Followers

Monday, August 22, 2011

செவ்வாய் பகுதி 2



தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன் அதனுடன் நமது பாடமும் செவ்வாய் பற்றி வந்துகொண்டுருப்பதால் எழுதுகிறேன்.

நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது.

நான் சொல்ல வந்தது. ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும்.

நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு





Wednesday, August 3, 2011

ஜோதிட அனுபவம்



எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். இவருக்கு அயல்நாட்டில் வேலை செய்யவேண்டும் என்று ஆசை. இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது அந்த மாவட்டத்தில் பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலை செய்பவர்கள். அதனால் இவரும் சிங்கபூர் சென்றார்.

இவர் சென்றது சுற்றுலா விசாவில் சென்று அங்கேயே நீண்ட நாட்களாக தங்கிவிட்டார். பிறகு ஒரு நாள் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டார். அங்கு தண்டனை பெற்று இந்தியா வந்துவிட்டார். வந்தவர் இங்கு 4 மாதங்கள் இருந்தார்.

அயல்நாட்டு ஆசை விடவில்லை மீண்டும் சிங்கபூர் செல்ல முடிவு எடுத்து மறுபடியும் சுற்றுலா விசாவில் செல்வது என்று முடிவு எடுத்து சென்றார். ஏன் என்றால் ஒருமுறை சிங்கபூரில் தவறாக தங்கினால் மீண்டும் அந்த நாட்டிற்க்கு செல்லமுடியாது என்று சட்டம் அதனால் இவர் சுற்றுலா விசாவில் மீண்டும் செல்வது என்று முடிவு எடுத்தார். அதன்படி சென்று குறுகிய காலத்தில் திரும்பி வருவார். இந்த முறைப்படி அவர் நான்கு முறை சென்று வந்துள்ளார். இவர் 5 வது முறையாக செல்லும் போது விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டார். இவரை அந்த நாட்டு விமான நிலைய அதிகாரிகள் இந்தியாவிற்க்கு திருப்பி அனுப்பினார்கள். இவர் இப்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.

இவருக்கு அயல்நாட்டின் மீது ஆசை ஏற்பட்டது எதற்க்காக?

அயல்நாட்டின் இவர் இருக்கும்போது இவர் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டது எப்படி ?

இப்பொழுது நாம் ஜாதக ரீதியாக என்ன காரணம் என்று பார்க்கலாம்.

இவருடைய ஜாதகத்தை கீழே தந்துள்ளேன் பாருங்கள்.





இவருடைய ராசி கும்பம். கடக லக்கனம். ஒருவருடை ஜாதகத்தில்
தொலைதூர பயணங்களை குறிப்பது 9 ஆம் வீடு இந்த ஜாதகத்தில் 9 ஆம் வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. குரு கிரகம் மூன்றாம் வீட்டில் சனி உடன் அமர்ந்துள்ளது. இவருக்கு அயல்நாட்டின் மீது ஆசையை கொடுத்தது இவருக்கு 9 ஆம் வீட்டின் அதிபதியின் தசாவில் தான்.

குரு தசை நடக்கிறது குரு அயல்நாடு செல்ல வேண்டும் என்று அயல்நாட்டிற்க்கு அழைத்து செல்கிறது. அங்கு குருவிடம் இருக்கும் சனி இவரை நன்றாக மாட்டிவிடுகிறது. அதனால் இவர் அயல்நாட்டில் இருந்து திரும்புகிறார். சனியிடம் குரு இருப்பதால் குரு கெடுகிறது.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு