Followers

Thursday, October 31, 2019

எதிர்மறை பாதிப்பு


வணக்கம்!
          ஒருவருக்கு கை கடுப்பு வருகின்றது அல்லது கை வலி என்று வருவது எல்லாம் ஏதோ ஒரு ஆன்மீகவாதியின் தீங்கானா எண்ணத்தால் வருவதாகும். கை கடுப்பு அல்லது கை வலி எப்பொழுதாவது வந்தால் பிரச்சினை இல்லை மாதத்திற்க்கு இரண்டு முறை வந்துக்கொண்டு இருக்கின்றது என்றால் அது மாந்தீரிக பாதிப்பு மாதிரியாக இருக்கலாம்.

பெரும்பாலான வயதானவர்களுக்கு இந்த பிரச்சினை வந்தால் அதனை மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனை பெறலாம். இளம் வயதில் உள்ளவர்களுக்கு வந்தால் அது தீங்கானவர்களின் எண்ணத்தால் வருவதாகும்.

இதனை நமது வாடிக்கையாளர்கள் எல்லாம் என்னிடம் இந்த மாதிரியான பிரச்சினையை பற்றி சொல்லுவார்கள். அவர்களுக்கு என்று நான் அம்மனிடம் பிராத்தனை செய்யும்பொழுது அது அவர்களை விட்டு செல்லும். 

நீங்களும் அந்த மாதிரியான ஆட்களை விட்டு விலகிவிட வேண்டும். ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் தொடர்ச்சியாக இதனை நானே செய்துக்கொண்டு இருக்கமுடியாது. முடிந்தவரை அந்த மாதிரியான தொடர்பில் இருக்கும் ஆட்களை விட்டு விலகிவிடவேண்டும்.

ஜாதககதம்பத்தில் இலவச சோதிட ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இலவச சோதிட ஆலோசனையை நீங்கள் பெற்று பயனடைய வேண்டுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 28, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள். 

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்                                       

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Sunday, October 27, 2019

நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
          அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 24, 2019

கந்தசஷ்டி இலவச சோதிட ஆலாேசனை


வணக்கம்!
          இன்று குரு பெயர்ச்சிக்காக பரிகாரத்திற்க்கு உள்ள சங்கல்பத்தை வைத்தேன். பரிகாரம் செய்யும் விசயத்தை வெளியில் காட்டக்கூடாது. நாளை குரு பெயர்ச்சிக்காக சிறப்பு யாகம் நடைபெறும் மாலை நேரத்தில் இந்த யாகம் செய்யப்படுகின்றது. 

குரு பெயர்ச்சியில் நல்ல பலன்ன்களை மட்டுமே நான் சொல்லிருந்தேன். பலர் தீய பலன்கள் நடைபெறாத என்று கேள்வி அனுப்பியிருந்தனர். குரு பெயர்ச்சி நடைபெறுகின்றது அதனால் குரு மட்டுமே இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு பலனை கொடுக்கபோகின்றது மற்ற கிரகங்கள் எல்லாம் ஒதுங்கி இருங்கள் என்று இருக்கபோவதில்லை.

ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் வேலை செய்துக்கொண்டு தான் இருக்க போகின்றது. ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தங்களின் வேலையை  செய்யும்பொழுது அதில் குருவின் பங்கு ஒரு பங்குகாகவே இருக்க போகின்றது. தீய பலன்கள் குறைவாகவே இருக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

கந்த சஷ்டி வரும் திங்கள் கிழமை முதல் தொடங்குகின்றது. கந்த சஷ்டி தொடங்கிய நாள் முதல் சூரசம்ஹாரம் வரை ஜாதக கதம்பத்தில் இலவச சோதிட ஆலோசனை கொடுக்கப்படும். இதில் உங்களுக்கு தேவையான குரு பெயர்ச்சியைபற்றியும் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். உடனுக்குடன் பலனை தெரிந்துக்கொள்வது போலவே இதனை செய்யபோகிறேன்.

தங்களின் பிறந்த விபரங்களை வாட்ஸ்அப்பில் தெரிவித்த பிறகு இரண்டு நாளுக்குள் உங்களை நான் கூப்பிட்டு பேசிவிடுகிறேன். முடிந்தவரை அன்றே உங்களை தொடர்புக்கொண்டுவிடுகிறேன். அனைவரும் தயாராகுங்கள்.

நாங்கள் கந்தசஷ்டிக்கு என்ன செய்யலாம் என்று கேட்கலாம். தீபாவளிக்கு செய்யும் செலவில் கொஞ்சம் குறைத்துக்கொண்டு உங்களுக்கு அருகில் இருக்கும் முருகன் காேவிலுக்கு ஏதோ ஒரு விஷேசம் நடைபெறுவது போல் செய்யலாம். ஒரு அபிஷேகம் அல்லது ஒரு நைவேத்தியம் செய்து படைப்பது உங்களுக்கு எது வாய்ப்பாக இருக்கின்றதோ அதனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி :: மீனம்


வணக்கம்!
          இந்த பதிவில் மீன இராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கின்றது என்பதை பற்றி பார்க்கலாம்.

மீன இராசி
            மீன இராசிக்கு பத்தில் குரு பகவான் வருகிறார். பலர் தங்களின் பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் இருக்கலாம். மீன இராசிக்கு அந்தளவுக்கு எல்லாம் பாதகம் செய்ய மாட்டார். பத்தில் குரு வரும் காலத்தில் கர்ம கணக்கு சரி செய்யப்படும் என்று சொல்லுவார்கள். உங்களின் கர்மம் இந்த குரு பெயர்ச்சியால் தொலையபோகின்றது என்ற அர்த்ததில் எடுத்துக்கொள்ளலாம். 

உங்களின் இரண்டாவது வீட்டை குரு பகவான் ஐந்தாவது பார்வையால் பார்ப்பதால் தனவரவிற்க்கு பஞ்சம் என்பது இருக்காது. பணம் உங்களின் வீட்டை நோக்கி ஓடி வரப்போகின்றது எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் சந்தாேஷம் நிலைத்து நிற்க்கும்.

குரு பகவான் ஏழாவது பார்வையால் உங்களின் சுகஇராசியான மிதுனத்தை பார்ப்பது ஒரு பெரியளவில் நன்மை உங்களுக்கு கிடைக்கும். புதிய வீடு கட்டுவது புதிய தொழிலை தொடங்குவது என்ற நல்ல விசயங்கள் நடக்கும். ஆராேக்கியம் மேம்பட்டு விளங்கும்.

குரு பகவான் ஒன்பதாவது பார்வையால் உங்களின் ஆறாவது இராசியான சிம்மத்தை பார்ப்பதால் உங்களின் கடன் தீரும். உங்களுக்கு இருந்த நோய் உங்களை விட்டு விலகும். பெரும்பாலும் மீன இராசிக்கு எதிரிகள் இருப்பார்கள் இந்த காலத்தில் அது விலகிவிடும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

பரிகாரம்
         ஆலங்குடி குரு ஸ்தலம் சென்று வாருங்கள். அடிக்கடி ஆன்மீக பயணம் மேற்க்கொள்ளங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.  

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800        

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி :: கும்பம்


வணக்கம்!
          இப்பதிவில் கும்ப இராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கும்ப இராசி
            குரு பகவான் பத்தாவது வீட்டில் இருந்து பதினோறாவது வீட்டில் வருகிறார். உங்களின் வாழ்க்கை மேலோங்கும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தொழில் பிரச்சினை எல்லாம் நீங்கி வளர்ச்சி நல்ல படியாக இருக்கும். அதிகமான லாபத்தை இந்த காலத்தில் நீங்கள் பார்க்கலாம்.

குரு பகவான் ஐந்தாவது பார்வையாக உங்களின் இராசியில் இருந்து மூன்றாவது இராசியான மேஷத்தை பார்ப்பதால் உங்களின் பக்கத்து வீட்டுகாரரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளின் வளர்ச்சி மேலோங்கும். அவர்களுக்கு என்று திருமண பேச்சு அடிப்படும்.

குரு பகவான் ஏழாவது பார்வையாக உங்களின் பூர்வபுண்ணிய வீடான மிதுனத்தை பார்ப்பதால் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

குரு பகவான் ஒன்பதாவது பார்வையாக உங்களின் களத்திரவீடான சிம்மத்தை பார்ப்பதால் திருமண வாய்ப்புகள் உருவாகும். துணைவரின் வழியாக உங்களுக்கு நல்லது நடக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கூட்டு தொழில் கை கொடுக்கும்.

பரிகாரம்
         குரு பகவானை வணங்கி வாருங்கள். குருவாக இருக்கும் நபர்களுக்கு நல்லதை செய்யுங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.  

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800        

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி :: மகரம்


வணக்கம்!
          இப்பதிவில் மகரராசிக்கு குருபெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மகர இராசி
            இது வரை உங்களின் விரைய சனி பனிரெண்டாவது வீட்டில் இருந்து உங்களின் மருத்துவ செலவை அதிகரித்துக்கொண்டு இருந்தார். தற்பொழுது அங்கு வரும் குரு பகவானின் அருளால் சனியின் தீயபலன்கள் குறைந்து உங்களின் மருத்துவ செலவு குறையும்.

பனிரெண்டாவது வீட்டில் குரு அமர்ந்தாலும் உங்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலருக்கு இந்த காலக்கட்டத்தில் புதிய தொழில்கள் அமைவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  பனிரெண்டாவது வீட்டில் அமைந்த காரணத்தால் அதிகமான ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பனிரெண்டில் அமைந்த குரு உங்களின் இராசிக்கு நான்காவது இடமான மேஷ இராசியை ஐந்தாவது பார்வையால் பார்ப்பதால் சுகம் தரும் ஒரு குரு பெயர்ச்சியாகவே உங்களுக்கு இது இருக்கும். சுகபோகத்தில் பஞ்சம் இல்லாமல் அனைத்தையும் அனுபவிக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

பனிரெண்டில் அமரும் குரு ஏழாவது பார்வையாக உங்களின் சத்ருஸ்தானத்தை பார்ப்பதால் உங்களுக்கு தொந்தரவை கொடுத்து வந்த எதிரிகள் தொலைவார்கள். உங்களுக்கு வந்த நீண்டநாள் நாேயும் குணமாகும். இதுவரை இருந்த வந்த கடன் தொல்லை நீக்கி நீங்கள் பிறர்க்கு கடன் கொடுக்கும் நிலைக்கு வருவீர்கள்.

பனிரெண்டில் அமரும் குரு ஒன்பதாவது பார்வையாக சிம்மத்தை பார்ப்பதால் அஷ்டவீடு என்பதால் உங்களின் உறவினர்களின் இறப்பு உங்களுக்கு ஒரு செலவை வைக்கும். இறப்பிற்க்காக செலவு செய்வது போல இருக்கும். இறக்கும உறவினர் வயதானவர்களாக தான் இருப்பார்கள்.

பரிகாரம்
         ஆலங்குடி குரு ஸ்தலம் சென்று வரவேண்டும். அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கும் சென்று வருவது நல்லது.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800       

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 23, 2019

அறிவிப்பு

வணக்கம்!
          குரு பெயர்ச்சி பரிகாரத்திற்க்கு நாளை காலைக்குள் கட்டணத்தை அனுப்பவேண்டும். மீதி இருக்கும் இராசிகளுக்கு இன்று குரு பெயர்ச்சி பலன்கள் எழுதிவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 21, 2019

குரு பெயர்ச்சி


ணக்கம்!
          நேற்று ஆலங்குடி சென்று குரு பகவானிடம் தகவல் அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் ஒரு சங்கல்பம் வைத்து வேண்டி நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணி பிராத்தனை செய்துவிட்டு வந்தேன். திடீர் என்று இந்த முடிவை சனிக்கிழமை இரவு எடுத்து அதனை பதிவில் சொல்லிருந்தேன். பலர் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பியிருந்தனர்.

ஆலங்குடி கோவில் நேற்று அதிக கூட்டம் இல்லை பொதுவாக ஞாயிற்றுகிழமை அங்கு அதிக கூட்டம் இல்லை. ஒரளவு கூட்டம் இருந்தது. நிதானமாக குருவின் சந்நதி எதிராக இருந்து வாட்ஸ்அப்பில் அனுப்பிய அனைத்து நண்பர்களும் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திர்தை வைத்து நானே சங்கல்பம் செய்தேன். நல்ல மனதிருப்த்தியாக செய்தேன். கூட்டம் இல்லாத காரணமும் இதனை நன்றாக செய்வதற்க்கு காரணமாக அமைந்தது.

பலர் பதிவை படித்துவிட்டு தங்களின் விபரத்தைப்பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்களின் விபரங்கள் எனக்கு தெரியும். தொடர்பில் இல்லாத நண்பர்கள் அனுப்பினால் மட்டுமே என்னால் செய்யமுடியும்.

ஆலங்குடி செல்லவேண்டும் என்று முடிவு செய்தவுடன் நான் பதிவில் சொல்லிவிட்டேன். இதற்க்கு கட்டணம் எதுவும் நான் சொல்லவில்லை. கோவிலுக்கு செல்கிறோம் அப்படியே நம்முடைய நண்பர்களுக்கும் செய்யவேண்டும் என்ற ஒன்று எண்ணமும் இருந்தது. அதற்க்காக உடனே நீங்கள் தகவலை மட்டும் அனுப்பி வையுங்கள் என்று மட்டுமே சொல்லிருந்தேன். பலர் அனுப்பாதது ஒரு குறையாகவே இருந்தது. எனக்கு அனுப்பிய அனைவருக்கும் சிறந்த முறையில் செய்தேன்.

விரைவில் குரு பெயர்ச்சிக்காக யாகம் நடைபெற உள்ளது. உடனே இதற்கு கட்டணம் மற்றும் தகவலை அனுப்பி வைத்துவிடுங்கள். அந்த நேரத்தில் என்னால் முடியவில்லை மறுபடியும் செய்கின்றீர்களா என்று கேட்க கூடாது. மீதி ஒரு மூன்று இராசிக்கும் குரு பெயர்ச்சி பலன்களை எழுதிவிடுகிறேன். உடனே அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 19, 2019

குரு பெயர்ச்சி :: தனுசு


வணக்கம்!
          இப்பதிவில் தனுசு இராசிக்கு குருப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு இராசி!
             நிறைய சோதிடர்கள் எல்லாம் உங்களை வைச்சு செய்து இருப்பார்கள். உங்களுக்கு ஜென்மஇராசியில் குரு பகவான் வருகிறார் நிறைய கஷ்டத்தை கொடுக்க போகின்றார் என்று சொல்லுவார்கள். உண்மையில் அந்தளவுக்கு கஷ்டம் என்பது இல்லை என்றே சொல்லலாம்.

ஜென்மத்தில் குரு என்பது ஒரு நல்ல நிகழ்வுகளாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். ஐென்ம இராசியில் இருந்து ஐந்தாவது இராசியை பார்ப்பதால் இதுவரை இருந்து கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும். பணம் உங்களை நோக்கி ஓடி வரப்போகின்றது. திடீர் அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

குரு ஜென்ம இராசியில் இருந்து ஏழாவது வீட்டைப்பார்ப்பதும் ஒரு பெரியவரமாகவே எடுத்துக்கொள்ளலாம். உங்களின் துணைவர் மற்றும் நண்பர்கள் வழியாகவே உங்களை நோக்கி வாய்ப்புகள் அதிகமாக உங்களை நாடி வரும். இதுவரை திருமணம் நடைபெறாமல் இருந்தால் உங்களுக்கு திருமணம் கைகூடும்.

குரு ஜென்ம இராசியில் இருந்து ஒன்பதாவது வீட்டை பார்ப்பதும் உங்களுக்கு நல்லது. இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் இந்த காலக்கட்டத்தில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள் வெற்றி பெற்றுவிடலாம்.

பரிகாரம்
                   குருவாக இருக்கும் நபர்களுக்கு நல்லதை செய்யுங்கள். வியாழக்கிழமை தோறும் குருபகவானை வணங்கி வாருங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.       

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800       

அன்புடன்   
ராஜேஷ்சுப்பு

Thursday, October 17, 2019

குரு பெயர்ச்சி :: விருச்சிகம்


வணக்கம்!
          இந்த பதிவில் விருச்சிக இராசியினர்க்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

விருச்சிக இராசி
                 உங்களின் இராசிக்கு இரண்டாவது வீட்டில் குரு கிரகம் செல்ல போகின்றது. ஏற்கனவே இருந்த ஒரு சில தடைகளை எல்லாம் விலகி வெற்றி நடைபோட போகின்றீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வுகள் எல்லாம் நடக்கும். குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கி நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

உங்களின் இராசிக்கு இரண்டாவது வீட்டில் குரு கிரகம் வரப்போவதால் உங்களின் வருமான வளர்ச்சி நன்றாக உயரபோகின்றது. குடும்பத்தில் புதிய உறவுகள் வருவதற்க்கு சாத்தியம் இருக்கின்றது.

குரு பகவான் இரண்டாவது வீட்டில் இருந்து ஐந்தாவது பார்வையாக ஆறாவது வீட்டை பார்ப்பதால் உங்களின் எதிரிகள் தொல்லை இனி இருக்காது. இன்றைய காலத்தில் எதிரி என்றாலே அது உங்களின் பங்காளியாக தான் இருப்பார்கள். இவர்களின் தொல்லை இனி உங்களுக்கு இருக்காது. நோய் பிரச்சினை இருந்து வந்தால் அது மெல்ல உங்களை விட்டு விலகும்.

குரு பகவான் ஏழாவது பார்வையாக உங்களின் உங்களின் எட்டாவது வீட்டை பார்க்கின்றார். உங்களின் வளர்ச்சிக்கு உங்களின் சொத்து உங்களுக்கு உதவும். இதுவரை இருந்து வந்த முட்டுகட்டையான விசங்கள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

குரு பகவான் ஒன்பதாவது பார்வையாக உங்களின் பத்தாவது இராசியை பார்க்கின்றார். உங்களின் வேலை மற்றும் தொழிலில் விடிவு காலம் பிறக்கின்றது என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளலாம். உங்களின் தொழில் சிறந்து விளங்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சியால் நன்மையை அடைய போகின்றீர்கள்.

பரிகாரம்
         முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். சாய்பாபாவையும் வணங்கலாம். ஆலங்குடிக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.      

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800      

அன்புடன்  
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 16, 2019

குரு பெயர்ச்சி :: துலாம்


வணக்கம்!
          இந்த பதிவில் துலாம் இராசியினர்க்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

துலாம் இராசி
              குரு கிரகம் மூன்றாவது இடத்திற்க்கு செல்கின்றது. மூன்றாவது இராசிக்கு செல்வதால் உங்களின் பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும் உங்களின் பொருள் களவாடிக்கொண்டு சென்றுவிடுவார்கள். உங்களின் இளைய சகோதர் மற்றும் நண்பர்கள் உங்களின் பேச்சை கேட்டு நடப்பார்கள்.

குரு கிரகம் தன்னுடைய ஐந்தாவது பார்வையால் உங்களின் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் தற்பொழுது நடைபெறும். திருமணம் ஆனாவர்களுக்கு வீட்டில் விஷேசம் உண்டு. உங்களின் தொழில் சிறக்கும்.

குரு கிரகம் தன்னுடைய ஏழாம் பார்வையால் உங்களின் ஒன்பதாவது வீட்டை பார்ப்பதால் ஆன்மீக யாத்திரை செல்லும் வாய்ப்பு உருவாகும். தூரதேச பயணமும் உங்களுக்கு உருவாகும். இதுவரை வந்த தடை நீங்கி நீங்கள் அனைத்திலும் வெற்றி வாய்ப்பை சூடுவீர்கள்.

குரு கிரகம் தன்னுடைய ஒன்பதாவது பார்வையால் உங்களின் லாபஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் லாபம் உயரபோகின்றது. எதிர்பாராத தன வரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்க போகின்றது. அரசாங்க வழியிலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவும். நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரிகாரம்
         திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு வரவும். ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.     

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800     

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          குரு பெயர்ச்சியை படித்துவிட்டு பல நண்பர்கள் கேள்வி கேட்டனர். முதலில் அனைவரும் கேட்டது அனைத்து இராசியினர்க்கும் குரு பெயர்ச்சியில் நன்மையை மட்டுமே சொல்லியுள்ளீர்கள். தீமைகளை குரு கிரகம் கொடுக்காதா என்று கேட்டனர்.

குரு கிரகம் தீமைகளையும் செய்யும் அதனை அந்தளவுக்கு செய்யாது என்பதால் அதனைப்பற்றி சொல்லவில்லை. தீமை என்றால் மனதில் தெளிவு இல்லாமல் ஏதாவது ஒன்றை நாம் சொல்லி அதில் இருந்து ஒரு பிரச்சினை வருவது குரு கிரகத்தால் நடைபெறும் தீமையாக எடுத்துக்கொள்ளலாம்.

மனதில் தெளிவு இல்லாமல் எந்த நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற ஒன்றை குரு கிரகம் பாதகமாக இருக்கும்பொழுது கொடுக்கும். பெரும்பாலும் ஏதோ ஒன்றில் மனது சிக்கி இருப்பது போல செய்யும் அல்லவா இதனை குரு கிரகத்தின் பலன் இல்லாமல் நடப்பது ஆகும்.

கடந்த வருடம் எல்லாம் குரு பெயர்ச்சியைப்பற்றி எழுதவில்லை இந்த வருடம் எழுதுகின்றீர்கள் என்று கேட்டனர்.

குரு பெயர்ச்சி எந்த பக்கம் திரும்பினாலும் இதனைப்பற்றி எழுதுவார்கள் என்று விட்டுவிட்டேன். பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த வருடம் எழுதினேன். பரிகாரமும் நமது நண்பர்களின் விருப்பத்திற்க்காகவே செய்கிறேன். 

பரிகாரம் என்ற ஒன்றைப்பற்றி இந்த நேரத்தில் சொல்லவேண்டும். கோவில்களில் நடக்கும் குரு பெயர்ச்சி யாகத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் கணபதி ஹோமத்திற்க்கு சொல்லப்படும் மந்திரங்களாகவே இருக்கின்றது. நவகிரகத்திற்க்கு என்று மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை.

பல கோவில்களில் இதனை நான் பார்த்து இருக்கிறேன். ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லி யாகம் வளர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். நீங்களே இதனை நன்றாக கவனித்தால் உங்களுக்கே இது புரியவரும்.  நவகிரக சாந்தி ஹோமம் என்ற ஒன்று இருக்கின்றது. இந்த ஹோமம் செய்யும் காேவில்களில் கூட இதற்க்கான மந்திரங்களை சொல்லுவதில்லை. பெரும்பாலும் அனைத்திற்க்கும் ஒரே மாதிரியான மந்திரங்களை மட்டுமே சொல்லுகின்றனர். 

பெரும்பாலும் இந்த மாதிரியான ஹேமத்தை கவனித்து தான் நான் இதனை நாம் சரியாக செய்துக்கொடுக்கவேண்டும் என்று குரு பெயர்ச்சி யாகம் செய்கிறேன். இதுவும் உங்களுக்கு விரும்பம் இருந்தால் அதோடு விரும்பட்ட காணிக்கையை செலுத்தி பங்கு பெறலாம்.

குரு பெயர்ச்சி பதிவை முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் இலவச சோதிட ஆலோசனை தரவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். கடந்த முறை இலவச சோதிட ஆலோசனை கொடுக்கும்பொழுது ஒரு சிலருக்கு சொல்லமுடியவில்லை.

இந்த முறை இலவச சோதிட ஆலோசனை பெரும்பாலும் அனுப்பிய நாள் அல்லது மறுநாளில் சொல்லிவிடவேண்டும் என்று இருக்கிறேன். இதோடு குரு பெயர்ச்சி பலன்களையும் நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். 

குரு பெயர்ச்சி யாகத்திற்க்கு இணையும் நண்பர்கள் உடனே தகவலை அனுப்பி வைத்துவிடுங்கள். நிறைய பேர் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். காலம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே வந்துவிட்டால் முன்கூட்டியே இதனை பிரித்து பிரித்து முக்கியத்துவம் கொடுத்து செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி :: கன்னி


வணக்கம்!
          இந்த பதிவில் கன்னி இராசியினர்க்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கன்னி இராசி
              குரு கிரகம் நான்காவது வீட்டிற்க்கு செல்லபோகின்றது. இதுவரை இருந்த கஷ்டம் எல்லாம் விலகிவிடும். ஒரு சிலருக்கு பணியில் இருந்த காலக்கட்டத்தில் கூட நெருக்கடி அதிகமாக இருந்து இருக்கும் அவர்களுக்கு எல்லாம் இந்த குரு பெயர்ச்சி நல்ல விடிவு காலமாக அமைய போகின்றது.

நான்காவது வீடு என்பது ஒரு நல்ல ஸ்தானமாக இருப்பதால் உங்களுக்கு சொந்த வீடு அமையும் யோகம் இருக்கின்றது. புதுமனை புகுவிழா நடத்தலாம். உங்களுக்கு வீட்டிற்க்கான யோகத்தை கொடுத்தது சனிபகவானாக இருப்பார். இதனை விழா எடுக்க வைக்க குரு பகவான் உதவுவார்.

நான்காவது வீட்டில் இருந்து குரு பகவான் ஒன்பதாவது பார்வையாக உங்களின்  எட்டாவது இராசியை பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த சொத்து தகராறு எல்லாம் நீங்கிவிடும். சொத்தை உங்களின் பெயரிலேயே தருகிறோம் என்று வருவார். உடல்பிணி இருந்து வந்தால் அது எல்லாம் விலகிவிடும்.

குரு பகவான் ஏழாவது பார்வையாக உங்களின் பத்தாவது வீட்டை பார்க்கின்றார். பத்தாவது வீட்டை பார்ப்பதால் உங்களின் தொழில் மேம்மை அடையும். நீங்கள் செய்து வந்த தொழில் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய தொழிலும் உங்களை தேடி வரும்.

குரு பகவான் ஒன்பதாவது பார்வையாக உங்களின் விரைய இராசியான சிம்மத்தை பார்ப்பதால் உங்களின் மருத்துவமனை செலவு குறையும். ஆன்மீக பயணம் மேற்க்கொண்டு நிறைய சிவஸ்தலம் மற்றும் பெருமாள் அதோடு முருகனையும் தரிசனம் செய்துவிட்டு வருவீர்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

பரிகாரம்
         வியாழக்கிழமையில் பெருமாள் தரிசனம் செய்யுங்கள். ஆன்மீகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு உதவி செய்யுங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.    

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800    

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 15, 2019

குரு பெயர்ச்சி ::சிம்மம்


வணக்கம்!
          இந்த பதிவில் சிம்மஇராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

சிம்ம இராசி
             குரு கிரகம் நான்காவது வீட்டில் இருந்து உங்களை வீடுகட்ட வைத்த குரு கிரகம் தற்பொழுது ஐந்தாவது வீட்டிற்க்கு செல்கின்றார். ஐந்தாவது வீடும் உங்களுக்கு நன்மையை தருகின்ற வீடாகவே அமைய போகின்றது.

ஐந்தாவது வீட்டில் அமர்ந்த குரு கிரகம் தன்னுடைய ஐந்தாவது பார்வையாக மேஷ இராசியை பார்க்க போவதால் உங்களுக்கு இது ஒன்பதாவது வீடாக வருகின்றது. உங்களின் குலதெய்வத்திற்க்கு கோவில் கட்டும் வாய்ப்பு உங்களை தேடி வரும்.

இதுவரை நீங்கள் செல்லாத ஆன்மீக யாத்திரை செல்லலாம் மற்றும் ஆன்மீககுரு உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். நீங்கள் விரும்பியதை உங்களின் ஆன்மீக குருவின் துணைக்கொண்டு நடத்திக்கொள்ள போகின்றீர்கள்.

குரு கிரகம் தன்னுடைய ஏழாவது பார்வையாக உங்களின் லாப இராசியான மிதுனத்தை பார்ப்பதால் உங்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவேண்டும் என்ற முடிவோடு குரு கிரகம் இயங்க போகின்றது. தொட்டது அனைத்தும் லாபம் என்பது போலவே இருக்கும்.

குரு கிரகம் தன்னுடைய ஒன்பதாவது பார்வையாக உங்களின் இராசியை பார்ப்பதால் அனைத்திலும் தெளிவோடு நீங்கள் செயல்படுவீர்கள். எடுக்கின்ற முடிவு அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே ஆக்கிக்கொள்வீர்கள்.

பரிகாரம்
        ஆலங்குடி குரு ஸ்தலம் சென்று வாருங்கள். குருவாக இருக்கும் நபர்களுக்கு உங்களின் உதவியை செய்யுங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.   

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800   

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி :: கடகம்


வணக்கம்!
          இந்த பதிவில் கடக இராசிக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

கடக இராசி

            இதுவரை தங்களின் இராசியை பார்த்துக்கொண்டு உங்களுக்கு நல்லதை செய்துக்கொண்டு இருந்த குரு தற்பொழுது ஆறாவது வீட்டிற்க்கு செல்கின்றார். ஆறாவது வீட்டிற்க்கு செல்வது என்பது கொஞ்சம் கஷ்டம் என்றாலும் பெரியளவில் பாதிப்பை கொடுக்க போவதில்லை.

ஆறாவது வீட்டிற்க்கு செல்லும் குரு அவ்வப்பொழுது கடனை வாங்க வைப்பார் அந்த கடனை நீங்கள் சம்பாதித்து அடைத்துவிடுவீர்கள். வாங்கும் சம்பளம் கடனுக்கு செல்ல வைக்கும் அது உங்களுக்கு பிரச்சினையை தருமா என்றால் பெரியதாக பிரச்சினையை தராது என்று சொல்லலாம்.

ஆறாவது இராசியில் இருந்து குரு தன்னுடைய ஐந்தாவது பார்வையாக மேஷத்தை பார்க்கின்றார். ஐந்தாவது பார்வை நல்ல விஷேசமான பார்வை என்பதால் உங்களின் தொழில் நன்றாக இருக்கும். உங்களின் தொழிலுக்கு வேண்டிய கடனை நீங்கள் பெற்று தொழிலை நடத்தமுடியும்.

ஆறாவது வீட்டில் இருந்து குரு கிரகம் தன்னுடைய ஏழாவது பார்வையாக உங்களின் இராசிக்கு பனிரெண்டாவது இராசியான மிதுனத்தை பார்ப்பதால் நீங்கள் ஆன்மீக பயணத்தை மேற்க்கொள்ளும் ஒரு காலமாகவே இது இருக்கும். புகழ்பெற்ற பெருமாள் கோவில் மற்றும் சாஸ்தா வழிபாட்டை செய்யலாம். சபரிமலை யாத்திரை கூட உங்களுக்கு நடக்கும்.

ஆறாவது வீட்டில் இருந்து குரு கிரகம் தன்னுடைய ஒன்பதாவது பார்வையாக உங்களின் இரண்டாவது இராசியான சிம்மத்தை பார்ப்பார். உங்களின் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வு நடைபெறும். உங்களுக்கு தேவையான பணப்புழக்கம் வந்துக்கொண்டே இருக்கும்.

குரு கிரகம் ஆறாவது வீட்டில் இருப்பது மட்டுமே கொஞ்சம் கடினமே தவிர மற்றபடி அனைத்தும் நன்றாகவே இருக்கின்றது. பெரியதாக கவலைப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதில்லை.

பரிகாரம்
          வியாழக்கிழமை தோறும் கொண்டைகடலை மாலையை குரு கிரகத்திற்க்கு அணிவித்து வணங்கி வாருங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.   

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி :: மிதுனம்


வணக்கம்!
          இந்த பதிவில் மிதுன இராசிக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

மிதுன இராசி
              ஆறில் இருந்த குரு கிரகம் தற்பொழுது ஏழாவது வீட்டிற்க்கு செல்கின்றது.  ஏழில் சனி மற்றும் ஆறில் குரு இருந்த காலக்கட்டத்தில் மிகுந்த சிரமத்தில் மாட்டிக்கொண்டு இருந்த இராசியாகவே நீங்கள் இருந்து இருப்பீர்கள். உடல்நிலை மற்றும் மனநிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்து இருப்பீர்கள்.

தற்பொழுது நடைபெறும் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஒரு விடிவுகாலமாகவே வரப்போகின்றது. ஏழில் அமர்ந்து உங்களுக்கு குரு கிரகம் நல்லதை செய்யபோகின்றது. உங்களின் மனைவி உங்களை அடித்துக்கொண்டு இருந்திருப்பார் தற்பொழுது அவர்களை அடிக்கும் காலத்திற்க்குள் நீங்கள் செல்ல போகின்றீர்கள். இதனைவிட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க போகின்றது.

ஏழில் அமர்ந்து குரு தன்னுடைய ஐந்தாவது பார்வையாக மேஷத்தை பார்க்க போகின்றார். உங்களின் லாபம் பல மடங்கு உயரபோகின்றது. இதுவரை எந்த வேலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த நீங்கள் தற்பொழுது பிஸியாக செயல்படும் நேரம் வந்துவிட்டது. செலவாகவே சென்றுக்கொண்டு இருந்த வாழ்க்கையில் லாபம் என்ற ஒன்றை பார்க்க போகின்றீர்கள்.

குரு ஏழாவது பார்வையாக உங்களின் இராசியையே பார்ப்பதால் உங்களின் தேக்க நிலையில் இருந்து ஒரு நல்ல நிலைக்கு செல்லமுடியும். உங்களிம் மனம் மற்றும் உடல் நல்ல நிலைக்கு திரும்ப போகின்றது.

குரு கிரகம் தன்னுடைய ஒன்பதாவது பார்வையாக உங்களின் மூன்றாவது இராசியான சிம்மத்தை பார்க்கபோகின்றது. அரசாங்கவழியில் இருந்த தடங்கலும் விலக போகின்றது. அரசாங்கத்தில் உள்ளவர்கள் உங்களை கூப்பிட்டு உங்களுக்கு நல்லதை செய்ய போகின்றார்.

இதுவரை இருந்து வந்த கஷ்டத்தில் இருந்து நீங்கள் விலகி ஒரு நல்ல நிலைக்கு வரப்போகின்றீர்கள். நீங்கள் முடிந்தவரை இந்த காலக்கட்டத்தில் நல்ல முயற்சித்து வெற்றி பெறவேண்டும். அமைதியாக இல்லாமல் ஓடி சென்று முயற்சி செய்யுங்கள்.

பரிகாரம்
         குருவிற்க்கு நீங்கள் நல்லதை செய்துக்கொடுங்கள். குருவாக இருக்கும் நபர்களின் ஆசியை பெறுங்கள். அருகில் உள்ள நவகிரக சந்நிதிக்கு வியாழக்கிழமை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.  

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 14, 2019

குரு பெயர்ச்சி:: ரிஷபம்


வணக்கம்!
          நாம் இந்த பதிவில் ரிஷப இராசிக்கு குரு பெயர்ச்சியைப்பற்றி பார்க்கலாம். 

ரிஷப இராசி
             நீங்கள் அனைவரும் ஏற்கனவே குரு பெயர்ச்சியைப்பற்றி சோதிடர்களிடம் மற்றும் செய்திகளும் படித்து இருக்கலாம். உங்கள் இராசியை பயமுறுத்திய மாதிரி வேறு எந்த இராசியையும் பயமுறுத்தி இருக்க மாட்டார்கள். குரு அஷ்டமத்திற்க்கு செல்கின்றது நீங்கள் அவ்வளவு தான் என்று சொல்லிருப்பார்கள். உண்மையில் அப்படி எல்லாம் நடக்காது என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களின் இராசிக்கு எட்டாவது வீட்டில் குரு செல்கின்றது. அஷ்டமகுரு என்று சொல்லுவதால் பயப்பட வேண்டியதில்லை. எனக்கு தெரிந்த பல நகைக்கடைக்காரர்களுக்கு பிறந்த ஜாதகத்தில் எட்டாவது வீட்டில் தான் குரு இருக்கின்றார். பணம் கொட்டும் நபர்களாகவே இருக்கின்றனர்.

நீங்கள் நகைகடை வைக்கவேண்டியதில்லை இந்த காலக்கட்டத்தில் நகைகளை வாங்கி சேமித்துவைக்கலாம். எதிர்காலத்தில் நகைகளை வைத்திருந்தாலும் நல்ல தன்னம்பிக்கையோடு இருக்கலாம். அவசரத்திற்க்கு நம்மை நம்பி எவனும் பணம் தரபோவதில்லை நகைகளை வைத்தாவது சேட்டு பணம் கொடுப்பார். சேமிப்பு என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

எட்டாவது வீடு மறைவுஸ்தானம் என்பதால் பயமுறுத்தியிருப்பார்கள்  மறைவுஸ்தானம் தான் இதுவரை நமக்காக முன்னோர்கள் அல்லது நீங்கள் சேமித்து வைத்திருக்கும் சொத்து அல்லது பணத்தை காட்டக்கூடிய ஒரு இடமாகவும் இருக்கும். இதனை எல்லாம் இந்த நேரத்தில் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளமுடியும். உயில் சம்பந்தப்பட்ட விசயங்களை கவனத்தில் கொள்ளும்பொழுது அதனை எல்லாம் நல்லபடியாக உங்களுக்கு கிடைக்கும்.

குரு கிரகம் எட்டாவது வீட்டில் இருந்து உங்களின் விரைய இராசியான மேஷத்தை பார்வையிடுவதால் நீங்கள் நிறைய ஆன்மீக யாத்திரையை செல்ல வைக்கும். குறிப்பாக அக்னி சம்பந்தப்பட்ட யாத்திரையை மேற்கொள்ளலாம். சிவன் மற்றும் முருகன் கோவிலுக்கு நீங்கள் இயல்பாகவே செல்ல ஆரம்பித்துவிடுவீர்கள்.

உங்களின் உடலில் நாள்ப்பட்ட ஒரு நோய் இருந்து வந்தது. இதனை மருத்துவமனையில் காண்பித்துக்கொண்டு இருந்து இருக்கலாம் அது அவ்வளவு எளிதில் உங்களை விட்டு சென்று இருக்காது நீங்கள் இந்த நேரத்தில் மருத்துவரை அணுகினால் அந்த நோய் உங்களை விட்டு செல்லும்.

உங்களின் உறவினர்கள் ஏதாவது மருத்துவமனையில் அனுமதித்து இருந்தாலும் அவர்களை பார்ப்பதற்க்காகவும் நீங்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வது போல் இருக்கும். ஏதாவது உங்களின் உறவினர்களுக்கு குழந்தை பிறந்து இருந்தாலும் அதனை பார்ப்பதற்க்காகவும் நீங்கள் மருத்துவமனை செல்லலாம்.

குரு கிரகம் எட்டாவது வீட்டில் இருந்து ஏழாம் பார்வையாக உங்களின் இரண்டாவது வீட்டை பார்க்கின்றது. தனவீடு குடும்பஸ்தானம். பணம் கொட்டவே செய்யும். பணம் வந்தால் போதும் உலகத்தில் உள்ள நூறு சதவீத பிரச்சினையை சரி செய்துவிடலாம் நீங்கள் சமாளிக்க மாட்டீர்களா என்ன? பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உங்களின் வாக்கை பிறர் கேட்பார்கள். குழந்தை இல்லை என்றால் இந்த நேரத்தில் முயற்சி செய்யலாம். நான் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கலாமா என்று கேட்பர்களும் இருக்கதான் செய்கின்றார்கள். தாராளமாக இதனையும் நீங்கள் முயற்சிக்கலாம்.

குரு கிரகம் ஒன்பதாவது பார்வையாக சிம்மத்தை பார்க்கின்றது. உங்களின் இராசிக்கு நான்காவது வீடாக வருகின்றது. நீங்கள் புது வீடு கட்டி குடியேறலாம். புது வீடு வாங்கலாம். இந்த வருடத்தில் அதிகமாக வீடு புதுமனை புகுவிழா நடத்தப்பாேவது ரிஷப இராசியாக நீங்களே தான் என்பதையும் சொல்லுகிறேன்.

உங்களுக்கு முடிந்தவரை நல்ல விசயங்களை சொல்லிருக்கின்றேன் என்று நினைக்கிறேன். அஷ்டமகுருவில் ஒரு வேலையை தொடங்கும்பொழுது மட்டும் கொஞ்சம் நல்ல ஆலோசனை செய்துவிட்டு தொடங்கவேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு சின்ன மனக்கஷ்டம் மட்டுமே ஏற்படும் மற்றபடி ஒன்றும் இல்லை.

பரிகாரம்
                  முருகன் கோவில் மற்றும் சிவன் கோவில் செல்லுங்கள் என்று சொல்லிருக்கிறேன். குருவிற்க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். 

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி :: மேஷம்


வணக்கம்!
          குரு பெயர்ச்சியில் முதல் இராசியை நாம் எடுத்துக்கொள்வோம். காலச்சக்கரத்தில் முதலாவதாக வரும் மேஷ இராசியை நாம் எடுத்துக்கொள்ளலாம். 

மேஷ இராசி
             உங்களின் இராசிக்கு எட்டாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்க்கு செல்கின்றார். தனுசுயில் இருந்து உங்களின் இராசியை ஐந்தாவது பார்வையாக பார்க்கின்றார். இராசிக்கு குருபகவானின் ஐந்தாவது பார்வை கிடைப்பது புண்ணியம் என்று சொல்லலாம்.

உங்களி்ன் மனதில் தெளிவு ஏற்படும். குழப்பமான மனநிலையில் இருந்து நல்ல மனநிலைக்கு வருவீர்கள். இதுவரை பிச்சைகாரர்களுக்கு கூட ஒரு பைசா கொடுக்கமுடியவில்லை என்ற நிலையில் இருந்து இனிமேல் கொடுக்கும் மனநிலையில் நீங்கள் வருவீர்கள். உங்களின் அனைத்து வேலையும் இந்த ஒரு வருடகாலத்திற்க்கு நீங்கள் எடுக்கலாம்.

குரு கிரகம் ஒன்பதாவது வீட்டிற்க்கு வருவதால் இந்த இடம் ஒரு பாக்கியஸ்தானம் என்று எடுத்துக்கொள்ளலாம். தெளிவான மனநிலை மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்பு ஆகியவற்றை காட்டக்கூடிய ஒரு இடம் என்பதால் நீங்கள் கோவில் கட்டுவதற்க்கு கூட உதவமுடியும்.

ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெறவைக்கும். உங்களின் குரு உங்களுக்காக நிறைய செய்வார். அவரின் ஆசியை பெறலாம். அவரால் உங்களுக்கு நிறைய பயன் உண்டு. உங்களால் அவர் பயன்பெறுவது உங்களின் கையில் தான் இருக்கின்றது. அவரிடம் கொடுத்து நீங்கள் நிறைய எடுத்துக்கொள்ளலாம்.

இதுவரை நிலவி வந்த காரியதடை எல்லாம் நீங்கி அனைத்து காரியத்திலும் வெற்றி என்பது உங்களை தேடிவரும். வீட்டில் தூங்கிக்கொண்டு இல்லாமல் அனைத்திலும் முயற்சி செய்யுங்கள். இதுவரை இல்லாத ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி நீங்கள் செல்லலாம்.

தனுசில் குரு அமர்ந்து ஏழாவது பார்வையாக மிதுனஇராசியை பார்க்கின்றார். உங்களின் இராசிக்கு மூன்றாவது வீடாக மிதுனஇராசி வருகின்றது. உங்களின் இளைய சகோதர் உங்களுக்கு சேரவேண்டிய சொத்தை அவர் பிடிங்கி வைத்துக்கொண்டு இருப்பார். தற்பொழுது அவரிடம் நீங்கள் இந்த சொத்தை எனக்கு கொடு. எனக்கு பத்திரம் செய்து கொடுத்துவிடு என்றால் அவர் சம்மதம் தெரிவித்து உங்களுக்கு எழுதிக்கொடுப்பார். 

பக்கத்துவீட்டுகாரன் உங்களின் வீட்டின் நிலத்தை ஆக்கரமித்துக்கொண்டு இது என்னுடையது என்று சொல்லிக்கொண்டு இதுவரை இருந்து இருப்பார். இந்த காலத்தில் நீங்கள் அதற்கு முயற்சி செய்தால் அந்த நிலம் உங்களுக்கு கிடைக்கும்.

உலகத்தில் உள்ள அண்ணன் அனைவரும் தன்னுடைய தம்பிக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களும் வாழவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.

எழுத்துப்பூர்வமாக உள்ள விசயங்களை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொண்டு அதனை எல்லாம் உங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள ஒரு நல்ல காலக்கட்டமாக இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆதார் கார்டு கட்டாயமாக எடுக்கவேண்டும் என்று அரசாங்கம் சொல்லுகின்றது அல்லவா இதுவரை எடுக்கவில்லை என்றால் இதனையாவது எடுக்கலாம்.

ஒன்பதாவது பார்வையாக குரு சிம்மஇராசியை பார்க்கின்றது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்களுக்கு இந்த வருடகாலத்தில் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். குலதெய்வ கோவிலை நீங்கள் கட்டலாம்.

லாட்டரி சீட்டு யோகம் மற்றும் குதிரை பந்தய யோகம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். வெளிமாநில லாட்டரி சீட்டு அல்லது வெளிநாடுகளில் உள்ள லாட்டரி சீட்டை எல்லாம் வாங்கி பாருங்கள். உங்களுக்கு லாட்டரி யோகம் கிடைக்கும்.

பரிகாரம்
         ஒன்பதாவது வீடு என்பதால் மிகுந்த யோகத்தை பெறுவதற்க்கு நீங்கள் பரிகாரத்தையும் செய்துக்கொள்ளலாம். குருவாக இருப்பவர்களுக்கு பணத்தை கொடுங்கள். குரு பகவானை வணங்கி வாருங்கள்.

ஜாதக கதம்பத்தில் குரு பெயர்ச்சி பரிகாரம் யாகம் நடைபெற இருக்கின்றது. விரும்பம் இருப்பவர்கள் தங்களின் இராசி மற்றும் நட்சத்திரத்தை சொல்லி உங்களுக்கு விருப்பமான கட்டணத்தை செலுத்தி வைக்கலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி


வணக்கம்!
          குரு பெயர்ச்சியைப்பற்றி நீங்கள் எழுதவேண்டும் என்று நண்பர்கள் பலர் பரிந்துரை செய்தனர். பலர் போன் செய்து எனக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று கேட்டனர். பலரின் விருப்பத்திற்க்காக சுருக்கமாக அனைத்து இராசியினர்க்கும் கொடுத்துவிடுவோம் என்று எழுதுகிறேன். 

குரு பெயர்ச்சி என்ற கோச்சாரபலனை எல்லாம் நடக்கவேண்டும் என்றால் தசாநாதன் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் அப்பொழுது தான் கோச்சாரபலன்கள் எல்லாம் உங்களுக்கு நடக்கும். தசாநாதன் நன்றாக இருந்து தசா நடந்தால் உங்களுக்கு கோச்சாரபலன்கள் எல்லாம் குறைவாக தான் நடக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

பெரும்பாலும் ஐம்பது சதவீதம் கோச்சாரபலன்கள் கொடுத்தாலே அது பெரிய விசயமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நான் பார்த்தவரை முப்பது சதவீதம் நடந்தால் போதுமானதாக எடுத்துக்கொள்ளலாம். குருவின் பலன் என்பது குறைவாகவே கொடுக்கும்.

குருவின் பெயர்ச்சி பெரியளவில் என்ன நன்மை செய்யும் என்றால் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு நல்லதாக நாம் எடுத்துக்கொள்ளலாம் என்பதற்க்காவே குரு பெயர்ச்சி முக்கியபங்கு வகின்றது.

குரு பெயர்ச்சி அடைந்து அதன் பார்வை பெற்றால் நல்லது நடக்கும். குரு பார்வை வந்துவிட்டது திருமணம் செய்யலாம் என்று சோதிடர்கள்  அல்லவா அதற்க்கு இந்த குரு பெயர்ச்சி முக்கியபங்கு வகின்றது.

ஒருவருக்கு குருவின் தசா நடந்தால் பெரும்பாலும் கோச்சாரபலன்கள் அதிக பாதிப்பை கொடுப்பதில்லை. குரு தசா நடந்தால் நீங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பதையும் சொல்லிவிடுகிறேன். குரு பலனால் என்ன நடக்கும் என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லுவது ஒரு வேலையை எளிமையாக செய்வதற்க்கு என்று நமக்கு ஒரு காலம் வரும் அல்லவா. இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்லதாக நடந்தாக இருந்தால் உங்களின் வேலை எளிமையாக இருக்கும். அவர்கள் இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 12, 2019

கர்மாவை போக்கும் மணி


வணக்கம்!
          ஒருவருக்கு ஏற்படும் தோஷம் என்பது அவர் அவர்களின் முன்ஜென்மத்தில் செய்த கர்மாவால் வந்தது என்று நாம் சொல்லிக்கொண்டு இருப்போம். இதனை போக்க நாம் பல்வேறு வழிகளை சொல்லிக்கொண்டு வருகிறோம்.

முன்ஜென்மத்தில் உள்ள கர்மாவை போக்குவதற்க்கு நாம் பல்வேறு வழிகளை சொல்லிருந்தாலும் புத்த மதத்தில் கடைபிடிக்கப்படும் ஒரு வழியை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவை தருகிறேன்.

இந்த தகவலை ஆன்மீக அனுபவங்களில் கட்டண பதிவில் சொல்லிருந்தேன். இதனை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜாதக கதம்பத்தில் சொல்லுகிறேன். இதனை பயன்படுத்தி நீங்கள் கர்மாவில் இருந்து வெளிவரலாம்.

புத்தமதத்தில் குறிப்பாக திபெத்தில் இதனை பயன்படுத்திகின்றனர். திபெத் சிங்கிங் பவுல்(tibetan singing bowl) என்று சொல்லக்கூடிய ஒரு மணியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை காலையிலும் மாலையிலும் உங்களின் வீட்டில் பூஜையறையில் வைத்து அடித்து பயன்பெறுங்கள்.

திபெத்தில் ஞானம் அடைவதற்க்கு இந்த மணியை பயன்படுத்திக்கின்றனர். ஞானம் மார்க்கத்தை தேடி செல்லும் நபர்களுக்கு இது உகந்த ஒன்று. நீங்களும் இதனை வீட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இதனை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை யூடிப் வீடியோவில் பார்த்தும் தெரிந்துக்கொள்ளலாம். இது அமேசானிலும் கிடைக்கின்றது வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 11, 2019

கர்ம வீடும் புதனும்


வணக்கம்!
          நேற்று ஒருவர் என்னை சந்தித்து சோதிட ஆலோசனை கேட்டார். அவரின் ஜாதகத்தில் பத்துக்குடைய கிரகம் புதனின் வீட்டில் அமர்ந்து இருந்தது. பத்துக்குடைய கிரகம் செவ்வாய் கிரகமாக இருக்கின்றது.

பத்துக்குடைய கிரகம் கன்னியில் அமர்ந்து இருக்கின்றது. புதனின் வீட்டில் மூன்று கிரகத்தோடு இருக்கின்றது. புதன்கிரகம் குருவோடு சேர்ந்து இருக்கின்றது. இவர் செய்யும் தொழில் ஏஜென்சி தொழில் செய்கின்றார்.

இவர் பெரியளவில் தொழிலை செய்தாலும் அவரால் ஒரு கடையை தன்னுடைய பெயரில் தொடங்கவேண்டும் என்று நினைக்கின்றார் ஆனால் அவரால் தொழிலை தொடங்க முடியவில்லை. அவரிடம் நல்ல பணமும் இருக்கின்றது அதனை வைத்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றார்.

அவருடைய ஜாதகத்தில் குருவின் தசா நடக்கின்றது. குரு தசாவில் தன்னுடைய மூளையை வைத்து நிறைய சம்பாதிக்கமுடியும் ஆனால் ஒரு இடத்தில் அமர்ந்து அதாவது கடை போல போட்டுக்கொண்டு சம்பாதிப்பது கடினமாக இருக்கும்.

அவரிடம் நீங்கள் நிறைய சம்பாதிக்கமுடியும் அதே நேரத்தில் நீங்கள் தனியாக தொழிற்சாலை மற்றும் கடைகளை எல்லாம் தற்பொழுது தொடங்கவேண்டாம் கை மாற்றி விடும் வேலையை மட்டும் செய்யுங்கள் என்று சொன்னேன்.

புதனின் வீட்டில் பத்தாவது வீட்டு அதிபதி அமர்ந்தால் அவர் பத்தாவது வீட்டின் காரத்துவதொழிலை செய்யலாம் அதே நேரத்தில் அதனை அவர் ஏஜென்சி தொழிலாக மட்டுமே செய்யவேண்டும். 

நமது அம்மன் கோவில் மறுபடியும் வேலையை தொடங்க இருக்கின்றோம். முதற்கட்டமாக இரண்டு லோடு மணல் மற்றும் 100 மூட்டை சிமெண்ட் தேவைப்படுகின்றது. இதற்கு உதவி செய்பவர்கள் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 10, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
          உணவகங்களில் சாப்பிடவேண்டாம் என்று சொல்லிருந்தேன். இதில் இருந்து பல்வேறுதரப்பட்ட கேள்விகள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டு இருக்கின்றன. இதற்கான பதிலை தருகிறேன்.

உணவகங்களில் சாப்பிடுவது முதலில் தரம் என்பதை தாண்டி அது எப்படிப்பட்ட ஆட்களால் சமைக்கப்படுகின்றது என்பதை முதலில் நாம் பார்க்கவேண்டும். சமைக்கும் ஆட்களில் எண்ணத்தை உணவில் நாம் பார்க்கவேண்டும். சமைக்கும் ஆட்களில் எண்ணம் எப்படிப்பட்டது என்பது அவர்களின் உணவில் இருந்தே உங்களுக்குள் ஊடுருவும். நல்ல எண்ணத்தில் யாரும் வேலை பார்ப்பதில்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு சிலரின் மோசமான எண்ணம் உங்களுக்குள் ஊடுருவி வந்தால் அந்த எண்ணத்தால் பாதிப்படைவது நீங்களாகவே இருக்கும். நீங்களே உங்களின் வீட்டில் சமைத்தால் நல்ல எண்ணம் உங்களுக்குள் ஊடுருவும். சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்கள் அனைத்தும் ஒரே விதமாக தான் இருக்கும் ஆனால் சமைக்கும் ஆட்களின் எண்ணத்திற்க்கு தகுந்தமாதிரி தான் சமையலின் ருசி இருக்கின்றது.

ஒருவரை உருவாக்குவதில் அவர் அவர்கள் சாப்பிடும் உணவு முக்கியபங்கு வகிக்கின்றது. உணவகங்களில் நீங்கள் சாப்பிட்டால் உணவின் ருசி இருக்கும் ஆனால் உங்களை அது நல்லவிதமாக வளர்க்காது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நம்முடைய ஆட்கள் உணவகங்களில் சாப்பிடுவது ஒரு நாகரீகம் என்று நினைக்கின்றனர். உணவகங்களில் சாப்பிட்டு தான் நாகரீகம் வளரவேண்டும் என்றால் அந்த மாதிரியான ஒரு முட்டாள் தனமான நாகரீகம் தேவையில்லாத ஒன்று என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நான் அதிகமான நாட்கள் உணவங்களில் சாப்பிட்ட காரணத்தால் அந்த உணவகங்களில் இருந்து என் உடல்நிலை தான் சரியில்லாமல் போனதே தவிர அதில் இருந்து ஒன்றையும் நான் பெற்றதில்லை என்பதை அனுபவத்தில் வாயிலாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களால் முடிந்தவரை உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறுவதால் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 8, 2019

புதிய உதயம்


வணக்கம்!
          ஜாதககதம்பத்தை வெற்றிகரமாக எழுதிக்கொண்டு வருகிறோம். இது பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்தது. ஜாதககதம்பம் புதிய பாதையை வகுத்துக்கொடுத்தது. நிறைய நட்புகள் நமக்கு கிடைத்து. ஏதோ ஒருவருக்கு அல்லது இருவருக்கு மட்டும் சென்றடைய வேண்டிய கருத்து பலருக்கும் சென்றடைய வைத்தது.

நானும் பயன் அடைந்தேன் ஜாதககதம்பத்தை படித்தவர்களும் பயன் அடைந்தனர். ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே இருக்கும் ஆன்மீகத்தை வெளியே கொண்டு வந்தது. ஒவ்வொருவருக்கும் உள்ள தேடுதலுக்கு அது உதவி புரிந்தது.

இன்றைய காலக்கட்டத்தில் நமது பதிவை படிப்பவர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். புதியவர்களும் வரத்தான் செய்கின்றனர். இன்றைய காலத்தில் யூடிப்பை விரும்பி நிறைய பேர் பார்ப்பதால் நாமும் அதனை நோக்கி செல்லலாம் என்று இருக்கிறேன்.

விரைவில் புதிய யூடிப் சானலை தொடங்கி உங்களை சந்திக்கிறேன். வழக்கம்போல ஜாதககதம்பத்திலும் பதிவுகள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 7, 2019

நல்வாழ்த்துக்கள்


ணக்கம்!
         அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள். நவராத்திரிக்கு அம்மன் யாகம் செய்ய உதவி புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 5, 2019

இல்லறம்


வணக்கம்!
          நேற்றைய பதிவில் வீட்டில் சமையலைப்பற்றி சொல்லிருந்தேன். பல நண்பர்கள் நன்றாக சொல்லி உள்ளீர்கள் எங்களின் வீட்டில் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் சமையல் மற்றைய நாட்களில் உணவகத்தில் தான் சாப்பிடுகிறோம் இனிமேல் மாற்ற முயற்சி செய்கிறோம் என்றனர்.

இன்றைய காலத்தில் இருவரும் வெளியில் வேலை செய்கின்றனர் வேலைப்பளு காரணமாக வெளியில் சாப்பிடுகிறோம் என்றும் சொல்லுகின்றனர். வேலைப்பளு என்றாலும் வெளியில் சாப்பிடுவதை முடிந்தளவுக்கு நிறுத்திக்கொண்டு வீட்டில் சமைத்து சாப்பிட ஆரம்பியுங்கள் என்று சொல்லிருந்தேன். முதலில் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் போக போக சரியாகிவிடும் என்றேன்.

ஒரு சில நண்பர்கள் தன்னுடைய துணையைப்பற்றி குறையாகவே சொல்லிருந்தனர். சமைக்கவே முடியாது என்று அடம்பிடிக்கின்றார் என்றும் சொல்லிருந்தனர். பெரும்பாலும் இப்படிப்பட்ட பெண்கள் தங்களின் வளர்ந்த வீட்டில் அதிகமான வேலைப்பளுவை சந்திருப்பார்கள். அங்குள்ள கோபத்தை உங்களிடம் காட்டுவார்கள் கொஞ்ச நாள்கள் சென்றுவிட்டால் அவர்களின் கோபம் தணிந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்றேன்.

நமது பதிவை படிக்கும் பெண்கள் முடிந்தவரை வீட்டில் சமைத்து உங்களின் குடும்பத்திற்க்கு பரிமாறுங்கள். சந்தோஷத்தோடு உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறினால் நீங்கள் இந்த பிறவி எடுத்த ஜென்மகணக்கு தீரும். உங்களின் குடும்பமும் நன்றாக இருக்கும்.

வெளிநாடுகளாக இருந்தாலும் சரி அங்கு வேறுவிதமான கலாசாரம் இருந்தாலும் முடிந்தவரை வீட்டில் சமைக்க பாருங்கள். நல்ல நிலைக்கு உங்களின் குடும்பம் வரவேண்டும் என்றால் நான் சொல்லுவதை கொஞ்சம் கடைபிடித்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 4, 2019

செல்வவளம்


வணக்கம்!
         ஒருவரின் வீட்டில் உள்ள குடும்பதலைவி மிகவும் விருப்பட்டு அந்த வீட்டில் சமையல் செய்தால் அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் ஒரு சில காலத்திற்க்குள் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்றுவிடும்.

சமையறையில் மிகவும் ஈடுபாட்டோடு அந்த பெண்மணி வேலை செய்யும்பொழுது இது சாத்தியப்பட்டுவிடுகின்றது. சுக்கிரனின் காரத்துவத்தை அதிகமாக ஈர்க்கும் விசயமாகவே இது இருக்கின்றது. சுக்கிரனின் காரத்துவம் சமையறையில் நன்றாக பிரதிபலித்தால் வீடு சுபிட்ஷம் அடைந்துவிடுகின்றது.

இன்றைய காலத்தில் குடும்பதலைவி வீட்டில் சமைக்க பிடிக்காமல் சமைக்கின்றனர். இது எல்லாேர் வீட்டிலும் நடக்கவில்லை என்றாலும் ஒரு சில இடத்தில் இது நடக்கின்றது. மாதத்தில் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வெளியில் சென்று சாப்பிடலாம்.

தினமும் வெளியில் சென்று தான் சாப்பிடவேண்டும். வீட்டில் சமைக்க எல்லாம் முடியாது என்று சொல்லும் பெண்மணிகளும் இருக்கின்றனர். மாதத்திற்க்கு ஒரு முறை அதுவும் வெளியில் செல்லும்பொழுது சாப்பிடலாம்.

இன்றைய காலத்தில் நிறைய மொபைல் ஆப்கள் வந்து வீட்டிற்க்கே டெலிவரி செய்யும் காலம் என்பதால் பெண்மணிகளுக்கு இது மிகவும் வசதியாக போய்விட்டது. இதனை கண்டிப்பாக தவிர்க்க பாருங்கள். ஏதோ ஒரு அவசரத்திற்க்கு இதனை செய்யலாம் மற்றபடி இதனை தொடவே தொடாதீர்கள்.

வெளிநாடுகளில் வசித்தாலும் சரி வீட்டில் தினமும் சமைக்கும் பழகத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வெளியில் சென்று வேலை செய்யும் பெண்மணிகளாக இருந்தாலும் வீட்டில் சமைத்தால் தலைமுறையை நன்றாக வளர்த்துவிடலாம். உங்களின் வீட்டில் நல்ல செல்வவளத்தை கொண்டுவரலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 3, 2019

வெட்கத்தை விட்டால் வெற்றி


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது தைரியத்தை கொடுக்கும் வீடாக இருக்கின்றது. மூன்றாவது வீடு தீயகிரகங்கள் ஆளுமையில் இருந்தால் ஜாதகர் தைரியமாக இருப்பார். மூன்றாவது வீடு சுபக்கிரகத்தின் ஆளுமையில் இருந்தால் ஜாதகர் பயப்படுவார்.

இந்த காலத்தில் தைரியம் என்பது ஒருவரோடு சண்டைபோடவேண்டும் என்பதில்லை அல்லது வாள் எடுத்துக்கொண்டு சண்டைக்கு சென்றாக வேண்டும் என்பதில்லை. ஒருவர் அடுத்தவர்களோடு எந்த வித பயமும் இல்லாமல் பேசுவது அவருக்கு வரும் பிரச்சினையை அவரே எதிர்க்கொள்வது எல்லாம் தைரியத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

கிராமபுறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு செல்பவர்கள் நகர்புறங்களில் இருப்பவர்களிடம் பேசுவதற்க்கு கூட பயம்கொள்வார்கள். இது பயம் என்பதைவிட வெட்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். இதனை எல்லாம் மூன்றாவது வீட்டில் இருந்து தான் நடக்கும்.

ஒருவருக்கு மூன்றாவது வீடு தீயகிரகத்தின் பிடியில் இருந்தால் அவர் எதற்கும் பயம் கொள்ள மாட்டார். அவர் எதிலும் வெட்கமும் படமாட்டார். வெட்கத்தை போக்கினாலே பாதி பேர் வெற்றி அடையலாம்.

வெட்கத்தால் வெற்றி பெறாமல் போனவர்கள் அதிகம் பேர்கள் இருக்கலாம். இதனை எல்லாம் ஏன் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன் என்றால் மூன்றாவது வீடு தைரியம் மற்றும் வெட்கம் இல்லாமை போன்றவற்றை கொடுக்கும் வீடு. வெட்கம் என்பது இல்லாமல் இருந்தால் வெற்றி பெறலாம். 

இன்றைய காலத்தில் வெட்கத்தை போக்குவதற்க்கு கூட கல்வி இருக்கின்றது. நீங்களே சிந்தனை செய்து பாருங்கள். வெட்கப்பட்டு கேட்காமல் உங்களை விட்டு சென்றது ஏராளமாக இருக்கும் அதனால் வெட்கத்தை தேவைப்படும் இடத்தில் மட்டும் வைத்துக்கொண்டு மீதி நேரத்தில் வெட்கத்தை போக்கிக்கொள்ளுங்கள். சிறப்பான ஒரு எதிர்காலம் உங்களுக்கு அமைந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 2, 2019

பரிகாரம் எப்பொழுது வேலை செய்யும்?


வணக்கம்!
          நமது பழைய பதிவில் சொல்லிருப்போம். பசுமாட்டிற்க்கு அகத்திகீரை கொடுக்கவும் என்று சொல்லிருப்போம். இதனை பல சோதிடர்களும் மற்றும் ஆன்மீகவாதிகளும் சொல்லிருப்பார்கள். பசுமாட்டிற்க்கு அகத்திகீரையை கொடுத்தால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும் நீங்களும் நன்றாக இருக்கலாம் என்று சொல்லிருப்பார்கள்.

இன்றைய தேதியில் எத்தனை பேர் பசுமாட்டிற்க்கு அகத்திகீரையை கொடுத்து நன்றாக இருப்பார்கள் என்பதை எண்ணி பார்த்துவிடலாம். ஏன் என்றால் இந்த புண்ணியம் எல்லாம் எப்பொழுது நமக்கு வரும் என்பதை யாராலும் சொல்லிவிடமுடியாது. 

நாம் செய்யவேண்டிய தர்ம காரியங்களை எல்லாம் செய்துக்கொண்டே வரவேண்டும். இந்த தர்ம காரியங்கள் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு திரும்பிக்கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் இதனை எல்லாம் செய்து வருகிறோம்.

அவன் அவன் சோதிடவிதி நன்றாக இருந்தால் இந்த ஜென்மத்தில் கிடைத்துவிடும். அவன் அவன் சோதிடவிதி சரியில்லை என்றால் எந்த ஜென்மத்தில் கிடைக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம். இந்த ஜென்மத்திலேயே கிடைத்துவிடவேண்டும் என்ற பிராத்தனை மட்டுமே வைக்கலாம்.

எந்த ஒரு ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி அவர்களின் வேலை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இதனை செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவர் அவர்களின் எண்ணம். பல பேர் இப்படிப்பட்ட பரிகாரத்தை எல்லாம் பரிந்துரை செய்துக்கொண்டே இருப்பார்கள்.

பெரும்பாலான பரிகாரங்கள் வேலை செய்வது அவர் அவர்களின் எண்ணங்கள் நன்றாக இருந்தால் எளிதாக இருக்கும். எண்ணங்கள் சரியில்லை என்றால் சரியாக இருக்காது. மனம் என்ற ஒன்று செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் தொடர்ச்சியான பதிவுகளை தந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறேன். ஒரு சில நாட்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உங்களுக்கு பதிவு தருவதில் கொஞ்சம் இழுப்பறி இருக்கின்றது. இனிமேல் அதனை தொடர்ச்சியாக கொடுக்க முனைகிறேன்.

அம்மன் கோவில் கட்டும்பணியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு இருக்கின்றது.  தொடர்ச்சியான மழையால் மட்டுமே அந்த தாமதம் ஏற்படுகின்றது. விரைவில் பணி ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தினமும் ஏதோ ஒரு வழிபாட்டை செய்யவேண்டும். ஒரு இஷ்ட தெய்வத்தை வைத்து வணங்குவது அல்லது குலதெய்வத்தை வைத்துக்கொண்டு வணங்கி வருவது உங்களுக்கு நன்மை பயக்கும். ஒரு பிரச்சினை வந்த பிறகு நாம் வணங்குவதை விட பிரச்சினை வருவதற்க்கு முன்பே வணங்குவது நல்லது.

பழைய பதிவில் நாம் காயத்திரி மந்திரத்தை தினமும் செய்து வாருங்கள் என்று சொல்லிருந்தேன். இதனை பலர் அந்த காலக்கட்டத்தில் செய்து வந்தனர். இன்றைய காலத்தில் அதனை எத்தனை பேர் தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர் என்பது தெரியவில்லை. உங்களால் முடிந்தால் அதனை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு