Followers

Monday, December 21, 2020

சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம்



 வணக்கம்!

         ரிஷப இராசிக்கு அஷ்டமசனியில் இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பாக்கியசனி நல்ல பலனை கொடுக்குமா அல்லது தீய பலனை கொடுக்குமா என்பதைப்பற்றி இந்த வீடியோ பதிவில் சென்று பாருங்கள். 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

https://youtu.be/lyDOG3rhUQk

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Friday, December 18, 2020

சொகுசு வாழ்க்கை இல்லை சுக்கிரன் நிலை



 வணக்கம்!
         ஒருவருக்கு சுக்கிரன் தசா வந்தால் நன்றாக இருக்கும் என்று பொதுவாக சொல்லுவது உண்டு. அனைத்து செல்வவளங்களையும் சொகுசு வாழ்க்கையும் கொடுதது அவர்களை இந்த பிறவியை ஒரு சொகுசு வாழ்க்கையை கொடுக்ககூடிய கிரகம் சுக்கிரன். சுக்கிர தசா நடக்கும் அனைவரும் இதனை எதிர்பார்ப்பார்கள்.

ஒரு சில ஜாதகருக்கு சுக்கிர தசா நல்லதை கொடுத்தாலும் ஒரு சிலருக்கு சுக்கிர தசா பெரிய பிரச்சினையை கிளப்பிவிடுவதும் உண்டு. சுக்கிர கிரகம் ஜாதகத்தில் நன்றாக அமையவில்லை என்றால் பிரச்சினையை கொடுக்கும். சுக்கிரனோடு சேரும் கிரகம் சரியில்லை என்றாலும் சுக்கிர தசாவில் பிரச்சினை வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

குரு கிரக இராசியான தனுசு மற்றும் மீன இராசியினர்க்கு சுக்கிர தசா நடந்தால் அவர்களுக்கு அது பிரச்சினையாக வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. குருவிற்க்கும் சுக்கிரனுக்கு ஒத்து வருவதில்லை. சுக்கிர தசா  வந்தவுடனே அவர்கள் பிரச்சினையை சந்திப்பார்கள். சுக்கிர தசா சுக்கிர புத்தியிலேயே அதிக பாடு படுத்திவிடுவது உண்டு.

ஒரு சிலருக்கு சுக்கிர தசா ஆரம்பித்த உடனே ஏதாவது ஒரு நோய் வந்து அவர்களை பாடாய் படுத்தி எடுப்பதும் உண்டு. உங்களின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை எப்படி இருக்கின்றது அந்த தசா நடந்தால் அது எப்படிப்பட்ட பலனை கொடுக்கும் என்பதை அறிந்து அதற்க்கு தகுந்தார் போல் பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு சுக்கிர தசா நடக்காமல் சுக்கிரன் மோசமாக ஜாதகத்தில் அமர்ந்தால் கூட பிரச்சினை வருவது உண்டு. சுக்கிரன் ஆறாவது வீட்டில் அமர்ந்து இருந்தால் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் உண்டு. உங்களின் சுய ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து அதற்கு தகுந்தார்போல் பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் காலம் முழுவதும் கஷ்டத்தை அனுப்பவிக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 14, 2020

தலைமுறையை காக்கும் விரதங்கள்



 வணக்கம்!
                     விரதம் இருப்பது மிக முக்கியமான காரணமாக இருப்பது தன் உடலை சுத்தப்படுத்திகொள்வதும் அதோடு நம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்க்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது. தன் உடலை சுத்தப்படுத்தி விரதம் இருக்கும்பொழுது அதனுள் இருக்கும் ஆத்மாவும் சுத்தப்படுத்தப்படுகின்றது.

ஒருவர் வறுமையில் இருக்கும்பொழுது ஏதோ ஒரு விரதமுறையை மேற்க்கொண்டு வந்தால் அவரின் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு காலத்திற்க்கு பிறகு அவர் சிறந்த முறையில் வாழ்க்கை வாழ்வார். நிறைய செல்வ வளங்களை கொண்டு வாழ்வது போன்ற ஒரு அமைப்பை அவர் இருந்த விரதமுறை அவர்க்கு ஏற்படுத்திக்கொடுத்து இருக்கும்.

விரதம் இருக்கும் நபர்களின் வாரிசுகள் நல்ல வாழ்க்கை  வாழ்வதற்க்கு விரதங்கள் துணை நிற்க்கும் என்பதை பல பேர்களின் அனுபவத்தில் நானே பார்த்து இருக்கிறேன். ஒரு வீட்டில் இருக்கும் இல்ல தலைவர் மட்டும் விரதம் இருக்காமல் அவரின் வாழ்க்கை துணைவியும் விரதம் இருந்தால் விரைவிலேயே அந்த குடும்பம் ஒரு நல்ல நிலைக்கு வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மிக கஷ்டமான ஒரு நிலையில் நீங்கள் இருந்தால் அந்த நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விரத முறையை நீங்கள் பின்பற்றி வாருங்கள். நிறைய விரதங்கள் இருக்கும்பொழுது கண்டிப்பாக விரைவில் அது உங்களை காப்பாற்றி அந்த நிலையில் இருந்து மாற்றிவிடும். 

இந்த பதிவை நான் தரும்பொழுது கூட கடை சோமவார விரதமுறையை நான் மேற்க்கொண்டு இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். கண்டிப்பாக உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்திற்க்கு விரதங்கள் இருப்பது ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 13, 2020

கடை சோமவாரம் மற்றும் அமாவாசை

வணக்கம்!

          நாளை கடைசி சோமவாரம் மற்றும் அமாவாசையும் சேர்ந்து வருகின்றது. சோமவாரம் என்றாலே அது சிவனுக்கு உகந்த ஒரு நாள். சிவனின் அருளை பெறுவதற்க்கு கார்த்திகை மாதத்தில் திங்கள்கிழமை தோறும் விரதம் இருந்து கடைசி திங்கள் கடை சோமவாரம் எ்னறு அழைப்பார்கள். அன்றைய தினத்தில் சிவாயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  ஒரு சில கோவில்களில் திருவிழாவும் நடைபெறும்.

அமாவாசை மற்றும் கடைசி சோமவாரம் என்பதால் நல்ல சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகவே அதனை நாம் எடுத்துக்கொண்டு சிவனின் அருளை நாம் பெறலாம்.  விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருபவர்களும் இருக்கின்றனர். அதனை மேற்கொண்டவர்கள் அதனை செய்யுங்கள். 

நாம் அமாவாசை மற்றும் கடைசோமவாரம் என்பதால் ஒரு சிறப்பு பூஜை ஒன்றை செய்ய இருக்கிறோம். ருத்ர ஜெபம் மற்றும் ருத்ர பூஜை செய்ய இருக்கிறோம் இதில் கலந்துக்கொள்ள கட்டணம் செலுத்தவேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக இது Rs 500 என்று தீர்மானித்து இருக்கிறோம்.

கலந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் மட்டும் Rs 500 செலுத்தி தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை அனுப்ப வேண்டும். தங்களுக்காக சிறப்பு பூஜை செய்யப்படும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


மோசமான கிரக அமைப்பு

 


வணக்கம்!

          நாம் பார்த்த ஜாதகத்திலேயே மிக மோசமான கிரக அமைப்பு என்றால் அது மூன்று மற்றும் ஒன்பதில் இராகு கேது அமரும் ஜாதகமாகவே இருக்கும். மூன்று மற்றும் ஒன்பதில் இராகு கேது அமர்ந்தால் அவர்களின் வாழ்க்கை இளமை காலம் என்பது மிக மோசமான ஒரு அமைப்பாகவே இருக்கும்.

மூன்று மற்றும் ஒன்பதாவது வீட்டில் இராகு கேது சம்பந்தப்படுவதால் மட்டுமே இந்த பிரச்சினை நாம் பித்ருசாபம் என்று எடுத்துக்கொள்ளலாம். இராகு கேது என்றாலே அது அதிகமான கர்மா கொடுக்கும் கிரகம் அது மூன்று ஒன்பதில் சம்பந்தம் ஏற்படும்பொழுது அது நிறைய கர்மாவை கொடுத்துவிடுகின்றது.

இராகு கேது மூன்று மற்றும் ஒன்பதில் அமரும்பொழுது அவர்களுக்கு கடுமையான ஒரு பித்ரு சாபத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அவர்களின் முற்பிறவி மற்றும் அவர்களின் தந்தை பாட்டான் வழியில் உள்ள கர்மத்தையும் சேர்த்து கொடுத்துவிடும்.

இளமை காலத்தில் கடுமையான வறுமையை கொடுத்தால் அது உயிர் பிரச்சினையை ஏற்படுத்தாது. இளமை காலத்தில் வசதி வாய்ப்பு இருந்தால் அது உயிர் பிரச்சினையை அதிகமாக ஏற்படுத்தும். இளம் வயதிலேயே நிறைய கண்டங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு அவர்களின் குலதெய்வம் நல்ல அருளை தந்தால் அவர்களுக்கு பிரச்சினையை கொடுக்காமல் சிறு கண்டத்தோடு விட்டு விடும். ஒரு சில ஜாதகர்களுக்கு ஜாதகத்தில் நடக்கும் தசா நன்றாக இருந்தால் அவர்களை தப்ப வைக்கும். தசா மோசமாக இருந்தால் பிரச்சினை அதிகமாகவே இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 12, 2020

ஏழரைச்சனி என்ன செய்யும்?



 வணக்கம்!

         ஒருவருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தால் அவர்க்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஏழரைச்சனி ஒருவருக்கு இரண்டாவது சுற்று வரும்பொழுது அதிக பாதிப்பை தரும். இரண்டாவது சுற்று என்பது பெரிய அளவில் நன்மை செய்யும் என்று சொல்லுவார்கள் ஆனால் அனுபவத்தில் பெரிய அளவில் பிரச்சினையை சந்திப்பதும் இந்த காலமாகவே இருக்கின்றது.

ஏழரைச்சனியின் காலத்தில் உங்களுக்கு எந்த வழியில் உங்களின் பிழைப்பு நடக்கின்றதோ அந்த வழியில் முதலில் பிரச்சினையை ஆரம்பிக்கும். உங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலில் தான் முதலில் கவனத்தை கொண்டு வரும் அதில் பிரச்சினையை கிளப்பி உங்களை பிழைக்க விடாமல் செய்வதில் சனிக்கு அதிக மகிழ்ச்சி இருக்கும்.

இதுவரை இராஜாவாக வலம் வந்துக்கொண்டு இருந்தால் சனி அதில் கவனத்தை செலுத்தும். உங்களை அசிங்கப்படுத்தி உங்களை அடுத்தவர் முன்பு தலை குனிய வைக்கும். அடுத்தவர்கள் முன்பு கெத்து காட்டிக்கொண்டு இருந்த நீங்கள் அடுத்தவர்கள் முன்பு தலைகுனிய செய்ய வைத்து நீங்கள் செல்லும்பொழுது உங்களின் மனம் அந்தபாடுபடும் அதனை வார்த்தையால் வெளியில் சொல்லமுடியாது அனுபவத்தில் நடக்கும்பொழுது மட்டுமே அது என்ன என்பது உங்களுக்கு புரிய வரும்.

உங்களுக்கு நோய் என்பது இதுவரை இல்லாமல் இருந்திருந்தால் நோய் வரும். உங்களின் உடலில் உள்ளுக்குள் வலியை கொடுப்பதில் அதிக கவனம் சனி செலுத்தும். உங்களின் உள் உடலில் அதிக வலியை காட்டிவிடும் இதனால் மனக்கவலையை அதிகம் ஏற்படுத்தி கொடுத்துவிடும்.

திருமணம் முடிந்து நீங்கள் சந்தாேஷமாக வாழ்ந்திருந்தால் ஏழரைச்சனியின் காலத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு அதிகமாக உருவாக்கிவிடும். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பிறரோடு தொடர்புப்படுத்தி பேசுவது போல உங்களை காட்டிவிடும். இருவருக்கும் பிரச்சினை இதனாலே வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாகிவிடும்.

நீங்கள் வாழ்க்கையில் ஆசைப்பட்டு வாங்கிய வாகனம் பழுதாகி உங்களை ஆழ்ந்த கவலைக்குள் கொண்டு சென்றுவிடும். ஒரு சிலருக்கு வாகனம் விபத்து ஏற்பட்டுவிடுவதும் உண்டு. கை அல்லது கால்களில் முறிவு ஏற்படுவதற்க்கு வாய்ப்பையும் ஏழரைச்சனி செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 26, 2020

சனிப்பெயர்ச்சி பரிகாரம்



 வணக்கம்!

      டிசம்பர் மாதத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது .ஒவ்வொரு இராசிக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் நமது வீடியோ சேனலில் வர இருக்கின்றது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். பொதுவாகவே உங்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை தர இருக்கின்றது என்பது தெரியும் அதற்கு தகுந்தார் போல் உங்களின் செயல்பாடுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நானும் சனிப்பெயர்ச்சி பலன்களை தருகிறேன்.

நடந்து முடிந்த  குருப்பெயர்ச்சிக்கு நாம் சிறப்பாக பரிகாரம் செய்துக்கொடுத்தோம். தற்சமயம் சனிப்பெயர்ச்சிக்கும் பரிகாரத்தை முன்கூட்டியே செய்ய இருக்கிறோம். டிசம்பர் மாதம் என்பதால் முன்கூட்டியே நாம் செயல்பட்டு இந்த பரிகாரத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கவேண்டும் என்று எண்ணுகிறோம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம் தனித்தனியாக செய்து தர இருக்கிறோம். இந்தியா நாட்டிற்க்குள் உள்ளவர்களுக்கு கூரியர் வழியாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் தனித்தனியாக செய்யப்படும். 

சனி ஹோமம் நமது இடத்திலும் சிறப்பு அர்ச்சனை பிரசித்தி பெற்ற ஒரு சனிகிரக ஸ்தலத்தில் செய்யப்படும். இதற்கு கட்டணம் Rs 5000 ஆயிரம் ரூபாய் என்று தீர்மானித்து இருக்கிறோம். விருப்படும் நபர்கள் முன்கூட்டியே கட்டணத்தை செய்துக்கொள்ள வேண்டுகிறோம். 

முன்கூட்டியே செய்வதற்க்கும் காரணம் இருக்கின்றது பிரசித்தி பெற்ற ஒரு சனிகிரக ஸ்தலத்தில் கூட்டம் அதிகமாக கூடும் அதற்கு முன்பே நாம் செய்துவிட வேண்டும். உடனே விரைந்து செயல்பட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Tuesday, November 17, 2020

அறிவிப்பு

 வணக்கம்!

         குரு பெயர்ச்சி பரிகார யாகம் வரும் வியாழக்கிழமை(19-11-2020) அன்று நடைபெறும். குரு பெயர்ச்சி பரிகார யாகத்திற்க்கு கட்டணம் செலுத்திவிட்டு அவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை அனுப்பி வைக்க அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 


அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Saturday, November 14, 2020

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



 வணக்கம்!

          அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அனைவர்களின் குடும்பங்களிலும் மகிழ்ச்சி நீடித்து நிலைக்க அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Tuesday, November 3, 2020

குரு பெயர்ச்சி பரிகார பூஜை மற்றும் யாகம்

வணக்கம்!

          வருகின்ற குரு பெயர்ச்சியை முன்னிட்டு நமது தளத்தின் சார்ப்பாக குரு பெயர்ச்சி பரிகாரம் யாகம் நடைபெறும். இந்த குரு பெயர்ச்சியின் பலனை தருவதற்க்கு மற்றும் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்க்கு உள்ள பரிகாரமாக இது அமையும்.

பல நண்பர்கள் முன்கூட்டியே எனக்கு அவர்களின் பெயர்கள் மற்றும் நட்சத்திரத்தை அனுப்பியிருந்தனர் அவர்களுக்கு நேற்று ஆலங்குடி நான் சென்று விசேஷ பூஜை செய்யப்பட்டது அவர்களுக்கு இன்று விபூதி பிரசாதம் கூரியர் வழியாக அனுப்பியிருக்கிறேன். முன்கூட்டியே அவர்கள் என்னிடம் தெரிவித்த காரணத்தால் அவர்களுக்கு இது செய்யப்பட்டது.

குரு பெயர்ச்சி முன்னிட்டு முன்கூட்டியே செயல்பட்டால் தான் ஆலங்குடியில் நாம் செய்யமுடியும். நாம் பரிகாரம் யாகம் செய்தாலும் ஆலங்குடியில் நாம் ஒரு விஷேச பிராத்தனை செய்தால் அது நல்ல பலனை கொடுக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்தேன்.

குரு பெயர்ச்சி பரிகார பூஜை மற்றும் யாகம் தேவைப்படுபவர்கள் உடனே வேகமாக செயல்பட்டு என்னிடம் தொடர்புக்கொண்டு விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள். குரு பெயர்ச்சி பலன்களை நமது வீடியோ சேனலில் பார்த்துக்கொள்ளுங்கள்.

குறைந்தபட்ச கட்டணமாக நபர் ஒருவர்க்கு Rs 2000 செலுத்த வேண்டும்.


விரைவாக செயல்படும் நபர்களுக்கு மட்டுமே ஆலங்குடியில் விஷேச பூஜை செய்யப்படும். 

அன்புடன்

ராஜேஷ்சுப்பு






Thursday, October 22, 2020

ஐப்பசி பெளர்ணமி



 வணக்கம்!

                   வருகின்ற 31 ஆம் தேதி ஐப்பசி பெளர்ணமி வருகின்றது. உலகத்திற்க்கு இறைவன் உணவை படியளந்த நாள். ,இந்த ஐப்பசி பெளர்ணமி அன்று நாம் நமது அம்மனுக்கு மாத பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பர் மாதம் நடைபெற இருந்த பூஜையை ஐப்பசி பெளர்ணமி இந்த மாத கடைசியில் வருவதால் அந்த நாளில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்க்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதற்க்கு அரிசி மற்றும் காய்கறிகளை தானம் அளியுங்கள். வருடம் முழுவதும் உங்களுக்கு அன்னம் தட்டுபாடு ஏற்படாது. அன்னத்தால் ஏற்படும் தோஷமும் விலகி உங்களுக்கு நல்லது நடக்கும். 

30 ஆம் தேதியே பெளர்ணமி வருகின்றது. பெரும்பாலும் கோவில்களில் 31 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. உங்களுக்கு அருகில் உள்ள சிவலாயங்களில் எந்த நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் செயல்பட்டுக்கொள்ளுங்கள்.

பெளர்ணமி அன்று பெரும்பாலும் அனைவரும் வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் ஐப்பசி பெளர்ணமி அன்று நிலவு முழு சக்தியோடு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். அதிகமான ஒளிகளை தரும் என்பதால் அந்த நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன் 

ராஜேஷ்சுப்பு






Wednesday, October 7, 2020

இராகு

வணக்கம்!                  

ஒருவர் சொத்து வாங்குவதற்க்கு செவ்வாய்கிரகம் உதவி செய்யும் அல்லது அவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு நான்காம் வீட்டு அதிபதி வழியாக சொத்தை சேர்ப்பார்கள். நிலத்தை வாங்கினாலும் அந்த சொத்தை அவர் இழப்பது அவரின் ஜாதகத்தில் இராகு கிரகம் சரியில்லை என்றால் அவர் அந்த சொத்தை இழக்க நேரிடும்.

உங்களின் ஊரில் ஒருவர் நன்றாக வாழ்ந்திருக்கலாம் அவர் நிறைய நிலங்களை வாங்கி போட்டு இருந்திருப்பார். கோடிக்கணக்கான நிலங்கள் அவர் வாங்கியிருப்பார். அவரின் வாரிசு ஆளுமைக்கு வந்தவுடன் அவரின் சொத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்று ஒரு கட்டத்திற்க்கு மேல் சொத்து இல்லை என்று நடுத்தெருவிற்க்கு வந்திருக்கலாம். 

நீங்கள் பல பேரின் வழியாக செவி வழி செய்தியாக கூட கேட்டிருக்கலாம். இதற்கு எல்லாம் காரணம் என்ன என்றால் அவர்களின் ஜாதகத்தில் இராகு கிரகம் படுமோசமான தீமை பலன்களை தந்த காரணத்தால் மட்டுமே இருக்கும்.

இராகு கிரகம் ஒரு நன்றாக இருக்கும் குடும்பத்தை அழிக்க நினைத்தால் அது அழித்தே தீரும். ஒன்றுமே இல்லாத ஒரு ஏழ்மையான நிலைக்கு தள்ளுவது இராகுவின் வேலையாக இருக்கும். இராகு போல் கொடுப்பார் இல்லை கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்ற கேள்விபட்டு இருக்கிறோம் என்று நினைக்கலாம் ஆனால் இராகுவும் கெடுக்கும் வல்லமை உடைய ஒன்று தான்.. நல்ல நிலையில் இருப்பவரை கீழே தள்ளிவிடுவதில் இராகுவை மிஞ்ச ஆள் இல்லை என்று சொல்லலாம்.

இராகு கிரகத்தைப்பற்றி ஒரு வீடியோ தந்து இருக்கிறேன். அதனை பார்ப்பதற்க்கு கீழே உள்ள லிங்க கிளிக் செய்யவும்.

https://youtu.be/8uFykV8_-jw

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Monday, October 5, 2020

சொத்துக்கள் வாங்கும் காலம்



 வணக்கம்!

          ஒருவர் சம்பாதித்து ஒரு சொத்தை வாங்கினால் அந்த சொத்து அதிகபட்சம் நூற்றியிருப்பது ஆண்டுகள் வரை இருக்கும் அதற்கு மேல் அந்த சொத்து அவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருக்கு சேர்ந்துவிடும். அதிகபட்சமாக மூன்று தலைமுறையை ஒரு சொத்து கடந்து போனாலே அது பெரிய விசயமாகவே இருக்கும்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயத்தில் ஒருவர் கவனம் செலுத்தி வாங்கினால் அவர் வாங்கும் நேரத்தில் நல்ல காலமாகவே அவர்க்கு இருந்தால் அந்த சொத்து பல தலைமுறை கடந்து நிற்க்கும். பெரும்பாலான நிலைக்கும் சொத்துக்கள் சனி அதிகபலத்தோடு இருந்த காலத்தில் வாங்கிய சொத்துகள் தான் நீடித்து நிலைத்து நிற்க்கும்.

நீங்கள் சொத்துக்களை வாங்கும்பொழுது உங்களின் ஜாதகத்தில் சனி நன்றாக இருக்கின்ற காலம் தானா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். சொத்துக்கள் சேர்ப்பதற்க்கு செவ்வாய்கிரகம் நன்றாக இருக்க வேண்டும் என்றாலும் சனிகிரகத்தின் பலனையும் பார்த்து வாங்கவேண்டும்.

செவ்வாய் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும் ஆனால் அந்த சொத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தான் இருக்கும் அதன் பிறகு அந்த சொத்து உங்களை விட்டு செல்வதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது அதனால் செவ்வாய் பலத்தோடு சனியின் பலத்தையும் சேர்ந்து இருக்கும் காலமாக பார்த்து வாங்கினால் நல்லது.

6-10-2020 செவ்வாய்கிழமை அன்று திருப்பூரில் என்னை சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

நவராத்திரி விழா ஹோமம்

 


வணக்கம்!

          ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவது உண்டு. நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அம்மன் ஹோமம் செய்து வழிபடுவது உண்டு. இந்த வருடமும் இதனை செய்ய இருக்கிறோம். அம்மனின் அருளை பெறுவதற்க்கு நவராத்திரியில் ஹோமம் செய்வது மிக சிறந்த ஒரு பலனை கொடுக்கும். 

இந்த வருடம் நவராத்திரி வரும் 17 ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த வருடத்தில் நவராத்திரிக்கு ஹோமம் செய்வதற்க்கு என்று நண்பர்கள் புக் செய்து இருக்கின்றனர். மீதியும் நாட்கள் இருப்பதால் இந்த நாளில் நீங்கள் புக் செய்துக்கொள்ளலாம். நவராத்திரி ஹோமத்திற்க்கு ஒரு நாள் கட்டணமாக ஆறாயிரம் ரூபாய் ( Rs 6000) செலுத்தி புக் செய்துக்கொள்ளுங்கள். உடனே கட்டணத்தை செலுத்திவிட்டு தொடர்புகொள்ளுங்கள்.


Google Pay Rajeshsubbu Cell 8940773309

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Monday, August 24, 2020

இராகு & கேது பெயர்ச்சி பரிகாரம் யாகம்

 

வணக்கம்!

         எதிர்வரும் இராகு & கேது பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு பரிகார யாகம் நடைபெறும். ஒவ்வொருவரும் இந்த இராகு கேது பெயர்ச்சிக்கு தங்களின் பெயர் நட்சத்திரம் மற்றும் இராசியை அனுப்பி வைத்து அத்தோடு உங்களுக்கு விருப்பமான கட்டணத்தை செலுத்தி வைக்கலாம். இராகு கேது பெயர்ச்சி பலன்கள்  விரைவில் தருகிறேன்.


Google Pay

Rajeshsubbbu

8940773309

வங்கி கணக்கு விபரம் 

KVB Bank :  Karur Vysya Bank

 Branch : Pattukkottai 

Name : RAJESH S 

Account Type : Savings account. 

A/C Number : 1623155000063470


அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Wednesday, August 5, 2020

நினைத்ததை அடைய


வணக்கம்!
         ஒருவர் தன்னுடைய ஜாதகத்தில் ஒரு கிரகத்தின் சார்ப்பில் வாழ்ந்துவிடலாமா என்று பார்த்தால் தாராளமாக வாழ்ந்துவிடலாம் என்று சொல்லலாம். ஒரு கிரகத்தினை மட்டுமே சார்ந்து வாழ்வதற்க்கு என்ன தேவை என்று கேட்கலாம். 

ஒரு நோக்கம் மட்டும் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒரு நபர்க்கு எனக்கு இப்படி தான் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அவரின் ஆசைக்கு தகுந்த படி கிரக நிலை அவரின் ஜாதகத்தில் இல்லை என்றால் அவர் ஒரு கிரகத்தின் காரத்துவத்தை சார்ந்து வாழ்ந்து அவரின் ஆசையை தீர்த்துக்கொள்ளலாம்.

ஜாதகத்தில் உள்ள எல்லா கிரக நிலையும் வேலை செய்தாலும் ஒரு கிரகத்தின் உள்ள காரத்துவத்தை மட்டும் அதிகமாக நாடி அதில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார் என்றால் அவர்க்கு ஒரு சில காலத்திற்க்கு பிறகு அந்த கிரகத்தின் காரத்துவம் அதிகமாக வேலை செய்ய தொடங்கிவிடும். இது சாத்தியப்படுமா என்றால் கண்டிப்பாக இது சாத்தியப்படும்.

ஒருவருக்கு நான் எதிர்காலத்தில் இப்படி தான் வாழவேண்டும் என்று நினைத்தால் அவர் எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்படுவதையும் பார்த்தால் அது ஒரு கிரகத்தின் காரத்துவத்தை தான் காட்டும் அப்பொழுது அவரின் ஆசை ஒரு கிரகத்தோடு சம்பந்தப்படுகின்றது. இவர் ஆசைப்படும் கிரகத்தின் காரத்துவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அதற்கு சமப்பந்தப்படி தன்னுடைய அன்றாட நிகழ்வை மாற்றிக்கொண்டால் அவர் நினைத்தபடி எதிர்காலத்தில் மாறமுடியும்.

ஒருவர் தன்னை முழுமையாக அந்த கிரகத்திற்க்குள் மாற்றிக்கொள்வதற்க்கு நாட்கள் எடுத்தாலும் ஒரு சில காலக்கட்டத்தில் அவர் நினைத்த காரியத்தை அடைந்துவிடலாம். அவர் நினைத்த காரியத்தின் காரத்துவம் உடைய கிரகத்தின் வேலை நடந்து இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 4, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
          ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதமாகவே இருக்கும். ஆடி மாதத்தில் பெரும்பாலான கோவில்கள் அனைத்திலும் திருவிழா இருக்கும். கொரோனா இருப்பதால் ஆடி மாதத்தில் களை இழந்து காணப்படுகின்றது. வரும் காலத்தில் நல்லபடியாக இந்த உலகத்திற்க்கு அமையும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

நமது அம்மன் கோவிலில் எந்த காரணத்திலும் நாம் அம்மன் பூஜையை நிறுத்தவில்லை. அம்மன் அருளால் அது தடையின்றி நடைபெற்று வருகின்றது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஜாதககதம்பம் படிக்கும் அனைவரையும் ஒரு சிறிய தொகையை அனுப்ப சொல்லுவோம். சந்தா பணம் போல் அனுப்ப சொல்லி அதில் வரும் பணத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் அம்மன் பூஜையை சிறப்பாக செய்வது உண்டு.

ஒவ்வொரு மாதமும் ஐந்த தேதிக்குள் அம்மன் பூஜையை செய்வது உண்டு. இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் கால அவகாசம் எடுத்து இருக்கிறோம். விரைவில் அம்மன் பூஜையை நடத்த இருக்கிறோம். 

அனைவரும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தி வையுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் அம்மன் நல்ல அருளை தரும் என்பதால் அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 3, 2020

இனிய தொடக்கம்


வணக்கம்!
           நீண்ட நாள்களுக்கு பிறகு ஜாதககதம்பத்தில் பதிவுகளை தருகிறேன். பதிவுகள் கொடுக்காமல் போனதற்க்கு காரணம் வீடியோ பதிவுகள் மட்டும் வருவது அல்ல நமது அம்மன் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட காரணத்தால் பதிவுகளை உங்களுக்கு கொடுக்கமுடியவில்லை. இனிமேல் தினமும் ஜாதககதம்பத்திலும் எழுத முயற்சி செய்கிறேன்.

கொரோனா நேரம் இது என்பதால் அனைவரும் பாதுகாப்பாேடு இருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அனைவருக்கும் கொஞ்சம் தடைபட்டு இருக்கலாம் அதற்க்காக மன உளைச்சலில் ஈடுபட்டு கொண்டு இருக்காமல் இனி வரும் காலம் அனைத்தும் நல்லதாக அமையம் என்று இறைவனிடம் வேண்டுங்கள் நானும் அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

கொரோனா நேரம் என்று நான் சும்மா அமர்ந்துவிடாமல் இந்த நேரத்தில் தொடர்ச்சியாக பூஜைகளை செய்துக்கொண்டே இருக்கிறேன். எவ்வளவே இடர்பாடுகள் வந்தாலும் அதனை எல்லாம் சமாளித்து ஆன்மீகபணியை செய்துக்கொண்டே இருக்கிறேன். நீங்களும் ஆன்மீகத்தில் உள்ள வேலைகளை தொய்வில்லாமல் செய்து வாருங்கள். 

எப்படிபட்ட சோதனை காலத்திலும் நான் ஆன்மீகத்தை விடவில்லை என்ற ஒரு எண்ணம் இருந்தால் அது உங்களை வழி நடத்தி செல்லும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 5, 2020

குரு பூர்ணிமா


ணக்கம்!
         நீண்டநாள்களுக்கு பிறகு ஜாதககதம்பத்தில் பதிவை தருகிறேன். குரு பூர்ணிமா வாழ்த்தை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பலர் இன்று குரு பூர்ணிமாவை தங்களின் குருவிற்க்கு நன்றியை செலுத்தும் விதமாக நடந்துக்கொண்டு இருப்பார்கள் பலர் இந்த நாளை மறந்து போய் இருக்கலாம். ஒவ்வொருவருடமும் நாம் குரு பூர்ணிமா முடிந்தவுடன் பதிவை கொடுப்பேன்.

ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு அறிவையும் தந்த குருவிற்க்கு நன்றியை செலுத்தவேண்டும். ஒரு மனிதன் நன்றியை மறந்தான் என்றால் அவன் பெரிய அளவில் வளர்ச்சியை பெறமுடியாது. ஒவ்வொரு அறிவையும் கொடுத்தவர்கள் அனைவரும் நமக்கு குருவாகவே ஏற்று அவர்களுக்கு நன்றியை செலுத்தவேண்டும். ஒவ்வொருவருக்கும் நாம் நன்றியை செலுத்தும்பொழுது அது நமக்கு பெரியளவில் ஆசி கிடைக்கும்.

நன்றியை செலுத்துவதுடன் நமது குருவிற்க்கு தேவையானவற்றை நாம் செய்துக்கொடுக்கவேண்டும். அவர்களின் வழியில் உள்ள குரு நமக்கு ஆசியை வழங்குவார்கள். ஆசி கிடைத்தால் போதும் ஒரு வருடத்திற்க்கு நமக்கு பல நல்ல விசயங்கள் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 18, 2020

அம்மன் சிறப்பு ஹோமம்


வணக்கம்!
         தற்சமயம் அம்மன் சிறப்பு ஹோமம் செய்வதற்க்கு சிறப்பு அறிவிப்பை தருகிறேன். தங்களின் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதனை நிறைவேற்றி கொடுக்கும் சக்தி வாய்ந்த பூஜையை செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொள்ளலாம். 

மற்றைய காலங்களில் மிகுந்த செலவு செய்து தான் இதனை செய்யமுடியும். இதற்கு என்று கட்டணங்கள் அதிகமாகவே வாங்கப்படும் தற்சமயம் நீங்கள் குறைந்த செலவில் இதனை செய்துக்கொள்ளமுடியும். வாழ்க்கையில் மாற்றங்கள் இல்லை என்று நினைப்பவர்கள் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். இதற்க்கு பூஜைக்கு செய்யும் செலவை மட்டும் ஏற்றுக்கொண்டு இதனை செய்துக்கொடுக்கிறேன். 

பூஜைக்கு செலவு ரூபாய் Rs 2500 மட்டுமே ஆகும் என்பதால் இந்த கட்டணத்தை செலுத்திவிட்டு தொடர்புக்கொள்ளவும். 

வங்கி கணக்கு விபரம்  

KVB Bank :  Karur Vysya Bank  
Branch : Pattukkottai 
Name : RAJESH S  
Account Type : Savings account.  
A/C Number : 1623155000063470  
IFSC Code : KVBL0001623  
Cell No : 9551155800,8940773309 Whatapp : 9551155800  

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Monday, May 4, 2020

இராகுவும் திருமணமும்


வணக்கம்!
              இராகு ஒருவருக்கு தசா நடத்தினால் அவர்க்கு திருமணம் என்பது அவ்வளவு எளிதில் நடைபெற்றுவிடாது. இராகு தசா சுபநிகழ்வுகளை தரக்கூடிய ஒரு கிரகம் கிடையாது என்பதால் இராகு கிரகம் தசாவில் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை நடத்துவது என்பது அவ்வளவு எளிய விசயம் கிடையாது. இராகு தசாவில் சுக்கிர புத்தி மற்றும் களத்திர ஸ்தான அதிபதியின் புத்தி நடந்தால் திருமணம் செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

இராகு தசா ஒருவருக்கு நடக்கும்பொழுது அவர் திருமணம் செய்வதற்க்கு மிகுந்த முயற்சி செய்து திருமணத்தை நடத்த வேண்டியிருக்கும். கடவுளின் திருமணம் நடைபெறும் இடங்களுக்கு சென்று அந்த விழாவில் பங்குக்கொண்டு வந்தால் திருமணத்திற்க்கு வாய்ப்பு வரும்.

உங்களின் ஜாதகத்தில் இராகு செல்லும் நட்சத்திரம் மற்றும் முழுஜாதகத்தையும் நாம் பார்த்த பிறகு மிக சரியான ஜாதகம் எது என்று பார்த்து அதற்கு தகுந்தார் போல் செய்தால் பரிகாரம் பலன் தரும். இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 23, 2020

அறிவிப்பு


வணக்கம்!
          தற்சமயம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உலகம் இருக்கின்றது. கொரோனா தடுப்பிற்க்காக ஜாதககதம்பத்தின் வழியாக  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நம்மை நோக்கி வரும் ஆபத்துகளை நீக்க இந்த மாதிரியான பூஜைகள் நல்ல வழி வகுக்கும். உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் இந்த பாதிப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இந்த பூஜைகள் உதவும்.

நீங்கள் உங்களின் தனிப்பட்ட குடும்பத்திற்க்காகவும் அல்லது உலக நன்மைக்காவும் சிறப்பு அம்மன் யாகத்தை செய்ய விரும்பினால் செய்யலாம். இதற்க்கு பூஜைக்கு செய்யும் செலவை மட்டும் ஏற்றுக்கொண்டு இதனை செய்துக்கொடுக்கிறேன். கொரோனா முடியும் வரை இதனை செய்யலாம் என்று இருக்கிறேன். மிக மிக குறைந்த கட்டணத்தில் இதனை நாம் செய்துக்கொள்ளலாம்.

விருப்படும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். பூஜைக்கு செலவு ரூபாய் 2000 மட்டுமே ஆகும் என்பதால் இந்த கட்டணத்தை செலுத்திவிட்டு தொடர்புக்கொள்ளவும்.

வங்கி கணக்கு விபரம்
 KVB Bank :  Karur Vysya Bank 
Branch : Pattukkottai 
Name : RAJESH S 
Account Type : Savings account. 
A/C Number : 1623155000063470 
IFSC Code : KVBL0001623 

Cell No : 9551155800,8940773309 Whatapp : 9551155800 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 14, 2020

இனிய நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
          அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதககதம்பம் இன்று பதினோராவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. இத்தனை வருடம் பதிவுகளை நான் தந்திருந்தாலும் அதனை படித்து என்னை ஊக்கவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடம் நாம் யூடிப் சேனலை தொடங்கி இருக்கிறோம் அதற்கும் தாங்கள் ஆதரவை அளித்து வருகின்றீர்கள் அதற்கும் நன்றி. தொடர்ந்து என்னோடு பயணம் நீங்கள் செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 11, 2020

இராகுவிற்க்கு அமாவாசை


வணக்கம்!
          கிரகங்களின் எதிர்மறையாக சுற்றம் கிரகங்கள் இராகு மற்றும் கேது. நல்ல எண்ணங்களில் இருந்து விலகி தீய எண்ணங்களுக்கு செல்லும் வகையில் இருந்தால் அது இராகு என்ற கிரகத்தால் மட்டுமே கொடுக்கமுடியும். மாந்தீரிகம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதனை செய்யும் நபர்கள் அனைவரும் இராகுவின் காரத்துவத்தில் இருந்து வருகின்றனர்.

உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் மற்றும் உங்களின் வளர்ச்சியை கண்டு வியக்கும் நபர்கள்  உங்களின் உறவினர்கள் அனைவரும் உங்களிடம் பொறைமையை காட்டுவார்கள். பொறாமை அதிகமாக சென்று அது மாந்தீரிம் செய்யும் நபர்களை நாடி சென்று அதற்கும் வழி செய்துவிட்டால் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக சென்றுவிடும். உங்களின் வாழ்க்கை முடங்கி போய்விடும்.

மாந்தீரி பாதிப்பில் இருந்து வெளிப்பட அமாவாசை அன்று நீங்கள் இராவிற்க்கு பரிகாரம் செய்யும்பொழுது அந்த பாதிப்பில் இருந்து வெளிவரலாம். அமாவாசை அன்று கிரகங்களின் தாக்கம் குறைவாக பூமிக்கு கிடைக்கும் அந்த நாளை பயன்படுத்திக்கொண்டு மாந்திரீகம் செய்யும் நபர்கள் பூஜையை செய்து எதிராளியை வீழ்த்த நினைப்பார்கள்.

அமாவாசை அன்று இராவிற்க்கு நீங்கள் பரிகாரம் செய்வது எப்படி என்றால் நாட்டுமருந்துகடையில் வெட்டிவேர் கிடைக்கும். வெட்டிவேரை வைத்து உங்களை சுற்றி அந்த வெட்டிவேரை நெருப்பில் போடும்பொழுது உங்களிடம் இருக்கும் மாந்தீரிக பாதிப்பு குறையும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன் பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 6, 2020

பரிகாரம் இல்லாத பாவம்


வணக்கம்!
                 ஒருவரின் வாழ்க்கையில் அவர் செய்த பாவத்தில் முதன்மையான பாவம் மற்றும் பரிகாரம் இல்லாத பாவமாக பார்க்கப்படுவது அவர் செய்த கருக்கலைப்பு மட்டுமே இருக்கும். பல குடும்பங்களில் வளர்ச்சி இல்லாத ஒரு நிலை எல்லாம் இருந்தும் நாம் ஏன் இன்னமும் முன்னேற்றம் இல்லாத ஒரு நிலையில் இருக்கின்றோம் என்று தேடவைப்பது குடும்பத்தில் வாரிசு வளர்ச்சி இல்லாமல் இருப்பது அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது அவர் செய்த இந்த கருக்கலைப்பு என்ற பாவமாகவே இருக்கும்.

கருக்கலைப்பு என்பது தெரிந்து செய்து இருக்கலாம் அல்லது இது பாவம் என்று தெரியாமல் செய்து இருக்கலாம் அது எப்படி இருந்தாலும் அந்த பாவத்தை செய்தால் அதற்க்கு நாம் பரிகாரம் தேடமுடியாது. அதற்க்காக நாம் செய்ய வேண்டியது நம்முடைய வாரிசுகளுக்கு இது தவறான ஒரு செயல் என்பதை தெரியப்படுத்துவது மட்டுமே இதற்க்கு தீர்வாக அமையும்.

உங்களுக்குடைய வாரிசுகளுக்கு இது தெரியவந்தால் அவர் இந்த தவறை செய்ய மாட்டார்கள். அவர்கள் இந்த தவறை செய்ய வேண்டும் என்று நினைக்கும்பொழுது அவர்களுக்கு நீங்கள் சொன்ன இந்த அறிவுரை அவர்களுக்கு ஞாபகம் வந்து அவர்களின் தவறை செய்யவிடாமல் தடுக்கும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவு தந்திருக்கிறேன் அதனை பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 5, 2020

பங்குனி உத்திரம்


வணக்கம்!
        பங்குனி உத்திரம் அன்று முருகன் கோவில் சென்று அனைவரும் வழிபட்டு வருவார்கள் ஆனால் தற்பொழுது கொராேனா பாதிப்பால் எந்த ஒரு கோவிலும் திறக்கப்படவில்லை அதனால் பங்குனி உத்திரம் அன்று வீட்டிலேயே இருந்து வழிபடும் முறையைப்பற்றி பார்ப்போம். பங்குனி உத்திரம் அன்று முருகனுக்கு திருக்கல்யாணம் என்பதால் அதனை தரிசித்தால் அல்லது அதற்க்காக விரதம் இருந்தால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

தற்சமயம் வீட்டிலேயே இருப்பதால் நீங்கள் முருகனுக்கு விரதத்தை மட்டும் செய்தால் போதும். காலையில் இருந்து எந்த ஒரு ஆகரமும் எடுக்காமல் இருந்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்துவிட்டு சமையல் செய்து மதியம் பூஜையறையில் பூஜை செய்துவிட்டு விரத சாப்பாட்டை சாப்பிடுங்கள். விரத காய்கறியில் வாழைக்காய் மற்றும் பரங்கிகாய் இருந்தால் சிறப்பான ஒன்று தற்சமயம் உங்களுக்கு காய்கறி கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் காய்கறியை வைத்து நீங்கள் சமையல் செய்துக்கொள்ளுங்கள். மாலை நேரத்தில் பூஜையறையில் தீபம் ஏற்றி மனதார முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

நீங்கள் கோவிலுக்கு செல்லமுடியவில்லை என்று கவலைப்படதேவையில்லை இந்த வழிபாட்டை செய்தாலே போதுமானது. ஜாதகத்தில் செவ்வாயால் நீசம் பெற்றால் அவருக்கு துணிவு மற்றும் நிலங்கள் இருக்காது. என்ன தான் பாடுபட்டாலும் ஒரு நிலம் தனக்கு இல்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கும். செவ்வாய் பலம் இழந்து காணப்படும் அனைவரும் இந்த வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவு தந்திருக்கிறேன் அதனை பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 31, 2020

அம்மன் பூஜை & பங்குனி உத்திரம்


வணக்கம்!
          அம்மன் பூஜை கொரோனாவால் தள்ளிவைக்கவில்லை திட்டமிட்டபடியே நடத்தப்படும். என்னால் முடிந்தவரை என்ன கிடைக்கின்றதோ அதனை வைத்து பூஜையை நடத்திவிடுகிறேன். கொராேனா தடுப்பு என்ற முதல் கோரிக்கையை அம்மனிடம் வைத்துவிடுகிறேன். 

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்திவைக்கலாம். கொரோனாவால் சம்பள பிரச்சினை மற்றும் பணப்பிரச்சினையில் இருக்கும் நண்பர்கள் அனுப்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அம்மன் பூஜை முடிந்த பிறகு பங்குனி உத்திரம் வருகின்றது. வருடந்தோறும் பங்குனி உத்திரம் அன்று பழனிக்கு சென்றுவிடுவது உண்டு. இந்த வருடம் கொரோனாவால் செல்லமுடியாது. நீங்களும் எந்த ஒரு முருகன் கோவிலுக்கும் செல்லமுடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. 

வரும் பங்குனி உத்திரம் அன்று முருகனுக்காக சிறப்பு பூஜை செய்ய முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் பங்குனி உத்திரம் 6-4-2020  திங்கள் கிழமைக்குள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை எனக்கு அனுப்பி வைக்கலாம். பங்குனி உத்திர பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம் பணம் செலுத்தமுடியாதவர்களும் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுகு்கொள்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 30, 2020

காவல் தெய்வம்


வணக்கம்!
     ஒவ்வொரு ஊரிலும் காவல் தெய்வங்கள் என்பது இருக்கும். காவல் தெய்வங்கள் பெரும்பாலும் அய்யனார் வீரனார் முன்னாேடியான் கருப்பசாமி மற்றும் மாரியம்மன் என்று இருக்கும். இந்த தெய்வங்கள் அந்த ஊரை எல்லாவற்றிலும் இருந்து காப்பாற்றி அந்த மக்களை வாழவைக்கும். ஒரு ஊரில் எந்த ஒரு தீயசக்திகளும் நுழையாமல் அந்த ஊரை காப்பாற்றும். 

ஒரு ஊரில் கொள்ளை நோய் வந்தாலும் அந்த நோயில் இருந்து அந்த மக்களை காப்பாற்றும். காவல் தெய்வங்கள் ஒரு ஊரில் இருந்து அந்த மக்களை காப்பாற்றுவதால் அந்த ஊர் மக்கள் ஒரு வருடத்திற்க்கு ஒரு முறை அந்த காவல்தெய்வங்களுக்கு திருவிழா எடுத்து கொண்டாடுவார்கள்.

இன்றைய காலத்தில் பிழைப்பை தேடி நகர்புறங்களுக்கு செல்லும் மக்கள் ஒரு ஊரில் சென்று வசிக்கலாம் அந்த ஊரின் காலதெய்வம் என்ன என்பதை கேட்டறிந்து அந்த காவல் தெய்வத்தை வணங்கி வந்தால் அந்த ஊரில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வாழலாம். சம்பந்தப்பட்ட ஊரில் நல்ல பாதுகாப்போடும் நல்ல வசதியோடும் வாழலாம்.

நாங்கள் வெளியூர் என்று ஏதாவது ஒரு வேலை நடக்கவேண்டும் என்றாலும் அந்த ஊரின் காவல்தெய்வத்தை வணங்கிவிட்டு அதன்பிறகு வேலை தொடங்குவோம் அப்பொழுது அந்த ஊரில் அனைத்து வேலையும் எளிதாக எங்களுக்கு முடிந்துவிடும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். அதனை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 29, 2020

சனிக்கு பரிகாரம் செவ்வாய்


வணக்கம்!
             பரிகாரம் செய்வதில் இரண்டு வகை இருக்கின்றது. ஒன்று சம்பந்தப்பட்ட கிரகத்தை சாந்தப்படுத்தி அந்த கிரகத்தின் வழியாக நாம் பயன் அடைந்துக்கொள்வது. சாந்தப்படுத்தப்பட்ட கிரகம் சம்பந்தப்பட்ட நபர்க்கு நல்லது செய்யும் அதனை சாந்தப்படுத்தியதால் அது நல்லது செய்யும் மற்றோன்று சம்பந்தபட்ட கிரகத்தை எதிர்த்து வேலை செய்து அதனின் கோபத்தை குறைப்பது இது ஒரு வழிமுறையாகும்.

செவ்வாய்கிரகம் மகர இராசியில் உச்சம் பெறுகின்றது. சனிக்கிரகம் மேஷ இராசியில் நீசம் பெறுகின்றது. செவ்வாய் பலம் வாய்ந்த தன்மையால் சனியின் கோபத்தை குறைக்கும் ஆற்றல் உண்டு. சனிக்கிரகம் உங்களுக்கு பிரச்சினை கொடுக்கும் காலத்தில் குறிப்பாக ஏழரைச்சனி காலம் மற்றும் அஷ்டமசனி இன்னும் பிற காலங்களில் சனிக்கு பரிகாரமாக நீங்கள் செவ்வாய்கிரகத்தை வணங்கி சனியின் வேகத்தை குறைக்கலாம்.

நான் பலருக்கு ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனியின் காலத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லிருக்கிறேன். பலர் அங்கு சென்று வணங்கி சனியின் பிடியில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றனர். 

சென்னை திருவான்மீயூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஒரு முருகர் பக்தர். அவருக்கு ஒரு முறை கால் முறிவு ஏற்பட்டது. கால் முறிவு ஏற்பட்டபொழுது அவர் முருகனை வணங்கி அந்த கால் நல்ல முறையில் சரியானதாக தகவல் இருக்கின்றது. சென்னை திருவான்மீயூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஆலயம் சென்று பார்த்தால் அது நிகழ்வாக இன்றும் கொண்டாடிவருகின்றனர்.

பல முருக பக்தர்களுக்கு சனியின் பாதிப்பில் இருந்து முருகன் காப்பாற்றி இருக்கின்றார். நீங்களும் சனியின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்க்கு செவ்வாயின் கடவுளான முருகனை வணங்கி வரலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் முருகனின் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தாலும் சனியின் பாதிப்பு குறையும்.

இந்த தகவலைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 28, 2020

ஆரா பயிற்சி செய்வது எப்படி?



வணக்கம்!
ஆரா பயிற்சி செய்வது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். முதலில் ஆரா பயிற்சி செய்வதின் நோக்கம் எதற்க்கு என்பதை தீர்மானிக்கவேண்டும். ஆரா பயிற்சி என்னுடைய வாழ்க்கைக்கு உதவும் அதனால் செய்கிறேன் அல்லது என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்க்கு செய்கிறேன் என்று செய்யகூடாது. ஒரு சிலர் தங்களின் நோய் தீரவேண்டும் என்பதற்க்காக செய்கிறேன் என்பார்கள்.
நமது ஞானிகள் பலருக்கு நோய் இருந்து இருக்கின்றது. அவர்களின் ஆரா நன்றாக இல்லாமல் இல்லை ஆனால் அவர்கள் அதனை குணப்படுத்தவேண்டும் என்ற முனைப்பை காட்டவில்லை. அவர்களின் அனைவரும் அவர்களின் ஆன்மீகபாதைக்கு மிக சிறந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்காக இந்த பயிற்சியை மேற்க்கொண்டனர். நீங்களும் ஆன்மீகத்தில் ஒரு நல்ல நிலைக்கு செல்லவேண்டும் என்ற நினைப்போடு செயல்பட்டால் உங்களுக்கும் இந்த ஆரா பயிற்சி நன்மை பயக்கும்.
ஆரா பயிற்சி செய்வதற்க்கு முன்பு உங்களின் மூன்றாவது கண்ணிற்க்கும் ஆராவிற்க்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஆராவை பலப்படுத்த வேண்டும் என்றால் உங்களின் மூன்றாவது கண்ணிற்க்கு உள்ள பயிற்சியை மேற்க்கொண்டால் கண்டிப்பாக உங்களின் ஆரா பலப்படும். உங்களின் கர்மாவிற்க்கு இந்த ஆராவிற்க்கும் தொடர்பு இருக்கின்றது.

ஆராவை பயிற்சி செய்வது எப்படி என்பதை பற்றி வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 27, 2020

பாவத்தை போக்கும் மரம்


வணக்கம்!
கோவிலில் தல விருட்ஷம் என்பது மிக முக்கியமான ஒன்று. உருவவழிபாடு உருவாகாத காலத்தில் நம் முன்னோர்கள் மரத்தை வைத்து தான் வழிபாட்டை செய்தார்கள். மரம் என்பது கடவுள் என்று அதனை வணங்கி வாழ்ந்தனர். இன்றைய காலத்திலும் கோவில்களில் தலவிருட்ஷம் என்பது ஒன்று இருக்கின்றது. இதனையும் நாம் இன்று காலத்திலும் வணங்கி வருகிறோம்.

நமது அம்மன் அங்காளபரமேஸ்வரியை நாம் வணங்குவது கூட மரத்தில் வைத்து தான் வணங்கிறோம். இன்றைய காலத்திலும் இந்த நடைமுறை பல இடங்களில் இருப்பதை நாம் பார்க்கமுடியும். கிராமபுறங்களில் இது அதிகமாகவே இருக்கின்றது. நகர்புறங்களில் தற்சமயம் இராகு கேதுவிற்க்கு மரத்தை வைத்து அதில் ஒரு நாகசிலையை வைத்து வணங்கி வருகின்றனர்.

வீட்டில் துளசி செடியை வைத்து வணங்கும் நடைமுறை கூட நமது பாவத்தை அந்த செடி வாங்கிக்கொள்ளும் என்ற காரணத்தால் தான் வீட்டில் வைத்து வணங்குகின்றனர். மாரியம்மனை எல்லாம் வேப்பம்மரத்தில் வைத்து வணங்குவது கூட அந்த மரத்திற்க்கு அந்தளவுக்கு சக்தியை கொடுக்கும் ஆற்றல் இருப்பதால் அதனை வைத்து வணங்குகின்றனர்.

சீன மற்றும் திபெத்தில் தாவோ என்ற மதத்தில் உள்ள ஞானிகள் தங்களின் ஞான கருத்தை ஒரு சீடர் கிடைக்கவில்லை என்றால் மரத்தில் சொல்லிவிட்டு செல்வார்கள் அதன்பிறகு ஞானத்தை தேடி வரும் நபர் அந்த மரத்திற்க்கு அருகில் செல்லும் பொழுது அவர்க்கு அந்த கருத்தை மரம் கடத்திக்கொடுக்கும். மரத்தை நாம் வணங்கும்பொழுது நமக்கும் ஞான கருத்தை கொடுத்து நமது பாவத்தையும் போக்குகின்றது.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவிட்டுருக்கிறேன் அதனை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 26, 2020

சனி கர்மா & பரிகாரம்


வணக்கம்!
                சனிக்கிரகம் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த வீட்டில் அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை அந்த சனிக்கிரகம் தன்னுடைய கர்மாவை எப்படி கொடுக்கின்றது என்பதை அவரின் அனுபவத்தை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம். சனிக்கிரகம் கர்மா கொடுக்கின்றது என்றால் அவர் கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்கவேண்டும் அல்லது அவரின் குடும்பத்தில் எட்டு பேருக்கு மேல் இருக்கவேண்டும் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறக்க வைப்பார். 

சனிக்கிரகம் இளமையிலேயே நரமுடியை உருவாக்கிவிடுவார். தற்சமயம் அனைவருக்கும் தலைமுடி நரை ஏற்பட்டாலும் இவரின் உடலை பார்க்கும்பொழுது வயதானவர் போல் தோற்றத்தை கொடுத்துவிடும். இவரின் குடும்பத்தில் அதிகமான விதவைகள் இருப்பதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. பெண்களுக்கு முன்பு அந்த வீட்டில் ஆண்கள் இறந்துவிடுவார்கள்.

சனிக்கிரகம் கர்மா கிரகம் என்பதால் இவர்க்கு வேலை என்பது அந்தளவுக்கு எளிதில் கிடைத்துவிடாது. வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாக கிடைக்கும் ஒரு சில மாதத்தில் சம்பளம் கிடைக்காது. இவர் சென்ற நேரம் அந்த கம்பெனி திவாலாகிவிடும். கம்பெனி அதிக கடனால் திவலாகிவிடுவதும் உண்டு.

சனிகிரகம் தாழ்த்தப்பட்ட சாதியை குறிக்கும் கிரகம் என்பதால் இவர்க்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை இருந்துக்கொண்டே இருக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இவர் வாழ்வது போலவே இவர்களின் வீடு இருக்கும். குப்பை கிடங்கில் வீடு அமைந்தது போன்று இருக்கும். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு வாழும் வாழ்க்கை ஏற்படும்.

சனிக்கிரகத்தின் கர்மா மற்றும் அதற்குள்ள பரிகாரம் என்ன என்பதைப்பற்றி ஒரு வீடியோ எடுத்து இருக்கிறேன். அதனைப்பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இராகுவிற்க்கு பரிகாரம் சுக்கிரன்


வணக்கம்!
                கொரோனாவால் மக்கள் இராகு பக்கம் கேள்வி திருப்புகின்றனர். இராகுவால் தான் பெரிய பிரச்சினை வருகின்றது இதனை சரி செய்வது எப்படி மற்றும் இராகுகிரகத்தை எந்த கிரகத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று கேட்டனர். இராகுவின் நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரம். திருவாதிரை மிதுன இராசியில் வருகின்றது. மிதுன இராசியில் புதனின் வீடு சுவாதி துலாம் இராசியில் வருகின்றது. துலாம் சுக்கிரனின் வீடு மற்றும் சதய நட்சத்திரம் கும்பத்தில் வருகின்றது. கும்பம் சனியின் வீடு. 

மூன்று இராசியில் துலாம் இராசியில் இராகுவின் வீரியம் குறைவாக இருக்கும். மற்ற இராசிகளை விட துலாம் இராசியில் இராகுவின் வீரியம் குறைவாக இருப்பதற்க்கு காரணம் அந்த இராசியின் அதிபதி சுக்கிரனால் மட்டுமே இது சாத்தியம். அசூரகுருவின் அருளால் இராகுவின் வீரியம் குறைந்துவிடுகின்றது. சுவாதி நட்சத்திரக்காரர்கள் மற்ற இராகுவின் நட்சத்திரத்தை விட நன்றாக வாழ்க்கின்றனர் என்றதால் அதற்கு சுக்கிரன் காரணமாக இருக்கின்றார்.

இராகுவின் வீரியம் சனி மற்றும் செவ்வாய் கிரகத்தால் வீரியம் குறையும் என்றால் அது அந்தளவுக்கு சாத்தியப்பட்டு வராது என்றே சொல்லவேண்டும். குரு கிரகம் நல்ல நிலையில் வரும்பொழுது இராகுவின் வீரியம் குறைய தொடங்கும் என்றாலும் அதுவும் அனுபவத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாதபடியாக தான் இருக்கின்றது.

இராகுவிற்க்கு துர்க்கை மற்றும் நாகாத்தமன் வழிபாடு எல்லாம் பெண் தெய்வங்களை வைத்தே வழிபாடு செய்யப்படுகின்றது. சுக்கிரனின் காரத்துவம் உடைய பெண் தெய்வங்களை வைத்து வணங்கும்பொழுது மட்டுமே இராகுவின் வீரியம் குறையும் மற்ற எந்த வழிபாடும் அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதபடியாகவே இருக்கும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன். இதனை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 25, 2020

கொரோனா (Corona Virus)


வணக்கம்!
         கொரோனா உலகயே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா தாக்குதலால் பலர் உயிர் இறந்து இருக்கின்றனர். கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்க்கு அரசாங்கம் சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி வாருங்கள் அதோடு ஆன்மீக வழியிலும் நீங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்து வாருங்கள். ஆன்மீக வழியில் பல மந்திரங்களை தற்பொழுது அனைத்து ஆன்மீகவாதியும் சொல்லிவருகின்றனர் அதனை அனைத்தையும் உங்களால் சொல்லமுடியாது. உங்களுக்கு தெரிந்த ஏதோ ஒரு வழிபாட்டை மட்டும் சொல்லி வரும்பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.

புதிய மந்திரங்களை சொல்லி வந்தால் அது உரு ஏற்றி வேலை செய்வதற்க்கு பல நாட்கள் சென்றுவிடும். ஒரு மந்திரம் ஒரு தடவையில் வேலை செய்யாது. வேலை செய்வதற்க்கு நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் புதிய மந்திரத்தை நீங்கள் எடுக்கவேண்டாம். உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உரு ஏற்றினால் நல்லது. 

ஆன்மீக வழியில் நீண்ட நாள்களாக இருந்தால் நீங்கள் ஏதாே ஒரு மந்திரத்தை மட்டும் சொல்லி வந்து இருப்பீர்கள். அதனையே நீங்கள் இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். காயத்திரி மந்திரத்தை உரு ஏற்றி வந்திருந்தாலும் அதனையே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு எந்த ஒரு மந்திரமும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களின் பூஜையறையில் சிறிது நேரம் உங்களின் மனதை விட்டு வேண்டிக்கொண்டாலே போதும். உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்களின் மனம் நல்ல ஆற்றலோடு இருக்கும்பொழுது மட்டுமே உங்களால் எளிதில் அனைத்தையும் எதிர்க்கொள்ளமுடியும். தற்சமயம் கோவில்களும் மூடி இருப்பதால் நீங்களே உங்களின் வீட்டின் பூஜையறையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


இதனைப்பற்றி வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டு இருக்கிறேன். அதனை பார்த்த தெரிந்துக்கொள்ளுங்கள்.


அம்மன் பூஜை வருகின்ற 5 ஆம் தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்களின் முன் ஏற்பாட்டிற்க்காக தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 23, 2020

அமாவாசை சிறப்பு பூஜை


வணக்கம்!
           கொரோனா தடுப்பு சிறப்பு யாகம் நேற்று சிறப்பாக செய்யபட்டது. யாகத்திற்க்காக தங்களின் குடும்பத்தினர்களின் பெயர்களை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய ஆற்றலை கொடுத்து இதனை  செய்து இருக்கிறேன். நம்முடைய நண்பர்கள் அனைவரும் இதில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளையும் பின்பற்றி வாருங்கள்.

அமாவாசை இன்று பிற்பகலில் இருந்து வர இருப்பதால் இன்று மாலை நேரத்தில் சிறப்பு பூஜை நடத்த இருக்கின்றேன். இது முற்றிலும் இலவசம். அனைவரின் பெயரும் மற்றும் நட்சத்திரமும் என்னிடம் இருக்கின்றது அனுப்பதாவர்கள் வேண்டுமானால் அனுப்பி வைக்கலாம்.

தேவை ஏற்பட்டால் நவ சண்டி யாகமும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்த இருக்கிறோம். அச்சம் இன்றி அம்மனின் அருளால் நீங்கள் நன்றாக வாழலாம்.  உங்களின் நலனுக்காக அனைத்தும் இலவசமாகவே நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் வீட்டில் இருந்து அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள். பல வழிபாட்டு முறைகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு எது பிடித்த வழிபாடோ அதனை நீங்கள் தினமும் செய்து வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 20, 2020

கொரோனா தடுப்பு சிறப்பு யாகம்


வணக்கம்!
           உலகம் எங்கும் கொரோனா வைரசு தாக்குதலால் பல உயிர்கள் பலி வாங்கி உள்ளது. பல பேர்கள் இதற்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பல நாடுகளிலும் உள்ள மக்களை தாக்கிக்கொண்டு இருக்கின்றது. உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் அச்சுறுத்தலில் இருக்கின்றனர். இதற்கு தீர்வு அரசாங்கம் சொல்லுவதை கேளுங்கள் அதோடு ஆன்மீகத்தில் வழியலும் நாம் இதற்கு ஏதோ ஒன்றை செய்யவேண்டும் என்று தோன்றியது.

நமது நண்பர்களே என்னிடம் இதனைப்பற்றி கேட்டனர். இதற்கு தீர்வு எப்பொழுது வரும் என்று பல நண்பர்கள் கேட்டனர். என்னுடைய பதிலை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். நம்முடைய ஆன்மீக சக்தியை வைத்து நாமும் ஏதோ செய்யவேண்டும் என்ற நினைப்பு இருந்தது. வரும் ஞாயிறுக்கிழமை அன்று சிவராத்திரி மற்றும் அன்று இராகுவின் நட்சத்திரமான சதயமும் வருகின்றது.

இன்றைய நாளில் கொரோனா தடை சிறப்பு யாகம் செய்ய இருக்கிறோம். நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்க்க்கும் மற்றும் உலக மக்களுக்காக இந்த யாகம் நடைபெற இருக்கின்றது. இதில் நமது ஜாதககதம்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் நட்சத்திரத்தை அனுப்பி வைக்கவும். இதனை இலவசமாக தான் செய்ய இருக்கிறேன். இதில் விருப்பட்டு காணிக்கை செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் அனுப்பி வைக்கலாம். யாகம் பெரியளவில் நடைபெறுவதற்க்கு அது வழி செய்யும் என்பதால் மட்டுமே சொல்லுகிறேன். உடனே நமது நண்பர்கள் எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு தங்களை பற்றி விபரத்தை அனுப்பி வைக்கவும்.

நாம் பெயர் அனுப்பினால் பணம் அனுப்பவேண்டும் நாம் பெயரை அனுப்பவேண்டாம் என்று இருக்கவேண்டாம். அனைவரும் இதில் பங்குக்கொள்ளவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். பணம் அனுப்ப முடிந்தவர்கள் அனுப்பலாம் மற்றவர்கள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை உடனே அனுப்பி வையுங்கள். ஞாயிற்றுகிழமை இரவு யாகம் நடைபெறும்.

யாகம் (22.03.2020) ஞாயிற்றுகிழமை இரவு நடைபெறும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 18, 2020

எட்டில் லக்கினாதிபதி தெய்வ உபாசாணை


வணக்கம்!
               எட்டாவது வீட்டில் லக்கினாதிபதி அமர்ந்தால் அந்த நபர் நிறைய கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. உடல் நிலையில் அடிக்கடி தெம்பு குறைவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. உடலில் சக்தி இல்லாமல் கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அவர் நிறைய கஷ்டப்பட்டு அதில் இருந்து முன்னேற்றம் காண்பதற்க்கு வழி இருக்கின்றது. 

லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் இருக்கும்பொழுது அவர்க்கு ஆயுளும் குறைவாக இருக்கும். இளைமையில் திருமணமும் நடைபெறுதற்க்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இப்படிப்ட்டவர்கள் மயான கொள்ளைக்கு செல்லும் அம்மனை பார்த்து வணங்கினால் அவர்களுக்கு லக்கினாதிபதி வலுப்பெற்று நல்ல வாழ்க்கையை வாழமுடியும். 

உதாரணத்திற்க்கு மயானத்திற்க்கு செல்லும் அங்காளபரமேஸ்வரி மற்றம் சுடலை மாடன் போன்ற தெய்வங்களை உபாசாணை செய்வதன் வழியாக அவர்கள் நல்ல வாழ்க்கையை வாழமுடியும். நான் தெய்வத்தினை உபாசாணை செய்வது எல்லாம் முடியாத ஒன்று எனக்கு வேறு வழி இருந்தால் அதனைப்பற்றி சொல்லுங்கள் என்றால் அதற்கும் வழி இருக்கின்றது. 

உங்களின் ஊரில் அல்லது வெளியூரில் இறந்தவர்களுக்கு அதுவும் ஏழை மக்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு ஈமசடங்கு செய்வதற்க்கு உள்ள பணத்தை உதவியாக கொடுக்கலாம். நீங்கள் இறப்பிற்க்கு உதவி செய்வதன் வழியாக உங்களின் லக்கினாதிபதி பலப்பட்டு உங்களுக்கு நல்ல நிலையில் செயல்பட ஆரம்பிக்கும். பணஉதவி செய்யமுடியவில்லை என்றாலும் உங்களின் உடல் உழைப்பை இறப்பிற்க்கு போடும்பொழுது உங்களின் லக்கினாதிபதி பலம்பெறும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை போட்டு இருக்கிறேன். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

https://youtu.be/oQCmuHJSi04


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 12, 2020

மனை சாஸ்திரம்


வணக்கம்!
          ஒவ்வொருவரின் கனவு என்பது ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வீட்டை வாங்கவேண்டும் என்பதில் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வீட்டை வாங்கினாலோ அல்லது வீட்டை கட்டினாலோ அதில் பல வாஸ்து குறைகளை இந்த உலகம் சொல்லிவிடுகின்றது.

ஒரு வீட்டை கட்டும்பொழுது அதில் வாஸ்து குறைபாடு இருப்பது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. ஒரு வீடு கட்ட மனையை தேர்வு செய்யும்பொழுது மட்டுமே ஒருவர் மிகுந்த கவனத்தோடு செயல்படவேண்டும். மனையை நன்றாக பார்க்கும் ஒருவரை அழைத்து வந்து அந்த இடத்தை காண்பிக்கவேண்டும். மனையை தேர்ந்தெடுக்கும் நபர்கள் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் வாங்கும் மனையின் அருகில் இருக்கும் நபர்களிடம் அந்த மனையை பற்றி விசாரிக்கவேண்டும்.

ஒரு மனை அதன் காரத்துவத்தை நன்றாக வெளிப்படுத்தும். உதாரணத்திற்க்கு ஒரு மனையில் அதிகமாக பெண்கள் தான் வசிப்பது போல இருக்கும் ஒரு மனையில் ஆண்கள் வசிப்பது போன்ற நிலை இருக்கும். ஒரு சில மனையில் வம்பு வழக்கு ஏற்படும். ஒரு சில மனையில் கொலை கூட விழுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. இது அனைத்தும் அந்த மனையின் காரத்துவத்தை வெளிப்படுத்தும் செயல்.

மனையைப்பற்றி நிறைய தகவல்களை இன்றைய வீடியோவில் பேசியிருக்கின்றேன். அதனை கீழே உள்ள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

 சேனல் பெயர் rajeshsubbu


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 9, 2020

ஆலய தரிசனம்


வணக்கம்!
         சனிக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்றுருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பயணம் திட்டம் போட்டு விடியற்காலையில் கிழப்பினேன். திருச்செந்தூர் மதியம் 12 மணியளவில் சென்று அடைந்தேன். கடலில் குளித்துவிட்டு நாழி கிணற்றில் குளித்துவிட்டு மாலை தரிசனத்திற்க்கு சென்றேன். திருச்செந்தூர் கோவிலை பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

திருச்செந்தூர் முருகன் நல்ல சக்தி வாய்ந்த முருகன் அதனை வைத்து நம்ம மக்கள் சம்பாதிக்கும் வழி சுத்தமாகவே எனக்கு பிடிக்கவில்லை. எப்படி சென்றாலும் மக்களிடம் இருந்து எப்படி சம்பாதிக்கலாம் என்பதில் தான் கவனத்தை நிர்வாகம் திட்டம் தீட்டுகின்றனர். முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்றால் நீங்கள் பணம் இல்லாமல் அவ்வளவு எளிதில் பார்த்துவிடமுடியாது.

இங்கு சொல்லுவதற்க்கு காரணம் இதனை படிக்கும் யாராவது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் இருக்கலாம் அவர்கள் இதனை கருத்தில்கொண்டு வசூல் செய்வதில் கொஞ்சம் குறைக்கலாம். ஏதோ ஒரு வழியை மட்டும் வைத்து அதில் சம்பாதித்துக்கொள்ளலாம் மற்றயவை அப்படியே விட்டுவிட்டால் எளிதில் மக்கள் பார்ப்பார்கள். கோவிலில் கட்டணத்தை வைத்தாலும் அதிலும் நிறைய குளறுபடி இருக்கின்றது.

வெளியில் நின்றுக்கொண்டு நிறைய பேர் நீங்கள் எளிதில் தரிசனம் செய்யலாம் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று நிறைய பேர் கேட்கின்றார்கள். இதனை எல்லாம் தவிர்த்தால் நன்றாகவே இருக்குமே என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான கோவில்கள் எல்லாம் இருப்பது ஒன்றுமே இல்லாத மக்கள் இதனை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த காலத்தில் உருவாக்கின்றார்கள்.

நான் செல்லும் கோவில்களைப்பற்றி நான் வெளியில் சொல்லுவது உண்டு. என்னுடைய கண்ணிற்க்கு இது எல்லாம் தவறாகபட்டது அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டேன். திருநெல்வேலி வடி திருச்செந்தூர் சாலை படுமோசமான ஒரு சாலையாக இருக்கின்றது. இதனை சரி செய்யவும் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதனைப்பற்றி சொல்லுங்கள். உயர் அதிகாரிகள் நினைத்தால் இது நடக்கும். திருச்செந்தூர் சென்றததால் வீடியோ பதிவை போடமுடியவில்லை இன்று மாலை வீடியோ பதிவு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு