Followers

Thursday, April 14, 2011

நன்றி!!!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.கடந்த ஒரு வருடகாலமாக இந்த Blog க்கிற்க்கு வந்து படித்த அனைவருக்கும் எனது நன்றிகள் பல நான் தினமும் எழுதவேண்டும் நினைக்கிறேன் ஆனால் எனது அலுவல் காரணமாக தினமும் எழுத முடியவில்லை. இந்த வருடம் நிறைய பதிவு போடவேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்கிறேன். எனது பதிவில் இணைந்த அனைவருக்கும் நென்சார்ந்த நன்றிகள். இந்த கர வருடம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

நன்றி !!! நன்றி !!! நன்றி !!!

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Saturday, April 9, 2011

ஜோதிட அனுபவம்



சில ஜோதிடர்கள் சொல்வார்கள் ஜாதகத்தில் கிரகம் கெட்டிருந்தால் அந்த கிரகத்தின் தலத்திற்க்கு அல்லது அந்த கிரகத்தின் தேவதைகளை வணங்கினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வணங்கவேண்டாம் என்று கூறுவார்கள்.

அனுபத்தில் பார்க்கும் போது அந்தவாறு இல்லை. ஒருவருக்கு குருதிசை மரணத்தை தரும் என்றால் அந்த திசை நடக்கும் பொழுது குருவையோ குருவின் தேவதைகளையே வணங்ககூடாது என்று கூறுவார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு குரு திசை நடந்தது. குரு அவருக்கு 6 ஆம் வீட்டில் இருந்தார். கோசர பலன் படி குரு மூன்றாம் வீட்டிற்க்கு வரும் போது நீண்டகால நண்பர் அவருக்கு பல பிரச்சினைகளை தந்தார். தொழிலில் இவருக்கு பல பிரச்சினைகளை தந்தார். அதனால் இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் இவர் ஆலங்குடி குரு கோவில் சென்று வணங்கிவந்தார். கோவில் சென்று வணங்கிவந்த பின் இருவருக்கும் இருந்து வந்த சண்டை முடிந்தது ஆனால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதனால் ஒருவருக்கு மோசமான கிரகத்தின் பாதிப்பு இருந்தால் அந்த கிரகத்ததை வணங்கலாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைகாரன் காலில் விழுவது மேல்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு