Followers

Tuesday, July 30, 2019

ஈசானியத்தின் அருள்


வணக்கம்!
          ஈசானியத்தைபற்றி நாம் பார்த்தோம். இதில் தாயை கவனிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஈசானிய மூலை சரியாக அமையாது என்று சொல்லிருக்கிறேன். இதனை விட முக்கியமான ஒன்றை சொல்லுகிறேன்.

உங்களின் வீட்டில் இல்லறத்தில் இருக்கும் பெண். குடும்ப தலைவி அதிகமாக அனைத்து விசயத்திலும் தலையீடு செய்தால் அதாவது அவர் மீனாட்சி ஆட்சி நடத்தினாலும் ஈசானியத்தில் இருந்து உங்களுக்கு அருள் கிடைக்காது.

இன்றைய காலத்தில் அனைத்து வீட்டிலும் பெண்களின் ஈகோ அதிகமாக இருக்கின்றது என்று சொல்லலாம். பெண்களின் தலையீடு அதிகமாக இருக்கும் வீட்டை நீங்கள் பார்த்தால் ஒன்று இந்த தலைமுறையிலேயே அந்த வீடு அடிப்பட்டுவிடும். 

ஒரு சில வீடுகளில் அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கை சரியாக இருக்காது. வாரிசுகளுக்கு ஈசானியத்தில் இருந்து சக்தி கிடைக்காது. அவர்கள் வாழும் வீடும் சரியாக இருக்காது. இதனை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் உங்களின் வீட்டை நீங்கள் சரி செய்துக்கொள்ளுங்கள்.

நாளை ஆடி அமாவாசை உங்களின் முன்னோர்களுக்காக நீங்கள் நிறைவேற்றும் ஒரு கடமையை செய்யும் நாள் என்பதால் உங்களின் கடமையை நிறைவேற்ற மறக்கவேண்டாம். உங்களின் முன்னோர்களுக்காக சிறப்பு பூஜை இருக்கின்றது இதிலும் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 29, 2019

ஆடி மாத அமாவாசை


வணக்கம்!
          ஆடி மாத அமாவாசை அன்று இரவு சிறப்பு அம்மன் யாகம் இருக்கின்றது. 

ஆடி மாத அமாவாசை அன்று சிறப்பு பூஜை ஒன்று இருக்கின்றது. இது பூஜை முன்னோர்களுக்கு என்று இதனை செய்ய இருக்கின்றோம். இந்த பூஜையின் புகைப்படங்கள் வெளியிடபடாது. இதில் கலந்துக்கொள்ளும் நபர்கள் தங்களின் முன்னோர்களுக்கு அன்று நீங்கள் தனியாக தர்பணம் கொடுத்துவிட்டு அவர்களின் பெயர் மற்றும் உங்களின் பெயரை எனக்கு அனுப்பி வைத்தால் இந்த முன்னோர்களுக்கு செய்யும் பூஜையில் அதில் இணைத்துக்கொள்ளலாம். 

உங்களின் பெயர் மற்றும் நட்சத்திரம் யாருக்கு நீங்கள் கொடுத்தீர்கள் . உதாரணத்திற்க்கு தந்தைக்கு செய்யவேண்டும் என்று நீங்கள் சொன்னால் போதும். இறந்தவர்களின் பெயர் கூட வேண்டியதில்லை உங்களுக்கு என்ன உறவு என்பதை மட்டும் சொல்லலாம்.

இது தற்பொழுது ஆரம்பிக்கப்பட்ட புதிய பூஜை. பலர் தங்களின் முன்னோர்களுக்கு என்று செய்யவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டதால் இதனை செய்கிறேன். முதலில் உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் அன்று விரதம் இருந்து தர்பணம் கொடுத்து இருக்கவேண்டும்.

உங்களின் உறவிற்க்கு நான் தர்பணம் கொடுக்கவில்லை மாறாக ஒரு ஆத்மா சாந்தி பூஜை செய்யபட இருப்பதால் இதனை கேட்கிறேன். ஆத்மா சாந்தி பூஜை செய்ய இருப்பதே பலர் கேட்டுக்கொண்டதால் இதனை செய்கிறேன். இதற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை நமது நண்பர்களுக்காக இது இலவசமாக செய்யபட இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 28, 2019

தீர்வுகள் பகுதி 8


வணக்கம்!
          அனைவரும் என்ன நினைப்பார்கள் என்ன சொல்லுவார்கள் நான் நன்றாக இருக்கவேண்டும். சுகமாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். உங்களைப்பற்றி தெரிந்தவர்கள் உங்களை முதலில் பார்க்கும்பொழுது என்ன கேட்பார்கள் நலமாக இருக்கின்றீர்களா இதனை தான் கேட்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் சுகம் என்று வந்தாலே அது நான்காவது வீட்டை குறிக்கும். நான்காவது வீடு நன்றாக இருந்தால் அவர் சுகமாக இருக்கின்றார் என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். நான்காவது வீடு நன்றாக இருக்கும் வரை தான் அவர் சுகமாக இருப்பார்.

முதலில் லக்கனாதிபதியை நன்றாக இருந்தால் தானே சுகமாக இருக்கமுடியும் நீங்கள் நான்காவது வீட்டை சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். நான்காவது வீடு தான் மிக மிக முக்கியம் அதன்பிறகு நீங்கள் எந்த வீட்டையும் பார்த்துக்கொள்ளலாம்.

நான்காவது வீடு அம்மாவைப்பற்றி காட்டக்கூடிய வீடு. காலபுருஷப்படி நான்காவது வீடாக கடக இராசியை வைத்திருக்கின்றார்கள். கடக இராசி அதிபதி சந்திரன். சந்திரன் நன்றாக இருந்தால் அம்மா நன்றாக இருப்பார்கள்.

ஒருவர் முன்ஜென்மத்தில் அம்மாவை தவறாக நடத்திருந்தால் அல்லது அம்மாவை கவனிக்காமல் விட்டு இருந்தால் அவர்களுக்கு ஈசானியம் நன்றாக அமையாது என்று வாஸ்துவில் சொல்லிருப்பார்கள். ஈசானிய மூலை உங்களின் வீட்டில் நன்றாக அமைந்துவிட்டால் நீங்கள் அனைத்து சுகத்தையும் அனுபவித்துவிடமுடியும். ஒன்றோடு ஒன்று தொடர்பை பற்றி சொல்லுவதற்க்கு தான் மேலே சொன்ன சோதிட தகவலை தந்தேன். 

ஈசானியம் வழியாக தான் உங்களுக்கு சக்தி கிடைக்கும். தெய்வத்தின் அருள் கிடைக்கும். தெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டால் உங்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷமும் போய்விடும் நீங்களும் நன்றாக வாழ்வீர்கள்.உங்களுக்கு நாம் கொடுக்கும் தீர்வு நீங்கள் போன ஜென்மத்தில் உள்ள குறைகளை களைய வேண்டாம். இந்த ஜென்மத்தில் உங்களின் தாயாரை நன்றாக கவனித்தாலே போதும். இதற்கு தீர்வு இதுவாக மட்டுமே இருக்கமுடியும். அனைவரும் எளிதாக இதனை செய்து சரி செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 26, 2019

சோதிட தொழில்


வணக்கம்!
         தற்பொழுது எல்லாம் சோதிடம் நன்கு தெரிந்தவர்கள் தான் சோதிடம் பார்க்க வருகின்றனர். சோதிடத்தைப்பற்றி நல்ல அறிவை பெற்று இருக்கின்றனர். இது ஆரோக்கியமான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். தன்நிலை மற்றும் தன்னுடைய குடும்பத்திற்க்கு ஒரு வழிகாட்டியாக இவர்கள் இருப்பார்கள்.

ஒரு சிலர் ஆர்வகோளாறு காரணமாக சோதிடத்தை நன்கு தெரிந்துக்கொண்டு சோதிட தொழில் செய்யலாமா என்று நினைப்பதும் உண்டு. நான் என்ன சொல்லுவேன் என்றால் உங்களுக்கு இந்த வேறு எந்த ஒரு தொழிலும் செய்யமுடியாமல் வழியே இல்லை என்ற ஒரு நிலை வரும்பொழுது மட்டுமே இந்த தொழிலை தேர்ந்தெடுங்கள்.

இதனைப்பற்றி பல்வேறு பதிவுகளை தந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லுவதற்க்கு காரணம் இருக்கின்றது. சோதிடதொழிலில் போட்டியை உருவாக்க கூடாது என்ற நினைப்பில் இதனை எழுதவில்லை. நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும் என்ற நினைப்பில் இதனை எழுதுகிறேன். முடிந்தவரை போராடி வேறு வேலையை பாருங்கள்.

ஒரு சாதாரணமான தொழிலுக்கும் இந்த தொழிலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கின்றது. முதலில் செய்யும்பொழுது நன்றாகவே இருக்கும் நாட்கள் செல்ல செல்ல உங்களுக்கே நான் சொல்லுவது புரிய வரும். அனுபவத்தில் தான் என்ன என்பது புரியும்.

அம்மன் கோவில் கட்டும்பணிக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வையுங்கள். இந்த பணிக்காக தான் நிறைய வேலை செய்து வருகிறேன். அம்மன் கோவிலுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்கி வைத்திருக்கிறேன். விரைவில் கட்டுமான பணி தொடங்க இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 25, 2019

தீர்வுகள் பகுதி 7


வணக்கம்!
          ஒருவரின் தலைமுறையைப்பற்றி நமக்கு நன்கு தெரியும்பொழுது மட்டுமே அவர்கள் என்ன செய்திருக்கிறார் அவர்களால் தற்பொழுது நமக்கு என்ன பிரச்சினை வரும் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தமாதிரி நாம் பரிகாரங்களை எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணத்திற்க்கு நமது குழந்தை ஊமையாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒருவரின் குழந்தை ஊமையாக இருந்தால் உடனே அவர்களின் வம்சத்தில் இப்படி யாரும் இல்லை இந்த குழந்தைக்கு மட்டும் எப்படி ஊமையாக இருக்கின்றான் என்று எண்ணுவார்கள்.

ஐந்து தலைமுறைக்கு முன்னாடி உங்களின் பரம்பரையில் ஒருவர் ஊமையாக இருந்திருப்பார். ஐந்து தலைமுறையாக உள்ள (மரபணு)ஜீன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கும். திடீர் என்று இந்த தலைமுறையில் ஜீன்(மரபணு) விழிப்படைந்து வந்தவுடன் ஊமை வந்திருக்கும். இது தான் அறிவியில். அறிவியல் இப்படி தான் வருகின்றது என்று சொல்லுகின்றது.

நாம் என்ன செய்திருப்போம் நம்முடைய தாத்தா மட்டும் தான் நமக்கு தெரிந்து இருக்கும் அதற்கு முன்னால் உள்ளவர்களை பற்றி தெரிய வாய்ப்பில்லாமல் இருக்கும். நம்முடைய பரம்பரையில் இது இருந்தது தற்பொழுது வந்திருக்கின்றது.

சோதிடத்தில் இந்த பாதிப்புகள் எல்லாம் பித்ரு தோஷத்தால் பெரும்பாலும் வரும். ராகு கேதுக்கள் இதனை முக்கியமாக குறிக்கும் என்பது சோதிட விதி. நாம் என்ன சொல்லுவோம் பையனின் அப்பா நன்றாக இருக்கின்றார் பையனின் தாத்தா நன்றாக இருக்கின்றார் ஆனால் இவன் மட்டும் எப்படி என்பது தான் மண்டைப்போட்டு குழப்பிக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு சில இடத்தில் பையன் சித்தப்பா போல இருப்பார். உடனே சந்தேகம் வந்துவிடும். சித்தப்பா போல இருக்கின்றான் என்று சொல்லுவார்கள். அனைத்தும் ஜீனின் வேலையாக தான் இருக்கும். இதற்கு என்ன செய்யலாம் என்பதை தான் சோதிடத்தில் சொல்லுவார்கள்.

நீங்கள் உங்களின் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதியை கொடுங்கள் . அவர்கள் உங்களின் தலைமுறையை தீர்மானிப்பார்கள் என்று சொல்லுவார்கள். பல சோதிடர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை வைப்பார்கள் ஆனால் உண்மை என்ன என்றால் உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் செய்யும் திதி காரியங்கள் நன்றாக இருந்தால் உங்களின் தலைமுறையில் உள்ள குறைகள் கலையப்பட்டு நல்ல தலைமுறையாக உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 23, 2019

தீர்வுகள் பகுதி 6


வணக்கம்!
         பெரும்பாலும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அந்தந்த காலக்கட்டத்தில் என்ன பிரச்சினை என்பதை மட்டும் ஆராய்ந்து அதற்கு தகுந்தார்போல் தீர்வு சொல்லுவது உண்டு. ஒருவரின் பூர்வ ஜென்ம கர்மாவையும் நன்றாக ஆராய்ந்து அதற்கு நாம் தீர்வை சொன்னால் வந்தவர் சரியான ஒரு தீர்வை பெற்றுவிடுவார்.

பூர்வஜென்மத்தில் உள்ள குறைகளை களையும்பொழுது அவர்களுக்கு தானாகவே நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். பூர்வபுண்ணிய கர்மா எந்தளவுக்கு இவருக்கு இருக்கின்றது அதற்கு தீர்வை நாம் கண்டுபிடித்தால் ஜாதகர் நல்ல பலனை அனுபவிக்கலாம்.

பெரும்பாலான பதிவுகள் பூர்வபுண்ணியத்தைப்பற்றி நாம் எழுதியிருக்கிறோம். இந்த பதிவுகளை எல்லாம் நீங்கள் தேடிப்படித்தாலே உங்களுக்கு பூர்வபுண்ணியத்தைப்பற்றி ஒரு நல்ல ஐடியா கிடைத்துவிடும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்து ஐந்தாவது வீடாக எந்த வீடு வருகின்றது என்பதை பார்க்கவேண்டும். ஐந்தாவது வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வைபடுகின்றது என்பதையும் பாருங்கள். ஐந்தாவது வீட்டில் எந்த கிரகம் இருக்கின்றது என்பதையும் பாருங்கள்.

ஐந்தாவது வீடு எந்தளவுக்கு பாதிப்படைந்து இருக்கின்றது என்பதை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும். ஐந்தாம் பாவம் நல்ல புண்ணியங்களை பெற்று வந்தால் பெரும்பாலும் ஐந்தாவது வீட்டில் தீய கிரகங்கள் இருக்காது.

ஐந்தாவது பாவத்திற்க்கு நல்ல கிரகத்தின் பார்வை கிடைத்தால் நல்லது. குருவின் பார்வை பட்டாலும் நல்லது. இது எப்படிப்பட்ட பலனை உங்களுக்கு தரும் என்றால் உங்களின் ஊரில் நீங்கள் தான் தலைவராக இருப்பீர்கள்.

ஐந்தாவம் பாவம் கெட்டால் உங்களின் சொந்த ஊரில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். உங்களின் பங்காளியே உங்களை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். சொத்து விசயத்தில் உஷாராக இருக்கவேண்டும். சொந்த சொத்தில் பிரச்சினை வரும்.

ஐந்தாவது பாவம் நன்றாக இருக்க என்ன வழி என்று சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. உங்களின் ஜாதகத்தை எடுத்து ஐந்தாவது கிரகம் எது என்று பார்த்து அந்த காரத்துவம் உடையவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இது ஒரு நல்ல பரிகாரமாக அமையும்.

ஐந்தாவது வீடு அல்லது குரு சம்பந்தப்பட்ட காரத்துவம் உடையவர்களுக்கு நீங்கள் சென்று உதவுவது நல்லது. ஒரு குருவை நீங்கள் ஏற்றுக்கொள்வதும் நல்லது. குலதெய்வத்தை வணங்கலாமே என்று செல்லவேண்டாம் கொஞ்ச காலம் இதனை தவிர்த்துவிட்டு மேலே சொன்னதை மட்டும் செய்து வாருங்கள்  அதன்பிறகு குலதெய்வத்தை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 22, 2019

சக்தியை தரும் சுக்கிரன்


வணக்கம்!
          ஒரு ஆண் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்க்கு அவனுக்கு ஒரு பெண் கண்டிப்பாக தேவைப்படும். இதனை பல காலங்களாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.  இன்று குடும்பங்களில் உள்ள பெண்கள் இல்லை என்றால் ஒரு ஆண் கூட உறுப்படமாட்டார்கள். பெண்களின் உதவியால் தான் ஒரு ஆண் முன்னேற்றம் காண்கிறான்.

உங்களின் மனைவிக்கு முதல் மரியாதை கொடுத்து அவர்களின் அன்பை நீங்கள் பெற்றால் உங்களின் வாழ்க்கை சிறக்கும். உங்களின் துணையின் முழு சக்தியும் உங்களுக்கு கிடைக்கும்பொழுது நீங்கள் சிறப்பாக செயல்படமுடியும்.

உங்களின் அருகில் இருக்கும் பெண்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள பெண்களின் அன்பையும் பெறவேண்டும். உங்களால் அவர்களுக்கு தொந்தரவை கொடுக்காமல் நீங்கள் அன்போடு இருக்கவேண்டும். ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் வெளி பெண்களின் சக்தியும் நீங்கள் வீணடித்துவிடகூடாது என்பதற்காக சொல்லுகிறேன்.

சோதிடத்தில் இதில் என்ன இருக்கின்றது என்றால் பெண்களை குறிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் முழுமையான ஆற்றலை கொண்ட பெண்களின் சக்தியை நீங்கள் பெற்றுவிட்டால் சுக்கிரன் உங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்கள்.

பெரும்பாலும் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை கூட நீங்கள் பழகும் பெண்களால் நீக்கமுடியும். அவர்கள் நீங்கள் நன்றாக வாழவேண்டும் என்று மனது வைத்துவிட்டால் ஜாதகத்தை மீறி நீங்கள் செயல்படமுடியும். இனி உங்களின் கையில் தான் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 21, 2019

பரம்பரை



வணக்கம்!
         நாம் தற்பொழுது செய்கின்ற காரியம் நமது தலைமுறையை பாதுகாத்து அது வளர்ச்சியை கொண்டு செல்வது போல இருக்கவேண்டும். வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றால் தான் நீங்கள் நல்ல முறையில் இருந்திருக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

நமது தாத்தா வீண் பிரச்சினையை செய்துக்கொண்டு பாவத்தை செய்து இருந்தால் இந்த தலைமுறையோடு பரம்பரை நின்றுவிடும். பரம்பரை வளர்ச்சி இருந்தால் தாத்தா நல்ல மனுஷன் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்நீங்கள் செய்வது கூட இதனை எல்லாம் பார்த்து அதற்கு தகுந்தார் போல் நீங்கள் நடக்கவேண்டும்.  செயல் நம்முடைய பரம்பரை வளர்ச்சியை நோக்கி இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள்

நீங்கள் செய்யும் தவறுக்கு எல்லாம் உங்களின் வாரிசுகளுக்கு வரும் பாதிப்பு குறைவாக தான் இருக்கும். உங்களின் தாத்தா செய்த தவறுகள் மற்றும் புண்ணியங்களை தாங்கி உங்களின் வாரிசுகள் இருக்கும். தாத்தாவை போல பேரகுழந்தைகள் இருக்கும்.

உங்களின் மகனின் வாரிசுகள் நன்றாக இருப்பதற்க்கு நீங்கள் தற்பொழுது செய்யும் செயல் என்ன அது நன்றாக இருக்கின்றதா என்பதை பார்த்து செய்யுங்கள். தவறான விசயங்கள் செய்தால் முடிந்தவரை அதனை விட்டுவிட்டு நல்ல செயலை செய்ய ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 19, 2019

ஆடி மாதம்


வணக்கம்!
         ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம் என்று பல வருடங்களாக நாம் பதிவை தந்துக்கொண்டு இருந்தோம். ஆடி மாதத்தில் ஜாதககதம்பத்தை படிக்கும் அனைத்து நண்பர்களையும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தி வையுங்கள் அது ஆண்டு சந்தா என்ற கேட்போம். அனைவரும் நான் கேட்பது போலவே செய்து வருவார்கள்.

இந்த வருடம் ஆடி மாதத்தில் இதனை நான் கேட்கவில்லை அம்மன் கோவில் கட்டும் பணிக்கு என்று நிறைய தொந்தரவுகளை நான் உங்களுக்கு கொடுத்து விட்டதால் இதனை உங்களிடம் கேட்கவில்லை. அம்மன் பூஜைகள் மற்றும் அம்மன் யாகம் எல்லாம் இந்த மாதம் இருக்கின்றது.

இன்று இரவு  நவஅம்மன் (சண்டி) யாகம் தொடங்குகின்றது. நவ அம்மன் யாகத்தை இரவு நேரத்தில் இன்று நடக்க இருக்கின்றது. இது போல பல விஷேசமான பூஜைகள் இருக்கின்றன. ஆடி மாதம் முழுவதும் முடிந்தவரை அருகில் இருக்கும் அம்மன் கோவில் மற்றும் விஷேசமாக இருக்கும் அம்மன் கோவிலுக்கு எல்லாம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஆடி அமாவாசை அன்று உங்களின் முன்னோர்களுக்கு என்று செய்யும் காரியத்தை செய்யலாம் அதோடு நமது தளத்திலும் சிறப்பான ஒரு யாகம் நடைபெறும். அதற்கும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். முடிந்தவரை உங்களின் வீட்டை சுத்தம் செய்து ஆடிவெள்ளிக்கு என்று விஷேச பூஜைகளை செய்யுங்கள்.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று முன்னோர்களுக்கு விஷேசமாக படையல் இட்டு சாமி கும்பிடுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முடியாதவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையை மட்டும் தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 18, 2019

தீர்வுகள் பகுதி 5


வணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் தோஷங்கள் இருந்து அந்த ஜாதகர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவர் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுகின்றார்களா என்று பார்க்கவேண்டும் அப்படி இல்லை என்றால் ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு அவர் முன்னேற்றம் காண ஆரம்பித்தால் அந்த தோஷத்தால் அவர் விழித்துக் கொண்டு விட்டார் என்று அர்த்தம்.

முப்பந்தைந்து வயது வரை கஷ்டப்படலாம் கொஞ்சம் அதிகமானால் நாற்பது வயது வரை கஷ்டப்படலாம் இது ஒரு சாதாரணமான விசயமாக எடுத்துக்கொள்ளலாம். நாற்பது வயதிற்க்கு மேல் அவர் முன்னேற்றம் காண ஆரம்பித்துவிட்டால் அவர் மேலே ஏறிக்கொண்டே செல்வார்.

நாற்பது வயதிற்க்கும் மேலும் கஷ்டப்பட்டால் அது பெரிய தோஷமாகவே இருக்கின்றது என்று தான் பொருள் கொள்ளவேண்டும். அவர் நிறைய விடை தேட ஆரம்பிக்கவேண்டும். அவரை இதற்கு விடை காண செல்லவேண்டும்.

முப்பது வயது வரை பாருங்கள் அவர் ஒன்றும் வளர்ச்சியை நோக்கி செல்லவில்லை என்றால் அவரை உடனே திருமணம் செய்துக்கொள்ளலாம். ஏன் என்றால் ஒரு சிலருக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால் திருமணம் செய்து வைத்தால் அவர்க்கு ஒரு வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும்.

எதுவுமே நடக்காமல் இருப்பதற்க்கு திருமணத்தை நடத்தி வைத்தாலும் வருகின்றவர்களின் ஜாதகத்தால் அவரின் வாழ்க்கையில் மாறுதல் நடைபெறலாம் அல்லவா. நிச்சயமாக மாறுதல் என்பது நடக்கும்.

திருமணம் நடத்திய பிறகு பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள் நன்றாக வாழ்க்கின்றனர். அவர்களின் துணையின் ஜாதகத்தால் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 17, 2019

நன்றி கடன்


வணக்கம்!
          ஏதோ ஒரு முன்ஜென்மத்தில் குருவிற்க்கு நான் ஏதோ ஒரு தீங்கு இழைத்து இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நேற்று காலையில் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றது உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து அவர் சரியான பிறகு மதியம் வந்து தான் உங்களுக்கு பதிவை தந்தேன்.

குரு பூர்ணிமா அன்று நமக்கு ஒரு சிக்கல் வருகின்றது என்றால் அது முன்ஜென்மத்தில் ஏதோ ஒரு குருவிற்க்கு நாம் தீங்கு இழைத்திருக்கின்றோம் என்று அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொண்டேன்.

நமக்கு நடக்கும் திடீர் தீங்குகள் அனைத்தும் நம்முடைய முன்ஜென்மத்தில் நடந்த ஒன்றாகவே இருக்கும் என்பது கணிப்பு. நேற்று நிறைய நண்பர்கள் போன் செய்துக்கொண்டே இருந்தனர். மாலை வேளையில் பச்சைப்பரப்புதல் செய்வதற்க்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தேன். காலையில் பரபரப்போடு இருந்த நான் மதியத்திற்க்கு பிறகு தான் குரு பூர்ணிமாவிற்க்காக விஷேச பச்சைப்பரப்புதலை செய்தேன்.

நன்றி கடனை மட்டும் நாம் வைத்துவிடகூடாது அது என்றைக்கும் நமக்கு திருப்பி தாக்கும் என்று இந்த உலகம் எனக்கு நேற்று புரிய வைத்தது. முன்ஜென்மத்தில் நான் செய்த வேலைக்கு இந்த ஜென்மத்தில் எனக்கு தண்டனை வருகின்றது என்றால் இந்த ஜென்மத்தில் நாம் நன்றியை மறக்காமல் இருக்கவேண்டும்.

நமது சூழ்நிலை நமக்கு ஒரு கருத்தை கொடுத்தவர்களோடு தொடர்பு இல்லாமல் செய்யலாம் ஆனால் நாம் அதனை புரிந்துக்கொண்டு அவர்களை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு நன்றியை தெரிவித்தால் கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்.

நேற்று பெளர்ணமி நிலவை பார்த்துக்கொண்டு எனக்கு ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு கலையும் கற்றுக்கொடுத்த அனைத்து குருமார்களுக்கும் என்னுடைய நன்றியை மானசீகமாக தெரிவித்தேன். நிலவு தான் இதற்கு சாட்சி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 16, 2019

நன்றி தெரிவிக்கும் நாள்


வணக்கம்!
          இன்றைய நாளை முழுவதுமாக மறந்துவிடுவார்கள். கலியுகத்தில் நன்றி தெரிவிப்பது என்பதை எல்லாம் மறந்துவிடுவார்கள் அல்லவா. வருடந்தோறும் இதனை சொன்னாலும் அனைவரும் மறந்துவிடுவார்கள்.

பொதுவாக நம்மிடம் எப்படிப்பட்ட குணம் இருந்தாலும் சரி எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் சரி நன்றியுணர்வை மட்டும் நாம் காட்டிவிட்டால் போதும் கண்டிப்பாக உயர்ந்து விளங்கலாம். எனக்கு நீங்களும் ஏதோ விதத்தில் ஒரு குருவாக இருந்து இருக்கலாம். கற்றுக்கொள்வதற்க்கு ஒரு வழியை தேடி கொடுத்தாலும் அவர்களும் குருவே. உங்களுக்கு எல்லாம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு எந்த ஒரு கலையும் மற்றும் ஒரு விசயத்தையும் கற்றுக்கொடுத்த அனைவருக்கும் உங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி வையுங்கள் அவர்களை தொடர்புக்கொண்டு நன்றியை தெரிவியுங்கள்.

எனக்கு ஆன்மீகம் கற்றுக்கொடுத்த குருவிற்க்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் எனக்கு கற்றுக்கொடுத்த அனைத்து குருவிற்க்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். அனைவரையும் நான் தொடர்புக்கொண்டு பேசிவிட்டேன். நீங்களும் இதனை செய்யலாமே.

                                               இன்றைய நாள் குரு பூர்ணிமா.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பிறரின் ஆலோசனை


வணக்கம்!
          நம்மிடம் ஒரு குணம் இருக்கும் என்ன என்றால் நாம் நடந்துக்கொண்டு இருப்பது மிகச்சரியாக தான் நடந்துக்கொண்டு இருக்கிறோம். நாம் செய்வது மிக சரியாக செய்துக்கொண்டு இருக்கிறோம் என்ற ஒரு நினைப்பில் நடந்துக்கொண்டு இருப்போம்.

ஊரில் மிக விபரமாக நடந்துக்கொண்டு மிக பெரியளவில் வந்தவர்களும் இருப்பார்கள். அவர்கள் செய்தது எப்படி மிகச்சரியாக வந்துவிட்டார்கள் என்று நாம் பார்க்கும்பொழுது தான் நமக்கு இவ்வளவு தான் தெரிந்து இருக்கின்றது என்று தோன்றும்.

இந்த உலகத்தில் தெரியாமல் இருப்பவர்கள் தான் நிறைய சாதிப்பவர்கள் எப்படி என்றால் அவர்கள் அடுத்தவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பதால் அவர்கள் சாதிப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பிறரிடம் நன்றாக கேட்டு தெரிந்துக்கொண்டு அவர்களுடைய அறிவை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.

உங்களிடம் சொல்லுவது நமக்கு தான் எல்லாம் தெரியுமே நம்மிடம் தான் எல்லாம் இருக்கின்றதோ நம்மை மிஞ்சுவதற்க்கு ஆள் இல்லை என்ற ஒரு நினைப்பு இருக்ககூடாது. என்னடா சொல்ல வர்றார் என்று கேட்கலாம் முடிந்தவரை அறிவை பிறர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டே இருங்கள்.

உங்களின் வளர்ச்சி மிகச்சரியாக இருக்கின்றதா அல்லது நீங்கள் செய்துக்கொண்டு இருப்பது நல்லதா என்று கேட்டுக்கொண்டு செயல்படுங்கள். பல நேரங்களில் இது உங்களுக்கு நன்றாக கை கொடுக்கும். நாம் செய்தது மற்றும் செய்துக்கொண்டு இருப்பது மிகச்சரியான ஒன்று என்று வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர் அதனால் நீங்கள் இந்த விசயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்பட்டுக்கொண்டு இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 15, 2019

தீர்வுகள் பகுதி 4


வணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் லக்கனம் என்பது மிக முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். லக்கனத்தில் பாவக்கிரகங்கள் இருந்தால் மிக மிக கடினம் என்பது உங்களுக்கு தெரியும் அதாவது வாழ்க்கை நிறைய போராட்டங்களை உங்களுக்கு கொடுக்கபோகின்றது என்று அர்த்தம்.

லக்கனாதிபதி நன்றாக இருந்தால் பெரும்பாலும் போராட்டம் குறைந்து நல்ல வாழ்க்கையை கொடுக்கும். லக்கனாதிபதி மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றால் அது கடுமையாகவே இருக்கும் என்று சொல்லலாம். மறைவுக்கு செல்லும்பொழுது லக்கனாதிபதியால் சரியாக செயல்படமுடியாது.

உங்களின் லக்கனத்தில் புதன் மற்றும் குரு இருந்தால் உங்களின் தோஷம் எல்லாம் குறைந்துவிடும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு கிரகமும் உங்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷத்தையும் போக்கும் தன்மையில் இருக்கும் என்று சொல்லுவார்கள்.

லக்கனத்தில் பாவ கிரகங்கள் இருக்கின்றது இதற்கு தீர்வு என்ன என்று கேட்கலாம். பெரும்பாலும் எல்லா விசயத்திலும் நீங்கள் முன்னாடி சென்று நிற்ககூடாது. புதன் கிரகம் லக்கனத்தில் இருந்தால் தோஷம் இருக்காது என்கின்றார்கள் அல்லவா. மாமனை குறிக்கும் கிரகம் புதன். உங்களின் தாய்மாமன் அதன்பிறகு உங்களின் துணையின் தந்தை இவர்களை வைத்து நீங்கள் எல்லா காரியமும் செய்யலாம்.

குரு கிரகம் என்பதையும் சொல்லியுள்ளார்கள். ஒரு ஆன்மீக குருவின் துணைக்கொண்டு நீங்கள் அனைத்து தோஷத்தையும் போக்கிக்கொள்ள முடியும் என்பதால் ஒரு ஆன்மீக குருவின் சொல்படி நடந்துக்கொள்ளுங்கள்.கண்டிப்பாக மேலே சொன்னது இரண்டு பேரும் மனிதர்கள் இவர்களிடம் நடந்துக்கொள்வது என்பது உங்களின் புண்ணியத்தில் தான் இருக்கின்றது. நாம் மனிதர்களோடு இணக்கமாக வாழ்வது சிக்கலை ஏற்படுத்தும் என்பது கலியுக விதி. 

இவர்களின் சொல்பேச்சை கேட்டு நீங்கள் நடந்துக்கொள்ளலாம் அல்லது வழிபாட்டு முறை என்று வந்தால் இரண்டு கிரகத்திற்க்குரிய தேவதை என்று கொடுத்து இருப்பார்கள் அவர்களை நீங்கள் வணங்கினாலும் ஒரளவுக்கு சரியாகிவிடும்.

உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்கும் இரண்டு விதிகளை சொல்லிருக்கிறேன். சோதிடவிதியும் இது தான் லக்கனத்தில் புதன் குரு இருந்தால் தோஷம் அடிப்படும் என்பது இதனை கொஞ்சம் அனுபவத்தில் கலந்து சொல்லிருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாரிசுகள் வாழ்க்கை சிறக்க என்ன செய்யவேண்டும்?


ணக்கம்!
          உங்களின் வாரிசுகள் நன்றாக வாழவேண்டும் என்றால் நீங்கள் ஒரு சந்நியாசி போல வாழ கற்றுக்கொள்ளவேண்டும். உங்களின் அருகில் நன்றாக தற்பொழுது இருப்பவர்களை கவனித்து பாருங்கள் அவர்களின் தந்தை ஒரு சந்நியாசி போல இருப்பார்கள்.

சந்நியாசி போல் வாழ்ந்தால் வாரிசு வாழ்க்கையில் ஏதோ ஒன்று நன்றாக கொடுக்க ஆரம்பிக்கின்றது என்பதை பலரின் வாழ்க்கையில் பார்த்து இருக்கிறேன். வாரிசுகள் நன்றாக இருப்பதற்க்காக சந்நியாசி போல செல்லவேண்டுமா என்று கேட்கலாம். வாரிசுகள் நன்றாக இருப்பதற்க்காக தான் உங்களின் வாழ்க்கை இருக்கும் என்பதால் இதனை செய்யவேண்டும்.

சந்நியாசி போல எப்படி இருப்பது என்பதில் கேள்விகள் வரும் அல்லவா. பெரும்பாலும் ஆடம்பரத்தை விரும்பாதீர்கள். ஆடம்பரம் தேவைப்படும் இடத்தில் மட்டும் செய்யுங்கள். ஆடம்பரத்தால் உங்களின் வியாபாரம் நடக்கும் என்றால் அந்த இடத்தில் செய்யலாம். மற்ற இடத்தில் சந்நியாசி போல இருத்தல் நலம்.

பெரும்பாலும் கோவிலை நோக்கி உங்களின் பயணம் இருக்கவேண்டும். கொஞ்ச நேரம் உங்களுக்கு ஒய்வாக இருந்தாலும் அந்த ஒய்வு நேரத்தில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வந்துவிடவேண்டும். கோவிலுக்குள் உள்ளே செல்லமுடியாவிட்டாலும் வெளியில் இருந்து கும்பிட்டுவிட்டு வரவும்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்துக்கொண்டு வாருங்கள். கோவில் மற்றும் புண்ணியநதிகளை விட ஆன்மீகத்தில் இருப்பவர்களோடு தொடர்பில் இருக்கும்பொழுது அவர்களின் வழிகாட்டுதல் சிறந்ததாக இருக்கும். இதனை கடைபிடித்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 14, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!                 
     இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்            
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 13, 2019

தீர்வுகள் பகுதி 3


வணக்கம்!
          நட்சத்திரத்தைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிருந்தேன். கொஞ்சம் வேலை காரணமாக அதனைப்பற்றி எழுதமுடியவில்லை விரைவில் அதனைப்பற்றி எழுதுகிறேன். முதலில் நீங்கள் உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் தீர்வு காண்பதற்க்கு உங்களுக்கு உடலில் நல்ல சக்தி வேண்டும்.

உங்களின் உடல் நல்ல வலுவாக இருப்பது போல பார்த்துக்கொள்ளவேண்டும். உங்களின் உடலில் வலு இல்லை என்றால் நீங்கள் உங்களை காப்பாற்றிக்கொள்வதே மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும். மிகுந்த சோர்வாக இருந்தால் உங்களை தூக்கம் தான் ஆக்கிரமித்துக்கொள்ளும்.

உங்களின் உடலில் நல்ல சக்தி இல்லை என்றால் உங்களால் சோர்வாகவே மட்டுமே இருக்கமுடியுமே தவிர உங்களின் மூளை வேலை செய்யாமல் போய்விடும். மூளை நன்றாக வேலை செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு நன்றாக சிந்திக்க முடியும். நீங்கள் சோர்வாக இருந்தால் இருக்கவேண்டிய அனைத்து பீடையும் உங்களை நாடி வந்துவிடும்.

உங்களின் உடலுக்கு எந்த உணவு நல்ல சக்தி கிடைக்கின்றது என்பதை பார்த்து அதனை நன்றாக சாப்பிட்டு உங்களின் உடலை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். இதனை நீங்கள் பராமரித்து வந்தாலே உங்களால் எளிதில் அனைத்து பிரச்சினைக்கு வழி காணமுடியும்.

என்ன உடம்பை வளர்க்க சொல்லுகின்றார் என்று நினைக்கவேண்டாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்ற பழமொழியை மனதில் கொள்ளவேண்டும். உடலில் வலுவை வளர்த்துக்கொண்டால் உங்களால் கடைசி வரை போராடமுடியும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 12, 2019

செல்வவளம்


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை அன்று வாரந்தோறும் ஒரு மூலிகை எண்ணெய்யை வைத்து மதிய நேரத்தில் குளித்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிருந்தேன். சுக்கிரனின் அருள் கிடைத்து அனைத்து செல்வவளங்களும் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும் என்று சொல்லிருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளை ஆடைகளை உடுத்திக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். வெள்ளிக்கிழமை தோறும் வீடுகளை சுத்தமாக வைத்து அதன்பிறகு பூஜையை தொடங்குங்கள் என்றும் சொல்லிருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை தோறும் தேனும் நெல்லிக்காயும் சேர்ந்த கலவையை வைத்து படைக்கவேண்டும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை வைத்து சாமிக்கு படைக்கவேண்டும். படைத்தவற்றை எடுத்து வைத்துக்கொள்ளலாம் மீண்டும் அடுத்த வாரம் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு சிலர் அதனை சாப்பிடுவதும் உண்டு. உங்களுக்கு வாரந்தோறும் அதனை புதியதாக வாங்கி படைக்கவேண்டும் என்பதில்லை அதனையே வைத்துக்கொண்டு படைக்கலாம். தேனும் நெல்லிக்காயும் வைத்து நைவேத்தியமாக நாம் படைக்கும்பொழுது செல்வவளம் சேர்ந்துக்கொண்டே இருக்கும்.

தேனில் நன்றாக நெல்லிகாய் ஊறியதாக பார்த்து நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே நீங்கள் இதனை செய்துக்கொள்ளலாம். தேன் மட்டும் வைத்துக்கூட ஒரு சிலர் நைவேத்தியமாக பயன்படுத்துவார்கள். நீங்கள் இரண்டையும் வைத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 10, 2019

நல்ல வார்த்தை


வணக்கம்!
          ஒருவரின் வார்த்தைகள் அவரை உயர்த்தும். ஒருவரின் வார்த்தையை பிரயோகப்படுத்தும்பொழுது அது எதிர்மறையான ஒரு எண்ணத்தை வரவழைப்பது போலவே வார்த்தைகள் இருக்ககூடாது. வார்த்தைகள் நன்றாக இருக்கவேண்டும்.

எங்களுக்கே வருகின்றோம் நாங்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தால் உடனே உங்களுக்கு பிரச்சினை வரப்போகின்றது தோஷம் இருக்கின்றது அங்கு பிரச்சினை இதில் பிரச்சினை என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.

பிரச்சினை என்று நாங்கள் சொல்லுவதால் அது பிரச்சினையாகவே உங்களுக்கு முடிந்துவிடும். முக்கால்வாசி சோதிடர்கள் பீடை பிடித்தவர்களாகவே இருப்பதற்க்கு காரணமாக இருப்பது அவர்கள் பிறரின் கர்மாவை பார்த்த காரணத்தால் வருவதில்லை அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால் வந்தது. 

நமது ஜாதகத்தால் வந்த கர்மாவிட நமது வார்த்தைகள் பயன்படுத்துவதால் வந்த கர்மா தான் அதிகமாக இருக்கும். எந்த நேரமும் தவறான வார்த்தைகள் பயன்படுத்தவதால் வந்த கர்மா அதிகமாக நமக்குள் இருக்கும்.

நீங்கள் பேசும்பொழுது முடிந்தவரை எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள். உடனே உங்களுக்கு பலன் தரவில்லை என்றாலும் போக போக சரியாகிவிடும். நல்ல வார்த்தைகள் நல்ல வாழ்க்கையை உருவாக்கும் என்பதை போக போக தெரிந்துக்கொள்வீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 8, 2019

ஆடி மாத சிறப்பு பூஜை


வணக்கம்!
          அம்மன் கோவிலுக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வந்து இறக்கிக்கொண்டு இருக்கிறேன். அதனை அனைவருக்கும் வாட்ஸ்அப்பில் புகைபடம் எடுத்து அனுப்பியிருக்கிறேன். அனைவரும் இந்த பணியில் பங்குக்கொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் அனைத்து மூலப்பொருட்களையும் இறக்கிக்கொண்டு வேலையை ஆரம்பிக்கவேண்டும் என்பதால் அனைவரும் இதில் தங்களின் பங்களிப்பை அளியுங்கள்.

உங்களின் நட்சத்திரம் என்ன என்பதை பார்த்து தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் உங்களின் செயல்பாடுகளை வைத்துக்கொள்ளவேண்டும். பெயரை கூட உங்களின் நட்சத்திரத்திற்க்கு தகுந்தார் போல வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவார்கள்.

நட்சத்திரத்திற்க்கு தகுந்தமாதிரி பெயரை வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அந்த நட்சத்திரன் தன்மையில் எப்படி இருக்கவேண்டும் அதன் குணம் என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்தார் போல் வைத்துக்கொள்ளுங்கள்.

இத்தனை வருடம் உங்களின் பெயரை தாங்கி வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் இதன்பிறகு மாற்றிக்கொள்ளவேண்டாம். நட்சத்திரத்திற்க்குரிய குணங்களை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் உள்ளவர்களும் எப்படி தன்னை மாற்றிக்கொள்ளலாம் என்பதை இனிவரும் பதிவில் சுருக்கமாக தருகிறேன். அதனை வைத்து உங்களின் குணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஆடி மாதம் அம்மன் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் எல்லாம் நடைபெறுகின்றன. இதில் பலர் தங்களின் குடும்பங்களுக்காக தனியாக செய்கின்றீர்கள். தங்களுக்கும் விருப்பும் இருந்தால் என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். பாதி நாட்கள் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது என்பதால் முன்கூட்டியே இதற்கு தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 5, 2019

தீர்வுகள் பகுதி 2


வணக்கம்!
          உங்களின் இராசிக்கு எந்த இராசி நல்லது செய்யும் எந்த இராசி கெடுதல் செய்யும் என்பதை நன்கு அறிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் உங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை அமைத்துக்கொள்ளுங்கள் என்பது அவர்களிடம் கொஞ்சம் உஷாராக இருந்து வாழ்க்கையை செலுத்துங்கள் என்று சொல்லுகிறேன்.

நம்முடைய இராசிக்கு எட்டாவது இராசியாக ஒரு இராசி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் இந்த எட்டாவது இராசியோடு நீங்கள் என்ன தான் பழகினாலும் அந்த இராசியினர் உங்களை எதாவது ஒரு இடைஞ்சலை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

உங்களின் இராசிக்கு ஆறாவது இராசியாக வருகின்றவர் உங்களை எதிர்த்துக்கொண்டே இருப்பார். உங்களிடம் சண்டை சச்சரவு போட்டுக்கொண்டே இருப்பவர்கள் உங்களின் இராசிக்கு ஆறாவது இராசியாக வரும் நபர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் எதிர்த்துக்கொண்டே இருப்பார்களா என்று நினைக்கலாம். பெரும்பாலும் நமக்கு நல்ல நேரம் சரியில்லை என்றால் அல்லது நமக்கு கெடுதல் தசா நடக்கின்றது என்றால் அவர்கள் எதிர்ப்பார்கள்.நல்ல நேரம் நடக்கும்பொழுது இவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று சாெல்லலாம்.

பெரும்பாலும் உங்களுக்கு நல்ல இராசியாக ஒத்துக்கொள்ளும் இராசியாக வரும் நபர்களிடம் அதிக தொடர்பு வைத்துக்கொள்ளும்பொழுது உங்களின் வாழ்க்கை நன்றாக செல்லும். நம்பிக்கை உடையவர்களை தேர்ந்தெடுக்க இந்த மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 


Thursday, July 4, 2019

தீர்வுகள் பகுதி 1


வணக்கம்!
         ஒருவருக்கு ஒரு பிரச்சினை வருகின்றது என்றால் அந்த நேரத்தில் அவர்கள் முதலில் செய்யவேண்டியவை என்ன என்று பார்க்கலாம். ஒரு பெரிய சிக்கல் வரும்பொழுது அதில் இருந்து மீள்வது எப்படி என்பதை யோசிப்பதை விட அதில் இருந்து தற்காத்துக்கொள்வது என்பதை தான் யோசிக்கவேண்டும்.

பெரிய அடியாக வரும்பொழுது அதனை எதிர்த்து நிற்பது கடினம் ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு உங்களின் இராசிநாதனுக்கு ஒரு தீபம் ஏற்றி ஒரு அர்ச்சனை செய்துவிடவேண்டும். இப்படி செய்தால் வருகின்ற பிரச்சினையின் தீவிரம் குறைந்துவிடும். 

அதிவேகமாக உங்களை தாக்கவரும் பிரச்சினை குறைந்த வேகத்தோடு உங்களை தாக்கும். தாக்குபிடிக்கும் சக்தி உங்களுக்கு கிடைத்துவிடும். அதே நேரத்தில் உங்களின் இஷ்ட தெய்வம் நன்றாக இருந்தாலும் அதுவும் உங்களை காக்கும்.

பிரச்சினை வந்துவிட்டது அதில் இருந்து உடனே மீண்டுவிடவேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்றாகவே இருக்கும். பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்க்கு என்று ஒரு சில காலம் இருக்கும் அது வரை பொறுமையை கடைபிடிக்கவேண்டும்.

எனக்கு பிரச்சினை வந்துந்து மீண்டு அடுத்த நகர்வுக்கு சென்றுவிடவேண்டும் என்று நினைப்பது மனிதன இயல்பு தான் ஆனால் கிரகங்கள் உடனே நகர்வது இல்லை அதற்குரிய காலத்தை எடுத்துக்கொள்கின்றது அல்லவா. அதுவரை பொறுமையாக நகர்த்த வேண்டும்.

கிரகத்தின் வேகம் குறையவேண்டும் அப்பொழுது தான் நாம் அடுத்து எடுத்து வைக்கும் அடி மிகச்சரியாக நல்லதாக நமக்கு அமையும். எளிமையாகவும் நமக்கு இருக்கும். எந்த வித தடங்கலும் இல்லாமல் காரியத்தை சாதிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 3, 2019

தீர்வுகள்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் எந்த நிலையில் கிரகங்கள் இருந்தாலும் அதாவது மோசமான பலனை தரக்கூடிய நிலையில் கிரகங்கள் இருக்கும்பொழுதும் உங்களின் சாமர்த்தியமான திறமையால் அதனை வென்று சென்றுவிடமுடியும்.

கிரகங்கள் தான் நம்மை ஆட்டி படைக்கின்றது இதில் இருந்து எப்படி திறமையாக செயல்படமுடியும் என்று கேட்கலாம். கண்டிப்பாக பொறுமையாக இருந்து அதோடு திறமையாக இருந்தால் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

பரிகாரம் என்பதை மட்டும் செய்துக்கொண்டு தான் இதனை கடக்கவேண்டும் என்பதில்லை. நாம் நிறைய வழிபாட்டு தலங்கள் மற்றும் புண்ணியதீர்த்தங்களில் சென்றாலே அதற்கான வழிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

நம்மிடம் கிடைக்கும் காெஞ்ச பணத்தையாவது சேமித்து வைத்துக்கொண்டு அதனை வைத்து உங்களால் முடிந்த கோவிலுக்கு சென்று வந்தாலே போதுமானதாகவே இருக்கும். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வழி இல்லை என்றாலும் நீங்கள் மட்டும் சென்று வந்தாலே போதுமானதாகவே இருக்கும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதில் உள்ள கிரகங்களுக்கு தகுந்த மாதிரியாக உங்களின் வாழ்க்கை மற்றும் உங்களின் நடத்தையும் மாற்றிக்கொண்டு வாழலாம். ஜாதகத்தில் உள்ள பல விசயங்களை நீங்களே அலசி ஆராய்ந்து வழிபட்டுக்கொள்ளலாம். அதனைப்பற்றி இனி பதிவுகளில் கொஞ்சம் தருகிறேன். அதுவே பல வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 2, 2019

சோகத்தை தரும் பூ செடிகள்

ணக்கம்!
          வீட்டில் பூ செடிகளை வளர்ப்பது நல்லது என்று சொல்லுவோம் ஆனால் பூ செடிகளை வளர்த்தால் அந்த வீட்டில் ஒரு வித சோகம் நிலவும் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பூ செடிகளை வளர்க்க வேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்தும்.

பூ செடிகள் வளர்த்தால் வீட்டிற்க்கு சோகத்தை கொடுத்து அந்த சோகத்தில் இருந்து விடுபட அந்த பூக்களை பார்ப்பது போன்று ஒரு நிலையை ஏற்படுத்திவிடும். பல வீடுகளில் இதனை நான் பார்த்து இருக்கிறேன்.

பூ செடிகள் வளர்ப்பது அந்த வீட்டில் வறுமையையும் கொடுக்கின்றது. பூ செடிகளை வளர்த்து நீங்களே ஏன் வறுமையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பூ செடிகளை வளர்க்காமல் இருப்பதே நல்லது. பெரிய பணக்கார வீடுகளில் எல்லாம் பூ செடிகளை வளர்க்கின்றார்களே என்று கேட்கலாம். பெரிய பணக்கார வீடுகளிலும் சோகம் நிறைய இருக்கின்றது வெளியில் தெரியாமல் இருக்கின்றன.

பூ உங்களின் வீட்டிற்க்கு தேவைப்படுகின்றது என்றால் அதனை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது உங்களின் வீடுகளுக்கு அருகைமையில் இல்லாமல் வெளியில் உள்ள தோட்டங்களில் பூ செடிகளை வளர்த்துக்கொள்ளலாம்.

கோவில்களில் நந்தவனம் என்று தனியாக வைத்திருப்பார்கள். நந்தவனத்தில் இருந்து தான் கோவில்களுக்கு தேவையான பூக்கள் பறிக்க வேண்டும். இன்றைய காலத்தில் இதனை எல்லாம் அந்தளவுக்கு யாரும் பராமரிப்பது இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          நல்ல நிறைவாக பழனி பயணம் அமைந்தது. அனைவருக்கும் சார்பாகவும் வேண்டுதல் வைத்து நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்ற பிராத்தனையும் வைத்தேன். நீங்களும் நன்றாகவே இருப்பீர்கள்.

நாளை அமாவாசை சிறப்பு அம்மன் யாகம் நடைபெறும். உங்களின் வேண்டுதல்கள் என்னுடைய வாட்ஸ்அப்பில் அனுப்பி வையுங்கள். தங்களுக்காகவும் பிராத்தனை செய்யப்ப்படும். தங்களின் வேண்டுதல்களை உடனே அனுப்பி வைக்கவும்.

இரவு நேரத்தில் அம்மன் யாகம் நடைபெறும். அம்மனுக்கு அமாவாசை என்பது மிகச்சிறப்பான ஒரு நாளாக இருப்பதால் அனைவரும் இதில் வேண்டுதல்களை வைக்கலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை. அம்மன்பூஜைக்கு அனுப்பிய பணத்திலேயே இதனை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.

ஆடி மாதம் நெருங்கி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் சிறப்பான ஒரு நிகழ்வாகவே செய்துக்கொண்டு இருப்பேன். அம்மனுக்குரிய மாதம் என்று இதனை செய்வது உண்டு. இந்த வருடமும் ஆடி மாதத்தில் நிறைய பூஜைகள் செய்யபட இருக்கின்றன.

ஆடி மாதத்திற்க்குரிய பூஜைகள் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. நீங்களும் விருப்பட்டால் இதனை செய்துக்கொள்ளலாம். உடனே தொடர்புக்கொண்டு புக்கிங் செய்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு