Followers

Tuesday, December 31, 2013

நன்றி



வணக்கம் நண்பர்களே!
                    2013 ஆம் வருடத்தில் முடிந்தவரை என்னால் உங்களின் ஆத்மதிருப்திக்கு பரிமாறினேன். இந்த வருடத்தின் ஒவ்வொரு மாதத்தையும் நான் பார்த்து வரும்பொழுது அடடா இன்னமும் நிறைய பதிவுகளை நமது நண்பர்களுக்கு கொடுத்து இருக்கலாமே என்று தோன்றுகிறது. 

கடந்த வருடம் அம்மனிடம் வேண்டுதல் வைத்திருந்தோம் நிறைய பதிவுகளை இந்த வருடம் தரவேண்டும் என்று அது இருந்தது. அதனை அம்மனும் நிறைவேற்றிக்கொடுத்தது என்பது உண்மை. 

பதிவை கொடுத்ததை விட நல்ல நண்பர்களை அம்மன் கொடுத்தது என்பது மட்டுமே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ஏதோ ஒரு சோதிடரிடம் சென்று ஜாதகத்தை பார்த்தோம் திரும்பி வந்தோம் என்று இல்லாமல் அனைவரும் குடும்பத்தில் உள்ள உறவினர்போல் என்னை ஏற்றுக்கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஜாதககதம்பத்தின் வழியாக வந்த அனைத்து நண்பர்களும் என்னை ஒரு சோதிடராக மட்டும் பார்க்காமல் அதனையும் தாண்டி என்னை பார்த்தவிதம் மிகவும் பெரியது என்று எனக்கு தோன்றும். ஒரு சோதிடம் பார்த்தால் பணத்தை தருவதும் மட்டும் இல்லாமல் தன் கண்ணீரையும் விட்டு அழுதவர்கள் அதிகம். கடவுளிடம் மட்டுமே கண்ணீரை பெரும்பாலும் காணிக்கையாக்குவார்கள் ஆனால் என்னை பார்த்து அழுதவர்கள் இங்கு அதிகம் பேர் இருக்கிறார்கள்.

கண்ணீரை காணிக்கையாக்கிறார்கள் இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே அம்மனை பொதுவாக மாற்றி உங்களின் கோரிக்கையை தீர்த்து வைத்தேன். 

ஜாதககதம்பத்தில் எழுதப்படும் ஒவ்வொரு பதிவுகளும் எந்தவித முன் ஏற்பாடுகள் இல்லாமல் எழுதப்படுகிறது என்ன வருகிறதோ அதனை அப்படியே எழுதுவேன். ஒரு சிலருக்கு இது எரிச்சல் கூட ஏற்படலாம் என்ன இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும். நான் ஏற்பாடு செய்து டைப் செய்தால் அதில் ஒரு செயற்கை தன்மை வந்துவிடும் என்பதால் அப்படியே டைப் செய்து பதிவேற்றுகிறேன்.அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஜாதககதம்பத்தில் சோதிடம் இல்லாத ஆன்மீகபதிவுகள் அனைத்தும் மிகவும் சிக்கலான ஒரு தலைப்பு அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் நான் செய்து பார்த்துவிட்டு தான் உங்களுக்கு பதிவில் தருகிறேன். அதனை புரிந்துக்கொள்ளுதல் என்பது ஒரு சாதாரணநபருக்கு மிகவும் கடினமான ஒன்று.ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு கூட புரியாத புதிராக மட்டுமே இருக்கும். அதனை தகுந்த குரு வழியாக மட்டுமே கற்றுக்கொண்டு பயிற்சியில் ஈடுபடுங்கள்.

தினந்தோறும் புதிய நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள் அதற்கு காரணம் நீங்கள் தான் அதற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். உங்களால் எனக்கு புதியவர்கள் அறிமுகம் கிடைக்கிறார்கள். 

தொழில் அதிபர்களைப்பற்றி சொல்லவேண்டும். ஜாதககதம்பத்தை நம்பி முதலில் பணம் போட தயங்கியவர்கள் பல பேர் இருக்கின்றார்கள். இன்று எனது கம்பெனியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வருபவர்கள் அதிகம். இன்று புதிய முதலீடு செய்யும்பொழுது அவர்கள் என்னிடம் கேட்கும்வார்த்தை நீங்கள் உதவுகிறீர்கள் என்று சொன்னால் நான் எவ்வளவு பணத்தையும் போடுகிறேன் என்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நன்மை நடந்துள்ளது என்பதால் மட்டுமே இப்படி வருவார்கள் இல்லை என்றால் வரமாட்டார்கள். அவர்களும் தொடர்ந்து ஆதரவை தரவேண்டும்.

இனிவரும் வருடத்தில் நிறைய பதிவுகள் மற்றும் அனைவருக்கும் நன்மையும் தருவதற்க்கு நமது அம்மன் துணைபுரியவேண்டும். கண்டிப்பாக அது துணைபுரியும் மாதமாதம் அதற்கு பூஜை செய்பவர்கள் அதிகம்பேர் வருவதில் இருந்து தெரிகிறது.

2014 ஆவது வருடம் மிகப்பெரிய மாற்றத்தை அனைவருக்கும் கொடுக்கும். இந்தியாவின் தலைவிதியை மாற்ற ஒரு தேர்தல் வரபோகின்றது. இன்னும் பல நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும் காலமாக இருக்க போகின்றது. இதுவரை இருந்த மனக்கவலை எல்லாம் விட்டுவிட்டு 2014 ஆம் வருடம் நல்லவாழ்க்கை அனைவருக்கும் அமையும் என்ற நம்பிக்கையில் புதுவருடத்தை எதிர்க்கொள்ளுங்கள்.அம்மனும் உங்களுக்கு நல்லதை செய்யும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள். நாளை பதிவு வரும் நான் அலுவலகத்தில் தான் இருப்பேன். நாளை மட்டும் சோதிடபலனை கேட்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சூப் பரிகாரம் சூப்பர்


வணக்கம் நண்பர்களே!
                    சூப் பரிகாரம் சூப்பராக வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். பல நண்பர்கள் போனில் தொடர்புக்கொண்டு பேசினார்கள். அதனைப்பற்றி மேலும் சில கருத்துக்கள்.

இந்த மாதிரியான பரிகாரங்கள் எல்லாம் அனைவருக்கும் சரிப்பட்டு வராது. நான் சொல்லுகிறேன் என்றால் மனிதர்களை பார்த்து அதற்கு தகுந்தார்போல் செய்வது உண்டு. நீங்கள் ஒரு தொழில்முறையாக சோதிடராக இருந்தால் இந்த மாதிரி எல்லாம் சொல்லகூடாது. நானும் தொழில்முறை சோதிடர் தான் ஆனால் நான் செய்யும் வேலை அமானுஷ்ய விசங்கள்.

நீங்கள் தொழில்முறையில் இருக்கும்பொழுது உங்களின் நடவடிக்கை எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உள்ளுக்குள் அசைவம் சாப்பிட்டாலும் வெளியில் சைவம் தான் ஆன்மீகத்திற்க்கு ஏற்றது என்று சொல்லவேண்டும். சைவம் தான் சாப்பிடவேண்டும் என்று சொல்லவேண்டும். உங்களை அலங்கரிக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே வரும் வாடிக்கையாளர்கள் உங்களை நம்புவார்கள்.

நான் ஒரு வருடம் வேலை செய்யாமல் கூட இருக்கலாம் எப்பொழுதாவது ஒரு வேலை மட்டும் செய்துக்கொண்டு அதில் வரும் பணத்தை உட்கார்ந்து பல வருடங்கள் சாப்பிடலாம். நீங்கள் அப்படி இல்லை தினமும் கூட்டம் வரவேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களால் சோதிடதொழில் செய்யமுடியும். 

ஒரு சோதிடராக இருந்தால் இப்படி யாரும் பரிகாரம் சொல்லுவார்களா ?கோவில்கள் அல்லது அவர்களே பூஜை செய்கிறேன் என்று சொல்லி செய்வார்கள். அவர் ஒரு மூட்டை தூக்கும் தொழில் செய்பவர் அவர் கேட்டார் இப்படி சொல்லி செய்ய சொன்னேன். அவரின் நிலையில் நாம் இருந்தால் கோவிலுக்கு செல்லமுடியுமா அவர் எல்லாம் வருடத்திற்க்கு ஒரு முறை கோவிலுக்கு சென்றாலே மிகப்பெரிய விசயமாக தான் இருக்கும். உழைப்பவனுக்கு ஏன் கோவில், பூஜை  செய்யவேண்டும்.

தினகூலி பார்ப்பவர்களுக்கு கடவுளும் தேவையில்லை கோவிலும் தேவையில்லை அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு. கடவுள் இருந்தால் என்ன கடவுள் இல்லாமல் இருந்தால் என்ன. இப்பொழுது நாட்டில் நடப்பதை உங்களிடம் சொல்லுகிறேன் தினகூலி மக்களை குறிபார்த்து தான் பிறமதங்கள் தங்களின் வேலையை முதலில் ஆரம்பிக்கிறார்கள். தினகூலி செய்பவன் சிவனை கும்பிட்டு இருப்பான் அவனுக்கு தயிர்சாதம் கொடுத்துருப்பார்கள் பெருமாளை கும்பிட்டு இருப்பான் லட்டு கிடைத்திருக்கும். இயேசுவை கும்பிட்டு இருப்பான் பிரியாணி கிடைத்து இருக்கும். 

தினகூலி செய்பவனுக்கு உடல்வலிமை தேவைப்படும் அவனுக்கு தயிர்சாதத்தை கொடுத்தால் வேலை நடக்குமா பிரியாணி கொடுக்கவேண்டும். நான் காளிக்காம்பாளை தரிசனம் செய்வதற்க்கு பிராட்வே செல்லும்பொழுது அங்கு இருக்கும் தெருக்களில் ஒரத்தில் பல பேர் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள அனைவரும் தினகூலிகள் செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று தெருஓரத்தில் பிரியாணி தயார்செய்துக்கொண்டிருப்பார் ஒருத்தர். அதன் ஒரத்தில் இயேசு பிராத்தணை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். கூட்டம் முடிந்தவுடன் அனைவருக்கும் பிரியாணி கொடுப்பார்கள்.

நமது ஆன்மீகவாதி கண்டிப்பாக அந்த மக்களிடம் ஏன் நீங்கள் இப்படி வாழ்கின்றீர்கள் என்று ஒரு வார்த்தை கூட கேட்டு இருக்கமாட்டார்கள் ஆனால் இயேசு அங்கு செல்கிறார். மக்களுக்கு தான் ஆன்மீகவாதி மாறாக ஆன்மீகவாதிக்கு மக்கள் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

ஒரு நேரத்தில் ஒரு ஏழையை நான் காப்பாற்றினேன் அப்படி காப்பாற்றும்பொழுது அதனை என்னுடைய குருநாதரிடம் சென்று சொன்னேன். இப்படிப்பட்ட ஒரு ஏழையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் காப்பாற்றிவிட்டேன் சாமி என்றேன். அவர் சொன்ன வார்த்தை இன்று வரை நான் கடைபிடித்து வருகிறேன். அவர் சொன்ன வார்த்தை இது தான் ஒன்றுமே இல்லாதவனை காப்பாற்ற தான் நம்மள மாதிரி ஆட்களை கடவுள் படைக்கிறார் என்றார். இன்று வரை இந்த வார்த்தை எனக்கு மிகப்பெரிய ஞானவார்த்தை. 

மூட்டை தூக்கும் தொழிலாளியின் நிலையில் இருந்து நான் செய்தது சரியான பரிகாரம். அதனை வார்த்தையால் சொல்லி உங்களுக்கு புரியவைக்கமுடியாது. அந்த நிலையில் இருப்பவர்க்கு 100 சதவீதம் சரியான பரிகாரம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, December 30, 2013

இரயில் பயண அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    இரயில் பயணங்களில் செல்லும்பொழுது எழுதியவை படித்துவிட்டு பல நண்பர்கள் போனில் தொடர்புக்கொண்டு என்னிடம் உண்மை தான் என்று சொல்லுகிறார்கள். முதலில் நாம் திருந்தவேண்டும். நாம் அடுத்தவர்களிடம் பேச ஆரம்பித்தால் தான் அனைவரும் பேச ஆரம்பிப்பார்கள். மார்க்கெட்டிங் செய்பவர்கள் எப்பொழுதாவது தான் தொல்லைக்கொடுப்பார்கள். பயணம் செய்யும் அனைவரும் மார்க்கெட்டிங் செய்பவர்கள் கிடையாது. 

சாதாரண வகுப்பில் செல்பவர்கள் அந்த பயணத்தை இனியாக்குவார்கள். அனைவருடனும் சகசமாக பழகுவார்கள். அப்பாவித்தனம் வெளிப்படும். உயர்வகுப்பில் செல்பவர்கள் அனைவரும் வில்லங்கத்தை தன்னகத்தே கொண்டு செல்பவராக இருக்கின்றார்கள். 

இதனை எழுத காரணம் மக்கள் அனைவரும் எலெக்ட்ரானிக் உடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை சொல்லுவதற்க்கு மட்டுமே. இப்பொழுது திருமணம் செய்வதற்க்கு எல்லாம் பயப்படுகிறார்கள் ஏன் என்றால் வரும் நபர் எப்படிப்பட்டவரோ அவருடன் எப்படி பழகுவது என்று பயப்படுகிறார்கள்.

ஆணும் பெண்ணும் செல்போனில் தான் குடும்பம் நடத்துகிறார்கள். நேரில் பார்த்து பேசுவது குறைந்து வருகிறது. உயிர் தன்மை வேண்டும் என்றால் மனிதன் மனிதனோடு பழகவேண்டும். மனிதன் மனித தன்மையோடு பழக ஆரம்பித்தால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




இரயில் பயண அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது பயணங்கள் அதிகமாக இருக்கின்றன அப்படி வெளியூர் செல்லும்பொழுது அதிகமாக நான் பயணத்திற்க்கு தேர்ந்தெடுப்பது இரயில் பயணம் மட்டுமே. நீண்ட தொலைவு மற்றும் மறுநாள் சென்று நமது வேலையை சரியாக எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை செய்யலாம் என்ற காரணத்தால் இரயிலை தேர்ந்தெடுப்பேன்.

இரயில் பயணத்தில் அதிகமாக 2 A/C அல்லது 3 A/C யில் வகுப்பை தேர்ந்தெடுப்பேன். ஒரு சலுகை என்ன என்றால் செலவை எல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களே செய்வார்கள். நான் சாதாரணமான வகுப்பை தேர்ந்தெடுக்க சொன்னாலும் A/C யை தான் தேர்ந்தெடுப்பார்கள்.

A/C யை தேர்ந்தெடுத்து பயணம் செய்யும்பொழுது அங்கு நடக்கும் ஒரு சில விசயங்களை உங்களுக்கு சொல்லவேண்டும் என்பதற்க்காக மட்டுமே இந்த பதிவை எழுதினேன். 

A/C. வகுப்பில் உள்ளே சென்று அமரும்பொழுது அனைவரும் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு படம் பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது அதனைவிட்டால் யாருக்காது போனை போட்டு பேசிக்கொண்டே இருப்பது. ஒரு சிலர் மறுநாள் பெரிய தேர்வு இருப்பது போல் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே இருப்பார்கள்.

பக்கத்தில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான் அவன் நம்மோடு பயணம் செய்துக்கொண்டிருக்கிறான். அவனோடு ஒரு வார்த்தையாவது பேசுவது கிடையாது. . இந்த பயணத்தில் அனுபவத்துக்கொண்டிருப்பவர்கள் சின்ன குழந்தைகள் மட்டுமே இருக்கும். ரொம்ப என்ஜாய் செய்து பயணம் செய்துக்கொண்டிருக்கும். மீதி இருக்கும் மனிதர்கள் எல்லாம் சேரும் இடத்திற்க்கு சென்றால் போதும் என்று நினைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

ஒரு இடத்தில் மனிதர்கள் ஒன்று கூடினால் ஒவ்வொரு மனிதரைப்பற்றியும் தெரிந்துக்கொள்ள ஒரு நல்லவாய்ப்பாக தான் இந்த மாதிரியான பயணங்கள் இருக்கின்றன. மனிதர்கள் ஒன்று கூடி இருக்கும்பொழுது அவர்களைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம் அவர்கள் வழியாக ஒரு நல்ல அனுபவம் நமது வாழ்க்கைக்கு கிடைக்கும் இதனை எல்லாம் விட்டுவிட்டு எலெக்ட்ரானிக் உடன் வாழ்ந்துக்கொண்டிருப்பது நமது வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் முன்னேற்றம் ஏற்படபோவதில்லை.

ஒரு சாதாரண வகுப்பில் நான் செல்லும்பொழுது அங்குள்ள மனிதர்களில் பாதிப்பேர் என்னோடு நன்றாக பழகிவிடுவார்கள். ஆனால் உயர்வகுப்பில் ஒருத்தர் பழகினாலே பெரிய விசயம்.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, December 29, 2013

குரு தசா பலன்கள் பகுதி 67


வணக்கம் நண்பர்களே!
                    குருவின் தசாவில் அடுத்து சுக்கிரனின் புத்தியைப்பற்றி நாம் பார்க்கலாம். குருவுக்கும் சுக்கிரனுக்கும் எப்பொழுதும் சரிவராது இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டு மனிதனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை எப்படி இருக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

பொதுவாக இவர்களுக்கு பிரச்சினை கொடுப்பது என்பது தனுசு மீனம் ரிஷபம் துலாம் இந்த நான்கு ராசிகளை தான் இருக்கும். இவர்கள் தான் இவர்களின் கொடுமையை அறிவார்கள். மீதி உள்ளவர்களுக்கு அந்தளவுக்கு இருக்காது. 

ரிஷபராசியில் பிறந்தவர்களுக்கு குரு தசா மிகப்பெரிய கெடுதலை எல்லாம் செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் இந்த ராசிக்கு குரு நல்ல இடத்தில் அமர்ந்தால் கூட கெடுதலை செய்திருக்கிறது.

ஒரே எந்தநேரமும் சண்டைப்போட்டுக்கொண்டு இருப்பவர்கள் சேர்ந்து எப்படி பலனை தருவார்கள் என்பதைப்பற்றி தான் இனி பார்க்கபோகிறோம். அதே நேரத்தில் ஒரு நன்மையும் இதில் நடைபெறும். குரு கொடுத்தால் சுக்கிரன் கொடுக்கமாட்டார். சுக்கிரன் கொடுத்தால் குரு கொடுக்கமாட்டார். யாராவது ஒருவர் கொடுத்து உதவுகிறாரே என்று நாம் நினைத்துக்கொள்ளவேண்டியது. 

குரு நேர்மையான வழியில் செல்வத்தை தருவார். சுக்கிரன் கொஞ்சம் தவறான வழியில் செல்வத்தை தருவார். எப்படி கொடுத்தால் என்ன நமக்கு செல்வம் வந்தால் சரி என்று நினைக்கிறீர்களா இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    என்னை சந்திக்க வந்த நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். அவருக்கு பதிலை சொல்லிவிட்டேன். உங்களுக்கும் இதனை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

கேள்வி நீங்கள் திருமணம் செய்யும்பொழுது ஜாதகம் பார்ப்பீர்களா?
அதாவது பெண்ணின் ஜாதகத்தில் நல்ல ஜாதகத்தை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வீர்களா என்று கேட்டார்.

பதில்
     சோதிடம் என்பது 100 சதவீதம் உண்மை என்று நம்புகிறவன் தான். ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொடுக்கும் வேலையை தான் நான் செய்துக்கொண்டு இருக்கிறேன். எப்படிப்பட்ட மோசமான ஜாதகத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல கிரகங்களின் துணையோடு ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நன்றாக நடக்கும்படி செய்கிறேன். 

இப்படி செய்வது என்பது கிரகத்தை மீறி நாங்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இப்பொழுது என்னோடு தொழில்க்கு உதவி கேட்பவர்களுக்கு செய்துக்கொடுத்து கொண்டிருக்கும் வேலையும் இது தான். அவர்களின் ஜாதகத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கவேண்டும் ஆனால் என்னால் அவர்களுக்கு லாபத்தை கொடுக்கமுடிகிறது என்றால் எங்களின் வேலை எப்படிப்பட்டது என்று தெரியும்.

இதனை விட மிகப்பெரிய சக்தி என்ன என்றால் எங்களை போல் இருப்பவர்கள் வைத்திருக்கும் தெய்வம் அவர்களின் குடியை காக்கும். நான் திருமணம் செய்யும் பெண்ணையும் காக்கும். அதே நேரத்தில் அதனை அவர்கள் பயன்படுத்தமுடியும். எனக்கு பிறகு அல்லது ஒரே காலத்தில் அவர்கள் அந்த தெய்வத்தை தன்னோடு வைத்திருக்கமுடியும். வேலையை சொன்னாலும் அந்த தெய்வம் அவர்களுக்கு செய்துக்கொடுக்கும். எப்படிப்பட்ட மோசமான ஜாதகத்தையும் தேர்ந்தெடுப்பேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 66


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் கேதுவின் புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். பொதுவாக எந்த ராசியில் கேது அமர்கிறதோ அந்த ராசியின் அதிபதியின் குணத்தை காட்டகூடியதாக தான் பெரும்பாலும் கேது புத்தி இருக்கும்.

கேது லக்கினத்தில் அமர்ந்து புத்தி நடைபெறும்பொழுது அடிக்கடி கோவில் காரியங்களில் ஈடுபடவைக்கும். மகான்களில் தரிசனம் பார்பபீர்கள்.

கேது இரண்டாவது வீட்டில் அமர்ந்து புத்தி நடைபெறும்பொழுது தனவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி ஏற்படும்.

கேது மூன்றாவது வீட்டில் அமர்ந்து புத்தி நடைபெறும்பொழுது அதிக அலைச்சலை தரும். சம்பந்தமில்லாமல் பழி உங்களின் மீது ஏற்ப்பட்டு பிரச்சினை தரும்.

கேது நான்காவது வீட்டில் அமர்ந்து புத்தி நடைபெறும்பொழுது நல்ல வாழ்க்கை மற்றும் வீடு வாகனங்கள் பணவரவு ஏற்படும்.

கேது ஐந்தாவது வீட்டில் இருந்து புத்தி நடைபெறும்பொழுது புத்திரர்ளின் வழியில் நல்லது நடக்கும். தேர்வில் வெற்றி பெறமுடியும். விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

கேது ஆறாவது வீட்டில் இருந்து புத்தி நடைபெறும்பொழுது அதிகப்படியான கடன்களை உருவாக்கிவிடுவார். நோயும் வரும். எதிரிகளால் தாக்கப்படுவீர்கள்.

கேது ஏழாவது வீட்டில் இருந்து புத்தி நடைபெறும்பொழுது துணைவர் அமைவார். துணைவர் வரும் இடத்தில் மிகப்பெரிய ஆன்மீகபலம் உள்ளவர்களாக இருப்பார்கள். உங்களோடு சேரும் அனைவரும் ஆன்மீகவாதிகளாக இருக்ககூடும்.

கேது எட்டாவது வீட்டில் அமர்ந்து புத்தி நடைபெறும்பொழுதுஅடிக்கடி விபத்துகளை சந்திக்க நேரிடும். ஊரில் அவமானங்களை சந்திப்பீர்கள். முன்னோர்களின் வழியில் மட்டும் நலலது நடக்கும்.

கேது ஒன்பதாவது வீட்டில் இருந்து புத்தியை நடத்தும்பொழுது ஊரில் ஆன்மீகநிகழ்ச்சிக்கு தலைமை தாங்க உங்களை கூப்பிடுவார்கள். பெரியவர்களின் மரியாதை உங்களுக்கு கிடைக்கும்.

கேது பத்தாவது வீட்டில் இருந்து புத்தியை நடத்தும்பொழுது உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். உங்களின் தொழில் சிறக்கும்.

கேது பதினொன்றாவது வீட்டில் இருந்து புத்தியை நடத்தும்பொழுது அனைத்திலும் வெற்றியை தரும். நல்ல வருமானமும் உண்டு,

கேது பனிரெண்டாவது வீட்டில் இருந்து புத்தியை நடத்தும்பொழுது மருத்துமனைக்கு செல்லவைப்பார். அடிக்கடி தேவையற்ற செலவுகளை ஏற்படுத்திவிடுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சனிக்கு பரிகாரம் அனுபவ உண்மை


வணக்கம் நண்பர்களே!
                    நமது அலுவலகத்திற்க்கு அருகில் ஒரு அரிசி மண்டி இருக்கிறது அங்கு வேலை பார்க்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவரை சந்திக்கும்பொழுது சார் எனக்கு அடிக்கடி ஜலதோசம் ஏற்படுகிறது வேலை செய்யமுடியவில்லை என்று சொன்னார். அவரின் ஜாதகத்தை பார்க்கவில்லை. ஒருவருக்கு ஜலதோசம் ஏற்படுவதற்க்கு காரணம் சனியின் பாதிப்பு அதிகமாக இருக்கவேண்டும் என்று நினைத்து அவருக்கு ஒரு பரிகாரத்தை பரிந்துரைசெய்தேன்.

உங்களின் கடைக்கு எதிர்பக்கமாக பாய் கடை போட்டு சூப் வியாபாரம் செய்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் அங்கு சென்று வாரத்திற்க்கு இரண்டு முறை ஆட்டுக்கால் சூப் வாங்கி நல்ல பெப்பர் தூக்கலாக போட்டு குடித்து பாருங்கள் அப்புறம் வராது என்று சொன்னேன். 

அவர் என்னோடு பேசும்பொழுது எனது அருகில் ஒரு சோதிடர் ஒருத்தர் இருந்தார் அவர் என்னிடம் டேய் என்ன நீ இப்படி எல்லாம் பரிகாரம் சொல்லுகிறாய் என்றார். அவர் வேலை பார்ப்பது மூட்டை தூக்குபவர். அவரை போய் சனிக்கு தீபம் ஏற்று காலபைரவருக்கு காவடி தூக்கு என்றால் அவர் அது எல்லாம் செய்வரா அதனால் இப்படி சொன்னேன் என்றேன்.

சரியாக இரண்டு வாரம் சென்று நீங்கள் சொன்னதை செய்தேன். ஆட்டுக்கால் சூப் குடித்தேனோ அன்றில் இருந்து எனக்கு ஜலதோஷம் ஏற்படவில்லை நன்றாக இருக்கிறேன் என்றார். அப்படியே செய்யுங்கள் என்றேன்.


சோதிடரகசியம் 
              ஆடு என்பது மேஷராசியை குறிக்கும். செவ்வாய் சனிக்கு எதிரி அல்லவா அதனால் ஆட்டுக்கால் சூப் செய்து குடித்து பாருங்கள். சனியின் பிரச்சினை தீரும்.

நண்பர்களே இதனை நான் சொல்லுவதால் உங்களுக்கு என் மீது ஒன்று சிரிப்பு வரலாம் அல்லது கோபம் வரலாம் ஆனால் எனக்கு அந்த மனிதனை நோயில் இருந்து காப்பாற்றியது மிகப்பெரிய திருப்தி. நாம் ஒவ்வொரு மனிதனுக்கும் பலனை சொல்லும்பொழுதும் அந்த மனிதனின் நிலையை நாம் கவனத்தில் கொண்டு சொல்லவேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவனை சுற்றி இருக்கும் சூழ்நிலை பொருத்து அவனுக்கு நாம் கொடுக்கும் இந்த மாதிரியான உதவி சரியாக போய் சேரும். இதனை நான் அனுபவத்தில் வைத்து செய்து வருவேன். 

பிரச்சினை வருவது இயற்கை அந்த பிரச்சினையை தீர்க்கும் கலை ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் அதனை நீங்கள் செயல்படுத்துவதில் தான் வெற்றி இருக்கிறது. அந்த நபருக்கு நான் சோதிடன் என்று தெரியும் ஆனால் நான் செய்த சரியான உதவி என்னை கடவுளாக அவனுக்கு தெரியும். நீங்கள் சோதிடனாக இருக்கவிரும்புகிறீர்களா? அல்லது கடவுளாக இருக்க விரும்புவீர்களா? 

சனியின் தொல்லை சளி தொல்லை அதற்கு பரிகாரம் என்றால் ஆட்டுக்கால் சூப் மட்டுமே இருக்கமுடியும். நீங்கள் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்த பதிவு சனிக்கு மிகப்பெரிய ஆப்பு. 

அசைவம் சாப்பிடாதவர்களுக்கு கண்டுபிடித்து சொல்லுகிறேன். அதுவரை சனியோடு போராடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 65


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் கேதுப்புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். கேதுபுத்தியின் உள்ள அந்தரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

அந்தரநாதர்கள்

கேது   0 மாதம் 19 நாள்
சுக்கிரன் 1 மாதம் 26 நாள்
சூரியன் 0 மாதம் 16 நாள்
சந்திரன் 0 மாதம் 28 நாள்
செவ்வாய் 0 மாதம் 19 நாள்
ராகு 1 மாதம் 20 நாள்
குரு 1 மாதம் 14 நாள்
சனி 1 மாதம் 23 நாள்
புதன் 1 மாதம் 17 நாள்

ஒவ்வொரு அந்தரநாதர்களையும் கணக்கிட்டு பலனை சொல்லுங்கள். அந்தரநாதர்களின் காலம் இதனை பொருத்தவரை குறைவு தான் அதனால் நீங்கள் சரியான பலனை சொல்லமுடியும் நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினையும் தீர்வும் பகுதி 2


ணக்கம் ண்பர்களே!
                    திதி கொடுப்பதைப்பற்றி எழுதி இருந்தேன். புரட்டாசி மற்றும் ஆடி அமாவாசையில் கொடுக்கும் திதி வழக்கமாக ஒன்றாக இருந்தாலும் உங்களின் முன்னோர்கள் இறந்த கிழமை என்ன திதி என்று பார்த்து அன்று திதி செய்யவேண்டும். அப்பொழுது மட்டும் இறந்தவர்களின் ஆத்மாவிற்க்கு அது போய்சேரும் என்று சொல்லுவார்கள். சரி இதனைப்பார்த்து செய்துவிடுங்கள்.

குலதெய்வத்தைப்பற்றி நிறைய எழுதி உள்ளேன் அதனால் குலதெய்வத்தைப்பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. உங்களின் குலதெய்வத்தை சரியாக பராமரித்து அதற்கு பூஜை செய்து வந்தாலே போதும்.

ஜாதகத்தை கையில் எடுங்கள் அந்த நாள் நல்ல நாளாக இருக்கவேண்டும். அப்படி ஒரு சுபநாளில் எடுத்து அதில் என்ன தான் உள்ளது என்று பாருங்கள். ஒவ்வொரு கிரகத்தையும் பாருங்கள். அந்த கிரகம் எங்கு அமர்ந்துள்ளது என்று பாருங்கள்.

முதலில் ஜாதகத்தில் பிறந்த நாள் மற்றும் கிழமை நேரம் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்ப்பதும் அவசியம். இதனை பார்த்துவிட்டு சந்திரனின் நிலை பாருங்கள். வளர்பிறை சந்திரன் அல்லது தேய்பிறை சந்திரனாக இருக்கிறதா என்று பாருங்கள். சந்திரனின் நிலை மிக அவசியம்.

வளர்பிறை சந்திரனாக இருந்தால் நல்லது. பெளர்ணமியாக இருந்தாலும் நல்லது தான் ஆனால் பெளர்ணமி அன்று ரோகினி நட்சத்திரமாக இருக்ககூடாது. அமாவாசையாக இருந்தாலும் நல்லது.

தேய்பிறை சந்திரனாக இருக்ககூடாது வாழ்க்கை படிப்படியாக கீழ் நோக்கி சென்றுக்கொண்டிருக்கும்.

சந்திரன் பிரச்சினை என்றால் என்ன செய்வது

பொதுவாக நான் பரிகாரத்தை சொல்லிவிடுகிறேன். நாங்கள் பயன்படுத்தும் வித்தை என்பது வேறு அதனைப்பற்றி எந்த ஒரு தகவலும் வெளியில் சொல்லகூடாது என்பது குருவின் கட்டளை அதனால் பொதுவான பரிகாரமாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுத்தி பாருங்கள்.

திங்கள் கிழமை அன்று ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்ய சொல்லுவது பொதுவான பரிகாரம். 

திங்கள்கிழமை அன்று சிவன் கோவிலை சுற்றி வாருங்கள். இரவு நேரம்  8 to 9 ஆக அது இருக்கட்டும்.

பெளர்ணமி கிரிவலம் சென்று வாருங்கள்.

பொதுவாக இது அனைத்தும் வளர்பிறையில் இருந்தால் மிகவும் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, December 28, 2013

ஆன்மீக அனுபவங்கள் 145



வணக்கம் நண்பர்களே!
                    நான் இருக்கும் பகுதியில் மின்தடை. இன்று நாம ரெடி ஆனாலும் இன்று கூடுதலாக ஒரு நாள் ஒய்வு எடுத்துக்கொள் என்று இறைவனின் செயல். வெளியில் ஒரு பிரவுசிங் சென்டரில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அனைத்து மக்களும் தன்னுடைய சக்திக்கு மீறி ஒரு சக்தி தேவைப்படுகிறது. அந்த தேடுதல் காரணமாக தான் மனிதன் திருமணம் செய்துக்கொள்கிறான். தன்னுடைய சக்தி இல்லாமல் கூடுதல் ஒரு சக்தி தேவைப்படும் என்று நினைத்து திருமணம் செய்கிறான்.  அனைவருக்கும் திருமணத்தின் வழியாக சக்தி கிடைத்தால் அதனை வைத்து காலத்தை ஒட்டிவிட்டு போய் சேர்ந்துவிடுவான்.

ஒருவருக்கு வரும் மனைவி சக்தியாக வரவேண்டும். அவனை இயக்கும் சக்தியாக வரவேண்டும். அப்படி வந்துவிட்டால் நீங்கள் எந்த வித சக்தியும் எடுக்கவேண்டியதில்லை.பெண்ணின் சக்தி உங்களது உடலில் பரவி அதுவே மிகப்பெரிய சக்தியாக விளங்கிவிடும். திருமணம் செய்தவர்கள் அனைத்திலும் சாதிப்பது இந்த சக்தி மாற்றத்தில் மட்டுமே. 

மனிதன் கடைசிவரை ஒடி அனைத்தையும் செய்துக்கொண்டிருப்பதற்க்கு பின்புலத்தில் இருந்து இந்த சக்தி உங்களுக்கு கிடைக்கிறது. அதனால் வேறு சக்தியை(அம்மனை) தேடிச் சென்று போகவேண்டியதில்லை. திருமணம் வழியாக வரும் சக்தியை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடையுங்கள்.

நன்றி நண்பர்களே !


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, December 27, 2013

குரு தசா பலன்கள் பகுதி 64


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பொதுதகவலாக ஒன்றைப்பார்க்கலாம். இது உங்களுக்கு நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம்.

எனக்கு எப்பொழுது குரு தசா ஆரம்பித்ததோ அன்று இருந்து எனக்கு சமையல் கலை மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. வீட்டிலும் சரி நண்பர்களின் வட்டாரத்திலும் சரி நான் சமைத்தால் அதற்கு என்று நமது நண்பர்கள் கூட்டம் இருக்கும். பெருமையாக சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. பதிவை படிக்கும் நண்பர்கள் பல பேர்க்கும் இது தெரியும்.

ஊருக்கு செல்லும்பொழுது எனது உறவினர்கள் கூட என்னை சமையல் செய்துக்கொடு என்பார்கள். அவ்ர்களின் விருப்பத்திற்க்காக நான் சமைத்து கொடுப்பதும் உண்டு.அந்தளவுக்கு சமையல் செய்துக்கொடுப்பேன். குரு தசாவிற்க்கு இதற்கும் என்ன காரணம் என்று கேட்காதீர்கள். குரு தசா ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு இந்த பழக்கம் ஏற்பட்டது.

ஒரு காரணம் இருக்கலாம் பிறரை திருப்திப்படுத்துவதற்க்கு இது காரணமாக இருக்கலாம்.அடுத்தவரை திருப்திப்படுத்துவதற்க்கு குரு காரகம் வகிப்பார். ஒரு சமையல் நன்றாக இருப்பதற்க்கு காரணம் அதில் நாம் காட்டும் ஈடுபாடு மட்டுமே. உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பொதுவாக ஒரே மசாலாவை தான் உபயோகிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சுவை தனிப்படுவதற்க்கு காரணம் ஒவ்வொருவரும் காட்டும் அன்பு மட்டுமே.

ஆண்கள் சமைப்பதை சொல்லுவதற்க்கு கூட வெட்கப்படுவார்கள். இதில் ஒன்றும் வெட்கம் கிடையாது. உலகில் மிகப்பெரிய சமையல் நிபுணர்கள் எல்லாம் ஆண்கள் தான். உங்களுக்கு சமையல் தெரிந்து இருந்தால் உங்களின் மனைவியின் இதயத்தில் கூடுதலாக அன்பை பெறமுடியும். எனக்கு மனைவி கிடையாது. குரு தசா எனக்கு சமையலையும் கற்றுதந்தது என்பதை சொல்லுவதற்க்காக தான் இந்த பதிவு.

குரு தசா நடைபெற்று கொண்டிருக்கும் ஆண் நண்பர்கள் இனி நல்ல சமைக்க கற்றுக்கொள்ளுஙகள.என்ஜாய்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 144


ணக்கம் ண்பர்களே!
                    பிரச்சினையும் தீர்வும் ஆரம்பித்து முதல் பதிவில் சொல்லிருந்தேன் எப்படிப்பட்ட கர்மா வந்தாலும் அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று சொன்னேன். முதல நாளிலேயே அது என்னை பதம் பார்த்துவிட்டது. சரி விடுங்கள் என்ன செய்தாலும் மக்களுக்கு நன்மை செய்வதில்  ஆயிரம் தடைகள் வந்தாலும் கொடுக்கவேண்டியதை கொடுத்துவிடுவோம்.

ஒரு ஆன்மீகவாதிக்கு உடலிலும் மனதிலும் விஷம் என்பது ஏறக்கூடாது. உடலில் ஏறினாலும் மனதில் ஏறினாலும் சக்தி நம்மிடம் வராது. அதனை எடுக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே நாம் ஆன்மீகவாதியாக இருக்கமுடியும். தலைவலி மாத்திரை உடலில் விஷமாக மாறியது தான் பிரச்சினை. அதனை எடுத்துவிடவேண்டும். 

குரு நாதர் கொடுக்கும்பொழுதே மனதில் விஷமம் இருக்கின்றதா என்று பார்த்து தான் கொடுப்பார்கள். உடலில் விஷம் இருந்தால் அதனை எளிதில் எடுத்துவிடலாம். மனதில் விஷம் என்பது இருக்ககூடாது. அதனை போக்கிவிட்டு தான் அனைத்தும் நமக்கு ஏறும்.

மனதில் விஷம் இருந்தால் குரு கொடுக்ககூடிய விசத்தை வைத்து அனைத்தையும் செய்துவிடலாம். பாதிக்கப்படுவது மக்களாக இருப்பார்கள் அல்லவா. அதனால் அது இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தனக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றிக்கொள்ளலாம் ஆனால் அதனால் பிறர் பிரச்சினையில் மாட்டக்கூடாது. நல்ல விசயங்களாக மக்கள் வந்தால் உடனே செய்துவிடு என்பார். நானும் அப்படிதான் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 63


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் இனி கேது புத்தியை நாம் பார்க்கலாம்.  மொத்த நாட்கள் 11 மாதம் 6 நாட்கள் மட்டுமே. இந்த காலக்கட்டத்தில் நல்லதை விட கெட்டதை அதிகமாக தருவார். இரண்டு பேரும் பக்திக்கு உடையவர் அல்லவா.பக்தியை நோக்கி அதிகம் காலடி எடுத்துவைக்கவிடுவார். 

ஒரு சிலருக்கு நல்லதும் நடைபெறும் அது கேது அமரும் வீட்டை பொருத்தது. ஒரு சிலருக்கு மகரத்தில் கேது அமர்ந்தால் மிகப்பெரிய வளர்ச்சியை இந்த காலகட்டத்தில் அடைவார்கள்.

ஒரு சிலருக்கு கேது புத்தியில் அதிகமான பிரச்சினைகளை சந்திப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் பழியை இவர்கள் மேல் போட்டுவிட்டு அதனை ரசிப்பார்கள்.இவர்களுக்கு என்ன செய்து என்றே தெரியாது. மாட்டிக்கொண்டு முழிப்பார்கள். ஒரு சிலருக்கு உடலில் பலகீனம் ஏற்படும். அங்கம் இழப்பு கூட ஏற்பட வைக்கும்.எதிர்களின் தொந்தரவு இருக்கும்.

கேது நன்றாக இருக்கும்பட்சத்தில் மடாதிபதிகளின் ஆதரவு அரசாங்கம் வழியாக உங்களுக்கு நல்ல உதவி வாகனங்கள் மற்றும் நல்லவிதமான உபசரிப்பு போன்றவை நடைபெறும்.

இனி வரும் பதிவுகளில் தொடர்ந்து கேது என்ன என்ன எல்லாம் செய்யும் என்பதை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கர்மாவின் தாக்குதல்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு வருடத்திற்க்கு ஒரு முறையாவது கர்மாவின் தாக்குதலுக்கு ஆளாகவேண்டும் என்பது எழுதபடாதவிதி். நேற்று காலையில் எழுந்தேன். காலையில் எழும்பொழுது சிறிய தலைவலி இருந்தது. இது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சிறிய நேரம் உட்கார்ந்துக்கொண்டே இருந்தேன். தலைவலி அதிகமாக சென்றது. ஒரு மாத்திரை எடுத்து போட்டுவிடலாம் என்று நண்பரிடம் சொன்னவுடன் ஒரு மாத்திரை எடுத்துவந்து கொடுத்துதான் அதனை போட்டுவிட்டேன். 

அலுவலகத்திற்க்கு வந்து பதிவை ஒன்றை எழுதிவிட்டு வாடிக்கையாளர் ஒருவர் பேசினார். அடுத்த வாடிக்கையாளர் பேசும்பொழுதே பிரச்சினை அதிகமாகிவிட்டது. உடனே அவரிடம் நாளை பேசிக்கொள்ளலாம் என்று முடித்துவிட்டு அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டேன். சும்மா சொல்லசு்கூடாது பிச்சி எடுத்தது கர்மாவின் தாக்குதல் என்றால் அப்படி ஒரு தாக்குதல். 

அம்மனை வைத்து தடுக்கலாம் எதற்கு தடுத்து அதனை சேமித்து வைப்பானே என்று விட்டுவிட்டேன். நாம் எப்படி அடிப்பட்டாலும் இரண்டு நாட்களுக்கு மேல் படுக்கையில் படுக்கவிடாது.  பழைய நிலைக்கு அதுவாகவே திரும்பிவந்துவிடும். கர்மா நம்மை தாக்கும் ஆனால் உயிரை அதுவால் எடுக்கமுடியாது. நாம் நினைத்தால் மட்டுமே அது சாத்தியப்டும்.

இன்றைக்கு ஒரளவுக்கு பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்புகிறது. எந்த ஒரு மனிதனும் தன்னுடைய கர்மாவை அனுபவிக்கதான் நினைப்பான்.தவிர்க்கமாட்டான். நான் சொல்லுவது ஆன்மீகவாதிகளை சொல்லுகிறேன். நிறைய பதிவுகள் வரும் என்று எதிர்பார்த்து வந்திருப்பீர்கள்.  இனி தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, December 26, 2013

குரு தசா பலன்கள் பகுதி 62


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசாவில் புதன் புத்தியை பார்த்தோம். இதில் ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகத்தின் லக்கினம் சிம்மம் அதன் அதிபதியான சூரிய பகவான் மூன்றாவது வீட்டில் அமர்ந்துள்ளார். லக்கினத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார். குரு கிரகத்தோடு சனி மற்றும் ராகு கிரகங்கள் அமர்ந்துள்ளது. சனி+ராகு சேர்ந்து அமர்ந்துள்ளதால் குருவால் தன்னுடைய தசாவில் அந்தளவுக்கு பலனை கொடுக்கமுடியாது. 

குரு தசாவின் சுயபுத்தி மற்றும் சனிபுத்தி இரண்டும் சரியான பலனை தரவில்லை ஆனால் புதன் புத்தி நல்ல பலனை தந்தது. குரு சனி இரண்டும் ராகுவோடு சேர்ந்து இருந்ததால் பிரச்சினை மேல் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களால் நல்ல பலளை கொடுக்கமுடியவில்லை. 

புதன் குருவிற்க்கு நான்காவது வீட்டில் நின்றது. என்ன தான் தசாநாதன் கெட்டாலும் புத்தி நாதன் நின்று தன் நல்ல பலனை தந்தது. ஒருத்தருக்கு எப்படிபட்ட மோசமான தசாவாக இருந்தாலும் ஒரு சில புத்திகள் நல்ல பலனை கொடுத்து அந்த மனிதனை காப்பாற்றும்.

இந்த பையனுக்கு இளவயதாக இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு வெளிநாட்டு படிப்பை படிக்க உதவியது. அந்த படிப்பால் அவர் வெளிநாடு சென்று அங்கே நல்ல வேலை கிடைக்கும்படி செய்தது. இது ஒன்றே அவருக்கு போதமானதாக இருந்தது. ஒரு சிலருக்கு ஒரு சில புத்தி அவர்களின் வாழ்க்கையை திருப்பிபோடவைக்கும். இவருக்கு இந்த புத்தி மிகப்பெரிள அளவில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினையும் தீர்வும் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                   ஒரு ஜாதகத்தை நாம் எப்படி சரிசெய்துக்கொடுக்கலாம் என்பதைப்பற்றி இந்த தலைப்பில் பார்க்கலாம். ஏன் என்றால் நமது வேலை வரும் வாடிக்கையாளர்களை எப்படியாவது அவர்களை காப்பாற்றிக்கொடுக்கவேண்டும். நம்மைபோல் அவர்களும் மனிதர்கள் தானே. மனிதனுக்கு மனிதன் உதவி செய்துக்கொடுப்பது ஒன்றும் தவறு இல்லை. 

என்ன கர்மா நமக்கு வந்தால் என்ன நமது வேலையை நாம் ஒழுங்காக செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு இந்த வேலையை இறைவனை நமக்கு கொடுத்திருக்கிறான் என்று எண்ணி செய்துக்கொடுக்க வேண்டியது நமது கடமை.

முதலில் நாம் ஒன்றை சொல்லிவிடவேண்டியது நமது கடமை ஒருவருக்கு வாழ்க்கை பிரச்சினை கொடுப்பதற்க்கு முதல் காரணமாக இருப்பது பித்ருக்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்காத காரணத்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும். 

இவர்கள் கொடுக்கும் திதி ஒழுங்காக முன்னோர்களுக்கு செல்லுகிறதா என்று பார்க்கவேண்டும். ஏன் என்றால் சில வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள் அப்படி நாய் வளர்த்தால் திதி கொடுத்தாலும் ஒன்றும் புண்ணியம் கிடையாது. நாய் வளர்த்தால் பித்ருக்கள் வரமாட்டார்கள்.

திதி சரியாக கொடுத்தும் ஒன்றும் புண்ணியம் இல்லை என்றால் அடுத்தது அவர்களின் குலதெய்வத்திற்க்கு பூஜை செய்கிறார்களா என்று கேளுங்கள். குலதெய்வத்திற்க்கு பூஜை செய்யப்படவில்லை என்றால் இவர்கள் என்ன தான் தாளம் போட்டாலும் முன்னேற்றம் என்பது சிறிதளவுகூட இருக்காது.

குலதெய்வத்திற்க்கு பூஜை செய்யசொல்லுங்கள். அவர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு தகுந்தார் போல் பூஜை முறைகள் இருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே குலதெய்வம் திருப்திப்படும்.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, December 25, 2013

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    நான் பல ஜாதகங்களை பார்த்து இருந்தாலும் ஒரு சில ஜாதங்களை பார்க்கும்பொழுது என் மனதுக்குள் மிகந்த கவலையை அடையசெய்யும் என்னடா இப்படி எல்லாம் கடவுளின் திருவிளையாடல் இருக்கிறது என்று தோன்றும். ஒவ்வொரு வீடாக அடிப்பட்டு வந்து இருக்கும். அவர்கள் எங்கும் தப்பிக்கமுடியாத மாதிரி இருக்கிறது.

இவர்களை கடவுளின் பார்வையில் வைத்து காப்பாற்ற வேண்டும் ஆனால் அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இது மிக பெரிய சிக்கலாக இருக்கும். முதலில் ஏன் இப்படி இவர்களுக்கு ஜாதகம் அமைந்தது என்று பார்த்தால் ஒன்று அவர்களின் முன்ஜென்மம் மற்றோன்று அவர்களின் குடும்பத்தினர்கள் செய்துக்கொண்டிருக்கும் தவறு இவற்றால் வந்து இருக்கிறது. 

இப்படிப்பட்ட ஜாதகத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு இராகு கேது ஏற்படுத்தி இருக்கும் தோஷம் பித்ரு தோஷமாக இருக்கும். பித்ரு தோஷம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்த விதத்திலும் அவர்கள் காரியம் வெற்றி அடையமுடியாத படி செய்து வைத்திருக்கும்.

இதற்கு நீங்களே இவர்களை அழைத்துக்கொண்டு இராமேஸ்வரம் சென்றுவந்துவிடுங்கள். அவர்கள் தனியாக செல்ல அனுமதிக்காதீர்கள். ஏன் என்றால் அவர்கள் தனியாக செல்லும்பொழுது அவர்களுக்கு தோஷம் விலகுவதில்லை. சோதிடர்களாக நீங்கள் அழைத்து செல்லும்பொழுது எளிதில் விலகும். 

சோதிடர்களிடம் அப்படி என்ன இருக்கிறது என்றால் சோதிடர்கள் நாள் முழுவதும் ஒவ்வொரு கிரகத்தின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லவா. அதுவே மிகப்பெரிய மந்திரம். நீங்கள் சென்றால் அனைத்து தோஷமும் விலகும்.

யாரும் அவ்வளவு எளிதில் இதற்கு சம்மதிக்கமாட்டார்கள் ஏன் என்றால் சோதிடர் ஓசியில் இராமேஸ்வரம் சென்று வருவதற்க்கு பிளான் போட்டுவிட்டார் என்று நினைப்பார்கள். இவர்களுடன் செல்லுவதால் நமக்கு தான் கர்மம். சொன்ன சொல்லிவிட்டு போகிறார்கள் பிடிவாதமாக அழைத்துக்கொண்டு சென்று விட்டு வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 61


ணக்கம் ண்பர்களே !
                   தொடர்ச்சியாக குரு தசாவில் புதன் புத்தியை பார்த்துக்கொண்டு வருகிறோம். நிறைய பதிவுகளை தருகிறேன் பொறுமையாக படியுங்கள். அனைத்தையும் சிறிய பதிவுகளாக போட்டாலும் உங்களுக்கு தேவையான விசயத்தை சிறியதாக கொடுத்து வருகிறேன். தொடர்ந்து படியுங்கள்.

நமக்கு கம்யூட்டரில் டைப்செய்வது என்பது மிகவும் எளிது. கீபோர்டை தொட்டால் எனது விரல் பறக்கும். எத்தனையோ வருடம் இதில் குப்பை கொட்டுகிறோம் இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது. படியுங்கள்.

புதன் கிரகம் பத்தாவது வீட்டில் நின்று தன்னுடைய புத்தியை நடத்தினால் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பேங்கில் வேலை வாய்ப்பு கிடைக்கும். நகர வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக்கொள்வீர்கள். பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் நன்றாக இருக்கும்.

புதன் கிரகம் பதினொன்றாவது வீட்டில் நின்று புத்தியை நடத்தினால் லாபம் இருமடங்கு உங்களுக்கு வரும். உங்களின் வருமானம் பலவிதத்திலும் பெருகிட மிகப்பெரிய அளவில் முதலீடு பங்குசந்தையில் செய்வீர்கள். உங்களுக்கு அனைத்து விதத்திலும் இந்த புதன் புத்தி நல்லதை தரும்.

புதன் கிரகம் பனிரெண்டாவது வீட்டில் நின்று புத்தியை நடத்தினால் உங்களின் பணம் சுபச்செலவுக்காக செலவு செய்வீர்கள். உங்களின் மாமன் உங்களின் பணத்தை வாங்கி செலவு செய்வார். இருக்கின்ற பணம் கொஞ்சம் கரையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 60


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் புதன் புத்தியை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சி புதன் கிரகம் நல்ல நிலையில் இருந்து புத்தி நடைபெற்றால் எப்படி பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

புதன் கிரகம் ஏழாவது வீட்டில் இருந்து புத்தியை நடத்தினால் உங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் நடைபெறும். உங்களுக்கு நகரவாழ்வில் புதிய கூட்டுத்தொழிலை ஆரம்பிக்கமுடியும். வங்கியில் உதவி பெறமுடியும்.

புதன் கிரகம் எட்டாவது வீட்டில் நின்று புத்தியை நடத்தினால் உயில் வழியாக கண்டிப்பாக சொத்து வரும். சேமிப்பில் இருந்து பணம் பெறமுடியும்.உங்களின் துணைவருக்கு வருமானம் கிடைக்கும் இதில் அதிக்பட்சமான நன்மைகளை எதிர்பார்க்கமுடியாது.

புதன் கிரகம் ஒன்பதாவது வீட்டில் நின்று புத்தியை நடத்தினால் உயர்படிப்பை படிக்க விருப்பம் வரும். அயல்நாட்டுக்கு செல்லமுடியும். பத்திரிக்கையில் நீங்கள் சாதிக்கமுடியும். பெருமாள் கோவில் யாத்திரை செல்லமுடியும்.உங்களின் ஊரில் புதிதாக கட்டப்பெறும் கோவிலுக்கு உங்களை தலைமை தாங்கவைப்பார்கள்.

புதன் கெட்டு இருந்தால் மேலே சொன்ன நல்லவற்றிக்கு எதிராக நடைபெறும் என்று சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 143


வணக்கம் நண்பர்களே!
                    சக்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளமான மக்கள் இருக்கின்றனர். இந்த சக்தி வைத்து அவர்களின் பிரச்சினை தீர்க்கவேண்டும் என்பதற்க்காக இதனை கேட்கிறார்கள். தன் பிரச்சினை மட்டுமே நினைப்பவர்களுக்கு எப்படி சக்தி கிடைக்கும். பிறமனிதர்களையும் நாம் நம்மவர் போல் பார்த்தால் மட்டுமே ஒரு சக்தி நமக்கு கிடைக்கும்.

எங்கேயே இருந்து ஒரு சாமியார் வந்து சும்மா அடையாரில் உட்கார்ந்துக்கொண்டிருப்பவனுக்கு கொடுக்கிறார் என்றால் அந்த சாமியார் ஒன்றும் முட்டாள் கிடையாது. இவன் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பான் என்று அனைத்தையும் தெரிந்துக்கொண்டு தான் செய்வான்.

தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் மீது கூட நல்ல அன்பை வைக்கமாட்டேன்கிறார்கள் இந்த காலத்து மக்கள். இவர்கள் எப்படி அடுத்தவர் மீது அன்பை செலுத்தமுடியும். மக்களின் மீது அதிகமாக அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் ஞானிகள். எந்த ஒரு மனிதன் மீது வெறுப்பை காட்டகூடாது என்பார்கள். அடுத்தவனையும் தன்னைபோல் நடத்தவேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒருவருக்கு அடுத்தவர் மீது அன்பை செலுத்த முடியும் என்றால் கண்டிப்பாக உங்களை தேடி ஒரு மகான் வந்து கொடுத்துவிட்டு செல்வார். நீங்கள் தேடிச்செல்ல வேண்டியதில்லை. அவர்களே உங்களை தேடி வருவார்கள்.

இந்த காலத்தில் சொந்த குடும்பத்தில் அன்பை செலுத்தமுடியாமல் பல மக்கள் இருக்கின்றனர். இவர்கள் எப்படி அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்தமுடியும். அடுத்தவர்கள் மீது அன்பை எந்தவித நோக்கமும் இல்லாமல் செலுத்தினேன். ஒரு மகான் வந்து அற்புதமான பொக்கிஷத்தை தந்துவிட்டார். நீங்களும் அன்பை செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களை தேடிவரும்.

எல்லோருடனும் நன்றாக பழகுவேன். அந்த பழக்கம் இன்று பல விதத்தில் எனக்கு கைகொடுத்தது. பல பேர்களின் இதயத்தில் நாம் வாழகற்றுக்கொள்ளவேண்டும். அது தான் உண்மையான சொத்து.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 59


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் புதன் புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். புதன் புத்தியில் நல்லதை மட்டுமே சொல்லி்க்கொண்டு வருகிறேன். புதன் கெட்டால் நல்லதற்க்கு எதிராக நடைபெறும் என்பதை நீங்களவே பார்த்துக்கொள்ளுங்கள்.

புதன் கிரகம் ஐந்தாவது வீட்டில் இருந்து தன் புத்தியை நடத்தினால் நுண்ணறிவை காட்டும் இடம் அல்லவா. அதிகப்பட்சமான அறிவு தன்மை வெளிப்படும். விளையாட்டு துறையில் வெற்றி வாய்ப்பை பெறலாம். திருமணம் முடிந்திருந்தால் இரட்டை குழந்தைகள் பிறக்கும்.

பூர்வபுண்ணியத்தை காட்டகூடிய இடம் என்பதால் அதோடு குருவின் தசாவும் இருப்பதால் உங்களின் பூர்வபுண்ணியத்தில் உள்ளவர்களை அடையாளம் காண ஒரு வாய்ப்பை இந்த புத்தி வழங்கும். நல்ல பலனை அதிகமாக கொடுக்ககூடிய வாய்ப்பு இருக்கின்றது.

புதன் கிரகம் ஆறாவது வீட்டில் இருந்து தன் புத்தியை நடத்தினால் மாமனின் உதவி உங்களுக்கு கிடைக்கும். கடன் தொந்தரவு இருக்காது. நோய்கள் இருக்காது. உங்களுக்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

சத்ரு ஸ்தானம் என்பதால் விரோதிகளின் செயல்பாடு அந்தளவுக்கு இருக்காது ஆனால் அவர்களின் பேச்சு அதிகமாக இருக்க செய்வார் புதன்.எதிராளிகளின் பேச்சு சில நேரங்களில் சண்டை உண்டாக்குவது போல் இருக்கும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 142


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனிடம் மற்றும் மற்ற தெய்வங்களிடம் ஆயுதம் வைத்திருப்பதை பார்த்து இருககலாம். இது எல்லாம் அந்தந்த நாட்டில் மக்கள் பயன்படுத்தப்படும் ஆயுத்தை வைத்திருப்பார்கள். உண்மையில் எந்த கடவுளும் இந்த ஆயுதத்தை எடுத்துவந்து உங்களை வெட்டபோவது கிடையாது.  அனைததும் சூட்சமங்களாக தான் இயங்கும். 

ஒரு தெய்வம் உங்களை தாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த தெய்வம் உங்களை சமயம் பார்த்து ஒரு காற்று போல் செயல்பட்டு உங்களை தாக்கும். பைக்கில் சென்று கொண்டிருப்பீர்கள் கன நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை கீழே விழுந்துவிட்டேன் என்பீர்கள். இப்படி தான் உங்களின் சுயசிந்தனைக்கு கிடைக்காத மாதிரி தெரியும்.

ஒரு சதவீதம் மட்டுமே நம்மிடம் இருக்கும் மீதி எல்லாம் அதுவாகவே இயங்கும். அது இயங்கும் விதத்தை கட்டுபடுத்திவிடுவது கடவுளின் வேலையாக இருக்கும். அதனை கட்டுபடுத்திவிட்டால் நீங்கள் காலி. மற்றபடி கடவுள் ஆயுதம் எடுத்துவந்து எல்லாம் உங்களை தாக்கமாட்டார்.

கடவுளுக்கு ஆயுதம் கொடுத்தது எல்லாம் நமது வழகத்திற்க்கு தகுந்தபடி கொடுத்து வைத்திருக்கிறார்கள். நாம் அதனை பார்த்து பயந்து ஒழுங்காக வாழ்வோம் என்று அப்படிவைத்திருக்கிறார்கள். கடவுளும் நமது பாவத்திற்க்கு தகுந்தார்போல் தண்டனையை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

ஒருபோதும் கடவுள் ஆயுதத்தை எடுப்பதில்லை. அவர் எடுத்தால் உலகத்தில் ஆளை இருக்கமாட்டான். என்ன கடவுள் நின்று கொல்லுகிறார். இந்த ஜென்மத்தில் கிடைக்கலாம் அல்லது அடுத்த ஜென்மத்தில் கிடைக்கலாம் ஆனால் கண்டிப்பாக கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 58


ணக்கம் ண்பர்களே !
                    குரு தசாவில் புதனின் புத்தியை பார்த்து வருகிறோம். தொடர்ச்சியாக பார்க்கலாம்.

புதன் மூன்றாவது வீட்டில் இருந்து புத்தி நடைபெற்றால் அவர்கள் கமிஷன் வழியாக சம்பாதிக்க வைப்பார். எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்து சம்பாதிக்கும் வேலையையும் இருக்கும். மாமன் உதவுவார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவிசெய்யகூடும். இனிமையாக இசையை ரசிக்கவைப்பார். கவிதை புலமையும் இருக்கும். புத்தகம் எழுதுவதற்க்கு இந்த காலம் அருமையான காலமாக இருக்கும்.

தினமும் உங்களை கோவிலுக்கு செல்ல வைப்பார். தீர்த்த யாத்திரையும் நடக்கும். அதே நேரத்தில் நீங்கள் இந்த நேரத்தில் மகாவிஷ்ணுவையும் தீவிரமாக வணங்க ஆரம்பிப்பீர்கள். மகாவிஷ்ணு சம்பந்தப்பட்ட விசயங்களில் மனது அதிகமாக ஈடுபடும்.

புதன் நான்காவது வீட்டில் இருந்து தன்னுடைய புத்தியை நடத்தும்பொழுது ஒரு மனையை வாங்கி போடுவீர்கள் அதே நேரத்தில் அடுத்த மனையும் உங்களை தேடி வரும். வீடு வாகனங்களை வாங்குவதற்க்கு இந்த காலம் ஏற்றமிகு காலம். உங்களை தேடி அனைத்து வாய்ப்புகளும் புதன் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

தாய் வழி உள்ள மாமன்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கல்வி வாய்ப்பு உங்களை தேடிவரும். இந்த நேரத்தில் படிப்பை நோக்கியே உங்களின் மனம் தீவிரமாக செல்லும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கர்மாவை தோல்வி அடைய செய்யுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் நேரில் சோதிடம் பார்ப்பவர்களிடம் பலனை சொல்லிவிட்டு பரிகாரத்தை செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று ஒரு சிலருக்கு நான் சொல்லுவேன். அப்படி எதற்க்காக சொல்லுகிறேன் என்றால் அவர்கள் திரும்பி வந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டியதை அம்மனிடம் வைத்து செய்யலாம் என்று சொல்லுவது உண்டு.

திரும்பி என்னை வந்து பார்க்கும் நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதும் கிடையாது. ஒரு முறை மட்டும் தான் கட்டணம் அதன் பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்று சொல்லிவிடுவேன்.

அவர்களுக்கு அறிவுரை சொல்லி சொல்லி பரிகாரத்தை செய்துவிட்டு வந்து பார்ப்பார்கள் என்று நான் சொல்லிவிட்டு நான் காத்துக்கொண்டே இருக்கவேண்டியது தான். ஒருவரும் திரும்பி வந்து என்னை பார்ப்பதே கிடையாது.

ஏன் அவர்கள் என்னை வந்து பார்ப்பது கிடையாது என்று பார்த்தால் அவர்களின் கர்மா அவர்களை தடைசெய்கிறது. கர்மாவை மீறி அவர்களால் வந்து என்னை பார்ககமுடிவதில்லை. முதல் தடவையே செய்யலாம் ஆனால் குருவே முதல் தடவை செய்யாதே என்று கட்டளை விதித்து இருக்கிறார்.

கர்மா மீறி அவர்கள் வருகிறார்களா என்று பார். வந்த பிறகு செய்துக்கொள்ளலாம் என்பார். உண்மையும் அப்படி தான் உள்ளது. ஒரு சிலர் மட்டும் விடாபிடியாக பிடித்து என்னை வந்து சந்தித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு செய்து கொடுத்துவிடுகிறேன்.பலருக்கு வரமுடியவில்லை. கர்மாவோடு போராட வேண்டியுள்ளது.

படிக்கும் நீங்களும் உங்களை நான் வரச்சொல்லிருந்தால் உங்களால் வரமுடியும் என்றால் என்னை வந்து சந்தித்து பாருங்கள்.கர்மாவை மீறி வந்து சந்தியுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 57


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் புதன் புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். புதன் ஒவ்வொரு வீட்டிலும் நின்ற தன்னுடைய புத்தியை நடத்தினால் என்ன பலன் வரும் என்பதை இப்பதிவில் பார்த்துவிடலாம். 

லக்கினத்தில் புதன் நின்றால் உலக விசயங்களை பற்றி நல்ல அறிவு இருக்கும். உடல் தோற்றம் பிறரை வசீகரிக்க செய்யவார்கள். மனைவியுடன் ஒற்றுமை இருக்கும். பல தோஷங்கள் விடுபடும். 

லக்கினத்தில் புதன் இருந்தால் ஆயிரம் தோஷங்களை நிவர்த்தி செய்யும் வல்லமை உடையது. புதனின் புத்தியில் உங்களுக்கு உள்ள தோஷங்கள் அனைத்தும் போகும் என்று சொல்லலாம்.

இரண்டாவது வீட்டில் புதன் நின்று தன் புத்தியை நடத்தினால் பேச்சில் இனிமை இருக்கும். அதே நேரத்தில் நல்ல கேலி செய்து பேசுவார்கள். இவரின் பேச்சை பிறர் ரசிப்பார்கள். தனவீட்டில் இருந்து புத்தியை நடத்துவதால் பணவரவுக்கும் பஞ்சம் இருக்காது.

வீட்டில் விழாகாலம் வரும். ஏதாவது ஒரு நல்ல சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களை அழைத்து நீங்கள் உபசரிப்பீர்கள். இரண்டு வழியில் மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.