Followers

Tuesday, December 31, 2019

நன்றி


வணக்கம்!
         ஒவ்வொரு ஆண்டும் முடியும் தருவாயில் நாம் நினைப்பது இந்த வருடத்தோடு அனைத்து பிரச்சினையும் முடிவடைந்து அடுத்த ஆண்டு நல்லதாக அமையவேண்டும் என்று நினைப்பது ஆனால் ஒவ்வொரு வருடமும் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு வருடம் பிறக்கும்பொழுதும் இந்த வருடம் நன்றாக அமையவேண்டும் என்று பிராத்தனை செய்வது உண்டு.

நாம் என்ன தான் பிராத்தனை செய்தாலும் மேலும் மேலும் பிரச்சினைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். பிரச்சினைகளை கண்டு நாம் அஞ்சாமல் இதனை எல்லாம் நான் கடந்துவிடுவேன் என்று செயல்படும்பொழுது மட்டுமே அனைத்திலும் வெற்றி பெறமுடியும். ஒரு ஆன்மீகவாதியாக இருக்கும் நபர்களுக்கு நிறைய பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் நிலையை இறைவன் கொடுத்துக்கொண்டே இருப்பான்.

இறைவன் பிரச்சினைகளை கொடுத்தாலும் நாம் அதனை எதிர்க்கொண்டு செயல்படும்பொழுது மட்டுமே அனைத்திலும் எளிதாக கடந்துச்செல்லும் மனபக்குவம் வரும். எனக்கு எல்லாம் பார்த்தால் அனைத்தும் பெரிய சவாலாகவே அமையும் இருந்தாலும் நான் அனைத்தையும் வென்று செயல்பட்டுக்கொண்டே இருக்கிறேன். நீங்களும் அனைத்தையும் எதிர்க்கொண்டு செயல்படுவேன் என்ற நிலைப்பாட்டை இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த வருடம் முழுவதும் என்னால் முடிந்த பதிவுகளை தந்து இருக்கிறேன். நிறைய பூஜைகளை உங்களுக்காக செய்துக்கொடுத்து இருக்கிறேன். நீங்களும் நல்ல ஆதரவை எனக்கு கொடுத்து இருக்கின்றீர்கள். அம்மன் கோவில் கட்டுவதற்க்கும் ஆதரவை கொடுத்து இருக்கின்றீர்கள். என்னுடைய சேவை தொடருவதற்க்கு நீங்கள் உறுதுணையாக இருந்து இருக்கின்றீர்கள் இதற்கு அனைத்திற்க்கும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அனைவருக்கும் அனைத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி.

வருகின்ற ஆங்கில ஆண்டிலும் நிறைய பதிவுகள் தரவேண்டும். புதியதாக கட்டண பதிவு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நீண்ட நாள்களாக யூடிப் பதிவை தரவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது அதனையும் செயல்படுத்தவேண்டும் அதற்கும் நீங்கள் ஆதரவை தரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 29, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள். 

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.

விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.
மதுரையை சேர்ந்த திரு முருகன் அவர்கள். 

வழக்கம்போல்                             திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்   
ராஜேஷ்சுப்பு

Friday, December 27, 2019

சிறப்பு கட்டண பதிவு 4


வணக்கம்!
          ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருப்பது காமம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபட்டவுடன் இது பெரிய அளவில் பிரச்சினையை கிளப்பிவிடும். காமத்தின் வேகம் அதிகரிக்க தொடங்கிவிடும். இதனை சரி செய்துக்கொண்டு ஆன்மீகத்தில் மேலே வருவது ஒரு போராட்டமாகவே இருக்கின்றது.

பல சாமியார்கள் வீணாக போவதற்க்கும் இது தான் பிரச்சினையாகவே இருக்கின்றது. ஆன்மீகத்தில் ஈடுபடுவர்கள் பலர் இளைய வயதில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் இவர்களுக்கு இன்னமும் அதிகமாகவே இருக்கின்றன. பல இளைஞர்கள் என்னிடம் இதனை தெரிவித்து இருக்கின்றனர். காமத்தை சமாளிக்கும் விதத்தை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டு இருக்கின்றனர்.

பலருடைய ஆன்மீக தாகம் சரியாகவே இருக்கின்றது. ஆன்மீகத்தில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கின்றனர். காமம் ஒரு இடையூறாகவே கருதுகின்றனர். என்னால் முடிந்தளவுக்கு ஒவ்வொருவருக்கும் சரி செய்யும் விதத்தை சொல்லி கொடுத்து இருக்கிறேன். இன்னமும் பல கருத்துக்களை இதில் வைக்கவேண்டும்.



ஒரு சிலர் தியானத்தில் ஈடுபட்டால் காமத்தின் வேகம் குறைந்துவிடும் என்பார்கள். இது அனைவருக்கும் நடைபெறும் என்று சொல்லிவிடமுடியாது. ஒரு சிலருக்கு இது நடக்கும் பலருக்கு நடக்காமல் இது சென்றுவிடும். நீங்கள் தியானத்தில் ஈடுபட்டு இது குறைகின்றது என்றால் இதனை செய்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு உடலுக்கும் தகுந்தமாதிரியாகவே இதனை வேகம் இருக்கும் அதனையும் நாம் பார்த்த சரி செய்யவேண்டும்.

ஆன்மீகத்தில் ஈடுபடும் நமது நண்பர்களுக்கு நமது ஆசி இருக்கும் இதனை வைத்து நீங்கள் சரியான இலக்கை நோக்கி நடக்கமுடியும். உங்களின் உடலையும் சரி செய்யும் ஒரு சில பயிற்சிகளையும் நாம் கட்டண பதிவில் சொல்ல இருக்கிறோம். உடனே கட்டண பதிவில் சேர்ந்துக்கொள்ளுங்கள்.

கட்டண பதிவில் சேர முடியாத நண்பர்கள் தங்களின் ஆன்மீக பயணத்தை நிறைய கோவிலுக்கு சென்று வாருங்கள். என்னோடு கோவிலுக்கு வரவேண்டும் என்று இருப்பவர்களுக்கும் என்னை தொடர்புக்கொண்டு அதற்குரிய ஏற்பாட்டை ஏற்படுத்தி சென்று வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 25, 2019

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
                 

         
இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 24, 2019

சிறப்பு கட்டண பதிவு 3


வணக்கம்!
          ஒருவரின் வாழ்வில் நிறைய முன்னேற்றங்களை கொடுக்ககூடியது அவர்களுக்கு நடைபெறும் தசாவாக  இருக்கமுடியும். ஒரு நீண்ட நெடிய வருடங்கள் அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்துக்கொடுக்ககூடிய நிகழ்வு நடைபெறும் என்றால் அதற்க்கு அவர்களின் தசா தான் மிக முக்கிய கிரகமாக அமைகின்றன. நல்லதை கொடுக்ககூடிய கிரகமாக இருந்து தசா நடைபெற்றால் அற்புதமான ஒரு வாழ்க்கையை கொடுத்துவிடும்.

ஒருவரின் வாழ்வில் நிறைய கஷ்டங்களை கொடுப்பதும் தசாவாகவே இருக்கமுடியும். ஒரு சில சிக்கலான தசாவாக அமைந்துவிட்டால் அது பெரிய கஷ்டத்தை கொடுத்துவிடும். அவர் நீண்ட நெடிய வருடம் பிரச்சினையிலேயே இருந்துக்கொண்டு இருப்பார். நாம் அக்கம் பக்கம் பார்த்தாலே நமக்கு தெரிய வரும் ஒருவர் நன்றாக இருப்பார். ஒருவர் தொட்டது அனைத்தும் வீணாகபோய் கடுமையான பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இருப்பார்.

கிரகங்கள் அமையும் விதத்தை வைத்து ஒவ்வொரு பலனையும் நாம் சொல்லிக்கொண்டு இருப்போம். மறைவுஸ்தானத்தில் ஒரு கிரகம் அமைந்தால் அந்த கிரகம் நமக்கு கெடுதலை கொடுக்கும் என்று சொல்லுவோம். உண்மையில் நடைமுறையில் ஒருவருக்கு மறைவுஸ்தானத்தில் இருந்து ஒரு கிரகம் தசா நடத்தினால் அவர் பொருள் ஈட்டும் வேலையில் அமர்ந்து பெரியளவில் சம்பாதித்துவிடுவார்.

ஒவ்வொருவரின் ஜாதகத்திற்க்கும் தகுந்தமாதிரி கிரகங்கள் வேலை செய்யும். நாம் கணிப்பதும் அவர் அவர்களின் ஜாதகத்தையும் பார்த்து நமக்கு கிடைத்த சக்தியையும் வைத்து பலனை சொல்ல ஆரம்பித்தால் வரும் ஜாதகர்க்கு நம்மால் முடிந்தளவுக்கு பலனை துல்லியமாக சொல்லிவிடமுடியும். நம்மிடம் எதுவும் இல்லாமல் விதிகளை வைத்துக்கொண்டு சொன்னால் வரும் ஜாதகருக்கு மனப்பாடம் மாதிரியே விதிகளை வைத்து சொல்லவேண்டி வரும். இந்த காலத்தில் அனைவருக்கும் சோதிடம் தெரிகின்றது என்பதால் இதில் நாம் பெரியதாக சாதிக்கமுடியாது.

ஒருத்தருக்கு ஒரு தசா கெடுதலை தருகின்றது என்றால் அதனை அவர் அந்த தசா முடியும் வரை கஷ்டபட வேண்டும் எனும்பொழுது அது மனிதனுக்கு பெரிய சிக்கலை தருகின்றது. வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் ஒருவர் நீண்ட காலம் கஷ்டபடுகின்றார் என்றால் அவர் வாழ்க்கையை தொலைத்துவிடுவார் என்று சொல்லலாம். இதனை தவிர்ப்பதற்க்கு நாம் செய்யவேண்டியது அந்த கிரகத்தை பலப்படுத்தும் வேலையில் இறங்கவேண்டும். இதனை பல வழிகளும் செய்யலாம் இதனைப்பற்றி ஜாதககதம்பத்திலும் சொல்லிருக்கிறேன் நமது கட்டண பதிவிலும் நிறைய தகவல்களை சொல்ல இருக்கிறோம்.



சிறப்பு கட்டண பதிவுக்கு வருட கட்டணமாக பத்தாயிரம் செலுத்தவேண்டும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 23, 2019

சிறப்பு கட்டண பதிவு 2


வணக்கம்!
          இந்த காலத்தில் பணம் என்பது மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. ஒருவர் இன்றைய காலத்தில் வாழவேண்டும் என்றாலே அதற்க்கு பணம் என்பது காற்று போல தேவைப்படுகின்றது. இத்தகைய பணம் சம்பாதிப்பதில் தான் பலர் செயல்படுகின்றனர். என்னுடைய குரு சொன்ன விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆன்மீகப்பயிற்சி எல்லாம் செய் ஆனால் உன்னுடைய தேவைக்கு தேவையான பணத்தையும் சம்பாதித்துக்கொள் என்றார்.

நான் ஆன்மீகவாதி என்று சொல்லி ஒரு டீ கடையில் கூட டீயை இலவசமாக கொடுக்கமாட்டார்கள். பணம் கொடுத்தால் தான் டீயை கொடுப்பார்கள். ஆன்மீகவாதி என்று ஒருவரிடம் சொல்லி ஒரு காரியத்தை எல்லாம் சாதிக்கமுடியாது அதனால் உன்னுடைய தேவைக்கு பணத்தை நீ சம்பாதித்துக்கொள் என்று சொல்லிருந்தார். எதார்த்த வாழ்க்கைக்கும் இது ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கும்.

நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் விசயத்தில் நாம் ஈடுபட்டால் செயலை செய்தால் தான் நமக்கு பணம் என்பது கிடைக்கும். செயல் என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்தினாலே அந்த இடத்தில் கர்மா என்பது வந்துவிடும். உங்களிடம் இருந்து எந்த ஒரு செயல் நடைபெற்றாலும் அது கர்மாவை சார்ந்துவிடும்.

கர்மா என்ற ஒன்று வந்தால் அது நமக்கு பாவம் புண்ணியம் என்ற கணக்கு வரும். செயலை செய்யாமல் இருக்கமுடியாது. கர்மாவில் நல்ல கர்மா அல்லது கெட்ட கர்மா என்று சொல்லுவார்கள் அல்லவா. நல்ல செயலை செய்யும்பொழுது அது நல்ல கர்மா என்று சொல்லுவார்கள் கெட்ட செயலை செய்யும்பொழுது அது கெட்டகர்மா என்று சொல்லுவார்கள். இதனைப்பற்றி பிறகு பார்க்கலாம்.

நீங்கள் சம்பாதிக்கவேண்டும் என்றாலே அது கர்மா என்ற ஒன்று வந்துவிடும். கர்மா இல்லாமல் சம்பாதிக்கமுடியும் என்பது மிக கடினமான ஒரு விசயமாகவே இருக்கும். இந்த உலகத்தில் ஆன்மீகவாதியாகவும் இருக்க வேண்டும் சம்பாதிக்கவும் வேண்டும் இது எப்படி நடக்கும்?

இதனைப்பற்றியும் நாம் கட்டணசேவையில் நிறைய பார்க்க இருக்கிறோம். உடனே இணைந்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

சிறப்பு கட்டண பதிவில் சேருபவர்கள் கட்டணத்தை செலுத்துங்கள். முதலில் இந்த கட்டண பதிவில் சேரும் நபர்கள் தங்களின் பெயரை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பிவிடுங்கள். ஒரு சிலர் அடுத்தமாதம் செலுத்துகிறேன் என்றனர் அவர்கள் அடுத்த மாதம் செலுத்தலாம். இதில் சேரும் நபர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிடுங்கள். முன்பதிவு என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் இதனை கேட்கிறேன்.  

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 21, 2019

சித்தர்கள் பகுதி 7


வணக்கம்!
         எந்த ஒரு வழியாக இருந்தாலும் சரி அந்த வழியில் நாம் மனதை ஒழுங்காக செலுத்தி பின்பற்றி வரும்பொழுது மட்டுமே சரியான ஒரு பாதையை நீங்கள் வகுக்கமுடியும். எப்படிப்பட்ட மார்க்கத்திற்க்கும் மனது என்பது அடிப்படையான ஒரு கருவி. சித்த வழியில் பின்பற்றி வருபவர்கள் எனக்கு இதனைப்பற்றி சொல்லிருக்கின்றனர்.

என்னுடைய மனது அலைபாயும் ஒரு நிலையில் இல்லாத நேரத்தில் அதாவது அலைபாயுது என்றால் இதனை பின்பற்றலாமா அல்லது விட்டுவிடலாமா என்ற காலத்தில் இருந்தபொழுது அவர்கள் சொன்ன விசயம். மனதை போட்டு அலைபாயவிடகூடாது திடமாக இருக்கவேண்டும் என்றனர். உங்களுக்கு புரியும்படியாக சொல்லுகிறேன்.

நாம் என்ன செய்வோம் என்றால் கொஞ்சநாள்கள் ஒரு வழிபாட்டை செய்வோம். பைரவரை வணங்கி வருகின்றோம் என்றால் அந்த பைரவரை நாம் கடைசி வரை வணங்கிக்கொண்டே வரவேண்டும் அதனை கொஞ்சநாள்கள் பின்பற்றுவது அதன்பிறகு சாய்பாபாவை வணங்குவது என்று ஆரம்பித்தால் அது பிரச்சினையை தான் உங்களுக்கு கொடுக்கும். 

ஒன்றை பிடித்தால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு மனதை அதிலேயே வைத்து பின்பற்றி வரவேண்டும். உலகம் உங்களுக்கு செக் வைக்கும். சாய்பாபாவை நான் வணங்கிவருகிறேன் எனக்கு பணம் எல்லாம் நிறைய வருகின்றது என்று உங்களின் நண்பர் சொல்லுவார் நீனும் இதனை வணங்கு என்று சொல்லுவார் உடனே நீங்கள் அதனை விட்டுவிட்டு சாய்பாபாவிற்க்கு வந்துவிடுவீர்கள். பணம் கொடுப்பது எல்லாம் கடவுளின் வேலை கிடையாது இருந்தாலும் நீங்கள் அதனை நம்ப ஆரம்பிப்பீர்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவனுக்கு அதனை கடைசி வரை பின்பற்றும் மனது இருக்கவேண்டும். நாம் பல தரப்பட்ட சூழ்நிலையில் வாழநேரிடும். உங்களை நோக்கி இந்த உலகம் பல கல்லை வீச ஆரம்பிக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் அதனில் உள்ளே சிக்கிக்கொள்ளாமல் உங்களின் மனது ஆன்மீகத்திலேயே இருக்கவேண்டும்.

நீங்கள் ஆன்மீகத்தை பின்பற்றி வருபவர்களுக்காக இருந்தால் வாழ்நாள் இறுதியிலும் அதனை விடவே கூடாது. அதாவது எப்பேர்பட்ட சூழ்நிலை வந்தாலும் விட்டுவிடகூடாது. நாம் இராகு தசாவில் ஆன்மீகத்தில் வந்திருந்தால் குருதசாவில் நமது எண்ணம் மாற்றத்தை சந்திக்கும் அந்த நேரத்திலும் ஆன்மீகத்தை விடகூடாது. குரு தசாவில் ஆன்மீகத்தில் வந்திருந்தால் சனி தசாவில் மாற்றம் என்பது வரும் அப்பொழுதும் நாம் அதனை விடகூடாது.

சித்தமார்க்கத்திலும் பின்பற்றி வருபவர்கள் அதனை கடைசிவரை பின்பற்றவேண்டும் அதோடு அதனை தேடிச்சென்றுக்கொண்டே இருக்கவேண்டும். நான் அம்மன் உபாசாகராக இருந்தால் நான் அதனோடு இருந்துவிடாமல் மேலும் மேலும் தேடுதலை ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். நான் நிறைய சூழ்நிலையிலும் பின்பற்றி வந்து இருக்கிறேன் ஆனால் என்னுடைய மனது ஆன்மீகத்தை தேடிக்கொண்டே இருக்கின்றது. ஒரு இடத்தில் நின்றுவிடகூடாது மேலும் மேலும் தேடிச்சென்றுக்கொண்டே இருக்கவேண்டும்.

சிறப்பு கட்டண பதிவில் சேருபவர்கள் கட்டணத்தை செலுத்துங்கள். முதலில் இந்த கட்டண பதிவில் சேரும் நபர்கள் தங்களின் பெயரை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பிவிடுங்கள். ஒரு சிலர் அடுத்தமாதம் செலுத்துகிறேன் என்றனர் அவர்கள் அடுத்த மாதம் செலுத்தலாம். இதில் சேரும் நபர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிடுங்கள். முன்பதிவு என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் இதனை கேட்கிறேன். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 19, 2019

சிறப்பு கட்டணபதிவு பகுதி 1

வணக்கம்!
           சிறப்பு கட்டணபதிவு ஏன் என்று ஒரு சிலர் நண்பர்கள் கேட்டனர். இந்த மாதிரியான பதிவை நடத்தி எனக்கு ஏற்படும் செலவினங்களை சமாளிப்பது உண்டு. வருடம் தோறும் இந்த மாதிரியான கட்டண பதிவை நடத்தி என்னுடைய செலவுகளை சமாளிப்பேன். இந்த காரணத்தினால் தான் கட்டணபதிவை தொடங்குகிறேன் வேறு எந்த ஒரு காரணமும் எனக்கு கிடையாது. இதற்க்கு வருடந்தோறும் நமது நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இந்த வருடமும் பல நண்பர்கள் இதில் இணைந்துவிட்டனர். இன்னமும் நிறைய நண்பர்களை எதிர்பார்க்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப்பற்றி உங்களுக்கு தெரியும் இவரின் நடிப்பால் நல்ல திறமை பெற்று விளங்கினார். நடிப்பிற்க்கு ஒரு இலக்கணம் என்று சொல்லுவார்கள். இவரைப்பற்றி சோதிடம் படிப்பவர்களும் இவரின் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து வெளியில் நிறைய சொல்லுவார்கள். சிவாஜி ஜாதகத்தை விட ஒரு சில தெரிந்த ஆன்மீக விசயத்தை பற்றி உங்களிடம் சொல்லுகிறேன்.

சிவாஜி கணேசனின் சொந்த ஊர் சூரக்கோட்டை எனக்கு நன்கு தெரிந்த ஊர். இந்த ஊரில் அவரின் தோட்டத்தில் எங்கள் தஞ்சாவூர் வழக்கபடி வயலில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அவரின் சொந்தநிலத்தில் இந்த கோவில் இருக்கின்றது. இது அவர்க்கு ஒரு பெரிய சக்தியை அவர்க்கு வழங்கி இருக்கின்றது. அவர்க்கு நிறைய திறமைகள் இருந்தாலும் அவர்க்கு என்று வாய்ப்புகளை எல்லாம் கொடுத்து அவரின் புகழை நாடறிய வைத்தது என்பது இந்த பெருமாளின் கோவில் என்று நான் சொல்லுவேன்.

இந்த கோவில் தற்பொழுது வரை அவரின் வீட்டின் அருகில் இருக்கின்றது என்பதை நீங்கள் தஞ்சாவூர் பக்கம் வரும்பொழுது பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். அவருக்கு திறமை இல்லை என்று சொல்லவில்லை அவரை உலகறிய செய்ய வைத்தது இதுவும் ஒன்று என்று சொல்லுகிறேன். ஒவ்வொருவரின் பின்னாலும் இப்படிப்பட்ட தெய்வங்கள் எல்லாம் இருக்கின்றன. 

சூரக்காேட்டையில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவிலும் இருக்கின்றது. இந்த ஊரில் இருப்பவர்களை யாராவது  ஒருவரை வெளியில் நல்ல முறையில் வளர்த்துவிடுவதும் உண்டு. இதுவும் சிவாஜிகணேசனுக்கு ஒரு பெரிய பிளஸ்சாக இருந்தது என்பதை தான் சொல்லுகிறேன்.நீங்கள் ஒருவர் பெரியளவில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவருக்கு பின்னாடி இப்படிப்பட்ட கோவில் இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

நீங்கள் உழைக்கலாம் நிறைய திறமை இருக்கலாம் ஆனால் உங்களுக்கு பின்னாடி இப்படிப்பட்ட தெய்வங்கள் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு பெரியளவில் பிரசித்திபெற்று விளங்கலாம் அப்படி இல்லை என்றால் உங்களின் வளர்ச்சிக்கு பெரிய தடைக்கல் இருக்கும். நிறைய பேர்களின் வளர்ச்சிக்கு பின்னாடி நின்ற தெய்வங்கள் இருக்கின்றன அதனைப்பற்றி பார்க்கலாம். எப்படி தன்னை ஆன்மீகவழியில் வளர்த்துக்கொள்வது எப்படி என்பதையும் கட்டண பதிவில் பார்க்கலாம்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆலய தரிசனமும் சில கருத்துகளும்


வணக்கம்!
          ஆலய தரிசனத்தைப்பற்றி பல நண்பர்கள் தங்களின் விருப்பத்தை வைத்தனர். இந்த கோவில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை நிறைய இடங்களில் மரம் செடிகள் வளர்ந்து வந்திருக்கின்றன. பல இடங்களில் சுத்தம் கூட செய்யவில்லை என்று சொல்லிருந்தனர். இது உண்மையான ஒன்று தான் இதனை நான் பார்த்தேன். நான் அனுப்பிய புகைப்படங்களை வைத்து அந்த கேள்வி வந்தது என்று தெரிகின்றது.

நம்மால் தற்பொழுது அம்மன் கோவில் கட்டும் பணியை மட்டும் செய்யமுடியும் என்ற நிலையில் இருக்கின்றது இதனை தாண்டி இதனை செய்வதற்க்கு இந்த பதிவுகளை வெளியில் பகிர்ந்துக்கொண்டால் சிவனடியார்களின் கண்களில் பட்டு இதனை செய்ய நினைப்பார்கள். இதனை எடுத்து செய்வதற்க்கு என்று ஆட்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனைப்பற்றி சொல்லுங்கள். இதனை சரி செய்வதற்க்கு பணம் உதவி எல்லாம் நீங்கள் செய்யவேண்டியதில்லை இதனை எடுத்துச்செய்யும் ஆட்களுக்கு இதனை தெரியப்படுத்தினால் போதும். நான் தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் நண்பர்களிடம் இதனைப்பற்றி சொல்லியுள்ளேன். மழை நின்றவுடன் இதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லியுள்ளனர்.

நாட்டில் பார்த்தால் நிறைய ஆன்மீகவாதிகள் இருப்பது போன்று தோன்றும் ஆனால் இதனை செய்வதற்க்கு ஆட்கள் இல்லை என்று சொல்லலாம். எதார்த்தம் எப்படி இருக்கின்றது என்பதை நாம் பார்த்து புரிந்துக்கொள்ளலாம். ஆன்மீகம் என்பது ஆன்மீகத்தை சம்பந்தப்படும் கோவில்கள் அனைத்தும் காப்பாற்றுவதற்க்கு நம்மால் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கவேண்டும். எதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கின்றது.

இந்த கோவில்கள் அனைத்தும் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலானா ஒரு கோவில்களாகவே இருக்கின்றன. நாம் அங்கு சென்றால் அதனைப்பற்றி எளிதில் புரிந்துக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது என்ன என்றால் உங்களுக்கு அருகில் இருக்கும் கோவில்களை பராமரிப்பதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதனை நீங்கள் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 17, 2019

வரும் முன் காப்போம்


வணக்கம்!
          நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்களில் இருந்து நமக்கு வரும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ள நாம் வணங்கும் தெய்வங்கள் நமக்கு ஏதோ ஒரு வழியை சொல்லிக்கொடுக்கும். இது பெரும்பாலும் நமது கனவுகள் வழியாகவே அதனை காட்டும். நாம் இதனை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை ஆனால் அது நடந்த பிறகு தான் நமக்கு தெரியும்.

நாம் ஒரு தெய்வத்தை நாம் வணங்கிக்கொண்டு வரும்பொழுது அது நம்மை காக்குகின்றது. ஒருவருக்கு சனியின் பிடியில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். சனி அவர்க்கு பிரச்சினை கொடுக்கின்றது என்றால் அதற்கு முன்னாடி நாம் வணங்கும் தெய்வம் கனவு வழியில் ஒன்றை காட்டும். உதாரணத்திற்க்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவது போல நமது கனவில் காட்டும் நாம் இதனை பெரியதாக எடுத்துக்கொண்டு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தினால் நல்லது.

நம்முடைய அலட்சியத்தால் இதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் கொஞ்ச நாளில் நமக்கு சனியால் பெரிய அடி விழும். இதனை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் வணங்கும் தெய்வம் காட்டிக்கொடுத்து அவர்களுக்கு வழியும் சொல்லிக்கொடுக்கின்றது. அதாவது பரிகாரத்தையும் அதுவே காட்டிக்கொடுக்கின்றது.

ஒவ்வொரு பெரிய நிகழ்வுக்கும் முன்னாடி நமது தெய்வம் இதனை செய்கின்றது. இதனை செய்யும் தெய்வம் அதனை தடுக்ககூடாதா என்று கேட்கலாம். தெய்வம் வழியை தான் காட்டும் அதனை மனிதர்களாக இருக்கும் நாம் செய்யவேண்டும். நாம் செய்தால் கண்டிப்பாக இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 14, 2019

ஆலய தரிசனம் பகுதி 4


வணக்கம்!
          என்ன ஒரே ஆலய தரிசனமாகவே எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். இந்த மாதிரியான கோவில்களை தரிசனம் செய்யவேண்டும் என்பதால் தான் இதனை எழுதுகிறேன். திருவையாறு கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு திருப்பழனம் என்ற கோவிலை தரிசனம் செய்ய சென்றேன். திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் நான் செல்லும்பொழுது ஆலயத்தை மூடிவிட்டார்கள். அங்கு சென்று இராஜகோபுர கதவை பார்த்தேன் திறந்து இருந்தது உள்ளே சென்றேன். 

இராஜகோபுர வாயிலை நானே திறந்தவுடன் ஒரு நபர் வெளியில் இருந்து வந்தார். அவர் என்னை விசாரித்துவிட்டு உள்ளே அழைத்து சென்றார். உள்ளே இருக்கும் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயத்தை திறந்து அனைத்தையும் என்னிடம் விளக்கி சொன்னார். ஐயர் இருந்தால் கூட எனக்கு அந்த கோவிலைப்பற்றிய விபரம் தெரிந்து இருக்காது அந்தளவுக்கு விபரமாக அனைத்து தகவலையும் சொன்னார்.

திருப்பழனத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் யாரை பார்க்கவேண்டும் என்று நினைக்கின்றார்களாே அவர்கள் தான் இங்கு வரமுடியும் என்று சொன்னார். உண்மையில் அப்படி தான் இருக்கின்றது. நான் அங்கு சென்றப்பொழுது தான் அதனை உணர்ந்தேன். திருப்பழனத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர்  வழிப்பட்டால் அனைத்து ஐஸ்வரியமும் கிடைக்கும். தாயார் பெரியநாயகி என்று அழைக்கப்டுகின்றார். தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலத்தில் இது காவிரியின் வடகரையில் அமைந்த ஐம்பதாவது தலம் என்று சொல்லுகின்றனர்.

இந்த கோவிலை நான் சொல்லுவதை விட இந்த கோவிலுக்கு காலை பத்து மணிக்குள் சென்று தரிசனம் செய்து பாருங்கள் மிக அற்புதமான ஒரு கோவிலாக இருக்கும். இதனை முடித்துக்கொண்டு இதன் அருகில் இருக்கும் சந்திரன் ஸ்தலத்திற்க்கு சென்றேன். திங்களூர் சந்திரன் கோவில் இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டரில் இருக்கின்றது. சந்திரன் ஸ்தலம் சென்று வழிபட்டேன். நவகிரகங்களில் சந்திரனுக்குரிய ஸ்தலம் என்று சொல்லுகின்றனர். இது எனக்கு அந்தளவுக்கு உணர்வு வழியில் பிடிபடவில்லை. 

திங்களூர் சந்திரனை முடித்துக்கொண்டு திருநெய்தானம் என்ற பாடல் பெற்ற ஸ்தலத்தை தரிசனம் செய்ய சென்றேன். திருநெய்தானம் என்பதை தில்லைஸ்தானம் என்றும் அழைக்கின்றனர். இதுவும் நான் சென்ற நேரத்தில் மூடிவிட்டார்கள். காவலாளியை சந்தித்து சொன்னவுடன் அவர் கதவை திறந்து உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். சுவாமி தரிசனம் தாயார் தாயார் பாலாம்பிகை  தரிசனம் முடித்தேன். திருவையாற்றை சுற்றி இருக்கும் ஏழு ஸ்தலங்களையும் தரிசனம் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து திட்டை வசிஷ்டர் கோவில் சென்றேன். வியாழக்கிழமை என்பதால் குரு பகவானையும் தரிசனம் செய்தேன். 

இந்த பயணத்தில் எனது பைக்கில் சென்று தரிசனம் செய்த காரணத்தால் அனைத்தையும் விரைவாக மற்றும் எளிமையாக சென்று அடையும் மார்க்கமாக இருந்தது. அனைத்து கோவிலிலும் பணிபுரியும் நபர்களுக்கு பணஉதவியை செய்தேன். இந்த பணம் அனைத்தும் நீங்கள் கொடுத்தது தான் நல்ல உதவியை செய்தேன். வேலை செய்யும் ஒவ்வொருவரும் மனம் மகிழும்படி நான் உதவியை செய்தேன்.

வாட்ஸ்அப்பில் இணைந்த நண்பர்கள் அனைவருக்கும் அன்றே புகைப்படங்கள் மற்றும் வீடியோவாகவும் அனுப்பியிருந்தேன். எனது வாட்ஸ்அப் ( 9551155800) எண்ணில் தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து ஒரு நல்ல ஆலயத்திற்க்கு செல்லும்பொழுது உங்களுக்கு தகவல் பரிமாறுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 13, 2019

ஆலய தரிசனம் பகுதி 3


வணக்கம்!
         நேற்று மட்டும் ஆறு கோவில்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டது. முதலில் திருவையாறு ஐயாராப்பர் கோவிலை தரிசனம் செய்தேன். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஸ்தலத்தை தரிசனம் செய்தேன். இந்த கோவிலும் வடகரையில் அமைந்துள்ளது. மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம். கோவில் மிக பிரமாண்டமான கோவில். அம்மன் கோவிலும் மிகப் பிரமாண்டமான ஒரு ஸ்தலமாக இருக்கின்றது. 

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த கோவிலை ஒரு முறையாவது தரிசனம் செய்யவேண்டும். நிறைய சிறப்புகளை பெற்று இந்த தலம் இருப்பதால் அனைவரும் சென்று தரிசனம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு இருக்கும் அம்மன் கோவிலில் உள்ள அம்மன் தர்மவர்த்தனி அம்மனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அந்தளவுக்கு அழகோடு காட்சி அளிக்கின்றார்.

கோவிலில் வெளிபிரகாரத்தில் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு ஐயாரா என்று அழைத்தால் ஏழு முறை எதிரொலிக்கின்றது. இது எந்த கோவிலும் காணக்கிடைக்காத ஒரு அதிசயம் என்று சொல்லலாம். மிக பரந்த விரிந்த கோவில் ஒரு ஊர் முழுவதும் கோவிலாக இருக்கும் இந்த கோவிலை அவசியம் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். எனது வாட்ஸ்அப்பில் இணைந்து இருக்கும் நண்பர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறேன்.

ஐயாராப்பர் கோவிலை முடித்துக்கொண்டு அடுத்தபடியாக திருவையாறு தியாகாராசரின் அதிஷ்டானம் சென்று வழிபட்டேன். காவிரி கரையில் அமைந்த அதிஷ்டானம். காவிரி ஆற்றில் தண்ணீர் இருப்பதால் பார்ப்பதற்க்கு  ரம்மியமாக காட்சிக்கொடுக்கின்றது. கர்நாடக சங்கீதத்தை விருப்படுபவர்கள் இதனை தரிசனம் செய்யலாம். 

தியாகராச கீர்த்தனைகள் மார்கழி மாதத்தில் பாடப்படுவதால் இங்கு தற்பொழுது அதற்க்கு தயாராவதற்க்கு வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதனை பெரும்பாலும் கர்நாடக சங்கீதம் கற்றவர்கள் தான் தரிசனம் செய்கின்றனர். நாமும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 12, 2019

சித்தர்கள் பகுதி 6


வணக்கம்!
          பல பிரச்சினைகள் எனக்கும் திடீர் என்று இந்த மாதத்தில் ஏற்பட்டது. அதனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சித்தர்கள் பகுதி எழுதியவுடன் அது குறைந்துவிட்டது. ஒரு சில கோவில்களையும் நாம் தரிசனம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. மனதிற்க்குள் நிம்மதி இன்மை வந்தாலும் மனதை சரி செய்யும் தெய்வீக ஆற்றலை இறைசக்தி கொடுத்தது.ஒரு சில நாட்களிலேயே அதுவாகவே சென்றுவிட்டது.

ஒரு நண்பரோடு பேசும்பொழுது கூட சொல்லி்கொண்டு இருந்தேன். பெரும்பாலான பாடல் பெற்ற ஸ்தலங்கள் நான் வசிக்கும் பகுதியில் இருக்கின்றன ஆனால் இத்தனை நாளும் இதனை தரிசனம் செய்யவேண்டும் என்ற ஒரு ஆவல் எனக்கு வந்ததில்லை. சித்தர்கள் பகுதியை எழுதிய நாளில் இருந்து எனது மனதிற்க்குள்ளும் இந்த நல்ல எண்ணத்தை கொடுத்தது. இந்த கோவில்களை எல்லாம் சென்று தரிசனம் செய்துவிடவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியது.

இதில் என்ன பெரிய விசயம் இருக்கின்றது என்று கேட்கலாம். உண்மையில் இது பெரிய விசயமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். நமது பகுதியில் இருக்கும் மக்களில் ஐந்து சதவீத மக்கள் கூட இந்த தலத்தை பார்த்தில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்க்காத பலர் இங்கு இருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இறைசக்தி அதனை தரிசனம் செய்யவேண்டிய பக்தியை நமக்கு கொடுக்கவேண்டும். சித்தர்கள் இருந்தாலும் அதனை நாம் தேடிச்செல்லும் மனநிலையை உருவாக்க வேண்டும். நாமும் அதற்க்கு சிறிய முயற்சி செய்தால் போதும் மற்றது அதுவாகவே நடந்துவிடும். சித்தர்கள் உங்களை ஆட்கொண்டு அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள்.

நாம் பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து இருக்கிறோம். உண்மையில் பாக்கியம் என்பது ஒன்பதாவது வீடு நமக்கு இப்படிப்பட்ட பாக்கியத்தை கொடுப்பது தான் பாக்கியம் மற்றது அனைத்தும் பாக்கியமாகவே இருக்காது. உங்களின் ஆத்மாவிற்க்குள் பதியும் நல்ல பாக்கியம் இப்பிறவி மற்றும் வரும் அனைத்து பிறவியிலும் எடுத்துச்செல்லும் ஆத்மாவிற்க்கு நல்ல தரிசனத்தை கொடுப்பது தான் பாக்கியஸ்தானம்.

இந்த பிறவியில் சம்பாதிப்பது எதுவாகாயிலும் அது இங்கேயே சென்றுவிடும். நீங்கள் சேர்க்கும் ஆன்மீக விசயம் தான் உங்களோடு வரும் ஒரு பெரிய பாக்கியம். உங்களின் ஆத்மாவின் கணக்கில் பதியும் நல்ல பாக்கியமாகவே இருக்கும். 

சித்தர்களின் அருளை நாடிச்செல்லும் உங்களின் ஆத்மா உண்மையில் பாக்கியம் பெற்றதாகவே இருக்கும். இந்த உலகத்தில் ஏதோ பல விசயங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் விட்டுவிட்டு என்றும் அழியாத ஒரு செல்வத்தை தேடி உங்களின் மனது நாடுகின்றது என்றால் கண்டிப்பாக நல்ல பாக்கியம் இருக்கின்றது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். 

நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் முயற்சியில் தோல்வி இல்லாமல் சென்றுக்கொண்டே இருக்கவேண்டும். ஜாதககதம்பத்தை எழுதிய நாளில் இருந்து இன்று வரை என்னோடு பயணம் மேற்க்கொண்டு வருபவர்கள் பலர் இருக்கின்றனர். ஒரு சிலர் விலகியும் சென்று இருக்கின்றனர். அவர்கள் ஏதோ ஒன்று தடுத்து விலகி சென்று இருக்கலாம் அல்லது நம்மை விட உயர்ந்தற்க்கு சென்று இருக்கலாம். போனவர்கள் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. என்னோடு பயணம் செய்யும் நபர்கள் அனைவரும் நிறைய ஆன்மீக இடங்களுக்கு செல்லுங்கள் உங்களுக்கு நல்ல அருள் கிடைக்கும். சித்தர்களின் ஆசி கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும். நீங்கள் செய்யவேண்டியது தொடர்ச்சியான ஆன்மீக பயணம் மட்டுமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 11, 2019

ஆலய தரிசனம் பகுதி 2


வணக்கம்!
                        திருசோற்றுதுறையை தரிசனம் முடித்து அடுத்ததாக திருவேதிகுடி சென்றேன். திருவேதிக்குடி வேதபுரீசுவரர் அப்பர் சம்பந்தவர் பாடல் பெற்ற ஸ்தலம். மூலவர் வேதபுரீசுவரர் மற்றும் வாழைமடுநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். தாயார் மங்கையர்கரசி என்றும் அழைக்கபடுகின்றார். 

தற்பொழுது இந்த திருத்தலம் திருமணத்தடைக்கு பரிகாரம் செய்வதற்க்கு இந்த தலத்தை வழிபடுகின்றனர். நான் பார்த்த பொழுது ஒரு சிலர் திருமணத்தடைக்கு பரிகாரம் செய்தனர். பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால் நாம் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம். 

திருப்பூந்துருத்தி

இந்த தலத்தை முடித்துவிட்டு திருப்பூந்துருத்தி சென்றேன். திருப்பூந்துருத்தி இறைவன் பெயர் புஷ்பனேஷ்வரர். தாயார் செளந்தரநாயகி என்று அழைக்கபடுகின்றார். கோவிலுக்குள் சென்றவுடன் 13 தீர்த்தம் என்ற ஒன்று இருக்கின்றது. இந்த கிணற்றில் உள்ள நீரை எடுத்து நமது தலைக்கு ஊற்றிவிட்டு அதன்பிறகு சுவாமியை தரிசனம் செய்யவேண்டும். பாடியவர்கள் அப்பர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள். மிகவும் அருமையான ஒரு கோவில். நேற்று நான்கு கோவிலையும் பகல் 12 மணிக்குள் தரிசனம் முடித்தேன். 

நான் பைக்கில் சென்று தரிசனத்தை செய்தேன். கண்டியூர் இறங்கி ஆட்டோவில் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். பகல் 12 மணிக்குள் தரிசனம் செய்துவிடுவது நல்லது அதன்பிறகு கோவில் நடை சாத்திவிடுகின்றனர். 

திருவையாறு சப்தஸ்தானம் என்று அழைக்கப்படும் காேவிலில் ஏழு கோவில் உள்ளது. ஒரே நாளில் நான் நான்கு கோவிலை தரிசனம் செய்தேன். மீதி இருக்கும் கோவிலை வேறு ஒரு நாளில் தரிசனம் செய்யவேண்டும் என்று இருக்கிறேன். நீங்களும் இந்த கோவிலை தரிசனம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 10, 2019

ஆலய தரிசனம் பகுதி 1


வணக்கம்!
          இன்று காலையில் நான்கு சிவஸ்தலங்களுக்கு சென்றேன். திரு சிவஸ்தலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்களை எனது வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்தேன். இந்த கோவில்களைப்பற்றி தங்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று தான் இந்த பதிவு.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் திருவையாறுக்கு முன்னால் கண்டியூர் என்ற ஒரு ஊர் இருக்கின்றது. திருகண்டியூர் தற்பொழுது கண்டியூர் என்ற பெயரில் இருக்கின்றது. இங்கு பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் இருக்கின்றது. இந்த தலத்திற்க்கு தான் முதலில் நான் சென்றேன். அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம். அட்டவீரட்டஸ்தலத்தில் முதன்மையானது என்று சொல்லுகின்றனர். சூரியன் இருமனைவியோரோடு இருக்கின்றார். பிரமனுக்கு தனிசந்நதி இருக்கின்றது.

பிரமஹத்தி தோஷம் நீங்கும் ஸ்தலம் என்று சொல்லுகின்றனர். பிரம்மனின் சந்நிதியில் ஜாதகத்தை வைத்து இங்கு வழிபடுகின்றனர். நான் சென்றபொழுது ஐந்து நபருக்கு இங்குள்ள பிரம்மனின் சந்நதியில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்துக்கொண்டு இருந்தனர். பிரம்மன் அழகாக இங்கு இருக்கின்றார். தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் 12 என்று சொல்லுகின்றனர். மொத்தத்தில் இந்த கோவிலில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வழிபட்டனர். இந்த தலத்தில் மனிதன் சென்று வருவதற்க்கே புண்ணியம் செய்து இருக்கவேண்டும். புண்ணியம் இருந்தால் தான் இங்கு சென்று வழிபடலாம். இந்த மாதிரியான கோவில் கிடைப்பது எல்லாம் பெரிய விசயம் அல்லவா. 



ஜாதககதம்பத்தில் இருப்பவர்கள் ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்ளும்பொழுது இந்த தலத்திற்க்கு சென்று வாருங்கள். நமக்கு நல்ல புண்ணியம் இருக்கின்றது நாம் செய்ய வேண்டியது நாம் இந்த ஊரை தேர்ந்தெடுத்து இங்கு சென்று வரவேண்டும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு உள்ள கோவிலை தரிசனம் செய்யவேண்டிய பாக்கியம் இருந்தால் இந்த கோவிலுக்கு செல்லலாம். இந்த கோவிலை முடித்துக்கொண்டு வெளியில் வந்தேன் அங்கு இருந்து மூன்று கிமீ தூரத்தில் இருக்கும் திருச்சோற்றுதுறை சென்றேன்.



திருச்சோற்றுத்துறை 
                     இந்த ஸ்தலத்தில் உள்ள சிவனை வழிபட்டால் உணவு தருவான் என்பதால் திருச்சோற்றுத்துறை எனப்பட்டது. திருச்சோற்றுத்துறை என்பது பிறவிபிணி தீர இறைவன் வீடு பெறு தருவான் என்று சொல்லுகின்றனர். மூலவர்: ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
உற்சவர்: தொலையாச் செல்வர் தாயார்: அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை. அப்பர் சுந்தரர் சம்பந்தர் மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

மிக அமைதியான ஊரில் நீங்கள் சென்றால் அமைதியாக கோவிலை தரிசனம் செய்யலாம். நான் சாமி தரிசனம் செய்யும்பொழுது நான்கு பேர் மட்டுமே தரிசனம் செய்தனர். பழமையான கோவில் என்பதால் மிக அருமையாக இருக்கின்றது. பழமையாக இருக்கும் கோவிலை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் இங்கு சென்று தரிசனம் செய்யலாம். தேவாரப்பாடல் பெற்ற 13 ஸ்தலமாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 9, 2019

திருமண தடை சிறப்பு பரிகாரம்


வணக்கம்!
          நாம் முன்ஜென்மத்தில் நல்லது செய்து இருந்தாலும் மற்றும் நமது பெற்றோர்கள் செய்தது புண்ணியமாக இருந்தால் நமக்கு இளம்வயதில் திருமணம் நடைபெற்றுவிடும். நமது கர்மவினை மற்றும் பெற்றாேர்கள் புண்ணியம் செய்யவில்லை என்றால் திருமணம் என்பது தள்ளிக்கொண்டே சென்றுவிடும். சமுதாயத்தில் ஒரு வயதிற்க்கு மேல் திருமணம் நடைபெறவில்லை என்றால் அவர்களை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும்.

திருமணம் நடைபெறவேண்டும் அதன்பிறகு அவர்களுக்கு குழந்தை இருக்கவேண்டும். இந்த இரண்டும் இருந்தால் அவர்கள் இந்த பூமியில் வந்த காரியம் முடிந்துவிட்டது போல் மக்கள் பார்ப்பார்கள் அதன் பிறகு அவர்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். 

திருமணம் நடைபெறவில்லை என்றால் அவர்களை பார்க்கும் விதத்தில் சம்பந்தப்பட்ட நபர் வெளியில் தலைகாட்டமுடியாது. ஒரு கொடுமையான ஒரு வாழ்க்கையை வாழநேரிடும். இதனை பல இடத்திலும் நான் பார்த்து இருக்கிறேன். இதனை தவிர்ப்பதற்க்கு என்று தான் தற்பொழுது நமது ஜாதக கதம்பத்தில் முதற்கட்டமாக திருமணத்திற்க்கு என்று ஒரு பரிகாரத்தை அறிவித்து இருக்கிறோம்.

திருமண தடையைப்பற்றி நிறைய சொல்லிருக்கிறேன் இதனோடு உங்களின் ஜாதகத்தை அனுப்பி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி இதில் நீங்கள் கண்டிப்பாக நன்மை பெறமுடியும். திருமண தடைக்கு என்று ஜாதகத்தை அனுப்ப இன்றே கடைசி தேதி உடனே அனுப்பி வையுங்கள்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 6, 2019

சித்தர்கள் பகுதி 5


வணக்கம்!
          சித்தர்களைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். பல நண்பர்கள் தங்களின் தேடுதலுக்கு நல்ல தீனியாக இது இருக்கின்றது என்று சொல்லியுள்ளனர். நம் கையில் ஒன்றும் இல்லை அனைத்தும் அம்மனின் அருளாலும் குருவின் ஆசியாலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

நம்முடைய சுவாசம் ஆன்மீக பக்கம் இருந்தால் நாம் எதனையும் தேடிச்செல்ல வேண்டியதில்லை நம்மை தேடி அனைத்தும் வந்துவிடும். நாம் சித்தர்களை தேடி அலையவேண்டியதில்லை நமக்கு எந்த ஒரு சித்தரின் அருள் வேண்டும் என்று இருக்கின்றதோ அவர்களின் அருள் நம்மை தேடி வந்துவிடும். என்ன புதுசா இருக்கின்றதே என்று எண்ணலாம் இது உண்மையான ஒரு கருத்து.

சித்தர் என்றால் யார் என்று தெரியாத ஒரு காலத்திலேயே என்னை தேடி ஒரு சித்தரின் அருள் கிடைத்தது. அதனைப்பற்றி ஏற்கனவே நான் உங்களிடம் பகிர்ந்து இருக்கிறேன். எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் வரும்பொழுது பல ஆன்மீகவாதிகளின் அருள் பார்வை என்மீது பட்டது. இதனை நான் செய்த புண்ணியம் என்பதை விட மனது ஆன்மீகத்தை நாடுவதால் வந்த அருள் என்று சொல்லலாம்.

பெரும்பாலானவர்கள் சொல்லும் வார்த்தை நாம் புண்ணியம் செய்து இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். புண்ணியம் என்ற வார்த்தை எல்லாம் நாம் உபயோகப்படுத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சு என்பது ஒன்று தான் நமது மனது எதனை நாடுகின்றதோ அது உங்களை நாடி வரும் என்பது தான் பொதுவிதி.

உங்களின் மனது ஆன்மீகத்தை நாடினால் கண்டிப்பாக உங்களை நாடி வந்துவிடும். நீங்கள் பாவம் செய்து இருக்கின்றீர்கள் புண்ணியம் செய்து இருக்கின்றீர்கள் என்ற கணக்கு தேவையில்லை. உங்களின் வேலை அதனை நோக்கி மனதை செலுத்த வேண்டியது மட்டுமே. கொஞ்ச நாளில் உங்களை நாடி நீங்கள் தேடிக்கொண்டு இருக்கும் விசயம் உங்களை நாடி வரும்.

சித்தர்களின் அருள் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் நீங்கள் ஜூவசமாதியை நோக்கி செல்லவேண்டியதில்லை. உங்களின் ஜீவன் அதனை நாடினால் உங்களை நாடி ஜீவஆத்மா வந்துவிடும். இது அனுபவத்தில் நான் சொல்லக்கூடிய ஒன்று. நீங்களும் கண்டிப்பாக தேடுங்கள் கண்டிப்பாக உங்களை நாடி வரும் என்ற நம்பிக்கை தருகிறேன்.

பயிற்சி
       நீங்கள் முதலில் செய்யவேண்டியது இன்று முதல் ஒரு குறிப்பிட்ட சித்தரின் அருள் வேண்டும் என்றால் அவரை மனதால் நினைக்க தொடங்குங்கள். மனதால் என்னால் முதலில் செய்வதற்க்கு முடியவில்லை என்றால் உருவ வழிபாடு என்பதை அவரின் புகைப்படங்கள் இருந்தால் எடுத்து உங்களின் பூஜையறையில் வைத்து வணங்க ஆரம்பிக்கலாம். உங்களுக்கு இதனை செய்தும் உங்களுக்கு முன்னேற்றம் இல்லை என்றால் அடுத்தது அவரின் ஜீவசமாதி அல்லது அவரின் உருவம் இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். கண்டிப்பாக ஏதோ ஒரு ரூபத்தில் அவரின் அருளை உங்களால் உணரமுடியும்.

இது ஒரு சாதாரணமான ஒரு விசயம் போல் தோன்றும். முதலில் பயிற்சி தொடங்குபவர்களுக்கு குண்டலிணியைப்பற்றி சொன்னால் செய்பவன் கஷ்டபடுவான் என்பதால் இந்த எளிமை பயிற்சியை செய்து பார்க்கலாம். படிப்படியாக பல பயிற்சிகளைப்பற்றி பார்க்கலாம்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 5, 2019

திருமண தடை 6


வணக்கம்!
          திருமண தடையைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு சிலரின் ஜாதகத்தில் சனி குருவோடு சேர்ந்து இருந்தாலும் திருமண தடை ஏற்பட்டுவிடும். குரு கிரகம் தான் சுபநிகழ்வுகளை தரக்கூடிய ஒரு கிரகம் என்பதால் குரு கிரகம் பாதிப்படையும்பொழுது திருமணம் தடைப்படும். 

குரு கிரகம் இராகுவோடு சேரும்பொழுதும் திருமணம் தடைப்படும். இராகுகிரகம் குரு கிரகத்தின் தன்மையை இழக்கவைப்பதால் திருமணம் தடைப்படும். ஒரு சிலர் சம்பந்தம் இல்லாத உறவை வைத்துக்கொண்டு திருமணத்திற்க்கு சம்மதிக்க மாட்டார்கள். 

இராகு தசா நடக்கும்பொழுது ஒரு சிலருக்கு என்ன தான் செய்தாலும் திருமண ஏற்பாடு நடைபெறாது. திருமணத்திற்க்கான எந்த ஒரு சூழ்நிலையும் உருவாக்காது. பலர் இராகு தசாவில் திருமணம் நடைபெறவில்லை என்ற ஏக்கத்தோடு இருப்பார்கள். இராகு அவர்களின் ஜாதகத்தில் திருமணத்திற்க்கான யோகத்தை கொடுக்காமல் தசாவை நடத்திக்கொண்டு இருக்கும்.

மறைவு ஸ்தானத்தில் இருந்து நடத்தும் தசாவில் திருமண ஏற்பாடு நடைபெறாது. மறைவுஸ்தானத்தில் இருந்து நடத்தும் கிரகங்கள் தங்களால் திருமணயோகத்தை கொடுக்கமுடியாமல் நடத்தும். ஒரு சிலருக்கு மட்டும் கோச்சாரபடி திருமண  யாேகம் நடைபெறும்.

திருமண தடைக்கு என்று ஜாதகத்தை அனுப்புவதற்க்கு கடைசி நாள் வரும் திங்கள்கிழமை. ஜாதகத்தை அனுப்பியவர்கள் தங்களின் கட்டணத்தை அனுப்பிவையுங்கள். இதுவரை திருமண தடைக்கு ஜாதகத்தை அனுப்பாதவர்களும் திங்கள் கிழமைக்குள் அனுப்பிவையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சித்தர்கள் பகுதி 4


வணக்கம்!
          சித்தர்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம். ஒரு சிலர் பேசும்பொழுது சொல்லுவார்கள். நான் இந்த சித்தரை நேரில் தரிசனம் செய்தேன். ஒரு சிலர் நான் இத்தனை ஜீவசமாதிகளை தரிசனம் செய்து இருக்கிறேன். ஆன்மீகத்தில் நான் ஒரு பெரிய ஆள் என்று சொல்லாமல் சொல்லுவார்கள். ஒருவர் சித்தரை தரிசனம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் ஒரு சாரார் ஜீவசமாதியை தரிசனம் செய்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

எப்படியோ சித்தரை தரிசனம் செய்தால் போதும் என்று சொல்லுகின்றனர். நாம் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை முதலில் மனிதனின் ஆத்மாவை தரிசனம் செய்யமுடியுமா என்பதைப்பற்றி பார்க்கலாம். மனிதனின் ஆத்மாவை தரிசனம் செய்யும் பாக்கியம் நமது கண்களுக்கு தெரிகின்றதா அல்லது இந்த பாக்கியத்தையாவது நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றான இறைவன் என்று பார்க்கவேண்டும் அதன் பிறகு சித்தர்களின் தரிசனத்தை வைத்துக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்ததா அல்லது தெரியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சமயம் சென்னை கொட்டிவாக்கத்தில் இருக்கும்பொழுது ஒரு குழுவினர் சிறந்த ஆன்மீக தேடுதலை கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு பழக்கம் அவர் என்னிடம் சொன்னது. நான் மனிதனின் ஆத்மாவை பார்க்கவேண்டும் என்பது ஒரு விருப்பம் இதற்க்காக நான் பயிற்சியை மேற்கொண்டேன் என்றார். அவர் ஒரு நல்ல ஆன்மீகவாதி என்பது எனக்கு தெரியும்.

அவரிடம் எப்படி இதனை பார்ப்பது என்று கேட்டேன். அவர் சொன்னார். கடுமையான விரதம் இருந்தேன். தொடர்ச்சியாக பல சிவன் கோவிலுக்கு சென்று வந்தேன். கடைசியில் ஒரு நாள் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு மனிதனின் ஆத்மா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாத காலத்தில் இது எனக்கு தெரிந்தது என்றார். அவர் என்னிடம் சொல்லியது. நீங்கள் இதற்க்காக முயற்சி செய்யும்பொழுது ஒரு நல்ல ஆத்மாவின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பித்து அதன் பிறகு இந்த பயிற்சியை மேற்க்கொள்ளுங்கள் என்றார். ஏன் அவர் என்னிடம் அப்படி சொன்னார் என்றால் ஒரு பார்த்தது குறைந்தபட்சம் புண்ணிய செய்த ஆத்மா என்றும் சொல்லிருந்தார்.

பயிற்சி எப்படி 
               பெரியதாக ஒன்றும் இல்லை. உங்களின் மனதில் ஆத்மாவின் தரிசனம் கிடைக்கவேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும். ஒரு மாத காலம் உங்களின் இறைதேடுதல் இதற்க்காக இருக்கவேண்டும். நிறைய நல்ல கோவிலுக்கு சென்று வாருங்கள். இது பெரியதாகவும் இல்லை முடிந்தவரை இது நல்ல பலனை தரும் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லமுடியும்.

ஆத்மா எப்படி தெரியும் என்பதை நான் சாெல்லிவிட்டால் உங்களின் மனது அதற்கு தகுந்தார்போல் வேடமிட்டு அதனை உருவாக்க நினைக்கும் என்பதால் உங்களிடம் இந்த தகவலை நான் சொல்லவில்லை. இதனை செய்து முடித்து நீங்கள் பார்த்த பிறகு என்னிடம் சொல்லுங்கள் அது சரியா அல்லது இல்லையா என்று உங்களிடம் சொல்லுகிறேன்.

முதலில் நாம் பார்க்க நினைப்பது மனிதனின் ஆத்மாவை அதன்பிறகு நீங்கள் சித்தர்களை தரிசனம் செய்யலாம். மனிதனின் ஆத்மாவை பார்க்க தெரிந்த உங்களுக்கு சித்தர்கள் ஒன்றும் பெரியதாகவே இருக்காது என்று நான் நினைக்கிறேன். இன்று முதல் இதனை தொடங்கலாம். இன்று வியாழக்கிழமை குருவின் நாள் அதனால் இன்று முதல் ஆரம்பியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 4, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
          சித்தர்களை பற்றி தங்களிடம் தகவல் இருந்தால் அதனைப்பற்றி அனுப்பி வைக்கலாம் என்று நண்பர்களிடம் சொல்லிருந்தேன். மூன்று நண்பர்கள் தகவலை அனுப்பியிருந்தனர். தகவல் அனுப்பிய மூன்று நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து மெயில் செய்து இருக்கிறேன். 

நான் தேடியதும் நண்பர்கள் தேடியதும் ஒரே மாதிரியாகவே இருந்தன. பெரும்பாலும் சித்தர்கள் என்றாலே ஒரு இலக்கணம் போலவே அனைவரும் எழுதி வருகின்றனர். இந்த இலக்கணத்தை மக்களிடம் நாம் வைத்தால் ஒருத்தருக்கும் ஒன்றும் புரியாது. ஒரு பாமரனுக்கு புரியும் படியாக நாம் சொன்னால் அது நன்றாகவே போய் சேரும்.

சித்திகளைப்பற்றி எல்லாம் தகவல் தந்திருந்தனர். இதனைப்பற்றி நாம் சொன்னால் மனிதன் முதலில் என்ன நினைப்பான் என்றால் நமக்கு இது சரிப்பட்டு வராது என்பது போலவே எண்ணுவார்கள். ஒவ்வொருவரும் தன்னை ஒரு குற்றவாளி போலவே எண்ணி இருப்பதால் இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்கள் அதனை எல்லாம் நாம் விட்டுவிடலாம்.

நான் எழுதுவது வைத்து உங்களின் மனது எப்படி அதனை நோக்குகின்றது என்பதை மட்டும் தந்தால் போதும். நீங்கள் ஒவ்வொருவரும் நல்ல ஆன்மீகவாதிகள் தான் என்று நான் நம்புகிறேன். உங்களின் மனதில் தோன்றும் விசயத்தை கொடுத்தால் போதும் நண்பர்களே. என்னுடைய பகிர்தல் உங்களின் மனதில் எப்படி அது வேலை செய்யும் என்பதை பார்த்தாலே பல கோடி விசயங்கள் வெளியில் வரும்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. தன்னுடைய சுயதேவைக்காக இந்த தளம் இயங்கபட உள்ளது. அனைத்திலும் பொதுவில் வைத்து விடமுடியாது. இதுவரை கட்டண சேவையில் தந்த விசயங்கள் அனைத்தும் வெளியில் சொன்னதில்லை. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  

புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


சித்தர்கள் பகுதி 3


வணக்கம்!
          சித்தர்கள் தொடர்கள் நன்றாகவே சென்றுக்கொண்டு இருக்கின்றன. எனக்கு பல நண்பர்கள் போன் செய்து தொடர்ச்சியாக நிறைய கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் என்று சொல்லிருக்கின்றனர். அனைத்து நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என்னால் முடிந்தளவுக்கு இந்த பதிவை தருகிறேன். 

எல்லோருடைய மனதிலும் கேட்க நினைக்க தோன்றும் கேள்வி எத்தனையோ மார்க்கங்கள் எத்தனையோ ஞானிகள் எத்தனையோ அவதார புருஷர்கள் என்று பல விதத்திலும் பல துறையிலும் இருக்கும்பொழுது இந்த சித்தர்கள் வழி என்பதை ஏன் பின்பற்ற வேண்டும் இது மற்றதைவிட எந்த விதத்தில் சிறந்தது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்ற கேள்வி எழும்.

இது மிகப்பெரிய கேள்வி அதே நேரத்தில் சுலபமாகவும் இதனைப்பற்றி சொல்லலாம். எனக்கு தெரிந்தவரை அனைத்து வழியையும் உள்ளடக்கி உருவானது தான் சித்தமார்க்கம் என்று சொல்லலாம். இது கொஞ்சம் அதிகமாகவே அதோடு ஆன்மீகத்தில் கலந்து சொல்ல வேண்டும் என்றால் சித்தமார்க்கத்தை அதிகமாக பின்பற்ற நினைப்பவர்களின் எண்ணம் இந்த பூமியில் இருந்துக்கொண்டு அனைத்து மக்களுக்கும் நல்லதை செய்யவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான் சித்தமார்க்கம் என்பதை அதிகம் விரும்புகின்றனர். 

மனிதன் இறந்தால் இந்த பூமியில் இருந்து வேறு ஒன்றுக்கு சென்றுவிடுகிறான் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்த பூமியில் இருக்கமுடியாது என்பதை நன்கு அறிந்துக்கொண்டு இருக்கின்றான் என்பதை தான் சொல்லவேண்டும் ஆனால் சித்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இந்த பூமியில் இருந்துக்கொண்டு ஏதோ ஒரு ரூபத்தில் பூமியில் உள்ள மனிதர்களுக்கு உதவி செய்யமுடியும் அல்லது ஏதோ ஒன்றை செய்யமுடியும் என்ற நம்பிக்கை சித்த மார்க்கத்தில் இருந்து இருக்கின்றது அல்லது இருக்கின்றது என்ற நம்பிக்கை இருக்கின்றது. இது தான் சித்த மார்க்கத்தின் மீது அனைவருக்கும் ஒரு அதீத ஈடுபாடு இருக்கின்றது என்னுடைய கருத்து. உங்களின் மனதில் இதனை போட்டு அலசி பார்த்து நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

சித்த மார்க்கத்தில் தான் ஜீவசமாதி பெரியளவில் பேசப்படுகின்றது. மதத்திலும் ஒரு சில இடத்தில் பேசப்பட்டாலும் அது அந்தளவுக்கு பெரியதாக இல்லை என்று சொல்லலாம். சித்த மார்க்கத்தில் இதனை தான் பெரியதாக வைத்திருக்கின்றனர் என்று சொன்னால் நீங்கள் இதனை நம்பலாம். மதத்தில் சொல்லப்படும் விசயங்கள் அனைத்தும் எப்படி இருக்கின்றது என்றால் கடவுள் அவதாரமாக வந்தார் என்பதை சொல்லுவார்கள். சித்த மார்க்கத்தில் மனிதன் கடவுளாக மாறினான் என்று இருக்கும். 

சித்தமார்க்கம் அனைவராலும் நேசிக்கப்படுகின்றதற்க்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும் என்று நினைக்கிறேன். மனிதனால் கடவுளாக முடியும் என்றால் அனைத்து மனிதனுக்கும் ஒரு உள்ளுக்குள் ஈடுபாடு இருக்க தானே செய்யும். இன்றைக்கு ஒரு சாதாரணமான மனிதன் ஒரு சித்தர் பெயரை சொ்லலி தன்னால் உலவமுடிகின்றது என்றால் அனைவராலும் சித்தமார்க்கத்தை நேசிக்கலாம் அல்லவா. 

சித்தமார்கத்தில் ஒரு மனிதனின் உடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மற்றவை அனைத்திலும் என்ன சொல்லுவார்கள் கடவுளோடு தன்னுடைய ஆத்மாவை இணைத்துக்கொண்டால் போதும் என்பது போலவே பேசுவார்கள். உடலுக்கு முக்கியத்துவம் என்பது இருக்காது. சித்தமார்க்கத்தில் உயிருக்கும் முக்கியத்துவம் இருக்கும் உடலுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

சித்தமார்க்கத்தில் உடலை கெடாமல் பாதுகாத்துக்கொள்ள பல வழிகளை கண்டுபிடித்து இருக்கின்றார்கள் அல்லவா. உடலுக்கும் நிறைய முக்கியத்துவத்தை கொடுத்த காரணத்தால் தான் சித்த மார்க்கம் தனித்துவமாக தெரிகின்றது. மதங்களில் உடலுக்கு முக்கியத்துவம் என்பது பெரியளவில் பேசப்படுவதில்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லுகிறேன்.

மேலே சொன்ன கருத்துக்கள் என்னுடைய சுயகருத்து உங்களின் பார்வையில் வேறு விதமாகவும் இருக்கலாம் அது தவறு என்பதில்லை என்னுடைய அனுபவ கருத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன். உங்களின் வளர்ச்சிக்கு இது உதவினால் எடுத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 3, 2019

திருமண தடை 5


வணக்கம்!
          திருமண தடையைப்பற்றி பார்த்து வருகிறோம். திருமண தடையில் இந்த பதிவில் இராகு கேதுவைப்பற்றி பார்க்கலாம். செவ்வாய் தோஷத்திற்க்கு பிறகு இராகு கேது தோஷமும் பெரியதாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் தோஷம் போல இராகு கேது தோஷத்திற்க்கு அதிக பவர் மக்கள் கொடுத்து இருக்கின்றனர். 

இராகு கேது லக்கனத்தில் அல்லது இரண்டாவது வீட்டில் இருந்தால் இராகு கேது தோஷத்தை பெரியதாக எடுத்துக்கொள்வார்கள். ஒரு சிலர் ஐந்தில் இருந்தாலும் இராகு கேதுவை எடுத்துக்கொள்வார்கள். இதனை இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொண்டால் பாேதுமானது.

இராகு கேது மூன்றில் மற்றும் ஒன்பதில் அமரும் பொழுது அது பெரிய பிரச்சினையை கொடுக்கும். ஜாதகருக்கு விரைவில் திருமணம் நடைபெறாது. நாற்பது வயதில் திருமண பேச்சை எடுப்பார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு திருமணம் முடிந்து விவாகாரத்து ஆன பெண்களை திருமணம் செய்யக்கூடிய அமைப்பு இருக்கும்.

ஒரு சிலருக்கு இராகு கேது காலசர்ப்ப தோஷமாக அமைந்தால் இன்னமும் சிக்கல் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது போராட்டமாகவே நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்க்கு பெரிய சிக்கல் வந்துக்கொண்டே இருக்கும். பல வரன் கைவிட்டு சென்றுக்கொண்டே இருக்கும். இதனையும் இராகு கேது தோஷத்தில் இணைத்துக்கொள்ளலாம்.

இராகு கேது தோஷத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தை இராகு கேதுவோடு உள்ள வரனை பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்பார்கள். கூடுமானவரை இராகு கேது தோஷத்தில் உள்ள ஜாதகத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். பெரிய பரிகாரம் எல்லாம் செய்து இருக்கலாம் அதனோடு நமது ஜாதககதம்பத்தில் உள்ள பரிகாரத்தையும் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அறிவிப்பு

வணக்கம்!
          கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. தன்னுடைய சுயதேவைக்காக இந்த தளம் இயங்கபட உள்ளது. அனைத்திலும் பொதுவில் வைத்து விடமுடியாது. இதுவரை கட்டண சேவையில் தந்த விசயங்கள் அனைத்தும் வெளியில் சொன்னதில்லை. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம். 

புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சித்தர்கள் பகுதி 2


வணக்கம்!
         சித்தர்கள் பற்றிய எழுதிய பதிவை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பதினேட்டு சித்தர்களோடு முடிந்து போனதற்க்கும் நமது மக்களும் காரணமாக இருக்கலாம். தற்சமயம் சித்தர்கள் என்றாலே தலை தெரிக்க ஓடி ஒழிவதற்க்கும் தற்கால சித்தர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் மனிதர்களாலும் இது நடந்து இருக்கின்றது என்று சொல்லலாம்.

சித்தர்கள் என்றவுடன் பதினேட்டு சித்தர்களோடு உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படுவதால் தற்காலத்தில் பல நல்ல விசயங்கள் கிடைக்காமல் சென்றது என்று சொல்லலாம். உங்களிடம் நான் அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பதும் இந்த காரணங்களால் மட்டுமே சொல்லுகிறேன். ஒரு தாய் தன்னுடைய கருவை சுமக்கும் நபர் போலவே நீங்கள் செயல்படவேண்டும்.

நல்ல விசங்களை மட்டும் நீங்கள் வாங்கி உங்களை உருவாக்கவேண்டும். எதனோடும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளகூடாது. அடையாளப்படுத்தினால் உங்களின் வளர்ச்சி தடைப்பட்டு விடும். ஒரு ஆறு மாத காலம் அடுத்தவர்களிடம் வாங்கிக்கொண்டு ஆறு மாத காலம் சென்ற பிறகு நீங்கள் அதனோடு அடையாளபடுத்திக்கொள்ள நேரிடும். இதனை எல்லாம் நீங்கள் தவிர்த்துவிடுங்கள்.

அகத்தியர் சொன்னதை நீங்கள் கேட்கலாம் ஆனால் நீங்கள் அகத்தியர் கிடையாது. உங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். போகர் சொன்னதை நீங்கள் உள்வாங்கிக்கொள்ளுங்கள் ஆனால் அவர் தான் நீங்கள் என்று சொல்லிக்கொண்டு திரியகூடாது. ஏன் என்றால் இப்படி தெரிந்தவர்கள் எல்லாம் வீணாக போய்விட்டார்கள். நீங்களும் அப்படி சென்றுவிடகூடாது.

இன்று நம்முடைய ஜாதக கதம்பத்தில் நிறைய பேர் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்று ஆன்மீக தேனை பருகுகின்றனர். காசிக்கு செல்கிறேன் இமயமலை செல்கிறேன் அல்லது ஏதோ ஒரு புண்ணிய ஸ்தலத்திற்க்கு செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு செல்கின்றார். இவர்களை நல்ல மனதோடு அவர்களை சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறேன். 

உங்களிடம் இதனை சொல்லுவதற்க்கு காரணம் உங்களின் வளர்ச்சி ஆன்மீகத்தை நோக்கி இருக்கவேண்டும் அதே நேரத்தில் எதனோடும் உங்களை இணைத்துக்கொள்ளகூடாது என்பதனை சொல்லுவதற்க்காக சொல்லுகிறேன். அடுத்தவர்களின் வளர்ச்சி தடைப்படகூடாது அவர்கள் நன்றாகவே வளர்வார்கள். நான் ஒரு எல்லைவரை செல்லமுடியும் அடுத்த எல்லையை நமது ஜாதககதம்ப நண்பர்கள் சென்று அதனைப்பற்றி சொல்லும் காலமும் வரும். இப்படி இருந்தால் மட்டுமே ஆன்மீகத்தை உங்களுக்குள் வளர்க்கமுடியும்.

நான் உங்களை கட்டுபாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று நினைத்தால் அனைத்தும் வீணாக போய்விடும்.நீங்களும் வளரவே மாட்டீர்கள். ஒருத்தரை ஒருத்தர் பேசிக்கொண்டும் திட்டிக்கொண்டும் சென்றுக்கொண்டு இருப்பீர்கள். இதனை அனைத்தும் சொல்லுவதற்க்கு காரணம் வளர்ச்சி மட்டுமே நடக்கவேண்டும். அகத்தியர் நான் தான் என்று சொல்லகூடாது. நானும் நான் தான் அகத்தியர் என்றும் சொல்லமாட்டேன்.

நீங்கள் எங்கு சென்றாலும் சரி அடுத்தவர்கள் சொல்லுவதை வாங்கி உங்களின் எப்படி வளர்க்கமுடியும் என்பதை மட்டும் சிந்தனை செய்யவேண்டும். அவர்கள் போல் நானும் என்றும் அகந்தை வேண்டாம். சித்தர்கள் உங்களில் மாற்றம் நடக்கவேண்டும் என்பதை தான் எதிர்பார்ப்பார்கள். அவர்களின் பெயரை வைத்துக்கொள்ள உங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை என்பதை மட்டும் நினைவில் முதலில் வையுங்கள். நிறைய விசயங்கள் உங்களை தேடி வர இருக்கின்றது.

மனது மிகப்பெரிய தந்திரசாலி நீங்கள் எதனோடு தொடர்பில் இருக்கின்றீர்களோ அதனோடு தொடர்பை வைத்துக்கொண்டு அதுபோலவே ஆட ஆரம்பித்துவிடும். போகர் என்று சொல்லிக்கொள்வதற்க்கும் அவர் அவர்களின் மனதே காரணமாக இருக்கின்றது. உங்களின் மனதை நீங்கள் வென்றால் மட்டுமே சித்தம் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 2, 2019

திருமண தடை 5


வணக்கம்!
          திருமணத்தடையைப்பற்றி பார்த்து வருகிறோம். திருமண தடை சந்திரன் ஏற்படுத்தும் என்பதைப்பற்றி பார்த்தோம். சந்திரன் கெடும்பொழுதும் திருமணத்தில் பிரச்சினை வரும் அது எப்படிப்பட்டது என்பதைப்பற்றி கொஞ்சமாக பார்க்கலாம்.

சந்திரனோடு சேரும் சனியைப்பற்றி ஏற்கனவே பழைய பதிவில் சொல்லிருப்பேன். இவர்களுக்கு தான் புனர்பூ தோஷம் என்று சொல்லுவார்கள். சனி சந்திரனோடு சேரும்பொழுது மனது கெடும். மனதால் திருமணமும் கெடும். இன்றைய காலத்தில் நிச்சியதார்த்தம் செய்தவுடன் போனில் பேச விட்டுவிடுவார்கள். நம்ம ஆளுங்களும் பேசிகிறேன் என்று நாள் முழுவதும் பேசி உண்மையான விசயத்தை சொல்லிவிடுவார்கள்.

பொய் பேசகூடாது என்று எண்ணி உண்மையை சொல்லிவிடுவார்கள். இவர்கள் சொன்ன உண்மை இவர்களுக்கு ஆப்பு அடித்துவிடும். கடைசியில் இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை இந்த பெண் பிடிக்கவில்லை திருமணத்தை நிறுத்துங்கள் என்று சொல்லிவிடுவார்கள். திருமணமும் நின்றுவிடும். இவர்களுக்கு எல்லாம் சனியின் தொடர்பு சந்திரனுக்கு கிடைத்தால் இப்படி நடக்கும்.

சந்திரனுக்கு இராகு அல்லது கேதுவின் தொடர்பிலும் சிக்கல் இருக்கின்றது. ஒரு சிலருக்கு இவர்கள் வாயால் சொல்லி கெடுவதை விட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லி கெடுத்துவிடுவார்கள். இவர்களுக்கு வெளியில் உள்ளவர்கள் சொன்ன விசயம் திருமணத்தை பாதிக்கும். இப்படியும் கெட்டவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். 

சந்திரன் ஒரு சில நேரத்தில் தேய்பிறை அல்லது அமாவாசையில் இருந்தாலும் அவர்களுக்கும் திருமணத்தில் ஒரு சில பிரச்சினையை கிளப்பிவிடுவது உண்டு. உங்களுக்கு சந்திரனால் பிரச்சினை வருகின்றது என்றால் அதுவும் திருமணத்தில் பிரச்சினை வருகின்றது என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தில் கலந்துக்கொண்்டு பயன்பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருமண தடை 4


வணக்கம்!
          திருமண தடையில் பெரிய விசயமாக இருப்பது சந்திரன் ஏழில் மற்றும் எட்டில் இருப்பதும் ஒரு தடையாகவே இருக்கும். ஒரு சிலருக்கு லக்கனத்தில் சந்திரன் அமர்ந்தாலும் திருமணம் தள்ளி போக வாய்ப்பு இருக்கின்றது.

சந்திரனை எல்லாம் பெரும்பாலும் திருமண தடைக்கு என்று கண்காணிக்க மாட்டார்கள். சந்திரன் திருமண தடையை நிறையவே ஏற்படுத்தும். கால தாமதமாக திருமணம் நடைபெறுதற்க்கும் சந்திரனை தான் காரணமாக இருக்கின்றது.

கடக லக்கினமாக இருந்து எட்டில் சந்திரன் அமர்ந்தால் அவர்க்களுக்கு திருமணம் நடைபெறுவது என்பது சந்தேகமாகவே இருக்கும்.சந்நியாசி யோகம் உடைய ஜாதகமாகவே இதனை பார்க்க வேண்டும். 

பெண்களின் ஜாதகத்தில் சந்திரன் ஏழில் மற்றும் எட்டில் அமர்ந்தால் அந்த ஜாதகிக்கு திருமணம் நடைபெறுவது கடினம் அப்படியே அவர்க்கு திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்க்கு பிறகு அவர்களின் துணையை அவர்கள் இழக்க நேரிடும்.

சந்திரனை லக்கினம் ஏழாவது வீடு மற்றும் எட்டாவது வீடு போன்றவற்றையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இப்படி உங்களின் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சித்தர்கள் பகுதி 1



வணக்கம்!
          ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை உருவாகும்பொழுதே ஆத்மா அதனுள் புகுந்து உடல் எடுக்க வைக்கின்றது. ஆத்மா ஒரு உருவத்தோடு பிறந்து வருகின்றது. நாம் சோதிடத்தில் பிறந்த நேரத்தை மட்டுமே கணக்கில் கொண்டு சொல்லுவோம். ஆத்மா கரு உருவாகும்பொழுதே அது தன்னுடைய பயணத்தை தொடங்கிவிடுகின்றது.

ஒரு குழந்தை எப்படி உருவாகவேண்டும் எங்கு உருவாகவேண்டும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அது வளரவேண்டும் என்பதைப்பற்றி முடிவு செய்யப்பட்டு வருகின்றது. தாய் தந்தை காரணமாக இருந்து இந்த செயல் நடக்க ஆரம்பிக்கின்றது.

நம்முடைய வாழ்வில நாம் இத்தோடு இந்த பிறவி முடியபோகின்றதா என்ற ஒரு கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் பல விசயங்கள் தேட ஆரம்பிப்பார்கள். இதனை வைத்து தர்மத்தை சொல்லி வருவார்கள். குழந்தையாக இருக்கும்பொழுது இருந்தே தர்மம் செய்யவேண்டும் என்று சொல்லுவார்கள். நல்லதை மட்டும் செய்யவேண்டும் என்று சொல்லுவார்கள். இது அனைத்தும் முற்பிறவி மற்றும் அடுத்த பிறவியை பற்றி மனதின் கணக்கில் வைத்து சொல்லுவார்கள்.

உடல் வழியாக செய்யும் அனைத்தும் மற்றும் மனது வழியாக செய்யும் காரியங்கள் அனைத்தும் ஆத்மாவிற்க்கு செல்கின்றது என்ற விதியைப்படி சொல்லுவார்கள். உண்மையில் ஆத்மா இதனை எல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு செல்வது போல தெரியவில்லை இதனை எல்லாம் கணக்கு வைத்துக்கொண்டு செல்வதற்க்கு என்று தனியாக ஆள்வேண்டும் என்பது போல தோன்றுகின்றது.

ஆத்மாவிற்க்கு அழிவில்லை என்பார்கள். ஆத்மாவிற்க்கும் அழிவு இருக்கவேண்டும் நம்முடைய அனைத்தும் ஏதோ ஒன்று கணக்கில் வைத்துக்கொள்வதற்க்கு ரெக்கார்ட் ஒன்று இருக்கின்றது. தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் காலத்தில் அது புதிக்கப்பட்டு இந்த பூமியில் பிறப்பை எடுக்க வைக்கின்றது.

நல்லது கெட்டது பார்த்து பிறப்பை எடுக்க வைக்கின்றது என்பதை விட ஏதோ ஒன்றை சரி செய்ய இந்த பிறப்பை எடுக்க வைக்கலாம். ஒரு தொடர்ச்சியான விசயத்தை சரி செய்வதற்க்கும் இந்த உலகத்தை இயக்க தேவையான ஒரு செயல் செய்வதற்க்கும் இந்த பிறப்பை எடுக்க வைக்கலாம். இந்த பிறப்பில் செய்ய முடியாததை அடுத்த பிறப்பிலும் செய்ய மறுஜென்மமும் எடுக்க வைக்கலாம்.

கஷ்டமோ அல்லது நஷ்டமோ நம்முடைய கையில் இது இல்லை என்று நினைத்துக்கொண்டு நாம் செயல்பட மட்டுமே வந்தோம் என்று நினைத்து செயல்பட்டால் நல்லது என்று நினைத்து செயல்பட ஆரம்பியுங்கள்.

பல பேர் என்னிடம் எதுவும் இல்லை என்று செயல்படாமலேயே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். செயல்படாமல் இருந்தால் எப்படி செயல் நடைபெறும். நம்முடைய செயலை போட்டுவிடவேண்டும் அது வெற்றியோ அல்லது தோல்வியோ என்பதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. செயல் மட்டும் தேங்கிவிடாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.

சித்தர்கள் என்று சொல்லிவிட்டு ஆத்மாவைப்பற்றி எழுதுகிறார் என்று நினைக்கலாம். சித்தர்கள் மற்றும் புண்ணிய ஆத்மாக்கள் சொன்ன அனைத்து விசயத்தையும் வைத்து பார்த்தால் கடைசியில் சேரும் இடம் இதுவாகவே இருக்கும்.

நண்பர்களே மேலே சொன்னது அனைத்தும் என்னுடைய அறிவால் மட்டுமே சொல்லுகிறேன். உங்களின் சிந்தனையில் இதனை வைத்து சிந்தித்து பார்க்கலாம். உங்களுக்கு புதியதாக ஏதாவது தோன்றினால் அதனை என்னிடம் பகிர்ந்துக்கொள்ளலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு