Followers

Friday, February 28, 2014

காயத்ரி மந்திரப்பயிற்சி


ணக்கம் ண்பர்களே!
                    எந்த ஒரு செயலை தொடங்கினாலும் அதனை நாம் நல்ல நேரம் பார்த்து தான் தொடங்கவேண்டும். ஒரு காரியம் வெற்றி பெறுவது நாம் தொடங்கும் நல்ல நேரத்தில் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட நல்ல நேரம் இப்பொழுது வருகிறது..நமது ஜாதககதம்பம் வழியாக காயத்ரி மந்திரப்பயிற்சி ஒன்று மட்டும் தான் ஆன்மீகவழியில் கற்க சொல்லி தரப்படுகிறது.

ஒரு சிலர் காயத்ரி மந்திரப்பயிற்சி என்றால் ஏதோ தனியாக வகுப்பு வைத்து கற்றுக்கொடுப்பார் என்று நினைததுக்கொண்டு இருக்கின்றனர். அப்படி எல்லாம் வகுப்பு வைத்து கற்று தருவது இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதனை செய்யலாம்.

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். காயத்ரி மந்திரப்பயிற்சி செய்தால் உங்களை போலவே நாங்கள் செய்யமுடியுமா என்று கேட்டார். கண்டிப்பாக முடியும் அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். கடுமையான உழைப்பு தேவைப்படும்.எந்த ஒரு வெற்றிக்கும் உழைப்பு இல்லாமல் இருக்காது. நீங்கள் உழைத்தால் கண்டிப்பாக ஆன்மீகத்தில் சாதிக்கமுடியும்.

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யும்பொழுது மட்டுமே அதில் நீங்கள் நிபுணர் ஆகலாம். காயத்ரி மந்திரப்பயிற்சியும் அப்படி தான் ஏதோ நாமும் செய்வோம் என்று இறங்காமல் இதில் நாம் வெற்றி பெறுவோம் என்று தொடர்ந்து செய்யவேண்டும்.

நீங்களும் ஆன்மீகவாதிகளாக மாறுவதற்க்கு ஒரு வாய்ப்பு வரும் வளர்பிறையில் இருந்து வருகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். காயத்ரி மந்திரப்பயிற்சி எப்படி செய்யலாம் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ள என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மறுபிறவி பகுதி 3


வணக்கம் நண்பர்களே!
                    கடந்த பதிவில் சொல்லிய கருத்தில் உங்களுக்கு ஒரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் ஒரு சில தகவல்களை பார்க்கலாம். ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு பிறவியாக தான் எடுக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இது மனித பிறவி மட்டும் இல்லை பல உயிரனங்களாக எடுத்து வந்து மனித பிறவிக்கு வருகிறது. மனித பிறவி வந்து அதில் இருந்து உயர்ந்த நிலையான கடவுளின் நிலையை அடைய மனிதபிறவி எடுக்கிறது. 

சோதிடத்தில் கூட இதனை நீங்கள் தெரிந்து இருக்கமுடியும் என்ற நினைக்கிறேன். எந்த உயிரனத்தில் இருந்து மனித பிறவி எடுத்தது என்பதை கூட சோதிடத்தில் சொல்லியுள்ளார்கள். அதனைப்பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆட்டில் இருந்து வந்த பிறவி மற்றும் நாயில் இருந்து வந்த பிறவி என்று சொல்லியுள்ளார்கள்.

ஒரு ஆத்மா மனித பிறப்பில் இருந்து மட்டும் வந்தது இல்லை அனைத்து உயிர்களில் இருந்து தான் வந்தது என்பதை இதனை வைத்தே தெரிந்துக்கொள்ளமுடியும். உலகத்தில் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே செல்லுகிறது. ஒரு ஆத்மா மனித பிறப்பு மட்டும் எடுத்து இருந்தால் இத்தனை மக்கள் வருவதற்க்கு வழியே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

மனிதபிறப்பிலேயே பல ஜென்மங்கள் எடுக்கிறது. மனிதப்பிறப்பு ஒரு முழுமையான படைப்பாக தான் வருகிறது. மனிதப்பிறப்பை வைத்து நீங்கள் கடவுளிடம் செல்லுவதற்க்கு பல வழிகள் இருக்கின்றது ஆனால் யாரும் அதனை விரும்புவதில்லை என்பது தான் துரதிஷ்டம்.

மனிதப்பிறப்பு என்பது மகத்தான படைப்பாக இருந்தாலும் அதில் மனிதன் செய்யும் தவறு அதிகமாக இருக்கின்றதால் அவனின் ஜென்மங்கள் அதிகமாகி மறுபிறவி மறுபிறவி என்றே சென்றுக்கொண்டே இருக்கின்றது.

தொடர் ஆரம்பித்து மூன்று பதிவுக்குள் பல பேர் ஜாதகத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். கொஞ்சம் பொருங்கள் அனைத்தையும் பார்க்கலாம். உங்களின் ஜாதகத்தை வைத்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

முதலில் மறுபிறவியை பற்றி சோதிடத்தில் உள்ள தகவலை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 27, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னை சந்தித்தார். அவரும் ஒரு ஆன்மீகவாதி அவர் சந்தித்து பேசும்பொழுது என்னிடம் ஒரு சில குண்டலினியைப் பற்றி கேட்டார். நான்  பதில் சொல்லவில்லை.

எனக்கு புத்தகஅறிவு என்பது சுத்தமாக கிடையாது. அனைத்தும் செய்முறையில் கற்றுக்கொடுத்தார் குரு. என்னிடம் வந்து புத்தகத்தில் இருக்கும் விசயத்தைப்பற்றி கேட்டால் கண்டிப்பாக எனக்கு தெரியாது என்று தான் பதில் சொ்ல்லுவேன்.

சக்தி இருக்கிறது என்று நினைத்தால் தாராளமாக என்னிடம் வந்து பேசும்பொழுது உங்களுக்கு நன்றாக அதனை உணரமுடியும். நீங்களும் ஆன்மீகவாதியாக இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் ஒரு இடத்தில் ஒரு சக்தி இருக்கிறது என்றால் கண்டிப்பாக அதனை நாமும் பெறவேண்டும் என்று நினைத்து அங்கு சென்று பெறுவார்கள்.

என்னிடம் இருக்கும் சக்தியை பெறவேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பேசும்பொழுது அதனை உங்களால் பெறமுடிகிறது என்றால் எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆன்மீகவாதி சக்தியை எடுப்பதில் தான் மிகபெரிய விசயமே அடங்கி இருக்கிறது. பதிவுக்கு வந்தவர்களில் குறைந்தது ஐந்து பேராவது அதனை உணர்ந்து என்னிடம் எடுத்து உள்ளார்கள். ஆன்மீகவாதி என்று வெளிவேஷம் போட்ட ஒரு ஆள் கூட அதனை பெறமுடியவில்லை.

சக்தியை எடுப்பதில் தான் நிறைய கஷ்டப்படவேண்டும் அப்படி கஷ்டப்பட்டு எடுத்த சக்தியை வீணாக செலவும் செய்துவிடகூடாது. ஒழுங்காக அதனை பயன்படுத்தவேண்டும். இதனை உணருவதற்க்கே பல நாட்கள் நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். கண்டிப்பாக இப்படி எல்லாம் நீங்கள் வரும்பொழுது தான் ஒரு ஆன்மீகவாதியைப்பற்றி புரியும். சக்தி என்றால் என்ன என்று புரியும். வாழ்க்கையில் நீங்கள் செய்யும் வேலையோடு ஆன்மீகவழியையும் சேர்த்து செய்யும்பொழுது வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்லலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மறுபிறவி பகுதி 2


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு மனிதன் என்ன தான் வாழ்ந்தாலும் அதாவது அனைத்து சுகத்தையும் அனுபவித்தாலும் கடைசி நேரத்தில் அவனுக்கு தீராத ஆசை என்ன என்றால் அது அடுத்த பிறவியிலும் இதேப்போல் பிறந்து அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் எஞ்சி நிற்க்கும்.

அப்படி எண்ணம் ஏற்பட்டவுடனே எப்படி அந்த மனிதனுக்கு மோட்சத்தை கொடுப்பது? மறுபிறவி எடுக்க தான் வைப்பார் கடவுள். மனிதனின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார் கடவுள் ஆனால் அது எந்த பிறவி என்று சொல்லமுடியாது. உங்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றிவிட்டு தான் உங்களை அவருடன் சேர்ப்பாரே தவிர நிறைவேறாமல் சேர்க்கமாட்டார்.

உங்களின் விருப்பம் அனைத்தும் உங்களின் ஆத்மாவில் படிந்திருக்கும். அதனை வெளிப்படுத்த தக்க சமயம் பார்த்துக்காெண்டு இருக்கும். அந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது கடவுளின் வேலை. சூழ்நிலை அமைந்துவிட்டால் ஆத்மா வெளிகாட்ட ஆரம்பித்துவிடும்.

உங்களுக்கு ஒரு விருப்பம் ஏற்படுகிறது என்றால் அது உங்களின் ஆத்மா அதனை கேட்கிறது என்று அர்த்தம். உங்களின் உடலை வைத்து அது திருப்திபடுத்துகிறது. உடலை ஒரு கருவியாக அது பயன்படுத்தும்.

என்னை பொருத்தவரை எதுவும் தவறு என்று சொல்லமாட்டேன். ஏன் என்றால் அவனுக்குள் இருக்கும் ஆத்மாவின் தேடுதலுக்கு அவன் செய்த செயலாக தான் அது இருக்கும். அது தவறு கிடையாது என்பேன். ஒரு சில நேரங்களில் ஆத்மா விபரீதமாக கேட்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் கருவியாக உடலும் காயப்படும் அதனை மீறி ஆத்மாவும் காயப்படும்.

மறுபிறவி தொடரும்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சிவன் இல்லை சக்தி இல்லை


வணக்கம் நண்பர்களே!
                    நான் என்ன தான் அம்மன் என்று புகழ் பாடினாலும் சிந்தனையில் சிவனை வைத்தால் தான் வேலை நடக்கும் நாமும் நன்றாக இருக்கமுடியும். 

சிவன் இல்லை என்றால் சக்தி இருக்காது. ஒரு நாளும் நம்மிடம் இருக்காது. எப்பேர்ப்பட்ட அம்மன் கோவிலாக இருந்தாலும் அந்த கோவிலில் ஒரு சிவன் வேறு வடிவில் இருப்பார். அவர் அங்கு இருப்பதால் தான் சக்தி அந்த இடத்தில் இருக்கும்.

ஒரு சில நண்பர்கள் கூட என்னிடம் கேட்டார்கள் என்ன சார் அம்மன் அம்மன் என்று சொல்லுகிறீர்களே சிவனை கும்பிடமாட்டீர்களா என்று கேட்டார். சிவனை கும்பிடுவோம் அதே நேரத்தில் எந்த நேரமும் அம்மனை துதிக்கும்பொழுது அம்மனோடு தான் அப்பன் இருப்பார். அந்த காரணத்தால் அம்மனை துதிப்பது வழக்கம்.

இதனை எல்லாம் இப்படி தான் செய்யவேண்டும் என்று எங்களின் ஆதிகுருவின் வழிகாட்டுதலின் படி நடப்பதால் ஒரு சிஸ்டம்போல் இருக்கும்.வெகு எளிதாக அனைத்தையும் அடையமுடியும்..சிவன் இல்லாமல் சக்தி மட்டும் தனியாக எங்களிடம் இருக்காது. அம்மனை கும்பிட்டாலும் மனதில் சிவனையும் துதித்து வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தேர்வு நேரம்


ணக்கம் ண்பர்களே!
                    தற்பொழுது உங்களின் குழந்தைகளுக்கு தேர்வு நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதால் அவர்களை தொந்தரவு செய்யும் விதமாக நீங்கள் நடந்துக்கொள்ளாதீர்கள். வீட்டில் டிவியை ஆன் செய்து நாடகம் பார்த்துக்கொண்டிருப்பது அல்லது வேறு நிகழ்ச்சி பார்ப்பதை தவிர்க்கவும். அதோடு இலலாமல் இப்பொழுது எல்லாம் செல்போன் தான் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிறது செல்போன் வைத்தக்கொண்டு பேசிக்கொண்டிருப்பது அல்லது அதில் ஏதாவது வேலை செய்துக்கொண்டிருப்பது இது தான் அதிகநேரம் செய்துக்கொண்டிருப்பீர்கள்.

உங்களின் குழந்தைகளுக்கு அருகாமையில் இருந்துக்கொண்டு செல்போனில் பேசகூட செய்யாதீர்கள். அவர்கள் கவனிக்காது பாேல் இருப்பார்கள் ஆனால் உங்களை அவர்கள் கவனித்துக்கொண்டு தான் இருப்பார்கள். முற்றிலும் தவிர்ப்பது நல்லது

உங்களின் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள். தொந்தரவை தரும் உணவை தவிர்க்க பாருங்கள். தேர்வு நேரத்தில் உடல்நிலை பிரச்சினை தந்தால் அவர்களின் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்படும். அதனால் உணவு விசயத்தில் கட்டுபாடு தேவை.

உங்களின் குழந்தைகளை அடிக்கடி கோவிலுக்கு கூட்டி சென்று வழிபட்டு வாருங்கள். உள்ளூரில் உள்ள கோவிலாக அது இருக்கட்டும். தன்னம்பிக்கை தருவது போல் பேசுங்கள். தோல்வி பயத்தை நீங்களே உருவாக்கிவிடாதீர்கள். உங்களின் வாழ்க்கையின் அர்த்தம் உங்களின் குழந்தைகளுக்கு ஒரு நல்லவாழ்க்கையை ஏற்படுத்தி தருவது தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.நமது அம்மனிடமும் பிராத்தனையை வையுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, February 26, 2014

வாழ நினைத்தால் வாழலாம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் நிறைய கஷ்டப்பட்டு எழுதியது எதற்க்கு என்றால் அதனை படித்துவிட்டு புரிந்துக்கொண்டு வாழ்க்கையில் மனிதன் முயற்சித்தால் எதனையும் அடையமுடியும் என்பதை காட்டுவதற்க்கு தான் எழுதுகிறேன். ஒரு சில நண்பர்கள் சோதிடபதிவை படித்துவிட்டு நமக்கு இப்படி தான் விதி என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அது தவறு,

இன்று காலையில் ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அவருக்கு ராகு தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது அதனை பார்த்த சோதிடர்கள் உனக்கு திருமணம் நடைபெறாது என்று சொல்லிவிட்டனர். அவரும் அதனை நம்பி இருக்கிறார்.

இந்தியாவில் முக்கால்வாசி ஜாதகத்திற்க்கு திருமண தோஷம் இருக்க தான் செய்யும். அவர் அவர்கள் கஷ்டப்பட்டு திருமணத்தை நடத்திக்கொள்கிறார்கள். தன்னுடைய ஆன்மீகபலத்தால் அனைத்து தடையையும் மீறி வெற்றி பெறுகிறார்கள். அப்படி எடுத்துக்கொண்டு திருமணத்தை ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டியது தான்.

தோஷம் ஒரு பக்கம் இருக்கட்டும் என்று விட்டுவிட்டு தன் முயற்சியால் செய்யவேண்டியது உங்களின் பொறுப்பு அப்படி இல்லை நீங்கள் கிரகத்தோடு சேர்ந்து நீங்களும் வீணாக போய்விடுவீர்கள்.எப்பேரபட்ட தோஷத்திற்க்கும் ஒரு மாற்று ஏற்பாடு உண்டு என்பதை அறியுங்கள். அந்த மாற்று ஏற்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு வாழவேண்டியது தான். மனிதன் நினைத்தால் வாழமுடியும் என்பதை காட்டுவதற்க்கு தான் ஜாதககதம்பம் வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

மறுபிறவி பகுதி 1


ணக்கம் ண்பர்களே!
                    புதிய தொடர் ஏதாவது ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஒரு சில சிந்தனை செய்யும்பொழுது எதார்த்தமாக ஒரு சகோதரி மறுபிறவியை பற்றி எழுங்கள் என்று இன்று காலையில் எழுதியிருந்தார்கள். சரி அம்மன் விட்ட வழி என்று மறுபிறவியைப்பற்றி எழுதிவிடலாம் என்று ஆரம்பித்துவிட்டேன்.

எப்பேர்பட்ட மனிதனுக்கும் மறுபிறவி மற்றும் சென்றபிறவியைப் பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். திராவிடத்தில் இருப்பவர்களுக்கே இதனைப்பற்றி எல்லாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஒரு சாதாரண மனிதனுக்கு ஆசை இருக்காதா என்ன அப்படிப்பட்ட மறுபிறவியைப் பற்றி எனக்கு தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

மறுபிறவி என்பது கிடையாது என்று ஒரு சிலர் வாதிடகூடும். அதனைப்பற்றி எல்லாம் நமக்கு தேவையில்லை. சோதிடம் என்பது முற்பிறவியில் செய்த பாவபுண்ணிய கணக்கு. அந்த கணக்கில் இருந்து இந்த வாழ்க்கை எப்படி வாழபோகிறோம் என்றும் காட்டும் அதே நேரத்தில் நாம் போய் சேருகின்ற பிறவியையும் காட்டும் ஒரு மிகசிறந்த ஒரு கைடு என்றால் அது உங்களின் ஜாதகம் தான். இந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு அனைத்தையும் கணிக்கமுடியும்.

நாம் அடுத்து எடுக்கும் பிறவியை காட்டும் சோதிடத்தில் உள்ள தகவலையும் உங்களுக்கு தரபோகிறேன். சொந்த தகவலையும் தரபோகிறேன்.ஒரு மனிதன் எத்தனையோ பிறவியை எடுத்து வந்து தான் இந்த பிறவியை அடைந்திருக்கிறான். இந்த பிறவிக்கு பிறகும் மனிதன் பிறப்பு எடுப்பான். 

பிறவி பிறவியாக எடுத்து வந்த மனிதன் கழைப்பு ஏற்பட்டு இனி பிறவி வேண்டாம என்று நினைத்து ஆன்மீக பக்கம் ஒதுங்குகிறான். ஆன்மீகபக்கம் ஒதுங்கினாலே போதும் அவன் முடிவு எல்லையை தொட்டுவிட்டான் என்று அர்த்தம். பிறவி சுற்றுபாதை முடிந்துவிட்டது என்று அர்த்தம். தனது சுயதேவைக்காக ஆன்மீகபக்கம் ஒதுக்கினாலும் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகம் வந்துவிடுகிறது.

ஆன்மீகத்தில் இருப்பவன் என்ன செய்வான் கடைசியில் உயிர்போகும்பொழுது அவன் பயத்திலேயோ அல்லது பழக்கத்திலேயோ அவன் ராம ராம என்று சொல்லிவிடுகிறான். அவன் சொல்லமுடியாவிட்டாலும் பக்கத்தில் இருப்பவர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிவிடுவார்கள். அவன் கடவுளிடம் சேர்ந்துவிட்டான் என்ற அர்த்தம்.

கிராமத்தில் ஒரு பழக்கம் இருக்கும். இறப்பவர்கள் ஆத்மா உடலை விட்டு பிரியும் நேரத்தில் பாலை ஊற்றுவார்கள் அதோடு துளசியை தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றுவார்கள். இது எல்லாம் கடவுளிடம் செல்லவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே.

எப்படிபட்ட கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்கு கடைசி நேரத்தில் இந்த தண்ணீர் தான் அவனுக்கு வழிவகுக்கிறது என்பது அவனுக்கு தெரியும். கடவுள் அனைவருக்கும் கருணையை காட்டுகிறார்.

ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகம் ஆசைப்பட்டு அந்த ஆசை நிறைவேறாமல் இருக்ககூடாது நிறைவேறி இருந்தால் அவனுக்கு மோட்சத்தை தரும். இதனை நான் சொல்லவில்லை பகவத்கீதை சொல்லுகிறது.

இப்படிப்பட்ட வாய்ப்பை கடவுள் கொடுத்தாலும் மனிதன் சும்மா இருக்கமாட்டான். உலகத்தை தன் வசம் கொண்டுவரவேண்டும் என்று ஆசைபட்டுவிடுவான். அந்த ஆசையை நிறைவேற்றினால் மட்டுமே அவனுக்கு மோட்சம் அப்படி இல்லை அவன் மறுபிறவி எடுத்தே தீரவேண்டும்.


தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினையும் தீர்வும் பகுதி 22


ணக்கம் ண்பர்களே!
                    என்ன தான் நாம பேசினாலும் நம்மை மக்கள் விடமாட்டார்கள் என்பது தெரிந்த ஒன்று. எப்படியாவது தன் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் இவன் போனால் போகட்டும் வேற ஆளை பார்த்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள்.

நாம் என்ன தான் சாமியை கும்பிட்டாலும் ஒரு சில கர்மாவை ஆன்மீகவாதிகளை நாடி தான் குறைக்கமுடியும் அது விதி. ஒவ்வொரு ஆன்மீகவாதியையும் படைப்பதே அதன் நோக்கத்தால் மட்டுமே. மனிதன் வழியாக தான் மனிதனுக்கு தீர்வு கிடைக்கும்.

நான் இதனை கற்க நினைத்து ஒவ்வொருவரிடமும் சென்று நிற்கும் பொழுது அவர்களை என்னை படுத்திய பாடு அப்படிப்பட்டது. ஒன்றைப்பற்றி ஒருவர் கற்றுவிட்டால் அவர்கள் அவ்வளவு எளிதில் அதனை நமக்கு தந்துவிடமாட்டார்கள்.

அவர்கள் வெயிட் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நாம் என்ன செய்வது நமக்கு வயிற்றுவலி நின்று தான் ஆகவேண்டும். அப்படி தான் நான் கற்றேன். அவர்கள் செய்வதிலும் ஒரு நியாயம் இல்லாமல் இல்லை. அனைத்திற்க்கும் காரணம் என்பது இருக்கிறது

உங்களுக்கு சொல்லுவது எல்லாம் நன்றாக விசயம் புரிந்த ஆட்கள் அவ்வளவு எளிதில் இறங்கி வரமாட்டார்கள். ஒன்றும் தெரியாதவர்கள். கொஞ்சம் படித்தவர்கள் உடனே விலையை பேசி நான் செய்து தருகிறேன் என்று சொல்லுவார்கள்.

பொதுவாக சோதிடம் அனைவருக்கும் தெரியும் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்று உங்களின் ஜாதகம் காட்டினால் கண்டிப்பாக பிரச்சினை நடக்காமல் இருக்காது. பிரச்சினையை நீங்களே தீர்க்க நினைக்கிறீர்களாக அல்லது ஆன்மீகவாதியை நாடி தீர்க்கிறீர்களாக என்பது தான் நீங்கள் எடுக்கும் முடிவாக இருக்கவேண்டும்.

நீங்களே தீர்க்கவேண்டும் என்று நினைக்கும்பொழுது நீங்களே பரிகாரத்தை செய்துக்கொள்வது நல்லது. அதுவும் அந்த பிரச்சினை நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும்பொழுது மட்டுமே. பெரிய பிரச்சினை என்று வந்தால் ஆன்மீகவாதியை நாடி தீர்த்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது எல்லாம் மக்களுக்கு இருக்கும் வேலை பளு காரணமாக நல்ல ஆன்மீகவாதியை நாடி நீங்களே இதனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். என்னிடம் தொழில் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் நான் இப்படி தான் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு பிரச்சினை என்பது மலையளவு இருக்கின்றது என்று தெரியவந்தால் ஆன்மீகவாதி நாடுவது நல்லது. என்னையே தேடி வரவேண்டும் என்பது இல்லை. உங்களின் அருகாமையில் அவர் இருந்தால் மிகவும நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 91


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் ஒரு தகவலை பார்க்கலாம். குரு ஆறில் இருந்து தசா நடைபெற்றால் அந்த நபருக்கு அடிக்கடி ஜீரணகோளாறு ஏற்படும். அதே நேரத்தில் அந்த நபர் மந்திரங்களை கொண்டு எதிரியை வீழ்த்த நினைப்பார். 

எப்படிப்பட்ட நல்ல மனிதனும் நேர்வழியில் செல்லுவதைவிட குறுக்கு வழியில் செல்லுவதை அதிகம் விரும்புவான். மந்திரங்கள் என்ன தான் நல்ல வேலைக்கு பயன்படுத்தினாலும் ஒரு சில நேரங்களில் தவறான வழிக்கு பயன்படுத்தி தான் பார்ப்போமே என்று நினைப்பான்.

குரு கிரகம் ஒருவருக்கு ஆறில் இருந்தால் அந்த நபர் கற்கும் மந்திரங்கள் கூட அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மந்திரங்களாக தான் இருக்கும். மந்திரங்கள் தீங்கு விளைவிக்கிறதோ இல்லையோ இவர்கள் அதனை நம்பி கற்றுக்கொண்டு இருப்பார்கள்.

குரு கிரகம் ஆறில் நின்று வக்கிரமாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது மிக தீவிரமாக அவர்களுக்கு மந்திரங்கள் கற்றுக்க்கொள்ளமுடியும்.

குரு தசாவே மந்திரங்கள் மீது ஒரு தனிப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்தினாலும் இப்படிப்பட்ட வீட்டில் இருந்து குரு தசாவை நடத்தும்பொழுது இவ்வகையான மநதிரங்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, February 25, 2014

தொடருவோம்


வணக்கம் நண்பர்களே!
                    கொஞ்ச நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டேன். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் இருந்ததால் எழுதவில்லை. இனி தொடர்ந்து பார்க்கலாம். ஒரு சில நண்பர்கள் போன் செய்து என்ன சார் யாருமே வரகூடாது என்ற மாதிரி எழுதுகிறீர்கள். அதனை தவிர்த்து எழுதுங்கள் என்று சொல்லிருந்தார்கள். நான் எப்படி எழுதினாலும் நண்பர்கள் விடாமல் துரத்திக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அவர்களுக்கு காரியம் நடந்தால் சரி என்று வந்துவிடுகிறார்கள். என்னால் முடிந்தவரை செய்துக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஒரு சிலரை சோதனை செய்வது எதற்க்காக என்றால் ஏகாப்பட்ட கர்மாவை வைத்துக்கொண்டு நல்லவர்களாக வெளிவேஷம் போட்டு வருவார்கள். 

அவர்களை ஒரு சின்ன டெஸ்ட் செய்தாலே போதும்.வெளிச்சம் வெளியாகிவிடும். கர்மா எப்படிப்பட்டது என்பதை புரிந்துக்கொண்டுவிடலாம். என் மேல் கோபப்பட்டு என்னை திட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். நான் எதைப்பற்றியும் கவலை கொள்வது என்பது கிடையாது.

முதன் முதலில் தொழில் செய்பவர்களுக்கு ஆன்மீகவழியில் உதவுகிறேன் என்று சொல்லும்பொழுது பல நண்பர்கள் கிண்டல் செய்து கமெண்ட் போட்டார்கள். இன்றைக்கு நான் செல்லும் பயணங்கள் எல்லாம் தொழில் அதிபர்களை சந்திக்க தான். இன்று கோடிகளை கொண்டுவதற்க்கு ஆட்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

எப்படி சாத்தியமாகியது என்பது வியப்பாக இருக்கும். அனைத்தும் அம்மனின் சக்தி மட்டுமே. என்னால் தொழிலுக்கு செய்யமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். நீங்கள் நினைத்தக்கொண்டு இருக்கலாம் உழைப்பு தான் உயர்த்தும் அது தான் வெற்றி பெறும் என்று நினைக்கலாம் ஆனால் அதனை மீறி ஒரு சக்தி இருந்தால் மட்டுமே தொழில் வெற்றி பெறும்.

அதனை தான் தொழில் செய்பவர்களுக்கு செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இன்று மிகப்பெரிய தொழிலை எடுத்துசெய்கிறேன். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் உழைப்பு மட்டும் போதும் என்று இருந்தால் என்னை தேடி இவர்கள் வரமாட்டார்கள் அலலவா.

என்னிடம் பணம் அதிகம் தான் ஆனால் தொழில் சொன்ன மாதிரி நடைபெறும். அதற்க்காக பல பேர் எவ்வளவு வேண்டுமானாலும் தருபவதற்க்கு தயாராக இருக்கின்றார்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, February 20, 2014

வெளியூர் பயணம்


ணக்கம் ண்பர்களே!
                                                      ஒரு சில நண்பர்களை சந்திப்பதற்க்காக வெளியூர் செல்கிறேன். ஞாயிறுக்கிழமை அன்று சென்னை திரும்புவேன். ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பார்க்கலாம். நேரம் கிடைத்தால்  பதிவை தருகிறேன்.

சோதிடபலனுக்காக காத்திருப்பவர்களுக்கு நான் சென்னை திரும்பியவுடன் சொல்லுகிறேன்.

சோதிட தகவல்
 
ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு ஒரு சில விதிகள் இருந்தாலும் ஒரு சில கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பயணம் செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பார்கள்.

சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது பயணம் செய்தாலும் கேதுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணம் செய்தாலும் சம்பந்தப்பட்ட நபர் சிறந்த ஆன்மீகவாதியாக மாறுவார்கள். ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு இழுத்துச்செல்லும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, February 19, 2014

கேள்வி & பதில்



 கேள்வி
ஸ்ரவாணி
நீங்கள் வேறு எந்த தெய்வங்களுக்கு உரிய மந்திரம் தந்திரம்
சொல்லா விட்டாலும் தயவு செய்து கண்டிப்பாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திர தந்திர [உரிய மூலிகை இவை எல்லாம் சித்தர் முறை போன்று ] முறையினைக் கூறவும்.

பதில்

வணக்கம் என்னை பொருத்தவரை அனைத்தையும் வெளிபடையாக சொல்லவேண்டும் என்று நினைப்பவன் ஆனால் என்ன செய்வது குருவின் பேச்சை மீறி ஒன்றும் செய்யமுடியாது. குரு என்னை கட்டுபடுத்தவில்லை அவர் என்ன சொன்னாரோ அதனை மீறி செய்யும்பொழுது எனக்கு வரும் தீமைகளை நானே எதிர்த்து நின்று போராடவேண்டும். 

உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கும்பொழுது என்னை தேடி ஒருவர் கொடுத்தால் அந்த நபரின் வார்த்தைக்கு மதிப்பு தரவேண்டும். அவர் அவர் ஆன்மீகத்தில் அப்படி இருக்கிறேன் இப்படி இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது சும்மா ஊரை சுற்றிக்கொண்டு இருப்பவனுக்கு ஒன்று கிடைக்கும்பொழுது அதனை பத்திரமாக காப்பாற்றவேண்டும் என்பது எனது கடமை.

அங்காளபரமேஸ்வரி அம்மனின் மந்திரங்கள் எல்லா இடத்திலும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதனை எடுத்து பின்பு ஒரு நாளில் தருகிறேன். நீங்கள் கேட்கும்பொழுதே தெரிகிறது உங்களின் தந்திரம் என்ன என்று புரிகிறது என்னிடமே தந்திரம் செய்கின்றீர்கள். 

பொதுவாக நாங்கள் பயன்படுத்தும் மூலிகை இது வரை எந்த ஒரு புத்தகத்திலும் வராத ஒன்று தான். மூலிகைகளை குரு வழியாக தான் எங்களுக்கு தெரியவருகிறது. முதலில் என்னிடம் இந்த மூலிகையை பற்றி எந்த ஒரு காரணம் கொண்டும் வெளியில் வரகூடாது என்று சொல்லியுள்ளார் குரு. சாதாரண ஒரு மனிதனுக்கு அந்த மூலிகை கிடைத்தால் அந்த மூலிகையை வைத்தே பல வில்லங்கத்தை செய்துவிடுவார்கள். அப்பாவி பாதிக்கப்படகூடாது.

குருவை வைத்து அனைத்தையும் நீங்கள் கற்றுக்கொள்ளும்பொழுது உங்களுக்கு கிடைக்கும். நெட்டில் வரும் மூலிகையைப்பற்றி ஒரு நாள் நானும் எனது குருவும் உட்கார்ந்து பார்த்தோம். கண்டிப்பாக நான் பயன்படுத்தும் மூலிகை அது கிடையாது. புத்தகத்தை பார்த்து அப்படியே டைப் செய்து அனுப்புகிறார்கள். நீங்களும் அதனை படித்துவிட்டு அதனை தேடிச்செல்லுகிறீர்கள். அதனை வைத்து ஒரு வேலையும் செய்யமுடியாது.

சித்தர்களின் முறையைப்பற்றி கேட்டுள்ளீர்கள். நான் சித்தர்களின் முறையை எப்பொழுதாவது பயன்படுத்துவது உண்டு. எப்பொழுதும் பயன்படுத்தமாட்டேன். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி பயன்படுத்துவது உண்டு. ஒரு சில நேரங்களில் முஸ்லீம் மாதிரி செய்துக்கொண்டு இருப்பேன். அனைவரையும் குழப்புவதற்க்காக இப்படி மாற்றி மாற்றி செய்வது உண்டு. 

நான் என்ன செய்வேன் என்பது புரிந்துக்கொள்வது கடினம். இதனை ஏன் இப்படி பயன்படுத்துகிறேன் என்றால் தொழில் செய்யும்பொழுது நிறைய எதிரிகள் கூட வருவார்கள். ஒரே மாதிரி செய்யும்பொழுது எளிதில் வீழ்த்த முடியும். பல மாதிரி செய்தால் ஒன்றுமே புரியாமல் திணறிபோய்விடுவார்கள். 

பல வருடங்கள் கற்றதை ஒரே நாளில் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது உங்களின் ஆர்வத்தை காட்டுகிறது. ஒரு சிறந்த குருவை நாடிக்கற்றுக்கொள்ளுங்கள். நன்றி

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் ஏழை மக்கள் என்று குறிப்பிடுகிறீர்களே தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நன்றாக இருக்கின்றார்கள். பிச்சைக்காரர்களின் வருமானமே 1000 ரூபாய் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் சொல்லும் ஏழை யார் என்று கேட்டார்.

தமிழ்நாட்டில் ஏழை மக்கள் இல்லை என்றால் ஏன் அரிசி எல்லாம் இலவசமாக கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சென்னையில் பார்த்தால் வசதியான சொகுசான பஸ் வசதி இருந்தாலும் ஒயிட் போர்ட் பஸ்ஸில் தான் அதிகமான கூட்டம் ஏறுகிறது.ஒருவருக்கு அனைத்து வசதியும் இருந்தால் ஏன் ஒயிட் போர்ட் பஸ்ஸில் மக்கள் ஏறப்போகிறார்கள். 

ஏழை என்று சொன்னால் அவன் சாப்பாட்டுக்கு மட்டும் ஏங்குகிறான் என்று நாம் பார்க்ககூடாது. ஒரு மனிதனுக்கு அடிப்படை வசதி எல்லாம் கிடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுகிறது என்று அரசியல்வாதிகள் எல்லாம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ கிராமமக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பல கிராமங்களுக்கு நான் செல்லும்பொழுது நேராகவே பார்த்து இருக்கிறேன். அரசியல்வாதிகள் சொல்லும் பொற்கால ஆட்சியாக இருந்தால் அது இப்படி தான் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.

பல இளைஞர்கள் நமது பதிவை படித்துவிட்டு என்னை வந்து சந்தித்து பேசுவார்கள். அவர்கள் பேசும்பொழுது சார் வெளியூரில் இருந்து வந்திருக்கிறேன் எனக்கு வேலை கிடைக்கமாட்டேன்கிறது எனது ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள். அவர்களிடம் பணம் என்பதே இருக்காது. அவர்களுக்கு தேவையானவற்றை ஜாதக ரீதியாக சொல்லிவிட்டு அவர்களுக்கு பணம் கூட கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்கள் அன்றைய நாளில் ஒரு ஏழைகளாக தான் இருக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருத்தரும் ஏழைகளாக தான் இருக்கின்றனர். அந்த இடத்தில் நாம் உதவி செய்தால் போதும். ஏழைகளைப்பற்றி பல உதாரணத்தை காட்டமுடியும்.அது பதிவு நீண்டுக்கொண்டே போகும்.
 
என்னிடம் ஏழைகள் என்றைக்கும் வந்து இந்த தோஷம் இருக்கிறது என்று கேட்கமாட்டார்கள். எனக்கும் எனது மனைவிக்கும் பிரச்சினை என்று கேட்கமாட்டார்கள். அவர்கள் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லுவார்கள்.அவர்கள் உடல்நிலையை சரிசெய்துவிட்டுவிடுவேன். 

எனது குரு என்னிடம் சொல்லுவார் நம்மை படைத்தனின் நோக்கம் ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்க்கு மட்டுமே என்பார். அதனை செய்வது மட்டுமே எனது முதல் பணி.

நண்பரே இந்தியாவில் உள்ள எத்தனையோ காட்டுக்குள் தனியாக இருந்திருக்கிறேன். எந்த மிருகத்திற்க்கும் நான் பயந்தது கிடையாது ஆனால் நான் பயப்படுவது மனிதரைப்பார்த்து தான். ஒரு மனிதன் அவ்வளவு மோசமானவன்.

சோதனை ஏன் செய்கிறேன் என்றால் பிரபஞ்ச விதி என்று ஒன்று இருக்கிறது ஒரு தவறான மனிதனுக்கு செய்யும் உதவி அவனின் கர்மா முழுவதும் நம்மிடம் சேரும். 

மனிதர்களை சோதனை செய்யாமல் எந்த ஒரு ஆன்மீகவாதியும் செய்கிறேன் என்று இறங்கினால் அவன் போலி ஆன்மீகவாதி என்று அர்த்தம். மனிதர்கள் சொல்லுவார்கள் எங்களின் கர்மாவை உங்களின் வழியில் தானே தீர்க்கமுடியும் என்று கேட்பார்கள். இவன் எதனை வேண்டுமானாலும் செய்துவிட்டு வருவான் நாம் தீர்க்கவேண்டும் என்று நினைப்பான்.

 நான் என்னிடம் வரும் நபர்களிடம் கேட்கும் கேள்வி இதுவரை எந்த ஆன்மீகவாதியும் சந்தித்தது கிடையாதா என்று தான் அந்த கேள்வி இருக்கும். நீங்கள் உடனே என்னிடம் வரவேண்டும் என்பது கிடையாது. அனைத்து ஆன்மீகவாதியும் பார்த்துவிட்டு முடியவில்லை என்றால் வாருங்கள் என்று தான் சொல்லுவேன்.

இந்தியா முழுவதும் ஆன்மீகவாதிகளாக நிரம்பி வழிகிறது. தெருவுக்கு பத்து ஆன்மீகவாதிகள் சோதிடர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் சென்றுவிட்டு முடியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள். நேற்று ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இழக்காமல் எதனையும் பெறமுடியாது என்று சொன்னார் உண்மை தான். ஒன்றை பெறவேண்டும் என்றால் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக இழக்கவேண்டிவரும். இது தான் சோதிடவிதியும் கூட.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, February 18, 2014

மந்திரமும் தந்திரமும்



ணக்கம் ண்பர்களே!
                    மந்திரங்களை பற்றி ஏற்கனவே பதிவு எழுதியிருந்தாலும் இரண்டு நாட்களாக நண்பர்கள் என்னை தொடர்ந்து இதனைப்பற்றி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அதற்க்காக ஒரு பதிவை தருகிறேன்.

பொதுவாக மந்திரங்கள் மட்டும் வேலை செய்யாது. மந்திரங்களில் ஒரு சில தந்திரங்களை சேர்க்கும்பொழுது மட்டுமே மந்திரங்கள் வேலை செய்யும். வெறும் மந்திரங்களை மட்டும் உச்சரித்துக்கொண்டால் வேலை நடைபெறாது. மந்திரங்களை பொருத்தவரை ஒரு குரு வழியாக தான் உபதேசம் பெறவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. குரு தன்னுடைய ஆத்மாவின் பலத்தால் உங்களின் ஆத்மாவை தூண்டி மந்திரங்களை உபதேசம் செய்வார்.

பல நண்பர்கள் ஏகாப்பட்ட மந்திரங்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஏன் இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்டால் அதற்கு மனது சாந்தமாக இருக்கின்றது என்று சொல்லுகின்றனர். உங்களுக்கு ஒரு மந்திரங்கள் போதும் அதனை வைத்து சாந்தப்படுத்திக்கொள்ளலாம் ஏகாப்பட்ட மந்திரங்கள் தேவையில்லை.

எனக்கு தெரிந்தது ஒரு மந்திரம் மட்டுமே. பல மந்திரங்கள் தெரிந்தாலும் அதனை நேரம் வரும்பொழுது மட்டுமே பயன்படுத்துவேன். மற்றப்படி அம்மனின் மந்திரத்தை உரு ஏற்றிக்கொண்டு இருப்பது மட்டும் தான் எனது வேலை. அம்மனின் மந்திரமும் காலையில் பூஜை செய்யும்பொழுது மட்டுமே சொல்லுவது உண்டு.

பொதுவாக என்னை அவ்வளவு எளிதில் பிறரை நெருங்க விடுவதில்லை. அது எதனால் என்றால் அது ஒரு தந்திரம். நான் யாரோடு தொடர்பு வைத்திருக்கிறேனோ அவர் கொஞ்ச காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்லமுடியும். பிரச்சினையில் இருப்பவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி வைத்திருப்பேன். 

அவர்கள் என்னோடு அடிக்கடி பேச அனுமதிப்பேன். என்னை வந்து பாருங்கள் என்று சொல்லுவேன். மூன்று முறை என்னை சந்தித்தவுடன் அவர்களுக்கு காரியம் வெற்றி பெற்றுவிடும். அதோடு அவர்கள் சென்று விடுவார்கள்.

இது மந்திரங்கள் செய்யாது. நான் மந்திரங்கள் வழியாக ஏற்றிய சக்தி அவர்களுக்கு கடந்து செல்லும்பொழுது அவர்களுக்கு காரியம் வெற்றி அடைந்துவிடும். இது ஒரு தந்திரம். உண்மையை சொல்லபோனால் அவர்கள் பேசும்பொழுதே அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் ஆத்மாவிற்க்கு சக்தியை கொடுக்கிறேன். முழுமையாக கொடுக்கமாட்டேன் பிரச்சினையை தகுந்தவாறு செலுத்துவது உண்டு.

பொதுவாக ஏழைமக்களுக்கு உடனே செலுத்துவது உண்டு. மற்றபடி கொஞ்சம் வசதி இருந்தால் அவ்வளவு தான் அவர்களை சோதனை மேல் சோதனை செய்து விடுவது உண்டு. ஒவ்வொரு காரியங்களுக்கும் உள் பல வித வித்தைகள் மறைந்து உள்ளன. நாம் கற்ற மந்திரத்தை வைத்து மட்டும் ஒன்றும் நடைபெறாது. செயல்படுத்தும் கலை என்பது மிகப்பெரிய சவாலாக அமையும். அதில் வெற்றிப்பெற்றால் நீங்கள் சிறந்த மந்திர விற்பன்னர்.

 நிறைய மந்திரங்களை படித்து உரு ஏற்றுவதில் ஒன்றும் தவறு கிடையாது ஆனால் அதனால் நாம் என்ன பெற்றோம் என்பதில் தான் இருக்கிறது. ஒரு மந்திரத்தை எடுத்துக்கொண்டு ஒருவரின் வழிகாட்டிதலில் பேரில் செய்து உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளுங்கள். 

என்னிடம் வந்து தான் நீங்கள் மந்திரங்கள் மற்றும் ஆன்மீகத்தை கற்கவேண்டும் என்பது கிடையாது. உங்களுக்கு பிடித்தமானாவர்களிடம் சென்று கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் அருகாமையில் இருப்பவர்களிடமே கற்றுக்கொள்ளுங்கள் அது போதும்.

ஏன் என்னிடம் வந்து கற்றுக்கொள்ளவேண்டாம் என்று சொல்லுகிறேன் என்றால் மந்திரங்கள் வேலை செய்வது குருவின் ஆத்மா உங்களை பார்த்து பார்த்து உங்களை தூய்மைப்படுத்தி உயர்த்தும். நீங்கள் மந்திரத்தை உரு ஏற்றினாலும் குருவின் ஆத்மா உங்களின் ஆத்மாவில் பல மாற்றங்களை விதைக்கும். அதற்கு நீங்கள் உங்கள் குருவின் அருகாமையில் இருக்கவேண்டும்.  

தந்திரத்தை பயிலுவது மிக கடினம். மூளையின் செயல்பாடு அதிகமாக இருக்கவேண்டும். தந்திரம் இல்லை என்றால் மந்திரங்கள் வேலை செய்யாது.மந்திரமும் தந்திரமும் சேர்ந்தால் ஆன்மீக காரியம் வெற்றி பெறும் இல்லை என்றால் தோல்வி பெறும். நீங்கள் மந்திரங்களை சொல்லிக்கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்களுக்கு கூட காரியம் வெற்றி பெறாது.

பொதுவாக இது நீங்கள் படிக்கும் படிப்பை விட மிகப்பெரிய உலகத்தை படிக்கும் படிப்பு அதற்கு சரியான குரு வேண்டும். நீங்களும் அந்த குருவின் வேகத்திற்க்கு ஈடுகொடுத்து செல்லவேண்டும்.  இளமையில் சென்று படிக்கும்பொழுது அதன் வேகம் அதிகமாக இருக்கும் புதிய புதிய ஐடியா வரும். அதனை எல்லாம் நீங்கள் பயன்படுத்தி மந்திரத்தால் இந்த உலகத்தை கலக்கலாம்.

பல நண்பர்கள் என்னிடம் போன் செய்து என்ன சார் பதிவு எல்லாம் பணம் பணம் என்று வருகிறதே என்று கேட்டார்கள். அது ஒன்றும் கிடையாது. நிறைய ஏழைகளை காப்பாற்றுகிறேன். பணம் இருப்பவர்களிடம் பணத்தை பிடுங்கிக்கொள்கிறேன் அவ்வளவு தான்.

பணம் பணம் என்று ஓடினால் எப்படி ஒரு சக்தி என்னிடம் நிரந்தரமாக தங்கும். ஏழைகளை காப்பாற்றினால் சக்தி நம்மை விரும்பும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு போட்டி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த போட்டியில் என்ன தான் திறமை இருந்தாலும் அதில் ஒருவர் வெற்றி பெறுவதற்க்கு நம்மை நாடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அவருக்கு நாம் செய்யும் ஒரு செயலைப்பற்றி சொல்லுகிறேன்.

பத்து பேர் அதில் கலந்துக்கொண்டால் ஒருத்தர் மட்டும் நம்மை நாடும்பொழுது அந்த நபருக்கு வேண்டுதல் மட்டும் அம்மனிடம் வைத்தால் அவரின் திறமை மற்றும் அந்த நேரத்தில் அவரின் நல்ல நேரம் இருந்தால் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் சிறப்பாக அவர் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று வந்தால் அப்பொழுது நமக்கு வேலை அதிகம்.

கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்றால் மீதி இருக்கும் ஒன்பது பேரையும் கவிழ்க்கவேண்டும். ஒன்பது பேரின் குலதெய்வம் அதற்கு இடம் தராது. நாம் அப்பொழுது அந்த ஒன்பது பேரின் குலதெய்வத்தின் அருளை தடைசெய்யவேண்டும்.அது எல்லாம் பிரச்சினையை தரும் விசயமாக தான் இருக்கும்.

இத்தனை வேலை செய்து சம்பந்தப்பட்ட நபரை வெற்றி பெறவைக்கவேண்டும். இதனை செய்தால் கர்மம் ஏற தான் செய்யும்.கர்மத்தை ஏற்றி வெற்றி பெற்றால் அந்த கர்மம் உங்களை கொஞ்சகாலத்தில் கவிழ்த்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் தரும் வாய்ப்பு


ணக்கம் ண்பர்களே!
                    நான் தங்கியிருக்கும் அறையிலேயே இருப்பதால் பல விசயங்களை இப்பொழுது தான் என்னால் உணரமுடிகிறது. அம்மன் ஒரு விசயத்திற்க்கு தயார்படுத்துகிறது என்றால் அதில் பல விசேஷம் இருக்கும் என்றும் தெரியும். பல உண்மைகளை இப்பொழுது தான் கண்டுபிடிக்கமுடிந்திருக்கிறது. பின்வரும் நாளில் அது என்ன என்று சொல்லுகிறேன்.

ஒரு மனிதரிடம் நான் பழக்கம் வைத்திருந்தால் அந்த மனிதர் எங்களை விட்டு போகிறார் என்றால் நான் உடனே விட்டுவிடுவது உண்டு அவரை இழுத்துபிடித்துக்கொண்டு வைத்திருப்பதில்லை. அவர்களின் கர்மா அவரை பிரிக்கிறது அதில் ஏன் நான் போய் தலையிடவேண்டும் என்று விட்டுவிடுவது உண்டு.

குருவே சொல்லுவார் போகின்ற ஆளை விட்டுவிடு அவர்களை இழுத்துபிடிக்காதே என்பார். அடுத்த நிமிஷத்தில் அவர்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாதவர்கள் போல் நடந்துக்கொள்வதும் உண்டு. நீங்கள் என்ன இப்படி இருக்கிறார் என்று நினைக்கதோன்றும். நான் யாரிடம் பழக்கம் வைத்திருக்கிறோனோ அவர்களை தான் அம்மன் பார்க்கும்.

உங்களுக்கு ஏதாவது செய்வது என்றால் அதிகம் பூஜைகளை விரும்புவதில்லை. சும்மா நாங்கள் நினைத்தால் போதும் உங்களுக்கு காரியம் வெற்றி பெற்றுவிடும். ஒரு சில பெரிய விசயங்களுக்கு தான் பூஜை எல்லாம் தேவைப்படும்.

குரு சொல்லுவார் நாம் வாழும் வாழ்க்கை என்பது வேறு மக்கள் வாழும் வாழ்க்கை என்பது வேறு. தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யகூடாது என்பார்.நான் ஒரு வாய்ப்பை தருகிறேன் அதனை பயன்படுத்தினால் நீங்கள் நன்றாக மேம்படலாம். தவறவிட்டால் நான் பொறுப்புகிடையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, February 17, 2014

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    மனிதர்களுக்கு அதிகப்பட்ச ஆசையாக எது இருக்கும் என்றால் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற ஆசை. ஒவ்வொரு மனிதருக்கும் இது கண்டிப்பாக இருக்கும். அதற்க்கான வழிகளில் பல பேர் நாடினாலும் அனைவரும் அதில் வெற்றி பெறுவதில்லை. பொதுவாக ஆன்மீகவாதிகள் இளவயதில் இறப்பதில்லை. ஒரு சிலரை தவிர. இதற்கு காரணம் மிகுந்த விழிப்போடு இருக்கின்றனர்.

பல விதத்திலும் அவர்கள் தன் உடம்பை பேணிக்காத்தாலும் அவர்களின் இஷ்டதெய்வங்களிடம் அவர்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று பிராத்தனை வைக்கிறார்கள். இந்த பிராத்தனையை நீங்களும் வைக்கமுடியும்.

காயத்ரி மந்திரம் செய்பவர்கள் தினமும் செய்து முடித்தவுடன் இந்த பிராத்தனையை நீங்கள் வைத்துவிடுங்கள். வைத்துவிட்டு உங்களின் பிற வேண்டுதலை வைக்கலாம். மிக பெரிய ஒரு விசயம் மனிதப்பிறப்பு எடுத்தது கிடைக்கின்ற வாழ்நாளை நன்றாக தான் வாழ்ந்துவிட்டு போகவேண்டியதானே. உடனே வேண்டுதலை வைத்துவிடுங்கள். 

இதனை தான் நான் போனில் தொடர்புக்கொண்டு சொல்லவேண்டும் என்று நினைத்தேன். பதிவிலேயே சொல்லிவிட்டேன்.வேண்டுதல் வைத்தால் மட்டும் போதாது. உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். தீயவற்றை தரும் செயலில் இறங்காமல் உடலை ஒழுங்காக பராமரியுங்கள். நீண்ட நாட்கள் வாழலாம். 

எங்களைப்போல் உள்ளவர்களுக்கு பிறரின் கர்மா ஏறும் ஆனால் உங்களுக்கு உங்களின் கர்மா மட்டும் தான். நாங்களே நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று வழி செய்யும்பொழுது நீங்கள் செய்யகூடாதா என்ன?

பாண்டிச்சேரி பகுதியில் காயத்ரி மந்திரம் செய்பவர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, February 16, 2014

ஆன்மீக அனுபவங்கள் 155


வணக்கம் நண்பர்களே!
                    பொதுவாக அனைத்து சாமியார்களும் என்ன சொல்லுவார்கள் என்றால் தியானம் செய்யுங்கள் யோகா செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். இது தவறு இல்லை ஆனால் நீங்கள் தெய்வங்களை வைத்து நீங்கள் வேலை செய்யவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பூஜையின் மீது அதிககவனம் செலுத்தவேண்டும். 

பூஜை செய்வதால் மட்டுமே தெய்வங்கள் திருப்தி அடையும் அதன் வழியாக நீங்கள் வேண்டுவதை பெறலாம். நான் ஒவ்வொரு நாளும் பூஜை முறையில் தான் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறேன். எப்பொழுதாவது மட்டுமே தியானம் செய்வது உண்டு.

பூஜையும் ஒவ்வொரு நாளும் வித்தியாசம் வித்தியாசமாக செய்வது உண்டு. ஏகாப்பட்ட பூஜை முறைகளை நான் கையாண்டு வருகிறேன். அதைப்போல் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களும் வித்தியாசம் இருக்கின்றது. பூஜைக்கு என்று விதவிதமான மூலிகைகளை பயன்படுத்துகிறேன்.

பல பூஜைகள் செய்யும்பொழுது மட்டுமே தெய்வங்கள் மனமிரங்கி நமக்கு வேலையை செய்துக்கொடுக்கிறது அதைபோல் ஒவ்வொரு வேலைகளுக்கும் ஒவ்வொரு விதமான பூஜை முறைகளை கையாளுகிறேன்.

நீங்கள் தெய்வங்களை வசப்படுத்தவேண்டும் என்றால் பூஜை முறைகளை செய்யுங்கள்  அது ஒரு நாளில் முடியகூடாது பல நாட்கள் செய்யும்பொழுது மட்டுமே தெய்வங்கள் உங்களை தேடிவரும். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் விருப்பம் உள்ளவர்கள் பூஜை முறையில் ஈடுபட்டு தெய்வத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினையும் தீர்வும் பகுதி 21


ணக்கம் ண்பர்களே!
                    பிரச்சினையும் தீர்வும் எழுதி நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. பல வேலைகளில் இருந்ததால் இதனை விட்டுவிட்டேன். இனி தொடர்ந்து பார்க்கலாம். 

பொதுவாக ஜாதகம் எப்படி கெட்டுருந்தாலும் நமக்கு கொஞ்சம் அறிவு இருந்தால் எப்படியும் அந்த பாதிப்பில் இருந்து ஒரளவு தப்பிவிடலாம். அந்த அறிவாவது வருவதற்க்கு நமக்கு கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். அது நமது தாய் தந்தையர்கள் மற்றும் முன்னோர்களின் புண்ணியம் இருக்கவேண்டும்.

ஒரு கருத்தை பார்க்கிறேன். நமக்கு ஐந்தாவது வீடு கெடுகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது என்ன நடக்கும் நமக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. குழந்தை பாக்கியம் இருந்தாலும் அந்த குழந்தை பெயர் சொல்லும் அளவுக்கு வராது. அப்பொழுது என்ன செய்யலாம் நமக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்.

தத்து எடுத்து வளர்க்க நமக்கு மனசு வரவேண்டும். அப்படி மனசு வந்தால் அந்த குழந்தை உங்களின் குழந்தையாக தான் இருக்கும். உங்களுக்கும் குழந்தை என்று ஒரு வாரிசு வந்துவிடும். கடவுள் மறுத்தார் தனது புத்திசாலிதனத்தால் இப்படி எடுத்துக்கொள்ளலாம். மனிதன் என்ன அவ்வளவு எளிதில் எதையும் ஏற்றுக்கொள்வானா ?

எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டான். கிரகத்தின் பாதிப்பின் தாக்குதலில் இருந்து அவன் மீளமாட்டான். குழந்தையே இல்லை என்பதற்க்கு பதில் ஒரு வாரிசு இருக்கின்றதே என்று சொல்லிவிட்டு இருக்கலாம். பொதுவாக ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள் எந்த அறிவுரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது புதிய விதி.

நமக்கு தேவைப்பட்டது போல் இப்படி தான் மாற்றிக்கொள்ளமுடியும். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் கலை இது. யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இன்னும் பல விசயங்கள் இதில் இருக்கின்றது வரும் பதிவில் சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    தொழில் செய்பவர்கள் நிறைய பேர் என்னை தொடர்புக்கொண்டாலும் ஒரு சில சிறிய தொழில் செய்பவர்களும் தொடர்புக்கொள்கிறார்கள். தொடர்புக்கொள்வது தவறு இல்லை. என்னை பொருத்தவரை ஒரு சில தொழிலை தான் நான் தேர்ந்தெடுத்து செய்துக்கொடுப்பது வழக்கம்.

சிறிய தொழிலில் உள்ள வருமானம் உங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதனை வைத்து நீங்கள் தான் உயரமுடியுமே தவிர அதனை எடுத்து அடுத்தவர்களுக்கு கொடுக்கமுடியாது என்பதை முதலில் கவனத்தில் வையுங்கள்.

பொதுவாக அனைவரும் தொழில் செய்யவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் தவறு இல்லை ஆனால் அதற்க்காக கடன் வாங்கி தொழிலை தொடங்கவேண்டும் என்று நினைக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை வந்துவிடும். வேலையில் இருப்பவர்களே அதனை விட்டுவிட்டு தொழில் தொடங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு சிலர் மனைவியின் நகையை வைத்து தொழில் தொடங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அது மிகப்பெரிய தவறு.

கடன வாங்கி தொழிலை தொடங்கும் பொழுது அது நன்றாக சென்றால் பரவாயில்லை. பிரச்சினையில் சிக்கும்பொழுது மட்டுமே சிக்கல் வந்துவிடும். உங்களிடம் இருந்த முதலீடு அனைத்தும் போய்விடும். கடனாளியாகி விடுவீர்கள். கொஞ்சம் இருக்கின்ற நிம்மதியும் போய்விடும்.

ஒரு தொழில் ஆரம்பிக்கவேண்டும் என்பது தவறு இல்லை அந்த தொழிலில் நீங்கள் வெற்றி பெறவேண்டும். தோல்வியில் முடியும்பொழுது அது சிக்கலாகிவிடும். ஒரு தொழில் தொடர்ந்து பல வருடங்கள் நமக்கு பயன் தரும் வகையில் இருந்தால் மட்டுமே அது தொழிலாக இருக்கமுடியும்.

என்னை தொடர்புக்கொள்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை முடிந்தளவுக்கு உங்களுக்கு ஆலோசனை வழங்குவேன் ஆனால் ஆன்மீகஉதவி வேண்டும் என்று கேட்கும்பொழுது அதற்கு நீங்கள் பணம் தரவேண்டும். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இலவசமாக செய்யலாம் அதற்குபிறகு நீங்கள் பணம் தரவில்லை என்றால் நான் வேறு இடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன்.

நான் வெளிப்படையாக சொல்லுவதற்க்கு தயங்குவதில்லை. சிறிய தொழிலில் இருந்து வரும் வருமானம் எனக்கு போதாது அதனால் இந்த மாதிரியான தொழிலை நான் எடுத்துக்கொள்வதில்லை

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில காரணங்களால் புதிய அலுவலகத்தை பார்க்காமல் வைத்திருக்கிறேன். தற்பொழுது நான் தங்கி இருக்கும் அறையில் இருந்து தான் பதிவை தருகிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் பதிவுகளை இனி தருவேன். அதே நேரத்தில் தற்பொழுது என்னை நேரில் சந்திக்கமுடியாது. போனில் அல்லது மெயில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அலுவலகத்தை மூடிவிட்டவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு உங்களுக்கு பணஉதவி வேண்டுமா என்று கேட்டார்கள் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜாதககதம்பத்தில் பதிவுகள் வரவேண்டும் என்று நினைத்து இதனை செய்கின்றனர். பதிவுகளை நான் எப்படியும் கொடுத்துக்கொண்டே இருப்பேன். 

நேரில் சந்திப்பவர்கள் குறைவு தான் இருந்தாலும் ஒரு சில நண்பர்கள் சோதிடம் பார்க்கவேண்டும் என்றால் அலுவலகம் வேண்டும் என்று சொன்னார்கள் அவர்களுக்கு எல்லாம் சொல்லுவது கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள் கண்டிப்பாக புதிய அலுவலகம் திறக்கலாம்.

எனது அறையில் இருப்பதனால் அம்மனை வைத்து ஒரு சில வேலைகளை செய்வதற்க்கு எனக்கு எளிதாக இருக்கின்றது. என்னை மேம்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை அம்மன் எனக்கு தந்துள்ளதாகவே நினைக்கிறேன்.அம்மனை வைத்து அற்புதமான ஒரு வேலையை செய்துக்கொண்டிருக்கிறேன். அதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இதனை கருதுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

உன்னால் முடியும்


வணக்கம் நண்பர்களே!
                    என்னால் முடியும் என்று சொல்லி தான் என்னை நம்பி பணத்தை தொழிலில் முதலீடு செய்கின்றனர். ஆன்மீகவழியில் நின்று நான் சாதித்து கொடுப்பேன் என்று சொன்னதால் தொழில் செய்வர்கள் தொழிலில் முதலீடு செய்கின்றனர். இப்பொழுது எல்லாம் நான் சொல்லவில்லை என்றால் 

என்னோடு தொழில் தொடர்பு வைத்திருப்பவர்கள் இறங்குவதில்லை. என்னை நம்பி பணம் போடுபவர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் அது எனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். சும்மா தொழிலுக்கு செய்கிறேன் என்று கதை எல்லாம் விடமுடியாது.தொழில் தோல்வி அடைந்தால் போடும் பணத்தில் ஒரு சதவீதம் பணத்தை கொடுத்து என்னை காலி செய்யகூட தயங்கமாட்டார்கள். 

என்னிடம் வந்து ஏதாவது ஒரு தோஷத்திற்க்காக வந்து நிற்பவர்களுக்கு எல்லாம் நான் அந்தளவுக்கு முயற்சி எடுத்து செய்வதில்லை. ஐம்பது சதவீதம் செய்வேன். அதுவும் ஆளை பார்த்து தான் செய்கிறேன். ஏன் என்றால் இதற்கு செய்யும் வேலையையை ஒரு தொழில் செய்பவர்களுக்கு செய்யும் பொழுது அதில் இருந்து வரும் பணம் எனக்கு அதிகம். அதனை வைத்து பல பேரை காப்பாற்றமுடியும். 

எனக்கு கற்றுக்கொடுத்த குரு என்னிடம் சொல்லும் பொழுது என்று நீ தோற்கிறாயோ அன்றே நீ தற்கொலை செய்துக்கொள்ளவேண்டும் என்று தான் என்னிடம் தொழிலை கற்றுக்கொடுத்தார். அதனை செய்வேன் இதனை செய்வேன் என்பது வார்த்தையால் சொல்லுவது கிடையாது.அது உண்மை. என்னிடம் தொழில் செய்வதற்க்கு என்று வாருங்கள் அப்பொழுது பாருங்கள் எனது வேலையை.

பதிவுகளில் எழுதும் அனைத்து விசயங்களும் செய்துக்கொண்டு தான் இருக்கின்றேன். செய்யாமல் இல்லை. இதனை படித்துவிட்டு நீங்களும் முயற்சி செய்யுங்கள். என்னை போல் நீங்களும் மனிதர்கள் தான் நான் செய்யும்பொழுது உங்களாலும் செய்யமுடியும் என்று நம்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 90


ணக்கம் ண்பர்களே!
                   பொதுவாக குரு தசா நல்லதை தந்தாலும் கும்ப ராசியினருக்கு மட்டும் குரு எங்கிருந்தாலும் அது பிரச்சினையை தருகிறது என்னுடைய அனுபவத்தில் பல பேர்களுக்கு இப்படி பார்த்திருக்கிறேன். ஏற்கனவே இதனைப்பற்றி எழுதியிருந்தாலும் மீண்டும் எழுதுவதற்க்கு இன்று ஒரு ஜாகதரை அப்படி பார்க்கும்பொழுது தோன்றியது.சரி என்று எழுதிவிட்டேன்.

நான் பார்த்த ஜாதகருக்கு குரு கிரகம் உச்சம் அந்த ஜாதகர் குரு தசாவில் அப்படி ஒரு பாடுபட்டு இருக்கிறார். கும்ப ராசிக்கு குரு தசாவில் பொதுவாக காதல் தோல்வியை ஏற்படுத்திவிடுவார். அந்த காதல்தோல்விலேயே அதிகமான மனகாயங்களை ஏற்படுத்திவிடுவார். வாழ்க்கையில் மிகப்பெரிய மனப்போராட்டம் அவர்களுக்கு இருக்கும்.

கும்பராசியில் உள்ளவர்களுக்கு குரு தசாவில் வேலை கிடைப்பதும் கடினமாக தான் இருக்கும். இன்றைய தேதியில் வேலை கிடைப்பது கடினமாக தானே இருக்கிறது அதனால் கும்பராசியில் குரு தசாவில் இருப்பவர்கள் இருக்கின்ற வேலையை விட்டுவிடாதீர்கள்.

சனிகிரகம் வேலைக்கு காரணமாக இருந்தாலும் நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்றால் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும். குரு தசா நடைபெறும் கும்பராசியினர் இந்த அனுபவத்தை பெற்று இருப்பார்கள்.

கும்பராசினர் குரு தசா நடைபெறும் காலத்தில் வியாழன் தோறும் 108 எண்ணிக்கை அளவில் கொண்டைகடலை மாலை வியாழன் தோறும் குரு கிரகத்திற்க்கு சென்று போட்டு வணங்கிவிட்டு வாருங்கள். குரு கிரகம் உங்களுக்கு நல்லது செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக உழைப்பு


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் என்னிடம் ஆன்மீகத்தை பற்றி பேசியே பொழுதை போக்குகிறார்கள். அது தவறு கிடையாது ஆனால் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருக்ககூடாது. செயலில் இறங்கவேண்டும். பேசினாலும் படித்தாலும் நாம் ஒன்றையும் அனுபவிக்கமுடியாது.

நான் காயத்ரி மந்திரத்தைப்பற்றி சொல்லி அதனை செய்ய சொல்லிருந்தேன். என்னை நம்பி பல நண்பர்கள் அதனை செய்து வருகின்றனர். அப்படி செய்துவரும் நண்பரகளுக்கு பல விதமான பயிற்சிகளை தரவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏற்கனவே சொல்லிருந்தாலும் அதிகமான பயிற்சி கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடைய செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

கொஞ்ச நாட்கள் இதனை செய்யுங்கள் என்று சொன்னதற்க்கு பல நண்பர்கள் நம்பிக்கையுடன் செய்தாலும் ஒரு சிலர் அதனை விட்டுவிட்டனர். காரணம் என்ன என்றால் ஒன்றுமே நடைபெறவில்லை என்று விட்டுவிட்டனர். கலியுகத்தில் ஒருவர் ஆன்மீகத்தின் பக்கம் செல்வதே மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்கவேண்டும் அதில் ஒருவர் அனுபவிக்கவேண்டும் என்றால் கொஞ்ச நாள் பயிற்சி செய்தால் தான் கிடைக்கும்.

நான் எடுப்பதற்க்கு எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லிருக்கிறேன். ஒரு தெய்வம் நம்மிடம் வருகிறது என்றால் அவ்வளவு எளிதில் வந்துவிடாது உழைப்பு வேண்டும். அந்த உழைப்பை போட்டால் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றுவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, February 15, 2014

ஒரு சில வார்த்தை


வணக்கம் நண்பர்களே!
                   எனது குரு சொல்லுவார் எந்த வீட்டிற்க்கும் உடனே செல்லாதே போவதற்க்கு முன் ஒரு சில வேலைகளை செய்துவிட்டு போ என்பார். அது என்ன என்றால் ஒரு வீட்டிற்க்கு செல்வதற்க்கு முன் அம்மனை அந்த வீட்டிற்க்கு அனுப்பிவிடுவேன். அந்த வீட்டில் உள்ளவர்கள் எங்களுக்கு தகுந்தமாதிரி மாறிவிடுவார்கள். உங்களை சந்தித்துவிட்டு திரும்பியவுடன் எங்களோடு அம்மன் திரும்பிவந்துவிடும்.

நாங்கள் செல்லும் வீட்டில் எந்த சக்தியும் எங்களை எதுவும் செய்யமுடியாது. உங்களின் குலதெய்வமே எங்களுக்கு உதவி செய்துக்கொடுக்கும். அப்படி என்றால் நாங்கள் வைத்திருக்கும் சக்தியின் சக்தி எப்படி இருக்கும். இதனை எல்லாம் நான் செய்யாமல் வைத்திருந்தர்க்கு காரணம் இருக்கிறது.

ஒன்றும் தெரியாமல் இருப்பவர்களிடம் ஏன் நாம் நம்மை மிஞ்சிய சக்தியை அனுப்பவேண்டும். மனிதர்களுக்குள் மனிதர்களாகவே பேசலாம் என்று செய்துக்கொண்டிருந்தேன்.குரு சொன்னது எல்லாம் அப்படியே வாழ்க்கையில் நடைபெறுகிறது. அவர் கொடுத்த அனைத்து கைடும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும்பொழுது பார்த்தால் அவரின் பேச்சை அப்படியே கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன். 

அக்னியை வளர்த்து அதன் முன் உட்காரவைத்து விடுவார்கள். குறைந்தது 700 நாட்கள் அதன் முன் காலை மாலை உட்காரவேண்டும். தினமும் செய்யவேண்டும். அது எதற்கு என்றால் அம்மனின் சக்தியை மேம்படுத்துவதற்க்காக அப்படி செய்ய சொல்லுவார்கள். நான் அப்படி செய்திருக்கிறேன். 

ஒரு இடத்தை சந்தோஷத்தோடு பார்த்தால் அந்த இடம் செழிக்கவேண்டும். கோபமாக பார்த்தால் அந்த இடம் பற்றி எரியவேண்டும். என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட குருவிடம் நீங்கள் பயின்றால் ஆன்மீகத்தில் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்துவிடலாம். ஒரு நாள் நீங்கள் இப்படிப்பட்டவர்களிடம் படிப்பது ஒரு யுகம்போல் உங்களுக்கு தோன்றும்.

காயத்ரி மந்திரம் செய்பவர்களை எல்லாம் இப்பொழுது விட்டு வைத்திருக்கிறேன் என்றோ ஒரு நாள் கூப்பிட்டு என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் இது வரை என்ன சக்தியை நீங்கள் மேம்படுத்தி இருக்கின்றீர்கள் என்று கேட்கபோகிறேன். அப்பொழுது தெரியும். என்னிடம் நல்ல வாங்கி கட்டிக்கொள்ளபோகிறீர்கள் ஒழுங்காக செய்யவும். கண்டிப்பாக சோதனை செய்வேன். ஜாக்கிரதை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.