Followers

Thursday, December 31, 2015

நன்றி


ணக்கம்!
          2015 ஆம் ஆண்டு என்னால் முடிந்தளவுக்கு பதிவுகளை தந்து இருக்கிறேன். அதனை பொறுமையாக படித்து வந்தீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கின்ற காரணத்தால் குறைவான பதிவேயே தரமுடிந்தது. 

2015 ஆம் ஆண்டில் அம்மன் அருளால் நிறைய நண்பர்களின் நட்பு கிடைத்தது. வருடந்தோறும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட எனக்கு புதியவர் ஒருவராவது அறிமுகமாகிறார். அதற்கு காரணம் நீங்கள் தான். நமது ஜாதககதம்பத்தைப்பற்றி பல நண்பர்களுக்கு பரிந்துரை செய்வதால் இது நடக்கிறது.

இந்த ஆண்டில் தான் ஆன்மீகப்பயிற்சிக்கு என்று புதிய ஒரு தளத்தை உருவாக்கினேன். நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்கள் ஆன்மீகப்பயிற்சிக்கு என்று புதிய தளம் கட்டணசேவையோடு உருவாக்கப்பட்டது. 

2016 ஆம் ஆண்டில் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன். 2016 ஆண்டு பல புதிய விசயங்களோடு உங்களை சந்திக்கிறேன்.  
            புதிய வருடத்தை குடும்பத்தோடு மகிழ்வாக கொண்டாடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 30, 2015

அனுபவம்


வணக்கம்!
          ஒவ்வொருவரையும் சந்திக்கும்பொழுது அவர்களை நான் நன்றாக கவனிப்பேன். கவனிக்கும்பொழுதே தெரிந்துவிடும் பல சாமியார்களை தேடி சென்றவர் என்று அவர்களே காட்டிக்கொடுத்துவிடுவார்கள்.

நம்ம ஆட்கள் ஒவ்வொரு ஆன்மீகவாதியாக சென்று கையில் கயிறு கட்டுதல் கழுத்தில் தாயத்து கட்டுதல் ரசமணியை கட்டுதல் என்று ஏகாப்பட்ட கட்டு கட்டி இருப்பார்கள். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். மீண்டும் இதனைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

ஒரு சிலருக்கு இப்படி சாமியார்களை தேடிசெல்லும் விதி அவர்களின் ஜாதகத்தில் இருக்கும். அந்த காரணத்தால் பல பேரிடம் சென்று வருவார்கள்.இதுவே இவர்களுக்கு பிரச்சினையை கொடுக்கும் ஒரு விசயமாகவும் அமைந்துவிடுகிறது.

பிரச்சினை அதிகம் இருக்கும்பொழுது சாமியார்களை தேடிச்செல்லுவது ஒரு இயல்பான ஒரு விசயம் தான் அதற்க்காக இதனையே தொழிலாக வைத்துக்கொள்ள கூடாது. அப்படியே சாமியார்களை சந்தித்தாலும் அவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட பொருட்களை வாங்கி உங்களின் உடலில் வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களின் நன்மைக்காக இதனை சொல்லுகிறேன்.

2 ஆம் தேதி அம்மன் பூஜை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 29, 2015

புத்தாண்டு நாளில் செய்யவேண்டியவை


வணக்கம்!
        புத்தாண்டை வரவேற்க நமது நண்பர்கள் திட்டமிட்டு இருப்பார்கள். நமது பதிவை அதிக இளைஞர்கள் படிப்பதால் இந்த பதிவை அவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று தருகிறேன்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை அதிகமாக கொண்டாட நினைக்காதீர்கள். அமைதியாக கொண்டாடுங்கள். பிறர்க்கு தொந்தரவு கொடுக்காமல் புத்தாண்டை கொண்டாடுங்கள். எதையும் அதிகமாக செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள் நிதானமாக இருங்கள்.

முடிந்தளவுக்கு புத்தாண்டு அன்று பயணம் செய்வதை தவிர்க்க பாருங்கள். எங்கு பார்த்தாலும் கூட்டமாக இருக்கும் கூட்டமான இடத்திற்க்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

ஒரு முறை நான் சென்னையில் இருக்கும்பொழுது புத்தாண்டு அன்று கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து ஒரு இடத்திற்க்கு சென்றேன். அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. பிள்ளையார் கோவிலில் உள்ள விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசை இருந்தது. 

கொஞ்ச தூரத்தில் ஒரு கோவில் தென்பட்டது. அந்த கோவிலுக்கு செல்லலாம் என்று சென்றேன். அதுவும் பிள்ளையார் காேவில் தான் ஆனால் அங்கு ஒருத்தரும் வழிபடவில்லை. உடனே நான் சென்று வழிபட்டு வந்தேன்.அந்த வருடத்தில் இருந்து நல்ல மாற்றம் வாழ்க்கையில் தெரிய ஆரம்பித்தது.

புத்தாண்டு அன்று நமது நண்பர்கள் அனைவரும் அதிக கூட்டம் உள்ள கோவிலை தரிசனம் செய்வதைவிட சிறிதாக கூட்டம் இல்லாத கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். குலதெய்வம் அருகில் இருந்தால் குலதெய்வத்தை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 28, 2015

பரிகாரம்


ணக்கம்!
          தற்பொழுது நிறைய நண்பர்கள் சோதிடம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே செய்யும் பரிகாரத்தை பரிந்துரை செய்வது உண்டு. 

பொதுவாக சோதிடம் பார்க்கும்பொழுது நீங்களே பரிகாரம் செய்வதுபோல் சொல்லுவது உண்டு. ஒரு சிலருக்கு பரிகாரம் எங்களின் மூலம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள்.

எங்களின் வழியாக பரிகாரம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் சோதிடம் பார்க்கும்பொழுது என்னிடம் தெரிவித்துவிடுங்கள். இந்த பிரச்சினைக்கு நீங்களே பரிகாரம் செய்துக்கொடுத்துவிடுங்கள் என்றால் நானே உங்களுக்கு பரிகாரம் செய்துக்கொடுப்பேன்.

பரிகாரம் என்பதை நானே உங்களுக்கு செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது கிடையாது. இதனை தகவலாக தான் தெரிவிக்கிறேன். ஒரு சிலர் இதனை எதிர்பார்த்து என்னிடம் சோதிடம் பார்த்து இருக்கிறார்கள். நான் இவர்களே செய்துக்கொள்ளட்டும் என்று சொல்லி அனுப்பியுள்ளேன். பிறகு தான் இதனைப்பற்றி தெரியவந்தது அதனால் உங்களுக்கு சொல்லுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


ணக்கம்!
          நமது அம்மன் பூஜை இந்த மாதம் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளேன். மூன்று தேதிக்குள் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன்.

அம்மன் பூஜைக்கு மாதம் மாதம் பணம் அனுப்புவர்கள் இந்த மாதம் முன்கூட்டியே அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் முன்கூட்டியே அனுப்பமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. 

இதுவரை வேண்டுதல் வைக்காமல் இருப்பவர்களுக்கும் வேண்டுதல் வையுங்கள். ஏன் என்றால் நான் சந்திக்கும் நபர்கள் பல பேர் இதுவரை வேண்டுதல் வைக்காமல் இருக்கின்றனர். நம்பிக்கையோடு வேண்டுதலை வையுங்கள் கண்டிப்பாக அம்மன் நடத்திக்கொடுக்கும்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வையுங்கள். அம்மன் பூஜை காலை நேரத்தில் நடக்கும். மனமருகி வேண்டுதலை வைக்கும்பொழுது அது கண்டிப்பாக நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 27, 2015

ஆலய தரிசனம் :: சங்கமேசுவரர்


வணக்கம்!
          நேற்று ஈரோடு சென்று அங்கிருந்து பவானி சென்றடைந்தேன். நண்பர் வாருங்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைத்து சென்றார். பவானி கூடுதுறை என்ற இடத்தில் சங்கமேசுவரர் கோவில் அமைந்துள்ளது. பவானி காவேரி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதி என்று மூன்று நதிகளும் கூடும் இடத்தில் கூடுதுறை அமைந்துள்ளது. 


இறைவன் பெயர் சங்கமேசுவரர் இறைவி பெயர் வேதநாயகி என்கின்ற வேதாம்பிகை. கோவிலின் உள்ளே ஆதிகேசவப் பெருமாளும் சௌந்திரவல்லி தாயாரும் தனிக்கோவிலாக இருக்கிறார்கள். சைவம் மற்றும் வைணவம் இணைந்த கோவில். இந்த இடத்தை திருநணா என்றும் அழைக்கிறார்கள். தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கிறார்கள்.


முருகன் கோவிலுக்கு பின்புறமாக ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. நால்வராலும் பாடல் பெற்ற தலம்.

ஜாதகத்தில் அதிகம் தோஷம் இருக்கின்றவர்கள் இந்த தலத்திற்க்கு சென்று நதியில் நீராடிவிட்டு இறைவனை தரிசித்துவிட்டு வாருங்கள்.  அற்புதமான தலத்தை அனைவரும் கண்டிப்பாக தரிசனம் செய்யவேண்டும். 

நண்பர் தீபன் உதவியால் இதனை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். ஆருத்ரா தரிசனம் அன்று நல்ல ஒரு தரிசனத்தை காணமுடிந்தது. நேற்று இரவே புறப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அனுபவம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை படித்துவிட்டு நமது நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் போன் செய்து என்னுடைய பாக்கியஸ்தானம் எப்படி இருக்கின்றது என்பதை கேட்கிறார்கள். ஒருவர் ஆன்மீகப்பக்கம் வருகிறார்கள் என்றால் அவ்வளவு எளிதில் வந்துவிடமுடியாது. அந்தளவுக்கு அடிப்பட்டு தான் வருவார்கள். ஏன் அடிபடுகிறார்கள் என்றால் பாக்கியஸ்தானம் வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

எனக்கு நல்லவாழ்க்கை அமைந்துவிட்டது தெரிந்துக்கொள்வதற்க்கு தான் ஜாதககதம்பத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன் என்றால் உங்களுக்கு பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது. நல்ல வாழ்க்கை அமையவில்லை என்று இரண்டு தரப்பினரும் படிக்கலாம். யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருங்கள். விழிப்புணர்வோடு இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நாம் நன்றாக இருந்தாலும் கூட நாம் செய்யும் புண்ணியம் நமக்கு அடுத்த பிறப்பிலும் நன்மையளிக்கும் அப்படி இல்லை என்றாலும் நமது வாரிசுகளுக்கு நன்மையளிக்கும் என்பதால் இதனை எல்லாம் செய்யவேண்டும்.

நமது முன்னோர்கள் இதனை எல்லாம் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அவர்கள் சொன்னாலும் இன்றைக்கு இருக்கும் தொலைதொடர்பு சாதனங்கள் அந்த காலத்தில் இல்லை. அது எல்லாம் இன்றைய காலத்தில் தான் வெளிப்படுகிறது.

நம்ம அப்பா இதனை எல்லாம் செய்யாமல் விட்டுவிட்டாலும் அவரை குறைச்சொல்லுவதை விட்டுவிட்டு நாம் இதனை எல்லாம் செய்வோம். சொத்தோடு நமது வாரிசுக்கு புண்ணியத்தையும் கொடுப்போம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 26, 2015

தாய் தந்தை கொடுக்கும் வாழ்க்கை

ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் நான்காவது வீட்டு அதிபதியும் இரண்டும் நல்ல கிரகங்களாக இருந்தால் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை சுகப்போகமாக அமைந்துவிடும். இரண்டு கிரகங்களும் பகையாக இருந்தால் ஜாதகர் படும்பாடு அதிகமாக போய்விடும்.

பொதுவாக நான்காவது வீடு சரியில்லை என்றால் அதிகமான பிரச்சினையை சந்திக்கவேண்டியிருக்கும். பிரச்சினை என்றால் இருப்பதற்க்கு ஒரு வீடு கூட இல்லாமல் போய்விடும். சந்நியாசியாக தான் இருக்கவேண்டும். 

நான்காவது வீடு தான் தாயை காட்டும் இடம்.ஒன்பதாவது வீட்டு அதிபதியும் நான்காவது வீட்டு அதிபதியும் இணையும்பொழுது தாய் தந்தையர் உடனிருந்து நல்ல வாழ்க்கையை தன்னுடைய பெற்றோர்களால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அமைத்துக்கொடுத்துவிடுவார்கள்.

இரண்டும் பகையை தருகின்றது என்றால் தாய் தந்தையர் சண்டை சச்சரவால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பிரச்சினையை அதிகம் ஏற்படுத்திக்கொடுத்துவிடுவார்கள்.

ஒருவருக்கு ஒன்பதாவது வீட்டு அதிபதியும் நான்காவது வீட்டு அதிபதியும் இணைந்து குறிப்பிட்ட வயது வரை நல்லது செய்தாலே போதும் சம்பந்தப்பட்ட நபர் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும். இரண்டில் ஒன்று சரியில்லை என்றாலும் பல பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 25, 2015

பணம்


ணக்கம்!
          ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை யாராவது ஒருவர் செலவு செய்ய பிறப்பார்கள். அதே குடும்பத்தில் உள்ள நபர்களாக கூட இருக்கும்.

ஒரு வழியில் பணம் வந்தால் மறுவழியில் சென்றுவிடும். ஒரு சிலருக்கு கொஞ்ச காலம் சென்று செல்லும் ஒரு சிலருக்கு அவரின் காலத்திலேயே சென்றுவிடும்.

ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் என்றால் தான் கஷ்டப்பட்டதோடு இருக்கவேண்டும் தன் வாரிசு ஒரு நாளும் கஷ்டப்படகூடாது என்று நினைக்கிறார்கள். இது ஒரு நியாயமான ஒரு கொள்கை தான் அதே நேரத்தில் கஷ்டப்பட்ட பணத்தை எப்படி காப்பாற்றவேண்டும் என்பதை தன் வாரிசுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை.

பல குடும்பங்களை நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் அதிலும் நல்ல பணக்கார குடும்பத்தில் உள்ள நபர்களை பார்க்கும்பொழுது அவர்களின் வாரிசுகள் எந்த விதத்திலும் ஒரு நல்லநிலையில் இல்லை. நல்ல நிலை என்றால் தன்னுடைய சொத்தை காப்பாற்ற கூட தெரியாமல் ஊதாரியாக செலவு செய்பவர்களாக இருக்கின்றார்கள்.

என் அனுபவத்தில் பார்த்துவிட்டு தான் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன். சம்பாதிப்பது கஷ்டம் என்றால் அதனை கடைசிவரை எப்படி காப்பாற்றுவது என்பதை உங்களின் வாரிசுகளுக்கு சொல்லிக்கொடுத்துவிடுங்கள். செல்லமாக வளர்க்கிறேன் என்று ஊதாரிதனமாக வளர்த்துவிடாதீர்கள். 

பணம் என்பது குடும்பத்தில் யாராவது ஒருத்தர் நல்ல சம்பாதிப்பார். அப்படி சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தில் உள்ள நபர்கள் உட்கார்ந்து செலவு செய்துக்கொண்டு இருப்பார்கள். பணம் எப்படி வரும் என்றால் ஜாதகத்தில் நல்ல அமைப்பு ஒருவருக்கு இருந்து அது வரும் அப்படி வரும் பணத்தை நீண்ட காலத்திற்க்கு சேமிக்கவேண்டும்.

எல்லா குடும்பமும் பல தலைமுறை நன்றாக வாழவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். பணம் சம்பாதிப்பதோடு இருந்துவிடாதீர்கள். சம்பாதித்த பணத்தை எப்படி செய்தால் நீண்ட காலத்திற்க்கு இருக்கும் என்பதையும் சொல்லிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சொகுசு வாழ்வு


வணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியும் சம்பந்தப்பட்டு ஒருத்தருக்கு இருந்தால் அவர்க்கு அனைத்து சுகமும் கிடைக்கும். அனைத்து சுகமும் கிடைக்கும் என்றால் அவரின் அப்பா நன்றாக சேர்த்து வைத்து இருக்கவேண்டும்.

இன்றைய காலத்தில் பல பேர்களுக்கு அவர்களின் அப்பா நன்றாக சேர்த்து வைத்த சொத்தை வைத்து அனுபவிப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். இவர்களின் ஜாதகத்தை எல்லாம் எடுத்து பார்த்தால் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

பாக்கியஸ்தான அதிபதி ஏதாவது ஒரு வழியில் நான்காவது வீட்டோடு தொடர்புக்கொள்ளும்பொழுது இப்படிப்பட்ட நிலை இருக்கும். பொதுவாக மனிதனுக்கு அனைத்தையும் அனுபவித்து பார்க்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும். அனுபவிக்கவேண்டும் என்றால் பணம் வேண்டும் அல்லவா. அவன் அவன் சம்பாதித்து சொகுசாக வாழவேண்டும் என்றால் வாழ்க்கையில் முப்பது வருடகாலம் எடுக்கும். 

ஒரு சிலருக்கு முப்பது வருடத்தில் சம்பாதித்துவிடமுடியும் ஒரு சிலருக்கு அந்த காலம் அதிகமாக கூட செல்லலாம். சொகுசு வாழ்வை அதிகம் அனைவரும் விரும்பினாலும் அது கிடைப்பதற்க்கு அதிக நாள்கள் ஆகலாம். 

பாக்கியஸ்தான அதிபதியும் நான்காவது வீட்டு அதிபதியும் சேரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தந்தை நன்றாக சம்பாதித்து வைத்திருப்பார். அதனை சொகுசாக அனுபவிக்க இவர் பிறந்து இருப்பார். இப்படிப்பட்ட அமைப்பு உங்களுக்கு அமைந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்.

நாளை ஈரோடு செல்கிறேன். அந்த பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
                          இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 24, 2015

கேள்வி & பதில்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை படித்துவிட்டு ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். அதாவது பாக்கியஸ்தானத்தில் நீங்கள் சொல்லுவது போல் தர்மமே செய்துக்கொண்டு இருக்கமுடியுமா குடும்ப வாழ்க்கையில் இருந்துக்கொண்டு இது எல்லாம் சாத்தியப்படுமா என்று கேட்டார்.

ஒருவன் சம்பாதிக்கும் சம்பாதிக்கிற பணத்தில் பத்து சதவீதம் தன் மதத்திற்க்கு கொடுக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கின்றது. இதனை தசமகணக்கு என்று சொல்லுவார்கள். இந்து மதத்தில் மட்டும் இது கிடையாது. 

இல்லறவாழ்க்கை பிரம்மசரிய வாழ்க்கை என்ற இரண்டு வாழ்க்கையில் எது அதிக பிரச்சினையை சந்திக்கிறது என்றால் அது இல்லறவாழ்க்கை தான். இல்லறவாழக்கையில் பிரச்சினை அதிகம் வருகின்றது என்றால் அதற்கு தீர்வு நம்மால் எத்தனை நாள் தான் முடியும் என்று சமாளிக்கமுடியும் நம்மை மீறி ஒரு சக்தி நம்மை ஆட்டி படைக்கிறது என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்க்கு இந்த பாக்கியஸ்தானம் உதவுகிறது.

இன்றைய காலத்தில் நன்றாக கணக்கை போட்டு பார்த்தால் நம்மை மீறி பல செலவுகள் சம்பந்தமே இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கும்.  அதனை எல்லாம் பாக்கியஸ்தானத்திற்க்கு செலவு செய்தால் போதும். மிகப்பெரிய பணம் பாக்கியஸ்தானத்திற்க்கு நாம் செலவு செய்யலாம்.

தசமகணக்கு படி பத்து சதவீதம் வேண்டாம் அதில் பாதி ஒரு ஐந்து சதவீதம் எடுத்து செலவு செய்யலாமே. உங்களின் வாழ்வும் உங்களின் வாரிசும் நன்றாக இருக்க இந்த ஐந்து சதவீதம் உதவுமே. 

நீங்கள் தர்மம் செய்துக்கொண்டே இருக்கமுடியாது அந்தளவுக்கு பிஸியாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பாக்கியஸ்தானத்தை கவனிக்காமல் உங்களின் வேலையை மட்டும் கவனித்துக்கொண்டு இருந்தால் கொஞ்சகாலத்திற்க்கு பிறகு நீங்கள் பிஸியாக இருக்கமாட்டீர்கள். உங்களிடம் இருந்து அனைத்தும் சென்றுவிடும்.

கடவுள் இல்லை என்று பேசிக்கொள்பவன் கூட வெளியில் தெரியாமல் பாக்கியஸ்தான வேலையை செய்துக்கொண்டு இருப்பான். நல்ல வாழ்க்கை அமையவேண்டும் நமது வாரிசும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு இல்லறத்தில் இருப்பவர்களும் இந்த பாக்கியஸ்தானத்தில் சொல்லப்பட்ட கருத்தை மேற்க்கொண்டு வரவேண்டும்.

விரைவில் ஈரோடு அருகில் இருக்கும் பவானியில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தான அதிபதியின் நிலை


ணக்கம்!
           ஒன்பதாவது வீட்டு அதிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து அமைந்தால் பெரிய யோகம் கிடைக்கும்.  ஒன்பதாவது வீட்டு அதிபதி மற்றும் லக்கினாதிபதியும் பரிவர்த்தணை அடைந்தாலும் நல்ல யோகம் அமையும். எந்த வித கஷ்டமும் இல்லாமல் அனைத்தும் அவனை வந்தடையும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதியும் இரண்டாவது வீட்டு அதிபதியும் அதாவது தனவீட்டு அதிபதியும் சேர்ந்து அமைந்திருந்தால் ஜாதகனுக்கு உழைப்பே இல்லாமல் காசு வந்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு இதனை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

ஒன்பதாவது வீட்டு அதிபதியும் மூன்றாவது வீட்டு அதிபதியும் இணைந்த ஜாதகர்கள் அடிக்கடி பயணம் மேற்க்கொண்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு சில மருந்து பொருட்கள் விற்பவர்களின் ஜாதகத்தில் இப்படி இருக்கின்றது. ஒரு சிலர் வெளி இடங்களுக்கு சென்று சம்பாதிக்கும் நிலையில் இருப்பார்கள்.

மூன்றாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டு அதிபதியோடு இணையும்பொழுது ஒரு சிலருக்கு பிரச்சினை வருவது உண்டு. அதிக அலைச்சலை கொடுக்கும் வேலை நடக்காது. வேலை நடந்தால் கூட அந்த வேலையால் பெரிய அளவில் சம்பாதிப்பது கிடையாது.

ஒரு சிலருக்கு அவரின் தந்தைக்கும் அவருக்கும் பிரச்சினை இருக்கின்றது. அதிகப்படியான வம்பு வழக்குக்கள் வருகின்றன. அவர் அவர்களின் ஜாதகத்தைப்பபொறுத்து பலன் மாறுப்படும்.

இன்று பெரம்பலூர் செல்லுகிறேன். பெரம்பலூரில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 23, 2015

சிவன் நாள்கள்


ணக்கம்!
          தொடர்ச்சியாக சிவனின் நாளாக வருகின்றது. அதாவது இன்று பிரதோஷம் நாளை பெளர்ணமி அதன் பிறகு ஆருத்ரா தரிசனம் என்று சிவனின் நாளாக வருகின்றது. 

இன்று பிரதோஷத்திற்க்கு கோவிலுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு இந்த பதிவை தருகிறேன். ஒவ்வொரு பிரதோஷத்திற்க்கும் இரண்டு கோவிலுக்கு அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுத்துவிடுவது உண்டு. 

பதிவில் ஏன் சொல்லுகிறேன் என்றால் இதனை நீங்களும் செய்யவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். உங்களால் ஒரு கோவிலுக்கு வாங்கிக்கொடுங்கள். இதனை கடைசிவரை கடைபிடித்து வாருங்கள். பெரிய அளவில் செலவு ஆகாது. குறைந்த செலவில் நமக்கு புண்ணியம் சேர்க்கும் நிகழ்வாக அமைந்துவிடும்.

நாளை பெளர்ணமி கிரிவலம் செல்லுங்கள். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் அப்படி இல்லை என்றால் உங்களின் ஊரில் உள்ள சிவன் கோவிலிலேயே செல்லலாம். வெள்ளிக்கிழமை மாலை உங்களின் குலதெய்வத்திற்க்கு அல்லது இஷ்டதெய்வத்திற்க்கு பச்சைபரப்புதலை செய்யலாம்.

நாளை பெரம்பலூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் உள்ள நபர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 22, 2015

பாக்கியத்தை பலப்படுத்தும் கோச்சாரம்


ணக்கம்!
          ஒன்பதாவது வீட்டில் தீயகிரகங்கள் ஒரு பெண்ணிற்க்கு அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பெண் இளம் வயதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். தேவையில்லாத வம்பு வந்துவிடும். ஒன்பதில் இருக்கும் தீயகிரகம் படி தாண்ட வைத்துவிடும்.

உங்களின் மகளுக்கு அல்லது மகனுக்கு இப்படி இருந்தால் அதற்கு பரிகாரம் செய்யாமல் இருந்தால் கூட அந்த வீட்டை கோச்சார கிரகம் தாண்டுகிற வரை பொறுமையாேடு இருக்கவேண்டும். 

ராகு கிரகம் ஒன்பதாவது வீட்டில் பிறந்தபொழுது இருந்தால் அந்த வீட்டை கோச்சார ராகு கடக்கும் வரை நிதானமாக இருக்கவேண்டும். கோச்சார ராகு கடந்த பிறகு திருமணம் செய்யலாம்.

திருமணத்திற்க்கு மட்டும் இல்லை பல விசயங்களுக்கு இது உதவும். ராகு மட்டும் இல்லை எந்த ஒரு தீயகிரகமும் அப்படி தான் வேலை செய்யும். 

பொதுவாக பெரிய தோஷம் இருக்கும் ஜாதகத்தில் கூட சம்பந்தபட்ட கிரகம் கோச்சாரப்படி தாண்டவேண்டும். தாண்டிவிட்டால் அதன் பிறகு அந்தளவுக்கு வீரியம் இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விளக்கம்


வணக்கம்!
          பொதுவாக நம்ம ஆட்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அனைத்தையும் படிப்பதோடு சரி அதனை எடுத்து எப்படி நம் வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதை யாரும் சிந்திப்பது கிடையாது.

பாக்கியஸ்தானத்தில் சொன்ன கருத்தை என்னிடம் வந்து தான் பரிகாரம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் என்பது எல்லாம் கிடையாது. நீங்களே செய்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் யார் உங்களுக்கு சரியாக வருவார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களிடமே செய்துக்கொள்ளலாம்.

இதனை எல்லாம் சொல்வதின் அர்த்தம் பல பேர் அவர்களால் முடிந்தளவுக்கு பரிகாரமே அல்லது ஏதோ அவர்களின் வழியில் ஆன்மீகத்தின் வழியில் சென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள் என்பதற்க்காக தான் சொல்லுகிறேன். 

சும்மா படித்துவிட்டு அப்படியே சென்றுவிடாமல் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சுட்டிகாட்ட பல பதிவுகளை கொடுக்கிறேன். அனைத்தையும் என்னுடைய அனுபவதில் இருந்து கொடுப்பதால் எப்படியும் இது உங்களுக்கு வேலை செய்யும் அதில் எந்த ஒரு சந்தேகமும் கொள்ளவேண்டியதில்லை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 21, 2015

எதனைப்பார்த்து வாழவேண்டும்?


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வந்தோம். மேலும் சில தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம். பாக்கியஸ்தானம் என்பது ஒரு பல விசயங்களை நமக்கு நன்றாக காட்டும் நமது அலட்சியபோக்கால் அதனை கவனிக்க தவறிவிடுவது உண்டு.

நமக்கு எல்லாம் கிடைத்து அதனால் நமக்கு பிரச்சினை வரும்பொழுது தான் நமக்கு பிரச்சினையே ஆரம்பம் ஆகும். நமக்கு நல்ல குழந்தைகளை கடவுள் கொடுத்திருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த குழந்தை நன்றாக வளர்ந்து அது நம் பேச்சை கேட்டு அதற்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால் பாக்கியம் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்.

நமது பேச்சை கேட்காமல் அது இஷ்டத்திற்க்கு திருமணம் செய்துக்கொண்டு அது சென்றுவிட்டால் அப்பொழுது நமக்கு பாக்கியம் இல்லை என்று அர்த்தம். ஒருத்தருக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் தான் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வாேம். அந்த பெண்குழந்தையை அவர்கள் அதிகமான செல்லம் கொடுத்து வளர்த்துவருவார்கள். அது வயது வந்தவுடன் பெற்றோர்களின் கனவு அந்த பெண்ணுக்கு நல்ல வரனாக பார்த்து திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். அது திருமண வயதில் ஒருத்தனை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துவிட்டு வந்தால் அந்த பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும். அவர்களின் கனவு எல்லாம் சிதைந்துவிடும்.

சோதிட சாஸ்திரத்தில் ராகு கேது பார்த்து வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன என்றால் பாக்கியஸ்தானத்தை பார்த்து வாழகற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான். ராகு கேது பாக்கியஸ்தானத்தை அதிகமாக நிர்வகிக்கும் ஆற்றல் பெற்ற கிரகங்கள். இதன் நிலையை அறிந்து நாம் வாழவேண்டும்.

என்னிடம் வரும் சோதிடம் பார்க்கும் நண்பர்களிடம் சொல்லுவது நான் உங்களுக்கு பரிகாரம் செய்கிறேன் அதற்கு கொஞ்சம் அதிகமாக பணம் தேவைப்படும். இதற்கு நீங்கள் சம்மதித்தல் நான் செய்கிறேன் என்று சொல்லுவேன். அவர்கள் சம்மதித்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நான் செய்வது அவர்களின் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானத்திற்க்கு அதிக முக்கியதுவம் கொடுத்து செய்வேன்.

பாக்கியஸ்தானத்திற்க்கு மட்டும் இப்பொழுது ஒரு சிலருக்கு பரிகாரம் செய்து இருக்கிறேன். அவர்களுக்கு நிரந்தரமான ஒரு வேலை அல்லது நிரந்தரமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறேன். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானத்தையும் நாம் நன்றாக கவனித்துவிட்டால் வாழ்வு நன்றாக அமைந்துவிடும்.

ராகு கேதுவை பார்த்து வாழ்வை வாழகற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதும் இது தான். பாக்கியஸ்தானத்தை பார்த்து நாம் வாழ்ந்துவிட்டால் போதும். எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும்.

அவர் அவர்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானத்தில் என்ன தான் இருக்கின்றது என்பதை பாருங்கள். அதோடு ராகு கேதுவும் எங்கு இருக்கின்றது என்பதை பாருங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்வு என்ன என்பது புரியும். எப்படி வாழவேண்டும் என்ற உங்களின் கனவோடு உங்களின் ஜாதகத்தை ஒப்பிட்டு பாருங்கள். உங்களின் கனவு நடக்குமா என்பது தெரியும். உங்களின் கனவுக்கு பிரச்சினை வருகின்றது என்றால் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 19, 2015

ஆலயதரிசனம்:: குழந்தை வரம் தரும் அம்மன்


ணக்கம்!
          நேற்று காலை உங்களுக்கு பதிவை தந்துவிட்டு பாபநாசம் அருகில் உள்ள திருகருகாவூர் சென்று கர்பகரஷாம்பிகையை தரிசனம் செய்துவிட்டு வந்தேன்.

தஞ்சாவூர் கும்பகோணம் மார்க்கத்தில் பாபநாசம் என்ற ஊரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் திருகருகாவூர் என்ற ஊரில் இந்த பிரசித்துபெற்ற தலம் இருக்கின்றது. அம்மன் பெயர் கர்பகரஷாம்பிகை இறைவன் பெயர் முல்லைவனநாதர். 



அம்மன் பெயருக்கு ஏற்றார்போல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரத்தை கொடுக்கும் அம்மனாக இருக்கிறார். குழந்தை இல்லாத தம்பதியர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்துவிட்டு சென்றால் குழந்தை உருவாகும்.

இறைவனுக்கு பெயர் முல்லைவனநாதர்.முல்லை வன கொடிகள் இறைவன் மேல் படர்ந்ததால் அந்த தடம் இன்றும் சிவா லிங்கத்தின் மேல் இருப்பதை காணலாம் என்று சொல்ல படுகிறது. இந்த லிங்கம் எறும்பு புற்றால் ஆனது என்றும் சொல்லுகின்றார்கள்.


நமது வாடிக்கையார்களுக்கு ஒரு சில வேண்டுதல்கள் இருப்பதாலும் என்னுடைய வேலைக்கும் இந்த கோவிலுக்கு சென்றேன். கருவுற்ற குழந்தை சுயபிரசவம் ஆவதற்க்கும் இந்த அம்மனை வேண்டுகிறார்கள். இதனை தவிர வேறு பிராத்தனை ஏதும் இங்கு செய்யபடுவதில்லை என்று நினைக்கிறேன். அனைவரும் இந்த பயனிற்க்காக மட்டுமே வருகிறார்கள்.


இந்த கோவிலில் வேலை செய்யும் ஆட்களுக்கு எந்த வித உதவியும் செய்யகூடாது என்று தட்டி வைத்துள்ளார்கள். நான் போனபொழுது மூன்று யாசகம் கேட்கும் சாமியார்களை பார்த்தேன். அவர்களுக்கு உதவி செய்துவிட்டு அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர்களின் விருப்பத்திற்க்கு நம்மால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். 

ஜாதககதம்பத்தில் இருந்து வந்த பணம் எல்லாம் இப்படிப்பட்டவர்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருக்கும். அவர்களின் தேவை என்ன என்பதை கேட்டுவிட்டு அவர்களின் விருப்பத்தையும் கேட்பேன். என்னிடம் அதற்கு உண்டான பணம் வரும்பொழுது கொடுத்து அனுப்பிவைப்பேன். இது அனைத்தும் ஜாதககதம்பத்தால் நல்லமுறையில் சென்றுக்கொண்டு இருக்கின்றது. பொதுவாக இவர்களின் தேவை யாத்திரை செல்வதற்க்குதான் அதிகம் இருக்கும். அதற்கு நம்மால் முடிந்த உதவியை செய்துவிடுவது உண்டு.



கோவிலை புதுமைப்படுத்தும் வேலை நடந்துக்கொண்டு இருக்கின்றது. விரைவில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்க்கலாம். கோவிலில் குழந்தை இல்லாதவர்களுக்கு நெய்யை மந்திரம் சொல்லி கொடுக்கிறார்கள். சுயபிரசவத்திற்க்கு விளக்கெண்ணெய் மந்திரித்து கொடுக்கிறார்கள்.

துலாபாரமாக வாழைத்தார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பொதுவாக தமிழ்நாட்டில் கோவிலில் அதிகம் இதனை நான் பார்த்தது கிடையாது ஆனால் இந்த கோவிலில் இப்படி நடக்கிறது.

நல்ல சக்தி வாய்ந்த ஒரு தலத்திற்க்கு சென்றுவந்த திருப்தி எனக்கு கிடைத்தது. நீங்களும் இந்த பகுதிக்கு வரும்பொழுது சென்று வாருங்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் சென்று வாருங்கள்.

தஞ்சாவூர் கும்பகோணம் வழிதடத்தில் பாபநாசம் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து பஸ் வசதி உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதியும் உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி இருக்கின்றது.


மார்கழி மாதத்தில் நிறைய கோவில்களுக்கு சென்ற வர சொல்லிருந்தேன். அனைவரும் சென்று வாருங்கள்.

கீழே உள்ள மூலவர் படம் நெட்டில் இருந்து எடுத்து உங்களுக்கு தந்துள்ளேன்.




அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 18, 2015

முன்னோர் சொத்தும் பாக்கியஸ்தானமும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானம் தந்தை காட்டும் இடம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தந்தையை காட்டும் இடத்தில் நமக்கு கெடுதல் கிரகங்கள் அமைந்தால் அது நமக்கு பிரச்சினையை கொடுக்கும் என்பது தெரியும். 

பொதுவாக நான் எனது ஊரில் சோதிடம் மற்றும் ஆன்மீக வேலைகளை செய்வது கிடையாது. நான் இதனை செய்ய தொடங்கிய நாள் முதலில் இருந்தே பல வெளியூர்களுக்கு சென்று தான் இதனை செய்து இருக்கிறேன். ஜாதககதம்பம் எழுத தொடங்குவதற்க்கு முன்பே எனக்கு பல ஊர்களிலும் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

வெளியூர்களுக்கு சென்று சோதிடம் பார்த்த காரணத்தால் அந்தந்த ஊர்களில் என்னன்ன நடக்கிறது என்பதைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அதிகப்பட்சம் அனைத்து மாவட்டத்திற்க்கும் சென்று வந்திருக்கிறேன்.

அனுபவத்தில் கற்ற பாடம் அதிகம். இப்படி சென்ற ஊர்களில் எல்லாம் அதிகப்பட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் அவர் அவர்களின் குடும்ப சொத்து தகராறு காரணமாக பிரிக்கபடாமல் இருக்கின்றது. குடும்ப சொத்து கோர்ட்டில் பிரச்சினையால் வழக்காக இருக்கின்றது.

குடும்பத்தில் உள்ள நபர்கள் அதிகமான சொத்திற்க்கு ஒவ்வொருவரும் ஆசைப்பட்டு இப்படி செய்துக்கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டில் அதிகமாக வெட்டு குத்து நடப்பதும் இப்படி சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பிக்குள் சண்டை சச்சரவு இருக்கின்றது.

பொதுவாக இதனை பேசி தீர்த்துக்கொள்ளலாம் ஆனால் சமாதானத்திற்க்கு செல்லாமல் அனைவரும் கோர்ட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். இது எல்லாம் என்று வெற்றி பெற்று இவர்களுக்கு கிடைக்கும். இப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் அவர்களின் பாக்கியஸ்தானம் கெட்டு இருப்பதை பார்க்கலாம்.

இதனை படிக்கும் நீங்களும் ஏதாவது ஒரு வழியில் முன்னோர்களின் சொத்துக்கள் பிரச்சினையில் உள்ளதை அனுபவத்தில் பார்த்து இருக்கலாம் அல்லது உங்களுக்கே இப்படி நடந்திருக்கலாம்.

இதற்கு எல்லாம் ஒரு வழி என்ன என்றால் சமாதானமாக செல்வது நல்லது .உங்களின் பாக்கியஸ்தானத்தில் என்ன கிரகம் அமைந்திருக்கிறதோ அதனை பார்த்துவிட்டு அதற்கு பரிகாரத்தை செய்துவிட்டு அதன் பிறகு சமாதானத்திற்க்கு செல்வது நல்லது.

பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்யாமல் சென்று சமாதானம் பேசினால் உங்களுக்கு பிரச்சினை தான் மிஞ்சும். சமாதானத்தை எதிர்தரப்பினர் ஏற்கமாட்டார்கள் அதனால் பரிகாரத்தை செய்துவிட்டு பேசுங்கள். நாட்டின் பிரச்சினையை பேசி தானே தீர்க்கிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் கோர்ட் கேஷ் என்று அலையவேண்டும். பணம் செலவு செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 17, 2015

பாக்கியஸ்தானத்தில் சந்திரன்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன் நடக்கும் என்பதைப்பற்றி சொல்லிருந்தேன். சந்திரனை பொறுத்தவரை பிறக்கும்பொழுது சந்திரனின் நிலையை கருத்தில் கொண்டு பலனை சொல்லவேண்டும்.

சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்தால் பலன் வேறுபடும். சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் ஒரு பலனை கொடுக்கும். பொதுவாக சந்திரன் ஒன்பதில் இருக்கும்பொழுது அடிக்கடி கவிழ்த்துவிடும். எதிலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைக்கவிடாது.

சந்திரனோடு எந்த கிரகமும் சேரகூடாது. அதாவது எந்த ஒரு தீயகிரகங்களுக்கம் சேர்ந்தால் சந்திரன் நல்ல பலனை கொடுக்காது. சந்திரனோடு சுபக்கிரகங்கள் சேர்ந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

சந்திரனோடு தீயகிரகங்கள் சேரும்பொழுது தந்தைக்கும் பிரச்சினை அதோடு தாயின் நிலையும் பிரச்சினையாகிவிடும். சந்திரனோடு சனி சேர்ந்தால் தாயின் உயிருக்கும் கெடுதலை உண்டாக்கிவிடும்.

சந்திரனோடு செவ்வாய் சேரும்பொழுது தந்தைக்கும் ஜாதகனுக்கும் வெட்டு குத்து நடந்துவிடும். ஒரு சில கிராமங்களில் தந்தையை அவனின் பையன் கொன்றுவிடும் நிகழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது.

சந்திரன் செவ்வாய் கூட்டணி உள்ள ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அவரின் தாய்க்கு விபத்து ஏற்பட்டு காயங்களோடு இருந்ததையும் காணமுடிகிறது.

சந்திரன் மற்றும் சுக்கிரன் கூட்டணி சேர்ந்தால் பல பெண்களோடு தொடர்புக்கொண்டு அதனாலும் பிரச்சினை உருவாகவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. 

சந்திரன் ராகு அல்லது கேது கூட்டணி அமைத்தால் அவன் ஒரு கிறுக்குபிடித்தவனாக இருக்கிறான். ஒரு சிலர் எதற்கும் அஞ்சாதவனாக இருக்கிறான்.

சந்திரன் ஒன்பதில் அமர்ந்து சந்திரனுக்கு நல்ல பார்வை கிடைத்தால் அவன் நல்ல தர்மசெயல்களை செய்பவனாக இருக்கிறான். பலருக்கு அவன் வழிகாட்டியாக இருக்கிறான்.

உங்களுக்கு சந்திரன் ஒன்பதில் அமர்ந்தால் அந்த நன்றாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி சந்திரனுக்கு ஒரு பரிகாரத்தை செய்துவிடுங்கள். சந்திரன் எப்படி அமைந்தாலும் அவன் அவன் செய்யும் புண்ணியம் அவனை காக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 16, 2015

மாதங்களில் நான் மார்கழி


ணக்கம்!
          நாளை மார்கழி மாதம் பிறக்கிறது. மார்கழி என்றாலே ஆன்மீகமாதமாகவே இருக்கும். இதுநாள் வரை காலை எட்டுமணி வரை தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இந்த மாதத்தில் மட்டுமாவது விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு இறைவனை தரிசனம் செய்யலாம்.

விடியற்காலை எழுந்துவிடுவது கூட முடியும் ஆனால் அந்த நேரத்தில் குளிப்பது எப்படி என்பவர்கள் இருக்கலாம். தினமும் குளிக்கும்பொழுது அது பழக்கம் ஏற்பட்டு நீங்கள் தானாகவே குளிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

மேலே சொன்னவற்றை எதுவும் செய்யமுடியவில்லை என்பவர்கள் தினமும் நீங்கள் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். விடியற்காலையில் பல கோவில்களில் விஷேச தரிசனம் நடக்கும் அதிலும் பங்குக்கொள்ளலாம்.

இறைவழிபாட்டிற்க்கு என்று ஒதுக்கவேண்டிய காலம் இந்த மாதம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள கோவிலில் உள்ள இறைவனை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். இந்த மாதம் நானும் பல கோவில்களுக்கு செல்ல உள்ளேன். நீங்களும் சென்று வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானமும் இயல்புவாழ்க்கையும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் நான் சொல்லிக்கொண்டு வரும் கருத்துக்கள் ஜாதககதம்பம் படிப்பவர்களுக்கு பிடிக்கும் அதே நேரத்தில் இதனை நீங்கள் வெளியில் சொன்னால் உங்களை கேலி செய்வார்கள். நீங்கள் இருக்கும் தளம் என்பது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒன்று. பிறர் வேறு விசயத்தில் இருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் தான தர்மம் செய்யுங்கள் என்று சொன்னால் உங்களை முதலில் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.

உங்களின் வேலை இதனைப்படித்து இதுபோல் நடக்கவேண்டும். உங்களின் நிலைக்கு பிறர் வருவதற்க்கு அதிக காலம் எடுக்கும். என்ன காரணம் என்றால் அவர்களுக்கு இன்னமும் காலம் இதற்கு வரவில்லை என்று தான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

உங்களின் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் சென்று நீங்கள் பாக்கியஸ்தானத்தில் உள்ள கருத்தை சொல்லுங்கள். அவர்களின் பதில் இவன் ஏண்டா இப்படி மாறிவிட்டான். தான செய்யனுமாமே அவன் அவன் தண்ணி அடிப்பதற்க்கே நேரம் இல்லை என்று இருக்கின்றோம் என்று சொல்லுவார்கள்.

இப்படி எல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு முறை வேண்டுமானால் சொல்லலாம். எந்த நேரமும் இதனைப்பற்றி சொல்லதேவையில்லை. பாக்கியஸ்தானத்தில் செய்துக்கொண்டிருக்கும் விசயத்தில் உடனடியாக பலனை எதிர்பார்க்காதீர்கள் அது ஒருபுறம் செய்துக்கொண்டே இருப்பாோம் என்றாவது ஒரு நாள் வரட்டும் என்று இருந்துவிடுங்கள்.

பொதுவாக நாங்கள் செய்யும் பரிகாரம் அனைத்தும் பாக்கியஸ்தானத்தை முன்னிறுத்தி அதன் வழியாக பரிகாரம் செய்வோம். கேரளமுறையில் செய்யும் பரிகாரமும் கூட இப்படி தான் செய்வார்கள். பரிகாரம் என்று வரும்பொழுது நீங்கள் இப்படி செய்துக்கொண்டு பலனை உடனடியாக எதிர்பார்க்கலாம். என்றோ ஒரு நாள் பலன் வரட்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள் எங்கோ யாருக்கும் தெரியாமல் கூட செய்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
                        அம்மனை அலங்காரம் செய்தவர் ராசிபுரம் இராஜ்குமார் மற்றும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்.
                     





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
                       நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு





Monday, December 14, 2015

பாக்கியஸ்தானத்தில் சந்திரன்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். பாக்கியஸ்தானத்தில் சந்திரன் அமைந்தாலும் அது நல்ல பாக்கியத்தை கொடுக்கும். பல நண்பர்களுக்கு நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். குரு மற்றும் சுக்கிரன் போல் பாக்கியத்தை வாரி வழங்ககூடிய ஒரு கிரகம் தான் சந்திரனும்.

பாக்கியஸ்தானத்தில் சந்திரன் அமரும்பொழுது மிகப்பெரிய தொடர்பு எல்லாம் ஏற்படுத்திக்கொடுக்கும் இந்த காலத்தில் நல்ல தொடர்பு இருந்தால் பெரிய ஆளாக மாறிவிடுகிறார்கள் அல்லவா. பாக்கியஸ்தானத்தில் அமரும் சந்திரன் அப்பேர்பட்ட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறார்.

ஒன்பதில் அமரும் சந்திரன் பெருந்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். பெருந்தன்மை என்பது இன்றைய காலத்தில் இது குறைவாகவே இருக்கின்றது என்று சொல்லலாம். யாரும் எந்த விதத்திற்க்கும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள். ஒரு சின்ன விசயத்தை கூட பெரிய அளவில் கொண்டு போகாமல் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கும் நபர்களுக்கு பாக்கியம் நன்றாக இருக்கும். ஒன்பதில் அமரும் சந்திரன் அதனை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

சந்திரன் நிறைய சொத்துக்களை சேர்த்து கொடுத்தாலும் அதனை தர்மகாரியங்களுக்கு செலவிட இவர்கள் விளைவார்கள். அதனால் இவர்கள் அரசர்களை போல் வாழ்வார்கள் என்று சொல்லலாம்.

பொதுவாக சந்திரன் ஒன்பதில் அமரும்பொழுது இப்படிப்பட்ட பாக்கியத்தை ஏற்படுத்தி தரும். உங்களுக்கு அப்படி நடைபெறவில்லை என்றால் ஏதாவது சின்ன பிரச்சினை இருக்கும். ஜாதகத்தை பார்த்து பரிகாரத்தை செய்தால் நன்றாக வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 13, 2015

பழமொழியும் பாக்கியஸ்தானமும்


ணக்கம்!
          ஒரு இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அந்த திருமணம் நடைபெறும் இடத்தில் ஒரு பெண் இவர்கள் கெட்டுவிடவேண்டும் என்று நினைத்து தன்னுடைய மூக்கில் ஒரு குச்சியை எடுத்துவிட்டது. மூக்கில் குச்சியை விட்டவுடன் தும்மல் வரும். தும்மல் ஒரு அபசகுணம் என்பதால் திருமணம் நடைபெறும் தம்பதியர் நன்றாக வாழமாட்டார்கள் என்று நினைத்து இப்படி செய்தார் ஒரு பெண்.

பையனை பெற்ற அம்மையார் தாழியை எடுத்துக்கொடுக்கும்பொழுது தும்மினார் வாழவேண்டும் தூரத்தில் இருப்பவர் வாழவேண்டும் இடையில் இருப்பவர் வாழவேண்டும் என் மகனும் வாழவேண்டும் என்ற தாழியை எடுத்துக்கொடுத்து கட்ட சொன்னதாம் அந்த பையின் அம்மா.

தும்மலை வேண்டும் என்று வரவழைத்த பெண்ணும் வாழவேண்டும். தூரத்தில் இருப்பவரும் வாழவேண்டும். இடையில் இருப்பவர் என்றால் இந்த கல்யாணத்தில் இருக்கும் நபர்களும் வாழவேண்டும். என் மகனும் வாழவேண்டும் என்று வாழ்த்தி அது தாழியை எடுத்துக்கொடுத்த காரணத்தால் அந்த தாயின் மகன் நன்றாக வாழ்ந்தானாம். இது கிராமத்தில் சொல்லுகின்ற பழமொழி. 

தற்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற பாக்கியஸ்தானும் இதனை தான் சொல்லுகின்றது. நம்மை கெடுத்தவர்களும் வாழவேண்டும். நாமும் வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் பாக்கியஸ்தானம் அள்ளிக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானமும் சுக்கிரனும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்த்தோம் அதில் ஒரு தொடர்ச்சியாக இந்த தகவலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாக்கியஸ்தானதில் சுக்கிரன் இருக்கும் நபர்களை பார்த்தால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். சொகுசு வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் நினைப்பது போலவே அவர்களுக்கும் அப்படிப்பட்ட வாழ்க்கை அமையும்.

சுக்கிரன் என்பதால் பெண்களை குறிக்கும் கிரகம் என்பதால் பெண்களின் வழியில் அதிக மோகத்தை கொடுக்க கூடிய வழியில் செயல்பாடு இருக்கும். மூன்றாவது வீட்டு அதிபதி தொடர்பு இருந்தால் தம்பியின் மனைவியிடம் தொடர்பு இருக்கும். தம்பியின் மனைவியை காட்டும் இடமும் இந்த பாக்கியஸ்தானம் என்பதால் அப்படிப்பட்ட தொடர்பு இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்லவிதமான தொடர்பும் இருக்கும்.

சுக்கிரனோடு ராகு கிரகம் சேர்ந்து ஒன்பதாவது வீட்டில் அமர்ந்தால் வெளிநாடுகளுக்கு சென்று கூட சொகுசுவாழ்வை வாழ்வார்கள். ராகுவும் சுக்கிரனும் சேரும்பொழுது பெண்களாக இருந்தால் அவர்கள் அதிகம் சுற்றும் நபர்களாக இருப்பார்கள். அதிகமான ஆண்கள் தொடர்பை வைத்திருப்பார்கள்.

சுக்கிரனோடு சனி சேர்ந்தால் ஒரு சிலர் காலபைரவரை வணங்குபவர்களாக இருப்பார்கள். இவர்களின் பயணம் தாழ்த்தப்பட்ட சமூகம் வாழும் இடமாக இருக்கும். அப்படி இல்லை என்றால் அதிகமான மக்கள் கூட்டாக வாழும் இடத்திற்க்கு கூட பயணம் இருக்கும். இதே அமைப்பு வெளிநாட்டில் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் இந்தியாவிற்க்கு வருவார்கள். 

சனியும் சுக்கிரனும் சேருவது அந்தளவுக்கு நல்லதல்ல என்பார்கள். அதிகமான குடிபழக்கத்திற்க்கு அடிமையாகிவிடுவார்கள் என்று சொல்லுவார்கள். அனுபவத்திலும் ஒரு சிலர் அப்படி இருக்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் விதவையோடு கூட தொடர்பு வைத்திருப்பார்கள்.

சுக்கிரனோடு புதன் சேர்ந்து இருந்தால் அவர்கள் கல்வியில் நல்ல புலமையோடு இருப்பார்கள். இசையில் வல்லுனர்களாக கூட இருக்கலாம். ஏதாவது ஒரு இசை கருவியில் நிபுணத்துவம் இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 12, 2015

பொக்கிஷத்தை தரும் பாக்கியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்தால் அது புதையலை தரும் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு புதையலை விட பெரிய விசயங்கள் கிடைத்தன என்று சொல்லிருந்தார்கள். பாக்கியஸ்தானத்தைப்பற்றி நிறைய தாருங்கள் என்று சொல்லிருந்தார்கள். 

பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அல்லது குரு அமர்வது நல்லது தான் அதே நேரத்தில் இதனையும் நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும் அப்பொழுது தான் அனைத்தையும் நாம் பெறமுடியும். 

மனிதன் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கிறான் அதுவும் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கிறான் அதே நேரத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்க்கு அதற்கு ஒப்பான செலவையும் செய்யவேண்டும். அப்பொழுது தான் அவனுக்கு அந்த பெரிய விசயமும் கிடைக்கும்.

நம் ஆட்கள் எதுவும் இல்லாமல் நிறைய சம்பாதித்துவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அங்கு தான் பாக்கியஸ்தானம் உங்களுக்கு கொடுப்பதில்லை என்று சொல்லலாம். பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய செலவை நீங்கள் செய்யும்பொழுது அதுவாகவே மிகப்பெரிய பொக்கிஷம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

எச்சில் கையால் காக்கை கூட விரட்டகூடாது என்று கொள்கையோடு இருந்தால் பாக்கியஸ்தானம் கண்டிப்பாக உங்களுக்கு பொக்கிஷத்தை கொடுக்காது. கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள். என்னிடம் வந்து தான் இதனை எல்லாம் கொடுக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கொடுத்து இதனை பெறலாம்.

பாக்கியஸ்தானதில் உள்ள விசயங்களை நீங்கள் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக பெரிய புதையல் கிடைக்கும். புதையல் கிடைக்கவில்லை என்றாலும் கூட உங்களின் வாரிசு நன்றாக வாழும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு