Followers

Saturday, June 30, 2018

சனி சந்திரன் இணைவு


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் சனி சந்திரன் இணைந்து இருந்தால் அது புனர்பூ தோஷம் என்று சொல்லுவார்கள். புனர்பூ தோஷம் என்பதை விட அவர்களின் மனநிலை பாதிப்படையும் என்று சொல்லலாம்.

சனி சந்திரன் ஐந்தாவது வீட்டில் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக மனநிலையில் பாதிப்பை தந்துவிடும். சனி சந்திரன் இருவரும் சேர்ந்து இருக்கும்பொழுது அவர்களுக்கு இயற்கையிலேயே மனநிலை பாதிப்பு ஏற்படுத்தி வயது ஏற ஏற அது முற்றிவிடும்.

மனநிலைக்காரகன் சந்திரன் பூர்வபுண்ணியஸ்தானத்தில் அமர்ந்து அது சனிகிரகத்தோடு இணைந்து இருக்கும்பொழுது அது பூர்வபுண்ணியத்தில் ஏதோ பிரச்சினை இருக்கின்றது என்று அர்த்தம். இது முன்ஜென்மபிரச்சினையாகவே இதனை கருதில் கொண்டு செயல்படவேண்டும்.

சனி சந்திரன் ஐந்தாவது வீட்டில் இருக்கும் ஐாதகர்களுக்கு தாயார் வழியிலும் பிரச்சினை வந்துவிடுகின்றது. பலருக்கு தாயார் இளம்வயதில் இறந்துவிடுகின்றனர். இதனால் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்படுகின்றது.

சனி சந்திரன் ஐந்தாவது வீட்டில் அமைந்த நண்பர்கள் மனநிலை பாதிப்பை நீக்கும் கோவில் வழிபாட்டு தலங்களில் இரவு தங்கி அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். ஒரு சில கோவில்களில் இதற்க்கு என்று சிறப்பு பூஜைகளை செய்வார்கள் அதில் கூட பங்குக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 29, 2018

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஏழரைச்சனி அமைந்தால் அவர்களுக்கு அவ்வப்பொழுது நோய் தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருக்கும். இதனை அலட்சியமாக விட்டுவிடகூடாது. ஏழரைச்சனி காலத்தில் தான் அதிகமாக செலவை கொடுக்கின்றது. இது மருத்துவசெலவுக்கு முக்கால்வாசி போய்விடும் என்பதால் ஏழரைச்சனி காலத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.

ஏழரை நடந்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள் உங்களால் முடிந்த சிறிய பரிகாரமான சனிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கி வாருங்கள். ஏழ்மை என்பதை சனிபகவானை குறிக்கும். உங்களுக்கு தெரிந்த ஏழ்மையாக இருக்கும் நபர்களுக்கு உதவலாம்.

ஒரு மனிதனுக்கு கர்மாவை போக்கும் ஒரு நிகழ்வாக ஏழரைக்காலம் வருகின்றது. கர்மாவை வெளிக்கொண்டு வருவதற்க்கு ஏழரைச்சனி அதிகமாக எடுத்துக்கொண்டால் மொத்த வாழ்வும் சிதைந்துவிடும். நடைமுறையில் கர்மா போகட்டும் என்று இருக்கமுடியாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் நிறைய சிக்கல்களை ஏழரைசனிக்காலத்தில் ஏற்படுத்திவிடும். உங்களின் துணைக்குள்ளேயே உங்களுக்கு சண்டை சச்சரவு ஏற்படுத்திவிடும். இதிலும் எச்சரிக்கையோடு இருந்தால் மிகவும் நல்லது.

ஏழரைச்சனியைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். அவ்வப்பொழுது உங்களை காப்பாற்ற இப்படிப்பட்ட விசயங்களை சொல்லவேண்டி இருக்கின்றது. ஒரு முறை திருநள்ளாறு சென்று நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 28, 2018

வேலையாட்கள் அமையும் யோகம்


ணக்கம்!
         இன்றைய காலத்தில் ஒரு தொழில் செய்வது என்பது அவ்வளவு பெரிய கஷ்டம் என்று சொல்லலாம். கையில் இருந்து பணத்தை போட்டாலும் சரியான வேலையாட்கள் கிடைக்காது. வேலையாட்கள் ஏட்டிக்கு போட்டியாக அமைந்துவிட்டால் தொழில் நஷ்டத்தை சந்திக்கும்.

பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் முதலாளியால் ஏற்பாடு செய்வார்கள் ஆனால் அந்த தொழிலை நடத்தும் வேலையாட்கள் கிடைப்பதில் தான் பெரிய கஷ்டாக இருக்கும். நல்ல வேலையாட்கள் கிடைத்துவிட்டால் தொழில் வெற்றியை நோக்கி சென்றுவிடும்.

ஒரு தொழிலுக்கு நல்ல வேலையாட்கள் கிடைக்க அவர்களின் ஜாதகத்தில் ஆறாவது நன்றாக இருக்கவேண்டும். நமக்கு வரும் வேலையாட்களை காட்டக்கூடியது ஆறாவது வீடு. ஆறாவதுவீட்டு அதிபதி மறைவுஸ்தானத்திலேயே இருந்தால் பெரும்பாலும் நல்ல வேலையாட்கள் கிடைக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் வைத்து இதனை சொல்லுகிறேன். வேலையாட்கள் அமைவதற்க்கு தொழில் நடத்தும் நபர்களின் ஜாதகத்தில் ஆறாவது வீட்டு அதிபதி மறைவுஸ்தானத்தில் அமரும்பொழுது நிறைய நல்ல வேலையாட்கள் கிடைக்கின்றனர்.

ஒரு சிலருக்கு ஆறாவது வீட்டு அதிபதி லக்கினாத்தில் அமர்ந்தால் அவர்களுக்கும் நல்ல வேலையாட்கள் கிடைக்கின்றனர் மற்றபடி எங்கு அமர்ந்தாலும் வேலையாட்கள் கிடைப்பதில் குதிரை கொம்பாக அமைந்துவிடும்.

பல கம்பெனிகள் திவாலாகி போனதற்க்கு அவர்களின் வேலையாட்களும் சரியாக இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கின்றது. ஒரு சில கம்பெனிகளை முதலாளியை ஆட்டை போட்டு வேலையாட்கள் எடுத்ததும் இருக்கின்றது. இதற்கு அனைத்தும் காரணமாக இருப்பது அவர் அவர்களின் ஜாதகத்தில் ஆறாவது வீடு செய்யும் வேலை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 27, 2018

திலாஹோமம்


ணக்கம்!
          சென்னை சென்ற பொழுது நண்பர் ஒருவர் சந்திக்க  வந்திருந்தார். அவர் ஒரு கேள்வியை முன் வைத்தார். திலாஹோமம் செய்தால் உடனே நமக்கு நல்லது நடக்குமா என்று கேட்டார். 

திலாஹோமம் செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பது கிடையாது.  எங்கோ வெப்சைட்டில் படித்துவிட்டு பலர் திலாஹோமம் செய்ய சென்று விடுகின்றனர் அல்லது யாராவது சோதிடர்கள் திலாஹோமம் செய்யுங்கள் என்று சொல்லுவதால் செய்கின்றனர்.

திலாஹோமம் செய்வது எல்லாம் வேண்டியதில்லை. ஒருவர் திலாஹோமம் செய்ய சென்றால் அவர் வாழ்வில் கடைசி நிகழ்வாக அதனை வைத்துக்கொள்ளலாம். இளமையில் இருக்கும் நபர்கள் திலாஹோமம் எல்லாம் செய்யவேண்டாம்.

உங்களுடைய வாழ்க்கையை நன்றாக வாழுங்கள். உங்களுக்கு எல்லாம் பேரன் பேத்திகள் வந்தபிறகு இதற்கு எல்லாம் நீங்கள் சென்று செய்துக்கொள்ளலாம். சும்மா இருந்துக்கொண்டு ஒரு சிலர் திருமணம் கூட செய்துக்கொள்ளாமல் திலாஹோமத்தில் எல்லாம் இறங்கவேண்டியதில்லை.

பொதுவாக உங்களின் கடமை எல்லாவற்றையும் செய்யவேண்டியது நீங்கள் இந்த பூமியில் மனிதபிறவி எடுத்ததின் அர்த்தம் தான் ஆனால் நீங்கள் எப்பொழுது செய்யவேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

திலாஹோமம் எல்லாம் வளர்ச்சிக்கு உதவாது அடுத்த பிறவி அல்லது இந்த பிறவி முடிந்து மோட்சத்திற்க்கு உதவது தான் திலாஹோமம் செய்யவேண்டும். அதனைவிட்டுவிட்டு வளர்ச்சிக்கு செய்கிறேன் என்று செய்யவேண்டாம். 

திலாஹோமம் செய்துவிட்டு அந்த வருடத்தில் மண்டையை போட்டவர்களும் இருக்க தான் செய்கின்றனர். கடமையை முடித்துவிட்டார் என்று எமனே அழைத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

உங்களின் வளர்ச்சிக்கு பிற வழிபாடுகள் மற்றும் ஹோமங்களில் பங்களிப்பை அளியுங்கள் அல்லது நீங்களே செய்துக்கொள்ளுங்கள். வளர்ச்சிக்கு திலாஹோமம் செய்யவேண்டியதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 26, 2018

விளக்கம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் நிறைய பிரச்சினைக்கு மனிதர்கள் மட்டும் அல்லாமல் ஆன்மீகவாதிகளும் காரணமாக இருக்கின்றனர். ஆன்மீகவாதிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் இருந்து தவறி அவர்கள் எல்லையை மீறி செயல்படும்பொழுது தான் சாதாரணமானவர்களுக்கு நிறைய பிரச்சினை வந்துவிடுகின்றது.

நம்மிடம் வருபவர்களுக்கு அவர்களின் நிலையில் இருந்து பிரச்சினையை அலசும்பொழுது மட்டுமே அவர்களுக்குள்ள பிரச்சினை என்ன என்பது நமக்கு புரியும். நாம் சொல்லும் ஆலோசனை அவர்களால் எளிதில் ஏற்றுக்கொண்டு அதன் வழியில் நடக்க ஆரம்பிப்பார்கள்.

நம்மிடம் புதியதாக வரும் வாடிக்கையாளர்கள் பல ஆன்மீகவாதிகளை சந்தித்து இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு சரியான வழியை கொடுக்கவே இல்லை என்று அவர்கள் பேசும் வார்த்தையில் இருந்து தெரிந்துக்கொள்ளமுடிகிறது.

நம்மை தேடி வருபவர்களிடம் நாம் பெரிய ஆள் என்பதை காட்டிக்கொள்ளவே கூடாது. சாதாரணமானவர்கள் போல தான் இருக்கவேண்டும். அவர்களின் பிரச்சினை நமக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை நம்மால் உணரமுடிந்தால் வரும் நபர்களுக்கு நம்முடைய ஆத்மா முழுமையாக உணர்ந்து தீர்வு வழங்கும். இதனை நான் செய்துக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் சிறப்பாக செய்யவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.


நவஅம்மன்(சண்டி) யாகத்தை தேதி சொல்லாமல் ஆரம்பித்துவிட்டீர்களே என்று பலர் தெரிவித்தனர். அம்மனிடம் இதனை முன்கூட்டியே தெரிவித்து அனுமதிக்காக காத்திருந்தேன். அது இன்றைய காலையில் நமக்கு அனுமதி தந்தது உடனே ஆரம்பித்துவிட்டேன். நவஅம்மன்(சண்டி) யாகத்தில் கலந்துக்கொள்பவர்கள் அனுப்பி வையுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவஅம்மன் (சண்டி) யாகம் ஆரம்பம்


வணக்கம்!
          நவஅம்மன் (சண்டி) யாகம் இன்று காலை நவஅம்மன்(சண்டி) யாகம் ஆரம்பித்துவிட்டேன். பலர் தங்களின் பங்களிப்பை அளித்து இருக்கின்றனர். பலர் தங்களின் ஜாதகத்தை அனுப்பியதோடு இருக்கின்றனர் காணிக்கை அனுப்ப அவகாசம் கேட்டனர்.

நவஅம்மன்(சண்டி) யாகம் முடிவதற்க்குள் தங்களின் காணிக்கை செலுத்திவிடுங்கள். அதன்பிறகு அனுப்பினால் அது எனக்கு தான் பயன்படும் யாகத்திற்க்கு பயன்படாது என்பதால் காணிக்கையை முடிந்தவரை யாகம் முடிவதற்க்குள் அனுப்பிவிடுங்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் யாகம் காலையில் நடைபெறும். பத்து மணிக்கு பிறகு அவர் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்க்கு யாகம் நடைபெற்ற புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்படும்.

பொதுவாக அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்காக செய்வது உண்டு. நான் காணிக்கை அனுப்பவில்லை எனக்கு அருள் கிடைக்காது என்று எண்ண வேண்டாம். ஒவ்வொருவருக்கும் நான் பிராத்தனை செய்கின்றேன். 

காணிக்கையை அனுப்பியவர்களுக்கு அவர் அவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை கொண்டு செய்வேன். காணிக்கை அனுப்பாதவர்களுக்கு பொதுவாக செய்கிறேன். புகைப்படங்கள் வராதவர்கள் என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புக்கொள்ளுங்கள். தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 25, 2018

புண்ணியம்


வணக்கம்!
          நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு தருவார்கள். அனுபவங்களை வைத்து சோதிடவிதிகளையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். 

பல வருடங்கள் நான் சோதிட பார்த்ததில் ஒருவர் பிரச்சினையில் சிக்குகிறார் என்றால் அவர்க்கு பெரும்பான்மையான கிரகங்கள் அவர்க்கு எதிராக செயல்பட ஆரம்பித்துவிடுகின்றது. அந்த நேரத்தில் ஒருவரை காப்பாற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிடுகின்றது.

நாம் காப்பாற்றுவதில் அவர் நிறைய புண்ணியங்கள் செய்து இருந்தால் மட்டுமே அவரை நம்மால் காப்பாற்றமுடியும். புண்ணியம் செய்திருந்தால் அவர்க்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நினைக்கலாம். என்ன செய்வது ஒரு வார்த்தைக்கு இப்படி சொல்லிவிடலாம். உண்மையும் அவர்கள் ஏதாவது புண்ணியம் செய்தால் காப்பாற்றலாம்.

நம்ம ஆட்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். நன்றாக இருக்கும்பொழுது அவர்கள் அடுத்தவர்களுக்கு அறிவுரை எல்லாம் சொல்லுவார்கள். புண்ணியம் என்பதை மட்டும் செய்யமாட்டார்கள். நாம் கேட்டால் நான் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறேன் என்பார்கள்.

உங்களின் புண்ணியத்தை அதிகரிக்க நம்மால் முடிந்த ஒன்றை செய்யலாம். இது உங்களின் விருப்பம் போல செய்வதால் இதனை அனைவரும் செய்யமுடியும். நம்மால் நடத்தப்படுகின்ற நவஅம்மன்(சண்டி) யாகத்தில் தங்களின் காணிக்கை செலுத்திவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 24, 2018

இராகு & கேது


வணக்கம்!
          ஒருவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் அவர்களின் தலைவருக்கு ஒத்துழைப்பை அளிக்கமாட்டார்கள். அவர்கள் இஷ்டத்திற்க்கு சென்றுக்கொண்டு இருப்பார்கள். சொன்ன பேச்சை கேட்கமாட்டார்கள். 

குடும்ப தலைவருக்கு கட்டுப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே அனைத்தும் நன்றாக செல்லும். எந்த காரியமும் சிக்கல் இல்லாமல் நடக்கும். தான்தோன்றிதனமாக நடந்தால் கண்டிப்பாக அந்த குடும்பம் சீரழிந்து போகும்.

பெரும்பாலான குடும்பங்கள் அழிவதற்க்கு இராகு கிரகம் காரணமாக இருக்கின்றது. இதனை பலமுறை நான் ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். இதற்கு தீர்வும் அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

ராகு கேது நகர்வை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் தங்களின் வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் இந்த கிரகங்கள் வாழ்க்கையை அப்படி புரட்டிபோடும். வாழ்க்கையை சீரழிக்க இந்த கிரகங்கள் வழிவகுக்கும்.

உங்களால் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த இராகு கேது பரிகாரங்களை செய்யுங்கள். அதனை மீறியும் இராகு கேது பிரச்சினை செய்கின்றது என்பவர்கள் நம்மால் நடத்தப்படும் நவஅம்மன்(சண்டி) யாகத்தில் தங்களின் காணிக்கை செலுத்தி பங்களிப்பை அளிக்கலாம்.

சென்னையில் இருக்கிறேன். சென்னை நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 23, 2018

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          ஒரு மனிதன் அவன் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி சென்றால் அவன் மிகப்பெரிய வெற்றியாளனாக இருப்பான். எடுத்து காரியங்கள் அனைத்தும் வெற்றி என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் அமைவதில்லை.

ஒரு சிலருக்கு வெற்றியை எளிதில் பெற்றுவிடுவார்கள். பலர் வெற்றி என்றால் என்ன என்று கேட்கும் அளவில் இருப்பார்கள். ஒரு சிலர் விடாத முயற்சியை எடுத்துக்கொண்டே இருப்பார்கள் ஆனால் அவர்களால் ஒரு காரியத்தை கூட சாதிக்கமுடியாது.

ஒரு சிலர் இருக்கின்றனர். வேலை எல்லாம் கிடைக்கும் அந்த வேலையும் செய்வார்கள் ஆனால் அந்த வேலைக்கு தகுந்த ஊதியம் என்பது கிடைக்காமலே இருக்கும். இது அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது பாக்கியம் இல்லை என்பது மட்டுமே.

ஒருவரின் வெற்றிக்கு காரணமாக இருப்பது அவர்களின் பாக்கியஸ்தானம் ஆகும். பாக்கியஸ்தானம் மட்டும் நன்றாக இருந்தால் அவர்கள் எடுக்கும் காரியம் நன்றாக சென்று வெற்றி கிட்டும்.

நம்மில் பலருக்கு பாக்கியஸ்தானம் நன்றாக இருப்பதில்லை. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு உருண்டாலும் அவர்களுக்கு ஒட்டுகின்ற மண் தான் ஒட்டும் அனைத்து மண்ணும் ஒட்டாது என்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் பாக்கியம் என்பது நன்றாக இருக்க அவர்கள் செய்யும் தர்ம காரியம் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை நடத்த உதவி செய்வது. பாக்கியஸ்தானத்தில் உள்ள குறைபாடு நீக்கி நல்லது நடக்க ஒரு வாய்ப்பை தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். நம்மால் நவஅம்மன் (சண்டி) பொதுயாகத்தை அவ்வப்பொழுது நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

நவஅம்மன் (சண்டி) யாகத்தில் தங்களின் பங்களிப்பை அளித்து உங்களின் பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்திக்கொள்ளுங்கள்.

சென்னையில் நாளை என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 22, 2018

இராகு மற்றும் சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு தசா அல்லது சுக்கிரதசா நடைபெற்றால் அவர்கள் அதிகளவில் ஆடம்பரத்தை விரும்புவார்கள். ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற ஆசையை ராகு அல்லது சுக்கிரன் கொடுப்பார்கள்.

ராகு மற்றும் சுக்கிரன் தசா நடப்பவர்கள் அல்லாமல் ஒருவர் ஆடம்பரத்தை விரும்புகின்றார் என்றால் அவர்களின் சுயஜாதகத்தில் ராகு அல்லது சுக்கிரன் பலம் பெற்று அமைந்து இருக்கும் அதனால் அவர்கள் ஆடம்பரத்தை விரும்புவார்கள்.

இன்றைய காலத்தில் பெரும்பான்மையானவர்கள் ஆடம்பரமாக தான் வாழவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களுக்கு என்று இல்லாமல் தற்பொழுது கால சூழ்நிலையே இராகுவின் பிடியில் இருப்பது போலவே இருக்கும்.

ராகு தசா அல்லது சுக்கிரதசா ஒருவரை அதிக ஆடம்பரத்தை கொடுத்து அவர்களை கீழே தள்ளிவிடுவும் செய்வது உண்டு. அதாவது நஷ்டத்தையும் கொடுத்துவிடுவது உண்டு. நஷ்டம் பெரும்பாலும் பணத்தை ஏமாந்து கொடுத்ததாகவும் இருக்கும்.

பெண்களிடம் சிக்கி பணத்தை இழக்கவும் இந்த தசா தான் அதிகமாக கொடுக்கின்றது. நிறைய பணத்தை இழக்கவும் மற்றும் பெரும்நஷ்டத்தை சந்திக்கவும் இந்த தசாக்கள் வேலை செய்யும். இதில் மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருங்கள்.

ஞாயிற்றுகிழமை அன்று சென்னையில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 21, 2018

காலசுழற்சி


ணக்கம்!
          உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் ஒரு காலத்திற்க்கு பிறகு அவர்கள் உங்களோடு இருக்கமாட்டார்கள். கிரகங்களின் சுழற்சி உங்களிடம் இருக்கும் அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கும். இன்று உங்களிடம் இருக்கும் அனைத்தும் கொஞ்சகாலத்தில் மாறிக்கொண்டே இருக்கும். இது மாற்றம் என்று சொன்னாலும் இதனை நடத்தி வைப்பது கிரகங்கள் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

நாம் வாழும் வாழ்க்கையில் நம்மிடம் அனைத்தையும் தக்க வைத்துக்கொண்டால் தான் அது வாழ்க்கையாகவே இருக்கும். அதாவது நம்மிடம் இருக்கும் அனைத்தையும் நம்மாேடு இருந்தால் போதும். இதனை தக்கவைத்துக்கொள்வதற்க்கு தான் பெரும்பாலான வழிபாடுகள் உங்களுக்கு துணைபுரியும்.

மூன்று வருடங்களுக்கு முன்பு உங்களோடு இருக்கும் நபர்கள் இன்று உங்களோடு இருக்கமாட்டார்கள். இதுவும் கிரகங்களின் சுழற்சியாக தான் இருக்கும். நான் நட்பை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லுகிறேன்

நீங்கள் மலைபோல நம்பிக்கொண்டு இருக்கும் நபர்கள் உங்களைவிட்டு சென்றுவிடுவார்கள். இதனை எல்லாம் நாம் சரியாக கொண்டு செல்வதற்க்கு வழிபாடு உங்களுக்கு பெரிதும் துணைபுரியும். என்னோடு பயணிக்கும் பெரும்பாலான நபர்கள் இன்றும் என்னோடு இருப்பதற்க்கு காரணமாக இருப்பது நான் செய்யும் வழிபாடு தான் காரணமாக இருக்கின்றது.

உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களின் நட்பு வட்டமும் உங்களோடு இருக்கும் பொருட்கள் மற்றும் நிலங்கள் எல்லாம் உங்களோடு இருக்க நீங்கள் சரியான திட்டமிடலும் மற்றும் வழிபாடு மட்டுமே உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 20, 2018

பூஜைக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்


ணக்கம்!
          பூஜைக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் என்பது மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். சுத்தமான எண்ணெய்களை வாங்கி அதனை பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். விளக்கு தான் எண்ணெய் போடுகிறோம் இதில் என்ன இருக்கின்றது என்பதற்க்காக கண்ட கண்ட எண்ணெய் எல்லாம் போடவேண்டாம்.

கடைகளில் தீப எண்ணெய் விற்க்கும் இதனை வாங்கி வந்து அதனை பல வீடுகளில் மற்றும் கோவில்களில் தீபம் போடுகின்றனர். இந்த எண்ணெய் சுத்தமான எண்ணெய் கிடையாது. உங்களின் வீட்டில் சமையலுக்கு நீங்கள் எப்படிப்பட்ட நல்ல எண்ணெய் வாங்கின்றீர்களோ அந்த எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துங்கள்.

விளக்கு போடுவதற்க்கு தானே பயன்படுத்திக்கிறோம் என்று பல எண்ணெய்களை கூட்டு சேர்த்து தயாரித்து அதனை விற்கின்றனர். இது எண்ணெய்களின் கடைசி கட்டத்தில் உள்ள எண்ணெய்யாக இருக்கும். இதனையும் போடுவது தவறான ஒன்று.

பெரும்பாலும் நீங்கள் கோவிலில் விளக்கு வாங்கி போடும்பொழுது பூஜை கடையில் வைத்திருப்பவர்கள் ஏதோ ஒரு மட்டமான எண்ணெய் தான் உபயோகப்படுத்துவார்கள். நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் எண்ணெய்யை முடிந்தவரை பயன்படுத்த பாருங்கள். கடையில் தான் வாங்கி போடவேண்டும் என்றால் போடுங்கள். அந்த நேரத்தில் நம்மால் முடியாத காரணத்தால் தான் செய்கிறோம் என்பது கடவுளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. அது தவறு இல்லை.

உங்களின் வீட்டில் நமக்கு சமைப்பதற்க்கு எந்த எண்ணெய் வாங்கி பயன்படுத்துகிறோமோ அதனையே நீங்கள் காேவிலுக்கும் மற்றும் பூஜைக்குக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தற்பொழுது பெரும்பாலும் கிராமபுறங்களில் செக்கில் ஆட்டி அந்த எண்ணெய்யை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனையே கோவிலுக்கும் மற்றும் தினசரி வீட்டில் பூஜைக்கும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

விரைவில் சென்னைக்கு வருகிறேன். சென்னையில் என்னை சந்திக்கவிரும்பும் நண்பர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதகத்தில் மறைவிடங்கள்


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் மறைவிடங்கள் என்று சொல்லக்ககூடிய இடங்களில் உள்ள கிரகங்கள் என்ன என்று பார்த்துக்கொண்டு அதனின் காரத்துவத்தில் உள்ள விசயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மறைவிடங்கள் அதிகபலத்தோடு அமைந்துவிட்டால் அந்த ஜாதகர் நல்லவழியில் தேடுவதை விட கெட்டவழியில் அதிக தேடுதலை ஈடுபடுவார்கள். இந்த காலத்தில் பலர் நான் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு மறைவிடங்கள் அதிக பலம் பெற்று நான் நல்லவனாகவே இருக்கிறேன் என்றால் ஒன்றுமே அவர்களுக்கு அமையாது.

மறைவிடங்கள் பலம்பெற்றவர்கள் பலர் அதிகமான பணப்புழக்கத்தை தன்வசம் வைத்திருப்பார்கள். நிறைய பணம் அவர்களை தேடிச்செல்லும். ஜாதகத்தில் மறைவிடங்களில் உள்ள கிரகம் அவர்களுக்கு அப்படி வேலை செய்யும்.

ஜாதகத்தின் மறைவிடங்கள் உள்ள கிரகங்களால் அவர்களுக்கு ஆபத்தும் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஜாதகர்கள் திடீர் என்று சிக்கல்களில் மாட்டிக்கொள்வதற்க்கும் வாய்ப்புகள் அதிகமாக உருவாகும்.

மறைவிடங்கள் என்ற சொல்லக்கூடிய இடத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் அந்த இடம் பல தடவை பலமுற்றதாக இருக்கும். அவர்களிடம் சென்று ஒரு சாதாரணமான நபர் மோதுவது எல்லாம் கடினமாகவே இருக்கும். மறைவிடங்களை நன்றாக அலசி ஆராய்ந்து அதற்கு தகுந்தார்போல் உங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 19, 2018

சாமியா அல்லது ஆசாமியா?


வணக்கம்!
          ஒருவருக்கு கஷ்டகாலம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அப்பொழுது தான் ஞானயோதம் உருவாகும். உடனே உலகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் செல்ல ஆரம்பித்துவிடுவார்.

ஒருவருக்கு கஷ்டம் தெரியாமல் இருந்துக்கொண்டு வருவார். ஏதோ கிரகங்களின் கோளாறு அவர் ஏதோ ஒன்றில் மாட்டிக்கொள்வார். ஒருவர் மாட்டிக்கொண்டால் அவர்க்கு அப்பொழுது தான் கோவில்கள் எல்லாம் இருப்பது தெரியவரும். கோவில் கோவிலாக சுற்ற ஆரம்பித்துவிடுவார்.

ஒருவருக்கு கஷ்டகாலம் உருவாகிவிட்டால் அவர்க்கு பெரும்பாலான கிரகங்கள் எதிராக தான் வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கோவிலுக்கு செல்ல ஆரம்பிக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கும். நல்ல வசமாக மாட்டிக்கொள்ள ஆரம்பிப்பீர்கள்.

பின்பு எப்படி தான் இதனை சமாளிப்பது. இந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. என்ன தான் நீங்கள் கடவுளை கும்பிட்டாலும் நடப்பது ஆசாமிகளின் கையில் தான் இருக்கின்றது. கடவுள் நேராக வந்து உங்களை காப்பாற்றபோவதில்லை. ஏதோ ஒரு மனிதனால் தான் அதனை செய்ய வைப்பார். சாமியை தேடுவதை விட்டுவிட்டு ஆசாமியை நாடினால் காரியம் நடக்கும்.

கஷ்டகாலத்தில் சாமியை நாடுவதைவிட ஆசாமி உங்களை காப்பாற்றுவார் என்று சொல்லுகிறேன். ஆசாமி அது ஆன்மீகவாதியாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களாக கூட இருக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 18, 2018

நவஅம்மன் (சண்டி) பொதுயாகம்


வணக்கம்!
         நவஅம்மன் (சண்டி) யாகத்திற்க்கு தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரங்களை அனுப்பி வைக்கவேண்டுகிறேன். விரைவில் நவஅம்மன் (சண்டி) யாகம் நடைபெறும் என்பதால் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

நவஅம்மன் (சண்டி) யாகத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை கேட்பது உங்களின் நட்சத்திரத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக கேட்கிறேன். ஒருவர் தங்களின் ஜாதகத்தை அனுப்பும்பொழுது தங்களின் குடும்பத்தினர்களின் விபரங்களையும் சேர்த்து அனுப்பிவையுங்கள்.

உலக நன்மை மற்றும் உங்களின் நன்மைக்காக தான் இப்படிப்பட்ட யாகங்கள் செய்யப்படுகின்றன. இது ஒரு பொது நலம் என்பதால் இதற்கு கட்டணங்கள் என்பது அவர் அவர்களின் விருப்பபடி அனுப்பிவைக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் ஹோமத்தின் புகைப்படங்களை அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வைக்கப்படும். கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் சிறப்பாக ஹோமம் அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்திற்க்காகவும் செய்யப்படுகின்றன.

ஏற்கனவே நடந்த நவசண்டி யாகத்தில் கலந்துக்கொண்டவர்கள் மறுபடியும் இந்த நவசண்டியாகத்தில் கலந்துக்கொள்ளலாம். விரைவில் அனைவரும் தங்களின் விபரங்களை அனுப்பி வைத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாரகதசா பரிகாரம்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் ஒருவர்க்கு மாரகம் தரக்கூடிய ஒரு தசா நடந்தால் அவர் அந்த நேரத்தில் தன்னுடைய வேலைபளுவை எல்லாம் குறைத்துக்கொண்டு அவரின் மாரகதசாவிற்க்கு உள்ள பரிகாரம் மற்றும் வழிபாடுகளை மேற்க்கொண்டால் போதும் கொஞ்சம் மாரகத்தை தள்ளிபோடலாம்.

ஒரு சிலருக்கு இளம்வயதில் மாரக தசா வரலாம். அந்த நேரத்தில் வேலையை பார்த்துக்கொண்டு தான் இருக்கமுடியும். வேலைக்கும் செல்லவேண்டும் இந்த தசாவிற்க்கு பரிகாரமும் செய்யவேண்டும். பொதுவாக மாரக தசா வந்தால் அவர்களுக்கு மிருத்துஞ்ச மந்திர ஜெபம் செய்ய சொல்லுவார்கள்.

வேலைக்கு போகும் நபர்களுக்கு இந்த தசா நடந்தால் தினமும் பூஜையில் இந்த மிருத்துஞ்ச மந்திர ஜெபத்தை ஒரு முறையாவது சொல்லிக்கொண்டு பூஜையை முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம்.

உங்களுக்கு விடுமுறை நாட்களில் இந்த மந்திர ஜெபத்தை அதிகப்படுத்தலாம். அதாவது பல முறை இந்த மந்திரஜெபத்தை செய்துவிட்டு பூஜையை முடிக்கலாம். ஒரு முறை திருகடையூர் சென்று சாமி தரிசனம் செய்து வந்தால் உங்களுக்கு வரும் மாரக தசாவின் பாதிப்பு குறைந்துவிடும்.

ஒருவருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும்பொழுது அவர்களை காப்பாற்றும் முயற்சியில் என்னிடம் சொல்லுவார்கள். நானும் பலரை இந்த தருவாயிலில் இருந்து மீட்டு வந்து இருக்கிறேன். தற்பொழுது இந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இது அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்கு மட்டும் இது செய்யப்படுகின்றது.

நீங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு மிருத்துஞ்ச மந்திரத்தை அவர் இருக்கும் இடத்தில் செல்போனில் வேண்டுமானால் ஒலிக்கவிடலாம். இது நல்ல முன்னேற்றத்தை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 17, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 16, 2018

சுயமுன்னேற்றம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் ஒருவர் அதிகம் சொல்லும் வார்த்தை நான் பிஸியாக இருக்கின்றேன் என்று சொல்லுவார்கள். பிஸியாக ஒருவர் இருக்கின்றேன் என்று சொன்னால் அவர் உண்மையில் சும்மா தான் இருப்பார்.

என்னை பொறுத்தவரை பிஸியாக என்னை காட்டிக்கொள்வது கிடையாது. நான் பிரியாக வைத்துக்கொள்ள அதிகம் விரும்புவேன். எவ்வளவு பெரிய வேலை நடந்துக்கொண்டு இருந்தாலும் அதனை எல்லாம் வெளியில் காட்டிக்கொண்டு பிஸியாக இருக்கிறேன் என்று சொல்லுவது கிடையாது.

நான் வாகனங்களை இயக்கும்பொழுது மட்டுமே போனை எடுப்பதில்லை. பூஜை நேரத்திலும் போனை எடுப்பதில்லை மற்றபடி எந்த நேரத்திலும் போனை எடுத்து பேசிவிடுவேன். பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது.

உங்களுக்கு வருகின்ற வாய்ப்பை நீங்களே உதறிதள்ளுவதற்க்கு உள்ள ஒரு சொல் பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்தவது தான். நீங்கள் பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்தும்பொழுது நன்றாக தொழில் செய்யும் நபர் உங்களிடம் தொழில் செய்ய யோசிப்பார். இவரே பிஸியாக இருக்கின்றார் நாம் ஏன் இவரோடு தொழில் செய்யவேண்டும் வேறு நபரை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிடுவார்.

இந்த உலகம் உங்களுக்கு வாய்ப்பை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் உங்களை எப்பொழுதும் பிரியாகவே வைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு வருகின்ற வேலையை அவ்வப்பொழுது முடித்துக்கொள்ளவேண்டும். வேலையை முடித்துவிட்டால் அடுத்தடுத்து உங்களுக்கு வாய்ப்பை உலகம் கொடுத்துக்கொண்டே இருக்கும். 

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 15, 2018

அம்மன் பூஜை


வணக்கம்!
          வரும் ஞாயிற்றுகிழமை அன்று அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.  
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.   

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.   
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.   

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.     
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.      
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள் 

வழக்கம்போல்                                 
       திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறும் நாளில் உங்களின் வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Thursday, June 14, 2018

மகரராசி


வணக்கம்!
          மகரராசியினர்க்கு இது கஷ்டமான ஒரு நேரம் என்று சொல்லலாம். மகரராசியினர்க்கு ஏழரை ஆரம்பித்த காலத்திலும் மற்றும் ராகு கேது பெயர்ச்சியும் அந்தளவுக்கு சரியில்லை என்பதால் தற்பொழுது ஒரு கடினமான ஒரு நேரம் என்று சொல்லலாம்.

மகரராசியினர்களுக்கு இராசியில் கேது பகவான் அமர்ந்து இருப்பதால் உங்களுக்கு அதிகமான நோய்வாய்ப்படுதல் நடக்கும். உடல்நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். முக்கியமான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும்.

கேது பகவானுக்கு கொள்ளு நைவேத்தியம் படைக்கலாம். கேது பகவானுக்கு படைப்பதோடு இல்லாமல் வாரத்தில் மூன்று நாட்கள் நீங்களும் கொள்ளு உண்ணலாம். கொள்ளு ஏதோ ஒரு உணவாக எடுத்துக்கொள்வது நல்லதாக இருக்கும்.

பிப்ரவரி 2019 வரை கேது பகவானுக்காக நீங்கள் கொள்ளு உணவாக எடுத்துக்கொள்ளலாம். கண்ட கண்ட இடத்தில் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டில் உணவை சாப்பிடுங்கள். வெளியில் சென்றால் பழத்தை உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

வாரம் வாரம் தொடர்ச்சியாக சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். குறைந்தபட்சம் ஒன்பது வாரமாவது தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். ஏழரைச்சனியும் கொஞ்சம் தொந்தரவை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. 

உணவில் கட்டுபாட்டோடு இருந்தால் பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் இல்லை என்றால் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 13, 2018

ரிஷபராசி


ணக்கம்!
          பொதுவாக ஒவ்வொரு ராசியினர்க்கும் உள்ள பொதுவான பிரச்சினையை மட்டும் சொல்லுகிறேன். இது கோச்சாரபலனை அடிப்படையாக வைத்து சொல்லுகிறேன். இது நடக்கலாம் அல்லது நடக்காமாலும் இருக்கலாம். அவர் அவர்களின் சொந்த ஜாதகத்தை பார்த்து தான் உண்மையான விபரம் சொல்லலாம்.

ரிஷபராசியினர்க்கு தற்பொழுது விபத்துக்கள் ஏற்படுவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. ஏற்கனவே விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது இனிமேலும் விபத்து ஏற்படலாம். உங்களின் வீட்டில் உள்ள படியில் இருந்துகூட கீழே விழுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

உடல்நிலையில் வாயுக்கள் தொந்தரவு அதிகமாக இருக்கும். திடீர் நெஞ்சுவலி ஏற்படுவதற்க்கு வாய்ப்பு உண்டு. அது நெஞ்சுவலி இதயத்தால் வருவது இல்லை வாயுவால் வரும். வாயுவை போக்க சித்தமருத்துவத்தில் பரிந்துரைக்கும் விசயங்களை எடுத்துக்கொள்ளலாம். 

நீங்கள் திருமணம் செய்து இருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லை என்றால் உங்களின் வீட்டில் உள்ளவர்கள் உங்களுக்கு பிரச்சினை கொடுப்பார்கள்.

பெரும்பாலான திருமண தம்பதிகள் தற்பொழுது பிரிந்து தான் இருப்பீர்கள். இது நிரந்தரம் என்று நினைக்கவேண்டாம். கோள்களின் விளையாட்டால் அப்படி நடந்து இருக்கின்றது. விரைவில் ஒன்று சேரலாம். தற்பொழுது பிரிந்து இருப்பது நல்லது தான்.

ஒரு சந்நியாச வாழ்வு தற்பொழுது நீங்கள் வாழவேண்டும் என்பதால் அதன் அடிப்படையில் உங்களுக்கு நடந்துக்கொண்டு இருக்கும். அனைத்திலும் பொறுமையாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல காலம் வரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லமுடியும்.

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது நல்லது. சனிக்கிழமை அன்று விரதம் இருப்பதும் உங்களுக்கு நன்மை பயக்கும். உணவில் எச்சரிக்கையோடு இருப்பதும் நல்லது.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 12, 2018

சிம்மராசி


வணக்கம்!
          நிறைய சிம்மராசி நண்பர்களை பார்த்து இருக்கிறேன். இவர்களுக்கு கேது பகவான் கொஞ்சம் படுத்தி எடுக்கிறார் என்பதும் தெரிகிறது. நிறைய பேர்களுக்கு திருமணம் என்பது நடக்காமல் இருக்கின்றது. அப்படியே திருமணம் நடைபெற்றாலும் அவர்களுக்குள் சண்டை சச்சரவாகவே சென்றுக்கொண்டு இருக்கின்றது.

நான் பார்த்தவரையில் நிறைய நண்பர்கள் திருமணத்திற்க்கு போராட்டம் நடத்தி அதன் பிறகு திருமண வாழ்க்கை அமைகின்றது. ஒரு சிலர் அரசாங்க வேலை கிடைக்கவேண்டும் அதன்பிறகு திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று இருப்பார்கள். இதனாலேயே திருமணம் நடைபெறாமல் சென்றுக்கொண்டு இருக்கும்.

சிம்மராசி உடையவர்கள் நிறைய பேர்கள் அரசாங்க வேலையில் இருப்பார்கள். இவர்களின் துணைவர்களுக்கு இவர்களுக்கும் ஏதோ வாழ்கிறோம் என்பது போலவே இருப்பார்கள். ஒரு இணக்கமான வாழ்க்கை என்பதை வாழவே மாட்டார்கள்.

மனது என்பது தான் வாழ்க்கை. இராசிக்கு ஏழாவது இடமாக சனிவீடு வருவதாலும் இவர்களுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை அமையலாம். சனியும் சூரியனும் ஒத்தவராது என்பதால் இரண்டும் சண்டை சச்சரவுகளிலேயே ஈடுபடலாம்.

சிம்மராசிக்கு கேது எந்த வீட்டில் இருக்கின்றார் என்பதையும் கொஞ்சம் பார்த்துக்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கேது எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதையும் பார்த்துக்கொள்வது நல்லது. 

சிம்மராசிக்கு வரன் வந்தால் உடனே திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள். சிம்மராசியை வீட்டில் வைத்துக்கொண்டு பார்க்கலாம் பார்க்கலாம் என்று இருந்தால் திருமணமே நடக்காமல் கூட செல்வதற்க்கு வாய்ப்பு இருப்பதால் இதனை உங்களிடம் சொல்லுகிறேன்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் என்னை சந்திப்பவர்கள் தொடர்புக்கொள்ளலாம். விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவஅம்மன்(சண்டி) யாகம்


வணக்கம்!
          இந்த வாரத்தில் அம்மன் பூஜை நடத்தப்படும். விரைவில்  நவஅம்மன் (சண்டி)பொது யாகம் நடைபெறஉள்ளது. நவஅம்மன்(சண்டி) பொதுயாகத்திற்க்கு இன்று முதல் காணிக்கையும் மற்றும் அவர்களின் ஜாதகத்தையும் அனுப்பி வைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்கலாம்.

ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக இந்த யாகம் செய்யப்படுகின்றது. ஒன்பது நாட்களிலும் விஷேசமாக இந்த யாகம் செய்யப்படுவதால் உங்களின் அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்து உங்களின் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

நவஅம்மன் யாகம் ஒருவர் செய்தால் அது அதிக பொருட்செலவுக்கு செய்யப்படவேண்டும். ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்வதால் நிறைய செலவு ஏற்படும். நவஅம்மன்(சண்டி) பொது யாகத்தில் கலந்துக்கொண்டு சிறப்பான பலனை பெறலாம்.

நவஅம்மன்(சண்டி) பொது யாகம் கடந்த முறை செய்து மூன்று மாதங்களுக்கு மேல் சென்றுவிட்டது. தற்பொழுது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறேன். இதற்கு உங்களுக்கு கொடுக்கும் அவகாசம் பதினைந்து நாட்கள் என்று தீர்மானித்து இருக்கிறேன். அதற்குள் நீங்கள் செலுத்தி இதில் பங்குபெற்றுக்கொள்ளலாம். 

கடைசி நேரத்தில் அனுப்பிக்கொள்வதைவிட முன்கூட்டியே தங்களின் பங்களிப்பை அனுப்ப அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தங்களின் விவரத்தை அனுப்பும்பொழுது தங்களின் வாட்ஸ்அப் எண்ணை மறக்காமல் அனுப்பி வைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வங்கி கணக்கு விபரம் 

KVB Bank :  Karur Vysya Bank 
Branch : Pattukkottai 
Name : RAJESH S 
Account Type : Savings account.
A/C Number : 1623155000063470
IFSC Code : KVBL0001623

தொடர்புக்கு :  9551155800, 8940773309   
What'sApp Number: 9551155800 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 11, 2018

குருகிரகம் மறைவுஸ்தானம்


வணக்கம்!
          உங்களுக்கு தந்தை அல்லது தாத்தா மற்றும் உங்களின் முன்ஜென்மத்தில் ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அல்லது கோவில்கள் சம்பந்தப்பட்ட விசயத்தில் பிரச்சினை கொடுத்து இருந்தால் உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் மறைந்து அமர்ந்துவிடும். மறைவுஸ்தானத்தில் குரு அமர்ந்து விடுகின்றது.

குரு மறைவுஸ்தானத்தில் அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகர்களுக்கு இந்த ஜென்மத்தில் நிறைய தடங்கல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடைபெறாமல் போய்விடுகின்றது அல்லது திருமணம் முப்பதைந்து வயதிற்க்கு மேல் நடைபெறுகின்றது.

முப்பது வயதிற்க்கு மேல் திருமணம் நடைபெறாமல் இருந்தால் அவர்களுக்கு தான் தெரியும் அது எப்படிப்பட்ட கொடுமையான ஒரு வாழ்க்கை என்பது தெரியும். நம்ம சமுதாயத்தில் ஒரு ஆளை பார்த்தவுடன் கேட்கும் கேள்வியாக இருப்பது உங்களுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதா என்று இருக்கும். திருமணம் முடிந்துவிட்டால் அடுத்த கேள்வி உங்களுக்கு குழந்தை இருக்கின்றதா இது இரண்டும் முடிந்துவிட்டால் நீங்கள் இந்த பூமியில் சாதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 

பேசுவதற்க்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் இதனை தான் மக்கள் கேட்கும் கேள்வியாக இருக்கின்றது. ஆன்மீகத்திற்க்கு ஒரு எதிர்ப்பு காட்டினால் அவன் தொலைந்தான் என்று தான் அர்த்தம். ஆன்மீகத்திற்க்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள்.

குரு கிரகம் மறைந்துவிட்டால் உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஒரு சந்தேகம் வந்துவிடும். ஆன்மீகத்தின் மீது சந்தேகம் என்றால் ஆன்மீகம் பிடிக்காமல் வெறுப்பை கூட காட்டதொடங்கும். நம்முடைய ஜாதகத்தில் குரு மறைந்து கிடைக்கின்றது அதனால் தான் நமக்கு இப்படிப்பட்ட பிரச்சினை வருகின்றது என்று எண்ணிக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் நடக்கவேண்டும்.

நிறைய ஆன்மீகத்திற்க்கு என்று சலிப்பு பார்க்காமல் செய்யவேண்டும். கண்டிப்பாக ஆன்மீகவாதிகளுக்கும் நீங்கள் உதவி செய்யும்பொழுது மட்டுமே இந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 10, 2018

தெய்வ குற்றம்


ணக்கம்!
         தெய்வகுற்றம் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஏதாவது ஒரு கோவிலுக்கு நாம் செய்யவேண்டியதை செய்யாமல் விட்டுவிட்டால் அல்லது ஒரு கோவிலுக்கு எதிராக நாம் களம் இறங்கி அந்த கோவிலை கட்டவிடாமல் தடுத்தால் கோவில் திருவிழாக்களை நடத்த விடாமல் செய்தால் தெய்வ குற்றம் ஒரு குடும்பத்திற்க்கு ஏற்படும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு காரணங்களை சாஸ்திரங்கள் விவரித்து சொல்லுகின்றன. சோதிடத்தில் உள்ள தோஷங்கள் மற்றும் நடைமுறையில் ஒருவருக்கு நடக்கும் விசயத்தை நம்முடைய அனுபவத்தோடு வைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லுவது உண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வந்தால் அவர்களுக்கு தெய்வ குற்றம் இருக்கின்றது என்று அர்த்தம். மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும் நிலைமை ஏற்படும். ஒரு சிலருக்கு என்ன நோய் என்றே தெரியாமல் அதற்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கு எல்லாம் தெய்வகுற்றம் இருக்கின்றது என்று அர்த்தம்.

தெய்வகுற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வந்தாலும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு ஒருவர் மருத்துவமனையிலேயே இருக்கின்றார் என்றால் அவர்க்கு தெய்வகுற்றம் இருக்கின்றது என்று அர்த்தம். ஒரே நோய்க்கு தொடர்ச்சியாக ஆண்டு கணக்கில் மருத்துவம் பார்த்து வந்தாலும் அதுவும் தெய்வ குற்றம் என்று தான் அர்த்தம்.

ஒரு சிலர் கோவிலுக்கு செல்லாமலே இருப்பார்கள் அவர்களுக்கு கூட இப்படிப்பட்ட தோஷம் எல்லாம் வருவதற்க்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஜாதகர்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 9, 2018

ஆன்மீகம்


வணக்கம்!
         நண்பர் ஒருவரின் கேள்வி ஒன்றை கேட்டுருந்தார். லாட்டரி நம்பர் என்ன என்பதை ஆன்மீகத்தில் கண்டுபிடித்து சொல்லமுடியுமா என்று கேட்டார். நம்ம நாட்டில் கிடையாது. வெளிநாட்டில் உள்ள லாட்டரி நம்பரை தெரிந்துக்கொள்ள வழி இருக்குமா என்ற கேள்வியாக இருந்தது.

என்னுடைய அனுபவத்தில் நிறைய வேலைகளை செய்து இருக்கிறேன் ஆனால் இதுபோன்ற வேலையை நான் செய்தது கிடையாது. நண்பர் கேட்டார் என்பதற்க்காக கடந்த பத்து நாட்களாக நிறைய ஆராய்ச்சி செய்து பார்த்தேன். நிறைய வேலைப்பளுக்கு இடையே இதனையும் செய்துக்கொண்டு இருந்தேன்.

ஒன்றும் கிடைக்கவில்லை. அம்மனை வைத்து நிறைய முயற்சி செய்து இதனை கண்டுபிடிக்கவேண்டும் என்று நானும் போராடி பார்த்தேன். இதற்கு தகுதி இன்னமும் எனக்கு வரவில்லை என்றே இந்த நேரத்தில் தோன்றுகிறது.

உங்களிடம் இதனை சொல்லுவதற்க்கு காரணம் என்ன என்றால் நிறைய இடத்தில் வெளியில் தெரியாத சாமியார்கள் இப்படிப்பட்ட வேலையை சரியாக செய்துவிடுகின்றனர். அவர்களை பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை என்று சொன்னார்கள்.

ஆன்மீகத்தில் லாட்டரி எண்களை கண்டுபிடிப்பது உண்டு. நிறைய பேர்கள் என்னிடம் இதனைப்பற்றி தெரிவித்து இருக்கின்றனர். இதனை கண்டுபிடிக்கின்றனர் ஆனால் அவர்களைப்பற்றி விபரம் தெரியவில்லை என்கின்றனர். ஆன்மீகத்தில் இது சாத்தியப்படிக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 8, 2018

பெண்களுக்கான பதிவு


வணக்கம்!
          ஒரு பெண் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்க்கு புகுந்தாலும் அவர் தன்னுடைய அப்பா வீட்டின் குலதெய்வத்தை மறக்ககூடாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்தை தொடர்ச்சியாக வணங்கிக்கொண்டே வரவேண்டும்.

புகுந்த வீட்டின் குலதெய்வத்தின் தெய்வத்தையும் வணங்கிக்கொண்டு பிறந்த வீட்டின் குலதெய்வத்தின் தெய்வத்தையும் வணங்கிக்கொண்டு வந்தால் அவரின் வாழ்க்கை சிறந்து விளங்கும். ஒரு பெண்ணிற்க்கு மட்டும் இரண்டு குலதெய்வம் என்று சொல்லுவார்கள். 

பல குடும்பங்களில் பெண் பிறந்த வீட்டின் குலதெய்வம் நல்ல உதவியாக இருக்கின்றது. குலதெய்வ வழிபாட்டில் பிறந்த பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குலதெய்வ பூஜையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய சொல்லுவார்கள்.

புகுந்த வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினையும் பிறந்தவீட்டின் குலதெய்வம் நிறைவற்றி வருகின்றது என்பது பலரின் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கின்றது. பிறந்த பெண்களுக்கு அதிக பிரச்சினை வருகின்றது என்றால் உடனே பிறந்த வீட்டின் குலதெய்வத்தின் வணங்கி வந்தால் அந்த பிரச்சினை தீரும்.

பிறந்த வீட்டின் குலதெய்வத்தை இதுவரை வணங்காமல் நீங்கள் இருந்தால் ஒரு முறை சென்று வணங்கி வாருங்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க்கு பூஜையின் பொழுது காணிக்கை செலுத்தி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 7, 2018

கர்மாவை எளிதாக எப்படி அறிவது?


வணக்கம்!
          ஒரு நண்பர் கேள்வி கேட்டார். கர்மா என்பதை சாதாரணநபர்கள் உடனே உணர்ந்துக்கொள்வது எப்படி என்று கேட்டார்.

உலக முழுவதும் உங்களுக்கு பிரச்சினை என்று வந்தாலே அது கர்மாவை தான் காட்டுவார்கள். இவர் எளிதாக புரிந்துக்கொள்வது எப்படி என்று கேட்டு இருக்கின்றார். ஒரு சின்ன பிரச்சினை வந்தாலே அது கர்மா என்று தான் சொல்லுவார்கள். உண்மையாக அப்படி இல்லை. 

கர்மாவை எளிதாக புரிந்துக்கொள்வதற்க்கு ஒரு வழியை சொல்லுகிறேன். ஆண்களாக இருந்தால் அவர்களின் மனைவியின் நகையை வாங்கி அடகு வைத்து விடுங்கள் அல்லது விற்றுவிடுங்கள். உங்களின் மனைவியின் வீட்டில் போட்டு நகையாக இருந்தால் நல்லது.

கொஞ்சநாள்கள் அந்த நகையை திருப்பிக்கொடுக்காமல் இருந்தால் போதும். கர்மா என்றால் என்ன என்று உங்களுக்கு புரியும். நீங்கள் நகையை அடகு வைக்கிறேன் என்று நீங்கள் உங்களின் மனைவியிடம் கேட்கும்பொழுதே கர்மா என்றால் என்ன என்பது புரியும்.

ஒவ்வொருநாளும் எப்படிப்பட்ட பிரச்சினை எல்லாம் வரும் என்பது அந்த சிவனுக்கு கூட தெரியாது. நீங்கள் நினைக்காதா பிரச்சினை எலலாம் வரும். நீங்கள் இந்த நகையை திருப்பிக்கொடுக்கும்பொழுது தான் கர்மா உங்களை விட்டுவிலகும். கர்மாவைப்பற்றி தெரிந்துக்கொள்ள இது ஒரு எளிமையான வழி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நைவேத்தியம்


 ணக்கம்!
         கடவுளுக்கு பயன்படுத்தும் நைவேத்தியத்தில் அதிக கவனம் செலுத்தி தயார் செய்யவேண்டும். கடவுள் படைக்கும் நைவேத்தியம் என்பது மிகவும் சுத்தமாக தயார் செய்யவேண்டும். நைவேத்தியம் தயார் செய்யும் நபர் முதலில் நன்றாக குளித்துவிட்டு அதன்பிறகு சமைக்க ஆரம்பிக்கவேண்டும்.

நைவேத்தியம் தயார் செய்யும் வீட்டையும் சுத்தமாக தயார் செய்த பிறகு தான் சமைக்க ஆரம்பிக்கவேண்டும். கடவுளுக்கு என்று நாம் படைக்கும் உணவு என்பது மிகவும் புனிதமானது அதனை நாம் சுத்தமாக தயார் செய்யும்பொழுது கடவுள் நமக்கு உடனே பலனை கொடுப்பார்.

ஒரு சில நேரத்தில் சமைக்கும் பொழுது வாயில் மற்றும் மூக்கில் துணியை அணிந்துக்கொண்டு அதனை நுகராமல் தயார் செய்வார்கள். இப்படி செய்யமுடியவில்லை என்றாலும் நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக தயார் செய்யுங்கள்.

நாம் என்ன தான் மந்திரங்களை சொன்னாலும் அது எல்லாம் கூட ஒரு சில நேரத்தில் தவறாக பயன்படும் விதத்தில் நடந்துவிடும் ஆனால் நாம் படைக்கும் நைவேத்தியத்தை கண்டிப்பாக இறைவன் ஏற்பார்.

எந்த தெய்வத்திற்க்கு எப்படிப்பட்ட நைவேத்தியத்தை படைக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல நீங்கள் தயார் செய்து படைத்தால் நன்றாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 6, 2018

கெட்டகாலத்தில் செய்யவேண்டியவை


வணக்கம்!
         ஒருவருக்கு கெட்ட நேரம் வந்தால் அவர்களின் மனதை தான் முதலில் ஆக்கரமிப்பு செய்து அதனை வீண் செய்யும். மனதை போட்டு குழப்பிவிட்டுவிடும். மனஅமைதியை இழந்து கஷ்டப்படுவார்கள். கெட்ட காலத்தில் நமது நண்பர்கள் பேசுவதை நான் பார்த்து இருக்கிறேன். எதிலும் நம்பிக்கை என்பதே இருக்கவே இருக்காது.

கெட்ட நேரம் வந்தால் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை இழந்தாலும் உங்களின் மேல் உள்ள நம்பிக்கையை மட்டும் இழந்துவிடகூடாது. உங்களின் மீது நம்பிக்கை இல்லை என்றால் பிறகு எப்படி கடவுள் மேல் நம்பிக்கை வைக்கமுடியும்.

கெட்டகாலத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் எண்ணம் என்பது நல்லதாகவே இருக்காது. தீய எண்ணங்களாகவே இருக்கின்றன. கெட்டகாலம் வந்துவிட்டது இனி அமைதியாக இருந்து அனைத்தையும் மறுபடியும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். அதன்பிறகு ஒவ்வொன்றாக நாம் சாதித்துக்கொள்ளலாம்.

கெட்டகாலம் வரும்பொழுது நீங்கள் கோவிலுக்கு செல்வதை விட மனதிற்க்கு அமைதி தரும் இடத்திற்க்கு நீங்கள் சென்று அந்த அமைதியை அனுபவித்துவிட்டு வருவது நல்லது அதன்பிறகு கோவிலுக்கு எல்லாம் செல்லலாம்.

உங்களுக்கு பிடித்த இடம் என்று ஒரு இடம் இருக்கும் அந்த இடத்திற்க்கு அடிக்கடி சென்று வாருங்கள். உங்களுக்குள் நல்ல நம்பிக்கை வந்து நீங்கள் சாதிக்கலாம். மனமகிழ்ச்சி வரும்பொழுது தான் அனைத்து காரியமும் நடக்கிறது என்பதை உணர்ந்துக்கொண்டு செயல்பட்டால் எளிதில் அனைத்தையும் சாதித்துவிடலாம்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 5, 2018

செலவு வரும் வழி


வணக்கம்!
          நமக்கு வரும் சின்ன சின்ன செலவுகளை எல்லாம் குறைத்துக்கொண்டாலே போதும் உங்களுக்கு பெரிய அளவில் பணக்காரர்ரகளாக உருவாதற்க்கு காரணமாக இருக்கும். சின்ன சின்ன செலவுகளை குறைப்பதற்க்கு பதில் சின்ன செலவுகள் எப்படி வருகின்றது என்பதை ஜாதகத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

ஜாதகத்தில் உங்களுக்கு கோச்சாரபடியாகவே ஒரு சில கிரகங்கள் இராசிக்கு வரும்பொழுது அல்லது விரைய வீட்டிற்க்கு செல்லும்பொழுது அது செலவை வைத்துவிடும். சில நாட்களே தங்கும் செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு சின்ன செலவுகளை வைத்துவிடும்.

பெரும்பாலும் இது அடிக்கடி மருத்துவமனைக்கு செலவு வைத்துவிடும் அல்லது உறவினர்களுக்கு ஏதாவது வகையில் செலவு செய்யவைக்கும். தேவையற்ற செலவுகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

கோச்சாரபலனின் நீண்டநாள் தங்கும் இராகு கேது குரு மற்றும் சனி போன்ற கிரகங்களும் செலவை வைக்கும் அது உங்களுக்கு அதிகபடியான மருத்துவமனை செலவை வைக்கும். தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு சென்று வருவதற்க்கு வாய்ப்பை உருவாக்கி விடும்.

மேலே சொன்ன விசயங்களை உற்றுநோக்கிக்கொண்டு அதற்கு தகுந்தார்போல உங்களின் வழிபாட்டையும் வைத்துக்கொண்டு வந்தால் ஒரளவு செலவை குறைத்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு