Followers

Friday, August 30, 2019

சோதிடத்தை எப்படி பயன்படுத்தவேண்டும்?


வணக்கம்!
          நம்ம ஆட்கள் நிறைய பேர் போட்டு குழப்பிக்கொள்கின்றனர். ஜாதகத்தை ஒரளவு எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் செயல்பட்டால் நல்லது அதனை விட்டுவிட்டு அப்படியே பிடித்துக்கொள்கின்றனர்.

சோதிடத்தை படித்துவிட்டு பலர் அந்த நட்சத்திரத்திற்க்கு தகுந்தார்பாேல் சாப்பாடு கூட சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். தினமும் இந்த சாப்பாட்டை சாப்பிடவேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொண்டு சாப்பிடுவது என்று சாப்பிடுவதாக கேள்விபட்டேன்.

தன்னை ஒழுங்குப்படுத்திக்கொள்ளவேண்டும் அதற்காக இப்படி எல்லாம் சாப்பிட்டால் உங்களின் உடல்நலம் கெட்டுவிடும் அதோடு ஜாதகத்தை அந்தளவுக்கு நாம் பயன்படுத்த வேண்டியதில்லை. கொஞ்சமாக ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் நான் இதன்படி தான் வாழ்வேன் என்றால் உங்களின் வாழ்க்கை வீணாக தான் செல்லும். நானே இருக்கின்றேன் என்று வைத்துக்கொள்வோம். தினமும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தால் மாதத்தில் பாதிநாட்கள் கூட செல்லமுடியாது.

நமது நடைமுறை வாழ்க்கைக்கு எது ஏற்றக்கொள்ள முடியுமே அது போல உங்களின் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளவேண்டும். சோதிடத்தின் பின்னாடி செல்லலாம் ஆனால் அது பின்னாடி தினமும் செல்லகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 29, 2019

வாரிசுகளின் வளர்பு முறை


வணக்கம்!
          ஜாதகத்தில் எப்படி இருந்தாலும் ஒரு வாரிசை வளர்க்கும் விதத்தில் தான் அந்த வாரிசு எப்படி இருக்கும் என்பதை சொல்லலாம். பல குடுபங்களில் வாரிசுகளை ஒழுங்காக வளர்க்காமல் அந்த குடும்பம் ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு அழிவை நோக்கி செல்கின்றது.

ஒரு ஊரில் ஒருவர் கொடிகட்டி வாழ்பவராக இருப்பார் ஆனால் அவர்க்கு பிறந்த வாரிசு அவரின் காலத்திலேயே அழிவை சந்திப்பதை நீங்களே பல பேரை பார்த்து இருக்கலாம். ஏன் இப்படி நடக்கின்றது அவர்க்கு ஜாதகத்தில் கட்டங்கள் சரியில்லை என்றால் கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும். வளர்ப்பு முறையில் சரி இருக்காமல் இருக்கும்.

ஒருத்தருக்கு ஒரு பணக்காரர் வீட்டில் பிறக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக ஜாதகத்தில் அதற்குள்ள நல்ல அமைப்பு இருக்கும் ஆனால் அந்த நல்ல பையனை வளர்க்கும் விதத்தில் தான் தவறாக அமைந்துவிடும். ஜாதகத்தில் அதற்கு வழி இருப்பதால் தானே என்று கேட்கவேண்டாம். பலரின் ஜாதகத்தில் இதற்கு வழி இல்லை என்றே சொல்லலாம்.

நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் நீங்கள் உங்களின் வாரிசுகளுக்கு நிறைய கற்றுக்கொடுங்கள். குடும்பத்தின் தரத்தைபற்றி நிறைய சொல்லிக்கொடுங்கள் மற்றும் எது நல்ல வழி என்பதையும் நீங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மட்டுமே உங்களின்  வாரிசுகள் நன்றாக வளரும்.

நிறைய குடும்பங்களில் தங்களின் வாரிசுகளை பெண்கள் கெடுத்துவிடுகின்றனர். நிறைய செல்லம் கொடுத்துஅவர்களை உருபடாமல் செல்வதற்க்கு வழி வகுத்துவிடுகின்றனர். இதனை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். உங்களின் வளர்ப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கண்டு பயப்படதேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 27, 2019

ஏழரைச்சனிக்கு எளிய பரிகாரம்


வணக்கம்!
          தீயகிரகங்களின் காலக்கட்டத்தில் ஒருவருக்கு நோய் வரும் இதிலும் ஏழரைச்சனி காலக்கட்டத்தில் கண்டிப்பாக எப்படியாவது நோய் வரும். இதில் இருந்து தப்பிப்பதற்க்கு ஏழரைச்சனி காலக்கட்டத்தில் சனிக்கு வழிபாடு செய்வீர்கள்.

ஒரு சிலருக்கு ஏழரைச்சனி என்று இல்லாமல் மறைமுக தசா நடந்தால் அவர்களுக்கும் நோய் வரும் இதிலும் வழிபாடு செய்யவேண்டும். இது மட்டும் இல்லாமல் நீங்களே ஒரு சில முன் ஏற்பாடுகளை செய்துக்கொள்வது நல்லது.

நோய் வந்தால் நீங்கள் மருந்து மாத்திரையை எடுக்கவேண்டும். இது தொடர்ச்சியாக எடுக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை என்பது வரும். இதில் இருந்து தப்பிப்பதற்க்கு என்று ஒரு சில முன் ஏற்பாடுகள் செய்யவேண்டும். 

நோய் வரப்போகின்றது என்பதை தெரிந்தால் அதற்கு முன்பு நீங்கள் நல்ல சத்துள்ள மாத்திரைகளை எடுக்க ஆரம்பித்துவிடலாம். மல்டி விட்டமீன் மாத்திரைகள் போன்று எடுக்க ஆரம்பிக்கலாம். இதனால் உங்களுக்கு வருகின்ற நோய் வராமல் போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது.

நம்முடைய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் ஏழரைச்சனி காலக்கட்டத்தில் இந்த மாதிரியான மாத்திரைகளை எடுத்து இருக்கின்றனர். அவர்களுக்கு வரக்கூடிய நோய் வராமல் போய் இருக்கின்றது. உங்களுக்கும் இது தேவை ஏற்படுகின்றது என்றால் நீங்களும் வாங்கி உட்கொள்ளுங்கள். மாத்திரைகள் எப்படிப்பட்டவை என்பதை சோதித்து அதன் பிறகு உட்க்கொள்ளுங்கள். தீங்கு விளைவிக்கும் மாத்திரைகளுக்கு பதில் இதனை உட்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 26, 2019

தீயகிரகத்திற்க்கு எளிய பரிகாரம்


வணக்கம்!
          ஒருவருக்கு கெடுதல் தசா அல்லது ஏழரைசனி காலக்கட்டங்களில் அவரால் இரவில் தூங்கமுடியாது. இரவில் தூங்கம் இன்றி தவிப்பார்கள். இரவில் ஒழுங்கான தூக்கம் இல்லாமல் அவர்களுக்கு நோய்வருவதற்க்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து விடும்.

பனிரெண்டாவது வீடு தூக்கத்தைப்பற்றி தெரிவிக்கும் வீடாக இருந்தாலும் பலருக்கு தீயகிரகத்தின் காலக்கட்டத்தில் இந்த வீட்டின் குணத்தையும் கொடுத்துவிடுகின்றது. தூக்கம் இல்லாமல் தவித்து அதனாலேயே மருத்துவமனையில் தங்ககூடிய வாய்ப்பும் உருவாகும்.

உங்களுக்கு மன நிம்மதியின்றி அதனால் தூக்கம் வராத ஒரு நிலையையும் உருவாக்கிக்கொடுப்பது இந்த தீயகிரகத்தின் காலக்கட்டங்களில் தான் உருவாகிவிடுகின்றது. தீயகிரகத்தின் காலக்கட்டத்தில் மற்றும் பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு செயல்படும் கிரகங்களின் காலக்கட்டத்திலும் இது நடைபெறுகின்றது.

இதற்கு பரிகாரம் என்பதை சொன்னாலும் இதனைவிட பழக்கவழக்கத்தில் ஒன்றை செய்யவேண்டும். இரவு பனிரெண்டு மணிவரை ஏதாவது ஒரு புத்தகத்தை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கவேண்டும் அதன்பிறகு தூங்கினால் உங்களுக்கு தூக்கம் வரும்.

பனிரெண்டு மணி வரை என்பது உங்களின் உடல்நிலை பொறுத்து பார்த்துக்கொள்ளுங்கள். புத்தகம் என்பது ஏதாவது ஞானிகளின் புத்தகமாக இருந்தால் நன்றாக இருக்கும் அதனை படிப்பது இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை படித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 25, 2019

குருவின் பார்வை


வணக்கம்!
          குருகிரகத்தின் சுபபார்வை என்பது மிகவும் சுபிட்ஷமான ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். இந்த சுபகிரகத்தின் பார்வை எந்த இடத்தில் பட்டால் அது நல்லது என்பதை பார்க்கலாம். 

குரு கிரகத்தின் பார்வை தீயகிரகத்திற்க்கு படவேண்டும். தீயகிரகத்திற்க்கு குருவின் பார்வைபடும்பொழுது அதன் தாக்கம் வெகுவாக குறைந்துவிடும். ஒருவருக்கு ஒரு தீயகிரகத்தால் உடல்நிலை நோய்வாய்ப்படும்பொழுது அந்த காலக்கட்டத்தில் குருவின் பார்வை தீயகிரகத்திற்க்கு பட்டால் அந்த நேரத்தில்  அந்த நோயில் இருந்து விடுபடுவார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

குருவின் பார்வை சுபதன்மை உள்ள வீட்டிற்க்கு படும்பொழுது அந்த வீட்டின் தன்மையை பொறுத்து அதற்க்கு தகுந்த சுபநிகழ்ச்சிகளை கொடுக்கும். ஏழாவது வீட்டிற்க்கு கிடைத்தால் திருமண நிகழ்வுகள் நடக்கும்.

நல்ல வீட்டிற்க்கு குரு பார்வை கிடைப்பதை விட தீயவீட்டிற்க்கு குரு பார்வை கிடைத்தால் அந்த பார்வையால் நமக்கு நன்மை கிடைக்கும். குருவின் பார்வை சுபவீட்டிற்க்கு கிடைக்கும்பொழுது அதிகமான நன்மை என்பதை விட அது குறைவான நன்மை என்றே எடுத்துக்கொள்ளலாம்.

இலவச சோதிட ஆலோசனை கேட்ட நண்பர்களுக்கு புதன்கிழமைக்குள் தங்களுக்கான பலனை கொடுத்துவிடுவேன். உங்களை புதன்கிழமைக்குள் கூப்பிடவில்லை என்றால் புதன்கிழமைக்கு பிறகு என்னை கூப்பிட்டு கேட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 24, 2019

குரு



வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் பதிவுகள் குறைந்துவிட்டன என்று எனக்கு கவலை ஏற்பட்டது உண்டு அதே நேரத்தில் நம்முடைய அம்மன் கோவில் கட்டும்பணியில் கவனம் செலுத்தி வந்த காரணத்தால் பதிவுகள் பக்கம் கவனத்தை செலுத்தவில்லை. அம்மன் கோவில் கட்டும் பணி நல்லவிதமாக செல்கின்றது. இனிமேல் பதிவுகளும் தொடர்ச்சியாக எழுதுகிறேன்.

நம்முடைய நல்ல முயற்சிக்கு அனைத்து நண்பர்களும் உதவுகின்றனர். பலர் இதற்காக உழைக்கின்றனர். இதுவே மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி அவர்களுக்கு நன்றி சொல்லுவது எனது கடமை என்பதால் இதனை சொல்லுகிறேன்.


குரு கிரகத்தைப்பற்றி பார்க்கலாம். குரு கிரகம் ஒரு சுபக்கிரகம் என்று சொல்லுவார்கள். ஒரு ஜாதகத்தில் குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் அவர்க்கு மற்ற கிரகத்தின் பலன் இல்லாமல் இருந்தால் கூட அவர் வெற்றி பெற்றுவிடுவார்.

ஒரு சோதிடர் அல்லது ஒரு ஆன்மீகவாதியை நாம் சந்தித்தால் அவரால் நமக்கு நல்லது நடக்கின்றது என்றால் அது எதனால் என்றால் அவர் குருவாக நமக்கு இருந்து ஆசியை கொடுக்கின்றார். அவரின் ஆசியும் குருகிரகத்தின் ஆசியும் ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்களின் ஜாதகத்திலும் குரு கிரகம் நன்றாக இருந்தால் இந்த ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குரு கிரகம் சரியில்லை எனும்பொழுது உங்களை எப்படிப்பட்டவர் ஆசி கொடுத்தாலும் அது முழுமையாக கிடைக்காது. குறைவாக உங்களுக்கு கிடைக்கும்.

குருவின் பலம் கிடைக்க தான் நாம் நிறைய தேடவேண்டும். இந்த தேடுதலை நீங்கள் சரியாக செய்துவிட்டால் நீங்கள் பாக்கியசாலி. அவர் கிடைத்து நீங்கள் வெற்றிப்பெற்றுவிடலாம். குரு தசா புதன் புத்தியில் கண்டிப்பாக ஒரு நல்ல குரு உங்களுக்கு கிடைப்பார். இதில் நிறைய குரு தசா நண்பர்கள் இருப்பதால் அவர்களுக்கு பயன்பெறட்டும் என்று எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 21, 2019

மகரராசி குரு தசா


வணக்கம்!
          பொதுவாக தற்பொழுது நமது நண்பர்கள் நிறைய யூடிப் சானலில் பார்த்துவிட்டு நிறைய கேள்விகளை முன்வைக்கின்றார்கள். இது நல்லது என்றாலும் அனைவரும் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. அவர் அவர்களுக்கும் தெரிந்ததை சொல்லுவார்கள் அது அனுபவத்தில் நடந்து இருக்கின்றதா என்றால் அப்படி ஒன்றும் நடந்து இருக்காது.

மகரராசிக்கு குரு தசா நல்லது செய்யாதா என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். சந்திரன் சனியின் வீட்டில் இருக்கின்றது. மகரராசியில் குரு பகவான் நீசம் அதனால் குரு தசா அந்தளவுக்கு நன்மை செய்வதில்லை என்று சொன்னார்கள் என்றும் கேட்டார்.

ஒருவருக்கு நான்காவது தசாவாக வரும் தசா அது எப்படிப்பட்ட மோசமான கிரகத்தின் தசாவாக வந்தாலும் நன்மை செய்யும். நான் பார்த்தவரையில் மகரராசியில் இருந்தவர்கள் பெரியளவில் சாதித்தது  குரு தசாவில் தான் சாதித்து இருக்கின்றார்கள்.

மகரராசியில் குரு தசா ஒருவருக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும் பிறர் சொல்லுகின்றார்கள் என்று சும்மா இருந்துவிடாதீர்கள். மகரராசியில் குரு தசாவ தவறவிட்டவர்கள் பிற தசாவில் முன்னேற்றம் காண்பது கடினமாக இருக்கும்.

உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனிதன்மையானவன் ஒவ்வொருவரின் ஜாதகமும் வேறுமாதிரியான பலனை கொடுக்கும். பொதுபலனாக பார்த்தால் மகரராசிக்கு குருதசா நல்லதை செய்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 19, 2019

அம்மன் கோவில் கட்டும் பணி


வணக்கம்!
          அம்மன் கோவில் வேலை ஆரம்பிக்கும் தேதியை ஒரு சில தினத்தில் உங்களிடம் தெரிவிக்கிறேன். பலர் இதனைப்பற்றி ஆவலாக கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். என்ன இன்னமும் இதனைப்பற்றி தெரிவிக்கவில்லை என்று கேட்டனர். ஒரு சில தினங்களில் உங்களுக்கு அந்த நாளை தெரிவிக்கிறேன். 

அம்மன் கோவில் கட்டும் பணி ஆரம்பிக்கும்பொழுது நிறைய பணம் தேவைப்படுகின்றது முடிந்தவரை அதனை அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே நான் பணம் அனுப்பிவிட்டேன் என்று இருக்காமல் மறுபடியும் அனுப்பிவையுங்கள்.

அம்மன் காேவில் கட்டுவதற்க்கு ஆரம்பிக்கும்பொழுது இருந்தே அது நிறைய தடங்கள் வந்துக்கொண்டு தான் இருந்தது. தற்சமயம் முதல் நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் அது நிறைவேறும் என்று தோன்றுகின்றது.

அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது எது என்றால் நம்முடைய கர்மா இதில் முழுவதும் இருக்கின்றது. கர்மாவை போக்க இது நன்றாக உதவுகின்றது என்று தான் சொல்லவேண்டும். நான் சாதாரணமாக ஒருவரிடம் பணம் கேட்டால் உடனே கிடைத்துவிடும் கோவில் என்றால் அது அவ்வளவு எளிதில் கொடுக்கமுடியாது. இதிலேயே தெரிந்துவிடுகின்றது கோவில் கட்டுவது என்றால் எந்தளவுக்கு புனிதமான காரியம் என்பது புரிகின்றது.

உங்களால் முடிந்தவரை இதற்கு நன்றாக முயற்சித்து இதில் அக்கறை காட்டி வேலை செய்யுங்கள். உங்களின் கர்மா கண்டிப்பாக இதில் போகும் என்று நான் உறுதியாக உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஒரு சில தினங்களில் கோவில் கட்டும் பணி ஆரம்பிப்பது எப்பொழுது என்பதை தெரிவித்துவிடுகிறேன்.

இலவச சோதிட ஆலோசனை கேட்டு அனுப்பியவர்களில் பாதி பேர்க்கு இன்னமும் ஆலோசனை வழங்கவில்லை விரைவில் உங்களை கூப்பிடுகிறேன். இலவச சேவையில் ஜாதகம் பார்க்க அனுப்ப இன்றே கடைசி தேதி. பலன் சொல்லுவதற்க்கு இந்த வாரத்தில் அனைத்தும் முடிந்துவிடுகிறேன்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 17, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.   

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.   
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.     

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள். 
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்           
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 16, 2019

கெடுதல்காலம் தரும் ஞானம்


வணக்கம்!
          ஒருவருக்கு நல்லகிரகத்தின் பலன் வரும்பொழுது அந்த நபரக்கு செல்வம் வேண்டுமானால் வரலாம் ஆனால் அவர்க்கு இந்த உலகத்தின் படிப்பை காட்டிக்கொடுப்பதில்லை. உலகத்தின் நியதி இப்படி தான் இருக்கும் என்று காட்டிக்கொடுக்காது.

ஒருவருக்கு கெடுதல் தரும் காலக்கட்டங்களில் மட்டுமே சிறந்த படிப்பினை தரும். உலகத்தைப்பற்றி அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு அவர்க்கு கிடைக்கும். உலகத்தைப்பற்றி தெரிந்துக்கொள்வதை விட அவரைப்பற்றியாவது அவரின் உறவினர் மற்றும் நண்பர்களை பற்றியாவது தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

ஒருவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் இவர்களை கூட தெரிய வாய்ப்பை தீயகிரகங்கள் தான் உருவாக்கி கொடுக்கின்றது. கெட்டகாலத்தில் தான் இந்த உலகத்தின் உண்மை முகத்தை அவர்களால் பார்க்கமுடியும்.

கெட்டகாலத்தில் ஒன்றை மட்டும் தவிர்த்து இருக்கலாம் அதாவது நமக்கு வரும் நோய் மட்டும் தவிர்க்கலாம். உடலை சுத்தப்படுத்த நோய் வந்தாலும் அதனை எதிர்க்கொள்வதற்க்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதால் இதனை தவிர்த்து இறைவன் கொடுத்து இருக்கலாம் என்று தோன்றுகின்றது.

என்னையே நான் ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு தான் சொல்லுகிறேன். எனக்கு கெடுதல் காலக்கட்டத்தில் நிறைய விசயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. நல்ல காலக்கட்டத்தில் பெரியதாக ஒன்றும் கற்றுக்கொள்ளமுடியவில்லை.

கெடுதல் காலம் வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரிந்துக்கொண்டு உங்களின் ஞானத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 13, 2019

பாதகாதிபதி


வணக்கம்!
          இலவச சோதிட ஆலாேசனை சிறப்பாக சென்றுக்கொண்டு இருக்கின்றது. அனைவரும் இதில் தங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவச ஆலாேசனை பெற்றுக்கொள்ளலாம். இலவச சோதிட ஆலோசனைக்கு தங்களை இழுத்து பரிகாரம் செய்துக்கொள்வதற்க்கு வழி தேடுவார் என்று சிலர் நினைப்பது தெரிகிறது. நீங்களே எளிமையாக செய்யும் பரிகாரம் போலவே இது இருக்கும் பயப்படாமல் அனைவரும் அனுப்பி வைக்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி தசா நடந்தால் அவரால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை தருமா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார். பாதகாதிபதி தசா நடக்கும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து இதற்க்கு பலனை சொல்லவேண்டும்.

ஒருவரின் குடும்பத்தில் உள்ளவர்களில் தலைவர்க்கு பாதகாதிபதி தசா நடக்ககூடாது. பாதகாதிபதி தசா நடந்தால் அவரக்கு பிரச்சினை வரும்பொழுது ஒட்டு மொத்த குடும்பமும் பிரச்சினையில் தவிக்கும். வீட்டின் தலைவர் என்பதால் மொத்தகுடும்பத்திற்க்கும் பிரச்சினை என்று எடுத்துக்கொள்ளலாம்.

குடும்பத்தின் தலைவர் அல்லாமல் வேறு நபராக இருந்தால் அந்த பாதிப்பு அந்தளவுக்கு இருக்காது. சம்பந்தப்பட்ட நபர்க்கு பிரச்சினை என்பதால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அது பதம் பார்க்காது. தலைவர்க்கு பாதகாதிபதி தசா நடந்தால் அவர் பொறுப்புகளை வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிடவேண்டும்.

தன்னுடைய பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்துவிட்டால் அவருக்கும் பெரியதாக பாதிப்பு என்பது வரப்போவதில்லை. வீட்டில் உள்ளவர்களின் நிலைமையும் ஒரளவுக்கு கட்டுக்குள் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 11, 2019

லக்கனாதிபதியும் தொழிலாளியும்


ணக்கம்!
          பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அவர்களின் லக்கனம் அடிவாங்கியதால் தான் அவர்கள் தொழிலாளிகளாக இருக்கின்றனர். லக்கானதிபதியாக எவர் வந்தாலும் அவர் மறைமுகவீடுகள் அல்லது பலம் இழந்து சென்றால் அவர்கள் அடிமைதொழில் செய்யவேண்டியதாகியுள்ளது.

நீங்கள் பத்து லட்சம் சம்பளம் வாங்கியவர்களாக இருந்தாலும் நீங்கள் ஒருவருக்கு கீழ் வேலை பார்த்தால் நீங்களும் அடிமைதொழிலாளியாகவே கருத்தப்படுவீர்கள். உங்களுக்கும் லக்கினாதிபதி  சரியாக இருக்காது. 

ஒருவருக்கு கீழ் ஒருவர் வேலை செய்கின்றார் என்றால் அவருக்கு லக்கனாதிபதி சரியில்லை என்பதாவே எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சொல்லுவதை பார்த்தால் உலகில் உள்ள முக்கால்வாசி பேருக்கு லக்கனாதிபதி சரியில்லை என்பது போலவே இருக்கின்றது என்று கேட்கலாம்.

உலகில் வேலை செய்யும் அனைவருக்கும் லக்கனாதிபதி சரியில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். முதலாளி என்பது வேறு தொழிலாளி என்பது வேறு. லக்கனாதிபதி நன்றாக இருந்தால் நீங்கள் இராஜாவாக இருக்கலாம். லக்கனாதிபதி சரியில்லாத காரணத்தால் தான் நீங்கள் தொழிலாளியாக இருக்கின்றீர்கள்.

லக்கனாதிபதி எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை பாெறுத்து நீங்கள் வேலை செய்யும் இடம் மாறுபடும். மிக மோசமாக அடிமைப்படும்பொழுது மிக கீழ்தரமான அடிமை தொழிலில் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு லெவலுக்கும் தகுந்தமாதிரி உங்களின் வேலை இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 8, 2019

எதார்த்தம்


வணக்கம்!
          இலவச சோதிட ஆலோசனைக்கு நிறைய ஜாதகங்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. ஒவ்வொருவருக்கும் நல்ல நேரம் ஒதுக்கி அவர்களோடு பேசுவதால் கொஞ்சம் காலம் எடுக்கின்றது. அனைத்து ஜாதகங்களையும் நான் பார்த்துவிடுவேன். அவசரப்பட்டுக்கொண்டு போன் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பொறுமையாக இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஜாதகத்தில் உள்ள பிரச்சினை என்பதை தாண்டி ஒருவர் எப்படி நடந்துக்கொள்கின்றார் என்பதை பொறுத்தும் அவர்களுக்கு நன்மை நடக்குமா அல்லது தீமை நடக்குமா என்று தெரிந்துக்கொள்ளலாம். முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ளவேண்டும். என்ன என்றால் இந்த காலத்தில் நல்லவர்களை விட கெட்டவர்கள் நல்ல வாழ்கின்றார்கள்.

என்ன நீங்களே இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். நன்றாக பார்க்கபோனால் நல்லவர்களை விட கெட்டவர்கள் நல்ல வாழ்வார்கள். நான் நல்லவனாக இருப்பதற்க்கு பதில் கெட்டவனாகவே மாறிக்கொள்கிறேன் என்று மாறிவிடாதீர்கள். 

ஒருத்தர் தன்னுடைய வாழ்நாளில் நல்லவர்களாக இருந்தால் சிரமம் அதிமாக தான் இருக்கும் ஆனால் அவர்களின் வாரிசுகள் நன்றாக வாழ்வார்கள். கெட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனோடு அவன் அழிவது போலவே இருக்கும். நல்லவர்களுக்கு தினமும் பிரச்சினை வந்தாலும் அவன் வாழ்வதற்க்கு அவனை தயார் செய்கின்றது என்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆன்மீகத்தில் இருந்தால் இன்னமும் அதிக பிரச்சினை வரும் அதனை தாண்டியும் அவன் கஷ்டப்பட்டு இருந்துவிட்டால் அவனின் அத்தனை வாரிசுகளும் காலம் காலமாக புண்ணியம் சேர்த்துக்கொண்டே போவான் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜை விரைவில் நடைபெற இருப்பதால் காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். ஆடி மாத அம்மன் பூஜையாக இருப்பதால் அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 5, 2019

இலவச சோதிட ஆலோசனை

வணக்கம்!
          அனைவரும் தங்களின் ஜாதகம் மற்றும் தங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பி இலவச ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம். பலர சோதிடத்தை படிப்பார்கள் ஆனால் தங்களின் ஜாதகத்தின் பலனை பார்க்க மறந்துவிடுவார்கள். அனைவரும் தங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவசமாக கேட்டுக்கொள்ளலாம். முடிந்தவரை தொலைபேசியில் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் டைப் செய்து அனுப்புவது கடினமாக இருக்கும். இலவசத்தில் கேட்பது தவறு என்று நினைக்காமல் அனைவரும் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வடக்கு பார்த்த வீடுகள்


வணக்கம்!
          அனுபவத்தில் நாம் பார்க்கும்பொழுது வடக்கு வாசல் பார்த்த வீடுகள் வாழ்வது போல பிற வாசல் பார்த்த வீடுகள் வாழ்வதில்லை. வாஸ்து படி சொன்னார்கள் என்றால் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வாசல் என்பது முதல் தரம் என்பார்கள். இதில் வடக்கு பார்த்த வாசல்கள் தான் முதல் தரமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாம் வாஸ்து பார்த்து கணித்த கணிப்பு இது கிடையாது அனுபவத்தில் நிறைய பேரை பார்த்து அதன் வழியாக உங்களுக்கு சொல்லுகிறேன். வடக்கு பார்த்த வீடுகளுக்கு செல்வ செழிப்பு மற்றும் அவர்களின் வாழ்நாட்களில் அவர்கள் இருக்கும் புகழுக்கு நிகரில்லை என்று சொல்லலாம்.

பழைய காலத்தில் தெற்கு பார்த்த வீடுகளுக்கு தான் மவுசு அதிகமாக இருந்தது. தெற்கு பார்த்த வீடுகள் கட்டினால் அதற்கு தென்றல் காற்று வீசும் அதன் வாங்கிக்கொண்டு இருக்கலாம் என்று இருந்தார்கள். தற்பொழுது இது எல்லாம் அந்தளவுக்கு மக்கள் விரும்பவில்லை.

தெற்கு பார்த்த வீடுகளில் உள்ளவர்கள் வாழவில்லையா என்று கேட்கலாம். தெற்கு பார்த்த வீடுகளில் உள்ளவர்கள் வாழ்வார்கள் ஆனால் அவர்களுக்கு நல்ல காலம் இருக்கும் வரை தான் வாழ்வார்கள். கெட்டகாலம் வந்துவிட்டால் அவர்களின் வாழ்வு தரம் குறைந்துவிடும்.

வடக்கு பார்த்த வீடுகளுக்கு கெட்டகாலம் வந்தால் கூட அவர்களுக்கு ஏதோ ஒன்று அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொண்டே சென்றுக்கொண்டு இருக்கும். எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் உடனே அதில் இருந்து மீண்டு சென்றுவிடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 3, 2019

பாவமும் புண்ணியமும்


வணக்கம்!
          நேற்று தந்த ஆத்மசாந்தி பூஜை பதிவை படித்துவிட்டு பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். என்னால் இவரை கவனிக்கமுடியவில்லை அதனால் எனக்கு பாவம் வந்து சேருமா என்று கேட்டனர். 

இன்றைய வாழ்க்கை ஒரு பரபரப்பான ஒரு வாழ்க்கையாகவே இருக்கின்றது. பலர் தங்களின் கடமையை நிறைவேற்ற தவறிவிடுகின்றனர். என்ன தான் பரபரப்பான ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் நமது கடமை என்பதை நன்கு சிந்தித்து அதற்கு தகுந்தார் போல் செயல்படவேண்டும்.

பாவமும் புண்ணியமும் கலந்து தான் மனிதன் பிறப்பான். நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்படுவதால் அனைத்து கடமையையும் இழுத்துபோட்டு செய்யவேண்டும். உங்களின் தாய் தந்தையை விட்டுவிடகூடாது. உங்களின் வீட்டில் பெரியோர்கள் யார் இருந்தாலும் விட்டுவிடகூடாது. அவர்களை பரபரப்பான சூழ்நிலையில் நீங்கள் கவனித்தால் கண்டிப்பாக அது தான் சிறந்த ஒன்றாக இருக்கும்.

பாவமும் புண்ணியமும் என்பது இதுவரை நீங்கள் முற்பிறவியில் பெரியோர்களை கவனிக்க தவறிய விட்ட கடமையால் பாவம் இருக்கும். அந்த பாவத்தை எல்லாம் இந்த பிறவியில் இருக்கும் பெரியோர்களுக்கு நீங்கள் செய்யும்பொழுது அது புண்ணியமாக இருக்கும்.

உங்களுக்கு இதுவரை நடந்தவிசயங்களை எல்லாம் விட்டுவிட்டு உங்களின் நீங்கள் அனைத்து கடமையும் செய்பவர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு செயல்படுங்கள். அனைத்திலும் உங்களுக்கு மதிப்பும் கூடும் உங்களின் வாழ்க்கையும் சிறக்கும்.

பலர் இந்த அமாவாசையை தவறவிட்டுவிட்டார்கள். அடுத்த அமாவாசையில் இந்த பூஜையில் கலந்துக்கொள்ளலாம். புரட்டாசி மாத அமாவாசையில் இதனை செய்வோம் அப்பொழுது இலவசமாக செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 2, 2019

வீடு


வணக்கம்!
         பல வருடங்களாக தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு நாம் பரிந்துரை செய்யும் கருத்தாக இருப்பது நீங்கள் ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்று சொல்லுவது உண்டு. பலருக்கு என்னுடைய வேண்டுதல் அவர்களுக்கு எப்படியும் ஒரு வீடு கிடைத்துவிடவேண்டும் என்று இருக்கும்.

மறைமுகமாகவே இந்த வேண்டுதலை வரும் நண்பர்களுக்கு வைத்துவிடுவேன். தொடர்ச்சியாக நம்மை நோக்கி வரும் நண்பர்களுக்கு நம்மால் முடிந்த நிறைய ஆன்மீகவிசயங்களை அவர்களுக்கு என்று செய்துக்கொடுப்பது உண்டு.

எந்த வித பணத்தின் நோக்கம் இல்லாமல் அவர்களுக்கு நல்ல வீட்டை நாம் நமது வழியில் அமைத்துக்கொடுக்கவேண்டும் என்று இதனை செய்து இருக்கிறேன். அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் அவர்களின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பேற்று இதனை செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

வரும்காலத்தில் இதனை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் இன்றைய காலத்தில் வீடு வாங்குவது என்பது ஒரு லாபம் அற்ற முதலீடு என்று நினைக்கிறேன். பெரியதாக லாபம் என்பது இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு கோடி இரண்டு கோடி என்று பணத்தை போட்டு அதில் இருந்து பெரியதாக ஒன்றும் கிடைக்க போவதில்லை என்பது போலவே இருப்பதால் இதனை தவிர்க்க நினைத்து இருக்கிறேன்.

உங்களுக்கு எது நல்ல முதலீடாக இருக்கும் என்பதை உங்களின் நிதி ஆலோசகரை கலந்து ஆலோசித்துவிட்டு அதில் உங்களின் முதலீடுகளை போடுங்கள். பெரியளவில் பணத்தை போட்டு வீட்டை வாங்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆத்மசாந்தி பூஜை


வணக்கம்!
          ஆத்மசாந்தி பூஜை செய்தபொழுது நிகழ்ந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். இதனை நம்புவது கஷ்டமாக இருந்தாலும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது அதனால் இதனை பகிர்ந்துக்கொள்கிறேன்.

பல ஆத்மாக்கள் மறுபிறவி எடுத்து இருக்கின்றது என்பதை சொல்லவேண்டும். நாம் இதற்க்கு செய்யும்பொழுது அவர்களின் தற்பொழுது உள்ள வாழ்வு சிறக்கவும் செய்யும். கண்டிப்பாக அந்த ஆத்மாக்கள் உங்களை வாழ்த்தும்.

ஒரு சில ஆத்மாக்கள் இறக்கும்பொழுது பட்டினியில் கிடந்து இறந்து இருக்கின்றது. இன்றைக்கும் பல வீடுகளில் நடக்கும் சம்பவமாக இது இருந்தாலும் நமது நண்பர்கள் கொடுத்த விசயத்தை வைத்து செய்யும்பொழுது சோறு போடாமலேயே இருந்து இருக்கின்றனர்.

ஏதோ ஒரு விதத்தில் இந்த குற்றம் உங்களையும் பின்தொடர்கின்றது. யார் என்பதை நான் வெளியில் சொல்லவில்லை நீங்கள் கொடுத்த நபர்களின் உண்மை தன்மை அதாவது அவர்களின் வாழ்க்கை கடைசி காலத்தில் எப்படி சென்றது என்பதை நீங்கள் நினைத்து பாருங்கள் நான் சொல்லுவது உங்களுக்கு புரியும்.

என்னால் முடிந்தளவுக்கு இதற்கு எல்லாம் செய்து இருக்கிறேன். நாம் தற்பொழுது அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்பது தெரிகின்றது. முடிந்தவரை நண்பர்களே உங்களின் வீட்டில் இருக்கும் வயதானவர்களை நன்றாக கவனிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறுவதால் காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். ஆடி மாதம் என்பதால் அனைவரும் இதில் பங்குக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          தெளிவான சிந்தனையோடு செயல்படவைப்பது ஆன்மீகத்தின் முக்கியபங்கு. மற்றவர்களை விட ஆன்மீகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெரிய சிக்கல்களை மாட்டிவிடமால் அவர்களை தெளிவாக வைக்கும்.

நீங்கள் சரியானவர்களாக இல்லாமல் ஏதோ போகின்ற போக்கில் போகட்டும் என்று இருந்தால் நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதற்க்கே லாயக்கற்றவர்கள் என்று அர்த்தம்.  ஆன்மீகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை விட அதிகமான சிந்தனையில் இருப்பவர்கள் என்பதால் தெளிவாக இருங்கள் என்று சொல்லுகிறேன்.

பலர் பெரிய சிக்கல்களில் சிக்கி தவிப்பதற்க்கு காரணமாக இருப்பது எல்லாம் அவர் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்காமல் இருப்பதால் தான் ஏற்படுகின்றது. தெளிவான முடிவுகளை எடுக்க குரு கிரகம் நன்றாக செயல்படவேண்டும்.

ஒரு ஆன்மீகவாதி என்றாலே அவர்க்கு கண்டிப்பாக குரு கிரகம் நன்றாக செயல்படும். குரு கிரகம் நன்றாக செயல்படும்பொழுது அவரால் சிறப்பான ஒரு முடிவை எடுப்பார்கள். சிக்கலில் இருந்து வெளியில் வருவதற்க்கு குரு கிரகம் வேலை செய்யவேண்டும்.

உங்களின் கடந்தகால தவறுகளை எடுத்து பார்த்தால் குரு கிரகம் சரியில்லாத நேரத்தில் எடுத்த முடிவுகளால் தான் பெரும்பாலும் இருக்கும். மற்ற கிரகங்களின் பலன் அதிகமாக இருக்கும்பொழுது முடிவுகள் சரியாக இருக்காது. முடிந்தவரை நாம் நன்றாக சிந்தித்து செயல்படுகிறோமா என்பதை பார்த்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு