Followers

Tuesday, October 30, 2018

தீபாவளி போனஸ்


ணக்கம்!
          இந்து பண்டிகைகளை வைத்து செய்யும் வியாபாரம் இருக்கின்றதே அது மிக பெரிய வர்த்தகம் நடக்கின்றது. இந்துக்களை ஒருநாளும் அழிக்க விடாமாட்டான் வியாபாரம் செய்யும் முதலாளிகள். மற்றைய மதங்களில் உள்ள பண்டிகளை விட இந்துக்களின் பண்டிகைகளை வைத்து செய்யும் வியாபாரம் என்பது மிக பெரியது.

நம்ம ஆட்கள் கோவிலுக்குள் சென்றால் சும்மா செல்லமாட்டார்கள். நான் மட்டும் தான் சும்மா கோவிலுக்குள் செல்கிறேன். குறைந்தது இரண்டு ரூபாய் செலவு செய்து செருப்பை கூட விட்டு செல்வார்கள். ஏதோ ஒரு வகையில் வியாபாரம் நடக்கும். மற்ற மதங்களில் அப்படி இல்லை. 

தீபாவளிக்கு வேலை செய்யும் இடத்தில் போனஸ் கிடைக்கும். நம்மால் ஏதாவது ஒரு போனஸ் கொடுக்கலாம் என்று முடிவு செய்து இலவச சோதிடம் என்ற ஒன்றை தற்பொழுது இருந்து கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.  பணத்தை கொடுக்க முடியாது நம்மால் உங்களின் ஜாதகத்தை வைத்து அதற்கு ஆலோசனையை கொடுக்கலாம்.

இலவச சோதிட ஆலோசனைக்கு வரும் நண்பர்களுக்கு வேண்டுக்கோள் என்ன என்றால் உங்களின் ஜாதகத்தை மட்டும் வைத்து கேளுங்கள். ஊரில் உள்ள ஜாதகத்தை எல்லாம் வைத்து கேட்ககூடாது. என்னை போனில் தொடர்புக்கொண்டு உங்களின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம்.  போனில் மட்டும் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். மெயிலில் அனுப்பி அதற்கு பலனை நான் உங்களுக்கு சொல்லுவதில் மிகுந்த கடினமாக இருக்கின்றது. போனில் தொடர்புக்கொள்ளவும்.

தற்பொழுது எனக்கு நல்ல வேலைபளு இருக்கின்றது அதனையும் மீறி உங்களுக்கு தீபாவளி இலவச போனஸாக இதனை செய்கிறேன். அடுத்த மாதம் 3 தேதி வரை மட்டுமே இலவச சோதிட ஆலோசனை.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தோஷங்கள்


வணக்கம்!
          தோஷமே இல்லாத ஜாதகங்கள் இருக்கவே இருக்காது. ஏதோ ஒரு விதத்தில் தோஷங்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றன. தோஷங்கள் இருப்பதால் தான் மனிதன் இயங்கிக்கொண்டு இருக்கின்றான். இதனை அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

பலர் என்னுடைய ஜாதகத்தில் தோஷம் இல்லை எனக்கு பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். தோஷங்கள் இல்லை என்றால் பிரச்சினை எப்படி வந்தது. தோஷங்கள் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு அது பிரச்சினை கொடுக்கும்.

கணவன் மனைவிக்குள் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்றால் என்னிடம் சொல்லுங்கள் அதனை தீர்க்கலாம் என்று சொல்லிருந்தேன். இதற்கு பலர் அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். இது உங்களுக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் நீங்கள் என்னிடம் தொடர்பில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

யார் என்றே தெரியாமல் இதனை செய்துக்கொடுப்பது சரியில்லை என்று தோன்றுகிறது. பலர் வாட்ஸ்அப்பில் அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். என்னிடம் நல்ல தொடர்பை ஒருவர் வைத்திருந்தால் மட்டுமே இதற்கு அனுப்பவேண்டும்.

ஒவ்வொருவரும் என்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறேன். பலர் என்னை அடிக்கடி சந்தித்துக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை சந்திக்காமல் இருக்கும் நபர்களும் சந்தித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 29, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை அதனை தீர்ப்பதற்க்கு முதலில் ஒருவருக்கு பொறுமை என்பது வேண்டும். பொறுமைக்கு பிறகு தான் அனைத்தும் வேலை செய்யமுடியும்.

ஒருவருக்கு பிரச்சினை வருகின்றது என்றால் முதலில் அவர்களின் ஜாதகத்தில் உள்ள சிக்கல்களால் தான் வருகின்றது என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை களைந்து அதனை போக்கவேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை கண்டறிவது என்பது கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும். சோதிடர்கள் இதனை கண்டறிந்தால் கூட அதற்குள்ள சரியான வழியை சொல்லமாட்டார்கள்.

முதலில் ஒரு சோதிடர்களை நம்பி இன்றைய காலத்தில் மக்கள் செல்வது கொஞ்சம் கடினம் தான் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் எல்லாம் அரைகுறையாகவே வாழ்வார்கள். சரி இதனை விட்டுவிட்டு பார்க்கலாம்.

ஜாதகத்தில் தசா பலன் மற்றும் கோச்சாரபலன் இரண்டையும் கவனித்து என்ன தற்சமயம் பிரச்சினை கொடுக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். இதனை நாம் அறிந்துக்கொண்டு தீர்வை சொல்லிவிட்டாலே ஜாதகர் தப்பித்துவிடுவார்.

பெரும்பாலான ஜாதகர்களுக்கு கோச்சாரபலனே பெரியளவில் பிரச்சினையை கொடுத்துவிடுகின்றது. ஏன் என்றால் பலருக்கு தசாநாதன் ஒழுங்காக வேலை செய்வதில்லை. தசாநாதன் பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தால் அவர் தொடர்ச்சியான ஒரு தொல்லையை அனுபவித்துக்கொண்டு வருவார்.

கோச்சாரபலன் அந்தந்த காலக்கட்டங்களில் மட்டும் தொல்லை கொடுப்பதால் இதனை பெரியளவில் கண்டுக்கொள்ள தேவையில்லை. தசாநாதனை அதிகம் கவனித்து அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்யவேண்டும். இதனை செய்தாலே பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 28, 2018

தசா பலன்


வணக்கம்!
          ஒருவருக்கு ஒரு தசா ஆரம்பிக்கும் காலத்தில் நாம் சுயபுத்தி அதனால் அவர்க்கு கொஞ்சம் பிரச்சினையை கொடுத்து அதன் பிறகு வரும் புத்திகளின் காலக்கட்டத்தில் எல்லாம் நல்லது கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்கள். நானும் கூட அப்படி தான் பல இடங்களில் சொல்லிருக்கிறேன்.

ஒருவருக்கு ஒரு தசா நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டால் அந்த தசா ஆரம்ப காலங்களில் கூட அது நல்லதை தான் செய்யும். எதுவும் நல்லது நடக்கவில்லை என்றாலும் அவர்க்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருப்பார்.

அன்றைய நாள் அன்றைய பொழுது என்று நகர ஆரம்பித்து அதன் பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். ஒருவர்க்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக இருப்பது போல தசா ஆரம்ப காலக்கட்டங்களில் இருக்கவேண்டும்.

அமைதியாக இருந்த பிறகு தான் மனிதனுக்கு தேவையான செல்வ செழிப்பு எல்லாம் தேடி வரும். தசா ஆரம்பகாலக்கட்டத்தில் எல்லாம் பிரச்சினை வந்தால் அந்த தசா முழுவதும் பிரச்சினை வந்துக்கொண்டே தான் இருக்கும்.

ஒரு தசா உங்களுக்கு ஆரம்பகாலக்கட்டத்திலேயே சரியில்லை என்றால் ஒன்று அதனை சரி செய்வதற்க்கு என்ன வழி என்பதை யோசியுங்கள் அப்படி இல்லை என்றால் அந்த கிரகத்திற்க்குரிய வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 27, 2018

குரு தசா ஏற்படுத்தும் கடன்


வணக்கம்!
         நமது தளத்திற்க்கு வரும் பலர்க்கு குரு தசா நடக்கும். பலருக்கு குரு தசா முடியும் நிலையில் இருக்கும். குரு தசா நடக்கும் நண்பர்களுக்கு ஒரு அறிவுரை சொல்லுவது உண்டு. குரு தசா என்றாலே அது பணம் சம்பந்தப்பட்ட ஒரு தசாவாக தான் இருக்கின்றது. பலருக்கு குரு பணத்தை அள்ளிக்கொடுக்கின்றது. இதில் எந்தவித சந்தேகமும் வேண்டியதில்லை.

பணம் வருகின்றது என்று பலர் ஆடம்பர ஆட்டம் நிறைய போட்டுவிடுவார்கள். தற்சமயமும் சிலர் ஆடம்பர ஆட்டம் போட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். இந்த ஆடம்பர ஆட்டம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நின்றுவிடுகின்றது.

குரு தசா முடியும் தருவாயில் இருக்கும் நண்பர்களுக்கு அதிகபடியான கடன் சிக்கலை கொடுத்துவிடுகின்றது. கடனில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து வெளியில் வருவதற்க்கு நிறைய கஷ்டபடுகின்றனர்.

குரு தசா நடக்கும் நபர் பணம் உங்களுக்கு வந்தால் அந்த பணத்தை சேமிக்கும் வழியில் தான் முதல் கவனம் செலுத்தவேண்டும். பணம் தான் நமக்கு வருகின்றது நாம் இஷ்டத்திற்க்கு செலவு செய்யலாம் என்று மட்டும் நினைக்கவேண்டாம்.

குரு தசா கொடுப்பது எல்லாம் குரு தசாவிலேயே பிடிங்கி எடுத்துக்கொண்டு விடுகின்றது. குரு தசா நடக்கும் அனைவரும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கொண்டு வாருங்கள். கடன் இல்லா வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 26, 2018

கோச்சார தீயபலன்கள்


வணக்கம்!
          ஒருவருக்கு கோச்சாரபடி நடக்கும் கிரகங்கள் தீயபலனை தரும் என்ற நிலை வருகின்றது என்றால் மட்டும் கொஞ்சம் உஷாராக வேண்டும். கோச்சாரபடி தீயபலன் கொடுக்கின்றது என்றால் அதிக தீயபலன்களை கொடுத்துவிடுகின்றது.

கோச்சாரபலன்கள் குறைந்த காலம் என்பதாலும் அந்த குறைந்த காலத்தில் நிறைய தீயபலன்களை கொடுக்க வேண்டும் என்பதாலும் வைத்து செய்துவிடும். தீயபலன்கள் கொடுக்கும் நிலையை வைத்து நீங்கள் அந்த விசயத்தில் உஷாராக வேண்டும்.

லக்கனத்தில் தீயகிரகங்கள் வருகின்றது என்றால் உடல்நிலையில் கொஞ்சம் உஷாராக வேண்டும். லக்கனத்தில் தீயகிரகங்கள் என்றாலே அது உடல் சம்பந்தப்பட்ட விசயத்தில் தாக்குதல் நடத்தும்.

எட்டில் தீயகிரகங்கள் வந்தால் பெரும்பாலும் விபத்து சம்பந்தப்பட்ட விசயத்தில் கொஞ்சம் உஷாராக வேண்டும். ஐந்தில் தீயகிரகங்கள் வந்தால் குழந்தைகளுக்கு பிரச்சினையை கொடுக்கும் அதிலும் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும்.

உங்களின் இராசிபடி கோச்சார கிரகங்கள் எப்படி செல்கின்றன என்பதை பார்த்துக்கொண்டு அதற்கு தகுந்தமாதிரி நடந்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 25, 2018

கேது தசா


வணக்கம்!
          ஒருவருக்கு கேது தசா நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். நாம் உடனே கேது தசா கெடுதல் தசா அது கஷ்டத்தை தான் தரும் என்று சொல்லிவிடகூடாது. கேது தசா நல்லதும் தந்துக்கொண்டு தான் இருக்கும்.

கேது தசாவில் வேலையில் அவ்வப்பொழுது மாற்றத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு மாற்றம் என்பது வெளிநாடுகளுக்கு கூட சென்று வேலை செய்வது போல கேது தசா கொடுத்துவிடும்.

நான் பார்த்தவரையில் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கூட கேது தசா நடக்கும்பொழுது அந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்க்கு சென்று வேலை செய்வது போல செய்துவிடுகின்றது. குடும்பத்தைவிட்டு ஒரு சிறிய பிரிவை கேது தசா ஏற்படுத்திக்கொடுத்து இருக்கின்றது.

கேது தசா நடக்கும்பொழுது பொருளாதாரத்தில் எல்லாம் பின்தங்க வைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் பொருளாதார கஷ்டத்தை கொடுக்கின்றது. முக்கால்வாசி பேர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இராகு கேதுக்கு ஏழில் இருப்பதால் ஏதாவது ஒரு வகையில் பணத்தை கொடுக்கின்றது.

கேது தசா நடக்கும் நபர்களுக்கு நோய் வரும். உடலில் எந்த நோய் வந்திருக்கின்றது என்பதை சொல்லமுடியாது. ஒரு நாள் காலில் வலிப்பது பாேல இருக்கும் ஒரு நாள் தலையில் வலிக்கும். வலி என்பது மாறி மாறி வந்துக்கொண்டே இருக்கும்.

கேது தசா நடப்பவர்கள் மருத்துவர்களிடம் சென்றாலும் கூட சரியான வழி மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியாத ஒரு நிலை ஏற்படும். கேது தசா நடக்கும் அனைவருக்கும் வலி என்பது இருந்துக்கொண்டு தான் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 24, 2018

அனுபவம்


வணக்கம்!
          ஒவ்வொரு ஊரிலும் நான் சென்று வரும்பொழுது எல்லாம் ஒவ்வொரு அனுபவம் எனக்கு கிடைக்கும். நாம் ஆன்மீக பக்கம் சாய்ந்த பிறகு நாம் சென்று சேர்த்த அனுபவத்தை வைத்து தான் உங்களுக்கு ஜாதக கதம்பம் எழுதிக்கொண்டு வருகிறேன்.

இத்தனை நாளூம் நீங்கள் படித்துக்கொண்டே இருப்பதற்க்கு ஒவ்வொரு மனிதனின் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டு இருப்பதால் தான் தொடர்ந்து படிக்கின்றீர்கள். ஏதோ கதை மாதிரி எழுதியிருந்தால் ஒருவரும் இந்த பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள். 

இந்த காலத்தில் பிளாக் எழுதுகிறவர்களே குறைவு என்ற நிலையில் இருக்கின்றது. நமது ஜாதககதம்பத்தை மட்டும் தேடி தேடி நண்பர்கள் படிப்பதற்க்கு உண்மையை எழுதுவதால் தான் இது சாத்தியப்படுகின்றது. தொடர்ந்து படிப்பதற்க்கு உங்களுக்கு நன்றியை சொல்லி தான் ஆகவேண்டும்.

ஜாதகத்தை விட நம்முடைய ஆன்மீக வழியில் நமது மக்களுக்கு செய்யும் பணி என்பது அதிகமாக இருக்கின்றது. ஜாதகத்தில் இருந்து வரும் பிரச்சினையை உங்களுக்கு தீர்ப்பதற்க்கு நான் கற்ற ஆன்மீகம் தான் பெரியளவில் பயன்படுகின்றது.

நமது அம்மன் மற்றும் குருவின் ஆசியால் தான் இது சாத்தியப்பட்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு பதிவுகளில் உள்ள கருத்துக்களை உங்களின் வாழ்க்கைக்கு எடுத்து அதனை பயன்படுத்தி மேலே வருவதற்க்கு பார்க்கவேண்டும். ஏதோ வந்தோம் படித்தோம் என்று இருந்துவிடகூடாது. அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு எப்படி மேலே வருவது என்பதை மட்டும் யோசிக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 23, 2018

சுக்கிர தசா மற்றும் சூரிய தசா


வணக்கம்!
         ஒருவருக்கு சுக்கிரன் மற்றும் சூரியன் நான்காவது வீட்டில் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு சுக்கிர தசா நடக்கின்றது என்றால் அவர்க்கு நிறைய யோகம் வரும். சுக்கிர தசா அவர்க்க நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பார்.

சுக்கிரதசாவில் சுகமான வாழ்க்கை அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள். அவரை தேடி அனைத்து செல்வங்களும் வந்துக்கொண்டே இருக்கும். ஒரு இராஜ வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருப்பார்.

சுக்கிரன் மீனத்தில் இருந்தால் நல்ல யோகம் அவர்க்கு இருக்கும். மற்றைய இராசியில் இருந்தாலும் நல்ல யோகம் வரும் கொஞ்சம் பிரச்சினையும் கொடுக்கும். அதாவது நோய்களும் வந்துக்கொண்டு இருக்கும்.

இந்த ஜாதகருக்கு சுக்கிர தசா முடிந்து சூரிய தசா ஆரம்பித்தால் பெரும்பாலும் அவர்க்கு நல்லது நடக்காது. நிறைய நண்பர்களுக்கு நான் கவனித்து பார்த்து இருக்கிறேன். சுக்கிர தசாவில் நன்றாக இருந்தவர்கள் சூரிய தசாவில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு தசா முடிந்து அடுத்த தசா ஆரம்பித்தால் பிரச்சினை வரும் என்று சொல்லிவிடமுடியாது. ஏன் என்றால் பலர் மூன்று தசா கடந்தாலும் நன்றாக இருப்பார்கள். குறிப்பாக சூரியன் சுக்கிரன் சேர்ந்து இருக்கும் நபர்களுக்கு சுக்கிர தசா நன்றாக இருந்தால் சூரிய தசா நன்றாக இருக்காது.

உங்களுக்கு இது போல அமைந்து சூரிய தசா நடந்தால் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். சூரியனுக்குரிய பரிகாரத்தை செய்யுங்கள். ஞாயிற்றுகிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் சூரியனை சென்று வணங்கிவிட்டு வருவது நல்லது.

நாளை சென்னையில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்புபவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 22, 2018

குரு தசா


வணக்கம்!
          ஒருவருக்கு குரு தசா நடக்கின்றது என்றால் அவர்க்கு பணப்புழக்கம் கொஞ்சம் தாராளமாக தான் இருக்கும். ஏதோ ஒரு வழியில் பணவருகை என்பது நடந்துக்கொண்டே இருக்கும். குரு தசா நடந்தாலே அவர்கள் ஒரு கெத்தாக தான் இருப்பார்கள்.

குரு தசா நடந்தால் ஒரளவு வருமானம் இருக்கும் இதனை வைத்து பலர் என்ன செய்வார்கள் என்றால் பெரியளவில் பணம் வருவது போல பாவனை செய்வார்கள். ஒரளவு பணத்தை வைத்து பெரியளவில் பணம் இருக்கின்றது போலவே காட்டுவார்கள்.

நான் பார்த்தவரை நிறைய இடங்களில் இது இருக்கின்றது. அதாவது பணக்காரர்கள் என்பது போல காட்டிக்கொள்வார்கள். இதனால் என்ன நடக்க போகின்றது என்று கேட்கலாம். இவர்களிடம் சென்று நாம் ஏமாந்துவிடகூடாது என்பதற்க்காக தான் இதனை சொல்லுகிறேன்.

பணக்காரர்கள் என்று காட்டிக்கொண்டு ஏதாவது தொழில் செய்கிறேன் நீங்கள் இதற்கு பணமுதலீடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு உங்களிடம் உள்ள பணத்தை அபகரித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

குரு தசா பிறரை ஏமாற்றுமா என்று கேட்டால் பெரும்பாலும் இது நடக்கின்றது என்பதை சொல்லலாம். குரு தசா பிறரை ஏமாற்றியும் பிழைக்க வைக்கின்றது.பிறரை ஏமாற்றுகின்றது என்றால் அது பெரிளவில் நடைபெறுவதில்லை அங்கங்கே அவ்வப்பொழுது இது நடக்கின்றது.

விரைவில் சென்னையில் என்னை சந்திக்கலாம். சென்னையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 20, 2018

மூன்றாவது வீடு


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு பெரும்பாலும் இளம்வயது அதிகமாக கஷ்டங்களை அனுபவித்துக்கொள்வது போலவே இருக்கின்றது. இராகு கேது கிரகங்கள் இருந்தால் அது பித்ருதோஷம் என்றாலும் பிற தீயகிரகங்கள் இருந்தாலும் அது தோஷத்தை தான் தருகின்றது.

இளமையில் இருப்பவர்களுக்கு இந்த வீட்டின் தசா நடந்தால் பெரும்பாலும் அதிகமான கஷ்டங்களை அனுபவிப்பார்கள். முக்கியமாக அடுத்த வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து அதிக எதிர்ப்பு இவர்களுக்கு கிளம்பும்.

ஒரு சிலருக்கு திருமணவயதில் இந்த வீட்டின் தசா நடக்க ஆரம்பிக்கும். இந்த வீட்டின் தசா இளம்வயதில் ஆரம்பித்தால் அவர்களுக்கு திருமண ஏற்பாடு நடக்கவே நடக்காது. திருமணம் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுத்துவிடும்.

குழந்தை வயதில் ஒருவருக்கு இந்த தசா நடந்தால் அவரின் தாய்க்கு கருக்கலைப்பு அல்லது அந்த தாயிற்க்கு பிறந்த குழந்தை இறந்து பிறக்ககூடிய வாய்ப்பு இருக்கும். இவருக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கிரகம் இவரின் இளம் சகோத சகோதரிகளுக்கு பங்கம் விளைவிக்கும்.

மூன்றாவது வீட்டில் உள்ள கிரகங்கள் ஒரு சிலருக்கு நன்மையும் அளிக்கின்றது. பக்கத்துவீட்டில் உள்ளவர்கள் மற்றும் இளம் சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். அவர்களின் சொந்த ஜாதகத்தில் அமரும் வீட்டைப்பொறுத்து பலன் மாறுப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 19, 2018

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
          அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

நமது தளத்திற்க்கு வரும் ஒவ்வொருவருக்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கவேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். இந்த எண்ணத்தை பலருக்கு நிறைவேற்றியிருக்கிறேன். பலருக்கு தற்சமயம் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன்.

ஒருவரின் முன்னேற்றத்திற்க்கு முதல் எதிரியாக இருப்பது அவர்களின் குடும்பம் தான் என்று சொன்னால் அதனை நம்ப மாட்டேன் என்பீர்கள். உண்மையில் ஒவ்வொருவரின் குடும்ப சூழல் அவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில்லை என்று தான் சொல்லவேண்டும்.

குடும்பத்திற்க்குள்ளே நடைபெறும் தகராறு இந்த முன்னேற்றத்தை தடுக்கின்றது. ஒருவருக்கு பணத்தை வரவழைப்பது எளிமையான ஒன்று  ஆனால் அவர்களின் குடும்பத்தில் நடைபெறும் சண்டையை சமாதானம் செய்வதற்க்கே போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் தேவையை இல்லாமல் குடும்ப தலைவர்களின் மீது சண்டையை ஏற்படுத்த கூடாது. சண்டை இல்லாமல் இருந்தால் எப்பேர்பட்ட மோசமான குடும்ப தலைவனும் எளிதில் நல்ல வாழ்க்கையை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்.

ஒவ்வொரு குடும்பமும் முன்னேற்றத்தை நோக்கி செல்ல அதிகம் பெண்களுக்கு கடமை இருக்கின்றது ஆனால் அது சண்டை போட்டு தான் நடக்கவேண்டும் என்று இருக்ககூடாது. சமாதானமாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

ஜாதககதம்பத்தில் தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவு நடந்தால் உடனே எனக்கு தெரியப்படுத்துகள். மறுநாள் உங்களின் குடும்பத்தில் சண்டை இருக்காது. அம்மனின் அருளால் இது உங்களுக்கு நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 18, 2018

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
          அனைவருக்கும் இனிய சரஸ்வதி(ஆயுத)  பூஜை நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 17, 2018

தீபாவளி பரிகாரம்



வணக்கம்!
          இன்றைய நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு கோயம்புத்தூரை சேர்ந்த திரு இராஜ சுந்தரேஷன் அவர்களின் குடும்பத்தினர் காணிக்கை அனுப்பியுள்ளனர்.

ஒரு மனிதனுக்கு கிரக அடியில் இருந்து தப்பித்தாலும் மனிதனின் கண்அடியில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினமான ஒன்று. கண் அடியைப்பற்றி நிறைய பதிவுகளை ஏற்கனவே தந்துள்ளோம். இந்த கண் அடியை கொடுப்பது உங்களின் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள நபர்களால் தான் வருகின்றது.

கண் அடியை போக்க என்ன செய்யலாம் என்று நிறைய பதிவுகளை கொடுத்து இருக்கிறேன். இதனை போக்க உங்களின் அருகில் உள்ள நபர்களுக்கு நாம் கொடுக்ககூடிய பரிசுகள் மிகச்சிறந்த ஒரு பரிகாரமாக இருக்கும்.

பண்டிகை காலங்களில் இதனை செய்தால் உங்களைப்பற்றி அடுத்தவர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பண்டிகை காலங்களில் நாம் செய்யும் செயல் அடுத்தவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. உங்களின் மீது சந்தேகம் வராது.

தீபாவளி பண்டிகை வருகின்றது. உங்களால் முடிந்த துணிகள் அல்லது ஏதோ ஒரு புதிய பரிசுகளை வாங்கி அடுத்தவர்களுக்கு கொடுத்துவிட்டால் உங்களின் மீது அடுத்தவரின் கண் எரிச்சல் மற்றும் வயிற்று எரிச்சல் விழாது.

உங்களைப்பற்றி அருகில் இருக்கும் நபர்கள் இவன் நமக்கு நல்லது செய்கிறான். இவனைப்பற்றி பொறாமை படகூடாது என்று எண்ணி உங்களை வாழ்த்த ஆரம்பித்துவிடுவார்கள். ஏழைக்கு தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. உங்களுக்கு அருகில் இருக்கும் நபர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 16, 2018

ஆலய தரிசனம்


வணக்கம்!
          நேற்று மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோவில் பழமுதிர்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம் முடித்துவிட்டு வந்தேன். சொந்த விசயமாக சென்று தரிசனம் செய்த காரணத்தால் பதிவில் முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை. மதுரை நண்பர் இராமதுரையின் உதவியோடு இந்த கோவில்களை விரைவாக தரிசனம் செய்யமுடிந்தது.

ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை விட அங்குள்ள புண்ணிய நதியில் நீராடிவிட்டு வருவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனக்கு பிடிக்கின்றது என்றால் அது குரு கொடுத்த பாடம் என்பதால் அதனை நான் எங்கு சென்றாலும் செய்வது உண்டு.

நேற்றும் இராக்காயி கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடதான் சென்றேன். இராக்காயி அம்மன் கோவிலில் நன்றாக நீராடிவிட்டு தான் வந்தேன். புண்ணிய நதி புண்ணிய தீர்தத்தில் நீராடும்பொழுது நமது பாவங்களை போக்கி நமது ஆத்மா பலப்பெறும் என்பதால் இதனை செய்வது உண்டு.

நம்ம கோவில்களில் உள்ள குளங்களில் எல்லாம் நீராடுவதற்க்கு அனுமதியளிக்க வேண்டும். நமது காேவில் குளங்கள் அனைத்தும் இன்று எப்படி இருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும். அனைத்தையும் வீணாக போய்விட்டது.

நீங்கள் எல்லாம் முடிந்தவரை புண்ணியதீர்தத்தில் மற்றும் புண்ணியநதியில் நீராடுங்கள். உங்களின் ஆத்மாவின் தோஷங்கள் நீங்கி நல்ல வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 15, 2018

கிரகத்தின் பாதிப்பை கண்டுபிடிப்பது எப்படி?


வணக்கம்!
          ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் முதலில் அவர்க்கு அவரின் துணையார் இடம் இருந்து தான் முதல் எதிர்ப்பு வரும். நாம் அப்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம் ஏதோ கிரகங்கள் பிரச்சினை செய்கின்றது என்று புரிந்துவிடும்.

இன்றைக்கு பலருக்கு அப்படி தான் தினமும் இருக்கின்றது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. அனைவருக்கும் துணை தினமும் பிரச்சினை செய்கின்றது என்பது பொதுவாக இருந்தால் அதனை விட்டுவிட்டு உங்களின் உறவினர்கள் பிரச்சினை செய்கின்றார்களாக என்று கவனித்தால் போதும். 

துணைக்கு அடுத்தபடியாக உறவினர்கள் தான் பிரச்சினை கொடுப்பதில் அதிகமாக ஈடுபடுவார்கள். உறவினர்கள் பிரச்சினை கொடுத்தால் அதில் இருந்தும் நீங்கள் கண்டுக்கொள்ளலாம். இதனை மீறி நீங்கள் பிரச்சினையில் மாட்டுகின்றீர்கள் என்றால் அது உங்களின் கடன்காரர்களாக இருக்கும். கடன்பட்ட இடத்தில் இருந்து பிரச்சினை வரும்.

இதனை எல்லாம் புரிகின்றது இதில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று கேட்டால் உங்களின் ஆன்மீககுரு இதற்கு பதில் சொல்லவேண்டும். அவர் முடிந்த வரை இதனை எல்லாம் சரி செய்துக்கொடுப்பார்.

நீங்களே இதனை சரி செய்யவேண்டும் என்றால் முதலில் அமைதியாக இருப்பதற்க்கு என்ன வழி என்று கண்டுபிடியுங்கள் அதன் பிறகு உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்திடம் முறையிடலாம். 

உங்களின் ஜாதகத்தில் பிரச்சினை எங்கிருந்து வருகின்றது என்பதை அறிந்து அந்த கிரகத்திற்க்குரிய வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். தொடர்ந்து பிரச்சினையாக இருந்தால் பரிகாரம் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 14, 2018

நல்லவர் கெட்டவர் கிரகங்கள் பார்க்காது


வணக்கம்!
          இன்று நவராத்திரி யாகம் பொதுவாகவே நடைபெற்றது. பொதுகாணிக்கை வழியாக அனைவரும் நலனுக்காக செய்யப்பட்டது.

நான் நல்லவன் எனக்கு மட்டும் கஷ்டம் வருகின்றது என்று சொல்லுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். நல்லவன் கெட்டவன் என்று பார்த்து கஷ்டம் வருவதில்லை அனைவருக்கும் வந்துக்கொண்டு தான் இருக்கின்றது. இதனைப்பற்றி ஏற்கனவே பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

பொதுவாக ஒவ்வொரு ஜாதகத்திலும் நிறைய தோஷங்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது. இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு அனைத்தையும் வெற்றி பெற்று தான் வரவேண்டும். 

ஒருவர் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தால் அடுத்த தலைமுறைக்கு அது பெரிய வாய்ப்பாக அமைந்து நன்றாக வாழ்வார்கள். இது அனைவருக்கும் பொறுத்தமாக இருக்கும். ஒரு சிலர் நல்ல திறமையோடு இருந்து அனைத்தையும் வெற்றிபெற்று அவர்களின் காலத்திலேயே நல்ல வாழ்க்கைக்கு வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

பெரும்பாலும் நமது வாடிக்கையாளர்களின் வாரிசுகளுக்கு நல்லதை தான் அதிகமாக நானே செய்கிறேன். வாடிக்கையாளர்களின் வாரிசுகளுக்கு என்ன என்ன செய்கின்றீர்கள் அவர்களின் தற்பொழுது நிலை என்ன என்பதைப்பற்றி தான் அதிகமாக கேட்டுக்கொண்டு இருப்பேன்.

நீங்கள் நல்லவர் கெட்டவர் என்பதை எல்லாம் கவனிக்காமல் விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்பதைப்பற்றி யோசியுங்கள். அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 13, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
                      இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.                     






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.   
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.   
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.     

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள். 
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.     
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.       

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.   
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.   
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள். 

வழக்கம்போல்     
                                                                  திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். இன்று அம்மன் பூஜை நடைபெறுவதால் அனைத்து நண்பர்களும் அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 12, 2018

பூர்வபுண்ணியாதிபதி


வணக்கம்!
          இன்றைய நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தியவர் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

பூர்வபுண்ணியத்தை விட்டுவிட்டு வேறு இடத்திற்க்கு இன்றைய மனிதர்கள் அதிகம் பேர் இடம்பெயர்கின்றனர். குருவின் பலன் இல்லாமல் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியின் அருள் இல்லாமல் இருப்பதால் தான் இடம் பெயரும் வேலைகள் எல்லாம் நடக்கின்றது.

இன்றைய உலகத்தில் அதிகமாக இராகுவின் காரத்துவம் வேலை செய்வதால் நிறைய பேர்கள் பணத்தின் தேவை அறிந்தும் இடம் பெயர்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ இராகுவின் பிடியில் பலர் சென்றுவிட்டதால் தான் இது நடக்கின்றது.

ஒருவருக்கு பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் அவர் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் சொந்த ஊருக்கு சென்று வாழ்வதை அதிகம் விரும்புவார். பூர்வபுண்ணியாதிபதி அவர்க்கு அந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பார்.

வெளிநாட்டை விட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டால் அவரால் பிழைக்கமுடியாத என்று கேட்கலாம். கண்டிப்பாக அவர்க்கு அனைத்து வசதியையும் அந்த பூர்வபுண்ணியாதிபதியே ஏற்படுத்திக்கொடுப்பார். 

பூர்வபுண்ணியாதிபதியின் அருளால் அதிகமான செல்வவாக்கு மற்றும் அவர்க்கு நல்ல பெயரும் கிடைக்கும். இதனை அனுபவித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 11, 2018

மனம் என்ற வாழ்க்கை


வணக்கம்!
          இன்றைய நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தியவர் சென்னையை சேர்ந்த பாரதி குடும்பத்தினர்.

நம்முடைய மனம் நன்றாக இருந்தால் நமக்கு நடப்பது அனைத்தும் நன்றாகவே நடக்கும். நம்முடைய மனது சரியில்லை என்றால் நமக்கு நடப்பது அனைத்தும் தவறாகவே நடக்க ஆரம்பித்துவிடும். மனம் போல வாழ்வு இருக்கும்.

நம்முடைய மனது நன்றாக இருப்பதற்க்கு நமது ஜாதகத்தில் சுபக்கிரகங்களின் பலம் அதிகமாக இருக்கவேண்டும். சந்திரனும் நல்ல நிலையில் இருக்கும்பொழுது நமது மனது தேவையற்றை பற்றி எண்ணாமல் தேவைப்படுகின்ற நல்ல விசயத்தை எடுத்துக்கொண்டே செல்லும்.

நம்முடைய ஜாதகத்தில் தீயகிரகங்கள் வலுப்பெற்றால் அல்லது தீயகிரகங்களின் தசா நடந்தால் நம்முடைய மனது தீயவழியில் போய்விடும். நம்முடைய சிந்தனை அனைத்தும் தீமையான வழியிலேயே உருவாகும்.

யோகா தியானம் வகுப்புகள் எல்லாம் பிரபலமாக இன்று இருப்பதற்க்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. மனதை சரிசெய்யும் பொழுது அனைத்தும் நல்லதாகவே நடக்க ஆரம்பித்துவிடுவதால் அதற்கு மவுசு அதிகமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 10, 2018

செல்வ வாழ்க்கைக்கு அடித்தளம்


வணக்கம்!
          இன்று நவராத்திரி யாகம் ஆரம்பம் ஆகின்றது. இன்று நடைபெறும் யாகத்திற்க்கு வெளிநாட்டில் உள்ள ஒருவர் காணிக்கை செலுத்தியுள்ளார். பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்பதால் அவரைப்பற்றி வெளியிடவில்லை.

ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் தோஷத்தை அந்த வீட்டில் உள்ளவர்கள் போக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் யாராவது ஒரு நபராவது இதற்கு வழியே தேடிக்கொடுக்கவேண்டும். அனைவரும் ஆன்மீகத்தில் சென்றால் நல்லது ஆனால் எந்த குடும்பத்திலும் அப்படி இருக்காது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் இதற்காக முயற்சி எடுத்து ஆன்மீகத்தில் செல்லவேண்டும். இவர் ஆன்மீகத்தில் செல்வதால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பேச தான் செய்வார்கள். யார் எது பேசினாலும் விடாமல் அவர் இந்த முயற்சியை செய்து வந்தால் கண்டிப்பாக அந்த குடும்பம் ஒரு காலக்கட்டத்தில் சிறந்து விளங்கும்.

ஒருவரும் முயற்சி எடுக்காமல் இருக்கும்பொழுது தான் அந்த குடும்பம் வீணாக சென்றுவிடுகின்றது. குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த ஆன்மீக முயற்சியை எடுப்பார்கள். ஒரு சில குடும்பத்தில் பெண்கள் எதனையும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவதால் பிரச்சினை ஏற்படுகின்றது.

ஒருவர் ஆன்மீக முயற்சி எடுத்து எனக்கு உடனே பலன் கிடைக்கவில்லை என்று சென்றுவிடகூடாது. உங்களின் வாரிசுகள் ஒரு மிகச்சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ நீங்கள் வழி ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

நான் பார்த்த பல செல்வந்தர்களின் குடும்பங்களில் இப்படிப்பட்ட நபர்கள் யாராவது ஒருவர் இருக்கின்றனர். அவர்கள் செய்த நல்ல செயல் இன்று செல்வந்தர்களாக இருப்பதற்க்கு காரணமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 9, 2018

நவராத்திரி


வணக்கம்!
          வெயில் காட்ட தொடங்கிவிட்டது ஒரு இரு நாட்களில் அம்மன் பூஜையை நடத்திவிடலாம். நவராத்திரி யாகம் நாளை முதல் ஆரம்பம் ஆகின்றது. இதுவரை நான் யாகத்தில் கலந்துக்கொள்கிறேன் என்று சொன்னவர்கள் கட்டணத்தை செலுத்தி வையுங்கள்.

கடந்த வருடத்தில் செய்த நபர்கள் மூன்று பேர் இந்த வருடத்தில் செய்யவில்லை. நானே அவர்களை இந்த வருடம் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர்களின் வீட்டில் விஷேசம் இருப்பதால் செய்யவேண்டாம் என்று சொல்லிருக்கிறேன். அவர்கள் செய்த நாட்கள் எல்லாம் இதுவரை புக் செய்யவில்லை பிறர் அந்த நாட்களை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நவராத்திரி என்று இல்லாமல் நமது நண்பர்கள் தனியாக பணம் அனுப்பி இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிருக்கின்றனர். பணம் என்பது கடினம் இல்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு என்று ஒதுக்கியதால் தான் உங்களிடம் மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டே இருக்கிறேன். புக்கிங் செய்த நாட்களில் யாருக்கு யாருக்கு செய்கிறோம் என்பதை அவர்களின் ஊர்களின் பெயரை மட்டும் பதிவில் போட இருக்கிறேன்.

ஒவ்வொருவரும் நவராத்திரி நாட்களில் நிறைய கோவிலுக்கு சென்று வாருங்கள். உங்களின் வீட்டில் விஷேசமாக இருந்தாலும் இப்படிப்பட்ட நாட்களில் கோவிலுக்கு சென்று வருவது நன்றாக இருக்கும்.

நவராத்திரி நாட்களில் இருவேளையிலும் மற்றும் உங்களின் வசதிகேற்ப கோவிலுக்கு சென்று வரலாம். ஒரு சில கோவில்கள் நவராத்திரி நாட்களில் தான் திறந்து கூட வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட கோவில்களை தரிசிப்பது நல்லது என்பதால் தேடிச்சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 8, 2018

அமாவாசை


வணக்கம்!
          பிற மதங்களில் இல்லாத ஒன்று இந்த மதத்தில் மட்டும் அதிகமாக இருக்கின்றது என்றால் அதற்க்கு காரணமாக இருப்பது நமது கடமையை முடித்துக்கொண்டு இத்தோடு சென்றுவிடவேண்டும் என்பதற்க்காகவே அதிகமாக விஷேசநாட்களை வைத்திருக்கின்றனர்.

என்ன பொறுத்தவரை மிக அதிகமான செல்வாக்கு செல்வவளத்தை படைத்தவர்களாகவே நமது முன்னோர்கள் இருந்து இருக்கவேண்டும். இத்தனை விஷேசங்களையும் மகிழ்ச்சியோடு கொண்டாடி அதனை அனுபவித்துவிட்டு மோட்சத்திற்க்கு செல்லவேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டு இருக்கும்.

பணத்தை மட்டும் சொல்லுவதற்க்காக சொல்லவில்லை. ஒருவர் அனைத்து விஷேசம் மற்றும் விரத்ததை எல்லாம் செய்யவேண்டும் என்றால் ஒருவர் சும்மா இருந்தால் தான் இது எல்லாம் செய்யமுடியும். அதிக பொருளாதார வளம் இருக்கும்பொழுது மட்டுமே இதனை செய்யமுடியும். பொருளாதார வளம் இருந்த காரணத்தால் அனைத்தையும் செய்துக்கொண்டு சென்று இருக்கின்றனர்.

இன்றைய காலத்தில் இதனை செய்வதற்க்கு பலருக்கு கடினமாக இருக்கின்றது. வேலை பளு மற்றும் இன்றைய சூழ்நிலையில் கடினமாக இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் உங்களால் முடிந்தளவுக்கு இதனை எல்லாம் செய்யுங்கள்.

அமாவாசை விரதம் இருக்கமுடியாமல் இருந்தாலும் வீட்டிற்க்கு சென்றவுடன் ஒரு தீபம் ஏற்றி மனதார உங்களின் முன்னோர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் அதுவே உங்களை பெரியளவில் காப்பாற்றும். உங்களையும் கரை சேர்க்க உதவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 7, 2018

சந்திராஷ்டமம்


வணக்கம்!
          குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி போன்ற கிரகபெயர்ச்சிகளை எல்லாம் விட ஒரு மனிதனுக்கு வரும் சந்திராஷ்டமம் மிக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திக்கொடுத்துவிடும். சந்திராஷ்டமும் அன்று ஒருவர் துன்படுவதை விட வேறு பெயர்ச்சிகளில் எல்லாம் அந்தளவுக்கு துன்படுவதில்லை.

சந்திராஷ்டமும் அன்று எப்படியாவது ஒரு பிரச்சினையை ஒருவருக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே இருக்காது. மிக துல்லியாக நடக்கும் பலன்களில் சந்திராஷ்டமத்திற்க்கு ஈடு இணை இல்லை என்று சொல்லலாம்.

சந்திராஷ்டமும் நடைபெறும் நாளில் ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் மனகுழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தையாவது ஏற்படுத்திக்கொடுத்துவிடும். வீட்டில் உள்ளவர்கள் கூட சம்பந்தமே இல்லாமல் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு சில சந்திராஷ்டமம் நடைபெறும் நாளில் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றும். ஒரு சில மாதங்களில் மிகப்பெரிய அளவில் நன்மையும் நடத்திக்கொடுக்கின்றது. ஒரு சிலருக்கு அந்த நாளில் ஏதாவது ஒரு செலவை மட்டும் கொடுத்துக்கொண்டு விலகிவிடுகின்றது.

சந்திராஷ்டமம் அன்று எந்த காரியத்தையும் செய்யாமல் வீட்டில் கொஞ்சம் அமைதியாக இருப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலனை அன்று கொடுக்கும். ஒரு சிலர் விநாயகர் வழிபாட்டை சொல்லுவார்கள் அதனைவிட ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை பயக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 6, 2018

தொழில் முடக்கம் பரிகாரம்


வணக்கம்!
        தொடர் மழைக்காரணமாக அம்மன் பூஜை நடத்தமுடியாமல் இருக்கின்றது. மழைவிட்டவுடன் உடனே அம்மன் பூஜையை நடத்திவிடுவேன். நவராத்திரி யாகத்திற்க்கு கலந்துக்கொள்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

நமது தொழிலில் தேக்க நிலை அல்லது தொழில் முடங்கி போவது போன்ற நிலை உங்களுக்கு உருவாகினால் நீங்கள் உடனே ஒரு ஆன்மீகவாதியை சந்திக்கவேண்டும். ஆன்மீகவாதியை சும்மா சந்தித்து வந்தாலே போதும் அது உங்களுக்கு மறுபடியும் தொடங்கி நடக்க ஆரம்பிக்கும்.

சக்தி படைத்தவர்களிடம் செல்லும்பொழுது நமது தேக்க நிலை அவர்களின் சக்தியால் விலகி போய்விடும். இதனை அனைவரும் செய்ய வேண்டும். ஒரு தொழில் முடக்கம் அல்லது வாழ்க்கையில் ஏதோ ஒன்று தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது என்றால் கண்டிப்பாக அது உங்களுக்கு ஏதோ ஒரு கர்மா தாக்குகின்றது என்பதால் தான் நடக்கின்றது.

பலர் கோவிலுக்கு சென்று வருவார்கள். கோவிலுக்கு சென்று வருவதைவிட சக்தி படைத்தவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தும்பொழுது அது உடனே நமக்கு நடக்க ஆரம்பித்துவிடும். கோவிலை விட மனிதர்களிடம் இருக்கும் சக்தி ஒரு சில இடங்களில் அதிகமாக இருக்கின்றது.

ஜாதககதம்பத்தில் பழைய பதிவில் கூட சொல்லிருக்கிறேன். தொழில் முடக்கத்திற்க்கு நீங்கள் விரும்பும் ஒரு இடத்திற்க்கு சென்று வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். உங்களுக்கு இதுவும் நன்மையை தரும். ஒரு சிலருக்கு மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்தாலே சரியாகும். மனநல மருத்துவராக பார்த்து சென்று வந்தால் மிகவும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 5, 2018

விரைய தசா பரிகாரம்


வணக்கம்!
          நவராத்திரி தொடங்க இருப்பதால் நவராத்திரி அம்மன் யாகத்தை செய்ய விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். ஒவ்வொருவரும் வந்து இதனை செய்கிறேன் என்று சொல்லிருக்கின்றனர். ஒரு சில நாட்கள் புக்கிங் இல்லாமல் இருக்கின்றது. அதுவும் விரைவில் புக்கிங் ஆகும் என்று நம்புகிறேன். உடனே தொடர்புக்கொள்ளவும்.

ஒருவருக்கு பனிரெண்டாவது வீட்டை தொடர்புக்கொண்டு ஒரு தசா நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பனிரெண்டாவது வீட்டில் அமராமல் அந்த வீட்டோடு ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

இவர்களை உடல்நிலை இல்லை என்றாலும் இவர்களின் உறவுக்காரர்களுக்காக அடிக்கடி மருத்துவமனை சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்களை பார்ப்பதற்க்காகவும் மருத்துவமனை சென்று வரும் வாய்ப்பு உருவாகும்.

உறவினர்கள் தான் இவர்களை நாம் பார்க்கவேண்டாம் என்று இருந்துவிடகூடாது. இவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்ப்பதால் உங்களுக்கு நடக்கும் தீயபலன்களின் வீரியம் குறைந்துவிடும்.

நாம் சேர்வது கூட கொஞ்சம் உஷாராக தான் சேரவேண்டும். நம்மளோடு சேரும் நபர்களுக்கு எப்படிப்பட்ட தசா நடக்கின்றது என்பதை அறிந்துக்கொண்டு சேர்ந்தால் நாம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

பலருக்கு அவர்களின் நண்பர்கள் என்ன இராசி என்பதை கூட தெரியாமல் வைத்திருக்கின்றனர். இராசியை வைத்துக்கூட அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். இராசியை எல்லாம் கேட்டுக்கொண்டு பழகமுடியுமா என்று கேட்கலாம். உங்களின் பாதுகாப்புக்கு இது தேவைப்படும் என்பதால் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 4, 2018

பாவங்களை போக்கும் பரிகாரம்


வணக்கம்!
          தற்பொழுது மழை எல்லாம் இடங்களிலும் பெய்கின்றது. இதனை வைத்து நமது பாவங்களை போக்கும் ஒரு பரிகாரத்தை மட்டும் செய்துக்கொள்ளுங்கள். இது கொஞ்சம் எளிமையாக இருக்கும் ஆனால் அதனை செய்வதற்க்கு கடினமாக இருக்கும்.

கோவில்களில் தலவிருட்சத்திற்க்கு அதிக மதிப்பு இருக்கின்றது. இது எதனால் என்றால் அந்த காலத்தில் மரங்களை வைத்து அதில் தெய்வங்களை ஆவகனம் செய்து வழிபட்டு வந்தார்கள் அதன்பிறகு தான் சிலை வழிபாடு எல்லாம் வந்தன.

இன்றைக்கும் இந்த மரங்களுக்கு அதிக சக்தியோடு இருக்கின்றது. இதனை எல்லாம் நன்றாக உற்று நோக்கினால் இதில் இருக்கும் உண்மை உங்களுக்கு எளிதில் புரியும். இன்றும் நீங்கள் கோவிலுக்கு சென்றால் தலவிருட்சத்தை வணங்கிவிட்டு தான் வருகின்றீர்கள்.

நாட்டில் பல இடங்களின் மரம் நடுவதை ஒரு விழாவாகவே நடத்திக்கொண்டு இருப்பார்கள். விழாவோடு சரி அதன்பிறகு ஒன்றும் அதனை கவனிப்பது இல்லை என்று நினைக்கிறேன். சரி அதனை விடுங்கள் நாம் செய்ய வேண்டியதை பார்க்கலாம்.

மழைக்காலங்களில் உங்களால் ஒரு மர செடியை ஏதோ ஒரு இடத்தில் வாங்கி நட்டுவிடுங்கள். இது எதிர்காலத்தில் நமது சந்ததினர்களுக்கும் உதவும் உங்களின் பாவங்களும் போகும். மரசெடியை நட்டு அதனை வளர்த்தால் மிகப்பெரிய புண்ணியம். 

மரசெடி எல்லாம் என்னால் நட்டு பராமரிக்கமுடியாது என்று சொல்லுபவர்கள் நவதானிய விதைகளை வாங்கி காடு பக்கம் அல்லது நீங்கள் செல்லும் சமவெளியில் கூட தெளித்துவிடுங்கள். இது மழைக்காலங்களில் செய்யும்பொழுது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 3, 2018

பச்சைப்பரப்புதல்


ணக்கம்!
         நவராத்திரி அம்மன் ஹோமத்திற்க்கு கலந்துக்கொள்பவர்கள் தொடர்புக்கொள்ளவும். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி அம்மன் ஹோமம் சிறப்பாக நடைபெறுகின்றது. தங்களின் பங்களிப்பால் இது சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த வருடமும் சிறப்பாக நடைபெற பங்குக்கொள்ளுங்கள்.

உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு செய்யவேண்டிய பூஜைகளை செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு மாதம் அல்லது ஒவ்வொரு மூன்று மாதத்திற்க்கும் ஒரு முறை பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள். குறைந்தது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை செய்தால் நல்லது அதனை விட மாதந்தோறும் செய்வது சிறப்பு.

பச்சைப்பரப்புதலை பற்றி நிறைய பதிவுகளை ஜாதக கதம்பத்தில் கொடுத்து இருக்கிறேன். புதியவர்கள் அதனை தேடி படித்து தெரிந்துக்கொண்டு அதன்படி செய்யுங்கள். பச்சைப்பரப்புதலை செய்வதற்க்கு இந்த நாள் என்று பார்க்க தேவையில்லை. உங்களின் குலதெய்வத்திற்க்கு ஏற்ற நாள் அல்லது எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை. 

நாள் பார்த்து செய்யவேண்டும் என்பதில்லை. உங்களின் விருப்பம் போல இதனை செய்துக்கொள்ளலாம். சனிக்கிழமை கூட இதனை செய்யலாம். பலர் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களை தேர்ந்தெடுத்து செய்கின்றனர். உங்களுக்கு இந்த நாளில் தான் செய்ய வேண்டும் என்று விருப்பட்டால் செய்யலாம்.

பலருக்கு இது நல்ல பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. பலர் தொடர்ச்சியாக இதனை செய்து வருகின்றனர். மிக குறைந்த செலவு தான் ஆகும். அனைவரும் இதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு