Followers

Monday, July 31, 2017

செல்வவளம்


வணக்கம்!
          அதிக விலை உடைகளை உடுத்துவதில் அதிக விருப்பம் எனக்கு இருக்காது. அதிக விலைக்கொடுத்து உடையை வாங்கி அதனை அணிவது கிடையாது. சாதாரணமான உடைகளை வாங்கி அதனை அணிவேன். 

விலையுர்ந்த ஆடைகளை நமது நண்பர்களிடம் எப்பொழுதாவது எடுத்துக்கொடுங்கள் என்பேன். அதற்கு காரணம் அவர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதற்க்காக இதனை கேட்பது உண்டு. இது எப்பொழுதாவது தான் கேட்பேன்.

தற்பொழுது ஆடி மாதம் நடைபெறுகிறது அல்லவா. துணிகளை குறைந்த விலைக்கு தருகிறேன் என்று ஜவுளிகடை விளம்பரம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்களால் முடிந்த துணிகளை அவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.

பெண்களுக்கு புடவை அல்லது அவர்கள் விரும்பும் ஆடைகளை வாங்கிக்கொடுங்கள். தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களை அழைத்தக்கொண்டு அவர்களுக்கு பிடித்த துணிகளை வாங்கிக்கொடுங்கள்.

ஆடை தானம் என்பது மிக உயர்ந்த ஒன்று. இதனை அடிக்கடி செய்யமுடியாவிட்டாலும் இப்படிப்பட்ட நேரத்தில் வாங்கிக்கொடுத்துவிட்டால் உங்களுக்கும் நல்லது. துணிகளை அவர்களிடம் கொடுத்தால் நமது பாவம் அவர்களுக்கு சென்றுவிடும் என்று பயப்படதேவையில்லை. பாவம் செல்லவே செல்லாது. 

சுக்கிரனின் முழுமையான ஆற்றல் இந்த செயலில் இருக்கின்றது. இதனை நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு செல்வவளத்தை வாரி வழங்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. உடனே செயல்பட துவங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 29, 2017

புண்ணியத்தால் வரும் மரணம்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானத்தின் தசா நடந்தால் அவர்களுக்கு பல வழிகளிலும் தொந்தரவு என்பது இருந்துக்கொண்டு இருக்கும். ஒரு சிலருக்கு அது மாரகமாகவும் அமைந்துவிடுகிறது. விபத்து வரும் அது எப்படி மாரகம் வரும் என்று நினைக்கதோன்றும்.

விபத்தினால் மரணம் வருவது போல் அமைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு கோமா நிலைக்கு சென்ற பிறகு மரணத்தை அடைவதும் இந்த மறைவு ஸ்தான அதிபதி தசாவில் நடக்கும்.

மரணத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்பதற்க்காக மேலே சொன்ன கருத்தை சொன்னேன். இன்றைய காலத்தில் நிறைய பேர்கள் புண்ணியம் செய்யவேண்டும் என்பதற்க்காக நிறைய புண்ணியம் செய்யவேண்டும் என்று செய்கிறார்கள்.

புண்ணியம் செய்யவேண்டியது தான் அது அதிகமாக செய்தால் அதற்கு தகுந்தார்போல் உடனே மரணத்தை கொடுத்துவிடும். நிறைய புண்ணியம் செய்தான் இளம்வயதில் மரணம் அடைந்துவிட்டான் என்பார்கள்.

புண்ணியம் செய்தாலும் அவ்வப்பொழுது அதற்கு தகுந்தார்போல் கர்மாவையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். கொஞ்சம் கர்மாவையும் வைத்துக்கொண்டு இருந்தால் வாழ்நாளை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 28, 2017

கோச்சாரபடி கடன்

ணக்கம்!
          கடன் ஏற்படுவதற்க்கு கோச்சாரப்படி செல்லும் கிரகங்களும் ஒரு காரணமாக இருக்கின்றது. கோச்சாரப்படி ஒரு கிரகம் ஆறாவது வீட்டு அதிபதி அல்லது ஆறாவது வீட்டை கடக்கும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர்க்கு கடனை ஏற்படுத்திவிடும்.

ஆறாவது வீட்டை அல்லது அதிபதியை சந்திரன் கடக்கும்பொழுதும் இது நடந்துவிடுகிறது. மாதம் ஒரு முறை கடன் வாங்கும் நபர்களும் இருக்கதானே செய்கின்றார்கள். ஒரு சிலர் நாள் முழுவதும் கடன் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள். அது பிச்சைக்காரர்களை விட மோசமான கிரகஅமைப்பு இருக்கும்.

கோச்சாரப்படி ஆறாவது வீட்டு அதிபதி தன்னுடைய சொந்ந வீட்டிற்க்கு வரும்பொழுது அது கடனை ஏற்படுத்திவிடும். கடனை ஏற்படுத்தவில்லை இல்லை என்றால் நோயை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

கோச்சாரபடி ஒரு கிரகம் ஆறாவது வீட்டை கடந்துக்கொண்டு தான் இருக்கும் அனைவருக்கும் கடன் ஏற்படுகிறதா என்று கேட்கலாம். ஒரு சிலருக்கு வேறு விதமாக பலனை கொடுக்கலாம். சண்டை சச்சரவை கூட கொடுக்கலாம்.

ஒரு சிலருக்கு ஆறாவது வீட்டை கடக்கும்பொழுது அஜீரணகோளாறு கூட ஏற்படும். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து கணிக்கவேண்டும். கடன் ஏற்படும் நிலையில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் காெஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நானும் கடனும்


ணக்கம்!
          நம்மைப்பற்றியும் சொல்லிவிடவேண்டும் என்று நினைக்கிறேன். கடன் எனக்கும் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது. கடன் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லலாம். வாங்கின்ற கடனை அடைத்துக்கொண்டு இருக்கிறேன். அவ்வப்பொழுது தேவைப்படுகின்ற பணத்தை வாங்கி அதன் பிறகு கொஞ்ச கொஞ்சமாக அடைத்துவிடுவதும் உண்டு.

ஆன்மீகத்தை தொழிலாக செய்கின்றனர் எப்படி கடன் வரும். ஆன்மீகம் என்றாலே பணம் புரளும் ஒரு தொழில் என்று முதல் கண்ணோட்டம் அனைவருக்கும் இருக்கும். பணம் புரளும் இடம் என்பது எனக்கும் நன்றாக தெரியும் அதனை நான் அதிகம் விரும்பாமல் கொஞ்சம் நிதானமாக சென்றுக்கொண்டு இருக்கிறேன். வருகின்ற பணம் அதிகமாக ஆன்மீக காரியங்களுக்கு அதிகமாக செலவு செய்கிறேன்.

அடிப்படையை சரிசெய்வதற்க்கு அதிக பணம் தேவைப்பட்டது அந்த காரியத்திற்க்காக பணத்தை போட்டபொழுது கடன் ஏற்பட்டது. அதனை எல்லாம் சரி செய்துக்கொண்டு வருகிறேன். உங்களுக்கும் இப்படி தான் கடன் வரும். உங்களின் தந்தையார் எதுவும் செய்யாமல் இருந்தால் அதனை சரிசெய்யவதற்க்கு உங்களுக்கு கண்டிப்பாக அதிக பணம் தேவைப்படும் அதற்கு உங்களுக்கு கடன் ஏற்பட்டு இருக்கும்.

நமக்கு என்று பூஜைகள் எல்லாம் செய்வதாலும் கொஞ்சம் இந்த கடன் எல்லாம் நிவர்த்தி செய்யமுடிகிறது. அப்படி இல்லை கண்டிப்பாக நானும் மாட்டிக்கொண்டு தான் இருப்பேன். எதுவும் செய்யமுடியாது. பரிகாரம் நமக்கும் செய்துக்கொள்ளவேண்டும்.

கடன் ஏற்படுவதற்க்கு வாழுகின்ற நாடும் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும். அதாவது நாம் வாழ்வதற்க்கு வீட்டை அரசாங்கம் கொடுத்துவிட்டு அதற்க்கு வசதியாக நாம் பணத்தை கட்ட கொடுத்தால் அதிகப்பட்ச கடனை தவிர்க்கமுடியும். நம்ம நாட்டில் இதனை எதிர்பார்க்கலாமா? வேலை இல்லை என்றாலும் மாத மாதம் பணம் கொடுக்கும் நாடுகள் எல்லாம் இந்த பூமியில் இருக்கின்றனவ அல்லவா அதனால் தான் சொல்லுகிறேன் நாடும் இதற்கு காரணம் என்று சொல்லமுடியும்.

என்னுடைய ஜாதகத்தில் ஆறாவது வீடு சம்பந்தப்படுதா என்று நினைக்கலாம். கண்டிப்பாக அனைவருக்கும் பனிரெண்டு வீடும் சம்பந்தப்படும். எந்த வீடு அதிக வேலையை கொடுக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். என்னுடைய ஜாதகத்தில் கொஞ்சம் ஆறாவது வீட்டிற்க்கு சம்பந்தம் இருப்பதால் இந்த கடன் வருகின்றது. அதனை சரிசெய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

என்னுடைய ஜாதகத்தில் குரு நன்றாக இருக்கின்றது. குலதெய்வ அருளும் இருக்கின்றது அப்படியே ஆறாவது வீட்டை உடனே ஒதுக்கி தள்ளிவிடமுடியாது. ஒன்றை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். பூஜைகள் பரிகாரம் இதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்லுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கடன்


ணக்கம்!
          ஒரு மனிதன் கடன் இல்லாமல் வாழ்வது என்பது இந்த உலகத்தில் சாத்தியமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏதாவது பத்து சதவீதம் பேர் கடன் இல்லாமல் வாழ்ந்தாலே பெரிய விசயம் தான். 

ஒருவரின் ஜாதகத்தில் ஆறாவது வீடு ஒருவருக்கு கடனை கொடுக்கும் வீடாக இருக்கிறது. ஒருவருக்கு ஆறாவது வீடு தசா நடக்காவிட்டாலும் அல்லது அது சம்பந்தபடாவிட்டாலும் கடன் என்பது உங்களுக்கு எப்படியும் வந்துவிடுகிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம் என்றால் ஏதாவது ஒரு ரூபத்தில் ஆறாவது தன்னுடைய வேலையை காண்பித்துவிடுகிறது என்று அர்த்தம்.

கடன் அதிகம் ஏற்படுவதற்க்கு குரு கிரகம் சரியில்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது. ஐந்துக்கு காரகம் வகிக்கும் குரு தனனுடைய பலன் குன்றினால் ஆறாவது வீடு தலை தூக்கிவிடுகிறது. கடனை கொடுத்துவிடுகிறது.

குரு கிரகம் அல்லது உங்களின் குலதெய்வம் சரியில்லை என்றாலும் உங்களுக்கு கடன் வந்துவிடும். பூர்வபுண்ணியத்திற்க்குரிய குலதெய்வம் ஏதோ ஒரு காரணத்தால் தன்னுடைய வேலையை செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு கடன் வந்துவிடும்.

எனக்கு கடனே இல்லை என்று ஒருவரும் சொல்லிவிடமுடியாது. நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் கடனில் சிக்கி தான் இருப்பீர்கள். நல்ல பணம் வைத்திருப்பவர்களுக்கு கூட அவர்கள் லோன் என்று வங்கியில் பணம் வாங்குவார்கள். அதுவும் கடன் தான். ஏதோ ஒரு விதத்தில் கடன் உங்களை சூழ்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 27, 2017

நல்ல விளக்கு


வணக்கம்!
         ஒரு வீட்டிற்க்கு புனிதத்தை அதிகம் சேர்ப்பது அந்த வீட்டில் எரியும் நல்ல விளக்கு தான். நல்ல விளக்கு என்று சொல்லப்படுகின்ற காமாட்ஷி விளக்கு. இதனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று சுத்தம் செய்து அதனை தினமும் பயன்படுத்தவேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள கோவிலுக்கு சென்று நாம் தரிசனம் செய்துவிட்டு நம்முடைய வீட்டிற்க்கு வந்தால் அந்த புண்ணியத்தை எல்லாம் நமக்கு கொடுப்பது இந்த விளக்கு தான். எந்த ஒரு ஆன்மீகவாதியிடமும் இதனை கேட்டால் சொல்லுவார்கள்.

நல்ல விளக்கு வீட்டிற்க்குள் எரியும்பொழுது நமது வீட்டில் உள்ள பின்கதவு திறந்து இருக்ககூடாது என்பார்கள். நமது வீட்டிற்க்கு முன்புறம் ஒரு கதவும் பின்புறம் அதாவது கொல்லைபக்க கதவு என்பார்கள் அல்லவா இது இருக்கும் வீட்டில் பின்புறம் உள்ள கதவு நல்ல விளக்கு எரியும்பொழுது திறந்திருக்ககூடாது.

உங்களின் வீட்டில் நல்ல விளக்கை ஏற்றிவிட்டு பின்புறம் உள்ள கதவு திறந்து இருந்தால் உங்களின் வீட்டிற்க்கு வரும் அனைத்து செல்வவளங்கள் மற்றும் நல்ல விசயங்கள் அனைத்தும் பின்னால் உள்ள கதவால் போய்விடும்.

நல்லவிளக்கை அணைப்பதற்க்கு என்று ஒரு சில விதிகளும் இருக்கின்றது இதனைப்பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் உங்களின் வீட்டில் உங்களின் மனைவி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்பொழுது நல்ல விளக்கை அணைக்ககூடாது இது ஒரு விதி.

நல்லவிளக்கை அணைக்கும்பொழுது மிகுந்த பக்தியோடு மெதுவாக ஒரு பூவைக்கொண்டு அணைக்கலாம். பூ இல்லை என்றால் ஒரு குச்சி அல்லது ஒரு பொருளைக்கொண்டு அணைக்கும்பொழுது எரிந்த திரி உள்ளே உள்ள எண்ணெய்க்குள் சென்றுவிடவேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உங்களின் வீட்டில் அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 26, 2017

பிரம்மமுகூர்த்தம்


வணக்கம்!
         பிரம்மமுகூர்த்த நேரத்தில் எழுந்து செய்யக்கூடிய எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகளும் தோல்வி அடைவதில்லை. அனைத்தும் வெற்றியை தான் தரும். நூற்றுக்கு நூறு சதவீதம் காரியத்தை சாதித்துக்கொடுத்துவிடும்.

இந்த நேரத்தில் சாதாரணமான மனிதர்கள் விழிப்படைய மாட்டார்கள். தூங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதற்க்காக தான் இந்த நேரத்தை தேர்ந்து எடுத்து வைத்தார்களாக என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் பெரும்பான்மையான மக்கள் நல்ல தூங்கிக்கொண்டு இருப்பார்கள்.

குறைந்த மக்கள் வேண்டுதல் வைக்கும்பொழுது அது எளிதில் இந்த பிரபஞ்சத்திற்க்கு சென்றுவிடுகிறது. அந்த நேரத்தில் டிராபிக் இருப்பதில்லை. உடனே அங்கு சென்று நமக்கு வேண்டியது கிடைத்துவிடுகிறது.

சரியாக மூணரை மணிக்கு எழுந்து இதனை செய்யவேண்டும். இந்த நேரத்தில் எழுந்தால் கண்டிப்பாக நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க முடியாது. பகலில் கொஞ்சம் தூங்கவேண்டும் அதன் பிறகு வேலை செய்யலாம். கொஞ்ச நாள்கள் பழக்கிக்கொண்டால் நாள் முழுவதும் விழித்துக்கொண்டு இருக்கலாம்.

எது கெட்டநாள்கள் என்று சொல்லுகிறோமோ அந்த நாளிலில் எளிதில் நாம் வைக்கும் வேண்டுதல் நடந்துவிடும். கெட்டநாள்கள் என்று பெரும்பான்மையான மக்கள் கோவிலுக்கும் செல்லுவதில்லை. சாமியும் கும்பிடுவதில்லை. இதனையும் நாம் பயன்படுத்திக்கொண்டால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காலமாற்றம்


வணக்கம்!
          எங்களின் பகுதியில் வெயில் அடிக்கிறது என்றால் ஒரு சாதாரணமான வெயில் கிடையாது. சூரியன் கீழே இறங்கி வந்தது போல் இருக்கின்றது. வெளியில் தலைகாட்டமுடியாதபடி இருக்கின்றது. 

தண்ணீர் பிரச்சினை என்றால் தெரியாத ஊரில் தண்ணீர் பிரச்சினை வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்திற்க்கு முன்பு என்றே எழுதவேண்டும் தஞ்சாவூரில் இருந்து பஸ்ஸில் ஏறி பட்டுக்கோட்டை கும்பகோணம் மன்னார்குடி இந்த பகுதிக்கு சென்றால் அப்படியே உங்களை குளிர்மை படுத்திவிடும்.

எங்கு பார்த்தாலும் பச்சையாகவே இருக்கும். உங்களின் உடல் மனம் அப்படியே குதுகாலிக்கும். அப்படியே கண்களுக்கு தெரிகின்ற கோவில் உங்களின் ஆத்மாவும் ஆனந்தம் அடையும். மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று நினைப்பீர்கள்.

தற்பொழுது நீங்கள் வந்தால் தஞ்சாவூர் பக்கம் ஏண்டா வந்தோம் என்று தோன்றும். ஒரே பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. எல்லாம் கால மாற்றம். மனிதனும் தவறு செய்கிறான். 

அரசாங்கமும் நிலக்கரி எடுக்கிறேன் மீத்தேன் எடுக்கிறேன் இன்னமும் ஏதோ ஆராய்ச்சி செய்கிறேன் என்று செய்து இருந்த தண்ணீரையும் காலி செய்துவிட்டார்கள். தற்பொழுது எங்களின் பாடு கஷ்டமாக தான் இருக்கின்றது. கடவுளாக பார்த்து செய்தால் தான் உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 25, 2017

முன்ஜென்மமும் இந்த ஜென்மமும்


வணக்கம்!
          பரிகாரம் பெரும்பாலும் முடிவடையும் நிலையில் இருக்கின்றது. நாளோடு பரிகாரம் முடிவடைந்துவிடும். நீண்ட நாள்கள் செய்கின்ற பரிகாரமாக இது அமைந்துவிட்டது காரணம் ஒவ்வொரு ஜாதகமும் அப்படிப்பட்டது. தனி தனியாக செய்யவேண்டியதாக போயிற்று. 

பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகங்களில் ஒரு ஒற்றுமை இருந்தது. இதனைப்பற்றி ஏற்கனவே நான் சொல்லிருந்தாலும் எனக்கு அது கொஞ்சம் வேலையை குறைத்துவிட்டது. அதாவது ஒரு குடும்பத்தினர் ஜாதகம் அனுப்பினால் குறைந்து ஐந்து பேர் ஒரு குடும்பத்தில் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். இந்த ஐந்து பேரில் நான்கு பேரு ஏறத்தாழ ஒரே மாதிரியாக ஜாதகம் அமையும்.

உதாரணமாக உங்களுக்கு பூர்வபுண்ணியத்தில் சனி சம்பந்தப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஐந்தாவது வீட்டில் சனி சம்பந்தப்படுவார். 

மேலே நான் சொன்னது எதனை காட்டுகிறது என்றால் முன்ஜென்மத்திலும் உங்களோடு தற்பொழுது இருப்பவர்கள் தான் முன்ஜென்மத்திலும் உங்களோடு இருந்தவர்கள். இவர்கள் உறவு கொஞ்ச வித்தியாசப்படலாம் ஆனால் கண்டிப்பாக உங்களோடு இருந்தவர்கள்.

நல்லது கெட்டது எது நடந்தாலும் அது குடும்பத்தில் உள்ளவர்களையும் சாரும் என்பதால் உங்களோடு இருப்பவர்கள் நல்லது கெட்டதற்க்கு காரணமாக தற்பொழுதும் இருக்கின்றனர். தோஷமாக இருந்தால் அனைவருக்கும் அதே தோஷம் இருக்கின்றது.

முன்ஜென்மத்தைப்பற்றி ஜாதக கதம்பத்தில் பழைய பதிவுகளில் நீங்கள் தேடிப்பார்த்தால் உங்களுக்கு பல தகவல்கள் கிடைக்கும். வாழ்க்கையில் சுவாராசியமாக இருப்பதற்க்கு இது எல்லாம் பயன்படும் என்பதால் அதனைப்பற்றி சொல்லுகிறேன். தற்பொழுது அனைவரும் சேர்ந்து உங்களின் தோஷத்தை நீக்கிக்கொண்டு நல்ல முறையில் வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு தரும் நஞ்சு


வணக்கம்!
          ஒரு முறை சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வரும்பொழுது சென்னையில் அரசுபேருந்தில் வந்தேன். பகல்வேளையில் வந்தேன். மதிய உணவுக்கு விக்ரவாண்டி என்ற இடத்தில் பேருந்தை நிறுத்தினார்கள். 

மதிய வேளையில் வந்த காரணத்தால் மதிய உணவை சாப்பிடவேண்டும் என்று அந்த உணவுவிடுதியில் சாப்பிட்டேன். அதன்பிறகு பேருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்துவிட்டேன். இது நடந்தது பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று.

அன்று இரவு வாய் எல்லாம் கொப்புளம் வந்துவிட்டது. உணவு உடலுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. உணவு எனக்கு விஷமாக மாறிவிட்டது என்று தெரிந்தது. மறுநாள் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. அப்பொழுது எனக்கு நடந்தது ராகு தசா.

பொதுவாகவே அரசுபேருந்து நிற்க்கும் இடத்தில் எந்த பொருளை வாங்கி சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது என்றாலும் அந்த நேரத்தில் எனக்கு ராகு தசா நடந்த காரணத்தால் அது மேலும் வலு சேர்த்துவிட்டது. ஒரு மாதகாலம் அதில் நான் கஷ்டப்பட்டேன்.

ராகு தசா நடக்கும்பொழுது அல்லது ராகு பலமாக உங்களின் ஜாதகத்தில் அமைந்திருந்தால் சாப்பிடும் உணவில் உங்களுக்கு விஷம் அதிகமாக கலந்துவிடும். அதாவது சாப்பாட்டால் விஷம் வரும். நமது உடலில் நச்சு தன்மையை அதிகம் ராகுவால் தான் வரும்.  

எதார்த்தமாக நேற்று கொல்லை கீரை வீட்டில் வாங்கிவிட்டார்கள். அதனை சமைத்த பிறகு பார்த்தால் அதில் இருந்து பால்டாயில் மருந்து வாசம் வருகின்றது. நன்றாக சுத்தம் செய்து சமைத்து இருக்கின்றார்கள் அப்படியும் அது வந்துவிட்டது. அனைத்து கீரையும் கொட்டிவிட்டோம். 

தற்பொழுது எனக்கு ராகு தசா நடக்கவில்லை எப்பொழுதாவது எதாவது ஒரு விதத்தில் நம்மை இந்த ராகு தாக்க நினைக்கின்றது. கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் வரும் என்பதற்க்காக தான் இதனை சொல்லுகிறேன் எச்சரிக்கையோடு இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 24, 2017

நல்ல இல்லறவாதி


ணக்கம்!
          ஜாதகத்தில் உள்ள பிரச்சினைகளை களைவதற்க்கு நாம் பரிகாரத்தை பரிந்துரை செய்துக்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் உங்களின் உடலின் உணவு தேவைகளையும் சரியாக கொடுத்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். இதில் ஒரு சிலர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டாலும் பலர் இதனைப்பற்றி கேட்கவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லுகிறேன்.

ஒரு பதிவில் உங்களை பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் என்று பதினைந்து பிரச்சினையை சொல்லி அதற்கும் என்னை தொடர்புக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருந்தேன். அதற்கும் குறைந்த பட்ச நபர்கள் மட்டும் தொடர்புக்கொண்டு பேசினார்கள். 

மேலே சொன்ன இரண்டு ஆலோசனை மற்றும் பரிகாரத்திற்க்கு நான் கட்டணம் ஏதும் கேட்கவில்லை. இலவசம் என்று சொல்லி தான் அதனை நான் சொல்லிருந்தேன். பலர் அதனைப்பற்றி கேட்கவில்லை என்று சொல்லலாம்.

தன்னை தயார் செய்வதில் ஒருவர் அதிகம் கவனம் காட்டவேண்டும். தன்னை தயார் செய்வதில் குறை வைத்தால் அவர் தயார் செய்து வைத்திருக்கும் அனைத்தும் அவருக்கு பயன்படாமல் போய்விடும். 

நமது ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைத்து இளைஞர்கள் மேலும் தனிக்கவனம் செலுத்தி அவர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை அந்தளவுக்கு அக்கறை காட்டி வருகிறேன். அவர்களுக்கு எல்லாம் நானே தொடர்புக்கொண்டு இதனை எல்லாம் செய்து வாருங்கள் என்று சொல்லுகிறேன். இவர்கள் எனக்கு ஏதாவது கொடுப்பார்கள் என்பதற்க்காக இதனை செய்யவில்லை. என்னுடைய கடமை அதனை செய்கிறேன்.

ஆன்மீகம் என்றாலே அது சாமியார்களுக்கு தான் என்பது கிடையாது. ஆன்மீகம் இல்லறத்திற்க்குள் இருப்பவர்களுக்கு தான் தேவைப்படும். இல்லறத்தில் ஒருவர் இருந்தால் அவரை நம்பி அந்த குடும்பம் இருக்கும். தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்ற ஆன்மீகம் சொல்லும் அனைத்தையும் பின்பற்றவேண்டும்.

ஏதோ சம்பாதிக்கிறோம் அதனை குடும்பத்திற்க்கு கொடுத்தால் போதும் என்று நினைக்க கூடாது. தன் வாரிசுக்கு சொத்து பணம் எல்லாம் கொடுப்பதை விட ஆராேக்கியத்தையும் ஆன்மீகத்தையும் கொடுப்பவர் தான் நல்ல இல்லறவாதி. எத்தனை பேர் இதனை செய்கின்றீர்கள் என்று தெரியாது இனிமேலாவது இதனை கற்று உங்களின் வாரிசுகளுக்கு கொடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீகமும் பணமும்


ணக்கம்!
          ஆன்மீகத்திற்க்கும் பணத்திற்க்கும் என்ன சம்பந்தம் அதிகமாக நீங்கள் பணம் சம்பாதிப்பதை பற்றி அதிகம் எழுதுகின்றீர்கள் காரணம் என்ன என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார்.

ஒருவர் தன்னிறைவை பெறும்பொழுது மட்டுமே அவர் ஆன்மீகத்தை நோக்கி செல்லமுடியும். ஒருவர் ஞானம் அடையவேண்டும் என்றாலும் அவர் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து அதில் சலிப்பு ஏற்பட்டு அதன் பிறகு ஞானத்தை அடைய செல்லமுடியும்.

கேது ஒருவருக்கு ஞானத்தை கொடுப்பார் என்று சொல்லுவார்கள் உண்மையில் கேதுவால் கொடுக்கமுடியாது என்பது மட்டுமே உண்மை. வறுமையில் இருப்பவனுக்கு பணத்தை கண்டால் அதனை வைத்து வாழ்வதற்க்கு ஆசைபட்டுவிடுவான். அவன் ஆன்மீகத்தை நோக்கி செல்வதிற்க்கு வாய்ப்பு குறைவு.

முதலில் நன்றாக பணத்தை வைத்து வாழ்ந்துவிட்டு அதன் பிறகு ஆன்மீகத்தை நோக்கி செல்லும்பொழுது ஒருவர் எளிதில் அதனை அடைந்துவிடலாம். நான் சொல்லுவது எல்லாம் ஒருவன் தன்னிறைவு பெறுவதற்க்கு வழியை சொல்லுகிறேன் அதன் பிறகு அவனுக்கு அதில் திருப்தி ஏற்பட்டு ஆன்மீகத்தை எளிதில் அடைந்துவிடலாம்.

கேதுவை விட சுக்கிரன் ஞானத்தை வழங்கமுடியும் என்பது தான் அப்பட்டமான ஒரு உண்மை. அரசகுடும்பத்தில் இருந்தவர்கள் தான் அதிகம் ஞானத்தை நோக்கி சென்றார்கள் என்பதும் உண்மை. அவர்கள் நன்றாக வாழ்ந்துவிட்டு அதன் பிறகு இந்த நிலைக்கு எளிதில் வந்துவிடலாம்.

ஒரு மனிதனுக்கு நிறைய பணத்தை கொடுக்கும் வழியை செய்துக்கொண்டு இருக்கிறேன். அதன் பிறகு அவனே இதனை நோக்கி சென்றுவிடுவான். பலர் இதில் முன்னேற்றம் கண்டுவிட்டார்கள். மீதி இருப்பவர்களும் விரைவில் அடைந்துவிடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 23, 2017

அமாவாசை


வணக்கம்!
          பெற்றோர்களுக்கு செய்யவேண்டியதை செய்துவிடவேண்டும். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவிட்டாலும் அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்க்கு வழி செய்துவிடவேண்டும். 

நிறைய பேர்களை நான் கவனித்து இருக்கிறேன். அமாவாசை விரதம் எல்லாம் பிடிப்பார்கள் ஆனால் அவர்களின் பெற்றோர்களுக்கு எதுவும் செய்வதில்லை. பெற்றோர்களுக்கு செய்யாமல் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு அவர்கள் இறந்த பிறகு அமாவாசை விரதம் பிடிப்பது வீணான ஒன்று.

நவீன உலகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மனிதனுக்கு தன்னை வெளிக்காட்டிக்கொள்ள எதையாவது செய்யவேண்டும் என்று இந்த அமாவாசை விரதம் பிடிப்பதும் ஒரு வழக்கமாக இருக்கின்றது. வெளிக்காட்டிக்கொள்வதற்க்கு அமாவாசை விரதம் பிடிக்ககூடாது.

உங்களோடு இருப்பது அதிகப்பட்சம் உங்களின் பெற்றோர்கள் தான் இவர்கள் வழியாக தான் நீங்கள் இங்கு வந்தீர்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டாலும் குறைந்தப்பட்சம் அவர்கள் வாழ்வதற்க்கு வழி செய்துக்கொடுக்கவேண்டும்.

உயிரோடு இருக்கும் வரை நல்லது செய்தோம் அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்காக அமாவாசை விரதம் இருக்கிறோம் என்று நீங்கள் விரதம் இருந்தால் அவர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு அற்புதமாக கிடைக்கும். நீங்கள் தொட்டது எல்லாம் விளங்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 22, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
         உணவைப்பற்றி கேளுங்கள் என்று சொன்னவுடன் உடனே நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டார்கள். என்ன சார் டயட் சொல்லுவீர்களாக என்றார்கள். ஒருவர் நீங்கள் எதாவது புதியதாக டயட் கண்டுபிடித்து இருக்கின்றீர்களா என்று கேட்டார்கள்.

நம்ம வேலை அது கிடையாது. என்ன மாதிரியான சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஒன்பது கிரகமும் நன்றாக வேலை செய்ய என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லுவது மட்டும் தான் நம்ம வேலை. 

நீங்கள் சாப்பிடும் உணவில் ஒரு சில உணவுகளை புதியதாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அதனை பொதுவில கூட சொல்லிவிடலாம் ஒவ்வொருவருக்கும் அது மாறிவரும் என்பதால் அதனை பொதுவில் வைப்பதில்லை.

டயட் என்பது ஒரு காலத்திற்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். எல்லா காலமும் டயட் எடுத்துக்கொண்டே இருந்தால் அது பிரச்சினையை கொடுத்துவிடும். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு தகுந்தமாதிரியான உணவை தான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.

ஒருத்தருக்கு மீன் சாப்பிட்டால் தான் நல்ல சத்தாக இருக்கின்றது என்றால் அவன் மீன் சாப்பிட்டால் தான் அவனுக்கு சத்து கிடைக்கும். ஒருத்தருக்கு பருப்பு சாப்பிட்டால் அவர்க்கு சத்து கிடைக்கிறது என்றால் அவர் பருப்பை தான் சாப்பிடவேண்டும். அந்த மனிதனுக்கு அந்த உணவு சத்து கொடுக்கிறது என்று அர்த்தம்.

ஒவ்வொரு தசாவுக்கும் தகுந்தமாதிரி மனிதர்களின் உணவு பழக்கவழக்கம் இருக்கும் என்பது இத்தனை வருடம் இந்த தொழிலில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவம். கூடுதலாக அனைத்து கிரகமும் நன்றாக இருந்தால் நல்லது நடக்கும் அதற்கு அனைத்து கிரகத்திற்க்கும் உள்ள உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது.

நம்முடைய பெரிய டயட் அறிவுரை எது என்றால் முடிந்தளவு உங்களின் உணவு வீட்டிலேயே இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் நீங்கள் அதனை தயார் செய்துக்கொள்ளுங்கள். அது போதுமான ஒன்று.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

பரிகாரமும் உணவும்


வணக்கம்!
          பரிகாரமும் உணவு முறையும் சரியாக இருக்கவேண்டும். முதன் முதலில் உங்களின் உணவு தான் சரி செய்யப்படவேண்டும். உணவு எல்லோரும் சாப்பிடுகின்றனர் இதில் எதனை சரிசெய்யவேண்டும் என்று கேட்கலாம்.

சாப்பிடும் உணவில் நல்ல சத்துள்ள உணவை நீங்கள் எடுத்துவிட்டால் போதும் அதுவே பல மடங்கு உங்களின் தோஷத்தை நிவர்த்தி செய்யும். அதன் பிறகு நமது பூஜைகளை செய்யும்பொழுது உங்களை முழுமையாக சரிசெய்துவிடும்.

நல்ல சத்துள்ள உணவு எது என்பது உங்களுக்கே தெரியும். அதனை அறிந்துக்கொண்டு சாப்பிடுங்கள். அப்படி இல்லை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நான் பல பதிவுகளில் இதனை வலியுறுத்திக்கிறேன். இதனை மறுபடியும் மறுபடியும் சொல்லுவதற்க்கு இதில் பல காரணமும் இருக்கின்றது. நல்ல சத்துள்ள உணவு கிரகங்களின் தோஷத்தில் இருந்து காப்பாற்றும்.

உணவை நாமே தயாரித்து உண்பது ஒரு தனிக்கலை. உணவை நீங்களே தயாரித்து உண்ணும்பொழுது இன்னமும் தனிக்கவனம் செலுத்தலாம். வீட்டில் உள்ளவர்கள் சமைப்பதை விட உங்களின் தனிப்பட்ட கவனம் இதில் அதிகமாக இருக்கும்பொழுது உடலுக்கு தேவையான சத்து நிறைந்து அதில் வந்துவிடும். தினமும் உங்களால் செய்யமுடியவில்லை என்றாலும் வீட்டில் சும்மா இருக்கும்பொழுது இந்த கலையில் ஈடுபடுங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 20, 2017

எதில் பிரச்சினை?


வணக்கம்!
          பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்பியவர்களில் பலர் சொல்லிருக்கும் கருத்தை பார்த்தால் அவர்கள் சொல்லுவது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்களாக இல்லை. அனைத்தும் டெக்னிக்கலாக பிரச்சினை இருக்கும் கருத்துகளாகவே இருக்கின்றது.

மனிதர்கள் செய்யும் தவறை தூக்கி கடவுள் மேல் போடும் நிலையில் தான் இருக்கின்றனர். கொஞ்சம் சிந்தனை செய்து செயல்பட்டால் போதும் இந்த பிரச்சினை எல்லாம் அவர்களே தீர்த்துக்கொள்ளமுடியும்.  அதனை ஆன்மீகத்திற்க்குள் போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை.

இனிமேலாவது இப்படிப்பட்ட தவறுகள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக பதிவில் சொல்லுகிறேன். என்னிடம் தொழில் சம்பந்தமாக வரும் நபர்கள் கூட இப்படி தான் இருப்பார்கள். அவர்களின் தொழிலில் அவர்கள் செய்யும் தவறுகளை கடவுள் எனக்கு இப்படிப்பட்டதை கொடுத்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

உண்மையில் அதனை நன்கு ஆராய்ந்தால் அது இவர்கள் செய்த தவறாக தான் இருக்கும். அதனை போக்கிக்கொள்ள வழி செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். செய்வது அனைத்தும் டெக்னிக்கல் தவறாகவே இருக்கும்.

99 சதவீதம் உழைப்பு 1 சதவீதம் ஆன்மீகம் இது தான் உண்மை. உழைப்பில் தவறை செய்துவிடகூடாது. அனைத்தையும் நன்கு யோசித்து உழைப்பில் கவனம் செலுத்திவிட்டால் போதும். 1 சதவீத வெற்றியை அம்மன் கொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 19, 2017

பரிகாரம்


வணக்கம்!
         பொதுபரிகாரம் என்ற ஒன்றை அறிவித்தாலும் இந்த பரிகாரம் அனைத்தும் ஒரு நபர் சம்பந்தப்பட்டது போல தான் நடத்திக்கொண்டு இருக்கிறேன். பொதுபரிகாரம் என்ற ஒன்றை சொல்லுவதற்க்கு காரணம் என்பது பணம் நான் நிர்ணயம் செய்வதில்லை. நீங்களே பணத்தை உங்கள் விருப்பம் போல் செலுத்தலாம். செலுத்த இயலாதவர்களுக்கு இலவசமாக கூட செய்கிறோம்.

பொதுவாக ஏதோ கூத்து அடிப்பது போல் கிடையாது என்பது தான் உண்மை. இதனை நேரில் ஒவ்வொருவரையும் பங்குக்கொள்ள வைக்க பல சிக்கல் இருப்பதால் தான் நான் மட்டும் செய்துக்கொண்டு இருக்கிறேன். 

ஒவ்வொருவரையும் கூப்பிட்டு நம்ம இடத்தில் வைத்து செய்வதற்க்கு ஒரு சில இடைஞ்சல் இருக்கின்றது அதனை போக்கிவிட்டால் ஒவ்வொருவரையும் நம்ம இடத்திற்க்கு வரவழைத்து இதனை செய்துவிடலாம். எதிர்காலத்தில் அப்படி நடக்கும்.

பொதுபரிகாரம் நாம் தனியாக தான் ஜாதகத்தை அனுப்பவேண்டும் என்று பலர் அனுப்பவில்லை என்று நண்பர்களின் வாயிலாக தெரிந்துக்கொண்டேன். நம்பிக்கையோடு இதில் பங்குக்கொள்ளலாம். அனைவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.

பலருக்கு நேற்று மெயில் செய்துவிட்டேன். போனில் தொடர்புக்கொண்டும் பேசியிருக்கிறேன். இதுவரை மெயில் அல்லது போன் வராதவர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 18, 2017

ஆடிமாத சிறப்புபூஜை


வணக்கம்!
          ஆடிமாதம் பிறந்தவிட்டது. ஆடிமாதம் என்பது அம்மனின் மாதம் என்றே சொல்லலாம். அம்மனுக்கு உகந்த மாதமாக இது இருக்கும். ஆடிமாதம் அம்மனுக்கு என்று விஷேசபூஜைகள் வருடந்தோறும் செய்வது உண்டு. 

ஆடி மாதம் அம்மன் பொதுபூஜை என்பது பிறகு அறிவிக்கிறேன். அதில் அனைவரும் கலந்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவது உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு என்று சிறப்புபூஜைகள் செய்வது உண்டு. 

ஆடி மாத அம்மனுக்கு சிறப்புபூஜைகளில் விருப்பம் இருப்பவர்கள் கலந்துக்கொள்ளலாம். ஏதோ ஒரு வேண்டுதலுக்காக சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் அவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜைக்கு மாதந்தோறும் பண அனுப்புபவர்கள் இதில் கலந்துக்கொள்ள வேண்டாம். சிறப்புபூஜைகளில் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளலாம். கட்டணம் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பணம் வரும் இடம்


வணக்கம்!
          சம்பாதிப்பது என்பது ஒரு கலை. இந்த கலையும் கற்றுக்கொள்ள தான் வேண்டும். என்ன இதனை அவர்களே கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்த கலை இருப்பதால் அவர்களே கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒருவருக்கு ஒரு இடத்திற்க்கு சென்றால் அவர்க்கு பணம் வரும் என்றால் அவர் அந்த இடத்திற்க்கு அடிக்கடி சென்றுவரவேண்டும். இது ஒரு டெக்னிக் என்று சொல்லலாம். இதனை எந்த வேலை இருந்தாலும் விட்டுவிட்டு அந்த இடத்திற்க்கு அடிக்கடி சென்றுவரும்பொழுது உங்களுக்கு பணம் வரும்.

ஒரு சிலருக்கு கோவிலுக்கு சென்று வந்தால் பணம் வரும். ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வரும்பொழுது மட்டுமே பணம் வரும். ஒரு சிலருக்கு கடற்கரைக்கு சென்றுவந்தால்  பணம் வரும். 

ஒரு சிலருக்கு மதுக்கடைக்கு சென்று வந்தால் பணம் வரும். அவர் அவர்களுக்கு எந்த இடம் என்பது அவர்கள் மட்டுமே தன்னை சோதித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு ஒருவரை சந்திக்கும்பொழுது பணம் வரும்.

இதனை எல்லாம் நீங்கள் தெரிந்துக்கொண்டு செயல்பட்டால் எப்படிப்பட்ட கஷ்ட சூழ்நிலையிலும் பணம் உங்களை நாடி வந்துக்கொண்டே இருக்கும். அந்த இடத்திற்க்கு குறைந்தது மாதம் ஒரு முறையாவது சென்று வரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 17, 2017

பரிகாரம்


வணக்கம்!
          பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் பெரும்பாலும் செய்வது அவர்களின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைத்துவிடுகின்றனர். அவர்களைப்பற்றி எந்த ஒரு தகவலும் தருவதில்லை.

உங்களின் ஜாதகத்தை அனுப்பினால் உங்களைப்பற்றி உள்ள விபரத்தை அனுப்பவேண்டும். இதுவரை என்ன மாதிரியான முயற்சிகளை எடுத்தீர்கள் அது எதனால் தோல்வியை அடைந்தது. தற்பொழுது நீங்கள் இருக்கும் நிலைமை என்ன என்று தெரிவிக்கவேண்டும்.

பலருக்கு அவர்களைப்பற்றி உள்ள விபரம் அவர்களே மறந்துவிடுகின்றனர். தன்மீது அதிக அக்கறை இருந்தால் இது எல்லாம் அந்தளவுக்கு மறக்காது. மறதி நல்லது தான் ஆனால் தான் எடுத்த முயற்சியில் மறதி இருந்தால் எடுக்கபோகின்ற முயற்சியில் வெற்றி இருக்காது.

ஒரு சிலர் மட்டும் எனக்கு போன் செய்து அவர்களைப்பற்றி உள்ள விபரத்தை அனைத்தையும் சொல்லிருக்கின்றனர். அனைவரும் போன் செய்யவேண்டாம். உங்களைப்பற்றி நீங்களே ஒரு பேப்பரில் எழுதும்பொழுது உங்களை வளர்த்துக்கொள்ள அதிகம் அது உதவும்.

பலருக்கு நான் சொல்லும் ஆலோசனை என்ன என்ன செய்தீர்கள் என்பதை ஒரு பேப்பரில் எழுதி பாருங்கள். அதனை எடுத்து மறுபடியும் பார்க்கும்பொழுது உங்களை நீங்களே சரிசெய்துக்கொள்ளமுடியும்.

சும்மா மெயில் அனுப்பினால் போதும் என்பதை விட உங்களைப்பற்றி தெரிவிக்கும் கருத்து உங்களை பலமடங்கு உயர்த்த உதவும். நாளை பூர்வபுண்ணிய பரிகாரத்திற்க்கு கடைசிநாள் என்பதால் உடனே ஜாதகத்தை அனுப்பிவையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 14, 2017

பூர்வபுண்ணிய பரிகார இறுதிநாள்


வணக்கம்!
          பூர்வபுண்ணிய பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப கடைசிநாள் வரும் செவ்வாய்கிழமையோடு முடிவடைகிறது. செவ்வாய்கிழமை இரவு வரும் வரை ஜாதகத்தை அனுப்பிவையுங்கள். கட்டணத்தையும் செலுத்தலாம்.

ஒரு சில நண்பர்கள் கடைசியாக செய்த பரிகாரத்திற்க்கு பணம் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு அதற்கு பணம் அனுப்பமுடியவில்லை என்று தற்பொழுது ஜாதகத்தை அனுப்பாமல் இருக்கின்றனர். 

பணம் என்பது இன்று வரும் நாளை போகலாம் அதனைப்பற்றி யாரும் கவலைப்படதேவையில்லை. உங்களுக்கு எப்பொழுது பணம் வருகின்றதோ அப்பொழுது அனுப்பலாம். பணம் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு பணம் அனுப்பமுடியவில்லையே இவர் என்ன நினைப்பார் என்று நினைக்கவேண்டாம்.

இன்றைய நிலையில் ஒருவர் சம்பாதித்து அதில் குடும்பம் நடத்துவதே பெரிய கஷ்டமான ஒரு சூழ்நிலை இருக்கின்றது. இதில் பரிகாரத்திற்க்கு எப்படி செலவு செய்யமுடியும். ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட நிலையில் இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

எதையும் மனதில் வைக்காமல் உடனே ஜாதகத்தை அனுப்பி வையுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும். வரும் செவ்வாய்கிழமை இறுதிநாள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 13, 2017

குருவின் வழிகாட்டுதல்


வணக்கம்!
          நமது மனம் என்ன நினைக்கும் என்றால் நாம் செய்வதே அனைத்தும் சரி என்று நினைக்கும். உலகத்தில் உள்ள வீணாகபோனாவர்கள் அனைவரும் அவர் அவர்களின் மனத்திற்க்கு தகுந்தமாதிரி அனைத்திலும் செயல்பட்டதால் தான் வீணாக போயிருப்பார்கள்.

மனதை சொல்லுவதை எல்லாம் கேட்டு அனைத்தையும் செய்யாதே என்று சொல்லிக்காட்டுபவர் தான் குரு. குரு சொல்லுவதை நாம் ஏற்பதே கிடையாது. அவர் எதையாவது சொல்லுவார் அவர்க்கு என்ன தெரியும் என்று உங்களின் மனம் உங்களை ஏமாற்றிவிடும். 

உலகத்தில் உள்ள குருவை எல்லாம் கொன்றது அவர்களின் சீடர்களாக தான் இருப்பார்கள். இந்த காலத்தில் மட்டும் இல்லை ஆதிகாலத்தில் இருந்தே இப்படி தான் நடந்துக்கொண்டு இருக்கின்றது.

குரு சொல்லுவதே மட்டும் கேட்டு நடந்துவிட்டால் நமது வாழ்க்கை மாறிவிடும். நாம் என்ன நினைப்போம் இவன் என்ன சொல்லுவது நாம் என்ன கேட்பது. நமக்கு நல்லது செய்வதற்க்கு இவன் யார் என்று உங்களின் மனம் உங்களை கிளப்பி  சந்தேகப்பட வைத்துவிடும்.

சிந்திப்பது நல்லது தான் அதே நேரத்தில் அடுத்தவர்கள் சொல்லுவதையும் கேட்டு உங்களின் வாழ்க்கையில் செயல்பட்டால் உங்களின் வாழ்க்கை ஒரு அற்புதமான வாழ்க்கையாக இருக்கும். உங்களின் ஜாதகத்தில் பெரியளவில் தோஷம் இருந்தால் கூட குருவின் வழிகாட்டுதல் இருந்தால் நீங்கள் வெற்றிபெற்றுவிடலாம்.

எனக்கு தெரிந்தவரை என்னுடைய அனுபவத்தில் ஜாதகத்தில் உள்ள தோஷத்தில் வீணாக போனவனைவிட தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைத்து வீணாக போனவன் தான் அதிகமாக இருப்பான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 12, 2017

குலதெய்வமும் புதனும்


வணக்கம்!
          ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். நாம் எடுக்கும் எந்த ஒரு செயலும் நடைபெறாது. பூர்வபுண்ணியம் தான் சரியில்லை நாம் சும்மா அமர்ந்துவிடமுடியாது உடனே நாம் குலதெய்வத்திடம் சரண் அடைந்தால் ஒரளவுக்கு நம்மை குலதெய்வம் காப்பாற்றிக்கொண்டே இருக்கும்.

ஒரு சில இடத்தில் குலதெய்வத்தின் அதிகமான சக்தி பூர்வபுண்ணியம் சரியில்லாத ஆட்களின் நிலையை பல மடங்கு உயர்த்தி நல்ல வாழவைத்துவிடும். புதன் கிரகம் அவர்களுக்கு நல்ல நிலைமையில் இருக்கும். 

அறிவை கொடுக்கும் கிரகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுது எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதனை புரிந்துக்கொண்டு செயல்படவைக்கும். நமக்கு வந்த பிரச்சினையை குலதெய்வம் தான் காக்க முடியும் என்று அறிந்து குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொண்டு வெற்றி பெற்றுவிடுவார்கள்.

அறிவு எந்தளவுக்கு ஒருவருக்கு கிடைக்கிறதோ அந்தளவுக்கு அவர் இந்த உலகத்தில் முன்னேற்றம் அடைந்துவிடுவார். உங்களுக்கு புதன் நன்றாக இருந்தால் இதற்கு குறைவில்லாமல் இருக்கும். உங்களுக்கு புதன் சரியில்லை என்றால் கஷ்டம் தான். அந்த நிலையிலும் நீங்கள் புதன்கிழமை தோறும் உங்களின் குலதெய்வம் சென்று வணங்கினால் இது சரியாகும்.

குலதெய்வத்தை வணங்குவதில் கூட டெக்னிக்கல் இருக்கின்றது. நமக்கு எது தேவையோ அதனை அறிந்து வணங்கும்பொழுது நமது தேவையை சரியாக குறிப்பட்ட காலத்திற்க்குள் முடித்துக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குலதெய்வமும் பூர்வபுண்ணிய பரிகாரமும்


வணக்கம்!
          பூர்வபுண்ணியத்திற்க்கு என்று பரிகாரம் சொல்லிருந்தேன். பல நண்பர்கள் அவர்களின் ஜாதகத்தை அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். நான் நிறைய ஜாதகங்களை எதிர்பார்க்கிறேன். அனைவரும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளவேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

பூர்வபுண்ணியத்தில் மிக மிக முக்கியமான ஒன்று அவர் அவர்களின் குலதெய்வம். குலதெய்வத்தின் சக்தி மறைந்திருந்தாலும் இந்த பரிகாரத்தால் அந்த குலதெய்வத்தின் சக்தியை நீங்கள் பெறமுடியும். உங்களுக்கு குலதெய்வத்தின் அருள் கிடைப்பதற்க்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

உங்களின் பங்காளிகளில் ஒருவர் மட்டும் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பார். மற்றவர்கள் அனைவரும் ஏதோ வாழ்க்கின்றோம் என்று வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் உங்களின் குலதெய்வம் அவர்களுக்கு மட்டும் நல்லது செய்துக்கொண்டு இருக்கும்.

ஒரு சில இடத்தில் குலதெய்வத்தை அவர்களுக்கு மட்டும் நல்லது செய்வது போல செய்து வைத்திருப்பார்கள். ஒரு சில இடத்தில் அவர்களின் கிரகங்கள் நல்ல வலுபெறும்பொழுது குலதெய்வம் அவர்களின் பக்கம் சென்றுவிடுவது உண்டு.

குலதெய்வம் உங்களின் பக்கம் பார்ப்பதற்க்கு ஒரு வசதியாக தான் இந்த பரிகாரத்தை முடிவு செய்து அறிவித்தேன். கிரகங்கள் மட்டும் செய்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது குலதெய்வத்தின் அருளும் வேண்டும் என்று இந்த பரிகாரம் முடிவு செய்து அறிவித்தேன்.

பரிகாரம் ஒரு சவாலான ஒரு விசயம் தான். பூர்வபுண்ணியத்தை சரி செய்வது கூட அவர்களுக்கு ஒரு புண்ணியம் இருக்கவேண்டும் அல்லவா. புண்ணியம் இருக்கும் நபர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டனர். ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே ஜாதகத்தை அனுப்பிவையுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 11, 2017

விசுவாசம்


வணக்கம்!
          குருபூர்ணிமாவைப்பற்றி நேற்று ஒரு பதிவை தந்தேன். இந்த பதிவை படித்துவிட்டு பலர் தொடர்புக்கொண்டார்கள். எனக்கு வாழ்த்து எல்லாம் தெரிவிப்பதை விட உங்களுக்கு ஒவ்வொரு கலையும் கற்றுக்கொடுத்த ஆசானுக்கு நன்றியை சொல்லவேண்டும்.

பலர் குரு என்றாலே வயதில் பெரியோர்களை தான் குருவாக நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இது தவறான ஒன்று. பழமையான காலத்தில் கூட குரு வயது குறைவாக இருப்பார். சிஷ்யனுக்கு அதிக வயது இருக்கும். வயது எல்லாம் கிடையாது. 

எனக்கு சமையல் கலையை கற்றுக்கொடுத்தவர் என்னை விட வயது குறைவான நபர் அவருக்கு நான் அன்று வாழ்த்தினேன். எனக்கு ஒவ்வொரு விசயத்தையும் கற்றுக்கொடுத்த அனைவரையும் வாழ்த்தினேன். பலர் என்னை விட வயது குறைவானாவர்கள். சமையல் என்ன பெரிய விசயமா என்று கேட்கலாம். அவர் இல்லாமையிலே கற்றுக்கொள்ளமுடியும் என்று கேட்கலாம் ஆனால் அவர் எனக்கு முதன் முதலில் சொல்லிக்கொடுத்தார் என்பதற்க்காக வாழ்த்தினேன்.

எனக்கு அடுத்தவர்களிடம் விசுவாசம் எல்லாம் இல்லாமல் இருந்தேன். பல காலக்கட்டங்களுக்கு பிறகு தான் இது எல்லாம் தெரியவந்தது. என்னால் முடிந்தவரை விசுவாசத்தோடு இருக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.

கொஞ்சகாலம் எல்லோரிடமும் விசுவாசத்தை காட்டி பாருங்கள். இந்த உலகம் உங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும். தடையே இல்லாமல் செயல்படுவதற்க்கு இந்த விசுவாசம் அதிகமாக வேலை செய்யும். 

பெரியளவில் நீங்கள் வளரவேண்டும் என்றால் இப்படிப்பட்ட பழக்கவழக்கம் தேவை. எந்த விசயத்திலும் விழிப்புணர்வோடு செயல்பட்டு வரும்பொழுது எதுவும் நமக்கு மறக்காமல் வேலை செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பூர்வபுண்ணியத்தில் செவ்வாய்


வணக்கம்!
         பூர்வபுண்ணியம் என்று சொல்லக்கூடிய இடத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் என்பது உங்களுக்கு தெரியும். உயர்வை தரக்கூடிய இடத்தில் போர்கிரகம் நின்றால் சண்டை சச்சரவு தான் இருக்கும். 

மனிதனை அழிக்ககூடிய ஒரு பெரிய ஆயுதம் என்றால் அது அவனுடைய கோபம். கோபத்தை எந்த விதத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்பவன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவான். 

கோபம் இல்லாமல் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருந்தாலே அவனை தேடி அனைத்து வாய்ப்புகளும் வந்துவிடும். இன்றைய காலத்தில் பல பேர்கள் இதனை தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும். 

நன்றாக படித்து கோபம் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கூட பல நிலையில் தோல்வி அடைவதற்க்கு காரணம் அவர்களின் கோபம் தான். எப்படி என்கிறீர்களாக படித்தவர்கள் வெளிக்காட்டு கோபம் எப்படி இருக்கும் என்றால் அவர்கள் ஒருவர் மீது கோபப்பட்டால் அவர்களை தவிர்க்க பார்ப்பார்கள். நேரிடையாக கோபத்தை காட்டுவதை விட இது அதிகமான ஒரு கோபமாகவே இருக்கும்.

கோபத்தை வெளிப்படுத்தும் தன்மை அடுத்தவர்களை தவிர்ப்பது. இதனால் தான் பல பேர்கள் இன்று வாழ்வில் தோல்வியை தழுவுகின்றனர். ஐந்தில் செவ்வாய் நின்றால் உங்களுக்கு கோபத்தை கொடுத்து அது உங்களின் வாழ்வை கெடுக்கும். கோபத்தை காட்டாமல் அன்பை காட்டுங்கள். 

மேற்கண்ட படி உங்களின் நடவடிக்கை இருந்தால் நீங்கள் உங்களின் ஜாதகத்தை அனுப்பி பரிகாரம் செய்துங்கள். கண்டிப்பாக நல்ல மாற்றத்தை நீங்கள் பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 10, 2017

குரு பூர்ணிமா


வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் அதிகமாக கொடுத்திருப்பது டிப்ஸ்கள் தான். எப்படி எல்லாம் ஆன்மீகத்திலும் சோதிடத்திலும் சிறந்து விளங்க எப்படிப்பட்ட வழிகளை எல்லாம் பின்பற்றலாம் என்று இருக்கும். இதனை பல பதிவுகளை படித்தாலே தெரியும்.

குரு பூர்ணிமா சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுகிழமை வரை இருந்தது. குரு பூர்ணிமா முழுநிலவு சனிக்கிழமை இரவு முழுவதும். இந்த நாளில் நமக்கு நல்லவழி கொடுக்கும் அனைத்து குருவுக்கும் நன்றியை செலுத்தும் விதமாகவும் அவர்களிடம் இருக்கும் சக்திக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும் பயன்படுத்தவேண்டும்.

எனக்கு பல நல்ல விசயங்களை கொடுத்த ஆன்மீக குருவுக்கும். நிறைய இந்த உலகத்தில் கற்றுக்கொடுக்கும் அனைவருக்கும் குருவாக ஏற்றுக்கொண்டு அவர்களை தொடர்புக்கொண்டு நல்ல ஆசியை வாங்கினேன்.

ஜாதககதம்பத்தில் இருந்து ஒரே ஒரு நபர் மட்டும் என்னை தொடர்புக்கொண்டு எனக்கு உங்களின் ஆசியை தாருங்கள் என்று கேட்டார். இவ்வளவு பேர்களில் ஒருவர் மட்டுமாவது தொடர்புக்கொள்கிறார் என்று பெருமைபட்டேன்.

இங்கே வருபவர்கள் பலர் பணத்தை அனுப்புகின்றனர். இவர்கள் எல்லாம் இந்த விசயத்தில் தவறவிட்டுவிட்டனர் என்று சொல்லலாம். எனக்கு மரியாதை தரவேண்டும் என்ற நோக்கம் அல்ல. மாறாக என்னிடம் இருக்கும் சக்திக்கு மரியாதை கொடுத்தால் அது தான் மிகப்பெரிய ஆசியாக உங்களுக்கு இருக்கும். டிப்ஸ் என்பதே எதையும் தவறவிடாமல் பெற்றுக்கொள்வது தான் என்பதை இந்த நேரத்தில் மறுபடியும் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 9, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 8, 2017

அம்மன் பூஜை


வணக்கம்! 
          அம்மன் பூஜை நாளை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
கரூரை சேர்ந்த திரு முத்து அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்
ஓடதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதல்களை வைக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 7, 2017

உதிரிபூக்கள்


ணக்கம்!
          மலர்களை இறைவனுக்கு படைப்பது என்பது ஒரு அற்புதமான பலன்களை தரும். மலர்களை கொண்டு தான் அனைத்து தெய்வங்களும் அலங்கரிக்கப்படுகின்றது. மலர்களை கொண்டு மாலை தொடுத்து போடுவதைவிட உதிரிபூக்களாக இறைவனுக்கு போடுவது நல்ல பலனை தரும்.

உதிரிபூக்களாக ஏன் இறைவனுக்கு பயன்படுத்த சொல்லுகிறேன் என்றால் மாலைகளை தொடுக்கும்பொழுது பிறர் தொடுக்கும்பொழுது அதில் அவர்களின் எண்ணங்கள் பதிந்து இருக்கும். அது அந்தளவுக்கு தூய்மையானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது அதனால் உதிரிபூக்களை பயன்படுத்துங்கள் என்கிறேன்.

இன்றைய காலத்தில் அதிகமாக பிற மதத்தினர்கள் பூக்கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் அவர்களின் தெய்வங்களை வணங்கிவிட்டு இந்த தொழிலில் ஈடுபடும்பொழுது அது அவர்களின் தெய்வங்களுக்கு உரியதாக இருக்கும். அதனை கொண்டு வந்து இறைவனுக்கு போடகூடாது என்பதால் இதனை தவிர்க்கவேண்டும்.

உதிரிபூக்களை வாங்கி அதனை இறைவனுக்கு சமர்பியுங்கள். உங்களை பெரிய இடத்திற்க்கு கொண்டு செல்லும். அந்த காலத்தில் துளசி வில்வம் போன்ற தழைகளை தான் மனிதர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இன்றைக்கும் இதனை பயன்படுத்துகின்றனர். அம்மனாக இருந்தால் வேப்பிலையை வைத்து வழிபட்டு இருக்கின்றனர்.

உங்களின் மனதில் பாசமாக இந்த இலைகளை வாங்கி இறைவனுக்கு கொடுங்கள். அதிகமான பலன்களை வாரி வழங்கும். ஏன் இப்படி வழங்குகிறது என்றால் இயற்கையோடு இணைந்த ஒன்றல்லவா அதனால் அப்படி கொடுக்கிறது. நாம் கூட இப்படிப்பட்ட தழை மற்றும் உதிரிபூக்களை தான் அம்மனுக்கு அதிகமாக கொடுத்து பூஜைகளை செய்கிறோம். நீங்களும் இப்படி செய்யுங்கள்.

ன்புடன்
ராஜேஷ்சுப்பு

உலகம் கொடுக்கும் வாய்ப்பு


ணக்கம்!
          ஒரு வேலையை கொடுத்து அந்த வேலையை முடிக்காமல் இழுத்தடிக்ககூடாது என்பது என்னுடைய கருத்து. முடிந்தவரை எவ்வளவு விரைவில் அதனை முடிக்கிறோமாே அவ்வளவு விரைவில் அதனை முடித்துவிடவேண்டும்.

நான் சொல்லுவது ஆன்மீகவேலையாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதனை விரைவில் முடிக்க ஆசைப்படுபவன். இருக்கின்ற காலத்தில் அனைத்தையும் முடித்துவிட்டால் நல்லது என்று நினைப்பேன். நாளை என்பது நம்மிடம் இல்லை இருக்கின்ற இன்றைய நாளில் எந்தந்த வேலையே அதனை முடிக்கவேண்டும்.

எதற்க்காக இதனை சொல்லுகிறேன் என்றால் நம் முன்னாடி கொண்டுவந்து கொடுக்கின்ற வாய்ப்பு மறுபடியும் இந்த உலகம் கொடுக்குமா என்பது சந்தேகமே. என்னுடைய பல நல்ல ஆன்மீகவாதிகள் பழக்கம் உண்டு. அவர்கள் எல்லாேரும் இந்த வழியை பின்பற்றுபவர்கள்.

என்னிடம் அவர்கள் எல்லாம் சொல்லுவது இது வாய்ப்பாகவும் இருக்கலாம் அல்லது இதன் வழியாக ஒரு அனுபவத்தையும் இந்த உலகம் நமக்கு கொடுக்கிறதற்க்கும் இருக்கலாம். வருகின்றதை செய்துவிடு மற்றயவை அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்பார்கள்.

இந்த கருத்தை ஏற்று நான் பல வேலைகளை தள்ளி போடுவது கிடையாது. முடிந்தவரை வேகமாக என்ன என்ன செய்யமுடியுமோ அதனை எல்லாம் செய்துவிடுகிறேன். 

நீங்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள். அன்றைக்கு வரும் வாய்ப்பை எல்லாவற்றையும் செய்யுங்கள். இந்த உலகம் உங்களுக்கு நிறைய கொடுக்க ஆரம்பிக்கும். நீங்கள் விரைவில் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 6, 2017

குலதெய்வம்


ணக்கம்!
          பூர்வபுண்ணியத்தில் ஒருவர் கேட்டுருந்தார். எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை. பூர்வபுண்ணியத்திற்க்கு பரிகாரம் செய்தால் குலதெய்வம் தெரியவதற்க்கு வாய்ப்பு இருக்குமா என்று கேட்டார்.

குலதெய்வம் தெரியாமல் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பது தெரிகிறது. முன்னோர்கள் செய்த தவறுகளால் தான் இப்படி குலதெய்வம் தெரியாமல் சென்றதற்க்கு காரணமாக இருக்கமுடியும். உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் எப்படிப்பட்ட உயர்பதவியை வகித்தாலும் குலதெய்வத்திற்க்கு செய்யவேண்டியதை மறக்கவே கூடாது.

குலதெய்வம் நம்முடைய வாழ்வில் பின்னி பிணைந்த ஒன்று என்று பல பதிவுகளில் சொல்லிக்கொண்டு வருகிறேன். குலதெய்வத்திற்க்கு நாம் செய்யவேண்டிய பச்சைப்பரப்புதலை செய்து வந்தாலே போதும் லட்சுமி பூஜை செய்யவேண்டியதில்லை. அந்தளவுக்கு பயனை தரும்.

நம்மால் முடிந்தளவுக்கு இந்த பூர்வபுண்ணிய பரிகாரத்தை செய்வோம். அம்மன் அருளால் குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வத்தைப்பற்றி தெரியவருட்டும். இந்த பரிகாரம் மிகவும் முக்கியமான பரிகாரம் என்பதால் ஜாதகத்தை அனுப்பி இதில் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


ணக்கம்!
          நேற்று பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு வருகின்றனர். நல்ல விசயம் தான். அதில் ஒரு நண்பர் சொன்னார். எத்தனை தான் செய்வது. தினமும் ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே வருகின்றீர்கள். அது எங்களுக்கு சரியாக இருந்தாலும் எதனை செய்து தெளிவு பெறுவது என்று கேட்டார்.

பல வருடங்களாக பதிவை எழுதிக்கொண்டு வருகிறேன். தினமும் ஏதாவது ஒரு தகவல்கள் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதில் உங்களுக்கு எது செட்டாகிறது என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது ஒன்று செயல்படும்.

எதையாவது சொல்லி பணத்தை பறிக்கவேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. என்னால் முடிந்தளவுக்கு பிறர்க்கு செய்துக்கொடுக்கவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம்.

ஒரு மனிதன் பிறந்தால் அவனை போல் வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக நாம் சொல்லும் விசயங்கள் செயல்படும். அதனால் புதிய புதிய தகவல்களை சொல்லிக்கொண்டு வருகிறேன்.

நேற்று சொன்ன விசயம் பொதுவாக அனைவருக்கும் செயல்படக்கூடிய ஒன்று. அதில் சொல்லப்பட்ட கருத்துகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் அகப்படுவீர்கள். அதற்கு அனைத்திற்க்கும் ஒரே காரணம் தான் இருக்கின்றது. அதனை நீங்கள் செய்துக்கொள்ளுங்கள்.

கொஞ்சம் முயற்சி செய்தால் போதும். நீங்கள் அதில் இருந்து விடுபட்டுவிடுவீர்கள். இந்த ஜென்மம் எடுத்ததின் அர்த்தம். இதில் இருந்து விடுபடுதல் அனைத்தும் நடைபெற்றுவிடும். தொடர்புக்கொள்ளுங்கள் அது என்ன என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 5, 2017

உங்களை சோதனை செய்துக்கொள்ளுங்கள்


வணக்கம்!
          ஒரு சில கருத்துக்களை சொல்லும்பொழுது அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் அதற்கு முந்தைய நாள் அல்லது அன்றைய நாள் அதனைப்பற்றி விசாரிப்பது நமது நண்பர்களிடம் இருந்து வரும். உடனே நாம் அதனைப்பற்றி பதிவில் சொல்லிவிடுவது உண்டு.

வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லை.
உங்களின் வாழ்க்கை அப்படியே ஸ்தம்மித்து நிற்கிறது.
கடுமையான வறுமை உங்களை வாட்டுகிறது.

அடுத்தவர்களின் பிடியில் நீங்கள் இருக்கின்றீர்கள். 
அடிமை வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.
உங்களின் உடல் சோர்வு அடைகிறது.

உங்களின் வாழ்க்கையை அடுத்தவர் தீர்மானிப்பது போல் அமைவது.
உடலில் வலி ஏற்படுவது.
முறையற்ற வழியில் உங்களின் உடலில் இருந்து சக்தி வெளியேறுவது.

ஏன் பிறந்தோம் என்று நினைப்பது.
உடலில் நரம்பு பலவீனம் அடைவது.
எலும்புகளில் பிரச்சினை.

வாழ்வில் இன்னமும் செட்டில் ஆகவில்லை என்று நினைப்பது.
வாழ்வில் அதிர்ஷ்டம் என்பது துளியும் இல்லாமல் இருக்கின்றது என்று நினைப்பது.
கடுமையான தலைவலி வருவது.

பிறர் மீது அல்லது ஏதோ ஒன்று மீது அதிக கோபம் கொள்வது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நினைப்பது.
எந்த விசயத்திலும் தீர்வு எடுக்கமுடியாமல் இருப்பது.

பொருளாதாரம் முன்னேற்றம் இல்லை.
பிறர்களால் ஏமாற்றப்படுவது.
பரிகாரம் செய்தும் பலன் இல்லை.

எந்த வேலையும் நடக்கமாட்டேன்கிறது என்று சொல்லுவது.
பேராசை.
தற்கொலை எண்ணம்.

மேலே சொன்ன மாதிரி இருந்தால் இதுவரை நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தும் கூட மேலே சொன்ன மாதிரி இருந்தால் ஆன்மீகம் இதுவரை உங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

இந்த மாதிரி இருப்பது ஒரு மோசமான நிலையில் நீங்கள் இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். இதனை உடனே சரி செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அறிவுரை.

இதற்கு எல்லாம் காரணம் இருக்கின்றது. உங்களை சரிசெய்துக்கொள்ளவேண்டும். இதனைப்பற்றி பதிவுகளில் நாம் சொல்லுவதை விட என்னை தொடர்புக்கொண்டு அல்லது நேரில் சந்தித்து என்ன செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு