Followers

Tuesday, September 30, 2014

அம்மன் மீது உள்ள ஈடுபாடு


வணக்கம் நண்பர்களே!
                      அம்மன் பூஜைப்படங்களை அடுத்த பதிவில் தருகிறேன். அம்மன் பூஜைக்கு என்று தயார் செய்வதே எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் நான் முழுவதும் அதில் தான் ஈடுபட்டுக்கொண்டு இருப்பேன்.

அனைவரின் பிராத்தனைகளை பூஜையின் பொழுது அம்மனிடம் சேர்ப்பது எனது கடைசி வேலையாக இருக்கும். உடல் உழைப்பு அதிகமாக நான் செய்வது பூஜையின் நேரத்தில் மட்டுமே. அனைவருக்கும் பூஜை நடக்கும்பொழுது போனில் கூப்பிட்டு சொல்லவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கும். வேலை காரணமாக கூப்பிடமுடியவில்லை.

இன்றைய பூஜைக்கு சென்னையில் இருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் நான் மற்றும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் வேலை செய்வதை பார்த்துவிட்டு கேட்டார். இந்த பூஜைக்கு இவ்வளவு வேலை இருக்கிறதா என்று கேட்டார்.

அம்மன் பூஜைக்கு முழு ஈடுபாட்டோடு வேலை செய்கிறோம். எவ்வளவு வேலை இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டோடு செய்வதால் மிகசிறப்பாக வருகிறது. அவ்வளவு நேர்த்தியாக பூஜை செய்படுவதை நீங்கள் போட்டோவில் பார்த்தாலே தெரியும். நேரில் பார்க்கும்பொழுது மிகவும் பரவசமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Monday, September 29, 2014

நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      உழவன் இரயில் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். அம்மன் பூஜைக்காக ஊருக்கு சென்றுக்கொண்டு இருக்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள  வயல்கள் அனைத்திலும் ஆற்று நீர் பாய்ந்து பார்ப்பதற்க்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. 

நான் பலமுறை சொல்லியுள்ளேன். மாந்தீரிகத்தை எல்லாம் நம்பாதீர்கள் என்று ஆனால் பல பேர் அது உண்மை தான் என்று இன்றும் நம்பிக்கொண்டே இருப்பது தான் வேதனை.

தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் நல்ல ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவருக்கு தெரியாத ஆன்மீகவாதிகள் இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு இருந்தார். செய்த தவறை அனுபவிக்கவேண்டும் என்று ஆன்மீகத்தில் இருந்தாலும் மாந்தீரிகத்தில் அப்படி இல்லை தவறை மறைக்கமுடியும் என்பார்கள்.

அவர் நினைத்து இருந்தால் நெட்டில் உலாவும் எத்தனையோ மாந்தீரிகரை வைத்து நீதிபதியை வசியம் செய்து இருக்கலாம். அவர் அதனை செய்யவில்லை காரணம் மாந்தீரிகம் என்பது இந்த காலத்தில் இல்லை என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது.

உண்மையான ஆன்மீகம் தவறை ஏற்றுக்கொண்டு அதனை அனுபவிக்கும். அதனை தான் அவர் செய்திருக்கிறார். தேவையில்லாமல் பணத்தை அவர் இழக்க விரும்பாமல் புத்திசாலியாக அவர் இருந்திருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட சிக்கல் போல் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டு இருக்கும். நாம் உடனே சென்று அவரை வசியம் செய்துவிடுங்கள் என்று ஓடி பணத்தை இழந்துவிடுவோம்.

வசியம் என்பது உண்மை என்றால் தீர்ப்பு சொன்னவரை மயக்கி இருக்கலாம் அல்லவா. அப்படி ஒன்று இல்லை என்று நான் சொன்னால் கேட்கிறீர்களா


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Sunday, September 28, 2014

பிரபஞ்ச தத்துவம்


வணக்கம் நண்பர்களே!
                    தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை பார்த்துவிட்டு என்னை தொடர்புக்க்கொண்டு பிரச்சினை இல்லாமல் இருக்கிறீர்களாக என்று கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு முறை சென்னையில் புயல் என்று சொன்னவுடன் நான் அந்த புயலை பார்க்க பெசன்ட் நகர் பீச்சிற்க்கு சென்று இருந்தேன். எவ்வளவு பெரிய ஆபத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு அதில் அமைதி அடையமுடியுமா என்று பார்ப்பதற்க்கு அப்படி செய்தேன். அதே நேரத்தில் மிகுந்த விழிப்புணர்வோடு அந்த இடத்தில் இருப்பேன். அதே நேரத்தில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றும் நினைப்பேன்.

நேற்றும் பிரச்சினை என்று சொன்னவுடன் உடனே வெளியில் கிளம்பி சென்று பார்த்தேன். ஒரு பிரச்சினையும் இல்லை கடைகள் மட்டும் சாத்தி வைத்து இருந்தார்கள். வேறு ஒன்றும் பெரிய அளவில் இல்லை. மாலை நேரத்தில் நீண்ட தூரத்திற்க்கு நடந்து சென்று பார்த்தேன். எனக்கு தெரிந்த வரை ஒன்றும் நடைபெறவில்லை.

ஒரு நிகழ்ச்சியை மாறி மாறி தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது அந்த நிகழ்ச்சி ஏதோ பெரிய பிரச்சினை மாதிரி மனதிற்க்கு தெரியும். மனதளவில் மக்களை தயார் செய்யும் ஒரு யுத்தி அது. 

ஒவ்வொரு நாளும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது அதே நேரத்தில் நாம் பிரபஞ்சத்திற்க்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை என்றால் இந்த பிரபஞ்சம் நம்மை காக்குமே தவிர அழிக்க நினைக்காது. அது பிரபஞ்ச தத்துவம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Saturday, September 27, 2014

நான்கில் சனி சுகம் கெடும்


வணக்கம் நண்பர்களே!
                      என்ன தான் தசாநாதன் வலுவாக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் தசாநாதனை மீறி கோச்சாரத்தில் வரும் தீயகிரகங்கள் கெடுதலை தந்துவிடுவது பல ஜாதகத்தில் நான் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனும் சுகமாக வாழவேண்டும் என்று தான் நினைப்பான். நமக்கு கிடைக்கும் சுகத்தை நாம் அறிவது ஜாதகத்தில் நான்காவது வீட்டை பொறுத்து தான் கிடைக்கும். நான் நான்காவது வீட்டை வைத்து ஒருத்தர் நன்றாக வாழ்வாரா அல்லது கெட்டுபோவார என்பதை பழைய பதிவில் சொல்லியுள்ளேன்.

கோச்சாரப்படி சனிக்கிரகம் நான்காவது வீட்டிற்க்கு வரும்பொழுது அவர்களின் சுகம் கண்டிப்பாக கெடும். வீட்டை காட்டும் இடமாகவும் இருப்பதால் வீட்டை விட்டு வெளியேற்றி வைத்துவிடும். கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இப்பொழுது சிம்ம ராசிக்கு நான்காவது வீட்டிற்க்கு சனிக்கிரகம் வரப்போகிறார். வந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்ளுங்கள் அர்த்தாஷ்டமசனியை சிம்மராசி எதிர்க்கொள்ள வேண்டும். கொஞ்சம் பார்த்து அனைத்து வேலையும் செய்யுங்கள். 

நாம் என்ன செய்வது இப்பொழுது நாம் செய்த தவறுக்கு பிரச்சினை வந்தாலும் சூட்டோடு அனுபவித்துவிடலாம். எப்பொழுதோ செய்த தவறுக்கு இப்பொழுது பிரச்சினை வரும்பொழுது நமக்கு அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும். 

சனிக்கு என்று நான் சொன்ன பரிகாரத்தை செய்து வாருங்கள். குறிப்பாக  சூப் பற்றி பழைய பதிவில் சொல்லியுள்ளேன். உடலுக்கு மிகவும் நல்லது. மிக நல்ல பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                       அம்மன் பூஜை வரும் 30.09.2014 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு இந்த  மாதம் பங்களித்தவர்கள்.


சென்னையை சேர்ந்த திரு ராஜ்கண்ணன் அவர்கள்
செய்யாரை சேர்ந்த சரவணபாபு அவர்கள்
தூத்துகுடியை சேர்ந்த கலைராஜன் அவர்கள்
கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
சத்ய சீத்தாராமன் அவர்கள்

வழக்கம்போல் அம்மனின் பூஜையில் பங்கேற்க்கும் 

கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்

மற்றும் பலர் இதில் பங்களிப்பை செலுத்தியுள்ளார்கள்.

நவராத்திரி அன்று பூஜை செய்யப்படுவதால் அம்மனிடம் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதை தருவாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Friday, September 26, 2014

நல்ல வாய்ப்பு கிடைத்தது


வணக்கம் நண்பர்களே!
                     செல்வவளம் என்று வந்தவர்களுக்கு மட்டும் நல்ல வாய்ப்பை தருகிறேன். இவர்களுக்கு கொடுக்கும் மருந்து நன்றாக வேலை செய்யும் அதே நேரத்தில் இவர்களுக்கு என்று தனியாக அம்மனை வைத்து ஒரு சில வேலைகளை செய்ய போகிறேன். 

ஜாதக வழியில் உங்களுக்கு என்று ஒரு சில வேலைகளை நீங்களே எளிய வழியில் செய்துக்கொள்ளும் படி செய்ய பாேகிறேன். அந்த காரணத்தால் மட்டுமே உங்களின் ஜாதககத்தை நான் கேட்டு வாங்கினேன்.

என்மீது நம்பிக்கை வைத்து கேட்ட காரணத்தால் உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறேன். நல்ல வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பல பேருக்கு நான் வாய்ப்பை கொடுத்து பார்த்து இருக்கிறேன். கொஞ்ச நாளில் அவர்கள் வேலையை காட்டிவிடுவார்கள். அதன் பிறகு கொடுத்த வாய்ப்பை திரும்பி பெறுவது உண்டு.

அவர்களை போல் நீங்கள் இல்லாமல் நல்ல வழியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல முறையில் அமைதியாக அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சிறந்த வழிப்பாட்டு முறையும் உங்களுக்கு கற்றுதரப்படும் மற்றும் பல நல்ல வழிமுறைகள் இதில் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

செல்வவளம் விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்திற்க்கு என்று ஒரு பதிவை ஆரம்பித்த நேரத்தில் இருந்து எனக்கு நிறைய போன்கால்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. 

செல்வவளத்திற்க்கு சாப்பிடுவதற்க்கு ஒரு பொருள் இருக்கின்றதா என்று என்னிடம் நிறைய நண்பர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இப்படிபட்ட விசயம் எல்லாம் தைரியமாக என்னால் மட்டுமே செய்யமுடியும்.

என்னுடைய நீண்ட கால நண்பர்களுக்கு நிறைய செய்துக்கொண்டே இருப்பேன். என்னுடைய தொழில் நண்பர்களுக்கு எல்லாம் இதனை நான் பல வருடங்களுக்கு முன்பே கொடுத்து இருக்கிறேன்.

ஒருவர் பணக்காரர்களாக மாறவேண்டும் என்றால் நிறைய செய்யவேண்டும் அதாவது நிறைய வேலைகளை செய்ய வேண்டும் அப்பொழுது மட்டுமே அவர்களை தேடி செல்வம் வரும். சும்மா உட்கார்ந்துக்கொண்டு எந்த தேடுதலும் இல்லாமல் எப்படி செல்வவளம் வரும். நான் சொல்லுவது ஆன்மீக விசத்தில் தேடுதல் இருக்கவேண்டும் என்கிறேன்.

ஜாதககதம்பத்தில் எத்தனையோ பதிவில் செல்வவளத்திற்க்கு என்று சொல்லிவருகிறேன். அதனை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்த பொருள் இருக்கும்.

உடல் முழுவதும் எண்ணெயை தேய்த்துக்கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்பார்கள். அதுபோல் உங்களின் உடலில் அதிர்ஷ்டம் என்பது இல்லை என்றால் நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களிடம் பணம் வராது.

நல்ல அதிர்ஷ்டத்தை உங்களிடம் உருவாக்க இந்த பொருள் உங்களுக்கு உதவும் என்பதில் ஐயப்படதேவையில்லை. கண்டிப்பாக நமது பழைய நண்பர்கள் எல்லாம் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

இதுவரை என்னை தொடர்புக்கொண்டவர்களுக்கு மட்டுமே என்னால் கொடுக்கமுடியும். செல்வத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைப்பவர்களை அடையாளம் கொள்ளமுடிந்தது. இவர்களுக்கு மட்டும் தற்பொழுது தரமுடியும். இனிமேல் தொடர்புக்கொள்பவர்களுக்கு தயாரிக்கும்பொழுது தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

அம்மன் அடையாளம்


வணக்கம் நண்பர்களே!
                      யோகா தியானம் போன்ற வகுப்புகளுக்கு செல்பவர்கள் என்னை வந்து சந்தித்தால் அவர்களால் எளிதில் என்னை அடையாளம் கண்டுக்கொள்ளமுடியும். 

நீங்கள் யாராவது ஒருவரின் யோகா வகுப்பிற்க்கு சென்று வருபவர்களுக்கு என்னை வந்து சந்தித்து பேசும்பொழுது அவர்களுக்குள் பல மாற்றங்கள் நடைபெறுவதை அவர்கள் அறியமுடியும்.

என்னிடம் பேசும்பொழுது அம்மன் அவர்களுக்கு பல சக்கரங்களில் மாற்றத்தை காண்பித்து  மூன்றாவது கண் கூட வேலை செய்ய ஆரம்பிக்கும். இது உண்மையாக நடக்ககூடிய ஒன்று.

உங்களின் யோகா மற்றும் தியானத்தின் வழியாக அடைந்த விசயத்தை தாண்டி பல உள்ளன என்று அப்பொழுது தெரிய ஆரம்பிக்கும்.இதுவரை நீங்கள் இந்த மாதிரியான வகுப்புக்களுக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் சென்றுவிட்டு கொஞ்சநாட்கள் பயிற்சி செய்துவிட்டு வந்து பாருங்கள் நல்ல மாற்ற்ம் கிடைக்கும்.

ஒரு சிலர் என்னிடம் கூட கேட்பார்கள் எந்த சக்கரத்தை நீங்கள் ஆக்டிவ்வேட் செய்கிறீர்கள் என்பார்கள். நான் எதுவும் செய்வதில்லை நீங்கள் வந்து என்னிடம் பேசும்பொழுது அம்மன் இருந்தால் அதுவாகவே செய்கின்ற ஒன்று.


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Thursday, September 25, 2014

ஏழில் குரு வாழ்க்கை மாறும்


வணக்கம் நண்பர்களே!
                      கோச்சாரப்படி குரு கிரகம் ஏழில் நிற்க்கும்பொழுது அந்த ராசிக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரும் நேரமாகவே அது இருக்கும். 

கோச்சாரப்பலன் குறைவாக தான் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் ஒரு சிலருக்கு கோச்சாரப்படி நல்ல நேரமும் வரும். அப்படிப்பட்ட ஒன்று தான் குரு கிரகம் ஏழில் வரும் காலம் நன்மையை அதிகம் கொடுக்கும்.

ஒருவருக்கு திருமண வாழ்க்கை என்பது அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரும். ஏழில் நிற்க்கும் குரு ஒருவருக்கு எப்படியும் திருமண வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பார். திருமணவாழ்க்கை அமைந்தால் வாழ்க்கை மாறிவிடும் அதனை தான் ஏழில் நிற்க்கும் குரு தருவார்.

மகரராசிக்கு இப்பொழுது ஏழில் குரு நிற்கிறார். மகரராசியினர் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பொன்னான வாய்ப்பு உங்களை தேடிவரும். திருமண ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

திருமணம் முடிந்தவர்களுக்கு புதிய தொழில் தொடங்க அல்லது வீட்டில் ஏதாவது ஒரு விஷேசம் நடைபெறவைப்பார். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சிறிய முயற்சி செய்தால் அது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

நேர்மையான வழியை கடைபிடிப்போம்


வணக்கம் நண்பர்களே!
                      நான் ஒரு சில நேரங்களில் எனது முகநூலை பார்க்கும்பொழுது நிறைய மாந்தீரிக சைட் பற்றி வரும் அதனை கிளிக் செய்து பார்த்தால் ஒரே மாந்தீரிக சம்பந்தமான விசயங்களை புத்தகங்களில் இருந்து எழுதியதை பார்ப்பேன். 

அந்த முகநூலில் முக்கால் வாசி நமது நண்பர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஏன் இப்படி எல்லா விசயத்திலும் நுழைக்கிறார்கள் என்று மட்டும் தெரியவில்லை. பொதுவாக நான் சொல்லுவது எந்த ஒரு விசயத்தையும் நேர்மையாக இருந்து அதில் வெற்றி பெறவேண்டும். பல தளங்களை பார்க்கும்பொழுது அது கண்டிப்பாக நம்பகதன்மையற்றதாக இருக்கிறது.

என்னிடம் வாருங்கள் என்று சொல்லவில்லை நீங்கள் தவறான வழியை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று மட்டும் சொல்லுவேன். நாம் நேர்மையான வழியில் செல்லவேண்டும். அப்படி சென்றால் மட்டுமே நமது வாரிசுகள் மற்றும் நமது குடும்பம் நல்ல நிலையில் இருக்கும்.

அம்மனை வைத்து நான் பல வேலைகள் செய்தாலும் அது நேர்மையான வழியில் நான் சென்றால் மட்டுமே அம்மன் எனக்கு உதவும் அப்படி இல்லை என்றால் அம்மன் உதவாது. ஏன் என்றால் நேர்மைக்கு மட்டுமே தெய்வம் துணை நிற்க்கும்.

நமது சித்தர்கள் எத்தனையோ நல்ல விசயங்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். நம்ம ஆட்கள் தவறான வழியில் சித்தர்களை பற்றி சொல்லிக்கொண்டுள்ளனர். சித்தர்களின் மாந்தீரிகம் என்று தான் பல தளங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இது அனைத்தும் தவறான ஒன்று. தவறான ஒன்றுக்கு துணை போகாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கேட்டால் கிடைக்கும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு ஆன்மீகவாதியும் அவர் அடைந்த ஒன்றை எடுத்த விசயத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்தவிட்டு தான் செல்வார்கள். இன்றைக்கு பல பேர் என்னிடம் ஆன்மீகம் கற்றுக்கொடுங்கள் கேட்பவர்கள் அனைவரும் இதனை புரிந்துக்கொள்ளவேண்டும்.

தாவோவில் இருப்பவர்கள் தனக்கு சீடர்கள் அமையவில்லை என்றால் ஏதாவது ஒரு மரத்திடம் தான் அடைந்த விசயத்தை சொல்லிவிட்டு செல்வார்களாம். பிற்காலத்தில் அந்த மரத்தில் இருந்து ஞான விசயத்தை பிற்காலத்தில் இருப்பவர்கள் கேட்டு தெரிந்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்றைய காலத்தில் பல பேர் சித்தர்களின் சமாதிக்கு தேடிச்செல்கின்றனர். அப்படி செல்லும்பொழுது நீங்கள் அங்கு வேண்டிக்கொள்வது எனக்கு ஒரு நல்ல ஆன்மீக ரகசியங்கள் கிடைக்கவேண்டும் அதற்கு வழி செய்து தாருங்கள் என்று கேட்டாலே உங்களை தேடி ஆன்மீகம் வந்துவிடும்.

எல்லைற்ற ரகசியங்களை கொண்டுள்ள பல கோவில்கள் இருக்கின்றன அவைகள் அனைத்தும் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது. நீங்கள் சென்று கேட்டாலே அதுவாக கிடைத்துவிடும்.

அனைவரும் இனிமேலாது ஒவ்வொரு கோவில்கள் மற்றும் சித்தர்களின் கோவிலுக்கு செல்லும்பொழுது இதனை கேளுங்கள். உங்களுக்கு கண்டிப்பாக கொடுத்தவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Wednesday, September 24, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்திற்க்கு என்று ஒரு சாப்பிடும்பொருளை தருகிறேன் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஒரு சிலர் என்னை தொடர்புக்கொண்டு பேசும்பொழுது எப்படி சார் இது சாத்தியப்படுமா என்று கேட்டார்கள்.

கண்டிப்பாக இது நல்ல வேலை செய்யும் என்பது என்னிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை வைத்தே சொல்லிவிடமுடியும். முதன் முறையாக தமிழ் நண்பர்களுக்கு இதனை தருகிறேன். இதுவரை என்னிடம் தொழில் செய்பவர்களுக்கு என்று செய்துக்கொடுத்த பொருளை பல பேர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்க்காக ஜாதககதம்பத்தில் இணைத்து இருக்கிறேன்.

அற்புதமான ஒரு விசயத்தை நான் கொடுத்து இருக்கிறேன். என் மீது நம்பிக்கை இருப்பவர்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள். இது போல் பல தேவைகளுக்கு என்று பல பொருள்களை தயார் செய்து என்னிடம் தொழில் செய்யும் நண்பர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறேன். நேரம் வரும்பொழுது ஜாதககதம்பத்தில் அதனைப்பற்றி வெளியிடுகிறேன்.

ஏன் இப்படி செய்கிறேன் என்றால் உங்களின் உடல் சரியில்லை என்றால் எதுவும் செய்துவிடமுடியாது. ஆன்மீகம் மற்றும் பொருளாதாரத்தில் நீங்கள் வெற்றி பெறமுடியாது என்பதால் இப்படி செய்து தருவது உண்டு. 

எப்படி இது எல்லாம் உங்களால் தயார் செய்யமுடிகிறது என்றால் நான் படித்த ஆன்மீகம் அப்படிப்பட்டது. சொல்லிக்கொடுத்தவன் சாதாரணமானவன் கிடையாது. அனைத்தையும் அறிந்த ஒரு ஞானியிடம் நான் கற்றேன். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதைப்பற்றி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்கமுடியாது அதற்கு என்னிடம் நேரம் இல்லை. 

தொழில் செய்பவர்கள் உடல் முடியவில்லை என்று படுத்துவிட்டால் என்ன செய்வது அதனால் அவர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை பார்த்து செய்துக்கொடுத்துக்கொண்டே இருப்பேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      அம்மன் பூஜை நவராத்திரி நேரத்தில் நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளேன். இதுவரை அம்மனிடம் வேண்டி அந்த காரியத்தை அம்மன் நடத்திக்கொடுத்து இருந்தால் அம்மன் பூஜையில் நீங்கள் பங்கு பெறலாம்.

அம்மன் கோவில் எந்த ஊரில் இருக்கிறது என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டுள்ளனர். பழைய பதிவுகளில் நான் தந்து இருக்கிறேன். அம்மன் எனது சொந்த ஊரில் இருக்கிறது. நான் அனைவரையும் அங்கு கூப்பிட்டால் கூட்டம் சேர்ப்பது போல் ஆகிவிடும் என்பதால் நான் யாரையும் கூப்பிடுவதில்லை.

பொருளாதார வளத்தில் என்று நீங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறீர்களோ அன்று சென்று வணங்கிக்கொள்ளலாம். 

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன்
பாலாயிகுடிக்காடு
ஆம்பலாப்பட்டு தெற்கு
ஒரத்தநாடு தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்.
தமிழ்நாடு.

அம்மன் பூஜைக்கு என்று முன்கூட்டியே பணம் அனுப்புவர்கள் அனுப்பி வையுங்கள். பூஜையை திட்டமிடுதலுக்கு நன்றாக இருக்கும்.

மதுரைக்கு இன்னும் ஒரு வாரத்தில் வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். மதுரையில் என்னை சந்திக்க நினைப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

சந்திக்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னோடு இதுவரை பேசாமல் இருந்து வருகின்றனர். மூன்று வருடங்களாக படிப்பவர்கள் கூட என்னை தொடர்புக்கொண்டு பேசாமல் இருந்து வருவது தெரியவருகிறது. ஒரு நட்போடு பேசலாம். 

நேற்று கூட ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சொன்னது நீங்கள் ஆன்மீகவகுப்பை எடுப்பதாக இருந்தால் உங்களை தொடர்புக்கொள்ளலாம் என்று இருந்தேன் என்று சொன்னார்.

ஆன்மீகவகுப்பு எடுக்ககூடாது என்பது குருவின் வாக்கு. குருவின் வாக்கை மீறகூடாது என்பது எனது கொள்கையாக வைத்திருக்கிறேன். அதனை மீறி என்னால் எதுவும் செய்துவிடமுடியாது. 

உங்களுக்கு தேவையானது என்னால் நடைபெறும் ஆனால் அதே நேரத்தில் என்னை தொடர்ச்சியாக சந்திக்கும்பொழுது மட்டுமே அது நடைப்பெறும். பல வெளிநாட்டு நண்பர்கள் கூட என்னை வந்து தொடர்ச்சியாக சந்திக்கிறார்கள். 

நீங்கள் என்னை சந்தித்து உங்களின் வாழ்க்கையில் உள்ள நல்ல விசயங்கள் மற்றும் பிரச்சினைகளை பகிர்ந்துக்கொண்டு அதற்கு தீர்வையும் பெறலாம். நீண்ட நாட்கள் என்னை தொடர்ந்து வாருங்கள்.வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் நேரில் சந்திக்கமுடியவில்லை என்றாலும் போனில் தொடர்புக்கொண்டு பேசுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Tuesday, September 23, 2014

தன்னம்பிக்கை ஒரு நாள் தோல்வி அடையும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது சொன்னார். தன்னம்பிக்கையோடு செயலை செய்தால் வெற்றி கிடைத்துவிடும் ஆனால் நீங்கள் ஆன்மீகம் வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் தன்னம்பிக்கையோடு அனைத்து வேலையும் செய்கிறார்கள். அனைவருக்கும் ஏன் வெற்றி கிடைப்பதில்லை. உழைத்தவர்கள் அனைவருக்கும் வெற்றி கிடைத்து இருந்தால் ஆன்மீகம் என்பது வளரவே வளராது. இத்தனை கோவில்கள் மற்றும் ஆன்மீகம் சம்பந்தபட்ட செயல்கள் நடைபெறாது.

தன்னம்பிக்கையோடு செயல்படும்பொழுது அனைத்தையும் வெற்றுவிடலாம் என்று தான் ஒவ்வொரு வேலையும் செய்கின்றனர் ஆனால் அதனை தாண்டி வேறு ஒன்று உள்ளது என்பதை வாழ்க்கையில் நிறைய தோல்விகள் வரும்பொழுது மட்டுமே தெரியவருகிறது.

பல பேர்கள் சோதிடம் என்பது பொய் என்று சொல்லுவார்கள் நீங்களும் இப்படிப்பட்டவர்களை சந்தித்து இருப்பீர்கள். இவர்கள் அடுத்தவர்களிடம் சோதிடம் என்பது பொய் என்று சொல்ல வேண்டியதில்லை. சோதிடத்திடம் சவால் விட்டுக்கொண்டு அவர்கள் வாழலாம். வாழ்நாள் முழுவதும் நான் ஜாதகத்தை தொடாமல் இருந்துவிடுவேன் என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தால் ஒரு நாள் அவர்கள் சோதிடத்திடம் தோற்றுபோவது அவர்களுக்கு தெரியவரும்.

என்னிடம் நிறைய நண்பர்கள் சொல்லுவார்கள். சார் என்னிடம் தன்னம்பிக்கை எல்லாம் இருக்கிறது ஆனால் செயல் தோல்வியை தருகிறது என்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவது தன்னம்பிக்கையோடு ஆன்மீகத்தை சேருங்கள் என்று சொல்லுவேன். தன்னம்பிக்கையோடு ஆன்மீகத்தை சேர்த்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

ராகுவும் அமாவாசையும்


வணக்கம் நண்பர்களே!
               ராகு கிரகத்திற்க்கு ராகு காலம் ஒதுக்கப்பட்டாலும் அமாவாசை நெருங்கும் நேரம் மற்றும் அமாவாசை அன்று அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். எனக்கு தெரிந்த பல நண்பர்களின் ஜாதகத்தில் ராகு கிரகத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் நண்பர்களுக்கு அந்த நேரத்தில் நல்லதும் கெட்டதும் அதிகமாக நடைபெறும்.

ஒரு நண்பருக்கு ராகுவும் சூரியனும் சேர்ந்து இருந்தது அவரிடம் நான் சொல்லி வந்தேன். அமாவாசை நெருங்கும் நேரத்தில் வண்டியில் செல்லாதே என்று சொல்லிருந்தேன். என்னபா இந்த காலத்தில் வண்டியில் செல்லாதே என்று சொன்னால் எப்படி பிழைப்பை நடத்தமுடியும் என்று கேட்டான்.

ஒரு அமாவாசை அன்று காலையில் ஹர்ட் அட்டாக்கில் இறந்துவிட்டான். அமாவாசை தாக்கம் அதிகம் இருந்தாலும் அனைவரும் அதில் சிக்குவதில்லை பெரும்பாலும் ராகு கிரகத்தித்தின் காரத்துவம் அதிகம் இருக்கும் ஜாதகருக்கு அந்த நாள் பெரும் பிரச்சினையை தரும்.

அமாவாசை மட்டும் இல்லை தேய்பிறையில் வரும் சந்திராஷ்டமும் இவர்களுக்கு பிரச்சினை தருவதாக இருக்கும். சந்திராஷ்டம் வரும் நாளிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.சந்திராஷ்டமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் உயிருக்கு கூட வினை வைத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

விரதம்


வணக்கம் நண்பர்களே!
                      எங்கள் வீட்டில் எந்த ஒரு விரத்தையும் அனுசரிக்கப்படுவதில்லை. தை அமாவாசை மட்டும் விரதம் இருந்தார்கள். சாதாரண நாளில் நாங்கள் விரதம் இருப்பதில்லை. நான் சொல்லி ஆடி அமாவாசை அன்று விரதம் இருப்பார்கள்.

எங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு மட்டும் நடைபெறும். அதற்கு விரதம் இருக்க தேவையில்லை. உங்களை போட்டு அதிகம் வருத்திக்கொள்ள தேவையில்லை. குலதெய்வ வழிபாடு மற்றும் வருடத்திற்க்கு இரண்டு முறை அமாவாசை விரதம் இருந்தால் போதும். அதிகமாக பித்ரு தோஷம் இருந்தால் அவர்கள் மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று விரதம் இருக்கலாம்.

கண்ட கண்ட பரிகாரங்களை செய்துக்கொண்டு இருப்பதை விட ஒரு வழிபாடு மட்டும் செய்து வந்தால் போதுமானது. அந்த ஒரு வழிபாடு உங்களை உயர்த்தும்.

சோதிடர்களின் வேலை ஏதாவது ஒரு பரிகாரத்தை சொல்லிக்கொண்டே இருப்பது. அனைத்தையும் நீங்கள் செய்துக்கொண்டு இருந்தால் உங்களின் முழு நேரமும் வீணாக போய்விடும். நேரத்தை உழைப்பில் காண்பிக்கவேண்டும்.

கடவுள் வழிபாடு வேண்டாம் என்று சொல்லவில்லை. காலையில் வேலைக்கு போகும்பொழுது ஒரு ஐந்து நிமிடம் பூஜையறையில் பிராத்தனை செய்துவிட்டு சென்றால் போதுமானதாக இருக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Monday, September 22, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைக்கு எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. பழைய நண்பர்கள் எல்லாம் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஏன் பேசினார்கள் என்று மட்டும் கேட்காதீர்கள்.

ஒரு ஆன்மீகவாதி தொழில் செய்பவர்களுக்கு உதவுகிறேன் என்று வரும்பொழுதே என்னைப்பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்தையும் உங்களுக்கு செய்துவிடுவேன் என்று எதிர்பார்க்ககூடாது. 

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் ஏன் சார் இதனை இரண்டு வருடத்திற்க்கு முன்பே என்னிடம் சொல்லி இருக்கலாமே இப்படி ஒரு பொருள் இருக்கிறது என்று கேட்டார். கடைசி வரை நான் ஒரு புரியாத புதிராக இருந்தால் மட்டுமே என்னை தேடி வந்துக்கொண்டே இருப்பீர்கள்.

ஒரு நாளில் அனைத்தையும் கொட்டிவிட்டு நான் அம்போ என்று உட்காரமாட்டேன். நீங்கள் எவ்வளவு உயரம் சென்றாலும் கடிவாளம் என்னிடம் மட்டுமே இருக்கும்.

என்னிடம் கடைசிவரை இருப்பவர்களுக்கு மட்டும் அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்கும். கடைசி வரை எனக்கு பணம் கொடுப்பது மாதிரி தான் வைத்திருப்பேன். 

பணம் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறி உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள். வந்தால் என்னை விடாமல் துரத்திக்கொண்டு வாருங்கள். உலகத்தில் உள்ள அனைத்து நல்ல விசயங்களும் உங்களை தேடி வரும்.

கடைசியாக சொல்லுவது நான் நல்ல வேலைக்காரன். புத்திசாலியாக இருந்தால் பயன்படுத்துக்கொள்ளுங்கள். இல்லை ஜாதககதம்பத்தை மட்டும் படித்துக்கொண்டு இருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

காலம் என்ற கடவுள்


வணக்கம் நண்பர்களே!
                      பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒரு காலத்தை அவர்களுக்கு  வைப்பேன். அந்த காலத்திற்க்குள் அவர்கள் செய்துவிட்டால் அவர்களை தன்னோடு வைத்துக்கொள்வது அப்படி இல்லை என்றால் அவர்களை ஒதுக்கிவிடுவது எனது முதல் வேலையா இருக்கும்.

நீங்கள் ஒருவரை சந்திக்க வரச்சொல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் நீங்கள் சொன்ன தேதிக்கு வரவில்லை என்றால் நீங்கள் அந்த நபரிடம் நீங்கள் நினைக்கும் வேலையை கொடுக்ககூடாது. அதனை மீறி அவரிடம் கொடுத்தால் அது தவறாக தான் முடியும்.

காலத்தின் மீது நான் நிறைய நம்பிக்கை வைப்பவன். சொன்ன தேதியில் நான் நடத்திக்கொடுப்பேன். அதைப்போல் சொன்னபடி அவர்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவன். என்னிடம் வருபவர்களிடம் சொல்லும் வார்த்தை இது தான்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் கேட்ட ஒரு விசயத்திற்க்கு நான் சொன்னது இந்த தேதியில் எனக்கு நீங்கள் பணம் கட்டவேண்டும் என்று சொன்னேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டு சென்றவர். அந்த தேதியில் எனக்கு பணம் கட்டவில்லை. மறுநாள் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார் இன்றைக்கு நான் பணம் கட்டலாமா என்று கேட்டார். அவரிடம் நான் இனிமேல் எந்த நாளும் நீங்கள் எனக்கு பணம் கட்ட தேவையில்லை. வேற ஆளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

அவர் தொடர்ந்து ஏன் சார் என்ன என்று கேட்டார். காலம் என்ற கடவுள் உங்களுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்ற தீர்மானித்துவிட்டது அதனால் நீங்கள் வேற ஆளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

சொன்ன நேரத்திற்க்கு சொன்னபடி நடந்தால் காலம் நம்மோடு அவரை இணைக்கிறது என்று அர்த்தம். அப்படி நடக்கவில்லை என்றால் நம்மை காலம் பிரிக்கிறது என்று அர்த்தம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

செய்யகூடாத செயல்


வணக்கம் நண்பர்களே!
                      நாம் கோவிலுக்கு செல்லுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த கோவிலுக்கு சென்ற பிறகு வணங்கிவிட்டு நேரிடையாக நமது வீட்டிற்க்கு வந்துவிடவேண்டும்.

இன்றைய பல பெரிய கோவில்களின் வாசலில் பார்த்தால் நிறைய குறி சொல்லும் கடைகளும் சோதிடம் சொல்லும் கடைகளும் தான் இருக்கும். கோவிலுக்கு செல்லும் பலரை நான் கவனித்து பார்த்து இருக்கிறேன். சாமி தரிசனம் முடிந்த பிறகு நேரிடையாக இந்த கடைகளுக்கு சென்று குறி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

மனம் நிம்மதிக்காக கோவிலுக்கு சென்ற இடத்தில் இப்படி குறி கேட்பது தவறான ஒன்று. நாம் கோவிலின் சக்தியை எடுத்துக்கொள்ள கோவிலுக்கு செல்லுகிறோம் அதனை எடுத்த பிறகு நமது வீட்டிற்க்கு தான் வரவேண்டும்.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரு நண்பரை பார்ப்பதற்க்கு சென்று இருந்தேன். நான் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் பலர் என்னை தூக்கி கொண்டே சென்றுவிடுவார்கள் போலிருக்குது இங்கு வாருங்கள் நாடி சோதிடம் பார்க்கலாம். உங்களுக்கு உள்ள பிரச்சினையை தீர்க்கிறோம் என்று பல ஏஜென்டுங்கள் அங்கு உள்ளனர்.

இது எல்லாம் ஒரு கோவிலின் புனிததன்மையை கெடுக்கும் ஒரு செயலாகவே இருக்கும். அதனால் நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் குறி கேட்பது சோதிடம் பார்ப்பதை செய்யாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      இது ஒரு புதுமையான ஒரு விசயம் அதாவது ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது நீங்கள் ஜாதககதம்பத்தை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். இதனை தடுப்பதற்க்கு யாராவது ஆன்மீகவழியில் முயற்சி செய்து உள்ளார்களா என்று கேட்டார்.

உண்மையான ஒரு கருத்து இது. பல பேர் முயற்சி செய்து இருக்கிறார்கள். நானே உங்களிடம் சொல்லியுள்ளேன் ஜாதககதம்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதற்கு காரணம் ஆன்மீகவழியில் எதிரிகள் அதிகம் இருப்பார்கள்.

ஒரு சைட்டை எழுதவிடாமல் செய்து விடுபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நானே பல சைட்டை முடக்கி இருக்கிறேன். தொழில் என்று வந்துவிட்டால் வாழ்வா சாவா என்று இருக்கவேண்டும். 

என்னிடம் குரு சொல்லியுள்ளார் வல்லவனுக்கு வல்லவன் கண்டிப்பாக வருவான். அவன் வந்து அடித்தான் என்றால் அடி வாங்கி தான் ஆகவேண்டும் என்று சொல்லியுள்ளார். முடிந்தால் உயிரை காப்பாற்றிக்கொள்ள தான் வழி தேடவேண்டுமே தவிர எதிர்த்து போர் செய்ய கூடாது என்பார். அந்த நேரத்தில் அடிவாங்கி தான் ஆகவேண்டும்.

ஒரு தடவை அடி வாங்கினால் அதில் இருந்து மீள பல நாட்கள் ஆகும். அப்படி ஒரு நரகவதையை அனுபவிக்க தான் வேண்டும். ஒரு சிலர் கொஞ்சம் மேலே சென்று குடும்பத்தை கை வைத்துவிடுவார்கள். நாம் பிழைத்துக்கொள்ளமுடியும் குடும்பத்தில் உள்ளவர்கள் கை வைக்கும்பொழுது அவர்களுக்கு மரணம் வந்துவிடும்.

நான் இந்த நேரத்தில் ஒரு அலுவலகம் போட்டு கூட இதனை எல்லாம் செய்யமுடியும் ஆனால் அது எனக்கு பிரச்சினை என்பதால் மட்டுமே அதனை எல்லாம் நான் செய்யவில்லை. நான் எங்கு தங்கியிருக்கிறேன் என்பதை கூட அடுத்தவர்களுக்கு சொல்லுவதில்லை. இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் அல்லது அந்த இடத்திற்க்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வைத்துக்கொள்ளவேண்டும்.

செயற்க்கை கோளை கூட நிறுத்தலாம் சைட்டை நிறுத்துவது பெரிய விசயமா? உங்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்வது இதனை எல்லாம் கற்றுகொள்ளுங்கள் என்று தான் சொல்லுவேன். ஏன் என்றால் இந்த பிரபஞ்சத்தில் சக்தியின் வலிமை என்ன என்று உணர்ந்துக்கொள்ளலாம். ரொம்ப ஜாலியான விசயம் ஏன்டா என்னடா இது ஜாலியான விசயம் என்று கேட்கிறீர்களாக ஆன்மீகத்தில் ஜாலியாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

பரிகாரம் ஏன் வேலை செய்யவில்லை?


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று ஒரு நண்பர் என்னை சந்திக்கும்பொழுது சொன்னார். ஆன்மீகவாதிகள் நிறைய பேர் நிறைய கருத்தை சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்து மற்றும் அவர்கள் சொல்லுகின்ற பரிகாரங்களை எல்லாம் செய்து பார்த்தால் ஒன்றும் நடைபெறவில்லையே சார் எதனால் என்று கேட்டார்.

இவர்கள் சொல்லும் கருத்து எல்லாம் புத்தகங்களில் இருந்து படிப்பதால் ஒன்றும் நடைபெறுவதில்லை என்று அவரிடம் சொன்னேன். புத்தங்களில் இருந்து படிக்கும் செய்தி வைத்து பரிகாரம் செய்தால் ஒன்று நடைபெறாது. 

ஒவ்வொரு பரிகாரமும் அனுபவத்தில் இருந்து எடுத்து செய்தால் மட்டுமே அந்த பரிகாரம் வேலை செய்யும். என்னுடைய பரிகாரம் அதிகபட்சம் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் செய்கிறேன். நான் செய்கின்ற பரிகாரம் அவர்களின் ரிசல்ட் வைத்து தான் எனக்கு பணம் வரும் அப்படி இருக்கும்பொழுது எனது பரிகாரம் தோல்வியை சந்தித்தால் எனக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துவிடும்.

ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்து செய்கின்ற பரிகாரம் கண்டிப்பாக வெற்றி பெறும். படிக்கும் விசயம் வேறு. சூட்சமும் என்பது வேறு. சூட்சமத்தில் ஒரு உயிர் போல் அதனோடு உறவாடமுடியும். ஒரு மனிதனை பற்றி நாம் படிக்கலாம் ஆனால் அவனை நேரில் சந்திக்கும் பொழுது மட்டுமே அவனின் உண்மையான இயல்பு என்ன என்று தெரியும். சூட்சம உலகத்தில் போக தெரிந்தவனுக்கு மட்டும் தான் பரிகாரத்தில் வெற்றியை தரமுடியும்.

எனக்கு தெரிந்த வரை பரிகாரம் என்ற முறையில் ஏமாற்றம் தான் நடைபெறுமே தவிர அதில் உண்மையாக விசயம் நடைபெறுவதில்லை. மனரீதியாக நிறைய பிரச்சினை மக்களுக்கு ஏற்படும். அதனை எளிதில் தீர்த்துக்கொள்ள வழியை மட்டும் ஆன்மீகவாதிகள் செய்வார்கள். இதனை பார்த்து மக்கள் இவர் நல்ல பரிகாரம் செய்கிறார் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். உண்மையில் சூட்சம உலகத்தோடு தொடர்புக்கொள்பவர்களிடம் வித்தை இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.




Sunday, September 21, 2014

சூரியன்


வணக்கம் நண்பர்களே!
                    எந்த ஒரு பரிகாரம் செய்தாலும் முதலில் நீங்கள் சூரியனுக்கு செய்த பிறகு செய்யுங்கள். ஏன் என்றால் சூரியனுக்கு செய்த பிறகு அடுத்த கிரகத்திற்க்கு செய்யும்பொழுது எந்த வித தடைகள் இல்லாமல் நீங்கள் பரிகாரம் செய்யலாம்.

சூரியனுக்கு பரிகாரம் என்று சொன்னவுடன் அவருக்கு பெரிய அளவில் எல்லாம் செய்ய தேவையில்லை. உங்களால் முடிந்தால் ஒரு தீபம் ஏற்றலாம் அல்லது வீட்டிற்க்கு வெளியில் வந்து காலை பொழுதில் நீங்கள் சூரியனை பார்த்து வணங்கலாம்.

சிம்ம ராசியை உடையவர்கள் தினமும் சூரியனை பார்த்து வணங்கிவரலாம். சூரியன் உதிப்பதற்க்கு முன் எழுந்து சூரியனை வரவேற்று வணங்கிவரலாம். பொதுவாக அனைத்து ராசியினரும் அதிகாலை தான் எழுந்து வணங்கி வருவது நல்லது.

ஆத்மா காரகன் என்று சொல்லப்படும் சூரியனை வணங்கிவருவதால் ஆத்மா பலன் நன்றாக இருக்கும். அதிகாலையில் எழும்பொழுது மட்டுமே ஆத்மா பலம் பெறும். அதிகாலை எழுந்து சூரியனை வணங்கிவாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி நிறைய செய்திகளை பார்த்துவருகிறோம். நண்பர் பரமேஸ் கூட சக்தியைப்பற்றி நிறைய எழுதுங்கள் என்றார். எங்களைப்போல் உள்ள இளைஞர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

ஆன்மீகத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் சாமியார்கள் அனைவரும் சொல்லும் வார்த்தை காமம் மற்றும் கோபத்தை தொலைத்தால் மட்டுமே ஆன்மீகம் என்பார்கள். என்னை பொறுத்தவரை இதனை நான் ஏற்றுக்கொள்வதில்லை. காமம் மற்றும் கோபம் இந்த இரண்டும் மிகப்பெரிய சக்தி. 

என்னிடம் தொழில் வழியில் ஆன்மீக உதவியை செய்பவர்களிடம் நான் சொல்லும் வார்த்தை உங்களிடம் இந்த இரண்டு சக்தியும் இருந்தால் நான் செய்வது உங்களுக்கு உடனே நடக்கும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு உடனே நடைபெறாது என்று சொல்லுவது உண்டு.

காமம் மற்றும் கோபம் இல்லாதவன் சாதிக்கவே முடியாது. இந்த இரண்டையும் உடையவர்கள் இந்த உலகத்தில் சாதிப்பார்கள். அதிகப்பட்ச காமத்தை உடையவர்கள் சாதிப்பது மாதிரி சாதாரணவர்கள் சாதிக்க முடியாது.

உங்களிடம் அதிகம் காமம் மற்றும் கோபம் இருந்தால் நீங்கள் எளிதில் வெற்றியை நோக்கி செல்வீர்கள். இதனை பயன்படுத்தும் வித்தையை நீங்கள் அறிந்துக்கொண்டால் போதும்.

இரண்டில் ஒன்று இருக்கிறது என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டிய வேலையில் முழு கவனத்தையும் ஈடுபடுத்தி செய்யுங்கள். உடனே அந்த வேலை வெற்றி அடைந்துவிடும்.  மிகப்பெரிய சக்திகளில் இந்த இரண்டும் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Saturday, September 20, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

ஐயா வணக்கம்,

கர்மவினை ஒரு புறம் இருக்க மூதாதையர் பெற்ற சாபம் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒருவரின் தாத்தா ஒரு கர்ப்பினிப்பெண்ணை வெட்டிக் கொன்று விட்டார். அந்தப் பெண் இறக்கும் போது ஏதோ சாபம் போட்டு விட்டாளாம். அந்தப் பேரப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் துர்மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். 

இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளும் நிம்மதி இல்லாது ஏதோ வகையில் தவிக்கிறார்கள். இதற்கு பரிகாரம் உண்டா? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
நன்றி.

இதனைப்பற்றி நான் பூர்வபுண்ணியத்திலேயே எழுதியுள்ளேன். இந்த காலத்தில் தான் மக்கள் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள். இருபது வருடத்திற்க்கு முன்பு எல்லாம் மக்கள் இந்த மாதிரி பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஒருவரை நாம் கொல்லும்பொழுதும் அல்லது அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் துன்புறுத்தும்பொழுதும் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவரின் ஆத்மா பாதிக்கப்படும். அந்த ஆத்மா கண்டிப்பாக இப்படி பழிவாங்கும். 

இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட ஆத்மாவை சாந்தப்படுத்த வேண்டும். ஆத்மா சாந்தப்படுத்த பல வழிகளை இப்பொழுது உள்ள புரோகிதர்கள் செய்கிறார்கள். அவர்களை வைத்து இதனை செய்யலாம்.

நீங்களே செய்யவேண்டும் என்றால் அமாவாசை அன்று விரதம் இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஆத்மாவிற்க்கும் சேர்ந்து விரதத்தை நாம் எடுத்துக்கொள்கிறேன் என்று சங்கல்பம் செய்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீகம் முதல் தகுதி


வணக்கம் நண்பர்களே!
                      வாரத்திற்க்கு ஒரு நபராவது என்னை சந்தித்து எனக்கு ஆன்மீகம் கற்றுக்கொடுங்கள் என்று கேட்பார்கள். அப்படி என்ன நாம் எழுதிவிட்டோம் இவர்கள் என்னை தேடி வந்து ஆன்மீகம் கற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்களே என்று நினைப்பது உண்டு.

முக்கால்வாசி பேர் இதனை வைத்து காசு பார்க்கலாம் என்று நினைத்து தான் வருகிறார்கள். காசு பார்க்கவேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை ஆனால் அதே நேரத்தில் நாம் ஒரு தொழிலை செய்தால் அந்த தொழிலை சுத்தமாக செய்யவேண்டும் என்ற நோக்கம் இருக்கவேண்டும்.

முதலில் குருவை நாடி செல்ல வேண்டும். அந்த குருவிற்க்கு என்ன தேவை என்று புரிந்துக்கொண்டு அவர்க்கு நீங்கள் உதவவேண்டும். பெரும்பாலான குரு தனிமையில் தான் இருப்பார்கள். வேலைக்கு செல்லமாட்டார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும். 

நான் கற்ற நேரத்தில் கூட என்னால் முடிந்த உதவியை பணமாக கொடுத்து வந்தேன். அந்த நேரத்தில் எனது வருமானத்தில் வரும் பணத்தை எடுத்து என்னால் முடிந்தளவு கொடுத்தேன். அவர்களின் வேலை பிரபஞ்சத்தை பற்றி ஆய்வு செய்வது அவர்களால் வேலைக்கு செல்லமுடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

முதலில் நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது தான். பணத்தை கையில் வைத்துக்கொண்டு குருவை நாடுங்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்துவிட்டால் அவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு கற்று தருவார்கள்.

நான் எந்த ஒரு ஆன்மீகவகுப்புகளும் எடுப்பதில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். பிறரை நாடுங்கள்.

தற்காலிகமாக இலவச சோதிட சேவை நிறுத்தப்படுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

உங்களை தேடி செல்வவளம் வரும்


வணக்கம் நண்பர்களே!
                      என்னை தேடி வருபவர்களின் முதல் புலம்பலாக இருப்பது எங்களிடம் செல்வவளம் போதுமானதாக இருக்கவில்லை. அதற்கு நீங்கள் ஏதாவது செய்துக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

செல்வவளம் சேர்வதற்க்கு நமது ஜாதககதம்பத்தில் பல வழிமுறைகளை சொல்லியுள்ளேன். அதனை எல்லாம் பின்பற்றுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதனை பல பேர்கள் பின்பற்றி நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள். அதனை பின்பற்றாதவர்களும் இருக்கின்றனர்.

என்னுடைய தொழில் வழி ஆன்மீகத்தில் சேட்டு நண்பர்களுக்கு மட்டும் ஒரு பொருளை உண்ணுவதற்க்கு கொடுக்கிறேன். இது பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒன்று. அறியவகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கிறேன். அப்படிப்பட்ட ஒன்றை பற்றி உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நமது உடலில் தான் அனைத்தும் இருக்கிறது. நான் என்ன தான் கோவிலில் விழுந்து கும்பிட்டாலும் நமது உடல் நன்றாக இல்லை என்றால் கோவிலின் சக்தியை உங்களால் எடுக்கமுடியாது. உடல் வழியாக ஒரு வித சக்தியை உருவாக்கி அவர்களுக்கு செல்வ வளத்தை சேர்ப்பதற்க்கு வழி செய்கிறேன்.

இந்த பொருளை சாப்பிடுவதால் எந்தவித பக்கவிளைவு ஏற்படாது. பல வருடங்களாக எனது ஆராய்ச்சியில் செய்த ஒன்று. உங்களிடம் இதுவரை நான் சொல்லாமல் இருந்தற்க்கு காரணம் உங்களுக்கு எல்லாம் இதனை விளக்கிக்கொண்டு இருக்கமுடியாது. நீங்கள் நம்பதற்க்கும் தயாராக இருக்கமாட்டீர்கள்.

சேட்டுகள் இதனை சாப்பிடாமல் இருப்பதில்லை. எனது தொழில் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விஷேசமாக உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் நண்பர்களுக்கு இதனை கொடுக்காமல் வைத்திருந்தேன். 

செல்வவளத்தை அதிகம் சேர்க்கவேண்டும் என்றால் இதனை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் தனியாக தான் இதனை தயார் செய்யப்படும். இதற்கு உங்களின் ஜாதகம் தேவைப்படும்.

இதனை செய்வதற்க்கு எனக்கு காலம் அதிகம் எடுக்கிறது. இதற்கு தேவையான மூலிகைகள் தமிழ்நாட்டில் உள்ள காடுகளில் கிடைப்பதில்லை.  உங்களுக்கு தேவை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதனை பெறுவதற்க்கு வழி செய்துக்கொள்ளலாம்.

தொடர்புக்கொள்ள வேண்டிய செல்போன் நம்பர் 9551155800.

போனில் தொடர்புக்கொண்டு சந்தேகங்களை கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். காலத்தை விரையம் செய்ய தேவையில்லை. தேவைப்பட்டால் மட்டும் போன் செய்யுங்கள். உள்நாட்டு நண்பர்களுக்கு மட்டும் இதனை முதலில் தருவதற்க்கு முடிவு செய்து இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Friday, September 19, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
நண்பரின் கேள்வி
அடுத்தவர்களின் பூஜையை எடுத்து வேறு காரியங்களுக்கு பயன்படுத்திகொள்வேன் என்று கூறியுள்ளீர்கள். அப்படி பயன் படுத்தும் போது அந்த பலன் அவர்களுக்கு கிடைக்காது அப்படிதானே. 

அதன் விளைவாக கர்ம வினை நம்மை அல்லவா தாக்க வேண்டும். ஆனால் நீங்கள் கர்மவினை அவர்களை சேரும் என்று கூறுகிறீர்கள்.
அதுதான் எனக்கு புரியவில்லை?

எடுத்துக்காட்டாக சேகர் என்பவர் உங்களுக்கு பூஜை செய்துக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பூஜை பயன்படுத்தி மணி என்பருக்கு ஒரு தீங்கை செய்கிறோம் என்று வைத்துக்கொண்டால் மணி என்பவருக்கு பிரச்சினை வந்துவிடும். உங்களுக்கு நடைபெற்ற பூஜை உங்களுக்கு பலனை தராது. மணி தனக்கு ஏன் பிரச்சினை வருகிறது என்று ஒரு ஆன்மீகவாதியை நாடி பார்த்தால் சேகர் என்பவர் உங்களுக்கு கெடுதல் செய்து இருக்கிறார் என்று தெரியவரும். மாட்டுவது சேகராக இருக்கும்.

எங்களின் வேலை பூஜையை திருடுவது மட்டுமே. அந்த கதையில் நான் யார் என்பது கடவுளுக்கே தெரியாது. இது எல்லாம் மிகவும் பெரிய அளவில் ஆன்மீகத்தில் கரை கண்டு இருக்கவேண்டும். இது எல்லாம் அதிபயங்கரமான ஆன்மீக விளையாட்டு.

நாம் நேரிடையாக பூஜை செய்து பிறரை தாக்கினால் அந்த கர்மம் நம்மை சேரும். இப்படி அடுத்தவர்களின் பூஜையை எடுக்கும்பொழுது அந்த கர்மா பூஜை செய்கின்றவரை சேரும்.

எனது பூஜையை ஒருவர் ஒரு வாரக்காலம் திருடினார். ஒரு வாரத்திற்க்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. அதன் பிறகு அவருக்கு பாடம் கற்பித்து நான் யார் என்று காண்பித்தேன். இது எல்லாம் வில்லங்கமான வேலை தான் என்ன செய்வது தொழில் என்று வந்துவிட்டால் அனைத்தையும் செய்து தான் ஆகவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கர்மவினை


வணக்கம் நண்பர்களே!
                      கிரகங்களை பார்த்து நாம் கோபம் கொள்ளகூடாது. நாம் செய்த தீயவினைகளை நமக்கு தரும் வேலையை மட்டும் அவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்த்து இந்த கிரகத்தால் நமக்கு பிரச்சினை என்று கோபம்கொள்வதில் அர்த்தம் இல்லை.

பிற மதங்களைவிட நம் மதத்தில் கர்மவினைக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் நடக்கும் நன்மையும் தீமையும் அவன் செய்த செயலால் மட்டுமே என்று சொல்லியுள்ளார்கள்.

நமது கடவுளிடம் நாம் எந்த பிரத்தனையும் வைக்கமுடியாது. நமது கர்மவினையை குறைக்க வழியை ஏற்படுத்தி தாரும் என்று வைத்தால் நல்லது. கர்மவினை குறைய குறைய நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும்.

ஒருத்தருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர் மனதில் வேலை கிடைக்கவேண்டும் என்று எண்ணி அவரின் கர்மாவை குறைப்பதற்க்கு அவர் கோவிலுக்கு செல்லும்பொழுது அவரின் கர்மா குறைந்து அவருக்கு வேலை கிடைக்கும்.

உலகத்தில் இருக்கும் விசயங்களை அனைத்தும் ஒருவித கணிதம் தான். நமது கணக்கில் என்ன இருக்கிறது என்பதை ஜாதகம் காட்டும். அந்த ஜாதகத்தில் நமக்கு தப்பிதற்க்கு என்ன வழி இருக்கிறது என்பதையும் ஜாதகம் காட்டும். நமது கணக்கில் அதிகம் பாவம் சேர்ந்து இருந்தால் அதனை குறைத்தால் நல்லது என்று எண்ணி நாம் வழிபாட்டை செய்து கொள்ளவேண்டும்.

வழிபாடு மட்டும் இல்லை பல வழிகள் இருக்கின்றன. எத்தனை வழிகள் இருக்கின்றனவாே அத்தனையும் நாம் முயற்சித்து பார்த்துவிடவேண்டும்.அப்படி முயற்சிக்கும்பொழுது நமக்கு வழியை கிரகங்களே ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.