Followers

Friday, June 30, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          நாட்டில் GST வரியை கொண்டு வருகின்றனர். இந்த வரிக்கும் சோதிடத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று நண்பர் ஒரு மெயில் செய்து இருந்தார்.

பொதுவாக நான் நாட்டின் சோதிடத்தை எல்லாம் கணித்து சொல்லுவதில்லை. தனிப்பட்ட மனிதரின் சோதிடத்திற்க்கு மட்டும் தான் பலன் சொல்லிருக்கிறேன். நண்பரின் கேள்வியில் மக்களுக்கு பிரச்சினை கொடுப்பதற்க்கு தானே இப்படிப்பட்ட விசயங்களை எல்லாம் கிரகங்கள் கொடுக்கிறது என்றார். இந்த வரியால் மக்களுக்கு நல்லதா என்றும் கேட்டார்.

வரி என்றாலே மக்களிடம் இருந்து பணத்தை வாங்குவது தானே. வரியில் என்ன நல்ல வரி கெட்டவரி என்று இருக்கின்றது. மக்களிடம் ஏதாவது ஒன்றை சொல்லி ஏதாவது ஒரு வழியில் பணத்தை வசூலிப்பது தான்.

கிரகபெயர்ச்சி நடக்கும்பொழுத இப்படிப்பட்ட விசயங்கள் நாட்டில் நடப்பது ஒன்று தான். தொடர்ச்சியாக கிரகபெயர்ச்சிகள் இருக்கின்றன. இந்த கிரகபெயர்ச்சிகள் தன்னுடைய மாற்றத்தை ஒவ்வொரு விதத்திலும் காட்டிக்கொண்டு வரும். அதில் ஒன்று தான் தற்பொழுது விதிக்கப்படும் வரியும்.

மக்களுக்கு கஷ்டமா என்றும் கேட்டார். மக்களுக்கு எந்த நாள் தான் கஷ்டம் இல்லாமல் இருக்கின்றது. யார் தலையிலாவது ஒன்றை இறக்கி வைக்க வேண்டும் அதற்கு மக்கள் தான் கிடைத்திருக்கிறார்கள். பொதுவாக பெரிய கிரகங்களின் பெயர்ச்சியில் பெரிளவில் மாற்றம் என்று வரும். அதனை எதிர்க்கொள்ளதான் வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பூர்வீக சொத்து பிரச்சினை


 வணக்கம்!
          பூர்வபுண்ணியவீடான ஐந்தாவது வீட்டிற்க்கு தீயகிரகங்களின் பார்வை வந்துவிடகூடாது. தீயகிரகங்களின் பார்வை வந்துவிட்டால் அதனால் அந்த வீடு கெட்டுவிடும். ஐந்தாவது வீடு சுபவீடாக இருந்து தீயகிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் அவர்கள் தொட்டது எல்லாம் பொன்னாகும். நல்ல ராசிக்காரன் அவன் கை பட்டால் நல்லது அவரை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லுகின்றார்கள் அல்லவா அதற்கு ஐந்தாவது வீடு நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்.

ஒரு சிலருக்கு ஐந்தாவது வீடு நன்றாக இருந்து அந்த வீட்டிற்க்கு தீயகிரகங்களின் பார்வை வரும்பொழுது அடுத்தவர்களால் அவர்களின் சொத்து பறிபோகுவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. பல இடங்களில் சொத்தை பங்காளிகள் அல்லது அவர்களின் உறவினர்கள் எடுத்துக்கொண்டு கொடுக்கமாட்டார்கள் அதற்க்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

ஒரு சிலருக்கு செவ்வாய் மற்றும் சனியின் பார்வை ஐந்தாவது வீட்டிற்க்கு வரும்பொழுது அவர்களின் சொத்து ஊர் அளவுக்கு இருந்தாலும் தற்பொழுது வசிப்பது வாடகை வீடாக இருக்கும். வாடகை வீடாக இருந்தாலும் அதிலும் அடிக்கடி மாறவேண்டிய ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

இந்த நிலம் எல்லாம் எனது மூதையர்களின் சொத்து இதனை வைத்திருந்தாலே நாங்கள் வேலைக்கும் போகவேண்டியதில்லை. வீடடிலேயே உட்கார்ந்திருக்கலாம். எங்களின் அப்பா அனைத்தையும் விற்றுவிட்டார் என்று சொல்லுகின்றார்கள் அல்லவா அதற்கு எல்லாம் இது தான் காரணமாக இருக்கும்.

மேலே சொன்னபடி உங்களின் வாழ்க்கையில் இருந்தால் நீங்கள் இந்த பூர்வபுண்ணிய பரிகாரத்தில் கலந்துக்கொள்ளலாம். உங்களின் குடும்ப ஜாதகங்களை அனைத்தும் அனுப்பி கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 29, 2017

பூர்வபுண்ணியம் பாெதுபரிகாரம்


ணக்கம்!
          இதுவரை கிரகங்களுக்கு மட்டும் பரிகாரம் செய்து வந்த நாம் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக உங்களின் பூர்வபுண்ணியத்திற்க்கு பரிகாரம் செய்வோம்.  உங்களின் பூர்வபுண்ணியத்திற்க்கு இந்த முறை பொதுபரிகாரம் செய்யப்படும்.

இதுவரை நாம் முன்ஜென்மத்தை பற்றி பார்த்து வந்தோம். ஒரு சில கருத்துக்களை மட்டும் அதில் சொல்லிருக்கிறேன். பல கருத்துக்களை ஜாதககதம்பத்தில் பழைய பதிவுகளில் சொல்லிருக்கிறேன். பொதுவாக பூர்வபுண்ணியத்திற்க்கு என்று யாரும் இந்தளவுக்கு சொல்லுவார்களாக என்பது தெரியாது. அந்தளவுக்கு அதில் கருத்துக்களை சொல்லிருக்கிறேன். அதனை படித்து பாருங்கள்.

இந்த முறை இதனை அறிவித்த காரணம் நமது நண்பர்கள் அனைவரும் வித்தியாசமான ஒரு பரிகாரத்தை கொடுங்கள் என்று சொன்ன காரணத்தால் மட்டுமே இதனை அறிவித்து இருக்கிறேன். அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்க்கு இதனை அறிவித்தேன்.

பூர்வபுண்ணியத்திற்க்கு பரிகாரம் என்பது கொஞ்சம் சவாலான விசயமாக தான் இருக்கும். எப்படிப்பட்ட சவாலான விசயத்தையும் அம்மன் துணைக்கொண்டு செய்துவிடலாம் என்று இந்த பரிகாரத்தை அறிவித்து இருக்கிறேன்.

இதற்க நீங்கள் செய்யவேண்டியது உங்களின் ஜாதகத்தை அனுப்பி வைத்துவிட்டு உங்களால் முடிந்த பணத்தை அனுப்பலாம். உங்களின் குலதெய்வத்திற்க்கு உங்களால் முடிந்தால் ஒரு அபிஷேகம் செய்யலாம் அல்லது அதற்கு ஒரு சின்ன காணிக்கையாவது செலுத்திவிட்டு சாமி கும்பிட்டு வாருங்கள். 

பூர்வபுண்ணியத்தில் பித்ருதோஷம் என்ற ஒன்று வரும். பித்ருதோஷத்திற்க்கு நீங்கள் மட்டும் பரிகாரம் செய்யவேண்டும் என்பதால் அதற்கு மட்டும் இந்த பரிகாரத்தில் வழி செய்யபடமாட்டாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். மற்றபடி அனைத்தும் நடைபெறும் விதத்தில் பரிகாரம் செய்யப்படும்.

இன்று முதல் ஜாதகத்தை அனுப்பலாம். அம்மன் பூஜை முடிந்தவுடன் பரிகாரம் ஆரம்பம் ஆகும். அனைவரும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளுங்கள். அம்மன் அருளால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 27, 2017

செவ்வாய்


வணக்கம்!
         செவ்வாய் ஒரு சண்டைபோடும் கிரகம் என்பது உங்களுக்கு தெரியும். செவ்வாய் கிரகம் ஒருவரின் வாழ்வில் நிறைய பிரச்சினைகளை கிளப்பிவிடும் ஆனால் அது தான் நமக்கு பிரச்சினை கொடுக்கிறது என்பது நமக்கு தெரியாமல் போய்விடும்.

எப்பொழுது உங்களின் வாய் சும்மா இருக்காமல் ஏதாவது பேசி உங்களின் வீட்டில் அல்லது அடுத்தவர்களோடு சண்டை வருகிறதோ அப்பொழுது உங்களுக்கு செவ்வாய்கிரகம் சரியாக இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நம்முடைய வாழ்வில் நிறைய வாயை கொடுத்து சண்டையில் மாட்டிக்கொண்டு தான் அதிகமாக இருக்கும். இதற்கு செவ்வாய் சரியில்லை என்று தான் நாம் அர்த்தம் கொள்ளவேண்டும். செவ்வாய்கிரகம் தன்னுடைய கோச்சாரரீதியாக சுற்றிலும் இப்படி தான் செய்கிறது.

செவ்வாய்கிரகம் அமைதியாக கூட வேலை பார்த்துவிடுவதும் உண்டு. சம்பந்தமே இல்லாமல் அடுத்தவர் மீது கோபம் கொண்டு அவர்களை தவிர்த்துவிடுவதும் உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் அடுத்தவர் மீது கோபம் கொள்ளும்பொழுது அது நம்முடைய வாழ்வில் பல நல்ல சந்தர்ப்பங்களை நழுவவும் செய்வது உண்டு.

உங்களுக்கு எப்பொழுது எல்லாம் கோபம் வருகின்றதோ அப்பொழுது செவ்வாய் சரியில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். கோபத்திற்க்கு மாறாக அமைதியை காட்டுங்கள் முடிந்தால் எப்பொழுது அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கையில் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பு வரவே வராது.

இன்று காலை மதுரை வரை செல்கிறேன். மதுரையில் இருந்து வந்தவுடன் நிறைய பதிவுகளை பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 26, 2017

ஐந்தாவது வீடு


வணக்கம்!
          ஐந்தாவது வீடு என்பது பல விதத்திலும் அதிக பயனை கொடுக்ககூடிய ஒன்று. இந்த வீட்டில் உள்ள காரத்துவம் வெளிப்படுத்துவதை வைத்து தான் அடுத்த வீட்டிற்க்கு எல்லாம் வேலையே இருக்கின்றது என்று சொல்லலாம்.

முன்ஜென்மத்தில் எப்படி எல்லாம் நாம் இருந்தோம் அதற்கு இந்த பிறவியில் நமக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளை சொல்லும் வீடாக இது இருக்கின்றது. ஒரு சிலருக்கு முற்பிறவியில் செய்த நன்மை கூட தடைப்பட்டு கிடக்கும். அதாவது இந்த பிறவியில் கிடைக்காமல் அடுத்த பிறவியில் இதனை கொடுக்கலாம் என்று இருக்கும். 

இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் பரிகாரம் செய்வதற்க்கு முன்பே பல நன்மைகளை செய்துவிட்டு பரிகாரம் செய்ய தொடங்குகிறோம். நம்முடைய நன்மையை செய்துவிட்டால் அது இந்த பிறவியில் கிடைத்தாலும் கிடைக்கட்டும் அல்லது அடுத்தபிறவிக்கும் இது கிடைக்கட்டும் என்று செய்ய சொல்லிருக்கிறார்கள்.

குலதெய்வத்தின் அருளை நாம் பெறவேண்டும் என்றால் இந்த வீட்டை நாம் பலப்படுத்தும்பொழுது நமக்கு அது கிடைக்கும். கண்டிப்பாக குலதெய்வத்தின் அருளை நமக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்யவேண்டும்.

ஒரு சிலருக்கு பித்ருதோஷம் என்ற ஒன்று ஏற்படுவதற்க்கு இந்த வீட்டை வைத்தும் அலசப்படும். பித்ருதோஷத்திற்க்கு நீங்கள் தான் பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் ஒரு சிலவற்றை பொதுவாக செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பூர்வபுண்ணியம்


ணக்கம்!
          உங்களின் குலதெய்வம் உங்களுக்கு பிரச்சினை என்றால் உங்களின் ஐந்தாவது வீடு பிரச்சினை என்று அர்த்தம். ஒருத்தருக்கு காதல் திருமணம் அமைந்தாலும் அவர்க்கு ஐந்தாவது வீடு பிரச்சினை என்று அர்த்தம். காதல் திருமணம் ஒன்று தவறு இல்லை என்றாலும் அது உங்களின் குலதெய்வத்திற்க்கு ஆகாது என்பதால் இதனை சொல்லுகிறேன்.

வாழ்க்கையில் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை அலைய வேண்டியிருக்கு எந்த நேரமும் அலைந்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றாலும் உங்களின் பூர்வபுண்ணியம் உங்களுக்கு கைகொடுக்கவில்லை என்று தான் அர்த்தம்.

நமது ஜாதககதம்பத்தில் கூட இப்படிப்பட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். பெரியளவில் ஆசைப்பட்டு ஒன்றுமே நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இவர்களுக்கு எல்லாம் கர்மா அதிகம் என்று தான் சொல்லவேண்டும். புண்ணியம் கிடைக்கவில்லை என்றால் அது கர்மா தானே.

லைப் தான் செட்டில் ஆகவில்லை ஒரு திருமணம் செய்தாலும் நன்றாக இருக்கும். அதாவது வாழ்க்கை மாறிவிடும் என்று நினைத்து திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்தால் அதுவும் நடக்கவில்லை என்றால் அதற்கும் ஐந்தாவது வீடு தான் பிரச்சினை என்று சொல்லவேண்டும்.

ஒரு சிலருக்கு திருமணம் நடந்து அந்த திருமண வாழ்வில் துணையாக வந்தவரே வாழ்க்கையை கெடுக்கிறார் என்றாலும் அதாவது உயிரை எடுக்கிறார் என்று சொல்லுவார்கள் அல்லவா அதற்கும் இந்த ஐந்தாவது வீடு தான் பிரச்சினை.

ஒரு தொழில் செய்து அந்த தொழிலில் லாபம் கிடைக்காமல் நிறைய கடன்களை கொடுத்து நமது பெயரையும் வீண் செய்தால் அதற்கும் இந்த ஐந்தாவது வீடு தான் பிரச்சினை என்று சொல்லவேண்டும்.

மேலே சொன்ன அனைத்தும் உங்களின் கர்மா வழியாக தான் அனைத்தும் நடக்கிறது. அதாவது ஐந்தாவது வீட்டை வைத்து தான் நடக்கிறது. உங்களின் பூர்வபுண்ணியம் சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முன்ஜென்மம்


வணக்கம்!
          உங்களின் ஜாதகத்தில் ஐந்தில் சந்திரன் நின்றால் அல்லது சம்பந்தப்பட்டால் சாதகமான நிலையில் 

முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் சந்திரன் உங்களுக்கு கொடுப்பது.

வாழ்வு முழுவதும் சேவை செய்யக்கூடிய மனநிலையில் இருந்திருப்பீர்கள். உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். தாய்வழியில் நல்ல உதவி தாய் நலமுடன் நீண்டநாள்கள் வாழ்வது. காதல் மணம் புரிவதில் அதிக ஈடுபாடு நிலம் வாங்க நீங்க நினைத்தால் எளிதாக அந்த நிலம் உங்களுக்கு அமைவது.

முன்ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் சந்திரன் உங்களுக்கு கொடுப்பது

சந்திரன் பாதகமாக உங்களுக்கு அமைந்தால் காதல் ஏற்பட்டு அந்த காதல் கைகூடாமல் இருப்பது. திருமணம் செய்து உங்களின் திருமண பந்தம் முறிவு பெற்றுவிட்டது. உங்களின் தாய் நலம் கெடுதல் மனகுழப்பத்தில் இருப்பது.

உடல் பருமன் வியாதியால் அல்லல் படுவது. மனைவி தொழில் செய்கிறேன் என்று உங்களின் பணத்தை எல்லாம் வீண் செய்வது குலதெய்வ வழிபாட்டால் எந்த பலனும் கிடைக்காமல் போவது இது எல்லாம் பாவகணக்கில் வரும்.

முன்ஜென்மத்தில் சிவன் கோவிலுக்கு பாதகமாக நீங்கள் நடந்திருந்தால் பாவமான செயல் உங்களுக்கு நடக்கும் முன்ஜென்மத்தில் சிவன் கோவிலுக்கு நல்லது செய்திருந்தால் நல்லது நடக்கும்.

கோவிலுக்கு பிரச்சினை கொடுத்த காரணத்தால் தான் அதிகமாக உங்களுக்கு இந்த ஜென்மத்தில் பிரச்சினை இருக்கும். உங்களின் பிறந்த ஊருக்கு அருகில் அந்த கோவில் தற்பொழுது இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!
                            இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 25, 2017

முன்ஜென்மம்


வணக்கம்!
         சூரியன் ஐந்தில் நின்றால் முன்ஜென்மத்தில் நீங்கள் தந்தை வழி இடத்தில் நல்லதும் கெட்டதுமாக இருந்திருப்பீர்கள். என்ன இரண்டையும் சொல்லுகிறேன் என்று நினைக்கவேண்டாம் இந்த ஜென்மத்தின் பலனையும் கொஞ்சம் கொடுக்கிறேன் அதனை வைத்து நீங்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்.

முன்ஜென்மத்தில் அரசாங்கவழியில் வேலை செய்பவர்களாக இருந்திருப்பீர்கள். பணம் புழங்கும் இடத்தில் முன்ஜென்மத்தில் வேலைக்கு இருந்திருக்கலாம். 

தற்பொழுது நீங்கள்
                    தந்தை வழி உறவு அரசாங்கவழி நல்லது மக்கள் செல்வம் நல்ல பணபுழக்கம் இருந்தால் முன்ஜென்மத்தில் நல்லது என்ற பக்கத்தில் நீங்கள் இருந்திருப்பீர்கள்.

தந்தை வழியில் சிக்கல், கடுமையான வறுமை, குழந்தை பாக்கியம் இல்லாமை, பணபுழக்கம் இல்லாமை, காதல் தோல்வி இப்படி இருந்தால் முன்ஜென்மத்தில் பாவத்தில் இருந்திருக்கின்றீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் தந்தைவழியில் உள்ளவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை கொடுப்பவர்களாக தற்பொழுது இருப்பார்கள். நீங்கள் எது செய்தாலும் உங்களுக்கு ஒரு செக் வைக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லதுங்க. ஏன் என்றால் இவர்கள் எல்லாம் உங்களின் முன்ஜென்மத்து விரோதிகள். இவர்களிடம் மல்லுக்கு நிற்காமல் இருப்பதே சிறப்பு.

சூரியன் நல்லது செய்கிற நிலையில் இருந்தால் தந்தை வழியில் உங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று உங்களின் வாழ்க்கை சந்தோஷமாக வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவிலுக்கு செல்லும்பொழுது


வணக்கம்!
          ஏதோ ஒரு பிரச்சினைக்கு கோவிலுக்கு சென்று வரவேண்டும் உங்களின் சோதிடர்கள் அல்லது ஆன்மீகவாதிகள் சொன்னால் நீங்கள் தனியாக சென்று வருவதைவிட உங்களுக்கு தெரிந்த ஆன்மீகவாதிகளோடு சென்று வருவது நன்றாக இருக்கும்.

நான் தனியாக கோவிலுக்கு செல்வதற்க்கும் எனது குருவோடு கோவிலுக்கு செல்வதற்க்கும் வித்தியாசம் இருக்கின்றது. ஒரு கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறேன் ஆனால் அந்த கோவிலுக்கு எனது குருவோடு செல்லும்பொழுது நடக்கும் விதமே வேறு மாதிரியாக இருக்கும்.

சக்தி படைத்தவனோடு கோவிலுக்கு செல்லும்பொழுது அதன் சக்தி வேறு லெவல் என்பதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அதனால் தான் உங்களிடம் ஆன்மீகவாதிகளோடு சென்று வாருங்கள் என்று சொல்லுகிறேன்.

இப்படி பதிவில் சொல்லிவிட்டால் என்னை இலவசமாக அனைத்து கோவிலுக்கும் அழைத்துக்கொண்டு செல்வார்கள் என்பதற்காக இதனை சொல்லவில்லை. உங்களை எல்லாம் நான் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக எனக்கு அந்த வேலையை மட்டும் தான் செய்யமுடியும் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. 

உங்களிடம் சொல்லுவது உங்களுக்கு தெரிந்த குரு உங்களுக்கு அருகில் இருந்தால் அவரை அழைத்துக்கொண்டு நல்ல சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்பதற்காக தான் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்போன்


வணக்கம்!
          நம்முடைய மரியாதைக்கு நாம் தான் காரணமாக இருப்போம். நமக்கு கிடைக்கும் மரியாதை என்பது நாமே உருவாக்கிக்கொள்வது தான். இதற்கு தான் ஒழுங்கான வழியில் சென்றுக்கொண்டு இருப்பது. பலவித இடர்பாடுகள் வந்தாலும் தடம் மாறாமல் ஒவ்வொருவரும் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் இதில் இருந்து விலகி இருக்கலாம். 

செல்போன் தேவை என்பது இன்றைய காலத்தில் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த செல்போனில் கூட மரியாதை என்பது இருக்கின்றது. நம்மை யார் என்பதை காட்டிக்கொடுக்கும் ஒரு சாதனமாக கூட பல விதத்திலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எப்படி என்கிறீர்களா? நமக்கு வரும் அழைப்பை ஏற்றுக்கொள்வது யாராவது ஒருவர் போன் அடித்தால் அதனை உதாசினப்படுத்தாமல் ஏற்றுக்கொள்வது என்பது பிறர்க்கு நாம் கொடுக்கும் மரியாமை அதனால் அவர்களும் நம்மை மதிப்பார்கள். 

அவசரவேலை அல்லது வண்டியை செலுத்திக்கொண்டு இருக்கும்பொழுது போனை எடுக்கவில்லை என்றால் அதில் உண்மை இருக்கின்றது. சும்மா அமர்ந்து இருக்கும்பொழுது அதனை எடுக்காமல் இருந்தால் தான் நமது மரியாதை போய்விடும்.

செல்போன் எண்ணை மாற்றிக்கொண்டே இருப்பது அது எல்லாவற்றையும் விட படுமோசம். அதாவது நம்மை நாமே அசிங்கப்படுத்திக்கொள்கிறோம் என்று அர்த்தம். எண்ணை மாற்றிவிட்டு அனைவரிடமும் நாம் தகவல் கொடுத்துவிட்டோம் என்று நினைப்போம் ஆனால் அதனை கவனிக்காமல் விட்டு இருப்பார்கள்.

செல்போன் கம்பெனிக்காரர்கள் ஏதாவது இலவசம் என்று கொடுத்தால் அதற்காக நம்மிடம் இருக்கும் பழைய எண்ணை  மாற்றிக்கொள்ளகூடாது. ஒரு தொழிலின் வெற்றி என்பது உங்களை தொடர்புக்கொள்ளும் விதத்தில் தான் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள்.

நான் அம்மனிடம் கூட எனக்காக வேண்டிக்கொள்வது என்னை தொடர்புக்கொள்ளும் நபர்களிடம் எந்த நேரமும் பேசக்கூடிய வாய்ப்பை கொடுத்துக்கொண்டே இரு என்பது மட்டுமே. இதுவரை இதனை கொடுத்துக்கொண்டே இருக்கின்றது.  எதிர்காலத்திலும் அம்மன் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 24, 2017

முன்ஜென்மம்


வணக்கம்!
          சனிகிரகம் ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது முன்ஜென்மத்தில் அவர்கள் கிராமத்தில் வசிப்பவர்களாக இருந்திருப்பார்கள். கிராமத்தில் உள்ளவர்களிடம் அதிக பழக்க வழக்கம் இருந்திருக்கும்.

தற்பொழுது இவர்கள் திருமணம் செய்வது கூட கிராமத்தில் இருந்து வந்தவர்களாக இருக்ககூடும். கிராமபுறத்தில் முன்ஜென்மத்தில் கிராமபஞ்சாயத்து தலைவர்களாக அல்லது மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பவர்களாக இருப்பார்கள்.

முன்ஜென்மத்தில் உள்ள வாசத்தால் இந்த ஜென்மத்திலும் அது தொடரும். நகர்புறத்தில் வாழ்ந்தால் கூட இவர்கள் கிராமபுறத்தில் உள்ளவர்களிடம் அதிக விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். ஒரு சில பையன்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்லுவார்கள் நான் கிராமத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்பார்கள்.

கிராமபுறத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவி எல்லாம் செய்வார்கள். பெரும்பாலும் இவர்களின் எண்ணம் தன்குடும்பத்திற்க்காக உழைப்பவர்களாக இருப்பார்கள்.

தன்குடும்பத்தை முன்னேற்றபாதையில் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். தன் குடும்பத்திற்க்காக அனைத்தையும் தியாகம் செய்வார்கள்.

ஒரு சிலர் கிராமபுறத்தில் உள்ள தெய்வங்களை அதிகமாக வணங்குவார்கள். கிராமபுற எல்லை தெய்வங்கள் இவர்களுக்கு குலதெய்வமாக இருக்கும். உங்களுக்கு ஐந்தில் சனி இருந்தால் முன்ஜென்மத்தில் உள்ள பிரச்சினைகளை போக்குவதற்க்கு கிராமபுறத்தை நாடி அங்குள்ள மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 23, 2017

வெள்ளிக்கிழமை


ணக்கம்!
          வெள்ளிக்கிழமை என்ற சுக்கிரனுக்கு உரிய நாளாக இருக்கின்றது. வெள்ளிக்கிழமை ஒரு ஆண்குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்க்கு ஆகாது என்பார்கள். வெள்ளிக்கிழமை ஆண்குழந்தை பிறக்ககூடாதா என்று ஒரு கேள்வி வந்தது.

வெள்ளிக்கிழமை ஆண்குழந்தை பிறந்தால் அது குடும்பத்தை எல்லாம் கெடுக்காது. வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்குரிய நாளாக இருப்பதால் அது பெண்களின் சாயல் வந்துவிடும் என்பார்கள். அந்தந்த கிழமைக்கு ஏற்ப அந்த கிழமையின் அதிபதியின் காரத்துவம் இருக்கும்.

வெள்ளிக்கிழமை சுக்கிரனின் நாளாக இருப்பதால் அது ஆண்குழந்தையாக பிறந்தால் அது பெண்ணின் இயல்பை பெற்றுவிடும் என்ற பயத்தால் அப்படி இருக்கும். வெள்ளிக்கிழமை பிறந்த ஆண்குழந்தை நன்றாக இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.

ஒரு சில இடத்தில் வெள்ளிக்கிழமை பிறந்த ஆண்குழந்தையால் தந்தைக்கும் ஆபத்து என்பார்கள். அதுவும் தவறான ஒன்று தான். ஜாதகத்தில் அமரும் கிரகநிலைகளே ஒருவரின் வாழ்வை நிர்ணிக்கும். கிழமைகளின் காரத்துவம் அந்தளவுக்கு இருக்காது. கவலைபடதேவையில்லை.

உங்களின் குழந்தை ஆணாக இருந்து வெள்ளிக்கிழமை பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும். உங்களுக்கு பயமாக இருந்தால் நீங்கள் முருகனை நன்றாக வழிபட்டால் நீங்கள் பயப்படும் விசயம் நடக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 22, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          ஒருவர் தொழிலில் தோல்வி அடைய என்ன காரணம் என்று நண்பர் கேட்டார்.

தொழிலை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த தவறு தான் முதல் காரணமாக இருக்கமுடியும். தொழிலை நடத்துவதற்க்கு தேவையான நிதியை முதலில் தயார் செய்துவிட்டு தொழிலை தொடங்குவதில்லை. இது முதல் காரணமாக இருக்கின்றது.

தொழிலை நடத்த தெரியாமல் யாரோ சொன்னார்கள் என்று தொழிலை ஆசைப்பட்டு தொடங்கினாலும் மாட்டிக்கொள்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த தொழில் இந்த காலத்திற்க்கு உகந்ததாக இருக்கின்றதா என்பதையும் அவ்வப்பொழுது பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. மாறிக்கொண்டு இருக்கும் உலகத்திற்க்கு ஏற்ப அதனை நாம் மாற்றிக்கொண்டால் நல்லது.

சோதிடம் என்பது அடுத்த படி தான். நீங்கள் செய்கின்ற விசயம் எல்லாம் செய்துவிட்டு அதன் பிறகு இந்த இயற்கை நமக்கு உதவுமா என்பதை அறிய சோதிடத்தை நாடலாம். நாம் செய்கின்ற ஒவ்வொரு விசயம் சோதிடத்திற்க்குள் தான் வருகின்றது. நாம் செய்கின்ற விசயத்தை சரியாக செய்து விட்டு அதன்பிறகு சோதிடத்தை பார்த்துவிட்டால் எளிது.

சோதிடத்தில் ஏற்படும் கிரக நிலை மாற்றம் ஒவ்வொரு தொழிலையும் மாற்றிக்கொண்டே இருக்கும். இன்று ஒரு தொழில் நன்றாக இருக்கின்றது என்றால் கொஞ்சநாளில் அல்லது ஒரு சில வருடத்தில் அது போய்விடும் அதன்பிறகு அடுத்ததொழில் வரும். அதற்கு தகுந்தார் போல் நாம் தொழிலை செய்துக்கொண்டு வந்தால் கண்டிப்பாக தொழில் தோல்வியை தழுவாது.

ஆன்மீக வழியில் தொழிலை ஒரளவுக்கு சரியப்படுத்தலாம் அதுவும் ஒரு எல்லை இருக்கின்றது. அதனை தாண்டி வேலை செய்யமுடியாது என்பது தான் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பூஜையறையில் யார் பூஜை செய்யவேண்டும்?


வணக்கம்!
          ஒவ்வொரு வீட்டிலும் பூஜையறையில் விளக்கை ஏற்றுவது அந்த வீட்டு பெண்களாக இருக்கவேண்டும். பூஜையறையை பொறுத்தவரை ஆண்கள் அதிகம் பயன்படுத்தகூடாது என்பது ஒரு கருத்து.

பெண்கள் விளக்கை ஏற்றி வைத்து அவர்கள் சாமி கும்பிட்டால் அது அந்த வீட்டிற்க்கு சுபிட்ஷத்தை கொண்டு வரும். ஆண்கள் இதனை செய்தால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் கொஞ்ச நாளில் விளங்காமல் சென்றுவிடுவார்கள். பெண்கள் நோய்வாய்ப்படுவதற்க்கும் வாய்ப்பு உண்டு.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருப்பார்கள் என்பது இதனை தான் முன்னோர்கள் சொல்லிருப்பார்கள். பெண்கள் பூஜையறையை பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த வீட்டின் ஆண்மகன் எளிதில் அனைத்தையும் சாதித்துவிடுவான். பெண்களுக்கு அந்தளவு சக்தி இருக்கின்றது.

பல வீடுகளில் ஆண்கள் தான் பூஜையறை கவனிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர். அது அவர் அவர்கள் வாங்கி வந்த வரம் என்று தான் சொல்லவேண்டும் வேறு என்ன என்று சொல்லுவது.

பொதுவாக பெண்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபட்டால் அவரின் கணவர் சமுதாயத்தில் நல்ல மதிப்பையும் நல்ல செல்வாக்கோடு இருப்பார்கள். பல வீட்டில் ஆண்கள் சாமி எல்லாம் கும்பிடாமல் நாத்திகராக இருப்பார்கள் ஆனால் அந்த வீட்டில் உள்ள பெண் சாமி நன்றாக சாமி கும்பிடுவார். ஆண் பெரியளவில் இருப்பார்.

ஜாதககதம்பத்தில் உள்ள பல வீடுகளில் பெண்கள் நல்ல நிலையில் ஆன்மீகத்தில் இருக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியும். இவர்களால் அவர்களின் கணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது அனுபவத்தில் நமது வாடிக்கையாளர்களை வைத்தே நான் பார்த்து இருக்கிறேன்.

இதுவரை சும்மா இருந்திருந்தாலும் இனிமேலாவது பெண்களை பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய சொல்லுங்கள். நீங்கள் எளிதாக அனைத்திலும் சாதித்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 21, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          KJ said...
Enga sir.. evening aana deiva magal serial nu podran... ore kolai kollai , Kumdumbathai kedupathu nu .. per matum Deivegama vechukuranuga.. atha veetla irukaravanga pathe theeruvenu adam pudikaranga.. meeri paka kudathunu sonna, sandai than... ena pana.

இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். உங்களின் வீட்டில் டிவி இருந்தால் அதனை நல்ல விதத்தில் பயன்படுத்தவேண்டும். அதனை விட்டுவிட்டு கெடுதலாக தான் அனைத்து வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள்.

ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்க்கு அவர்கள் மட்டும் முன்னேற்றவழியை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் அவர்களுக்கு உதவி புரியவேண்டும்.

டிவி பார்க்கவேண்டாம் என்று நீங்கள் சொன்னால் ஊரில் எல்லோரும் பார்க்கவில்லையா என்று கேட்பார்கள். இதனை எல்லாம் விளக்கி சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது. அவர்களே புரிந்துக்கொள்ளவேண்டும்.

ஒருவர் முன்னேற்றம் அடைய உதவி புரியவிட்டாலும் அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்துவிடகூடாது என்பதில் நல்ல தெளிந்த அறிவு இருந்தால் கண்டிப்பாக இதனை எல்லாம் செய்யமாட்டார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முன்ஜென்மம்


வணக்கம்!
          முன்ஜென்மத்தைப்பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லிருந்தேன். தொடர்ந்து அனைத்தையும் இனி பார்த்துவிடலாம். புதன் ஐந்தாவது வீட்டில் தொடர்புக்கொண்டால் முன்ஜென்மத்திலும் நல்ல வணிகராக இருந்திருப்பார்.

முன்ஜென்மத்தில் வணிகராக இருந்திருந்தாலும் அதில் ஒரு முடிவு பெறாத ஆசைகள் இருந்திருக்கும் அதனை பூர்த்தி செய்ய இந்த ஜென்மத்தில் பிறந்து தற்பொழுதும் இவர்கள் வணிகராக இருப்பார்கள். ஒரு சில ஆடிட்டர்கள் ஐந்தில் புதன் இருக்கும்பொழுது தான் நல்ல ஆடிட்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இந்த பிறவியில் வணிகராக இருந்து சாதிக்கமுடியவில்லை என்பவர்கள் முன்ஜென்மத்தில் வணிகராக இருந்து அதனை ஒழுங்காக செய்யாமல் அதில் இருந்து பல பிரச்சினைகளை அடுத்தவர்களுக்கு செய்த காரணத்தால் இந்த ஜென்மத்திலும் வணிகராக பிறந்து கஷ்டப்படுவார்கள்.

உங்களின் வியாபாரம் நடைபெறவில்லை என்றால் தற்பொழுது செய்யும் வியாபாரத்தில் ஒழுங்காக நேர்மையாக வியாபாரம் செய்தால் அது சரிசெய்யப்பட்டுவிடும். ஒரு மாத காலம் செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு மாமன் வகையில் பிரச்சினை இருக்கும். மாமனுக்கு முன்ஜென்மத்தில் ஏமாற்றியதால் அல்லது அவர்களுக்கு பிரச்சினை கொடுத்த காரணத்தாலும் இந்த பிறவியில் புதன் ஐந்தாவது வீட்டிலும் சம்பந்தப்படலாம்.

உங்களின் மாமன் வகையில் இருப்பவர்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம். மாமன் வகையில் உள்ளவர்களிடம் அன்போடு நடந்தால் பிரச்சனையை சமாளிக்கலாம். ஒரு சிலருக்கு திருமணம் தள்ளி போவதற்க்கு கூட இந்த பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம். நன்றாக சிந்தித்து இதனை முடிவு செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பூஜையறையில் தாமரைபூ


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை அன்று உங்களின் வீட்டில் தாமரைபூவை வைத்து உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வணங்குங்கள். உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்கும்.

உங்களின் தெய்வத்தை வணங்கினால் போதும் அதாவது உங்களின் தெய்வமுமே லட்சுமியாக இருந்து உங்களுக்கு நல்லதை செய்துக்கொடுக்கும். வீட்டில் பூஜையறையில் தாமரைப்பூவை வைத்து வணங்கினால் போதுமானது.

உங்களின் குலதெய்வம் ஒரு ஆண் தெய்வமாக இருந்தால் அந்த இடத்தில் ஒரு பெண் தெய்வமும் இருக்கும். எப்படிப்பட்ட ஆண் தெய்வமாக இருந்தாலும் அந்த இடத்தில் ஒரு பெண் தெய்வம் இல்லாமல் இருக்காது. 

உங்களின் வீட்டில் தாமரைபூவை வைத்து பூஜை செய்யும்பொழுது உங்களின் வீட்டில்  அனைத்து செல்வங்களும் தடை இன்றி கிடைக்கும். வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் இதனை செய்ய தொடங்குங்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் குளத்தில் தண்ணீர் இல்லை. தாமரைப்பூவும் இல்லை. கடைகளில் கிடைக்கின்ற பூவை வாங்கி வந்து பூஜை செய்யுங்கள். ஒரு பூ மட்டும் வைக்காமல் குறைந்தது ஒரு நான்கு பூ வாங்கி வந்து பூஜை அலங்கரியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 20, 2017

வீட்டில் தெய்வசக்தி


வணக்கம்!
         ஆன்மீக முறைகளில் என்ன தான் நிறைய நீங்கள் பின்பற்றினாலும் அதாவது கோவில்கள் என்று அலைந்தாலும் உங்களின் வீடு நன்றாக இருக்கும்பொழுது தான் அனைத்திலும் எளிதாக முன்னேற்றம் அடைய முடியும். 

உங்களின் வீட்டில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் அதோடு தெய்வ சக்திகள் உங்களின் வீட்டில் வாசம் செய்வது போல இருந்தால் தான் அனைத்தும் நடக்கும். வீட்டில் தெய்வங்கள் வாசம் செய்ய என்ன வழி என்று நிறைய படித்து இருப்பீர்கள் அதனை செய்யுங்கள்.

உங்களின் வீட்டில் சாஸ்திர விசங்கள் எதனையும் செய்தாலும் உங்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அமைதியாக இருக்கவேண்டும். எந்த நேரமும் சண்டை சச்சரவு இருந்தால் உங்களின் குடும்பத்தில் எந்த ஒரு தெய்வசக்தியும் வரவே வராது.

ஒரு சில குடும்பங்களில் மனைவி கணவன் எப்பொழுது வருவன் என்று காத்து இருப்பார்கள். எதற்கு காத்திருக்கிறார்கள் அவரே சண்டை போடலாம் என்று காத்திருப்பார்கள். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பினால் உடனே ஆரம்பித்துவிடுவது உண்டு.

வீடு என்று இருந்தால் சண்டை என்பது இருக்கதான் செய்யும் ஆனால் அது தொடர்ச்சியாக இருந்துவிடகூடாது. என்றோ ஒரு நாள் சண்டை போட்டால் போதும் என்று விட்டுவிட்டு அமைதியாகிவிடவேண்டும். 

வீட்டில் அமைதியாக இருந்து வீட்டில் ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி ஊதுவத்தியை ஏற்றி வைத்தாலே போதும் அனைத்து தெய்வங்களும் உங்களை நோக்கி ஓடிவந்துவிடும். நீங்கள் விரும்பியதை அடைந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனிப்பெயர்ச்சி கட்டண பரிகாரம்


வணக்கம்!
          சனிப்பெயர்ச்சிக்கு எவ்வளவு கட்டணம் என்று தினமும் மெயில் வந்துக்கொண்டும் நேரிலும் போனிலும் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். அவர் அவர்களும் அனுப்பும் தொகையில் இதனை செய்யலாம் என்று தான் தீர்மானித்து இருந்தேன்.

ஜாதகம் அனுப்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. அவர் அவர்கள் அனுப்பும் பணம் குறைவாக இருக்கின்றது. ஒரு குடும்பத்தினர்க்கு பூஜைக்கு செய்கின்ற செலவு மூன்றாயிரம் (Rs 3000) ஆகின்றது. இது பூஜைக்கு மட்டும் செய்கின்ற செலவு எனக்கு என்று ஒரு பைசா கூட எடுப்பதில்லை.

நெய் பூஜை சாமான்கள் வாங்கி கட்டுபடியாக மாட்டேன்கிறது. கையில் இருந்த பணத்தை வைத்து ஒரளவு சமாளித்து இதனை செய்துவிட்டேன். இனிமேல் அனுப்புவர்கள் நான் சொன்ன பணத்தை அனுப்பினால் ஒரளவு நன்றாக இருக்கும். 

பணம் கஷ்டம் என்று சொல்லுபவர்கள் இருக்கும் பணத்தை வைத்து அனுப்புங்கள். கொஞ்சம் தாமதமாக எனக்கு பணம் சேர்ந்தவுடன் உங்களுக்கு செய்துவிடுகிறேன். கண்டிப்பாக அனைவருக்கும் செய்து விடலாம்.

சனிப்பெயர்ச்சி கட்டண பரிகாரத்திற்க்கு அனுப்புவர்கள் தாமதம் செய்யவேண்டாம். தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும் என்பதற்ககாக தான் இதனை சொல்லுகிறேன். உடனே அனுப்பி வைத்துக்கொடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உலக நியதி


வணக்கம்!
          எனக்கு உடல்ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்லுவது உண்டு. மருத்துவரிடம் ஏன் செல்லவேண்டும் நாமே நம்மை காத்துக்கொள்ளகூடாது என்றால் கண்டிப்பாக மருத்துவரிடம் தான் செல்லவேண்டும்.

இன்றைய காலத்தில் நிறைய பேர்களுக்கு உடல் ரீதியாக பிரச்சினை வருவதற்க்கும் மருத்துவர்களும் ஒரு காரணம். அவர்களின் தேவையை தீர்க்க கடவுள் இப்படி நம்மை அங்கு செல்ல வைத்துவிடுவார். மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கும் நம்மை தேடி நிறைய நோயாளி வரவேண்டும் என்று இருக்கும். இந்த மனநிலை நம்மை அங்கு நோக்கி இழுக்க வைக்கும்.

நேராக நாம் மருத்தவமனைக்கு சென்று அமர்ந்தாலே ஐம்பது சதவீத நோய் போய்விட்டதாக நமக்கு தோன்றும். அவர்களுக்கு தேவையான பணத்தை கட்டிய உடன் நமக்கு நோய் போய்விட்டதாகவே தோன்றும். 

எனக்கு மருத்துவசெலவு இவ்வளவு செய்யவேண்டும் என்று கடவுள் நமது விதியில் எழுதியிருப்பார். அதனை நான் கொண்டு அவர்களிடம் சேர்க்கும் பொழுது தான் நம்முடைய கணக்கு நமக்கு தீரும்.

இன்றைக்கு உலகம் இயங்குவதற்கு காரணமாக இருப்பது உலகத்தில் உள்ள அனைவரின் கணக்கை தீர்க்க கடவுள் செய்யும் ஒரு ஏற்பாடாக இருக்கும். இது நமக்கு தேவையில்லை என்று எதையும் ஒதுக்கிவைத்துவிட முடியாது. அனைத்திலும் கொஞ்சம் நாம் விரையம் செய்துதான் ஆகவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 19, 2017

அனுபவம்


வணக்கம்!
         கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு காலையில் தான் தஞ்சாவூர் வந்தேன். தொடர்ச்சியாக பயணம் செய்த களைப்பில் சற்று ஒய்வு எடுத்துக்கொண்டு விட்டு தற்சமயம் வேலையை தொடங்கிவிட்டேன்.

ஒவ்வொருவரும் நேரில் சந்திக்கும்பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து விசயங்களையும் நம்மால் சொல்லமுடிகிறது. பதிவுகளில் எழுவது என்பது ஒரு ஐம்பது சதவீ்தம் என்றால் நேரில் ஒரு ஐம்பது சதவீதத்தை வழங்கமுடிகிறது.

பதிவுகளில் எழுதுவதை மட்டும் வைத்து ஒரளவு வாழ்விற்க்கு தேவையானவற்றை செய்துக்கொள்ளலாம். முழுமையான ஒரு வாழ்வு வாழவேண்டும் என்றால் உங்களுக்கு தேவையானவற்றை நேரில் சந்திக்கும்பொழுது அதனை பெற்றுக்கொள்ளமுடியும்.

பணத்தை வைத்து தான் அது இருக்கும் என்பதல்ல. ஒரு நட்பாக அதனை சந்தித்து அந்த சூட்சம ரகசியங்களை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது அந்தந்த ஊர்களில் உள்ளவர்கள் மறுமுறை மறுமுறை என்னை சந்திப்பதற்க்கு இது தான் காரணமாக இருக்கமுடியும்.

நீங்களே செய்கின்ற பல வழிபாட்டு முறை மற்றும் நீங்கள் பின்பற்றும் ஆன்மீகவிதிக்கு தகுந்தமாதிரி உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சத்தையும் பெறமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் நான் வரும்பொழுது என்னை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். இந்த முறை பயணத்தில் பல பேர்கள் இதனை தெரிந்துக்கொண்டனர். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 18, 2017

ஏன் பிரச்சினை வருகின்றது?


வணக்கம்!
          நமக்கு ஏன் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு இருக்கின்றது என்று நண்பர்கள் கேட்பார்கள். உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருக்கும்.

மாற்றம் என்பது இந்த உலகத்தில் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் கிரக சுழற்சி இருப்பதால் தான் நடக்கிறது. ஒவ்வொரு கிரகங்களும் சுற்றி வந்துக்கொண்டே இருப்பதால் நல்லது கெட்டது மாறி மாறி வந்துக்கொண்டு தான் இருக்கும்.

நாம் செய்யும் பூஜைகள் நம்மை காக்கவில்லை என்று சொல்லுபவர்களும் உண்டு. அப்படி எல்லாம் இல்லை. ஒரு பூஜை உங்களை காக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நீங்கள் மறுபடியும் அந்த பூஜையை செய்யவேண்டும்.

யார் செய்தாலும் பூஜையின் பலன் கிடைக்கும். கிரக சுழற்சி காரணமாக கொஞ்சநாளில் அது நம்மை விட்டு சென்றுவிடுகிறது. அதன் பிறகு நாம் அடுத்த பூஜையை செய்யவேண்டியிருக்கும். அப்பொழுது மறுபடியும் உங்களுக்கு நிலைமை சரியாகும்.

என்ன தொடர்ந்து பூஜையை செய்துக்கொண்டே இருக்கமுடியுமா எ்னறு கேட்கலாம். என்ன செய்வது நம்மை நிலைநிறுத்த நிறைய வேலை கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டியிருக்கிறது கண்டிப்பாக செய்யவேண்டும்.

மாதம் ஒரு முறை செய்வது போல் செய்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். என்னால் அப்படி செய்யமுடியவில்லை என்பவர்கள் மாதந்தோறும் நடைபெறும் அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். அதோடு பரிகார பூஜையிலும் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 17, 2017

சனிக்கிரகம்


வணக்கம்!
          சனிக்கிரகம் ஒரு தீயகிரகம் என்று சொன்னாலும் சனிக்கிரகத்தின் பலன் ஒரு மனிதனுக்கு எந்த நேரத்திலும் கிடைக்கவேண்டும். சனியின் பலன் இல்லை என்றால் மனிதனின் செயல்பாடு நன்றாக இருக்காது,

பொதுவாக சனிக்கிரகத்தை நமது சோதிடம் தவறாகவே பல இடங்களில் சொல்லி வைத்திருக்கிறது. சோதிடம் சொல்லவில்லை சோதிடர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். சனிக்கிரகத்தை பற்றி பல பதிவுகளில் நான் நன்றாகவே சொல்லிருக்கிறேன்.

சனிக்கிரகம் ஒருவருக்கு நல்லது செய்யும் காலத்தில் அதாவது சனியின் முழுமையான பலன் கிடைக்கும் காலத்தில் நிறைய செல்வவளங்களை அள்ளிக்கொடுக்கிறது. சனியை விட வேறு கிரகங்கள் அப்படி கொடுப்பதில்லை.

சனிக்கிரகத்திற்க்கு நாம் தற்பொழுது சனிப்பெயர்ச்சி நடைபெறும் காலம் வருவதால் உங்களுக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கிறேன். இதில் கலந்துக்கொள்பவர்கள் கட்டணத்தை செலுத்தி கலந்துக்கொள்ளலாம். தனித்தனியாக சனிப்பெயரச்சி பரிகாரம் செய்யப்படும்.

சனிக்கிரகத்தின் பலன் குறைவதாக இருந்தால் அந்த காலத்தில் உங்களுக்கு தொழில் நன்றாக இருக்காது. தொழில் நன்றாக இருந்தால் உங்களின் உடல் நன்றாக இருக்காது. இதனை சமப்படுத்த நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் உடனே என்னை தொடர்புக்கொள்ளவும்.

இன்று மதியம் திருப்பூர் பயணம் நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 16, 2017

முன்ஜென்மம்


வணக்கம்!
         ஒருவருக்கு ஐந்தாவது வீட்டில் சனி இருந்தால் அவர் முன்ஜென்மத்தில் ஒரு குழந்தையை கொன்றதாக பழைய பதிவில் சொல்லிருப்பேன். அதாவது பூர்வபுண்ணியம் என்ற தொடரை எழுதியிருந்தேன். அதனை தேடிப்படித்து பாருங்கள் அதில் எழுதியிருப்பேன்.

ஒரு குழந்தையை கொன்றதாக அல்லது குழந்தைக்கு ஊனம் விளைவித்தாக அந்த ஜென்மம் இருந்திருக்கும். குழந்தையை எல்லாம் இந்த காலத்திலேயே எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள் அந்த காலத்தில் எல்லாம் கண்டிப்பாக கொன்றும் இருப்பார்கள். அதனை சரி செய்ய இந்த பிறப்பு எடுத்து இருப்பார்கள்.

ஒரு தகப்பனாக அல்லது தாயாக முன்ஜென்மத்தில் இருந்திருப்பார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு இடைஞ்சல்கள் கொடுத்த காரணத்தால் இந்த ஜென்மத்தில் வாரிசுகளுக்கு அலையும் ஒரு நிலையை இறைவன் கொடுத்திருக்கிறார். இதனை இந்த ஜென்மத்தில் நிவர்த்தி செய்ய வழி செய்துக்கொள்ளுங்கள்.

உங்களின் அருகில் அல்லது ஏதாவது ஒரு இடத்தில் உள்ள அனாதை குழந்தைகள் அல்லது உடல் ஊனம் முற்ற குழந்தைகளுக்கு உங்களால் ஆன உதவியை செய்து வாருங்கள். 

நிறைய புண்ணிய நதியில் நீராடுங்கள் மற்றும் நிறைய சிவன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். நல்ல புண்ணியம் உங்களுக்கு கிடைத்து உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கும்.

ஒரு சிலருக்கு குழந்தைகள் இருக்கும்.  குழந்தைகள் இருந்தாலும் விபத்தில் மரணம் அடைய வாய்ப்பு உண்டு அல்லது ஊனம் அடையவும் வாய்ப்பு உண்டு அதனால் மேலே சொன்ன விசயத்தை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தேய்பிறை அஷ்டமி


வணக்கம்! 
          நாளை சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி. கடன்கள் அடைக்க பைரவரை வழிபடவேண்டும் என்று நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். அதாவது அவர் கோவில் சென்று வழிபடவேண்டும் அங்கு பைரவருக்கு நடைபெறும் பூஜையில் கலந்துக்கொள்ளவேண்டும் என்றார்.

உண்மையில் சொன்னவருக்கு கடன் இல்லை என்பது தான் உண்மை. அவர் எனக்கு நன்கு தெரிந்தவர். நல்ல செல்வந்தர். அவர் சொன்னது தான் எனக்கு வியப்பாக இருந்தது. பைரவர் கோவிலை காப்பாற்றுவதை விட்டுவிட்டு தற்பொழுது ஒவ்வொருவரின் கடன்களை அடைத்துக்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கிறேன்.

பைரவழிபாடு செய்வது தவறு என்று சொல்லவில்லை. நம்ம மக்கள் சொல்லும் கருத்து தான் பல விதத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. பொதுவாக நீங்கள் கடன் தீரவேண்டும் என்று ஒரு தெய்வத்திடம் அதாவது கோவிலுக்கு சென்று அங்கு பூஜை செய்தால் அந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல அறிவை கொடுத்து ஒரு தெளிவு உண்டாகும். கடன்களை நீங்கள் உழைத்து தான் கட்டவேண்டும்.

பைரவரை வணங்கினால் கூட அந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருந்து உங்களின் மனதிற்க்குள் வரும் தெளிவை நன்றாக கவனியுங்கள். அதாவது பொறுமையாக உங்களின் மனதில் இருந்து வரும் கஷ்டத்தை நினைத்து கவலைப்படாமல் என்ன தெளிவு கிடைக்கிறது என்பதை மட்டும் கவனித்தால் போதும். இது எல்லாம் கஷ்டமாக இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் பொறுமையாக சாமியை கும்பிட்டுவிட்டு வாருங்கள் அதுபோதுமானது.

பழைய பதிவில் சொன்னபடி உங்களின் ஊருக்கு அருகில் அல்லது எந்த ஊராக இருந்தாலும் சரி தாழ்த்தப்பட்டவர்கள் கட்டிய பைரவராக பார்த்து சாமிகும்பிட்டால் நல்ல பலன் உங்களுக்கு உடனே கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முன்ஜென்மம் கேள்வி & பதில்


ணக்கம்!
          முன்ஜென்மத்தைப்பற்றி முழுமையாக தெரியும் என்று நினைத்து இருந்தோம் ஆனால் தகவல் குறைவாக இருக்கின்றன என்று நண்பர் ஒரு கேட்டார்.

கண்டிப்பாக நிறைய தகவல்களை தருகிறேன். அதே நேரத்தில் நமது விதிப்படி நிறைய தகவல்களை கொடுத்தால் அது பல இடத்திற்க்கு காப்பி செய்து அனுப்பிவிடுவார்கள் என்ற பயமும் ஒருபுறம் இருப்பதால் தான் நிறைய விசயங்களை குறைத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

முன்ஜென்மத்தில் உள்ள முக்கிய விசயம் என்ன என்றால் அதனை கொஞ்சம் தெரிந்துக்கொண்டு அதில் உள்ள புண்ணியங்களை எடுப்பதற்க்கு என்ன வழி என்பதை மட்டும் நாம் பார்த்தால் நமக்கு நிறைய பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் நிறைய சோதிடதகவல்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்து வைத்திருந்தாலும் இப்படிப்பட்ட தகவல்கள் உங்களை மேலும் மேலும் நன்றாக செயல்படவைக்கும் என்பதால் இப்படி எழுதுகிறேன்.

சுக்கிரன் ஐந்தில் சம்பந்தப்படும்பொழுது நம்மை சுற்றி அல்லது நாம் வேலை செய்யும் இடங்கள் எல்லாம் கொஞ்சம் அல்ல அதிகமாகவே பெண்களாக இருப்பார்கள். பெண்களோடு இருக்கவேண்டிய கட்டாயமும் உங்களுக்கு இருக்கும்.

பெண்களுக்கு சேவை செய்யும் விதமாக அல்லது அவர்களுக்கு வேலை செய்யும் விதமாக உங்களுக்கு அமைந்திருக்கிறான் இறைவன் என்றால் அது உங்களி்ன் முன்ஜென்மத்தில் உள்ள பிறவியின் தொடர்பால் தான் இருக்கும் என்பது தான் உண்மையான தகவல். அப்பொழுது உங்களின் பிறப்பு முன்ஜென்மத்தில் ஒரு பெண்ணாக இருந்திருக்கிறது.

நான் மதியம் இந்த பதிவை தந்தபிறகு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு எங்களுக்கு இப்படி தான் இருக்கின்றது என்று சொன்னார்கள். அதுவே எனக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது. தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வாருங்கள். உங்களுக்கு பிடிப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முன்ஜென்மம்


வணக்கம்!
          ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் சம்பந்தப்பட்டால் அவர்கள் முன்ஜென்மத்தில் அதிகப்பட்சம் பெண்களாக பிறந்திருக்க வாய்ப்பு இருக்கும். தற்பொழுது அவர்கள் பெண்களின் ஒத்த நடவடிக்கையில் இருப்பார்கள். 

ஒரு சிலர் தற்சமயம் பெண்களுக்கான துறையில் தற்பொழுது வேலை செய்துக்கொண்டு இருப்பதற்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். தொழில் என்றால் நாம் பத்தாவது வீட்டை தான் வைத்து சொல்லுவோம் ஒரு சிலரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சுக்கிரன் பார்வை பட்டால் அவர்கள் சுக்கிரன் சம்பந்தப்பட்ட தொழிலில் வேலை செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கும்.

இவர்கள் பெண்கள் போல நடவடிக்கையும் இருக்கும். முன்ஜென்மத்தில் உள்ள அந்த காரத்துவத்தை அப்படியே இந்த ஜென்மத்திலும் வெளிப்படுத்துவார்கள். நடப்பது பேசுவது வெட்கப்படுவது போன்றவற்றை நன்றாக கவனித்து பாருங்கள். அதே போல தான் இருப்பார்கள்.

உங்களுக்கு ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் இருந்து அல்லது சுக்கிரனின் பார்வை இருந்தால் இப்படி தான் இருக்கும். சரி இதனை நாம் அறிந்து என்ன செய்வது என்று கேட்கிறீர்களா.

உங்களுக்கு ஏதாே ஒரு பிரச்சினை வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். தற்சமயம் இப்படிப்பட்ட பிரச்சினை வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் செய்ய வேண்டியது இது தான். 

உங்களின் ஊரில் இருக்கும் பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். இது ஒரு சின்ன பரிகாரம் போல் தான் சொல்லுகிறேன். உங்களுக்கு முடிந்ததை அவர்களுக்கு செய்து பாருங்கள். 

உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு நல்ல உதவி அவர்களுக்கு பயன்படும் விதத்தில் செய்தால் முன்ஜென்மத்தில் உள்ள அத்தனை புண்ணியத்தையும் இந்த ஜென்மத்தில் பெற்று நீங்கள் நன்றாக வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 15, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          நண்பர் ஒருவரின் கேள்வி இது தான் முன்ஜென்மத்தைப்பற்றி அறிவதற்க்கு எதற்கு என்று கேட்டார். அதனால் நமக்கு என்ன பயன் நடக்கும் என்றார்.

ஒருவரின் முன்ஜென்மத்தை வைத்து தான் இந்த ஜென்மத்தில் உள்ள நல்லது கெட்டது தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஜென்மத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கும் இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதற்க்காக தான் இதனை எழுதுகிறேன்.

உண்மையில் பல இடங்களில் பரிகாரத்திலும் மற்றும் நீங்கள் செய்யும் ஹோமம் மற்றும் இதர வழிபாடுகளிலும் முன்ஜென்ம பாவத்தை போக்குவதற்க்காக தான் செய்கிறார்கள். அதற்கு நீங்கள் கொஞ்சம் முன்ஜென்மத்தைப்பற்றி தெரிந்து இருந்தால் அதனை நீங்களே தீர்க்கமுடியும் என்பதற்க்காக இதனை எழுதுகிறேன்.

வேலை பணம் என்று எப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இது இருக்கவேண்டும் என்பதற்க்காக இதனை எழுதுகிறேன். ஒரு சிலர் விருப்பட்டும் இதனை ஆராய்வார்கள் அவர்களுக்காகவும் இதனை எழுதுகிறேன்.

முன்ஜென்மத்தை வைத்து பல சம்பங்கள் உங்களின் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அதனை எல்லாம் எழுதும்பொழுது இது அதற்காக தான் நடைபெற்றதா என்று நீங்கள் நினைத்தால் உங்களின் ஆத்மா ஒரு சந்தோஷம் அடையும் அதற்க்காகவும் எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முன்ஜென்மம்


வணக்கம்!
          ஒருவரின் முன்ஜென்மத்தை அறிய அவர்களின் ஐந்தாவது வீட்டை பார்த்தால் தெரியும் என்பார்கள். ஐந்தாவது வீட்டை அதற்க்கு தான் பூர்வபுண்ணியம் என்று வைத்திருக்கிறார்கள். முன்ஜென்மத்தில் நல்லத கெட்டது என்று அனைத்தையும் அதன் வழியாக கொடுக்க செய்கிறது.

ஐந்தாவது வீட்டில் செவ்வாய் சம்பந்தப்பட்டால் அவர் முன்ஜென்மத்தில் படை வீரர்களாக அல்லது படை தலைவனாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று அறியலாம். ஐந்தாவது வீட்டிற்க்கு செவ்வாய் கிரகத்தின் பார்வை இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதுவும் போர் சம்பந்தப்பட்டவர்களாக தான் முன்ஜென்மத்தில் இருந்திருப்பார்கள்.

ஐந்தாவது வீட்டில் சூரியன் சம்பந்தப்பட்டால் அவர்கள் அரசபரம்பரையில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அரசர்களாகவும் இருந்திருப்பார்கள். ஒரு சிலர் அரசாங்கத்தில் நல்ல நிலையில் பணிபுரிந்துக்கொண்டும் இருந்திருப்பார்கள்.

ஒரு சில கருத்துக்கள் உங்களுக்கு புரியும் படி இருக்கவேண்டும் என்பதற்க்காக சோதிடத்தை வைத்து உங்களுக்கு மேலே சொன்ன தகவல்களை தந்தேன். நம்முடைய குலதெய்வமும் உங்களின் ஐந்தாவது வீட்டை வைத்து தான் நிர்ணயம் செய்கிறோம் அல்லவா.

ஒருவரின் குலதெய்வம் முன்ஜென்மத்திலும் அவர்களுக்கு குலதெய்வமாக இருந்திருக்கவும் செய்கிறது. எனக்கு அம்மன் முன்ஜென்மத்தில் குலதெய்வமாக இருந்திருந்தால் இந்த ஜென்மத்திலும் அம்மன் தான் குலதெய்வமாக வருகின்றது.

ஒரு சிலருக்கு குலதெய்வம் மாறுப்பட்டு வரவும் செய்கிறது. ஒரு சில பிறப்பில் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக இப்படி மாறவும் செய்யலாம். அதாவது அவர் அவர்களின் வினைப்பயன்படி இது நடக்கலாம்.

முன்ஜென்மத்தைப்பற்றி நான் சொல்லுவது ஒரு சின்ன கருத்தாக உங்களுக்கு இருக்கலாம். இதனை உங்களின் மனதில் போட்டு அதனை அலசி பார்க்கும்பொழுது தான் உங்களுக்கு என்ன என்பது தெரியவரும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          ஒரு நண்பர் கேள்வி ஒன்றை கேட்டார். நீங்கள் செய்யும் பரிகார வேலையில் எந்த வேலையில் உங்களுக்கு அதிக கர்மா வந்து சேரும் என்றார்.

பல நண்பர்கள் சோதிடதொழில் செய்து பரிகாரமும் செய்து வருவீர்கள் அல்லவா. அவர்களுக்கு இந்த பதில் ஒரு நன்மை செய்யும் என்பதற்க்காக இதனை தருகிறேன். ஒரு ஜாதகர் வந்து எனக்கு  நோய் வந்து இருக்கின்றது இதனை குணப்படுத்த பரிகாரம் செய்யுங்கள் என்று சொன்னால் அதனை நீங்கள் செய்தால் உங்களுக்கு  அதிக கர்மா வரும்.

ஒரு ஜாதகருக்கு ஒரு நோய் வருகின்றது என்றால் அது அவர்களின் முன்ஜென்மத்தில் உள்ள பிரச்சினையால் தான் நோய் வரும். இப்படிப்பட்ட நோயை நீங்கள் பரிகாரம் செய்து நீங்கள் காப்பாற்ற நினைத்தால் உங்களுக்கு அதிக கர்மா வந்துடைந்துவிடும்.

நோய்க்கு மட்டும் பரிகார செலவு அதிகமாக கேட்பார்கள். அதற்க்கு காரணம் பல வருடங்கள் சேமித்து வந்த புண்ணியம் எல்லாம் அதிலேயே போய்விடும் அதிக சக்தி செலவாகிவிடும் என்பதால் ஒரு பெரிய தொகையை கேட்பார்கள். 

ஒருவருக்கு நோய் வந்தால் அதிகப்பட்சம் நான் அம்மனிடம் ஒரு வேண்டுதல் வைப்பதோடு சரி. அவர்களிடம் பல கோவிலுக்கு சென்று வாருங்கள். அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிடுவதும் உண்டு.  

ஒருவருக்கு ஒரு நோய் வந்து அவர்களுக்கு நல்ல மருத்துவமனை நீங்கள் பரிந்துரை செய்யலாம் அதனால் உங்களுக்கு புண்ணியம் சேரும் ஆனால் பரிகாரத்தை அதிகம் பரிந்துரை செய்யகூடாது. நோய்க்கு பரிகாரம் செய்தால் தான் அதிக கர்மா உங்களை பிடிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீகம் எதற்கு ?


வணக்கம்!
          வாழ்க்கையில் எதனை தேர்வு செய்யவேண்டும் என்பது முதலில் தீர்மானித்துவிடவேண்டும். தொழில் செய்ய போகின்றோமா அல்லது வேலை செய்ய போகின்றோமா என்பதை தேர்வு செய்துவிட்டு அதற்கு தகுந்தார் போல் செயல்படவேண்டும்.

வேலைக்கு செல்லவேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டால் ஒரு நல்ல வேலையாக பார்த்து தேர்வு செய்துவிடவேண்டும். நல்ல வேலை என்றால் நல்ல சம்பளம் கிடைப்பது என்பது தான். நல்ல சம்பளம் கொடுத்தால் கண்டிப்பாக உங்களை நன்றாக வேலை வாங்குவார்கள்.

வேலைக்கு சென்றால் நாம் அடுத்தவர்களின் அடிமை தான். அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி அது அடிமை தான் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு வேலை செய்யதால் வேலையில் ஏற்படும் அழுத்தும் உங்களை பாதிக்காது. உங்களுக்கு மேல் உள்ளவர்கள் உங்களை எப்படி எல்லாம் வேலை வாங்கவேண்டுமாே அப்படி எல்லாம் வேலை வாங்கி தான் தீருவார்கள்.

வேலைக்கு சென்ற பிறகு எனக்கு வேலை கஷ்டமாக இருக்கின்றது என்பதை சொல்லகூடாது. வேலை என்றால் கண்டிப்பாக அப்படி தான் இருக்கும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த வேலைக்கு சென்றுவிடவேண்டும். அங்கேயும் பிரச்சினை காத்துக்கொண்டு தான் இருக்கும்.

வேலைக்கு செல்லும்பொழுது ஒன்றை கணித்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை முழுவதும் வேலை செய்தால் இவ்வளவு தான் பணம் கிடைக்கும் என்பதை தீர்மானித்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது. ஏன் என்றால் பல பேர் எனக்கு சம்பளத்தை உயர்த்தவில்லை அதற்கு என்ன செய்வது என்று கேட்டுக்கொண்டு இருப்பார்கள். வாழ்வு முழுவதும் வேலை செய்தால் இவ்வளவு தான் நம்மால் சம்பாதிக்கமுடியும் என்பது உங்களுக்கு எளிதில் கணித்துவிடலாம்.

தொழில் செய்ய போகின்றீர்களாக என்றால் அதனை முடிவு எடுத்துவிட்டு நான் இதில் தான் இருக்கபோகின்றேன். இது தான் என் வாழ்வு என்று இருக்கவேண்டும். அதே போல் உழைக்கவேண்டும். கண்டிப்பாக இதிலும் பிரச்சினை இருக்கதான் செய்யும். அதனையும் சமாளித்து தான் மேலே வரவேண்டும்.

தொழிலில் ஏற்ற தாழ்வுகள்  இருக்க தான் செய்யும். அதனால் அது பிரச்சினை என்று அழுதுக்கொண்டு இருக்ககூடாது. அதனையும் சமாளித்து தான் ஆகவேண்டும். 

மாற்றம் இந்த உலகத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கும். வேலையிலும் சரி தொழிலாக இருந்தாலும் சரி உங்களை மாற்றிக்கொண்டு தான் செல்லவேண்டும். தொழிலில் ஏற்றதாழ்வுகளை நீங்கள் சந்தித்து தான் தீரவேண்டும்.

அம்பானியாக இருந்தால் கூட பல தொழில்கள் அவர்களுக்கும் நஷ்டத்தை தந்து தான் இருக்கின்றது. அதனால் அவர்கள் சோர்ந்து போய்விடவில்லை தன்னை நிலை நிறுத்த பல வழிகளிலும் கையாண்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.

ஆன்மீகம் எதற்கு ?

இரண்டு பேரையும் பிரச்சினை இல்லாமல் செல்வதற்க்கு வழி வகுக்குமா என்று கேள்வி கேட்கலாம். பிரச்சினை வரும் ஆனால் அதனை சமாளிக்கும் சக்தியை ஆன்மீகம் கொடுக்கும். அது மட்டும் தான் ஆன்மீகத்தின் வேலை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 14, 2017

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          பல நண்பர்களிடம் சொல்லும் விசயம் ஒன்று. ஒன்றை செய்தால் அதனை விடாமல் தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள் என்பது தான் அது. எந்த வழிபாடு செய்தாலும் அதனை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள். அந்த வழிபாடு உங்களை மேலே கொண்டு செல்லும் என்பது மட்டும் உண்மையான ஒன்று.

பச்சைப்பரப்புதல் ஒன்றை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருப்பேன். அதனை பல நண்பர்கள் செய்து வருகின்றனர். அதோடு நம்ம வேளை அதனை சொல்லிக்கொண்டே இருப்பது மட்டுமே.

கிரகங்களை கண்டு நம்ம ஆட்கள் நிறைய பயப்படுவது உண்டு. தோஷத்தால் தான் நாம் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த தோஷத்தை போக்குவது எப்படி என்று புலம்புவதும் உண்டு. இதனை போக்க நீங்கள் தொடர்ச்சியாக பச்சைப்பரப்புதல் செய்து வந்தால் போதும்.

பச்சைப்பரப்புதலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். நிறைய இருக்கின்றது அதனை எல்லாம் போக போக உங்களுக்கு தெரியும். அதனை அனுபவபூர்வமாக செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு இது புரியும்.

ஜாதகத்தில் உள்ள தோஷம் தான் என்னை பாடாய் படுத்துகிறது என்று புலம்பிக்கொண்டு இல்லாமல் ஏதோ ஒரு வழிபாடு செய்யுங்கள் அல்லது பச்சைப்பரப்புதலை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு