Followers

Friday, January 31, 2020

கட்டண பதிவு இனிய தாெடக்கம்.


வணக்கம்!
          நம்முடைய கட்டண பதிவு இன்று முதல் செயல்பட துவங்கியது. கட்டண பதிவில் கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இணைப்பை வழங்கி இருக்கிறேன். அனைவரும் அதனை பெற்று படிக்க ஆரம்பியுங்கள். ஒவ்வொருவரையும் இன்று நான் தொடர்புக்கொள்கிறேன் எப்படி அதனை திறந்து படிக்கவேண்டும் என்பதை தொடர்புக்கொண்டு சொல்கிறேன். புதியதாக இணைய விரும்பும் நபர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

கட்டணபதிவில் இருந்து வரும் கட்டணம் என்னுடைய செலவிற்க்கு போக மீதியை அம்மன் கோவில் கட்டும் பணிக்கு ஒதுக்க இருக்கிறேன் அதனால் அனைவரும் இதில் இணைந்துக்கொள்ளுங்கள். நாம் கொடுக்ககூடிய பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும் விதத்தில் இருக்கும் நம்பிக்கையோடு கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

தைபூசத்திற்க்கு என்று அன்னதானம் செய்ய சொல்லிருந்தேன் அனைவரும் அதற்கான ஏற்பாட்டை செய்து இருக்கின்றீர்களா முடிந்தவரை நல்ல முயற்சி எடுத்து அதனை செய்யுங்கள். ஏதோ ஒரு நபர்க்காவது அதனை செய்யவேண்டும் என்று நினையுங்கள்.

முருகனின் தைபூசத்திற்க்கு என்று நீங்கள் அன்னதானம் செய்யும்பொழுது உங்களின் குடும்பம் தழைத்து செம்மையாக வளரும். வாரிசுகள் உங்களுக்கு உருவாகி உங்களின் வாழ்க்கையை சிறக்க வைக்க உதவும் தை பூசம் என்பதால் இதனை செய்யலாம். உங்களுக்கு முடிந்தால் பழனி சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 30, 2020

ஆன்மசக்தியை அதிகரிப்பது எப்படி?


வணக்கம்!
          ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருக்கும் நபர் எப்பொழுதும் எதையாவது நினைத்து கொண்டு சிந்தித்துக்கொண்டே இருக்கமாட்டார். சரியான நேரத்தில் சரியான படி சிந்திப்பார் மற்றபடி அமைதியாக இருந்துவிடுவார். இது தான் சக்தியை மேம்படுத்தி தன்வசம் வைத்துக்கொள்வது என்பது ஆகும். 

நீங்கள் அனைவரும் நல்ல ஆன்மீகவாதியாக இருப்பதற்க்கு முதல் முயற்சி எப்படி இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த நேரமும் எதையாவது சிந்திக்க வேண்டாம். அதே போல சிந்திக்காமல் செல்போனை பார்த்துக்கொண்டே இருப்பதும் தவறான ஒன்றாகவே இருக்கும். 

மனதின் தெம்பு குறைய ஆரம்பித்துவிடும். நாம் பார்த்த நமது தளத்தில் இருந்து வந்த ஆன்மீகவாதிகள் அனைவரும் கொஞ்ச நேரம் கிடைத்தால் செல்போனை எடுத்துக்கொண்டு யாரிடமாவது பேசிக்கொண்டு இருப்பதை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

பிறரிடம் பேசுவது தவறு இல்லை ஏதோ ஒரு நேரத்தில் பேசுங்கள் மற்ற நேரத்தில் அமைதியாக உங்களின் சக்தியை அதிகரிக்க வேண்டிய வேலையை செய்ய வேண்டும். ஒரு நாள் என்பதில் போன் பேசுவதற்க்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும் மற்றபடி சிந்தனை இல்லாமல் இருந்தால் நல்லது. உங்களுக்கு ஒரு வேலை வரும்பொழுது அந்த நேரத்தில் அதனை ஈடுபட்டால் விரைவில் அது நடைபெறுவதற்க்கு மேலே சொன்னதை கடைபிடிக்கவேண்டும்.

ஆன்மசக்தி நன்றாக இருக்கவேண்டும் என்றால் நம்முடைய சிந்தனையை மிகச்சரியாக பயன்படுத்தவேண்டும். இந்த யுக்தியை நீங்கள் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டால் எந்த கோவிலுக்கும் செல்லாமல் உங்களின் சக்தி அதிகரிப்பதை நீங்களே கண்டுக்கொள்ளமுடியும். குறிப்பிட்ட காலத்திலேயே அது உங்களுக்கு கை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 28, 2020

முன்கூட்டியே அறிவது எப்படி?


வணக்கம்!
          நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே அறிவதற்க்கு சோதிடம் பயன்பட்டாலும் அதனை விட ஆன்மீகத்தின் வழியாக நமக்கு தெரிவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றதா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பிருந்தார். கண்டிப்பாக ஆன்மீகத்தின் வழியாக இதற்கு வழி இருக்கின்றது.

ஒரு நபர் தினமும் குறைந்தது ஐந்து நிமிடம் ஒதுக்கி பூஜையறையில் சாமி கும்பிட்டாலே போதும் அவர்களுக்கு நடைபெறும் அனைத்து நல்லது மற்றும் கெட்டதை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. இதன் கூட கொஞ்சம் அமைதியான குணம் தேவை. இயற்கையாகவே அனைத்தும் நமக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கும்.

ஒரு காரியத்திற்க்கு நீங்கள் செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் கிளம்பும்பொழுது உங்களின் வீட்டில்  ஏதோ ஒன்று உங்களிடம் காட்டும். பல்லி இருந்தால் அதன் நிமித்தம் அடிக்கும். தினமும் அதனை கவனிக்கும்பொழுது எது நல்ல நிமித்தம் எது கெட்ட நிமித்தம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும்பொழுது எதிரே வரும் நபரை வைத்தும் நீங்கள் கண்டுக்கொள்ளலாம்.

பரப்பரப்பான வாழ்க்கையில் இது எல்லாம் சாத்தியமா என்று கேட்டால் கண்டிப்பாக இது எல்லாம் சாத்தியமே. அதனை விட உங்களின் மனது அதற்கு சரியாக ஒத்துழைக்கின்றதா என்பதை வைத்தும் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். நன்றாக நீங்கள் பிரபஞ்சத்தோடு ஒன்றிணையும்பொழுது உங்களுக்குள் அனைத்தையும் முன்கூட்டியே சொல்லிவிடும்.

நம்முடைய மனம் பெரிய அளவில் சஞ்சலத்திலேயே இருப்பதால் எதனையும் நமக்கு தெரியாமல் போய்விடுகின்றது. மிக கடுமையான பிரச்சினை வரும்பொழுது கூட நமக்கு தெரிகின்றது அதனை விட மரண வருவதையும் ஒரு சில நிகழ்வுகளை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 27, 2020

ஆன்மீகம்


வணக்கம்!
         சராசரி மனிதனை விட ஒரு ஆன்மீகவாதிக்கு பிரச்சினையும் அதிகமாக வரும் அதே நேரத்தில் அதனை சமாளிக்கும் திறமையும் அதிகமாகவே வரும். ஆன்மீகத்தில் நான் இருக்கிறேன் எனக்கு பிரச்சினை என்பது வரவே வராது என்ற நிலைபாட்டில் இருக்கமுடியாது. சராசரி மனிதனை விட அதிகமாகவே பிரச்சினை சந்திக்க நேரிடும்.

ஆன்மீகத்தில் இருப்பதற்க்கு நான் சும்மாகவே இருந்துவிடலாமே என்று கேட்கலாம். ஆன்மீகத்தில் நிறைய பிரச்சினை என்பது வந்தாலும் சாதிக்ககூடிய நிறைய ஆற்றலை கொடுத்துவிடும். நிறைய சாதிக்கமுடியும். சாதரணமானவர்கள் ஒரு காரியத்தை சாதித்தால் ஆன்மீகவாதிகள் பத்து காரியத்தை சாதித்துவிடுவார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்களை நோக்கியே நிறைய காரியங்கள் தேடிவரும்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களின் ஜாதகத்தை பார்த்தால் படுமோசமாகவே இருக்கும். நிறைய தோஷங்கள் மற்றும் அனைத்து கிரகங்களும் பலம் இழந்து காணப்படும். உங்களின் ஜாதகத்திலும் இப்படி இருக்கும் என்பதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளமுடியும் அப்புறம் எப்படி சாதிக்கின்றார்கள் என்று கேட்கலாம். இவர்களே அதனை தேடி தேடி கற்றுக்கொண்டு அதில் ஜெயித்துவிடுவார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கிரகமும் பெரியதாக ஒத்துழைப்பதில்லை இருந்தாலும் சாதிப்பார்கள். இதனை உங்களிடம் சொல்லுவதற்கும் காரணம் நீங்கள் அனைவரும் எட்டமுடியாத தூரத்தில் இருந்தாலும் அதனை எட்டி சாதனைப்படைப்பவர்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

நமது அம்மன் கோவில் வேலை மீண்டும் ஆரம்பிக்க இருப்பதால் அனைத்து நண்பர்களும் அதற்காக செயல்பட்டு உதவுங்கள் விரைவில் அம்மன் கோவில் கட்டும் பணியை ஆரம்பிப்போம். கட்டண சோதிட பதிவு அமாவாசை அன்று ஆரம்பிப்பதாக சொல்லிருந்தேன். ஒரு சில காரணங்களால் அது தள்ளி சென்றுள்ளது. ஒரு சில நாட்களில் அதனை தந்துவிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 26, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள். 
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.  

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள். 
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள். 
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள். 
மதுரையை சேர்ந்த திரு முருகன் அவர்கள்.  

வழக்கம்போல்                             திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம். 

அன்புடன்    
ராஜேஷ்சுப்பு

Thursday, January 23, 2020

தை அமாவாசை


வணக்கம்!
          நாளை தை அமாவாசை இதனை ஆன்மீகத்தின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டு புதியதாக ஆன்ம சாதனை செய்பவர்கள் செய்யலாம். அமாவாசை அன்று நமது முன்னோர்களுக்கு நீங்கள் விரதம் இருந்து விரதத்தை மேற்க்கொள்ளலாம். விரதம் மட்டும் இருந்தாலே போதுமானது. அவர் அவர்களுக்கு சக்தி தகுந்தமாதிரி பூஜைகளை செய்தாலும் விரதம் மட்டும் அனைவரும் இருக்கலாம்.

நான் வெளியிடங்களில் அதுவும் ஏதாவது ஒரு பொது இடத்தில் நின்றுக்கொண்டு இருப்பேன் நான் யாரையும் எதிர்பார்த்த இல்லாத ஒரு நேரத்தில் யாராவது ஒரு நபர் வந்து என்னிடம் பேச்சு கொடுப்பார். நானும் அவருடன் பேசுவேன் அவர் சிறிது பேசியவுடன் அவர் வாருங்கள் ஒரு டீ குடிக்கலாம் என்று கூப்பிடுவார். நான் அவர்க்கு பரிச்சியம் இல்லாத ஆட்களாக இருந்தாலும் அவர் வழிய வந்து இதனை சொல்லுவார்.

பெரும்பாலான இடத்தில் நான் இதனை கண்டுணர்ந்தேன். முன்பின் தெரியாத ஆட்கள் கூட ஏதோ ஒரு நபர் நம்மை நாடி வந்து இப்படி கேட்பது ஒரு ஆச்சரியமாக இருக்கும். அதே நேரத்தில் அவர் எனக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று அவரின் பிரச்சினையை கூறுவார். பல இடத்தில் இப்படி நடந்து இருக்கின்றது. என்னைப்பற்றி எதுவும் கேட்காமல் இதனை சொல்லுவார்கள். 

நான் எந்த ஒரு ஆன்மீக அடையாளங்களோடு இருப்பதில்லை இருந்தாலும் என்னை நோக்கி இப்படிப்பட்ட நபர்கள் வருவார்கள். எனக்குள் இருக்கும் ஆன்மீகம் இதனை ஈர்க்கின்றது என்பது தெரிந்தது. இதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் பிடித்து இருக்கும் அனைத்தையும் விட ஆன்மீகத்தை விடாமல் பிடித்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இது நடக்கும்.

புதியதாக ஆன்மீகத்தை ஆரம்பிக்கும் நிகழ்வாகவே நாளை அமாவாசை எடுத்துக்கொள்ளலாம். ஏதாே ஒரு ஆன்ம சாதனையை நீங்கள் ஆரம்பித்து ஆன்ம சக்தியோடு  வருவதற்க்கு நான் வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 21, 2020

அன்னதானம்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு செய்யும் நேரிடையான உதவி வேலை செய்கின்றதோ இல்லையோ அவனுக்கு செய்யும் மறைமுக உதவி நன்றாகவே வேலை செய்துவிடும். எப்பேர்பட்ட தீங்கானவனாக இருந்தாலும் அவனின் உடல் உங்களை ஆசீர்வதிக்கும். இதனை நன்கு அறிந்து நமது முன்னோர்கள் அன்னதானம் என்ற ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

நீங்கள் அன்னதானம் செய்தால் உங்களுக்கு எதிரியாக இருந்தாலும் அவனின் உடல் சந்தோஷப்பட்டு அவனை அறியாமலேயே உங்களை வாழ்த்திவிடுகின்றது. உலகத்தில் இருக்கின்ற தானத்தை விட அன்னதானம் சிறந்த ஒன்று என்று சொல்லிருக்கின்றனர். அன்னதானம் அடிக்கடி செய்வது உங்களுக்கு ஏற்படும் எப்பேர்பட்ட தோஷமும் உங்களுக்கு ஏற்படும் தடைகளை உடைத்து உங்களை வாழவைக்கின்றது.

நான் பெரும்பாலும் அன்னதானம் சாப்பிடுவதில்லை நமது வாடிக்கையாளர்கள் உணவங்களில் வாங்கிகொடுக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன் மற்றபடி எந்த வித அன்னதானத்திலும் அவ்வளவு எளிதில் சாப்பிடுவது கிடையாது. தவிர்க்கமுடியாத பட்சத்தில் அன்னதானம் சாப்பிடுவது உண்டு. நீங்களும் முடிந்தால் இதனை கடைபிடித்து வரலாம்.

நீங்கள் அவ்வப்பொழுது பிறர்க்கு அன்னதானம் செய்துக்கொண்டே வாருங்கள். இது உங்களை உயர்த்தும். நீங்கள் கஷ்டபட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்னால் அன்னதானம் எல்லாம் செய்யமுடியாது என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து கோவிலில் நடக்கும் அன்னதானத்திற்க்கு பணத்தை கட்டிவிடுங்கள் குறைந்தது ஆறு மாதத்திற்க்கு ஒரு முறையாவது இதனை செய்யவேண்டும். 

வருகின்ற தை பூசத்திற்க்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள கோவில்களில் நீங்கள் ஒரு அன்னதானம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள். குறைந்தளவு எண்ணிக்கையில் இருந்தாலும் பரவாயில்லை உங்களால் முடிந்ததை அன்னதானத்திற்க்கு என்று கொடுத்து உதவி செய்யுங்கள். அன்னதானத்திற்க்கு பெயர் பெற்றது தை பூச அன்னதானம் என்பதால் இதனை அனைவரும் செய்யுங்கள்.

நான் அவ்வப்பொழுது பல முருகனின் கோவில் மற்றும் என்னால் முடிந்தவர்களுக்கு அன்னதானத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடையது என்பதற்க்காக அதனை வெளியில் அந்த நேரத்தில் சொல்லுவதில்லை. நீங்களும் இதனை செய்யவேண்டும் என்பதற்க்காக இந்த நேரத்தில் இதனை சொல்லிருக்கிறேன். அனைவரும் தைபூசம் அன்னதானம் செய்யவேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 20, 2020

கிரகத்தின் பார்வை


வணக்கம்!
          ஒரு கிரகத்தின் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கின்றது. சனி என்றால் மூன்று ஏழாம் மற்றும் பத்தாவது பார்வை என்பார்கள். குரு கிரகம் என்றால் ஐந்து ஏழு மற்றும் ஒன்பது பார்வையை செலுத்தும் என்பார்கள். பார்வை படும் இடத்திலும் இந்த கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும்.

கிரக பார்வையில் ஒவ்வொரு விதமான பார்வைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்றாலும் ஏழாவது பார்வை பார்க்கும் அனைத்து கிரகங்களும் ஒரு விதத்தில் அந்த இடத்தை நன்றாகவே வேலை செய்துவிடும் என்பது அனுபவத்தில் பார்த்த ஜாதகத்தில் தெரிகின்றது. ஏழாவது பார்வையில் அந்த இடம் தான் அமர்ந்த வீட்டை விட அதிகமாவே பலனை கொடுத்துவிடுகின்றது.

லக்கனத்தில் சனி இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் இது ஏழாவது பார்வையாக பார்க்கும் களத்திர இடத்தை அதிகமான பாதிப்பை கொடுத்துவிடும். லக்கனத்தில் அமர்ந்த சனி ஏழாவது பார்வையாக நேராக பார்க்கும் இடம் பாழாகிவிடுகின்றது என்று பலனை சொல்லலாம். சனிக்கு மூன்றாவது இருந்தாலும் ஏழாவது பார்வையாக பார்க்கும் இடம் அதிக பாதிப்பை பெறும்.

ஏழில் செவ்வாய் அமர்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஏழில் இருந்து லக்கனத்தை பார்ப்பதால் இவரின் உடல் நிலையில் அதிக பாதிப்பை கொடுக்கும். இவர்க்கு இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினையை கொடுக்கும். முக்கியமாக லக்கனம் பாழ் என்று எடுத்துக்கொள்ளலாம்.

நேராக ஒரு கிரகம் அதுவும் தீயகிரகம் பார்க்கும் பொழுது மிகப்பெரிய பாதிப்பை கொடுக்கின்றது. அதே நேரத்தில் சுபகிரகம் பார்க்கும்பொழுது நல்ல பலனை எதிர்பார்க்கலாம். மற்ற பார்வையை விட ஏழாம் பார்வைக்கு அதிக பலனை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

கட்டண பதிவு வரும் அமாவாசையில் இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும். புதிய நபர்கள் சேருவதாக இருந்தாலும் அதுவரை பத்தாயிரம் பணம் கட்டி தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

நேற்று முதல் நவ அம்மன் (சண்டி) யாகம் சென்னையை சேர்ந்த திரு சதீஸ் ஆடிட்டர் அவர்களுக்காக நடைபெற்று வருகின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 16, 2020

நன்றி


வணக்கம்!
          முன்னோர்களுக்கு படையல் என்ற பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் இன்று அவர்களின் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய படையலை செய்து வழிப்பட்டனர். நமது பதிவை படித்துவிட்டு முன்னோர்களுக்கு செய்தமைக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல நண்பர்கள் இன்று மாலை நேரத்தில் எனக்கு போன் செய்து சந்தேகத்தை கேட்டுக்கொண்டு அதன்படி அவர்களின் பூஜையை செய்தமையால் எனக்கு தகவல் கிடைத்தது. குறைந்தது பத்து நபர்களாவது என்னை தொடர்புக்கொண்டு கேட்டு செய்தனர். நானும் இதனை செய்துவிட்டு தான் இந்த பதிவை தருகிறேன். 

மாட்டுப்பொங்கல் என்றாலே அது பெருமாளுக்குரியது. பெருமாளின் நாளில் நாம் முன்னோர்களுக்கு செய்வது அவர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். அவர்களின் ஆத்மா பயணத்திற்க்கு இது ஒரு நல்ல உதவியாக இருக்கும். அவர்களும் நமக்கு நல்ல ஆசியை வழங்குவார்கள். நான் சொன்ன மாதிரியே நமக்கு தெரிந்த வழிபாட்டை நாம் செய்யும்பொழுது நமக்குள் ஒரு திருப்தி கிடைக்கும். பிறரை வைத்து நீங்கள் ஹோமம் மற்றும் சடங்குகளை எல்லாம் செய்வதை விட நீங்களே செய்யும்பொழுது மிகுந்த பலனை அது கொடுக்கின்றது.

நாம் ஊர் ஊராக கோவில் குளங்களுக்கு சுற்றுவதை விட நாமே நமக்கு தெரிந்த இந்த வழிபாட்டை செய்யலாம். இன்று செய்தவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் இதனை விட்டால் அடுத்த வருடம் தான் செய்ய முடியும் என்பதால் அடுத்த வருடம் விழிப்போடு செயல்பட்டு நீங்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பலர் வெளியூர்களில் இருப்பதால் என்னால் செய்யமுடியாது என்றும் சொல்லிருந்தனர். பலர் வெளியூர் சென்று சுற்றுலாவில் இருப்பதால் இதனை செய்யமுடியாது என்றனர். பரவாயில்லை அடுத்த வருடம் செய்துக்கொள்ளலாம். உங்களின் முன்னோர்களுக்கு என்னால் ஒரு எளிய சடங்குகளை செய்ய கொடுத்த காரணத்தால் எனக்கும் ஒரு நல்ல ஆசி கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 15, 2020

முன்னோர்களுக்கு செய்யும் படையல்


வணக்கம்!
           நாளை மாட்டுப்பொங்கல் இதோடு உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் படையல் செய்யும் விழாவாகவும் இது இருக்கின்றது. முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அவர்களுக்கு படையல் செய்து சாமி கும்பிடும் ஒரு விழாவாகவும் இது அமைந்து இருக்கின்றது. தஞ்சாவூர் பகுதி முழுவதும் மிக சிறப்பாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது.

இன்றைய காலத்தில் நகர்புறங்களில் பொங்கல் என்றாலே வெளியூர் சென்று சுற்றுவது ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர். பொங்கல் விழாவை கொண்டாடுவதில்லை ஆனால் கிராமபுறங்களில் அனைவரும் இதனை கொண்டாடிவருகின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு மட்டும் இன்றி அன்றைய நாளில் முன்னோர்களுக்கு படையல் வைத்து படைப்பது ஒரு சிறப்பான ஒரு நிகழ்வு நடைபெறும். வருடந்தோறும் இதனை நான் உங்களுக்கு சொல்லிவருகிறேன்.

மாட்டுப்பொங்கல் அன்று இரவு நேரத்தில் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகள் மற்றும் அவர்களுக்கு என்று வேஷ்டி சட்டை மற்றும் புடவைகளை வாங்கி அதனை வைத்து படைத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை வருடந்தோறும் செய்யவேண்டும். நான் வருடம்தோறும் செய்து வருகிறேன். 

உங்களின் தாத்தாவிற்க்கு ஒரு உணவின் மீது அதிக ஈடுபாடு இருந்தால் அதனை நீங்கள் சமைத்து அதனை படைக்கவேண்டும். அசைவம் மற்றும் சைவம் இந்த வகையில் எந்த உணவாக இருந்தாலும் பரவாயில்லை அவர்க்கு என்ன பிடிக்கின்றதோ அதனை நீங்கள் செய்தால் போதும். கண்டிப்பாக அதனை செய்து படைத்தால் அது நிவர்த்தியாக இருக்கும்.

நாம் திலாஹோமம் மற்றும் வருடந்தோறும் வரும் பிரசித்திபெற்ற அமாவாசையில் செய்யும் சடங்குகளை விட இது சிறப்பான ஒரு சடங்கு இதனை நீங்கள் செய்தால் உங்களுக்கு உள்ள தோஷம் நீங்கி நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்


வணக்கம்

          அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 13, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          உடல் எந்த வித தவறும் செய்யவில்லை என்றாலும் மனதால் செய்யும் தவறுக்கு உடலும் சேர்ந்து கஷ்டப்படுகின்றது. இன்றைய காலத்தில் உடலால் செய்யப்படும் தவறுகள் குறைவாகவே இருக்கும் ஆனால் மனதால் செய்யப்படும் தவறால் உடலுக்கு அதிகபாதிப்பை தந்துவிடுவதும் உண்டு.

ஏழரைச்சனி என்றாலே இதுவரை இந்த ஜென்மத்தில் நாம் செய்த தவறுக்கு ஏழரைச்சனியின் காலத்தில் நாம்  துன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற ஒரு காலம் போலவே செயல்படும். பலருக்கு ஏழரைசனியின் காலத்தில் தான் உடலுக்கு நுடத்தை கொடுக்ககூடிய ஒரு செயல் நடைபெறும். கை காலில் அடிப்பட்டு அதனால் உடல் துன்படுவது போலவே செய்யும். உடல் துன்பப்பட்டால் மனதும் துன்படும் அல்லவா அதனால் இதனை செய்துவிடுவதும் உண்டு.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒரு சிலருக்கு பெரிய அடி இல்லாவிட்டாலும் ஒரு சுளுக்கு ஏற்பட்டு அதிக வலியை கொடுப்பது போன்ற ஒரு விசயம் அனைவருக்கும் நடைபெறும். சுளுக்கு ஏற்பட்டால் இந்த காலத்தில் தான் அதிகமான மருந்து வந்துவிட்டது அதனை போடுவார்கள் ஆனால் கிராமபுறங்களில் இதற்க்கு நல்லெண்ணெய் வைத்து தேய்ப்பார்கள்.

திருநள்ளாறு நீங்கள் சென்றாலே அங்கு நல்லெண்ணெய் உடலில் தேய்த்து அதன்பிறகு குளத்தில் நீராடிவிட்டு அதன்பிறகு தான் சாமி தரிசனம் செய்ய செல்வீர்கள்.  நல்லெண்ணெய் தேய்த்து சனிக்கிழமை தோறும் நீங்கள் வீட்டிலேயே நீராடுவதும் நல்ல பரிகாரமாகவே இருக்கும். இதனை ஏழரைச்சனியின்பொழுது மட்டும் இல்லாமல் எல்லா காலத்திலும் செய்து வருவது நல்லது.

சிறப்பு கட்டண பதிவுக்கு இந்த வாரம் கடைசி கட்டணம் செலுத்துவதற்க்கு அதன்பிறகு கட்டணம் அதிகம் என்பதால் உடனே கட்டணத்தை செலுத்திவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 9, 2020

கேள்வி & பதில்


வணக்கம்!
          பல நண்பர்கள் தொடர்ச்சியாக ஏழரைச்சனியைப்பற்றி கேட்டறிந்தனர். வருகின்ற சனிபெயர்ச்சியை முன்னிட்டு தான் அந்த பதிவையே தந்தேன். இனிமேலும் பல பதிவுகளை தருவதற்க்கு உள்ளேன். கட்டணபதிவிற்க்கு பணம் செலுத்தி அதற்க்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை தருகிறேன். 

ஏழரைச்சனி என்றாலே அது பெரிய பாதிப்பை கொடுக்ககூடிய ஒரு நிகழ்வாகவே பெருமையான நபர்களுக்கு இருக்கின்றது. இது அனைவருக்கும் பாதிப்பை கொடுக்கும் என்றால் அது கிடையாது என்று சாெல்லலாம் அதற்கு காரணம் அவர்களுக்கு நடைபெறும் தசாநாதனின் வலு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு பாதிப்பு என்பது குறைவாகவாகவே இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் சிறிய பாதிப்போடு போய்விடுவது உண்டு.

நான் அதில் சொல்லிருந்த ஒன்று ஏழரைச்சனி இரண்டாவது சுற்றைப்பற்றி சொல்லிருந்தேன். ஏழரைச்சனியின் இரண்டாவது சுற்றில் இருப்பவர்களுக்கு பொங்கு சனி தானே அது நிறைய செல்வத்தை கொடுக்காத என்றும் ஒரு சிலர் கேட்டனர். பொங்கு சனி என்பதை எடுத்துக்கொள்ளலாம். அனைத்து பிரச்சினையும் முடிவடைந்து அதன் பிறகு அது செல்வத்தை கொடுத்துவிட்டு செல்கின்றது என்று சொல்லலாம். இது கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன?

நிறைய பேருக்கு கடன்கள் ஏழரைச்சனியின் காலத்தில் தான் உருவாகியிருக்கின்றது என்பதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.  ஏதோ ஒரு விதத்தில் கடன்களை உருவாக்கியது ஏழரைச்சனி என்று பலர் சொல்லிருக்கின்றனர். கடன்கள் உருவாயிருந்தாலும் அந்த கடனை சமாளிக்ககூடிய ஒரு வகையில் பணத்தையும் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒருவருக்கு கண்ணில் பிரச்சினை என்பது உருவாகும். உடலில் ஏதோ ஒரு உறுப்பில் அல்லது மொத்தத்தில் வந்தாலும் கண் பிரச்சினை என்பது இருக்கும். கண்ணை சுற்றி கருவளையம் போன்ற ஒன்று உருவாகும். பலருக்கு கண் ஆப்ரேஷன் செய்தது எல்லாம் இந்த ஏழரைச்சனியின் இரண்டாவது சுற்றில் தான் நடந்து இருக்கின்றது.  ஏழரைசனியின் தாக்கம் கண்ணை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளமுடியும். சனியைப்பற்றி நிறைய தகவலை இனிவரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 7, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஒருவருக்கு இரண்டாவது சுற்று ஏழரைச்சனி நடைபெறும்பொழுது அவர்க்கு பெரும்பாலும் ஆட்டி படைத்துவிடும். ஏழரைச்சனி என்றாலே பயம் இருக்கும். இரண்டாவது சுற்று சுற்றும்பொழுது அதனை பொங்கு சனி என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லுவார்கள் அதிர்ஷ்டம் அடிக்குதோ இல்லையோ அவர்களுக்கு நிறைய வைத்து செய்துவிடும்.

ஏழரைச்சனி இரண்டாவது சுற்று நடைபெறும் காலத்தில் அவர்களை பார்த்து ஊரே சிரிக்கும்படி அமைந்துவிடுவது உண்டு. இவர்கள் நல்லது செய்தாலும் கூட இவர்களை ஊர் பார்த்து சிரிக்கும்படி அமைந்துவிடும். சிலருக்கு ஏதோ பொதுவிசயத்தில் ஈடுபட்டு அவர்கள் அசிங்கப்பட நேரிடும். தற்பொழுது ஊராட்சியில் தேர்தல் நடந்து அல்லவா இதில் தோற்றவர்களுக்கு பெரும்பாலும் ஏழரைச்சனி நடந்து இருக்கும். 

தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை கையில் இருந்த காசு எல்லாம் போய்விட்டு அதனால் கவலையில் இருப்பவர்களும் இருக்கின்றனர். வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து கடைசியில் அது தோல்வியை கொடுத்தது அவர்களுக்கு நடைபெறும் ஏழரைச்சனி என்றால் அது பொய் என்று சொல்லமுடியாது. பலரை இதில் காவு வாங்கியிருக்கின்றது.

ஏழரைச்சனி காலத்தில் பெரும்பாலும் நோயை கொடுக்கும் விதத்தில் செயல்படுகின்றது. ஏழரைச்சனி காலத்தில் தான் உடலில் பல விதமான நோய்கள் எல்லாம் தோன்றுகின்றன. உடலுக்குள் எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருந்த மனிதன் ஏழரைச்சனி காலத்தில் உடலுக்குள் பிரச்சினை வருவதை கண்டுக்கொள்ளமுடியும். ஏழரைச்சனி இரண்டாவது சுற்று பெரும்பாலும் உடலுக்குள் பிரச்சினையை கொடுக்கின்றது.

ஏழரைச்சனிக்கு என்ன தான் பரிகாரம் என்று கேட்கலாம். இந்த உலகத்தில் நீங்கள் தனிமையானவர்கள் என்பதை காட்டக்கூடிய காலம் என்பதால் உணர்ந்துகூடிய ஒரு வாய்ப்பு உருவாகும். உங்களை சுற்றி இருக்கும் அனைத்தும் போலியானவை என்பதை காட்டக்கூடிய நேரம் அதனால் தனிமையில் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். தனிமையில் இருப்பது தான் சிறப்பான ஒன்று என்று இருங்கள். நிறைய சிவலாயங்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 6, 2020

ஆன்மீகவாதியின் அடையாளம்


வணக்கம்!
          நாம் ஒரு ஆன்மீகவாதியாக இருக்கின்றோமா என்பதை தெரிந்துக்கொள்வதற்க்க பல வழிகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இதனை சொல்லுவார்கள். எனக்கு உடல் சிலிர்க்கும். எனக்குள் ஒரு மாதிரியான ஒரு உணர்வு வரும் என்று சொல்லுவார்கள். அவர் அவர்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கருத்தை சொல்லுவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளலாம். சக்தி உடலில் ஏறும்பொழுது அதாவது முதன் முதலாலாக உடலில் ஏறும் பொழுது உங்களின் உடல் அதிக சூடு அடையும் இதனை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். நமது உடலில் சக்தி ஏறுகின்றது என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

உங்களின் உடலில் இருந்து ஒரு விதமான வாசனை வீச ஆரம்பிக்கும். இதனை நன்கு உன்னிப்பாக கவனித்து நுகர்ந்து பார்க்கும்பொழுது இதனை தெரிந்துக்கொள்ளலாம். நமக்கு ஏற்படும் கனவில் நாம் அதிகமாக பறப்பது போன்ற ஒரு நிலையில் கனவு வரும் இதுவும் ஆன்மீகவாதியாக நாம் இருக்கின்றோம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டுவிட்டால் உங்களின் முடி ஜடை போல வரும். முடி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இதனை நாம் நன்றாக பராமரித்து வந்தால் கூட அது ஒட்ட ஆரம்பித்துவிடும். பெரியதாக வளரவேண்டும் என்பதில்லை கொஞ்சம் வளர்ந்தாலே அது உங்களுக்கு ஒட்ட ஆரம்பித்துவிடும். இப்படி இருந்தால் நீங்கள் ஆன்மீகவாதியாக இருக்கின்றீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

நம்முடைய மனது எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்துக்கொண்டு இருந்தாலும் உங்களின் மனதிற்க்குள் ஒரு அமைதி நிலவிக்கொண்டே இருக்கும். ஒரு சண்டை சச்சரவில் இருக்கும்பொழுது கூட உங்களின் மனது அமைதியில் இருக்கும். 

கட்டண பதிவை ஆரம்பிக்கும் நாள்கள் விரைவில் வர இருப்பதால் உடனே இதில் இணைந்துக்கொள்ளுங்கள். பதிவை ஆரம்பித்த பிறகு கட்டணம் பனிரெண்டாயிரம் என்று ஏற்ற இருப்பதால் உடனே பத்தாயிரம் பணத்தை செலுத்தி தங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 3, 2020

சிறப்பு கட்டண பதிவு 5

வணக்கம்!
         ஒரு மனிதனுக்கு மனமகிழ்ச்சி என்பது தொடர்ச்சியாக இருந்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு ஒரு ஐந்து நிமிடம் இருக்கும் ஒரு சிலருக்கு ஒரு நாள் முழுவதும் இருக்கும் ஒரு சிலருக்கு ஒரு வாரம் முழுவதும் இருக்கும் அடுத்ததாக கவலை பற்றிக்கொள்ளும். மகிழ்ச்சியை தானே மனிதன் விரும்புவான் கவலையை மனிதன் விரும்புவதில்லை இது எதனால் நடைபெறுகின்றது என்றால் இதற்க்கும் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

உங்களின் புண்ணிய கணக்கில் நல்லது இருந்து அது இந்த ஜென்மத்தில் கொடுத்தால் உங்களின் வாழ்க்கையில் அதிகபட்ச மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்கமுடியும். மகிழ்ச்சிக்கும் புண்ணியத்திற்க்கும் அதிக சம்பந்தம் இருக்கின்றது. நீங்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியையும் அனுபவிக்கமுடியாது அதன் பிறகு உங்களுக்கு சோகம் வந்துவிடும்.

நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றீர்கள் என்றால் உங்களின் புண்ணியகணக்கில் உள்ள மகிழ்ச்சி செலவு செய்துக்கொண்டு இருக்கின்றது அர்த்தம். அது எவ்வளவு தான் உங்களுக்கு கொடுக்கும் விரைவில் தீர்ந்துவிடபோகின்றது என்று அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும். புண்ணியத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடவேண்டும்.



நான் நல்ல வசதி வாய்ப்போடு இருக்கின்றேன். எனக்கு பணவசதி அதிகமாக இருக்கின்றது எனக்கு புண்ணியத்தைப்பற்றி எல்லாம் கவலைப்படதேவையில்லை என்று சொல்லுபவர்களாக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட  பணக்கார்ரகளுக்கும் மனது மகிழ்ச்சியோடு இருப்பதில்லை ஏதோ ஒரு கவலை அவர்களை தொற்றிக்கொள்ளும் அது வெளியில் தெரியாது.

சோதிடத்தில் உள்ள கிரகங்கள் உங்களின் மனதை ஆட்கொண்டு அது மகிழ்ச்சியையும் கவலையும் தருகின்றது என்று சொல்லுவார்கள். கிரகங்கள் உங்களின் முன்ஜென்மம் மற்றும் இந்த ஜென்மத்தில் உள்ள செயலை வைத்து அது கொடுக்கின்றது என்று சொல்லுவார். இது ஒரு புறம் உண்மை என்று எடுத்துக்கொள்ளலாம். 

ஒரு ஆன்மீகவாதி என்பவன் இதனை கடந்து போய்விடவேண்டும் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். எவ்வளவு பெரிய மகிழ்ச்சி வந்தாலும் ஆடாமல் மற்றும் எவ்வளவு பெரிய கவலை வந்தாலும் சோர்ந்து போகாமல் இருப்பார்கள். இவர்களின் மனநிலையை அந்த நிலைக்கு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆன்மீகவாதிகள் என்பவர்கள் பெரும்பாலும் கிரகங்களின் தாக்குதலுக்குள் ஆட்படுவதில்லை.

ஆன்மீகவாதியாக எல்லாம் வேண்டியில்லை சாதாரணமான மனிதன் மகிழ்ச்சியாக இநருக்கவேண்டும் அது போதும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர்களாக இருந்தால் அதற்க்கும் வழி இருக்கின்றது அதனைப்பற்றி நமது கட்டணபதிவில் நிறைய பார்க்கலாம்.

கட்டணபதிவை தொடங்கும் காலம் வந்துவிட்டது உடனே கட்டணத்தை செலுத்திவிடுங்கள். நிறைய பதிவுகள் மற்றும் முன்னேற்றத்திற்க்கு உள்ள விசயங்கள் நிறைய அதில் எழுதி இருக்கிறேன். உடனே விரைந்து கட்டணத்தை செலுத்தி வையுங்கள்.

இன்று நவஅம்மன் யாகம் நடைபெற இருக்கின்றது. நவஅம்மன் யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தி இருப்பவர் நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 2, 2020

செயலை விரைந்து செய்வோம்


வணக்கம்!
          ஒரு வருடத்தில் வரும் பிறந்தநாள் மற்றும் வருடபிறப்பு எல்லாம் வருவது மக்கள் எல்லாம் சந்தோஷமாக எடுத்துக்கொண்டு அதனை கொண்டாடுவார்கள். இதனை சந்தோஷமாக கொண்டாடுவதை விட நம்முடைய வாழ்வில் நிறைய கடமைகளை எல்லாம் முடித்துக்கொண்டு இருக்கின்றீர்களாக என்பதை எச்சரிக்கை செய்யும் ஒரு நிகழ்வாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

நம்முடைய வாழ்வு என்பது ஒரு மின்னல் போன்றது என்று ஒரு ஆழ்வார் சொல்லிருக்கின்றார். மனிதவாழ்வை ஒரு நொடியில் வந்து சென்றுவிடும் மின்னலோடு ஒப்பிட்டு இருக்கின்றார். அவர் சொன்னது எல்லாம் மனிதவாழ்விற்க்கும் நிச்சயம் இல்லை என்பதை மின்னலோடு ஒப்பிட்டு சொல்லிருக்கின்றார். உங்களின் அருகில் உள்ள நபர்களை கூட பாருங்கள் உங்களோடு பேசிக்கொண்டு இருந்து இருப்பார் அவர் அடுத்த நாெடியில் கூட இறந்து இருக்கலாம்.

அவர்க்கு வந்த மரணம் நமக்கும் அடுத்த நாெடியில் கூட வரலாம். இந்த வாழ்வு நிச்சயம் இல்லாத ஒன்று தான். இதனை நமக்கு அறிவித்துக்கொள்வதற்க்கே இந்த வருடபிறப்பு பிறந்தநாள் எல்லாம் வருகின்றது. 

வருடப்பிறப்பை கொண்டாடிவிட்டு அடுத்தபதிவிலேயே இப்படி பயமுறுத்துவது போலவே சொல்லிருக்கின்றீர்களே என்று நினைக்கலாம். நாம் நமது கடமையும் நமக்குள்ள வேலையையும் விரைவாக முடிப்பதற்க்கு இதனை சொல்லுகிறேன். நம்மால் முடிந்த அனைத்து வேலையையும் செய்யுங்கள் அதனை விரைவாக செய்யவேண்டும் என்பதை சொல்லுவதற்க்கு இதனை சொல்லுகிறேன்.

சாதாரணமாக ஒரு ஆன்மீகவாதி முடிந்தளவு விரைவாகவே தன்னுடைய செயலை எல்லாம் செய்வார்கள். சாதாரணமானவர்களுக்கும் இந்த செயலை விரைந்து செய்யவேண்டும். நிலையற்ற இந்த உயிர் இந்த உடலில் இருக்கும் வரை நல்ல காரியங்களை எல்லாம் விரைந்து செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 1, 2020

இனிய தொடக்கம்


வணக்கம்!
          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு