Followers

Monday, August 31, 2015

காரிய தடை பரிகாரம்


வணக்கம்!
          காரிய தடையைப்பற்றி நான் அவ்வப்பொழுது எழுதி வருவது உண்டு. காரிய தடைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஏற்கனவே உங்களிடம் சொல்லிருக்கிறேன். மீண்டும் கொஞ்சம் அதனைப்பற்றி பார்க்கலாம்.

கொஞ்சம் வெளிப்படையாகவே இதனைப்பற்றி சொல்லுகிறேன். நமது தொழில் செய்பவர்களுக்கு என்று நான் ஆன்மீகவழியில் செய்து தருவது நீங்கள் அறிந்த ஒன்று. இதில் வரும் நண்பர்களிடம் நீங்கள் பூஜை செய்யவேண்டும். அதற்கு ஒரு தொகை ஆகும் என்று சொல்லுவேன். அதற்கு அந்த நண்பர்கள் சரி சார் செய்துவிடலாம் என்று சொல்லுவார்கள். அதன் பிறகு அதனைப்பற்றி பேசுவது என்பது இருக்கவே இருக்காது.

இவனோடு தொந்தரவுக்கு ஒரு அளவே இல்லை என்று போனை வைத்துவிடும் நண்பர்களும் உண்டு. இப்படி எல்லாம் நான் சொல்லுவது இவர்களின் பாக்கியஸ்தானம் எந்தளவுக்கு வேலை செய்கிறது என்பதை பார்ப்பதற்க்காக நான் சொல்லுவேன். 

பாக்கியஸ்தானம் என்பது தான தர்மம் ஆன்மீக பணி ஆன்மீகத்திற்க்காக இவர்கள் எடுக்கும் முயற்சி போன்றவற்றை காட்டும் ஒரு இடம். இதில் எல்லாம் ஒருவர் ஈடுபடும்பொழுது பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும். பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்தால் காரிய தடை இருக்காது.

பாக்கியஸ்தானத்திற்க்கு குரு காரகன் வகிக்கிறார். நம் ஆட்கள் எனக்கு கொடுக்க பணம் இல்லை என்று ஒரு நாள் தண்ணி போட பத்தாயிரம் செலவு செய்வார்கள். அதாவது ராகுவை துணைக்கு கூப்பிட்டுவிடுவார்கள். ராகு வந்தால் எப்படி பாக்கியஸ்தானம் வேலை செய்யும் காரிய தடையை அவர்களே உருவாக்கிவிடுவார்கள்.

என்னிடம் தான் வந்து பூஜை செய்யவேண்டும் என்பதில்லை தான தர்மம் மற்றும் ஆன்மீக பணி போன்றவற்றை எங்கு வேண்டுமானாலும் செய்துக்கொண்டு உங்களின் காரியதடையை விலக்கிக்கொள்ளுங்கள்.

பணம் சம்பாதிக்கவேண்டும் என்று பல கோடிஸ்வரர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் நோக்கம். காரிய தடை இல்லாமல் வேலை நடக்கவேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் தொழில் அனைத்தும் வெற்றியை தரவேண்டும் என்ற நோக்கத்திற்க்காக மட்டுமே செய்கிறார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 30, 2015

சந்திப்பு


வணக்கம்!
         நமது ஜாதககதம்பத்தில் பல நண்பர்கள் வந்து படித்து செல்லுகின்றனர். இதில் ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்வது கூட கிடையாது அப்படியே சென்றுவிடுகின்றனர். அப்படி செல்லும் நண்பர்கள் திடீர் என்று பிரச்சினை வரும்பொழுது என்னை கூப்பிட்டு இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளேன் எப்படியாவது இதில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றனர்.

மருத்துவமனையில் இருக்கின்றார் அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார் அவருக்காக அம்மனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றனர். அம்மனிடம் வேண்டிக்கொள்வது பிரச்சினையில்லை ஆனால் அவரை நாம் காப்பாற்றவேண்டும் என்றால் அவரைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். நீங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றீர்கள் உங்களை கூட எனக்கு தெரியவில்லை என்றால் எப்படி இதனை செய்வது.

ஜாதககதம்பத்திற்க்கு வரும் ஒவ்வொரு நட்புகளும் என்னை ஒரு முறை சந்தித்துவிடுங்கள். பல ஊர்களுக்கு நான் வருகிறேன் அப்படி வரும்பொழுது என்னை சந்தித்துக்கொள்ளுங்கள். நமது பதிவில் ஆரம்ப கட்ட நாட்களில் இருந்து இன்றுவரை பல நண்பர்கள் என்னை சந்திக்கொண்டு இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் நான் வசிக்கிறேன் என்றால் ஊருக்கு வரும்பொழுது என்னை வந்து சந்தியுங்கள். அப்படி இல்லை என்றால் போனில் தொடர்புக்கொண்டு பேசுங்கள். 

அவசர காலத்தில் அழைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்பது மட்டும் இல்லை. இத்தனை நாட்கள் படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்னும்பொழுது ஒரு சந்திப்பு அவசியம் என்பதால் உங்களிடம் இதனை சொல்லுகிறேன். அந்தந்த ஊர்களுக்கு வரும்பொழுது கூட சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 29, 2015

பச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்


வணக்கம்!
          இன்று பெளர்ணமி தினம். பச்சைப்பரப்புதல் என்ற ஒன்றை நான் நமது பதிவில் சொல்லிருக்கிறேன். இதனை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

உங்களின் குலதெய்வத்திற்க்கு இந்த பச்சைப்பரப்புதலை செய்யும்பொழுது உங்களின் குலதெய்வம் மனமிரங்கி உங்களுக்கு நல்ல வழிக்காட்டும். ஜாதகத்தில் ஏற்படும் எப்பேர்பட்ட தோஷத்தையும் நீக்கி நல்லவழியை கொடுக்கும்.

இன்று பெளர்ணமி தினம் என்பதால் உங்களின் குலதெய்வத்திற்க்கு உங்களின் வீட்டில் மாலை நேரத்தில் இந்த பச்சைப்பரப்புதலை செய்யுங்கள். நமது பதிவில் எப்படி செய்வது என்பது கொடுக்கப்பட்டு இருக்கிறது அதனை படித்துவிட்டு செய்யுங்கள்.

நாளைய தினம் காயத்ரி ஜெபம் என்ற ஒரு நாள். காயத்ரி மந்திரம் செபிப்பவர்கள் நாளை விஷேசமாக பூஜை செய்யலாம். காயத்ரி தேவி நல்ல அருளை வழங்கும் தினமாக நாளை இருக்கிறது. காயத்ரி மந்திரம் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கூட நாளை ஆரம்பிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 28, 2015

கல்வி சேவை


ணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கலாம். ஒரு சில நண்பர்கள் வசதி குறைவாக இருக்கலாம். இப்படி வசதி குறைவாக இருக்கும் குழந்தைகள் படிப்பதும் கடினமாக இருக்கும்.

வசதி குறைவாக இருந்தால் ஒரு சில குழந்தைகள் அந்த சூழ்நிலை படிக்கமுடியாமலும் இருக்கலாம். இன்றைய கல்வி எல்லாம் பணத்தை அடிப்படையாக கொண்டு தான் இயங்குகிறது. பணம் நன்றாக இருந்தால் அப்படியே சரி செய்துக்கொண்டு படிப்பு வந்துக்கொண்டு இருக்கிறது.

வசதி குறைவாக இருக்கும் குழந்தைகள் படிப்பது சிரமாக இருக்கும். அப்படி வசதி குறைவான குழந்தைகள் ஆன்மீக வழியில் சரி செய்து நன்றாக படிக்கவைக்கமுடியும். பொதுவாக படிப்பு சரியில்லை என்றால் அதனை சரிசெய்யமுடியும். 

நமது பதிவு வரும் குழந்தைகள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் அவர்களைப்பற்றி என்னிடம் தெரிவியுங்கள். அவர்களுக்கு தேவையானதை நான் செய்துவிடுகிறேன். 

குறிப்பாக பத்தாவது மற்றும் பனிரெண்டாவது படிக்கும் குழந்தைகள் ஒழுங்காக படிக்காத குழந்தைகள் உங்களின் குழந்தைகளாக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துக்கள். அந்த குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வைக்கமுடியும்.

இது கல்வி சேவை. இது முற்றிலும் இலவசம். நமது பதிவை படிக்கும் நண்பர்களுக்கு மட்டும் இது செய்வதாக இருக்கிறேன். உங்களின் குழந்தைகள் உண்மையில் படிக்கவில்லை என்றால் மட்டும் எனக்கு தெரியப்படுத்தவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஓணம் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!

          ஓணம் பண்டிகை கொண்டாடும் நண்பர்களுக்கு இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 27, 2015

நாளைய நாளில்


வணக்கம்!
          நாளை ஒரு முக்கியநாளாக வருகிறது. நடராஜருக்கு அபிஷேகம் செய்யும் நாள். நடராஜருக்கு வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அபிஷேகம் செய்வார்கள். அந்த நாள் நாளை வருகிறது. உங்களின் அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு சென்று நடராஜர் அலங்காரத்தை தரிசனம் செய்துவிட்டு வரலாம். 

நாளை வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் கடைபிடிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு லட்சுமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

நாளை திருவோண நட்சத்திரம் வருகிறது. புதியதாக ஏதாவது திறக்கவேண்டும் என்றால் இந்த நாளில் திறக்கலாம். நீங்கள் திறக்கும் ஸ்தாபனம் நல்ல முறையில் வளரும்.

நாளை ஓணம் பண்டிகை. கேரள நாட்டில் உள்ளவர்களுக்கான பண்டிகை நாம் பெருமாளை தரிசனம் செய்து நல்ல வாழ்வை தரும்படி வேண்டிக்கொள்ளலாம்.

நமது புதிய பிளாக்கில் இன்றைய பதிவு 

உடலை விட்டு ஆத்மாவை எப்படி வெளியில் பறப்பது 

அதற்கான பயிற்சியை கொடுத்துள்ளேன். புதியதாக இணைய விரும்பும் நண்பர்கள் பணத்தை செலுத்திவிட்டு இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வேண்டுகோள்


வணக்கம்!
         நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவரும் என்னை தொடர்புக்கொண்டு என்ன சார் எங்களுக்கு புதிய பதிவைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் சொல்லமாட்டீர்கள் எங்களிடம் அந்தளவுக்கு பணம் இருந்தால் வந்து சேர்ந்துவிடுவோம் எங்களுக்கு ஏதாவது பணத்தை குறைத்து வாங்ககூடாது என்று கேட்கிறார்கள்.

நான் இந்த புதிய பதிவை ஆரம்பித்த நோக்கம் யாராவது ஒருவர் வந்தால் போதும் அவர்களுக்கு நான் கற்ற விசயத்தை கொடுத்துவிடலாம் என்று தான் ஆரம்பித்தேன். இன்று புதிய பதிவில் பத்து பேர் இருக்கின்றனர். இன்னும் பல பேர் அதில் இணைந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஜாதககதம்பம் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை நான் சொல்லுவது கண்டிப்பாக பணம் ஒருவருக்கு இருக்கவேண்டும் அப்பொழுது தான் அவர்கள் நினைப்பதை ஏன் ஆன்மீகத்தை கூட அடையமுடியும் என்று சொல்லி வந்து இருக்கிறேன்.

பல செல்வவளத்தை பற்றி பதிவில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் நீங்கள் வாழ்வில் கடைபிடித்தாலே போதும் இன்று ஒரளவுக்கு பணம் வந்து இருக்கும். அதனையும் செய்வதில்லை இன்று பல பேர் பணம் என்றவுடன் என்னிடம் பணம் இல்லை மாதம் மாதம் கட்டுகிறேன் என்கிறீர்கள்.

நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன் அப்படி செல்லும்பொழுது அந்தந்த ஊர்களில் என்னை வந்து சந்தித்து இருக்கவேண்டும். அதுவும் செய்வதில்லை பின்பு எப்படி உங்களை நான் நம்பி இதில் இணைப்பது. படு பிஸியான ஆட்கள் கூட மாதத்திற்க்கு ஒரு முறை என்னை வந்து சந்தித்து செல்லுகின்றனர். 

உங்களுக்கு நான் சொல்லுவது ஒன்று தான் நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன். அந்தந்த ஊர்களின் என்னை சந்தித்து கேளுங்கள். நான் இலவசமாக சொல்லிதருகிறேன். பணம் கட்டினால் மட்டுமே புதிய பிளாக்கிற்க்கு இணைப்பு வழங்கமுடியும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 25, 2015

காயத்ரி மந்திரம்


வணக்கம்!
          காயத்ரி மந்திரம் செய்ய நினைத்து என்னிடம் போனில் தொடர்புக்கொள்பவர்கள் ஒன்றை சொல்லுவார்கள். சார் நான் உங்களிடம் ஜாதகம் பார்க்கிறேன் என்பார்கள். 

காயத்ரி மந்திரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்பொழுது ஜாதகத்தை பற்றி கவலைக்கொள்ளவேண்டாம். இறை சக்தியை தேடி வருபவர்கள் ஜாதகத்தைப்பற்றி கவலை வேண்டாம். அந்த இறைசக்தியை மந்திர ஜெபத்தால் பெற்று கிரகத்தை வென்றுவிடலாம்.

காயத்ரி மந்திரத்தை செய்தால் எனக்கு பணம் தரவேண்டும் என்பதில்லை. உங்களின் நேரத்தை செலவு செய்து ஜாதககதம்பத்தை படிக்கிறீர்கள். எத்தனையோ பிளாக் நெட்டில் வந்துக்கொண்டு இருக்கின்றது. அதனை எல்லாம் மீறியும் இதனை படிப்பதற்க்கு நான் செய்யும் ஒரு கைங்கரியமாக உங்களுக்கு இருக்கட்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

தற்பொழுது புதிய பிளாக் தொடங்கியுள்ளேன் அது கட்டண சேவை. தற்பொழுது அதில் இணைவதற்க்கு பணம் இல்லை ஆனால் எதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சி செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் காயத்ரி மந்திரத்தை செய்துக்கொண்டு இருக்கலாம். பணம் வரும்பொழுது அதில் இணைந்துக்கொள்ளலாம்.

காலத்தை வீண் செய்துக்கொண்டு இருக்காமல் ஏதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சியை செய்துக்கொண்டு இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 24, 2015

நண்பர்களுக்கு


வணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லும் அறிவுரை. ஜாதகத்தில் இருக்கும் கிரகத்தை கண்டு பயப்படதேவையில்லை. நமக்கு இப்படிப்பட்ட தோஷம் வந்துவிட்டதே நாம் என்ன செய்யபோகிறோம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்காமல் அதற்கான வழியை தேடிக்கொள்ளுங்கள்.

ஆன்மீகவழியில் ஈடுபட்டு உங்களின் குறையை போக்கிக்கொள்ள முடியும். ஒன்பது கிரகங்களும் எந்த கட்டத்திலாவது அமர தான் செய்யும். அந்த கிரகம் அங்கு அமர்ந்து இந்த தோஷத்தை தருகிறது என்று நீங்கள் பயப்படதேவையில்லை.

ஒருவருக்கு ஒன்று உடனே கிடைத்துவிடும் ஒருவருக்கு அது உடனே கிடைக்காது. கிடைக்காது என்பது இல்லை கிடைக்கும் அது கொஞ்ச நாள் ஆகும்.அதற்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அவ்வளவு தான். நீங்கள் முதலிலேயே அது கிடைக்காது என்று உங்களின் மனதில் செட் செய்துவிட்டால் அது எங்கு தேடியும் கிடைக்காது.

எத்தனையோ ஜாதகத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு ஜாதகத்தையும் எடுத்து பார்த்தால் திருமண வீடு எதாவது ஒருவிதத்தில் கெட்டு தான் இருக்கும் ஆனால் திருமணம் அனைவருக்கும் நடந்துவிடும். ஒன்று அல்லது இரண்டு பேர்க்கு நடக்காமல் இருக்கலாம். அது அவர்கள் செய்யும் தவறே தவிர கிரகங்கள் செய்யும் தவறாக இருக்காது. கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு அனைத்திற்க்கும் வழி உண்டு என்று யோசித்தால் வெற்றி கிடைக்கும்.

நமது ஆன்மீக பயிற்சி பிளாக்கில் இன்று புதிய பயிற்சி ஒன்று கொடுத்துள்ளேன். இணைந்த நண்பர்கள் படித்து செய்யுங்கள்.

இணையாத நண்பர்கள் புதிய பிளாக்கில் உடனே இணைந்துவிடுங்கள். உங்களின் வாழ்வில் நீங்கள் செய்த ஒரு நல்ல விசயமாக அது அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 22, 2015

ஆவணி விரதம்


வணக்கம்!
         தமிழர்களை பொறுத்தரை ஊருக்கு ஊரு ஒரு மாரியம்மனை வைத்து வணங்கி வருவார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் அனைத்திலும் ஊருக்கு நடுவில் மாரியம்மன் கோவில் இருக்கும்.

மாரியம்மன் கோவில் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம். அந்தந்த ஊர்களின் வழக்கப்படி மாரியம்மனுக்கு திருவிழா நடத்துவார்கள்.

மாரியம்மனுக்கு அந்தந்த ஊர்களின் வழக்கப்படி திருவிழா நடத்தினாலும் மாரியம்மனுக்கு ஆவணி மாதம் நடத்தும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று. 

ஆவணி மாதம் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் விரதம் இருந்து கடைசி வாரம் திருவிழா நாளில் விரத்தை முடிப்பார்கள். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் விரதம் இருந்து ஒரு வேலை சமைத்து படையல் செய்து அந்த நாளில் விரதத்தை முடிப்பார்கள்.

ஆவணியில் வரும் ஞாயிற்றுகிழமை ஒவ்வொருவாரமும் விரதம் இருந்து வரவேண்டும். ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை அன்று மாரியம்மன் கோவில் சென்று விரதத்தை முடிப்பார்கள். நாளை முதல் ஆவணி ஞாயிறு தொடங்குகிறது. 

நமது புதிய பிளாக்கில் பல பயிற்சிகளை சொல்லிக்கொடுத்து வருகிறேன். ஜாதககதம்பத்தை படிக்கும் அனைத்து நண்பர்களும் இணைந்துவிடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 21, 2015

சூட்சம உடல்


வணக்கம்!
          முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீகத்தில் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகின்றனர். வழிபாடு ஒருவரை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றாலும் தன்னை காத்துகொள்ளும் வழிகளை ஒருவர் செய்யவேண்டும்.

கோவிலுக்கு சென்று வழிபடுவது ஒரு வழியாக இருந்தாலும் சூட்சம சரீரத்தை ஒருவர் காக்கும்பொழுது மட்டுமே தன்னை எல்லா வழிகளிலும் மேம்படுத்திக்கொள்ளமுடியும். சூட்சம சரீரத்தை சரியான முறையில் பாதுகாத்துவிட்டால் உடலுக்கு வரும் தீங்கு எல்லாம் சரியாகி உங்களின் வாழ்வு முன்னேற்றப்பாதையில் செல்லும்.

பல பதிவுகளில் நான் சூட்சம சரீரத்தை காக்கும் வழிகளை சொல்லியுள்ளேன். திருஷ்டி கழிப்பது கூட சூட்சம சரீரத்தை பாதுகாக்கும் ஒரு வழி தான். குடும்பத்தில் உள்ள அனைவரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி கழிக்க சொல்லிருப்பேன். அதனை எல்லாம் செய்யுங்கள்.

ஒருவர் தொழில் செய்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் சூட்சம சரீரத்தை பாதுக்காக்கும் வழிகளை மேற்க்கொள்ளவேண்டும். அப்படி மேற்க்கொண்டால் மட்டுமே அவரால் வெற்றி காணமுடியும். கோவிலுக்கு சென்று வருவது சூட்சம சரீரத்தை பாதுகாக்கும் வழிகள் கிடையாது. 

தொழில் செய்பவர்களுக்கு சூட்சம சரீரத்தை பாதுகாக்க பல வழிகள் இருக்கின்றன. அதனை எல்லாம் உங்களுக்கு அருகில் இருக்கும் ஆன்மீகவாதிகளிடம் சென்று செய்துக்கொள்ளுங்கள்.

விரைவில் சென்னை வருவதாக திட்டம் இருக்கின்றது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரமாக இருக்கும். சென்னையில் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் உடனே என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.சென்னை வரும்பொழுது சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 20, 2015

இனிய உதயம்


வணக்கம்!
          இன்று முதல் புதிய பிளாக் தொடங்கப்படுகிறது. ஆன்மீக தேடுதலுக்கும் அதற்கு வழிகளையும் சொல்லும் ஒரு தளமாக அது இருக்கும்.

அதில் இணைவதற்க்கு வருட சந்தாவாக பனிரெண்டாயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். பணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 19, 2015

கேள்வி & பதில்


வணக்கம்!
ஆத்மபலத்தை எப்படி மேம்படுத்துவது என்று நண்பர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கான விடையாக தான் இத்தனை வருடங்கள் ஜாதககதம்பத்தில் எழுதி வந்த பதிவுகள் அதனை சொல்லும்.

தற்பொழுது காயத்ரி மந்திரத்தை செய்யுங்கள் என்று சொல்லி இருந்தேன். எத்தனை பேர் அதனை செய்வார்கள். மனிதனுக்கு எதற்கு எடுத்தாலும் சோம்பேறியாகிவிட்டான். நினைத்த உடனே அனைத்தும் நடக்கவேண்டும் ஆனால் வேலை செய்யமாட்டேன்கிறான். இது தான் பிரச்சினை. 

ஒரு நாள் பயிற்சி எடுத்தால் அனைத்தும் நடந்துவிடும் என்று எண்ணுவது தவறு. தொடர் முயற்சியில் அனைத்தும் வசப்படும். உங்களின் ஆத்மபலனை உயர்த்த வேண்டும் என்றால் இதுவரை ஜாதககதம்பத்தில் சொன்ன விசயத்தை கடைபிடியுங்கள் அல்லது புதிய பிளாக்கில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அனைவரும் ஆத்மபலத்தை மேம்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்க்கான வழியை நேரில் சந்தித்து நான் சொல்லுவது போல் செய்து வாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

புதிய பிளாக்கில் இணைந்த நண்பர்களுக்கு இன்று இணைப்பிற்க்கான வழியை அனுப்பியுள்ளேன். நாளை முதல் உதயமாகிறது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 18, 2015

ஆத்மபலன்


ணக்கம்!
          உங்களுக்கு ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் நன்றாக இருந்தால் உங்களின் வளர்ச்சி அதுவாகவே நடைபெற்றுவிடும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் சரியில்லை என்றால் நாம் போராட தான் வேண்டும்.

நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சேர்ந்தது ஒரு சாதாரண பதவியில் இருக்கலாம். உங்களின் ஆத்மபலன் நன்றாக இருக்கும்பொழுது அந்த நிறுவனத்தில் சேர்ந்த குறுகிய காலத்தில் உங்களுக்கு மேலும் மேலும் பதவிகள் வந்துக்கொண்டே இருக்கும். ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.

உங்களுக்கு ஆத்மபலன் இல்லை என்றால் நீங்கள் சேர்ந்த பதவியிலேயே அப்படி காலம் முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கலாம்.உங்களுக்கு ஆத்மபலன் இல்லை என்றால் நீங்கள் சேர்ந்த பதவியிலேயே அப்படி காலம் முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கலாம். அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் உங்களை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். உங்களுக்கு எந்த ஒரு பதவியும் வராது அடுத்த அலுவலகத்திற்க்கு சென்றாலும் அதே நிலை தான் நீடிக்கும்.

ஆத்மபலன் நன்றாக இருந்தால் நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி உங்களை கூப்பிட்டு அந்த கம்பெனியின் முழு பொறுப்பையும் கொடுப்பார்.

நமது புதிய பிளாக் வரும் 20/08/2015 வியாழன் அன்று துவங்குகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 16, 2015

நண்பர்களுக்கு


ணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் புதிய பிளாக்கைப்பற்றி சொல்லியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை சொல்லியுள்ளனர்.

தினமும் ஜாதககதம்பத்தில் பதிவுகள் வரும் எப்பொழுதும் உள்ள கருத்துக்களை உங்களிடம் சொல்லிக்கொண்டு இருப்பேன். புதிய பிளாக்கில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை சொல்லபோகிறேன். அப்படி சொல்லும்பொழுது அதன் வழியாக அவர்கள் பயிற்சியை செய்யமுடியும். அதற்கு விரும்பும் நண்பர்கள் பணத்தை செலுத்தி அதில் பங்குக்கொள்ளலாம்.

ஆன்மீகப்பயிற்சி செய்யவேண்டும் ஆனால் பணம் இல்லை என்று சொல்லுபவர்கள் என்னை நேரில் வந்து சந்தித்து அதற்கான வழிகளை கேட்டால் நான் இலவசமாக சொல்லிக்கொடுப்பேன். கண்டிப்பாக நேரில் வரவேண்டும். இது மட்டும் தான் என்னால் செய்யமுடியும்.

என்னால் வரமுடியவில்லை எனக்கு வேலை பளு அதிகம் இருக்கின்றது எனக்கு போனில் சொல்லுங்கள் என்று சொன்னால் அது என்னால் முடியாது. . ஏன் என்றால் தினமும் பிஸியாக வேலைகளை செய்பவர்கள் கூட மாதத்திற்க்கு ஒரு முறை என்னை வந்து சந்தித்துவிட்டு செல்லுகிறார்கள். 

புதிய பிளாக்கில் சேர்ந்த நண்பர்களுக்கு மெயில் வழியாக தகவல்களை அனுப்பிக்கொண்டு இருக்கின்றேன். தினமும் மெயிலை பாருங்கள். புதிய தளம் உருவான உடன் அதில் படித்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மனை


ணக்கம்!
          மனையைப்பற்றி பார்த்து வந்தோம் இடையில் பல பதிவுகள் வேறு ஒன்றைப்பற்றி இருந்த காரணத்தால் இதனை எழுதமுடியவில்லை. இதனைப்பற்றி ஒரு கருத்தை பார்க்கலாம்.

ஒரு சில மனைகள் பெண்கள் மட்டுமே வசிப்பது போல் இருக்கும். ஆண்கள் அந்த மனையில் இருக்கமுடியாதபடி அந்த மனை செய்துவிடுவதும் உண்டு. ஆண் அந்த மனையில் இருந்தால் அந்த ஆண் இறந்துவிடுவதும் உண்டு. இயற்கையாகவே அந்த மனையின் இராசி அப்படி இருக்கும். 

ஒரு சில இடங்களில் மேற்கு பக்கத்தில் அதிக இடங்கள் விட்டு வீட்டை கட்டியிருந்தால் அந்த மனையில் இருக்கும் ஆண்களுக்கு ஆபத்து வந்துவிடுவதும் உண்டு. ஏதாவது நோய் பட்டு இறந்துவிடுவார்கள் அல்லது அகாலமரணமாக இருக்கும்.

மனையை தேர்ந்தெடுக்கும்பொழுது அந்த மனையைபற்றி அந்த ஊர்களில் உள்ளவர்களிடம் நன்றாக விசாரித்துவிட்டு மனையை வாங்கலாம்.உங்களின் சொந்த மனையாக இருந்தால் அந்த ஊரில் உள்ள ஆன்மீகவாதியிடம் ஆலாேசனை கேட்டுவிட்டு அதன் பிறகு அதில் வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 14, 2015

புதிய தொடக்கத்தைப் பற்றி


வணக்கம்!
          ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைய பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று தாக்கிக்கொண்டே இருக்கும். தெய்வசக்தியை நாம் பிடித்துக்கொண்டு அந்த தாக்குதலில் இருந்து நாம் தப்பித்து வந்துக்கொண்டு இருக்கிறோம்.

ஜாதககதம்பத்தில் பல பரிகாரத்தை உங்களுக்கு பரிந்துரை செய்து இருக்கிறேன். ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு விதமான பரிகாரம் செய்ய சொல்லி இருக்கிறேன். அதனை எல்லாம் செய்து நீங்கள் செய்து நல்லதை பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பொதுவாக இதில் வரும் நண்பர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் எந்தந்த கிரகங்கள் பிரச்சினையை தரும் என்று நன்றாக தெரியும். அதற்கு என்ன வழி என்று தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்து அதனை எப்படி செயல்படுத்துவது என்பது கூட தெரியாமல் இருக்கலாம். ஒரு சிலர் தெரிந்தும் அதனை செயல்படுத்தியும் வெற்றி அடையாமல் இருக்கலாம்.

நமது புதிய பிளாக்கில் உள்ள நண்பர்களுக்கு இன்று அதற்கு ஒரு எளிய பரிகாரத்தை சொல்லப்போகிறேன். அவர் அவர்களே கிரகங்களுக்கு சாந்திப்படுத்திக்கொள்ளும் எளியமுறை. இது மட்டும் தான் அவர்களுக்கு சொல்லப்படும் கிரகங்களுக்கான பரிகாரம். அதற்கு பிறகு அவர்களுக்கு எந்த ஒரு பரிகாரமும் பரிந்துரை செய்யபோவதில்லை.

ஏன் பரிந்துரை செய்யப்போவதில்லை என்றால் ஒரு பரிகாரத்தை வைத்து அனைத்து கிரகங்களுக்கும் சாந்திப்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு அதற்கு தேவையில்லாமல் போய்விடும்.

நேற்று நான் புதிய பிளாக்கில் இணைந்த நண்பர்களுக்கு அனுப்பிய செல்வவளம் பற்றிய பரிகாரத்திற்க்கு வெளியில் நான் வாங்கும் பணம் ஐந்து லட்ச ரூபாய். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப்பற்றி நேற்று அவர்களுக்கு அனுப்பி உள்ளேன்.

ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்கள் புதிய பிளாக்கில் இணைந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் எளிதில் தீர்த்துக்கொள்ளும் ஏகாப்பட்ட வழி புதிய பிளாக்கில் சொல்லபோகிறேன். உடனே பணத்தை செலுத்திவிட்டு தங்களைப்பற்றிய விபரத்தை எனக்கு அனுப்பிவையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 13, 2015

அன்பான அறிவிப்பு


ணக்கம் !
          நாளை ஆடி அமாவாசை அவர் அவர்களின் வழக்கப்படி தர்பணம் கொடுங்கள். ஆடி அமாவாசை வெள்ளிக்கிழமை வருகிறது. அம்மனுக்கும் உகந்த நாளாக இருப்பதால் அமாவாசை அன்று அம்மன் வழிபாட்டை நல்ல முறையில் செய்யுங்கள். விஷேசமான வழிபாட்டை செய்யலாம். ஆடி அமாவாசை அன்று ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வருவது நல்லது. காயத்ரி மந்திரம் செபிப்பவர்கள் கூட நாளை ஆரம்பிக்கலாம். 

நமது நண்பர்கள் ஏதாவது ஒரு பரிகாரம் செய்யவதற்க்கு என்னை தொடர்புக்கொள்வது உண்டு. அந்த நேரத்தில் நான் அவர்களிடம் ஒரு தொகையை சொல்லுவேன். சரி என்று சென்றுவிடுவார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்து அந்த தொகையை கட்டிவிட்டு சார் பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். 

நமது சிஸ்டம் மாதம் மாதம் கட்டணத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பேன். ஒரு வருடத்திற்க்கு முன்பு சொன்ன தொகைக்கும் நடைமுறையில் உள்ள தொகைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதனால் உங்களுக்கு பரிகாரம் செய்கிறேன் என்று சொன்னவுடன் பணத்தை கட்டிவிட்டு பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்க்கு பிறகு வராதீர்கள். இதனை அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

புதிய பிளாக்கில் சேர்ந்த நண்பர்களுக்கு ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டிய செல்வவள பரிகாரத்தை அனுப்பிவிட்டேன். படித்துவிட்டு செய்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருமணம்


வணக்கம்!
                     திருமணத்தைப்பற்றி ஒரு பதிவில் சொன்னவுடன் நமது நண்பர்கள் சிலர் அவர்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி சில கேள்விகளை கேட்டனர்.

திருமணத்திற்க்கு மட்டும் தான் நமது மக்கள் பல பேர் ஜாதகத்தையே வைத்திருப்பார்கள். திருமணத்திற்க்கு அந்தளவுக்கு முக்கியதுவமாக ஜாதகம் தேவைப்படுகிறது.

திருமணத்திற்க்கு ஜாதகம் தேவைப்படுவது உண்மை தான் அதே நேரத்தில் வயது முப்பதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஜாதகத்தை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். முப்பது வயதுக்கு மேல் ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தால் நடக்கிற கல்யாணமும் நடக்காமல் போய்விடும்.

தற்பொழுது பல பேருக்கு திருமணம் நடப்பது மிகப்பெரிய காரியமாக இருக்கின்றது. இதனை படிக்கும் பெற்றோர்களாக இருந்தால் கண்டிப்பாக முப்பது வயதிற்க்குள் திருமண ஏற்பாட்டை உங்களின் மகன் அல்லது மகளுக்கு ஏற்பாடு செய்து வைத்துவிடுங்கள். முப்பது வயதை தாண்டிவிட்டால் அப்புறம் என்ன தான் குருப்பலன் வந்தாலும் நடப்பது கடினமாக இருக்கின்றது.

பல திருமணங்கள் நடக்காமல் போவதற்க்கும் சோதிடர்கள் காரணமாக இருக்கின்றனர் என்று சொன்னால் அது தவறு கிடையாது. ஏன் என்றால் நடக்கின்ற திருமணத்தையும் ஏதாவது சொல்லி நடக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் ஏதாவது ஒன்றை சொல்லி தட்டி கழிப்பதும் உண்டு.

முப்பது வயதிற்க்கு மேல் ஆகிவிட்டால் நீங்களாகவே பெண்ணை பார்த்து எந்த ஜாதகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருமணம் செய்துக்கொள்ளுங்கள். 

தற்பொழுது எல்லாம் அவன் அவன் குட்டி சோதிடராகவே மாறிவிட்டனர். எனது நண்பர் ஒருவர் இருந்தார் அவருக்கு சோதிடம் தெரியும். அவருக்கு திருணம் ஆகவில்லை. அவருக்கு வந்த பெண்ணின் ஜாதகத்தை அவரே பார்ப்பது அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு இன்றைய நாள் வரை திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு வயது நாற்பது ஆகிவிட்டது.

வயது ஆக ஆக ஜாதகத்தை ஓரம் வைத்துவிட்டு வருவதை ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லை ஆயுள் முழுவதும் திருமணம் நடைபெறாது. சோதிடராக இருந்துக்கொண்டு இதனை நான் சொல்லகூடாது. நண்பர்களுக்கு ஒரு அறிவுரையாக இதனை நான் சொல்லுகிறேன்

நமது புதிய பிளாக்கில் இணைந்த நண்பர்களுக்கு இன்று ஒரு செல்வவளத்தைப்பற்றி ஒரு பதிவை உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன். படித்துவிட்டு பயன்பெறுங்கள். விரைவில் புதிய தளத்தில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 12, 2015

காயத்ரி மந்திரப்பயிற்சி



வணக்கம்!
         வளர்பிறை இன்னும் சில தினங்களில் வரப்போகின்றது. காயத்ரி மந்திரம் செய்பவர்கள் மந்திரத்தை புதியதாக தொடங்க நல்ல நேரம் இது. தற்பொழுது இருந்து ஆயத்தம் ஆனால் வளர்பிறையில் செய்வதற்க்கு எளிதாக இருக்கும்.

காயத்ரி மந்திரப்பயிற்சியை தொடர்ந்து விடாமல் செய்வேன் என்று நினைப்பவர்கள் மட்டும் தொடர்புக்கொள்ளுங்கள். தொடர்ந்து ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று விருப்பம் இருப்பவர்கள் இதனை செய்ய ஆரம்பிக்கலாம்.

இருபது நாட்கள் செய்துவிட்டு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்த மாதம் செய்யலாம் என்ற நினைப்போடு வரவேண்டாம். தொடர்ந்து செய்யவேண்டும் என்ற நினைப்போடு வரும்பொழுது மட்டுமே இதனை செய்யலாம்.

பெண்கள் இந்த பயிற்சியை செய்யலாம். ஏற்கனவே இந்த பயிற்சியை செய்பவர்கள் என்னை தொடர்புக்கொண்டு மேலும் எப்படி எல்லாம் இதனை செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த வரை பல நண்பர்கள் விடாமல் இதனை செய்துக்கொண்டு வருகிறார்கள். கண்டிப்பாக நல்ல பலனை அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். மேலும் சக்தியை கூட்டவேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

புதியதாக செய்ய நினைப்பவர்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் காயத்ரி மந்திரத்தை எடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கான வழிகாட்டுதலை நான் தருகிறேன்.

புதிய பிளாக்கிற்க்கு வருட சந்தா அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் மெயில் வழியாக செல்வவளம் குறித்த பதிவை அனுப்பிவிட்டேன். அதனை படித்துவிட்டு செய்ய ஆரம்பிக்கலாம்.  விரைவில் உதயமாக உள்ளது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 11, 2015

ஆடி போயி ஆவணி


ணக்கம்!
          ஆடி மாதம் சென்று ஆவணி மாதம் வரவுள்ளது. இன்னும் சில தினங்களே இருக்கின்றன. நமது பதிவுக்கு வரும் இளம் நண்பர்கள் பல பேருக்கு நான் திருமணம் செய்யும் யோகம் வருகின்றது என்று சொல்லிருப்பேன். அவர்கள் எல்லாம் இனி அந்த காரியம் நடைபெற வேலையை தொடங்கலாம்.

பல இளைஞர்கள் என்னிடம் பணம் இல்லை நான் எப்படி சார் திருமணம் செய்வது என்று கேட்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் சொல்லுவது பணம் வைத்துக்கொண்டு தான் திருமணம் செய்யவேண்டும் என்றால் இந்தியாவில் சுமாராக ஆயிரம் பேருக்கு கூட திருமணம் நடக்காது.

ஒருவருக்கு திருமணம் நடைபெற குரு பகவான் அருள் வேண்டும். அவர் அருள் உங்களுக்கு வந்துவிட்டால் அவர் ஒரு பெண்ணையும் பார்க்க வைத்து பணத்தையும் ஏதாவது ஒரு வழியில் கொடுத்துவிடுவார்.நடப்பது நடக்கட்டும் எல்லாம் இறைவன் செயல் என்று கவலைப்படாமல் செயலில் இறங்கி வேலையை செய்யுங்கள். 

ஒரு சிலர் ஒரு சில நல்ல காரியத்திற்க்கும் நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களும் ஆவணி மாதத்தில் இருந்து தொடங்குங்கள். வியாபாரம் செய்பவர்களும் செய்ய ஆரம்பிக்கலாம். இனி எல்லாம் நன்மைக்கே.

புதிய பிளாக்கிற்க்கு வருடசந்தா பனிரெண்டாயிரம் செலுத்திவிட்டு தங்களைப்பற்றிய விபரத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். விரைவில் உதயமாக உள்ளது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புதிய தொடக்கத்தை பற்றி


ணக்கம்!
          நமது புதிய பிளாக் விரைவில் உதயமாக இருக்கின்றது. இதுவரை சேர்ந்த நண்பர்களுக்கு செல்வவளம் குறித்த தகவலை மெயிலில் அனுப்பி வைக்கிறேன். அதனை பயன்படித்துக்கொள்ளுங்கள். மெயில் ஐடியை அனுப்பாதவர்கள் எனது மெயில் ஐடிக்கு அனுப்பிவையுங்கள்.

நமது ஆன்மீகப்பயிற்சிக்கு தகுதி எதுவும் தேவையா என்று கேட்டுருந்தனர். அதாவது ஏற்கனவே ஆன்மீகத்தில் இருக்கவேண்டுமா அல்லது கட்டுபாடு என்ன என்று கேட்டுள்ளனர்.

ஆன்மீகத்தில் ஏற்கனவே இருக்கவேண்டும் என்பது எல்லாம் கிடையாது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் போதும். இப்படி தான் இருக்கவேண்டும் என்று கட்டுபாடு கிடையாது. நீங்கள் நீங்களாவே இருந்தால் போதும். செய்ய சொல்லுவதை செய்தால் போதும்.

நீங்கள் நல்லவரா அல்லது தீயவரா என்று எல்லாம் பார்ப்பது கிடையாது. மருந்து எப்படி அனைவருக்கும் வேலை செய்கிறதோ அதைப்போல் அனைவரும் ஆன்மீகத்தை பயிற்சி செய்யலாம். நீங்கள் இப்படி வாருங்கள் அப்பொழுது தான் நான் உங்களுக்கு வேலை செய்வேன் என்று மருந்து நினைப்பதில்லை. அது நல்லவருக்கும் வேலை செய்யும் தீயவருக்கும் வேலை செய்யும். அதுபோலவே ஆன்மீகமும் யாரையும் பார்ப்பதில்லை. செய்வதற்க்கு விருப்பம் இருந்தால் போதும் எளிதில் கற்றுவிடலாம்.

புதிய பிளாக்கில் எழுதப்படும் எந்த ஒரு பதிவும் ஜாதககதம்பத்தில் இடம்பெறாது. 

விரைவில் உதயமாகிறது உடனே இணைந்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 9, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். அம்மன் அலங்காரம் செய்தவர் இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 8, 2015

வழிநடத்தும் ஆள்


வணக்கம்!
         இன்று இருக்கின்ற ஆன்மீகம் அனைத்தும் முற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் ஆனால் அனைத்து ஆன்மீகவாதிகளும் தானே இதனை கண்டுபிடித்தது போல் பெயர் போட்டுக்கொள்வார்கள்.

நான் சொல்லுகின்ற விசயங்கள் அனைத்தும் முற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகளை வைத்து தான் சொல்லிக்கொண்டு வருகிறேன். எதுவும் என்னுடையவை அல்ல. இதனை நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே இருக்கின்ற விசயத்தை நீங்கள் ஏன் மறுபடியும் சொல்லுகின்றீர்கள் என்று உங்களின் மனது கேட்கலாம். இந்த காலத்திற்க்கு தகுந்தமாதிரி மாற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

வழிநடத்தும் குருவின் கையில் தான் அனைத்தும் இருக்கின்றது. குரு கெட்டிக்காரன் என்றால் கற்கும் சிஷ்யனும் சிறந்து விளங்குவான்.ஏற்கனவே இருக்கும் யுக்தியை எனது வழியாக கற்கும்பொழுது எளிதில் நீங்கள் முன்னேறிவிடலாம்.

புதிய பதிவில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டாலும் நான் உங்களை வழிநடத்துவதால் அதில் நீங்கள் எளிதில் கரை சேர்ந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 7, 2015

மரணம் வரும் நாள்


வணக்கம்!
          மரணத்தை அறிய சோதிடத்தில் வழி உண்டு ஆனால் அவர் அவர்களின் மரணத்தை அவர்களே அறிந்துக்கொள்ளவும் வழி இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

நமது ஞானிகள் எல்லாம் தங்களின் மரணத்தைப்பற்றி சொல்லியுள்ளார்கள். ஒரு சிலர் இந்த தேதியில் நான் இறப்பேன் என்று சொல்லியுள்ளார்கள். குழியை வெட்டிக்கொண்டு அந்த தேதி வரும்பொழுது அவர்களே போய் குழியில் இறங்கியது எல்லாம் நீங்கள் படித்து இருக்கலாம்.

ஒவ்வொரு மகான்களும் தன்னுடைய மரணத்தின் நாள் எது என்று அறிந்து இருக்கிறார்கள். சாதாரண மனிதன் மட்டும் தன்னுடைய மரணதேதியை தெரியாமல் இருக்கிறான்.

ஒரு மனிதன் இறக்கப்போவது அவனுக்கு சரியாக ஆறு மாதத்திற்க்கு முன்பு தெரிய ஆரம்பித்துவிடும். சம்பந்தப்பட்ட மனிதன் மகானாக இருந்தால் அவனுக்கு தெரிய ஆரம்பித்துவிடுகிறது. சாதாரண மனிதனாக இருந்தால் அவனுக்கு தெரிவதில்லை.

நமது புதிய பிளாக்கில் சொல்லப்படும் பயிற்சிகளை ஒருவர் செய்துவந்தால் சம்பந்தப்பட்ட மனிதருக்கு அவரின் மரணம் ஆறு மாதத்திற்க்கு முன்பு தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 6, 2015

புதிய தொடக்கத்தை பற்றி



ணக்கம்!
          புதிய தொடக்கத்தைப்பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லுகிறேன். நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவரும் முன்ஜென்மத்தில் இப்படி ஒரு ஆன்மீகப்பயிற்சி மேற்க்கொண்டு இருப்பீர்கள். அப்படி மேற்க்கொண்டு இருக்கும்பொழுது உங்களின் மனம் வேறு ஒன்றை நாடி அந்த பயிற்சியை கெடுத்துவிட்டு மறுபடியும் பிறந்து இருப்பீர்கள். 

நமது பதிவு வருபவர்கள் மட்டும் கிடையாது உலகத்தில் உள்ள ஆன்மீகத்தை நாடும் மக்களின் உண்மையான இருப்பு இது.  மனம் தடுக்கிறதை ஒரு சிலர் கர்மா தடுத்துவிட்டது என்று கூட சொல்லுவார்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் ஆன்மீகத்தை நாடி உள்ளீர்கள். முடிவை நோக்கி செல்லும்பொழுது அதில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு இருக்கும். இப்பிறவியில் அது தொடர்கிறது. 

இந்த பிறவியில் நமக்கு நிறைய வேலைகள் இருக்கலாம். காலம் கலிகாலம். இந்த வேலையோடு நமது ஆன்மீகபயணமும் அமைந்துவிட்டால் அது நேராக உங்களின் இருப்பை நோக்கி அழைத்துச்சென்றுவிடும்.

நான் புதிய பிளாக்கில் சொல்லும் பயிற்சியை அனைவரும் எடுக்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன். அதனை பொதுவில் சொல்லமுடியாது. அதோடு ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள் அதற்கு கண்டிப்பாக வந்துவிடுவார்கள் என்பதால் அதனை கட்டணமாக அறிவித்தேன்.

என்னிடம் பணமே இல்லை நான் எப்படி இதனை பயிற்சி எடுப்பது என்கிறீர்களா? என்னை சந்திக்கும்பொழுது கேளுங்கள் அதனைப்பற்றி சொல்லிக்கொடுகிறேன். சந்திக்கும்பொழுது குறைந்த நேரம் இருப்பதால் முழுமையாக சொல்லி விட முடியாது. கொஞ்சம் சொல்லிக்கொடுக்கிறேன். அதனை செய்து வாருங்கள்.

புதிய பிளாக்கில் தினமும் பதிவுகள் வரும். அதில் சொல்லப்படும் கருத்து கடல் அளவுக்கு இருக்கும். நேரில் அந்தளவுக்கு எதிர்பார்க்கமுடியாது. இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக இதில் இணையவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          ஆடி மாத அம்மன் பூஜை வரும் 9/08/2015 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு பல பேர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர். 

இந்த மாதம் மட்டும் அனைவரும் தங்களின் பங்களிப்பை அளியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அம்மன் பூஜைக்கு பலர் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். அம்மன் பூஜை அன்று உங்களின் புதிய வேண்டுதலை வையுங்கள். 

புதிய பிளாக்கைப்பற்றி கருத்து தெரிவித்துக்கொண்டு வருகிறேன். இதில் இணையும் நண்பர்கள் அனைவரும் தினமும் குறைந்தது 45 நிமிடம் நேரம் ஒதுக்கி அதில் சொல்லப்படும் பயிற்சியை மேற்க்கொள்ளவேண்டும்.

நாள்கள் செல்ல செல்ல நீங்கள் உங்களின் வேலையை பார்த்துக்கொண்டே இதனை செய்யமுடியும். வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாற்றிவிடமுடியும். அம்மன் பூஜை முடிந்தவுடன் புதிய பிளாக்கை துவங்க உள்ளேன். விரைவில் இணைந்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 5, 2015

நல்லவைக்காக இணையுங்கள்


வணக்கம்!
          நமது புதிய பிளாக்கிற்க்கு நண்பர்கள் சேர்ந்துக்கொண்டு வருகின்றனர். நான் எதிர்பார்த்தது என்னிடம் அடிக்கடி ஆன்மீக சம்பந்தமாக வருபவர்களாக இருப்பார்கள் என்று தான் நினைத்தேன் ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட இதில் இணைகின்றனர். 

நமது பதிவுக்கு வரும் அனைவரும் இதற்கு வரவேண்டும் என்று எனது எண்ணம் உள்ளது. தொடர்ச்சியாக அது கண்டிப்பாக நடைபெறும்.இந்த புதிய பிளாக்கில் உள்ளவை அனைத்தும் உங்களின் ஆன்மீகவாழ்வுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். 

இவர் எதற்கு எடுத்தாலும் அம்மன் அம்மன் என்பரே ஒரு வேலை அம்மனை வைத்து வேலை செய்வது எல்லாம் கற்றுக்கொடுப்பார் என்று நினைக்கவேண்டாம். இது தனி மனிதனுக்கு மட்டும் உள்ளது. இது உங்களின் பிறவி பாதையை கடக்க உதவும் கருவியாக மட்டுமே இருக்கும்.

அடுத்தவர்களை காப்பாற்ற போகிறேன் அதற்க்கு நான் ஆன்மீகத்தை கற்றுக்கொள்கிறேன் என்று எல்லாம் இதில் இணையவேண்டாம். உங்களின் தனிப்பட்ட பிரச்சினை மற்றும் ஞானத்தை அடையும் வழி மட்டுமே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 4, 2015

புதிய தொடக்கத்தை பற்றி


ணக்கம்!
          பல பெண்கள் நமது பதிவுக்கு வந்து படித்து செல்லுகின்றனர். ஒரு பெண்களைப்பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். பெண்களால் ஞானத்தை அடையமுடியாது என்று சொல்லியுள்ளேன். பெண்களுக்கு ஏற்ற ஒரு ஆன்மீகத்தைப்பற்றியும் சொல்லியுள்ளேன்.

பெண்கள் தந்த்ரா வழியில் ஞானத்தை அடையமுடியும் என்பதையும் சொல்லியுள்ளேன். தந்த்ரா என்றால் ஏதோ தவறான பாதை என்றும் ஒருசிலர் சித்தரித்துள்ளனர். அது தவறான ஒன்று. தந்த்ரா என்றால் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொண்டு ஆன்மீகபாதையில் முன்னேறி செல்ல வழிவகுக்கும் ஒரு கருவி. அதனை பயன்படுத்தி எளிய வழியில் ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேறி செல்லமுடியும்.

எப்படி எப்படி எல்லாம் எளிய வழியில் சக்தியை எடுத்து முன்னேறி செல்லலாம் என்பதைப்பற்றி சொல்ல உள்ளேன். ஒருவர் இதில் இணைந்து அவர்கள் பயிற்சியை தினமும் எடுத்தால் ஒரு குறுகிய காலத்திற்க்குள் நல்ல நிலையை கண்டிப்பாக அடையலாம்.

நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் முடிந்தவரை எப்படியும் விரைவில் இணைந்துவிடுங்கள். வித்தியாசமான ஒரு ஆன்மீகத்தை அனுபவித்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காரிய தடைக்கு பரிகாரம்


வணக்கம்!
          நேற்று காரிய தடைக்கு என்ன காரணம் என்பதைப்பற்றி பார்த்தோம். இன்றைக்கு அதற்கு ஒரு வழியைப்பற்றி காணலாம். உங்களுக்கு எதுவும் நடைபெறவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் தொடர்ச்சியாக ஹோமம் செய்யவேண்டும்.

ஒரு சில நண்பர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்று வரும்பொழுது நாங்கள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஹோமத்தை நடத்தி ஏதாவது ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக்கொடுப்போம்.

அக்னி வழியாக நாம் கிரகங்களை சாந்தப்படுத்தும்பொழுது நமக்கு நல்ல பலனை கிரகங்கள் வழியாக நம்மிடம் இருக்கும் சக்தி வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை செய்யும்பொழுது நல்ல பலனை தருகிறது. ஒரு சிலர் பதினைந்து நாளுக்கு ஒரு முறை கூட இதனை செய்கிறார்கள். ஒரு சிலர் மாதத்திற்க்கு ஒரு முறை செய்கிறார்கள்.

நமது புதிய பிளாக்கிற்க்கு தேவையான நண்பர்கள் சேர்ந்துவிட்டனர். அம்மன் பூஜை முடிந்த பிறகு ஒரு நாளில் தொடங்கிவிடலாம். நீங்களும் இணைந்துக்கொள்வதாக இருந்தால் பணத்தை செலுத்திவிட்டு அதில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 3, 2015

காரிய தடை


ணக்கம்!
          ஒரு செயல் வெற்றி அடைவதற்க்கு மிக முக்கிய காரணமாக அமைவது சோதிடத்தில் ஒன்பதாவது வீடு என்ற பாக்கியஸ்தானத்தால் தான் நடைபெறும்.

காரியம் எல்லாம் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவுகிறது என்றவுடன் நாம் பித்ரு தோஷம் நமக்கு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருப்போம். பித்ருதோஷம் ஒருபுறம் இருந்தாலும் பாக்கியஸ்தானம் கடுமையாக பாதிக்கும்படும்பொழுது காரியம் கடைசி நேரத்தில் தடங்கலை ஏற்படுத்தி கிடைக்காமல் சென்றுவிடுகிறது.

பாக்கியஸ்தான அதிபதியின் நிலை என்ன என்று உங்களின் ஜாதகத்தில் பார்க்கவேண்டும். மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றுள்ளதா அல்லது தீயகிரகங்களின் பார்வையில் பாக்கியஸ்தான அதிபதி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். முக்கால்வாசி பேருக்கு பாக்கியஸ்தானம் பாதிக்கப்பட்டு இருக்கும்.

அவர் அவர்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தான அதிபதி யார் என்று பார்த்து அந்த கிரகத்திற்க்கு விஷேசமான பரிகாரத்தை செய்யவேண்டும். பரிகாரம் செய்யமுடியவில்லை என்றால் கூட அந்த கிரகத்திற்க்கு ஓன்பது வாரம் தீபம் ஏற்றி வழிப்பட்டு வரவேண்டும். இப்படி செய்து வந்த பிறகு நாம் தொடங்கும் வேலையை செய்தால் காரிய தடை இன்றி செயல் வெற்றி பெறும்.

ஆடி மாத அம்மன் பூஜைக்கு அனைவரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 1, 2015

அம்மன் பூஜை



ணக்கம்!
          ஆடி மாதம் என்பதால் முதலிலேயே உங்களிடம் சொல்லிவிடுகிறேன். இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் அம்மனுக்கு விஷேசமான ஒரு மாதம். இந்த மாதத்தில் அம்மனின் பூஜைக்கு பதிவுக்கு வரும் அனைத்து நண்பர்களும் தங்களால் முடிந்த காணிக்கையை கொடுங்கள்.

இதுவரை பணம் என்று அனுப்பாதவர்கள் கூட இந்த மாதத்திற்க்கு மட்டும் தங்களின் பங்களிப்பை அளிக்கவும். இந்த மாதத்தில் பங்களிப்பை அளிக்கும்பொழுது ஒரு வருடத்திற்க்கு முழுவதும் அம்மனின் பூஜையில் கலந்துக்கொண்ட பலனை பெறமுடியும் என்பதால் சொல்லுகிறேன்.

அம்மனின் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் நடத்தப்படும். தற்பொழுதும் விஷேசமான பூஜைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. தங்களின் பங்களிப்பை எனது  KVB வங்கி கணக்கில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வங்கி கணக்கு விபரம்

KVB

Bank :  Karur Vysya Bank

Branch : Pattukkottai

Name : RAJESH S

Account Type : Savings account.

A/C Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623


புதிய பிளாக் தொடங்குவதற்க்கான அறிவிப்பையும் தந்துள்ளேன். அதில் விருப்பம் இருப்பவர்களும் பணத்தை செலுத்திவிட்டு தங்களின் விபரத்தை எனக்கு அனுப்புங்கள். விரைவில் தொடங்கிவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு