Followers

Tuesday, February 28, 2017

செவ்வாயின் நட்சத்திரத்தில் சந்திரன்


ணக்கம்!
          ஒரு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் அதற்கு செவ்வாய் கிரகம் உங்களின் ஜாதகத்தில் வலுவாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் அதிகாரம் உங்களுக்கு கிடைக்காது. 

நமக்கு செவ்வாய் சரியில்லை என்றால் நாம் அதிகாரம் செலுத்தமுடியாது. ஏதோ ஒரு விசயத்திற்க்கு நாம் அதிகாரம் செலுத்தவேண்டும் என்ற நிலை வரும்பொழுது சந்திரன் செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்பொழுது நாம் அதிகாரம் செலுத்தலாம்.

கீழே உள்ள நட்சத்திரம் செவ்வாயின் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் சந்திரன் செல்லும்பொழுது நீங்கள் அந்த காரியத்தை செய்யலாம்.

மிருகசீரிஷம் - செவ்வாய்
சித்திரை - செவ்வாய்
அவிட்டம் - செவ்வாய்

ஒரு மாதத்தில் அவிட்டம் நட்சத்திரம் வரும்பொழுது நீங்கள் ஏதோ ஒரு பதவிக்கு ஆசைப்பட்டு சம்பந்தப்பட்டவரை சந்தித்தால் அந்த நாளில் உங்களுக்கு அந்த பதவி வந்துவிடும். சாத்தியப்படகூடிய விசயமாக அது இருந்தால் கண்டிப்பாக இது நடைபெற்றுவிடும்.

நமக்கு இல்லாத ஒன்றை பெறுவதற்க்கு இப்படிப்பட்ட விசயத்தை நாம் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். காலத்தை சார்ந்து செயலை செய்பவர்களுக்கு இது உகந்ததது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no 9551155800

Monday, February 27, 2017

தீயகிரகங்களின் அடி


ணக்கம்!
          நிறைய குடும்பங்களை பார்த்து இருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்து மேலே வந்து இருக்கின்றனர். அவர்கள் ஒரு காலத்திற்க்கு பிறகு அவர்களின் குடும்பங்களில் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அனைத்தையும் இழந்து இருக்கின்றனர்.

அதிகப்பட்சமாக உள்ள நபர்களுக்கு கொடுமையான கிரகங்களின் தசா நடந்தால் இப்படி குடும்பத்தை சீரழித்துவிடும். தீயகிரகங்கள் கொடுமையான பலன் என்றால் அனைவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கின்றதை அனைத்தயும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுவதுதான் கொடுமையான பலன்.

இன்றைக்கு ஒரு குடும்பம் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றால் அந்த குடும்பத்தில் உள்ள ஒருவராவது ஆன்மீகத்தில் இணைந்துக்கொள்வது நல்லது. ஆன்மீகத்திற்க்காக நிறைய செய்வது .  என்னால் ஆன்மீகத்தை நோக்கி செல்லமுடியவில்லை என்றால் ஆன்மீகத்திற்க்காக பணத்தை செலவு செய்வது இதனை எல்லாம் செய்யவேண்டும்.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒருவர் கண்காணிப்பதும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒருவர் தவறு செய்தாலும் அந்த குடும்பத்தை பாழ்செய்யும் அளவுக்கு விளைவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட தசா நடக்கிறது என்பதையும் கண்காணித்து வரவேண்டும். அதற்கு தீர்வு என்ன என்பதையும் யோசிக்கவேண்டும்.

மிக உயர்ந்த இடத்தில் இருந்தாலும் இந்த எச்சரிக்கை உணர்வோடு நீங்கள் செயல்பட்டால் எப்படிப்பட்ட தசாவிலும் உங்களின் குடும்பத்தை காப்பாற்றக்கொள்ளலாம். 

நான் தினமும் பார்க்கும் பல ஜாதகங்களில் தீயகிரகங்களின் தசா நடக்கும் குடும்பத்தில் பல சிக்கல்களை உருவாகி சந்தித்து வருகின்றனர். அதனை சரிசெய்வதற்க்கும் அவர்களின் மனநிலை இடம் தருவதில்லை என்பது தான் மிகவும் வருத்தமான விசயம்.

நல்ல வாழ்கிறவன் தான் உஷாராக இருக்கவேண்டும். கெட்டவனுக்கு அடிமேல் அடி விழும்பொழுது ஏற்கனவே நாம் அதில் தான் இருக்கின்றோம் என்று இருப்பான். புதிய அடி வாங்கிறவன் தான் அஸ்திவாரமே ஆட்டம் காணஆரம்பித்துவிடும்.

அம்மன் அருளால் நீங்கள் நன்றாக வாழுங்கள். அதே நேரத்தில் மேலே சொன்ன எச்சரிக்கை உணர்வோடு இருக்கும்பொழுது அனைத்தையும் சமாளிக்கலாம். நீங்கள் செய்கின்ற தர்மமும் தலைகாக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

யோகநாள்


வணக்கம்!
          சோதிடத்தில் உள்ள அடிப்படையை லக்கினத்தை வைத்து தான் பார்க்கவேண்டும். ராசியை வைத்து அவ்வப்பொழுது நடைபெறும் கோச்சாரபலன்களை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

லக்கினத்தை வைத்து பார்க்கும்பொழுது உங்களின் உடல்நிலை காட்டகூடிய அமைப்பு. உடல்நிலையில் தான் அனைத்தும் நடைபெறும் மனநிலையில் நடப்பது சந்திரனை வைத்து காணலாம்.

யோகாதிபதியை ஒரு சிலர் தவறாக ராசியை வைத்து கணித்துக்கொண்டு இருக்கின்றனர். பாக்கியஸ்தானஅதிபதி தான் யோகாதிபதியாக வருவார். லக்கினத்தில் இருந்து ஒன்பதாவது அதிபதி யோகாதிபதியாக இருக்கும். 

யோகாதிபதி எதற்கு என்றால் உங்களின் தெய்வவழிபாடு மற்றும் தர்மகாரியங்கள் செய்வதற்க்கு உகந்ததது. யோகாதிபதியாக எது வருகின்றதோ அன்றைய நாளில் செய்யப்படவேண்டும்.

ஒரு சிலருக்கு தசாநாதன் நல்ல வலுவாக அமைந்தால் உங்களின் நல்ல காரியம் அனைத்தும் தசாநாதனின் நாளில் தான் நடைபெறும். அந்தளவுக்கு வாரி பலன்களை வழக்ககூடியது உங்களின் தசாநாதர். உங்களின் தசாநாதன் நாளிலிலும் இப்படிப்பட்ட காரியங்களை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no: 9551155800

Sunday, February 26, 2017

குலதெய்வம்


வணக்கம்!
         மகாசிவாராத்தரி தினத்தை ஒட்டி குலதெய்வ வழிபாடு நிறைய நடந்து இருக்கும். குலதெய்வ கேள்வியும் கடந்த மூன்று தினங்களாக நண்பர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். 

குலதெய்வத்தைப்பற்றி கேட்கும்கேள்வியில் முதன்மையானது உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று சோதிடர்கள் சொல்லுகின்றனர். இது உண்மையா என்று கேட்டனர்.  பொதுவாக சோதிடர்கள் சொல்லும் ஒரு பலன் என்ன என்றால் உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லுவது. அடுத்த பலன் உங்களுக்கு ஒரு ஆத்மாவின் சாபம் இருக்கின்றது என்று சொல்லுவது.

குலதெய்வ அருள் இருக்கின்றவர்கள் என்ன ஆடிகாரில் சென்றுக்கொண்டு இருப்பார்களா என்ன ? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா அடித்துவிடுவது தான். குலதெய்வ அருளும் மற்றும் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையும் நன்றாக இருந்தால் தான் நல்லது நடக்கும்.

குலதெய்வ அருள் இருக்கவேண்டும் தான் குலதெய்வ அருள் இருக்கின்றதா என்று சோதிடர்களிடமும் குறிசொல்லுபவர்களிடம் நீங்கள் கேட்டால் உங்களை வைத்து படம் ஓட்டிவிடுவார்கள். 

குலதெய்வத்தை பற்றி கேட்கும் கேள்வி எல்லாம் உங்களின் உறவினர்களிடம் உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தோர்களிடம் கேட்கவேண்டும். அவர்கள் சொல்லிவிடுவார்கள் இந்த சாமியை கும்பிட்டு வந்தோம் அதனை கொஞ்சகாலமாக கும்பிடவில்லை அதனை கும்பிடுங்கள் என்று சொல்லுவார்கள். 

குலதெய்வத்திற்க்கு வருடத்திற்க்கு ஒருமுறை பூஜை செய்யும்பொழுது அதில் பங்குகொள்ளுங்கள். உங்களின் வீட்டில் பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள். ஆத்மாவின் சாபம் எல்லாம் நீங்கள் செய்யும் ஆன்மீகபணியிலும் நீங்கள் செய்யும் தர்மத்திலும் நீங்கிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 25, 2017

நட்சத்திரம்


வணக்கம்!
          சந்திரனை வைத்து நமது பதிவில் நிறைய சொல்லிக்கொண்டு வருகிறேன். இது எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாலும் அதனை எல்லாம் மீண்டும் ஒரு முறை படிக்கும்பொழுது உங்களை நீங்கள் நன்றாக சோதனை செய்து புதுப்பித்துக்கொள்ள உதவும் என்ற நோக்கத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நட்சத்திரத்தை வைத்து உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ளமுடியும் என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. கிரகங்களுக்கு கோவில் இருக்கின்றது. நட்சத்திரத்திற்க்கு எந்த கோவில் இருக்கின்றது என்பது கேட்கலாம். நட்சத்திர கோவில் என்று சொல்லுவது எல்லாம் அந்தளவுக்கு நம்பிக்கை இல்லை என்பது என்னுடைய கருத்து. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதனை வணங்கிக்கொள்ளலாம்.

ஒரு நட்சத்திரத்தின் பலனை அந்த கோவில் அல்லது அந்த தேவதையின் துணைக்கொண்டு பலனை பெறலாம். சித்தர்களின் வழியை பின்பற்றுபவர்கள் அந்தந்த சித்தர்களை வைத்து வழிபட்டு வரும்பொழுது நட்சத்திரன் பலனை பெறமுடியும்.

இன்று திருவோணம் நட்சத்திரம் வருகின்றது. திருவோணம் மகாவிஷ்ணு அதிதேவதையாக இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட இன்று உகந்தது. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு குணத்தை கொடுக்ககூடிய பண்பு உண்டு. உங்களுக்கு எது தேவையோ அந்த நட்சத்திரத்தின் தேவதையை கொண்டு பயன்பெறமுடியும்.

ஒரே நேரத்தில் எல்லாம் நடைபெற்றுவிடாது. ஒரு சில நேரத்தில் நமக்கு நடக்கும். அந்த நேரத்தை எல்லாம் நாம் கணக்கில் கொண்டு செயல்பட்டு வந்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 24, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          இன்று இந்த பதிவை தருவது உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேற்று நட்சதத்திரத்தை பற்றி பார்த்தோம் அதில் நிறைய விசயங்களை நாம் இனிவரும் பதிவில் பார்க்கவேண்டும். நேற்றைய பதிவில் சொன்ன ஒரு விசயத்தை வைத்து இந்த பதிவு இருக்கிறது.

ஒரு மனிதன் பிறப்பு எடுத்தால் அதுவே மிகப்பெரிய வரம் என்று பெரியோர்கள் சொல்ல கேள்விபட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதபிறப்பு எடுத்து அந்த பிறப்பை மிகச்சரியாக பயன்படுத்துபவர்களுக்கு தான் மனிதப்பிறப்பு எடுத்ததின் அர்த்தம் இருக்கும்.

நாம் பிறந்தால் நமக்கு நட்சத்திரம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. நட்சத்திரத்தை வைத்து தான் நாம் அர்ச்சனை எல்லாம் செய்கிறோம். நமது வழிபாட்டிற்க்கு நட்சத்திரம் பயன்படுகிறது என்றால் நாம் உயிராேடு இருப்பதற்க்கு அர்த்தம் கொள்கிறோம்.

உயிர் இறந்துவிட்டால் திதியை பிடித்துக்கொண்டு அந்த திதி வரும்பொழுது அவர்களுக்கு செய்யவேண்டிய சடங்கை செய்கிறோம். ஒரு மனிதன் பிறந்தால் அவனின் பிறந்த நாளை இறந்த பிறகு எல்லாம் கொண்டாடுபவதில்லை. அவன் இறந்த திதியை மட்டும் வைத்து அவர்களுக்கு செய்கிறோம்.

அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்று கேட்கவேண்டாம். அவர்கள் பிறந்த நாள் ஆங்கில நாளில் வருவதை கொண்டாடிகொண்டு இருப்பார்கள். அதனை எவர்கள் ஆத்மார்த்தமாக கொண்டாடுவார்கள். ஏதாவது கிடைக்கும் என்று கொண்டாடலாம்.

ஒருவர் இறந்தபிறகும் அவர்கள் உயிர்தன்மையோடு இந்த பூமியில் இருந்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு அவர்களின் ஜென்மநட்சத்திரம் வரும் நாளில் அவர்களை வழிபாடு செய்வார்கள். இதுவரை இருந்த அனைத்து சித்தர்களுக்கும் அவர்களின் நட்சத்திரம் வரும் நாளில் ஒவ்வொரு வருடமும் விழா எடுப்பார்கள். அவர்கள் இறக்கவில்லை இந்த பூமியில் அவர்கள் இன்னமும் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட அமைப்பு கிடைக்கும் என்பது ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையில் இருக்கின்றது. நம்மிள் பலர் இறந்தால் அவர்கள் இறப்பை நடத்தகூட ஆளில்லை என்பது தான் உண்மையான ஒரு நிகழ்வாக இருக்கின்றது.

நம்முடைய சித்தர்கள் எல்லாம் இந்த பூமியில் உயிரோடு இருந்து நமக்கு உதவுகின்றனர் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். நமக்கு நட்சத்திரம் வேண்டுமா அல்லது திதி வேண்டுமா என்பது நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 23, 2017

சந்திரன் என்ற காதலன்


ணக்கம்!
          நமது முன்னோர்கள் நமக்கு கதையாகவே அனைத்தையும் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அந்த கதையை வைத்து நாம் எளிதில் புரிந்துக்கொள்ளமுடியும். நமது சோதிடசாஸ்திரத்திற்க்கு மிக மிக முக்கியமாக இருப்பது சந்திரன் தான். சந்திரனை வைத்து தான் அனைத்துமே.

ஒரு உயிர் இந்த பூமியில் எடுக்கிறது என்றால் அந்த உயிர் ஜனனம் ஆகும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ அது தான் ஜென்மநட்சத்திரம் என்று சொல்லுவார்கள். நமது நல்லது அனைத்திற்க்கும் ஜென்மநட்சத்திரத்தை வைத்து தான் செய்யமுடியும்.

உயிர் போய்விட்டால் நட்சத்திரத்தை விட்டுவிட்டு திதிக்கு சென்றுவிடுவார்கள். உயிரோடு இருப்பதற்க்கு நட்சத்திரம் மிக மிக அவசியமாக இருக்கின்றது.

நட்சத்திரத்தை எல்லாம் பெண்ணாகவே கருதி வந்தனர். சந்திரனுக்கு 27 நட்சத்திரத்தையும் மணமுடித்து வைத்தனர் என்று நீங்கள் கதையில் படித்து வந்து இருக்கலாம். தட்சன் என்பவரின் மகள்கள் தான் இந்த 27 ஏழு பேரும் அதில் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் அதிக பாசமும் காதலும் கொண்டார் என்றும் பிற நட்சத்திரங்கள் தன் தந்தையிடம் முறையிட்டு தட்சன் சொல்லியும் கேட்காமல் சந்திரனுக்கு சாபம் ஏற்பட்டு அதனை போக்க சிவனிடம் சென்றதாக விரியம் இந்த கதை.

இதனை எல்லாம் நான் ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் சந்திரனை பிடித்தால் உங்களுக்கு அனைத்தையும் நடக்கும் என்பதற்க்காக சொன்னேன். சந்திரனை வைத்து நிறைய விசயங்களை செய்யமுடியும்.

ராேகிணி நட்சத்திரம் வருகின்ற நாளில் கொஞ்சம் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அதனை நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கு புரியும். அதோடு ரோகிணி நட்சத்திரம் வரும் அன்று பெளர்ணமி வந்தால் அதன் ஈர்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வெற்றியை தரும் சந்திரன்



ணக்கம்!
          கடந்த பதிவில் எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிருந்தேன். அப்பொழுது தான் கடவுள் நமக்கு நிறைய தருவார் என்று சொல்லிருந்தேன். 

சந்திரன் ஒருவருக்கு சரியாக இருந்தால் எந்த நேரமும் செயலில் ஈடுபடமாட்டார் ஆனால் மிக சரியான நேரத்தில் செய்யவேண்டியதை செய்துவிடுவார்கள்.

எந்த நேரமும் செய்வதை விட சரியான நேரத்தை நாம் பார்த்து அந்த நேரத்தில் நாம் செயலில் இறங்கிவிட்டால் பிரபஞ்ச சக்தியும் நமது முயற்சியும் இணைந்து வெற்றியை தரும். இதனை வைத்து தான் சோதிடம் இருக்கின்றது.

சந்திரன் சரியில்லாத ஆட்களை பார்த்தால் எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருப்பார்கள். செயலில் வெற்றியை பெற்றுவிடமாட்டார்கள். சந்திரன் அவர்களின் மனநிலையில் உள்ள சக்தியை வீணாகவே செலவு செய்ய வைத்துவிடும்.

இயற்கை சாதகமாக இருந்தால் நாம் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம். இயற்கை நமக்கு சாதகம் இல்லை என்றால் நாம் வெற்றி பெற்றுவிடமுடியாது. சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் நீங்கள் செயல்படுங்கள். எளிதில் அனைத்தையும் சாதகமாக்கிக்கொள்ளமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell No : 9551155800

Wednesday, February 22, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          நேற்று ஒரு கேள்வி வந்தது. பரிகாரத்தால் அனைத்தையும் சரி செய்துவிடலாமா என்று வந்தது. பரிகாரத்தால் அனைத்தையும் சரிசெய்யமுடியாவிட்டாலும் ஒரளவுக்கு நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளமுடியும். அதன் பிறகு பணம் வந்தவுடன் அனைத்தையும் சரி செய்துக்கொள்ளமுடியும்.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது ஒன்றை நாம் முயற்சி செய்துக்கொண்டே இருப்பது நல்லது. நம்முடைய முயற்சியை விடாமல் செய்துக்கொண்டே இருக்கும்பொழுது நம்முடைய முயற்சியை எண்ணி கடவுள் நமக்கு ஒன்றை கண்டிப்பாக கொடுப்பார்.

இல்லறத்தில் இருப்பவர்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். சந்நியாசியாக இருப்பவர்கள் கூட சும்மா இருக்காமல் ஏதாவது செய்துக்கொண்டு இருக்கின்றனர். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அனைத்தையும் முயற்சி செய்துக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். 

நமக்கு தெரிந்த ஒருவரும் வீணாக போய்விடகூடாது என்பதால் தான் நம்மால் முடிந்த விசயத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு பின்பும் நம்முடைய நல்ல விசயம் இருக்கவேண்டும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கிறேன். இதில் பணம் என்பதைவிட நல்ல வாழ்க்கை பிறர்க்கு கிடைக்கும்.

பலனை மட்டும் சொல்லி எதுவும் நடக்கபோவதில்லை. பலனையும் சொல்லி ஒரு வழியை சொல்லிவிட்டால் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும் என்பதால் பரிகாரம் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 21, 2017

உடலும் மனமும் சந்திரன்


வணக்கம்!
          ஒவ்வொரு மனிதனின் தோல்வியும் அவன் மனம் சார்ந்த ஒன்றாகவே இருக்கின்றது. சந்திரன் பலமாக இருந்தால் அவன் மனமும் நன்றாக இருந்து அவன் எதிலும் வெற்றி பெற்றவனாக இருக்கமுடியும். சந்திரன் சரியில்லை என்றால் அனைத்திலும் தோல்வியை தான் ஒரு மனிதன் சந்திக்கமுடியும்.

ஒரு சிலர் முன்னேற்றம் என்பதை அடையாமல் போவதற்க்கு காரணம் அவர்கள் தொடர் தோல்வியை சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். தொடர் தோல்வியை அடைந்த ஒருவரின் மனம் சோர்ந்தவுடன் அவரின் உடலும் சோர்ந்துவிடும். சக்தி அற்ற ஒருவராக மாறிவிடுவார்.

பொதுவாக நான் உணவு கட்டுபாடுகளை அடுத்தவர்களிடம் பரிந்துரை செய்வதில்லை. உணவை குறைக்கவேண்டும் என்றால் அந்த நபர் ஆத்மசாதனை செய்பவர்களாக இருந்தால் குறைக்கலாம். ஆத்மசாதனை செய்யாதவர்கள் உணவை குறைத்தால் அவர்களுக்கு இயற்கையாகவே சக்தி குறைந்துவிடும் என்பதால் இதில் தலையிடுவதில்லை.

உணவை குறைக்க ஆரம்பித்துவிட்டால் உடல் சோர்வால் உங்களால் நன்றாக சிந்திக்ககூட முடியாமல் போய்விடும். ஒருத்தர் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் இந்த விசயத்தில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். 

உடல் சோர்வை தந்தால் மனச்சாேர்வும் வந்துவிடும் அப்புறம் எதில் முன்னேற்றம் காண்பது. சந்திரன் ஒருத்தருக்கு சரியில்லை என்றால் அவர் உணவு விசயத்தில் கவனம் செலுத்தும்பொழுது உடல் சோர்வு அடையாமல் இருந்து மனதை சரி செய்ய உதவும். உடல் தெம்பாக இருந்தால் மனசும் தெம்பாக இருக்கும் என்பது எனது சின்ன நம்பிக்கை இந்த பதிவு உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 20, 2017

சிவனும் சந்திரனும்


வணக்கம்!
          நிறைய நண்பர்களுக்கு நான் பெளர்ணமி கிரிவலத்தை பரிந்துரை செய்து இருக்கிறேன். நான் பலதடவை திருவண்ணாமலை கிரிவலம் சென்று இருந்தாலும் நம்முடைய நண்பர்களையும் அங்கு சென்று வாருங்கள் என்று சொல்லியுள்ளேன். 

நான் சென்னையில் இருந்தால் மாதந்தோறும் எப்படியும் ஒரு முறையாவது பயணம் மேற்க்கொண்டு செல்வது உண்டு. தற்பொழுது தஞ்சாவூரில் இருப்பதால் இங்கிருந்து திருவண்ணாமலை சென்றுவருவதற்க்கு அதிகம் தூரம். திருவண்ணாமலை சென்றே ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகிவிட்டது. அண்ணாமலையார் கூப்பிடவில்லை என்று இருந்துவிடவேண்டியது என்று இருக்கிறேன்.

நமது ஊருக்கு அருகில் இருக்கும் சிவாலயங்கள் சென்று வருவது உண்டு. நாம் அம்மனை வரவழைத்து எல்லா வேலையும் செய்தாலும் என்னுடைய தனிப்பட்ட வேலைக்கு இப்படி பல கோவில்கள் சென்று வந்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

நாம் என்ன செய்கிறோம் என்பதை பிறர்க்கும் பரிந்துரை செய்வது பழக்கம். உங்களின் ஜாதகத்தில் சந்திரனை வலுப்படுத்த நிறைய சிவாலயங்கள் செல்வதும் ஒரு விதத்தில் நல்ல பரிகாரமாக இருக்கும்.

சந்திரனுக்கும் சிவனுக்கும் என்ன இருக்கின்றது என்று கேட்கலாம். தர்க்கம் செய்வதற்க்கு இது எல்லாம் இல்லை என்றே சொல்லலாம். நமக்கு தேவை நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும். நமது வாரிசுகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும். இந்த பிறவி எடுத்ததை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே.

ஜாதகத்தில் உள்ள சந்திரன் நமக்கு ஒரு நல்ல வழியை கொடுக்க இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும் என்பது என்னுடைய அனுபவத்தை வைத்து சொல்லுகிறேன். இதனை செய்து வரலாம். தற்பொழுது சிவராத்திரி வருவதால் அதனையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரன்


ணக்கம்!
          முதலில் ஒரு ஜாதகத்தை எடுத்தால் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது லக்கினாதிபதி என்பதை விட உங்களின் ஜாதகத்தில் சந்திரனின் நிலை எப்படி இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். சந்திரன் வளர்பிறையா அல்லது தேய்பிறையா என்பதை பார்த்து முடிவு செய்யவேண்டும். அதோடு சந்திரன் எந்த நட்சத்திரத்தில் மற்றும் யாரோடு இணைந்து இருக்கிறது என்பதையும் பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

சந்திரனின் நிலை சரியில்லை என்றால் உங்களின் வாழ்க்கை நன்றாக அமையாது. சந்திரன் சரியில்லை என்றால் நிறைய போராட்டங்களை நீங்கள் பார்த்து விட்டு அதன் பிறகு தான் நீங்கள் வெற்றி பெறமுடியும். 

சந்திரனுக்கு மறைவிடத்தில் தீயகிரகங்கள் அல்லது குரு கிரகம் அமைந்தாலும் போராட்டங்கள் அதிகமாக இருக்கும். நிறைய பேர்களிடம் அவமானப்பட்டு வாழ்க்கையை கடத்த வேண்டி ஒரு சூழ்நிலை உருவாகும்.

ஜாதகத்தில் எதனை சரி செய்தாலும் முதலில் சந்திரனை சரி செய்துவிட்டால் போதும். அதாவது சந்திரன் நமக்கு நன்மையை கொடுப்பது போல இருந்தால் நல்லது. வாழ்க்கை நன்றாக செல்லும்.

சந்திரன் சரியில்லை என்றால் அதனை சரி செய்வதற்க்கு முதலில் எளிமையான பரிகாரம் பெளர்ணமி நாட்களில் சிவன் கோவிலில் கிரிவலம் செல்வது மட்டுமே. குறைந்தது ஒரு வருடமாவது நீங்கள் கிரிவலம் செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 19, 2017

விளக்கம்


வணக்கம்!
          நிறைய இலவச பரிகாரத்தில் கலந்துக்கொண்டவர்கள் கேட்ட கேள்வி சார் ஏதாவது மாற்றம் வருமா என்று கேட்டார்கள். 

பரிகாரத்தை எனது பொழுதுபோக்கிற்க்காக இதனை செய்யவில்லை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ்ஒன்றை செய்துக்கொடுத்துவிடவேண்டும் என்பதற்க்காக தான் இதனை செய்து இருக்கிறேன்.

இலவசமாக யாராவது எனக்கு பரிகாரம் கொடுத்திருந்தால் இந்த வாய்ப்பை நான் கொடுத்து இருக்கமாட்டேன். நான் நிறைய பட்ட காரணத்தால் தான் நம்முடைய ஜாதககதம்பத்திற்க்கு வருபவருக்கும் செய்துக்கொடுக்கவேண்டும் என்பதால் இதனை செய்கிறேன்.

இலவசமாக நிறைய பரிகாரம் வரப்போகின்றது. அதனை எல்லாவற்றிலும் நீங்கள் பங்குக்கொள்ளுங்கள். கண்டிப்பாக எனக்கு தெரியும் அதாவது நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள் என்பது தான்.

யாரும் பங்குக்கொள்ளவேண்டாம் என்று நினைக்கவேண்டாம். அனைவரும் அவர் அவர்களின் ஜாதகத்தை ஒவ்வொரு பரிகாரத்திற்க்கும் அனுப்பிவையுங்கள்.

பரிகார போட்டோ வராதவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 18, 2017

உங்களால் முடிந்த ஒன்று



வணக்கம்!
          பல குடும்பங்களை நான் நேரில் சென்று ஜாதகத்தை பார்த்து அவர்களின் வாழ்க்கையை நான் கண்டவன். என்னுடைய அனுபவத்தை வைத்து ஜாதககதம்பத்தில் எழுதுவதால் தான் அது பலரை சென்றடைகிறது அனைவருக்கும் பிடிக்கிறது என்று சொல்லலாம். 

இன்று நாகரீக உலகம் என்று ஒரு சில நல்ல விசயத்தை எல்லாம் விட்டுவிட்டு வந்துவிடுகிறோம். அண்ணன் தம்பியாக பிறந்தாலும் ஒரு சில காலங்களில் அ்வர் அவர்கள் தங்களை பார்த்துக்கொள்வது கூட இல்லாமல் தனியாக சென்று தன் மனைவியோடு வாழ தொடங்கிவிடுகிறார்கள். 

எவன் எப்படி போனால் நமக்கு என்று என்று இருந்துவிடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் நாசமாக போனாலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை பாதிக்க செய்யும் என்பது காலம் சென்ற பிறகு தான் தெரியும்.

உங்களின் குடும்பத்தில் அண்ணன் தம்பியாக இருவருர் பிறந்தால் அதில் ஒருவராக நீங்கள் இருந்து ஒருத்தரைப்பற்றி அக்கறைக்கொள்ளாமல் இருந்தால் ஒரு காலத்தில் அதற்க்காக நீங்கள் வருத்தப்படவேண்டியிருக்கும்.

உங்களின் குடும்பத்தில் ஒருத்தர் நன்றாக வாழவில்லை என்றாலும் அந்த நபரால் உங்களின் அல்லது உங்களின் வாரிசுகளில் வாழ்வில் ஒரு பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்லுகிறேன்.

அடுத்ததாக ஒன்றை சொல்லுகிறேன். உங்களின் தந்தை நன்றாக வாழாமல் இருந்து நீங்கள் பிறந்தால் உங்களின் குடும்பத்தை நீங்கள் உயர்த்த நீங்கள் பெரிய கஷ்டப்படவேண்டியிருக்கும். உங்களின் அப்பா ஒழுங்காக வாழவில்லை என்றால் உங்களின் அப்பாவிற்க்காகவும் உழைக்கவேண்டும். உங்களுக்காகவும் உழைக்கவேண்டியிருக்கும். உங்களின் வாரிசுகளுக்கும் உழைக்கவேண்டியிருக்கும். எவ்வளவு பெரிய சுமை அது என்பது கஷ்டபடுபவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

இன்றைக்கு என்னை நாடிவருபவர்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் நல்லது செய்து அவர்களை வாழவைக்கவேண்டும் என்று தான் நிறைய போராடி செய்துக்கொண்டிருக்கிறேன். அது லாபநோக்கம் என்பதைவிட அடுத்தவர் மேல் உள்ள அக்கறை மட்டுமே.

நீங்கள் வெளியாட்களுக்கு செய்வதை விட உங்களின் குடும்பத்தில் உள்ளவருக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கலாம். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். லாபநோக்கம் அன்றி செய்தால் ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களால் முடிந்த உதவியை உங்களின் குடும்பத்திற்க்கு செய்யுங்கள். பணம் தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை உங்களின் அறிவை கூட கொடுத்து அவர்களை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லமுடியும். கொஞ்சம் யோசித்து பார்த்து செயல்படுங்கள் நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் அப்படி இல்லை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இந்த பதிவு என்ன என்று கேளுங்கள். உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 17, 2017

பரிகார விளக்கம்


வணக்கம்!
          பரிகாரம் செய்யும்பொழுது பல விசயங்கள் எனக்கு தென்பட்டன. அதாவது நம்முடைய பரிகாரத்தில் முதன்மை வகிக்கிப்பது நமது அம்மன் தான். எதனை செய்தாலும் அம்மன்  வழியாக தான் செய்யமுடியும். அம்மனை கொண்டு செய்யும்பொழுது அம்மன் தன்னை காட்டிக்கொடுக்கும். ஹோமத்தில் தெரியும் அம்மனை தான் படம் பிடித்து நமது பரிகாரத்தில் பங்குக்கொண்டவர்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

பரிகாரத்திற்க்கு இலவசமாக கலந்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் ஏதோ சும்மா கலந்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். வாட்ஸ்அப் எண்ணை கொடுத்தாலும் அவர்களுக்கு நான் வாட்ஸ்அப்பில் கூப்பிடும்பொழுது எந்தவித ரெஸ்பான்ஸ்ம் இல்லை. நமது வேலை பரிகாரத்தை செய்யவேண்டும் என்று செய்துவிட்டேன்.

பரிகாரத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எந்தவித லாபத்தையும் எதிர்நோக்காமல் செய்து இருக்கிறார் என்று புரியும். உங்களின் அனைவருக்கும் சொல்லுவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ என்னால் முடிந்த ஒரு உதவியை செய்கிறேன். 

நீங்கள் பங்குக்கொள்ளும்பொழுது துடிப்போடு செயல்படுங்கள் என்று தான் கேட்கிறேன். உங்களின் தகவல்கள் சரியாக வரவேண்டும் அதோடு நம்மோடு வாட்ஸ்அப்பில் இணையும்பொழுது அது உங்களுக்கு ஒரு நல்ல உணர்வை கொடுக்கும்.

இனிமேல் வரக்ககூடிய பரிகாரத்திற்க்கும் அனைவரும் பங்குக்கொள்ளவேண்டும். நல்ல முறையில் உங்களை தயார் செய்துக்கொண்டு அதில் பங்குக்கொள்ளுங்கள். சும்மா பங்குக்கொள்ளலாம் என்று வரவேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்



ணக்கம்!
          ஒருவருக்கு திருமணம் நடைபெறவேண்டும் என்றால் அவருக்கு குரு கிரகத்தின் பலன் வேண்டும். குரு கிரகத்தின் பலன் வரும்பொழுது ஒருவருக்கு திருமண ஏற்பாடு நடைபெறும்.

குரு கிரகம் திருமண ஏற்பாட்டை செய்கிறது என்றால் திருமண வாழ்க்கைக்கு எந்த கிரகம் நல்லது செய்யவேண்டும் என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லாமல் செல்வதற்க்கு சுக்கிரன் கிரகத்தின் தயவு வேண்டும்.

சுக்கிரன் கிரகம் மறைவு ஸ்தானம் அல்லது ஏதாவது ஒரு தீயகிரகத்தோடு இல்லாமல் இருந்தால் திருமணவாழ்வு நன்றாக இருக்கும். சுக்கிரன் தீயகிரகத்திற்குள் சென்று மாட்டிக்கொண்டால் திருமண வாழ்வு பிரச்சினையை சந்தித்துவிடுகிறது.

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி சுக்கிரனின் தயவு நிறைய தேவைப்படும். சுக்கிரனின் தயவு இருந்தால் பிரச்சினை இல்லை. நிறைய திருமணங்கள் விவாகாரத்து வரை செல்வதற்க்கு காரணம் சுக்கிரன் கிரகம் பாதிப்படைவது தான். 

சுக்கிரன் கிரகம் பாதிப்படைந்தால் அதற்கு என்ற நிறைய பரிகாரங்களை சோதிடர்கள் செய்வார்கள். அதனை செய்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சுக்கிரனின் காரத்துவம் உடையதை பலப்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 16, 2017

பரிகாரம்


வணக்கம்!
         பரிகாரம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. பரிகாரம் நல்ல படியாக தான் செய்துக்கொண்டு இருக்கின்றேன். பரிகாரம் நாள் இறுதி நாள் முடிந்தும் நிறைய ஜாதகங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. இதனை எல்லாம் தற்பொழுது செய்யமுடியாது என்பதால் அடுத்தமுறை செய்யும்பொழுது கலந்துக்கொள்ளலாம்.

இலவசமாக பரிகாரத்தில் கலந்துக்கொள்ளும் நபர்களுக்கு அருகில் உள்ள முருகன் கோவிலில் தைபூசத்திற்க்கு ஏதாவது முடிந்த உதவியை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். நிறைய நண்பர்கள் அதனை செய்யவில்லை என்பது பரிகாரம் செய்யும்பொழுது தெரிகிறது.

இலவசமாக இருந்தாலும் ஏதோ ஒரு நல்ல விசயத்தை நீங்கள் செய்துவிடவேண்டும். பரிகாரம் நல்ல பலனை தருவதற்க்கு நீங்கள் இப்படிப்பட்ட நல்ல காரியத்தை செய்யும்பொழுது தான் அது பலனை கொடுக்கும்.

நான் செய்யும் நிறைய பூஜைகள் எல்லாம் சிறந்த முறையில் பலன் கொடுப்பதற்க்கு காரணம் அந்தளவுக்கு சேவை செய்துவிட்டு பூஜையை செய்வது உண்டு. அப்பொழுது நல்ல பலனை கொடுக்கிறது.

நீங்களே இப்படிப்பட்ட விசயத்தில் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நிறைய நன்மையை நீங்கள் பெற்றுக்கொண்டு அதன் பிறகு நிறைய முன்னேற்ற ஏற்பாட்டை செய்வீர்கள் என்ற நோக்கத்தில் நீங்களே கோவிலுக்கு செய்துவிடுங்கள் என்று சொன்னேன். இன்னமும் தொடர்ந்து பரிகாரம் இருக்கின்றது அதனால் உடனே ஏதோ ஒரு நல்ல விசயத்தை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 15, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          சித்தர்கள் வழியை பின்பற்றுபவர்கள் முதலில் சறுக்குவது அவர்கள் போலவே எண்ணுவது தான் பிரச்சினையே. ஒரு சித்தரை பின்பற்றினால் அவரின் பெயரை இவர்கள் வைத்துக்கொண்டு அவரின் பெயருக்கு அவபெயரை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைய சித்தர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் கொஞ்சம் பாருங்கள். அகத்தியர் சித்தர் என்று பெயர் வைத்திருப்பார்கள். கோரக்கர் போகர் என்று ஒவ்வொரு சித்தர்களின் பெயரை வைத்துக்கொண்டு இருப்பார்கள். உண்மையான சித்தர்களின் பெயரை கலங்கப்படுத்துவது இந்த மாதிரியான வேலையாள் தான் நடைபெறுகிறது.

நீங்கள் போகர் சித்தரை பின்பற்றினால் கொஞ்சநாளில் அவரின் பெயரை உங்களுக்கு பின்னால் அல்லது முன்னால் இணைத்துக்கொண்டு விடுவீர்கள். அதன் பிறகு அனைத்தும் வீண் தான்.

இன்னமும் சில பேர் இருக்கின்றனர். நான் போகர் வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குறிபார்ப்பது அல்லது ஏதாவது செய்வது என்று இருக்கின்றனர். இது அனைத்தும் ஒரு பித்தலாட்ட வேலை மட்டுமே.

நாம் எது செய்தாலும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது மனது என்ன செய்யும் என்றால் அதுபோலவே மாறும் என்பது மட்டுமே உண்மை. சித்தர்களின் வழியில் நீங்கள் முயற்சி செய்யும்பொழுது அந்த சித்தராகவே உங்களை உருமாற்றம் செய்யும் இது மனம் செய்யும் ஒரு தந்திரவேளை இதனை நீங்கள் நம்பாமல் இருந்தால் போதும்.

ஒரு மனிதன் பிறப்பு இருந்தால் அவரை போல இந்த பூமியில் வேறு ஒருவரும் இல்லை என்பது மட்டுமே உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அகத்தியர் என்ற ஒருவர் இருந்தால் கண்டிப்பாக அந்த அகத்தியர் என்ற ஒருவர் போல பலர் இருப்பதில்லை.

சித்தர்களின் வழியை பின்பற்றுங்கள் ஆனால் அவர் தான் நான் என்று சொல்லவேண்டாம். சித்தர்கள் கண்டுபிடித்து அனைத்து வழியையும் பின்பற்றினாலும் அவர்கள் உங்களுக்காக இதனை எல்லாம் கண்டுபிடித்து உதவியிருக்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். அந்த சித்தரே நான் தான் என்றால் அங்கு தான் பல பிரச்சினை உருவாகும்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களிடத்தில் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு ஆள். ஒரு மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்று எழுதுகிறேன். நான் தான் ராஜேஷ்சுப்பு என்று நீங்கள் சொன்னால் எப்படி இருக்கும் உலகத்தில் இதனை விட வேறு அபத்தம் இருக்கமுடியாது.

சித்தர்களின் வழியை மேற்க்கொள்ளும் அனைவரும் அவர்களின் வழியை பின்பற்ற வேண்டும். அதோடு அவர்கள் குருவாக இருந்து எனக்கு வழிகாட்டவேண்டும் என்று நினைத்தால் நல்லது. அனைத்து சித்தர்களும் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அதனை விட்டு வேறு எதனை செய்தாலும் உங்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 14, 2017

பரிகார விளக்கம்



ணக்கம்!
          பரிகார வேலையில் இருப்பதால் பதிவை கூட தரமுடியவில்லை. பரிகாரம் ஆரம்பிக்கவில்லை ஆனால் வந்த ஜாதகத்தை பார்த்து அதனை எடுப்பதே எனக்கு நிறைய டைம் எடுத்துவிட்டது. 

அனைவருக்கும் பலன் சொல்லவேண்டும் என்ற ஆசை இருந்தது தற்பொழுது அது நடக்காது என்பது தெரிகிறது. அனைவருக்கும் பலனை பார்த்து சொல்லி அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் வந்த ஜாதகத்திற்க்கு பலனை சொல்ல குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.

தற்பொழுது அனைத்து ஜாதகத்தையும் எடுத்து அதற்கு என்ன பிரச்சினை அவர்களின் தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பரிகார செய்ய இருக்கிறேன்.

பரிகாரம் செய்துவிட்டு அவர் அவர்களுக்கும் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பி வைக்கப்படும். பரிகாரம் என்று இருப்பதால் பதிவுகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 12, 2017

பரிகாரம்


ணக்கம்!
          பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகங்களை ஒவ்வொன்றாக பார்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வருகிறேன். முடிந்தளவுக்கு பிற பிரச்சினையும் சுட்டிக்காட்டி அதற்கும் தீர்வு சொல்லிக்கொண்டு வருகிறேன். 

இதுவரை ஜாதகத்தை பார்க்காத நிறைய பேர்க்கு தற்பொழுது ஜாதகத்தை பார்க்கும் வாய்ப்பாகவும் அமைந்து இருக்கின்றது. இனிமேல் தொடர்ந்து பரிகாரம் செய்யப்படும். பரிகாரம் ஆரம்பித்த நோக்கமே நிறைய பேர்க்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் தான் ஆரம்பித்தேன். அது தற்பொழுது நடைபெற்றுவருகின்றது.

இதுநாள் வரை இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நமது தளத்தை படித்து வருகின்றார்களாக என்பதை எல்லாம் தற்பொழுது தான் பார்த்து இருக்கிறேன். நிறைய புதிய நண்பர்கள் தொடர்புக்கொண்டு வருகின்றனர். அது மகிழ்ச்சியை அளிக்கிறது.

சனி செவ்வாய் பரிகாரம் மட்டும் இல்லாமல் அவர் அவர்களின் ஜாதகத்தில் இப்படி இருக்கின்றது என்று சொல்லி பிற வழிபாட்டு முறைகளையும் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் பின்பற்றி வாருங்கள்.

ஒவ்வொரு நபரின் ஜாதகத்தையும் முழுமையாக பார்த்து சொல்லிருக்கிறேன். இன்னமும் நிறைய ஜாதகம் இருக்கின்றது அந்த ஜாதகத்தை எல்லாம் பார்த்து உங்களுக்கு பலனை சொல்லிவிடுகிறேன். நல்ல வாழ்க்கை வாழ ஜாதககதம்பம் உங்களுக்கு துணையாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 11, 2017

சனியின் குணம்


ணக்கம்!
          சனியின் தீயகுணம் எப்படி இருக்கும் என்று ஒரு நண்பர் கேட்டார். கடுமையான ஒரு வறுமையை நீங்கள் சந்தித்தால் அது தான் சனியின் தீயகுணம் என்பதாகும். ஒரு குடும்பத்தில் எந்த நேரமும் அழுகை சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தால் அந்த நிலையில் சனியின் குணத்தை அங்கு காணலாம்.

இறப்பு வீட்டிற்க்கு சென்றால் எப்படி இருக்கும் அது தான் சனியின் குணம். தற்பொழுது எல்லாம் இறப்பு வீட்டில் மிக ஜாலியாக இருக்கின்றார்கள். இளமையில் இறந்தால் எப்படி இருக்கும் அதுபோல தான் சனியின் தீயகுணம் இருக்கும்.

சனியின் தீயகுணத்திற்க்கு இன்னமும் அதிகபடியாக சென்று பார்த்தால் நம்ம ஊர் அரசாங்க மருத்துவமனை சென்று அங்கு பொதுவார்டு சென்று பார்த்தால் அது சனியின் குணமாக நாம் பார்க்கலாம். 

வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவை பார்த்தால் அது சனியின் குணம் என்று சொல்லலாம். இந்தியாவும் அப்படி தான் அவர்களின் கண்களுக்கு தெரியம். 

வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் நபர் வெளியில் தலைகாட்டமுடியாத ஒரு நிலை ஏற்படும். நம்மால் எள்ளவும் வெளியில் தலைகாட்டமுடியாமல் ஒரு நிலையில் இருந்தால் அது சனியின் பிடியில் இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 10, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          சித்தர்கள் பற்றிய எழுதிய பதிவை நிறைய பேர்கள் எதிர்பார்க்கின்றனர். நிறைய தகவல்களை தரவேண்டும் என்று நினைக்கின்றனர். உண்மையில் சித்தர்களைப்பற்றி முன்பே எழுதவேண்டும் என்று தான் நான் நினைத்தேன் ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிய பக்கம் எல்லாம் சித்தர்களை பற்றி தான் எழுதிக்கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்தோடு நாமும் எழுதகூடாது என்பதால் அதனை தவிர்த்தேன். இன்று முக்கால்வாசி பேர் பதிவு எழுதுவதேயே நிறுத்திவிட்டனர்.

இன்றைய தேதியில் அதிக பதிவுகள் ஆன்மீகத்தை சார்ந்து வருவதில்லை என்று நினைக்கிறேன். சித்தர்களைப்பற்றி அவ்வப்பொழுது நாமும் பதிவிடலாம் என்று முடிவு எடுத்து எழுதுகிறேன்.

இன்றும் கோரக்கர் பற்றி தான் பதிவு. எனக்கு ஒரு ஆன்மீககுரு கிடைப்பதற்க்கு அம்மன் வழி செய்தாலும் கோரக்கர் வழிகாட்டியதால் தான் அது நடக்கும் என்று பிறகு தான் எனக்கு தெரிந்தது. ஏன் என்றால் ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பது கூட இவர் வழிகாட்டுதல் படி தான் நடந்தது. என்ன என்று தெரியாதபொழுது அவர் என்னை நோக்கி வந்து என்னை அதற்குள் இழுத்தார் என்று சொன்னால் தான் அது உண்மை.

இன்று உங்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு வழியில் உதவுகிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு சித்தர்களின் ஆசி இருக்கின்றது என்று அர்த்தம். பெயர் தான் வித்தியாசப்படும் என்பதை தவிர அனைத்தும் சித்தர்களின் ஆசி தான். ஏதோ ஒருவர் உங்களின் குடும்பத்தில் ஒரு சித்தரிடம் அதிகமான பற்று வைத்திருப்பார். அவரின் அனுக்கிரகம் தான் உங்களுக்கு என்னால் உதவமுடிகிறது.

உங்களுக்கு எப்படி ஒரு சித்தரின் ஆசி கிடைத்து உங்களுக்கு உதவுகிறனோ அதுபோல தான் எனக்கும் கோரக்கரின் அருளால் ஒரு குரு கிடைத்தார். நாம் என்ன தான் பெரிய ஆளாக இருந்தாலும் குரு என்ற ஒருவர் இருந்தால் தான் நாம் நிலைக்க முடியும் என்பது குரு கிடைத்த பிறகு உணர்ந்தேன்.

கோரக்கர் எப்படி உதவினார் என்பது எனக்கு தெரியாது அவரின் வழியாக கிடைத்தது என்பது பிற்பாடு பல சம்பவங்களின் வழியாக உணரமுடிந்தது. உணர்வுகள் தானே ஆன்மீகம். கோரக்கர் அருளால் குரு கிடைத்தார் என்று சொல்லலாம்.

கோரக்கரை மனதார பிராத்தனை செய்து வந்தால் போதும் அவரின் வழியாக பல நல்ல சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை. கோரக்கரை தான் பிடிக்கவேண்டும் என்பதில்லை ஏதோ ஒரு சித்தர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டால் நமக்கும் நமது குடும்பத்தின் வாரிசுகளுக்கும் நல்ல வழி கிடைக்கும். அதனை நீங்கள் செய்து வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகார இறுதிநாள்


வணக்கம்!
          நாளையோடு சனி செவ்வாய் பரிகாரம் முடிவடைகிறது. நிறைய நண்பர்கள் இதற்கு ஜாதகம் அனுப்பி வைத்தனர். ஒவ்வொருவருக்கும் தனியாக மெயிலில் அல்லது போனில் தொடர்புக்கொண்டு அவர்களின் ஜாதகத்தை பார்த்து பலனை சொல்லிக்கொண்டு வருகிறேன்.

வாட்ஸ்அப்பிலும் தொடர்புக்கொண்டு தகவல் கொடுத்து வருகிறேன். தங்களின் ஜாதகத்தை அனுப்பிய அனைவருக்கும் தொடர்பு வரும். உங்களுக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு மேல் தொடர்புக்கொள்ளவும்.

சனி மற்றும் செவ்வாய் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் சிறப்பான பரிகாரமாக செய்வதற்க்கு நிறைய ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.  ஒரு சில நண்பர்கள் கட்டண சேவையில் உள்ள மெயிலுக்கு மெயிலை அனுப்பிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஜாதகர்களுக்கு தகவல் கொடுக்கப்படமாட்டாது.

கட்டணசேவையில் மெயிலை அனுப்பினால் கண்டிப்பாக அதற்கு பணம் செலுத்தவேண்டும். கட்டணத்தை இந்த வாரத்திற்க்குள் செலுத்திவிடுங்கள். ஒவ்வொருவருக்கும் பரிகாரபூஜை செய்து அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் படத்தை அனுப்பிவைக்கிறேன்.

இறுதிநாளை முடிவு செய்தாகிவிட்டது. நாளை வரை ஜாதகத்தை அனுப்பலாம். உடனே ஜாதகத்தை அனுப்பி உங்களைப்பற்றி தகவலை அனுப்பவும். வாட்ஸ்அப்பில் உங்களின் கோத்திரம் உங்களின் தந்தை மற்றும் தாயார் பெயர் குலதெய்வத்தின் பெயரை அனுப்பவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 9, 2017

பரிகாரம்


ணக்கம்!
          பொதுவாக நமது பரிகாரம் சொன்னவுடன் நடந்துவிடும். நமக்கு தேவையான ஜாதகங்கள் வந்தவுடன் அதனை இறுதி செய்து உடனே நடத்திவிடுவேன். சனி மற்றும் செவ்வாய் பரிகாரம் மட்டும் கொஞ்ச நாளைக்கு இழுத்துக்கொண்டு செல்கிறது.

சனி மற்றும் செவ்வாய் பரிகாரம் ஆரம்பித்தவுடன் நிறைய கஷ்டம் எனக்கும் வந்தது அதனை எல்லாம் ஒரு வழியாக எதிர்நோக்கிக்கொண்டு இருந்தேன். அது எல்லாம் நம்மால் எளிதாக சமாளிக்கமுடியும் என்றாலும் அதனோடு போராடுவதில் நிறைய அனுபவமும் கிடைக்கும் என்பதால் சும்மா அதனை எதிர்நோக்கினேன்.

தற்சமயம் அனைத்து பிரச்சினையும் அதுவாகவே குறைந்துக்கொண்டு வருகின்றது. ஒரளவுக்கு நிம்மதி வந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். நம் நண்பர்கள் நிறைய ஜாதகங்களை எனக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் பங்குகொள்ளவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. 

இன்று வரை பல ஜாதகங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றது. முடிந்தளவுக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள். கொஞ்சநாள் தள்ளி வைக்கிறேன் ஆனால் விரைவில் இறுதி செய்யப்படும்.

ஜாதகம் அனுப்பிய நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் இன்றுமுதல் அழைப்பு கொடுக்கிறேன். அனைவருக்கும் வருகின்றதா என்பதை பாருங்கள். இரண்டு நாட்களில் அந்த வேலை முடிவடைந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 8, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு





அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்





அன்புடன்
ராஜேஷ்சுப்பு





அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 7, 2017

அம்மன் பூஜை


ணக்கம்!
          நாளை அம்மன் பூஜை நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்.
பல்லடத்தை சேர்ந்த திரு காசிநாதன் அவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
வழக்கம்போல் 
              திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்கள் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர்.

அம்மன் பூஜை நடைபெறும் நாளை புதிய வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


ணக்கம்!
          சனி செவ்வாய் பரிகாரம் நீண்டநாள்களாக இழுத்து வந்த காரணம் நிறைய பேர் இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இதனை செய்தேன். தற்பொழுது நிறைய பேர் இதில் கலந்துக்கொண்டு வருகின்றனர். இந்த வாரத்தில் இதனை முடித்துவிடலாம்.

சனி கிரகத்திற்க்கு தனியாகவும் செவ்வாய் கிரகத்திற்க்கு தனியாகவும் சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அதற்க்கும் சனி செவ்வாய் பார்வைக்காகவும் இந்த பரிகாரத்தை செய்கிறோம். 

பரிகாரம் செய்வதால் பலன் ஏற்படுமா என்று கேட்பவர்களும் இருப்பார்கள். சும்மா வாழ்வை நகர்த்துவதை விட ஏதோ ஒன்றை செய்து நமது முயற்சியை மேலும் கூட்டிக்கொள்கிறோம்.பலர் ஜாதக கதம்பத்தை தொடர்ந்து வருவதற்க்கு இப்படிப்பட்ட பரிகாரங்கள் தான் கைகொடுக்கிறது. பரிகாரம் செய்வதால் நல்ல வாழ்க்கை வாழலாம்.

இலவசமாக ஜாதகத்தை அனுப்பிய ஒரு சிலர் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வரும் தைபூசத்திற்க்கு ஏதாவது ஒரு உதவியை செய்து விடுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு அதனை செய்வது நல்லது.

ஜாகதகதம்பத்தை படிக்காத உங்களின் நண்பர்களுக்கு இதனை பரிந்துரை செய்யலாம். நம்மோடு அவர்களும் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செயல்படுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 6, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          நான் ஒரு இடத்தில் வேலை பார்த்தப்பொழுது அந்த அறை சிறிய அறை. அந்த சிறிய அறையில் ஒரு படம் எனக்கு கிடைத்தது. அந்த படத்தை  அந்த அலுவலகத்திலேயே வைத்து தினமும் வணங்கிவருவேன். அந்த படத்தை வைத்தது ஒரு எலெட்ரிக் ஒயர் வரும் இடத்தில் வைத்து வணங்கி வந்தேன். 

தினமும் அலுவலகத்தை திறப்பது நான் தான். நான் உட்கார்ந்திருக்கும் சேர்க்கு முன்னால் சுவற்றில் ஒரு ஒயர்க்கு மேலே அதனை நான் மாட்டி வைத்தேன். அதனை அவ்வப்பொழுது பார்த்து வருவது உண்டு.  அவரைப்பற்றி அந்த நேரத்தில் எனக்கு தெரியாது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் இவர் யார் என்று கேட்பது உண்டு. அளவில் சிறிய படம் என்றாலும் அந்த இடத்தில் இருந்தே ஒரே படம் அது மட்டுமே.

சிறிய அளவில் இருந்த படம் பெரியளவில் ஈர்த்தது. அவரைப்பற்றி பல பேர் பல விசயங்களை எனக்கு சொன்னார்கள். அதில் இருந்து எனக்கு அவர் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 

அது கோர்க்கர் சித்தரின் சிறிய படம். கோர்க்கர் சித்தர் என்று அவரின் படத்திற்க்கு கீழ் எழுதியிருக்கும். எப்படி என்றால் கோரக்கர் வடக்கு பொய்கைநல்லூர் என்று எழுதியிருந்தது. நான் இருக்கும் ஊரில் இருந்து அதாவது பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டிணத்திற்க்கு ஒரே பேருந்து பயணத்தில் சென்றுவிடலாம். பல தடவை நான் நாகப்பட்டிணத்திற்க்கு சென்று இருக்கிறேன். இவரின் ஜீவசமாதிக்கு சென்றதில்லை. 

எனக்கு பல வழிகளிலும் உதவிய சித்தர் ஒருவரின் ஜூவசமாதிக்கு என்னை அழைக்காமல் வைத்திருக்கிறாரே என்று நினைப்பது உண்டு. அதே நேரத்தில் அவர் அப்படி என்னை வைத்திருப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இருக்கும் என்று இருக்கிறேன். பல வழிகளில் பல நேரங்களில் பல இடத்தில் அவரின் புகைப்படம் அல்லது அவரைப்பற்றி ஏதோ ஒரு தகவல் எனக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

ஜாதககதம்பம் படிக்கும் என்னோடு நெருங்கி பழகும் பல நண்பர்களிடம் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன். பொதுவாக இதனை சொல்லுவதற்க்கு காரணமும் இன்று கண்ணில் பட்டது உடனே எழுதிவிட்டேன். அவ்வப்பொழுது அவரின் நல்ல விசங்களைப்பற்றி உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருமண வாழ்வு


வணக்கம்
          நேற்று ஒரு நண்பரோடு பேசும்பொழுது திருமணம் நடைபெறுவற்க்கு நாம் நிறைய கோவில்களை வணங்குகிறோம். அதே மாதிரி திருமணவாழ்வு நன்றாக இருப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். இன்று நல்ல முகூர்த்தம் இந்த தகவல்களை சொல்லிவிடவேண்டும் என்று எழுதிவிட்டேன்.

திருமணவாழ்வில் இரண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாமல் செல்லவேண்டும். திருமணவாழ்வில் சண்டை இல்லாமல் இல்லை ஆனால் அந்த சண்டை முற்றி அது விவாகாரத்து வரை செல்லகூடாது. 

திருமணம் நடைபெறும் இளம்தம்பதிகளிடம் நீங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தை சொல்லி இப்படி தான் நடந்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவிடவேண்டும். குடும்பத்தின் பாரம்பரியத்தை சொன்னால் ஒரளவு அதன்படி நன்றாக ஒழுக்கமாக வாழவேண்டும் என்று நினைப்பார்கள்.

திருமணவாழ்வில் பிரிவை ஏற்படுத்துவது அதிகம் ஆறாவது வீடு தான் அதுபோல விரையவீடும் செய்யும். இந்த கிரகங்கள் வலுபெறுகிறதா என்பதை அடிக்கடி ஜாதகத்தை கண்காணித்தால் போதும்.

இறைவனுக்கு கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடத்துவார்கள். அதனை நேரில் கண்டு தரிசனம் செய்யவேண்டும். அதோடு பிரதோஷ தினத்தில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலில் இருந்தால் திருமணவாழ்வில் பிரச்சினை வராது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு




Saturday, February 4, 2017

தோல்வியை அனுமதி


ணக்கம்!
          ஒரு சில நேரங்களில் மனிதனுக்கு தோல்வி தேவை. அந்த தோல்வி பல விசயங்களை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் என்பது மட்டும் பல அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.

சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அல்லது பார்வையில் இருந்தால் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். பிடிவாதகுணமாக இருந்து தன்னுடைய வாழ்க்கைக்கு தானே பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்வார்கள். 

வெற்றி எல்லா விசயத்திலும் இருக்கவேண்டும் என்று மனிதன் நினைக்கவேண்டும் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் அந்த வெற்றி சாத்தியப்படகூடிய ஒன்று கிடையாது என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் அல்லது பார்வையில் இருந்தால் அவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்படாது. ஒரு சில இடங்களில் தற்கொலை கூட செய்துக்கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தும்.

சனி மற்றும் செவ்வாய்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டீர்களா. விரைவில் சனி செவ்வாய் பரிகாரம் முடிவடையும் தேதி அறிவிப்பு வர இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி செவ்வாய் பரிகாரம்


ணக்கம்!
          நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களுக்கு பதிவை அளிக்கிறேன். சொந்த வேலை தனி ஒருவனாக இதனை செய்யவேண்டிய காரணத்தால் பதிவை கொடுக்கமுடியவில்லை. இனிமேல் தொடர்ந்து உங்களுக்கு தந்துவிடுகிறேன். அம்மன் அருளால் அது நடைபெறும்.

சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு இறுதி நாள் அடுத்த வாரமாக இருக்கும். இதுவரை அனுப்பிய ஜாதகத்தை எல்லாம் பார்த்து இன்று முதல் உங்களுக்கு பதிலை அனுப்புகிறேன்.

சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பாதவர்கள் அனுப்பி வைக்கவும். சனி செவ்வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் கொஞ்சம் தனிப்பட்ட முறையிலும் பிரச்சினை எனக்கு வந்தது அதனை எல்லாம் நமது அம்மன் அருளால் முடித்து வைக்கமுடிந்தது.

சனி செவ்வாய் இரண்டு கிரகங்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை அளிக்ககூடிய ஒரு கிரகங்கள் தான். சோதிடம் அதிகம் படிப்பவர்களுக்கு அதன் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து அதற்க்கு செய்யவேண்டியதை செய்துவிடுவார்கள்.

வருடம் ஒரு முறை இந்த இரண்டு கிரகங்களுக்கு செய்துவிட்டால் அதன் பாதிப்பை நாம் கொஞ்சம் குறைத்துவிடலாம். பரிகாரத்திற்க்கு அதிக பணத்தை செலவு செய்யவேண்டியதில்லை. குறைந்த விலை அல்லது இலவசமாக கூட நீங்கள் இதனை செய்துக்கொண்டு நல்ல வாழ்க்கை வாழ ஜாதககதம்பம் உங்களுக்கு உதவும்.

அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் உடனே அனுப்பி வைக்கவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 1, 2017

இனிய தொடக்கம்


வணக்கம்!
          கொஞ்சம் சொந்த வேலை காரணமாக உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. வருகின்ற மூன்றாவது தேதிக்கு பிறகு உங்களுக்கு பதிவை அதிகம் தருகிறேன். அதுவரை முடிந்தளவுக்கு நேரம் இருக்கும்பொழுது பதிவை தருகிறேன்.

நமது அம்மன் துணையால் தான் பரிகாரம் செய்யமுடிகிறது. பலர்க்கு இலவச பரிகாரமும் செய்ய முடிகிறது. சனி மற்றும் செவ்வாய் பரிகாரம் இனிவரும் நாட்களில் நடத்தப்படும். இதுவரை வந்த ஜாதகங்களை பாரத்துவிட்டு அவர்களுக்கு மெயிலில் அனுப்படும். அதன் பிறகு பரிகாரம் செய்யப்படும்.

விரைவில் சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு முடிவு தேதி அறிவிக்கப்படும். ஜாதக கதம்பம் படிக்கும் அனைவரும் அவர் அவர்களின் ஜாதகத்தை எடுத்து ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள். சனி செவ்வாய் உங்களின் வாழ்க்கையை ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பை தந்து இருக்கும். அதற்கு பரிகாரமாக இந்த பரிகாரத்தில் பங்குக்கொண்டு தீர்வை பெறமுடியும்.

நமது அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் அனுப்பிவைக்கலாம். வருகின்ற 10 தேதிக்குள் அம்மன் பூஜை செய்யப்படும். அம்மன் பூஜைக்கு புதியதாக பணம் செலுத்துபவர்கள் தங்களின் ஜாதகத்தையும் இணைத்து அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு