Followers

Monday, August 24, 2020

இராகு & கேது பெயர்ச்சி பரிகாரம் யாகம்

 

வணக்கம்!

         எதிர்வரும் இராகு & கேது பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு பரிகார யாகம் நடைபெறும். ஒவ்வொருவரும் இந்த இராகு கேது பெயர்ச்சிக்கு தங்களின் பெயர் நட்சத்திரம் மற்றும் இராசியை அனுப்பி வைத்து அத்தோடு உங்களுக்கு விருப்பமான கட்டணத்தை செலுத்தி வைக்கலாம். இராகு கேது பெயர்ச்சி பலன்கள்  விரைவில் தருகிறேன்.


Google Pay

Rajeshsubbbu

8940773309

வங்கி கணக்கு விபரம் 

KVB Bank :  Karur Vysya Bank

 Branch : Pattukkottai 

Name : RAJESH S 

Account Type : Savings account. 

A/C Number : 1623155000063470


அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Wednesday, August 5, 2020

நினைத்ததை அடைய


வணக்கம்!
         ஒருவர் தன்னுடைய ஜாதகத்தில் ஒரு கிரகத்தின் சார்ப்பில் வாழ்ந்துவிடலாமா என்று பார்த்தால் தாராளமாக வாழ்ந்துவிடலாம் என்று சொல்லலாம். ஒரு கிரகத்தினை மட்டுமே சார்ந்து வாழ்வதற்க்கு என்ன தேவை என்று கேட்கலாம். 

ஒரு நோக்கம் மட்டும் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒரு நபர்க்கு எனக்கு இப்படி தான் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அவரின் ஆசைக்கு தகுந்த படி கிரக நிலை அவரின் ஜாதகத்தில் இல்லை என்றால் அவர் ஒரு கிரகத்தின் காரத்துவத்தை சார்ந்து வாழ்ந்து அவரின் ஆசையை தீர்த்துக்கொள்ளலாம்.

ஜாதகத்தில் உள்ள எல்லா கிரக நிலையும் வேலை செய்தாலும் ஒரு கிரகத்தின் உள்ள காரத்துவத்தை மட்டும் அதிகமாக நாடி அதில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார் என்றால் அவர்க்கு ஒரு சில காலத்திற்க்கு பிறகு அந்த கிரகத்தின் காரத்துவம் அதிகமாக வேலை செய்ய தொடங்கிவிடும். இது சாத்தியப்படுமா என்றால் கண்டிப்பாக இது சாத்தியப்படும்.

ஒருவருக்கு நான் எதிர்காலத்தில் இப்படி தான் வாழவேண்டும் என்று நினைத்தால் அவர் எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்படுவதையும் பார்த்தால் அது ஒரு கிரகத்தின் காரத்துவத்தை தான் காட்டும் அப்பொழுது அவரின் ஆசை ஒரு கிரகத்தோடு சம்பந்தப்படுகின்றது. இவர் ஆசைப்படும் கிரகத்தின் காரத்துவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அதற்கு சமப்பந்தப்படி தன்னுடைய அன்றாட நிகழ்வை மாற்றிக்கொண்டால் அவர் நினைத்தபடி எதிர்காலத்தில் மாறமுடியும்.

ஒருவர் தன்னை முழுமையாக அந்த கிரகத்திற்க்குள் மாற்றிக்கொள்வதற்க்கு நாட்கள் எடுத்தாலும் ஒரு சில காலக்கட்டத்தில் அவர் நினைத்த காரியத்தை அடைந்துவிடலாம். அவர் நினைத்த காரியத்தின் காரத்துவம் உடைய கிரகத்தின் வேலை நடந்து இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 4, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
          ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதமாகவே இருக்கும். ஆடி மாதத்தில் பெரும்பாலான கோவில்கள் அனைத்திலும் திருவிழா இருக்கும். கொரோனா இருப்பதால் ஆடி மாதத்தில் களை இழந்து காணப்படுகின்றது. வரும் காலத்தில் நல்லபடியாக இந்த உலகத்திற்க்கு அமையும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

நமது அம்மன் கோவிலில் எந்த காரணத்திலும் நாம் அம்மன் பூஜையை நிறுத்தவில்லை. அம்மன் அருளால் அது தடையின்றி நடைபெற்று வருகின்றது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஜாதககதம்பம் படிக்கும் அனைவரையும் ஒரு சிறிய தொகையை அனுப்ப சொல்லுவோம். சந்தா பணம் போல் அனுப்ப சொல்லி அதில் வரும் பணத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் அம்மன் பூஜையை சிறப்பாக செய்வது உண்டு.

ஒவ்வொரு மாதமும் ஐந்த தேதிக்குள் அம்மன் பூஜையை செய்வது உண்டு. இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் கால அவகாசம் எடுத்து இருக்கிறோம். விரைவில் அம்மன் பூஜையை நடத்த இருக்கிறோம். 

அனைவரும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தி வையுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் அம்மன் நல்ல அருளை தரும் என்பதால் அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 3, 2020

இனிய தொடக்கம்


வணக்கம்!
           நீண்ட நாள்களுக்கு பிறகு ஜாதககதம்பத்தில் பதிவுகளை தருகிறேன். பதிவுகள் கொடுக்காமல் போனதற்க்கு காரணம் வீடியோ பதிவுகள் மட்டும் வருவது அல்ல நமது அம்மன் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட காரணத்தால் பதிவுகளை உங்களுக்கு கொடுக்கமுடியவில்லை. இனிமேல் தினமும் ஜாதககதம்பத்திலும் எழுத முயற்சி செய்கிறேன்.

கொரோனா நேரம் இது என்பதால் அனைவரும் பாதுகாப்பாேடு இருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அனைவருக்கும் கொஞ்சம் தடைபட்டு இருக்கலாம் அதற்க்காக மன உளைச்சலில் ஈடுபட்டு கொண்டு இருக்காமல் இனி வரும் காலம் அனைத்தும் நல்லதாக அமையம் என்று இறைவனிடம் வேண்டுங்கள் நானும் அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

கொரோனா நேரம் என்று நான் சும்மா அமர்ந்துவிடாமல் இந்த நேரத்தில் தொடர்ச்சியாக பூஜைகளை செய்துக்கொண்டே இருக்கிறேன். எவ்வளவே இடர்பாடுகள் வந்தாலும் அதனை எல்லாம் சமாளித்து ஆன்மீகபணியை செய்துக்கொண்டே இருக்கிறேன். நீங்களும் ஆன்மீகத்தில் உள்ள வேலைகளை தொய்வில்லாமல் செய்து வாருங்கள். 

எப்படிபட்ட சோதனை காலத்திலும் நான் ஆன்மீகத்தை விடவில்லை என்ற ஒரு எண்ணம் இருந்தால் அது உங்களை வழி நடத்தி செல்லும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு