாற்றினால் நமக்கு பாதிப்பு இருக்காது என்று சொல்லி இருந்தீர்கள்.

இதில் எனக்கு ஒரு சந்தேகம். 

1. கிரகங்களின் பாதிப்பு என்பது நமது ஜாதகத்தை பொருத்து அமைகிறது. அதாவது நமது முன் ஜென்ம வினைப்பயன் அதை அனுபவித்துதான் ஆகவேண்டும். நமது சொத்துக்களையோ அல்லது வங்கி கணக்கையோ நமது குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றினால் நாம் எப்படி கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்?

2. அப்படி குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றிவிட்டால் அவருக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் அல்லவா?.அதை எவ்வாறு தடுப்பது?



          முன்ஜென்மத்தின் வினையை அனுபவிக்கவேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். முன்ஜென்மத்தின் வினையை குறைப்பதற்க்கு தான் கோவில்கள் இருக்கின்றன. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

உங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஜாதங்களில் ஏதாவது ஒரு ஜாதகத்தில் நல்ல கிரகங்கள் நிலை தென்படும். அவரின் பெயருக்கு மாற்றினால் அவருக்கு பிரச்சினை ஏற்படாது. எப்படிப்பட்ட மோசமான நிலையிலும் நம்மை காப்பாற்ற கடவுள் செய்யும் மாற்று ஏற்பாடு தான் ஒருவருக்கு நல்ல கிரக நிலையை அமைப்பது.

நாம் ஒரு சந்நியாசி போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்பொழுது நமக்கு வரும் பாதிப்பு குறையும். நம்மிடம் ஒன்றும் இல்லை எனும்பொழுது வரும் அடியும் குறைவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக நல்ல வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று கடுமையான வறுமையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு சொத்து இருக்கும் ஆனால் அதனால் வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கூட இப்படிப்பட்ட வேலை செய்துக்கொண்டு வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும்பொழுது அந்த குடும்பங்களும் நல்ல முறையில் வாழமுடியும் என்பதற்க்கு தான் இந்த ஒரு வழியை சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 27, 2015

கோவில் தரிசனம்


வணக்கம்!
         நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்ருந்தார். முதல் கேள்வியாக அதிகமாக கோவிலுக்கு செல்லுகிறீர்கள் அது எதனால்?

நமது ஜாதககதம்பத்தின் நண்பர்களை அழைத்துக்கொண்டு தான் கோவிலுக்கு செல்லுகிறேன். எத்தனை நாள் தான் பதிவில் மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பது. நேரடியாக பல கோவில்களுக்கு செல்லும்பொழுது பல நல்ல விசயங்களை அவர்களுக்கு புகுத்த முடிகிறது.

நேற்றுக்கூட கோயம்புத்தூரை சேர்ந்த நண்பர் என்னை அழைத்துக்கொண்டு ஆணைக்கட்டி மலைப்பகுதிக்கு சென்றார். அந்த இடங்களை பார்த்துவிட்டு மீண்டும் திருப்பூர் வந்தேன்.

ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது யாராவது ஒரு நண்பர் ஏற்பாட்டில் தான் சென்றுவருகிறேன். இதன் வழியாக உங்களுக்கும் தெரிவிப்பது என்ன என்றால் நீங்களும் கோவிலுக்கு செல்லும்பொழுது என்னை கூப்பிடுங்கள். அந்த நேரத்தில் ஒய்வாக இருந்தால் நான் வருகிறேன்.

பதிவில் சொல்லமுடியாத விசயங்களை அந்த ஆன்மீகப்பயணத்தில் பகிர்ந்துக்கொள்வதற்க்கு வாய்ப்பாக அமைகிறது. இனி அதிக பயணங்கள் இருக்கும். ஒரு சில நண்பர்களை நான் கூட வாருங்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று கூப்பிடுவேன். அந்த நாளில் மொபைல் போனை சைலண்டில் போட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். அப்படியும் இருக்கின்றார்கள்.

ஜாதககதம்பத்தில் தொழில் நண்பர்கள் பெரும்பாலும் கோவில் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு அதிகம் ஏற்பாடு செய்து கூப்பிடுவார்கள். அவர்களோடு சென்று வருவது தான் அதிகம். ஒவ்வொரு பயணத்திலும் பல அற்புதவிசயங்கள் என்னோடு வருபவர்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மூலிகை குளியல்


வணக்கம் !
          ஒவ்வொரு நாளும் நாம் பலரின் கண்ணில் படுகிறோம். அப்படி அவர்களின் கண்ணில் படும்பொழுது அவர்களின் பார்வை நம்மீது விழுகிறது. அவர்களின் பார்வை நல்ல பார்வையாக இருந்தால் நமக்கு நல்லது. பிறரின் பார்வை தீயபார்வையாக நம்மீது பட்டால் நமக்கு பிரச்சினை வரும். நமது சூட்சமசரீரம் கெடுகிறது.

சூட்சமசரீரத்தை பாதுகாக்க நான் பல்வேறு கருத்துகளை நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து பல்வேறு கருத்துகளை நாம் பார்த்து வருகிறோம். 

சூட்சம சரீரம் கெட்டால் நல்ல உடல்வலி மற்றும் தலைவலி நமக்கு ஏற்படும்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதை பார்க்கலாம். ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து அந்த தண்ணீருக்குள் வேப்பிலை ஆடாதொடா இலை நொச்சி இலை ஆர் எஸ் பதி இலை போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குளியுங்கள்.

நான் சொன்ன இலைகள் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு இலை கிடைத்தால் கூட போதுமானது. அதனை மட்டும் சுடுதண்ணீரில் போட்டு குளிக்கலாம். வேப்பிலை பரவலாக கிடைக்ககூடிய இலை தான் அதனை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

நான் வாரம் ஒரு முறை இந்த குளியலை குளிப்பது உண்டு. கிராமத்தில் அனைத்து இலைகளும் கிடைப்பதால் நான் குளிப்பது உண்டு. சுக்கிரனுக்கு மூலிகை குளியலைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அதற்கு கூட இந்த குளியலை செய்யலாம். இந்த குளியலை குழந்தைகளுக்கு கூட நீங்கள் செய்யலாம். வாரம் ஒரு முறை இந்த குளியலை குடும்பத்தோடு செய்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 26, 2015

சனி தசா பகுதி 5


வணக்கம் !
          சனிதசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். சனி தசா நடந்தால் பெரும்பாலும் சளி தொல்லையால் அவதிப்படுவது நேரிடும். சனி என்றாலே சளி தான் அதிகம் இருக்கும்.

சனிக்கிரகம் தான் நமது உடலில் உயிரை பிடித்து வைத்திருக்கிறது என்பார்கள். மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்யும்பொழுது கூட ஒருவருக்கு சளித்தொல்லை இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். சளித்தொல்லை இல்லை என்றால் விரைவில் குணமாகுவார் என்று சொல்லுவார்கள்.

சளித்தொல்லை உங்களுக்கு சனிதசாவில் ஏற்படும். சளித்தொல்லை தசா முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கும். சளித்தொல்லை இருந்தால் உங்களின் உடலைப்போட்டு உருக்கி எடுத்துவிடும். ஒருவருக்கு சனிதசா நடந்தது என்றால் அவரை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும்.

பொதுவாக அனைவருக்கும் சளித்தொல்லை ஏற்படாது. பெருமான்மையானவருக்கு சளித்தொல்லை சனிதசாவில் ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவு இருக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் நீர்ராசியில் அமைந்தால் கண்டிப்பாக சளித்தொல்லை ஏற்படும். சளித்தொல்லைக்கு மற்றும் சனித்தொல்லைக்கு சூப் பரிகாரத்தைப்பற்றி பழைய பதிவில் சொல்லியுள்ளேன் அதனை பின்பற்றி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
         கிரகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

எனக்கு என்று சொந்தமாக இருப்பது அதாவது எனது பெயரில் இருப்பது இந்த வங்கி கணக்கை தவிர வேறு ஏதும் எனது பெயரில் இல்லை. வங்கிகணக்கில் அதிகமாக பணமும் இல்லை. வரும் பணத்தை எல்லாம் எடுத்து ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடும். 

எனது முன்னோர்களின் சொத்து இருக்கின்றது. அது எனது பெயரில் இல்லை. அதனை எனது பெயருக்கு மாற்றகூட நான் முயற்சி எடுக்கவில்லை.நானும் புதுச்சொத்துக்கள் வாங்க நினைக்கவில்லை. வாங்கமுடியவில்லை என்று வெளிப்படையாக சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஒரு மனிதனுக்கு கிரகங்களின் தாக்குதல் அதிகமாக இருக்ககூடாது என்று நீங்கள் நினைத்தால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்களின் பெயரில் எதுவும் இருக்ககூடாது.

உங்களுக்கு சொத்து மற்றும் வருமானம் வரும் வழியில் உங்களது பெயரில் இருந்தால் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரில் மாற்றிவிடுவது நல்லது. இப்படி செய்தால் உங்களுக்கு கிரகங்கள் பாதிப்பு என்பது உங்களுக்கு இருக்காது.

அடுத்த பதிவு மதியம் இரண்டு மணிக்கு

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 25, 2015

பிரசாதம்


வணக்கம்!
          ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது ஒவ்வொரு விதமான நடைமுறை இருக்கும். வழிப்பாட்டு முறை பூஜை முறை அனைத்திலும் வித்தியாசம் இருக்கும். 

இந்த முறை மருதமலை முருகனின் கோவிலுக்கு செல்லும்பொழுது என்னுடன் வந்த நண்பர்களிடம் நான் பஞ்சாமிர்தம் வாங்குவோம் என்று வாங்கி அதனை சாப்பிட்டேன். முருகனின் கோவிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படவேண்டும். நாம் கோவில்களில் பிரசாதம் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

நீங்கள் எந்த ஒரு வழிபாடு அல்லது பூஜை செய்தாலும் நிறைவாக நீங்கள் ஏதாவது ஒரு உணவை உண்ணவேண்டும். அதற்கு தான் பிரசாதம் கொடுப்பார்கள். பெருமாள் கோவில் என்றால் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் இப்படி வித்தியாசமான தீர்த்தம் அல்லது பிரசாதம் கொடுப்பார்கள். 

முருகன் கோவிலில் நீங்கள் வழிபாட்டை முடிப்பதாக இருந்தால் கடைசியில் பஞ்சாமிர்த்தை சாப்பிட்டுவிட்டு வழிபாட்டை முடிக்கவேண்டும். அம்மன் கோவிலாக இருந்தால் வேப்பிலை கொடுப்பார்கள். சிவன் கோவிலாக இருந்தால் விபூதியை கொடுப்பார்கள்.

நாம் இறைவனின் சந்நிதானத்தில் எடுத்த சக்தி நமது உடலில் அப்படியே தங்கவேண்டும் என்பதற்க்காக இப்படிப்பட்ட பிரசாதத்தை அருந்தவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முருகன் வழிபாடு


வணக்கம்!
          முருகன் வழிபாடு என்பது ஒரு பிரசித்திபெற்ற வழிபாடு இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு முருகனின் பெருமைப்பற்றி தெரியும்.பொதுவாக தமிழர்களின் குலதெய்வமாக பெருமையானவர்களுக்கு முருகன் தெய்வமாக இருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட முருகனை குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வருவார்கள்.

முருகனின் கோவிலுக்கு நான் செல்லுவதே அவரின் அழகை தரிசனம் செய்வதற்க்கு மட்டுமே. அந்தளவுக்கு ஒரு அழகானவர். முருகன் என்றால் அழகு தானே.

தொடர்ச்சியாக செவ்வாய்கிழமை தோறும் முருகன் கோவில் சென்று வருபவர்கள் நமது பதிவில் கூட அதிக நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள முருகனின் அருள் மெய் சிலிர்க்க வைக்கும்.

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் அதிகப்பட்சம் ஒன்பது செவ்வாய்கிழமையில் அதன் பலனை அனுபவித்துவிடுவார்கள். முருகனின் வழிப்பாட்டை இதுவரை கடைபிடிக்காத நண்பர்கள் ஏதாவது ஒரு வழிபாட்டை முருகனுக்கு கடைபிடித்து வாருங்கள்.

அடுத்த பதிவு மதியம் 1 மணியளவில்

திருப்பூர் பயணம் புறப்படுகிறேன். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 24, 2015

சனி தசா பகுதி 4


வணக்கம் !
          ஒவ்வொரு மனிதனும் இந்த காலத்தில் தனியாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். தனிக்குடித்தனமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். பொருளாதார சூழ்நிலையால் இப்படி வாழவேண்டும் என்று ஆசைப்படலாம்.

கூட்டுக்குடும்பம் என்பது இன்று எந்த இடத்திலும் பார்ப்பது கடினம். திருமணம் முடிந்தபிறகு அனைவரும் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள. தனிக்குடித்தனம் போவது தவறு இல்லை ஆனால் பெற்ற தாய் தந்தையை விட்டு தனிக்குடித்தனம் போவது என்பது தான் கொடுமையான ஒரு செயல்.

இன்றைய காலத்தில் அண்ணன் தம்பி கூட ஒற்றுமையாக ஒரே குடும்பத்தில் வசிப்பதில்லை. நான் சொல்ல வந்த விசயத்திற்க்கு வருகிறேன். ஒருவர் தனிக்குடித்தனமாக வாழ்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு சனிதசா ஆரம்பித்தால் அந்த நபர் குடும்பத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ ஆரம்பித்துவிடுவார்.

சனி என்றால் வேலையாட்கள் காட்டும் கிரகம். வேலையாட்களை பார்த்தால் கூட்டாக வசிப்பார்கள். அதாவது அதிக நபர்கள் கொண்ட குடும்பங்களாக இருக்கும்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் அதிகமக்கள் இருக்கின்றார்கள். இந்தியா மகரராசியை குறிக்கும் நாடு இந்தியா என்பார்கள். சனியின் ராசி என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

உங்களுக்கு சனி தசா நடந்தால் உங்களின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பமாக இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.உங்களின் குடும்பம் கூட்டு குடும்பமாக இல்லாவிட்டாலும் நீங்கள் வசிக்கும் வீட்டில் அதிகபடியான நபர்கள் உள்ள குடும்பம் வாடகைக்கு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சர்ப்பதோஷமும் பாம்பும்


வணக்கம் !
          காலசர்ப்ப தோஷத்தைப்பற்றி பல பதிவுகளில் நாம் பார்த்து இருக்கிறோம். புதுதகவலாக ஒன்றைப்பற்றி பார்க்கலாம். காலசர்ப்பதோஷம் உள்ளவர்களுக்கு உடலில் இருக்கும் சக்கரங்கள் வேலை செய்யாது என்று சொல்லுவார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களை பார்த்தால் அப்படி தான் இருப்பார்கள். எந்த விதத்திலும் முன்னேற்றம் என்பது இருக்காது. சக்கரங்கள் வேலை செய்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் என்பது இருக்கும்.

சர்ப்ப தோஷம் என்பதால் பாம்பைப்பற்றி தான் அதிகம் சொல்லுவோம். பாம்பிற்க்கு அபிஷேகம் எல்லாம் அதனைப்பற்றி தொடர்புடையதாக இருப்பதால் பாம்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

நீங்கள் செல்லும்பொழுது அந்த வழியில் பாம்பு வந்தால் நீங்கள் செல்லும் காரியம் தடைப்படும் என்று சொல்லுவார்கள். அதாவது ராகு கேது குறுக்கீடு வருவதால் காரியத்தடை என்பார்கள். எல்லா பாம்புகளும் காரியத்தடை என்று சொல்லமுடியாது. பாம்பில் சாரப்பாம்பு என்ற ஒன்று இருக்கிறது அது வந்தால் மட்டும் தான் காரியதடை ஏற்படும்.

காலசர்ப்பம் உள்ளவர்கள் அல்லது சர்பதோஷம் இருப்பவர்கள் பாம்பை கண்டால் அதனை அடிக்காதீர்கள். உங்களுக்கும் பாம்பிற்க்கும் தொடர்பு இருப்பதால் பாம்பை நீங்கள் அடிக்காதீர்கள்.

அடுத்த பதிவு மாலை 4 மணிக்கு மேல்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

லட்சுமி பூஜை


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பர் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார். அவர் என்னிடம் சேட்டுகள் செய்யும் மகாலட்சுமி பூஜைப்போல் நாங்களும் செய்யமுடியுமா என்று கேட்டார்.

சேட்டுகள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை அனைத்து மக்களும் செய்துக்கொள்ளலாம். சேட்டுகள் பணத்தை போட்டு பணத்தை எடுக்க நினைப்பார்கள். நம்ம ஆட்கள் எதையும் போடாமல் பணம் வருமா என்று நினைப்பவர்கள். நம்ம ஆட்களின் வழிதோன்றல் அப்படிப்பட்டது.

நம்ம ஆட்கள் கடவுளை நம்புவதே பெரிய விசயம் இதில் லட்சுமி பூஜை எல்லாம் எப்படி செய்வார்கள். கடவுளை நம்புவர்கள் இந்த பூஜையை செய்யலாம். அனைத்து மக்களும் லட்சுமி பூஜையை செய்துக்கொள்ளலாம்.

லட்சுமி பூஜை செய்வதால் உங்களுக்கு நல்ல பணவரவு வரும். அதற்கான வழியை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டு லட்சுமி பூஜையை செய்துக்கொள்ளுங்கள். 

எனக்கு பணக்கஷ்டம் இருக்கும்பொழுது எனது குருவிடம் இதனைப்பற்றி கேட்டேன். அவர் என்னிடம் ஒரு மந்திரத்தை கொடுத்து ஒரு முறை மட்டும் செய்துக்கொள் என்றார். அப்பொழுது அந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று ஒரு முறை செய்தேன். அந்த நாளில் இருந்து தான் கண்ணில் காசுை நான் பார்த்து வருகிறேன்.

லட்சுமியை பூஜை செய்வதைப்பற்றி நீங்கள் நெட்டில் தேடினால் கிடைக்கும். அதனை படித்துவிட்டு செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் தொழில் செய்பவர்களாக இருந்தால் லட்சுமி பூஜையை செய்துக்கொள்ளலாம். நீங்கள் வேலையில் இருப்பவர்களாக இருந்தால் லட்சுமி பூஜை செய்வது எப்படி என்று நெட்டில் தேடினால் கிடைக்கும் அதன் வழியாக நீங்கள் பூஜையை செய்துக்கொள்ளுங்கள்.

என்னிடம் இருக்கும் தொழில் அதிபர்களுக்கு இந்த பூஜையை செய்வது உண்டு. தொழில் அதிபர்கள் ஐந்து லட்சத்திற்க்கு மேல் பணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் இந்த பூஜை செய்யசொல்லிருக்கிறார். பூஜை செய்வதற்க்கு ஆயிரத்திற்க்குள் தான் செலவு இருக்கும் ஆனால் ஐந்து லட்சத்திற்க்கு மேல் பணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் செய்ய சொல்லுவார்.

பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பூஜையை நீங்கள் வீட்டில் செய்துக்கொள்ளுங்கள். நாங்கள் பூஜை செய்வது என்பது விரைவில் பலன் தரும் அதற்கு தான் இவ்வளவு பெரிய தொகை கேட்கிறோம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி தசா பகுதி 3


வணக்கம் !
          சனிதசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். சனிதசாவை பார்த்து பயப்படாதவர்கள் என்று யாரும் இருக்கமுடியாது. அந்தளவுக்கு பயத்தோடு மக்கள் சனியை பார்ப்பதால் வந்தது அது. அந்தளவுக்கு பெரிய பாதிப்பை எல்லாம் எல்லோருக்கும் சனிபகவான் கொடுத்துவிடமாட்டார்.

உங்களின் சுயஜாதகத்தில் சனி பகவான் வலு குன்றி அமைந்தால் சனி தசா உங்களுக்கு பிரச்சினையை கொடுக்கும். பிரச்சினை என்றால் ஒரே பிரச்சினையாக இருக்காது. சனியால் உங்களுக்கு நல்லது செய்யமுடியாமல் இருப்பதால் சின்ன சின்ன பிரச்சினை ஏற்படும். உடல்நிலையில் பிரச்சினை ஏற்படும்.

வலுகுறைவாக அமைவது என்றால் உங்களுக்கு என்ன என்று தெரியும். மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் அதுவும் எட்டாவது வீட்டில் மட்டும் அமரும்பொழுது அதிகமாக வலு குறைந்துவிடும்.

செவ்வாயின் வீடான மேஷத்தில் சனி அமர்ந்தாலும் வலுகுறைந்து அமரும். நீசமாக சனி அமர்ந்துவிடுவதால் மேஷத்தில் சனி அமர்ந்து தசா நடந்தால் பெரிய பலனை எதிர்பார்க்கமுடியாது என்று சொல்லுவார்கள். நடைமுறையில் கூட அப்படி தான் பெரும்பாலான நபர்களுக்கு நடைபெறுகிறது.

பாவியாக சனி அமர்ந்தாலும் பிரச்சினையை அதிகம் கொடுப்பார் என்று சொல்லுவார்கள். ஒரு லக்கினத்திற்க்கு பாவி யார் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். பாவியாக சனி அமர்ந்து சனி தசா நடந்தால் அதிகப்பட்சம் அந்த தசாவில் மரணத்தை தரும் என்று சொல்லுவார்கள்.

தீயகிரகங்களோடு சனி அமர்ந்து அதாவது செவ்வாய் கிரகத்தோடு சனி இணைந்து நின்று சனி தசா நடந்தால் அந்த தசாவிலும் அதிகம் நன்மையை செய்யாது.உங்களின் ஜாதகத்தில் எப்படி சனி அமர்ந்து இருக்கிறது என்பதை பொருத்து தான் சனி தசாவின் பலன் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 23, 2015

ஆன்மீக அனுபவங்கள் 176


வணக்கம்!
         நண்பர் பரமேஸ்வர் என்னிடம் பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்கிறார்களே அது செய்யவிட்டாலும் அதன் சக்தி அங்கேயே இருக்குமா அல்லது சக்தி குறையுமா என்று கேட்டுருந்தார். அவருக்கான பதிலை அவரிடம் சொல்லிவிட்டேன். அதனை நீங்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பதிவில் சொல்லுகிறேன்.

கும்பாபிஷேகம் பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்யவேண்டும். கோவிலில் இருக்கும் வீணாக போன பொருட்களை மாற்றவேண்டும். அதே நேரத்தில் சிலைக்கு கீழே இருக்கும் மருந்து என்று சொல்லப்படும் அஷ்டமருந்து புதுப்பிக்கவேண்டும்.

அஷ்டபந்தனமருந்து சிலையை சுற்றி வைப்பார்கள். அபிஷேகம் செய்யும்பொழுது அந்த மருந்தில் பட்டு அபிஷேகப்பொருட்கள் வரும். அந்த அபிஷேகப்பொருட்களை நாம் உண்ணும்பொழுது அல்லது பருகும்பொழுது நம்மை அந்த அபிஷேகப்பொருட்கள் நோயில் இருந்து பாதுகாக்கும். 

பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கவில்லை என்றாலும் சக்தி அங்கேயே தான் இருக்கும். நோய் தீர்க்கும் அஷ்டபந்தனமருந்தின் தன்மை மட்டும் குறையும். அதனை புதுப்பிக்கவேண்டும் என்பதற்க்காகவும் ஒரு சில விசயங்களை புதுப்பிக்கவேண்டும் என்பதற்க்காகவும் பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி தசா பகுதி 2


வணக்கம்!
         சனிதசாவைப்பற்றி பார்க்க ஆரம்பித்து இருக்கிறோம்.சனி தசா என்று சொன்னவுடன் பயம் தான் அதிகம் ஒருவருக்கு இருக்கும். சனி தசா நல்லதையும் தரும். சனி கொடுத்தால் அது எந்த காலத்திலும் அழியாத செல்வமாக இருக்கும்.

இந்த காலத்தில் அப்பன் சம்பாதித்த சொத்தை மகன் அழிக்கிறான். அவன் அவன் சம்பாதித்த சொத்தை அவன் அனுபவிப்பதில்லை. யார் யாரோ அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி அழிப்பது எல்லாம் ஏதாவது ஒரு சமயத்தில் அதாவது ஏதாவது ஒரு கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது சம்பாதித்து இருப்பார்கள்.

ஒருவருக்கு சனி தசா நடைபெற்று அவர்கள் ஒரு இடத்தை வாங்கினால் கூட அந்த சொத்து அவர்களின் பேரக்குழந்தை காலத்தில் கூட அழியாமல் இருக்கும்.

இப்பொழுது நகரத்தில் பல இடங்களில் மூதயர்களின் சொத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சொத்து எல்லாம் அவர்களின் தாத்தா காலத்தில் சனி தசா நடக்கும்பொழுது வாங்கிய சொத்துக்களாக இருக்கும்.

சனிதசா உங்களுக்கு கெடுதல் தரும் நிலையில் இருந்தால் அந்த நேரத்தில் உங்களின் சொத்தை விற்றால் அந்த சொத்தை எந்த காலத்திலும் உங்களால் மீட்க முடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
         சிவபூஜையைப்பற்றி எழுதியிருந்தேன். அதனைப்பற்றி ஒரு சில கேள்விகள் வந்தன.

சிவபூஜையை பெண்கள் செய்யலாமா என்று ஒரு கேள்வி வந்தது.

பெண்கள் சிவபூஜையை செய்யலாம். திருமணம் முடிந்த பெண்களாக இருந்தால் செய்யுங்கள். திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் சிவபூஜையில் பங்குக்கொள்ளுங்கள் அபிஷேகம் செய்யவேண்டாம். திருமணம் முடியாத பெண்கள் சிவபூஜை செய்யும்பொழுது அப்படியே அதில் ஈர்க்கப்பட்டு திருமணம் வேண்டாம் என்று சென்றுவிடுவார்கள்.

தினந்தோறும் சிவபூஜை செய்யலாமா என்று கேள்வி வந்தது.

உங்களிடம் வசதி வாய்ப்பு இருந்தால் நீங்கள் தினந்தோறும் செய்யுங்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் செய்யலாம்.

எந்த நாளில் செய்யலாம் என்று கேள்வி வந்தது.

சிவனுக்குரிய நாட்களில் நீங்கள் செய்யலாம். பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அமாவாசை பெளர்ணமி என்று வரும் நாட்களிலும் செய்யலாம். உங்களுக்கு பிடித்தமான நாட்களிலும் சிவபூஜை செய்துக்கொள்ளுங்கள்.

மாலை நேரத்தில் அடுத்த பதிவு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி தசா பகுதி 1


வணக்கம்!
                      சனி தசாவை ஆரம்பிக்கவேண்டும் என்று நானும் பல முயற்சிகள் ஒரு மாதகாலம் எடுத்தேன். பல தடைகள் வந்து எழுதவிடாமல் சனி தடுத்தது. எப்படியும் சனிக்கிழமையாவது இந்த பதிவை தந்துவிடலாம் என்று இருந்தேன். வியாழக்கிழமை தொடர்ச்சியாக பைக்கை ஓட்டியதால் கை சுழுக்கிவிட்டது.  சனி எழுதவிடாமல் தடுக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இரண்டு நாட்கள் இடைவேளை விட்டு இன்று எப்படியும் எழுதிவிடவேண்டும் என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.

சனியின் முதல் தன்மையே எந்த காரியத்தையும் ஒழுங்காக செய்யவிடாமல் தடுப்பது. முடுக்கிவிடுவது இதனை தான் அவர் முதலில் ஒருவருக்கு செய்வார். 

சனிதசா ஒருவருக்கு ஆரம்பித்துவிட்டால் உங்களை முதலில் கொஞ்சம் தட்டிப்பார்ப்பார். கொஞ்சம் உட்காரவைக்கலாம் என்று நினைப்பார். நாம் அதனை கண்டு பயம்க்கொள்ளகூடாது. தைரியமாக எழுந்து நடக்க ஆரம்பித்துவிடவேண்டும்.

நாம் முதலிலேயே சோர்ந்து உட்கார ஆரம்பித்துவிட்டால் நம்மை முழுவதும் ஆட்கொண்டுவிடுவார்.சனிதசாவின் முதல் பலனே இப்படி தான் அனேகம்பேருக்கு இருக்கும்.எனக்கு நடப்பது சனிதசா அல்ல. சனிப்பற்றி நிறைய செய்திகள் சொல்லவேண்டும் என்று நினைக்கும்பொழுது சனியின் தாக்கம் வரச்செய்யும்.

சனிதசாவைப்பற்றி நான் எழுதபோகும் விசயங்கள் அனைத்தும் பொதுப்பலன் போல் தான் இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு பலன்கள் இருக்கும். உங்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு பயப்படதேவையில்லை என்பதை உங்களிடம் முதலில் நான் சொல்லிவிடுகிறேன்.

அடுத்த பதிவு மதியம் 2 மணிக்கு மேல்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 20, 2015

வழிகாட்டி


வணக்கம் !
          ஒரு வேலை செய்யவேண்டும் என்றால் அதற்கு ஒரு குரு தேவை. வழிகாட்டுவதற்க்கு ஒரு வழிகாட்டி வேண்டும். கலியுகத்தில் அதனை தான் யாரும் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

ரவுடியாக இருந்தாலும் அதனை வழிநடத்த வழிகாட்டி என்பவர் ஒருவர் வேண்டும் என்பதை உணர்த்துவதற்க்கு தான் சுக்கிரன் என்ற கிரகம் இருக்கிறது. அசுரகுலத்திற்க்கு வழிகாட்டியாக சுக்கிராசாரியார் என்பர் இருந்தார். ரவுடி எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று தான்தோன்றிதனமாக செயல்படவில்லை. ஒருவரின் வழிகாட்டிதல் பேரில் தான் செயல்பட்டார்கள்.

தற்காலத்தில் யாருக்கும் வழிகாட்டி என்பவர் இருப்பதுபோல் தெரியவில்லை. தான்தோன்றிதனமாக செயல்படுகிறார்கள்.எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கு வழிகாட்டி என்பவர் ஒருவர் மட்டும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அந்த காரியத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.

உங்களுக்கு ஒரு ஆலாேசகரை நீங்கள் நியமித்துக்கொள்ளுங்கள். உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுபவர்களாக அதே நேரத்தில் எந்த விதத்திலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்க்கும் ஒரு வழிகாட்டியை நியமித்துக்கொண்டால் உங்களின் வாழ்வு அனைத்திலும் வெற்றிப்பெற்ற வாழ்வாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சிவபூஜை பகுதி 2


வணக்கம் !
          நேற்று சிவபூஜையைப்பற்றி சொல்லிருந்தேன். அதன் தொடர்ச்சி இது.
சிவபூஜையில் அபிஷேகம் பொருட்கள். 

தேன் குரல் வளம் பெற
எலும்மிச்சை பழம் எமன் பயம் நிவர்த்தி
நெய் மோட்சம்
அன்னம்  இறைவன் அருள் பெற
விபூதி எல்லா நன்மையும் பெற
பன்னீர் மகிழ்ச்சி
சந்தனம் உயர் பதவி
நார்த்தங்காய் குடும்ப ஒற்றுமை
மாம்பழம் வெற்றி
குங்குமம் தாலி பாக்கியம்
கரும்புச்சாறு ஆத்ம சாந்தி இனிய வாழ்வு
சொர்ணாபிஷேகம் குபேர வாழ்க்கை

எளிமையாக கொடுத்து இருக்கிறேன். இதனை எல்லாம் நீங்கள் பயன்படுத்தி அபிஷேகம் செய்துக்கொள்ளுங்கள்.

அனைத்து அபிஷேகமும் முடிந்தவுடன் ஊதுவத்தி சாம்பிராணி வைத்து  பஞ்சதீபம் ஏற்றி தீபாராதனை காட்டுங்கள்.

முதலில் செய்யும்பொழுது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கச்செய்யும். பழக பழக நல்ல முறையில் நீங்கள் அபிஷேகம் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். நல்ல முறையில் நீங்கள் அபிஷேகம் செய்து சிவஅருளை நீங்கள் பெறுங்கள். நல்ல வாழ்வை வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவில் தரிசனம்


வணக்கம்!
         நேற்று மதியம் ஆலங்குடி குருஸ்தலம் செல்லலாம் என்று முடிவு எடுத்து கிளம்பினேன். என்னோடு வந்த நண்பர் முதலில் நாம் பட்டீஸ்வரம் சென்று வரலாம் அதன் பிறகு வரும் வழியில் ஆலங்குடி குரு ஸ்தலம் தரிசனம் செய்யலாம் என்று சொன்னார். அப்படியே செய்வோம் என்று கிளம்பினோம்.

பட்டீஸ்வரம் மாலை ஐந்து மணியளவில் கோவிலை அடைந்தேன். சிவன் தேனுபுரீஸ்வராக இருக்கிறார். அம்மன் ஞானாம்பிகையாக இருக்கிறாள். உள்ளே நாங்கள் செல்வதற்க்கும் மாலை பூஜை துவங்கியது. முதலில் தேனுபுரீஸ்வரை தரிசனம் செய்துவிட்டு பிறகு ஞானாம்பிகையை தரிசனம் செய்தோம். 

இந்த தலத்தில் உள்ள சிறப்பு என்ன என்றால் துர்கை அம்மன் தான். துர்கையின் தலைமை இடம் இந்த தலம் என்று சொல்லுவார்கள். துர்க்கை அம்மனுக்கு அதிகமுக்கியதுவம் கொடுத்து இருக்கிறார்கள். துர்க்கை அம்மனை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பொதுவாக தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களை பார்த்தால் கோவில்களின் வாசற்படியில் இருந்து கோவிலின் மூலவரை தரிசனம் செய்வதற்க்கு ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டியிருக்கும். அவ்வளவு பிரமாண்டாமாக கட்டி வைத்திருப்பார்கள். அப்படியே கல்லால் செதுக்கி வைத்திருப்பார்கள்.

இந்த கோவில்கள் எல்லாம் புராணக்காலத்து கதைகளோடு சம்பந்தப்பட்டு இருக்கும். மிக பழமையான கோவில்களாக இருக்கும். இப்படிப்பட்ட கோவில்களுக்குள் நாம் உள்ளுக்குள் செல்லும்பொழுது நமது பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட கோவிலாக நமக்குள் உள்ளூணர்வு ஒன்று ஏற்படும்.

எத்தனையோ கோடி மக்கள் தரிசனம் செய்த கோவில்களை நாம் தரிசனம் செய்யும்பொழுது நமது ஆத்மா மிகவும் தூய்மையானதாக இருக்கும் நமது கர்மாவும் நம்மை விட்டு செல்லும். தஞ்சாவூர் பகுதிக்கு நீங்கள் வரும்பொழுது இந்த பட்டீஸ்வரத்திற்க்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Thursday, February 19, 2015

சிவபூஜை பகுதி 1


வணக்கம்!
         சிவபூஜையைப்பற்றி சொன்னதில் இருந்து அதனைப்பற்றி நிறைய கேள்விகள் வந்தன. அதனை ஒரு சிலர் செய்யவும் தொடங்கிவிட்டனர். இந்த பதிவை சிவராத்திரி அன்றே அளிக்கவேண்டும் என்று இருந்தேன். அன்று எனக்கு பல வேலைகள் இருந்த காரணத்தால் உங்களுக்கு அளிக்கமுடியவில்லை. இன்று பார்க்கலாம்.

சிவபூஜை செய்வதற்க்கு நடராஜர் சிலை ஒன்றை கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். கடையில் வாங்கும்பொழுது அந்த சிலைக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்று கேட்டுவாங்குங்கள். ஒரு சில சிலைகள் அபிஷேகம் செய்யமுடியாது. அபிஷேகம் செய்யக்கூடிய சிலையை அவர்கள் தருவார்கள்.

பெரிய தட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு அதில் நடராஜர் சிலை வைத்துக்கொண்டு ஸ்ரீ ருத்ரம் ஆடியோவை ஒலிக்கவிட்டு பூஜையை தொடங்குங்கள். ஒரு அகல் விளக்குயில் தீபம் ஏற்றி வைத்துக்கொண்டு அதற்கு சிறிய தம்பளம் ஒன்றை வைத்து அகல் விளக்கை அதில் வைத்துக்கொள்ளுங்கள்.  

நடராஜருக்கு முதலில் தண்ணீரை வைத்து அபிஷேகத்தை ஆரம்பியுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யுங்கள். ஒவ்வொரு அபிஷேகம் முடிந்தவுடன் நடராஜருக்கு ஒரு திலகம் இட்டு தீபாராதனையை காண்பியுங்கள். முழுமையான அபிஷேகம் முடிந்தவுடன் நடராஜரை அபிஷேக தட்டியில் இருந்து எடுத்து வெளியில் வைத்துக்கொண்டு ஊதுவத்தி சாம்பிராணி போட்டு முடிந்தால் நைவேத்தியம் வைக்கலாம் அல்லது அவல் பொரி வைத்து ஐந்து தீபம் ஏற்றி தீபாராதனை காண்பியுங்கள்.

சிவன் அருள் பெற அபிஷேகம் பொருட்கள் அதன் பயன்கள்

முதலில் நல்லெண்ணையை சிலை முழுவதும் ஊற்றி நன்றாக உடல் மீது படுமாறு கைகளால் தேய்த்துவிடுங்கள். எண்ணெய் நாம் அபிஷேகம் செய்யும்பொழுது நமது கர்மவினைகள் அனைத்தையும் சிவன் எடுத்துவிடுவார்.

மஞ்சள் பொடியை எடுத்து சிறிய பாத்திரம் வைத்துக்கொண்டு அதில் தண்ணீரில் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கலக்கி அபிஷேகம் செய்யவேண்டும். மஞ்சள் பொடியை சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் மங்களம் பொங்கும்.

நாட்டு மருந்து கடையில் திரவியப்பொடி என்று கேட்டுவாங்குங்கள். திரவியப்பொடியை பாத்திரத்தில் போட்டு தண்ணீரை விட்டு நன்றாக கலக்கி அதனை அபிஷேகம் செய்யவேண்டும். திரவியப்பொடியை சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் பொருள் வளம் பெறமுடியும்.

நாட்டுமருந்துகடையில் நீங்கள் எல்லாப்பொருட்களும் வாங்குங்கள். வாசனைப்பொடி என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். அதனை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி அதனை அபிஷேகம் செய்யுங்கள். வாசனைப்பொடியை நாம் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது நமது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

மாவுப்பொடி இது அரிசிமாவுப்பொடி தான். வீட்டில் அரிசியை ஊறவைத்து மிக்ஸியில் கூட அடித்துக்கொள்ளலாம். இதனை அப்படியே எடுத்து அவரின் உடல் மீது படுமாறு வைக்கவேண்டும். இதனை தண்ணீரில் கலந்துவிடாதீர்கள். உடல் மீது வைப்பது தான் அபிஷேகம். மாவுப்பொடியை நாம் சிவனுக்கு பயன்படுத்தும்பொழுது மாந்தர் உயர்வு பெறலாம்.

நமக்கு எல்லாம் மிகப்பெரிய பலகீனம் நமது நினைவாற்றல் திறன். முக்கால்வாசி பேருக்கு நினைவாற்றல் திறன் இருப்பதில்லை. நெல்லிப்பொடியை கடையில் வாங்கி அதனை சிவனின் அபிஷேகத்திற்க்கு பயன்படுத்தும்பொழுது நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். இந்த பொடியை சிலைக்கு தேய்க்கலாம் அல்லது தண்ணீரில் கலந்துகூட பயன்படுத்தமுடியும்.

பால் இது பசும்பாலாக இருந்தால் நல்லது. இப்பொழுது பசும்பால் கிராமங்களில் கூட கிடைப்பது அரிதாகிவருகிறது. இயற்கையான பாலாக இருந்தால் நல்லது கிடைக்கவில்லை என்றால் கடையில் உள்ள பாலை வாங்கிக்கொள்ளுங்கள். பசும்பாலை அபிஷேகத்திற்க்கு பயன்படுத்துவதால் ஆயுள் விருத்தியடையும்.

இந்த காலத்தில் குழந்தைகள் ஒருவருக்கு பிறப்பது என்பதே மிகப்பெரிய விசயமாக இருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் அபிஷேகத்திற்க்கு தயிரை பயன்படுத்தும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் இருப்பவர்கள் அவர்களின் நல்வாழ்விற்க்கு இந்த அபிஷேகத்தை செய்யலாம்.

செல்வவளத்திற்க்கு நமது ஜாதககதம்பம் நிறைய சொல்லியுள்ளது அதனோடு இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பஞ்சாமிர்தம் வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது உங்களுக்கு நல்ல செல்வவளத்தை தரும்.

இந்த காலத்தில் பதவி என்று அலைபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். நீங்கள் இருக்கின்ற வேலையில் நல்ல பதவியை நீங்கள் அடையவேண்டும் என்றால் இளநீர் வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் மீதம் உள்ளவற்றை பார்க்கலாம்...

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 16, 2015

சிவனின் நாள்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று கோயம்புத்தூர் பயணத்தில் மருதமலை முருகனை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நல்ல தரிசனம். ராஜஅலங்காரத்தில் தரிசனம் கிடைத்தது. இன்று காலை தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன்.

நேற்று திடிர் பயணமாக மருதமலை முருகனை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று கிரிக்கெட் போட்டி என்று கேள்விப்பட்டேன். நான் கிரிக்கெட் பார்த்தது கிடையாது. இந்தியா பாகிஸ்தான் இரண்டுக்கும் போட்டி என்று நண்பர் சொன்னார், அடடா எனக்கு தெரியவில்லையே என்று சொன்னேன். தெரிந்து இருந்தால் உங்களுக்கு இந்த செய்தியை முதலிலேயே சொல்லிருப்பேன்.

கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் உள்ள முக்கால்வாசி மக்கள் பார்த்து இருப்பார்கள். ஒட்டுமொத்த மக்களின் எண்ணமும் கிரிக்கெட் மீது இருக்கும்பொழுது நாம் கடவுள் மீது பக்தியை வைத்தால் அந்த நேரத்தில் நாம் கடவுளிடம் இருந்து நிறைய பெற்றுவிடலாம்.

அடுத்தமுறை இப்படிப்பட்ட வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் கடவுளிடம் பக்தியை செலுத்துங்கள். மிக எளிதில் அவரை நீங்கள் அடைந்துவிடமுடியும். நம்மை யாரும் இன்று தீண்டவில்லை என்று இருக்கும் நேரத்தில் நாம் அவரை மனதில் நினைத்தால் பரவாயில்லை இந்த நேரத்திலும் என்னை நினைக்க ஆள் இருக்கின்றது என்று அவர் நமக்கு அருள் செய்வார்.

இன்றும் நாளையும் சிவனை நினைக்க மிக சிறந்த நாள். பிரதோஷ காலத்தில் நான் சிவன் கோவிலுக்கு செல்லுகிறேன். பூஜைக்கு தேவையான பொருளை வாங்கி கொடுத்துவிட்டு பூஜையில் கலந்துக்கொள்கிறேன். நாளை அம்மனுக்கு விஷேசமான நாள். நாளை அம்மனையும் இரவில் அப்பனையும் நினைத்துக்கொண்டே இருங்கள்.

இந்த வருடத்தில் நாளை நாள் மிகசிறந்த நாள். சிவனுக்கு ஒரு நாள் தான் அது சிவராத்திரி நாள். நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 15, 2015

சிவபூஜை


வணக்கம் நண்பர்களே!
                      சிவராத்திரி வரும் நேரத்தில் இந்த பதிவை உங்களுக்கு அளிக்கிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் சிவபூஜை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல பேர்கள் இதற்கு தயக்கம் காட்டினார்கள். ஒரு சில எனக்கு தெரிந்த நண்பர்கள் செய்கிறேன் என்று சொல்லி அதற்கு தயார் செய்தார்கள்.

சிவனை எப்படி வீட்டில் வைத்து வழிப்படுவது என்றும் ஒரு சிலர் என்னை கேட்டனர். சிவ லிங்கம் வாங்காமல் நடராஜரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடலாம். பூஜை முடிந்து நடராஜரை நீங்கள் வீட்டில் உள்ள பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம்.

வீட்டில் செய்வதற்க்கு பயமாக இருக்கின்றது என்றால் நீங்கள் வெளிஇடங்களுக்கு செல்லும்பொழுது இந்த வழிப்பாட்டை நீங்கள் செய்யலாம். சிவனுக்குரிய சிவராத்திரி அன்றே இந்த பூஜையை நீங்கள் செய்ய தொடங்கலாம். 

வடமாநிலங்களில் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு நீங்கள் சிவலிங்கத்திற்க்கு பூஜை செய்யுங்கள். வடமாநிலங்களில் நீங்களே சிவலிங்கத்திற்க்கு அபிஷேகம் செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 14, 2015

தெய்வ தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னை தேடிவந்து ஏதாவது ஒரு உதவி கேட்கிறார்கள். ஆன்மீகவழியில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்துவருகிறேன்.

ஒரு சிலருக்கு உடனே நடந்துவிடும். ஒரு சிலருக்கு கொஞ்ச காலம் ஏற்படும். ஏன் காலம் எடுத்து அவர்களுக்கு நடைபெறுகிறது என்பதை பல பதிவுகளில் நானே சொல்லிருக்கிறேன். ஒரே நாளில் நடக்கவேண்டும் என்று பல பேர்கள் வருகிறார்கள்.

உங்களுக்கு ஒரு ஆன்மீகவாதியிடம் சென்று நல்லது நடக்கவேண்டும் என்றால் உங்களின் புண்ணியகணக்கில் நிறைய நல்லது இருக்கவேண்டும். அப்படி புண்ணிய கணக்கில் இருக்கும்பொழுது உங்களுக்கு நல்லது உடனே நடக்கும். 

புண்ணியம் செய்யமுடியவில்லை என்றால் நிறைய கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வைத்திருங்கள். உங்களால் முடிந்தளவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவேண்டும். முடிந்தால் ஒரு ஆன்மீகவாதியை வைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வாருங்கள். நிறைய கோவில்களை தரிசனம் செய்யும்பொழுது உங்களின் ஆத்மா பலப்படும்.

சனிதசாவைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிருந்தேன். கோயம்புத்தூர் விசிட் சென்று வந்தவுடன் எழுதுகிறேன். இப்பொழுது பதிவுகளில் நிறைய கருத்துக்களை சொல்ல தயங்குகிறேன். பதிவில் எழுதியவுடன் அந்த கருத்துகளை எடுத்து பல புதிய பதிவுகள் பிறரின் பதிவுகளில் எழுதப்படுகிறது. என்னை சந்திக்கும்பொழுது உங்களுக்கு தேவையானவற்றை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 13, 2015

வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                      தற்பொழுது எல்லாம் தொடர்ச்சியாக வேலை இருப்பதால் நண்பர்கள் என்னை போனில் தொடர்புக்கொள்ளும்பொழுது உடனே பேசமுடிவதில்லை. வரும் போன்கால்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மிஸ்ட்கால்களை தேடிபிடித்து அவர்களுக்கு போன் செய்வதில் பெரும் பிரச்சினையாக எனக்கு இருக்கிறது.

பழைய நண்பர்களின் பெயர்கள் எனது போனில் சேமித்து இருப்பதால் அவர்களை உடனே தொடர்புக்கொள்ள முடிகிறது. புதியதாக வரும் நண்பர்கள் எனக்கு போனில் தொடர்புக்கொண்டு நான் பேசவில்லை என்றால் நீங்கள் ஒரு மெசேஷ் செய்துவிடுங்கள். உங்களின் பெயர் மற்றும் ஊர் பெயரை மட்டும் குறுந்தகவலாக எனக்கு அனுப்பிவிடுங்கள்.

என்னுடைய வேலையை முடித்துவிட்டு உங்களை தொடர்புக்கொள்ள எனக்கு எளிதாக இருக்கும். நீங்கள் போன் செய்த நாளிலேயே உங்களை நான் தொடர்புக்கொண்டுவிடுவேன். 

மொபைல் எண் 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 12, 2015

யோக விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்றும் இன்றும் யோகம் சம்பந்தப்பட்ட பூஜையில் இருக்கிறேன்.  காலையிலேயே பூஜையை முடித்துவிட்டு உங்களுக்கு பதிவை தருகிறேன். மாலை ஆலங்குடி குரு கோவிலுக்கு செல்வதாக திட்டம் இருக்கிறது. 

புத ஆதித்யா யோகத்தைப்பற்றி பல நண்பர்கள் கேட்டனர். நெட்டில் தேடிப்பார்த்தாலே இந்த விபரம் உங்களுக்கு கிடைக்கும். படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்று சொல்லுவார்கள் அதுபோல் பல நண்பர்களுக்கு நல்ல சோதிடம் தெரிந்து இருந்தும் இப்படிப்பட்ட வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.

சோதிடம் ஆன்மீகம் இது எல்லாம் இருக்கட்டும் அதனை நம் வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது வெற்றி இருக்கிறது. சோதிடத்தை படித்துவிட்டு பலனை சொல்வதில் வெற்றி கிடையாது. நமக்கு எப்படி அதனை பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில் தான் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

தொழில் அதிபர்களுக்கு தான் இவர் சொல்லுகிறார் என்று பல பேர்கள் சும்மா இருந்துவிட்டோம் என்று நான் போன் செய்த சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். தொழிலுக்கு நாம் செய்துக்கொடுத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு முதலில் தெரிவிப்போம். அதனை பதிவில் நான் குறிப்பிட்டவுடன் நீங்களும் செய்துக்கொள்ளுங்கள்.

எனக்கு ஒரு சில நாட்களில் என்ன நட்சத்திரம் நடந்துக்கொண்டிருக்கிறது. என்ன திதி என்பதை கூட நான் மறந்துவிடுவது உண்டு. அம்மன் இருப்பதால் அதனை அவ்வப்பொழுது நினைவுப்படுத்தும். நான் அந்தளவுக்கு சோதிடத்திற்க்கு முக்கியம் கொடுப்பதில்லை அம்மனை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவது உண்டு.

நீங்கள் அப்படி இருக்ககூடாது அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். சமயம் வரும்பொழுது அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 11, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3







அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 2






அன்புடன்
ராஜேஷ்சுப்பு




அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் 
                      நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 9, 2015

யோகம் வந்த நேரம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று ஒரு வேலையில் இருந்தபொழுது திடீர் என்று ஒரு சிந்தனையை அம்மன் எனக்கு கொடுத்தது. அதுவரை நான் அதனைப்பற்றி சிந்திக்கவில்லை அம்மன் நினைவுப்படுத்தியதால் அதனை நான் புரிந்துக்கொண்டேன். முதலில் எதனை செய்வதாக இருந்தாலும் எனது தொழில் நண்பர்களுக்கு தெரியப்படுத்திவிடுவேன். நேற்று ஞாயிறுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு எனக்கு தெரிந்த காரணத்தால் அந்த நேரத்தில் ஒவ்வொருவராக போனில் தொடர்புக்கொண்டேன். முக்கால்வாசி நம்பர் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அந்த நாள் இந்த உலக வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட நாளாகவே மக்கள் கருதுகின்றனர். ஒருவன் உருப்படவேண்டும் என்றால் ஞாயிற்றுகிழமை அதிகாலையில் எழுந்துவிடவேண்டும். நான் தொடர்புக்கொண்டப்பொழுது இரண்டு நண்பர்கள் மட்டும் செய்வதற்க்கு தயாராக இருந்தனர். அவர்களின் வழியாக அம்மனை வைத்து செய்யவேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களுக்கான வேலையை முடித்தேன்.

ஒவ்வொரு மனிதனும் யோகம் வேண்டும் என்று அலைகிறான். ஒரு யோகம் அமைந்துவிட்டால் அதுபோதும் அதுவே நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும் என்று சோதிடம் படித்த அனைவருக்கும் தெரியும். ஒரு சிலருக்கு யோகஜாதகமாக அமைந்தாலும் அவர்களுக்கு யோகம் வேலை செய்வதில்லை.

யோகமே இல்லாதவர்களுக்கு யோகத்தை பெறுவதற்க்கான முயற்சி தான் நேற்று நான் செய்த வேலை. இப்பொழுது மகரத்தில் சூரியன் புதன் சேர்க்கை நடைபெற்று புதஆதித்யா யோகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இது அடிக்கடி நடைபெறுகின்ற ஒரு நிலை தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு யோகத்தை குரு பார்ப்பது தான் மிக விஷேசம். குருவும் உச்சவீட்டில் இருந்து பார்ப்பது கிடைக்காத ஒரு அற்புதம் என்றே சொல்லலாம்.

மகரத்தில் ஒரு கிரகம் அமைந்தால் அப்பொழுது அந்த கிரகத்திற்க்கு நாம் பரிகாரம் செய்தால் வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று எனது குரு சொல்லிக்கொடுத்து இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரியனுக்கு மிக விஷேசமான ஒரு நாள் என்பதால் நேற்றே அதனை செய்யவேண்டும். நல்லபடியாக இரண்டு நபர்களுக்கு நான் நேற்று செய்துக்கொடுத்தேன்.

மறுபடியும் இந்த மாதிரியான கிரக நிலை வருவதற்க்கு பல வருடங்கள் ஆகலாம். யாருக்கு கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கு கிடைத்து இருக்கும்.தை மாதம் முடியும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஞாயிற்றுகிழமை அந்த வாய்ப்பு இருக்காது என்பதால் அம்மன் நேற்று எனக்கு இந்த தகவலை சிந்திக்க வாய்ப்பை கொடுத்தது.

சூரியன் புதன் மற்றும் குரு கிரகம் இந்த மூன்று கிரகத்தையும் வைத்து பரிகாரம் செய்யப்படவேண்டும். மிக அதிகமான நல்ல பலனை நாம் இந்த யோகத்தால் பெறமுடியும். யோகம் இல்லாதவர்களும் இந்த யோகத்தை பெறமுடியும்.

இப்பொழுது இரண்டு நாள் கிடைத்து இருக்கிறது. புதன் வியாழன் இதனை வைத்தும் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். உங்களுக்கு தெரிந்த வழிபாட்டை வைத்து இந்த யோகத்தை பெற்றுக்கொள்ளுங்கள். மறுபடியும் இப்படிப்பட்ட கிரக நிலைகள் உடனே அமையுமா என்பதை பரிசோதனை செய்து பாருங்கள்.

எப்படி வழிப்பாட்டை செய்வது என்பதை உடனே எனக்கு போன் செய்து கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். அம்மனை வைத்து இதனை உங்களுக்கு செய்யவதற்க்கு எனது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு எனக்கு போன் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 8, 2015

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      கோயம்புத்தூர் சென்று வந்ததில் இருந்து தொடர்ந்து சொந்த வேலை இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவு தரமுடியவில்லை. இனி தொடர்ந்து பதிவை பார்க்கலாம்.

அம்மன் பூஜை வரும் 10/02/2015 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு இந்த மாதம் காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
மஸ்கட் சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்
இராசிபுரத்தை சேர்ந்த இராஜ்குமார் அவர்கள்
திரு சத்திய சீதாராமன் அவர்கள்

வழக்கம்போல் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

நேரில் வந்து பங்குபெறும் திரு கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 4, 2015

விதி வலியது


வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் தொழில் சம்பந்தமாக முன்னேற்றம் அடைவதற்க்கு வரும் நண்பர்கள் பற்றிய பதிவு இது. தொழில் என்று வந்தால் அவர்களிடம் பணம் வாங்குவது கிடையாது. முதலில் உங்களுக்காக ஒன்றை செய்கிறேன். உங்களுக்கு பணம் வந்த பிறகு எனக்கு பணத்தை கொடுங்கள் என்று சொல்லுவேன்.

நீங்கள் செய்ய வேண்டியது தினமும் எனக்கு போன் செய்து என்ன நடக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று சொல்லுவேன். தினமும் அவர்களுக்கு செலவு என்பது ஒரு ரூபாய் தான் வரும். பெரும்பாலான நண்பர்கள் இதனை செய்யமாட்டார்கள். என்னை வந்து சந்தித்து இரண்டு நாட்களுக்கு போன் செய்வார்கள். அதன் பிறகு அவர்கள் என்னை தொடர்புக்கொள்வது குறைந்துவிடும்.

உண்மையில் அவர்களின் விதி அவர்களை விடுவதில்லை. அவர்களை சுற்றிவிடுகிறது. அதனை மீறி என்னை தொடர்புக்கொள்ள முடிவதில்லை. நானும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது உண்டு.

மனிதனை நாம் குறைச்சொல்லமுடியாது. அவனவன் வாங்கி வந்திருக்கிற கர்மா அப்படிப்பட்டது. அந்த கர்மாவை மீற முடியாமல் தவிக்கின்றார்கள்.மிக குறைந்த நபர்கள் என்ன தான் நடந்தாலும் நடக்கட்டும் என்று விடாமல் பிடித்துக்கொண்டுவிடுவார்கள். அவர்கள் தான் என்னிடம் நல்ல பயன்அடைந்தவர்கள்.

நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் நமது நிலைமை என்ன என்று நன்றாக புரிந்துக்கொள்ளவேண்டும். நமது ஜாதகத்தின் நிலைமை என்ன என்றும் புரிந்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு என்னிடம் வந்து உங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம். விதியை புரிந்துக்கொண்டு நடப்பது நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 3, 2015

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதனும் தன் வாழ்வில் ஏதாவது ஒரு ஏற்றம் வராதா என்று எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கின்றான். 

வாழ்வில் ஏற்றத்திற்க்கு வழிபாடு மற்றும் ஆன்மீக விசயங்களில் நாட்டம் செலுத்தி இறை வழியாக ஏற்றத்தை ஏற்படுத்த கடுமையாக போராடுகிறான். இதில் வெற்றி கண்டவர்களும் உண்டு, வெற்றி காணாமல் சென்றவர்களும் உண்டு.

ஒரு சிலர் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருப்பார்கள். அவரை அனைவரும் வழியில் போகும்பொழுது பார்க்கலாம். ஒரு சில காலங்களில் அவரை பார்க்க அப்பாயிமெண்ட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுபட்டுவிடும். 

சும்மா இருப்பவனை மேலே தூக்கிவிடுவதும் மேலே இருப்பவனை கீழே தள்ளிவிடுவதிலும் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள தசாக்கள் மிகப்பெரிய பங்கு அளிக்கின்றன.

பல்வேறு பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லிவந்து இருக்கின்றேன். ஒவ்வொரு தசாவாக பார்த்து வந்துக்கொண்டு இருந்தோம். இடையில் உங்களிடம் எந்த தசாவை எழுதலாம் என்று கேட்டேன். அதற்கு பெரும்பாலான நண்பர்கள் சனி தசாவைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டார்கள்.

திருநள்ளாருக்கு செல்லாமல் இருந்த என்னை திருநள்ளாருக்கு சென்று தீர்த்தம் ஆடிவிட்டு சனி பகவானை தரிசனம் செய்யும் வாய்ப்பும் இயற்கையாகவே அமைந்தது. சரி இறைவனும் முடிவு செய்துவிட்டார் நாம் சனி தசாவைப்பற்றி எழுதலாம் என்று எழுதஆரம்பித்துவிட்டேன்.

சனி தசாவை இன்று தைபூசம் அன்று தொடங்கலாம் என்று தொடங்கிவிட்டேன். 

நாளை மதியம் திருப்பூர் பயணம் மேற்க்கொள்கிறேன். வியாழன் அன்று திருப்பூர் நண்பர்களை சந்திக்கிறேன். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 2, 2015

தவிர்க்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                      ஜாதககதம்பம் பல நல்ல உள்ளங்களை எனக்கு பெற்றுக்கொடுத்தாலும் அவ்வப்பொழுது யாராவது வந்து தொல்லை கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள். அதனை நான் அதிகம் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலும்  அவ்வப்பொழுது வந்து தொந்தரவைக் கொடுக்கிறார்கள்.

இலவசசோதிட சேவையை நிறுத்திவிட்டேன். பிற்காலத்தில் நேரம் கிடைக்கும்பொழுது அந்த சேவையை தொடங்கவேண்டும் என்று அந்த லிங்கை வைத்திருக்கிறேன். அதில் வந்து பல பேர் தொந்தரவுக்கொடுக்கிறார்கள். அதனை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்.

கட்டண சோதிடத்தில் உள்ள மெயிலுக்கு மெயிலை அனுப்பி நான் உங்களின் வங்கி கணக்கிற்க்கு பணத்தை அனுப்பிவிட்டேன் என்று போலியாக ஒரு டிரஸ்பெர் எண்ணை கொடுத்துவிட்டு எனக்கு பலனை அனுப்புங்கள் என்று மெயில் செய்கின்றார்கள். இதனையும் தவிருங்கள்.

என்னிடம் ஐந்து ஜாதகம் இருக்கின்றது. உங்களின் வங்கிக்கணக்கிற்க்கு பணத்தை அனுப்புகிறேன். அவசரமாக எனக்கு ஒரு ஜாதகத்தை மட்டும் இப்பொழுது பார்த்து சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். பொதுவாக எனக்கு பணத்தை கட்டிய பிறகு அவர்களுக்கு நான் பலன் சொல்ல ஒரு வாரம் எடுக்கும். ஐந்து ஜாதகம் வைத்திருப்பதால் உங்களுக்கு உடனே பலனை சொல்லிவிடமாட்டேன்.

பொதுவாக நான் யாருக்கும் உடனே நல்லது செய்துவிடுவது கிடையாது. நன்றாக பார்த்து இவர் கடைசிவரை நம்மிடம் இருப்பார் என்றால் செய்வது உண்டு. நல்ல டைம் எடுத்து தான் செய்வது உண்டு. ஜாதககதம்பத்தில் இருந்து வந்த நல்ல குடும்பங்கள் எல்லாம் இப்படி தான் பயன் அடைந்திருக்கிறார்கள்.

நல்லது செய்யவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதற்கு காலம் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும். காலம் தீர்மானிக்கவேண்டும் என்று நான் கொஞ்சம் நேரம் எடுப்பது உண்டு.

ஒன்று இருக்கின்றது என்றால் அதனை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். அதனைவிட்டுவிட்டு தேவையற்றை விசயங்களில் கவனம் செலுத்தி உங்களின் சக்தியை வீணடிக்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


வணக்கம் நண்பர்களே!
                      வாங்கி கட்டிய வரம் என்று ஒன்றைப்பற்றி பார்த்தோம். அதில் பணத்தைப்பற்றி பார்த்தோம். கடன் வாங்குவதால் ஏற்படும் சிக்கலைப்பற்றி பார்த்தோம். இப்பதிவில் ஒரு தகவலைப்பற்றி பார்க்கலாம்.

எப்படி எல்லாம் நாம் வாங்கிக்கட்டிக்கொள்கிறோம் என்பதை பற்றி தான் பார்த்து வருகிறோம். காமம் என்ற ஒன்று நல்ல வழியில் பயன்படுத்தினால் அது நல்ல வழிக்கு கொண்டு செல்லும் அதனை கொஞ்சம் தவறான வழியில் பயன்படுத்தும்பொழுது அதுவே பிரச்சினையாகவும் நமக்கு வந்துவிடும்.

இயற்கை ஒருவனுக்கு ஒருத்தி என்ற மாதிரி தான் இயங்குகிறது. அதுவே ஒருத்திக்கு மேல் போனால் வியாதி வரும் என்பதை இயற்கையே உணர்த்தும்பொழுது ஒருத்தனுக்கு ஒருத்தியோடு இருப்பது நல்லது. 

காமத்தால் எப்படி சூட்சமசரீரம் பாதிப்படைகிறது என்றால் ஒருவரிடம் இருந்து மகிழ்ச்சியை நாம் பெறும்பொழுது அவர்களின் தோஷத்தை அதாவது அவர்களின் கஷ்டத்தையும் நாம் பெற்றுக்கொள்ளதான் வேண்டும்.

ஒவ்வொருக்கும் ஜாதகத்தில் தோஷம் இருக்கும் அவர்களோடு நாம் கலக்கும்பொழுது அவர்களின் தோஷமும் நமக்கு வரும். திருமணத்திற்க்கு பிறகு ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் என்பது வரும் அது ஆணும் பெண்ணும் ஜாதகமும் இணைந்து செயல்படும். 

கண்ட கண்ட பெண்களை நாம் பார்த்துக்கொண்டே இருந்தால் அவர்களிடம் உள்ள கெட்ட விசயங்கள் உங்களை பிரச்சினையில் தாழ்த்திவிடும். இப்படி இருப்பவர்களுக்கும் நாம் செய்வது கடினமாகதான் இருக்கும்.

இதுவரை தவறு செய்துவந்தாலும் பரவாயில்லை என்று விட்டு விட்டு இனிமேல் தவறை செய்யவேண்டாம் என்று மனம் திருந்தி நல்ல வழியில் செல்லுங்கள். இறையருள் உங்களை மேலே தூக்கிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவில் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்று காலை பதிவை எழுதிவிட்டு நேராக மன்னார்குடி இராஜாகோபால சுவாமி கோவிலுக்கு சென்று வந்தேன். மன்னார்குடியில் நான் படிக்கும் காலத்தில் அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்று வந்து இருக்கிறேன். அதன் பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு இப்பொழுது தான் சென்று வந்தேன். மன்னார்குடி பெரிய கோவில் என்றால் அனைவருக்கும் தெரியும்.

பெருமாள் இராஜாகோபாலனாகவும் தாயார் செங்கலமதாயார் என்பதாகவும் அழைக்கின்றார்கள். இந்த பகுதிக்கு சென்றால் இந்த கோவிலை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.  தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்தையும் நீங்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

திருவெண்காடு புதன் ஸ்தலம் கண்டிப்பாக சோதிடராக மற்றும் ஆன்மீகவாதியாக இருப்பவர்கள் சென்று வரவேண்டும். அதேப்போல் திருநாகேஸ்வரமும் நீங்கள் பார்க்கவேண்டிய ஸ்தலம்.

பல கோவில்களை நான் தரிசனம் செய்து இருக்கிறேன். அனைத்தையும் மறுமுறை இப்பொழுது தரிசனம் செய்து வருகிறேன்.ஒவ்வொரு கோவிலையும் படம் எடுத்து பதிவில் போடமுடியாது. அதனை நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்யும்பொழுது அதன் அற்புதத்தை காணமுடியும்.

பெளர்ணமி அன்று ஏதாவது ஒரு சிவாலயத்திற்க்கு அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். பெளர்ணமி வழிபாடு மிகவும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 10 தேதிக்குள் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பி வையுங்கள். 

ஒவ்வொரு மாதமும் அம்மன் பூஜை உங்களுக்காக சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. சிறப்பான முறையில் அம்மன் பூஜை நடத்தப்படுபவதற்க்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். நீங்கள் அளிக்கும் நிதி தான் அம்மன் பூஜை நல்ல முறையில் நடைபெறுகிறது. 

பல குடும்பங்கள் அம்மனால் நல்ல முறையில் வளர்ந்து வருகிறார்கள். மேலும் பல குடும்பங்களை காப்பாற்றவேண்டும் என்று அம்மனிடம் நான் தினமும் பிராத்தனை செய்துக்கொண்டு இருக்கிறேன். 

நல்ல வளர்ச்சியை நோக்கி உங்களின் குடும்பங்கள் வளர்ந்து வந்த பிறகு அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். வளமான வாழ்வு வந்த பிறகு உங்களை அம்மன் நிச்சயம் கூப்பிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 1, 2015

கோவில் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                                 நேற்று திருநள்ளார் சனி பகவான் ,அம்பகரத்தூர் பத்திரகாளி அம்மன், பூம்புகார் பீச்,திருவெண்காடு புதன் ஸ்தலம், கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலம், திருநாகேஷ்வரம் இராகு ஸ்தலம் ஆகியவற்றை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இந்த தலங்கள் அனைத்தும் சென்று வருவதற்க்கு எனது குடும்பத்தார்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

பொதுவாக நான் கோவில்களுக்கு சென்றால் எனது வழிபாட்டு முறைகள் அனைத்தும் வித்தியாசப்படும். நான் எனது குருவோடு சென்று வந்தால் கோவிலுக்கு உள்ளே சென்று வரமாட்டோம் கோவில் கோபுர தரிசனம் மட்டும் செய்வது உண்டு. குடும்பத்தார்களோடு சென்றதால் கோவிலுக்கு உள்ளே சென்று வந்தேன்.

உங்களுக்கு சொல்ல வந்த விசயத்தை சொல்லவருகிறேன். ஒரே நாளில் நாங்கள் தொடர்ச்சியாக பயணம் செய்து பார்த்துவிட்டு வந்தோம். நன்றாக பாருங்கள் பார்த்துவிட்டு வந்தோம் என்று சொல்லிருக்கிறேன். கோவிலுக்கு நீங்கள் சென்றால் அதுவும் நெடும்தூரம் பயணம் செய்து கோவிலுக்கு சென்று வந்தால் பயண களைப்பு உடலுக்கு ஏற்பட்டுவிடும். கோவிலுக்குள் சென்றால் இந்த களைப்பால் உங்களுக்கு கோவிலின் சக்தி கிடைக்காது.

நான் எனது குருவோடு சென்றால் முதலில் அவர் சொல்லுவது நன்றாக ஒய்வு எடுத்துக்கொள் அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லுவார். நமது உடல் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்க்கு செல்லும்பொழுது அங்குள்ள இடத்திற்க்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதற்க்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்திற்க்கு வழி செய்துக்கொடுப்பார் குரு. 

ஒவ்வொரு கோவிலிலும் தீர்த்தம் வைத்த இருப்பார்கள். சனிபகவான் கோவிலில் நளதீர்த்த்தில் நீராடிவிட்டு அதன் பிறகு தரிசனம் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளனர். உங்களின் உடலுக்கு புத்துணர்வு கொடுத்தபிறகு சாமி தரிசனம் செய்யுங்கள் என்று மறைமுகமாக இதனை வைத்துள்ளனர். 

நல்ல குரு ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்தால் இப்படி தான் செய்வார். உடலுக்கு புத்துணர்வு கொடுத்தபிறகு தான் ஆன்மீகத்தை கொடுப்பார்கள். நீங்களும் கோவிலுக்கு சென்றால் உடலுக்கு ஒய்வு கொடுத்தபிறகு சாமி தரிசனம் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு