Followers

Saturday, June 30, 2012

சுய புராணம்



வணக்கம் நண்பர்களே!  நான் பல பேருக்கு இப்பதிவு மூலம் சோதிடம் சொல்லி இருக்கிறேன். அவர்கள் அனைவரும் கேட்கும் கேள்வி உங்கள் அலுவலகம் எங்கு உள்ளது என்று தான் இருக்கிறது. அனைவருக்கும் நான் சொல்லுவது நான் சோதிட தொழில் செய்தாலும் சோதிடம் பார்க்க தனியாக அலுவலகம் தொடங்கவில்லை.

நான் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள ஆம்பலாபட்டு என்ற கிராமத்தில் பாலாயிகுடிகாடு என்ற ஊரில் தான். இப்பொழுது வசிப்பது சென்னை அடையார்.

நான் பதிவு உலகத்திற்க்கு வருவதற்க்கு முன்பே சோதிட தொழில் செய்து வருகிறேன். நான் சோதிடம் பார்ப்பது. நான் எங்கு எல்லாம் செல்லுகிறேனோ அங்கு சோதிடம் பார்ப்பேன். என்னுடைய நேரடியான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்களில் வீடுகளில் தான் போய் பார்த்து இருக்கிறேன் அல்லது அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள கோவில்களில் மற்றும் அமைதியாக உள்ள பொது இடங்களில் சோதிடம் பார்ப்பேன்.

நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் உங்கள் ஊர் இருக்கும் இடத்திற்க்கு வரும் போது நான் சொல்லுகிறேன் அப்பொழுது நீங்கள் என்னை சந்திக்கலாம். என்னுடைய வாடிக்கையாளர்கள் பல பேர் எனக்கு அலுவலகம் அமைத்து தருகிறேன் என்று சொன்னார்கள் நான் அதனை மறுத்துவிட்டேன். ஏன் என்று தெரியவில்லை எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. எதிர்காலத்தில் அந்த எண்ணம் வந்தால் அலுவலகம் தொடங்கலாம்.

உங்களுக்கு இந்த இடத்தில் ஒரு எண்ணம் தோன்றலாம் உனக்கு ஏன் அவர்கள் அலுவலகம் அமைத்து தர வேண்டும். உன் காசில் நீ அமைத்துக்கொள்ள மாட்டியா என்று கேட்க தோன்றும். உண்மை தான் அவர்கள் எனக்கு அலுவலகம் அமைத்து தருகிறேன் என்று சொன்னால் அவர்கள் என்னிடம் எவ்வளவு பயன் அடைந்திருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

என்னை பல பேர் புதிதாக பார்த்துவிட்டு நீங்கள் தான் சோதிடரா என்று கேட்டு இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஆன்மிகம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்துவிட்டார்கள். அவர்களும் அதனை நம்பி என்னிடமும் அதனை எதிர்பார்க்கிறார்கள். நான் உங்களை போல் தான் ஒரு சாதாரண மனிதன் தான் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை போல் அனைத்து ஆசையும் எனக்கும் உண்டு.

நான் அடிக்கடி செல்லுவது சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு Commodity Trading கம்பெனிஅங்கு தான் அதிகபட்சம் இருப்பேன். இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று கேட்கலாம். அந்த கம்பெனி நடத்துபவர் என்னுடைய நீண்ட கால நண்பர்.  அவர்கள் செய்யும் உதவிக்கு நான் அவர்களுக்கு சோதிடம் வழியாக Commodity மார்க்கெட்டிங் அறிவுரை வழங்குகிறேன். அங்கு போய் அவர்கள் அலுவலகத்தில் உள்ள கணிணி வழியாக தான் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

பொதுவாக சோதிட துறைக்கு வருபவர்கள் அவர்களின் முன்னோர்கள் அதவாது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது இந்த தொழில் செய்தால் அவர்கள் இந்த துறைக்கு வருவார்கள் ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் இந்த தொழிலை செய்தது இல்லை.

நான் வாழ்க்கையில் உள் தேடுதல் காரணமாக தான் இந்த துறைக்கு வந்தேன். பல வருட காலங்கள் பல இடங்களில் அழைந்து எடுத்த தகவல்களை என்னுடைய அனுபவத்தில் உள்ளவற்றையோடு உங்களுக்கு தந்து கொண்டு இருக்கிறேன். 

எனக்கு சோதிடதுறைக்கு என்று குரு அமைத்துக்கொள்ளவில்லை நானாகதான் சோதிடத்தைப் பற்றி படித்து வந்தேன். மந்திர சாஸ்திரத்திற்க்கு என்று குரு நாதர் எனக்கு உண்டு. நான் செய்த பல புண்ணியங்கள் தான் எனக்கு அந்த மாதிரி ஒரு நல்ல குரு நாதர் கிடைத்தார். அவர் மூலம் பல மந்திரங்களை கற்று வருகிறேன். 

அவர் மூலம் பல ஆன்மீக குருநாதர்கள் எனக்கு அறிமுகம் உண்டு. அவர் பெயர் வெளியிட கூடாது என்ற காரணத்தால் வெளியிடாதற்க்கு மன்னிக்க வேண்டும். அவர் பெயரை சொன்னாலும் உங்களுக்கு தெரியபோவதில்லை. அவர் வெளி உலகத்திற்க்கு வருவதில்லை காடுகளில் உள்ள குகையில் தான் அவர் இருப்பார். நீங்கள் நினைப்பது போல அவர் வெளிஉலக சாமியார் கிடையாது.

இந்த மாதிரி பல சாமியார்கள் தொடர்பு எனக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது அவர்கள் மூலம் பல விபரங்கள் எனக்கு கிடைக்கிறது. அதன் மூலம் பல சோதிட வாடிக்கையாளர்களுக்கு நான் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுகிறேன். 

என்னை நீங்கள் பார்க்க விருப்பபட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஊருக்கு வரும் போது உங்களை தொடர்பு கொண்டு சந்திக்கிறேன். நான் ஒரு இடத்தில் இருப்பது இல்லை அனைத்து இடங்களும் சுற்றிக்கொண்டு தான் இருப்பேன். நீங்கள் சந்திக்க விரும்பினால் அந்த வாய்ப்பு கூடிய விரைவில் கூட வரலாம். சென்னையில் நீங்கள் சந்திக்க விரும்பினாலும் தொடர்பு கொள்ளுங்கள். உங்களை சந்திக்கிறேன். 

என்னை உங்கள் வீடுகளில் சந்திப்பது உங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் ஏன் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் தெரியவரும். அப்பொழுது நான் கொடுக்கும் தீர்வு உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும்.

என்னைப்பற்றி நான் கொடுத்த தகவல் உங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன். 

அடுத்த பதிவில் ஆறாம் வீட்டு தசாவைப் பற்றி தருகிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



Friday, June 29, 2012

கனவு கானும் வாழ்க்கை யாவும்



"கனவு கானும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோலங்கள்
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்... வாலிபம் என்பது பொய் வேஷம்..
தூக்கத்தில் பாதி , ஏக்கத்தில் பாதி, போனது போக எது மீதி...
உடம்பு என்பது உன்மையில் என்ன.. கனவுகள் வாங்கும் பை தானே..”

நீங்கள் கேட்டவை படத்தில் இடம் பெற்ற வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள்...

நாமும் பிறந்தலிருந்து நமது எண்ணங்கள் என்னவாக இருக்கின்றன. ஒரு நல்ல கல்வி படிப்பது அந்த படிப்பை வைத்து நல்ல கம்பெனியில் நல்ல சம்பாதிக்க வேண்டும். நல்ல சம்பாதித்தால் நல்ல குடும்பத்தில் பிறந்த அழகான படித்த மனைவி அமையவேண்டும். அதற்கு நல்ல குழந்தைகள் பிறந்து அதை நல்ல முறையில் ஆளாக வேண்டும். வசிக்க நல்ல வீடு ஒரு கார் இருந்தால் போதும் என்று ஒரு சராசரி மனிதனின் எண்ணமாக இருக்கிறது. இதை செய்வது என்பது சாதாரணமான காரியமாக இருக்காது. அவ்வளவு கஷ்டங்கள் நிறைந்த ஒன்று.

எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் நோய் வந்து விட்டால்  அதுவும் தீராத நோய் என்றால் என்ன செய்வது அவ்வளவு தான். கடைசியில் பார்த்தால் வாழ்க்கையின் இறுதிகாலம் அவனை மிரட்டுகிறது. மரணம் என்ற விருந்தாளி அவன் கூப்பிடாமல் அழையா விருந்தாளியாக வந்துவிடுகிறார். கண்ட கனவு யாவும் கலைந்த கோலங்களாகவே போய்விடுகிறது.

அதுவும் மருத்துவதுறையால் கண்டுபிடிக்க முடியாத மற்றும் தீர்வு இல்லாத அதாவது குணபடுத்த முடியாத நோயாக இருந்தால் கஷ்டம் தான். ஆத்மா தங்கி இருக்கும் உடம்பு நோய் இல்லை என்றால் அந்த ஆத்மாவிற்க்கு உங்கள் உடம்பு கோவில் போன்றது.

உடம்பு நன்றாக இருந்தால் நீங்கள் நினைத்ததை அனைத்தையும் போராடி வெற்றி பெற்றுவிடலாம். உங்கள் உடம்பு உங்களுக்கு பிரச்சினை என்றால் அனைத்திலும் தோல்வி.

இன்றைக்கு இருக்கும் இயந்திர தனமான மனித வாழ்க்கையில் ஒருவன் நல்ல முறையில் இருந்தாலே அவனை இந்த உலகம் கண்டுகொள்வதற்க்கு அவன் போராட வேண்டிருக்கும். அவன் உடம்பு படுத்துவிட்டால் அவனை யார் தான் கண்டுக்கொள்வார்கள். 

கட்டிய மனைவி பெற்ற குழந்தை கூட பார்ப்பது என்பது அரிதான ஒன்றாக தான் இருக்கும். உடம்பு நோய் வந்து படுத்துவிட்டால் உங்களை பார்க்க உங்களுக்கே பிடிக்காமல் போய்விடும்.

நாம் இனி பார்க்க போவது ஆறாம் வீட்டு தசாவை பற்றி தான் நான் தசாவை பற்றி எழுதலாம் என்று நினைத்தவுடன் ஒரு சில எண்ணங்கள் வேற தசாவைப் பற்றி வந்தாலும் உடனே எனக்கு வந்தது ஆறாம் வீட்டு தசா தான் ஏன் என்றால் ஒருவனை அடித்து வீழ்த்தி அவனை சாயவைப்பதில் முதலிடத்தில் ஆறாம் வீட்டு தசாதான் செய்யும்.

ஒருவருக்கு வரும் கெடுதலை நான் கொடுத்துவிட்டால் அவன் தன்னை தற்காத்துக் கொள்வான். அதன் பிறகு அவனுக்கு வரும் கஷ்டங்களை நாம் ஒவ்வொன்றாக பார்த்துக்கொள்ளலாம். அதனால் தான் உங்களுக்கு முதல் தசாவாக எழுத இந்த தசாவை தேர்ந்தெடுத்தேன்.

நான் இதனை எழுதவே பல நாட்கள் ஆகிவிட்டது இதை தவிர்த்து முதல் வீட்டு தசாவில் இருந்து எழுதி இருந்தால் இதனை ஆரம்பிக்க ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகி இருக்கும். அதனால் தான் இதனை முதல் தசாவாக எழுதினேன். இனி வரும் பதிவுகளில் மனிதனுக்கு வரும் நோய்கள் என்ன என்று ஆறாம் வீட்டு தசாவுடன் உங்களுக்கு தர போகிறேன். 

"வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் 
  நோய் வரும் முன் காக்க வேண்டும்"  

 என்பது முன்னோர்கள் கருத்து.

நான் உங்களுக்கு என்ன நோய் வரும் என்பதை சொல்லிவிடுகிறேன் அதற்கு தகுந்தார் போல அணையை கட்டிக்கொள்வது உங்கள் பொறுப்பு. உங்கள் நண்பர்களுக்கும் நமது ப்ளாக்கை பற்றி சொல்லுங்கள். மிகப்பெரிய பரிகாரமாக இருக்கும்.

அடுத்த பதிவில் 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

யாருக்காக கடன் ? நிறைவு பகுதி



வணக்கம் நண்பர்களே யாருக்காக கடன் வாங்குவார்கள் என்று கடந்த பதிவில் பார்த்து வந்தோம் அதன் தொடர்ச்சி இப்பதிவில் 

கடந்த காலத்தில் பார்த்தீர்கள் என்றால் கடன் வாங்கி விட்டால் கடன் வாங்கியவர்கள் அதனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று அந்த பாடுபடுவார்கள். கடன் கொடுத்தவர் கேட்கும் முன்பு பணத்தை கொடுத்துவிடவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலையில் பார்த்தால் கடன் கொடுத்தவன் தான் செத்தான் அவன் வாங்குவதற்க்குள் அந்த பாடு படவேண்டும். 

கடன் பட்டார் நெஞ்சம் போல கழங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று சொல்லுவார்கள். இப்பொழுது எல்லாம் அதைப் பற்றி யாரும் கவலைபடமாட்டார்கள். கொடுத்தவன் தான் கழங்கி நிற்கவேண்டும் அப்படி ஆகிவிட்டது. ஆனால் ஒரு சிலர் பாதிப்படைகிறார்கள் அவர்கள் வாங்குவது தண்டல் கொடுப்பவர்களிடம். அவர்களிடம் வாங்கினால் அவர்கள் அடி ஆட்களை வைத்து பணத்தை வாங்கிவிடுவார்கள்.

மக்களின் மனம் மாறிவிட்டது எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கடன் கொடுத்தவன் கேட்ககூடாது என்று நினைக்கிறார்கள். சாதாரண மக்கள் தான் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்றால் பெரிய பணக்காரர்களும் ஏமாற்றுகிறார்கள் அவர்கள் வங்கியையே திவால் ஆக்கிவிடுகிறார்கள். இப்படி இருக்கிறது இன்றைய நிலை. நாம் கடனைப் பற்றி தான் பார்த்து வருகிறோம். இப்பொழது நாம் ஆறாவது வீட்டு தசாவிற்க்கு போவோம். 

ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டு அதிபதியுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர் குழந்தைக்காக கடன் படும் நிலை ஏற்படும். இன்றைக்கு பல பேர் தங்கள் குழந்தைக்காக தான் கடன் வாங்குகிறார்கள். அந்த குழந்தையை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் வாங்கி நல்ல நிலைக்கு கொண்டுவருகிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் அந்த பெற்றோர்களை கவனிப்பதில்லை. 

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன் வழக்குகாக அல்லது தன்னுடைய தேர்தல் செலவுக்காக கடன் பெறுவார்கள். 

ஆறாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர் தன்னுடைய தொழில் நண்பருக்காக கடன் வாங்குவார். தன்னுடைய மனைவிக்காக கடன் வாங்குவார்.

சில பேர் மனைவிக்கு கடன் வாங்கி கொடுத்துவிட்டு மாட்டிக்கொள்வார்கள். மனைவி அவரை விட்டு போய்விடுவார். என்னடா மனைவி கூட விட்டு விட்டு போய்விடுவார்களா என்று இது தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மக்கள் வசிக்கும் அயல்நாடுகளில் இந்த விஷயங்கள் அடிக்கடி நிகழ்கிறது. இது அனுபவ உண்மை.

ஆறாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மரணத்திற்க்காக கடன் ஏற்படும் நிலை வரும். என்னடா மரணத்திற்க்காக என்று கேட்க தோன்றும் உண்மையில் மரணத்திற்க்கு செய்யும் செலவுக்காக கடன் ஏற்படும். 

தமிழ்நாட்டு கிராமங்களில் பார்த்தீர்கள் என்றால் அங்கு மரணம் ஏற்பட்டுவிட்டால் அவர்களின் சக்தி தக்கவாறு செலவு செய்வார்கள். சில பேர் அதில் கூட பந்தாவிற்க்காக செலவு செய்வார்கள். சில பேர் மரண செலவுக்கு சொத்தை கூட விற்று இருக்கிறார்கள். அங்கு நடக்கும் கூத்து இருக்கிறதே அந்த மாதிரி இருக்கும். அதை எழுதிக்கொண்டே போகலாம். உங்கள் பொறுமை கருதி அதை எழுதவில்லை.

ஆறாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன்னுடைய தந்தைக்காக கடன் ஏற்படும் அல்லது தன் குழந்தையின் உயர்கல்விக்காக கடன் ஏற்படும். தொலை தூர பயணங்களுக்காக கடன் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர் தொழிலுக்காக கடன் வாங்குவார்கள். கடன் வாங்கி தொழில் ஆரம்பிப்பார்கள் அல்லது நடந்துகொண்டு இருக்கும் தொழிலுக்காக கடன் வாங்குவார்கள்.

ஆறாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டு அதிபதியுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன்னுடைய மூத்த சகோதர சகோதரிகளுக்காக கடன் வாங்குவார்கள். தன் மருமகனுக்காகவும் கடன் வாங்குவார்கள்.

நான் சென்னை அண்ணா நகரில் ஒருவரை இப்படி சந்தித்து இருக்கிறேன். அவர் ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரி அவர் மருமகனுக்காக பல கோடிகளை கடன் வாங்கி மாட்டிக்கொண்டார். அவர் இப்பொழுதும் அதில் இருந்து மீளமுடியவில்லை. அந்த மருமகன் சொந்த தொழில் செய்கிறேன் என்று சொல்லி அனைத்து பணத்தையும் விட்டுவிட்டான். அவருக்கு வில்லன் மருமகன் உருவத்தில் வந்து இருக்கிறான்.

ஆறாம் வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மருத்துவசெலவுக்காக கடன் ஏற்படும் நிலை உருவாகும். தன்னுடைய பெண் தோழிகளுக்காக கடன் ஏற்படும். கீப்பிற்க்காக கடன் வாங்கி செலவு செய்வார்கள். 

நீங்கள் தொழில் முறை சோதிடராக வந்தால் அனைத்தையும் பார்க்கலாம். சந்தனமும் உங்களை வந்து பார்க்கும் சாக்கடையும் உங்களை வந்து சந்திக்கும். அனைத்தையும் சமபடுத்தி தான் நீங்கள் செல்ல வேண்டி இருக்கும். என் அனுபவத்தை சொல்லுகிறேன் பல பேர் என்னிடம் வந்து கேட்பது ஏதாவது வசிய மருந்து இருக்கிறதா என்று தான் கேட்கிறார்கள். அடுத்தவரை எப்படியாவது வசியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்.

என்ன நண்பர்களே கடன் எதற்கு வாங்குகிறார்கள் யாருக்காக வாங்குகிறார்கள் என்பதை ஆறாம் வீட்டு தசாவுடன் ஒப்பிட்டு எழுதியது சரிதானே. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

அடுத்த பதிவில் ஆறாம் வீட்டு தசா பற்றி பல தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, June 28, 2012

யாருக்காக கடன் ? பகுதி 1



வணக்கம் நண்பர்களே! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை பயணத்தை நடத்துவதற்க்கு பணம் தேவைபடுகிறது. இன்றைக்கு இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் இல்லை என்றால் அவனால் உயிருடன் வாழ்வது என்பது மிக அரிது. இந்தியாவே கடன் வாங்குகிறது. 

பணத்தை ஈட்டுவதில் பல வழிமுறைகள் உள்ளன. வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள் அல்லது தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள். பல வழிகளிலும் பணத்தை சம்பாதிப்பதில் தான் ஒவ்வொரு வரும் ஈடுபடுகிறார்கள்.

ஒரு வேலைக்கு போனாலும் அதில் சம்பாதிக்கும் பணம் சில பேருக்கு போதவில்லை அதனால் கடன் வாங்குகிறார்கள். சில பேர் கடன் வாங்கி தொழில் ஆரம்பிக்கிறார்கள். இதில் வங்கி மூலம் வாங்கும் பணத்திற்க்கு வட்டி குறைவாக இருந்தால் வங்கியில் கடன் வாங்கிறார்கள். சில பேர் கந்துவட்டிக்கு வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். 

இன்றைக்கு இருக்கும் பொருளாதார நிலைக்கு கடன் வாங்காமல் காலத்தை தள்ளுவது என்பது மிகவும் அரிது.

நாம் பார்த்துக்கொண்டு இருப்பது ஆறாம் வீட்டின் தசாவை பற்றி தான் அந்த தசா தான் ஒருவருக்கு கடனை ஏற்படுத்துவதில் கில்லாடி. அது சம்பந்தப்படமால் யாரும் கடன் வாங்க முடியாது. 

இப்பதில் நாம் வாங்கும் கடன் யாருக்காக இருக்கும் என்பதை ஆறாம் வீட்டு தசா மூலம் உங்களுக்கு விளக்கபோகிறேன் வாங்க பார்க்கலாமா.

ஆறாம் அதிபதி லக்கினத்தில் சம்பந்தபட்டு தசா நடந்தால் அவரின் உடல்நிலைக்காக கடன் வாங்குவார். அவர் உடல் நிலை கோளாறு காரணமாக கூட கடன் பெறும் நிலை ஏற்படும். 

ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவரின் குடும்ப செலவுக்காக கடன் வாங்குவார் அல்லது அவரின் கை செலவுக்காக கூட கடன் வாங்கலாம்.

ஆறாம் அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டால் தன்னுடைய இளைய சகோதர சகோதரிகளுக்காக கடன் வாங்குவார் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்காக கடன் வாங்குவார். சில பேர் இசை பிரியராக இருந்தால் ஏதாவது இசை கருவிகள் வாங்குவதற்க்காக கடன் வாங்குவார்.

ஆறாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன்னுடைய தாயாரின் நலனுக்காக கடன் வாங்குவார். வீடு கட்டுவதற்க்காவும் கடன் வாங்குவார். சில பேர் வாகனத்திற்க்காக கடன் வாங்குவார்கள். 

இன்றைக்கு இருக்கும் நகரத்து வாழ்க்கையில் அதிக பேர் ஆசைபடுவது வீடு கட்டுவதற்க்கு அல்லது ஒரு கார் வாங்குவதற்க்கு இதில் வீடாக இருந்தால் பரவாயில்லை. சில பேர் வாகனம் வாங்கி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள். 

பல வாகனங்கள் வாங்கி அதை ஒழுங்காக ஒட்டுவதற்க்கு டிரைவர் அமையமாட்டார்கள். அதனாலேயே கடனில் வண்டி மூழ்கிவிடும். சென்னை போன்ற நகரங்களில் பல பேர் இன்றைக்கு இந்த நிலையில் இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

கடனை வாங்குவதற்க்கு ஆறாம் அதிபதி துணை வேண்டும். அது போல நமக்கு அமையும் வேலை ஆட்கள் ஆறாம் அதிபதி துணையோடு தான் அமைய முடியும். ஆறாம் அதிபதி ஒரு வேலையில் உங்களை காப்பாற்றினால் அடுத்த காரணத்தில் கைவிட்டுவிடுவார். 

கடன் வாங்கி மோட்டார் தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல் கடனை வாங்காமல் வண்டி வாங்கினால் ஆறாம் அதிபதி நல்ல டிரைவரை வேலைக்கு அமர்த்துவார். 

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



Wednesday, June 27, 2012

நான் பேச நினைப்பதெல்லாம்



வணக்கம் நண்பர்களே! கடந்த நான் பேச நினைப்பதெல்லாம் பதிவில் தொழில் சோதிடராக மாறுவதற்க்கு என்ன செய்யலாம் என்று கேட்டு இருந்தேன் அந்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக இப்பதிவில் அதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

நீங்கள் சோதிட தொழில் செய்யவதற்க்கு ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது நீங்கள் ஒரு தேவதையை உங்களுக்காக அமைத்துக்கொள்வது தான் அது. அதவாது உச்சடணம் செய்து ஒரு தேவதைக்கு உபசாரராக இருந்தால் போதும். உங்களுக்கு அந்த தேவதை எல்லா வழியும் செய்து கொடுத்துவிடும்.

நீங்கள் ஜாதகத்தின் கணக்குகளை எல்லாம் போட்டு பார்த்துவிட்டு அந்த தேவதையிடம் அனுமதி வாங்கி சோதிட பலன் கூறினால் நீங்கள் சொல்லும் பலன் அனைத்தும் பலித்துவிடும்.

இந்த மாதிரி சோதிட தொழில் செய்தால் உங்களுக்கு நல்ல காலம் இருக்கும். இல்லை என்றால் சும்மாக சொல்லி கொண்டு இருக்க வேண்டியது தான். சோதிடம் மூலம் நீங்கள் பிரபலமாகமாட்டீர்கள்.

தேவதையை உச்சாடணம் செய்து சோதிட தொழில் செய்தால் கை மேல் பலன் இருக்கும் நீங்கள் கூறும் பரிகாரமும் அவர்களுக்கு தீர்வாக அமையும் அப்படி இல்லை என்றால் அவர்கள் எத்தனை பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

நீங்கள் ஒரு தேவதையை உச்சாடணம் செய்வதற்க்கு 
நீங்கள் ஒரு தேவதையை தேர்ந்தெடுப்பது எப்படி? அந்த தேவதை எப்படி இருக்க வேண்டும் ?

அந்த தேவதை ஒரு சாந்தமான அம்மனாக இருந்தால் நன்மை பயக்கும். இல்லை உங்கள் குலதெய்வமாக கூட இருக்கலாம் அல்லது உங்கள் குடும்பத்தில் இறந்த மூத்தவர்களாக கூட இருக்கலாம். பொதுவாக தெய்வசக்தியாக இருந்தால் நல்லது.

சில பேர்கள் உக்கிர அம்மனை வைத்துவழிபாடு நடத்துவார்கள் அது கூட இருக்கலாம். சாந்தமான அம்மனாக இருந்தால் உங்களுக்கு எந்த நேரத்திலும் அது உதவியாக இருக்கும் உக்கிர தெய்வங்களை வைத்துகொள்வது மிக கடினம். நான் பார்த்த வரையில் சாந்தமான அம்மனை வைத்திருந்தால் நன்மை பயக்கும். பல சோதிடர்கள் சாந்தமான அம்மனை தான் இஷ்டதெய்வமாக வைத்து இருக்கிறார்கள்.

மாந்தீரிக தொழில் செய்பவர்கள் தான் உக்கிர அம்மனை தன் இஷ்ட தேவதையாக வைத்திருப்பார்கள் அதவாது காளி போன்ற உக்கிர தெய்வங்களை வைத்திருப்பார்கள் . உக்கிர அம்மனுக்கு இரத்த பலி கொடுக்க வேண்டும் அப்போது தான் கட்டுப்படும்.

காளியை கட்டுக்குள் வைத்துக்கொள்வது என்பது ரொம்ப கடினமான ஒன்று அது திடீர் என்று உங்களை விட்டு விலகிவிடும். மாந்தீரிகர்கள் காளியை பீரித்தி செய்து பிணஆத்மாவை வைத்துக்கொண்டு தொழில் செய்வார்கள். பிணஆத்மா என்றால் திடீர் விபத்துகளில் மரணம் அடைந்த ஆத்மா. தீயால் செத்த ஆத்மா, தண்ணீரில் விழுந்து செத்த ஆத்மா, தற்கொலை செய்துகொண்ட ஆத்மா போன்றவை பிணஆத்மாக்கள் அல்லது பிரேத ஆத்மாக்கள். அதனை பிடித்து வைத்துக்கொண்டு செய்வார்கள். காளியை பீரித்தி செய்து பிணஆத்மா மூலம் தன் காரியத்தை செய்வார்கள்.

மாந்தீரிகர்கள் தன் இரத்தத்தை அதற்கு காணிக்கையாக கொடுப்பார்கள். அதவாது அவர்களின் கைகளை பார்த்தால் பிளைடால் கிழித்து இரண்டுக்கும் இரத்ததை காணிக்கை செய்வார்கள். அந்த தழும்பு அவர்களின் கைகளில் இருக்கும்.

மாந்தீர விஷயங்கள் அனைத்தும் பொதுவாக தீமை செய்யும் விஷயமாக தான் இருக்கும் அது உங்களுக்கு தேவையில்லை. அதனை வைத்து நல்லதும் செய்யலாம்.

நீங்கள் சாந்தமான அம்மனை வைத்துக்கொண்டு சோதிட தொழில் செய்யலாம். இந்த பதிவில் இருக்கும் விஷயங்கள் நடைமுறையில் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் ஆனால் இதனை செய்த பிறகு என்னை நீங்கள் பாராட்டுவீர்கள்.

நண்பர்களே நம் பதிவில் இருக்கும் இலவச சோதிடம் நம் பதிவுக்கு வரும் நபர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இலவச சோதிட ஆலோசனை வழங்கப்படுகிறது. 

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பார்க்க விரும்பினால் இந்த பதிவை மட்டும் சொல்லுங்கள் அவர்கள் பதிவு மூலம் வரட்டும். பல நண்பர்கள் நேரிடையாக என்னுடைய மொபைல் போனுக்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள் அனைவரும் பதிவுக்கு வந்தால் மட்டும் தான் என்னால் பலன் வழங்கமுடியும். 

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




எதிரி யார் ?



வணக்கம் நண்பர்களே! நாம் ஆறாவது வீட்டு அதிபதி தசாவை பற்றி பார்த்துவந்தோம். அந்த தசாவில் நமக்கு வரும் எதிரி யார் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம். 

எதிரி யார் என்று உங்களுக்கு தெரிந்துவிட்டால் நீங்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா. உங்களுக்கு அமையும் எதிரிகள் சினிமா எதிரிகள் விட கொடுமையானவர்களாக இருப்பார்கள். நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் போது அப்படிதான் அமைகிறார்கள். அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பததாற்க்காக தான் இப்பதிவில் அவர்கள் யார் என்று உங்களுக்கு காட்ட போகிறேன். வருங்கள் யார் என்று பார்க்கலாம்.

ஆறாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டுடன் சம்பந்தபட்டால் உங்களுடைய தம்பி தங்கைகள் உங்களுக்கு எதிரிகளாக வருவார்கள். பக்கத்து வீட்டுகாரனும் உங்களுக்கு எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி நான்காம் வீட்டுடன் சம்பந்தபட்டால் உங்கள் நண்பர்கள் தான் உங்களுக்கு எதிரியாக இந்த தசாவில் வருவார்கள். தாயாருடன் சண்டை வரும். என்னதான் இருந்தாலும் எந்த தாயும் தன் மகனை எதிரியாக பார்க்கமாட்டார்கள். சிறிய சண்டை மட்டும் வரும்.

ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டுடன் சம்பந்தபட்டு ஆறாவது வீட்டு தசா நடந்தால் உங்கள் குழந்தைகள் தான் உங்களுக்கு எதிரியாக வருவார்கள். சில பையன்கள் தாய் தந்தையை அடித்துவிடுவார்கள். அது எல்லாம் இந்த மாதிரி தசாவில் தான் நடக்கும்.

ஆறாவது வீட்டு அதிபதி ஏழாம் வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடந்தால் உங்கள் மனைவி தான் உங்களுக்கு முதல் எதிரியாக வருவார்கள். சில மனைவிகள் கணவனை அடிப்பது எல்லாம் இந்த மாதிரி தசாவில் தான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் அதுபோல உங்களுடைய தொழில் நண்பர்கள் உங்களுக்கு எதிரியாக வரலாம்.

இதில் பார்த்தீர்கள் என்றால் ஆறாவது வீடு எந்த அதிபதியோ அவர் தான் உங்களுக்கு முதல் எதிரியாக இருப்பார்கள். அந்த தசாவில் இந்த மாதிரி வீடுகள் சம்பந்தபட்டு தசா நடக்கும் போது இவர்கள் எல்லாம் எதிரியாக மாறுவார்கள். ஆறாவது வீடு ஏழாம் வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடக்கும் போது உங்கள் மனைவி உங்கள் எதிரி வீட்டுக்கு போய்விடுவார்கள் எவ்வளவு கொடுமை டா சாமி. இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கிறது.

ஆறாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடந்தால் உங்கள் தந்தை தான் உங்களுக்கு எதிரியாக அமைவார். உங்களுடைய தந்தை வழி உறவிலும் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மறைமுகமாக எதிரிகள் தோன்றுவார்கள். அவர்கள் தான் உங்களுக்கு எதிரி. உங்களை பற்றி மேல் அதிகாரிகளிடம் போட்டு கொடுத்துவிடுவார்கள் இதுதான் மறைமுக எதிரி.

ஆறாவது வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடந்தால் உங்கள் மூத்த சகோதரர்கள் தான் உங்களுக்கு முதல் எதிரியாக வருவார்கள். இரண்டாவது எதிரியாக உங்களுடைய மருமகன் மருமகள் எதிரியாக வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Tuesday, June 26, 2012

நான் பேச நினைப்பதெல்லாம்



வணக்கம் நண்பர்களே! நான் கடந்த நான்கு நாட்கள் சென்னையில் இல்லை திடீர் பயணமாக வெளியூர் சென்றுவிட்டேன். இன்று தான் சென்னை திரும்பி உள்ளேன். பல mail கள் வந்துள்ளன. அவற்றை எல்லாம் இன்று தான் பார்க்க முடிந்தது. உங்களுடைய பிரச்சினைகளை மற்றும் சந்தேகங்களை எல்லாம் இனிமேல் தீர்த்துவிடலாம்.

நான் உங்களிடம் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். நான் சோதிட சம்பந்தமாக பதிவுகளை எழுதி கொண்டு வந்துள்ளேன் அதன் மூலம் நீங்கள் படித்து உங்கள் சோதிட அறிவை பெருக்கி கொள்கிறீர்கள். மற்ற பதிவர்கள் நடத்தும் பதிவுகளையும் நீங்கள் படித்து வருகிறீர்கள் நல்லது தான்.

இந்த சோதிட அறிவை மட்டும் நீங்கள் வைத்துக்கொண்டு நீங்கள் சோதிடம் பார்த்தால் உங்கள் பலன் மாறலாம். நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைபடும் விஷயம் என்ன என்றால் உங்கள் ஜாதகத்தை பார்த்துக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஜாதங்களை பார்த்துக்கொள்ளுங்கள் ஆனால் சோதிடத்தை அனைவருக்கும் பார்த்தால் அவர்களின் பாவ கணக்கில் இருந்து பத்து சதவீதமானாலும் நம்முடைய பாவகணக்கில் ஒட்டிக்கொள்கிறது. இதனை நான் அனுபவ ரீதியாகதான் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

நம்முடைய பாவகணக்கை நாம் போக்கி கொள்வதற்க்கே நாம் அவ்வளவு பாடு படவேண்டியதாகியிருக்கும் இதில் அடுத்தவர் பாவகணக்கு நமக்கு எதற்கு என்று சும்மாக இருப்பது நலம் பயக்கும்.

சோதிடத்தை பாடத்தில் கற்றதைக்கொண்டு பலன் சொல்லுகிறோம் ஆனால் அனுபவத்தில் சோதிட தொழில் செய்யும் போது பல சிக்கல்கள் உள்ளன. பல ஜாதகங்கள் மாந்தீரிகத்தால் தாக்கபட்டுள்ளன அதனை கண்டுபிடிப்பது ஏட்டு கல்வி உதவாது. அதனை பக்தியால் மட்டும் உணரமுடியும்.

 நாம் ஏட்டில் உள்ளதை படித்துவிட்டு பலன் சொல்லிக்கொண்டிருப்போம் ஆனால் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நல்ல பக்தி உள்ளவனால் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். நான் கூட மாந்திரிகத்தை எல்லாம் ஆரம்பத்தில் நம்பவில்லை போக போக தான் இதனை அறிந்தேன். அதன் மூலம் தாக்கபட்ட ஜாதகத்தை நாம் பார்க்கும் போது நமக்கும் ஒரு பிரச்சினை உருவாகிறது இதனை நான் அனுபவத்தில் உணர்ந்ததால் தான் உங்களுக்கு இதனை சொல்லுகிறேன்.

நீங்கள் நினைக்கலாம் இவன் மட்டும் சம்பாதிக்க வேண்டும். அடுத்தவன் சம்பாதிக்ககூடாது என்று நினைக்கலாம். அது தவறு இல்லை தான் அதற்கு என்று ஒரு சில வழி முறைகள் உள்ளன அதனை கடைபிடித்து இந்த தொழிலை செய்யுங்கள்.

இங்கு படிப்பவர்களில் சோதிட தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் 100 ல் ஒருவர் தான் சோதிட தொழில் செய்வார்கள். அனைவரும் அவர்களுடைய ஜாதகங்களுக்கு பலனை மட்டும் பார்த்துக்கொள்வதற்க்காக தான் இப்பதிவுக்கே வருகிறார்கள். நீங்கள் சோதிடராக மாற வேண்டும அல்லது சோதிடதொழில் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது ?

அடுத்த பதிவில் அதனை பற்றி பார்க்கலாம்.

என்னடா ஆறாவது வீட்டு தசா பற்றி பதிவு வந்துகொண்டிருந்தது திடீர் என்று இந்த தலைப்பு வருகிறது என்று நினைக்கலாம் இடையில் உங்களிடம் கொஞ்சம் பேசலாம் என்று தான் இந்த தலைப்பை வைத்து பதிவை வெளியிட்டேன்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Thursday, June 21, 2012

வில்லாதி வில்லன் 10



வணக்கம் நண்பர்களே ! ஆறாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் நீண்ட தூரப் பயணத்தால் லாபம் தரும். ஆன்மீக சம்பந்தமாக அதிக தொடர்பு இருக்கும். அவர்கள் இருக்கும் துறையில் ஆராய்ச்சி செய்து பட்டங்களை வெல்பவர். 

கெடுதல் பலன் என்று பார்த்தால் தந்தையாரின் சொத்துக்கள் அழியும். பிறர் ஏமாற்றிவிடுவார்கள். உங்களுக்கு நம்பிக்கை துரோகம் ஏற்படும். பெரியவர்கள் உங்களை விரோதத்துடன் பார்ப்பார்கள். 

ஆறாம் அதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் நல்ல வேலையில் இருப்பார். பதவி உயர்வு நடக்கும். சாதாரண வேலையில் இருந்தால் பதவி உயரவு அடிக்கடி நடந்து மேனேஜர் வேலைக்கே போய்விடலாம். அந்தளவுக்கு பதவி உயர்வு இருக்கும். தன்னுடைய உழைப்பை வைததே முன்னேற்றம் காணலாம். 

கெடுதல் பலன் என்று பார்த்தால் இவர்கள் சம்பாதிக்கும் வழியானது திருட்டுதனமாகவும் பிறரை ஏமாற்றி சம்பாதிப்பார்கள். இந்த தொழில் தான் இப்பொழுது நல்ல தொழிலாக மாறிவிட்டது. மற்றவர் பார்வையில் அயோக்கியன் என்று பெயர் எடுப்பார்கள். மனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் வேலையாட்கள் உதவி கிடைக்கும். பங்கு சந்தையில் லாபம் பெறலாம். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி தரும். வழக்குகளில் வெற்றி பெறலாம்.

கெடுதல் பலன் என்று பார்த்தால் மூத்த சகோதர சகோதரிகள் நோய்யுடன் இருப்பார்கள். கடன் வாங்கி கஷ்டத்தை அனுபவிப்பார்கள். பெரிய லாபம் வரும் என்று மனகோட்டை கட்டி இருப்பார்கள் ஆனால் லாபம் வராது.

ஆறாம் வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து அல்லது சம்பந்த பட்டு தசா நடந்தால் வேலையாட்களால் பிரச்சினை உருவாகும்.  பெரிய கம்பெனி நடத்தி வந்தால் தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு கம்பெனி நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். எதிர்பார்த்தே இருக்கமாட்டீர்கள் திடீர் செலவு வந்துவிடும். மருத்துவ செலவும் ஏற்பட்டு விடும். தூக்கம் வராது. 

எந்த வீடும் கெடுதல் பலனை முழுமையாக கொடுக்காது அதே போல் நல்ல பலனையும் முழுமையாக கொடுத்துவிடாது மாற்றி மாற்றி தான் நடைபெறும். இதுவரை பொறுமையாக படித்தற்க்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆறாம் வீட்டு அதிபதியின் தசா தொடரும் ...

நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, June 20, 2012

வில்லாதி வில்லன் 9



வணக்கம் நண்பர்களே! ஆறாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் என்ன பலன் என்று கடந்த பதிவில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம். 

ஆறாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் கடுமையான அவமானம் ஏற்படும். அதனாலே தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வரும். அதே பொருட்கள் திருட்டு போகும். விபத்துகளும் ஏற்படும். 

நாம் உங்களை ஆறாம் அதிபதியின் தசாப்பற்றி சிந்திக்க சொன்னேன். யாரும் சிந்திப்பது மாதிரி தெரியவில்லை ஒரு நண்பர் மட்டும் எனக்கு பல பேர்களில் தகவல் கேட்டு அனுப்புகிறார். அவருக்கு மட்டும் தான் சோதிடத்தில் விருப்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவரை பாராட்டுகிறேன் அவருக்கு நல்ல சோதிட தாகம் இருக்கிறது. பல பேர் படிக்கிறார்கள் ஆனால் எந்த தகவலும் தருவதில்லை.

நான் ஆறாம் வீட்டுகே வருகிறேன். இந்த அளவிற்க்கு ஆறாம் வீடு ஒருவரை தாக்குவதற்க்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். நான் தேடியவரையிலும் எனக்கு கிடைத்த தகவல்கள் ஒருவர் முன்ஜென்மத்தில் செய்த குற்றங்களினால் ஏற்படுகின்றது என்று கிடைத்தது. 

ஒருவர் முன்ஜென்மத்தில் செய்த ஒருவர் ஒருவனை ஏதோ காரணத்தினால் தாக்கி இருக்கலாம் அல்லாது ஒருவனை கொலை செய்து இருக்கலாம். அதனின் கர்மாதான் இந்த ஜென்மத்தில் தாக்கிறது என்று சொல்லி உள்ளார்கள்.  ஒருவன் செய்த சண்டையால் தான் ஆறாம் அதிபதி தாக்குகிறார் என்று சொல்லுகிறார்கள். நானும் அதை தான் நினைத்து உள்ளேன். 

ஒவ்வொரு வீட்டிற்க்கும் என்ன காரணம் இருக்கிறது என்று தெரியும் அதை எல்லாம் நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

இதை தான் கர்மா பலன் என்று சொல்லுகிறார்கள். கர்மாவின் தாக்கம் குறையுமா என்று பார்ப்பதற்க்கு அம்சத்தில் அந்த கிரகம் பலன் பெற்றால் குறைவதற்க்கு அதாவது பரிகாரம் செய்து குறைக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆறாம் வீட்டு அதிபதி தாக்குவது எல்லாம் பார்த்தீர்கள் என்றால் திடீர் என்று தான் தாக்கும் பெரும்பாலும். ஆமா கொலை செய்பவன் திடீர் என்று தான் கொலை செய்வார்கள். சொல்லிவிட்ட கொலை செய்வார்கள்? திடீர் என்று நடப்பதால் தாக்கபடுபவனுக்கு ஒன்றும் புரிவதில்லை எங்கு இருந்து வருகிறது என்று கூட தெரிவதில்லை. 

உங்களுக்கு ஆறாம் வீட்டு தசா நடந்தால் நிறைய தானம் செய்யுங்கள் அது உங்களை காப்பாற்றும். பல தானம் செய்வதால் தான் இந்த மாதிரி தசா நடந்தால் உங்களை அந்த புண்ணியம் காப்பாற்றும்.

ஆறாவது அதிபதியை பொருத்து தாக்குதல் இருக்கும். ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொன்றாக பரிகாரம் இருக்கும் அது எல்லாம் நாம் அவ்வப்போது பார்க்கலாம்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Tuesday, June 19, 2012

வில்லாதி வில்லன் 8



வணக்கம் நண்பர்களே என்ன ஆறாம் வீட்டு தசா பிடித்து இருக்கிறாத? இல்லையா? எனறு ஒரு வரி சொல்லிவிட்டு போங்கள். மனிதனுக்கு ஒரு பழக்கம் இருக்கும் தனக்கு வேண்டியது என்றால் எடுத்துக்கொள்வான் இல்லை என்றால் அந்த பக்கம் தலைவைத்து படுக்கமாட்டான். அதே மாதிரி தான் சோதிடமும் நீங்கள் நினைத்து கொண்டு இருப்பீர்கள் நமக்கு தான் ஆறாம் வீட்டு தசா நடக்கவில்லையே என்று அல்லது ஆறாம் வீட்டு தசா நமது வாழ்க்கையில் வரவே வராது என்று நினைத்தால் அவ்வாறு நினைப்பது தவறாகும். அனைத்து வீடுகளும் சேர்ந்தது தான் சோதிடம்.

நான் கீழே கொடுக்கும் பலன்களை பாருங்கள்

1.ஒருத்தருக்கு அமையும் வேலை வாய்ப்புகள்
2.ஒருவர் கடன் எங்கு பெறுவது
3.ஒருவர் தேர்வில் வெற்றி பெறமுடியுமா
4.ஒருவர் பதவி பெறமுடியுமா
5.ஒருவர் வழக்கில் வெற்றி பெறமுடியுமா
6. ஒருவருக்கு திருமண வாழ்வில் பிரச்சினை வருமா அதவாது திருமண வாழ்வு பிரியுமா
7.ஒருவருக்கு எந்த மாதிரி உணவு உண்பார்
8.அவரின் செரிமான சக்தி எப்படி இருக்கும் என்று பார்ப்பது
9. ஒருவர் செல்ல பிராணிகளை வளர்க்க முடியுமா
10.ஒருவருக்கு எந்த நோய் வரும்
11.ஒருவருக்கு எந்த எண்ணங்கள் முழுமையாக நிறைவேறுமா
12. ஒருவடைய தந்தைக்கு தொழில் எப்படி அமையும்.

விட்டால் இப்படியே கேட்டுகொண்டே போகலாம் அந்த அளவுக்கு தகவல் அடங்கி உள்ளது மேலே கொடுத்த தகவல்களை பாருங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நடப்பது தான் அதை எல்லாத்தையும் தாங்கி நிற்கும் வீடு தான் ஆறாம் வீடு. அந்த வீடு இல்லாமல் மனிதன் இல்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.

நாம் இன்னும் உள்ளே போக போக நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சும்மாவா சொன்னார்கள் சோதிட கட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திற்க்கும் ஒரு கோடிக்கு மேல் விஷயங்கள் இருக்கின்றன என்று அதை எல்லாம் நீங்கள் போய் பார்க்க வேண்டும் என்றால் என்னால் முடிந்தவரை போய் காட்டலாம் அதற்கு நீங்க செய்ய வேண்டியது என்னை ஊக்கபடுத்துவது தான் என்ன செய்வீர்களா?

பார்ப்போம்.

இப்பொழுது நாம் ஆறாம் வீட்டு அதிபதி ஏழில் இருந்து அல்லது சம்பந்தபட்டு தசா நடந்தால் என்ன செய்யும் என்று பார்க்கலாம் வேலை ஆட்கள் பிரச்சினை செய்து கொண்டு இருப்பார்கள்.  பெரிய கம்பெனியாக இருந்தால் சும்மா பிரச்சினை செய்ய மாட்டார்கள் சங்கம் வைத்து போராட்டத்தில் ஈடுபாடுவார்கள். கூட்டு தொழிலாக இருந்தால் நல்ல லாபம் பெறலாம். கடன் யாரும் பெற்று இருந்தால் கடனை உடனே திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

கெடுதல் தரும் விஷயம் என்ன என்றால் பெரிய பண்ணைகளை வைத்து இருந்தால் இப்பொழுது எல்லாம் எஸ்டேட் தொழில் எல்லாம் நசிந்துவிடும் முன்னோர்கள் சொத்துகள் எல்லாம் சிதையும்.

ஆறாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் அல்லது சம்பந்தம்பட்டு தசா நடந்தால் நீங்கள் பிறர் மேல் வழக்கு தொடர்ந்து இருந்தால் அந்த வழக்கு தோல்வியை தரும். வேலைகளால் பிரச்சினை தோன்றும். வீட்டில் பணம் இருக்காது. கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். பணம் இல்லை என்றால் சண்டை தான் வரும். அது தான் நடக்கும்.

என்னுடைய ஊருக்கு பக்கத்தில் ஒருவன் இருந்தான் அவனுக்கு ஆறாம் வீட்டு தசா நடந்த போது எட்டாம் வீட்டில் இருக்கும் போது அவனுடைய சொத்துகளை எல்லாம் விற்று பணத்தை எல்லாம் தண்ணி அடித்தே காலி செய்தான்.

அவனுக்கு ஆறாம் வீடு நீர் ராசியாக இருந்தது பொதுவாக ஆறாம் வீடு நீர்ராசியாக இருந்து அந்த ஆறாம் வீட்டு தசா நடந்தால் அவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள். இப்பொழுது எல்லாம் குடிக்காதவர்களே கிடையாது என்று கேட்கலாம் ஒத்து கொள்கிறேன்.

என்ன தான் இருந்தாலும் சென்னை வாசி மாதிரி குடிக்க முடியாது. நான் இருக்கும் கொட்டிவாக்கம் அலுவலகத்திற்க்கு எதிர் மாதிரி தான் டாஸ்மாக் கடை இருக்கிறது அப்பா என்ன கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே தள்ளுமுள்ளு தான் நீங்களும் தள்ளுமுள்ளு போட்டீர்களா என்று கேட்காதீர்கள் அலுவலகத்தில் இருந்து பார்த்தால் தெரியும். நமக்கு அந்த பழக்கம் கிடையாது. போகிற போக்கில் பார்த்தால் தமிழ்நாட்டில் நாற்பது வயதிற்க்கு மேல் ஒருத்தனும் உயிரோடு இருக்கமாட்டான் போல் தெரிகிறது.

இவன் குடிப்பதற்க்காகவோ சொத்துகளை விற்று நடுத்தெருவிற்க்கு வந்தவன்.வீட்டில் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் கூட அனைத்து சொத்துகளையும் விற்றவன். அதனால் அவன் குடும்பமே அழிந்தது. அந்த குடும்பத்திற்கு சொந்தமான பங்காளிகள் சேர்ந்து அந்த வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார்கள்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 





Monday, June 18, 2012

வில்லாதி வில்லன் 7


வணக்கம் நண்பர்களே ஆறாம் வீட்டு தசா வை பற்றி பார்த்து வருகிறோம். நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன் உங்களை ஆறாம் வீட்டைப் பற்றி நன்றாக சிந்திக்க சொன்னேன் யாரும் சிந்திக்கவில்லையா அப்படி யாரும் சிந்திருந்தால் எனக்கு தகவலை அனுப்புங்கள்.

என்னிடம் பேசிய நண்பர்கள் மட்டும் தான் தகவலை அனுப்புகிறார்கள். படிப்பவர்கள் அனைவரும் தகவலை அனுப்புமாறு கேட்டு கொள்ளுகிறேன். அப்படி இல்லை என்றால் இது போதும் என்று குறைந்த தகவலுடன் அடுத்த தலைப்பு மாறிவிடலாம். நீங்கள் விருப்பத்துடன் படிக்கிறீர்கள் என்று எழுதி கொண்டு இருக்கிறேன். உங்கள் விருப்புங்களை தெரியபடுத்துங்கள்.

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருப்பது அல்லது சம்பந்தபட்டு இருந்து தசா நடந்தால் என்ன நடக்கும் என்று பார்த்து வந்தோம் அந்த வகையில் அதே தொடர்கிறது இந்த பதிவில் இந்த மாதிரி அமைப்பு இருந்து இந்த தசா நடந்தால் கண்டிப்பாக அது பொற்காலமாகதான் அமையும் ஏன் என்றால் இது ராஜயோகம் தரும் தசா அமைப்பு.

உங்களுக்கு மாமன் இருந்தால் அவர்கள் உங்கள் மேல் உயிரே விடுவார்கள் அந்தளவு பாசம் இருக்கும். அவர்கள் மூலமாக சொத்து சேரும். உங்கள் குழந்தைகளின் பொருளாதார நிலை உயரும்.  உங்கள் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பணம் சேரும்.

இடம் மாற்றலாகி உயர் பதவி வாய்ப்பும் கிடைக்கும். நீங்கள் எல்லாம் இந்த மாதிரி தசா நடந்தால் அது உங்களுக்கு பொற்காலம் தான். நீங்கள் இளம் வயதில் இருந்து ஏதோ ஒன்று வெற்றி பெறனும் என்று நினைத்து இருந்தீர்கள் என்றால் அது ஏதுவாக ஆனாலும் இருக்கலாம் இந்த மாதிரி உள்ள தசாவில் தொடங்குகள் எளிதாக வெற்றி பெறலாம்.

நாம் எல்லாருமோ ஒரு வியாபாரம் செய்து பெரிய அளவில் வரவேண்டும் என்று நினைத்திருப்போம். எங்காவது கடனை வாங்கி வியாபாரத்தை தொடங்குவோம். அந்த வியாபாரம் படுத்துவிடும் என்ன டா இப்படி நடந்துவிட்டதோ என்று நினைக்க தோன்றும். உண்மையில் ஜாதகத்தில் பார்த்தீர்கள் என்றால் அந்த நேரத்தில் உங்களுக்கு கெடுதல் தரும் தசா நடந்து கொண்டிருக்கும்.

கெடு பலனை தரும் தசாவில் தொடங்கினால் இந்த மாதிரி தான் நடைபெறும். நாம் செயலில் வெற்றி பெறாமல் போவதற்க்கு காரணம் தொடங்கிய தசாதான் பிரச்சினையாக இருக்கும்.

நீங்கள் நினைத்து இருக்கலாம் ஆறாம் வீ்டு என்றாலே பிரச்சினை தான் அதனை கண்டு பயப்பட்டு இருக்கலாம் ஆனால் பாருங்கள் சோதிட சாஸ்திரத்தில் ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்து தசா நடந்தால் அது ராஜயோகத்தை தரும் என்று கூறியுள்ளார்கள்.

நீங்கள் நினைக்கும் அனைத்திலும் வெற்றியை தரும் தசா இதுதான். நீங்கள் சும்மா தொட்டாலே போதும் அந்த செயல் வெற்றியை தரும்.

உங்கள் தந்தையாருக்கு ஏதும் தொழில் இருந்தால் அந்த தொழிலில் அவர் கொடி கட்டும் பறக்கும் காலமாக இருக்கும். அவர் எந்த தொழில் செய்தாலும் அதில் அவர் வெற்றி பெற்றுவிடுவார்.

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்து தசா நடந்தால் அது ராஜயோகம் தரும் தசா என்கிறோம் அதனால் ஒரு சிக்கலும் உள்ளது என்ன என்றால் களத்திர வீட்டுக்கு அதவாது ஏழாம் வீட்டிற்க்கு ஆறாம் வீடு பனிரெண்டாம் வீடாக வருகிறது அல்லவா ஆறாம் அதிபதி பலம் பெற்று தசா நடந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை உண்டு செய்துவிடுவார். இருவரில் பிரித்து அயல்நாடு செல்ல வைப்பார். ஒரு சிலருக்கு மனைவி இழப்பு கூட நடைபெறும்.

மூத்த உடன் பிறப்புகளுக்கு ஆயுள் நன்றாக இருக்கும். ஒரு சில கிரகங்களை பொருத்து ஆயுள் மாறுபடும். ஒரு சில ஜாதகங்களில் இந்த தசாவில் மூத்த உடன் பிறப்புகள் மரணமும் எய்து இருக்கிறார்கள்அது அவர் அவர் ஜாதகத்தை பொருத்தது.

பொதுவாக ஆறாம் பாவம் என்பதே நோய் கடன் தான் முக்கியமாக நாம் எடுத்துக்கொள்ளுவது. ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருக்கும் போது நடக்கும் தசாவில் ஒருவர் எளிதில் கடனை பெற்றுவிடலாம். அது தான் ஆறாம் அதிபதியின் தன்மை.

இன்றைய வாழ்க்கையில் கண்டிப்பாக கடன் வாங்கி தான் வாழ்க்கையை ஒட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒட்ட வேண்டியது ஆகிவிட்டது இந்தியாவே கடனில் தான் இருக்கிறது இதில் மக்கள் என்ன செய்வார்கள் அவர்களும் கடனை வாங்கிதான் தன் வாழ்க்கையை நகர்த்தவேண்டியது இருக்கிறது.

வெளிநாடுகளில் ஒருவருக்கு வேலை இல்லை என்றால் அவருக்கு அந்த நாடு அவர்களுக்கு மாத மாதம் பணம் தருகிறது. இங்கு உள்ள அரசியல்வாதிகள் அவர்களின் மூலதனத்தை எப்படி பெருக்கலாம் என்று செயல்பட்டால் பாமரன் என்ன செய்வான் அவன் கடனைதான் வாங்குவான்.

என்ன பாமரன் வட்டிக்கு வாங்கி வாழ்க்கையை நடத்தும் போது அவன் வட்டியின் சுமையால் பாரத்தை தாங்கமுடியாமல் மாண்டுவிடுகிறான். இது தான் இன்றைய நிலை.

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்து தசா நடக்கும் போது அவன் வட்டிக்கு பணம் வாங்குவான் ஆனால் நிறைய பேர் இதில் திருப்பி தரமாட்டார்கள் நம்ம நாட்டு வங்கியில் பணத்தை கோடிக்கணக்கில் வாங்கி ஏப்பம் விட்ட அரசியல் வாதிகள் எல்லாம் இதற்குள் அடக்கம்.

இதில் வேடிக்கையான விஷயத்தை பார்த்தீர்கள் என்றால் ஆறாம் வீடு பலன் பெற்றால் ஏழாம் வீடு பலனை இழந்துவிடும் என்று பார்த்தோம் அல்லவா நம்ம ஆட்கள் ஆறாம் வீட்டு தசாவில் கடனை வாங்கிவிட்டு மனைவி எல்லாம் விட்டு விட்டு ஒடிவிடுவார்கள் நம்ம ஊர் அரசியல்வாதிகள் வாழ்க்கையிலும் இப்படி நடக்கும் சாதாரண தொழிலாளி வாழ்க்கையிலும் இது நடக்கும். ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. இது எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் இது எல்லாம் தசா செய்யும் வேடிக்கை.


அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



Sunday, June 17, 2012

வில்லாதி வில்லன் 6



வணக்கம் நண்பர்களே! நாம ஆறாம் வீட்டின் தசாவை பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவில் ஆறாம் வீட்டு அதிபதி தசாவில் அவர் ஐந்தாம் வீட்டில் அமர்நதால் அந்த தசாவில் என்ன நடக்கும் என்றால் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும் எந்த வியாதியும் வராது.

உங்கள் குழந்தைகள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் துணையால் உங்களுக்கு நன்மை ஏற்படும் அவர்கள் உங்களை காலை வாரி விடமாட்டார்கள். நீங்கள் இந்த நேரத்தில் கோர்ட் வழக்கில் போய் நின்றால் வழக்கில் உங்களுக்கு தோல்வி ஏற்படும். வழக்கில் வெற்றி பெறுவது மிக கடினம்.

நீங்கள் வேலையில் இருந்தால் வேலை செய்யும் இடங்களில் உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களிடம் சாதகமாக நடந்து கொள்ளமாட்டார்கள். நீங்கள் ஒரு கம்பெனி நடத்திக்கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் கம்பெனியில் உள்ளவர்கள் அதாவது உங்கள் கம்பெனியில் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உண்மையாக நடந்துகொள்ள மாட்டார்கள் கம்பெனியின் சொத்துகளை திருட ஆரம்பிப்பார்கள்.

எனக்கு தெரிந்தவர் ஒருவர் இரும்பு லேத் வைத்திருந்தார் அவருக்கு இந்த தசா ஆரம்பம் ஆனவுடன் அவருடைய கம்பெனியில் தேவையற்ற இரும்புகள் நிறைய சேரும் அந்த இரும்புகளை வேறு உபகரணங்களுக்கு பயன்படுத்துவார்கள். அந்த கம்பெனியில் வேலை செய்த ஆட்கள் அந்த இரும்புகளை திருடி அவர்கள் காசு பார்த்துவிட்டார்கள். இதை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செய்து வந்து இருக்கிறார்கள் இவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

வேலை செய்த ஆட்கள் வேலையை விட்டு சென்றுவிட்டார்கள் அதன் பிறகு தான் இவருக்கு விஷயமே தெரியவந்துருக்கிறது அதற்குள் அவர்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை.

இந்த தசாவில் முதலாளிகள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். ஏன் என்றால் வேலை செய்யும் ஆட்களின் கை ஓங்கும் நேரம் இந்த தசாதான் அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும்.

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டிலேயே இருந்து தசா நடக்கும் போது நீங்கள் தேர்தலில் வெற்றி பெறலாம். இந்த மாதிரி அமைப்பு உள்ளவர்கள் படு திறமையான ஆட்களாக தான் இருப்பார்கள்.

அப்புறம் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாதாரண காரியமா எவ்வளவு வேலை செய்ய வேண்டும் இப்பொழுது எல்லாம் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது.தேர்தலில் நிற்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை பணம் கொடுக்கவில்லை என்றால் ஒரு பயலும் ஒட்டு போடமாட்டான்.

இந்த மாதிரி அமைப்பு உங்களுக்கு இருந்தால் நீங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம். லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் தான் ஜெயிக்கமுடியும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். வெற்றி பெற்று நன்றாக சம்பாதிக்கலாம்.

சில பேருக்கு ஆறாம் வீட்டு தசா ஆரம்பித்து ஆறாம் வீட்டுடன் சம்பந்தம் பட்டு முடியும் தருவாயில் தேர்தல் வரும் அந்த தேர்தலில் வெற்றி பெறுவார்கள் ஆனால் அவர்களால் அந்த பதவியில் இருந்து கொண்டு சம்பாதிக்கமுடியாது ஏன் என்றால் ஒன்று தசா முடிவடைந்து விடும் அல்லது அந்த அதிபதி வேறு வீட்டுடன் சம்பந்தம் பட்டுவிடவார் ஆறாம் அதிபதி.

இப்படி இருப்பவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அந்த பதவியில் இருந்து கொண்டு பணத்திற்க்கு கஷ்டபடுவார்கள். தேர்தலில் ஜெயித்து சம்பாதிப்பது என்றால் ஒன்று அந்த துறையில் திருட வேண்டும் அல்லது அந்த பதவியை வைத்து மிரட்டி அடுத்தவர்களிடம் பிடுங்கவேண்டும் அதற்கு ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டுடன் சம்பந்தம்பட்டால் தான் நடக்கும். இதை எல்லாம் செய்ய நல்ல தைரியம் இருக்க வேண்டும் அல்லவா.

இன்றைக்கு நீங்களே பாருங்கள் பார்க்கலாம் அனைத்து அமைச்சருமா சம்பாதிக்கிறார்கள் ஒரு சிலர் தான் நல்ல சம்பாதிப்பார்கள் பலர் சும்மா தான் இருப்பார்கள். பதவியில் இருக்கும் போது சும்மா இருந்து சாப்பிட்டு விட்டு பதவி போனவுடன் சாப்பாட்டுகே கஷ்டபடுவார்கள்.

இதை சில கிராமங்களில் எல்லாம் பார்த்து இருக்கலாம் உங்கள் ஊர் பஞ்சாயத்து தேர்தலில் நின்று பணத்தை லட்சகணக்கில் செலவு செய்தவர்கள் பல பேர் அந்த பணத்திற்க்கு வட்டி கூட கட்ட சம்பாதித்தது இல்லை சில பேர் பார்த்து இருந்தீர்கள் என்றால் அவர்கள் இருக்கும் நிலத்தை எல்லாம் விற்று செலவு செய்து போண்டியாக ஆகிவிடுவார்கள் இது எல்லாம் இந்த தசாவில் தான் நடக்கும்.

தேர்தல் என்றால் பெரிய தேர்தல் தான் நிற்க வேண்டும் என்று இல்லை உங்கள் கம்பெனியில் கூட லேபர் தேர்தல் நடக்கும் அல்லது இந்த மாதிரி ஏதோ தேர்தல் நடக்கலாம். அதில் நீங்கள் வெற்றி பெறுவதற்க்கு கூட இந்த மாதிரி தசா நடக்க வேண்டும். நீங்கள் ஜாதகம் பார்த்து தேர்தலில் நின்றால் சும்மா நாமினேஷன் செய்து கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேர்தலில் ஜெயிக்கலாம். அது தான் தசாவின் சக்தி.

என்ன நண்பர்களே இப்பதிவில் இந்த தகவல் போதுமா நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் சோதிடத்துடன் சம்பந்தபட்டு தான் நடக்கிறது நமக்கு தான் இதனை பார்ப்பதற்க்கு நேரமும் இருப்பதில்லை போதிய அறிவும் இருப்பதில்லை.

நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

சந்தேகம்


கேள்வி 

நண்பரே! எனக்கு கும்ப லக்னம் பிறக்கும் போதே ஆறாம் அதிபதி சந்தரன் திசை முடித்ந்து விட்டது.இனிமேல் எந்த பயமும் இல்லை என கொள்ளலாமா? வேறு எந்த திசை கெடுதல் செய்யும்.எனக்கு நான்காம் திசையாக குருதிசை நடக்கிறது.அதன் பலன் என்ன ? இதில் தசாவிற்கு தான் இது பொருந்துமா? இல்லை புத்திக்குமா?
ஆனந்த் பாண்டிச்சேரி  


பதில்

வணக்கம் நண்பரே நல்ல கேள்வி கேட்டு உள்ளீர்கள். ஒரு மனிதனை எடுத்துக்கொண்டால் தினம் சந்தோஷத்தில் இருக்கிறான ஒவ்வொருவருக்கும் சிறு சந்தோஷம் சிறு கவலை ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. நாம் சோதிடத்தை நடைமுறை வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்த்தால் புரியும். விதி விலக்காக ஒரு சிலர் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக மனது ரீதியாக கஷ்டபடலாம். 

சில பேர் ஆறாம் வீட்டு தசாவை அவர்கள் வாழ்க்கையில் சந்தித்து இருக்க மாட்டார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுவது இல்லையா எந்த தசாவும் அனைத்து வீட்டு பலனையும் சேர்த்து தான் கொடுக்கும். என்ன அந்த வீட்டிற்க்கு கொஞ்சம் முக்கியதுவம் கொடுக்கும். இதைப்பற்றி நான் எழுத இன்னும் 100 பதிவை தாண்டவேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் நினைத்துக்கொண்டு இருக்கும் சோதிட விதி எல்லாம் அரைகுறையாக தான் இருக்கிறது ஆனால் சில விதிகள் எல்லாம் இன்னும் வெளியில் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்தளவுக்கு சோதிடத்தில் கரை காண்பது கடினமான ஒன்று.

இந்த ஆறாம் வீட்டு தசாவை பற்றி குறைந்தது 50 பதிவு நாளும் போடலாம் என்று நினைத்து இருக்கிறேன். ஆனால் நேரம் எப்படி கிடைக்கும் என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்தால் 1000 பதிவு போதாது. நீங்கள் சோதிட அறிவு பெறவேண்டும் என்றால் வலைபதிவுகளில் படிப்பது போதாது உங்கள சோதிட அறிவை பெருக்கி கொள்ள வெறி கொண்ட தாகம் இருக்க வேண்டும். 

புத்தகங்கள் படிப்பது 25 சதவீதம் தான் 75 சதவீதம் அனுபவத்தில் தான் வரும். அனுபவத்தில் வரும் போது ஒரு கேள்விக்கு விடை எங்கு இருந்து வருகிறது என்று தெரியாது அந்த விடை கடவுள் உங்கள் மூலம் சோதிடம் கேட்பவருக்கு அளிக்கலாம் அந்த நிலையை அடைய உழையுங்கள். 

லாபநோக்கத்தோடு ஒரு விடை இந்த கேள்வியை உங்களுக்காக தான் கேட்டீர்கள் என்றால் உடனே நீங்கள் கட்டண சோதிடத்தில் வந்துவிடுங்கள் உங்களுக்கு அங்கு தான் சரியான தீனி கிடைக்கும்.



நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.