Followers

Saturday, September 30, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          இன்றைய இளைஞர்கள் ஆட்டம் அதிகமாக போடுவார்கள். ஆட்டம் அதிகம் என்று சொல்லுவது இளைமையில் வரும் ஆட்டம் அது எதுவாக இருந்தாலும் சரி இந்த ஆட்டத்தை இளைமையில் ஒருவர் அதிகம் ஆட ஆரம்பித்தால் பிற்காலத்தில் அவர்கள் அதிக கஷ்டப்படுவார்கள்.

எவர் ஒருவர் இளமையில் அதிக பெண்களோடு தொடர்புக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு அதிகமாக பெண் குழந்தைகள் தான் பிறக்கும். அவர்களின் காலத்தில் அதிக கஷ்டத்தை அது கொடுத்துவிடும். ஒருவர் பெண்களோடு தொடர்புக்கொள்கிறார் என்றால் அவர்க்கு சுக்கிரன் அந்தளவுக்கு பிரபலமாக இருக்கின்றது என்று அர்த்தம்.

எந்தளவுக்கு பிரபலமாக சுக்கிரன் மாற்றுகிறதோ அந்தளவுக்கு பிற்காலத்தில் அவர்களை சிக்க வைக்கும் என்பது தான் உண்மையான ஒன்று. இது பெரும்பாலானவர்களுக்கு இது நடந்து இருக்கின்றது.

இளமையில் அதிக ஆட்டம் போடுவது சகஜமான ஒன்று தானே என்று யாராவது கேட்டால் அவர்களின் வாழ்க்கை நன்றாக உற்று கவனியுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள்.

இளமையில் சொகுசை கொடுத்த சுக்கிரன் பிற்காலத்தில் அது கஷ்டத்தை கொடுக்கிறது. எப்படி எல்லாம் கஷ்டத்தை கொடுக்கிறது என்றால் அவர்களின் பெண்கள் வாரிசு நன்றாக வாழாமல் சீரழிக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


ணக்கம்!
          நவராத்திரி ஹோமம் சிறப்பாக முடிவடைந்துவிட்டது. உங்களின் பங்களிப்பால் தான் இது சிறப்பாக நடந்து முடிந்தது. நல்ல சிறப்பாகவே அனைத்து ஹோமங்களையும் செய்தேன். அவர் அவர்களுக்கு சிறப்பான பலனை அம்மன் தரும்.

பரிகாரத்திற்க்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை ஜாதகத்தை அனுப்பலாம். ஏன் இதனை தள்ளிவைத்திருக்கிறேன் என்றால் ஒவ்வொருவரும் பணக்கஷ்டத்தில் இருப்பது தெரிகிறது அதற்காக இதனை தள்ளிவைத்தேன்.

ஏற்கனவே பல பரிகாரங்களுக்கு பணம் அனுப்பமுடியவில்லை என்று சொல்லி பல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஜாதகத்தை அனுப்பவதில்லை.  அதனை எல்லாம் மறந்துவிட்டு புதிய பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பலாம்.

தனியாக பரிகாரம் செய்யவேண்டும் என்று நினைத்தால் அவர்கள் தங்களின் குடும்ப ஜாதகத்தை அனுப்பிவிட்டு குறைந்தது இரண்டாயிரமாவது அனுப்பவேண்டும். ஒரு லிட்டர் நெய் விலை 650 க்கு வாங்குகிறேன். இரண்டு லிட்டராவது தேவைப்படுகிறது. பூஜை சாமான்கள் இருக்கின்றன.

தனிநபர்கள் அனுப்பும் நபர்கள் இன்றைய நாள் என்று சொல்லி அன்றைய நாளை ஒதுக்கி பரிகாரம் செய்யலாம். வெளிப்படையாக அதனை பதிவில் இந்த ஊர் என்று சொல்லி அதனை செய்யலாம். 

தனியாக தேவைப்பட்டால் மட்டும் இப்படி செய்யுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை. மொத்தமாகவே உங்களுக்கு செய்துவிடுகிறேன். பரிகாரத்திற்க்கு ஐந்து தேதி வரை ஜாதகத்தை அனுப்பலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 29, 2017

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!

      அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை/சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 28, 2017

கர்மாவும் தொழிலும்


ணக்கம்!
         தொழிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சிலர் தொழிலை செய்யும்பொழுது எனக்கு கர்மா வரும் என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள்.

ஒரு முறை இந்தந்த ராசிக்காரர்கள் இந்த தொழிலை செய்யக்கூடாது என்று எழுதியிருந்தேன். அப்பொழுது ஒருவர் சார் நான் தங்கதொழில் செய்கிறேன். இதனை நான் செய்தால் எனக்கு கர்மா வருமா என்று கேட்டார்.

உங்களுக்கு பிடித்த தொழிலை நீங்கள் விரும்பி அதனை செய்யும்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு கர்மா என்பது வராது. செய்கின்ற தொழில் என்பது கடவுளால் மற்றும் உங்களின் உழைப்பால் வந்தது. 

கசாப்புகடை வைத்து நடத்துபவர்களுக்கு அந்த தொழில் இருந்து கர்மா வரவே வராது என்பது தான் உண்மை. அதனால் உங்களுக்கு பிடித்த தொழிலை நீங்கள் விரும்பி செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு கர்மா வராது.

நாம் செய்கின்ற தொழிலில் நேர்மை என்பது இருக்கவேண்டும். சும்மா இஷ்டத்திற்க்கு செய்யும்பொழுது மட்டுமே அது பிரச்சினையை தருகிறது. செய்கின்ற தொழிலால் கர்மா வருவதில்லை நேர்மையின் தன்மையில் இருந்து தான் கர்மா வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு திருமணம் ஆகவேண்டும் என்றால் குரு கிரகத்தின் பார்வை கிடைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். திருமணத்திற்க்கு குருவை விட சுக்கிரனின் பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பது தான் அனுபவத்தில் நான் பார்த்த ஜாதகத்தில் இருந்து தெரிந்துக்கொண்டது.

சுக்கிரன் கிரகம் பாதிக்கப்பட்டால் அவர் திருமணத்திற்க்கு அதிகம் போராட வேண்டியிருக்கும். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைப்பது அரிதாக இருக்கும். ஆண்களுக்கு சுக்கிரன் பாதிக்கப்பட்டால் ஆண்மை தன்மை குறைவு ஏற்படும்.

சுக்கிரன் கெடும்பொழுது பெண்களின் தொடர்பை அது துண்டிக்கிறது என்று சொல்லலாம். பெண்களின் தொடர்பை ஏற்படுத்த கூடாது என்று தான் திருமணம் தள்ளிபோக செய்யும். திருமணம் செய்ய போராட வேண்டியிருக்கும்.

சுக்கிரன் பாதிக்கப்படும்பொழுது பிற கிரகங்களின் வழியாக திருமணம் நடைபெற்றாலும் கணவன் மனைவிக்குள் அந்தளவுக்கு தொடர்பு இருக்காது. இரண்டு பேருக்கும் கருத்து வேற்றுமை இருக்கும்.

சுக்கிரன் பாதிக்கப்படும்பொழுது தான் அது கடுமையான வறுமையை மனிதனுக்கு கொடுக்கிறது. வாழ்வில் ஏற்றம் இல்லாமல் போவதற்க்கு சுக்கிரன் கெடுவதும் ஒரு பெரிய காரணம் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 27, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          நம்முடைய நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். சுக்கிரனின் தசாவுக்கு பரிகாரம் செய்து தான் பலனை அனுபவிக்க வேண்டுமா என்று கேட்டார். 

பரிகாரம் செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவர் அவர்களின் விருப்பம். சுக்கிர தசா வருகின்றது சுக்கிரன் சுமாரான பலனை கொடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இருப்பதற்க்கு ஒரு வீடு செலவுக்கு பணத்தை மட்டும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.

இது போதும் என்று நினைத்தால் அப்படியே விட்டுவிடலாம். இல்லை நிறைய வீடு வேண்டும். நிறைய பணம் வேண்டும் பல வசதி வாய்ப்புகளை தற்பொழுதே செய்து முடித்துவிடவேண்டும். இதிலேயே என்னுடைய மூன்று தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக சுக்கிரனை தன் வழிக்கு கொண்டுவர பூஜை பரிகாரங்களில் ஈடுபட்டு தான் ஆகவேண்டும்.

சுக்கிரன் முக்கால்வாசி பேருக்கு சும்மா ஒரு சொகுசு வாழ்க்கையை அதுவும் கொஞ்சநாள்கள் கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது அதன் பிறகு நோயை கொடுக்கிறது அதனால் தான் சுக்கிரனுக்கு பூஜை செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன். 

உங்களின் வீட்டிற்க்கு வந்த சுக்கிரனை இராஜாபோல அலங்கரித்து பார்த்துக்கொண்டால் உங்களுக்கு சுக்கிரன் வாரி வழங்குவான்.வந்த ஆளை கண்டுக்கொள்ளவில்லை என்றால் அவர் வந்தற்க்கு ஏதோ ஒன்றை மட்டும் செய்துவிட்டு சென்றுவிடுவார்.

உங்களுக்கு எந்த தசா நடந்தாலும் சரி அந்த தசாவின் முழுபலனையும் நீங்கள் பெறவேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள்  தசாநாதனை குளிர்க்கவேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. அதன்பிறகு உங்களின் விருப்பம் போல் செயல்பட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிர தசா


வணக்கம்!
          நன்றாக சோதிடம் தெரிந்தவர்கள் ஒன்றை சொல்லுவார்கள். வாழ்வில் ஒரு முறை நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுக்கிரதசா வரவேண்டும். சுக்கிரதசா வந்தால் அந்த ஜாதகத்தை வைத்து நாம் நிறைய சாதித்துக்கொள்ளமுடியும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் வெளியில் சொல்லவும் செய்வார்கள்.

சுக்கிரதசா அந்தளவுக்கு ஒரு மகத்தான தசாவாக இருக்கின்றது. சுக்கிரதசா நடந்தால் செல்வ செழிப்பில் வாழ்ந்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையும் வலுவாக இருக்கின்றது என்பது தெரிகிறது. உண்மையில் சுக்கிரதசா நடப்பவர்களை கேட்டால் அந்தளவுக்கு பெரிய வளர்ச்சி இல்லை என்று சொல்லுவார்கள். 

அனைவரும் சொல்லும் சுக்கிரதசா வெளியில் இப்படி இருக்கின்றது என்று நினைக்கலாம். சுக்கிரதசா நடப்பவர்கள் வெளியில் சொல்லும் கருத்து அந்தளவுக்கு வளர்ச்சி இல்லை என்று சொல்லுவார்கள். சுக்கிரதசா ஏன் இவர்களுக்கு வாரி வழங்கவில்லை என்று நானும் பல நாட்களில் யோசித்தது உண்டு.

எந்த தசா நடந்தாலும் சரி அந்த தசாவுக்கு தகுந்த மாதிரியான வழிபாடு அல்லது பரிகாரபூஜைகளை ஒருவர் செய்யவேண்டும். சுக்கிரனை கொடுக்கும் வழிகளை ஒருவர் செய்யவேண்டும். சுக்கிரன் கொடுக்கும் வழியை ஒருவர் மேற்க்கொள்வதில்லை என்று தான் சொல்லவேண்டும் என்று சொல்லலாம்.

ஒருவருக்கு குரு தசா அல்லது ராகு தசா நடந்தால் அந்த இரண்டு தசாவும் ஆன்மீகத்திற்க்கு இழுத்துக்கொண்டு வந்து அவர்களை வாழ வழி செய்துவிடுகிறது. பிற தசாக்கள் அந்தளவுக்கு வழி செய்ய விடுவதில்லை என்றே சொல்லலாம்.

எந்த தசா நடந்தாலும் ஆன்மீகத்தின் பங்கு இருக்கும்பொழுது மட்டுமே அது பெரியளவில் பலனை கொடுக்கிறது. அப்படி இல்லை என்றால் அது குறைந்த பலனை மட்டும் கொடுக்கிறது என்பது தெரிகிறது.

சுக்கிரதசா நடந்த நண்பர்களிடம் ஒரு விசயத்தை சொல்லுவேன். உங்களால் ஒரு முறை வருடத்திற்க்கு ஒரு முறை பூஜை கண்டிப்பாக செய்யவேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைத்து அடுத்த வருடமும் வந்து செய்யுங்கள் என்று சொல்லுவேன். ஒரு முறை செய்வதோடு அவர்கள் சென்றுவிடுவார்கள் மறுமுறை அவர்களால் வரமுடியவில்லை என்பது தான் உண்மை.

சுக்கிரன் போன்ற கிரகங்கள் தானே நிற்கலாம் என்ற ஒரு தைரியத்தை கொடுத்து கெடுத்துவிடுகிறது என்பதையும் இங்கே சொல்லலாம். சுக்கிரனும் ஒரு குரு தான் ஆனால் இவர் கொடுக்கும் வழி என்பது அவர்களை உருபடாமல் செல்ல வைக்கிறது என்பது தான் உண்மை.

சுக்கிரதசா நடந்தால் என்னிடம் வந்து தான் பூஜை செய்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுப்படவில்லை. எங்கு வேண்டுமானாலும் சென்று அந்த கிரகத்தின் பலனை முழுமையாக தருவதற்க்கு உள்ள வழிகளை மேற்க்கொண்டால் ஒரு பெரியளவில் உள்ள வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்வவளம்


வணக்கம்!
          மழை மற்றும் பனிக்காலங்களில் உங்களின் வீட்டில் செய்யும் பூஜைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏன் அதிகப்படுத்தவேண்டும் என்றால் உங்களின் வீட்டில் செய்யும்  பூஜை அப்படியே உங்களின் வீட்டில் தங்கி அது நல்ல சக்தியை அப்படியே தக்க வைக்க உதவும்.

ஒரு வீட்டில் பூஜை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் அது வெயில் காலமாக இருந்தால் அது உடனே வெப்பமாக வெளியே செல்லும். மழை மற்றும் பனிக்காலத்தில் அது வெளியே செல்லாமல் அந்த சக்தி அங்கே நிலவி பல நல்ல விசங்களை இழுத்துக்கொடுக்கும்.

தற்பொழுது இருந்து தமிழகத்தில் ஒரு நல்ல சூழல் நிலவி வருகிறது. உங்களின் வீடுகளில் செய்யும் ஹோமங்கள் மற்றும் பூஜைகளை அதிகப்படுத்துங்கள். உங்களின் வீடு நல்ல சுபிட்ஷமாக இருக்கும்.

நெய் வாசம் எந்தளவுக்கு உங்களின் வீட்டில் நிலவுகிறதோ அந்தளவுக்கு உங்களின் வீட்டில் செல்வவளங்களை கொட்டி கொடுக்கும் என்பது தான் உண்மை. முடிந்தளவுக்கு இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

நீண்ட காலத்திற்க்கு பிறகு செல்வவளங்களைப்பற்றி ஒரு பதிவை போட்டு இருக்கிறேன். அனைவரும் இதனை செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமான ஒன்று. ஏதோ படித்தோம் போனோம் என்று இருந்து விடாமல் செயலில் இறங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 26, 2017

பெருமாளின் பெயருக்கு சிறப்பு


வணக்கம்!
          புரட்டாசி மாதத்தில் திருமலையில் பிரமோற்சவம் நடைபெறும். அதனைப்போல் பல ஊர்களிலும் பெருமாளுக்கு திருவிழா நடைபெறுவது உண்டு. பெருமாளைப்பற்றி ஒரு சில கருத்துகளை சொல்லவேண்டும் என்று இந்த பதிவை தருகிறேன்.

ஒரு சில ஊர்களில் உள்ள பெருமாள் அந்த ஊரில் இருப்பவர்களை பெரியளவில் உயர்த்திவிடுவது உண்டு. அதாவது அந்தந்த ஊர்களுக்கு தகுந்த மாதிரி அவர்களின் நிலையும் உயர்த்தி அந்த பெருமாள் போல அந்த ஊர் சிறப்பாக இருப்பார்கள்.

மன்னார்குடியில் பெருமாள் இராஜகோபாலன் என்ற பெயரோடு விளங்குவார். மன்னார்குடியில் யாராவது ஒருவர் அரசியலில் பெரும் செல்வாக்கோடு இருப்பார்கள். பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கூட இந்த ஊர்க்காரர்கள் இருப்பார்கள்.

பல ஊர்களின் மேலே சொன்னது போல ஒரு வகையில் பிரபலங்களாக இருப்பார்கள். அந்தந்த துறையில் கொடிக்கட்டி பறப்பவர்களாக இருப்பதை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

நிறைய ஊர்களில் உள்ள பெருமாளைப்பற்றி எனக்கு நன்கு தெரியும். அதாவது அந்த பெருமாளைப்பற்றி தகவல் எனக்கு தெரியும் என்று சொன்னேன். அதனை எல்லாம் பொதுவில் வைக்கவேண்டாம் என்று தவிர்க்கிறேன். நேரில் சந்திக்கும்பொழுது இதனைப்பற்றி கேட்டுக்கொள்ளலாம்.

இதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு அந்த பெருமாளை நாம் வணங்கினால் அது போல நாம் மாறலாம் என்பதை உங்களிடம் சொல்லுவதற்க்காக சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவராத்திரி


வணக்கம்!
          நவராத்திரி ஹோமம் நடைபெற்று வருகிறது. நவராத்திரி ஹோமத்திற்க்கு எடுத்த படத்தை வாட்ஸ்அப்பில் இருப்பவர்களுக்கு அனுப்பிவிடுகிறேன். அதாவது நவராத்திரி ஹோமத்திற்க்கு மட்டும் உள்ளவர்களையும் ஏற்கனவே நமது வாட்ஸ்அப்பில் இருப்பவர்களுக்கும் அனுப்பிவிடுகிறேன்.

பல நண்பர்கள் பரிகார போட்டோவா என்று கேட்டனர்.நவராத்திரி முடிந்த பிறகு உங்களுக்கு பரிகாரம் செய்யப்படும். அதுவரை நீங்கள் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம். பரிகாரம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பரிகாரபூஜை செய்வேன்.

நவராத்திரி ஹோமம் தொடர்ந்து நடைபெறுவதற்க்கு நமது நண்பர்களின் பங்களிப்பு தான் மிகப்பெரிய உதவியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர்களுக்கு என்று பிரித்து செய்துக்கொடுத்து இருக்கிறேன். 

27/09/2017 புதன்கிழமை மதுரைக்கு அருகே உள்ளவர்
28/09/2017 வியாழக்கிழமை அமெரிக்காவை சேர்ந்தவர்

இதுவரை புக்கிங் செய்வர்களின் விபரத்தை அளித்து இருக்கிறேன். நவராத்திரி ஹோமம் தேவைப்படுபவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 25, 2017

வீட்டில் பூஜை


ணக்கம்!
         இன்றைய காலத்தில் அதிகப்பட்சம் பேர் வாடகை வீட்டில் தான் வசித்துக்கொண்டு இருக்கின்றார்கள். வாடகை வீடு எந்தளவுக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லமுடியாது. அதாவது அந்த வீட்டின் வாஸ்து மற்றும் வீட்டின் உள்ள சக்தியின் அளவு எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரியாது.

அனைத்தையும் நாம் பார்த்துக்கொண்டு வாடகை வீட்டையும் பிடிக்கவும் முடியாது. ஏதாவது ஒரு குறை இருக்க தான் செய்யும். அந்த வீட்டில் நாம் வசித்தால் நமக்கும் ஏதாவது ஒரு குறை இருந்துக்கொண்டு தான் இருக்கும்.

வாஸ்து என்பதை மட்டும் சொல்லவில்லை அந்த வீட்டில் நிலவும் நல்ல சக்தியும் நான் சொல்லுகிறேன். ஒரு குறை இருந்தாலும் நமக்கு பிரச்சினை என்பது வந்துவிடுகிறது. குறைந்தபட்சம் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்.

ஒரு சிலருக்கு செலவு அதிகமாக வந்துக்கொண்டே இருக்கும் அல்லது மனம் நிம்மதி இருக்காது. வீட்டில் இரவில் ஒழுங்காக தூக்கம் கூட இருக்காது. கனவு தொல்லை இருந்துக்கொண்டு இருக்கும்.

வாடகை வீட்டில் நாம் எதுவும் செய்யமுடியாவிட்டாலும் ஒன்றை மட்டும் செய்யலாம். அதாவது வீட்டில் இரண்டு நேரமும் உங்களின் வீட்டில் நன்றாக பூஜை செய்தால் இதனை சரிசெய்யமுடியும். நீங்களே உங்களின் வீட்டில் நன்றாக பூஜை செய்து சாம்பிராணி தூபம் போடுங்கள். இது அனைத்தையும் சரி செய்துவிடும். இரண்டு வேளையிலும் நல்ல நேரம் எடுத்துக்கொண்டு இதனை செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 24, 2017

ஜாதகம் சாதகமாக


ணக்கம்!
          இந்தியாவில் உள்ளவர்கள் இருந்தாலும் சரி வெளிநாட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் திருமணம் என்பதை எப்படியாவது நடத்திவிடுவார்கள்.  தனக்கு என்று ஒரு துணையை தேர்ந்தெடுத்துவிடுவார்கள். 

திருமணம் அனைவருக்கும் நடைபெறுகிறது என்றால் அனைவர்களின் ஜாதகத்திலும் திருமண வீடு நன்றாக இருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இருக்காது. சொல்லப்போனால் அதுவும் நன்றாக கெட்டுதான் இருக்கும்.

ஒவ்வொரு வீடு எப்படி பாழ்படுகிறதாே அதனைப்போல் திருமணத்தை தரும் ஏழாவது வீடும் கெட்டுவிடுவதும் உண்டு ஆனால் நம்ம மக்கள் அனைத்து கோவிலையும் தரிசனம் செய்தாவது அதனை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். தனக்கு அவசியம் என்று தேவைப்பட்டால் அதனை போராடி பெறுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் நாம் ஜாதகத்தை பார்த்துக்கொண்டு நமக்கு தேவையானதை போராடி பெறமுடியும். கோவிலுக்கு செல்லுவது அல்லது பரிகாரம் செய்வது அதற்கு முயற்சி எடுத்தால் கண்டிப்பாக அதனை கிரகங்கள் கொடுக்கும்.

மரணத்தை கூட இப்படி பெறமுடியும் ஆனால் அதனை யாரும் கேட்பதில்லை. கேட்டால் கண்டிப்பாக கிரகங்கள் கொடுக்கும் என்பது தான் கிரகங்களுக்கு உள்ள தனிப்பட்ட அந்தஸ்து. நாம் விரும்பியதை நாம் பெறமுடியும் என்று சொல்லுகிறேன்.

உங்களின் ஜாதகத்தில் நல்லதை எப்படி பெறலாம் என்பதை ஜாதகத்தை நன்றாக கவனித்து அதனை பெறலாம் என்பது தான் உங்களுக்கு சொல்லும் கருத்து. போராட்டம் அதிகமாக நாம் செய்தால் கண்டிப்பாக அது கிடைத்தே தீரும் என்பது தான் இவ்வளவு காலங்கள் நான் கண்ட உண்மை. நமக்கு இது எல்லாம் கிடைக்காது என்று எதனையும் செய்யாமல் இருக்காதீர்கள். எப்படியாவது அது கிடைக்கும் என்று முயற்சி செய்தால் கிடைக்கும். ஜாதகத்தின் வழியில் சாதகமாக வாழ்க்கையை மாற்றலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் வழிபாடு


வணக்கம்!
          நவராத்திரி ஹோமம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. தொடர்ச்சியாக புக்கிங் செய்து வருகின்றனர். அவர் அவர்களுக்கு மற்றும் பங்குக்கொண்ட அனைவருக்கும் ஹோமத்தின் புகைப்படத்தை அனுப்பிக்கொண்டு வருகிறேன். தினமும் அவர்கள் அதனை பார்க்கலாம்.

அக்னியில் செய்யப்படும் அனைத்தும் பல மடங்கு பலனை கொடுக்கவல்லது. அதனால் தான் பூஜை முறையில் வைக்காமல் ஹோமத்தை அளித்தேன். இன்னமும் நாட்கள் இருக்கின்றன. விருப்படுபவர்கள் தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளலாம்.

தனியாக ஹோமம் செய்யமுடியாதவர்கள் தொடர்ச்சியாக அம்மன் கோவில் சென்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள். நவராத்திரி காலத்தை விட்டுவிடகூடாது என்பதால் இதனை செய்துவிடுங்கள். இத்தனை நாளைக்குள் பல அம்மன் கோவிலை வழிபடவேண்டும் என்று ஒரு கணக்கை வைத்துக்கொண்டு செயல்பட்டால் இது சாத்தியப்படும்.

பரிகாரம் நவராத்திரி முடிந்துபிறகு செய்யப்படும். பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பவர்கள் அனுப்பலாம். கண்டிப்பாக அனைவரும் இதில் பங்குக்கொண்டு விடுங்கள். ஆறாவது வீடு என்ன செய்யும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களின் ஜாதகத்தை அனுப்பி பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 23, 2017

சோதிடமும் விவசாயமும்


வணக்கம்!
          நம் விவசாயிகள் சோதிடத்தை கணித்து அதற்கு தகுந்தார்போல் விவசாயம் செய்வார்கள். அது தொன்றுதொட்டு வந்த பழக்கம். இதனை இன்றும் கடைபிடித்து வருகின்றனர். ஒரு சிலர் தொடர்ச்சியாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டால் அதனை தாக்குபிடிக்க முடியாது என்று எண்ணி சோதிடத்தை பார்த்து அதற்கு தகுந்தார் போல் விவசாயம் செய்வார்கள்.

தற்பொழுது விதைகளை இடும் பருவம். தண்ணீர் வரவில்லை என்றாலும் போர் தண்ணீர் வைத்து விவசாயம் செய்பவர்கள் நெல்விதை இடும் பருவம். நெல் ஊறவைத்து அதனை நாற்றங்காலில் விதைப்பார்கள். 

நெல் ஊறவைக்கும்பொழுது அதனை ஞாயிற்றுகிழமையாக பார்த்து செய்வார்கள். நெல் ஊற வைத்து அதனை விதைப்பது செவ்வாய்கிழமையாக இருக்கும். நெல் ஊறவைக்கும்பொழுது சனி குறிக்கீட கூடாது என்பார்கள். சனிக்கிழமை இடையில் வரக்கூடாது என்பார்கள்.

நம்ம ஆளுங்க சனிக்கிரகம் விவசாயத்திறக்கு உரியது என்று சோதிடர்கள் சொல்லுவார்கள். உண்மையில் சனிக்கிரகம் விவசாயத்திற்க்கு கிடையாது. அனுபவத்தில் சனிக்கிழமையை விவசாயத்திற்க்கு என்று எதற்க்கும் நாங்கள் தேர்ந்தெடுப்பதில்லை.

நெல்லை அவியல் செய்து அதனை அரிசியாக மாற்றுவதற்க்கு  நெல்அவியல் செய்வோம். இதனை நாங்கள் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையை தவிர்த்துவிடுவது உண்டு. ஏன் என்றால் உலகத்திற்க்கு நெல் படைக்கப்பட்ட நாள் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை என்பதால் இதனை தவிர்ப்பது உண்டு.

சோதிடம் தெரியுதோ இல்லையோ அனுபவத்தில் இதனை பின்பற்றி வருபவர்கள் உண்டு. தஞ்சாவூர் பகுதி முழுவதும் இது பயன்பாட்டில் தற்பொழுதும் உண்டு. வெளிமாவட்டத்தில் எப்படி என்பது எனக்கு தெரியவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 21, 2017

நவராத்திரி


 வணக்கம்!
          சிறப்பு வாய்ந்த ஹோமம் எல்லாம் இந்த நவராத்திரி காலங்களில் நடைபெறும். அவர் அவர்களின் சக்தி ஏற்ப ஹோமங்களை செய்வார்கள். அம்மனின் முழுமையான சக்தி கிடைக்கவேண்டும் என்பதற்க்காக இதனை செய்வார்கள்.

வடமாநிலங்களில் மிகுந்த செலவு செய்து செய்வார்கள். நமது சக்திக்கு தகுந்தவாறு இதனை செய்துக்கொள்ளலாம். நவராத்திரி ஹோமத்திற்க்கு என்று நாம் செய்யும் ஹோமம் விலை குறைந்த ஒன்று தான். நல்ல பலனை கொடுக்ககூடிய ஒன்று. 

அனைவரும் இதில் பங்குக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக தான் இதனை குறைந்த விலையில் செய்ய பதிவில் சொல்லிருந்தேன். செலவு எனக்கு இதில் அதிகம் தான். எனக்கு என்று ஒரு ஆயிரம் ரூபாய் மிஞ்சம் அவ்வளவு தான். ஹோமத்திற்க்கு கொடுக்கின்ற பொருளோடு விலை அதிகம். விலையுர்ந்த பொருளை தான் கொடுக்கிறேன்.

ஹோமத்திற்க்கு கொடுக்கின்ற பொருளின் தன்மைக்கு தகுந்தவாறு ஹோமத்தின் பயன் இருக்கும். நம்முடைய விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்தமாதிரியான பொருளை கொடுத்தால் அது நடைபெறும்.

நவராத்திரி நாட்களில் உங்களால் முடிந்தளவுக்கு அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள். சிவன் கோவிலிலும் அம்மன் இருக்கும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.


ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரம் இந்த மாதம் கடைசி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜாதகத்தை அனுப்பவர்கள் அனுப்பி வைக்கலாம். பரிகாரமும் தொடர்ந்து நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 20, 2017

நவராத்திரி அம்மன் ஹோமம்


வணக்கம்!
          நாளை முதல் நமது அம்மனுக்கு நவராத்திரி ஹோமம் செய்யப்படுகிறது. நவராத்திரி ஹோமத்திற்க்கு என்று நமது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் காணிக்கை செலுத்தியுள்ளனர். அவர்களின் ஊர்களை மட்டும் தற்பொழுது தெரிவிக்கிறேன். பெயர்களை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இதனை செய்கிறேன்.

21/09/2017 வியாழன் டெல்லியை சேர்ந்தவர்
22/09/2017 வெள்ளி கீழ்சேவல்பட்டியை சேர்ந்தவர்
23/09/2017 சனி காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்
24/09/2017 ஞாயிறு சிங்கபூரை சேர்ந்தவர்
25/09/2017 திங்கள் நெதர்லாண்டை சேர்ந்தவர்
26/09/2017 செவ்வாய் மதுரை சேர்ந்தவர்

பல நண்பர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்து இருக்கின்றனர். அவர்கள் உறுதி செய்த பிறகு தெரிவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு என்று சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. அம்மன் ஹோமம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் தொடர்புக்கொள்ளவும்.

கலந்துக்கொள்ளாதவர்கள் அம்மனை தினந்தோறும் மனதார நன்றாக பிராத்தனை செய்து வாருங்கள். உங்களின் வாழ்வில் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சூரியன்


வணக்கம்!
          சூரியன் கிரகம் நன்றாக அமைந்தாலே பெரும்பாலும் ஜாதகர் நல்ல நிலைக்கு வந்துவிடுவார். சூரியனின் ஆற்றலை கொண்டு அனைத்து கிரகங்களின் தீமையையும் வென்று மேலே வரமுடியும். இது சோதிட தகவல் என்பதை விட அனுபவத்தில் பார்த்த தகவலாக உங்களிடம் சொல்லுகிறேன்.

சூரியனுக்கு உகந்த நாளாக ஞாயிற்றுக்கிழமையை நாம் விடுமுறை தினமாக அறிவித்து அன்றைய நாளை பொழுதுபோக்கிற்க்கு அல்லது தூங்குவதற்க்கு பயன்படுத்துகிறோம். விடுமுறை அவர்கள் விட்டது அவர்கள் கடவுளை வணங்குவதற்க்கு என்று விட்டு இருக்கின்றார்கள். நாம் அதனை இப்படி பயன்படுத்துக்கொண்டு இருக்கிறோம்.

எல்லா நாளிலும் நேரம் தாழ்த்தி எழுந்தாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையே எழுந்து விடவேண்டும். அன்று சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்யவேண்டும். நமஸ்காரம் செய்யமுடியாவிட்டாலும் பரவாயில்லை வெளியில் வந்து சூரியனை பார்க்காவது செய்யவேண்டும்.

நான் பார்த்த வரை ஞாயிற்றுகிழமை காலையில் யாரும் குளிப்பது கூட கிடையாது. நான் கேட்டது கூட உண்டு ஏன் காலையில் குளிப்பது கிடையாதா என்று கேட்டுருக்கிறேன். தினமும் காலையில் குளித்துக்கொண்டு இருக்கிறோம் இன்று மட்டும் கொஞ்சம் லேட்டாக குளிப்போம் என்று இருக்கிறேன் என்பார்கள்.

நம்ம ஆளுங்க எதனை செய்யகூடாது என்று சொல்லுகின்றார்களாே அதனை செய்வார்கள். எதனை செய்யவேண்டும் என்று சொல்லுகிறோமோ அதனை செய்யமாட்டார்கள். வரும் ஞாயிற்றுகிழமையில் இருந்து மேலே சொன்னதை தவிர்த்துவிட்டு நல்ல வழியை பின்பற்றி சூரியனை பலப்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 18, 2017

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          ஒருவருக்கு பாக்கியம் கிடைப்பது என்பது எது என்றால் அது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றி பார்த்து விட்டு வருவதில்லை. அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது பாக்கியம் இல்லை. ஒரு குருவிடம் ஆசி பெற்று அனைத்து கோவிலையும் தரிசனம் செய்வது தான் பெரிய பாக்கியம்.

பாக்கியஸ்தானத்தை நம்ம ஆளங்க சொல்லுவது எல்லாம் வெளிநாட்டிற்க்கு செல்வாரா என்பதை மட்டும் பார்த்து சொல்லுவார்கள். பாக்கியஸ்தானம் சொல்லுவது நல்ல குரு கிடைப்பாரா அதன் வழியில் நிறைய கோவிலை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்குமா என்பதை தான் பார்த்து சொல்லவேண்டும்.

நீங்கள் நினைத்தால் வெளிநாட்டிற்க்கு எளிதில் சென்று வந்துவிடலாம் ஆனால் ஒரு கோவிலுக்கு சென்று வருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது என்பது தான் உண்மையாக இருக்கும். இதனை நீங்களே செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

பாக்கியஸ்தானத்தை குரு பார்க்கும்பொழுது அல்லது அதில் நன்மை தரக்கூடிய கிரகங்கள் செல்லும்பொழுது உங்களுக்கு தொட்டது எல்லாம் துலங்கும். எடுத்த காரியம் அனைத்தும் நடைபெறும்.

ஒவ்வொரு காரியமும் உடனே நமக்கு நடக்கவேண்டும் என்றால் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கவேண்டும். பாக்கியஸ்தானம் சரியில்லை என்றாலும் ஒரு குருவின் முழுமையான ஆசி இருந்தால் நமக்கு அனைத்தும் நடந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 16, 2017

பரிகாரம்


வணக்கம்!
         பரிகாரத்திற்க்கு கடந்தமுறை இலவச பரிகாரம் அறிவித்து இருந்தேன். நிறைய ஜாதகங்கள் வந்தன. இந்த முறை பரிகாரம் கட்டணம் என்று அறிவித்தவுடன் தேவைப்பட்ட ஜாதகங்கள் மட்டுமே வருகின்றன. 

பரிகாரத்திற்க்கு நீங்களே ஏதாவது உதவி செய்துவிடுங்கள் என்று சொல்லிருந்தேன். இதனை எல்லாம் செய்யாமல் இருந்த காரணத்தால் தான் பரிகாரத்திற்க்கு கட்டணம் என்று அறிவித்தேன். அவர்களே அவர்களின் வாழ்க்கையைப்பற்றி கவலைப்படாமல் எதுவும் செய்யாமல் இருந்தால் நாம் என்ன செய்யமுடியும். 

வாழ்வில் நிறைய சாதிக்கவேண்டும் என்பவர்களுக்கு தான் பரிகாரம் எல்லாம் ஆவல் வரும். தன்னை செதுக்கிக்கொள்ள இதுவும் ஒரு சந்தர்ப்பமே என்று நினைப்பவர்கள் இதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

பரிகாரம் அறிவித்தோம் சம்பாதித்தோம் என்று நினைப்பு என்னிடம் இருந்தால் பரிகாரம் இதில் அறிவிக்கவேண்டியதில்லை. தனியாக சம்பாதித்துக்கொண்டு சென்றுவிடலாம். 

விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்த பணத்தை செலுத்தி பரிகாரத்தை செய்துக்கொள்ள வேண்டுகிறேன். விரைவில் அனுப்பிவிடுங்கள். நவராத்திரி ஆரம்பம் ஆகபோகின்றது அதற்கு முன்னாடி இதனை செய்துவிடலாம்.

அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பியவர்கள் தங்களின் ஜாதகத்தை இலவசமாக பரிகாரத்திற்க்கு அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 15, 2017

நவராத்திரி ஹோமம்


வணக்கம்!
          ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு நவராத்திரி ஹோமம் செய்யப்படும். இதில் நமது நண்பர்கள் தங்களின் விருப்பத்திற்க்காக ஒரு நாள் செய்ய சொல்லுவார்கள். அவர்களுக்கு என்று ஹோமம் செய்யபடுவது உண்டு.

இந்த வருடம் நவராத்திரி 21 ஆம் தேதி ஆரம்பம் ஆகின்றது. இந்த அம்மன் ஹோமத்திற்க்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு என்று ஹோமம் செய்யப்படும். அந்த நாள் வேறு யாருக்கும் ஒதுக்கப்படாது. இதில் முன்கூட்டியே நான்கு நபர்கள் பதிவு செய்துவிட்டனர். 

நவராத்திரிக்கு அம்மனுக்கு ஹோமம் செய்வதால் உங்களுக்கு வேண்டியதை அம்மன் கொடுக்கும். அம்மனுக்கு என்று உகந்தநாளாக இந்த நவராத்திரி வழிபாடு இருக்கும். நீங்கள் விருப்பட்டால் இந்த அம்மன் ஹோமத்தில் கலந்துக்கொள்ளலாம்.

கடந்த வருடம் இதற்கு கட்டணம் ஐந்தாயிரம் நிர்ணயிக்க்கப்பட்டது. இந்த வருடம் நான்காயிரம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டதுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம்.

முதல் நாள் இரண்டாம் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாட்களில் புக் செய்யபட்டுள்ளது. மீதி இருக்கும் நாட்களில் தங்களுக்கு விருப்பட்ட நாள்களில் செய்துக்கொள்ளலாம். விருப்படுபவர்கள் காலதாமதம் இல்லாமல் உடனே தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 14, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
                      இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 13, 2017

அம்மன் பூஜை


ணக்கம்!
          நாளை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு சுமார் அவர்கள்

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்

வழக்கம் போல் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்

மற்றும் பல நண்பர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நாளை நடைபெறுவதால் புதிய வேண்டுதலை வைக்கலாம்.

பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்பவர்கள் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள். அம்மன் பூஜை முடிந்தவுடன் தொடர்ந்து செய்யப்படும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 12, 2017

பரிகாரம் அறிவிப்பு


ணக்கம்!
          இரண்டு நாள்களுக்குள் அம்மன் பூஜை நடைபெறும். பரிகாரம் அறிவிக்கப்படுகிறது. இதுவரை நாம் பார்த்த ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரம் செய்யப்படும். முக்கிய கருத்தாக கடன் நோய் எதிரி கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை சேர்த்து பரிகாரம் செய்யப்படும். 

பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகம் மற்றும் தங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம். கட்டணம் உங்களால் முடிந்த தொகையை அனுப்பி வையுங்கள். உங்களின் தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்திவிடுங்கள்.

இலவச பரிகாரம் செய்வதற்க்கு கொஞ்சம் கடினம். இலவச பரிகாரம் செய்தால் அதனை நீங்கள் வெளியில் ஏதாவது செய்துவிடுங்கள் என்று சொன்னால் கண்டிப்பாக அதனை செய்வதில்லை. பிரச்சினை எனக்கு வந்துவிடுகிறது. அதனால் முடிந்தளவு பணத்தை செலுத்தி பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

நல்ல வாய்ப்பாக உங்களுக்கு இந்த பரிகாரம் இருக்கும். உங்களின் வாழ்வில் ஏற்பட்ட மற்றும் ஏற்படபோகின்ற பாதிப்புகளை நிறைய சொல்லிருக்கிறேன். அது வராமல் இருக்கவும் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப இறுதிநாள் 20/09/2017. உடனே தங்களின் ஜாதகத்தையும் அனுப்பிவிட்டு கட்டணத்தை செலுத்திவிடுங்கள். காலதாமதம் ஏற்படுத்த வேண்டாம்.

ஜாதகம் என்னிடம் இருந்தாலும் உங்களின் ஜாதகத்தை மறுமுறை திருப்பி எனக்கு அனுப்பி வையுங்கள்.

வங்கி விபரம்!

KVB Bank :  Karur Vysya Bank

Branch : Pattukkottai

Name : RAJESH S

Account Type : Savings account.

A/C Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623

E-Mail ID : payrajeshsubbu@gmail.com

Cell No : 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கடன் தொந்தரவு


வணக்கம்!
         சந்தித்த பல நபர்கள் பெரும்பாலும் கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பராக இருக்கின்றனர். இந்த நாட்டில் இருந்துக்கொண்டு கடனில் இல்லை என்றால் எப்படி சார் என்றும் சொன்னார்கள். நாடு எதுவாக இருந்தாலும் கடன் என்பது வர தான் செய்யும். 

ஆறாவது வீடு என்ற ஒன்று இருப்பதால் கடன் அல்லது நோய் அல்லது எதிரி இப்படி ஏதாவது ஒன்றை கொடுத்துக்கொண்டு இருக்கும். கடன் இருப்பது ஒரு விதத்தில் நல்லது தான் ஏன் என்றால் அது வேறு எதாவது ஒரு பிரச்சினையை கொடுத்துவிடபோகின்றது. 

மிக மோசமான கிரகங்கள் உங்களை தாக்கிக்கொண்டு இருந்தால் கடனை உடனே திருப்பிக்கொடுக்காமல் கொஞ்சம் பொறுமையாக திருப்பிக்கொடுத்தால் ஒரளவு இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

கண்டிப்பாக கொடுக்கபடவேண்டிய கடனாக இருந்தால் அதாவது வட்டி மின்னல் வேகத்தில் செல்லும் நபர்களின் கடன்களை நீங்கள் உடனே கொடுத்து அதில் இருந்து தப்பிப்பது நல்லது. நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அது உங்களையும் தின்று உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களையும் தின்ன ஆரம்பித்துவிடும்.

ஆறாவது வீட்டின் தசாவில் கடன் இருந்தால் கடன் கொடுப்பதை தவணை முறையில் சொல்லிக்கொண்டு கடனை திருப்பிக்கொடுங்கள் அது உங்களை காப்பாற்றும். கடன் இல்லாமல் இருக்ககூடாது என்பதால் இதனை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 11, 2017

மாமனார் வீட்டில் பிரச்சினை


வணக்கம்!
         ஆறாவது வீட்டில் புதன் சம்பந்தப்பட்டால் அந்த ஜாதகருக்கு மாமன் வகையில் இருந்து பிரச்சினைகள் வரும். ஒரு சிலருக்கு மாமன் எதிராளியாக வருவார்கள். பொதுவாகவே புதன் கிரகம் மாமனுக்கு காரத்துவம் உடைய ஒரு கிரகமாக இருக்கின்றது. இது ஆறில் சென்று அமர்ந்தால் மாமன் வகையில் இருந்து பிரச்சினை என்று சொல்லலாம்.

இந்த காலத்தில் மாமன் உறவைவிட மாமனாராக வருபவர்களின் உறவு அதிகமாக மதிக்கப்படும் அல்லவா. மாமனார் உங்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர்பா்ர்த்தால் ஒரு சிலரிடம் இருக்கின்றது. மாமனார் உதவி செய்ய ஆறாவது வீட்டில் புதன்கிரகம் இருக்க கூடாது.

ஒரு வேடிக்கை ஒன்று இருக்கின்றது. அதாவது புதன் கிரகனுக்கு உடைய ராசியான மிதுனராசியை உடையவர்களுக்கு மாமனார் ஒழுங்காக அமைவதில்லை. மாமியார் வீட்டில் சண்டை சச்சரவுகளை உருவாக்கிவிடும். நான் பார்த்தவரை அதிகபடியான மிதுனராசியினர் மாமியார் வீட்டில் அவமதிப்பு நடந்துள்ளது. 

மாமனார் மருமகனோடு சண்டை போடுவார். இது சம்பந்தமே இல்லை என்றாலும் மிதுனராசியினர்க்கு மட்டும் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது. காரணமே இல்லாமல் ஒரு சிலர் முறைத்துக்கொண்டு இருப்பார்கள் அல்லவா. அதற்கு காரணம் மிதுனராசியாக நீங்கள் இருப்பதால் மட்டுமே.

கன்னி ராசியினர்க்கு இந்த பிரச்சினை அந்தளவுக்கு வருவதில்லை. கன்னி ராசியினர்க்கு பலருக்கு அவர்களின் மாமனார்கள் நன்றாக சம்பாதித்து கொடுத்து இருக்கின்றனர். மிதுன ராசினர்க்கு மட்டும் இப்படி இருக்கும் என்பதால் கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள்.

கோயம்புத்தூரில் இருக்கிறேன். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். Cell no : 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முதலாளி தாெழிலாளி


வணக்கம்!
         அவசரவேலை காரணமாக  நேற்று இரவு கோயம்புத்தூர் வந்துவிட்டேன். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் உடனே தொடர்புக்கொள்ளவும். இன்று மற்றும் நாளையும் சந்திக்கலாம். 

ஆறாவது வீடு நாம் செய்யும் வேலையும் காட்டும் இடம் என்பது தெரியும். முதலாளி ஒரு சில காலக்கட்டத்திலும் ஒரு சில நேரத்தில் தான் ஒரு தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய நிலை அனைவருக்கும் ஏற்படும். தொழிலாளியாக வேலை செய்வதை ஆறாவது இடத்தை வைத்து தான் அவரின் வேலையும் முடிவு செய்யவேண்டும்

முதலாளிகள் தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்தால் அவரின் தொழிலில் உள்ளவர்கள் அதாவது அவரின் வேலையாட்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள். முதலாளி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் தொழிலாளியும் ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள்.

தனியார் கம்பெனிகளில் தன்னுடைய கம்பெனி பெரியளவில் தொழில் நஷ்டம் ஏற்படுவதற்க்கு அவர்களின் முதலாளிகள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருந்த காரணத்தில் தான் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 10, 2017

உண்மையான எதிரி


ணக்கம்!

          நமக்கு எதிரி இருந்தால் தான் நம்முடைய வாழ்க்கை போராடவேண்டும் என்ற எண்ணம் வரும். நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள எதிரி இருக்கவேண்டும். எதிரி இல்லை என்றால் நாம் சோம்பேறியாக தான் இருப்போம்.

எதிரி என்று சொல்லுவது ஒரு நபரை மட்டும் சொல்லவில்லை நமக்கு ஏற்படும் கஷ்டத்தை கூட ஒரு எதிரியாக தான் பார்க்கவேண்டும். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு தடையும் எதிரியாக தான் பார்க்கவேண்டும். இந்த எதிரி உங்களை சிந்திக்க வைத்து செயல்பட வைக்கும்.

ஜாதகத்தில் ஆறாவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்து அது எப்படி எதிரியாக வரும் என்று பார்க்கவேண்டும். ஆறாவது வீட்டில் சந்திரன் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் நம்முடைய மனம் நமக்கு எதிரியாக அமையும். ஆறாவது வீட்டில் புதன் இருந்தால் நாம் எழுதகூடிய எழுத்து நாம் போடும் கையேழுத்து நமக்கு எதிரியாக அமைந்துவிடும்.

இன்றைய காலத்தில் அவனவன் தன் குடும்பம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறான். அடுத்த வீட்டில் கூட பேசுவதில்லை அதனால் எதிரி ஏற்பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு மேலே சொன்ன எதிரிகள் இருக்கும்.

நமக்கு எதிரியாக இருக்கும் விசயகளை நாம் கண்டறிந்து அதனை மீறி எப்படி செயல்பட போகின்றோம் என்று சிந்தித்து செயல்பட்டால் போதும். இதனை கடந்துவிடலாம்.


கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். விரைவில் சந்திக்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 9, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!

கேள்வி
 KJ
            One doubt. If kethu gets Guru aspect, then only its Kodiswara Yogam. But you said, if Kethu gets Sanis aspect, its Kodiswara yogam. Please clarify sir. Correct me if i am wrong. 

பதில்
          கேது குருவோடு இணைந்தால் அல்லது பார்த்தால் கோடிஸ்வரயோகம் இருக்காது. சனி கேதுவின் சேர்க்கை தான் கோடிஸ்வரயோகம் இருக்கும். நிறைய ஜாதகங்களை நான் அனுபவத்திலேயே பார்த்து இருக்கிறேன். சனியின் பார்வை அல்லது சனியின் வீட்டில் கேது இருந்த காரணத்தால் பணக்காரர்களாக இருக்கின்றனர்.

மகரத்தில் கேது அமர்ந்தால் அது நாட்டை ஆளூம் தலைவனாக அந்த ஜாதகரை மாற்றும் வல்லமை படைத்தது. ஜாதகர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்கள் எதற்க்கு தலைவராக இருப்பார்கள் என்பது அமையும்.

கேது குருவோடு இருந்தால் அது ஆன்மீகவழிக்கு இட்டுச்செல்லும். யாருக்கும் கிடைக்காத வித்தைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அவர் கற்ற வித்தையை வைத்து வேண்டுமானால் பணம் சம்பாதிக்கலாம். தற்சமயம் ஆன்மீகவாதிகளிடம் அதிக பணபுழக்கம் இருப்பதால் இதனை சொல்லுகிறேன் சோதிட விதி அது கிடையாது.

சனியின் பார்வையில் கேது அல்லது வீட்டில் இருக்கும் நபர்களை நீங்கள் பார்த்தால் நன்றாக செயல்பட சொல்லுங்கள். இயற்கையாகவே அவர்களுக்கு அமைந்தாலும் ஒரு தூண்டுகாேலை போடுங்கள். அவர்கள் பெரியளவில் வந்துவிடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விவாகரத்து


ணக்கம்!
          இன்றைய காலக்கட்டத்தில் வாழும் ஆண்களும் சரி பெண்களும் சரி தொண்ணூறு சதவீதம் பேர் விவாகாரத்து மனநிலையில் தான் வாழ்கின்றார்கள். கோர்ட்க்கு செல்வது பத்து சதவீதம் பேர் செல்கின்றனர்.

என்ன இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். இல்லறத்தில் இருப்பவர்கள் எதையாவது ஒரு காரணத்தை காட்டிக்கொண்டு தான் வாழ்க்கின்றார்களை தவிர அவர்களின் மனதிற்க்கு பிடித்து வாழ்வது குறைவு.

ஏதோ திருமணம் செய்துக்கொண்டோம் ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்கின்றனர். மனரீதியாக வெளியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரே காரணம் மட்டுமே என்னால் சொல்லமுடியும் அது ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆறாவது வீட்டின் அடி அதிகமாக வெளிப்படுவதால் தான் இப்படி நடக்கிறது.

ஒருத்தருக்கு விவாகாரத்து என்பது சட்டப்படியாக வெளியே காட்டாவிட்டாலும் மனரீதியாக பல பாதிப்புகளை ஆறாவது வீடு கொடுத்துவிடுகிறது. ஒரு சிலருக்கு கோர்ட்க்கு அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறது.

முக்கால்வாசி பேரை பூர்வபுண்ணியம் காப்பாற்றுகிறது என்பது தான் உண்மை. அதாவது அவர்களின் குழந்தைகளுக்காக தான் பலர் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். குழந்தைகளை கொடுப்பது பூர்வபுண்ணியம் அல்லவா. ஆறாவது வீட்டின் பாதிப்பை அதிகளவில் குறைப்பது ஐந்தாவது வீடு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 8, 2017

உதாரண ஜாதகம்:: ஆறு கொட்டிய பணம்


வணக்கம்!
          மேலே உள்ள படம் ஒரு உதாரண ஜாதகம். இவர் ஒரு அரசாங்க ஊழியராக இருந்தவர். இவர் ஜாதககதம்பத்தின் வாடிக்கையாளர் கிடையாது. ஒரு நபரால் எனக்கு அறிமுகமானவர் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ஜாதககதம்பத்தில் வரும் ஜாதகங்களை உதாரண ஜாதகமாக எடுத்து பதிவில் எழுதுவது கிடையாது. பழைய பதிவில் சொன்ன விதி உங்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்பது இதுவரை பின்பற்றி வருகிறேன்.

லக்கினம் ரிஷபம். லக்கனத்தில் சனி மற்றும் மாந்தி அமர்ந்திருக்கிறது. லக்கினாதிபதியான சுக்கிரன் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். தனவீடு என்று சொல்லக்கூடிய வீட்டில் இருக்கிறார். சுக்கிரன் ஒன்றாவது வீட்டிற்க்கும் ஆறாவது வீட்டிற்க்கும் அதிபதி அவர் இரண்டில் அமர்ந்திருக்கிறார்.

லக்கினாதிபதியோடு சூரியன் செவ்வாய் மற்றும் புதனோடு அமர்ந்திருக்றார்கள். லக்கினாதிபதி பல வீட்டிற்க்கு தொடர்பு வந்துவிட்டது. தனஸ்தானம் சுகஸ்தானம் பூர்வபுண்ணியம் களத்திரம் மற்றும் விரைய வீட்டு அதிபதியோடு தொடர்பு.

இவர் அரசாங்கவேலை சுக்கிரனின் தசாவில் வாங்கியிருக்கவேண்டும். சுக்கிரன் தசா சூரியபுத்தியில் வாங்கியிருக்கவேண்டும் அதனைப்பற்றி அவரிடம் நான் கேட்கவில்லை. எனது கணிப்பு அது.

இவர் என்ன செய்வார் என்றால் சுக்கிரனின் தசாவில் இவர் அதிகபடியான சொத்துக்களை சேர்த்துவிட்டார். தனவீடு ஆறாவது வீடு சம்பந்தபட்டதால் இவர் சம்பளத்தை விட லஞ்சம் வாங்குவதில் அதிக கெட்டிகாரனாவார். 

திருட்டுபுத்தி எப்படி வந்திருக்கும் என்றால் சனி மற்றும் மாந்தி லக்கனத்தோடு தொடர்பு. சுக்கிரன் ஆறாவது வீட்டு தசாவாகவும் வேலை செய்வார். இதன் வழியாக தான் திருட்டு புத்தி வந்திருக்கவேண்டும். லஞ்சம் என்பது ஒரு வகையில் திருட்டு தானே.

நிறைய பணத்தை சம்பாதித்தார் என்று தான் சொல்லவேண்டும். குரு கிரகத்தை பாருங்கள். எட்டில் அமர்ந்திருந்து சொந்த வீட்டில் இருந்து இரண்டாவது வீட்டை பார்க்கிறது. குரு கிரகம் எட்டாவது வீடு மற்றும் லாபஸ்தான அதிபதியாகவும் இருக்கிறார். பணம் கொட்டு கொட்டு என்று கொட்டும் அல்லவா. மறைவுஸ்தான அதிபதிகளின் பங்கு மிகுதியாக இருக்கின்றது. சம்பந்தமே இல்லாமல் பணம் சம்பாதிப்பது என்றால் மறைவுஸ்தான அதிபதிகளின் ஒத்துழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். இவருக்கு அதிகமாகவே இருக்கின்றது.

ராகு கிரகத்தை பாருங்கள். ராகு பாக்கியஸ்தான இடத்தில் இருக்கின்றார். கண்டிப்பாக பல மொழிகாரர்களிடம் இருந்தும் பணம் வந்துவிடும். இதனை தோஷம் என்று அழைப்பதை விட நல்ல யோகம் என்று சொல்லலாம்.

கடக ராசியைப்பற்றி சொல்லலேண்டும். கடக ராசிக்கிட்ட பணம் கொடுத்தால் அது திரும்பி வரவே வராது என்பது தான் உண்மை. பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். அவர்களை தேடி கண்டுபிடிப்பதை பெரிய வேலையாக தான் இருக்கும். இவர் கடக ராசி. எத்தனை பேரிடம் வேலை செய்துக்கொடுக்கிறேன் என்று வாங்கினார் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

சனியின் பார்வை சந்திரன் மற்றும் கேதுவிற்க்கு. மனக்காரகனுக்கு சனியின் பார்வை கிடைத்தால் குறுக்குபுத்தி வரும். கேதுவிற்க்கு சனியின் பார்வை கிடைத்தால் கோடிஸ்வரயோகம் வரும்.  இவர்க்கு கோடிஸ்வரயோகம் வந்தது. 

பணம் நிறைய வந்தால் ஒருவனை சும்மா இருக்க வைக்குமா ஊரில் உள்ள வில்லகத்தை எல்லாம் இழுத்துக்கொண்டு வருவார்கள். இவர்க்கு சுக்கிரனின் தசா சுகபாேகத்திற்க்கும் குறைவில்லை. போகவீட்டோடு சம்பந்தப்படுவதால் அதற்கும் குறைவில்லாமல் இருந்திருப்பார்.

சுக்கிரனோடு செவ்வாய் சூரியன் சம்பந்தப்படுவதால் கொஞ்சம் அடிதடியும் உண்டு. நில தகராறில் ஒரு அடிதடியும் நடந்தது என்று சொல்லிருக்கிறார். அது பெரியளவில் செல்லலாமல் பஞ்சாயத்து செய்து முடிந்துவிட்டது. புதன் சம்பந்தப்படுவதால் ஏதாவது வில்லங்க டாக்குமெண்டில் இந்த சண்டை சச்சரவு செய்து இருக்கலாம்.

ஒருவரை நல்ல வழியிலும் சரி கெடுதல் வழியிலும் சரி நன்றாக தூக்கிவிடுவதற்க்கு கிரகங்களின் அமைப்பை பொறுத்து தான் இருக்கின்றது. இவருக்கு அமைந்த கிரகத்தை வைத்து சொல்லுகிறேன் இவரின் வாழ்க்கை பெரியளவில் சென்றதற்க்கு ஆறாவது வீட்டு அதிபதியின் நிலை மற்றும் அந்த தசா மிக மிக முக்கியபங்கு வகித்தது.

எனக்கு தெரிந்த சோதிடத்தை வைத்து சொல்லிருக்கிறேன். நன்றாக பார்ப்பவர்கள் நிறைய சொல்லலாம். நாமும் கூட நிறைய சொல்லலாம் நேரத்தை உணர்ந்து இத்தோடு முடிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாழ்நாள் முழுவதும் நோய்


ணக்கம்!

          ஒரு மனிதன் நோயோடு வாழ்க்கையை கழிக்கவேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்காது. அந்தளவுக்கு அவன் கஷ்டத்தை அனுபவித்து இருப்பான். வாழ்க்கை முழுவதும் பலர் நோயால் கஷ்டப்படுபவர்களும் இருக்கின்றனர்.

சோதிடமே முன்ஜென்மத்தின் பாவம் புண்ணியத்தை அடிப்படையாக கொண்ட ஒன்று தானே. முன்ஜென்மத்தில் ஒருவர் அதிகமாக பாவத்தை செய்து இருந்தால் அவருக்கு நிறைய கஷ்டங்கள் வரும் என்பது தெரிந்த ஒன்று.

ஒருவருக்கு முன்ஜென்மத்தில் அதிக பாவம் இருந்தால் அவருக்கு ஆறாவது வீட்டோடு லக்கினாதிபதி தொடர்பு இருக்கும். ஆறாவது வீட்டோடு லக்கினாதிபதி தொடர்பு இருந்தால் அவருக்கு நோய் இருந்துக்கொண்டே இருக்கும்.

ஆறாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தாலும் இந்த பிரச்சினை இருக்கும். இப்படி யாருக்கு இருக்கின்றது என்றால் பெரும்பாலும் நல்ல பணவசதிகளை உடையவர்களிடம் இப்படிப்பட்ட நோய்கள் இருக்கின்றன. ஒரு சில ஏழைகளுக்கும் இருக்கின்றன. 

ஆறாவது வீட்டு அதிபதியோடு நான்கு கிரகங்கள் இருந்தால் அது படுமோசமான பலனை கொடுக்கும். அதிகப்பட்சம் உள்ள வீடுகள் பாதிக்கப்படுவதால் படுமோசமான பலனை கொடுக்கும். லக்கினாதிபதி மட்டும் சேர்ந்து இருந்தால் பரவாயில்லை வேறு கிரகங்களால் நன்மை வந்து சேரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆறாவது வீட்டு தசா


வணக்கம்!
          ஒருவருக்கு ஆறாவது வீட்டு தசா நடந்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுக்கு குறைவில்லாமல் இருக்காது. எந்த நேரமும் ஏதாவது ஒரு காரணத்திற்க்கு சண்டை இருந்துக்கொண்டே இருக்கும். சண்டை இல்லை என்றாலும் வாய் சத்தம் அதிகமாக இருக்கும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு வேடிக்கையாகவே அவர்களின் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவு இருக்கும் என்று சொல்லலாம். சண்டை சச்சரவால் நீண்ட காலத்திற்க்கு அவர்களின் சொந்தங்கள் எல்லாம் பிரிந்து செல்வதற்க்கும் வாய்ப்பு உண்டு.

நிறைய குடும்பத்தில் பார்த்தால் அவர்களின் அண்ணன் தம்பிக்கு கூட பேசாமல் இருந்துக்கொண்டே இருப்பார்கள். இறப்பில் கூட பங்குக்கொள்ளாதவர்களாக இருப்பார்கள். ஆறாவது வீட்டு தசா முடியும் வரை இப்படி இருக்கும்.

சண்டைக்கு காரணமாகவே ஆறாவது வீடு இருப்பதால் சண்டை சச்சரவுகளை கிளப்பிவிடும். படித்தவர்களாக இருந்தால் கூட இப்படிப்பட்ட சண்டை சச்சரவுகளை போட்டுக்கொண்டு இருப்பார்கள். 

ஆறாவது வீட்டு தசா நடந்தால் நீங்கள் பேசும்பொழுது வாய் மூடி பேசவும். கொலை விழுந்தால் கூட பேசகூடாது. உக்கிரமாக இருக்கும் அம்மனை வணங்கி கொண்டு வருவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு