Followers

Saturday, December 31, 2016

நன்றி


வணக்கம்!
          இந்த ஆண்டு ஜாதககதம்பத்தின் பதிவுகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படித்தற்க்கு மிக்க நன்றி. வரும் ஆண்டும் தொடர்ந்து நிறைய பதிவுகளை தரவேண்டும் அதனை நீங்கள் தினமும் வந்து படித்து பயன்பெறவேண்டும் என்று அம்மனை வேண்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு பரிகாரபூஜையை ஆரம்பம் செய்தோம். அதிலும் பல பேர்கள் பயன்பெற்றார்கள். தொடர்ந்து பரிகாரபூஜை நடைபெறும். அம்மன் பூஜையையும் விஷேசமாக நடைபெறும்.

நம்முடைய ஜாதககதம்பத்தில் புதிய புதிதாக நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கின்றனர். தற்பொழுது தான் நிறைய பேர் இதனை படிக்கின்றனர். நீங்கள் பிறர்க்கு முடிந்தவரை பரிந்துரை செய்யுங்கள்.

ஜாதககதம்பத்தால் பல பேர்களுக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைந்திருக்கின்றது. அந்த புண்ணியமும் உங்களுக்கு சேரும். வரும் ஆண்டு நிறைய பதிவுகளை அம்மன் அருளால் தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 30, 2016

சுக்கிரன் : கணவன் மனைவிக்குள் கசப்பு


வணக்கம்!
         ஒருத்தருடைய மணவாழ்வுக்கு சுக்கிரன் மிக மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஒரு கிரகமாக இருக்கும். மணவாழ்க்கை சரியில்லை என்றாலும் சுக்கிரனை தான் நாம் பார்க்கவேண்டும். அதன் பிறகு தான் அடுத்த கிரகங்களைப்பற்றி பார்க்கவேண்டும்.

மணவாழ்க்கைக்கு சுக்கிரன் தேவையோ இல்லையோ அவர் அவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பாக அவர்களுடன் இருப்பது நல்லது. இளம்ஜோடிகள் என்று ஒரு சில பெற்றோர்கள் அவர்களை தனியாக வீடு பார்த்து அவர்களை தனிமைப்படுத்திவிடுகின்றனர்.

தனிமையில் இருக்கும் இளம் தம்பதினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வே பல காலங்கள் ஆகும். ஒரு சிலருக்கு ஒரு வருடத்திற்க்கு மேல் கூட ஆகலாம். அவர்களை தனியாக வைத்தால் அவர்களுக்குள் பிரச்சினை உருவாகி அவர்களின் மணவாழ்வை பாதிக்க செய்கிறது.

சுக்கிரன் சரியில்லாத தம்பதினர்களாக இருந்தால் இந்த சண்டை ஒரே மாதத்தில் ஆரம்பித்து பெரியளவில் வந்துவிடுகின்றது. பல குடும்பங்களில் பெற்றோர்கள் செய்கின்ற தவறால் தான் அவர்கள் பிரிகின்றனர்.

சுக்கிரன் சரியில்லாத மற்றும் சுக்கிரன் நன்றாக இருந்தால் கூட அவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்து அவர்களுக்கு குடும்பத்தின் பாரம்பரியத்தைப்பற்றி சொல்லிக்கொடுங்கள். சுக்கிரனால் வரும் பாதிப்பு குறையும்.

சுக்கிரன் எந்த கிரகத்தோடு அமர்ந்திருக்கின்றது என்பதையும் பாருங்கள். சுக்கிரன் செல்லும் நட்சத்திரம் ராசி ஆகியவையும் பார்த்தால் கணித்துவிட்டு அதற்கு பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரகங்கள் கொடுக்கும் வாழ்க்கை


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் தீயகிரகங்களின் வேலை அதிகமாக இளமையில் வந்துவிட்டால் பாதி வயதுக்கு மேல் அவர்களின் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். தீயகிரகங்கள் இளமையில் வாட்டி வதைக்கும்பொழுது அவர்களுக்கு பாதிவயதிற்க்கு மேல் நல்ல அனுபவம் ஏற்பட்டு வாழ்வில் தோல்வியை சந்திக்கமாட்டார்கள்.

இளமையில் நல்ல கிரகங்கள் வேலை செய்தால் இளமையில் ஊதாரியாக செலவு செய்து பாதி வயதுக்கு மேல் தீயகிரகங்களின் பிடியில் சிக்கும்பொழுது அதிக துயரத்தை சந்திப்பார்கள்.

ஒருவர் வறுமையில் இருந்து செல்வவளத்திற்க்கு செல்லலாம். செல்வசெழிப்போடு இருந்துவிட்டு மறுபடியும் கீழே வந்தால் அவர்களால் தாங்கிக்கொள்வது கடினமாக இருக்கும்.

ஜாதகத்தில் உள்ள தீயகிரங்கள் முழுவதும் வேலை செய்துவிட்டால் நல்லது அதன் பிறகு ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். தீயகிரகங்கள் தன்னுடைய பணியை முடித்துவிட்டால் அதன் பிறகு நல்ல கிரகங்களின் பலனை நாம் முழுவதும் பெற்றுவிடலாம்.

மூன்றாவது சுற்று ஆரம்பம் ஆனவுடன் நமக்கு டிக்கெட் தீயகிரகங்கள் கொடுத்துவிடும். இந்த ஜென்மத்திலேயே அனைத்து கிரகங்களின் வேலையும் முடிந்துவிட்டால் அவர்க்கு மோட்சம் கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 29, 2016

பரிகாரம்


ணக்கம்!
          ஒரு வழியாக இராகு கேது பரிகாரம் முடிந்தவிட்டது. நிறைய கஷ்டங்களுக்கு நடுவே இந்த பரிகாரத்தில் கலந்துக்கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் அம்மன் அருளால் நல்லது நடக்கும். ஒரு மனகுறை மட்டும் மனதில் இருந்துவருகின்றது. நமது அம்மன் பூஜை போல் இதனை வெளியில் படங்களை போடமுடியவில்லை. 

ஆன்மீக அனுபவங்கள் படிக்கும் நண்பர்களுக்கு மட்டும் பரிகாரம் முடிந்து அம்மன் ஹோமத்தின் படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துக்கொள்ளமுடிந்தது. மற்றவர்களுக்கு அப்படி செய்யமுடியவில்லை என்ற ஒரு வருத்தம் இருந்தது. பரிகாரம் பூஜையை வெளியில் காட்டகூடாது. பரிகாரம் முடிந்து அம்மனை வைத்து ஒரு ஹோமம் செய்வோம் அதனை பகிர்ந்துக்கொள்ளமுடியும்.

இராகு கேது பரிகாரத்தில் கஷ்டத்தோடு தான் கலந்துக்கொண்டு இருப்பார்கள். ஏன் என்றால் நாட்டில் நிலவும் பணப்பிரச்சினை தான் காரணம் என்று சொல்லமுடியும். பாதி பேர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு பணம் அனுப்பமுடியவில்லை அப்படி இருந்தும் அவர்களுக்கு பரிகாரம் செய்திருக்கிறேன். நாட்டிலேயே பணம் இல்லை என்று சொல்லுகின்றனர் சாதாரண மனிதனிடம் எப்படி இருக்கும் என்பதால் விட்டுவிட்டேன். 

ஒரு சில நண்பர்கள் கொஞ்சம் தாராளமாகவே பணத்தை அனுப்பியிருந்தார்கள் அதனை வைத்து பலருக்கு செய்யமுடிந்தது. வரும் செவ்வாய் மற்றும் சனி பரிகாரத்திற்க்கு கூட இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

செவ்வாய் மற்றும் சனி பரிகாரம் முற்றிலும் இலவசமாக நடத்தலாம் அதோடு விருப்பட்டு பணம் அனுப்புவதும் செய்யலாம் என்று இருக்கிறேன். இலவசம் இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கு ஏற்பாடு செய்துக்கொண்டு இருக்கிறேன். அதற்குண்டான பணம் வந்தவுடன் இலவச அறிவிப்பு வரும். உங்களின் ஜாதகத்தை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 28, 2016

நண்பர்களுக்காக


ணக்கம்!
          இந்த ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். புதிய ஆண்டு தொடக்க கொண்டாட்டம் என்பது நிறைய இருக்கும். அதனை எல்லாம் மிகுந்த எச்சரிக்கையோடு கொண்டாடுங்கள் ஏன் என்றால் எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தை தான் தரும் என்பதால் சொல்லுகிறேன்.

இந்த பதிவை இதில் எழுதுவது கூட நம்ம தளத்தில் அதிகம் இளைஞர்கள் இருப்பதால் இந்த தகவலை சொல்லுகிறேன். புதிய ஆண்டுக்கு என்று கொண்டாட்டத்தோடு வெளியில் சென்று வரலாம் என்று நினைப்பவர்களும் இருப்பார்கள் அதனை கூட தவிர்த்து விடுவது நல்லது. 

வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனம் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் ஒழுங்காக சென்றாலும் கூட எதிரில் வருபவர்கள் எப்படி என்பது தெரியாது என்பதால் வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம்.

புதிய பழக்கம் ஒன்று இருக்கின்றது. இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது. இதற்க்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை இதனை ஏன் செய்யவேண்டும். இரவு நேரத்தில் கும்பிடுவதற்க்கு என்று நம்மிடம் நிறைய பண்டிகை இருக்கின்றது.

கொண்டாட்டங்களை வீட்டில் வைத்துக்கொள்வது நல்லது. பாதுகாப்பாக இருந்துக்கொள்ளுங்கள். தேவையற்ற வேலையில் எல்லாம் ஈடுபடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அமாவாசை பால் இலவசம்


ணக்கம்!
          கிராமபுறங்களில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆதாரமாக இருப்பது அவர்கள் வளர்க்கும் பசு மாடுகள். பசுவை வைத்து பால் கறந்து அதன் வழியாக குடும்பத்தை வளர்த்தவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். 

ஒரு பசு மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும். தற்பொழுதும் பசுமாடு வளர்ப்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். நானும் பசு மாடு வளர்த்து வருபவன் தான். அதன் வழியாக எனது குடும்பமும் பயன் அடைந்து வருகின்றது.

முப்பது வருடங்களுக்கு முன்பு பசு வைத்து பால் கறந்தால் ஒரு நடைமுறை இருக்கும். பசுவின் பாலை நாம் விற்போம் அல்லவா அந்த பசுவின் பாலை மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று பணம் வாங்கிககொள்ளகூடாது. இலவசமாக பசுவின் பாலை கொடுக்கவேண்டும்.

அமாவாசையில் தானம் செய்வதற்க்கு ஏதுவாக இதனை அந்த காலத்தில் வைத்திருந்தார்கள். இன்று இது நடைமுறையில் இல்லை. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிக்கை மட்டும் இலவசமாக கொடுப்பது உண்டு.

அமாவாசை என்றாலே தானம் செய்து அதன் வழியாக நமக்கு பித்ருதோஷம் இல்லாமல் பார்த்துக்கொண்ட காலமாக இருந்தது. இன்று தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை மட்டும் இப்படி நடக்கிறது. உங்களால் முடிந்தால் அமாவாசை அன்று மட்டும் இப்படி தானம் செய்து பார்க்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 27, 2016

செவ்வாய் தரும் கடன்


வணக்கம் !
          மாதம்தோறும் கார்டு நிறைய சம்பளம் வாங்கும் நபர்களுக்கும் கடன் இருக்கும். இந்த காலத்தில் இது அதிகம் என்று சொல்லியே தீரவேண்டும். நிறைய பேர்கள் கடனோடு வாழ்க்கையை நடத்துவார்கள். 

பொதுவாக ஆறுக்குடையவனின் தசாவில் கடன் ஏற்படும் என்பது சோதிடவிதி. அதோடு சனி சூரியன் மற்றும் செவ்வாயின் வீட்டில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு கடன் ஏற்படுவது உண்டு என்பதும் சோதிடவிதி.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகத்தின் பலன் குறைந்தால் அவர்களுக்கு கடன் ஏற்படும் என்று சொல்லுவார்கள். இதுவும் உண்மை தான். செவ்வாய் பலன் குறைவது அல்லது நீசம் அடைந்தால் அவர்களுக்கும் கடன் ஏற்படுவது உண்டு.

கடன் என்ற ஒன்று அனைவரையும் அச்சுறுத்தினால் அப்பொழுது செவ்வாய் கிரகம் சரியில்லாமல் கோச்சாரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது அர்த்தம்.

கடனோடு நம்ம வாழ்க்கையை செலுத்திக்கொண்டிருக்கும் அனைவரும் செவ்வாய் கிரகத்தை நன்றாக வணங்கி அந்த கடனை போக்கிக்கொள்ளமுடியும். படிப்படியாக கடன் குறையும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் சனி பொதுபரிகாரம்


வணக்கம்!
          இராகு கேது தோஷ பரிகாரத்தை செய்த காரணத்தால் பதிவுகள் குறைந்தன. இனிமேல் மாதம்தோறும் பரிகாரம் இருந்தாலும் பதிவுகள் குறையாமல் அதிகப்படுத்தி தருகிறேன். இரவு நேரங்களில் இதற்கு என்று தனியாக நேரத்தை ஒதுக்கி தயார் செய்துவிட்டு உங்களுக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இராகு கேது பரிகாரம் செய்து முடித்துவிட்டேன். 

அடுத்த பரிகாரம் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களுக்கு பரிகாரம் செய்யப்படும். செவ்வாய் பரிகாரம் ஏற்கனவே நாம் நடத்தி இருந்தாலும் விடுப்பட்டவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் மற்றும் தனித்தனியாக இருந்தாலும் இது செய்யப்படும்.

இது ஒரு பெரிய பரிகாரமாக செய்யப்படும். இதனை தயார் செய்த நோக்கமே நிறைய பேர் இதில் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதால் இந்த பரிகாரம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

பரிகாரம் தை பூசத்தோடு நெருங்கிய சம்பந்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு கிரகங்களும் தைபூசத்தோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் அந்த காலம் வரை இது நடத்தப்படும். இந்த பரிகாரத்தில் பல அம்சங்கள் இருக்கின்றன. அதனை எல்லாம் போக போக தெரிந்துக்கொள்ளலாம்.

செவ்வாய் சனி பரிகாரம் இலவசமாக செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். விருப்பட்டு பணம் அனுப்பவர்கள் அனுப்பிவிடுகின்றனர். ஒரு ஐந்து பேர் இலவசமாக ஜாதகத்தை அனுப்பவார்கள். முடிந்தவரை அனைவரும் இதில் இணைவது போல் செய்வதற்க்கு வழி என்ன என்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

வரும் அமாவாசையில் இருந்து இதனை ஆரம்பிக்கலாம். தை மாதத்தில் தான் பரிகாரம் பூஜை செய்யப்படும். இதனைப்பற்றி அறிவிப்பு வந்தவுடன் ஜாதகத்தை அனுப்பலாம். பரிகாரம் பூஜை செய்தாலும் பதிவுகள் இனி குறையாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய்


ணக்கம்!
          எனக்கு தெரிந்த ஒருவர் இரயில்வேயில் ைஉக வில் தொழில்நுட்ப பிரிவில் பெரிய அதிகாரியாக வேலை பார்த்தார். அவர் இயந்திரங்களை பற்றி அவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்திருந்தார். அதே நேரத்தில் அவர் பணி புரிந்த இடத்திலும் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தற்பொழுது ஒய்வு பெற்றுவிட்டார். அவரின் ஜாதகத்தில் அவருக்கு செவ்வாய் கிரகம் பத்தில் இருந்தது. நல்ல துணிவு மிக்கவராகவும் அவர் இருந்தார். செவ்வாய் நல்ல நிலைமையில் இருந்தால் ஒருவர் துணிவுமிக்கவராக இருப்பார்.

அவரின் குடும்பமும் நல்ல பணபலன் படைத்த குடும்பமாக இருக்கின்றது. செவ்வாய் கிரகம் பலம் பெற்றால் எப்பேர்ப்பட்ட இயந்திரங்களையும் துணிவாக கையாளுவார்கள். மற்றவர்கள் பார்த்து பயப்படும் அளவுக்கு அவர்களின் துணிச்சல் இருக்கும்.

ஒரு ஆன்மீகவாதிக்கு செவ்வாய்கிரகம் பலம் பெற்றதாக இருக்ககூடாது. ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் செவ்வாய் பலன் பெற்றால் மரணத்தை பார்த்து பயப்படமாட்டார்கள். மரணத்தை  பார்த்து பயம் ஏற்பட்டு அதன் பிறகு ஆன்மீகவாதியாக மாறுவார்கள். என்னடா வாழ்க்கை என்று நினைப்பு வரும்பொழுது தான் ஆன்மீகபாதையை நோக்க செய்யும்.

செவ்வாய் பலன் பெற்றுவிட்டால் இது நடக்காது. எதற்க்கும் பயப்படாதவர்கள் மரணத்திற்க்கு பயப்படமாட்டார்கள். செவ்வாய் பலன் பெற்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும். பலம் இல்லை என்றால் ஆன்மீகவாழ்க்கை நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 26, 2016

சந்திரனும் செவ்வாய் தைரியமும்


ணக்கம்!
          சந்திரன் செவ்வாய் நட்சத்திரத்தில் சென்றால் பெரும்பாலும் அவர்கள் கொஞ்சம் தைரியம் அதிகமாக இருப்பார்கள். தைரியம் தேவை தான் ஆனால் அது எப்பொழுதும் கைகொடுப்பதில்லை என்பது தான் உண்மை.

செவ்வாய் உச்சம், மூன்றாவது வீடு ,ஆறாவது வீட்டில் செவ்வாய் இருந்தாலும் நல்ல தைரியத்தோடு ஒருவர் இருப்பார். இவர்களுக்கும் எப்பொழுது தைரியத்தோடு இருப்பதால் அவர்களுக்கும் பிரச்சினை இருக்கும்.

சந்திரனுக்கு ஏழரை இது தான் விதி அதாவது உங்களுக்கு ஏழரை சனி பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய் தைரியத்தை கொடுப்பதால் என்ன ஏழரைசனி பார்த்தவிடலாம் என்று ஒரு தைரியத்தோடு இருப்பார்கள்.

இவர்களுக்கு சனி என்ன செய்யும் என்றால் கை கால்களை உடைத்துவிடும். நான் பல பேர்களை இப்படி பார்த்து இருக்கிறேன். கை கால்களை உடைத்தாலும் பரவாயில்லை பல பேருக்கு தொழிலில் பெரிய நஷ்டத்தை உருவாக்கி முன்னேற்றம் இல்லாமல் அடித்துவிடுவதும் உண்டு.

பரிகாரம் பரிந்துரை செய்தால் கூட இவர்கள் செய்யவும் மாட்டார்கள். இவர்களிடம் நான் அதிகம் இதனைப்பற்றி சொல்லுவதும் கிடையாது. சொன்னாலும் செய்யமாட்டார்கள் என்று தெரிந்து தான் இதனைப்பற்றி சொல்லுவது இல்லை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 24, 2016

தீயகிரங்களின் பிடியின் காலம்


வணக்கம்!
          ஏழரை சனி காலத்தில் நாம் நன்றாக இல்லாமல் ஏழைப்போல் இருந்தால் நாம் ஏழரையின் பாதிப்பில் இருந்து விடுபடலாமா என்று நண்பர் கேள்வி கேட்டார்.

பொதுவாக ஒரு பூஜை கொடுக்கும் சக்தி நம்மை மாற்றிக்கொள்வதால் எளிதில் நடைபெறுவதில்லை என்பது தான் உண்மை. பரிகார பூஜையை நான் அதிகம் பரிந்துரை செய்வதே இதன் நோக்கத்தில் தான் செய்கிறேன்.

ஏழரை சனியின் காலத்தில் நாம் நம்மை மாற்றிக்கொள்வோம் என்று வைத்துக்கொள்வோம் ஏழரை சனி நம்முடைய மனதிற்க்கு தான் நடைபெறும். நம்முடைய மனதை தான் கெடுத்துவிடும் நாம் எப்படி நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளமுடியும்.

வாழ்க்கையை மாற்றிக்கொள்வதால் ஒரு சில விசயங்கள் நடைபெறும் என்பதை நான் ஏற்றுக்கொள்வேன் ஆனால் பரிகாரத்திற்க்கு என்று நாம் கோவிலை முதலில் நாடிவிட்டு அதன் பிறகு நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள். வழிபாடு செய்யாமல் வாழ்க்கையை மாற்றினால் ஒன்றும் நடக்காது.

ஏழரைசனிக்காலத்திற்க்கு என்று மட்டும் இல்லை எல்லா கிரகங்களுக்கும் முதலில் ஒரு வழிபாடு அதன் பிறகு உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாழ்க்கைக்கு தேவையானவை


ணக்கம்!
          நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். வெறும் கிரகங்கள் அமர்ந்திருப்பதை மட்டுமே சொல்லிருக்கின்றீர்கள் மேலும் பல தகவல்களை சொல்லலாமே என்று இருந்தது.

கிரகங்கள் அமர்ந்தை வைத்தும் மற்றும் நட்சத்திரங்களை வைத்தும் பார்த்து சொன்னாலே போதும். அதனை தாண்டி நாம் பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. ஒரு சிலர் அதனை எல்லாம் பார்த்தாலும் அந்தளவுக்கு நாம் பலனை பார்த்து ஒன்றும் நடக்கபோவதில்லை.

முற்காலத்தில் நான் சொல்லுவதை வைத்தே அனைத்து பலனையும் நிர்ணயம் செய்தார்கள். அதனை வைத்து தான் நான் பலன் சொல்லுகிறேன். சோதிடத்தை நீங்கள் இந்தளவுக்கு பார்த்தாலே போதும். பெரிய ஆராய்ச்சி செய்து நாம் ஒன்றும் செய்யபோவதில்லை.

நீங்கள் படித்துக்கொண்டே இருந்தால் நிறைய படிக்கலாம். வாழ்க்கை முழுவதும் இதனை படித்துக்கொண்டே இருக்கலாம். நம்முடைய வேலை இதனை படிப்பது கிடையாது. இதனை வைத்து நம்ம வாழ்க்கை தரத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது எப்படி என்று தான் பார்க்கவேண்டும்.

சோதிடம் மட்டும் கிடையாது உலகத்தில் இருக்கின்ற அனைத்து படிப்பும் இப்படி தான் இருக்கவேண்டும். நம்ம வாழ்க்கைக்கு பயன்படுகின்றது என்றால் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும் இல்லை என்றால் அதனை விட்டுவிடவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 23, 2016

சுக்கிரனின் பலம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் மரத்தை வைப்பதை விட வெட்டுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். நகர்புறத்தை விட கிராமபுறங்களிலும் இது அதிகம் நடைபெறுகின்றது. மரத்தை வெட்டுவதால் சுக்கிரனின் பலம் குறையும்.

பூக்கள் நிறைந்த மரத்தை வெட்டும்பொழுது சுக்கிரனின் பலம் குறைக்கிறது என்பார்கள். பொதுவாக மரத்தை வெட்டினாலே பலம் குறைய தான் செய்யும். அதோடு நீங்கள் வெளியிடுங்களுக்கு செல்லும்பொழுது அந்த பகுதியில் மரம் அல்லது செடிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடாது.

ஒரு விவசாயி ஒரு மரத்தை வெட்டுகிறான் என்றால் அது சரியான காரணம் இருக்கும். அவன் ஒரு மரத்திற்க்கு பல மரங்களை மற்றும் செடிகளை வைத்துவிடுவதால் அவனுக்கு தீங்கு விளையாது. நம்ம ஆட்கள் மரத்தை வெட்டினால் எதுவும் வைப்பதில்லை.

இன்றைய காலத்தில் ஆன்மீகம் வளர்ந்து இருப்பதால் அவர் அவர்கள் உயிர் வாழ்வனவற்றிக்கு உணவை அளிக்கிறார்கள் ஆனால் ஒரு மரத்தை நாம் வளர்த்தால் இயற்கையோடு சேர்ந்து நிறைய உயிர்கள் அதில் வளரும். சுக்கிரனின் முழுமையான பலனை நாம் பெறலாம்.

இன்றைய காலத்தில் ஒருவர் மோட்சம் அடைய வேண்டும் என்றால் விவசாயியாக இருந்தால் தான் அது நடக்கும். விவசாயி தான் நிறைய உயிர்களை வாழவைக்க உதவுகிறான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 22, 2016

கேள்வி & பதில்


ணக்கம்!
          நண்பர்  KJ அவர்கள் சாப தோஷத்தைப்பற்றி ஒரு கேள்வி கேட்டார். தனுசு லக்கினம் குரு பகவான் எட்டில் உச்சம் ஆகின்றார் இதற்கு விதிவிலக்கு உண்டா என்று கேள்வி கேட்டார்.

முதலில் லக்கினாதிபதி எட்டில் மறைகிறார். அவர் உச்சம் பெற்றால் கூட எட்டில் மறைவது தவறு தானே. மறைவுக்கு உள்ள கஷ்டத்தை கொடுப்பார்.

உச்சம் பெற்றால் நல்ல பலனை கொடுக்கும் உச்சத்திற்க்கு உள்ள பலனையும் மற்றும் மறைவுக்கு உள்ள பலனை சேர்த்து கொடுக்கும். கொஞ்சம் நல்லது கொஞ்சம் கெட்டது என்பது போல பலன் இருக்கும்.

நல்ல பதவியை உச்சம்பெற்றவர் கொடுத்தால் லக்கினாதிபதி மறைந்தர்க்கு கொஞ்சம் நோயையும் கொடுப்பார். நோயை உடல் வழியில் இல்லை என்றாலும் மனது ரீதியிலும் ஏதாவது சிக்கலை கொடுப்பார்.

இதற்க்கும் சாபதோஷம் உண்டு. என்ன ஒன்று என்றால் இதற்கு எளிதாக விமோசனம் கிடைக்கும் என்று சொல்லலாம். இவர்களே எளிதாக இதனை தீர்த்துக்கொள்வது போலவும் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சாப தோஷம்


வணக்கம்!
          ராகு கேது பரிகாரம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்படியும் இந்த வாரம் அனைவருக்கும் முடித்துவிடலாம். இந்த பரிகாரத்தால் தான் பதிவுகளை அதிகம் உங்களுக்கு தரமுடியவில்லை முடிந்தவரை நிறைய பதிவுகள் இட முயற்சிக்கிறேன்.

குரு கிரகம் உங்களுக்கு கெடுதல் தரும் நிலையில் இருந்தால் உங்களுக்கு பிறர் சாபம் இடுவார்கள். சாபதோஷம் இருக்கின்றது இந்த தோஷத்தாலும் பாதிப்பு அதிகம் இருக்கின்றது. எதுவும் நமக்கு நன்றாக அமையவில்லை நிறைய தோல்விகள் ஏற்படுகின்றது என்பவர்களுக்கு எல்லாம் இந்த சாபதோஷம் இருக்கின்றது என்று அர்த்தம்.

குரு கிரகம் உங்களுக்கு கெட்டாலே இந்த தோஷம் உங்களின் பரம்பரையில் இருந்து வந்திருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். உங்களின் பரம்பரையில் இருந்தவர்கள் யாரோ சாபத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு அவர்களின் முன்ஜென்மத்தில் இப்படிப்பட்ட சாபத்தை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். முன்ஜென்மத்தில் சாபத்தை வாங்கியிருந்தால் அவர்களின் ஜாதகத்தில் குரு கிரகம் எட்டில் அமைந்து இருக்கும்.

நீங்களும் பிறர்க்கு சாபம் இடவேண்டாம். இது கிராமபகுதியில் அதிகமாக இருக்கும். தற்பொழுது சாபம் இடுவது நகர்புறத்திலும் இருக்கின்றது. அடுத்தவர்களை திட்டவும் வேண்டாம் அதிகமாக பேசவும் வேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு


வணக்கம்!
          ஒருவருக்கு குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் அவர்க்கு எப்படிப்பட்ட தீமை தரும் கிரகங்களின் தீயபலனை குறைத்துவிடும். ஒரு சிலருக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி அல்லது தீமை தரும் தசா வரும்பொழுது அவர்களுக்கு குரு கிரகம் சாதகமான ஒரு பலனை தரும் நிலையில் இருந்தால் தீமையான பலனை கொடுக்காது.

குரு கிரகத்திற்க்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல சக்தி இருக்கின்றது. குரு கிரகம் சரியில்லை என்றால் நல்ல சக்தி குறைந்து தீமையான கிரகங்களின் ஆட்டம் அதிகமாக இருக்கும். நமக்கும் நல்ல பலனை கொடுக்காது.

குரு கிரகத்தின் சக்தியை அதிப்படுத்த நாம் நிறைய வழிகளை சொல்லிருந்தாலும் அதில் குரு போன்ற ஒருவரை நம்மோடு வைத்துக்கொண்டால் வாழ்வில் எப்படிபட்ட சூழ்நிலையிலும் நம்மை அவர் காப்பாற்றிவிடுவார்.

குரு கிரகம் சரியில்லை எனும்பொழுது ஒரு நல்ல குருவும் கிடைக்கமாட்டார் என்று நாம் சொல்லுவது உண்மை தான். எப்படி இருந்தாலும் நாம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தால் நாம் செல்லும் திசைக்கு இவர்களும் வழிவகுப்பார்கள்.

குரு சரியில்லை என்றாலும் நிறைய நல்ல குரு எழுதிய நிறைய புத்தகங்களை வாங்கி படித்து அதன் வழியில் நாம் நடக்க துவங்கலாம். எதுவும் முடியவில்லை என்றால் குரு தரும் பொறுமை இருந்தால் பாேதும் அனைத்தையும் வென்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 21, 2016

பூஜை பொருட்கள்


வணக்கம்!
          எந்த ஒரு பூஜையும் அக்னியை வைத்து செய்யும்பொழுது நல்ல பலனை கொடுக்கும் என்பதை எதிர்பார்க்கலாம். அக்னி என்று வந்தாலே அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

அக்னியை வைத்து ஹோமம் செய்யும்பொழுது நெய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலத்தில் நல்ல தரமான நெய் கிடைப்பது கடினம். நான் கடைகளில் வாங்கி தான் பயன்படுத்துக்கிறேன். 

வீட்டில் இருப்பது இரண்டு பசு மாடு இதனை வைத்து நெய்யை எடுப்பது கடினம். ஒரு நாளுக்கு நெய் இரண்டு கிலோ ஹோமத்திற்க்கு பயன்படுத்தும்பொழுது இரண்டு பசுமாட்டை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

கடைகளில் நீங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் கொஞ்சம் நன்றாக உள்ளதை வாங்கி பயன்படுத்துங்கள். விலை கொஞ்சம் அதிகம் கொடுத்து வாங்கினால் ஒரளவுக்கு நன்றாக இருக்கின்றது. தரமான பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

நாம் நல்லதை நினைத்து தான் அனைத்தையும் வாங்கி பயன்படுத்துகிறோம் ஆனால் அதனை விற்க்கும் நபர்கள் தவறு செய்கின்றனர். அந்த தவறு நமக்கு கிடையாது அது விற்க்கும் நபருக்கு தான் செல்லும். பலன் முழுவதும் நமக்கு கிடைக்கும். காலத்தின் கோலம் அப்படி இருப்பதால் நாம் ஒன்றும் செய்யமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 20, 2016

ஆன்மீகம்


ணக்கம்!
         இன்றைய காலத்தில் நிறைய எதிர்பார்ப்போடு தான் ஆன்மீகத்தை நோக்கி செல்லுகின்றனர். எல்லாம் அவர் அவர்களின் தேவையை எதிர்நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர். இன்றைய உலகத்தில் இது நடக்க தான் செய்யும் ஆனால் எந்த தேவையும் இல்லாமல் உன்னுடைய தரிசனம் எனக்கு கிடைக்கவேண்டும். எத்தனையோ விசங்கள் இருந்தாலும் நான் உன்னை தேடி வருகிறேன் அதுவே நான் செய்த புண்ணியம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?

கோவில் வாசலில் வீடு இருக்கும். அந்த கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசனம் செய்யாதவர்கள் இருக்கின்றனர். அவர்களின் கர்மா அப்படி இருக்கின்றது.

ஆன்மீகத்தை நீங்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நோக்கினால் நீங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள். கர்மாவை இறைவனே போக்கிவிடுவான் உங்களுக்கு அனைத்தும் நல்லதாக நடக்க ஆரம்பித்துவிடும்.

எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்பொழுது இந்த எதிர்பார்ப்பு போய்விட்டால் இவன் நம்மை நோக்கமாட்டான் என்று நமது கர்மாவை போக்குவதில்லை. சுயநலம் அதிகமாக இருக்கும்பொழுது நமக்குள் இறைவன் வாசம் செய்வதில்லை என்பது தான் உண்மை.

ஆன்மீகத்தை நோக்கும்பொழுது நீங்கள் கடைபிடிக்கவேண்டியது ஒன்று தான். இந்த உலகத்தில் எவ்வளவு வேலைகள் இருக்கும்பொழுது உன்னை தேடி நான் வருகிறேனே அதுவே நான் செய்த புண்ணியம் என்று நினைத்து பாருங்கள். அனைத்தும் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய்

ணக்கம்!
          ஒருவருக்கு செவ்வாய் தசா ஆரம்பித்தால் அந்த நபருக்கு வீடு சம்பந்தப்பட்ட விசயத்தி்ல் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. செவ்வாய் கிரகம் கொஞ்சம் கெட்டாலும் அவர் வீடு சம்பந்தப்பட்டத்தில் மாட்டிக்கொள்வார்.

செவ்வாய் கிரகம் நமக்கு தீங்கு செய்ய ஆரம்பித்தால் நாம் மாட்டிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. 

நீங்கள் ஒரு இடத்தில் இடம் வாங்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தை வாங்கியபிறகு தான் தெரியவருகிறது அதில் ஏதோ வில்லங்கம் இருக்கின்றது. வில்லங்கமாக இருக்கின்ற நிலத்தை வாங்கிவிட்டீர்கள் அதனை நீங்கள் சரி செய்வதற்க்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் அமைந்த இடம் சரியாக இல்லை என்றால் நிலத்தோடு கிடந்து போராட வேண்டிவரும். ஒரு சிலருக்கு நிலமே அமையாமல் போய்விடுவதும் உண்டு. வாழ்நாளில் அவர்களின் பெயரில் ஒரு நிலம் கூட இல்லாமல் சென்றவர்களும் இருக்கின்றார்கள். 


ராகு கேது பரிகாரத்திற்க்கு கடைசி நேரத்தில் நிறைய நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டார்கள். ராகு கேது பரிகாரம் என்று சொல்லி ஒரு மாதகாலம் இருக்கும் ஆனால் நம்ம ஆட்கள் கடைசி நேரத்தில் ஜாதகத்தை அனுப்பினார்கள். பலர் அந்தநாளில் என்னோடு பேச போனில் தொடர்புக்கொண்டார்கள். அந்த நாளில் நான் இருந்த பிஸியால் யாருடனும் பேசமுடியவில்லை. இனி வரும் காலங்களில் பரிகாரம் என்று வந்தால் அறிவிப்பு வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுங்கள்

ராகு கேது பரிகாரம் இந்த வாரம் முழுவதும் பூஜை நடைபெறும். நீங்கள் அனுப்பிய ஜாதகத்திற்க்கு ஒரு நல்ல மாற்றம் வரும் என்பதை மட்டும் சொல்லலாம். அம்மன் அருளால் உங்களுக்கு நடைபெறும்.

நீங்கள் செய்த பிராத்தனையால் இன்று தஞ்சாவூர் பகுதியில் மழை பெய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 19, 2016

சந்திரனும் மழையும்


வணக்கம்!
          எனக்கு தெரிந்த நாளில் இருந்து இந்த வருடம் தான் தஞ்சாவூர் பகுதியில் ஒரு குளத்தில் கூட தண்ணீர் இல்லை. ஒரு குளமும் தண்ணீரால் நிரம்பவில்லை. காவிரியிலும் தண்ணீர் வரவில்லை மழையும் இல்லை. நிறைய இடத்தில் தற்பொழுது மழைக்காக கூட்டு பிராத்தனை நடைபெறுகிறது. 

சோதிடத்தில் இந்த வருடம் நிறைய மழை என்று நமது சோதிடர்கள் எல்லாம் சொன்னார்கள். தஞ்சாவூர் பகுதியில் மழை இல்லை. இனி மழை வந்தாலும் லாபம் கிடையாது. மழை என்றவுடன் சோதிடத்தில் ஒன்றை சொல்லவேண்டும் என்பதற்க்காக தான் இதனை எழுத ஆரம்பித்தேன். 

சந்திரன் சோதிடத்திற்க்கு மிக மிக முக்கியம். ஒரு தமிழ்மாதத்தில் முதல் நாள் மழை பெய்தால் அந்த மாதம் முழுவதும் மழை இருக்காது. அஷ்டமி ஏகாதசி திருவாதிரை அன்று மழை வருவதுபோல் காட்டும் மாதததிற்க்கு தகுந்தமாதிரி அந்த நாளில் மழையும் பெய்யும்.

அமாவாசை பெளர்ணமி நாட்களிலும் மாதத்திற்க்கு தகுந்தமாதிரி மழை இருக்கும். வளர்பிறை நாட்களை விட தேய்பிறை நாட்களில் தான் மழை அதிகமாக இருக்கும்.  

ஒரு புயல் வளர்பிறை நாளில் உருவாகினால் காற்று மட்டுமே அடிக்கும் அதிக மழை இருக்காது. தேய்பிறை நாளில் புயல் உருவாகினால் அதிக மழை இருக்கும். நல்ல மனிதனின் பிராத்தனையிலும் மழை இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 17, 2016

கடைசி நாள்


வணக்கம்!
          ராகு கேது பரிகாரம் இன்று கடைசி நாள். நாளை முதல் ராகு கேதுவிற்க்கு பரிகார பூஜை ஆரம்பம் ஆகும். ராகு கேதுவிற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். கூப்பிட்டும் பேசிக்கொண்டு இருக்கிறேன். 

மாதந்தோறும் அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பியவர்களின் ஜாதகம் எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு மெயில் போடவில்லை ஆனால் நான் செய்துவிடுகிறேன். 

இதுவரை நிறைய ஜாதகங்கள் வந்திருக்கின்றன வந்த அனைத்து ஜாதகத்தையும் இன்று அல்லது நாளைக்குள் கூப்பிட்டு உங்களிடம் என்ன என்பதை கேட்டுவிடுகிறேன். ராகு கேதுவிற்க்கு இன்னும் நிறைய ஜாதகங்களை எதிர்பார்க்கிறேன்.

கோச்சாரப்படி கூட நிறைய பிரச்சினை ராகு கேதுவால் வருகின்றது அவர்களையும் இதில் இணைந்துவிட சொன்னேன் அவர்களும் இணைந்துவிடுங்கள். 

ஒரு சில நண்பர்கள் பணத்தை அனுப்பிவிட்டு ஜாதகத்தை அனுப்பவில்லை. உங்களின் பெயர் மட்டும் எனக்கு தெரியும் அதனை வைத்து செய்துவிடுகிறேன். 

வாழ்வில் சொல்லமுடியாத துயரங்களை அதிகம் கொடுக்கும் ராகு கேதுவிற்க்கு ஒரு பரிகாரம் செய்து பாருங்கள். கண்டிப்பாக ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம். உங்களின் ஜாதகத்தை உடனே அனுப்பி வையுங்கள். இன்று கடைசி நாள் உடனே செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 16, 2016

சுக்கிரன்


வணக்கம்!
         தைல குளியல் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்க்கு மேல் செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன் அதனை கடைபிடித்து வாருங்கள். 

வெள்ளிக்கிழமையை நன்றாக பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு நிறைய வாய்ப்பை இறைவன் தருவான் என்பது பல பேர்களை சந்தித்து அவர்களின் அனுபவத்தை பெற்று சொல்லுகிறேன். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தமாக செய்து உங்களின் குலதெய்வத்தை வணங்கினாலே போதும் உங்களுக்கு நிறைய செல்வவளம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று பூஜைகளை செய்யும்பொழுது சுக்கிரனின் அருளை பெற்று நமக்கு நிறைய செல்வவளங்களை சுக்கிரன் கிரகம் தரும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரஓரையில் மகாலட்சுமி பூஜை செய்யலாம்.


ராகு கேது பரிகாரத்திற்க்கு பணம் அனுப்பவர்களின் கேள்வி இது தான் நான் எவ்வளவு பணம் உங்களுக்கு அனுப்பவேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். பரிகாரம் ஆரம்பித்த நாளிலில் இருந்து சொல்லப்படுவது ஒன்று இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யபடவில்லை என்பது தான்.

நீங்கள் செலுத்தும் கட்டணம் அதிகமாக இருந்தால் தனியாக பூஜை செய்யப்படும். கட்டணம் குறைவாக இருந்தால் பொதுவான பூஜை செய்யப்படும். பலன் ஒன்று தான். உங்களின் மனதே இதனை தீர்மானிக்கட்டும். நாளை ஒரு நாள் தான் இருக்கின்றது நல்ல வாய்ப்பை இழக்கவேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 15, 2016

ராகு கேது பரிகாரம் பகுதி 8


வணக்கம்!
          ராகு கேதுவில் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் அது ஏழாவது வீட்டில் ராகு கேது சம்பந்தப்படும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கவேண்டும்.

களத்திரஸ்தானம் என்பதால் களத்திரவழியில் தோஷத்தை கொடுக்ககூடிய ஒன்று. நீங்கள் திருமணம் செய்தால் உங்களின் துணை உங்களை ஏமாற்றுவார் என்பது தான் இந்த தோஷத்தில் உள்ள பெரிய சிக்கல் என்று சொல்லலாம்.

உங்களின் துணை உங்களிடம் சண்டை போட்டுக்கொண்டு செல்வார். இந்த தோஷத்தை பெரியளவில் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்றாலும் இந்த காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு நிலையில் இன்று அறிவியல் உலகம் இருப்பதால் இதனையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

செல்போனில் ஏகாப்பட்ட ஏழரை வந்துவிடுவதால் இதனையும் நீங்கள் தோஷமாக எடுத்துக்கொண்டு பரிகாரம் செய்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வருடத்திற்க்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யவேண்டும். 

திருமணம் ஆக இருப்பவர்கள் இதனை ராகு கேது தோஷம் என்று எடுத்துக்கொள்ளலாம். ராகு கேது தோஷம் இருந்தால் இதனைபோலவே உள்ள ஜாதகத்தை தேர்ந்தெடுத்து செய்துக்கொள்ளுங்கள்.

ராகு கேது தோஷ பரிகாரம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது உங்களின் ஜாதகம் மற்றும் பணத்தை அனுப்ப இறுதி தேதி சனிக்கிழமை. சனிக்கிழமைக்கு பிறகு வரும் ஜாதகங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு தசா


வணக்கம்!
          ஒருவருக்கு குரு தசா வந்தால் அவர் முழுவதும் ஆன்மீகபணியில் தன்னை இணைத்துக்கொள்ள குரு கிரகமே வழிவைத்துவிடும். குருகிரகம் நன்றாக இருந்தாலும் சரி நன்றாக இல்லாவிட்டாலும் சரி ஆன்மீக பக்கம் கொஞ்சம் இழுத்துவிட்டுவிடும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு குரு கிரகம் சரியில்லாமல் இருந்தது. அவர் ராகு தசா முடிவில் எனக்கு குரு தசா வருகின்றது நல்ல மாற்றம் வரும் என்று சொன்னார். ராகு தசாவில் நல்ல ஆன்மீகவாதியாக இருந்தார். நான் அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அவருக்கு பலன் சொல்லவில்லை ஆனாலும் பார்த்தேன்.

அவரின் ஜாதகத்தில் குரு கிரகம் சாதாரண பலனை கொடுக்கும் நிலையில் இருந்தது. அவருக்கு தற்பொழுது குரு தசா நடக்கிறது. குரு தசாவில் அவர் தற்பொழுது செய்துக்கொண்டு வரும் வியாபாரம் சாமிக்கு தேவையான சாமான்களை விற்றுக்கொண்டு இருக்கிறார்.

சாம்பிராணி ஊதுவத்தி சந்தனம் திரி போன்ற வியாபாரத்தை செய்துக்கொண்டு இருக்கிறார். குரு தசா அவரை ஆன்மீகத்திற்க்கு தேவையான பொருட்களை விற்க்கும் படி செய்துவிட்டது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ஆன்மீகத்தை குரு தசா கொடுக்கிறது.

கடவுளுக்கு தேவையான பொருட்களை விற்பது ஒன்றும் குறை இல்லை ஆனால் அவர் எதிர்பார்த்தது பணத்தில் பெரியளவில் வந்துவிடலாம் என்று எதிர்பார்த்தார் ஆனால் அவருக்கு நடந்தது இப்படிப்பட்டது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 13, 2016

ராகு கேது பரிகாரம் இறுதிநாள்


வணக்கம்!
          ராகு கேது தோஷத்திற்க்கு நமது நண்பர்கள் ஜாதகத்தையும் அதற்குரிய கட்டணத்தையும் அனுப்ப இறுதி நாள் வரும் சனிக்கிழமையோடு முடிவடைகிறது.

ராகு கேது தோஷத்திற்க்கு ஏற்கனவே அனுப்பிய ஜாதகங்களுக்கு அவர்களுக்கு பல பேர்களுக்கு பூஜையை செய்து முடித்து இருக்கிறேன். முன்கூட்டியே முடித்த காரணம் அதிகப்பட்ச கூட்டத்தை வைத்துக்கொண்டு செய்யவேண்டாம் என்பதால் முன்கூட்டியே வர வர செய்து இருக்கிறேன். இன்னமும் நிறைய இருக்கின்றது.

ராகு கேதுவை பற்றி நமது ஜாதக கதம்பத்தில் நிறைய பதிவை கொடுத்து இருக்கிறேன். அதனை எல்லாம் தேடி பார்த்தால் அது எத்தனை பிரச்சினையை கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

கோச்சாரபலன்களிலும் ராகு கேது அதிகப்பட்சம் இருக்ககூடிய ஒரு கிரகம் தான். கோச்சாரப்பலன்களிலும் நிறைய தண்டனைகளை கொடுக்ககூடிய கிரகம். கோச்சாரப்பலன்களுக்கும் பரிகாரம் செய்யலாம்.

இதில் பணம் குறைவாக இருப்பவர்கள் தான் பரிகாரத்தை செய்யவேண்டும் என்பது கிடையாது. நிறைய பணக்காரர்கள் கூட இந்த பரிகாரத்தில் இணைந்துள்ளார்கள். அனைவரும் இதில் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு கேது பரிகாரம் பகுதி 7


வணக்கம்!
          ராகு கேது பரிகாரத்திற்க்கு என்று ஜாதகம் அனுப்பியவர்களில் பாதி பேர் ஜாதகத்தை மட்டுமே அனுப்பியுள்ளனர். கட்டணத்தை செலுத்தவில்லை. கட்டணம் செலுத்தவில்லை என்பது வருத்தம் இல்லை ஆனால் அந்த கட்டணத்தை கூட செலுத்தவிடாமல் பல பேர்களை ராகு கேது பகவானே தடுக்கிறார் என்பது தான் உண்மை.

நேற்று பல பேர் என்னை கூப்பிட்டு சார் சென்னையில் புயல் மின்சாரம் இல்லை அதனால் பணத்தை செலுத்தமுடியவில்லை என்று சொன்னார்கள். பல தடைகளை பற்றி சொன்னார்கள்.

ராகு கேது என்றாலே இப்படி தான் வேலை செய்யும். அதாவது ராகு கேதுவிடம் மாட்டியவர்களை தடை என்ற ஒன்று தான் அவர்களை போட்டு வதைக்கும் ஒன்றாக இருக்கும். ஒரு சரியான முடிவு எடுக்கும் திறனை கூட ராகு கேது கொடுப்பதில்லை.

ராகு கேதுவிற்க்கு என்னிடம் வந்து தான் பரிகாரம் செய்யவேண்டும் என்பதில்லை நீங்களே வெளியில் சென்று எங்கு வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள். செய்யாமல் விட்டுவிட்டால் ஒரு விதத்திலும் உருப்படாமல் சென்றுவிடுவீர்கள்.

ராகு கேதுவின் பலனை முழுமையாக பெறுவதற்க்கும் இப்படிப்பட்ட பரிகார பூஜைகளில் கலந்துக்கொள்ளலாம். ஒரு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே இப்படி செய்வதால் அடுத்த வாய்ப்பு வருவதற்க்கு நீண்டநாள்கள் ஆகிவிடும். உடனே விருப்பம் இருப்பவர்கள் கட்டணத்தை செலுத்தி ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய்


வணக்கம்!
         செவ்வாய் கிழமை அன்று விரதம் இருக்க அனைவரிடம் சொல்லுவது உண்டு. செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் உடலுக்கும் நல்லது மற்றும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். நம்ம ஆட்கள் இதனை எல்லாம் செய்வதே கிடையாது என்பது பல பேர்களிடம் கேட்டபொழுது தான் தெரிந்தது. மறுமுறையும் சொல்லுகிறேன் அனைவரும் செவ்வாய்கிழமை விரதத்தை மேற்க்கொள்ளுங்கள்.

ஒருவருக்கு செவ்வாய்கிரகம் ஏழில் இருந்தால் அவருக்கு அந்த தசா நடக்கும்பொழுது அதிகமாக அடிப்படுவது உண்டு. இந்த அடிப்படுவது கூட ஒரு இடத்திலேயே அடிபடுவது உண்டு. 

ஒரு இடத்திற்க்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் அந்த இடத்தில் நீங்கள் அடிப்பட்டால் அதே பகுதியில் மறுமுறையும் அடிப்படுவது உண்டு.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு செவ்வாய் தசா நடக்கும்பொழுது அவர் சைக்கிளில் சென்றப்பொழுது அவர் அடிப்பட்டார் அவர் அடிப்பட்ட இடம் பட்டவன் கோவில் இருக்கும் பகுதியில் அடிப்பட்டார். முதல் முறை அடிபடும்பொழுது நல்ல காயம் ஏற்பட்டது.

மறுமுறை பல வருடங்களுக்கு பிறகு அடிப்பட்டது. அப்பொழுது அவருக்கு செவ்வாய் தசா நடைபெறவில்லை ஆனால் அடிப்பட்டது அடிப்பட்ட இடமும் ஏற்கனவே அடிப்பட்ட இடத்தில் அடிப்பட்டது. 

அனுபவத்தில் பலருக்கு அப்படி நடந்திருப்பதால் நீங்களும் அந்த இடத்தில் செல்லும்பொழுது கவனமாக செல்லவேண்டும். தசா நடக்கவில்லை என்று அலட்சியமாக இருக்காமல் கவனத்தோடு செல்லவேண்டும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 12, 2016

VVIP Pooja


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தை பிற மதத்தினர் அதிகம் படிப்பார்கள். அவர்கள் வருடந்தோறும் ஒரு தொகையை செலுத்தி அவர்களுக்கு தேவையான பூஜைகளை மாதந்தோறும் நடத்த சொல்லுவார்கள். நானும் அவர்களுக்கு மாதந்தோறும் பூஜைகளை செய்து அவர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது மெயிலில் பூஜை மற்றும் ஹோம படங்களை அனுப்பி வைத்து வருகிறேன்.

இவர்கள் அனைவரும் இந்த டிசம்பர் மற்றும் ஜனவரி 15 க்குள் அவர்களுக்கான தொகையை செலுத்திவிடுவார்கள். ஒரு சிலர் தற்பொழுது செலுத்திவிட்டனர். இன்னமும் செலுத்தாவர்கள் அந்த தொகையை செலுத்தலாம்.

இப்படி நடைபெறுவதை ஜாதககதம்பத்தில் சொல்லாமல் இருந்துவந்தேன். ஒரு நண்பர் மட்டும் இதனை பொதுவாகவும் சொல்லுங்கள் யாராவது ஒருவர் மட்டுமாவது கலந்துக்கொள்வார்கள் என்று சொன்னார்.

இதில் ஒருவர் இணைந்தால் மாதந்தோறும் அவர்களுக்கு என்று ஒரு நாளில் பூஜை செய்யப்படும். பூஜை செய்யப்படுகின்ற நாளில் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் வேண்டுதல் என்ன என்று கேட்கப்பட்டு பூஜை செய்யப்படும்.

அதிகப்பட்சமான நல்ல நாள்கள்  பிறர் மதத்தினருக்கு சென்றுவிட்டது. மீதி இருக்கும் நாட்கள் மட்டுமே புதியதாக வரும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். கண்டிப்பாக நல்ல பலனை இதில் எதிர்பார்க்கலாம். கட்டணம் என்பது முழுவருடத்திற்க்கும் முதலிலேயே செலுத்தப்படவேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் அதிகமாக பங்குபெறும் பூஜை இது. இதனை தற்பொழுது இந்தியாவில் உள்ளவர்களும் விருப்புவதால் பதிவில் சொல்லியுள்ளேன். விருப்பம் இருப்பவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரன்


ணக்கம்!
         சந்திரன் நன்றாக இருந்தால் ஒருவரின் வாழ்வு நன்றாக இருக்கும் என்று பலமுறை நமது பதிவுகளில் பார்த்திருக்கிறோம். சந்திரன் நன்றாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பெளர்ணமி அன்று சிவன் கோவில் சென்று வழிபட்டாலே அதிகப்பட்சம் சந்திரன் நல்ல பலனை கொடுக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். பெரும்பாலும் தனித்து நின்றால் ஒரளவு நல்ல பலனை கொடுக்கிறது. சந்திரன் தீயகிரகங்களோடு கூட்டு சேர்ந்து நின்றால் அது நம்மை படுத்தி எடுக்கும்.

மூன்று சுபக்கிரகங்களோடு சேர்ந்து சந்திரன் நல்ல பலனை கொடுக்கும் ஜாதகத்தையும் நான் பார்த்து இருக்கிறேன். ஒரு தீயகிரகத்தோடு சேர்ந்து அதிகப்பட்ச தீமையை கொடுக்கும் ஜாதகத்தையும் பார்த்து இருக்கிறேன்.

சேரும் கிரகம் எப்படிப்பட்ட கிரகம் என்பதைப்பொறுத்தும் சந்திரனின் பலனை சொல்லலாம். ஒரு சிலருக்கு தனித்து நின்று கூட தீமையை கொடுக்கிறது. அது சந்திரன் செல்லும் நட்சத்திரத்தை பொறுத்து அமையும்.

வளர்பிறை தேய்பிறை இது இரண்டையும் நாம் பார்த்து அதற்கு தகுந்தார்பாேல் நம்முடைய வேலையும் செய்யவேண்டும். இது இரண்டையும் பார்த்து செய்தால் பெரிளவில் நஷ்டம் ஏற்படாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 11, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
                     இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.








அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 10, 2016

இராகு கேது பரிகாரம் பகுதி 6


வணக்கம்!
          ராகு கேது நான்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஏற்கனவே பலமுறை நான் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன் இருந்தாலும் மீண்டும் இதனைப்பற்றி பார்க்கலாம்.

ராகு கேது நான்கில் இருந்தால் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக சென்றுவிடுவார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் அனைவரும் அறிவாளியாக இருந்தால் என்ன நடக்கும். அவன் அவன் சிந்தித்து நடந்தால் அவன் அவன் தனி தனியாக சென்றுவிடுவான்.

ஒரு சிலருக்கு இதுவே கணவன் மனைவியை பிரித்துவிடுவதும் உண்டு. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வந்து நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்று இருப்பார்கள். அவர்கள் அவர்கள் முடிவு எடுத்து குடும்பம் வீணாக போய்விடும்.

பொதுவான ஒரு பலன் என்ன என்றால் இந்த அமைப்பில் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பார்கள். இப்படி இருந்தால் நீங்களும் பரிகாரம் செய்யலாம்.

பரிகாரம் செய்யவேண்டும் என்றவுடன் உடனே வந்துவிடவேண்டாம். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் சண்டை சச்சரவோடு இருந்தால் நீங்கள் இந்த பரிகாரத்தில் இணையலாம். சண்டை சச்சரவு இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


ணக்கம்!
          நாளை ஞாயிற்றுக்கிழமை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்

இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்
திருப்பூரை சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள்

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.

வழக்கம்போல்

 திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பலர் அனுப்பியுள்ளனர்

நாளை அம்மன் பூஜை நடைபெறுவதால் புதிய வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 9, 2016

பரிகாரம் தேவையா?


வணக்கம்!
         நேற்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். பரிகாரம் எல்லோருக்கும் தேவையான ஒன்று தானா என்று கேட்டார். 

ஒருவருக்கு சோதிடத்தின் மீது ஏன் ஈர்ப்பு வருகின்றது. சோதிடத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் ஈடுபடுகின்றார்களா கிடையாவே கிடையாது. சோதிடத்தின் பக்கம் திரும்புவதற்க்கு கஷ்டம் மட்டுமே காரணம். ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் நிறைய கஷ்டம் ஏற்படும்பொழுது சோதிடத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று வருகின்றார்கள்.

யாருக்கும் இல்லாத ஒரு வாய்ப்பு இந்து மதத்தில் இருக்கின்றது. உனக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வரும் அந்த கஷ்டத்திற்க்கு இது மருந்து என்று எழுதிவைத்திருக்கிறார்கள். அப்பொழுது அதனை நாம் பயன்படுத்தலாம் அல்லவா.

நன்றாக செல்லும் நபர்களுக்கு எல்லாம் இதனைப்பற்றி கவலை இல்லை. அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுக்கொண்டு இருக்கும் அவர்கள் எதற்க்கும் கவலைப்படபோவதில்லை. ஒரு சாதாரண நபருக்கு ஒரு பெரிய பிரச்சினை வருகின்றது என்றால் அதனை தாங்கிக்கொள்ளகூடிய சக்தி அவருக்கு இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு பரிகாரம் கண்டிப்பாக தேவை.

நல்ல வாழ்க்கிறவனுக்கும் தனக்கு ஏதும் வந்துவிடகூடாது என்றும் பரிகாரம் செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். எல்லாமும் அதுவாகவே நடக்கிறது அதன்பிறகு எதற்கு இது எல்லாம் என்று கேட்கலாம்.

நாம் பிறந்தவுடன் நமக்கு எல்லாம் நடக்கும் என்றால் சுற்றி நமக்காக செய்யும் நபர்கள் எல்லாம் எதற்க்கு அதுவாகவே நடக்கும் என்று நம்மை கவனிக்காமல் விட்டுவிட்டால் எப்படி இருக்கும். மனிதன் பிறந்தவுடன் இறந்துவிடுவான்.

பிறந்த மனிதனுக்கு இறப்பு என்பது நிச்சயம் ஆனால் இடையில் வாழும் வாழ்க்கைக்கு பல விசயங்கள் தேவைப்படுகிறது அல்லவா அதற்கு எல்லாம் நிறைய போராட்டங்கள் ஒவ்வொருவரும் செய்கிறார்கள் அல்லவா அது போல தான் பரிகாரமும்.

உங்களின் வாழ்க்கையை அழகுபடுத்த நிம்மதியாக வாழ்வை அனுபவிக்க இப்படிப்பட்ட விசயங்களில் எல்லாம் நீங்கள் அவ்வப்பொழுது செய்யும்பொழுது மட்டுமே வாழ்க்கை நன்றாக செல்லும். வாழ்வில் தேவையில்லாமல் நிறைய விசயங்களை செய்கிறோம். நமக்கு தேவையான பரிகாரத்தை செய்வதால் ஒன்றும் குறைந்துபோகபோவதில்லை. தாராளமாக செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 8, 2016

குரு


ணக்கம்!
          நமக்கு எப்பேர்பட்ட பிரச்சினை வந்தாலும் அந்த பிரச்சினையை சமாளிக்கும் யுக்தியை தருபவர் குரு. இன்றைய காலத்தில் குரு கிரகம் சரியாக இருக்கும் நபர்கள் எந்த ஒரு சிக்கலில் இருந்தும் தப்பிப்பார்கள் என்று சொல்லுவார்கள்.

குரு நன்றாக இருந்தால் அவர்களை காவல்துறை கூட கைது செய்யமுடியாது என்று சொல்லுவார்கள். குரு கிரகத்தின் சக்தி அப்படிப்பட்ட ஒன்று. குருவின் பலன் மட்டுமே இருந்தால் போதும் அவர்கள் எந்த ஒரு இடத்திலும் சைன் செய்து மேலே வந்துவிடுவார்கள்.

நம்முடைய சுகநிகழ்ச்சிகளுக்கு எல்லாம் குருவின் பலன் என்ன என்பதை தான் பார்ப்பார்கள். குரு பலன் வந்துவிட்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் அப்படி என்றால் குரு கிரகத்தின் பலன் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்.

முக்கால்வாசி பேருக்கு குரு கிரகத்தின் பலன் முழுமையாக கிடைப்பதில்லை என்பது தான் உண்மையான ஒரு விசயம். குரு கிரகத்தின்பலன் கிடைத்துவிட்டால் அவர்கள் ஏன் கஷ்டப்படபோகின்றார்கள் அதுவாகவே நடைபெறும்.

குருகிரகத்தின் பலனை பெறுவதற்க்கு நாம் குலதெய்வத்தை வணங்கினால் கூட போதும் அதுவே குருவின் பலனை தரும் என்பது தான் உண்மையான ஒன்று.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு கேது தோஷம்


ணக்கம்!
          இதுவரை பலருக்கு ராகு கேது தோஷத்திற்க்காக அனுப்பிய ஜாதகங்களுக்கு பரிகாரபூஜையும் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆலோசனையும் வழங்கிவிட்டேன். விரைவில் இராகு கேது தோஷத்திற்க்கான நிறுத்த அறிவிப்பு வரும். இதுவரை ஜாதகங்களை அனுப்பிய நண்பர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் செலுத்திவிடுங்கள்.

இராகு கேது பித்ருதோஷத்தை தரும் விபரத்தை பார்த்தோம். இந்த பித்ருதோஷ பரிகாரம் மட்டும் அவர் அவர்களே செய்யவேண்டும் என்பதால் இதனை மட்டும் நான் செய்யவில்லை ஆனால் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதாக இருந்தால் உங்களின் இடத்தில் நீங்கள் எளிமையாக ஒன்றை செய்ய சொல்லலாம். அதன்பிறகு உங்களுக்கான பூஜையை செய்துவிடுவேன்.

ஒரு சிலருக்கு பித்ருதோஷம் இருந்து அவர்களின் தந்தை மற்றும் தாய் உயிரோடு இருப்பார்கள். அவர்களும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளமுடியும். நீங்கள் இதில் பங்குக்கொள்வது போல தான் இந்த பரிகாரம் இருக்கின்றது.

வருடம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்வதால் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் அல்லது கோச்சாரவழியில் தோஷம் இருப்பவர்கள் இதில் பங்குக்கொள்ளலாம். முடிந்தவரை அனைவரும் பங்குக்கொள்வது நல்லது.

வருகின்ற ஞாயிறுக்கிழமை அன்று அம்மன் பூஜை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 7, 2016

அம்மன் அருள்


ணக்கம்!
         தற்பொழுது கார்த்திகை மாதம் மற்றும் அடுத்து மார்கழி மாதம் இரண்டு மாதத்திலும் நிறைய கனவுகள் வரக்கூடிய ஒரு மாதமாகவே இருக்கும். இந்த மாதத்தில் வரக்கூடிய கனவில் நீங்கள் செய்த பாவம் எல்லாம் மறுமுறை உங்களின் கனவில் அதனைப்பற்றி காட்டும்.

ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் நீங்கள் ஏமாற்றி பல வருடங்கள் சென்றுவிட்டாலும் அந்த பெண்ணைப்பற்றி காட்டி அதற்கு ஒரு தீர்வும் அந்த கனவில் வந்தால் உங்களின் பாவம் தீர்க்கப்பட்டது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.

மேற்ச்சொன்ன உதாரணம் போல் பல பாவங்கள் கனவில் வரும். அதுபோல் இந்த ஜென்மங்கள் இல்லாமல் போனஜென்மத்திலும் செய்த பாவங்கள் எல்லாம் இந்த கனவில் வரும். அதற்கு தீர்வும் வந்தால் உங்களின் பாவம் தீர்க்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

இது அம்மனின் அருளால் உங்களுக்கு நடக்கும். கண்டிப்பாக உங்களுக்கு நடந்தால் அது அம்மன் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையால் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்தவரை அனைவருக்கும் நடக்கவேண்டும் என்று இதனை மிகுந்த சிரம் எடுத்து செய்து இருக்கிறேன். நீங்கள் நன்றாக பயன்பெறலாம்.

ஜாதககதம்பம் படிப்பதால் இந்த விசயத்தை உங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து இருக்கிறேன். கண்டிப்பாக நடக்கும் எதிர்பார்த்து இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு