Followers

Wednesday, April 30, 2014

கேள்வி & பதில்


வணக்கம் ண்பர்களே!
                    நான்கு வருடங்களாக குலதெய்வத்தை வணங்கி வருகிறேன். எந்த பயனும் இல்லை என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டுருந்தார் அவருக்கான பதில்.

நான்கு வருடங்கள் எப்படிப்பட்ட ஆராதனைகளை செய்து வருகின்றீர்கள் என்று சொல்லவில்லை. பச்சை பரப்புதல் செய்தீர்களா. பச்சை பரப்புதல் செய்யவில்லை என்றால் உடனே பச்சை பரப்புதலை செய்யுங்கள்.உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்த கோவிலின் நிலை தற்பொழுது எப்படி இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும்.

ஒரு சில கோவில்கள் வழிபாடு இல்லாமல் இருக்கும். வழிபாடு இல்லை என்றால் வழிபாட்டை தொடங்க உதவி செய்யுங்கள். வழிபாடு இருந்தால் மட்டுமே அதிகமான சக்தியோடு கோவில் இருக்கும்.

ஒரு சில கோவில்களில் இருக்கும் சக்தியை கட்டி வைத்துவிடுவார்கள். அப்படி கட்டி வைத்திருந்தால் அந்த கோவிலில் இருந்து உங்களுக்கு அருள் கிடைக்காது.

கோவில் கட்டினாலும் அந்த கோவிலுக்கு என்று செய்யவேண்டியதை செய்து வைத்திருந்தால் மட்டுமே அந்த கோவிலின் சக்தி அப்படியே அங்கு இருக்கும். ஒரு சில கோவில்களை முறைப்படி செய்வதில்லை அதனாலும் சக்தி கிடைக்காமல் இருக்கிறது. 

உங்களின் பங்காளிகள் உங்களின் கோவிலில் இருக்கும் சக்தியை அவர்களுக்கு மட்டும் திருப்பி வைத்துவிடுவார்கள். அப்படி இருந்தாலும் உங்களுக்கு வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்டதை நீங்கள் உணர்நதால் ஒரு நல்ல ஆன்மீகவாதியை வைத்த சரிசெய்துக்கொள்ளுங்கள்.


நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை பத்து பேர் மட்டுமே. பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, April 29, 2014

விரைய தசா பகுதி 7


ணக்கம் ண்பர்களே!
                    எந்தப் புதிய இடத்திற்க்குப் போனாலும் எதைச் செய்யக்கூடாது என்று முதலில் கற்றுக்கொள் என்பது சீனப்பழமொழி உங்களுக்கு பனிரெண்டாவது வீட்டு தசா நடைபெறும்பொழுது இதனை நீங்கள் கடைபிடிக்கவேண்டும். ஏன் என்றால் நீங்கள் செய்வது எல்லாம் தேவையில்லாத வேலையாக தான் இருக்கும். புதிய இடத்திற்க்கு செல்லும்பொழுது நீங்கள் இந்த வேலையை மட்டுமே செய்வீர்கள். அப்புறம் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள்.

பனிரெண்டாவது என்பது நாம் வெளிதேசங்களுக்கு செல்லும் வாய்ப்பை குறிக்கும் வீடு. உங்களை எப்படியும் வீட்டை விட்டு பிரிந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிடும். வீட்டை விட்டு சென்றவுடன் நம்மை இனி யார் கேட்கபோகிறார்கள் என்று புகுந்து விளையாடுவீர்கள். அதனாலேயே உங்களின் பணம் எல்லாம் கரைந்துபோய்விடும்.

வெளிநாடுகளில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதனை அங்கேயே பிடிங்கிவிடும் யுக்தியை அங்கு வைத்திருப்பார்கள். அதில் உங்களின் பணம் எல்லாம் போய்விடும்.

வெளிநாட்டு பணம் இந்தியாவிற்க்கு வந்தால் தானே உங்களுக்கு பல மடங்காக அந்த பணம் உயரும். அங்கேயே செலவு செய்துவிட்டால் உங்களுக்கு விரைய தசா விரையமாகவே நடந்துக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். வீணாக விரைய தசா நடக்கிறது என்று அர்த்தம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வீடு கட்ட பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனுக்கும் தனியாக ஒரு வீடு கட்டவேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஒரு சிலருக்கு வீடு அமைந்துவிடும் ஒரு சிலர் என்ன தான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைக்காது. பணம் இருந்தால் கூட அவர்களுக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைப்பதில்லை. 

ஜாதகத்தில் நான்காவது வீடு நமக்கு அமையும் வீட்டை காட்டும் இடமாகும். நான்காவது வீடு நன்றாக இருந்தால் எப்படியும் ஒரு வீடு கிடைத்துவிடும். நான்காவது வீடு கெட்டால் வீடு அமையாது. இன்றைய காலகட்டத்தில் அத்தியவாசிய தேவைக்களில் வீடும் வந்துவிட்டது. வீட்டிற்க்காக ஆசைப்படுபவர்களுக்கு ஒரு பரிகாரத்தை சொல்லுகிறேன். செய்துபாருங்கள்.

உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்துவிட்டு அவருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வியாழக்கிழமை தோறும் குரு பகவான் அல்லது தெஷ்ணாமூர்த்தி சந்நிதியில் அரச இலையின் மேல் நான்கு தீபத்தை வைத்து ஏற்றி வழிப்பட்டு வாருங்கள். ஒன்பது வாரம் செய்யவேண்டும். இப்படி செய்து வந்தால் உங்களுக்கு அழகான வீடு கட்டமுடியும்.

எனது நண்பர் ஒருவர் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தால். அவர் சொன்னார் ஜாலியாகவும் இருக்கவேண்டும் அதே நேரத்தில் ஆன்மீகத்தையும் பின்பற்றி வரவேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் என்றார்.  இதுவரை எனக்கு பின்னோட்டம் இடுபவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டம் மட்டும் பதிலை தந்துள்ளார்கள்.மீதி உள்ளவர்கள் பதிலை இதுவரை தரவில்லை.அனைவரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

செவ்வாய்க்கு பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                   நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எனக்கு ஆறு பேர்கள் மட்டும் பதிலை சொல்லியுள்ளனர். மற்றவர்கள் யாரும் இதுவரை சிந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். நன்றாக சிந்தித்துவிட்டு பதிலை சொல்லுங்கள்.

பூமிக்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் இருக்கின்ற ஒன்பது கிரகத்திலேயே அதி வேகமாக பலனை நமக்கு கொடுக்கும் கிரகமாகும். செவ்வாய் கிரகத்தை வைத்து மட்டுமே நாம் பல நல்ல பலனை பெறமுடியும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டுமனை வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு கட்டுமனையை வாங்கி அதில் புதிய வீடு ஒன்று கட்ட வேண்டும் என்றும் ஆசை இருக்கும். எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்த்தாலும் நம்மால் கட்டுமனை கிடைக்கமாட்டேன்கிறது. அதாவது வாங்கமுடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு பரிகாரம்

ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை அன்று முருகனுக்கு விரதம் இருந்து கடைசி வாரத்தில் செவ்வாய் கிரகத்திற்க்கு ஒரு அபிஷேகம் செய்து வந்தால் உங்களுக்கு கட்டுமனை அமையும். ஒன்பது வாரம் விரதம் இருக்கும்பொழுது அந்த நாளில் கண்டிப்பாக முருகன் கோவில் சென்று தீபம் ஏற்றி அல்லது நவகிரகத்தில் உள்ள செவ்வாய்கிரகத்திற்க்கு தீபம் ஏற்றி வழிப்பட்டு வரவேண்டும். கடைசி நாள் அதாவது ஒன்பதாவது வாரத்தில் இறுதி நாளில் அபிஷேகம் செய்யவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, April 28, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவை படித்துவிட்டு நண்பர் என்னிடம் போன் செய்து எனக்கு அவ்வாறு நடைபெறவில்லையே என்று சொன்னார்.

நடைபெறவில்லை என்றால் நல்லது. ஏன் என்றால் இது எல்லாம் நடைபெற்றுவிடகூடாது என்று தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பமும் குறிப்பாக நடுத்தர வசதியுள்ள குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையை ஒட்டுவதற்க்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இது வேற வந்துவிட்டால் குடும்பம் அழிந்துவிடும். மறுபடியும் தூக்கி நிறுத்துவதற்க்குள் இந்த காலத்தில் முடியாத காரியமாக போய்விடும்.

வெற்றி என்பது தொடர்ச்சியாக அதனை தக்க வைத்துக்கொண்டால் மட்டுமே அது வெற்றி இல்லை என்றால் அது வெற்றி கிடையாது. ஏழை குடும்பமாக இருந்து நடுத்தர குடும்பத்திற்க்கு வருவதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள் அதனை ஏன் தொலைக்கவேண்டும்.

நான் எழுதுகின்ற கெட்ட விசயம் எதுவும் உங்களுக்கு நடந்துவிடகூடாது என்பதால் தான் ஒரு நாளைக்கு பல பதிவுகள் வழியாக உங்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.இது கெடுதல் என்று நான் சொல்லிவிட்டால் அதனை தவிர்க்க நீங்கள் பார்ப்பீர்கள் அல்லவா அந்த காரணத்தால் தான் ஒவ்வொரு கெடுதலாக பட்டியல் போட்டு சொல்லி்க்கொண்டு இருக்கிறேன்.

விரைய தசாவில் உங்களுக்கு கையில் பணம் வருவது கொஞ்சம் கடினமாக இருக்கும். மற்றபடி சுபவிரையங்கள் வந்தால் போதும் என்று ஆண்டவனிடம் பிராத்தனை செய்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

மறுபடியும் கேள்வி


வணக்கம் நண்பர்களே!
                    காலையில் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். அதற்கு ஒரு சில நண்பர்கள் எனக்கு போன் செய்து விளக்கம் சொன்னார்கள். ஒரு சிலருக்கு டைப் செய்ய தெரியவில்லை அதனால் உங்களை போன் செய்து பதிலை சொல்லுகிறோம் என்று சொன்னார்கள். உங்களுக்கு டைப் செய்ய தெரியவில்லை என்றால் எனக்கு போன் செய்து சொல்லுங்கள். என்னை தொடர்புக்கொண்டு பேசிய அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆர்வம் எனக்கு நன்றாக புரிந்தது. 

நண்பர்களே உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ தெரிந்த விசயத்தை பகிர்ந்துக்கொள்ளுங்கள். உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் ஆர்வமாக என்னிடம் பேசியதற்க்கு மிகவும் நன்றி.

இந்தியாவில் ஏன் உலகத்தில் இப்படிப்பட்ட வழியில் ஒரு ஆன்மீகத்தை சொல்லமுடியும் என்பதை ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். உலகத்தில் இல்லாமல் ஒரு புதிய விசயத்தை சொல்லிவிடமுடியாது. எனக்கு குரு தந்த அந்த புதிய விசயத்தை உங்களோடு வாழ்ந்து காட்டி இருக்கிறேன்.

ஆன்மீகம் என்றாலே இப்படி தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்களிடம் இப்படியும் ஆன்மீகம் இருக்கமுடியும் என்பதை காட்டியுள்ளேன். கண்டிப்பாக என்னுடைய கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்துக்கொள்ளவில்லை நமது முன்னோர்கள் சொன்ன விசயத்தை வைத்து இந்த காலத்திற்க்கு உகந்த முறையில் மாற்றி வாழ்ந்துக் காட்டியுள்ளேன். 

நீங்கள் ஆன்மீகத்தில் மிக சிறந்தவர்களாக இருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும் அதனால் ஜாதககதம்பம் சொன்ன ஆன்மீகத்தை என்ன என்று சொல்லுகிறீர்கள் என்பதே எனது கேள்வி. உங்களை அடுத்த கட்டத்திற்க்கு அழைத்து செல்ல ஒரு கேள்வியை கேட்டுள்ளேன்.

டைம் எடுத்துக்கொண்டு பதில் சொல்லுங்கள். ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைவரும் பதிலை சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

விரைய தசா பகுதி 6


ணக்கம் ண்பர்களே!
                           விரைய தசாவில் சபலத்தைப்பற்றி கடந்த பதிவில் சொல்லிருந்தேன். பனிரெண்டாவது வீட்டில் ராகு கிரகம் இருந்து அந்த தசா நடைபெற்றாரும் நடைபெறாவிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர் எப்படி இருப்பார் என்றால் மிகப்பெரிய சபல கேஷ் என்று சொல்லுவார்கள் அல்லவா. அது போல் இருப்பார்கள். 

ராகு கிரகம் பொதுவாகவே சபலத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம். அந்த கிரகம் போக வீட்டிற்க்கு சென்று அமர்ந்தால் எப்படி இருக்கும். இவர்கள் சபலத்தாலே அழிந்துவிடுவார்கள். ராகு அமர்ந்தால பிற மதத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இருக்கும். ஒரு சிலர் வெளிநாட்டிற்க்கு இதற்க்காக செல்வார்கள்.

இவர்களிடம் இருந்து அனைத்து பணமும் இந்த வழியிலேயே சென்றுவிடும். பணம் எல்லாம் சென்ற பிறகு தான் இவர்களுக்கே இந்த வழியில் நாம் அழிந்தோம் என்று தெரியவரும். 

ராகு பனிரெண்டில் இருக்கும்பொழுது இவர்களுக்கு ஒழுங்கான தூக்கம் கூட இருக்காது. ராகு பொதுவாக பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில் வேலையை அதிகம் காட்டும். அதனால் இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். தூக்கம் இல்லாமல் போவதும் நமக்கு இழப்பு தான். ஒரு மனிதன் அவனுக்கு கொடுக்கப்பட்ட தூக்க நேரத்தை சரியான முறையில் தூங்கவேண்டும் அப்படி தூங்கவில்லை என்றால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்காது.

இரவில் தூங்காமல் பகலில் தூங்கினால் எப்படி வேலையை ஒழுங்காக செய்யமுடியும். ஒரு சிலருக்கு ராகு பனிரெண்டில் அமர்ந்தால் நன்றாக தூக்கம் வரும். பிற கிரகங்கள் வலிமை அடைந்து இருக்கும்பொழுது இப்படி நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கேள்வி


ணக்கம் ண்பர்களே!
                    பல வருடங்களாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். பல வருடங்களாக தொடர்ந்து படிக்கும் நண்பர்களும் இருக்கின்றனர். ஒரு சிலர் புதியவர்களும் வந்து இருப்பார்க்கள் அவர்களும் அனைத்து பதிவுகளையும் படித்து இருப்பீர்கள். மொத்தத்தில் இந்த பதிவுகளை எல்லாம் படிக்கும் நண்பர்களுக்கு ஜாதககதம்பத்தைப்பற்றி ஒரளவு என்ன என்று தெரியும். 

நண்பர்கள் மட்டும் அல்லாமல் சாமியார்கள் படிக்கிறார்கள் என்பதும் தெரிந்த ஒன்று. பெரிய ஆன்மீகவாதிகளே ஜாதககதம்பத்தை படிக்கிறார்கள் என்று தெரியவரும்பொழுது ஒரு சின்ன சந்தோஷத்தை எனக்கு கொடுக்கிறது.

இத்தனை வருடங்கள் படிக்கும் அனைவருக்கும் மற்றும் புதியவர்களுக்கும் நான் கேட்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. இதுவரை அதிகமாக நான் கேள்வி கேட்டதில்லை. இந்த நேரத்தில் இந்த கேள்வியை கேட்டால் எனக்கு ஒரு உதவியாக இருக்கும் என்று எண்ணி கேள்வியை கேட்கிறேன்.

ஜாதககதம்பம் சொல்லும் ஆன்மீகத்தைப்பற்றி உங்களுக்கு தெரிந்ததை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

ஆன்மீகம் என்றால் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். ஜாதககதம்பத்தில் ஒரு கட்டுப்பாடும் கிடையாது. என்னைப்பற்றி ஒழிவு மறைவு இன்றி சொல்லியுள்ளேன்.

அதில் ஒரு சில விசயங்களை சொல்லுகிறேன்.

எனது பூர்வபுண்ணியத்தைப்பற்றி சொல்லியுள்ளேன்.

நான் அசைவம் சாப்பிடுவேன் என்று சொல்லியுள்ளேன்.

சினிமா பார்த்தை சொல்லியுள்ளேன்.

ஊர் சுற்றுவதை சொல்லியுள்ளேன்.

ஒரு சாதாரணமான மனிதன் செய்யும் அனைத்தையும் செய்துக்கொண்டு ஆன்மீகவாதி செய்யும் வேலைகளை செய்கிறேன் என்று பார்க்கும்பொழுது உங்களுக்கு இது ஆன்மீகமாக எப்படி இருக்கமுடியும் என்றும் நினைக்கதோன்றும் அல்லது இது ஆன்மீகம் இல்லை என்றும் நினைக்கதோன்றும். எதனை நீங்கள் நினைக்கிறீர்களோ அதனை அப்படியே எனக்கு எழுதி அனுப்புங்கள். நான் கோபம் கொள்ளமாட்டேன். ஜாதககதம்பத்தில் உள்ளது குப்பை என்று எழுதினாலும் பரவாயில்லை ஆனால் எழுதி அனுப்புங்கள்.

என்னை நேரில் பல நண்பர்கள் சந்தித்து உள்ளனர். அவர்கள் என்னை பார்த்து நீங்கள் தான் ராஜேஷ்சுப்புவா என்று கேட்டுள்ளனர். எனது தோற்றமும் சாதாரணமாக தான் இருக்கும். ஆன்மீகவாதிக்கு உள்ள தோற்றம் மற்றும் அவர்களின் தகுதி என்று வரையத்து வைத்திருக்கும் எந்த ஒரு சுவடும் என்னிடம் இருப்பதில்லை.

இத்தனை இருந்தும் என்னை நம்பி பல பேர்கள் வருகின்றனர் அவர்களுக்கு ஆன்மீகவழிகளில் நிறைய செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.ஜாதககதம்பம் சொல்லும் ஆன்மீகம் எப்படிப்பட்டது என்பதை சொல்லுங்கள்.

காலம் எடுத்துக்கொண்டு சொல்லுங்கள். பரவாயில்லை உடனே சொல்லவேண்டும் என்பது கிடையாது. நன்றாக உங்களின் அறிவை பயன்படுத்தி எனக்கு எழுதி அனுப்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, April 27, 2014

கேள்வி & பதில்


ணக்கம் ண்பர்களே!
                    குலதெய்வ வழிப்பாட்டில் பச்சை பரப்புதலைப்பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் என்று சொல்லிருந்தேன். அதனை நமது நண்பர்கள் வெளியில் சொல்லும்பொழுது ஒரு சிலர் கிண்டல் செய்கின்றனர். எப்படி வெளியில் சொல்லுவது என்று கேட்டனர்.

ஒரு மனிதன் நடக்கமுடியாமல் இருந்தால் அவன் ராமா ராமா என்னை நடக்க வை என்று சொல்லுவான். அவன் நடந்த பிறகு ராமன் என்ன செய்தான். நானாகவே நடந்தேன் என்று சொல்லுவான். அப்படிப்பட்ட மக்கள் நம் மக்கள். இவர்களுக்கு எல்லாம் நாம் வழிப்பாட்டைப்பற்றி சொல்லிக்கொடுப்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.

உங்களை போல் நானும் பல இடத்தில் இப்படிப்பட்ட அனுபவத்தை பெற்று இருக்கிறேன். ஒரு காலத்தில் பார்த்தால் பதிவு எல்லாம் எழுதுவதற்க்கு முன்பு என்னிடம் பிராமணர்கள் மட்டும் வந்து இப்படிப்பட்ட வழிப்பாட்டு முறைகளை வந்து கேட்டார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்து இருக்கிறேன்.

அப்பொழுது ஒரு சில நண்பர்கள் என்னிடம் வந்து நீ என்ன பிராமணர்களுக்கு மட்டும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னது. நான் பிராமணன் கீழ்சாதியில் உள்ளவன் என்று பார்ப்பதில்லை. யார் என்னிடம் ஆவலுடன் வந்து கேட்கின்றனரோ அவர்களுக்கு வழிப்பாட்டு முறைகளை சொல்லி தருவது எனது கடமை. அவர்கள் ஆவலுடன் வருகிறார்கள். நீங்கள் வருவதில்லை. கேட்கிறவனுக்கு தான் உபதேசம் செய்யமுடியும் என்று சொன்னேன்.

நம்ம ஆளுங்களுக்கு அவ்வளவு எளிதில் புரியவைக்கமுடியாது. உங்களோடு இருப்பவர்கள் யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு இப்படிபட்ட வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. செய்ய விருப்பம் இருந்தால் செய் என்று கேட்டுவிட்டு விருப்பம் இருந்தால் செய்ய சொல்லிக்கொடுங்கள்.

உங்களின் வீட்டில் செய்வதை யார் கேலி கிண்டல் செய்தாலும் அதனைப்பற்றி கவலைப்படாமல் செய்யுங்கள். உங்களுக்கு கூடியவிரைவில் நல்ல மாற்றம் வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

அம்மனிடம் வேண்டுதல்


ணக்கம் ண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னிடம் பேசும்பொழுது அவர்களின் பிரச்சினை சொல்லுகிறார்கள். அதனை நான் வரவேற்க்கிறேன் அதே நேரத்தில் உங்களின் பிரச்சினை முதலில் என்னிடம் சொல்லவேண்டும் என்று நினைக்கவேண்டாம். அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள். அதன் பிறகு என்னிடம் சொல்லுங்கள். 

உங்களை எல்லாம் சந்திக்காமல் இருப்பதற்க்கு காரணம் என்னை சந்தித்தால் உங்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் என்னிடமே தேடி வந்துவிடுவீர்கள். அது எத்தனை நாளைக்கு தான் செய்யமுடியும். நீங்களாகவே வேண்டுதலை வைத்து நிறைவேற்றிக்கொள்ள கற்றுக்கொண்டாலே போதும். 

அம்மனிடம் உங்களின் குறைகளை சொல்லும்பொழுது உங்களின் மனதிற்க்கு ஒரு ஆறுதலை கண்டிப்பாக உங்களுக்கு கொடுக்கும். அதன் பிறகு உங்களின் குறைகளை நிறைவேற்றிக்கொடுக்கும்.

அம்மனிடம் வேண்டுதல் வைப்பது எப்படி என்று தெரியவில்லை என்று ஒரு சிலர்  கேட்கின்றனர். காலையில் எழுந்து குளித்துவிட்டு நமது ஜாதககதம்பத்தில் உள்ள அம்மனின் போட்டோவை பார்த்து மனதார வேண்டுங்கள் போதும். உங்களின் வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றிக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, April 26, 2014

மறுபதிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலத்தில் மக்கள் ஆன்மீகம் என்றாலே அது பதிவுகளில் அல்லது புத்தகங்களில் படிப்பது மட்டுமே ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதனைப்பற்றி முன்னரே நான் சொல்லிருந்தாலும் உங்களின் நலனுக்காக இதனை மறுபதிப்பாக வெளியிடுகிறேன்.

கொஞ்சம் படித்துவிட்டு அதிகமாக பயிற்சியில் ஈடுபடவேண்டும் அப்பொழுது மட்டுமே நீங்கள் அது என்ன என்று உணரமுடியும். முழு நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுது? ஆன்மீகவாதிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நான் கூட இப்படி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

ஜாதககதம்பத்தை கூட கொஞ்ச நாள் படியுங்கள். அதன் பிறகு நீங்கள் பயிற்சியில் ஈடுபட சென்றுவிடுங்கள். தினமும் படித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை.மாற்றி மாற்றி ஒரே விசயத்தை தான் சொல்லிக்கொண்டு இருக்கபோகிறோம்.

அடுத்ததாக இதனை எல்லாம் உங்களின் கண்களுக்கு பட்டாலே போதும். நீங்கள் சரியான திசையில் தான் வந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பது விளங்கிவிடும். பல ஜென்மங்களாக இதனை தான் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது ஆன்மீகபதிவுகளை படிக்கும்பொழுதே தெரிந்துவிடும்.

என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள். எப்படி சார் ஆத்மாவை உணர்வது அதனை எப்படி வெளியில் எடுப்பது என்று கேட்பார்கள். அதற்கு பயிற்சி என்பது உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் செய்கின்றதை பயிற்சி என்று சொல்லி உங்களை நான் ஏமாற்றவில்லை. ஆத்மா டிராவல் செய்வது இயற்கையிலேயே நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதனை உணர்வதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்று தான். என்னால் ஆத்மா டிராவல் செய்யமுடியும் என்று நினைத்தாலே போதும்.

இதனை நான் ஏன் இந்த இடத்தில் சொல்லுகிறேன் என்றால் அனைவரும் காலம் காலமாக செய்துக்கொண்டு இருக்கின்ற செயலை நீங்களும் செய்கின்றீர்கள் ஆனால் உணர்வதற்க்கு அதனை ஏற்றுக்கொள்வதற்க்கு உங்களின் மனம் தடைச்செய்கிறது. அதுபோல் நீங்கள் படித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை உங்களின் ஆத்மாவை வைத்து அனைத்தையும் சாதிக்கமுடியும் என்று நீங்கள் நம்பினால் போதும்.

ஊரில் உள்ள பதிவுகளை எல்லாம் படிக்காமல் உடனே சென்று என் ஆத்மாவால் அனைத்தையும் செய்யமுடியும் என்று உங்களின் பூஜையறையில் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு என்ன நடக்கிறது என்று கவனித்து பாருங்கள். நான் சொல்லுவது உங்களுக்கு புரியும்.


ஊரில் உள்ள அத்தனை ஆன்மீகவாதிகளும் சுற்றி சுற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். காதல் என்றால் ஒன்று தான் அதனை பல விதங்களில் சினிமா படங்களை பல காலமாக எடுத்துக்கொண்டே வருகிறார்கள். அதனை பார்த்துக்கொண்டே இருந்தால் என்ன நடக்கும் ஒன்றும் நடக்காது. காதலித்து பார்த்தால் தானே அது என்ன என்று தெரியும். அது போல் ஆன்மீகமும் அப்படி தான். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் ஒரு கருத்தைப்பற்றி சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

என்னுடைய உறவினர்களிடம் மட்டும் நான் இந்த வேலையை செய்வது உண்டு. என்னை தொடர்புக்கொள்ளவேண்டும் என்றால் அவர்களுக்கு நான் போன் செய்வது கிடையாது. அம்மனை வைத்தே அவர்களை போன் செய்ய வைப்பது உண்டு. அவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு போன் செய்வார்கள்.

உறவினர்கள் தொல்லை தந்துக்கொண்டே இருக்கின்றனர் என்று நான் நினைத்தால் அவர்களை போன் செய்யாமல் செய்துவிடுவதும் உண்டு. எப்பொழுதாவது இப்படி நான் செய்தது உண்டு. அவர்கள் என்னை வந்து சந்திக்க செய்வதும் இப்படி தான் செய்தேன். 

இதனை வைத்து தான் நமது நண்பர்களுக்கு கடன் தொந்தரவுக்கு செய்து வந்தேன் ஆனால் இவர்களின் தேவைக்காக கடன் வாங்கியதை திருப்பி கொடுக்கவேண்டும் அல்லவா. அதனால் இந்த வேலையை இப்பொழுது செய்வதில்லை.

கடனுக்கு செய்ய வேலையை நிறுத்தியவுடன் நண்பர்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வந்த போனை பார்த்தே அரண்டுபோய்விட்டார்கள். 

தொழில் செய்யும் நண்பர்கள் எல்லாம் என்னை நினைத்தால் கூட அவர்களுக்கு போன் செய்து என்ன வேண்டும் என்று கேட்பேன்.

நம்பினால் நம்புங்கள்



நண்பர்களே கண்டிப்பாக உங்களை எல்லாம் நான் இப்படி ஒரு நாளும் செய்தது இல்லை.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    எனது நண்பர் என்னிடம் பேசும்பொழுது எப்படி நீங்கள் தொழில் செய்பவர்களுக்கு ஆன்மீக விசயங்கள் செய்துக்கொடுத்து அதில் இருந்து எப்படி பணம் பெறுகிறீர்கள் பணத்தை தருவார்களா என்று கேட்டார்.

என்னை பொருத்தவரை தனிநபருக்கு செய்வது கடினம் தொழில் செய்பவர்களுக்கு எளிதில் செய்யமுடியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையாக செய்து வருவதால் எளிதில் அவர்களுக்கு ஒவ்வொன்றாக செல்லுகிறது.நீண்ட நாள் செய்கின்ற பலன் அது. பலன் சரியாக போய் சேரும்.

என்னைப்பொருத்தவரை தற்பொழுது எனக்கு அதிகளவில் வருமானம் வரும் வழியும் அது மட்டுமே. தொழில் செய்பவர்கள் மிகவும் நாகரீகமாக தான் என்னிடம் நடந்துக்கொள்கிறார்கள். 

நான் யாரையும் ஏமாற்றுவது கிடையாது. நான் யாருக்காவது செய்துக்கொடுத்த வேலை நடைபெறவில்லை என்றால் கூட அதற்கு வாங்கிய பணத்தை திருப்பி்க்கொடுத்துவிடுகிறேன். ஒரு சில விசயங்கள் காலம் தள்ளி தான் நடைபெறும் என்ற காரணத்தால் திருப்பிக்கொடுத்தவிடுவது உண்டு. ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத ஒன்று.

நம்பினால் நம்புங்கள்

ஒரு வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தை தயாரித்த நபருக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்சினை அவர் ஒரு விசயத்தில் என்னை ஏமாற்றினார். அவரிடம் சொல்லிவிட்டே செய்தேன். நீங்கள் என்னை ஏமாற்றிய காரணத்தால் உங்களின் படத்தை என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். படம் வெளியாகி இரண்டு நாட்கள் கூட திரையரங்கத்தில் ஓடவில்லை. படத்தை தூக்கிவிட்டார்கள்.

பொதுவாக எதிர்வினைக்கு செல்வதில்லை. இறங்கிவிட்டால் ஆயிரம் கோடி கம்பெனியும் அரைநாள் தாங்காது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

அஷ்டமசனி மற்றும் சந்திரபுக்தி


ணக்கம் ண்பர்களே!
                    ஒருவருக்கு மரணம் வருவதை அந்தகாலத்தில் உள்ள சோதிடர்கள் போல் இந்த காலத்தில் உள்ள சோதிடர்களால் அவ்வளவு துல்லியமாக கண்டுபிடிக்கமுடிவதில்லை. பல காரணங்கள் சொல்லுகிறார்கள். ஒரு வேளை இப்படி கண்டுபிடிப்பவர்களை நான் சந்தித்தது இல்லையோ என்று எனக்கு தெரியவில்லை. மரணத்தைப் பற்றி பல சோதிட தகவல்கள் சொல்லியுள்ளளார்கள். அதில ஒரு சின்ன தகவலை உங்களுக்கு சொல்லுகிறேன்.

மரணத்திற்க்கு என்று பல கிரகங்களின் மற்றும் வீடுகளின் நிலையை சொன்னாலும் அஷ்டமசனியால் கூட ஒருவருக்கு மரணம் ஏற்படும். பல கும்ப ராசிகாரர்களை நான் சென்ற அஷ்டமனியின் காலத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் மரணத்தை எய்தியுள்ளனர்.

அஷ்டமசனியும் ஒருவருக்கு மரணத்தை தரும். அதிலும் அஷ்டமசனியின் காலத்தில் சந்திரனின் புக்தி மட்டும் நடக்ககூடாது. அப்படி நடந்தால் அவர்களுக்கு மரணம் என்பது நிச்சயம் நடந்துவிடும். எந்த கிரகத்தின் தசா புத்தியாக இருந்தாலும் அதில் சந்திரன் புக்தி நடக்ககூடாது. 

இவர்களுக்கு பரிகாரமாக என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். அஷ்டமசனி மற்றும் சந்திரன் புக்தி நடைபெறும் காலத்தில் திங்கள்கிழமை தோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்யும்பொழுது உங்களுக்கு வரும் கண்டம் தள்ளிபோய்விடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் பல பேர் என்னிடம் கேட்கும்பொழுது எப்படி சார் நீங்கள் யாரையும் சந்திக்காமல் சோதிடத்தொழிலை செய்கின்றீர்கள். சந்திக்காமல் இருந்தால் எப்படி பணம் உங்களுக்கு வரும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்லும் பதில் ஒன்று ஒன்று மட்டுமே அது அம்மனால் அனைத்தும் நடைபெறுகிறது.

நான் வெளியில் இருந்து சம்பாதிப்பதை விட வீட்டிற்க்குள் இருந்தால் எனக்கு அதிக பணம் வரும். இதனை நான் பல முறை சோதி்த்து பார்த்து இருக்கிறேன். அம்மன் நான் வீட்டில் இருக்கிறேன் என்று பலவேறு இடங்களுக்கு சென்று எனக்கு வாடிக்கையாளர்களை கொண்டுவரும். மக்களின் மேல் உள்ள நம்பிக்கையை விட அம்மன் மேல் உள்ள நம்பிக்கை எனக்கு அதிகம் இருப்பதால் அதனை நம்பி பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கிறேன்.

நான் வீட்டில் இருக்கும் சமயத்தில் அம்மன் பல வேலைகளை செய்யும் எந்தந்த வேலைகளை அது செய்யவேண்டும் என்று நான் அதற்கு கட்டளை இட்டவுடன் உடனே வேலைகளை முடித்துக்கொண்டு வரும்.

நான் தனியாக அறையில் தங்கியிருப்பது போல் எனக்கு ஒரு நாளும் இருக்காது. எனக்கு போராடிக்கவும் செய்யாது. அம்மன் அத்தனையும் செய்யும் என்று நான் நம்புகிறேன்.இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கின்றவரையில் எந்த தனிமனிதர்களையும் நான் நம்பவேண்டியதில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 5


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி இப்பதிவில் ஒரு விசயத்தை பார்க்கலாம். பல நாட்டு அரசுகள் மற்றும் கம்பெனிகள் தனி நபர்கள் விழுந்த கதையை பார்த்தால் சபலம் என்ற ஒன்று தான் முதல் காரணமாக இருக்கும். 

ஒரு மனிதனாக பிறந்தால் அவன் பெண்ணை விரும்பினால் தான் அவன் மனிதன் என்ற நிலையை அ்டைகிறான் என்று பல பேர்கள் சொல்லியுள்ளார்கள். ஏன் மகான்கள் கூட இதனை சொல்லியுள்ளனர். அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

மோகம் என்ற ஒன்று வருவதால் திருமணம் என்று ஒன்றை நடத்திக்கொண்டு சமுதாயத்தில் வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள். இது நமது பாரம்பரியத்தோடு தொடர்பு வைத்து வருகின்ற ஒன்று. நமது பாரம்பரியம் ஒரு பெண்ணிற்க்கு மேல் வேண்டாம் என்று சொல்லி தான் திருமணம் என்ற ஒன்றை முன்னால் வைக்கிறது. அதோடு ஒரு மனிதன் இருந்தால் பிரச்சினை இல்லை. ஒன்று இல்லாமல் பலவற்றை தேட ஆரம்பித்தவுடன் அவனுக்கு சபலத்தால் பிரச்சினை வந்துவிடுகிறது.

ஒரு மனிதன் சபலத்தால் அழிக்கிறான் என்றால் இந்த விரையவீடு இல்லாமல் நடைபெறமுடியாது. இந்த வீட்டு வழியாக தான் சபலத்தால் அழிவானா என காட்டும் ஒரு இடம். இங்கு அமரும் கிரகங்களின் நிலையை பொருத்து ஒருவரின் சபலம் எப்படி வரும் என்று காட்டும்.


இனி என்னோடு தொழில் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு சொல்லும் கருத்துகளை இங்கு உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

சபலம் என்ற ஒன்று மனிதனுக்கு வருவது இயற்கையான ஒன்று தான். அந்த சபலத்தை தீர்க்கவேண்டிய இடத்திற்க்கு சென்று தீர்த்துக்கொள்ளவேண்டும். உங்களின் தொழிலியே சபலத்தை தீர்க்க நினைத்தால் உங்களின் தொழில் உங்களை விட்டு சென்றுவிடும்.

மேலை நாட்டினருக்கும் சபலம் என்ற ஒன்று இருக்கும் ஆனால் அவர்கள் சபலத்தை தன் தொழிலில் தீர்க்க நினைக்கமாட்டார்கள். தொழில் வேறு சபலம் என்பது வேறாக பார்ப்பார்கள். நம்ம ஆட்கள் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்க்காக ஒரு கோடி மதிப்புள்ள கம்பெனியை எழுதிவைத்துவிடுவார்கள். காரணம் சபலத்தை தன் கம்பெனியில் தேடியதால் வந்த விளைவு. கம்பெனியை எழுதிவைத்துவிட்டு நடு தெருவிற்க்கு வந்துவிடுவார்கள். 

உங்களின் தொழில் அழிவதற்க்கு முதல் காரணமாக அமைவது இந்த விசயம் மட்டுமே. தயவு செய்து நீங்கள் இந்த விசயத்தில் மேலைநாட்டீனர் போல் இருங்கள் என்று சொல்லுவேன்.

நீங்கள் எல்லாம் இதனை படித்துவிட்டு உங்களின் ஊரில் உள்ள அலுவலகத்தை கொஞ்சம் பாருங்கள். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏதோ ஒரு பெண் அந்த கம்பெனியை நடத்திக்கொண்டிருப்பாள். நம்ம ஆளுங்க செய்யும் முதல் தவறு இங்கே இருந்து தான் ஆரம்பிக்கும். கம்பெனி அவனை விட்டு கொஞ்சம் நாளில் சென்றுவிடும்.

சபலம் என்ற ஒன்று ஆண்டவன் நமது விதி எழுதும்பொழுதே எழுதிவைத்துவிட்டான் ஆனால் சபலம் எல்லையை மீறி போககூடாது.


தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, April 25, 2014

அம்மன் அருள்


ணக்கம் ண்பர்களே!
                    வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு அம்மனை நாம் வணங்கிவரவேண்டும் அப்படி வணங்கி வந்தால் ஆபத்துகாலத்தில் அந்த அம்மன் நமக்கு உதவும்.

பல நேரங்களில் நான் அம்மனைப்பற்றி சொல்லுவதே உங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் உயரவேண்டும் என்பதற்க்காக மட்டுமே சொல்லிவருகிறேன்.  இதனை எத்தனை பேர் செய்துவருகின்றீர்கள் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக அடுத்த வெள்ளிக்கிழமையில் இருந்து செய்ய தொடங்குங்கள்.

வீட்டில் தினமும் தீபம் ஏற்றினாலும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்து முடிந்தால் கோமியம் அல்லது கடல் தண்ணீரை தெளித்து அம்மனுக்கு தீபம் ஏற்றி வாசனைகளை போட்டு வழிப்பட்டு வரவேண்டும். 

இந்த வழிப்பாட்டை செய்து வந்தால் உங்களுக்கு பிரச்சினை என்பது வரவே வராது. உங்களுக்கு செல்வ வளம் சேரும். வெள்ளிக்கிழமை அன்று உங்களின் அம்மன் சாந்தமாக இருக்கும். அந்த சாந்தமான அம்மனை வழிப்பட்டால் உங்களின் வாழ்வு சிறக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பொது தகவல்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு குழந்தை கீழே விழுந்தால் அதற்கு அவ்வளவு எளிதில் அடிப்படாது. கை கால் முறிவு ஏற்படாது. அதே நேரத்தில் குழந்தையின் வயதை கடந்தவர்களுக்கு கீழே விழுந்தவுடன் கை கால் முறிவு ஏற்பட்டுவிடுகிறது. 

என்ன காரணம் என்றால் குழந்தையின் மனதில் எந்தவித எதிர்ப்பும் இருப்பதில்லை. அது கீழே விழும்பொழுது அது எதிர்ப்பை காட்டுவதில்லை. அதனால் குழந்தைக்களுக்கு அடிப்படுவதில்லை. நமது மனநிலை எதிர்ப்பை காட்டிக்கொண்டே இருக்கின்றது. கீழே விழும்பொழுது கூட நமது மனநிலை எதிர்ப்பை காட்டிய உடன் முறிவு ஏற்பட்டுவிடுகிறது.

குழந்தைகளின் மனநிலையில் நீங்கள் இருக்கவேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களின் உடலுக்கு தகுந்த உடற்பயிற்சியை மேற்க்கொள்ளவேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி இல்லாமல் போனதால் உடலில் ஏகப்பட்டது தேங்கிவிடுகிறது. அந்த  தேக்கம் உங்களின் உடலில் நோயாக மாறிவிடுகிறது.

இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் உரமாகமாறிவிட்டது. உரத்தை தான் நாம் சாப்பிடுகிறோம். இயற்கையில் விளைவது கிடையாது. அதிக மகசூலுக்காக உரத்தை அதிகம் போடுகிறார்கள். நாம் என்ன செய்யமுடியும். இது எல்லாம் அரசாங்கம் செய்யவேண்டும். 

உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால் அதில் முடிந்தளவு காய்கறிகளை இயற்கை முறையில் வளர்க்க ஆரம்பியுங்கள். நகரபுறமாக இருந்தாலும் வீட்டின் மேல் உள்ள காலி இடத்திலாவது காய்கறிகளை வளர்த்து அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களின் உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு உடற்பயிற்சி முக்கியம் என்பதை நினைவு வைத்துக்கொண்டு தினமும் பயிற்சி செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை படங்கள்

வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் நடைபெற்ற அம்மனின் பூஜை படங்கள். இதனை எடுத்து எனக்கு அனுப்பியவர் கண்டியூர் திரு ராமசுப்பிரமணியன் அவர்கள்.






நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



Thursday, April 24, 2014

மாற்றம் வருமா?


வணக்கம் நண்பர்களே !
                   மாற்றங்கள் வருமா என்றவுடன் அரசியலில் மாற்றம் வருமா என்பதைப்பற்றி எழுதுகிறார் என்று நினைக்கவேண்டாம். உங்களின் வாழ்க்கையில் மாற்றம் வருமா என்று பார்க்கவேண்டும். ஏன் இந்த நேரத்தில் இந்த பதிவு என்றால் தொடர்ச்சியாக கிரக பெயர்ச்சிகள் நடைபெறபோகின்றது. 

கோச்சார பலனை வைத்தே நாம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அல்லவா. அந்த கோச்சாரப்பலன்களுக்குரிய கிரகங்களின் பெயர்ச்சியில் உங்களின் மாற்றங்கள் வருமா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோச்சாரப்பலன்களில் தான் பல மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஓட்டிக்கொண்டிருப்பவர்கள் மற்றும் அனைவரும் வரும் கிரகப்பெயர்ச்சியில் எப்படி மாற்றம் வரும். அதனை முழுமையாக நாம் அனுபவிக்க என்ன செய்யவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டால் வருகின்ற நல்ல பலனை பெருக்கிகொள்ளலாம். வருகின்ற தீயபலனை குறைப்பதற்க்கு என்ன வழி என்பதை பார்த்துக்கொள்ளலாம் அல்லவா.

இப்பொழுதே அதற்க்கான வழியை தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. கோச்சாரப்பலன்கள் பற்றி உங்களுக்கே நன்றாக தெரியும். அதனை வைத்து நீங்களே உங்களின் ஜாதகத்தில் உள்ளவற்றை தெரிந்துக்கொள்ளமுடியும். உடனே தயாராகி காரியத்தில் இறங்கி நல்ல பலனை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அவசியமான பதிவு


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலத்தில் பல ஆன்மீகவாதிகள் தங்களால் முடிந்த ஆன்மீக விசயங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறார்கள். தனக்கு தெரிந்த வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கின்றனர். ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருந்தும் இன்றைய காலத்தில் உள்ள மனிதன் அதனை நோக்கி செல்லவதில்லை. 

வாய்ப்பு இருந்தும் அவன் செல்லாதர்க்க்கு காரணம் அவனுக்கு அங்கு செல்ல தடை ஏற்படுத்துவது மட்டுமே. அப்படி என்ன தடை என்று பல நேரங்களில் நான் யோசித்து பார்த்து இருக்கிறேன். அதற்கு காரணம் ஒரு மனிதனை வழிநடத்தும் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வம் வாயடைத்து போவது தான் முதல் காரணமாக இருக்கின்றது.

இதனை கண்டுபிடித்து அந்த வழியை சொன்னாலும் இன்றைய தேதிக்கு 600 நண்பர்களுக்கு மேல் நமது பதிவு வந்தாலும் அதில் ஒரு சிலரால் மட்டுமே வழிபாட்டு முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி வரமுடிகிறது. மற்ற அனைவரும் ஏதோ படித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வம் வாயடைத்து நிற்பதற்க்கு காரணம் என்ன என்று பார்த்தால் அதுவும் சோதிட ரீாியாக பார்த்தால் அவர்களுக்கு மறைவு இடமான மூன்றாம் ,ஆறாம், எட்டாம் மற்றும் பனிரெண்டாவது வீட்டு அதிபர்களின் கை ஓங்கி இருப்பதால் மட்டுமே இப்படி நடைபெறுகிறது.

மறைவு ஸ்தான அதிபர்களின் கை ஓங்கிவிட்டால் உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தின் சக்தி கிடைக்காமல் சென்றுவிடும். அதனை எல்லாம் நீங்கள் தெரிந்துக்கொண்டு உங்களின் வழிபாட்டு முறையினை கைவிட்டுவிடகூடாது. இந்த அதிபர்களின் கை ஓங்கும்பொழுது நீங்கள் தெய்வம் இருக்கின்றதா இல்லையா என்று பேச ஆரம்பித்துவிடுவீர்க்ள்.

உங்களின் பக்தி எப்படி இருக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு உதாரணத்தை உங்களிடம் சொல்லுகிறேன். அதுபோல் உங்களின் பக்தி இருக்கவேண்டும். அதுவும் எவ்வளவு துன்பத்திலும் அந்த நம்பிக்கை வேண்டும்.

பிரகலாதனை தன் மகன் என்று பார்க்காமல் அவன் தகப்பன் இரணியன் கடுமையாக தண்டித்தான் ஆனாலும் பிரகலாதன் நாராயணர் மேல் உள்ள நம்பிக்கை குறையாமல் ஓம் நமோ நாராயணாய என்று சொல்லிக்கொண்டே இருந்தான் அல்லவா. அந்த நம்பிக்கையை தான் அவனை காப்பாற்றியது. அது போல் உங்களுக்கு சோதிடத்தில் உள்ள கிரகங்கள் தான் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்று எண்ணி நீங்கள் நம்பிக்கையுடன் வழிப்பாட்டு முறையை பின்பற்றி வந்தால் அற்புதமான வாழ்க்கையை நீங்கள் அமைத்துக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அதிர்ஷ்டம் வரும் வழி


ணக்கம் ண்பர்களே!
                    அதிர்ஷ்டம் வரும் வழியில் ஒரு கருத்தை சொல்லுகிறேன். படித்து பாருங்கள்.

உங்களுக்கு மாந்தீரிக பாதிப்பு எல்லாம் அவ்வளவு எளிதில் வராது. மனிதர்களின் கண் பாதிப்பு தான் உங்களின் வளர்ச்சியை தடைச்செய்யும் காரணிகளாக அமையும். இதனைப்பற்றி பழைய பதிவில் நான் சொல்லியுள்ளேன். மீண்டும் இன்று சொல்லுவதற்க்கு ஒரு வாய்ப்பு உருவாகியது அதனால் சொல்லுகிறேன். 

ஒரு மனிதனின் கண் உங்கள் மீது விழுந்தால் அதுவும் பொறாமையுடன் விழுந்தால் உங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். நன்றாக இருப்பவர்களை கீழே விழுந்த கதை எல்லாம் இந்த காரணத்தால் மட்டுமே நடைபெறும்.இன்று உங்களுக்கு பணம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த விபரத்தை பத்து பேரிடும் சொல்லிபாருங்கள். வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேராது.

பத்து பேரின் மனம் பல விதத்திலும் கணக்கு செய்யும். அந்த மனதின் எதிர்மறையான எண்ணத்தால் உங்களுக்கு வரவேண்டிய பணம் வராது. பெரிய அளவில் இருப்பவர்கள் எல்லாம் இதற்கு முதல் வழியை செய்துக்கொள்வார்கள். கண் அடி இல்லை என்றால் நீங்கள் எளிதில் வெற்றிப்பெற்றவர்களாக மாறிவிடுவீர்கள். நான் பழைய பதிவில் சொல்லியுள்ளேன் தேடிபிடித்து படித்துக்கொள்ளுங்கள். கல் அடிப்பட்டாலும் கண் அடிபடக்கூடாது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 4



வணக்கம் நண்பர்களே!
                  ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீக தேடுதல் இயற்கையில் இருக்கும் என்று சொல்லிருக்கிறேன். குரு கிரகம் பனிரெண்டாவது வீட்டில் தங்கி தன் தசாவை நடத்தும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக மோட்சம் கி்டைக்கும். 

மோட்சத்திற்க்கு முதலில் என்ன வேண்டும் என்றால் நமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டும். குரு உங்களுக்கு அமைவார். ஆன்மீக சம்பந்தப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களின் நேரம் பல நாட்கள் ஆன்மீகத்திற்க்கு என்றே செலவு செய்வீர்கள். நேரமும் செலவும் தான் ஆனால் யாரும் அதனை பார்த்துக்கொண்டு இருப்பதில்லை,

குரு கிரகம் நன்றாக அமையாமல் போனால் உங்களை ஆன்மீகவாதிகள் ஏமாற்றுவார்கள். அதனை செய்து தருகிறேன் என்று சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை பிடிங்கிவிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் இது தானே உலகம் முழுவதும் நடைபெறுகிறது.

ஒரு சிலருக்கு கோவில் விழாக்களில் மரியாதை கொடுக்காமால் உங்களை அவமதிப்பு செய்வார்கள். உடனே நீங்களும் பெரிய பிரச்சினையை கிளப்பிவிடுவீர்கள். அது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.

கோவில் குளங்கள் என்று ஒரு சிலரை விசிட் அடித்துக்கொண்டே இருப்பது போல் செய்துவிடும். அங்கு செல்வதை முதல் வேலையாக வைத்திருப்பீர்க்ள். 

பொதுவாக குரு பனிரெண்டில் இருக்கும்பொழுது அதாவது நன்றாக இருந்தால் நீங்கள் ஆன்மீகவாதிகளாக இருப்பீர்கள். பனிரெண்டில் கெட்டு அமர்ந்தால் அதிக அவமானத்தை தெய்வீக வழியில் மற்றும் ஊர் பொதுவிசயங்கள் வழியாக உங்களுக்கு கெட்ட பெயர் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, April 23, 2014

காவல் தெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    பல நாட்கள் சென்ற பிறகு இன்று காளிகாம்பாளை தரிசனம் செய்யும் வாய்ப்பு வந்தது. சென்று வந்தபிறகு பதிவை எழுதுகிறேன். அம்மனை தரிசனம் செய்வது அதுவும் கூட்டம் இல்லாதபொழுது தரிசனம் செய்வது நன்றாக இருக்கும். சென்னையில் எத்தனையோ பேர் இந்த பதிவுகளை படிக்கின்றனர். நான் பல வருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன் ஆனால் எத்தனை பேர் அங்கு சென்று தரிசனம் செய்து இருப்பார்கள் என்பது தெரியாது. என்ன ஒன்று நம்ம ஆட்கள் அவ்வளவு எளிதில் எதற்கும் சென்று விடுவார்களா என்ன அட போடா இருக்கின்ற வேலையில் இது எல்லாம் என்று அலுத்துக்கொள்வார்கள்.

சென்னையில் இருந்துக்கொண்டு தரிசனம் செய்யவில்லை என்றால் உண்மையில் பாவப்பட்டவர்களாக தான் இருக்கமுடியும். சென்னையை விட்டு நானும் வெளியில் சென்றுவிடலாம என்று பல முறை முயற்சி செய்து இருக்கிறேன் ஆனால் இந்த காளிகாம்பாள் அன்னை விடமாட்டேன்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் வரட்டும் என்று கணக்கு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. 

ஒவ்வொரு மனிதனும் எந்தந்த ஊர்களில் இருக்கின்றீர்களோ அந்த ஊரில் உள்ள காவல் தெய்வத்தை வணங்கிக்கொள்ளுங்கள். இன்றைய கலியுகத்தில் நகரம் எல்லாம் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை அட வெளியில் சென்று வீடு திரும்புவதற்க்கு கூட இன்று கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஏன் என்றால் சாலை விபத்துக்கள் அப்படி நடைபெறுகிறது. நாம் நன்றாக வண்டி ஓட்டினாலும் எதிரே வருபவன் நன்றாக வண்டி ஓட்டுவானா என்பது யாருக்கு தெரியும் அந்த காரணத்தால் நீங்கள் இருக்கும் ஊரின் காவல்தெய்வத்தை வணங்கும்பொழுது அந்த காவல் தெய்வம் உங்களை காப்பாற்றும்.

நான் எந்த ஊருக்கு சென்றாலும் முதல் வேலையாக அந்த ஊரின் காவல்தெய்வத்தை வணங்குவது தான் எனது முதல் வேலையாக வைத்திருப்பேன். அந்த ஊரின் காவல்தெய்வத்தை நான் வணங்கினால் அந்த ஊரின் காவல் தெய்வம் எனக்கு எல்லா வேலையும் நன்றாக நடத்திக்கொடுத்துவிடும்.நான் செய்ததை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். பிடித்து இருந்தால் பின்பற்றலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 3


ணக்கம் ண்பர்களே!
                    விரைய தசாவில் கடந்த பதிவை படித்துவிட்டு பல பேர் பாராட்டினார்கள். அது எல்லாம் வெறும் சின்ன சாம்பிள் மட்டுமே. பெரிய விசயங்கள் எல்லாம் இருக்கின்றது அவ்வப்பொழுது நாம் பதிவில் பார்க்கலாம். நேற்றைய பதிவிலேயே சொல்லிவிட்டேன் அடுத்த பதிவில் சோதிட தகவலை தருகிறேன் என்று சொன்னேன். சோதிட தகவலை பார்க்கலாம்.

விரைய வீடு நாம் செலவு செய்யும் பணம் மட்டும் அல்ல அதோடு சேர்ந்து பல விசயங்கள் அதில் இருக்கின்றது. இந்த காலத்தில் இந்த வீடு அனைவருக்கும் மிக அருமையாக வேலை செய்கிறது என்றே சொல்லலாம்.

நாம் என்ன தான் திறமையாக இருந்தாலும் இந்த வீட்டின் வழியாக நமக்கு அவமானம் வந்து சேர்ந்துவிடும். மிகப்பெரிய அளவில் ஒரு கம்பெனியை வைத்து நடத்திக்கொண்டு இருப்பார் அவர் ஒரு சின்ன விசயத்தில் கீழே விழுந்துவிடுவார். அதற்கு எல்லாம் இந்த வீடு தான் காரணமாக இருக்கும்.

இதில் அமருக்கின்ற கிரகங்களின் காரத்துவம் உங்களை போட்டு வாட்டி வதைத்து எடுத்துவிடும். இதில் நல்ல கிரகங்கள் அமர்ந்தாலும் தீய கிரகங்கள் அமர்ந்தாலும் ரிசல்ட் ஒரே மாதிரியாக தான் நமக்கு கிடைக்கும். 

நாம் என்ன தான் நினைத்தாலும் இதில் இருந்து தப்பிப்பது கடினமான ஒன்று. அப்படி என்ன தான் இதில் இருந்து வருகிறது என்பதை இனி வரும் பதிவில் இருந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வெளிபடையான பேச்சு உங்களை உயர்த்தும்


ணக்கம் ண்பர்களே!
                    என்னிடம் சோதிடம் பார்ப்பவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்று தெளிவாக சொல்லிவிடவேண்டும். சுற்றி வளைத்து பேச வேண்டாம். எனக்கு பணம் வழியில் தான் முன்னேற்றம் வேண்டும் என்று நினைத்தால் எனக்கு பணம் தான் வேணும் என்று தெளிவாக சொல்லிவிடவேண்டும்.

தமிழ்மக்கள் அதிகம் பேர் பணத்தை எதிர்பார்ப்பது கிடையாது என்பது எனக்கு தெரியும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்று தான் அதிகம் பேர் வருவார்கள். இதனை எல்லாம் தீர்க்கவேண்டும் என்றால் ஒரு ஆயிரம் சாமியார் வந்தால் கூட நடைபெறாத காரியமாக தான் இருக்கும்.  

ஒரு சிலர் எதற்க்காக வருகின்றனர் என்பது கூட தெரியாது. பல முறை தொடர்புக்கொண்டு பேசுவார்கள். கடைசி வரை என்ன என்று சொல்லுவதே கிடையாது. கடைசியில் நீங்கள் வேற ஆட்களை பாருங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் தானே சார் பெரிய அளவில் வரவேண்டும் என்றால் என்னிடம் வாருங்கள் என்று சொன்னீர்கள் என்று கேட்பார்கள். அதாவது பணவசதி மற்றும் சமுதாயத்தில் மதிப்பு எல்லாம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டு  கடைசிவரை சொல்லாமல் இருப்பார்கள்.

என்னைப்பொருத்தவரை நீங்கள் தெளிவாக சொல்லிவிடவேண்டும் எனக்கு இது தான் வேண்டும் என்று கேட்டுவீட்டீர்கள் என்றால் அதற்கு தகுந்தார் போல் உங்களை தயார் செய்துவிடமுடியும்.

வெளிப்படையாக சொல்லும்பொழுது அதனை நான் யோசித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுவேன். என்னிடம் சொல்லாமல் இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. தெளிவாக சொல்லிவிடுங்கள். ஒரு நல்லமுன்னேற்றத்தை ஒரு சில நாட்களிலேயே காட்டிக்கொடுப்பேன். அதற்கு பிறகு நடந்துக்கொள்ளும் விதத்தை வைத்து உயர்த்துவேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அதிர்ஷ்டம் வரும் வழி


வணக்கம் நண்பர்களே!
                    அதிர்ஷ்டம் வரும் வழியில் ஒரு கருத்தைப்பற்றி பார்க்கலாம். அதிகமாக நமது நண்பர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கருத்தும் இதுவே.

உங்களின் வீடு மிகவும் முக்கியமான ஒன்று. வீடு சுத்தமாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் வீட்டில் வாசனை மணம் வரவேண்டும். அதோடு வீட்டில் அடிக்கடி பூஜைகள் செய்யப்படவேண்டும். தினமும் நீங்கள் உங்களின் வீட்டின் பூஜையறையில் பூஜை செய்தாலும் பெரிய அளவில் பூஜை செய்யும்பொழுது உங்களின் வீட்டிற்க்கு என்று ஒரு தெய்வீகசக்தி கிடைக்கும்.

நாள் முழுவதும் வெளியில் நீங்கள் வேலை செய்தாலும் உங்களை தயார்ப்படுத்திக்கொள்வது உங்களின் வீடு மட்டுமே. இரவு நேரத்தில் உங்களின் வீட்டின் வழியாக தான் உங்களுக்கு சக்தி கிடைக்கிறது. அப்படிப்பட்ட வீட்டின் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும்.

உங்களின் வீட்டில் வைத்து குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்ய சொல்லிருக்கிறேன். அது குறைந்தது மூன்று மாதம் அல்லது மாதம் ஒரு முறை செய்யுங்கள் என்று சொல்லிள்ளேன். 

உங்களுக்கு அதிக அளவில் செல்வம் சேர வேண்டும் என்றால் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை உங்களின் வீட்டில் நீங்கள் ஹோமம் செய்ய வேண்டும்.எந்த ஹோமம் வேண்டுமானாலும் செய்யலாம்.

சென்னையில் நான் தங்கியிருக்கும் அறைக்கு அருகில் ஒரு வீடு இருக்கிறது. மாதம்தோறும் அவர்களின் வீட்டில் ஹோமம் செய்வார்கள். அவர்களுக்கு என்று தனியாக ஒரு கம்பெனி இருக்கிறது. அந்த கம்பெனியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய். அந்த கம்பெனியின் பெயரை வெளியில் சொன்னால் உங்களுக்கு கூட தெரியும். வெளியில் சொல்லகூடாது என்பதால் சொல்லவில்லை. பெரிய பணக்காரர்களுக்கு இது தான் முதல் வேலையாக வைத்திருக்கிறார்கள். 

உங்களிடம் சொன்னால் எனக்கு நேரம் இல்லை என்று சொல்லுவீர்கள். என்ன செய்வது உங்களின் விதியை இப்படி எழுதியுள்ளான் கடவுள். செல்வம் வேண்டும் என்றால் செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில ஜாதகங்களில் ஆறாவது வீட்டு அதிபதி லக்கினத்தோடு அல்லது லக்கினாதிபதியோடு சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் ஏதாவது ஒரு வியாதி இருந்துக்கொண்டே இருக்கும். அவர்கள் எந்த மருத்துவர்களிடமும் சென்றாலும் அதற்கு தீர்வு என்பது இருக்காது.

அவர்களுக்கு எந்த நாளும் நோய் இருந்துக்கொண்டே இருப்பது நல்லது. ஏன் என்றால் அவர்களுக்கு நோய் இல்லை என்றால் அவர்கள் இந்த உலகத்தை விட்டு போகப்போகிறார்கள் என்று அர்த்தம். இப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் இருந்துக்கொண்டே இருப்பது நல்லது.

ஆறாம் வீட்டு அதிபதி யாரோடு தொடர்பு வைத்திருக்காரோ அவர்களுக்கும் ஏதாவது ஒரு நோய் இருக்கும். அதாவது ஆறாவது வீட்டு அதிபதி பதினோறாவது வீட்டில் இருந்தால் மூத்த சகோதருக்கு நோய் இருக்கும்.

கீழே இருக்கும் ஜாதகத்தில் ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டு அதிபதியோடு தொடர்பு வைத்திருக்கிறார். இவருக்கு அமைந்த மனைவி நோய் உள்ளவராக இருக்கிறார்.நோய் வந்த காரணத்தால் இருவரும் பிரியும் நிலையில் இருக்கின்றனர்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் இருப்பதும் இருவருக்கும் பிரச்சினை விவாகாரத்து வரை செல்வதும் புரிகிறது. பெரிய காரணம் என்ன என்றால் நோய் மட்டுமே.

உங்களுக்கு இப்படிப்பட்ட நிலையில் ஜாதகம் இருந்தால் வழிபாட்டு முறையில் தீர்ப்பதற்க்கு வழி பாருங்கள். ஆறாவது வீட்டு அதிபதியை சாந்தப்படுத்தினால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.