Followers

Sunday, December 31, 2017

நன்றி


வணக்கம்!
          2017 ஆம் ஆண்டு என்னால் முடிந்தளவுக்கு பதிவுகள் தந்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் நிறைய பதிவுகள் தந்துக்கொண்டு தான் இருக்கிறேன். பதிவுகள் கொடுப்பதை விட அதனை எல்லாம் படித்துவிட்டு எனக்கு ஊக்களித்து தொடர்ந்து ஆதரவு தந்ததற்க்கு மிக்க நன்றியை சொல்லவேண்டும்.

ஒவ்வொரு வருடமும் நிறைய நட்பு வட்டம் நமது நண்பர்களால் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. ஜாதககதம்பத்தைப்பற்றி அடுத்தவர்களுக்கு சொல்லுவதற்க்கு மிக்க நன்றி. ஒவ்வொருவருடமும் பதிவை தருவதோடு மட்டும் அல்லாமல் பலரின் வாழ்க்கைக்கும் முன்னேற்றபாதைக்கு கொண்டு செல்வதற்க்கு அம்மன் அருளால் அது சாத்தியப்படுகிறது.

வருகின்ற ஆண்டும் தொடர்ந்து நீங்கள் ஆதரவை தரவேண்டும். பல பதிவுகளை புதுமையான விசயங்களை உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டுதல் வைக்கிறேன்.

புதிய வருடகொண்டாட்டத்தை பொறுமையாக கொண்டாடுங்கள். வெளியில் செல்வதை பார்த்து செல்லுங்கள்.  பாதுகாப்பு தான் முக்கியம். வெளியில் செல்லவில்லை என்றாலும் வீட்டில் அமைதியாக பூஜையறையில் நன்றாக பூஜை செய்யலாம்.

தொடர்ந்து ஆதரவை தந்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் கிரகம் தன்னோடு சேர்ந்த கிரகத்திற்க்கு மற்றும் அதன் மீது விழும் கிரகபார்வையின் குணத்திற்க்கு தகுந்தமாதிரி வேலை செய்யும் என்பது தெரியும். சுக்கிரன் கிரகம் உணவு விசயத்திற்க்கும் காரகம் வகிக்கிறார் என்பதும் தெரிந்த விசயம். சுக்கிரன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர் உணவு விடுதிகளை நடத்தி பிரபலமாக இருப்பார்.

உணவு மற்றும் தங்கும் வசதிகளை உடைய ஹோட்டல்கள் அனைத்தும் சுக்கிரன் காரத்துவம் உடையது. இதனை அனைத்தும் நடத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு சுக்கிரன் கிரகம் நன்றாக இருக்கும். 

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் தங்கும் விடுதிகளை நடத்திக்கொணடு இருப்பவர்களை நான் கவனித்து பார்த்து இருக்கிறேன். அவர்கள் துணிகளை தயாரிக்கும் தொழில்களையும் சிறந்து விளங்குகிறார்கள். துணிகளையும் மற்றும் உணவு விடுதிகள் இவை அனைத்தும் சிறந்து விளங்க சுக்கிரனின் காரத்துவம் மிக மிக முக்கியம்.

ஒரு புதிய விசயத்தையும் சொல்லுகிறேன். வட்டி தொழில்களை நடத்திக்கொண்டு இருப்பவர்களின் ஜாதகத்திலும் சுக்கிரன் நன்றாக இருக்கும். அந்த தொழில்களுக்கும் சுக்கிரன் தான் காரத்துவம் வகிக்கிறார்.

ஒரு தொழில் ஆரம்பிக்கிறது பெரிய விசயம் கிடையாது. அந்த தொழில் எந்த வித இடையூறு இல்லாமல் சிறந்த முறையில் நடத்திக்கொண்டிருக்க சுக்கிரன் பலன் அதிகமாக வேண்டும். சுக்கிரன் பலன் இல்லை என்றால் திறன்பட செயல்படுத்த முடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 30, 2017

சுக்கிரன்+செவ்வாய்


ணக்கம்!
          சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களின் திருமணம் நடக்கும்பொழுது சண்டை சச்சரவில் தான் ஆரம்பிக்கும். சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களின் திருமண வாழ்வும் சண்டை சச்சரவோடு தான் இருக்கும்.

ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர் மகளிர் காவல் நிலையத்திற்க்கு சென்று வரவேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாகிவிடும். கணவன் மனைவிக்குள் சண்டை போட்டுக்கொண்டு மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவார்.

சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அவர்களின் அண்ணன் அல்லது தம்பி வழியில் உள்ள மனைவி உறவு அந்தளவுக்கு நன்றாக இருக்காது. அவர்கள் உங்களை வாழவிடாமல் செய்வதற்க்கு வழி செய்வார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருக்கும் நபர்களுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும். காம எண்ணத்தில் கூட வலுகட்டாயமாக உறவுக்கொள்ள மனது நினைக்கும் அது போல செயல்படுவார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருக்கும் நபர்கள் செயல்பாட்டில் துணிவு அதிகமாக இருக்கும். எதற்க்கும் கவலைப்படமாட்டார்கள். வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லுவார்கள். சுக்கிரன் செவ்வாய் ஒரு சிலருக்கு பெண்களின் வழியில் நிலபுலன்கள் கிடைப்பது போல செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 29, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவர் செல்வசெழிப்பில் வாழவேண்டும் என்றால் அவர் பிற வழிபாட்டை விட அம்மன் வழிபாடு மிக எளிய வழியில் முன்னேற்றம் அடைய செய்து செல்வசெழிப்பில் உங்களை வளர செய்துவிடும்.

வெள்ளிக்கிழமை செய்யும் வழிபாடு மிக சிறந்த வழிபாடாக பொதுவாக எல்லா மதங்களிலும் இருக்கும். வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்யும் நபர்களை நன்றாக உற்று கவனித்தால் அவர்கள் மிக சிறந்த பணக்காரர்களாக இருப்பார்கள் அல்லது செல்வந்தர்களாக விரைவில் மாறிவிடுவார்கள்.

பிற மதத்தில் உள்ளவர்களை நன்றாக கவனித்தால் அவர்கள் நன்றாக சாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள். நான் சொல்லும் நன்றாக சாப்பிடுபவர்கள் என்பது ஊட்டசத்து நிறைந்த உணவை சாப்பிடும் நபர்களாகவும் இருப்பார்கள். இந்த ஊட்டசத்து அவர்களுக்கு நிறைய செல்வவளங்களை ஈர்த்து தரும் விதத்தில் இருக்கின்றது.

நம்ம ஆளுங்க வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்வார்கள் ஆனால் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். தொடர்ந்து வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்தால் தான் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

நவ அம்மன் பொது யாகத்திற்க்கு ஜாதகம் அனுப்பியவர்கள் தங்களுக்கு நவ அம்மன் யாக புகைப்படங்கள் வரவில்லை என்றால் எனது வாட்ஸ்அப் எண்ணை தொடர்புக்கொள்ளவும். தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

வாட்ஸ் அப் எண் 9551155800.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்+சனி


வணக்கம்!
          சுக்கிரன் சனி சேர்ந்து இருந்தால் நல்லது என்று சோதிடவிதி சொல்லுகின்றது. சுக்கிரன் சனி சேர்ந்து இருக்கும்பொழுது அவர்களுக்கு நல்லவிதத்தில் அனைத்தும் நடைபெற்றுவிடும். அதே நேரத்தில் ஒரு சிலருக்கு திருமணத்தில் தாமதம் ஏற்படும்.

சுக்கிரன் சனி சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு தன் இனத்தில் இருந்து தாழ்ந்தப்பட்ட இனத்தில் உள்ள பெண்ணை மணக்ககூடிய ஒரு நிலை ஏற்படும். திருமணத்திற்க்கு முன்பு தாழ்ந்தப்பட்ட இனத்தில் உள்ள பெண்ணோடு தொடர்பு இருந்தால் திருமணத்தின் பொழுது அவர்களின் இனத்தில் உள்ள பெண்ணோடு திருமணம் நடைபெறும்.

சுக்கிரன் சனி சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு தன்னை விட கீழ் ஜாதியில் உள்ளவர்களிடம் தொழில் வாய்ப்பு ஏற்பட்டு நல்ல முன்னேற்றத்தை காணமுடியும். தொழில் வாய்ப்பு ஏற்படவில்லை என்றாலும் அவர்களின் வழியில் பணம் வந்துசேரும்.

சுக்கிரன் சனி சேர்ந்து இருக்கும்பொழுது அவர்களுக்கு திருமணம் முற்பது வயதிற்க்கு மேல் அமைத்துக்கொள்வது நல்லது. வாழ்வில் பின்பகுதியில் ஏகாப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டுவிடும். மிகப்பெரியளவில் வளர்ச்சி இருக்கும்.

சுக்கிரன் சனி சேர்ந்து இருந்தால் ஆன்மீகத்திலும் நல்ல ஈடுபாடு கிடைக்கும். சுக்கிரன் சனி சேர்ந்து இருக்கும் நபர்களுக்கு குருவும் கிடைப்பார்கள். ஆன்மீகத்திலும் புகழ்பெற்று விளங்குவார்கள்.

நவஅம்மன் பொது யாகத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்கள் உடனே கட்டணத்தை செலுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 28, 2017

சுக்கிரன்+புதன்


ணக்கம்!
         நவ அம்மன் பொது யாகத்திற்க்கு நிறைய நண்பர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பி வருகின்றனர். அனைவரையும் வரவேற்கிறேன்.  இனிமேல் வரும்காலத்தில் முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

சுக்கிரன் புதன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு புத்தி கூர்மை அதிகமாக இருக்கும். சுக்கிரன் கிரகம் வித்தைகள் நிறைய கொடுக்ககூடிய ஒரு கிரகம். சுக்கிரன் பலன் பெற்றவர்களை பார்த்தால் நிறைய வித்தைகள் கற்று தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

நாம் கேள்விபடாத வித்தைகள் கூட கற்று தேர்ந்த நபர்களாக இருப்பார்கள். வித்தைகாரகனோடு புதன் சேர்ந்தால் சிறப்பான புத்திகளை கொண்டு அவர்கள் வித்தைகளில் சிறந்து விளங்ககூடியவர்களாக இருப்பார்கள்.

சுக்கிரன் புதன் சேர்ந்து இருக்கும் நபர்கள் எப்படிப்பட்ட தேர்வுகளை எழுதினாலும் அவர்கள் பெரிய அளவில் அதில் வெற்றி பெற்றுவிடுவார்கள். சுக்கிரன் புதன் சேர்ந்த இருக்கும் நபர்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.

பெரும்பாலும் சுக்கிரன் புதன் இரண்டும் சேர்ந்து இருப்பது போல தான் ஜாதக அமைப்பில் இருக்கும். இறைவனால் மக்கள் கஷ்டத்தை அனுபவிக்க கூடாது என்று ஏற்பட்ட நிலையில் கூட இருக்கலாம். சுக்கிரன் புதன் சேர்ந்து இருப்பது தீமையை விட நன்மை அதிகம் என்று சொல்லலாம்.

தொடர்புக்கு : 9551155800.

வாட்ஸ்அப் இணைப்பு  9551155800.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 27, 2017

சுக்கிரன்+ராகு


ணக்கம்!
         சுக்கிரன் ராகு சேர்ந்து இருந்தால் அது யோகமாக மாறும் என்று ஏற்கனவே சொல்லிருக்கிறேன். சுக்கிரன் சனி ராகு மற்றும் கேது எல்லாம் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள். இவர்களின் குணங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

சுக்கிரன் ராகு சேர்ந்து இருந்தால் நீங்கள் நடப்பது நேர்மை தனமாக இல்லாமல் கொஞ்சம் திருட்டுதனம் போல இருக்கும். உங்களுக்கு திருமணமும் காதல் திருமணமாக நடைபெறுவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். மதங்களை விட்டு திருமணம் செய்யக்கூடிய ஒரு நிலையும் ஏற்படும்.

சுக்கிரன் ராகு சேர்ந்து இருந்தால் நீங்கள் இந்தியாவில் வசிக்காமல் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நிலையும் கூட ஒரு சிலருக்கு ஏற்படுத்திவிடும். வெளிநாட்டு வழியாக தொழில் செய்யகூடிய ஒரு வாய்ப்பையும் கொடுக்ககூடிய நிலையை கொடுக்கும்.

சுக்கிரன் ராகு சேர்ந்தால் காமத்தில் அதிக ஈடுபாட்டை கொடுக்ககூடிய ஜாதகஅமைப்பு இது. காம எண்ணம் ஏற்பட்டு வெளியில் அலைக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்திவிடும். இதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை இருந்தால் நல்லது.



நவஅம்மன் யாகத்திற்க்கு விரைவில் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் என்று பலமுறை ஜாதககதம்பத்தில் சொல்லிருந்தேன். பலர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. யாகம் ஆரம்பித்தவுடன் இன்று பலர் ஜாதகத்தை அனுப்புகின்றனர். 

எந்த நேரத்திலும் விளிப்பாக இருக்கவேண்டும். எந்தந்த விசயத்திற்க்கு காலதாமதம் செய்யலாம் எந்தந்த விசயத்திற்க்கு காலதாமதம் செய்யகூடாது என்று தெரிந்து இருக்கவேண்டும். நான் நினைத்தது யாரும் இதற்கு விருப்பபடவில்லை அனுப்பியவர்களுக்கு செய்துக்கொடுக்கலாம் என்று தான் செய்தேன். பதிவை தந்தவுடன் பலர் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

பலர் பணவிசயத்தில் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிகிறது. பணம் இல்லை என்றால் என்னிடம் சொல்லிவிட்டு பணம் வந்தவுடன் அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு செய்யலாம். பலர் இப்படி தான் செய்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் வரக்கூடிய எந்த அறிவிப்பு சரி உடனுக்குடன் பதில் அனுப்புங்கள்.

வாட்ஸ்அப் இணைப்பு  9551155800 .

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பொது யாகம் தொடக்கம்


வணக்கம்!
          நவஅம்மன்(சண்டி) பொது யாகம் இன்று முதல் தொடங்கப்படுகின்றது. நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு கட்டணமும் ஜாதகத்தையும் அனுப்பியவர்களுக்கு தாமதம் செய்யக்கூடாது என்பதற்க்காக உடனே ஆரம்பிக்கிறேன். 

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு குறைந்த நபர்கள் ஜாதகத்தை அனுப்பிருந்தனர். அவர்களுக்கு சிறப்பாக யாகம் செய்துக்கொடுக்கப்படும். ஒவ்வொருவரும் தங்களின் வேண்டுதல்களை இன்று முதல் வைக்க ஆரம்பியுங்கள்.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு முன்கூட்டியே தேதியே அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனே ஆரம்பித்த நோக்கம் நமக்கு அம்மனிடம் இருந்து அனுமதி வந்த காரணத்தால் இதனை ஆரம்பித்துவிட்டேன்.

சுக்கிரனுக்கு பரிகாரம் இது தான். சுக்கிரனுக்கு என்று தனியாக பரிகாரம் அறிவிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை சுக்கிரனுக்கு பலன் எழுதி வந்து இருக்கிறேன். அதற்கு எல்லாம் இது தான் பரிகாரம். இன்று முதல் நீங்கள் அனுப்பிய வாட்ஸ்அப் நம்பருக்கு படங்கள் அனுப்பி வைக்கப்படும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 26, 2017

கர்மா


வணக்கம்!
          நாம் ஆன்மீகத்தில் இருந்தாலும் இதனை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் அதோடு நமது வாழ்நாளையும் நீட்டிக்க வழி செய்துக்கொண்டு இருக்கவேண்டும். ஜாதககதம்பத்தை படிப்பவர்கள் பெரும்பாலும் ஆன்மீகவாதிகள் தான் அதிகம் படிக்கின்றனர்.

இந்த உலகத்தில் கெட்டவர்களை விட நல்லவர்கள் தான் உடனே இறந்துவிடுகின்றனர். இது ஆன்மீகவாதிக்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான். பல ஆன்மீகவாதிகள் திடீர் மரணத்தை எய்துவிடுகின்றனர். என்ன காரணம் என்று பல விதத்திலும் நான் ஆராய்ச்சி செய்து பார்த்து இருக்கிறேன்.

ஆன்மீகவாதிகளாக மாறியவுடன் அப்படியே சுத்தமானவர்களாகவே மாறிவிடுகின்றனர். சுத்தமாக கர்மாவே இல்லாத நிலையில் திடீர் மரணத்தை தந்துவிடும். ஆன்மீகவாதிகளாக இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கர்மாவை வைத்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

ஒரு கர்மாவையும் எடுக்காமல் அப்படியே சுத்தமாக மாறிவிட்டால் மரணம் வந்துவிடும். ஆன்மீகத்தில் இருந்தாலும் அவ்வப்பொழுது கர்மாவை சேர்ப்பது போலவே இருந்தால் வாழ்நாளை நீட்டிப்பது செய்து விடலாம்.

எப்படி எல்லாம் இரண்டையும் சமன் செய்துக்கொண்டு செல்வது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு செல்லுங்கள். என்னை சந்திக்கும்பொழுது இதனைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 25, 2017

நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!         
                 இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

நவஅம்மன் பொது யாகத்திற்க்கு இதுவரை நான்கு பேர் தங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பியிருக்கின்றனர். நான் நாளை தொடங்கலாம் என்று இருந்தேன். நிறைய பேர்கள் அனுப்பினால் யாகம் செய்வதற்க்கு வசதியாக இருக்கும். மாதகடைசி என்பதால் பலர் அனுப்பவில்லை என்பதும் தெரிகிறது.

நவஅம்மன் பொது யாகம் அடுத்து நடத்தவேண்டும் ஆனால் குறைவான ஜாதகங்களே வந்த காரணத்தால் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். வரும் வாரத்தில் பார்த்துவிட்டு எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்கிறேன். பொங்கல் இடையில் குறுக்கீடு இருப்பதால் முன்பே செய்துவிடலாம் என்று இருந்தேன். குறைவான நபர்கள் மட்டும் இருப்பதால் பொறுமை காக்கப்படுகிறது. விரைவில் ஜாதகங்களை அனுப்ப வேண்டுகிறேன்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Sunday, December 24, 2017

சுக்கிரன்+சூரியன்


 வணக்கம்!
          பெரும்பாலும் ஜாதகத்தில் சுக்கிரன் சூரியன் சேர்ந்து இருப்பது போல தான் இருக்கும். சுக்கிரன் சூரியன் சேர்ந்து இருந்தால் அது சுக்கிரனின் செயல்பாட்டை குறைக்கும் என்பது பொதுவான கருத்தாகவே இருக்கும்.

உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் சுக்கிரன் முதன்மையான ஒன்று. அதனை உறிஞ்சும் தன்மையிலேயே சூரியன் செயல்படும். சுக்கிரன் சூரியன் சேர்ந்து இருப்பது ஒரு விதத்தில் நன்மை என்று சொன்னால் அது தந்தையிடம் இருந்து பெறப்படும் சக்தி அதனை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

சுக்கிரன் சூரியன் சேர்ந்து இருக்கும்பொழுது பலன் நாம் தந்தையை சார்ந்து இருப்பது போலவே இருக்கும். தந்தை வழியாக நமக்கு தேவையான சொத்துக்களை மற்றும் அறிவுகளை கொடுக்ககூடிய வகையில் செயல்படும்.

சூரியன் சுக்கிரன் சேர்ந்து இருந்து பலன் சரியாக கொடுக்கமுடியவில்லை என்றால் உங்களின் தந்தை வழியில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தந்தை வழியாக எந்த வித சுகபோகங்களை அனுபவிக்க முடியாத ஒரு நிலையை தரும்.

சூரியன் சுக்கிரன் சேர்ந்து இருந்து அது மறைவுஸ்தானத்தில் இருந்தால் திருமணம் தள்ளிபோய்க்கொண்டே இருக்கும். திருமண பேச்சை எடுத்தால் அதில் பல சிக்கல்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 23, 2017

விரைய வீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
          விரைய வீட்டில் சுக்கிரன் இருந்தால் பெரும்பாலும் அவர்கள் செலவு அளிப்பது பெண்களின் விசயத்திற்க்காக செலவு செய்வார்கள் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கு என்றால் தங்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் செலவு செய்வார்கள்.

ஒரு சிலருக்கு சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் இருந்தால் அவர்களின் வீட்டில் ஏதாவது ஒரு பெண்ணை வளர்த்து அதன் படிப்பு அல்லது திருமணத்திற்க்கு கூட செலவு செய்வார்கள். செலவு என்பது சுபசெலவாகு கூட இருக்கலாம்.

சோதிடவிதி மறைவு ஸ்தானத்திற்க்கு ஒரு கிரகம் சென்றால் அது நல்லதை செய்யாது என்பார்கள் ஆனால் அது அனைத்திற்க்கும் பொருந்தாது. சுக்கிரன் எட்டாவது வீட்டிலும் பனிரெண்டாவது வீட்டிற்க்கும் சென்றால் அது யோகமாக மாறி நல்லதை செய்யும்.

எட்டு மற்றும் பனிரெண்டாவது வீட்டிற்க்கு செல்லும் சுக்கிரன் மணவாழ்க்கையிலும் பிரச்சினையை கொடுக்காது. ஒரு சில காலங்களில் இருவரையும் கொஞ்ச காலம் பிரித்து வைக்கும். அந்த பிரிவு கூட அவர்கள் தொழில் விசயமாக வெளியூர் சென்று வேலை செய்துவிட்டு வருவது போல தான் இருக்கும்.

விரைய வீட்டில் சுக்கிரன் இருந்தால் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு வாழ்க்கையை ஒரு சில ஜாதகர்களுக்கு கொடுக்கிறது. சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் இருப்பது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

லாபவீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
         சுக்கிரன் பதினோறாவது வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கு தொட்டது எல்லாம் துலங்கும். எந்த காரியம் செய்தாலும் அவர்கள் வெற்றியை பெற்றுவிடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் அனைத்து தொழிலிலும் லாபத்தை அதிகம் சம்பாதிப்பார்கள்.

சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது அக்கா வழியாக பெரியளவில் முன்னேற்றம் காணுவார்கள். லாபத்தை காட்டக்கூடிய வீட்டில் சுக்கிரன் இருப்பதால் அனைத்தும் வெற்றி என்று சொல்லலாம். அதே நேரத்தில் பெரும்பாலும் லாபத்தை தன்னுடைய மனைவி வழியாக செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

முதல் வருமானத்தை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு தொழில் செய்தால் அது அவர்களுக்கு லாபத்தில் அதிகமாக கொடுக்க சுக்கிரன் ஆரம்பித்துவிடும். சோதிடவிதியே லாபத்தில் இருக்கும் கிரகங்கள் நல்லதை செய்யும். சுக்கிரன் அதில் இருக்கும் பொழுது கண்டிப்பாக நல்ல லாபம் இருக்கும்.

பதினோறாவது வீட்டில் இருக்கும் சுக்கிரன் பெரும்பாலும் பெண்களிடம் இருந்து லாபத்தை சம்பாதிக்கவேண்டும் என்று இருக்கும். பெண்களுக்குரிய தொழிலை ஆரம்பித்து கூட நீங்கள் வெற்றி பெறலாம்.

உங்களின் ஜாதகத்தில் பதினாேறாவது வீட்டில் சுக்கிரன் இருந்து நீங்கள் எதிலும் லாபத்தை சம்பாதிக்கவில்லை என்றால் உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். சுக்கிரன் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பில் இருக்கின்றது எடுத்துக்கொண்டு எதனால் பாதிப்படைந்து இருக்கின்றது பார்க்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 22, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும் அல்லது சுக்கிரன் கிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்று பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். குரு கிரகம் கூட நன்றாக இல்லாமல் இருந்தால் கூட விட்டுவிடலாம் ஆனால் சுக்கிரன் கிரகம் நன்றாக இருக்கவேண்டும்.

குரு கிரகத்தின் நிழலில் வாழ்பவது என்பது கோடியில் ஒருவருக்கு அமையலாம். குருகிரகம் காட்டும் வழியில் வாழ்வது என்பது இன்றைய காலத்தில் சாத்தியப்படகூடிய ஒரு வழி என்பது கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும்.

சுக்கிரன் என்றால் அது காலத்திற்க்கு தகுந்தார்போல் நம்மை மாற்றிக்கொண்டு வாழும் ஒரு வாழ்க்கை. இதனை அனைத்து மக்களும் வாழமுடியும் என்பதால் சுக்கிரன் காரத்துவத்தில் வாழ்வது எளியது. 

சுக்கிரன் குரு இருவரும் ஜாதகத்தில் கெடும்பாெழுது தான் அவர்களின் வாழ்க்கை துடுப்பு இல்லாத படகுபோல சென்றுக்கொண்டு இருக்கும். ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் அவரின் இஷ்டத்திற்க்கு வாழ்வார்கள்.

சுக்கிரன் கிரகத்தின் அடியில் நாம் வாழ்ந்தாலே போதும் அது உங்களை இந்த வாழ்க்கையும் வாழ வைத்து அடுத்த பிறவி அல்லது இத்தோடு முடியும் வாழ்க்கையும் வாழ வைக்கும். 

நவஅம்மன் பொது யாகத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் அனுப்பி வைக்கவும். காலதாமதம் வேண்டாம் உடனே அனுப்பி வைக்கவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 21, 2017

கேள்வி & பதில்


சார் வணக்கம். 
      நீங்கள் இதுவரை தாங்கள் இதுவரை சுக்கிரன் கிரகம் குறித்து அளித்த விசயங்கள் அருமை. மேலும் தாங்கள் சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலே போதும் சுக்கிரன் கிரகம் செயல்பட ஆரம்பித்துவிடும் நல்ல நிலைக்கு நீங்கள் வந்துவிடலாம் என தெரிவித்து இருந்தீர்கள். சுக்கிரன் கிரகம் நம் ஒவ்வொரு ஜாதகத்தில் மிக சிறப்பாக செயல்பட தனிப்பட்ட முறையில் சுக்கிரனுக்கு என்று உணவுகள் இருக்கின்றனவா? இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.

இராமசந்திரன் சென்னை.

சனி கிரகம் கெடுதல் தரும் நிலையில் இருக்கும்பொழுது ஒருவருக்கு மிளகு சாப்பிடச்சொல்லுவார்கள். சனி கிரகம் கெடுதல் தரும்பொழும் மனிதர்களுக்கு சளித்தொல்லை அதிகமாக இருக்கும். சளி தொல்லை வராமல் இருக்க மிளகு சாப்பிடவேண்டும் என்பது பரிகாரம்.

சுக்கிரன் கிரகம் சரியாக வேலை செய்ய சுக்கிரனுக்குரிய அத்திப்பழம்  சாப்பிடவேண்டும். பாதாம் பிஸ்தா என்று சாப்பிட்டாலும் நல்லது. நல்ல சத்துள்ள உணவு அனைத்தும் சுக்கிரனுக்கு கீழ் வரும். சுக்கிரனுக்கு உள்ள உணவு எல்லாம் விலை அதிகமாக இருக்கும். இதனை சாப்பிட்டால் சுக்கிரன் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

உணவு விசயத்தில் அதிக கவனம் செலுத்தி அதனை சாப்பிடவேண்டும். உணவு கலை என்பது ஒரு அற்புதமான ஒரு கலை அதனை அறிந்து சாப்பிடுவது நல்லது. சுக்கிரனுக்கு என்று உள்ள உணவை உங்களுக்கு எளிதில் புரியவைக்கவேண்டும் என்றால் ஒரு சாமியார் என்ன சாப்பிடுவார் என்பதை அறிந்து நீங்கள் சாப்பிட்டால் போதும். சுக்கிரன் அதுவாகவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

நிறைய கருத்துக்களைப்பற்றி நான் அறிந்து வருகிறேன். நமது நண்பர்கள் வழியாக தான் அதனை அறிந்து அதனை பயன்படுத்தி பார்க்கிறேன். நேரில் சந்திக்கும்பொழுது அதனை பகிர்ந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு சுக்கிரன் எந்த ராசியில் யாரோடு இருக்கிறார் என்பதை பொறுத்து தான் அவரின் காம எண்ணம் இருக்கும். சுக்கிரன் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் மற்றும் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதற்கு தகுந்தார்போல் அவர்களின் காமமும் இருக்கும்.

புதன் போல சுக்கிரனும் இந்த விசயத்தில் செயல்படுகிறது. எந்த கிரகத்தோடு இணைகிறதோ அந்த கிரகத்திற்க்கு தகுந்தார் போல் சுக்கிரன் செயல்பாடு இருக்கின்றது. இணை சேரும் கிரகத்தின் தன்மையை அப்படியே எடுத்து பிரதிபலித்துவிடும்.

சுக்கிரன் சுயமாக செயல்பட்டால் பெரும்பாலும் அது பெரிய பிரச்சினையை கொடுப்பதில்லை. அது பல கிரகத்தோடு அல்லது பல்வேறு கிரகத்தின் பார்வையில் படும்பொழுது சுக்கிரனின் இயல்பு மாறி மனிதனிடம் உள்ள குணம் மாறிவிடுகிறது.

கிரகங்கள் தன்னை ஆட்டிவைக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். இதனை தெரிந்து வைத்திருப்பவர்கள் கூட சரியாக இருப்பதில்லை. தெரியாதவர்கள் என்ன செய்வார்கள். அவர்களின் மனம் போன போக்கில் சென்றுக்கொண்டே இருப்பார்கள்.

சுக்கிரன் உங்களுக்கு எந்த கிரகத்தோடு செல்கிறதோ அந்த கிரகத்தின் குணங்கள் எல்லாம் உங்களின் காமஎண்ணத்தில் இருந்து வெளிப்படும் என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளமுடியும். சுக்கிரன் என்பது உங்களின் வாழ்க்கையை கெடுகிறது என்றால் கண்டிப்பாக அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் இல்லை என்றால் அதனைப்பற்றி கவலைப்படதேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நம்முடைய கடமை


வணக்கம்!
          ஒருவர் தன்னுடைய பிள்ளைக்களுக்கு சொத்து சேர்க்கிறார்களோ இல்லையோ புண்ணியத்தை அதிகம் சேர்த்துவிடவேண்டும். இதனை பல பதிவுகளில் சொல்லிவருகிறேன். இதற்க்கும் நான் கண்ட அனுபவம் தான் முக்கியமாக இருக்கின்றது.

பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் அதோடு அவர்களுக்கு சொத்துகளை சேர்த்து வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதில் தவறு இல்லை ஆனால் அந்த குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவேண்டும் அவர்களுக்கு சரியான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொடுக்கவேண்டும்.

உங்களின் பிள்ளைகள் கடைசி வரை உங்களின் பேச்சையும் கேட்டு அதன்படி கடைசி வரை நடக்கவேண்டும். ஒரு சில விசயத்தில் உங்களின் பேச்சை கேட்காமல் இருந்தால் கூட முக்கியமான விசயத்தில் எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவை தான் அவர்கள் கடைசிவரை கேட்கவேண்டும்.

இதற்கு ஆன்மீகவழியில் நாம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

உங்களின் ஒய்வு நேரத்தில் எல்லாம் அருகில் இருக்கும் சிவாலயங்கள் சென்று அங்கு சிவனை நன்றாக பார்த்து வணங்கி வாருங்கள். அம்மன் கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை. 

ஒரு சில ஆன்மீகத்தில் இருப்பவர்களின் பிள்ளைகள் கூட மோசமாக போய்விடுகிறது. அதற்கு அவர்களின் குரு சரியில்லை அல்லது குருவை மதிக்கவில்லை என்று அர்த்தம். குருவிடம் மரியாதை இருந்தால் பிள்ளைகள் வீணாக போய்விடமாட்டார்கள்.

உங்களின் இப்பிறவியை சரியாக பயன்படுத்தவேண்டும் என்றால் குருவிடம் பணிந்து உங்களின் ஆன்மீகபயணம் இருக்கவேண்டும். நிறைய கோவில்களை தரிசனம் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 20, 2017

உறையூர் வெக்காளியம்மன்


வணக்கம்!
         இன்று திருச்சி சென்று வந்தேன். திருச்சியில் மதுரை நண்பர் வந்திருந்தார் அவருக்காக ஒரு கோவில் சென்று வந்த பிறகு எனக்காக உறையூர் வெக்காளியம்மன் கோவில் சென்றோம். 

உறையூர் வெக்காளியம்மன் பனிரெண்டு மணி அபிஷேகம் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று. அம்மனுக்கு அபிஷேகம் செய்வதை பார்க்க இந்த பிறப்பு எடுத்த வந்திருக்கிறோம் என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

உறையூர் வெக்காளியம்மன் கோவில் மூலவர் மட்டும் வெயில் படும்படி இருக்கின்றது. அதற்கு அபிஷேகம் செய்யும்பொழுது நாம் பார்க்கும்பொழுது மிகுந்த பரவசம் நமக்கு ஏற்படும். திருச்சி சென்றால் பனிரெண்டு மணி அபிஷேகத்தை பார்த்துவிட்டு வாருங்கள்.


நமது ஜாதககதம்பத்திற்க்கு கட்டணம் செலுத்தும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களின் அனைத்து கட்டணமும் நீங்கள் நேரிடையாகவே செலுத்துங்கள். பிறர் வழியாக கட்டணத்தை செலுத்தவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு சில கட்டணத்தை செலுத்துவதற்க்காக செலுத்திய நண்பர்கள் அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு பாதியை மட்டும் செலுத்துகின்றனர். சில காலங்கள் இதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தேன். சம்பந்தப்படுவர்களுக்கு காரியம் நடக்கவில்லை என்று வரும்பொழுது இது தெரியவருகிறது. 

உங்களின் பிரச்சினைக்கு நீங்கள் செலுத்துவது நல்லது. நீங்கள் நியமிக்கப்படும் நபர் உங்களுக்கு எந்த உறவாக இருந்தாலும் சரி அவர்கள் பணம் என்று வரும்பொழுது உங்களுக்கு தெரியாமல் பணம் எடுப்பார்கள். இதனை தவிர்த்துவிட்டு நீங்களே நேரிடையாக பணத்தை செலுத்துங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் கட்டணத்தை செலுத்தினால் நீங்கள் இவ்வளவு பணம் அனுப்பிருக்கிறேன் என்ற விபரத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். பணம் செலுத்தும் அனைவரும் தகவல் கொடுத்துவிட்டால் மிகவும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காதலில் சொதப்பல்


வணக்கம்!
          ஒருவருக்கு சுக்கிரன் தசா நடக்கிறது என்றால் அந்த நேரத்தில் குருவின் புத்தி வந்தால் அவருக்கு காதல் முறிவு ஏற்படும். திருமணம் செய்த தம்பதினர்களிடம் சண்டை சச்சரவு ஏற்படும். பெரும்பாலும் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தான அதிபதி புத்தி வந்தாலும் பிரச்சினை வந்துவிடும்.

ஒருவருக்கு குரு தசா நடக்கும்பொழுது சுக்கிரனின் புத்தி வரும்பொழுது காதல் முறிவு ஏற்பட்டுவிடும். அதோடு இருவரும் சேரமுடியாத நிலையை உருவாக்கிவிடும். திருமணம் தம்பதினர்களாக இருந்தால் சண்டை சச்சரவோடு முடிவடையும்.

சுக்கிரன் தசா நடக்கும்பொழுது பெண்களிடம் காதல் சொன்னால் அந்த காதல் கைகூடும். அதே நேரத்தில் உடனே நீங்கள் திருமணம் செய்துவிட்டால் நல்லது. காலதாமதம் ஏற்பட்டால் அடுத்த பெண்ணால் உங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டுவிடும்.

குரு தசா நடக்கும்பொழுது உங்களுக்கு காதல் வந்தால் உடனே திருமணம் நடைபெற்றுவிட்டால் நல்லது. திருமணம் நடைபெறவில்லை என்றால் அந்த காதல் எதற்க்காக பிரிந்தது என்று தெரியாமல் பிரிந்து செல்வதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

சுக்கிரனால் ஏற்படும் காதலைப்பற்றி சொல்லுவதற்க்கு தான் இப்படிப்பட்ட தலைப்பில் பதிவை எழுதுகிறேன். சோதிடத்தில் அனைத்தும் சொல்லவேண்டும் அல்லவா. 

இன்று திருச்சி வரை செல்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 19, 2017

பத்தில் சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருந்தால் அவர்க்கு ஆடம்பரமான தொழிலை நடத்துபவர்களாக இருப்பார்கள். அழகுசாதனப்பொருட்கள் கடை வைத்திருக்க வைக்கும். சினிமா திரையரங்கள் போன்ற தொழிலை நடத்துபவர்களாகவும் ஜாதகர் இருப்பார்.

சுக்கிரன் சினிமா தொழிலை நடத்துபவர்களாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் சிற்ப வேலையில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள். பத்தில் அமரும் சுக்கிரன் ஒருவருக்கு காலல் வரி சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரியவும் வைப்பார். 

சென்னையில் நான் இருக்கும்பொழுது ஒரு நபர் என்னிடம் சோதிடம் பார்க்க வந்தார். அவர் சொகுசுகப்பலில் சமையல்காரராக வேலை செய்கிறார். அவர்க்கு சனியின் வீட்டில் சுக்கிரன் பத்தில் அமர்ந்து இருந்தது.

சுக்கிரனின் பலனை பொறுத்த விசயம் ஒருவர் தொழில் நடத்துபவராகவும் ஒரு சிலரை அந்த தொழில் சம்பந்தப்பட்ட இடத்திலும் வேலை செய்யவும் வைக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து இதனை முடிவு செய்யவேண்டும்.

சுக்கிரனின் பத்தில் அமரும்பொழுது அவர் தொழில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் இருந்தே அவருக்கு வரன் அமையும். ஒரு சிலருக்கு வேலை பார்க்கும் இடத்தில் காதல் செய்து திருமணம் செய்வார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காதலில் சொதப்பல்


ணக்கம்!
          காதல் சொதப்பல் செய்வதில் குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கும் நபர்கள் செய்வது போல வேறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதை பல நண்பர்களின் ஜாதகத்தை பார்த்து தெரிந்து இருக்கிறேன்.

காதல் திருமணம் தான் செய்வேன் என்று அடம்பிடித்துக்கொண்டு காதல் செய்துக்கொண்டு இருப்பார்கள். காதல் திருமணம் முடியும் தருவாயில் இருக்கும் கடைசியில் ஏதோ ஒரு காரணத்தால் அந்த திருமணம் நின்றுவிடும். 

குரு சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் இப்படி தான் நடக்கிறது என்பது எனக்கு தற்பொழுது நிறைய ஜாதகத்தை எடுத்து பார்க்கும்பொழுது தெரிகிறது. அதிகம் நான் கவனிக்க தவறிய ஒன்று இந்த விசயம் ஆனால் பலரின் காதல் தோல்விக்கு இதுவும் காரணமாக இருக்கின்றது.

குரு சுக்கிரன் என்பது காதல் தோல்வியை தந்தாலும் மறுபடியும் அவர்களுக்கு திருமணம் செய்வது என்பது ஒரு போராட்டமாகவே இருக்கின்றது என்பதும் தெரிகிறது. பெற்றோர்கள் பார்த்து திருமணம் ஏற்பாடு செய்தாலும் நடைபெறவில்லை.

குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கும் நபர்கள் காதல் செய்தால் அவர்களின் குடும்பத்தினர்களிடம் அதிகமாக அவர்களின் காதலைப்பற்றி சொல்லிவிடுகின்றனர். காதல் தோல்விக்கு பிறகு அவர்களுக்கு திருமணம் செய்வது தடைப்படுவதும் இந்த காரணமாகும் இருக்கின்றது.

குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் அது ஒரு சாபம் வாங்கிய ஜாதகம் என்று சொல்லிருக்கிறேன். இவர்கள் தனியாக பரிகாரம் செய்யவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட தகவல். பணம் இல்லாதவர்கள் பொது பரிகாரத்தில் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனிபெயர்ச்சி


வணக்கம்!
         சனிப்பெயர்ச்சி என்பது அதிகளவில் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இருப்பதால் உங்களுக்கு பிரச்சினை வரும்.

சோதிடர்கள் சொல்லும் அளவுக்கு எல்லாம் உங்களுக்கு பிரச்சினை வந்துவிடாது. நீங்கள் உங்களின் உடல் மீது மட்டும் அதிகம் கவனம் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். உடலை காப்பாற்றுவது மட்டும் தான் முதல் கவனமாக இருக்கவேண்டும்.

சனியின் ஆற்றல் கிடைக்காமல் உங்களின் உடல் பாதிப்படைய செய்யும். உங்களின் சாப்பாட்டு விசயத்தில் நீங்கள் அதிகம் கவனம் எடுத்துக்கொண்டு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் குளியல் செய்து வந்தால் போதும்.

திருநள்ளாறு சென்று அங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவது நல்லது. தீர்த்தத்தில் நீராடாமல் சுவாமி தரிசனம் செய்யவேண்டாம்.

நவஅம்மன்(சண்டி) யாகம் இன்றோடு முடிவடைந்துவிட்டது. பொது நவஅம்மன் யாகத்திற்க்கு ஜாதகம் மற்றும் கட்டணம் செலுத்துபவர்கள் செலுத்தலாம். பொதுவாக செய்யவேண்டிய விசயத்தை தள்ளிபோடகூடாது என்பதால் இதனை உடனே செய்யவேண்டும் என்ற ஆர்வம் காட்டுகிறேன். தனிநபர்கள் தான் இதற்கு அதிகம் ஆர்வம் கொடுக்கின்றனர். பொதுநபர்களின் வேண்டுகோள் என்பதால் செய்யலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 18, 2017

காதலில் சொதப்பல்


ணக்கம்!
          இன்றைய காலத்தில் காதல் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்று சொல்லுகின்றனர். காதல் திருமணம் என்பது முதல் முதலாக காதலித்த ஆண் அல்லது பெண்ணை தான் திருமணம் செய்கின்றனர்களாக என்றால் அது இருக்காது என்றே சொல்லலாம்.

ஜாதககதம்பம் ஆரம்பித்த காலத்தில் நிறைய காதல் ஜோடிகள் தான் ஜாதகத்தை காட்டிக்கொண்டு இருவரும் திருமணம் செய்யலாமா அல்லது பிரிந்து போய்விட்டாேம் எங்களை சேர்த்து வையுங்கள் என்று எல்லாம் நிறைய பேர்கள் வருவார்கள்.

நிறைய ஆன்மீக வியாபாரம் எல்லாம் காதலர்கள் வைத்தே நடந்துக்கொண்டு இருக்கும் என்பதால் இதனை தவிர்த்து வந்திருக்கிறேன். இவங்களுக்கு எந்த வித வேலையும் செய்யாமல் இருப்பேன். ஒரு சிலர் பிடிவாதமாக இதனை பிடித்து அவர்கள் வேலை வாங்கியிருக்கின்றனர். 

பலர் என்னிடம் வந்து காதலுக்கு ஏன் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று எல்லாம் கேட்டு இருக்கின்றனர். உண்மையில் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எல்லாேரும் அதனை தான் செய்துக்கொண்டு இருக்கின்றனர். நாமும் அதனை செய்யவேண்டாம் என்று தான் சொல்லிருக்கிறேன். 

காதலில் ஒருவர் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர்க்கு சுக்கிரன் பெரிதும் துணைபுரியவேண்டும். சுக்கிரன் கிரகம் அதிகமாக பலனை கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம். காதல் திருமணம் வெற்றி பெறுவதற்க்கு முதல் தாரக மந்திரமே காதலித்துக்கொண்டே இருக்ககூடாது உடனே திருமணம் செய்துவிட்டால் நல்லது.

நம்ம ஆளுங்க சுக்கிரன் கொடுக்கும் கொஞ்ச பலனை வைத்து காதலித்துவிடுவார்கள். சம்பாதிக்க மாட்டார்கள். பணம் இல்லாமல் திருமணம் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் தான் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தடை செய்யும். முக்கால்வாசி பேருக்கு காதலிக்க கொடுத்த சுக்கிரன் பணத்தை கொடுப்பதில்லை என்றே சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் கிரகம் பெரும்பாலும் சுத்தமாக கெட்டு போய்விடாது. அதாவது ஒருவருக்கு உணவை ஏதாவது ஒரு வழியில் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. சுக்கிரன் மட்டும் சரியில்லை என்றால் சாப்பாடு கிடைக்காமல் போய்விடும் அதனால் கொஞ்சம் கருணையும் காட்டிக்கொண்டு தான் இருக்கும்.

பசி பட்டினி நிறைந்த நாடுகளை நாம் பார்த்தால் கூட அந்த நாட்டில் சுக்கிரன் கிரகத்தின் பலன் கிடைக்காமல் இருக்கும். நம்ம நாட்டிலும் இப்படிப்பட்ட விசயங்கள் இருக்கின்றன. ஆன்மீகவாதிகள் அது அனைத்தும் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம்.

சுக்கிரன் கிரகம் நமக்கு எப்பொழுதாவது ஒரு பதினைந்து நாட்களுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் கோச்சாரவழியில் தீமைகளை கொடுக்கும்பொழுது நமக்கும் சாப்பாட்டில் பிரச்சினை வரும்.

சுக்கிரன் கிரகம் நன்றாக இருந்தால் கூட மோசமான காலக்கட்டம் என்பது கோச்சாரத்தில் சரியில்லாமல் செல்லும்பொழுது நமக்கு உடல் ரீதியாக பிரச்சினை கொடுத்து உணவை எடுக்கமுடியாத ஒரு நிலையை ஏற்படுத்திவிடும்.

சுக்கிரன் பரிகாரம் என்பது நவஅம்மன்(சண்டி) யாகம் செய்வது தான் பெரிய பரிகாரம். சுக்கிரனுக்கு என்று தனியாக பரிகாரம் செய்யபோவதில்லை. தனிநபருக்கு செய்துக்கொண்டிருக்கின்ற நவஅம்மன் யாகம் முடிவடையபோகின்றது. நவஅம்மன் பொது யாகம் விரைவில் நடைபெறபோகிறது என்பதால் உடனே ஜாதகத்தையும் கட்டணத்தை அனுப்ப வேண்டுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 17, 2017

சுக்கிரன் மற்றும் லக்கினாதிபதி


வணக்கம்!
          ஒருவருக்கு லக்கினம் நன்றாக இருந்தால் பெரியதாக உணவைப்பற்றி கவலைப்படதேவையில்லை. ஒருவருக்கு லக்கனம் சரியில்லாமல் இருந்தால் அவர் உணவில் அதிக கவனத்தை செலுத்தவேண்டும்.

லக்கினம் சரியாக அமைந்திருந்தாலும் அவர் நல்ல உணவை சாப்பிடாமல் இருந்தால் கூட அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுவார். இயற்கையாகவே உங்களுக்கு நல்ல சக்தி நிறைந்த உடல் அமைப்பு இருக்கும்.

லக்கினம் நன்றாக இல்லாமல் இருந்தால் நீங்கள் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது ஒரு முக்கியவேலையாகவே நீங்கள் வைத்திருந்தால் தான் அனைத்தையும் போராடி நீங்கள் வெல்லலாம்.

லக்கினாதிபதி நன்றாக இருந்தாலும் இந்தியாவில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் நீங்களும் உடல்நிலையில் கருத்தில் கொள்ளவேண்டும். உங்களுக்கும் உடல் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கவனம் கொள்ளவேண்டும்.

லக்கினாதிபதி மற்றும் சுக்கிரன் இரண்டும் நன்றாக இருக்கவேண்டும். இரண்டில் ஒன்று அடிப்பட்டாலும் நீங்கள் அதிகமாக உணவு விசயத்தில் கவனம் செலுத்துங்கள்.

இன்று ஆஞ்சநேயர் கோவில் சென்று வழிபட்டு வாருங்கள். இன்று ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு சனிப்பெயர்ச்சி தீமையில் இருந்து காக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 16, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          நேற்று ஒன்பதில் சுக்கிரன் எழுதியவுடன் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்னிடம் அதனைப்பற்றி சொல்லிருந்தனர். ஒன்பதில் சுக்கிரன் இருக்கும் நபர்கள் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிருந்தனர். தீமைகளை பற்றி எழுதுங்கள் என்றும் சொல்லிருந்தனர். பலர் எனக்கு அம்மனின் அருள் இருக்கின்றது. நீங்கள் சொன்னது தவறு என்றும் சொல்லிருந்தனர்.

நான் எழுதுவது பொதுபலன் என்பதை பல நேரத்தில் சொல்லிருக்கிறேன். ஒரு பலன் எழுதும்பொழுது அது அனைவருக்கும் சரியான பலனை கொடுக்காது. அவர் அவர்களின் ஜாதகத்தை எடுத்து அந்த பலனை சொல்லவேண்டும்.

ஏன் இத்தனை பேர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர் என்றால் அதுவும் ஒன்பதில் உள்ள சுக்கிரன் தான் காரணம் என்று சொல்லலாம். ஆன்மீகவாதி எப்படிப்பட்டவன் என்பதை அறியும் அறிவையும் ஒன்பதில் உள்ள சுக்கிரன் தான் உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார் என்றால் அது தான் உண்மையான ஒன்று.

ஒரு தீமையைப்பற்றி சொல்லுகிறேன். ஆன்மீகவாதியிடம் ஆழம் பார்ப்பதை விட்டுவிட்டு ஏதோ ஒரு ஆன்மீகவாதியிடம் தஞ்சம் அடைந்து உங்களுக்கு தேவையானதை நீங்கள் பெற்றாலே அது போதும்.

நமக்கு வரும் குருவை காட்டக்கூடிய இடத்தில் குரு நிற்பது தவறு. இரண்டு குருவும் ஒன்பதில் நிற்பது சோதிடவிதிக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். அனுபவ வாழ்க்கைக்கு சரியில்லை என்று சொல்லுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 15, 2017

ஒன்பதில் சுக்கிரன்


வணக்கம்!
          ஒன்பதில் சுக்கிரன் இருந்தால் அவர்களுக்கு அம்மன் அருள் இருக்கின்றது என்று பல சோதிடர்களும் சொல்லிருப்பார்கள். ஒன்பதில் சுக்கிரன் இருந்தால் அம்மன் அருள் கிடைக்கும் என்பது சொல்லிவிடமுடியாது அது உண்மையல்ல. யாருக்காது ஒருவருக்கு  அம்மன் அருள் கிடைக்கும்.

ஒன்பதில் உள்ள சுக்கிரன் உங்களை அதிகமாக சோதிடம் ஆன்மீகம் மற்ற பிற ஆன்மீக சம்பந்தப்பட்ட வேலைகளை செய்பவர்களிடம் இழுத்து செல்ல வைக்கும். அதற்கு நீங்கள் அடிமையாக இருப்பீர்கள் என்று சொல்லலாம்.

ஒன்பதில் உள்ள சுக்கிரன் வசதிகளை வாரி வழங்கும் என்பது ஒரு உண்மையான ஒன்று. அந்த வசதிகள் எல்லாம் அடுத்தவர்களோடு ஒட்டிக்கொண்டு வாழ்கின்ற மாதிரி ஒரு சில இடத்தில் செய்துவிடும். தனக்கு என்று வாழமுடியவில்லை என்று தோன்றும்.

ஒன்பதில் சுக்கிரன் இருப்பவர்கள் குறைந்தது நூறு பேராவது என்னோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள். தற்பொழுதும் தொடர்பில் இருக்கின்றனர் இவர்கள் எல்லாம் என்ன சொல்லுவார்கள் தெரியுமா ? ஒரு லட்சம் கோடிக்கு ஒரு வியாபாரம் இருக்கின்றது இதனை செய்துக்கொடுக்கின்றீர்களா என்பார்கள்.

ஒன்பதில் சுக்கிரன் இருப்பவர்கள் நல்ல மனது நல்ல அறிவு எல்லாவற்றையும் கொடுப்பார் ஆனால் அவர்களுக்கு பல சிக்கல்களை கொடுப்பார். என்ன சிக்கல்களை உங்களுக்கு கொடுப்பார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் அதனை நான் சொல்லவேண்டியதில்லை.

ஒன்பதில் உள்ள சுக்கிரன் நல்லதையும் கொடுக்கும் கெட்டதையும் கொடுக்கும் என்று சொல்லிவிடுகிறேன். நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன் பரிகாரம்


வணக்கம்!
          சுக்கிரன் கிரகத்தைப்பற்றி நாம் நிறைய பார்த்துவருகிறோம். நிறைய பேர்கள் இதற்கு நல்ல வரவேற்பை கொடுத்த காரணத்தால் இதனைபற்றி நிறைய எழுதமுடிகிறது. விரைவில் சுக்கிரன் கிரகத்தை பதிவை முடித்துவிடலாம். 

சுக்கிரன் கிரகத்தை எழுதியவுடன் உடல் நிலையைப்பற்றியும் எழுதமுடிந்தது. இதனைப்பற்றியும் பல நண்பர்கள் கேட்டு அறிந்தனர். எனக்கு தெரிந்த கருத்தை பகிர்ந்துக்கொண்டு வருகிறேன். அதனைபெற்ற நல்ல உடல்நிலையிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

சுக்கிரன் கிரகத்தின் காரத்துவத்தில் உள்ள விசயங்களை மட்டும் ஒருவர் பெற்று நல்ல வாழ்க்கையை கடைசி வரை வாழமுடியும். சுக்கிரன் கிரகத்தின் பரிகாரத்தை ஒருவர் செய்துவிட்டால் கொஞ்ச நாளில் அவருக்கு சுக்கிரன் கிரகத்தின் பலன் கிடைத்துவிடுவதை அவரே காணமுடியும்.

சுக்கிரன் மட்டும் அல்ல. ஒவ்வொரு கிரகத்தின் பலனையும் தேவைப்படும்பொழுது நமக்கு தகுந்தமாதிரி பயன்படுத்தமுடியும் என்பது தான் உண்மை. கொஞ்சகாலம் அதற்கு தகுந்தமாதிரி நாம் செயல்பட்டால் போதும்.

சுக்கிரன் கிரகத்திற்க்கு சொன்ன பரிகாரம் அனைத்தையும் செய்துக்கொண்டு வாருங்கள். அடிப்படையான பரிகாரத்தை செய்து பாரத்தால் போதும். அதுவே உங்களை நல்ல முன்னேற்றத்தை நோக்கி நகர செய்யும் என்பது பலரின் அனுபவம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 14, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தால் அந்த நாட்டில் சாப்பாடு பற்றாக்குறை ஏற்படாது. நம்ம இந்தியாவில் அன்னதானம் மிகப்பெரிய தர்மம் என்று சொல்லுகின்றனர். நம்ம ஆளுங்க அதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

அன்னதானம் செய்தால் ஒரு இடத்தில் அனைவரும் அதனை சாப்பிடவேண்டும் என்று தேடி செல்கின்றனர். அன்னதானம் செய்தால் அதனை சாப்பிடவேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது என்றால் நம்மிடம் போதிய ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாட்டை ஒருவரும் சாப்பிடவில்லை என்று தோன்றுகிறது.

நாம் சாப்பிட்டு சாப்பிட்டு சளித்துவிட்டால் அதனை நோக்கி அவ்வளவு எளிதில் நாம் சென்றுவிடமாட்டோம். நம்முடைய உடல் போதிய சாப்பாட்டை சாப்பிடவில்லை என்று தான் அர்த்தம். சாப்பிடவேண்டும் என்றால் தான் நாம் அன்னதானத்திற்க்கே செல்வோம்.

நாம் இன்னமும் முன்னேற்றம் அடையவில்லையே என்று தான் தோன்றுகிறது. நாம் அனைவரும் நல்ல ஊட்டசத்தை நிறைந்த உணவை சாப்பிட்டால் நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று சொல்லலாம்.

ஒவ்வொருவரும் நல்ல ஊட்டசத்து நிறைந்த உணவை சாப்பிட்டால் அதுவாகவே சுக்கிரன் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். சுக்கிரன் ஆற்றல் வந்துவிட்டால் நம்மிடம் நிறைய பணம் வரும். அனைத்து செல்வமும் கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 13, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன்பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
           இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் கிரகம் ஒருவருக்கு சரியில்லை என்றால் அவர் காதலில் தோல்வியை சந்திப்பார் என்று சொல்லுவார்கள். சுக்கிரன் நன்றாக அமைந்த நபர்களுக்கும் காதல் தோல்வியை சந்திப்பார்கள். இது அவர்களுக்கு நடக்கும் கோச்சாரபலன் மற்றும் தசா பலனை பொறுத்து அமையும்.

பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கின்றது அதனால் காதல் திருமணம் தான் புரிவார் என்று சொல்லமுடியாது. திருமண வயதில் அவர்க்கு நடைபெறும் தசா மற்றும் கோச்சாரபலன் அதனை முடிவு செய்யும்.

ஒருவர் காதலில் தோல்வியை தழுவது அவர்களுக்கு பிற கிரகங்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்பொழுது அவர்களின் மனநிலை சரியில்லாமல் செய்துவிடும். சண்டை போட்டுக்கொண்டு பிரிவார்கள்.

சுக்கிரன் அந்த நேரத்தில் பலவீனமாக சென்றுக்கொண்டு இருந்தால் நிலைமை அதிக மோசமாக போய்விடும். சுக்கிரன் செல்லும் வீட்டிற்க்கு தகுந்தமாதிரி அவர்களின் பிரிவும் இருக்கும். எந்த காரணத்தால் பிரிவு ஏற்படுகிறது என்பது சுக்கிரன் செல்லும் வீட்டை வைத்து தான் சொல்லமுடியும். காதல் செய்கின்றீர்கள் என்றால் உடனே திருமணம் செய்வது நல்லது.

இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மனிடம் வேண்டுதல் வைப்பவர்கள் வைக்கலாம். நவஅம்மன் யாகம் நடந்துக்கொண்டு இருக்கின்றது.

பொதுநவஅம்மன் யாகத்திற்க்கு அறிவிப்பு வரும் அனைவரும் அதில் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 12, 2017

அம்மன் பூஜை


வணக்கம்!
                         நாளை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜை காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.  

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.   
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.  

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்
திருப்பூரை சேர்ந்த திரு விமல் அவர்கள்

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறுவதால் அம்மனிடம் வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Monday, December 11, 2017

எட்டாவது வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை என்பது இருக்கவே இருக்காது. நான் பார்த்தவரையில் சுக்கிரன் எட்டில் இருக்கும் நபர்களுக்கு எப்படியும் பணம் வந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு வராமல் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் அதிகமாகவே வரும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

எட்டாவது வீட்டில் சுக்கிரன் மறைந்து இருக்கின்றது அதனால் பிரச்சினை என்று பார்த்தால் ஒரு சில வேலை காரணமாக அவர்களின் துணையை அடிக்கடி பிரிந்து செல்ல நேரிடும். அதுவும் நிரந்தரமாக இருந்துவிடாது அடிக்கடி வந்து பார்த்து செல்லும் நபர்களாகவே இருப்பார்கள்.

எட்டாவது வீட்டில் பெண்ணிற்க்கு சுக்கிரன் இருந்தால் அவர்கள் தான் அந்த வீட்டின் தலைவர் போல செயல்படுவார். அவர் சொல்லுவதை அவரின் கணவன் கேட்கவேண்டும். வரவு செலவு எல்லாம் அவரின் பார்வையில் தான் இருக்கும்.

மறைவு வீட்டில் இருப்பதால் ஆன்மீகத்திலும் நல்ல ஈடுபாட்டை கொடுப்பார். இவர் செய்யும் எந்த ஒரு ஆன்மீகபணியும் தோல்வி என்ற பேச்சிற்க்கு இடம் இல்லாமல் அனைத்தையும் முடிப்பார்கள். இவர்களை நம்பி ஆன்மீக பணிகளை செய்ய கொடுக்கலாம்.

சுக்கிரன் எட்டாவது வீட்டில் இருப்பதால் வண்டி வாகனங்கள் வாங்குவதில் மட்டும் இழுபறி காட்டுவார். ஒரு சிலருக்கு சொத்துக்கள் பிரச்சினை இருக்கும். இவர்களின் சொத்தை அடுத்தவர்கள் ஆளுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 10, 2017

ஏழாவது வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் ஏழில் நின்றால் அது களத்திரதோஷம் என்று சோதிடம் சொல்லுகிறது. சுக்கிரன் ஏழில் நிற்பவர்கள் நிறைய பேர்கள் நல்ல வாழ்க்கையும் வாழ்கின்றனர். ஏழில் சுக்கிரன் நிற்க்கும்பொழுது அவர்களுக்கு திருமணம் செய்யும்பாெழுது மட்டும் காலதாமதம் ஆகும் என்பதை தவிர மற்றபடி நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.

ஏழில் தனித்து நிற்க்கும் சுக்கிரன் களத்திரம் தோஷம் தருகின்றது என்று நீங்கள் நினைத்தால் சுக்கிரனுக்குரிய பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம். ஒரு சில இடத்தில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும் அவர்கள் சுக்கிரன் வழிபாட்டை செய்துக்கொள்ளலாம்.

சுக்கிரன் ஏழில் நின்று உங்களுக்கு பொருத்தம் பார்க்கும்பொழுது ரஜ்ஜி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யவேண்டாம். ரஜ்ஜி பொருத்தம் இருந்தால் மட்டும் திருமணம் செய்துக்கொள்ளுங்கள். 

ஏழில் நிற்க்கும் சுக்கிரன் அதிக பெண் தொடர்பை கொடுப்பார். உங்களின் திருமண வாழ்வில் பிரச்சினை வருகின்றது என்றால் சந்தேகபார்வை பார்ப்பதால் தான் வரும். பெண்களின் தொடர்பில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தால் இந்த பிரச்சினை வராது.

களத்திர தோஷம் கடுமையாக இருக்கின்றது என்றால் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தாலி வாங்கிக்கொடுத்தால் இந்த தோஷம் நிவர்த்தியாகும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு